tag:blogger.com,1999:blog-47253371199369997302024-03-23T23:51:58.782+05:30அபி அப்பாஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger414125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11255768984364207932020-03-27T18:29:00.001+05:302020-03-27T18:29:57.346+05:30மயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo9n81CLHsFWBi0oS9e0ATdbf6IBUPKf1qhRUE6OwDZKxIX5AilKVthMs2XuxLdZgDUQO_JFlu0UjkBO5096IL-6fZ8FRqQgCzoI8qLB9fDg4vTIdn0JVqhDhu6Ud-OkVMSQVxMQEkbbs/s1600/Mayuranathar_temple16.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo9n81CLHsFWBi0oS9e0ATdbf6IBUPKf1qhRUE6OwDZKxIX5AilKVthMs2XuxLdZgDUQO_JFlu0UjkBO5096IL-6fZ8FRqQgCzoI8qLB9fDg4vTIdn0JVqhDhu6Ud-OkVMSQVxMQEkbbs/s640/Mayuranathar_temple16.jpg" width="480" /></a></div>
<br />1991 வரை நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் தான். தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம் அது. சுமார் 20 சட்டமன்ற தொகுதிகள். மேற்கே பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு என்றும் கிழக்கே மயிலாடுதுறை, நாகை, பூம்புகார், வேதாரண்யம் என்றும் வடக்கே சீர்காழி என்றும் தெற்கே திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி என்றும் மிகப்பெரிய மாவட்டம் தஞ்சாவூர். அதன் தலைநகரம் தஞ்சாவூர் தான். கொள்ளிடத்தில் இருந்தோ, கோடியக்கரையில் இருந்தோ தலைநகருக்கு வர வேண்டும் எனில் ஒரு 5 முதல் 6 மணி நேர பஸ் பயணம். மாவட்ட மருத்துவமனை கூட தஞ்சையில் தான். ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் என எல்லாமே தஞ்சாவூரில் தான்.<br />
<br />
<br />
பத்தாவது படித்து முடித்து கையில் சான்றிதழ் வாங்கிய அன்று எங்கள் பகுதியில் இருக்கும் மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோர் சகிதமாக பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக வருவார்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதியவைக்க வேண்டி! அங்கு பதிந்தால் உடனே வேலை கிடைத்து விடும் என ஒரு நம்பிக்கை. தவிர போட்டி தேர்வுகள் எழுதினால் கூட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்திருந்தால் மட்டும் தான் வேலை என்பதால் கூட்டம் அலைமோதும். கிழக்கு பக்கம் இருந்து நாங்கள் செல்வதைப்போலவே மாவட்டத்தின் 20 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் கூட்டம் வரும். பதிய வைத்து முடியும் போது உயிர் போய் உயிர் வரும். அதுவும் அங்கே நடக்கும் கூத்துகள்... சொல்லி மாளாது. அந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒரு மாற்று திறனாளி அலுவலக உதவியாளர். மிகக்கொடூரமானவன். 1980ல் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதியப்போகும் எல்லோரையும் அவன் ட்ரீட் செய்யும் விதம் அகங்காரத்தின் உச்சமாக இருக்கும். அழுகையே வந்து விடும். அப்போதெல்லாம் நாங்கள் எங்களை கீழத்தஞ்சை என சொல்லிக்கொள்வோம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBhsLu73LP2kYE5rylZIZbhANmNd_h4jCEpjhgZMU1uJWOHCuBWWfUXQqlNVgqeOPqxdgsuS7N0bBNdmyDaM_aigY2JziDQfGrH8HjZEN9CVEZ-mSVP2pculRTVP7CP2_dJdo-hRsWci0/s1600/myd+12.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="1280" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBhsLu73LP2kYE5rylZIZbhANmNd_h4jCEpjhgZMU1uJWOHCuBWWfUXQqlNVgqeOPqxdgsuS7N0bBNdmyDaM_aigY2JziDQfGrH8HjZEN9CVEZ-mSVP2pculRTVP7CP2_dJdo-hRsWci0/s640/myd+12.jpg" width="640" /></a></div>
<br />
மாவட்டம் பெரியது என்பதால் அந்த தஞ்சை மாவட்டத்துக்கு மட்டும் இரண்டு எஸ்.பிக்கள் உண்டு. அதை நிர்வாக ரீதியாக பிரிக்காவிட்டாலும் மறைமுகமாக தஞ்சை மாவட்டம் என்பது கீழத்தஞ்சை மாவட்டம், மேலத்தஞ்சை மாவட்டம் என்றே இரண்டு எஸ்.பிக்கள் ஆளுமையில் ஆனால் ஒரே ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருந்தது. போலீஸ் வாகனங்களில் கூட “கீழத்தஞ்சை”, “மேலத்தஞ்சை” என்றே எழுதியிருக்கும். நாகை, வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை, குத்தாலம், பூம்புகார், சீர்காழி, ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கீழ தஞ்சை மாவட்டத்தில் வரும். அதற்கெல்லாம் நடுநாயகமாக மயிலாடுதுறை தான் இருந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBEB4SL4ltWgfNhBGX2FnOeGRb3odE0D9gfF0137Jd8h32QPkFn5W3cvP4lp5NOtf3oTGWwrhB1I72jSKUPk-xJq8G6Ao9i08402Q391TOhmw0FCSmvhREyxaMe2OgeatpI-ZG7JOaH1c/s1600/Vaitheeswaran-Koil14-copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="505" data-original-width="900" height="179" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBEB4SL4ltWgfNhBGX2FnOeGRb3odE0D9gfF0137Jd8h32QPkFn5W3cvP4lp5NOtf3oTGWwrhB1I72jSKUPk-xJq8G6Ao9i08402Q391TOhmw0FCSmvhREyxaMe2OgeatpI-ZG7JOaH1c/s320/Vaitheeswaran-Koil14-copy.jpg" width="320" /></a></div>
<br />
<br />
வேலை வாய்ப்பு அலுகவலகம் செல்லும் போதெல்லாம் கீழத்தஞ்சையை பிரித்தால் மயிலாடுதுறை மாவட்ட தலைநகராகிவிடும். இனி பதிவது மிகச்சுலபம் என மனதில் நினைத்துக் கொள்வோம். நான் சொல்வது 1980 காலகட்டம்... அப்போதெல்லாம் மயிலாடுதுறைக்கு “மாயூரம்” என்ற வடமொழிப்பெயர் தான். எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது. நாங்கள் “தஞ்சாவூர்க்காரர்கள்” என்னும் பெருமிதம் இருந்தாலும் அந்த பெருமிதம் என்பது நிர்வாக நீதியில் கீழத்தஞ்சை மாவட்டத்துக்கு கிஞ்சித்தும் உதவவில்லை என்பதே உண்மை. மெல்ல மெல்ல கீழத்தஞ்சை மாவட்ட மக்கள் முனுமுனுக்க தொடங்கினர். அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தஞ்சை மாவட்டத்தை பிரிப்பதற்கான காரணம் இரண்டு இருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் 20 தொகுதிகளில் 18 தொகுதிகளை திமுகவே தன் வசமாக்கி வந்தது. மன்னார்குடி அம்பிகாபதி, பட்டுக்கோட்டையில் எஸ்.டி.எஸ் ஆகியோர் மட்டும் அதிமுக. மீதியை பிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் தான் கீழத்தஞ்சையில் மக்கள் முனுமுனுப்பு அதிகமாகியது. ஒரு வேளை தஞ்சை மாவட்டத்தை பிரித்து விட்டால் அந்த கீழத்தஞ்சையை தன் வசமாக்கலாம் என்பதால் பிரிக்க முடிவு செய்தார். ஆனால் அப்படி பிரிக்கும் போது பூகோள ரீதியில் மாயூரத்தை தான் தலைநகராக ஆக்க வேண்டும். ஆனால் மாயூரத்தை திரு.கிட்டப்பா (திமுக சட்டமன்ற உறுப்பினர்) தன் கோட்டையாக வைத்திருந்தார். சரி... அப்படியெனில் மாயூரத்தை முதலில் பிடிக்க வேண்டும். அந்த மக்களை தன் வசமாக்க என்ன செய்யலாம் என யோசித்தார் எம்.ஜி.ஆர். அப்போது மாயூரம் எம்.எல்.ஏ வாக சிங்கம் போல கர்ஜித்த திரு கிட்டப்பா (திமுக சட்டமன்ற கொறடா) அவர்கள் மாயூரம் என்னும் வடமொழி பெயரை மயிலாடுதுறை என சட்டபூர்வமாக மாற்ற வேண்டும் என சட்டமன்றத்தில் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தார். அதே நேரம் தஞ்சையை பிரித்து மயிலாடுதுறையை தலைநகரமாக்கி மாவட்டம் ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் வலியுறுத்தினார். அதற்கான அரசியல் காரணங்கள் சில உண்டு.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgV5tdRAfHOSCPznj9GPfloxiIrIfWr7Ls2txIUu_hoPuBmWyaC1t4WANpIq6OgqiXLjaS2zSDUpuXnMxaGivElQUQDWQuO1vIJlVLFt9ebwFbZGpCZ43pW9lxCjoDeQZfJXjARXSGo_g0/s1600/church.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="314" data-original-width="474" height="422" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgV5tdRAfHOSCPznj9GPfloxiIrIfWr7Ls2txIUu_hoPuBmWyaC1t4WANpIq6OgqiXLjaS2zSDUpuXnMxaGivElQUQDWQuO1vIJlVLFt9ebwFbZGpCZ43pW9lxCjoDeQZfJXjARXSGo_g0/s640/church.jpg" width="640" /></a></div>
<br />
திமுக என்பது கட்டுக்கோப்பான கட்சி தான் எனினும் கட்சியின் தொடக்க காலம் தொட்டே கட்சியின் சீனியர் உறுப்பினர் ஆன திரு.கிட்டப்பா அவர்களுக்கு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயலாளர் ஆவதில் ஒரு விருப்பம் நீண்ட நாளாக இருந்து வந்தது. திரு மன்னை நாராயணசாமி, திரு. தாழை.மு.கருணாநிதி, திரு.கோசி.மணி போன்ற ஜாம்பவார்கள் வரிசையில் திரு கிட்டப்பா அவர்களும் தஞ்சை தரணியில் இருந்து வந்தார். ஒரு வேளை தஞ்சாவூர் பிரிக்கப்பட்டால் மேலத்தஞ்சை மாவட்டம் பகுதிக்கு திரு.கோசி.மணி என்றும் மயிலாடுதுறையை தலைநகரமாக கொண்ட கீழத்தஞ்சை மாவட்டத்துக்கு தாமும் மாவட்ட செயலாளர்கள் ஆகலாம் என்னும் அரசியல் கணக்கை போட்டார் திரு.கிட்டப்பா அவர்கள். அப்போது அவர் தஞ்சை மாவட்ட திமுக அவைத்தலைவர் ஆக இருந்தார் என்பது என் நினைவு.<br />
<br />
<br />
ஆக மயிலாடுதுறை என தமிழ்ப்பெயர் சூட்டவும், மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவும் முதலில் போராடியவர், குரல் கொடுத்தவர் திரு. என்.கிட்டப்பா அவர்கள் தான். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLrzGhLMuPM3CUGipv-0CGdXD65E_BzsABjlGUE1BfsH-zOK6y9pDMznOhPajsCsXVyU2DV_TxLD4A49wZYi6xxV6L80bHIpFPpgCkSJqJB8z4f837POkjNO4jro0apYE4JJkyEby7fLY/s1600/myd.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="496" data-original-width="886" height="358" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLrzGhLMuPM3CUGipv-0CGdXD65E_BzsABjlGUE1BfsH-zOK6y9pDMznOhPajsCsXVyU2DV_TxLD4A49wZYi6xxV6L80bHIpFPpgCkSJqJB8z4f837POkjNO4jro0apYE4JJkyEby7fLY/s640/myd.jpg" width="640" /></a></div>
<br />
இந்த நிலையில் தான் எம்.ஜி.ஆர் அவர்கள் மயிலாடுதுறை மக்களை கவர பரிட்சாத்த முறையில் ஒரு திட்டம் தீட்டினார். அதன் படி “மாயூரம்” என்னும் வடமொழிப்பெயரை “மயிலாடுதுறை” என மாற்ற முன்வந்தார். அப்போதே கோடியக்கரையை திருமறைக்காடு எனவும், மெட்ராஸ் என்பதை சென்னை எனவும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இருப்பினும் எம்.ஜி.ஆர் அரசியல் காரணங்களுக்காக முதலில் “மாயூரத்தை” மட்டும் “மயிலாடுதுறை” என பெயர் மாற்றி 08.06.1982 ல் (அரசாணை # 974) ஒரு உத்தரவிட்டார். அப்போது நெடுஞ்செழியன் அவர்கள் நிதி அமைச்சர். எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் வருவாய்த்துறை அமைச்சர். எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் தான் அப்போதைக்கு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துக்கு அமைச்சர் பிரதிநிதி என்பதால் அவருக்கு எம்.ஜி.ஆரிடம் நல்ல பெயர் மற்றும் நட்பு இருந்தமையால் மாவட்டத்தை பிரித்தால் தன் பவர் குறைந்து விடும் என்பதால் மாவட்டத்தை பிரிக்க தடை போட்டார் என்றும் அப்போது பேச்சுகள் இருந்தன. அதனால் எம்.ஜி.ஆர் அவர்கள் மாவட்டத்தை பிரிக்காமல் மாயூரம் என்னும் பெயரை மட்டும் மாற்றி மயிலாடுதுறை ஆக்கினார். அதன் காரணமாக 27.06.1982 அன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வடக்கே ஒரு மேடை போடப்பட்டு (தெற்கு பார்த்த மேடை) அதிலே தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் திரு நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் திரு.எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் பெயர் மாற்று பெரு விழா நடந்தது. அன்று மாலை அதே கச்சேரி சாலையில் இருக்கும் மலைக்கோவில் வளாகத்தில் இந்துமுன்னனி மற்றும் பாஜக ஆகியவை இணைந்து “மயிலாடுதுறை என பெயர் வைக்கக்கூடாது. மாயூரம் என்னும் வட மொழி பெயரே நீடிக்க வேண்டும்” என கூறி மக்கள் மனதை அறிய வாக்குப்பெட்டி வைத்து வாக்கு கேட்டது. அது அதிமுக அரசு விழாவெனினும் திமுகவினர் பெருவாரியாக கலந்து கொண்ட்னர். காரணம் ஒரு வடமொழி பெயர் ஒழிந்து தூய தமிழ்ப்பெயர் வருகின்றதே என்னும் ஆசை மற்றும் தமிழக அரசின் அந்த முடிவை தலைவர் கலைஞர் மனதார வரவேற்றிருந்தார். எனவே திமுகவினர் மிக்க மகிழ்வுடன் அதில் கலந்து கொண்டனர். அப்போது நாவலர் பேசிய பேச்சுகள் இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதை இப்போது இங்கே பதிந்தால் சிலர் மனது புண்படும் என்பதால் அதை தவிர்க்கிறேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhntOg4PGjank3lGOswmfPGCPRUQHrm_qkPhgk609m4t111VWKMqkRmxqYBKKy_AsVeHIROVdvzEIz0UDC8kJiMiTX5KAmmnb-jKqeZe_gO4TKOA5pJPfqzZgAQcKIVhgTxAN1zOOGUTMo/s1600/47_big.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="270" data-original-width="202" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhntOg4PGjank3lGOswmfPGCPRUQHrm_qkPhgk609m4t111VWKMqkRmxqYBKKy_AsVeHIROVdvzEIz0UDC8kJiMiTX5KAmmnb-jKqeZe_gO4TKOA5pJPfqzZgAQcKIVhgTxAN1zOOGUTMo/s1600/47_big.jpg" /></a></div>
<br />
<br />
ஆக அப்போதே மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு கீழத்தஞ்சை மாவட்டம் பிரிந்திருக்க வேண்டும். எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களால் அது முடியாமல் போனது. ஆனாலும் எம்.ஜி.ஆருக்கு கீழத்தஞ்சை மீது வைத்த கண் அகலவேயில்லை. எப்படியாவது கீழத்தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஒரு திமுக எம்.எல்.ஏ வாவது இருக்க வேண்டும் என நினைத்தார். பின்னர் எப்படியோ அண்ணன் திரு.கிட்டப்பா அவர்களை அதிமுகவுக்கு இழுந்து விட்டார். அந்த காலகட்டத்தில் தான் ஜெயாவை முதன் முதலாக 1983ல் அதிமுகவுக்கு உள்ளே கொண்டு வந்து கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கினார். அப்படி ஆக்கிய பின்னர் முதல் கூட்டத்தை அண்ணன் கிட்டப்பா அவர்களை விட்டு மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் (எம்.ஜி.,ஆர் வந்தால் பேசும் இடம் அது தான்) கூட்டம் போட்டார். பிரம்மாண்ட கூட்டம். அதே நேரம் திரு கிட்டப்பா அவர்களும் மயிலாடுதுறை மாவட்டம் ஆவதை எம்.ஜி.ஆர் அவர்களிடம் வலியுறுத்தி வந்தார். அந்த நேரத்தில் தான் எதிர்பாரா விதமாக அண்ணன் கிட்டப்பா அவர்கள் இயற்கை எய்தினார். இது திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் பேரிடியாக அமைந்தது. திரு கிட்டப்பா அவர்கள் மறைவுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் நேரிடையாக கலந்து கொண்டார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2VLxZ7lzMkCIBOgZGC9T_WF14LYVXi8IaRXqHqyL9c6p8yECZeV7ZUQgxyGclNHbf_dwDHcSkdAiemBsubOtMSlBHnEUMD0cEkj6T8rj6SfdK3KvLebgeVJ6MPMS6nHt0cD1hPkiTnBA/s1600/01_big.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="286" data-original-width="374" height="488" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2VLxZ7lzMkCIBOgZGC9T_WF14LYVXi8IaRXqHqyL9c6p8yECZeV7ZUQgxyGclNHbf_dwDHcSkdAiemBsubOtMSlBHnEUMD0cEkj6T8rj6SfdK3KvLebgeVJ6MPMS6nHt0cD1hPkiTnBA/s640/01_big.jpg" width="640" /></a></div>
<br />
ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களோ , ஜெயாவோ வரவில்லை. அதன் பின்னர் 20.05.1984 அன்று மயிலாடுதுறை சட்டமன்றத்துக்கு இடைத்தேர்தல் வந்தது. அண்ணாநகர், உப்பிலியாபுரம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல். எம்.ஜி.ஆருக்கு அப்போதெல்லாம் சென்னை மற்றும் தஞ்சை மாவட்டங்கள் தான் பெரிய தலைவலி. முழுவதும் திமுக வின் ஆக்கிரமிப்பில் இருந்தது. அப்போது எம்.ஜி.ஆர் சென்னை அண்ணாநகரைக்கூட கண்டு கொள்ளவில்லை. ஆனால் மயிலாடுதுறையில் தன் முழு கவனத்தையும் செலுத்தி தன் கட்சி பாலவேலாயுதத்துக்கு ஓட்டு சேகரித்தார். திமுக சார்பில் சத்தியசீலன் அவர்கள் வேட்பாளர். தான் தான் இங்கே வேட்பாளர். இது தனக்கும் கலைஞருக்குமான நேரடி போட்டி என அறிவித்தார் எம்.ஜி.ஆர். ஆனாலும் மயிலாடுதுறை மற்றும் அண்ணாநகரில் திமுக வென்றது. இது எம்.ஜி.ஆருக்கு மயிலாடுதுறை மீது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. அதிமுகவில் எப்படி ஜெயாவை கட்சிக்குள் எம்.ஜி.ஆர் நுழைத்தாரோ அதே போல திமுகவில் டி.ராஜேந்தர் நுழைந்த நேரம். ஆக எப்போதும் தோல்வியே காணாத எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்வில் முதல் தோல்வியை எழுதியது மயிலாடுதுறை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7XcF3aOtWwbLVzsxLCVH9Hg5bkrlhzpAQKqfOYulfo7wRfbPJiaVdgky4pwJWv5MYTTUlQjV9jS448Gjoj73P73W9D6c9t6fYBYbsUdat1lxBKXGQxc_wbRHi6CgDbebgBYqZDpwxX6U/s1600/3+myd+dt.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="719" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7XcF3aOtWwbLVzsxLCVH9Hg5bkrlhzpAQKqfOYulfo7wRfbPJiaVdgky4pwJWv5MYTTUlQjV9jS448Gjoj73P73W9D6c9t6fYBYbsUdat1lxBKXGQxc_wbRHi6CgDbebgBYqZDpwxX6U/s640/3+myd+dt.jpg" width="478" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjERIm_Z6_UYVU4BD69Ns0eooSKwDzygfEqEsfpx1VcaASj42S4GyUngQGS5DtR2m5hgn0O3jtmb5PdbCS94_wbnNlhxIBWgt3WwPDzu6q3G_OmZrn-LC3CSg_9Zb8GutQLJFK9HzvL0a8/s1600/2+myd+dt.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="719" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjERIm_Z6_UYVU4BD69Ns0eooSKwDzygfEqEsfpx1VcaASj42S4GyUngQGS5DtR2m5hgn0O3jtmb5PdbCS94_wbnNlhxIBWgt3WwPDzu6q3G_OmZrn-LC3CSg_9Zb8GutQLJFK9HzvL0a8/s640/2+myd+dt.jpg" width="478" /></a></div>
<br />
உடனே மாவட்ட பிரிப்பை தள்ளிப்போட்டார் எம்.ஜி.ஆர். மயிலாடுதுறையை மாவட்ட தலைநகராக ஆக்க அவர் விரும்பவில்லை போல! ஆனால் அடுத்த 18 மாதத்தில் எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் அமரிக்காவில் அவர் இருந்த போது சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தது. மயிலாடுதுறையில் முதன் முறையாக அதிமுகவின் தங்கமணி எம்.எல்.ஏ ஆனார். ஆனால் அவர் மயிலாடுதுறை மாவட்டம் ஆக்க குரல் கொடுக்கவில்லை. அதன் பின்னர் இந்திரா மறைந்தார். ராஜீவ் ஆட்சி வந்தது. கட்சித்தாவல் தடை சட்டம் எல்லாம் வந்தது. பஞ்சாயத்து ராஜ் சட்டம் வந்தது. அதன் பின்னர் நீண்ட நாட்கள் கழித்து தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தது. மாநகராட்சிகளை தவிர்த்து நகராட்சி, ஒன்றியம், பேரூருக்கு தேர்தல். தமிழகம் முழுமையும் மிக மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றது. எம்.ஜி.ஆருக்கு அது பெரிய இடியாக விழுந்தது. இதனிடையே கீழத்தஞ்சை மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்கிற குraல் அதிகமாகியது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrOX70LNgDUdsGL_U_HzNGLaLSXk_Q87ng86XP87_cuMYvO5RjJJdm3IIBOcjD0MmQ0MS547IpcKdTjO5I7zqzCqWz65_ZfGJ6WetVRQY9pznrjGIwj1-D-Yp8vJnACq_ecEdlQUmR9fg/s1600/4+myd+dt.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="719" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrOX70LNgDUdsGL_U_HzNGLaLSXk_Q87ng86XP87_cuMYvO5RjJJdm3IIBOcjD0MmQ0MS547IpcKdTjO5I7zqzCqWz65_ZfGJ6WetVRQY9pznrjGIwj1-D-Yp8vJnACq_ecEdlQUmR9fg/s640/4+myd+dt.jpg" width="478" /></a></div>
<br />
<br />
<br />
உடனே எம்.ஜி.ஆர் ஒரு வேளை செய்தார். மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு வர இருக்கும் புதிய மாவட்டத்தை கிடப்பில் போட்டு தில்லையாடி வள்ளியம்மை மாவட்டம் என்கிற பெயரில் திருவாரூரை தலைநகராக ஆக்கி ஒரு மாவட்டம் அமைக்கப்படும் என்றார். ஆனால் பிரிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட எல்லையில் வராது அந்த தில்லையாடி என்பது. அது பொறையார் - தரங்கம்பாடி அருகே இருக்கும் கிராமம். மயிலாடுதுறை மக்களை பழிவாங்கியது போலவும் ஆயிற்று எம்.ஜி.ஆருக்கு. அதே நேரம் திருவாரூர் ... கலைஞர் பிறந்த ஊரை தான் தான் தலைநகர் ஆக்கினோம் என சொல்லியும் அந்த பக்கம் இருக்கும் மக்களை இழுக்கலாம் என்னும் அரசியல் கணக்கை போட்டார் எம்.ஜி.ஆர். ஆனால் துரதிஷ்டவசமாக எம்.ஜி.ஆர் இயற்கை எய்தினார். அத்தோடு மாவட்ட பிரிப்பு என்னும் பேச்சு நின்று போனது. காரணம். எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு பின்னர் ஜானகி ஆட்சி, பின்னர் ஆளுனர் அலக்ஸாண்டர் ஆட்சி, பின்னர் 1989ல் திமுக ஆட்சி, அதிலே மயிலாடுதுறை எம்.எல்.ஏ வாக திமுகவை சார்ந்த அ.செங்குட்டுவன் அவர்கள் வந்தார். அவர் அப்போது எம்.எல்.ஏ, நகராட்சி தலைவர் உள்ளிட்ட 7 பதவிகளை கையில் வைத்திருந்தார். அவர் தான் மயிலாடுதுறை தலைநகராக ஆக வேண்டும் என கிட்டப்பா அவர்களுக்கு அடுத்ததாக இரண்டாவதாக குரல் கொடுத்தவர். அதுவும் இரண்டு ஆண்டுகளில் கலைப்பு என ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்தது தமிழ்நாடு. அதனால் அந்த அறிவிப்பு அப்படியே முடங்கிப்போனது. அதன் பின்னர் 1991ல் ராஜீவ் மரணம், பின்னர் ஜெயா ஆட்சி என வரிசை கட்டி வந்தது. 1991 முதல் 2001 வரை அதிராம்பட்டினம் சார்ந்த எம்.எம். அபுல்ஹாசன் அவர்கள் (91ல் காங்கிரஸ் எம்.எல்.ஏ, 1996ல் த.மா.கா எம்.எல்.ஏ) பத்தாண்டுகள் மயிலாடுதுறை எம்.எல்.ஏ வாக இருந்தார். அந்த கால கட்டத்தில் மயிலாடுதுறைக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க நாதி இல்லாமல் போனது. அபுல்ஹாசன் அவர்கள் நல்லவர் தானேயொழிய வல்லவரோ அல்லது சட்டமன்றத்தில் தொகுதிக்காக குரல் கொடுக்கக்கூடியவரோ அல்லர். <br />
1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அவர்கள் மயிலாடுதுறை மக்களின் கோரிக்கையையும் காதில் வாங்காமல், எம்.ஜி.ஆர் அறிவித்த தில்லையாடி வள்ளியம்மை பெயரில் அமைக்க அறிவிப்பு செய்த திருவாரூர் மாவட்டத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு நாகப்பட்டினத்தை தலைநகராக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவித்து 18.09.1991 முதல் செயல்படுத்தினார். அதற்கு பெயர் நாகை காயிதே மில்லத் மாவட்டம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmVmJK_OO1LZSUr4YK4yN1P3vKGUrxS_70et2OsAdjKu2SajLuQTMyArUSWWjn57bBDqz81qBq5SUFVEcseBT6FzNeluJ_is3yzVYPUzthVPR60ujRqYZKfVVeY0HBP9Xuk_UIv_gj4Eo/s1600/jv+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="720" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmVmJK_OO1LZSUr4YK4yN1P3vKGUrxS_70et2OsAdjKu2SajLuQTMyArUSWWjn57bBDqz81qBq5SUFVEcseBT6FzNeluJ_is3yzVYPUzthVPR60ujRqYZKfVVeY0HBP9Xuk_UIv_gj4Eo/s640/jv+1.jpg" width="480" /></a></div>
<br />
போச்சுதா... மயிலாடுதுறை மாவட்டம் என்பது மக்களின் கனவாகவே போய்விட்டது. மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டிணம் செல்ல வேண்டுமாகின் பாண்டிச்சேரியின் காரைக்கால் (வேறு யூனியன் பிரதேச மாநிலம்) கடந்து போக வேண்டும். அல்லது திருவாரூர் மாவட்டத்தை கடந்து செல்ல வேண்டும். அதன் பாதகங்களை பின்னர் விரிவாக பார்க்கலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQlUHv4gOPZO3eTsJYAhTVvEghvLfqEAP3-TGuRZYQuD0zAU3rUewX0jcM5GgMFQDu9Z1gvOnl-_1HcbGzMxfwhW4VDZe8VCKsyzJtq5SjNpwlqx34E4e_fF1BmaYNWRttq-DMLoYDN08/s1600/arul.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="1280" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQlUHv4gOPZO3eTsJYAhTVvEghvLfqEAP3-TGuRZYQuD0zAU3rUewX0jcM5GgMFQDu9Z1gvOnl-_1HcbGzMxfwhW4VDZe8VCKsyzJtq5SjNpwlqx34E4e_fF1BmaYNWRttq-DMLoYDN08/s640/arul.jpg" width="640" /></a></div>
<br />
<br />
மீண்டும் 1996ல் ஆட்சிக்கு வந்தது. அப்போதும் மயிலாடுதுறை மக்கள் மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க பல முறை தங்கள் தொகுதி எம்.எல்.ஏ விடம் (அப்போது அதே எம்.எம்.எஸ் அபுல்ஹாசன் அவர்கள் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸில் நின்று வென்றிருந்தார்) கேட்க அவர் அது பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் 1997 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல் திருவாரூரை தலைநகராக கொண்டு (திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் தொகுதிகள்) ஒரு மாவட்டம் அமையும் என அமைத்து விட்டார். அப்போதும் மயிலாடுதுறை மக்களின் கனவு தகர்ந்து விட்டது. <br />
மீண்டும் மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு மாவட்டம் வருமா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. 2001 முதல் 2006 வரை மீண்டும் அதிமுக ஆட்சி. அப்போது மயிலாடுதுறை எம்.எல்.ஏவாக இருந்தவர் அப்போது பாஜக கட்சி (திமுகவுடன் கூட்டணி அமைத்து)யை சார்ந்த ஜெக.வீர.பாண்டியன் அவர்கள் 23-4-2002 அன்று சட்டமன்ற மானியக்கோரிக்கை மீதான முதல் கன்னிப்பேச்சியிலேயே அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முன்னிலையில், வாக்களித்த தொகுதி மக்களுக்கும் வாய்ப்புஅளித்த இந்திய பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கும், கூட்டணிக்கட்சி தலைவர் கலைஞர் அவர்களுக்கும் சோழமண்டல தளபதி கோசி. மணி அவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து பேசிய முதல்கூட்டத்திலேயே மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அமைத்திட வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார்கள். ஜெயா ஆட்சியில் அது நடக்குமா என்ன? முடியவில்லை.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCndpEOKsl3AP-biim6nYFJpd97s0guE3BkUyr2myAN-7ZPSMHG4E89gKEDj5Lewk3B7aYyhJzRQTuHVEZL0xFgblrnuVNQGvXl8oSfTt4UepD92HwddVv23jzsQ5bVCNPITCG2SfxqPE/s1600/seyon+6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="719" data-original-width="960" height="478" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCndpEOKsl3AP-biim6nYFJpd97s0guE3BkUyr2myAN-7ZPSMHG4E89gKEDj5Lewk3B7aYyhJzRQTuHVEZL0xFgblrnuVNQGvXl8oSfTt4UepD92HwddVv23jzsQ5bVCNPITCG2SfxqPE/s640/seyon+6.jpg" width="640" /></a></div>
<br />மீண்டும் 2006ல் திமுக ஆட்சி அமைந்தது. அப்போது மயிலாடுதுறையில் காங்கிரஸ் (திமுகவுடன் கூட்டணி அமைத்து வென்றது) எஸ்.ராஜ்குமார் அவர்கள். திமுக ஆட்சியில் லட்டு போல மயிலாடுதுறையை மாவட்டம் ஆக்கியிருக்கலாம். கையில் வெண்ணை இருந்தும் அதை நெய்யாய் ஆக்காமல் அழகாய் தவற விட்ட பெருமை இவருக்கே சேரும். ஆனால் அதிஷ்ட வசமாக பக்கத்து தொகுதியான குத்தாலம் தொகுதியில் குத்தாலம் க. அன்பழகன் அவர்கள் எம்.எல்.ஏ வாக இருந்தார். மேலும் ஒரு வரப்பிரசாதமாக அப்போது அவர் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவராகவும் அமர்த்தப்பட்டார். அவரைப்பயன் படுத்தி மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜ்குமார் எத்தனையோ செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை என்பதே கசப்பான உண்மை. இதையெல்லாம் இப்போது பேசி பயனில்லை என்பினும் வரலாறு என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதால் எழுதுகிறேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE3iLLs8eJSjKtOUBxbLcOMxn9166LeFvWsebdxsVHfgSECsZtHKUEEo7XPmEWnazPICo9M-VBYuULNu3a8LunNEqQ65m1Xdvqrxr6qhp8sB0uxq6L2kmYVqhv7j3cGCoaa39TUBBp1DI/s1600/seyon+5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="706" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE3iLLs8eJSjKtOUBxbLcOMxn9166LeFvWsebdxsVHfgSECsZtHKUEEo7XPmEWnazPICo9M-VBYuULNu3a8LunNEqQ65m1Xdvqrxr6qhp8sB0uxq6L2kmYVqhv7j3cGCoaa39TUBBp1DI/s640/seyon+5.jpg" width="470" /></a></div>
<br />
<br />
இதே குத்தாலம் க. அன்பழகன் அவர்கள் குத்தாலம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மதிப்பீட்டுக்குழு தலைவராக இருந்த காலத்தில் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி (20.01.2010) காலை 9.00 மணிக்கு மயிலாடுதுறை காவிரி இல்லத்தில் கூடியது. அதன் தலைவர் குத்தாலம் க.அன்பழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சதன் திருமலைக்குமார், விடியல் சேகர், நன்மாறன், லெட்சுமனன்,ஹசன் அலி போன்றவர்களும் தலைமை செயலக அதிகாரி சார்பு செயலாளர் சக்திவேலு மற்றும் நாகை மாவட்ட ஆட்சித்தலைவர், மயிலாடுதுறை கோட்டாட்சியர், வட்டாட்சியர், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பல பரிந்துரைகளை சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு அளித்தது. அதில் மிகக்குறிப்பாக பரிந்துரை எண் 42 மற்றும் 43 ஆகியவைகள் மயிலாடுதுறையை ஏன் நாகையில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. (படத்தை பார்க்கவும்) அந்த மதிப்பீட்டுக்குழு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சுற்றி வந்து தன் முழு அறிக்கையை 06.05.2010 அன்று பேரவைக்கு அளித்தது. அந்த அறிக்கை தாக்கல் செய்த பின் திமுக ஆட்சி முழுமையாக ஒரு வருடம் இருந்தது. 2011 மே மாதம் வரை திமுக ஆட்சி இருந்தது. மயிலாடுதுறை எம்.எல்.ஏ அந்த ஒரு வருடத்தில் மதிப்பீட்டுக்குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த ஒரு வருடத்தில் தரையில் புரண்டு போராடி அமல் படுத்தியிருக்க வேண்டுமா இல்லையா? நடக்கவில்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQs7JDJ0qxu3cxUT6lni7uJewJ-re1LpQi5Vmd_XqgGI7P1LtwFko4pOftM31RZjGSB2WMHepAl4okQ-MPAlso0a60Nu2WBDEWH1AX48LIkXVAc1obgTEsB71jeBj4p7J6r1zfPXvRrPQ/s1600/seyon+3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="739" data-original-width="960" height="492" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQs7JDJ0qxu3cxUT6lni7uJewJ-re1LpQi5Vmd_XqgGI7P1LtwFko4pOftM31RZjGSB2WMHepAl4okQ-MPAlso0a60Nu2WBDEWH1AX48LIkXVAc1obgTEsB71jeBj4p7J6r1zfPXvRrPQ/s640/seyon+3.jpg" width="640" /></a></div>
<br />
ஒரு நல்ல வாய்ப்பு பறிபோனது. அதன் பின்னர் 2011 மே மாதம் முதல் மீண்டும் அதிமுக ஆட்சி வந்தது. தேமுதிகவில் இருந்து தேர்வான தற்போதைய திமுக மாநில விவசாய அணி இணைச்செயலாளர் ஆர். அருள்செல்வன் அவர்கள் எம்.எல்.ஏ வாக தேர்வாகியிருந்தார். முதல் ஆறு மாதங்கள் தேமுதிகவுக்கும் அதிமுகவுக்கும் நல்ல உறவு இருந்தது. அப்போது தான் மயிலாடுதுறை தீபாய்ந்தாள் அம்மன் கோவில் காவிரி பாலம், வரதம்பட்டு பாலம் எல்லாம் வந்தது மயிலாடுதுறைக்கு. பின்னர் விஜயகாந்துக்கும் ஜெயாவுக்கும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ அருள்செல்வன் அவர்கள் 6 மாதம் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது எம்.எல்.ஏ அலுவலகம் கூட மூடப்பட்ட அவலம் ஜெயா ஆட்சியில் நடந்தது. பின்னர் அரசின் ஒத்துழைப்பு இல்லாமலே அவரால் இயன்ற பணிகளை மயிலாடுதுறைக்கு செயல்படுத்த அவர் தவறவில்லை. மயிலாடுதுறை மணல் மேட்டில் புதிய அரசு கலைக்கல்லூரி பெற்றுக் கொடுத்தார். மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் அமைக்க 13 ஏக்கர் நிலத்தை தருமை ஆதீனத்திடம் பேசி பூம்புகார் சாலையில் வாங்கி கொடுத்தார் ஆர். அருள்செல்வன் அவர்கள். இதோ அதன் பின்னர் ஐந்து முழு ஆண்டுகள் ஆகிவிட்டது அதன் பின்னர் அதிமுகவில் இருந்து ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏவாக தேர்வாகி! இன்னமும் பேருந்து நிலையம் வந்தபாடில்லை. தமிழக அரசு, தருமை ஆதீனத்திடம் இருந்து வாங்கிய நிலம் அப்படியே வேலி போடப்பட்டு அமைதி காக்கின்றது. இதனிடையே அரசு தன் சட்டமன்ற பணிகளுக்கு ஒத்துழைக்கவில்லை , இடம் வாங்கி கொடுத்தும் பேருந்து நிலையம் அமைக்க முன்வரவில்லை, மேலும் மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். தன் சக்திக்கு மேல் போராடினார். ஆனாலும் ஜெயா அரசு ஒத்துழைக்கவில்லை. இதோ 2016 முதல் இன்று தேதி 27.03.2020 ஆகிவிட்டது. மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கும் போராட்டங்கள் வலுவடைந்த பின்னரும் கூட வக்கீல் சங்கம் எல்லாம் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம், வர்த்தகர் சங்கம் போராட்டம், தமிழ்ச்சங்கம் போராட்டம், பேராசிரியர் முரளி தலைமையில் போராட்டம் இப்படி பல போராட்டங்கள் நடந்த போதும் அதிமுக எம்.எல்.ஏ காதில் விழவில்லை.<br />
<br />
<br />
<br />
எத்தனை போராட்டம் எத்தனை போராட்டம்? வக்கீல் சேயோன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து பல போராட்டங்கள், வர்த்தகர் சங்கம் திரு செந்தில்வேல் தலைமையில் பல போராட்டங்கள், அனைத்து கட்சிகள் சேர்ந்து கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்.கே.சங்கர், வக்கீல் சிவதாஸ், வக்கீல் அருள்தாஸ், வக்கீல் புகழ், வக்கீல் சங்கரநாராயணன், கோமல் அன்பரசன் தலைமையில் காவிரி கதிர் குழுமங்களின், மயூரயுத்தம் குழுவினரின் பல போராட்டங்கள், கடைசியாக ஒடிசா பாலு வரை, மயிலாடுதுறை தமிழ்சங்கங்கள், ஜெனீபர் ஓனர் வரை எத்தனை எத்தனை போராட்டங்கள்.... <br />
இந்த நேரத்தில் தான் மத்திய அரசு நாகை மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்கும் முடிவை எடுத்த போது அந்த மருத்துவக்கல்லூரி மயிலாடுதுறைக்கு வேண்டும் என போராட்டம் உச்சம் அடைந்தது. ஆனால் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் நின்று வென்று பாராளுமன்றம் சென்ற ஓ.எஸ் மணியன் அவர்கள் தான் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் ஆகினும் நம்மை வெற்றி பெறச்செய்தார்களே மயிலாடுதுறை மக்கள் என்னும் நன்றி கூட இல்லாமல் “மயிலாடுதுதுறைக்கு மருத்துவக்கல்லூரி கிடையாது. நாகைக்கு தான் அந்த கல்லூரி” என பேட்டி கொடுத்த போது தான் மயிலாடுதுறை மக்களின் கோபம் அதிகமாகியது. இத்தனைக்கும் நாகைக்கும் காரைகாலுக்கும் இடையே 15 கிமீ தூரம் தான். காரைக்காலில் வினாயகா மிஷன் மருத்துவக்கல்லூரி இருக்கின்றது. அதே போல நாகைக்கும் திருவாரூருக்கும் வெறும் 20 கிமீ தான். அங்கே திருவாரூரில் மருத்துவக்கல்லூரி இருக்கின்றது. நாகை மக்களுக்கு ஒரு ஆபத்து எனில் வெறும் பத்து நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால் மயிலாடுதுறை மக்கள்???? சிதம்பரத்துக்கு 43 கிமீ தூரம் போக வேண்டும், அல்லது திருவாரூருக்கு 40 கிமீ தூரம் போக வேண்டும். (இந்த கணக்கு மயிலாடுதுறை டவுனில் இருந்து மட்டும்) மயிலாடுதுறையில் உயிர்காக்கும் மருத்துவமனைகள் என்பது கிடையாது. அதுவும் ஞாயிறு அன்று மயிலாடுதுறையில் வசிப்பதே நரகத்தில் வசிப்பதற்கு சமம். ஒரு சாதாரண காய்ச்சலுக்கு கூட எந்த டாக்டர்களும் இருக்க மாட்டார்கள். இது தான் மயிலாடுதுறையின் நிலை. இப்படி இருக்கும் போது அந்த மருத்துவக்கல்லூரியை மயிலாடுதுறைக்கு கொண்டு வர வேண்டும் என மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணனோ அல்லது சீர்காழி எம்.எல்.ஏ பாரதியோ கேட்டார்களா எனில் இல்லை என்பதே உண்மை. ஆனால் நான் இந்த விஷயத்தில் பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் அவர்களை பாராட்டித்தான் ஆக வேண்டும். புவுன்ராஜ் எம்.எல்.ஏ அவர்கள் இது விஷயமாக முதல்வரை சந்திக்க போகலாம் என ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதியை கேட்ட போது அவர்கள் வர மறுத்து விட்டதாக இங்கே அனைத்து நாளிதழும் செய்தி வெளியிட்டதே! பேராசிரியர் முரளி கூட தன் முகநூல் பக்கத்தில் எழுதி இருந்தாரே? போனதெல்லாம் போகட்டும். இனி மயிலாடுதுறை மாவட்டம் அமைய பாடுபடுங்கள். நாங்கள் எப்போதும் நன்றியோடு இருப்போம்.<br />
<br />
<br />
<br />
மயிலாடுதுறை பேருந்து நிலையம் என்ன ஆனது இந்த 4 ஆண்டுகளில்? மாப்படுகை மேம்பாலம் உறுதி அளித்தது என்ன ஆனது இந்த 4 ஆண்டுகளில்? மயிலாடுதுறை சுற்று வட்ட சாலை நிலம் ஆக்க்கிரமிப்பு எல்லாம் முடிந்தும் 4 ஆண்டுகள் ஆகின்றதே? எங்கே அந்த சுற்று வட்ட சாலை? ஆக இப்போது மயிலாடுதுறை மாவட்டம் என்பது மக்கள் போராட்டத்தால் வந்தது என்பதை உணர்க! முதலில் குரல் கொடுத்தது என்.கிட்டப்பா திமுக எம்.எல்.ஏ, அடுத்து அ.செங்குட்டுவன் திமுக எம்.எல்.ஏ, குத்தாலம் பி.கல்யாணம் (குத்தாலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ) (மயிலாடுதுறை எம்.எல்.ஏ அபுல்ஹாசன் பேசாமல் இருந்த போது மயிலாடுதுறை தொகுதிக்காகவும் பேசியவர் குத்தாலம் கல்யாணம் அவர்கள்) , ஜெகவீரபாண்டியன் எம்.எல்.ஏ ( திமுக)ஆர்.அருள்செல்வன் எம்.எல்.ஏ (திமுக மாநில விவசாய அணி இணை செயலாளர்), பவுன்ராஜ் (பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ), அதிமுக நகர செயலாளர் வி.ஜி.கே செந்தில் அவர்கள் மற்றும் வர்த்தகர் சங்கம், மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம், அறம் அமைப்பினர், பேராசிரியர் முரளி, மயூரயுத்தம் கோமல் அன்பரசனின் காவிரி குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் சாதித்து காட்டிவிட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் உண்டானது. மிக முக்கியமாக தருமை ஆதீனம் அவர்கள். கேட்டதும் 60 ஏக்கர் நிலத்தை அள்ளிக்கொடுத்து மயிலாடுதுறையில் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகியவைகள் கட்ட இடம் கொடுத்த தருமை ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் ஸ்வாமிகள் அவர்களுக்கு நன்றிகள்! மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், சீர்காழி எம்.எல்.ஏ பாரதி, பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் மற்றும் இந்த இனிய அறிவிப்பை மயிலாடுதுறை மக்கள் மனம் மகிழும் அறிவிப்பை செய்து செயல்படுத்த தயாராக இருக்கும் தமிழக முதல்வர் திரு எடப்பாடியார் அவர்களுக்கும் துணை முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்களுக்கும் மயிலாடுதுறை மக்கள் சார்பாக என் நன்றிகள்!<br />
<br />
<br />
<br />
அதே போல பல முறை மயிலாடுதுறை மாவட்டம் ஆக வேண்டும் என புலம்பும் போதெல்லாம் செவிமடுத்து மயிலாடுதுறை மாவட்ட தலைநகர் ஆன உடனேயே தன் உணர்வுகளை தன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவாக வெளியிட்ட எங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு தங்கம் சாருக்கு என் நன்றிகள். இதோ அவரது பதிவு...<br />
<br />
<br />
<span style="color: red;"><b>// “ ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது!”<br />மயிலாடுதுறை மாயூரமாகி , பின்னர் மாயவரமாகி, மீண்டும் மயிலாடுதுறையாகவே மாறி இன்று தனி மாவட்டமாகவே ஆகியிருக்கின்றது.<br />பெருமகிழ்ச்சி!😊👏🏻<br />வறண்ட இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் வளம் கொழிக்கும் தஞ்சை மாவட்டத்திற்கும் தொட்டுத் தொடரும் தொடர்புகள் பன்னெடுங்காலமாக உண்டு. திருத்தல யாத்திரையாக பாஸ்கர சேதுபதி மன்னர் தஞ்சை மாவட்டத்திற்குத் தன் பரிவாரங்களோடு போனது மட்டுமல்ல; வானம் பார்த்த எங்கள் பகுதியில் இருந்து விவசாயத் தொழிலாளர்களாக ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சைத் தரணிக்குப் புலம் பெயர்வதும், விவசாயப் பணிகள் முடிந்த பின் மீண்டும் திரும்புவதும் எளிய மக்களுக்கான வரலாறேயாகும்.<br />சோழ வளநாட்டில் மனங்கவர்ந்த பகுதிகள் பல இருந்தாலும், மயிலாடுதுறை மீதான ஒரு தனி மையல் இருக்கத்தான் செய்கின்றது.❤️எண்பதுகளின் துவக்கத்தில் அந்த நகரத்தில்தான் எனது விடுமுறை நாட்கள் அனைத்தும் செலவழிந்திருக்கின்றன. ராஜன் தோட்டமும், மணிக்கூண்டும், மகாதான-பட்டமங்கலத் தெருக்களும், அவயாம்பிகை கோவிலும், தருமையாதீனமும், காவிரிப் பாலமும், ரயில் நிலையமும், இன்னும் நெஞ்சத்துக்கு நெருக்கமானவையாகவே உணர வைக்கின்றன. சிதம்பரத்தில் இருந்து வந்து இறங்கி குடந்தைக்கு மாறும் அந்தப் பேருந்து நிலையம் இன்றைக்கும் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிக்கொண்டு; ஆனால், எனக்கு மட்டும் சில இன்பக்கதைகளை ரகசியமாகச் சொல்லிக்கொண்டு இருக்கத்தான் செய்கின்றது.<br />எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்; எத்தனை மாற்றங்கள் வந்தாலும்; மயிலாடுதுறை என் உணர்வில் கலந்த ஒரு பெயர்! <br />இன்று நான் போற்றும் பல நல்ல நண்பர்களை எனக்குத் தந்து, தனி மாவட்டமாக மிளிரக் காத்திருக்கின்றது. அதற்கான முன்னெடுப்பு மேற்கொண்டோர் அனைவருக்கும் வாழ்த்துகள்.<br />“வாள்நிலா மயிலாடுதுறைதனைக் <br />காணில், ஆர்க்கும் கடுந் துயர் இல்லையே.!”<br />- திருநாவுக்கரசர்.// </b></span><br />
<span style="color: red;"><b>மீண்டும் என் நன்றிகள் எங்கள் தங்கம் சாருக்கு! </b></span><br />
<span style="color: red;"><b><br /></b></span>
<span style="color: red;"><b><br /></b></span>
சரி.... மயிலாடுதுறைக்கு மாவட்ட தலைநகர் என்னும் அந்தஸ்து வந்தாகிவிட்டது. அடுத்து என்ன வளம் இருக்கின்றது எங்கள் மாவட்டத்தில் என்போர்களுக்காக....<br />
<br />
<br />
மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை முழுமையாக கொண்டது எங்கள் மாவட்டம். அதே போல மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகள் மயிலாடுதுறை மாவட்டம் சார்ந்தது. கொள்ளிடத்தில் இருந்து ஆறுகள் எத்தனை தெரியுமா? கொள்ளிடம், ராஜா வாய்க்கால், காவிரி, மஞ்சளாறு, கடலாழி, வீரசோழன் ஆறு, நண்டலாறு ஆகிய பெரிய ஆறுகள் பாய்கின்றன. கூழையார் முதல் தரங்கம்பாடி வரை கடல் பகுதிகள். மீன் வளம் குறைவில்லை. முழுக்க முழுக்க டெல்டாவின் கடைமடை பகுதி, காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் எங்கள் மாவட்டம். டச்சு கோட்டை அமைந்திருக்கும் கோட்டை அமைந்திருக்கும் தரங்கம்பாடி, மாயூரநாதர், பரிமள ரங்கநாதர் போன்ற சிவ, வைஷ்ணவ தளங்கள், குதம்பை சித்தர்,திருமூலர் ஆகியோர் ஜீவசமாதிகள், சித்தர்காட்டில் 63 சித்தர்கள் சிவ அடக்கம் ஆன ஸ்தலம், உலகப்புகழ் பெற்ற தருமை ஆதீனம், மயிலாடுதுறை இரயில்வே சந்திப்பு 1867 முதல் மயிலாடுதுறையில் புகை வண்டி செல்லும் வழித்தடம். மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் மார்க்கம், திருச்சி மார்க்கம், திருவாரூர் மார்க்கம் என மூன்றாக பிரியும் பெரிய இரயில்வே சந்திப்பு. ஏற்கனவே நின்று போன தரங்கம்பாடி சந்திப்பை இனி வரும் எம்.எல்.ஏக்கள் மாநில தலைமைக்கு அழுத்தம் கொடுத்து அவைகள் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தால் மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில்வே பாதை மீண்டும் துளிர்க்கும். தரங்கம்பாடியில் இருந்து புதிய வழித்தடம் காரைக்காலுக்கு இணைத்தால் காரைக்கால் துறைமுகத்தில் வரும் பொருட்கள் சென்னை வரை அழகாய் சென்று விடும். லாரி வழியே சாலை போக்குவரத்தை தவிர்கலாம். அதே போல மயிலாடுதுறையில் இருந்து திருவையாறு, அரியலூர் வரை புதிய ரயில் வழித்தடம் அமைத்தால் அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு தேவையான சுண்ணாம்புக்கல் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நேரிடையாக செல்லும், அதே நேரம் பழையார்( கூழையார்), பூம்புகார் பகுதிகளில் மீன் பிடி துறைமுகங்களை விரிவு செய்தால் மிகப்பெரிய வர்த்தகம் உண்டாகும். தரங்கம்பாடியில் காரைக்கால் போல ஒரு செயற்கை துறைமுகம் அமைத்தால் மிகச்சிறப்பு. விவசாயம், மீன்பிடி ஆகியவைகள் போதுமானது எங்கள் வாழ்வாதாரத்துக்கு! இன்னும் எத்தனையோ சொல்லலாம். நான் மேலே சொன்னவைகளை செய்ய நல்ல எம்.எல்.ஏக்கள், மற்றும் எம்.பி இருந்தால் போதும் இன்னும் 15 ஆண்டுகளில் மயிலாடுதுறை மாவட்டம் ஒரு முதன்மையான மாவட்டமாக திகழும் தமிழகத்தில்! <br />
மயிலாடுதுறையை மாவட்டமாக்க போராடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், முதல்வர் எடப்பாடி அவர்களுக்கும் என் நன்றிகள்! <br />
<b><span style="color: red; font-size: x-large;">- அபி அப்பா என்கிற தொல்காப்பியன்<br />மயிலாடுதுறை மாவட்டம்</span></b><br />
<b></b><br />
<br />
<br />
<br />அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36418753017242861592019-12-30T08:17:00.000+05:302019-12-30T08:21:31.322+05:30சிவகார்த்திகேயனின் ”ஹீரோ” படம்(பார்க்கப்போன) விமர்சனம்!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfUTuEWXiIx0XoCPq9xV5WntAxKhAx_r0Gobx3FdersJ4VoTurdt4DbtWaGNgyF5U5qDvwDet0Frq3WveejaTYaioZjK-os7jo7bBmMY0MTxthL2fLtcDoWo-PLHdkGeKSiqvHtkbZSvg/s1600/image_750x_5e00a1cd24631.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="350" data-original-width="650" height="344" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfUTuEWXiIx0XoCPq9xV5WntAxKhAx_r0Gobx3FdersJ4VoTurdt4DbtWaGNgyF5U5qDvwDet0Frq3WveejaTYaioZjK-os7jo7bBmMY0MTxthL2fLtcDoWo-PLHdkGeKSiqvHtkbZSvg/s640/image_750x_5e00a1cd24631.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<br />
ஒரு சினிமா பார்க்க போனது குத்தமாய்யா என நினைக்கும் அளவு ஆனது சிவகார்த்திகேயனின் “ஹீரோ” பட அனுபவம். அதுவும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க நினைத்தது தான் என் மாகுற்றம். காலையில் தியேட்டரில் நுழையும் போதே அத்தனை கூட்டம். கியூவில் நின்று டிக்கெட் எடுக்கவும் வெட்கம். “சபரிமலைக்கு மாலை போட்டவர்களுக்கு ஆச்சாரமான தனி கியூ”வெல்லாம் கொடுக்காத தியேட்டரின் அராஜகம்... அதை விடுங்கள். தனிப்பதிவாக போடும் அளவு பக்தாள்ஸ்க்கு கொடுமை நடக்கின்றது இந்த பெரியார் பூமியில்!<br />
<br />
யாராவது சிரித்த மூஞ்சியான் வருவான், டிக்கெட் எடுத்து தருவான் அல்லது தியேட்டர் ஓனரோ, அவ்வளவு ஏன் சிவகார்த்திகேயனோ கூட வந்து “அடடே அபிஅப்பாவா இது? நீங்கல்லாம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா தியேட்டரை பசு மாதிரி கயித்தை கட்டி உங்க வீட்டுக்கு ஓட்டி வந்து படத்தை போட்டு காமிக்க மாட்டேனா? சரி சரி உள்ளே வாங்க” என அழைத்துப்போவார்கள் என்றெல்லாம் அதீத கற்பனை செய்து கொண்டே அங்கிருந்த ஒரு பூச்செடி நிழலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது தான் இந்த பதிவின் “ஹீரோ” வந்தான். கவனித்து படிக்கவும். படத்தின் ஹீரோ அல்ல! பதிவின் ஹீரோ!<br />
<br />
பார்க்க ரொம்ப சுமாராக செம்பட்டை தலையுடன், கசங்கிய பேண்ட், அதற்கு சம்பந்தமில்லா ஒரு முழுக்கை சட்டை அதில் ஒரு கை மட்டும் மடித்து விட்டு வாயில் பான்பராக் குதப்பலோடு அருகே வந்தான். “சார்... நிங்க தானே தொல்காப்பியன்?”<br />
<br />
ரொம்ப அசிரத்தையாக “ஆமாம்” என்றேன்!<br />
<br />
“சித்தப்பா உங்களை எனக்கு தெரியும். என்னை தான் உங்களுக்கு தெரியாது” என்றான்.<br />
<br />
எனக்கு குழப்பம். இந்த மாதிரி எனக்கு யாரையும் தெரியாதே என நினைத்துக் கொண்டு... “நீங்க?” என எழுத்தேன். சித்தப்பா என்று உரிமையாக வேற சொல்றான்!<br />
<br />
“சித்தப்பா, சுத்தரமூர்த்தி ஃப்ரண்டு நான்”<br />
<br />
“எந்த சுந்தரமூர்த்தி?” என்றேன்.<br />
<br />
“கொரநாடு... ஆட்டோ கூட ஓட்டுவானே. அதான் அடிக்கடி ஜெயிலுக்கு எல்லாம் போவானே அந்த சுந்தரமூர்த்தி தான்”<br />
<br />
எனக்கு ஞாபகம் வந்து விட்டது. பதிமூன்று ஆண்டுகள் முன்பாக ஒரு மண்டலத்துக்கு நான் ஒரு நாய் வளர்த்தேன். என்னை ஆறுமாதத்துக்கு ஒரு தபா என நாய் கடித்து வைப்பதை ஏற்கனவே பக்கம் பக்கமாக நான் எழுதி தொலைத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். அந்த நாய்கடி சாபத்தை போக்க ஒருத்தன் குடுத்த ஐடியா அது. “டேய் மச்சி, நீயே ஏன் ஒரு நாய் வளர்க்க கூடாது? நீ ஒரு நாய்க்கு ஓனரா ஆகிட்டா மத்த நாயெல்லாம் “ஒரு நாயோனரை நாம கடிக்கக்கூடாது” என அதுங்க சங்கத்திலே முடிவெடுத்து உனக்கு போட்ட “ரெட்கார்டை” வாபஸ் வாங்கிடலாம்ல. அதனால நீ இன்ன்னிக்கே ஒரு நாய் வாங்குற. நாயோனர் ஆகுற” என அருள்வாக்கு கொடுத்து விட்டு மறைந்து விட்டான். நானும் நாய்படாத பாடு பட்டு ஒரு கருப்பு கலர் பொமரேனியன் 1000 ரூபாய் கொடுத்து வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்தேன். வந்ததுமே சண்டை வீட்டிலே.<br />
<br />
“நம்ம வீட்டிலே இதல்லாம் பழக்கமில்லை. தவிர அதை என்னால மெயிண்டெய்ன் பண்ணல்லாம் முடியாது. வேண்டுமானா உங்களுக்கு சோறு வைக்கும் போது அதுக்கும் ஒரு தட்டு வைக்கிறேன். ஆனா அது கக்கா போவதை எல்லாம் என்னால சுத்தம் பண்ண முடியாது. எங்கப்பா என்னை ராணி மாதிரி வளர்த்தாங்க” என பிலுபிலுவென பிடித்துக் கொண்டார் என் சகதர்மினி. ராணியே நாய் வளர்க்கும் போது ராணி மாதிரி வளர்க்கப்பட்டவங்க நாய் ஆய் போனா சகிச்சுக்க மாட்டாங்களா என நினைத்துக் கொண்டு நாய் மெய்ண்டெய்னர் ஒருத்தனை தேடி மீண்டும் நாய் போல அலைந்த போது தான் இந்த சுத்தரமூர்த்தி ஆபத்பாந்தவனாக வந்தான். தூரத்து உறவு தான். படிக்க போகலையாம். தினமும் ரெண்டு வேளை வந்து நாயை கக்கா அழைத்துப்போய் வந்து குளிக்க வைத்து விட்டு போகனும் என்னும் ஒப்பந்த அடிப்படையில் வந்தவன். சுத்தி வளைத்து நான் அவனுக்கு சித்தப்பா முறை என்பதை என் அம்மா அரைமணி நேரம் விளக்கியதால் அவன் அன்று முதல் சித்தப்பா என அழைக்க தொடங்கினான்.<br />
<br />
ஒரு நாள் அவன் ட்யூட்டியில் இல்லாத நேரம் என் நாய்க்கு அவசரம்... கக்கா போய்விட்டது. என் வீட்டம்மணி வானத்துக்கும் பூமிக்குமாக குதித்து “இனி இந்த வீட்டில் நாய் இருக்கனும் இல்லாட்டி நீங்க இருக்கனும். நீங்களே முடிவெடுத்துக்குங்க” என கறாராக சொல்லிவிட வீட்டுக்கு ஒரு நாய் போதுமென்கிற மனோநிலையில் 48 நாள் நாயோனராக இருந்த நான் அதை விற்க முடிவெடுத்து விட்டேன். நாயின் ஆரம்பவிலை.... நமக்கு லாபம் எதுவும் வேண்டாம் என முடிவெடுத்து அதே 1000 என நிர்ணயித்து விலை பேசி, அதை யாரும் வாங்க முன்வராததால் அதை 800 ஆக குறைத்து பின்னர் நான் தான் விலையை ”குரைத்து குரைத்து” 100 ரூபாய்க்கு ”இங்கே அழகிய பமரேனியன் கிடைக்கும்” என என் கழுத்தில் போர்டு மாட்டிக்காத குறை தான். அப்பவும் யாரும் முன்வராத காரணத்தால் “இங்கே கருப்பு பமரேனியன் குட்டியும் கூடவே அசோசரீஸ் (கட்டும் சங்கிலி, சாப்பிடும் தட்டு) இலவசம் என சொல்லியும் .... பின்னர் நாயும், அசோசரீஸ் மற்றும் 200 ரூவாய் தரப்படும் என்னும் நிலைக்கு நான் வந்தேன். போணியாகவில்லை. நாயும் நானும் அலையாத தெரு இல்லை. “சார்... நாய் வாங்கலையோ நாய்” என்று கூவாத குறை தான். சில உறவினர்கள் என்னை பார்த்ததும் கதவை மூடும் நிலைக்கு வந்து விட்டார்கள் என்பதை உணர்ந்தேன். அப்போது தான் சுந்தரமூர்த்தி மீண்டும் வந்தான். நானோ லீவ் முடிந்து துபாய் திரும்பும் நாளும் வந்தது. குடும்பத்துடன் சினிமா, கோவில் என அலைய வேண்டிய நான் நாயோடு அலைந்தேன்.<br />
<br />
“சித்தப்பா, சூப்பர் பார்ட்டி கொண்டு வந்திருக்கேன். நீங்க படும் கஷ்டத்தை சொன்னேன். அவனுக்கு அழுகையே வந்துடுச்சு. நாயையும் கொடுத்து மேலே 1000 ரூபாயும் கொடுத்தா அவன் போனா போவுதுன்ன்னு அதை வாங்கிப்பதாக சொல்றான்” என்றான். எல்லாம் என் நேரம். ஒரு வழியாக டீலை முடித்து விட்டு துபாய்க்கு போய் விட்டேன். பின்னர் சின்னவனாக இருந்த சுந்தரமூர்த்தி வளர்ந்து சாராய வியாபாரம், அடிதடி, ஜெயிலுக்கு போதல் என அபரிமிதமான வளர்ச்சியாக இருப்பதாக கேள்விப்பட்டேன்.<br />
<br />
இப்போ வாங்க விஷயத்துக்கு!<br />
<br />
“ஓ...ஞாபகம் வருதுப்பா. சுந்தரமூர்த்தி ஃப்ரண்டா நீனு? என்ன பண்ணிகிட்டு இருக்கே. அவனை எப்படி தெரியும்?”<br />
<br />
“சித்தப்பா, நான் திருடரா இருக்கேன். அவனை நம்ம மாயவரம் சப்ஜெயில்ல தான் வச்சி பார்த்தேன். அதிலிருந்து நல்ல பழக்கம். உங்களைப்பத்தி சொல்லியிருக்கான். அதான் பார்த்ததும் கண்டுபிடிச்சுட்டேன். உங்க வீடு கூட எனக்கு தெரியும் ” ....(திருடர்ர்ர்ர்ர் மரியாதையா சொல்லிக்கிறானாமாம்... தொழில் பக்தி?!)<br />
<br />
எனக்கு பகீரென்றது. “என்னது திருடரா? என்னப்பா சொல்ற. நீ எந்த ஏரியா?” கொஞ்சம் நகர்ந்து கொண்டே கேட்டேன்.<br />
<br />
”எல்லா ஏரியாவும் நம்ம ஏரியா தான். எங்க கிடைக்குதோ அங்க திருடுவேன்” என்றான்.<br />
<br />
“அட அதை கேட்கலை. எந்த ஏரியா பையன் நீனு?”<br />
<br />
“எல்லாம் என் ஊர் தான்னு வள்ளுவரே சொல்லியிருக்காருல்ல”<br />
<br />
“எந்த வள்ளுவர்? சமீபத்திலே பி.ஜே.பி ல சேர்ந்தாரே அவரா?’<br />
<br />
“பி.ஜே.பி ந்னா? என்றான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு அயோக்கியனா இருந்து கொண்டு பி.ஜே.பியை தெரியலையே இவனுக்கு. பின்ன எப்படி தாமரை தமிழ்நாட்டில் மலரும் என நினைத்துக் கொண்டேன். பின்னர் அவனே<br />
<br />
“ஆமா, ஒரு சுருட்டை தலை அக்கா தாமரை மலரும் தாமரை மலரும்னு சொல்லுமே. அதைக்கூட கட்சில இருந்து நீக்கிட்டாங்களே அந்த கட்சியா?” என்றான்.<br />
<br />
“டேய் அதை நீக்கலை. அதை பாட்டில்ல அடைச்சி 5 வருஷத்துக்கு ஆந்திராவிலே ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்காங்க. 5 வருஷம் ஆனதும் திறந்து விட்ட பின்ன நீ இப்படி பாஜகவை தெரியாதுன்னு சொன்னது தெரிஞ்சா உன் காதை கடிச்சு வச்சிடும். ஆமா வள்ளுவர் எப்ப எல்லாம் என் ஊர் தான்னு சொன்னாரு” எனகேட்டேன்.<br />
<br />
“அவரு தான் நிறைய சொல்லியிருக்காரே பக்கம் பக்கமா. இந்த சப்ஜக்டும் சொல்லியிருப்பாருதானே” என்றான்.<br />
<br />
தியேட்டரில் கூட்டம் மேலும் மேலும் அதிகமாகிகொண்டே வந்தது. ஒரு ப்ரவுன் கலர் ஷூ போட்ட மப்டி போலீஸ் மீசையை நீவிக்கொண்டே என்னை பார்த்துக்கொண்டே போனார். நான் கொஞ்சம் அவனிடமிருந்து பூச்செடி நிழலில் இருந்து நகர்ந்து வெயிலில் நின்றேன்.<br />
<br />
“அட என்ன சித்தப்பா... எதுக்கு என்னை பார்த்து ஒதுங்குறீங்க. ஒரு திருடர் கூட நிக்கிறது அசிங்கமா இருக்குதா? இதுக்கெல்லாம் அசிங்கம் பார்த்தா முடியுமா? இதோ நீங்க கூடத்தான் காவி வேட்டி கட்டிகிட்டு மீசையும் தாடியுமா அசிங்கமா இருக்கீங்க. நான் வெட்கப்படாம பக்கத்தில் நிக்கலையா?”<br />
<br />
ஆஹா.... இவன் நம்மை அசிங்கப்படுத்தாம விட மாட்டான் போலிருக்கு. நமக்கே எப்பவாவது தான் சினிமா பார்க்க மூட் வரும். இப்போ சுத்தமா போச்சுது இவனால. இவன் கூட பேசிகிட்டு இருப்பதை ஏற்கனவே ஒரு போலீஸ்கார் பார்த்துட்டார். சரி இன்னிக்கு சந்திராஷ்டமம் வேலையை ஆரம்பிச்சிடுச்சு என நினைத்துக் கொண்டு வண்டி வச்சிருந்த இடத்துக்கு நகர்ந்தேன். வண்டிசாவியை சட்டைப்பையில் இருந்து எடுக்கும் போது டிக்கெட் எடுக்க வைத்திருந்த 200 ரூபாய் நோட்டும் உடன்பிறவா சகோதரி போல கூடவே வந்தது.<br />
<br />
“அட என்ன சித்தப்பா... டிக்கெட் வாங்கனுமா? இருங்க... நான் ஒரு நிமிஷத்துல வாங்கி வரேன்” என சொல்லிக்கொண்டே சடக்கென அந்த 200 ரூபாய் நோட்டை பிடுங்கிக்கொண்டு கூட்டத்தில் புகுந்து விட்டான். எனக்கு பதக் பதக் ஆனது இதயம். சரி வந்துடுவான் என நினைத்துக் கொண்டேன். கூட்டம் எல்லாம் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போகப்போக நான் நிற்கும் இடம் காலியாகிக்கொண்டே வந்தது. எனக்கு பயம் வந்தது லைட்டா. 200 ரூவா இன்னிக்கு எள்ளு தான் போல என மனசு சொன்னது. ஆளைக்காணும். அவன் பேர் கூட எனக்கு தெரியாதே...<br />
<br />
இனி அவன் வரமாட்டான் என்னும் முடிவுக்கு வந்தேன்.சுந்தரமூர்த்திக்கு நெருக்கமான வேறு ஒரு சொந்தக்காரருக்கு போன் செய்து சுந்தரமூர்த்தி நம்பர் வாங்கி சுந்தரமூர்த்திக்கு போன் செய்தேன். யாரோ பெண் குரல் கேட்டது.<br />
<br />
“சொல்லுங்க மாமா?”<br />
<br />
“என்னது மாமாவா?”<br />
<br />
அது என் பெயரை சொல்லி நீங்க தானே பேசுறது என்றது. ஆமாம் என்றேன். “உங்க பெயரை தான் அவங்க போன்ல போட்டு வச்சிருக்காங்கலே... அவங்க பொண்டாட்டி தான் நான் என்றது.<br />
<br />
“சரிம்மா... அவன் எங்கே?” என்றேன்.<br />
<br />
“அவங்க திருச்சிக்கு போயிருக்காங்க மாமா ஒரு வேலையா. வர இன்னும் 15 நாளாவது ஆகும்”<br />
<br />
“சரி, அவன் போன் நம்பர் கொடு”<br />
<br />
“இருங்க. அவங்களே உங்ககிட்ட பேச சொல்றேன். உங்க நம்பரை அனுப்பறேன் அவங்களுக்கு” என சொல்லி வைத்து விட்டது.<br />
<br />
அந்த மீசைநீவி மீண்டும் என்னை உற்றுப்பார்த்துக் கொண்டு நடையை கட்டினார். நான் அந்த அளவு ஒர்த் இல்லை என போய் அவரிடம் சொல்லலாமா என அபத்தமாக நினைத்துக் கொண்டேன். வீட்டில் என் மனைவி பர்சில் இருந்து 150 ரூபாய் எடுத்தால் கூட வியர்த்து விடும். அவங்க தேடும் முன்னமே “அதுல எதுனா 150 குறைஞ்சா நான் தான் எடுத்தேன்னு நீ தப்பா சந்தேகப்படக்கூடாது” என உளறியே மாட்டிக்குவேன். அத்தனை ஒரு பூஞ்சை நான். எனக்கெல்லாம் மீசை நீவுதல் ரொம்ப அதிகம். இந்த திருடன் கூட எனக்கு பத்து நிமிஷ சகவாசம் தான். அய்யோ புலம்ப வச்சுட்டானே....<br />
<br />
போன் ரிங் டோன் ஒலித்தது... “மாட்டிக்கிச்சு...மாட்டிக்கிச்சு... மாட்டிக்கிச்சு” ஹிப்பாப் ஆதி நேரம் காலம் தெரியாமல் ரிங் டோனில்...<br />
<br />
“அல்லோ நான் தான் சுந்தரமூர்த்தி பேசுறேன் சித்தப்பா. திருச்சி ஜெயில்ல இருக்கேன்”<br />
<br />
அப்பாடா... என் 200 எப்படியும் கிடைச்சிடும்...<br />
<br />
“நல்லா இருக்கியாடா? அங்க வசதியெல்லாம் எப்படி? சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குதா?”<br />
<br />
அய்யோ... என்னவோ அவன் துபாய்ல இருந்து போன் பேசுவது போல “அங்க ரோடு நல்லா இருக்கா? அரிசி சோறு கிடைக்குதா? மழை பெய்யுதா?”ன்னு குசலம் விசாரிச்சு கிட்டு இருக்கேன். “சரி நீ ஜெயில்ல இருந்து எப்படி போன் பண்ற?” என்றேன்.<br />
<br />
“இப்பதான் வீட்டுல இருந்து எனக்கு போன் பண்ணி உங்க நம்பர் கொடுத்து பேச சொன்னுச்சு. இங்க ஒரு நம்பர் இருக்கு. அவசர ஆத்திரத்துக்கு கொடுத்து வச்சிருக்கேன் அதுகிட்ட. சரி விஷயத்தை சொல்லுங்க” என்றான்.<br />
<br />
அங்க ரொம்ப பிசி போலிருக்கு அவன். நாலு வரியில் ப்ளாஷ்பேக்கினேன்.<br />
<br />
“சரி அவன் பேர் என்ன?’<br />
<br />
“தெரியாது”<br />
<br />
“பேர் கூட தெரிஞ்சுக்காம 200 ரூவா குடுத்தீங்களே.. நீங்க....”<br />
<br />
“இருடா இருடா... கெட்ட வார்த்தை எல்லாம் பேசக்கூடாது. அசிங்கமா இருக்குல்ல”<br />
<br />
“சரி அங்க அடையாளம் சொல்லுங்க”<br />
<br />
நான் என்ன ஜெயில் வார்டனா? அங்க அடையாளம் பார்த்து வைக்க. அவனுங்க தொழில் ரீதியாவே என்கிட்ட பேசினா நான் என்ன செய்யட்டும்? ஆங்... அந்த முழுக்கை சட்டையில் ஒரு கை மடிச்சு விட்டிருந்தான்னு சொன்னேன்ல... அதிலே முழங்கைக்கு கீழே ஒரு பெரிய வெட்டு தழும்பு. அதை சொன்னேன்.... உடனே சுதாரித்துக் கொண்டான்.<br />
<br />
“வேற எதாவது? வலது தொடைக்கு மேலே இடுப்புக்கு கீழே மச்சம் இருந்துச்சா?”<br />
<br />
“டேய் அந்த அளவுக்கு எல்லாம் அவன் தூக்கி காமிக்கலை. அவன் சுன்னத் பண்ணியிருப்பானா இல்லியான்னு எல்லாம் எனக்கு எப்படி தெரியும்?”<br />
<br />
‘அட அவன் பாவாடை சித்தப்பா” என்றான்.<br />
<br />
“கிருஸ்டியனா?” என்றேன்..<br />
<br />
“இல்லை... இந்து தான். அவன் பேரு பாவாடைசாமி. நல்ல பயலாச்சே... ஆனா சரியான திருட்டுப்பய. அவன் கிட்ட போய் யாராவது பணம் குடுப்பாங்கலா? சரி வீட்டுக்கு போங்க. நான் 15 நாளில் வந்துடுவேன். வந்து ரெக்கவர் பண்ணிடலாம். ஆனா அதுக்குள்ள அவன் உள்ள வராம இருக்கனும். எதுக்கும் சாமிய வேண்டிகிட்டு போங்க வீட்டுக்கு” என்றான்.<br />
<br />
“என்னடா திருட்டுப்பயல் கிட்டே போனது எப்படி திரும்பி வரும்?” என்றேன்.<br />
<br />
“அட சும்மா இருங்க. திருடன்னா எப்போதுமா திருடிகிட்டே இருப்பான். அவனுக்கும் ஆஃப் ட்யூட்டி டைம்னு இருக்கும்ல.<b><span style="color: red;"> அவன் திருடன் தான். ஆனா ரொம்ப நல்லவன்” </span></b><br />
<br />
எனக்கு குழப்பம். <b><span style="color: red;">ஒரு திருடன் எப்படி நல்லவனா இருக்க முடியும்? </span></b><br />
<br />
வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.<br />
<br />
வீட்டம்மணி “ஏங்க...தியேட்டருக்கு போய் ஒருத்தன் கிட்டே காசு கொடுத்து டிக்கெட் வாங்க சொன்னா ஒரு இடத்திலே நிக்க மாட்டீங்கலா? ஒரு பையன் வந்து ஒரு டிக்கெட்டும் மீதி 50 ரூவாயும் கொடுத்துட்டு போனான். அவன் நிக்க சொன்ன இடத்திலே நிக்க மாட்டீங்கலா?” என்றார்.<br />
<br />
அப்பாடா.... கும்பிட்ட தெய்வம் நம்ம காசை காப்பாதிடுச்சு...<br />
<br />
“சரி... சரி அவனை உள்ளே விடலையே?”<br />
<br />
“அதப்படி? அவன் தான் வெயில்ல வந்திருக்கான். உபகாரம் செஞ்சவனுக்கு ஒரு வாய் மோர் குடுக்க கூடாதா. அவனை உட்கார சொல்லி மோர் குடுத்தேன். டிக்கெட்டும் மீதி காசும் குடுத்துட்டு கால்ல வென்னீர் ஊத்தினது போல கெளம்பிட்டான்”<br />
<br />
“சரி டிக்கெட்டை குடு” என சொல்லி வாங்கிக்கொண்டு தியேட்டர் வந்து விட்டேன்.<br />
<br />
படம் பார்த்து முடித்தேன். படம் எனக்கு பிடித்து இருந்தது. (அப்பாடா சினிமா விமர்சனம் செஞ்சாச்சு)<br />
<br />
படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்த திருப்தியில் வீடு வந்து சேர்ந்த போது என் மனைவி ரொம்ப பிசியாக இருந்தாங்க.<br />
<br />
“பசிக்குது. சாப்பாடு எடுத்து வை” என்றேன்.<br />
<br />
“இருங்க. டேபிள் மேலே டிவி பக்கத்தில் தான் என் வாட்ச் வச்சிருந்தேன். காணும். கொஞ்சம் தேடிப்பாருங்க. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”<br />
<br />
எனக்கு பகீர் என ஆனது. வீட்டு மாடிக்கு ஓடி சுந்தரமூர்த்தியிடம் இருந்து வந்த நம்பருக்கு கால் செய்தேன். யாரோ எடுத்தார்கள். “சுந்தரமூர்த்தி கிட்டே பேசனும்” என்றேன். “உங்க பேர் சொல்லுங்க” என்றார். சொன்னேன். சுந்தரமூர்த்தி லைனுக்கு வந்தான்.<br />
<br />
“டேய் வீட்டுக்கு வந்து அவன் டிக்கெட் குடுத்துட்டு வாட்சை திருடிகிட்டு போயிட்டாண்டா?” என்றேன். உடனே அவன் ..<br />
<br />
“அவன் தான் திருட்டுப்பயல் என சொன்னேனே?” என்றான்.<br />
<br />
“அவன் நல்லவன்னும் சொன்னியே?”<br />
<br />
<b><span style="color: red;">“ஒரு திருடன் எப்படி நல்லவனா இருக்க முடியும் சித்தப்பா? நீங்க என்ன லூசா?” </span></b><br />
<br />
கீழே வந்தேன். என் மனைவியிடம்.....<br />
<br />
“சரி... இன்னிக்கு எத்தனை மணி வரைக்கும் எனக்கு சந்திராஷ்டமம் இருக்கு?”<br />
<br />
“நாளை வரை இருக்கு உங்களுக்கு. நான் வாட்சை தானே தேட சொன்னேன். அதுக்குள்ள எதுக்கு மாடிக்கு ஓடினீங்க? இறங்கி வந்து சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசுறீங்க? நீங்க என்ன லூசா?”<br />
<br />
<span style="color: red; font-size: x-large;">“</span><span style="color: red; font-size: x-large;">ஆமாம்! நான் லூசு தான்”</span> என்றேன்!<br />
<br />அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11713605094897277202019-12-15T11:03:00.000+05:302019-12-15T11:03:05.501+05:30“தோழர் சோழன்” மீதான என் பார்வை! - அபி அப்பா என்கிற தொல்காப்பியன். <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg45BABLI7tfjjAs6KlnwjBF4KEGH0vpH4BupO09B4ucot4d85Geiee0Xmej-kiCH19WgOHHEx650CO-j6pxngtcU2MddVK0ctyvAY-QVJTDksOFh5_EyHYSSDetgFryVK7chSvQKddMWA/s1600/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="254" data-original-width="199" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg45BABLI7tfjjAs6KlnwjBF4KEGH0vpH4BupO09B4ucot4d85Geiee0Xmej-kiCH19WgOHHEx650CO-j6pxngtcU2MddVK0ctyvAY-QVJTDksOFh5_EyHYSSDetgFryVK7chSvQKddMWA/s400/download.jpg" width="313" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<br />
அது ஒரு அழகிய மழைக்காலம். ஆண்டு 2011, நவம்பர் 5ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை திமுக இளைஞர் அணி தலைமை அலுவலகம் “அன்பகத்தில்” அந்த கூடுகை நிகழ்வு. அய்யா சுப.வீரபாண்டியன், டி.கே.எஸ். இளங்கோவன், அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.எஸ், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு, மன்னார்குடியின் புதிய எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா, அசன் முகமது ஜின்னா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இணையத்தில் செயல்படுபவர்களின் கூட்டம் அது. பார்வையாளர்களும் பேசலாம். தங்கள் கருத்துகளை பரிமாற்றம் செய்து கொள்ள ஒரு வாய்ப்பு அது. அப்போது ஞானமணி என்னும் பையன். பெரம்பலூர் மாவட்டம் சார்ந்த பையன். முதுகலை படிப்பு முடித்து விட்டு அப்போது சென்னையில் முனைவர் பட்டத்துக்கு படித்துக் கொண்டிருக்கின்றார் ஒரு பல்கலைகழகத்தில். பேச ஆரம்பிக்கின்றார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEXZ7u6KkFbGbPqNtaSfQeqDM3uZqex_fRnrJGLa8m3kjBc4jIkvdGQ9qZXhPOkIXRdJ0q19Vn0_1efjVigZMMmfdpGFoWdmRK8i38kwMNT7hyaj5nuKEkemzYTy8j1wIJiaThzrp0uC4/s1600/anbaham.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="425" data-original-width="640" height="424" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEXZ7u6KkFbGbPqNtaSfQeqDM3uZqex_fRnrJGLa8m3kjBc4jIkvdGQ9qZXhPOkIXRdJ0q19Vn0_1efjVigZMMmfdpGFoWdmRK8i38kwMNT7hyaj5nuKEkemzYTy8j1wIJiaThzrp0uC4/s640/anbaham.jpg" width="640" /></a></div>
<br />
சிறிது நேரத்தில் மேடையில் அழ ஆரம்பிக்கின்றார். அழுகையினூடே விஷயத்தை சொல்கின்றார். “சார், நான் பெரம்பலூர் மாவட்டம் சார்ந்தவன். இங்கு நான் படிக்கும் பல்கலைகழக விடுதியில் பெரம்பலூர் காரனா நீ? 2ஜி பணம் எல்லாம் எங்க வச்சிருக்கே? ஒன்னே முக்கால் லட்சம் கோடியை அப்படி எங்கடா பதுக்கி வச்சிருக்கீங்க?” என கேட்கிறாங்க சார். பெரம்பலூர்காரன் என்பதால் ஏன் சார் அவமானம் செய்றாங்க? எங்க ராசா அண்ணன் ஊருக்கே நல்லது செஞ்சவரு சார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பெரம்பலூர்ல நல்லது தான் சார் செஞ்சாரு. எங்களுக்கு ஏன் சார் இந்த கஷ்டம்?” பேசிவிட்டு மீண்டும் அழுகை. கூட்டம் நிசப்தம் ஆனது. அடுத்தடுத்து பலரும் பேசினார்கள். அரியலூர் மாவட்ட செயலாளர் திரு. எஸ். எஸ்.சிவசங்கர் அவர்கள் எழுந்தார். பேசினார். “நான் இங்கே இணையத்தில் நீங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நேரிடையாக சொல்லப்போவது கிடையாது. ஆனால் நீங்கள் எப்படி செயல்பட்டால் வெற்றி என்பதை சொல்கிறேன். இதோ இங்கே பேசிய தம்பி ஞானமணி அவர்கள் 2 ஜி விஷயம் பற்றி பேசி அதனால் அவரை அவமானம் செய்வதாக வருத்தமாக பேசினார். இது 2011ம் ஆண்டு நவம்பர் மாதம். நான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து 6 மாதங்கள் தான் ஆகின்றது. பலருடைய பேச்சுகளும் அத்தனை ஏன்? திமுகவினர் கூட சிலர் “நாம் 2 ஜி விவகாரத்தால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம்” என வெளிப்படையாகவே பேசுவதையும் நாம் காண்கின்றோம். இல்லை. இதே அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் அண்ணன் ஆ.ராசாவின் பாராளுமன்ற தொகுதி இருக்கும் நீலகிரி ஆகிய இந்த மூன்று மாவட்டங்களிலும் நம் திமுக பெற்ற வெற்றி என்பது மூன்றில் இரண்டு பங்கு வெற்றியாகும். இந்த மூன்று மாவட்டங்களில் நாங்கள் வெளிப்படையாக 2 ஜி விஷயத்தையே பரப்புரையாக கொண்டு செயல்பட்டோம். மற்றவர்கள் பேச தயங்கிய போது நாங்கள் பேசினோம். தைரியமாக மக்களை அதே 2 ஜி விஷயத்தை சொல்லி எங்கள் மீது எந்த தவறும் இல்லை என பரப்புரை செய்தோம். தமிழ்நாடு முழுவதும் இதோ மேடையில் இருக்கும் அய்யா சுபவீரபாண்டியன், ஆசிரியர் வீரமணி, அண்ணன் திருச்சி சிவா ஆகியோர் 2 ஜி பற்றிய பரப்புரை செய்தனர். ஆனால் இணையம் வழியாக அப்போது மிகக்கடுமையான பொய்ப்பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்தன. அங்கே இணையத்தில் அப்போது இதோ எதிரே அமர்ந்துள்ள அபிஅப்பா என்கிற தொல்காப்பியன், யுவகிருஷ்னா போன்ற வெகுசிலரே 2 ஜி பற்றி பெரிய பெரிய கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களால் இணையத்தில் அத்தனை பெரிய ஆரிய கூட்டத்தின் பொய்ப்பிரச்சாரத்தை சமாளிக்க இயலவில்லை. இதோ இப்போது எதிரே சுமார் 150 பேர் இருக்கின்றீர்கள். அதில் பாதி அளவு அவர்களுக்கு அப்போது கிடைத்திருந்தாலும் பெரிய மாற்றமே நடந்திருக்கும். நான் இதை குறிப்பாக தம்பி ஞானமணிக்கு தான் சொல்கிறேன். நம் மடியில் கனம் இல்லை எனும் போது வழியில் பயம் எதற்கு? அண்ணன் ஆ.ராசா அவர்கள் சிவசங்கரிடம் 500 கோடி கொடுத்து வைத்துள்ளார் என்று கூடத்தான் நான் போட்டியிட்ட அதே குன்னம் தொகுதியில் பொய்ப்பிரச்சாரம் செய்தனர். நான் அங்கு விளக்கம் சொன்னேன். வென்றேன். பயந்து போய் முடங்கினால் மேலும் மேலும் அடி விழும். திமிறி எழு தம்பி ஞானமணி. ஆமாம். நான் ஸ்பெக்ட்ரம் புரட்சியாளர் அண்ணன் ஆ.ராசாவின் மண்ணுக்கு சொந்தக்காரன் தான் என சொல். யாராவது உன்னை கேலி செய்யும் முன்னர் உன்னை அறிமுகம் செய்து கொள்ளும் போதே நான் “ஸ்பெக்ட்ரம் புரட்சி மண் சார்ந்தவன்” என சொல். கேட்பவர்களுக்கு அது ஆச்சர்யம் கொடுக்கும். அப்போது தான் விளக்கம் கேட்பார்கள். அவர்களுக்கு புரியவை. இதோ குன்னம் தொகுதியில் புரிந்து கொண்ட மக்கள் போட்ட ஓட்டுகளால் நான் இன்று எம்.எல்.ஏ ஆனதுபோல நீயும் அவர்களை வெல்வது சுலபம்” <br />
<br />
இது தான் அன்று திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களின் பேச்சு. இதோ “தோழர் சோழன்” நாவலின் கதாசிரியர் அதே எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் தான். என்னடா இது! இது ஒரு நூல் விமர்சனம் என நினைத்து கச்சேரி பத்து நிமிடத்தில் முடிந்து கார பஜ்ஜி சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என நினைத்து ஏமாந்து போன வாசகர்களே... இது ஒரு ஃபுல் மீல்ஸ் மாநாடு. வந்தது வந்து விட்டீர்கள். தயவு செய்து வாருங்கள் அந்த சோழனோடு பயணிப்போம்.<br />
<br />
இதோ அந்த நாவலின் கதாநாயகன் இராஜேந்திர சோழன் என்னும் “சோழன்” . கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன். இசை ஆர்வம் கொண்டவன். இளையராஜா எனில் சுவாசம் அவனுக்கு. பகுதி நேரமாக மேடைகளில் பாடுவான். அன்றும் அப்படித்தான் குருவாலப்பர் கோவிலிலிருந்து கும்பகோணம் போக வேண்டும். மாலையில் குடந்தையில் ஒரு கச்சேரி. அது முடிந்து அடுத்த நாள் காலையில் அங்கேயே கல்லூரிக்கு போக வேண்டும். பேருந்துகள் வரவில்லை. ஏதாவது ஸ்ட்ரைக் ஆக இருக்குமோ என நினைக்கும் போது அரியலூர் அருகே மருதையாறு பாலம் வெடித்து பலர் இறந்து விட்ட செய்தி தெரிகின்றது. குறுக்கு சாலை வழியே போய் சிதம்பரம் - கும்பகோணம் பேருந்தை பிடித்து கச்சேரி போகின்றான். ”வாய்யா குண்டு வச்ச ஊர்க்காரரே” என வரவேற்பு. அவமானமாக இருந்தது சோழனுக்கு. அடுத்த நாள் கல்லூரி செல்லும் போது சக மாணவர்கள் மத்தியில் அதே போன்ற பரிகாசங்கள். நொந்து போகின்றான். அதே கல்லூரியில் ஜெயம்கொண்டான் பகுதியில் இருந்து ஒரு விரிவுரையாளர் இருக்கின்றார். அவரிடம் செல்கின்றான். “வாங்க தோழர்” என அழைக்கின்றார். வாங்க தோழர் எனும் அந்த வார்த்தை பிரயோகமே அவனை கொல்கின்றது. ”என்ன சார், நீங்களுமா?” என்கிறான் சோழன். பின்னர் அந்த விரிவுரையாளர் ஒரு அழகான சமாதானம் சொல்கின்றார் அந்த மாணவன் சோழனுக்கு.<br />
<br />
இதோ பசுமாட்டை கொண்டு வந்து தென்னை மரத்தில் கட்டி விட்டேன் வாசகர்களே! ஞானமணி தான் அந்த சோழன். ஜெயம்கொண்டான் விரிவுரையாளர் தான் எஸ்.எஸ் சிவசங்கர். 2 ஜி விவகாரம் தான் மருதையாறு பாலம் குண்டு வெடிப்பு. கச்சேரி தோழர்களும், கல்லூரி மாணவர்களும் தான் சமூகம். இன்னும் சொல்லப்போகின் சிவசங்கர் சாரின் சொந்த ஊர் ஜெயம்கொண்டான் தான் மற்றும் ஞானமணியின் சொந்த ஊர் தான் பெரம்பலூர் மாவட்டம். என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். ஆக பத்து பொருத்தம் பக்காவாக இருக்கும் போது நான் ஏன் அந்த பசுவை தென்னை மரத்தில் கட்டக்கூடாதுங்குறேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBW3cVhJAy16vlysIZzLZClKTejxR_VpIFhR-avhaZnwlLPodJcvq-AD5UixkFgZkN2YEBAV__R8gq60xlg3kSWkrhzUIAH7wvgteSVuyVKb7LqBHk1DZRuna1Dg9u1u-lauIyo6YzdxY/s1600/FB_IMG_15763356468188541.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="246" data-original-width="534" height="294" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBW3cVhJAy16vlysIZzLZClKTejxR_VpIFhR-avhaZnwlLPodJcvq-AD5UixkFgZkN2YEBAV__R8gq60xlg3kSWkrhzUIAH7wvgteSVuyVKb7LqBHk1DZRuna1Dg9u1u-lauIyo6YzdxY/s640/FB_IMG_15763356468188541.jpg" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
விஷயத்துக்கு வருவோம். கதையின் களம் என்பது பெரம்பலூர், அரியலூர் மாவட்ட கிராமங்கள் மற்றும் அந்த முந்திரிக்காடு பகுதிகள். கதையின் களம் என்பது தான் மிக முக்கியம். நான் சில காலம் முன்பாக ஒரு கதை படித்தேன். என் நண்பர் ஒருவர் எழுதி அனுப்பியிருந்தார். கிருஷ்ணகிரி சார்ந்தவர். தான் கதை நன்றாக எழுதுவதாக அவரே பலமுறை சொல்லியிருக்கின்றார். அவர் ஒரு கதை எழுதி எனக்கு அனுப்பி பல ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் எப்போதாவது போன் செய்யும் போது “ஏங்க, நான் அனுப்பிய கதையை பத்தி இன்னனும் ஒன்னும் சொல்லலையே?” என வருந்துவார். நான் அதை இன்னமும் படித்து முடித்தபாடில்லை. காரணம் கதையின் ஆரம்பம் தான். ஆரம்பத்திலேயே கதை கந்தல் ஆகிவிட்டது. அவர் காவிரி டெல்டா பகுதி பற்றிய கதை எழுத ஆரம்பித்துள்ளார். அதாவது கதாநாயகன் மயிலாடுதுறை பக்கமாக செம்பனார்கோவில். நாயகன் தன் ஆட்டை மேய்க்க செல்கின்றான். “நம் குப்புசாமி செம்பனார்கோவிலில் இருந்து கிழக்காக 25 கிமீ தொலைவில் இருக்கும் மலையில் தன் ஆடுகளை மேய்த்து விட்டு வீடு திரும்பினான். திரும்பும் போது இருட்டி விட்டது. அவன் கண்கள் சுழண்டு மயக்க நிலைக்கு வந்து விட்டான்” இப்படியாக ஆரம்பிக்கின்றது கதை. அத்தோடு என் கண்கள் சுழன்று விட்டது. அப்போது மூடி வைத்தது தான் அந்த கதையை. ஆக ஒரு கதைக்கு களம் என்பது அத்தனை முக்கியம். அது போல கதையின் காலம் அதை விட முக்கியம்.இங்கே கதையின் காலம் என்பது 1985 முதல் சுமார் 1989 வரையிலான காலங்கள். கதை நடக்கும் காலங்களில் எம்ஜிஆர் உயிருடன் இருந்தார். மரித்தும் போகப்போகின்றார். இந்திரா அம்மையார் இறந்து விட்ட காலத்தின் அருகேயான காலம். ராஜீவ் பிரதமர். அண்ணா அறிவாலயம் திறக்கும் நேரம். வன்னியர் சங்கம் உச்சகட்டமாக மரங்களை வெட்டி இட ஒதுக்கீட்டு போராட்டம் நடத்திய காலம். இன்னும் சொல்லப்போனால் பாமக என்னும் கட்சி தோன்றவே இல்லாத காலம்.<br />
<br />
ஆக நாவலாசிரியருக்கு கதையின் களமும், காலமும் அழகாய் கைகூடி வந்து விட்டது. இனி கதை என்பது அவருக்கு சுலபமான விஷயமாகிவிட்டது. தன் பதின்ம வயதுகளில் பார்த்த, கேட்ட கதைகளை ஒரு பார்வையாளராக தூர நின்றும், அந்த கதையின் போக்கில் சென்று பார்த்தும் எழுத ஆரம்பிக்க வேண்டிய வேலை மட்டுமே அவருக்கு மீதமிருந்தது. அவதானித்ததை அழகிய விறுவிறுப்பான எழுத்து நடையில் கொண்டு வருவது ஒரு சவால். ஆனால் நூலாசிரியருக்கு அது பெரிய விஷயமில்லை. ஏனனில் எழுத்து அவருக்கு வசியப்பட்ட விஷயம். சரி கதை என்பது உண்மை கதையா? புனைவா? அல்லது கற்பனையா (புனைவு வேறு கற்பனை வேறா என்ன?) ... இது அக்மார்க் உண்மை கதை தான். கதாபாத்திரங்கள் சிலரது பெயர் மாற்றப்பட்டிருக்கலாம். சில கதாபாத்திரங்கள் கற்பனையாக உள்ளே வந்திருக்கலாம். அது போல ஒரு +2 படிக்கும் அல்லது கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு இளைஞனின் பார்வையாகத்தான் கதை இருக்கின்றது என்றே அவதானிக்கின்றேன். இன்னும் சொல்லப்போனால் தன்னை தான் சார்ந்த பூமிப்பகுதியை 1000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட இராஜேந்திர சோழனாக கற்பிதம் செய்து கொண்டும், அது போல இளையராஜாவை தன் மூச்சாய் சுவாசிக்கும், மேலும் தன்னை ஒரு பாடகனாக நினைத்துக் கொண்டு இசையை இரண்டற காதலிக்கும் ஒரு பையனின் பார்வை, அந்த வயதுக்கே உரிய புரட்சிகளின் மீதான ஈர்ப்பு கொண்ட, ஒரு சிறுவனுக்கும் இளைஞனுக்கும் இடைப்பட்ட பருவம் கொண்ட ஒரு பார்வையாளன் “சோழன்” தான் நூலாசிரியர் என்றே கடுமையாக அவதானிக்கின்றேன். என் அவதானிப்பு தவறாகக்கூட இருக்கலாம். வெட்டுப்புலி நாவல் போன்றோ அல்லது இருவர் திரைப்படம் போன்றோ பம்மாத்துகள் செய்யாமல் எம்.ஜி.ஆர், ஈழத்தின் கேனல் குணேந்திரன், பிரபாகரன், தழித்தமிழ்நாடு கோரும் விடுதலைப்படை இயக்கத்தின் தலைவர் தமிழரசன், டி ஜி பி ஸ்ரீபால், வன்னியர் சங்கம், மருதையாறு பாலம் குண்டு வெடிப்பு, வெடிப்பு நடந்த தேதி, பொன்பரப்பி ஸ்டேட் வங்கி கொள்ளை என அப்பட்டமாக உண்மை கதையாக எழுதப்பட்டுள்ளது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKVE97jQmn2DuMgmuYt5TgswBTt_rXDbPrSQiaGFVxIy1F-8AwxuYs_ucjekEJNpQl1YlmNAEgoUofvc-0lXH1ZA9HydUTbGsC1hQ08uT6QoJSpUdEQEtvjhNcVJItjugNoz5rnuBYCkk/s1600/FB_IMG_15763356621036383.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="246" data-original-width="534" height="294" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKVE97jQmn2DuMgmuYt5TgswBTt_rXDbPrSQiaGFVxIy1F-8AwxuYs_ucjekEJNpQl1YlmNAEgoUofvc-0lXH1ZA9HydUTbGsC1hQ08uT6QoJSpUdEQEtvjhNcVJItjugNoz5rnuBYCkk/s640/FB_IMG_15763356621036383.jpg" width="640" /></a></div>
<br />
விஷயம் இது தான். “சோழன்” அந்த முத்திரிக்காட்டு பகுதியில் வாழும் ஒரு கல்லூரி மாணவன். விவசாயக்குடும்பம் சார்ந்தவன். கிராமிய மேடை நாடகம், இசைக்கச்சேரி (ஆர்கெஸ்ட்ரா) போன்றவைகளில் ஆர்வம் கொண்டவன். ஒரு நாள்பாடும் போது ஒரு பெரியவர் ..பெயர் பிச்சைபிள்ளை என்பவர் விருப்பப்பாடலாக எழுதிக்கொடுத்த துண்டு சீட்டில் இருக்கும் கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தின் புரட்சிகர பாடலை பாடுகின்றான். பின்னர் அந்த பெரியவர் அழைப்பின் பேரில் புரட்சிகர அமைப்புக்காக பாடுகின்றான்.அமைப்பின் மீது ஏதோ ஒரு நியாயம் இருப்பதாக உனர்கின்றான். அதை செயல்படுத்தவும் ஆசைப்படுகின்றான். எப்படி? டியூஷனுக்கு மாணவர்களை கட்டாயமாக வரச்சொன்ன ஒரு வாத்தியாரை தலையில் துண்டு போட்டு மூடி அடித்து திருத்தும் அளவுக்கு அந்த இயக்கத்தின் மீது அவனை அறியாமல் ஒரு ஈர்ப்பு வருகின்றது. மீன்சுருட்டிக்கு உரம் வாங்க போகும் போது ஒரு செங்கொடி போராட்டத்தை பார்க்கின்றான். ஒரு ஆதிதிராவிட சமூக பெண்ணை கற்பழித்து கொலை செய்தவர்களை கைது செய்ய சொல்லி நடக்கும் போராட்டம். அங்கே காவல்துறையின் தடியடி. அடிக்கும் கம்பு ஒன்று தான். அடிவாங்கும் சதையும் ஒன்று தான். ஆனால் அதை காவலர்கள் செய்தால் அது தடியடி. மற்றவர்கள் செய்தால் அடிதடி. ஆஹா தமிழ் எப்படி பிரித்து மேய்கின்றது பாருங்கள். ஆக அந்த தடியடி நம் சோழனை வெகுவாக பாதிக்கின்றது.<br />
<br />
சோழனை பாட அழைத்த பிச்சைபிள்ளை வாயிலாக பெரியவர் என்னும் இயக்க தலைவர் தமிழரசன் பற்றி அறிகின்றான். மேலும் ஈர்ப்பு வருகின்றது. இயக்கம் செய்வது எல்லாம் மக்கள் நலனுக்கே என்னும் கருத்து விதை அவனுள் ஆழமாக பதியம் ஆகின்றது.<br />
<br />
இயக்கம் ஈழத்தில் இருக்கும் பிரபாகரனுக்கு ஆதரவாக இருக்கின்றது. விடுதலைப்புலிகள் எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் அமரிக்கா போன பின்னர் ஆதரவு இழந்த நிலையில், இந்திராவும் மறைந்து விட்ட நிலையில், ராஜீவ் அத்தனை ஆதரவாக புலிகளுக்கு இல்லாத காலத்தில் தமிழக மக்கள் ஆதரவை நாடுகின்றனர். அதற்கு தமிழரசன் போன்றவர்கள் உதவுகின்றார்கள். இப்படியான நிலையில் தான் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி மருதையாறு பாலத்தை தகர்க திட்டம் தீட்டுகின்றனர். அவர்கள் நோக்கம் மக்கள் இழப்பு அல்ல. பாலத்தை மட்டும் தகர்க்க வேண்டுமென்பதே என நாவல் சொல்கின்றது. நம்புவதும் நம்பாததும் வாசகர்கள் முடிவு. ஆனால் திட்டம் திசைமாறி சுமார் 30 பேர் உயிரிழப்பு ஆகின்றது. சோழன் அப்போது தான் குடந்தை கல்லூரியில் “குண்டு வைத்த ஊர்க்காரன்” என அவமானப்படுத்தப்படுகின்றான். இதோ இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோமே அந்த நிகழ்வு தான் அது!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgfjP9xqdAkleiS8-YgnS4O_vP3c6MZxOHso1G-MxUTeWJQaRijEPdE6iuauw8iJ4MFUKSEqK5J4DJTcTVMJ-PXfaDD3OGEXN6P2bPBmc3_OFJx5TgZ_0SLY_2Rw57MyCEE2g_7GD6GHI/s1600/FB_IMG_15763356126256300.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="362" data-original-width="534" height="432" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgfjP9xqdAkleiS8-YgnS4O_vP3c6MZxOHso1G-MxUTeWJQaRijEPdE6iuauw8iJ4MFUKSEqK5J4DJTcTVMJ-PXfaDD3OGEXN6P2bPBmc3_OFJx5TgZ_0SLY_2Rw57MyCEE2g_7GD6GHI/s640/FB_IMG_15763356126256300.jpg" width="640" /></a></div>
<br />
ஒரு கட்டத்தில் இயக்கம் நடத்த பணம் தேவைப்படும் போது பொதுமக்களிடம் இருந்து பணம் பெறுவது அவர்கள் இயக்க கொள்கைக்கு விரோதமானது என்பதால் எந்த அரசாங்கத்தை எதிர்த்து போராடுகின்றார்களோ அதே அரசாங்கத்திடம் இருந்து பணத்தை அடிக்கும் விதமாக பொன்பரப்பி ஸ்டேட் வங்கியை கொள்ளை அடிக்க இயக்கம் முடிவெடுக்கின்றது. எல்லோரும் மறந்து விட்ட அந்த செப்டம்பர் முதல் தேதி 1987 பொன்பரப்பி ஸ்டேப் வங்கி கொள்ளை சம்பவம் நடக்கின்றது. ஒரு மிகத்தேர்ந்த எழுத்தாளர்கள் மட்டுமே இப்படி ஒரு நிகழ்வை இயக்கம் திட்டம் தீட்டியது முதல் அப்போது யார் யார் எந்த பகுதிகளில் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதும், பயன்படுத்தப்போகும் வாகனம் எது? எந்த வழியே தப்பிப்பது? என்ன விதமான ஆயுதங்கள் என்பதையும், அதே போல போலீஸ் தரப்பில் டி.எஸ்.பி முதல் ஆர்ம்டு போர்ஸ் வரை எங்கே எங்கே எப்படி நிற்க போகின்றார்கள் என்பதையும், கடைசி நேரத்தில் வந்து இணைந்து கொண்ட எஸ்.பி ஒரு வாடிக்கையாளர் போல ஒரு கைத்தறி சொசைட்டியில் போய் அமர்ந்து கொள்வதும் என மிக நேர்த்தியாக எழுதியுள்ளார் நூலாசிரியர். சீட் முனைக்கு ... சீட் முனைக்கு என்பார்களே.... இந்த அத்தியாயங்கள் எல்லாம் அது போல அதிரிபுதிரி வகை எழுத்துக்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc4G1PPMadxcAxHfzlbs1WgIbWUz3qzimmqSvjkfBeaVJY4fnqy4-l4qMQgdhsAqhQiaz5uipfQSbK3M2jBq78cTwmp2moY1mojfDyJCtyG1WwmGbtIaX3MIRUUsSz_RjmVo8RG5jHqKw/s1600/FB_IMG_15763356538535753.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="926" data-original-width="427" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc4G1PPMadxcAxHfzlbs1WgIbWUz3qzimmqSvjkfBeaVJY4fnqy4-l4qMQgdhsAqhQiaz5uipfQSbK3M2jBq78cTwmp2moY1mojfDyJCtyG1WwmGbtIaX3MIRUUsSz_RjmVo8RG5jHqKw/s320/FB_IMG_15763356538535753.jpg" width="147" /></a></div>
<br />
இந்த பதிவை எழுதும் நான் பொன்பரப்பி சம்பவம் நடந்த போது டிகிரி முடித்துவிட்டு சென்னையில் வேலையில் இருந்த நேரம். அப்போது ஒரு நாள் மாலை முரசில் “பொன்பரப்பி வங்கி கொலையில் தீவிரவாதி தமிழரசனை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்” என தலைப்பிட்டு வந்த போது “நல்லா வேணும் ராஸ்கல்ஸ்” என என் மனது குதூகலித்தது. ஆனால் காலம் பல கடந்து இந்த நாவல் வழியே தான் தெரிகின்றது அதனுல் இருந்த அரசியல் புதிர்கள்! இதோ இன்று கூட பொன்பரப்பியில் ஸ்டேட் பேங் அதே இடத்தில் இருக்கின்றது. அருகில் “பொதுமக்கள் செய்த வீர தீர செயலுக்காக” ஒரு சமுதாயக்கூடத்தை கட்சி அன்பளிப்பாக ஸ்டேட் வங்கி கொடுத்துள்ளதையும் பார்க்கலாம். சரித்திரம் எப்படியெல்லாம் மாற்றி எழுதப்படுகின்றது என்பதை இந்த நாவல் படித்து முடித்த பின்னர் நீங்கள் அறிவீர்கள். யார் கண்டது... நாளையே வீரப்பன் உயிரை குடித்த ரிவால்வர் இது தான் என ஒரு துப்பாக்கி அருங்காட்சியகத்தில் “மோர் குவளை”க்கு பதிலாக வைக்கப்படக்கூடும்... <br />
<br />
இந்த அத்தியாயத்தின் போதே சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலைய கதை ஒன்றை உள்ளே நுழைக்கின்றார் நூலாசிரியர். கதையின் ஆரம்பத்திலிருந்து கதாநாயகனாக இருந்த நம் சோழன் இயக்கத்தின் தலைவர் கதையின் உள்ளே நேரிடையாக உள்ளே நுழைந்ததும் “பெரியவர்” தான் நாயகன் என ஆகும் அளவு ஆகிவிட்டது. அது அப்படித்தான் ஆகும் என நினைத்து நூலாசிரியர் கனகத்தின் கதையை உள்ளே கொண்டு வந்து மீண்டும் “சோழனுக்கு” பட்டாபிஷேகம் செய்து வைக்கின்றாரோ என சந்தேகம் எழுகின்றது. ஆனால் “முந்திரிக்காட்டின் புரட்சி” என்னும் கதையும் “கனகத்தின் கண்ணீர் காவியம்” என்னும் நாவலும் “சோழன்” என்னும் கயிறு கொண்டு அழுத்தமாய் கட்டி “இந்த காரணத்துக்காகத்தான் கனகத்தை உள்ளே கொண்டு வந்தேன் என அழகாய் நூலாசிரியர் வாசகர்களை நம்ப வைப்பது அபாரம். வில்லனை துரத்திக் கொண்டு பாலக்கோடு செல்வதும், மலையுச்சி, மலையூர், புலிரசம் என அசத்தலாகப்போகின்றது. இந்த கதையில் போலீசாரே வில்லன்கள். நல்ல போலீஸ்களான கணபதி ஏட்டு, அப்துல்லா எஸ்.ஐ, மற்றும் மந்திரி அழுத்தத்தால் மாற்றலாகிப்போகும் எஸ்.பி என ஒரு நல்ல போலீஸ் குழுவும் இருக்கின்றது. அவர்களோடு சேர்ந்து சோழனும் ஓடுகின்றான். கடைசியில் வில்லன் போலீஸ் ராமசுந்தரமும், குத்தாலம் சம்பந்தம் பி.சியும் என்ன ஆனார்கள்? சோழன் சம்ஹாரம் செய்தானா? அல்லது பாதிக்கப்பட்ட வேறு யாராவது சம்பவம் செய்தார்கலா? அல்லது இதையெல்லாம் கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையின் எஸ்.ஐ அப்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தினாரா? எல்லாமே அருமையாக கோர்வையாக தந்துள்ளர் நூலாசிரியர்.<br />
<br />
சின்ன வயதில் 45 காசு டிக்கெட் எடுத்து விட்டு மணலை குவித்து சாய்மானத்துக்கு பெண்கள் பகுதியையும் ஆண்கள் பகுதியையும் பிரிக்கும் சின்ன கட்டை சுவற்றில் சாய்ந்து கொண்டு ரீல் எத்தனை என பார்க்கும் போது 24 ரீல்கள் என காட்டினால் ஒருவித சந்தோஷம் வருமே... அது போல 49 ரூபாய்க்கு இரண்டு நாவல்கள் படித்த திருப்தி... அதே நேரம் இரண்டுமே விறு விறு ரகம்... அருமை சிவசங்கர் சார். <br />
<br />
நாவலின் பல பகுதிகள் குறிப்பாக அந்த முந்திரிக்காட்டின் முழு வரைபடத்தையும் எழுத்தால் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அழகு, மருதையாறு பாலம் குண்டு வைக்கும் முன்பாக போராளிகள் போடும் ஸ்கெட்ச், அது போல பொன்பரப்பி வங்கி கொள்ளைக்கு போகும் போது போடும் திட்டம், அதே நேரம் போலீசார் போடும் திட்டம், மலையூர் கிராமம், பாலக்கோடு பகுதிகள், இயக்க பாடல் பாடிவிட்டு கு.வல்லம் கிராமத்தில் ஒரு ஆதிதிராவிடர் வீட்டில் சாப்பிடும் முந்திரிக்காய் சாம்பார், கனகத்தின் கண்ணீர் கதை, நதியா என்னும் பிஞ்சு கருகி சாவது, கணபதி ஏட்டின் இரக்க சுபாவம், எஸ்.பியின் நேர்மை... இப்படியாக பல கதாபாத்திரங்களும் நம்மோடு வாழ்கின்றன.<br />
<br />
குறிப்பாக செயராஜ் மற்றும் அப்துல்லா பாத்திரங்கள். நாவலைப்படித்தவர்கள் அடடே அது என்ன செயராஜ் கூட அப்துல்லாவை ஒப்பிடலாம் என கேட்கலாம். இந்த நாவலில் இந்த இருவர் மட்டும் தான் தென்னை மரத்துக்கு ஒரு குத்து, பனை மரத்துக்கு ஒரு குத்து என இரண்டு குத்து குத்தும் ஆசாமிகள். செயராஜ் என்பவன் இயக்கத்தின் பெரியவர் கூடவே இருந்து தொன்னை மரத்துக்கு ஒரு குத்தும் பின்னர் தனியாக டி எஸ் பி வீட்டுக்கு சென்று பனை மரத்துக்கு ஒரு குத்தும் போடும் துரோகி. கிட்டத்தட்ச அந்த இயக்கம் வேரோடு சாய்ந்தமைக்கு அவனும் ஒரு காரணம். 87களில் அவன் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு இயக்கத்தை காட்டிக்கொடுத்து தமிழரசன் மரணத்துக்கு காரணமாகின்றான். அனேகமாக இன்று அவன் ஒரு அரசு அதிகாரியாக இருக்கலாம். தமிழரசனை கொல்ல உதவியதுக்காக அவனுக்கு வேலை கிடைத்து இன்றைக்கு 34 ஆண்டு சர்வீசில் சுத்து வட்டாரத்தில் எங்காவது தாசில்தாராக இருந்து பாக்கெட் நிரப்பிக் கொண்டிருக்கலாம். கிட்டத்தட்ட அப்துல்லா பாத்திரமும் அப்படித்தானே. என்ன ஒன்று அப்துல்லா இருப்பது அரசாங்க உத்யோகம். ஆனால் மலையூர் மலையில் அப்துல்லா “சோழனை” வழிகாட்டும் விதம் பேச்சளவில் நன்றாக இருக்குமே தவிர “குச்சி இருக்குதா (ஜெலட்டின்) கையிலே... அவனுங்க மூஞ்சில போடு” என சொல்வது, தான் இருக்கும் அரசாங்க உத்யோகத்துக்கு ஏற்ற செயலாக எனக்கு தெரியவில்லை. அதனால் தான் செயபால் கூட ஒப்பிடுகின்றேன். படிக்கும் போது மேலும் அதை உணர்வீர்கள்!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFoPPhU3riBTlUtK_g_iWVaOyx0h3RzXCP2C-87_97HFtl7cdy8Kntx1sMI-YoRhkQ0X_rMibdCIUHQ0a5qPmzW5f86VtR2appeH9Cg-GvDDHCy9Uvxx4i3E2pd1QKM2GzdnzByun3aiw/s1600/78417457_2866753766702453_7545399533455278080_o.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="376" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFoPPhU3riBTlUtK_g_iWVaOyx0h3RzXCP2C-87_97HFtl7cdy8Kntx1sMI-YoRhkQ0X_rMibdCIUHQ0a5qPmzW5f86VtR2appeH9Cg-GvDDHCy9Uvxx4i3E2pd1QKM2GzdnzByun3aiw/s640/78417457_2866753766702453_7545399533455278080_o.jpg" width="249" /></a></div>
<br />
இந்த நாவல் வந்ததும் உளவுத்துறை எல்லாம் அமேசான் கிண்டில் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து 49 ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கி கசக்கி கசக்கி கண்களை கூர்தீட்டியது என தினசரிகளில் வந்த செய்தியை படித்தேன். சாராயம் காய்ச்சுவது எப்படி என விலாவாரியாக நம் தோழன் கிழுமாத்தூர் மகி ஒரு பதிவு போட்டால் அது சட்டப்படி குற்றம் தான். ஆனால் முடிவில் இரண்டு வரிகள் “இப்படிப்பட்ட சாராயம் உடலுக்கு தீங்கு. ஆகவே இப்படியெல்லாம் காய்ச்சி குடிக்காதீர்கள்” என எழுதிவிட்டால் அது நீதிபோதனை பதிவாகிவிடும். பல வன்முறை சினிமாக்கள் அதைத்தான் செய்கின்றன. ஆனால் இந்த நாவல் அது போன்ற பூசிமெழுகும் வேலை எல்லாம் செய்யவில்லை. தீவிரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை. அதை வளர்க்கும் விதத்தில் மூளைச்சலவை செய்யவும் இல்லை. நடந்த சம்பவத்தை ஒரு கதைசொல்லியின் பார்வையிலிருந்து சொல்கின்றது. அப்படியும் நாவலாசிரியர் ஒரு கட்டத்தில் அப்துல்லாவை வைத்து கால் பக்கம் நீதிபோதனையும் செய்வார் நம் சோழனுக்கு. ஆகவே உளவுத்துறை அந்த கால் பக்கத்தை கிழித்து கக்கத்தில் வைத்துக் கொண்டு மேலிடத்தில் சென்று “நத்தின் சார் நத்திங்... எவ்வரிதிங் ஓக்கே சார்” என போகவேண்டியது தான்.<br />
<br />
இந்த நாவலில் குறைகள் இல்லையா எனில்... உண்டு... ஒரு சில இருக்கத்தான் செய்கின்றது. அதல்லாம் நெக்லிஜிபிள். எழுத்தாளர் சுஜாதா சொல்வார்... ஒரு அறையின் உள்ளே நுழையும் போது சுவற்றில் ஒரு கடிகாரம் மாட்டியுள்ளதை எழுதினால் பிற்பாடு கதை நகரும் போது அந்த கடிகாரம் ஏதாவது வேலை செய்ய வேண்டும். ஏன் அதை எழுதினோம் என்பதற்காக அது மணி காட்ட வேண்டும். அல்லது கீழே விழுந்து உடையவாவது செய்யனும் என்பார். அது போல மருதையாறு பாலத்தகர்ப்பு விபத்தில் மாட்டப்போகும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் சென்னை எக்மோரில் கிளம்ப தயாராக இருக்கின்றது. திருச்சி சங்கம் ஓட்டல் உரிமையாளர் சின்னபாபு ஏ.சி கோச்சில் ஏறுகின்றார். காங்கிரஸ் மாநில தலைவர் பழனியாண்டி மற்றும் அப்போது புதிதாக ராஜீவ் அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக இருந்த ப.சிதம்ப்ரம் ஆகியோர் பெயர்கள் ஏ.சி கோச் பட்டியலில் இருக்கு, ஆனால் அவர்கள் ஏறவில்லை. பின்னர் விபத்து நடந்து முடிந்ததும் திருச்சிக்கு விமானத்தில் வந்து இறங்கிய விமானத்தில் இருந்து சிதம்பரம் அதன் பின்னர் மாதவராவ் சிந்தியா ஆகியோர் வருகின்றார்கள். ஆக சிதம்பரம் அந்த ரயிலை தவற விட்டு விட்டார் என கொள்வோம் போகட்டும். ஆனால் சங்கம் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் வைர வியாபாரி அசோக் கோபால் ஆகியோர் பற்றி ரயில் ஏறும் போது சிரத்தையாய் எழுதிய நூலாசிரியர் விபத்து நடந்ததை விளக்கி எழுதும் போது அவர்கள் மாண்டார்களா அல்லது மீண்டார்களா என்பது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்பது சின்ன குறை.<br />
<br />
இரண்டு விஷயங்கள்....<br />
<br />
<span style="color: blue;"><b>1. கலைஞர் அடிக்கடி சொல்வார்... அய்யா பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவை பார்த்திராவிட்டால் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று. நல்லது தலைவர் கலைஞர் அவர்கள் பெரியார், அண்ணாவை பார்த்தது பல நன்மைகளை தமிழகத்துக்கு கொடுத்தது. பார்த்திராவிடில் கலைஞரும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகி யாருக்கும் பயன்படாமல் போயிருப்பார். </b></span><br />
<span style="color: blue;"><b><br /></b></span>
<span style="color: blue;"><b>2. இந்த நாவலில் சோழனின் வாக்குமூலம் ... “நான் மட்டும் பெரியவரை (அதாவது தமிழரசனை) பார்த்து இருந்தால் இந்த வர்க்கப்போராட்டத்தின் வழியே “நியாயங்களை” வழங்கியிருப்பேன்” என்பான். அதாவது நம் “சோழன்” தீவிரவாத நக்சல் இயக்கத்தின் வழி சென்றிருப்பான். ஆனால் வென்றிருப்பானா என்பது விடை தெரியா விஷயம். ஆனால் நல்லவேளை தமிழரசனை பார்க்கவில்லை. அனேகமாக அதன் காரணமாக இப்போது அதே பகுதியில் ஜனநாயக வழிப்படி மக்களை சந்தித்து வாக்குகள் பெற்று ... யார் கண்டது அந்த பகுதி எம்.எல்.ஏ கூட ஆகியிருக்கலாம்! </b></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU7n5Y6kLtjxZzwJrOLL_iFLMmhjOsaiCXwz7yMCgr8aFiMFW1zpg9gJiGnhCCyKa0winfaZiJYflIlk3ihOBgo6PHmpNeQiGDpLtVjoW6564ZIyR3Wsn-wX_ewgpIlQOe3a1VnzyfzzE/s1600/sivasankar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="960" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU7n5Y6kLtjxZzwJrOLL_iFLMmhjOsaiCXwz7yMCgr8aFiMFW1zpg9gJiGnhCCyKa0winfaZiJYflIlk3ihOBgo6PHmpNeQiGDpLtVjoW6564ZIyR3Wsn-wX_ewgpIlQOe3a1VnzyfzzE/s640/sivasankar.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
நூலின் ஆரம்பத்தில் மறைந்த பெரியவர் எஸ்.சிவசுப்ரமணியன் அவர்களுக்கு நூலாசிரியர் நன்றி தெரிவித்து ஒரு பக்கம் இருக்கின்றது. அய்யா அவர்கள் ஆண்டிமடம் ஒன்றிய பெருந்தலைவர் பின்னர் ஆண்டிமடம் சட்டமன்ர உறுப்பினர் ஆக இருந்த காலத்தில் இயக்க தோழர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் அரசியல் பொதுநீரோட்டத்தில் இணைத்ததாக குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு பெரம்பலூர், அரியலூர் பகுதிகள் அமைதியாக இருக்க இதுவும் ஒரு காரணம் என்றே கருதுகின்றேன். அவர்கள் திமுகவோ, அதிமுகவோ, அவ்வளவு ஏன் பாமக மற்றும் விசி போன்ற சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளில் கூட இருக்கட்டும். ஆனால் அவர்கள் வீடுகளில் நிம்மதியான உறக்கம் இப்போது இருக்கின்றதே... அந்த முயற்சியை எடுத்த அய்யா எஸ். சிவசுப்ரமணியன் அவர்களுக்கு நூலை சமர்ப்பணம் செய்தமையே அருமையான செயல்!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9BylL_a4f6mjBybiqdesDdPfon628Y2CYJaTc061IvuDe96xE4YNYi8xMFv5pjBE9oh1HRqgRnpL1u492FM1kQBARBqOWou61hKBOyUQZeNEg5-5bFUwtn_Ugggp5NCdFWwNeQuVduTU/s1600/sivasubramanian.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="182" data-original-width="277" height="420" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9BylL_a4f6mjBybiqdesDdPfon628Y2CYJaTc061IvuDe96xE4YNYi8xMFv5pjBE9oh1HRqgRnpL1u492FM1kQBARBqOWou61hKBOyUQZeNEg5-5bFUwtn_Ugggp5NCdFWwNeQuVduTU/s640/sivasubramanian.jpg" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<b><span style="color: red; font-size: x-large;">மொத்தத்தில் ”தோழர் சோழன்” அவசியம் படிக்க வேண்டிய நாவல்! கரும்புரவியில் சோழன் ராஜபாட்டையில் வாயுவேகம், மனோவேகத்தில் பறக்கின்றான்!</span></b><br />
<br />
<b><span style="color: blue;">- அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்</span></b><br />
<div>
<br /></div>
அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56744793183425308272019-02-11T00:47:00.000+05:302019-02-11T01:10:48.592+05:302019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது? - ஒரு விரிவான பார்வை!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-WfEicuRNlBSa5WKn5APw3uzuTY_IPz2PyZi1_3bW9wnIMl39Vm1HveeShcdd25GWW4Zxn_raf4By__tGVmcFtxguzxazR8nP5vvCx2RmGC01m9D1dw3YM_s5upkpZL1xakC76lbUIuc/s1600/51669939_2106766072732941_5176100658775851008_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="268" data-original-width="480" height="356" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-WfEicuRNlBSa5WKn5APw3uzuTY_IPz2PyZi1_3bW9wnIMl39Vm1HveeShcdd25GWW4Zxn_raf4By__tGVmcFtxguzxazR8nP5vvCx2RmGC01m9D1dw3YM_s5upkpZL1xakC76lbUIuc/s640/51669939_2106766072732941_5176100658775851008_n.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<b><span style="color: red;">ஒவ்வொறு தேர்தலின் போதும் “அலை வீசுகின்றது, அலை வீசுகின்றது” என பேசுவதை பார்த்திருக்கின்றோம்! அது என்ன அலை? </span></b><br />
<br />
<b><span style="color: blue; font-size: large;">ஆதரவு அலை!</span></b> ஒரு குறிப்பிட்ட கட்சியின் மீது திடீரென ஒரு நல்ல அபிப்ராயம் வரும். அல்லது அந்த கட்சி வெற்றி பெற்றால் “இன்னார் தான் முதல்வர் என்றோ அல்லது இன்னார் தான் பிரதமர்”என்றோ மக்களுக்கு ஒரு எண்ணம் தானாகவே தோன்றிவிடும். அப்படி தோன்றும் போது மக்கள் தங்களுக்குள் பேச ஆரம்பித்து விடுவார்கள். அதே நேரம் ஊடகங்கள் அதை ஹேஷ்யங்களாக மக்கள் மனதில் விதைத்து விடுவார்கள். அப்படி விதைக்கும் போது அது ஆரம்பத்தில் கொஞ்சமாக ஆரம்பித்து தேர்தல் நெருங்க நெருங்க பூதாகரமாகி அது வாக்கு போடும் போது பிரதிபலித்து விடும்.<br />
<br />
சென்ற நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் அப்படித்தான் மோடி அலை மிகச்சிறப்பாக ஊடகங்கள், பாஜகவின் சமூகவலைத்தள பொய்ப்பிரச்சாரங்கள் வழியாக அருமையாக பரவத்தொடங்கியது. அதன் பின்னர் பேசியவர்கள் எல்லோரும் கத்திப்பாரா பாலத்தின் மீது தினம் தினம் கடந்து போகின்றவர்கள் கூட அந்த பாலத்தின் கழுகுப்பார்வை வடிவம் தெரியாத காரணத்தால் அதைக்கூட குஜராத் பாலம் என்றே சிலாகித்து அந்த பொய்யை வசதியாக பரப்பினர். அதே போல ஸ்பெயின் நாட்டு சாலைகள் கூட குஜராத் சாலைகள் ஆகின. குஜராத்தில் தேனாறும், பாலாறும் ஓடுவதாகவும் மோடி பிரதமர் ஆகிவிட்டால் அந்த பாலாறு, தேனாறு எல்லாம் மடை மாற்றம் ஆகி நாட்டின் எல்லா மாநிலத்துக்கும் வந்து விடும் என நம்பினர். தவிர இந்தியாவில் எப்போதுமில்லா முறையாக “பிரதமர் வேட்பாளர்” என பகிரங்கமாக பாஜகவால் மோடி அறிவிக்கப்பட்டார். அது இந்தியாவில் அதுவரை இல்லாத புதிய பிரச்சார யுக்தியாக இருந்தது. நேரு காலம் முதல் மொரார்ஜி, இந்திரா என எல்லோரும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படாமல் தேர்தலுக்கு பின்னர் தான் அந்த கட்சியின் தேர்வான எம்.பிக்கள் வழியாக பலத்த பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் பிரதமர்கள் ஆனார்கள். நேருவுக்கே அப்போது பட்டேல் போட்டியாக இருந்தார். இந்திராவுக்கு மொரார்ஜி போட்டியாக இருந்து பின்னர் காமராஜரால் இந்திரா பிரதமர் ஆனார். வி.பி சிங், குஜ்ரால், தேவகௌடா, சந்திரசேகர் என எல்லோருமே “பிரதமர் வேட்பாளராக” இல்லாமல் தேர்தலுக்கு பின்னர் தான் பலத்த பஞ்சாயத்துகளுக்கு பின்னர் தான் பிரதமர் ஆனார்கள். 2004ல் சோனியா தான் பிரதமர் வேட்பாளர் என சூசகமாக ஹேஷ்யங்கள் பரப்பப்பட்டு ஆனால் தேர்தல் முடிந்ததும் திடீரென எந்த காரணத்தினாலோ மன்மோகன் சிங் பிரதமர் ஆனார். 1991ல்நரசிம்மராவ் கூட ராஜீவ் மரணத்துக்கு பின்னர் பல பஞ்சாயத்துகளுக்கு பின்னர் தான் பிரதமர் ஆனார். ஆனால் இந்திய சரித்திரத்தில் மோடி தான் பகிரங்கமாக “பிரதமர் வேட்பாளர்” என அறிவிக்கப்பட்ட “சம்பவம்” இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக நடந்தது. காரணம் இந்திய அரசிலமைப்பில் மக்கள் நேரிடையாக பிரதமரை தேஎர்வு செய்யும் முறையே கிடையாத போது “பிரதமர் வேட்பாளர்” என்பது எங்கிருந்து வரும். தேர்வாகிய எம்.பிக்கள் தான் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என்கிற நிலையில் “பிரதமர் வேட்பாளர்” என சொல்வதே நகைமுரண் தான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6w62CeoyH7wp1ahLaMkU83RRtEIq4-wBOK5lgPXrmNer7mFMT1Ie0nOnqk7ERrbGgC8yaGq4GETW7AQC9CUgLu1xO0Of1TFIJJJvcvCHGuEtqucvOZKo9UIOX_yj9E8I2uy1Sn86ihhE/s1600/rahul-gandhi-660_072018110841.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="451" data-original-width="660" height="218" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6w62CeoyH7wp1ahLaMkU83RRtEIq4-wBOK5lgPXrmNer7mFMT1Ie0nOnqk7ERrbGgC8yaGq4GETW7AQC9CUgLu1xO0Of1TFIJJJvcvCHGuEtqucvOZKo9UIOX_yj9E8I2uy1Sn86ihhE/s320/rahul-gandhi-660_072018110841.jpg" width="320" /></a></div>
<br />
<br />
அத்தனை ஏன்? தமிழகத்தில் கூட அண்ணா மறைவுக்கு பின்னர் கூட நாவலர் தான் முதலில் “தற்காலிக முதல்வராக” இருந்து பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து தான் கலைஞரை முதல்வராக்கினர். எம்.ஜி.ஆருக்கு அந்த பிரச்சனை இல்லை. ஏனனில் அதிமுக என்பது அவரது தனிப்பட்ட கம்பனியாக இருந்ததால் வென்றால் அவர் தான் முதல்வர் என மக்களுக்கு தெரிந்தது. ஆனாலும் அவர் முதல்வர் வேட்பாளர் ஆக அறிவிக்கப்படவில்லை. தேர்தலுக்கு பின்னர் தான் அவர் முதல்வராக ஆனார். அவர் மறைவுக்கு பின்னர் ஜானகி முதல்வரானதும் அப்படித்தான். ஆனால் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக முதன் முதலாக பாஜக மோடியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது. காரணம் பாஜக மீது மக்களுக்கு அத்தனை பெரிய கரிஷ்மா கிடையாது. பாஜக என்னும் கட்சியை அவர்கள் முன்னிருந்தி மட்டும் தேர்தலை சந்தித்து இருந்தால் இந்த அளவு க்ளீன் ஸ்வீப் அடித்திருக்காது. ஏனனில் பாஜக என்பது மக்களைப் பொருத்தவரை “மதவாதக்கட்சி” என்னும் பயம் இருந்தது. அதன் காரணமாகத்தான் ஒரு பொம்மையை அவர்கள் செய்தார்கள். அந்த பொம்மைக்கு கரிஷ்மாவை பொய்யாக கட்டமைத்தார்கள். அதன் காரணமாகத்தான் கத்திப்பாரா பாலம் குஜராத் பாலமாகியது. ஸ்பெயின் சாலை குஜராத் சாலை ஆகியது. மோடி என்னும் பொம்மை “தேவதூதன்” ஆகிப்போனார். மக்களும் இந்த புதிய முறை “பிரதமர் வேட்பாளர்” என்பது இந்திய அரசிலமைப்புகு எதிரான சொல் என்பதை புரிந்து கொள்ள அவர்களுக்கு தேவையான அவகாசம் இல்லாமல் போனது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihZiwuwacP0VkMnvgM2RdjxwSr2HJVv3OagZ0Z39Di04YAgmtcgHETbc2ceKgWc2G4t8KXgzcCoVH-MJ7c_f17GhWmalZcye_Y_9UT2HFDRoVU0Q2z9Yq76ar8_JDFUmOCDZcdJH3r6WQ/s1600/modi-5.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="422" data-original-width="759" height="177" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihZiwuwacP0VkMnvgM2RdjxwSr2HJVv3OagZ0Z39Di04YAgmtcgHETbc2ceKgWc2G4t8KXgzcCoVH-MJ7c_f17GhWmalZcye_Y_9UT2HFDRoVU0Q2z9Yq76ar8_JDFUmOCDZcdJH3r6WQ/s320/modi-5.jpg" width="320" /></a></div>
<br />
<br />
ஆனால் மோடிக்கு கூட குஜராத் கலவரம் என்னும் மைனஸ் பாயிண்ட் இருந்தது. ஆனால் அந்த மைனஸ் பாயிண்ட் என்னும் கோட்டை அழிக்காமல் அழிக்கவும் முடியாது என்பது தெரிந்ததால் அதை விட கொஞ்சம் பெரிய கோடு போட்டார்கள். அங்கும் அவர்கள் பயன்படுத்தியது பொய்ப்பரப்புரை தான். ஸ்பெக்ட்ரம் என்னும் பெரிய கோட்டை போட்டு குஜராத் கலவரம் என்னும் கோட்டை சிறியதாக்கினர். காங்கிரஸ் அந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டது என்பதே உண்மை. காங்கிரஸ் நினைத்து இருப்பின் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரனை போதும் உச்சநீதிமன்ற நேரிடை கண்காணிப்பில் சி பி ஐ ஸ்பெஷல் கோர்ட் தேவையில்லை என விஷயத்தை முடித்து இருந்திருக்கலாம். ஆனால் சிதம்பரம் போன்றவர்களின் துர்போதனை காங்கிரஸ் தலைமையை குழப்பி விட்டது தான் காங்கிரஸ் ஒரு எதிர்கட்சியாகக்கூட வராமல் போனதுக்கு காரணம். வினை விதைத்த சிதம்பரம் கூட வெற்றி பெற முடியாமல் போனமைக்கு அது தான் காரணம். நிற்க.... ஆக பாஜக மோடி என்னும் பொம்மைக்கு சீவி சிங்காரித்து ஒரு போலி கரிஷ்மா உண்டாக்கி வெற்றியை சாதகமாக்கிக்கொண்டது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNFvnznk4YepwNO9-oyoQ0Rhv-y4S8uvGuWa3MX5r82G6EW_GRK-paCCYtqGaBNiR9Eq38Z3Uayak0gCeOvjtjosygzedo-3FdXIhrYxLSoyS_KpToj-aSQi7wJE7-ltqwTSu-arn-hsM/s1600/51649251_869926149844691_5109026012780298240_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="525" data-original-width="480" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNFvnznk4YepwNO9-oyoQ0Rhv-y4S8uvGuWa3MX5r82G6EW_GRK-paCCYtqGaBNiR9Eq38Z3Uayak0gCeOvjtjosygzedo-3FdXIhrYxLSoyS_KpToj-aSQi7wJE7-ltqwTSu-arn-hsM/s320/51649251_869926149844691_5109026012780298240_n.jpg" width="292" /></a></div>
<br />
2014 மே மாதம் நடந்த தேர்தலுக்கு 6 மாதம் முன்பாகவே அதாவது 2013 நவம்பர், டிசம்பரிலேயே பாஜக மோடியை தயாரிக்க ஆரம்பித்து விட்டது. தேர்தல் சூசகங்கள் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என ஊடகங்களை பேசவைத்து விட்டது. 2014 ஜனவரி, பிப்ரவரியில் அத்வானியை எல்லாம் சமாளித்து அவரை போட்டியில் இருந்து விலக்கி விட்டது. ஆர்.எஸ்.எஸ் நேரிடையாக பஞ்சாயத்தில் இறங்கியது. பாபர் மசூதி இடிப்பு வழக்கை காட்டி மிரட்டியது ஆர்.எஸ்.எஸ். கண்டிப்பாக பாஜக தான் வெல்லும். மோடி பிரதமர் ஆகட்டும். வந்ததும் பாபர் மசூதி வழக்கை முடித்து விட்டு அடுத்த 2 ஆண்டில் வரும் ஜனாதிபதி தேர்வில் அத்வானியை ஜனாதிபதி ஆக்கிடலாம் என டீலிங் போட்டது. ஆனால் அடுத்த 2 ஆண்டில் அத்வானியை அந்த வழக்கில் இருந்து காப்பாற்றவில்லை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. இழுத்தடித்து ஜனாதிபதி ஆக்காமல் விட்டது. காரணம் ஆர்.எஸ்.எஸை பொருத்தவரை அவர்களுக்கு தனிமனித கரிஷ்மாவெல்லாம் முக்கியமில்லை. ஆட்சித்தலைமை என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலையாட்டி பொம்மையாக மட்டும் இருந்து விட்டால் போதும் என நினைக்கும் சித்தாந்தம் கொண்ட அமைப்பு. ஆகவே அத்வானி இப்போதும் கூட திரிசங்கு நிலையில் இருகின்றார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig7_WtWvnsH3s4fO0PG3mSZzOFS1GNBAKycBn_ljd9k1P_uDfTCd-RYR6witcN9jfDi4sZIHsmwjpEZ5wZGPxxlGMPBsYEZ_IJMnr8HTILfWWUUYMFzEIKCpCWAo1qHW4MUvEp5kHCmQ4/s1600/51589922_1940090889450934_6695667312235642880_n.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="359" data-original-width="480" height="298" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig7_WtWvnsH3s4fO0PG3mSZzOFS1GNBAKycBn_ljd9k1P_uDfTCd-RYR6witcN9jfDi4sZIHsmwjpEZ5wZGPxxlGMPBsYEZ_IJMnr8HTILfWWUUYMFzEIKCpCWAo1qHW4MUvEp5kHCmQ4/s400/51589922_1940090889450934_6695667312235642880_n.jpg" width="400" /></a></div>
<br />
ஆக 2014 மே மாத தேர்தலுக்கு 6 மாதம் முன்பாகவே ஆர்.எஸ்.எஸ் அழகாய் காய்களை நகர்த்தி 2014 மார்ச் மாதத்தில் ”மோடியை” முறைப்படி அறிவித்து ஆட்சியை பிடித்து விட்டது. இந்த கட்டுரையின் இரண்டாம் பத்தியின் ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா “ஆதரவு அலை”. அதைத்தான் விரிவாகப்பார்த்தோம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyEF4kh9elc78kWmt6VBZo499VAdHlMyJ_x005idrnna_N80Hadu9IMt-xFR_bckqJAjxtCta5-YpjF_H6viUarAIKgxO-8LWwe03Et5wfDnxG1psFDPTbjNB2t48yDgBFU5UjKF6LUCc/s1600/Akhileshyadavfull.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="393" data-original-width="706" height="177" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyEF4kh9elc78kWmt6VBZo499VAdHlMyJ_x005idrnna_N80Hadu9IMt-xFR_bckqJAjxtCta5-YpjF_H6viUarAIKgxO-8LWwe03Et5wfDnxG1psFDPTbjNB2t48yDgBFU5UjKF6LUCc/s320/Akhileshyadavfull.jpg" width="320" /></a></div>
<br />
இதே போல இன்னும் ஒரு அலை இருக்கின்றது. அது .....<br />
<br />
<span style="color: blue; font-size: large;"><b>“எதிர்ப்பு அலை”..</b></span>.. எமர்ஜென்சி முடிந்த பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திராவுக்கு எதிராக அகில இந்திய கட்சிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு இந்திராவை எதிர்த்ததே .... அது எதிர்கட்சிகள் மீதான ஆதரவு அலை அல்ல... இந்திரா மீதான எதிர்ப்பு அலை. அதே போல 1996ல் ஜெயாவுக்கு எதிராக தமிழகத்தில் நடந்ததே அது ஜெயா மீதான எதிர்ப்பு அலை தான். வளர்ப்பு மகன் திருமணத்தில் ஆரம்பித்து இமாலய ஊழல், சர்வாதிகாரத்தனம், ஊடகங்கள் மீதான அடக்குமுறை என ஜெயாவுக்கு எதிராக எழுந்த “எதிர்ப்பு அலை” அவரை வீழ்த்தியது. இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன “எதிர்ப்பு அலை”க்கு. மொரார்ஜியின் ஆட்சிக்கு பின்னர் மீண்டும் இந்திரா வெற்றி பெற்றதும் எதிர்கட்சிகள் மீதான “ஒற்றுமையின்மை” என்னும் எதிர்ப்பும் “நிலையான ஆட்சி கொடுக்க அவர்களால் இயலவில்லை” என்னும் எதிர்ப்பு அலையும் தான் மீண்டும் இந்திரா வெற்றிபெற காரணம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxIzKlPHNoHHP5qKrC2404_rMxjGCLF4dR5IIjfsGnnw8Geb0R09YCmFFQlPzP694TFRoDklvauWNzl2LmVanLqEafhs6kBrC5sLO9fKVOr_dsWkkFlC9HP6gTzI2XZbhFe1i5xew6P8I/s1600/Amit-Shah-1-770x433.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="433" data-original-width="770" height="179" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxIzKlPHNoHHP5qKrC2404_rMxjGCLF4dR5IIjfsGnnw8Geb0R09YCmFFQlPzP694TFRoDklvauWNzl2LmVanLqEafhs6kBrC5sLO9fKVOr_dsWkkFlC9HP6gTzI2XZbhFe1i5xew6P8I/s320/Amit-Shah-1-770x433.jpg" width="320" /></a></div>
<br />
ஆதரவு அலையும் பார்த்து விட்டோம், எதிர்ப்பு அலையும் பார்த்து விட்டோம். அடுத்த அலை என்பது....<br />
<br />
<span style="color: blue; font-size: large;"><b>“அனுதாப அலை” -</b></span> இது கொஞ்சம் மோசமான ரகம்! இந்திராகாந்தியின் கொடூர கொலைக்கு பின்னர் மக்கள் ஓவென அழுது முடித்திருந்த நேரம். ஆனால் உடனே ராஜீவ் பிரதமர் ஆகிவிட்டாரெனினும் உடனே அந்த அனுதாப அலையை பயன்படுத்திக்கொள்ள நினைத்து ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்தார். அவர் நினைத்தது வீண்போகவில்லை. காங்கிரஸ் வரலாற்றில் இதுவரை இல்லா அளவுக்கு 400க்கும் அதிகமான இடங்களில் ராஜீவ் வெற்றி பெற்றார். அதே நேரம் மாநிலங்களவையிலும் பலம் இருந்தது. தான் நினைத்த எல்லாம் செய்தார் ராஜீவ். கட்சித்தாவல் தடை சட்டம் முதல் பஞ்சாயத்து ராஜ் வரை அவருக்கு சுலபமாக கைகூடியது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNi2MFMx_R6xZkZazA140yBNAtglZJ8rvrKPrz6BE8c0lgEolyyNkznowV_-1vnZlUbKMk2JFyawjNol5e3E_Qx25jHIZIVESi-7KGEARMwW42FuhwZEXzkwf15ji-z4C7ozMPMH0ZBYY/s1600/Chandra-Babu.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="441" data-original-width="660" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNi2MFMx_R6xZkZazA140yBNAtglZJ8rvrKPrz6BE8c0lgEolyyNkznowV_-1vnZlUbKMk2JFyawjNol5e3E_Qx25jHIZIVESi-7KGEARMwW42FuhwZEXzkwf15ji-z4C7ozMPMH0ZBYY/s320/Chandra-Babu.jpg" width="320" /></a></div>
<br />
அதே போல எம்.ஜி.ஆர் நோயில் படுத்த போதும் அதே அனுதாப அலை என்பது மீண்டும் அதிமுகவை 3 வது முறையாக ஆட்சியில் அமர்த்தியது. ஆனால் அந்த தேர்தலில் எம் ஜி ஆர் உடல் நலமுடன் இருந்திருந்தால் நிலை வேறாக இருந்திருக்கும். ஆனால் அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1987ல் நடந்த தமிழக உள்ளாட்சித்தேர்தலில் எம்.ஜி.ஆர் இருக்கும் போதே திமுக அபரிமிதமான வெற்றி பெற்றது. ஏனனில் அப்போது எம் ஜி ஆர் மீதான அனுதாபம் முடிந்து விட்ட நேரம் அது.<br />
<br />
அதே போல ராஜீவ் மரணத்தின் பின்னர் ஜெயா தமிழகத்தில் வெற்றி பெற்றதும் அதே அனுதாப அலை தான். நரசிம்மராவ் பிரதமர் ஆனதும் அதே ராஜீவ் மரணத்தால் ஏற்ப்பட்ட அனுதாப அலை தான்! ஆக இந்த அனுதாப அலை தான் கொஞ்சம் ஆபத்தான விஷயம். நல்ல கட்சியைகூட ஆட்சியில் அமரவிடாமல் செய்து விடும். கேடுகெட்ட ஆட்சியாளர்களைக்கூட மீண்டும் ஆட்சியில் அமர்த்தி விடும். எனவே இது தான் ஆபத்தான அலை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtyXSNS0Lph5P1i4mhCMWIvZbrH3xRtRH9icHBTx0NFb1_igJ7H8XLQ3VHhlhYwqLMIxmzId5KotM_Cp5zm2UClfT_xgHNG3gQ8v1GFJrzzUbq7f9hQVCLSkqsA-XN3mJstkdxcy3Ofvg/s1600/9jpgt5c8_bsp-chief-mayawati-pti_625x300_17_October_18.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="400" data-original-width="650" height="196" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtyXSNS0Lph5P1i4mhCMWIvZbrH3xRtRH9icHBTx0NFb1_igJ7H8XLQ3VHhlhYwqLMIxmzId5KotM_Cp5zm2UClfT_xgHNG3gQ8v1GFJrzzUbq7f9hQVCLSkqsA-XN3mJstkdxcy3Ofvg/s320/9jpgt5c8_bsp-chief-mayawati-pti_625x300_17_October_18.jpg" width="320" /></a></div>
<br />
அடுத்து ஒரு அலை இருக்கின்றது. <span style="color: blue; font-size: large;"><b>“பண அலை”</b></span> அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அந்த “பண அலை” எனும் அலையை பெத்த அம்மாவே புரட்சித்தலைவி அம்மா தான்! 2014 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுமைக்கும் வீசிய மோடி அலை என்பது தமிழகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டமைக்கு பாஜக தமிழகத்தில் இல்லை என்பது ஒரு காரணம். அடுத்து மிக அழகாக ஜெயா அரசு சரியான திட்டமிடலுடன் 39 தொகுதிகளுக்கும் தேர்தலுக்கு முதல் நாள் அரசு இயந்திரத்தை கையில் வைத்துக் கொண்டு ஓட்டுக்கு 200 ரூபாய் என கொடுத்தது. 37 இடத்தில் வெற்றது. இது ஜெயாவுக்கு சரியான யுக்தியாகப்பட்டதால் 2016 சட்டமன்ற தேர்தலில் கூட அதே “பண அலையை”கொண்டு வென்றார். இந்த அலையை வெல்வது சுலபம். ஆனால் ஆட்சி கிடைக்கும். தேர்தல் ஜனநாயகம் என்பது செத்துப்போய்விடும். ஜெயா 200 ரூபாய் கொடுக்கின்றாரா? அதை விட நான் அதிகமாக கொடுக்கின்றேன் என ஜெயாவுக்கு சமமான பலமுடைய கட்சி கொடுத்தால் அது அவர்களுக்கு சாதகமாக முடியும். ஆனால் அதற்காக பாஜக அந்த பணத்தை தருகின்றேன் என வந்தால் அது நடக்காது. அதிமுகவுக்கு சமபலமான ஒரு கட்சி அந்த ஆயுதத்தை எடுத்தால் தான் சாத்தியம் ஆகும். ஆனால் இந்த பண அலை என்பது நாட்டை அழிவுப்பாதைக்கு வெகுசீக்கிரம் அழைத்து சென்றுவிடும். சென்ற தேர்தலில் பணம் கொடுத்து பல்லாயிரம் கோடிகள் செலவழித்த ஜெயா அம்மையார் ஆட்சி நடத்துவரை விட போட்ட முதலீட்டை அறுவடை செய்வதில் தான் முனைப்பாக இருந்தார். எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என நாடு நாசமாகப்போனது தான் மிச்சம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0lXGdu5wJEgLnv30mT2TOBuhsqijI4L6kcMNLowsUZ56KIJrzkJ64Vij1MActMFpVOdAfTl8SR2TtjfI9oDQjmOTJcScaHaJbOxJ6hRtxhrJ3uLgDRHVV4Zmb9SSa8zjoXOaUDHtHQvg/s1600/_92848759_66adc7e6-da97-4bf6-9dbb-9f3d878d49b3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="608" data-original-width="660" height="294" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0lXGdu5wJEgLnv30mT2TOBuhsqijI4L6kcMNLowsUZ56KIJrzkJ64Vij1MActMFpVOdAfTl8SR2TtjfI9oDQjmOTJcScaHaJbOxJ6hRtxhrJ3uLgDRHVV4Zmb9SSa8zjoXOaUDHtHQvg/s320/_92848759_66adc7e6-da97-4bf6-9dbb-9f3d878d49b3.jpg" width="320" /></a></div>
<br />
<br />
இப்போது ஆதரவு அலை, எதிர்ப்பு அலை, அனுதாப அலை, பண அலை என நான்கையும் பார்த்து விட்டோமா? இப்போது இந்த நாடாளுமன்ற தேர்தலில் என்ன அலை வீசப்போகின்றது அல்லது வீச ஆரம்பித்துள்ளது?<br />
<br />
<b>சர்வ நிச்சயமாக “மோடி மீதான எதிர்ப்பு அலை” மட்டுமே வீசத்தொடங்கி விட்டது.</b> அதை எப்படி கண்டு பிடிப்பது? மிகவும் சுலபம்! கடந்த நான்கரை ஆண்டுகளாக மோடி அவர்கள் உடுத்திய கோமாளி உடைகள், பத்து லட்சம் கோட்டுகள், தாய்லாந்து காலான்கள் உணவு , உலகம் முழுவதும் சுற்றி சுற்றி சில ஆயிரம் கோடிகள் ஊதாரித்தனமாக செலவழித்தமைகள், மோடி ஒரு பொய்யர் ஆக இருத்தல், இவைகள் மக்களை கடுமையாக எரிச்சல் அடைய வைத்துள்ளன. நீட் தேர்வு, பணமதிப்பிழப்பு, உதய் மின் திட்டம், மீத்தேன் போன்ற விஷயங்கள் சரியாக தங்கள் வாக்கை செலுத்தும் மிக அடித்தட்டு மக்களை சென்றடைந்ததை விட “நாம் ஏழ்மையில் இருக்கும் போது பகட்டான உடை, உணவு, சிகை அலங்காரம், கோமாளி தொப்பிகள், உலகம் முழுமையும் சுற்றியவை ஆகியவைகள் ஏழைகளை பொறாமைப்பட வைக்கும் என்பது தான் உண்மை! இது அதீத “மோடி எதிர்ப்பு அலை”க்கான முதல் காரணமாக இருக்கும். அடுத்து தான் ஆட்சி நிர்வாகமின்மை, நீட், மீத்தேன், பணமதிப்பிழப்பு, வெற்று அறிவிப்புகள் ஆகியவை தாக்கும். அதற்கடுத்ததாக ரஃபேல் ஊழல் போன்ற ஊழல்கள் அடுத்த இடத்தை பிடிக்கும். ஆனால் காங்கிரஸ், திமுக, மம்தா, நாயுடு, லாலூ, மாயாவதி, அகிலேஷ் எல்லோரும் செய்ய வேண்டிய முக்கிய பிரச்சாரங்கள் பணமதிப்பிழப்பு, ரஃபேல் ஊழல், ஆட்சி செய்யத்தெரியாதமை, மதக்கலவரங்கள் எல்லாவற்றையும் மிகக்கடுமையாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். இப்போது மோடி எதிர்ப்பு அலை வீசத்தொடங்கியதை இவர்கள் ஊதிப்பெரிதாக்க வேண்டிய முக்கிய பணி இப்போது எதிர்கட்சிகள் முன்பாக நிற்கின்றது. சரி, மோடி எதிர்ப்பு அலை வீசத்தொடங்கி விட்டதா என நீங்கள் கேட்கலாம்... ஆம் என்றே சொல்வேன்.<br />
<br />
GoBackModi, GoBackSadistModi போன்ற சமூக ஊடக எதிர்ப்புகள் முதலில் தமிழகத்தில் ஆரம்பித்து இப்போது இன்று இந்த மூன்றாம் முறை மோடியின் தமிழக விஜயத்தின் போது உலகலாவிய அளவில் தெரிந்து விட்டது. தமிழகத்தில் பற்ற வைக்கப்பட்ட அந்த மோடி எதிர்ப்பு என்னும் தீ ... இங்கிருந்து கொல்கத்தா சென்றது. அங்கே பற்றி பின்னர் அஸ்ஸாமில் தொடர்ந்து, கேரளாவில் அதிர்ந்து, ஆந்திரா குண்டூரில் நாறி விட்டது. இனி இது தொடரும் என்றே நினைக்கின்றேன். உ.பிக்கும், பீகாருக்கும் போகும் போதும் இதே நிலை வரும் போது அது அகில இந்திய அளவில் மோடிக்கு பெரிய பின்னடைவை ஏற்ப்படுத்தும்.<br />
<br />
அதே போல தமிழகத்தின் புகழ்வாய்ந்த தலைவராக விளங்கும் ஸ்டாலின் போன்றவ்ர்கள் “மோடி ஒரு பொய்யர், மோடி ஒரு சேடிஸ்ட்” என மிகக்கடுமையாக தாக்கி பேசுவது அடிமட்ட வாக்காளனை அழகாக சென்று அடைந்து விட்டன. அதே போல ராகுல் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சுகள், மோடி ஒரு ரஃபேல் திருடன் என விமர்சித்தது என்பது 2014 ஆரம்பத்தில் வைத்திருந்த மோடி ஒரு தேவதூதன் என்னும் பிம்பத்தை அடித்து நொறுக்கி விட்டன.<br />
<br />
சென்ற 2014 தேர்தலில் மோடி தான் பிரதமர் என பாஜக பேசும் போது எதிர்கட்சிகள் “இல்லை அவர் கிடையாது” என அழுத்தமாக முழங்கவில்லை. தவிர எதிர்கட்சிகளிடம் இப்போது இருக்கும் ஒற்றுமை அப்போது கண்டிப்பாக இல்லை. காங்கிரசும், திமுகவும் கூட இணைந்து தேர்தலை சந்திக்கவில்லை. காரணம் அப்போது பாஜக முன்வைத்த ஸ்பெக்ட்ரம் விஷயம் பற்றி காங்கிரஸ், திமுக ஆகியவை கடுமையாக எதிர்த்து வாதாடவும் இல்லை. ஏனனில் யாருக்கும் அந்த விஷயத்தில் என்ன நடக்கின்றது என்பதே புரியவில்லை. ஆனால் இப்போது கதையே மாறிவிட்டது. ஓ.பி ஷைனியின் அருமையான தீர்ப்பும், அதன் பின்னர் ஆ.ராசா அவர்கள் எழுதிய புத்தகமும் (அதற்கு யாரும் இன்னும் எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை) நிலைமையை அடியோடு மாற்றிவிட்டது.<br />
<br />
மேலும், இப்போது பாஜகவில் கூட மோடி தான் பிரதமர் என சொல்வதை விட அமீத்ஷா போன்றவர்களே கூட கொல்கத்தாவில் பேசும் போது “அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ராகுல் திங்கள் பிரதமர், நாயுடு செவ்வாய் பிரதமர், மம்தா புதன் பிரதமர், மாயாவதி வியாழன், அகிலேஷ் வெள்ளி, ஸ்டாலின் சனிக்கிழமை பிரதமராக இருப்பார்கள்” என சொன்னதை நன்கு கவனிக்க வேண்டும். ஆக அமீத்ஷாவே எதிர்கட்சிகள் வெற்றி பெற்றால்..... என்ற நிலைக்கு வந்து விட்டார் என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
பாஜகவில் அத்வானி மோடிக்கு முதல் எதிரியாக இருந்து வரும் நிலை என்பது நன்கு வளர்ந்து நிதின்கட்கரி, அருண்ஜேட்லி, யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா என அபாரமாக எதிரிகள் எண்ணிக்கை கூடி வருகின்றது மோடிக்கு என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.<br />
<br />
அதே போல அமீத்ஷா பேசுவது போலவே தமிழக பாஜக தலைவர்களும் ராகுலுக்கு ஆளத்தெரியாது என்று தான் பேசி வருகின்றனர். மோடி பிரதமர் என்னும் பேச்சு அவர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இப்போது ராகுல் ஆளத்தெரியாது, ஸ்டாலின் பிரதமர் ஆவாரா? அகிலேஷ் ஆவாரா, நாயுடு ஆவாரா என்னும் நிலைக்கு அவர்கள் மனோநிலை வந்து விட்டது. இதல்லாம் ஏன்? மோடி எதிர்ப்பு அலை வீச ஆரம்பித்த அறிகுறிகள் தான் இவைகள்!<br />
<br />
இனி எதிர்கட்சிகள் செய்ய வேண்டியவைகள், அந்த அலையை கடுமையாக்க வேண்டும். ஊடகங்களை மோடியின் பிடியில் இருந்து விடுவித்து வெளியே கொண்டு வர வேண்டும். கூட்டணி பங்கீடுகளை உரசல் இல்லாமல் முடிக்க வேண்டும். மிக முக்கியமாக வேட்பாளர் தேர்வுகள் அருமையாக செய்ய வேண்டும். அதிகாரிகளிடம் லாபி செய்ய வேண்டும். முதலில் அரசு அதிகாரிகளிடம் “நாங்கள் தான் ஆட்சிக்கு வரப்போகின்றோம். பாஜக ஆட்சிக்கு வ்ர இயலாது” என்பதை லாபி செய்து அவர்களை வழிக்கு கொண்டு வர வேண்டும். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் மோடி எதிர்ப்பு அலை இன்னும் வேகமாக வீச ஆரம்பித்ததும் அதை விசிறி விட வேண்டும்.<br />
<br />
இதல்லாம் நடந்தால் நிச்சயம் மோடி வீட்டுக்கு போவார். பாஜக ஆட்சி இழக்கும்!<br />
<br />
ஆக நான் சொன்ன நான்கு அலைகளில் இப்போதைக்கு இருக்கும் ஒரு அலை “மோடி எதிர்ப்பு அலை” தான். பண அலை வீசுமா வீசாதா என்பதை இப்போதைக்கு சொல்ல இயலாது. அதை தேர்தல் முதல் நாள் தான் சொல்ல முடியும். அடுத்த அலையான அனுதாப அலை இப்போதைக்கு யாருக்கும் இல்லை. ஆனால் மோடி அதிகமாக பிரச்சாரம் செய்யாமல் மிகுந்த பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இதே போல வித வித குல்லாய்கள் அணிந்து கொண்டு முன்னாள் பிரதமர் டெல்லி வீதிகளில் சுதந்திர தின விழா, குடியரசு விழா என்றும் வெளிநாட்டு தலைவர்கள் டெல்லி வரும் போது முன்னாள் பிரதமர் என்னும் நிலையில் இவரையும் வந்து பார்ப்பார்கள் என்னும் அந்தஸ்துடன் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழலாம். காந்தியை கொன்ற நாடு இது! ஜாக்கிரதை! இது ஒரு எச்சரிக்கை மணி மட்டுமே!<br />
<br />
தேர்தல் ஜுரம் ஆரம்பித்து விட்டது. அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்கின்றது என்பதை அந்தந்த சூழலை கவனித்து பகிர்ந்து கொள்வோம்! ஆனால் இப்போதைக்கு இது தான் நிலைமை! அருமையான ஆட்சி அமையட்டும் இந்தியாவுக்கு! இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் என் வாழ்த்துக்கள்!<br />
<br />
<span style="font-size: large;"><b style="background-color: magenta;">- நன்றி! வணக்கம்!</b></span><br />
<span style="font-size: large;"><b style="background-color: magenta;">அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்</b></span><br />
<div>
<br /></div>
அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-25151802339035047082018-04-25T02:44:00.001+05:302018-04-25T02:52:31.291+05:30 “மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGoBEZNu8AN4EZKFjLn5JeGADTxsGe9pIr9dJafblE0vPmbVZB0nfGgkMAZMtODy9b2zaesEAVwfY0HZcoaJlYgIKUjPses6F7CcShMS9-4vSYTWRGGHNxdmwMYHhsdUQBOF0sSgg6jRM/s1600/18814283_2009249049296177_6512080089209187112_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="640" data-original-width="960" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGoBEZNu8AN4EZKFjLn5JeGADTxsGe9pIr9dJafblE0vPmbVZB0nfGgkMAZMtODy9b2zaesEAVwfY0HZcoaJlYgIKUjPses6F7CcShMS9-4vSYTWRGGHNxdmwMYHhsdUQBOF0sSgg6jRM/s640/18814283_2009249049296177_6512080089209187112_n.jpg" width="640" /></a></div>
<br />
<span style="color: red; font-size: large;"><b>“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு!</b></span><br />
<br />
துக்ளக் இதழ் வி.வி.ஐ.பி நேர்காணல் என்னும் விதமாக தமிழகத்தின் நம் முன்னாள் பள்ளிக்கல்வி, நூலக மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த திரு. தங்கம் தென்னரசு அவர்களிடம் துக்ளர் வாசகர்கள் 5 பேரைக்கொண்டு ஒரு நேர்காணல் நடத்தி கடந்த இரண்டு இதழ்களாக வெளியிட்டது. அந்த இரண்டு இதழ்களின் ஒட்டு மொத்த தொகுப்பே இந்த பதிவு! கேட்கப்பட்ட அருமையான, சிக்கலான(துக்ளக் வாசகர்கள் அல்லவா... அதனால் சிக்கல்) கேள்விகளுக்கு கூட நம் முன்னாள் அமைச்சரும் இப்போதைய திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான <span style="color: blue; font-size: large;">திரு தங்கம் தென்னரசு B.E., M.L.A</span> அவர்கள் அனாயசமாக கேள்விகளை எதிர்கொண்ட விதமும், பதில் சொன்ன விதமும் எக்ஸலண்ட்! இதோ அதை படியுங்கள்! - இப்படிக்கு <b><span style="color: magenta;">அபிஅப்பா என்கிற தொல்காப்பியன். </span></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8oCbaO92e5UxVE8tOCkk8aCjtLGHUyrWKgP_cnV2W1MgsxttkResxZc64zb5MXoGWZL7ms-Y7a-xh10wFMUAxNBr7uNg0DG8GQ0nenWQhWVH-afvF7SoYZ-_h-hez8t1ZekxTdN-_Q0Y/s1600/30698074_2169610579926689_712233979853096938_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="686" data-original-width="686" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8oCbaO92e5UxVE8tOCkk8aCjtLGHUyrWKgP_cnV2W1MgsxttkResxZc64zb5MXoGWZL7ms-Y7a-xh10wFMUAxNBr7uNg0DG8GQ0nenWQhWVH-afvF7SoYZ-_h-hez8t1ZekxTdN-_Q0Y/s640/30698074_2169610579926689_712233979853096938_n.jpg" width="640" /></a></div>
<br />
<br />
******************** இனி துக்ளக் இதழை படிப்போம்! (நன்றி: துக்ளக்)<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqHvWYPatoaHRaRZbZSobBDVfS2n0NqK3s1iIZ33sbTiMEwVv4UD9WP3WRS_ER3qDSypQAVLsxil9JGshmB7vS4VJvClItDyfwY8XM8u01Wjh8rKycXAuGshrRvLrX1spdWzY_KX3tAlI/s1600/1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="896" data-original-width="694" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqHvWYPatoaHRaRZbZSobBDVfS2n0NqK3s1iIZ33sbTiMEwVv4UD9WP3WRS_ER3qDSypQAVLsxil9JGshmB7vS4VJvClItDyfwY8XM8u01Wjh8rKycXAuGshrRvLrX1spdWzY_KX3tAlI/s320/1.jpg" width="247" /></a></div>
<br />
வி.வி.ஐ.பி மீட் 14: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர், தற்போது திருச்சுழி தொகுதியின் எம்.எல்.ஏ ஆகவும் கட்சியில் மாவட்ட கழக செயலாளர் ஆகவும் இருந்து வருகின்றார். அவரை துக்ளக் வாசகர்கள் 5 பேர் சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். அந்த கலந்துரையாடலின் முக்கிய பகுதிகள் இங்கே! (இந்த வார வாசகர்கள் : டி. கீதா கிருஷ்ணன், தனியார் துறை, சென்னை, பத்மாரவி, இல்லத்தரசி, சென்னை, ரமேஷ் சீனிவாசன், மனித வள ஆலோசகர், சென்னை, பா.சுதா, பேராசிரியை, சேலம், பி. சுவாமிநாதன், தனியார் துறை, சென்னை)<br />
<br />
<br />
<br />
<span style="color: blue;"><b>சுவாமிநாதன்</b>: </span> <span style="color: red;"><b>அரசியலுக்கு நீங்கள் வந்தது எப்படி? </b></span><br />
<br />
<span style="color: blue;"><b>தங்கம் தென்னரசு:</b></span><span style="color: white;"> </span><span style="color: red;">நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. நான் எந்த அரசியல் ஆர்வமும் இல்லாமல் மெக்கானிக்கல் இஞினியரிங் படித்து விட்டு ஸ்பிக் உர நிறுவனத்தில் ஏறத்தாழ பத்து வருடங்கள் பொறியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் 1996ல் தலைவர் கலைஞர் அவர்கள் அமைச்சரவையில் என்னுடைய தந்தை தங்கபாண்டியன் அமைச்சராக இருந்தார். தென் மாவட்டங்களில் ஏற்ப்பட்ட ஜாதிக்கலவரத்தை தீர்க்க என் தந்தை சென்றார். அந்த கலவரத்தின் போது ஏற்ப்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்ப்பட்டு ராஜபாளையத்தில் இறந்து விட்டார். அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தலைவர் கலைஞர் என்னை வேட்பாளராக அறிவித்தார். 1998ம் ஆண்டு அருப்புக்கோட்டையில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதன் முதலாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். 1977ல் இந்த தொகுதியில் தான் எம்.ஜி ஆர் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வர் ஆனார். அருப்புக்கோட்டைக்கு அருகில் இருக்கும் ஊர் திருச்சுழி. ரமண மகரிஷி பிறந்த ஊர் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அருப்புக்கோட்டை தொகுதியை பிரித்து திருச்சுழி என்னும் தொகுதி உருவாக்கப்பட்டது. 2001 தேர்தலில் அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். 2006ல் மீண்டும் வெற்றி பெற்றேன். அப்போது கலைஞரின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்பொருள் துறை அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றேன். </span><br />
<br />
<b><span style="color: blue;">பத்மாரவி:</span></b> <b><span style="color: red;">தற்போதைய ஆட்சி முறையில் நீட் தேர்வு கொண்டு வந்ததை பற்றி உங்கள் கருத்து என்ன? </span></b><br />
<br />
தங்கம் தென்னரசு: நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. மேலெழுந்த வாரியாக எல்லோருக்கும் ஒரே தேர்வு, இதில் என்ன தவறு என்று கேட்கின்றார்கள். ஆனால் நம்முடைய அரசு பள்ளியில் படித்து விட்டு வரும் மாணவர்களின் கல்வி முறையும், ஐ பி எஸ் ஈ கல்வி முறையும் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். இப்படி இரு வேறு பாடத்திட்டத்தின் கீழ் படிக்க்கும் மாணவர்களை திடீரென்று ஒரே தேர்வின் கீழ் கொண்டு வருவது முறையாகவும் சரியாகவும் இருக்காது.<br />
<br />
<b><span style="color: blue;">பத்மாரவி:</span> <span style="color: red;">மற்ற துறைகளுக்கும் இப்படிப்பட்ட நுழைவு தேர்வு முறை இருக்கின்றதே. மருத்துவம் என்பது மக்களின் உடல் மற்றும் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தேர்வு முறை கடினமாக இருப்பது சரிதானே? </span></b><br />
<br />
<b><span style="color: blue;">தங்கம்தென்னரசு</span></b> : நீங்களே உடல்நிலை சார்ந்த விஷயம் என்று கூறுகின்றீர்கள். இந்த நீட் தேர்வு முறையால் ஆரம்பத்தில் இருந்தே சி பி எஸ் ஈ கல்வி முறையில் படித்த 15 சதவிகித வெளி மாநில மாணவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெறுகின்றார்கள். வரும் காலங்களில் இந்த மாநிலத்திலேயே அரசு மருத்துவ மணையிலேயே வேலையும் செய்வார்கள். எதிர்காலத்தில் இவர்களிடம் மருத்துவம் பார்க்கும் கிராமப்புற நோயாளிகள் மொழி தெரியாமல் எப்படி அவதிப்படுவார்கள் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மருத்துவராலும் நோயாளியின் உடல்நிலை பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ள முடியாது. இப்படி அடிப்படையில் மொழிப்பிரச்சனை என்பதே பெரிதாக இருக்கும். மீதி 85 சதவிகித தமிழக மாணவர்களில் எவ்வளவு கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.<br />
<br />
நீட் தேர்வில் வெற்றி பெற தனியார் கோச்சிங் வகுப்புகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளுக்கு குறைந்த பட்சம் 2 முதல் 3 லட்சம் வரை கேட்கின்றார்கள். இதில் பணம் செலுத்தி படிக்கக்கூடிய பொருளாதார நிலையில் இருப்பவர்கள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. நம்முடைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசே நீட் பயிற்சி கொடுக்கும் என சொல்லி வருகின்றார். ஆனால் இன்று வரையிலும் எதுவுமே சரியாக இயங்கவில்லை. இப்போது +2 பொதுத்தேர்வும் நடந்து வருகின்றது. இதற்கு பிறகு பயிற்சி வகுப்புகள் தொடங்கினாலும் ஏப்ரல் மாதம் மட்டுமே அந்த மாணவர்கள் வகுப்புகளுக்கு வர முடியும். ஒரே மாத பயிற்சி எப்படி நீட் தேர்வை எதிர்கொள்ள போதுமானதாக இருக்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பயிற்சி கொடுப்பதற்கு ஆசிரியர்கள் உரிய வகையில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றார்களா? இந்த கேள்விகள் எதற்குமே இன்று வரை பதில் இல்லை. வெறும் அறிவிப்புகள் மட்டுமே போதுமா? பொதுவாக சம அளவு பலம் உள்ளவர்களை போட்டியில் மோதவிடுவது தானே நியாயம்? + 2 கேள்விகளை ஆறாம் வகுப்பு மாணவனிடம கேட்டு அவனை முன்னேற்றுகிறேன் என சொன்னால் அது எப்படி சரியாக இருக்கும்?<br />
<br />
<b><span style="color: blue;">ரமேஷ்:</span> <span style="color: red;">சமச்சீர் கல்வி முறை வந்த பிறகு நிறைய மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுகின்றார்கள். ஆனால் நீட் தேர்வு எழுதும் போது கடினமாக இருக்கின்றது என்று சொல்லும் போது நமது கல்வித்திட்டத்தின் தரம் குறைந்து இருப்பதை காட்டுகின்றதா? </span></b><br />
<br />
<b><span style="color: blue;">தங்கம் தென்னரசு: </span></b>உச்சநீதிமன்றமே சமச்சீர் கல்வித்திட்டத்தில் எந்த இடத்திலும் தரம் குறையவில்லை என்று என்.சி.ஆர்.டி குழுவினால் ஆய்வு செய்து தீர்ப்பளித்துள்ளது. முன்பு பாடத்திட்டத்தில் இருக்கும் பதிலை மனப்பாடம் செய்து ஒப்பித்தால் மதிப்பெண் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் சமச்சீர் கல்வி முறையில் கேட்கப்படும் கேள்விகள் இருக்கும் பாடத்திட்டத்தில் அந்த மாணவன் என்ன புரிந்து கொண்டான் என்பதை மதிப்பீடு செய்வதாய் இருக்கின்றது. பாடங்களை முழுவ்துமாக சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே மாணவனால் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும். இது தான் சமச்சீர் கல்வி முறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய மாற்றம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டம் தவறானது என்று கருத்து பரப்பப்பட்டதோடு அதன் உண்மையான நோக்கம் நிறைவேற விடாமல் தடுக்கப்பட்டது என்பதே உண்மை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7kv3vcgAG2S1X8BIm4E5UsAYmxhEcxQ9DOVY69ALTeam96XlqQ1_PJ93wPPf4rzSy2-euq56CW0BLGrZWNppj0YhQ0ZM-8VF606f7-8r8w62aX3-q8bKGKjgMkT6GqJL3cebkT5t4zTw/s1600/2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="896" data-original-width="659" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7kv3vcgAG2S1X8BIm4E5UsAYmxhEcxQ9DOVY69ALTeam96XlqQ1_PJ93wPPf4rzSy2-euq56CW0BLGrZWNppj0YhQ0ZM-8VF606f7-8r8w62aX3-q8bKGKjgMkT6GqJL3cebkT5t4zTw/s320/2.jpg" width="235" /></a></div>
<br />
<b><span style="color: blue;">சுதா:</span> <span style="color: red;">கிராமப்புரங்களில் பெரும்பாலும் அரசு பள்ளிகள் மட்டுமே இருக்கும். அந்த பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை அணைவரும் தேர்ச்சி அடைகின்றார்கள். இப்படி 8ம் வகுப்பு வரை அந்த மாணவனின் உண்மையான தகுதியை மதிப்பீடு செய்யாமல் இருந்தால் அந்த மாணவனால் +2 முடிந்தவுடன் எப்படி மற்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்? </span></b><br />
<br />
<b><span style="color: blue;">தங்கம் தென்னரசு:</span></b> இந்த பிரச்சனையை தீர்க்கத்தான், தொடக்கக்கல்வியில் செயல்வழி கல்வி முறை (Activity based learning) என்ர ஒன்றை கொண்டு வந்தோம். இந்த செயல்வழி கல்வி முறையில் அந்தந்த வயதிற்கான திறனை மாணவன் பெற்றிருந்தால் மட்டுமே மாணவன் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும். மேலும் குறைந்த மாணவர்களை அந்த வகுப்பு ஆசிரியர்கள் கண்டுபிடித்து அவர்களுடைய திறனை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்காக பிரதமர் விருதே நம் மாநிலத்துக்கு கிடைத்தது. இதனுடையை தொடர்ச்சியாக 6லிருந்து 8ம் வகுப்பு வரை (Active learning methodology) என்ற அந்த மாணவனின் திறனை கண்டறிந்து ஆசிரியர்கள் அவனை தயார் படுத்த வேண்டும் என்று கொண்டு வந்தோம். இந்த கல்வி முறையில் ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியது. வெறும் தேர்வுகள் வைத்து மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வதை விட இது போன்ற நடைமுறை செயல் தேர்வுகள் மூலம் அவர்களின் திறனை எடைபோட வேண்டும். 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் மட்டுமே ஒரு மாணவன் திறமையானவன் என்றும் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தால் அந்த மாணவனுக்கு திறன் இல்லை என்று சொல்ல வேண்டுமா? மூன்றில் ஒரு பங்காவது மதிப்பெண் பெற்றால் சிறிதளவுக்கு புரிதல் இருக்கின்றது என்ற எண்ணத்தில் தான் 35 மதிப்பெண் பெற்றால் வெற்றி என்று வைத்துள்ளோம். இந்த புதிய கல்வித்திட்டத்தில் ஆசிரியர்கள், கொஞ்சம் சிரமப்படுவதாக இருந்தால் கூட மக்களின் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை அமல் படுத்தினோம். நிறைய அரசுப்பள்ளிகள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட ஆர்வத்தினால் நல்ல முறையில் சாதனை புரிந்து வருகின்றனர்.<br />
<br />
<b><span style="color: blue;">ரமேஷ்:</span> <span style="color: red;">சென்னையை பொறுத்தவரை அண்ணா நூற்றாண்டு நூலகம் மிகப்பெரிய அடையாளமாக மாறிவிட்டது. இந்த நூலகம் அமைந்ததில் உங்கள் பங்கு மிகப்பெரியது. இந்த நூலகம் அமைந்தது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் ஏதாவது இருக்கின்றதா?</span></b><br />
<br />
<b><span style="color: blue;">தங்கம் தென்னரசு:</span></b> மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த நூலகத்தை கழக ஆட்சிக்காலத்தில் அமைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். இன்றும் 1000 நபர்களுக்கு குறையாமல் அங்கு வருகின்றார்கள். பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், குழந்தைகள் என்று அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் இடமாக இந்த நூலகம் அமைந்தது எனக்கும் மகிழ்ச்சி தான். நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ராஜேந்திர சோழன் குறித்து ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் சென்றேன். அந்த விழா சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்ததால் அந்த நூலகத்தை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதைப்பார்த்து அசந்து போனேன். அது போல உலகத்தரத்தில் ஒரு நூலகம் சென்னையில் அமைந்திட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் கலைஞரிடத்தில் தெரிவித்து இருந்தார். இதனை கருத்தில் கொண்ட தலைவர் கலைஞரின் எண்ணத்தில் உருப்பெற்றதே அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். பொதுவாகவே நம்முடைய நூலகத்தில் நம் நாட்டை பற்றிய நூல்களும் பெரும்பாலும் தமிழ் நூல்கள் மட்டும் இருக்கும் என்ற கருத்து பரவலாக எல்லோரிடத்திலும் இருந்தது. இதை மாற்றி உலகத்தில் இருக்கும் அனைத்து நூல்களையும் புத்தகமாகவோ, இனையத்தில் மூலமோ பெற முடியும் என்ற நிலையை இந்த நூலகத்தில் உருவாக்க விரும்பினோம். சிறு குழந்தைகள், ஆராய்ச்சி மாணவர்கள், ஐ.ஏ.எஸ், எம்.பி.ஏ, சட்டப்படிப்பு என எல்லா வகையான மாணவர்களும் இதைப்பயன் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பலதரப்பட்ட புத்தகங்கள் வாங்கினோம். கிட்டத்தட்ட 5 லட்சம் புத்தகங்கள் வரை இந்த நூலகத்துக்காக வாங்கினோம். எல்லா மாநில மக்களுக்கான புத்தகங்களும் இங்கு இருக்கும். இணையத்தின் மூலமாக உலகத்தில் உள்ள அனைத்து நூலகத்தின் நூல்களையும் இங்கிருந்தே படிக்க முடியும். கால மாற்றத்திற்கு ஏற்ப அச்சு புத்தகங்களும் இருக்கும். கணினியில் படிக்கக்கூடிய புத்தகங்களும் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தைகளுக்கு நூலகங்களுக்கு செல்லும் பழக்கத்தினையும், புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தையும் கொண்டு வர வேண்டும் என்று குழந்தைகளுக்கென்றே தனியான பகுதியும் உருவாக்கினோம். குழந்தைகளை ஈர்த்து விட்டால் அவர்களது பெற்றோரும் இந்த நூலகத்தை பயன் படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பது எதார்த்தமான உண்மை. பொதுவாக நம்முடைய வீடுகளில் படிப்பதற்கென்று தனியான இடம் இருக்காது. தனிமையில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அவர்களுடைய புத்தகத்தை இங்கு கொண்டு வந்தும் படிக்க முடியும். பார்வையற்றோர் படிப்பதற்கு தகுந்த ப்ரெய்லி புத்தகங்களும் இங்கு இருக்கின்றன. மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்தும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் புத்தகங்களை படித்துக்கொள்ளலாம் என்ற நவீன தொழில்நுட்பம் இங்கு இருந்தாலும் நம்முடைய பழமையை போற்றும் விதத்தில் பழங்கால சுவடிகள், அரிய தமிழ் நூல்கள், பாரம்பரிய மூலிகை குறித்த நூல்களும் இங்கு கிடைக்கின்றன. இப்படி பழமையும், புதுமையும் கலந்த நூலகமாக இதை உருவாக்கினோம். நூலகம் என்பது தினமும் மக்கள் பயன்படுத்தும் இடமாகவும் இருக்க வேண்டும். எனவே நூல் வெளியீட்டு விழா போன்றவற்றை நடத்திக் கொள்ள பெரிய அரங்கம் ஒன்றையும் உருவாக்கினோம். இதனால் நூலகத்துக்கு வரும் வழக்கம் இல்லாதவர்கள்கூட, இந்த விழாக்களுக்கு வரும் சமயங்களில் நூலகத்தை பார்க்கும் வாய்ப்பை பெறுவார்கள். புத்தகங்கள், மற்றும் அறிவார்ந்த விழாக்கள் நடப்பதற்காக மட்டுமே இந்த அரங்கங்கள் உருவாக்கப்பட்டன.<br />
<br />
பிற்காலத்தில் அரசியல் காரணங்களால், இங்கு திருமண வரவேற்பு போன்றவையும் நடந்தது வேதனையானது. இப்படி உயர்ந்த நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலகம், அர்சியல் காரணங்களால் மேம்படுத்தப்படாமல் இருந்தது. நீதிமன்றத்தின் தலையீட்டால் மட்டுமே இந்த நூலகம் மருத்துவமனையாக மாறாமல் இருக்கின்றது. அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் (Oriental Manuscripts Library) என்ற சுவடிகளுக்கான தனி நூலகம், சென்னை பல்கலை கழக வளாகத்தில் இருந்தது. இந்த நூலகத்தில் திருக்குறள், புறநாநூறு, சிலப்பதிகாரம் போன்றவற்றின் பழங்கால ஓலைச்சுவடிகள் இருக்கும். நான் அங்கு சென்று பார்த்த போது மோசமான நிலையில் இந்த அரியவகைச் சுவடிகளைப் பராமரித்து வைக்க சரியான இட வசதியில்லை. இவற்றையெல்லாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு கொண்டு வந்து பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினோம். அதற்கான அரசாணையும் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் பிறப்பித்தோம். ஆனால் நான் ஏற்கனவே கூறியது போல அரசியல் காரணங்களால் அந்த சுவடிகள் பல ஆண்டுகள் அங்கேயே இருந்து விட்டு இப்போது தான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு இடம் பெயர்ந்துள்ளன.<br />
<br />
<b><span style="color: blue;">கீதாகிருஷ்ணன்:</span> <span style="color: red;">1998ல் முதன் முதலில் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். உங்களுடைய முதல் சட்டமன்ற பேச்சு எதைப்பற்றி இருந்தது?</span></b><br />
<br />
<b><span style="color: blue;">தங்கம் தென்னரசு: </span></b>முதன் முதலில் சட்டமன்றத்தில் பேசும் எல்லோருக்கும் இருக்கும் பயமும், தயக்கமும் எனக்கும் இருந்தது. எனினும் தலைவர் கலைஞர் அவர்களும், செயல்தலைவர் தளபதி அவர்களும் அழைத்து பாராட்டும் வகையில் என்னுடைய கன்னிப்பேச்சு இயற்கையாக அமைந்தது. அன்றைய பேச்சில் முக்கியமாக நான் வைத்த கோரிக்கை, என்னுடைய தொகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட காரியாபட்டி பகுதிக்கு தனி தாலுக்கா வேண்டும் என்பது தான். அது நிறைவேற்றப்பட்டது. அந்த மூன்றாண்டு காலத்தில் பள்ளிகள், சாலைகள், குடிநீர் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளைச் சட்டமன்ர உறுப்பினராக நிறைவேற்றினேன்.<br />
<br />
<b><span style="color: blue;">சுவாமிநாதன்:</span> <span style="color: red;">கடந்த தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்தே நின்று ஜெயலலிதா வெற்றி பெற்றார். இன்றைய நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை, திமுகவை தவிர வேறெந்த கட்சியும் பலத்துடன் இல்லை. எனவே யாருடைய கூட்டணியும் இல்லாமல் திமுக தனித்தே வெற்றி பெரும் என்பது என் கணிப்பு. நிலைமை இவ்வாறு இருக்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, போன்ற உதிரிக்கட்சிகளுடன் திமுகவுக்கு கூட்டணி தேவையா? கடந்த தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தமைக்கு கூட கூட்டணிக்கட்சிகளே காரணம் என்பதை திமுக இன்னும் உணரவில்லையா?</span></b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgNBe4fnL-a0Q9oAslGVAsmoG02S4O5VamZ_nxJdTxWY7zprRnzqIZpHd48eF46Aww7CaQEa1Gr-ke-3mY-cY48MbWMfcDN7E7QaolIY40CEGbPDuN6RD9WOCfTz9M7Qitf1H-G8wo1Dw/s1600/3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="896" data-original-width="679" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgNBe4fnL-a0Q9oAslGVAsmoG02S4O5VamZ_nxJdTxWY7zprRnzqIZpHd48eF46Aww7CaQEa1Gr-ke-3mY-cY48MbWMfcDN7E7QaolIY40CEGbPDuN6RD9WOCfTz9M7Qitf1H-G8wo1Dw/s320/3.jpg" width="242" /></a></div>
<br />
<b><span style="color: blue;">தங்கம் தென்னரசு: </span></b>தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சி என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து 89 இடங்களில் வெற்றி பெற்றோம். 2000 ஓட்டிற்கும் குறைவான வித்யாசத்தில் தோற்ற தொகுதிகள் 30க்கும் மேலாக இருக்கும். எனவே திமுகவின் வலிமை என்பது குறையவில்லை. ஆனால் ஒரு போர்க்களத்துக்கு போகும் அரசன் தன் வழி, தன் எதிரி வழி, தன் துணை வழி, என்று எல்லாவற்றையும் பார்த்து தான் போர் வியூகம் வகுக்க வேண்டும். இதையேதான் அரசியலிலும் செய்ய வேண்டும். 1967ல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை இருந்தது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டன. தமிழ்நாடு மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டது. தமிழ் மொழிக்கான அங்கீகாரம் இல்லாமல் பிற மொழி ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது. இந்த காரணங்களினால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.<br />
<br />
1967ல் தனித்து நின்று தேர்தலை சந்தித்தாலே வெற்றி பெறும் நிலையில் திமுக இருந்தது. ஆனாலும் அண்ணா தனக்கு நேரெதிரான ராஜாஜியை கூட்டணியில் வைத்துக் கொண்டார். பல்வேறு கட்சிகளை ஓரணியில் திரட்டி , ஒரு வலுவான கூட்டணி அமைத்து வாக்குகள் சிதறாமல் பார்த்துக் கொண்டார். எனவே கூட்டணி என்பது தேர்தல் களத்தில் அவசியமான ஒன்று. ஜெயலலிதா கூட்டணி இல்லாமல் கடந்த தேர்தலை சந்தித்தார் என்று கூறுகின்றீர்கள். அவரும் கூட முதலில் கூட்டணிக்கு முயற்சி செய்தார். மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் சில கட்சிகள் சேர்ந்து தேர்தலை சந்திக்க முடிவெடுத்த நிலையில் தான், ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறும் என்பதை கணித்து கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தார். மக்கள் நலக்கூட்டணியால் திமுகவுக்கு விழ வேண்டிய வாக்குகள் அந்த கூட்டணிக்கு சென்று, கடந்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக இழந்தது. எனவே கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவதும், கூட்டணி அமைத்தும் வெற்றி பெறாமல் போவதும் அன்றைய அரசியல் சூழ்நிலையை பொறுத்த விஷயம். அத்தகைய ராஜதந்திரமான நடவடிக்கைகளை மிகச்சரியான வகையில் எங்கள் செயல் தலைவர் தளபதி அவர்கள் முன்னெடுப்பார்.<br />
<br />
<br />
<b><span style="color: blue;">சுவாமிநாதன் : </span> <span style="color: red;">திமுக என்பது எம்.ஜி.ஆர் போன்ற பெரிய தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்த கட்சி. ரஜினி, கமல் போன்றவர்கள் வருகையால் உங்களுக்கு பாதிப்பு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? </span></b><br />
<br />
<span style="color: blue;"><b>தங்கம் தென்னரசு:</b></span> நீங்களே சொன்னது போல் திமுக 1949ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கம். இந்த எழுபது வருட காலத்தில் திமுக சந்தித்த வெற்றிகள், தோல்விகள், சோதனைகள் ஏராளம். எமர்ஜென்சி போன்ற அடக்குமுறைகளையும் பார்த்த கட்சி. எம்.ஜி.ஆரை எதிர்த்து 13 வருடங்கள் ஆட்சி பொறுப்பில் இல்லாமல் இருந்து, மீண்டும் ஆட்சியை பிடித்த கட்சி. கலைஞருடைய அரசியல் நேரு காலத்தில் தொடங்கியது. இன்றைய தலைவர்களும் அவரை சந்திக்கும் அளவில் செல்வாக்கான தலைவராக இன்றும் கலைஞர் இருக்கின்றார். பாஜக, காங்கிரஸ், என்று இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான கட்சிகள் ஒரு காலத்தில் திமுகவை எதிர்த்தும், ஆதரித்தும் அரசியல் செய்தவை தான். ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்து விடலாம். புதிதாக கட்சி ஆரம்பிக்கும் எல்லோருடைய இலக்கும் திமுகவாகக்கூட இருக்கலாம். “மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம்” என்பது போல மிகப்பெரிய கட்சியான திமுகவை எதிர்ப்பது புதிய கட்சிகளுக்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். இதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.<br />
<br />
<b><span style="color: blue;">பத்மாரவி: </span><span style="color: red;">தமிழகத்தில் இருப்பதிலேயே பலமான கட்சியாக திமுக இருக்கின்றது. ஆனாலும் ஒரு சுயேச்சை வேட்பாளர் இடைத்தேர்தலில் உங்களை எதிர்த்து வெற்றிபெற முடிகின்றது. கமல் கட்சி, ரஜினி கட்சி என்று புதுப்புது கட்சிகள் வருகின்றன. அதிமுக பிளவு பட்டுள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் தேர்தலில் உங்கள் பிரதான எதிரி யார்? </span></b><br />
<br />
<span style="color: blue;"><b>தங்கம் தென்னரசு: </b></span>கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதாவே சவால் விட்டல் நிலையில் தான் இதுவ்ரை இல்லாத வகையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களாக 89 பேர் அவருக்கு எதிரில் வந்து அமர்ந்தோம். அது தளபதியாரின் சாதனை. தமிழக சட்டமன்ற வரலாற்றில் இவ்வளவு எண்ணிக்கையில் எதிர்க்கட்சி அமைந்த வரலாறு இல்லை. எங்களைப் பொறுத்த வரை ஆளும் கட்சி தான் எங்களுடைய அரசியல் எதிரி. எதிர்கட்சியாக இருந்து, ஆளும் கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்வோம். ஆளும் கட்சி தான் தமிழகத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பானவர்கள். அவர்களின் நிர்வாகத்தில் தவறு இருந்தால் அதை சுட்டிக்காட்டி அதை கண்டிக்கும் இடத்தில் நாங்கள் இருக்கின்றோம். சட்டமன்றத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து மட்டுமே பேசமுடியும்.அங்கு சென்று கமல், ரஜினி குறித்து பேசுவது சரியாக இருக்காது. அரசியலுக்கு பலர் வரலாம். தேர்தல் காலத்தில் யாருடைய கூட்டணியில் யார் இருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்து, எங்களுடைய எதிர்ப்பு நிலை இருக்கும். எனவே இன்றைய நிலையில் எங்களுடைய எதிர்ப்பு என்பது சட்டமன்றத்துக்கு உள்ளும், வெளியிலும் ஆளும் கட்சியை எதிர்ப்பது மட்டுமே பிரதானமாக இருக்கும்.<br />
<br />
<b><span style="color: blue;">சுதா: </span> <span style="color: red;">புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் உங்கள் தலைவர் கலைஞரை வந்து பார்த்து ஆசி பெற்று செல்வது, உங்களுக்கு பெருமையாக இருக்கின்றதா? எரிச்சலாக இருக்கின்றதா? </span></b><br />
<br />
<b><span style="color: red;">தங்கம் தென்னரசு: </span></b>புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் என்று மட்டும் இல்லை. கடந்த காலங்களில் சித்தாந்த ரீதியாக நேரெதிரான கருத்து கொண்ட ராமகோபாலன் கூட, கலைஞரை சந்தித்து விட்டுச் சென்றிருக்கின்றார். சமீபத்தில் பிரதமர் மோடி கலைஞரை சந்தித்ததும், அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதை காரணமாகத்தான். இன்றைக்கும் பாஜகவின் கொள்கைகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனாலும் தலைவர் கலைஞர் அவர்களை தன்னுடன் வந்து பிரதமர் இல்லத்தில் தங்குமாறு ஒரு பிரதமர் அழைக்கின்றார் என்றால், இது அரசியலை தாண்டிய மரியாதை, பாசம் அல்லவா? இது போன்ற மரியாதை மற்றும் நட்புணர்வு, புதிதாக கட்சி ஆரம்பித்த நண்பர்களுக்கும் கலைஞருடன் இருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. எனவே மரியாதை நிமித்தமான இந்த சந்திப்புகளினால் நாங்கள் பெருமைதான் அடைவோமே தவிர, இதில் எரிச்சல் அடைய எதுவுமே இல்லை. அரசியல் களத்தில் யாரையும் சந்திக்கும் திறன் திமுகவுக்கு உண்டு.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC0MVAXiHuf5xvw5prWwh6m8cXfUHQhu0tgotktib3Nt9Idkst8TMab6_FnA7bC-wfG49ujYfYyIv8-_UrpzFHeD6o_9GVMPwktS5wp6m9JCQm5yOWMM8JBVj84igCIn9GdZeBzFMNK7U/s1600/4.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="896" data-original-width="650" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC0MVAXiHuf5xvw5prWwh6m8cXfUHQhu0tgotktib3Nt9Idkst8TMab6_FnA7bC-wfG49ujYfYyIv8-_UrpzFHeD6o_9GVMPwktS5wp6m9JCQm5yOWMM8JBVj84igCIn9GdZeBzFMNK7U/s320/4.jpg" width="232" /></a></div>
<br />
<b><span style="color: blue;">பத்மாரவி: </span><span style="color: red;">சமீபத்தில் போக்குவரத்து கழகங்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில் திமுகவின் தூண்டுதல் இருந்தது என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன? </span></b><br />
<br />
<span style="color: blue;"><b>தங்கம் தென்னரசு:</b></span> இதில் தூண்டுதல் எல்லாம் இல்லை. அவர்களுடைய உரிமையை அவர்கள் கேட்டார்கள். திமுகவின் தூண்டுதல் என்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் போராட வேண்டும்? மக்கள் மத்தியில் தவறான கருத்தை உருவாக்கச் சொல்லப்படும் குற்றச்சாட்டு இது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் பணி ஓய்வுக்கு பின்னர் கொடுக்க வேண்டிய ஓய்வூதிய நிதியைப் பல ஆண்டுகளாக கொடுக்கவில்லை. இதனால் எத்தனை குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது? திருமணம், மேல்படிப்பு போன்ற விஷயங்களை செய்ய முடியாமல் தவித்த குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனை? இவற்றை எல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு ஒரு எதிர்கட்சிக்கு உள்ளது. இதற்காக ஜனநாயக முறைப்படி ஒரு போராட்டத்தை திமுக முன்னெடுத்தால் அரசுக்கு எதிராக தூண்டி விடுகின்றோம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தில் ஆளும் கட்சியைத்தவிர அனைத்து கட்சிகளுமே பங்கெடுத்தன. என்றுமே மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திமுக முன் நிற்கும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL7_yi-0Xl5dFKhRep5C8EdLz5AwEU_4SgMbwx-nPOX0QyrvQzD0VmphVRG8tUp0YOUHe5bmcxUa10UuZiUreBYYUXItweiH9xvzSrNJ0WMinlboweu_3s7TRNu5VnKHi04dJFyMv4Zw0/s1600/27972091_2139691029585311_2649733729206731133_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="727" data-original-width="727" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL7_yi-0Xl5dFKhRep5C8EdLz5AwEU_4SgMbwx-nPOX0QyrvQzD0VmphVRG8tUp0YOUHe5bmcxUa10UuZiUreBYYUXItweiH9xvzSrNJ0WMinlboweu_3s7TRNu5VnKHi04dJFyMv4Zw0/s640/27972091_2139691029585311_2649733729206731133_n.jpg" width="640" /></a></div>
<br />
<b><span style="color: blue;">சுதா: </span><span style="color: red;">குலத்தொழில் கல்வியை கொண்டு வந்தால் என்ன தவறு? இன்று விவசாயம் செய்வதற்கு ஆட்கள் இல்லை. நவீன தொழில்நுட்ப வழிகளைக் கொண்டு எல்லா குலத்தொழிலையும் முன்னேற்றி, குலத்தொழில் கல்வியின் மூலம் எல்லாத் தொழில்களையும் நலிவுறாமல் காப்பாற்ற முடியுமே? </span></b><br />
<br />
<span style="color: blue;"><b>தங்கம் தென்னரசு: </b></span>குலக்கல்வித்திட்டம் என்பது ஆபத்தானது. இந்தக் குலத்தொழில் வேறுபாட்டை களையவே பல தலைவர்கள், பலகாலம் போராடினார்கள். திரும்பவும் அது போன்ற நிலைக்குச்செல்ல வேண்டும் என்ற நினைப்பே தவறானது. முடி திருத்தும் குலத்தில் பிறந்த மாணவன் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வருவதை, இந்த குலக்கல்வித்திட்டம் தடுக்கும். பல்வேறு தொழில்கள் அழியாமல் பாது காப்பதற்காக என்று காரணம் சொன்னாலும் கூட, குலக்கல்வி திட்டம் என்பது சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. கிட்டத்தட்ட இந்த கொள்கையின் வெளிப்பாடாகவே மத்திய அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கை இருக்கிறது. படிக்கும் மாணவர்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு தொழில் கல்வியைப் பயில வேண்டும் என்று கூறுகிறார்கள்.<br />
<br />
இந்த ஆபத்து எங்கு வரும் என்றால், எட்டாவது வரை ஒன்றாக படித்த மாணவர்கள், அதற்கு பிறகு குலக்கல்வி என்ற வகையில் பிரிக்கப்படுவார்கள். ஒரு மாணவனுக்கு தொழில் கல்வி தேவை என்பதில் எங்களுக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. அதை ஏன் எட்டாம் வகுப்பிலேயே கொண்டு வந்து, இந்த மாணவனுக்கு இது தான் வரும் என்று முத்திரை குத்துவது போல செய்ய வேண்டும்? எல்லா மாணவர்களும் கல்லூரிக்கு சென்று படிக்கட்டும். அதன் பின்னர் அவர்களுக்கு தொழிற்கல்வியை கொடுக்கலாமே? குலக்கல்வி திட்டத்தினால் மாணவனுடைய மேற்படிப்பு கனவு நிறைவேறாமல் போவதைத்தவிர, வேறு நன்மைகள் ஏற்பட வாய்ப்பில்லை. இந்த காரணத்தினால் தான் அன்றும், இன்றும், என்றும் நாங்கள் குலக்கல்வி என்ற முடிவை நாங்கள் எதிர்த்து வருகின்றோம்.<br />
<br />
அந்த காலத்தில் மாணவர்களின் பாடப்புத்தகத்திலேயே “ன்” விகுதி போட்டுச் சில தொழில் செய்பவர்களை குறிப்பிட்டார்கள். அவர்கள் நிலை கீழானது என்ற எண்ணம் வரும் வகையில் பாடப்புத்தகங்கள் இருந்தன. காமராஜ் ஆட்சிக்காலத்தில் இதைச் சட்டமன்றத்திலேயே தலைவர் கலைஞர் சுட்டிக்காட்டி பாடப்புத்தகத்தில் இருந்தே அதை நீக்கும் படி செய்தார். நம்முடைய தலைவர்களுக்கு இது ஆபத்தானது என்பது தெரிந்ததால் தான் அதை நீக்கினார்கள். குலக்கல்விக்கு ஆதரவளிக்கும் கல்விக்கொள்கையை நான் சட்டமன்றத்தில் கடுமையாக எதிர்த்துப் பேசினேன். அந்த சமயத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.<br />
<br />
<b><span style="color: blue;">சுதா:</span> <span style="color: red;">சில மாணவர்களுக்கு எல்லா பாடங்களையும் படித்து வெற்றி பெறுவது கடினமாக இருக்கின்றது. அவர்களுக்கு எந்த துறையில் செல்ல ஆர்வம் இருக்கின்றதோ அதற்கான பாடத்தை மட்டும் படிப்பது சரியாகத்தானே இருக்கும்? </span></b><br />
<br />
<b><span style="color: blue;">தங்கம் தென்னரசு: </span></b>இவர்களுக்கு 11ம் வகுப்பில் தேவையான படிப்பை தேர்வு செய்து கொள்ளும் வசதி இருக்கிறதே? அடிப்படையான சில பாடங்களை, மாணவர்கள் படிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஒரு மாணவனுக்கு கணிதம் வரவில்லை என்று அந்த பாடத்தை படிக்காமல் இருந்தால் நடைமுறை வாழ்க்கையில் பண வரவு - செலவுகளை அவனால் எப்படி பார்க்க முடியும்?<br />
<br />
<b><span style="color: blue;">சுதா:</span><span style="color: red;"> கிராமப்புரங்களில் இருந்து படித்து வரும் மாணவர்களுக்குக் கல்லூரியில் சேர்ந்த பிறகும் தங்களுடைய பெயர்ரைக்கூட ஆங்கிலத்தில் எழுதத்தெரியவில்லை. இது நம்முடைய கல்வி முறையின் தோல்வியா? அல்லது ஆசிரியர்களின் தோல்வியா? </span></b><br />
<br />
<b><span style="color: blue;">தங்கம் தென்னரசு:</span></b>ஆங்கிலத்தில் மாணவனுக்கு பெயரைக்கூட எழுதத்தெரியவில்லை என்பதற்கு கல்வி முறையை குறை சொல்லுவதை விட, சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் ஆசிரியர்களின் கவ்னக்குறைவே காரணம் என்று சொல்ல வேண்டும். இதற்கு ஆசிரியர்களின் தரத்தை மட்டும் பார்க்காமல், அந்த மாணவனின் குடும்பம் மற்றும் சமுதாய சூழலையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். படிக்காத பெற்றோர் என்றால் அந்த மாணவனின் நிலை கடினமாகத்தான் இருக்கும். நான் என்னுடைய அடிப்படை கல்வியை அரசு பள்ளிகளில் தான் படித்தேன். என்னுடைய இந்த நிலைக்கு என் ஆசிரியர்கள் தான் காரணம் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். அரசாங்கம் எந்தத்திட்டம் கொண்டு வந்தாலும் கடைசியில் அந்த ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு எப்படி சொல்லித்தருகின்றார் என்பதில் தான் அத்திட்டத்தின் வெற்றி - தோல்வி அமையும். சிறு வயதில் பெரும்பாலான நேரத்தை மாணவர்கள் ஆசிரியர்களுடன் தான் கழிக்கிறார்கள். எனவே அவர்களை சரியாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு தான் அதிகம்.<br />
<br />
<b><span style="color: blue;">ரமேஷ்:</span> <span style="color: red;">திமுகவின் வளர்ச்சிக்கு அந்த காலத்தில் நாத்திகம், ஹிந்தி எதிர்ப்பு எல்லாம் உதவின. இன்றைக்கும் அவற்றை வைத்துக் கொண்டு கட்சியை வளர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா? </span></b><br />
<br />
<b><span style="color: blue;">தங்கம் தென்னரசு:</span></b> திமுகவின் கொள்கை “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது தான். தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்கநாதனையும் பீரங்கி கொண்டு பிளப்பது எந்நாளோ என்று எங்களுடைய தலைவர்கள் சொன்னதாக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். எந்த காலத்தில் எந்த இடத்தில் அண்ணா இப்படி சொன்னார்? எந்நாளும் ஒருவருடைய தனிப்பட்ட இறை நம்பிக்கையில் நாங்கள் தலையிட்டதில்லை.<br />
<br />
<span style="color: blue;"><b>ரமேஷ்:</b></span> ராமர் எந்த கல்லூரியில் இஞ்ஜினியரிங் படித்தார் என்று கேட்டது, தனிப்பட்ட மத நம்பிக்கையில் தலையிட்டது போல் ஆகாதா?<br />
<br />
<b><span style="color: blue;">தங்கம் தென்னரசு: </span></b>இதை உங்களுடைய இறை நம்பிக்கையை இழிவு செய்வதற்காக கேட்கவில்லை. சேது சமுத்திர கால்வாய்த்திட்டப் பிரச்சனையின் போது, பிரச்சனையின் அடிப்படையில் கேட்கப்பட்டது. உண்மையில் திமுக ஆட்சியில் இருக்கும் போது தான் பல்வேறு கோவில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்குகள் நடைபெற்றன. திருவாரூரில் ஓடாத கோவில் தேரைச்செப்பனிட்டு ஓட வைத்தது எங்கள் ஆட்சியில் தான். தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை அரசாங்க விழாவாக கொண்டாடியதும் நாங்கள் தான்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVNoy-hBurCO55hkYmyWv4Zc15J_P2GtfIQKck2l2l9RA94uVVfy245Lnkzcg52p_sSwMLrVkk2yeaSCv_R6CO06I8TWiIAy7twHuDw_5pK7X9DJa908Pusasa4D-xTX-LzKc6uWXkDBk/s1600/5.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="607" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVNoy-hBurCO55hkYmyWv4Zc15J_P2GtfIQKck2l2l9RA94uVVfy245Lnkzcg52p_sSwMLrVkk2yeaSCv_R6CO06I8TWiIAy7twHuDw_5pK7X9DJa908Pusasa4D-xTX-LzKc6uWXkDBk/s320/5.jpg" width="242" /></a></div>
<br />
<b><span style="color: blue;">ரமேஷ்: </span><span style="color: red;">அரசியலில் நாத்திகம் பேசினாலும், திமுக தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கோவிலுக்கு செல்வதைத் தடுக்க முடியவில்லையே? அது போல் ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டே குடும்ப உறுப்பினர்கள் ஹிந்தி படிப்பதைத் தடுக்க முடியவில்லையே?</span></b><br />
<br />
<span style="color: blue;"><b>தங்கம் தென்னரசு:</b></span> மீண்டும் கூறுகின்றேன். யாருடைய இறை நம்பிக்கைகளிலும் நாங்கள் இதுவரை தலையிட்டதில்லை. அதுபோல் எங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் தெய்வங்களை வழிபடும் விஷயத்திலும் நாங்கள் தலையிடுவதில்லை. என்றைக்கும் ஹிந்தி என்ற மொழிக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. கட்டாய ஹிந்தி திணிப்பை மட்டுமே எதிர்த்தோம். எதிர்க்கிறோம், எதிர்ப்போம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPzFn1VLN_Czr5ZFMDfV6-tajF4gw5bZ7F0yris3X5O2TmwSbJC1tkEHYKFOPLH3NXKu52seGLqi83aZqnB_obfmG51BqAAOjPJbucGA1C1JfMqurYJVQ2Z0Qw1IEfYa9LO5Bd00tB3i0/s1600/6.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="896" data-original-width="657" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPzFn1VLN_Czr5ZFMDfV6-tajF4gw5bZ7F0yris3X5O2TmwSbJC1tkEHYKFOPLH3NXKu52seGLqi83aZqnB_obfmG51BqAAOjPJbucGA1C1JfMqurYJVQ2Z0Qw1IEfYa9LO5Bd00tB3i0/s320/6.jpg" width="234" /></a></div>
<br />
<b><span style="color: blue;">சுவாமிநாதன்:</span> <span style="color: red;">ஒரு காலத்தில் மாவட்டம் தோறும் கட்சிப் பொதுக்கூட்டங்களை நடத்தி, சிறந்த பேச்சாளர்களைக் கொண்டு மக்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருந்த கட்சி திமுக. இப்போதெல்லாம் தொலைக்காட்சி விவாத மேடைகளில் யார் யாரோ வந்து பேசுகிறார்கள். இது திமுகவுக்கு பின்னடைவு இல்லையா? </span></b><br />
<br />
<b><span style="color: blue;">தங்கம் தென்னரசு: </span></b>காலத்திற்கேற்ற மாற்றங்களை திமுக உள்வாங்கி வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் திமுகவின் மாலை நேரப் பொதுக்கூட்டங்கள் மாலை நேரப் பல்கலைகழகம் என்று அழைக்கப்பட்டன. அன்றைக்கு பொதுக்கூட்டங்கள் மூலமாக மட்டுமே நம்முடைய கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய நிலை இருந்தது. இன்றைக்கு தகவல் தொடர்பு வளர்ந்து விட்ட காரணத்தால் பொதுக்கூட்டங்களின் தேவை குறைந்து விட்டது. பொதுக்கூட்டங்களில் பேசுவதைப்போல் சட்டமன்றத்திலோ, தொலைக்காட்சி விவாதங்களிலோ பேச முடியாது. எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து வைத்துத்தான் விவாதங்களில் பேசுகின்றார்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4-BfVQhqOOz4_SJ8K_fAbXK8nhwEbuye6U-s888daWl51Wmtvr4nEvAasWre_Op94Ew1tPndXWcauULA36-xoQtSWRslg49QANH9XVf0wRqKCou-nI8CK31b5ObIO97eb23XZwX6w4H4/s1600/7.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="606" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4-BfVQhqOOz4_SJ8K_fAbXK8nhwEbuye6U-s888daWl51Wmtvr4nEvAasWre_Op94Ew1tPndXWcauULA36-xoQtSWRslg49QANH9XVf0wRqKCou-nI8CK31b5ObIO97eb23XZwX6w4H4/s320/7.jpg" width="242" /></a></div>
<br />
<b><span style="color: blue;">கீதாகிருஷ்ணன்:</span> <span style="color: red;">நீங்கள் அமைச்சராக இருந்த காலத்தில் உலக செம்மொழி தமிழ் மாநாடு நடத்தினீர்கள். அதில் சமய இலக்கியங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. சீறாப்புராணம், இரட்சண்ய யாத்ரிகம், தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் இல்லாத சங்கத்தமிழை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாத பின்னனி என்ன?</span></b><br />
<br />
<span style="color: blue;"><b>தங்கம் தென்னரசு:</b></span> உலகத்தமிழ் மாநாடு நடத்தும் போதுசமய இலக்கியங்களை விட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் இவை தவிர்க்கப்படவில்லை. ஆழ்வார்களின் பாசுரங்களும், நாயன்மார்களின் தேவாரமும், தமிழுக்கு கிடைத்த அருட்கொடை என்பதில் சந்தேகம் இல்லை. அது போலவே சீறாப்புராணமும், இரட்சண்ய யாத்ரீகமும். தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினால் தமிழ் பக்தி இலக்கியத்தை விட்டு விட்டு யாராலும் எழுத முடியாது. நாலாயிர திவ்ய பிரபந்தம், திராவிட வேதம் என்று அழைக்கப்பட்ட ஒன்று. கம்பராமாயணம் முழுவதும் ராமாவதாரத்தைப் பற்றியது. ஆனால் அது மிகப்பெரிய தமிழ் இலக்கியம் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆய்வு மையங்களில் ஆய்வாளர்கள் எதைத்தேர்வு செய்கிறார்கள் என்பது அவர்களை பொறுத்த விஷயம். அதில் அரசின் தலையீடோ, அரசியலோ கிடையாது. மேலும் இந்த ஆய்வு, ஒட்டு மொத்தமாக தமிழ் மொழி அடைந்த வளர்ச்சியையும், கடந்து வந்த பாதையையும் பற்றியது. தமிழ் பிராமி எழுத்து முறையில் ஆரம்பித்து, இலக்கியம் சோழர்காலம் என்று இன்றைய பின்நவீனத்துவ இலக்கியங்கள் வரை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. எனவே மற்ற இலக்கியங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதல்ல எங்கள் எண்ணம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVD-rJxneUGGKRcqR3jRQScD5xKi99cn3A0ZEGzuifflZMib6BdqRIbGUqKaTwdRI5bryC976X36BYwg2C7wO_bvQIZQ5_JlLmlodPuL_22kbxZ-7FohYkyYHcaLxTs76eX8liNSthhmk/s1600/8.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="609" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVD-rJxneUGGKRcqR3jRQScD5xKi99cn3A0ZEGzuifflZMib6BdqRIbGUqKaTwdRI5bryC976X36BYwg2C7wO_bvQIZQ5_JlLmlodPuL_22kbxZ-7FohYkyYHcaLxTs76eX8liNSthhmk/s320/8.jpg" width="243" /></a></div>
<br />
<b><span style="color: blue;">கீதாகிருஷ்ணன்</span>:<span style="color: red;"> ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்ன</span></b><span style="color: red;">? </span><br />
<br />
<b><span style="color: blue;">தங்கம் தென்னரசு: </span></b>ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறியுள்ளார். ஜனநாயக நாட்டில் அவருக்கு அந்த உரிமை உள்ளது. அவர் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தால் , திமுகவும் அதை அரசியல் ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறது.<br />
<br />
<b><span style="color: blue;">பத்மாரவி:</span> <span style="color: red;">கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஒரே ஒரு சதவிகித வாக்கு வித்யாசத்தில் தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உங்கள் கட்சி இழந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு தோல்வியடைந்ததை எப்படிப் பார்க்கின்றீர்கள்? திமுகவின் தேய்மானமாக இதைப் பார்க்கலாமா? </span></b><br />
<br />
<b><span style="color: blue;">தங்கம்தென்னரசு:</span></b> இடைத்தேர்தல் முடிவிலும், பொதுத்தேர்தல் முடிவிலும், வீக்கத்துக்கும், வளர்ச்சிக்குமான வித்யாசம் உள்ளது. அந்த இடைத்தேர்தல் முடிவு என்பது ஒரு வீக்கம். அதை வளர்ச்சியாக பார்க்க முடியாது. இடைத்தேர்தல் முடிவுகள் எந்த நாளும் பொதுத்தேர்தல் முடிவுகளை பாதிக்காது. இடைத்தேர்தலுக்கு என்றே சில கூறுகளும், பண்பாடுகளும் இருக்கின்றன. உதாரணத்துக்கு பென்னாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்து 3 வது இடத்துக்கு போன அதிமுக அடுத்து வந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக குறைந்த இடங்களில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த எல்லா இடைத் தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தோம். குறிப்பாக சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தோம். ஆனால் கடந்த 2016 பொதுத்தேர்தலில் 89 இடங்களில் வெற்றி பெற்று வெறும் 1 சதவிகித வாக்கி வித்யாசத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தோம். இந்த 1 சதம் வாக்கு வித்யாசம் கூட ஆளும் கட்சிக்கு எதிராக உருவான மற்றொறு கூட்டணியால் ஏற்ப்பட்ட வாக்கு சிதறல்கள் காரணமாக அமைந்தது. எனவே இடைத்தேர்தல் தோல்வியை ஒரு அளவுகோலாக வைத்துப் பார்க்க முடியாது. அடுத்து வரும் பொதுத்தேர்தலில் திமுக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்!<br />
<br />
******************<b><span style="color: purple;"> நன்றி: துக்ளக்</span></b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWlqcgoJ_GdOMtPvKQ43AvlFLnCz9fpHbhEiPF0ZK8Ilu3xdFoX-OG9JMwwyWRxMwaA_jZApTwTFrsRH3KvpnwMQwgdUh3WjRWofy69fd36ahCv_9IhDPhSpHRr4-bF1PM2T6WQND7RoY/s1600/29365985_2161552207399193_8061061768267736075_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="701" data-original-width="699" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWlqcgoJ_GdOMtPvKQ43AvlFLnCz9fpHbhEiPF0ZK8Ilu3xdFoX-OG9JMwwyWRxMwaA_jZApTwTFrsRH3KvpnwMQwgdUh3WjRWofy69fd36ahCv_9IhDPhSpHRr4-bF1PM2T6WQND7RoY/s640/29365985_2161552207399193_8061061768267736075_n.jpg" width="638" /></a></div>
<br />
<br />அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69257896072638386322018-03-29T23:25:00.000+05:302018-03-29T23:27:39.729+05:30காவிரி மேலாண்மை வாரியம் தருகின்றீர்களா? அல்லது சர்வதேச நீதிமன்றம் அமைக்கும் காவிரி மேலாண்மை வாரியம் தான் உங்கள் விருப்பமா? <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA-waK0FINjQCAWnjp1LL6X6UNXTHBjmXuPspP79OehWR5dLFO4Xr894x0vg2l5HNMCxhUxNXeaAhyslhqQh20EvNX3yy2G2wjf2p_Fez9iCVImphmilX9kQ0B-zc_FEvklkLDEppaBxI/s1600/anna03.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="274" data-original-width="450" height="193" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA-waK0FINjQCAWnjp1LL6X6UNXTHBjmXuPspP79OehWR5dLFO4Xr894x0vg2l5HNMCxhUxNXeaAhyslhqQh20EvNX3yy2G2wjf2p_Fez9iCVImphmilX9kQ0B-zc_FEvklkLDEppaBxI/s320/anna03.jpg" width="320" /></a></div>
<br />
<span style="color: red; font-size: large;"><b><u>காவிரி மேலாண்மை வாரியம் தருகின்றீர்களா? அல்லது சர்வதேச நீதிமன்றம் அமைக்கும் காவிரி மேலாண்மை வாரியம் தான் உங்கள் விருப்பமா? </u></b></span><br />
<br />
<br />
நம் அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தீர்க்கதரிசி. கிட்டத்தட்ட 56 ஆண்டுகளுக்கு முன்பாக நம் திமுகவின் நிறுவனர் அறிஞர் அண்ணா அவர்கள் திமுகவின் அடிவேர் கொள்கையான <b><span style="color: red; font-size: large;">“திராவிட நாடு”</span></b> என்னும் கொள்கையை 1962ம் ஆண்டு அக்டோபர் மாதம், வேலூர் சிறையில் இருந்து வெளி வந்ததும் கைவிட்டார். அப்போது அண்ணா அவர்களை பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்கவில்லை. செயற்குழுவை கூட்டி ஆலோசிக்கவில்லை. கட்சியின் முக்கிய முன்னோடிகளை கலந்தாலோசிக்கவில்லை. அவசர அவசரமாக ஆனால் தீர்க்கமாக முடிவெடுத்து அதை அறிவித்தார். அப்போது திமுகவில் இது பற்றி எவ்வித முனகல்களும் கூட கேட்கவில்லை. சிறந்த அறிஞர் அண்ணா அவர்கள் எதை செய்தாலும் அது கட்சிக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கும் செயலாகவே அமையும் என நம்பினார்கள். தலைமையின் மீது அதீத நம்பிக்கையுடன் அண்ணாவின் அந்த திராவிட நாடு கொள்கையை கைகழுவியதை ஏற்றுக் கொண்டனர்.<br />
<br />
அண்ணா அந்த திராவிட நாடு கொள்கையை கை கழுவ காரணம் ... இந்திய சீன போர் நேரம் அது. அந்த நேரத்தில் நாம் இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில் மத்திய ஆளும் காங்கிரசுக்கு எவ்வித நெருக்கடியும், குடைச்சலையும் கொடுக்கக்கூடாது என்கிற மனோபாவம். அடுத்து அந்த நேரத்தில் மத்திய அரசு “பிரிவினைவாத தடைச்சட்டம்” கொண்டு வந்திருந்தது மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சி. அதன் படி மிக சுலபமாக திமுக என்னும் இயக்கத்தையே தடை செய்து விட இயலும். அப்படி நடந்தால் என்ன ஆகியிருக்கும். தமிழகத்தில் திமுகவில் இருந்த இளைஞர்கள் தீவிரவாத புரட்சிப்பாதைக்கு திரும்பியிருக்கக்கூடும். அது வெற்றி பெற்றால் திராவிட நாடு கிட்டும். ஒருவேளை மிருக பலத்துடன் இருக்கும் இந்தியா என்னும் தேசத்தை எதிர்த்து நிற்கும் போது தோல்வி கண்டால் என்ன ஆகும். அந்த தீவிரவாதப்போர் என்பது பாரத யுத்தம் போல 16 நாட்களில் முடியும் சமாச்சாரமாக இருந்திருக்காது. அது பல ஆண்டுகள் நடந்து பின்னர் தான் ஒரு முடிவை எட்டியிருக்க இயலும். தமிழகம் பாழ்பட்டு போயிருக்கும். இனப்படுகொலை கூட சாத்தியமாகிப்போயிருக்கும். தமிழர்கள் கனடா, அமரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு நாடோடிகளாக திரிந்து அடிமை வாழ்வு வாந்திருப்பர். பல தலைமுறை தமிழர்கள் ஆண்களை இழந்து மிஞ்சி இருக்கும் தமிழச்சிகள் சின்னாபின்னமாக்கப்பட்டு தமிழ் கலாச்சாரம் இல்லாமல் ஆனால் தமிழச்சிகளுக்கு தகாத முறையில் பிறந்த பிள்ளைகளாக அப்பன் பெயர் தெரியாத இனமாக ஆகியிருக்கும். திராவிட நாட்டை வென்று விட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் சேதாரங்கள் என்பது கற்பனை செய்து கூட பார்க்க இயலாத நிலையில் இருந்திருக்கும். அதன் பின்னர் திராவிட நாட்டை கட்டியெழுப்ப பெரும் பொருளாதார சரிவை சந்திக்க வேண்டியிருக்கும். அண்ணா யோசித்தார். கொஞ்சமும் வெட்கப்படாமல் “திராவிட நாடு” கோரிக்கையை கைவிட்டார். ஆனால் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டினார்.<br />
<br />
<b><span style="color: red;">“வீடு இருந்தால் தான் ஓடு மாற்ற இயலும். நாடு இருந்தால் தான் கட்சி நடத்த முடியும்” எனவே திராவிட நாடு கொள்கையை கைவிடுகின்றோம். ஆனால் “மாநில சுயாட்சி”யை பலமாக கோருகின்றோம். மத்திய அரசின் குறைகளை இப்போது பேச வேண்டாம் தோழர்களே! மணமேடையில் அமர்ந்திருக்கின்றோம். தாலி கட்டும் வேலையை இப்போது பார்ப்போம். மணப்பெண் கழுத்தில் இருக்கும் மச்சங்களின் எண்ணிக்கை பற்றி இப்போது சிந்திக்க வேண்டாம். மச்சங்கள் எண்ணிக்கையை அதற்கான நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்று தோழர்களே....திராவிட நாடு கோரிக்கையை நாம் இப்போது கைவிட்டோமே தவிர்த்து,</span><span style="background-color: white; color: blue;"><u> </u></span></b><span style="color: blue; font-size: x-large;"><b style="background-color: white;"><u>அந்த கோரிக்கைக்கான காரணங்கள் இன்னமும் அப்படியேத்தான் இருக்கின்றன”என்றார். </u></b></span><br />
<br />
அண்ணாவை கோழை, பயந்தாங்கொளி ஒரு சட்டத்தை பார்த்து தன் கொள்கையையே காற்றில் விட்டவர் என பழிக்காத பத்திரிக்கைகளே இல்லை எனலாம் அந்த 1962ல். அத்தனை ஏன்??? இதை பாராட்டி தேச ஒற்றுமைக்கு தோள்கொடுத்த அண்ணாவை தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய காங்கிரசே கேலி பேசியது கொடுமை எனில், இரட்டை குழல் துப்பாக்கியில் ஒன்றான திராவிடர் கழகம் எள்ளி நகையாடியது அந்த “கண்ணீர் துளி பாய்ஸ்களை” பார்த்து. ஆனால் அண்ணா அவர்களோ தேச ஒற்றுமைக்காக சீனப்போருக்கு நிதி திரட்டி மத்திய அரசுக்கு தருவதில் மும்மரமானார்.<br />
<br />
ஆக திமுகவின் தேசிய பார்வை என்பது விசாலமானது. இந்த கட்டுரைக்கு முன்னுரை மட்டுமே இது வரை எழுதியவை. இப்போது தான் கட்டுரையின் சாராம்சத்துக்கே வருகின்றேன்.<br />
<br />
அண்ணா அவர்கள் மேற்படி “திராவிட நாடு” கொள்கையை கைவிட்டு சுமார் 56 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அண்ணா சொன்னது போல “திராவிட நாடு கோரிக்கைக்கான காரணிகள் இன்னமும் அப்படியே தான் உள்ளது என சொன்னாரே... இதோ ஆயிற்று 56 ஆண்டுகள். அதில் கொஞ்சமாவது மாறியுள்ளதா என்பதற்கான பதில் தான் இன்று 29.03.2018 மாலை 5.00 மணிக்கு மத்திய பாஜக அரசு உணர்த்தியுள்ளது.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcvN93v6ih4u1zDqIAqRFWeWkfVWQjUOrVCYzgSQP1RSyE5ABrg-TRRCvAsryWEbhZyHxSruYn73Wsi_sjJUP0mj6d0MZ3ipj0RmDWtschG8T1Y5HYUcojlTZ9w_yUWdHqvv6fJvdaP4k/s1600/SUPREMECOURT.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="375" data-original-width="630" height="380" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcvN93v6ih4u1zDqIAqRFWeWkfVWQjUOrVCYzgSQP1RSyE5ABrg-TRRCvAsryWEbhZyHxSruYn73Wsi_sjJUP0mj6d0MZ3ipj0RmDWtschG8T1Y5HYUcojlTZ9w_yUWdHqvv6fJvdaP4k/s640/SUPREMECOURT.jpg" width="640" /></a></div>
<br />
<br />
நம் நாட்டின் உச்சபட்ச சட்ட எல்லை என்பது உச்சநீதிமன்றம் தான். ஆளானப்பட்ட ஜனாதிபதிக்கே பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் தகுதி கொண்டவர் இந்திய நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே ஆவார். கடைக்கோடி இந்தியனுக்கும் கடைசி நம்பிக்கை என்பது உச்சநீதிமன்றமே என்னும் நிலை தான் இந்தியாவின் நிர்வாணமான உண்மை. தமிழ்நாட்டின் தென்பகுதி கடைக்கோடி மாநிலங்களான கர்நாடகாவும், தமிழ்நாடும் பல ஆண்டுகளாக இந்த காவிரி நீர் பிரச்சனையில் சண்டை போடுவதை நிறுத்தவே இல்லை. சமாதானம் செய்து வைக்க வேண்டிய மத்திய அரசோ, அப்போதைய சூழலுக்கு ஏற்ப இந்த இரண்டில் எந்த பகுதியில் இருந்து தமக்கு அதிக எம்.பிக்கள் வருவார்கள் என்பதையே “நியாய தராசாக” வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். 1967ல் அண்ணா அவர்கள் போட்ட பிராந்திய அஸ்திவாரம் என்பது மிகப்பலம் என்பதால் இதோ இன்றைக்கு 2018 வரை கூட தேசிய கட்சிகள் இங்கே நுழையவோ அல்லது காலூன்றவோ இயலா நிலை. அப்படியே அவர்களுக்கு இங்கே ஒரு பிடிப்பு ஏற்படின் கூட ஏதாவது ஒரு பிராந்திய கட்சியின் முதுகு தான் தேவைப்படுகின்றது. திமுகவும், அதிமுகவும் மிக புத்திசாலித்தனமாக “உங்களை தூக்கி சுமக்கத்தயார் தமிழகத்தில். ஆனால் மத்தியில் எங்களுக்கு முதல் பந்தியில் உரிய மரியாதையுடன் தான் சாப்பாடு. அதிகாரத்தில் பங்கும் எங்களுக்கு கண்டிப்பாக உண்டு ” என சொல்லி சொல்லி தான் சுமந்தன எனில் அது பொய்யில்லை. அதிமுக மத்திய அமைச்சரவையில் எட்மண்ட், பாலாபழனூர் என தொடங்கி தம்பி துரையை பாராளுமன்ற துணை சபாநாயகர் என கொண்டு வந்தது வரை, அது போல திமுகவோ முரசொலி மாறன் தொடங்கி மத்தியில் பல கேபினட் அமைச்சர்கள், இணை, துணை அமைச்சர்கள் என முக்கிய துறைகளான வர்த்தகம், தொலை தொடர்பு, இராணுவம், மருத்துவம், ஜவுளி, உரம், நெடுஞ்சாலை, கப்பல், சுற்றுச்சூழல் என தொடாத துறைகளே இல்லை என்னும் அளவு அதிகார பகிர்வில் தன்னை இணைத்துக் கொண்டு மத்தியிலும் கூட்டாட்சியாக இருந்தது. கூட்டணி ஆட்சியாக இருந்தது. மாநிலத்தில் கூட மைனாரிட்டியாக திமுக இருந்த போது கூட காங்கிரசை வெளியில் இருந்து ஆதரிக்க சொன்னதே தவிர்த்து மாநில மந்திரிசபையில் உள்நுழைக்கவில்லை என்பதில் இருந்து ஒன்று விளங்கும். அதாவது மாநிலத்தில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி என்னும் அண்ணாவின் கோட்பாட்டை திமுக, அதிமுக ஆகியவை கடைசி வரை விடவில்லை. (நான் இங்கே திமுகவோடு அதிமுகவை சேர்த்து சேர்த்து இழுத்து வருகின்றேன் எனில் காரணம் உண்டு. அதிமுக என்பது இரண்டு சகாப்தங்கள் மட்டுமே. எம் ஜி ஆர் சகாப்தம், அடுத்து ஜெயலலிதா சகாப்தம். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அதிமுக என்பது உயிரோடு இருந்தது. அதற்கு பின்னர் இப்போது இருக்கும் அதிமுகவை நான் அதிமுகவாக நினைத்து இந்த கட்டுரையில் குறிப்பிடவில்லை. ஏனனில் ஜெயா அவர்களுக்கோ அல்லது கலைஞருக்கோ மத்திய அரசை அண்டிப்பிழைக்கும் நிலை என்பது எப்போதும் இல்லை. இணக்கமாக இருப்பது வேறு. அண்டிப்பிழைப்பது என்பது முற்றிலும் வேறு என்பதை தயவு செய்து உணர வேண்டும் இதை வாசிக்கும் அன்பர்கள். எம் ஜி ஆர் அவர்கள் தான் ஆட்சியில் முதல்வராக இருந்த அந்த 13 ஆண்டுகளும் மத்திய அரசுகளுக்கு இணக்கமாக இருந்தார். முதலில் மொரார்ஜி தேசாய் முதல்இந்திரா, ராஜீவ் வரை இணக்கமாக இருந்தார். மொரார்ஜியே கூட எம் ஜி ஆர் ஆட்சியை கலைத்தால் கூட மத்திய அரசை தவிர்த்து விட்டு தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெறும் அளவு அவருக்கு தைரியம் இருந்தது. அதே போலத்தான் திமுகவும் காங்கிரஸ் அல்லாமல், ஜனதா அல்லாமல் , பாஜக அல்லாமல் கூட தனித்து நின்று அதிமுகவை வீழ்த்தும் சக்தி பெற்றவராகவே இருந்தது. ஜெயா அவர்களும் இதே நிலை தான். ஆனால் ஜெயா அவர்களுக்கு பின்னர் இதோ இப்போது இருக்கும் எடப்பாடி, பன்னீர் கோஷ்டிகள், தினகரன் கோஷ்டிகள் எல்லாம் மத்திய அரசை அண்டிப்பிழைக்கும் நிலை தான் என்பதே உண்மை. எனவே இந்த கோஷ்டிகளை நாம் அதிமுக என்னும் வட்டத்தின் உள்ளே சேர்க்கக்கூடாது.<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0kkzfpAAZAKK7SSI1vqXLNGSYV8WjRbhYM9eW8_YKEm9NXZE-zMl3GxKhvJbohFCpHOH55e9ZpbZ3G4sLbmmq3usf6P0aCfbUYOWv5IRI9NcfmgAJVWGdm7OdQChOAGPoB9wpwTdiFoE/s1600/stalin1402131f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="393" data-original-width="630" height="398" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0kkzfpAAZAKK7SSI1vqXLNGSYV8WjRbhYM9eW8_YKEm9NXZE-zMl3GxKhvJbohFCpHOH55e9ZpbZ3G4sLbmmq3usf6P0aCfbUYOWv5IRI9NcfmgAJVWGdm7OdQChOAGPoB9wpwTdiFoE/s640/stalin1402131f.jpg" width="640" /></a></div>
<br />
ஆக அண்ணா இட்ட பிராந்திய அடித்தளம் என்பது தமிழகத்தில் மிகப்பலமானது என்பதால் இங்கே பாஜகவோ அல்லது காங்கிரசோ தனித்து நின்று இந்த தமிழக பிராந்தியத்தை வெல்ல முடியாது என்னும் நிலையில் மத்திய அரசுகள் என்பது தமிழகத்துக்கு எப்போதும் அநீதிகளை மட்டுமே பரிசாக கொடுத்துக் கொண்டுள்ளன. ஆனால் கர்நாடகம் என்பது பலமுறை காங்கிரஸ் வெற்ற மாநிலம், பல முறை ஜனதா, ஒரு முறை பாஜக, மதச்சார்பு அற்ற ஜனதாதளம் (பிராந்தியமாக சுருங்கிய தேசிய கட்சி எனலாம்) என தேசிய கட்சிகள் தான் ஆட்சியில் அமர்ந்து வருகின்றன. ஆகவே கர்நாடகத்தில் மத்தியல் ஆளும் அல்லது ஆண்ட ஜனதாவோ, காங்கிரசோ, பாஜகவோ அல்லது யாராக இருந்தாலும் அவர்கள் மாநில முதல்வராக வந்து அமர ஒரு வாய்ப்பு கண்டிக்காக அங்கே உண்டு. இன்னும் சுறுக்கமாக சொன்னால் காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு எந்த மத்திய கட்சி அழகான துரோகம் செய்கின்றதோ அதற்கு அடுத்த முறை அங்கே முதல்வர் நாற்காலி நிச்சயம் என்னும் நிலை.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHoL99_EILdCCQfVMbq7yQSGmj36-mtPeRC3lVw3ep4Twh0h5aP7WueGHS2dcdlnz38WZrf0kkXUQ7cY8UZFxcXlJT2kUHyhekV76RvWJWKZW4-GOCjdcec0z9H8pyCC6sulhl-QWw6d0/s1600/vpsingh.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="287" data-original-width="430" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHoL99_EILdCCQfVMbq7yQSGmj36-mtPeRC3lVw3ep4Twh0h5aP7WueGHS2dcdlnz38WZrf0kkXUQ7cY8UZFxcXlJT2kUHyhekV76RvWJWKZW4-GOCjdcec0z9H8pyCC6sulhl-QWw6d0/s640/vpsingh.jpg" width="640" /></a></div>
<br />
இதற்காகத்தான் கலைஞர் இந்த காவிரி விஷயத்தை இனியும் மத்திய அரசின் கட்டபஞ்சாயத்து சரி வ்ராது என முடிவெடுத்து தான் அப்போது இந்தியாவை பிரதமார இருந்து பிரமாதமாக ஆண்ட நல்ல நியாயமான மனிதர் சமூகநீதி காவலர் திரு. வி.பி.சிங் அவர்களிடம் பேசி காவிரி நடுவர் மன்றம் அமைக்க வழி வகுத்தார். அந்த காவிரி நடுவர் மன்றம் ஒரு இடைக்கால தீர்ப்பை கொடுத்து அதை கர்நாடகம் உதாசீனப்படுத்தியது , பின்னர் அதை கர்நாடகா எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது, பின்னர் காவிரி நடுவர் மன்றம் பல வித சட்ட போராட்டங்களை சந்தித்து தன் இறுதி தீர்ப்பை அளித்து, அதையும் கர்நாடகம் உதாசீனம் செய்தது, பின்னர் கர்நாடகம் உச்சநீதி மன்றம் சென்று அங்கே தீர்ப்பு வந்து அதையும் கர்நாடகம் அலட்சியம் செய்தது, பின்னரும் கர்நாடகம் அதை மதிக்காமல் உச்சநீதிமன்றம் சென்றது, இதனிடையே தீர்ப்பு அரசிதழில் வெளியிட வேண்டும் என ஜெயலலிதா அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று அதை பெற்றதாக “பொன்னியின் செல்வி” பட்டம் வாங்கி திருப்தி பட்டுக் கொண்டது, அரசிதழில் வந்து விட்டாலே காவிரியில் தண்ணீர் வந்து விட்டது என நினைத்து தமிழக மக்கள் ஏமாந்தது, என எல்லாவித கூத்துகளும் நடந்து முடிந்து இதோ கால் நூற்றாண்டு காலமாக நடந்த சட்ட போராட்டம் வாயிலாக இன்றைக்கு சுமார் 42 நாட்கள் முன்பாக முதலில் வந்த தீர்ப்பில் இருந்து கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக கடைசியாக 172 டி எம் சி தண்ணீர் தான் தமிழகத்துக்கும் என இறுதி தீர்ப்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு அதில் முத்தாய்ப்பாக இந்த தீர்ப்பு வந்ததில் இருந்து ஆறு வார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டும், இன்னும் அதி முத்தாய்ப்பாக இது சம்பந்தமாக இனி யாரும் மேல் முறையீடு செய்ய முடியாது, கூடாது என்றும் முடித்து விட்டது. உடனே கர்நாடகம் அந்த தீர்ப்பை வரவேற்றும், தமிழகம் தான் வஞ்சிக்கப்பட்டதை குமுறியும் தீர்த்து விட்டன. காரணம் தமிழகம் முதலில் கோரிய 400 டி.எம் சி என்பது காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பில் 210 டி எம் சியாகி அது இறுதி தீர்ப்பில் இன்னும் குறைந்து, கடைசியாக உச்சநீதிமன்றத்தில் 172 டி எம் சி என ஆகி விட்டது. அதையாவது கொடுங்கள் என்னும் நிலைக்கு தமிழகம் வந்து விட்டதாகவே தெரிகின்றது. ஆனால் அதையும் தர தயார் நிலையில் கர்நாடகா இல்லை என்பதும் அவர்களது பேச்சின் வழி தெரிகின்றது.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMhKOdh9FPMgA05d8KK7EXMMW7pacoHfxrGpJL3UVgjNBlcAbkYgFMu2uHZutgsgdXnH_rEjfcwAL-tDqep9q3M0sqHgxlLzZRuyy-IJaftrVxruYe1jWxI4MJ5Qa7iYGYKDtE0U9pJ1s/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="171" data-original-width="294" height="372" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMhKOdh9FPMgA05d8KK7EXMMW7pacoHfxrGpJL3UVgjNBlcAbkYgFMu2uHZutgsgdXnH_rEjfcwAL-tDqep9q3M0sqHgxlLzZRuyy-IJaftrVxruYe1jWxI4MJ5Qa7iYGYKDtE0U9pJ1s/s640/images.jpg" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglXgTwlb3tFnLQTwN587DIol3y3Q2QB9JTh3AuSgzifkWw1x9w0wn2CfYW4PppajyEvISx01Bvip9a8m4qBeoLk9fg2zH8Qy5e3qErRmHvJLrvi5Ls3FnRQh1P_mxbKFbhEeninrS-aTo/s1600/16997743_1841822542510327_5265725166033432525_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="260" data-original-width="470" height="354" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglXgTwlb3tFnLQTwN587DIol3y3Q2QB9JTh3AuSgzifkWw1x9w0wn2CfYW4PppajyEvISx01Bvip9a8m4qBeoLk9fg2zH8Qy5e3qErRmHvJLrvi5Ls3FnRQh1P_mxbKFbhEeninrS-aTo/s640/16997743_1841822542510327_5265725166033432525_n.jpg" width="640" /></a></div>
<br />
இந்த நிலையில் தான் இந்த ஆறு வாரகாலத்தில் அந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய பாஜக என்பது ஒரு சின்ன துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. ஆனால் தொலைக்காட்சி விவாதம், பொது பேட்டிகளில் இதோ கெடு முடிவடையும் 29.03.2018 மாலை 4.50 வரை கூட “இன்னும் நேரமுள்ளது. அதற்குள் ஏன் நாம் அவசரப்பட வேண்டும்” என்கிற தொணியில் அதிமுகவினரும், பாஜகவினரும் பேசுவது என்பது கொடுமை. அதே போல மாலை 5 மணி ஆகியும் இது வ்ரை இப்போது இரவு 11 மணி ஆகியும் மத்திய அரசு தன் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனால் இதற்கான சலசலப்புகள் கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் ஆரம்பித்து விட்டன.<br />
<br />
இதனிடையே மத்தியல் கூட்டணியாக இருந்த சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து வேண்டி பாராளுமன்றத்தை முடக்க, அதே நேரம் சந்திரபாபு நாயுடு அவர்கள் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் கொண்டு வர, யோசித்தது பாஜக. பாராளுமன்றம் நடந்தால் தானே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவீர்கள் என்னும் நிலைப்பாட்டை எடுத்து அதிமுகவின் 37 எம் பிக்களை கொண்டு தினமும் ரகளை செய்து பாராளுமன்றத்தை முடங்கியது. அதற்கு அதிமுகவினர் சொன்ன காரணம் தான் அழகான அசிங்கம். காவிரி மேலாண்மை வாரியம் வேண்டுமாமாம். ஆனால் அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டார்களாம். காவிரி மேலாண்மை வாரியம் கொண்டு வராத மத்திய அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என வரிந்து கட்டிக் கொண்டு, சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த அந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டியது தானே? அதற்கு காரணம் சொல்கின்றார்கள் இப்போதைய அதிமுக என்னும் போர்வையில் இருக்கும் சுரண்டிகள்.... எங்கள் அம்மா அவர்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க கூடாது என மோடிக்குகடிதம் எழுதினார் . அதனால் அதன் காரணமாக சந்திரபாபு நாயுடு கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க இயலாது. ஆனால் நாங்கள் பாராளுமன்றத்தை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முடக்குவோம், என பாஜக சொல்லிக்கொடுத்ததை கிளிப்பிள்ளை போல சொல்லி வருகின்றன. இதே ஜெயலலிதா எதிர்த்த நீட் தேர்வு, உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், ஜி எஸ் டி போன்றவைகளில் ஜெயா அவ்ர்கள் மத்திய அரசுக்கு எதிராக எடுத்த அதே நிலைப்பாட்டை தான் இவர்கள் அதாவது எடப்பாடி, பன்னீர் கோஷ்டிகள் எடுத்தனவா? இப்போது மட்டும் என்ன ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்த்து கூடாது என ஜெயா அம்மையார் சொன்னதை பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும்? கடைசி நேரம் வரை நீட் தேர்வு வராது என மத்திய அரசு சொன்னதை அந்த தேர்வு வரும் என தெரிந்தும் நம்புவது போல நம்பி அனிதா என்னும் பெண்ணை கொன்றவர்கள் தான் இந்த எடப்பாடி, பன்னீர் கோஷ்டிகள் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன? சரி அப்படியே ஜெயா அம்மையார் பேச்சை கேட்பவர்கள் என வைத்துக் கொண்டாலும், காவிரி மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தாக மத்திய அரசை சந்திரபாபு நாயுடுவோடு சேர்ந்து கலைத்து விட்டு, அடுத்து வரும் மத்திய அரசு அமையும் போது அதிமுக போர்வை கோஷ்டிகள் ஒரு வேளை வெற்றி பெற்று எம்.பிக்கள் வைத்திருந்தால் அப்போது பாராளுமன்றத்தை முடக்கி எங்கள் அம்மா சொன்னாங்க. அதனால ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க கூடாது என போராட வேண்டியது தானே?<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMUST1wtqiNV3TEpkbHWvjdACfeleAZvvGOqUY5JlTXSD3nAuE12pyfhOtuT2k06M4hdCgKZcD2Ip43me5M33F8apPsiHSvQhsNeQSie12xEKcBG6FDPav1VEbYITMiVwwNdqj8nHbBQ8/s1600/narendra-modi-karunanidhi-chennai-twitter_650x400_51509955731.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="356" data-original-width="442" height="257" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMUST1wtqiNV3TEpkbHWvjdACfeleAZvvGOqUY5JlTXSD3nAuE12pyfhOtuT2k06M4hdCgKZcD2Ip43me5M33F8apPsiHSvQhsNeQSie12xEKcBG6FDPav1VEbYITMiVwwNdqj8nHbBQ8/s320/narendra-modi-karunanidhi-chennai-twitter_650x400_51509955731.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih1_nTW7yp2UkhEfzzlSJS0zAEkT3mpgLFwWeVax7HYxS9JtTrrUUbBJXLbECeksd6Nn32tjYBuCKI264BeMl7OAG1g5idhruOEsOMtna8fqvoUfbxaZILK9Ulz-m9EUDwdU9NnEBg8E4/s1600/1440582843kani-stalin.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="250" data-original-width="374" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih1_nTW7yp2UkhEfzzlSJS0zAEkT3mpgLFwWeVax7HYxS9JtTrrUUbBJXLbECeksd6Nn32tjYBuCKI264BeMl7OAG1g5idhruOEsOMtna8fqvoUfbxaZILK9Ulz-m9EUDwdU9NnEBg8E4/s320/1440582843kani-stalin.jpg" width="320" /></a></div>
<br />
<br />
அல்லது திமுகவின் செயல்தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் சொன்னார்களே? அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வோம். அப்போது தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என சொன்னாரே? அப்போது என்ன சொன்னார் அமைச்சர் ஜெயக்குமார்? “அவர்களிடம் ஒரு லோக் சபா எம்.பி யும் இல்லை. எங்களிடம் 37 பேர் இருக்காங்க. மேலும் கனிமொழியின் ராஜ்யசபா எம்.பி பதவியை பறிக்க ஸ்டாலின் சதி செய்கின்றார்” என அபாண்டமாக சொன்னாரே... அடுத்து சில அதிமுக போர்வையாளர்கள், தமிழ் தேசியவாதிகள் அல்லது நடுநிலை போர்வை போர்த்திய ஒருதலைபட்சவாதிகள் “எம் பிக்கள் ராஜினாமா செய்தால் என்ன பெரியதாக நடந்து விடும். அதனால ராஜினாமா தேவையில்லை” என்கிறார்களே. இன்னும் லோக்சபா எம்.பிக்களுக்கு ஒரு வருடம் தான் பதவிக்காலம் உள்ளது. இத்தனைக்கும் அதிமுகவின் இந்த 37 பேரும் மத்திய அரசில் அமைச்சர்களாக இல்லை. அதனால் தமிழக நலன் சார்ந்த எந்த விஷயத்திலும் அவர்களால் பிரயோஜனம் கிடையாது. ஆனால் அவர்கள் உள் நாட்டு வாழ்வாதார பிரச்சனையான காவிரிக்காக ராஜினாமா செய்ய தேவையில்லையாம். ஆனால் இதே வாய்கள் தான் 2009ல் திமுக எம் பிக்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து தமிழக இரயில்வே, தொலைதொடர்பு, நெடுஞ்சாலை என எல்லா துறைகளிலும் இது வரை தமிழகம் செய்யாத சாதனைகளை தமிழக உட்கட்டமைப்புகளை நடத்திக் கொண்டு இருக்கும் போது இலங்கை என்னும் வெளி நாட்டு விஷயத்தில் திமுக எம் பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷமிட்டது. அது ஏன்? வெளி நாட்டு விவகார விஷயத்தில் திமுக எம் பிக்கள் ராஜினாமா செய்தால் அது தீர்ந்து விடும் என நம்பிய, பேசிய வாய்கள் இப்போது தமிழக பிரச்சனை காவிரிக்காக இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் ராஜினாமா செய்யவது பிரயோசஜனம் இல்லை என்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை. கனிமொழியை பழிவாங்கத்தான் ஸ்டாலின் அப்படி சொன்னார் என சொல்லும் ஜெயகுமார் அவர்கள் அரசியல் தெரிந்து பேசுகின்றாரா என்பது தான் புரியவில்லை. இதோ கையில் திமுக 89 எம்.எல்.ஏக்கள் வைத்திருக்கும் போது மீண்டும் கனிமொழியை எம்.பி ஆக்க இயலாதா திரு. ஸ்டாலின் அவர்களால்? சென்ற முறை மூன்று, நான்கு வாக்குகள் குறைவாக இருந்த போதே இதே ஸ்டாலின் அவர்கள் பாமக முதல் அப்போது கூட்டணியில் இல்லாத புதிய தமிழகம், ம.ம.க என போய் நேரில் வாக்கு கேட்டு எம்.பி ஆக்கவில்லையா? இன்றைக்கு அதே கனிமொழி அவர்களால் திமுகவுக்கு ராஜ்யசபாவில் பெரும் புகழ் கிடைத்துக் கொண்டிருக்கும் போது 89 எம் எல் ஏக்களை கையில் வைத்துக் கொண்டு சும்மா இருக்குமா திமுக? அரசியல் தெரியாத அரை வேக்காடுகள் எல்லாம் பேசுவதெல்லாம் காலக் கொடுமை!<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBtpTr1j3m9MJHnUNwggDLE3AdM4YzoS7ZQGLgShCYI6LrAMcvxCSJZI8zZywmxVPNSNsQk-kZaVaR0kp1tTBg9VOkORZvw7MQ3YkQFt1Bd7fRIWEb1IrU6gzzKI9L0w8PmH8u26etCJc/s1600/201706050057422865_Tamilisai-Ponnar-slam-Stalin-for-antiBJP-comments_SECVPF.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="414" data-original-width="620" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBtpTr1j3m9MJHnUNwggDLE3AdM4YzoS7ZQGLgShCYI6LrAMcvxCSJZI8zZywmxVPNSNsQk-kZaVaR0kp1tTBg9VOkORZvw7MQ3YkQFt1Bd7fRIWEb1IrU6gzzKI9L0w8PmH8u26etCJc/s320/201706050057422865_Tamilisai-Ponnar-slam-Stalin-for-antiBJP-comments_SECVPF.gif" width="320" /></a></div>
<br />
அடுத்து பாஜக... மனநலமில்லா தமிழக பாஜகவினர் தொலைக்காட்சி விவாதங்களில் காவிரி மேலாண்மை வாரியம் வைக்கும் சொத்தை வாதங்கள் தான் முகம் சுழிக்கவைக்கும் கொடூரம். “ திமுகவும், காங்கிரசும் கூட்டணி தானே. அங்கே கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையாவிடம், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும், அவர் புதல்வர் ராகுலிடம் சென்று பேசி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொல்ல வேண்டியது தானே?”. அதாவது திமுகவை மடக்கி விட்டார்களாம். அதாவது இன்னமும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தான் என தமிழக மனநலமில்லா பாஜகவினர் அப்டேட் ஆகவில்லை என்பது ஒரு பக்கம். அடுத்து அவர்கள் சொல்வது திமுகவும் காங்கிரசும் கூட்டணி என்னும் பிணைப்பில் இருப்பதால் திமுக சென்று அவர்களிடம் சொல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொல்ல வேண்டுமாம். அடடே... என்ன ஒரு வாதம்... காவிரி நடுவர் மன்றம் அமைத்த போது வி பி சிங் ஆட்சி, பின்னர் சந்திரசேகர், வாஜ்பாய், நரசிம்மராவ், மன்மோகன், மோடி என பல ஆட்சி கடந்து பல நீதிமன்றம் பார்த்து இப்போது உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு தந்து விட்டது. உச்சநீதி மன்றத்தை விட, அதை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடிய மத்திய அரசை விட ராகுல் அல்லது சோனியா அம்மையார் தான் சக்தி மிகுந்தவர்கள் என கூறுகின்றார்களா? சரி... புரியாதவர்களுக்கு புரியும் படி சொல்கிறேன்... அதாவது திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கூட்டணி என்கிற பிணைப்பு என்ற ஒன்றை வைத்து தானே அப்படி ஒரு சொத்தை வாதம் வைக்கின்றார்கள். அதே போல பாஜக தமிழக தலைவர் தமிழிசை, தமிழகம் சார்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழர்கள் தானே. போகட்டும் ஹெச்.ராஜா அவர்களோ பாவம் அவர் வேண்டாம் அவரோ மனோநிலை பிரச்சனை காரணமாக நீதிமன்ற கேள்வியில் சிக்குண்டுள்ளார், அவரை தவிர்த்து ராகவன், நாராயணன் போன்றவர்கள் தங்களை தமிழர்களாக ஒப்புக்கொண்டதில்லை அல்லது அதற்காக வெட்கப்படுவார்கள் ஆகவே தமிழிசை, பொன்னார் போன்றவர்கள் தமிழர்கள் என்பதால் தமிழக நலன் கருதி மோடியிடமோ அல்லது அங்கே முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவிடமோ சொல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொன்னால் என்ன? மாட்டார்கள். ஏனனில் தமிழகம் அல்லது தமிழர்கள் நலன் அவர்களுக்கு முக்கியம் கிடையாது என்பதே உண்மை. இந்த லெட்சனத்தில் தமிழகத்தில் தாமரை மலரும் என எந்த வாய் வைத்து சொல்கின்றார்கள் என்பது தான் புரியவில்லை.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOvNs4q07qAi4vZ3_gNu8teRmkaVd25vZXWD2JBkvLHG7GhOgAjKRBsQIJkF8grUTBiAgFIh5TeizUSFk5SGRT8nIxENb_OT8KYYRAAvRrkJkPRPdW2zxt19ycOBIcAaMbELCwHyzdyAU/s1600/Dkn_Daily_News_2018_9450451135636.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="275" data-original-width="550" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOvNs4q07qAi4vZ3_gNu8teRmkaVd25vZXWD2JBkvLHG7GhOgAjKRBsQIJkF8grUTBiAgFIh5TeizUSFk5SGRT8nIxENb_OT8KYYRAAvRrkJkPRPdW2zxt19ycOBIcAaMbELCwHyzdyAU/s640/Dkn_Daily_News_2018_9450451135636.jpg" width="640" /></a></div>
<br />
<br />
தற்போது கர்நாடகாவில் இரண்டு நாட்கள் முன்பாக தேர்தல் தேதி அறிவித்தாகிவிட்டது. இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதில் தெளிவாக இருக்கின்றது. ஆனால் தற்போது தமிழகத்தில் இருக்கும் மனநலம் குன்றிய பாஜகவினர் காவிரி மேலாண்மை வாரியமே தான் வேண்டிமா, காவிரி மேற்பார்வை குழுன்னு ஏதாவது வச்சுகிட்டு இருக்க கூடாதா... பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என கேலி பேசுகின்றன. இல்லை... எங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியமே தான் வேண்டும் என்பதில் நாங்கள் ஏன் குறியாக இருக்கின்றோம்? ஒரே விஷயம்... அதை இப்படி பார்க்காதீர்கள்.. எதிர்ப்பக்கம் என்ன நடக்கின்றது என பாருங்கள். கர்நாடகாவிடம் சென்று “ஏன் காவிரி மேற்பார்வை குழு போதும் என்கிறீர்கள்? பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா? ஏன் காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் என்கிறீர்கள் என கேட்க திராணி இருக்கின்றதா அவ்ர்களிடம். ஏனனில் காவிரி மேலாண்மை வாரியம் என்பது கர்நாடகத்தில் இருக்கும் நான்கு அணைகள், தமிழகத்தில் இருக்கும் நான்கு அணைகள் உள்ளிட்டவைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சக்தி கொண்டது. அணைகள் பாதுகாபு என்பதை தவிர்த்து அந்த அணைகள் மீது அந்த மாநில அரசுகளுக்கு உரிமை கிடையாது. அது போல உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அந்த குறைந்த பட்ச அந்த 172 டி எம் சியாவது கண்டிப்பாக தமிழகத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள். அதன் தலைவராக தமிழகம், கர்நாடகம், பாண்டிச்சேரி, கேரளா ஆகியவைகள் தவிர்த்த மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இருப்பார். நான்கு பக்கமும் இருந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். தவறு நடக்க வாய்ப்பில்லை. ஆனால் காவிரி மேற்ப்பார்வை குழு என்பது ஒரு பல் இல்லாத குழு. “கர்நாடகாவில் தண்ணீர் இல்லை. அதனால் தரவில்லை” என சுலபமாக கைவிரித்து போக இயலும்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxm-2Cz_k4WikWzAy-IqCrPLtpLugxFC2R73eiZTJX9Ox9w9AJbGDI7GjPbzJLExFjkDic6d0ryC3NfB8NcrPcsgjPgme8WNxkqURLG9Q4M03VCI4Bu1fimMuiLb_wtbVw4_JyLKKdn2Q/s1600/p73a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="424" data-original-width="650" height="416" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxm-2Cz_k4WikWzAy-IqCrPLtpLugxFC2R73eiZTJX9Ox9w9AJbGDI7GjPbzJLExFjkDic6d0ryC3NfB8NcrPcsgjPgme8WNxkqURLG9Q4M03VCI4Bu1fimMuiLb_wtbVw4_JyLKKdn2Q/s640/p73a.jpg" width="640" /></a></div>
<br />
ஆக முடிவென்பது..... கர்நாடகம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க தயாரில்லை. சரி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத காரணத்தால் அந்த அரசை இந்திய அரசியலமைப்பு சட்டப்படி கலைக்க அதிகாரம் உள்ளதா எனில் கண்டிப்பாக உண்டு. ஆனால் செய்வார்களா எனில் மத்தியில் ஆள்பவர்கள் மாட்டார்கள். அடடே அப்படி எனில் உச்சநீதிமன்ற தீர்ப்பு???? அது தமிழகத்துக்கு மட்டும் தான்... எல்லா சட்டதிட்டங்களும் தமிழகத்துக்கு மட்டும் தான். நீட் தேர்வு பற்றி ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தால் அதை உடனடியாக இந்த ஆண்டு முதலே செயல்படுத்துவோம், எத்தனை அனிதாக்கள் மரித்தால் என்ன? தமிழகத்துக்கு ஒரு கேடு விளைவிக்கின்ரதா... உடனே உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்து... ஜல்லிக்கட்டு பிரச்சனையா.... விலங்கு நலவாரியம் ஏதாவது வழக்கு தொடர்ந்ததா? அல்லது அமரிக்க அமைப்பு பீட்டா போன்றவை ஏதாவது வழக்கு தொடர்ந்ததா? தீர்ப்பு வந்ததா? உடனே அமல்படுத்து... அது தமிழகமே பற்றி எரிந்தால் கூட பரவாயில்லை. உடனே அமல் படுத்து. தமிழகம் மத்திய அரசிடம் நீட் தேர்வு வேண்டாம் என சட்டசபையில் இரண்டு தீர்மானம் போட்டதா? அதை உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி புட்டத்தின் கீழே முட்டுக்கொடுத்துக்கொள். தமிழக சட்டசபை தீர்மானத்தை அமல் படுத்தாதே. ஆனால் கர்நாடகா உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தவில்லையா? பரவாயில்லை விடு. அங்கிருந்து நமக்கு எம்.பி கிடைப்பார்கள். முதல்வர் நாற்காலி கிடைக்கும், அதனால் கண்டுக்காதே போய் கொண்டே இரு... இது தானா மத்திய அரசின் நிலைப்பாடு....<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3V3hmJD5MYQS3weOnYnQVjtzln6i8eBHCqsaNtAy6FCJ5VEpG5OPLw7MjY2M1XUCBj12m-jzrGG1SIu73La7xlePfBvD5SNQoZlT1ZAC-aylPR2xJ4YN6hST_oOB0fkQCTo-AdQzMqP0/s1600/Daily_News_7479625940323.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="275" data-original-width="550" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3V3hmJD5MYQS3weOnYnQVjtzln6i8eBHCqsaNtAy6FCJ5VEpG5OPLw7MjY2M1XUCBj12m-jzrGG1SIu73La7xlePfBvD5SNQoZlT1ZAC-aylPR2xJ4YN6hST_oOB0fkQCTo-AdQzMqP0/s640/Daily_News_7479625940323.jpg" width="640" /></a></div>
<br />
<b><span style="color: #a64d79;">இப்போது இந்த கட்டுரையின் ஆரம்ப கட்டத்துக்கு வருகின்றேன்... அண்ணா சொன்னாரே... திராவிட நாடு கோரிக்கையை கைவிடுகின்றோம். ஆனால் அதற்கான காரணங்கள் இப்போதும் அப்படியே இருக்கின்றது என்றாரே அண்ணா. அப்போது கை கொட்டி சிரித்தவர்கள் இப்போது என்ன செய்ய போகின்றார்கள்?</span><span style="color: #e69138; font-size: x-large;"> </span><span style="color: purple; font-size: x-large;">56 </span></b><span style="color: purple; font-size: x-large;"><b>ஆண்டுகள் முன்பாக </b></span><br />
<span style="color: purple;"><b><span style="font-size: x-large;"> அண்ணா சொன்ன அந்த காரணிகள் இப்போதும் உயிர்ப்புடன் தான் உள்ளன என்பதைத்தானே இன்று மாலை 5 மணி (29.03.1018) வரை </span></b><span style="font-size: x-large;"><b>தமிழகத்துக்கு மறுக்கப்பட்ட நீதி உணர்த்துகின்றது.</b></span></span><br />
<b><span style="color: #e69138; font-size: x-large;"> </span><span style="color: #a64d79;"> தமிழகத்தில் காவிரி டெல்டா முழுவதும் காவிரி தண்ணீர் கொடுத்தால் அவன் விவசாயம் செய்ய ஆரம்பித்து விடுவான். டெல்டாவை மத்திய அரசு பெட்ரோல் மண்டலமாக ஆக்கி ஒரு மாதம் ஆகி விட்டது. இப்போது காவிரி கொடுத்தால் டெல்டா விவசாயி மீண்டும் விவசாயம் பார்க்க ஆரம்பித்து விட்டால் நிலத்தை விற்க மாட்டான். அப்படியே அரசு தன் இரும்புக்கரம் கொண்டு அவன் நிலத்தை கையகப்படுத்தினாலும் உயிர் கொடுத்து போராடுவான். ஆகவே இப்போதைக்கு தண்ணீர் கொடுத்து அவனை மீண்டும் விவசாயி ஆக்காதே. இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தி வரண்ட பாலைவனம் ஆக்கி விட்டால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில் அங்கே விவசாயிகள் செயலிழந்து விடுவார்கள். அப்போது தாமாக முன் வந்து அந்த பாலைவனத்தை விற்று விடுவார்கள். எனவே இப்போதைக்கு காவிரியில் தண்ணீர் விடாதே என நினைக்கின்றது மத்திய பாஜக அரசு என பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகின்றேன். தமிழகத்தை அழித்து மற்ற இந்தியாவை வளமாக்கித்தான் இந்திய ஒருமைப்பாட்டை காக்க வேண்டும் என்னும் நிலை எங்களுக்கு தேவையா? அல்லது அண்ணா சொன்னது போல அண்ணன் முரசொலி மாறன் சொன்னது போல “ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?’ என நாங்கள் பழைய வழிக்கு திரும்ப வேண்டுமா? இந்தியாவின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பது மத்திய அரசா? அல்லது தமிழர்களா? தேச துரோகிகள் யார்? </span></b><br />
<b><span style="color: #a64d79;"><br /></span></b>
<b><span style="color: #a64d79;">நீங்கள் கேட்கும் திராவிடத்தில் கர்நாடகமும் தானே வருகின்றது? பின் அவ்ர்கள் எப்படி தமிழகத்துக்கு தண்ணீர் தருவார்கள்? என நீங்கள் கேட்கலாம். அப்படி எங்களுக்கு திராவிட நாடு கிட்டின் அப்போது அது எங்கள் நாட்டின் பிரச்சனை. நாங்கள் எப்படி தீர்த்துக் கொள்வது என்பது எங்களுக்கு தெரியும். ஒத்துவரவில்லை எனில் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு ஒத்து வராத கோட்பாடான தமிழ் தேசியம் கூட கையிலெடுக்கலாம்? யார் கண்டது? 1949 திமுக ஆரம்பித்தது முதல் 1962 வரை திராவிட நாடு என்னும் கோட்பாட்டில் இருந்த திமுக 1962 அக்டோபர் மாதம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது நாட்டின் நலனுக்காகத்தானே? இப்போது அதே நாட்டின் நலம் கருதி எந்த முடிவு வேண்டுமாகின் எடுத்தால் என்ன செய்வீர்கள்? சரி, நீங்கள் கேட்டபடி தமிழ் தேசியம் அடைந்தால் அப்போது இந்திய தேசியத்தில் இருக்கும், கர்நாடகாவில் குடகு மலையில் தொடங்கும் காவிரி தமிழகத்துக்கு கிடைத்து விடுமா என கேட்பீர்கள். அது மிகச்சுலபம். அப்போது நதி நீர் பிரிப்பு என்பது அதன் வழக்கு என்பது இதோ இன்று போல பல் இல்லாத இந்திய உச்ச நீதிமன்றத்திலா நடக்கும்? சர்வதேச நீதிமன்றத்தில் அல்லவா நடக்கும். சர்வதேச சட்டப்படி ஒரு ஆறு எங்கே ஆரம்பிக்கின்றதோ அவர்களுக்கு சொந்தமில்லை. அது முடியும் நாடு தான் அதற்கு சொந்தம். பிரம்மபுத்திரா கதை தெரியுமா உங்களுக்கு? சீனா, நேப்பாளம், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் என 5 நாடுகளில் பாய்கின்றது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சண்டை, வங்கதேசமும், பாகிஸ்தானும் சண்டை, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சண்டை.... இதல்லாம் நடந்தும் அந்த நதி நீர் பங்கீட்டில் இது வ்ரை பிரச்சனை என்பது இருந்தது உண்டா? கிடையாது. ஏனனில் அது “சர்வதேச பிரம்பபுத்திரா மேலாண்மை வாரியம்” கவனிக்கின்றது? கங்கை எத்தனை நாடுகளில் பிரச்சனை இல்லாமல் பாய்கின்றது என்கிற விபரம் வேண்டுமா? அதை எல்லாம் விடுங்கள். இந்த கட்டுரையின் ஒரே கேள்வி.... தமிழகத்தை அழித்து தான் இந்திய தேசியம் வாழ வேண்டுமா? தமிழன் என்பின் உங்களுக்கு சொம்பையா? கிள்ளுக்கீரையா? தமிழகம் கொதித்துக் கொண்டிருக்கின்றது. விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கின்றனர். குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் இல்லவே இல்லை. பசியும் பஞ்சமுமாக தமிழக டெல்டாவை ஆக்கி விட்டு, அதனை பெட்ரோல் மண்டலமாக மாற்றி இந்தியாவின் மற்ற பகுதிகளை மட்டும் சுகம் காண நாங்கள் இங்கே சாக வேண்டுமா? கடைசியாக ஒரே கேள்வி......</span></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGXMMOiYi8ad46PeWb2oy3fKqZ7bpRJZpmKAl0ye7u0fDSRPUgipR7-eUKYy0mY56AhlKrN0run5cgxTZx58ByUmxqBHe5S3DlmrbL7b9Rkb2ccYozT2BZMuprxw6zGwX2aceudEtf0f8/s1600/pic.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="376" data-original-width="620" height="194" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGXMMOiYi8ad46PeWb2oy3fKqZ7bpRJZpmKAl0ye7u0fDSRPUgipR7-eUKYy0mY56AhlKrN0run5cgxTZx58ByUmxqBHe5S3DlmrbL7b9Rkb2ccYozT2BZMuprxw6zGwX2aceudEtf0f8/s320/pic.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<span style="color: red; font-size: x-large;"><b><u>ஆகவே இந்திய அரசால் அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியம் தருகின்றீர்களா? அல்லது சர்வதேச நீதிமன்றம் அமைக்கும் காவிரி மேலாண்மை வாரியம் தான் உங்கள் விருப்பமா? என்பதே இந்த கட்டுரையின் ஒற்றை கேள்வி! </u></b></span><br />
<br />அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53250547749610675792018-01-10T21:07:00.000+05:302018-01-10T21:07:19.268+05:30“தெற்கிலிருந்து ஒரு சூரியன்” - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம் என்னும் நூல் குறித்த எனது பார்வை - பாகம் 1<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOp19mDLiBleZvBzNNrnKfL6LIpca1zbMQp_t6KJDrCUQ2khdvGS7AXLZ0686iT0ZBOAJWL3iyYainpLrHaK-6DsiT8b6nfOvJ3AQZDZYieNsI9i0hyOFZl8TarGTlGS31_FRwm_IX1jk/s1600/518Yzpd3CmL._SY344_BO1%252C204%252C203%252C200_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="346" data-original-width="260" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOp19mDLiBleZvBzNNrnKfL6LIpca1zbMQp_t6KJDrCUQ2khdvGS7AXLZ0686iT0ZBOAJWL3iyYainpLrHaK-6DsiT8b6nfOvJ3AQZDZYieNsI9i0hyOFZl8TarGTlGS31_FRwm_IX1jk/s640/518Yzpd3CmL._SY344_BO1%252C204%252C203%252C200_.jpg" width="480" /></a></div>
<br />
<br />
“தெற்கிலிருந்து ஒரு சூரியன்” - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம் என்னும் நூல் குறித்த எனது பார்வை தான் இந்த கட்டுரை! “தி இந்து - தமிழ் நாளிதழ் வழங்கும் “தமிழ் திசை” பதிப்பகம் வழங்கும் இந்த நூல் பற்றிய என் பார்வைக்கு முன்னர் அதன் முன்னூட்டமாக நான் நாகு சம்பவங்கள் பற்றி சொல்லி பிள்ளையார் சுழி போட்டு விட்டுதான் போக நினைக்கின்றேன்!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9_LHIJ-lAj3T4Rzcf5DRSeLRk4zcnUhvravuMs3qACgXvEZQs_SZoDh_hAzsk2DiNYY3aHiiKQS9m7r_DNN6BsnRdmifMdpRjy1aFIVdbdYp6KOIQh_v8Axu3kDBmh1GtjHVI1uhGCYM/s1600/26803601_10215279306755244_936765086_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="816" data-original-width="612" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9_LHIJ-lAj3T4Rzcf5DRSeLRk4zcnUhvravuMs3qACgXvEZQs_SZoDh_hAzsk2DiNYY3aHiiKQS9m7r_DNN6BsnRdmifMdpRjy1aFIVdbdYp6KOIQh_v8Axu3kDBmh1GtjHVI1uhGCYM/s640/26803601_10215279306755244_936765086_n.jpg" width="480" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTUqbeARkdeLRvRjbF-mtC-h3KVpNxBjOuF-HdbSvzM_nLhszHZLc0nBQJyCGLTK2EMiOvLmlQpMCACx91IzMKfF30fy2TjdTH_tW2Fb1XhX6UTLWWTOjHFNjhwb9JhRvNcbxt_pcBkGE/s1600/26793764_10215279308275282_528134185_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTUqbeARkdeLRvRjbF-mtC-h3KVpNxBjOuF-HdbSvzM_nLhszHZLc0nBQJyCGLTK2EMiOvLmlQpMCACx91IzMKfF30fy2TjdTH_tW2Fb1XhX6UTLWWTOjHFNjhwb9JhRvNcbxt_pcBkGE/s640/26793764_10215279308275282_528134185_n.jpg" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_7d5y1fpZR2y14vLINquiP1EhTSj2Iz8al1FxI1d6f02oP75HiIyskwVhb5g8npanC5Hf8TD6_z1jUDpLVP8Vq59PoF3E_iOBjMkUjc1lLp7kud9vIfU-Xbfis4uquxdb_p5VPOcjzCk/s1600/26855573_10215279309195305_621759346_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="816" data-original-width="608" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_7d5y1fpZR2y14vLINquiP1EhTSj2Iz8al1FxI1d6f02oP75HiIyskwVhb5g8npanC5Hf8TD6_z1jUDpLVP8Vq59PoF3E_iOBjMkUjc1lLp7kud9vIfU-Xbfis4uquxdb_p5VPOcjzCk/s640/26855573_10215279309195305_621759346_n.jpg" width="476" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPeoSip763pW8sHYAv7xtbDVHARXju6ynUSw_X9KyH852ZdkcjqFCQA58BFNI1aq_i-z3j64UgU0KZn4ilZCOmdWZ5ERcc551EKUrsK8OSIMEB5_JTmmxeHiXjbKwUXW4j5GX-KrqDzHQ/s1600/26696373_10215279310315333_906722644_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="816" data-original-width="608" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPeoSip763pW8sHYAv7xtbDVHARXju6ynUSw_X9KyH852ZdkcjqFCQA58BFNI1aq_i-z3j64UgU0KZn4ilZCOmdWZ5ERcc551EKUrsK8OSIMEB5_JTmmxeHiXjbKwUXW4j5GX-KrqDzHQ/s640/26696373_10215279310315333_906722644_n.jpg" width="476" /></a></div>
<br />
சம்பவம் 1 : கடந்த பிப்ரவரி மாதம் 2012ம் வருடம் முதல் வாரத்தின் போது எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. “வணக்கம்! அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் தானே இது” என்றது. நான் “ஆமாம் சார், நீங்க?” என்றேன்! அதற்கு “சார்! என் பெயர் சமஸ். விகடன் குழுமத்திலே இருந்து பேசுறேன். உங்க வலைப்பூ எல்லாம் படிச்சு இருக்கேன். வலைப்பதிவாளர்கள் பத்தி எங்கள் விகடனில் எழுத இருக்கோம். முதல் வாரத்தில் உங்களை முடிவு செஞ்சிருக்கோம். உங்க குடும்ப புகைப்படம் மற்றும் உங்க விபரம் எல்லாம் எனக்கு மெயில் பண்ண முடியுமா? உங்க வலைப்பூ பதிவில் இருந்து நல்ல பதிவா நாங்களே எடுத்து போட்டுக்குறோம்” என்றார். எனக்கு சந்தோஷம் ஒரு பக்கம் காற்றில் மிதப்பது போல... அதே நேரம் அவன் சொன்ன பெயர் எனக்கு மனதில் பதியவில்லை. இரண்டு மூன்று முறை கேட்டும் அது மனதில் வந்து குந்தவில்லை. “சார், கொஞ்சம் ஸ்பெல்லிங்கோட சொல்றீங்களா?” என்றேன். அதற்கு அவர் “சார், சமஸ்கிருதம் தெரியுமில்லையா... அதில் வரும் முதல் மூன்று எழுத்துகள் தான் என் பெயர்” என்றார். ஓ....இப்படி ஒரு பெயரா என கொஞ்சம் வியந்து கொண்டேன். பின்னர் அடுத்த வாரம் அதாவது 15.02.2012 ஆனந்த விகடன் இதழின் இணைப்பாக “என் விகடன்” இதழில் அட்டைப்படத்தில் என் வண்ண புகைப்படம், மற்றும் நடுப்பக்கத்தில் என் பற்றிய குறிப்புகள், நான் என் மகள், மகன் சகிதம் இருக்கும் புகைப்படம், என் பதிவுகளில் சில முக்கிய பதிவுகள் என வெளிவந்தது. அந்த இதழ் வெளிவந்த அன்று எங்கள் வலைப்பூ சகோதரி டாக்டர் ரோகினியின் திருமணம் திருக்கடையூரில் நடந்தது. அதன் பொருட்டு அத்தனை பிரபல வலைப்பதிவர்களும் மயிலாடுதுறைக்கு வருகை தந்திருந்தனர். எல்லோருக்கும் மட்டற்ற மகிழ்வு! ஒரே கொண்டாட்டம்! என் வலைப்பூவுக்கு உலகலாவிய அங்கீகாரம் கிடைத்தது போல பேரானந்தம். மேலும் திரு. சமஸ் அவர்கள் மீது எல்லைகடந்த அன்பு. அவரை ஒரு முறை நேரில் பார்த்து நன்றி தெரிவித்துக்கொள்ள ஆசைப்பட்டேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbffYkCmcc3DTT1nK3TGH1NCUdsMxU1Y6WiP6x3R3xq3tEg6RGHUYFiKHC6DBnaWWB9LaX0-9v9lsrYipVJPQn54Teukr9VPvOkUUymPLGptjx-chV1l_c3w5MyDfKiXtkq2Zs-WTET9g/s1600/the-hindu-tamil.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="70" data-original-width="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbffYkCmcc3DTT1nK3TGH1NCUdsMxU1Y6WiP6x3R3xq3tEg6RGHUYFiKHC6DBnaWWB9LaX0-9v9lsrYipVJPQn54Teukr9VPvOkUUymPLGptjx-chV1l_c3w5MyDfKiXtkq2Zs-WTET9g/s1600/the-hindu-tamil.jpg" /></a></div>
<br />
சம்பவம் 2: செப்டம்பர் மாதம், 2013ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பிரலமான “The Hindu" நாளிதழ் தன் தமிழ்ப்பதிப்பை ஆரம்பித்தது. இந்தியா முழுமைக்கும் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என விளம்பரம் ஆஹா ஓஹோ என கொடிகட்டி பறந்தது. நிச்சயம் அது ஒரு தரமான பத்திரிக்கையாக இருக்கும் என எல்லோருமே நம்பினார்கள். காரணம் “சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்” என்னும் பொதுபுத்தி தான் :-) 19.09.2013 என நினைக்கின்றேன்.. முதல் இதழ் வெளி வந்தது. 16 பக்கங்கள் மெயின் பேப்பர், அடுத்து மேலும் 16 பக்கங்களுக்கு இன்னுமொறு மெயின் பேப்பர், தவிர திருச்சி பதிப்புக்காக எட்டு பக்கம் என ஆக மொத்தம் 40 பக்கங்கள் வெளியான அந்த முதல் இதழில் “கருணாநிதி” என்னும் பெயர் என்பது கிடையாது. இத்தனைக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் அரசியலில் உச்சகட்டமாக அடுத்து வர இருக்கு நாடாளுமன்ற தேர்தல் முனைப்பிலும் தவிர பத்தாவது மாநில மாநாடு நடத்தி விடலாம் என்னும் சிந்தனையிலும் இந்திய அரசியலில் தவிர்க்க இயலாத மாபெரும் சக்தியாக, இருந்த நேரம். ஆனால் அன்று வெளியான “தி இந்து தமிழ் நாளிதழில்” மருந்துக்கு கூட கருணாநிதி என்னும் பெயர் இடம்பெறவில்லை. நான் ஆர்வமுடன் முதல் இதழை வாங்கி அரக்க பரக்க “கருணாநிதி” என்னும் பெயரை தேடித்தேடி அலுத்து விட்டேன். மிகுந்த கோவத்தில் என் வலைப்பூவில் “"தி இந்து" - தமிழ் தினசரி நாளிதழ் - "தரம்" பத்து பைசா!!!” என்னும் கட்டுரையை எழுதி முடித்து விட்டேன். அத்தனை கோவம் எனக்கு! ஒரு நூற்றாண்டு கண்ட பத்திரிக்கையின் தமிழ் பதிப்பில் வாழும் தமிழாக இருக்கும் கலைஞர் பற்றி வசைபாடியாவது ஒரு வார்த்தை எழுதாமல் அவரை புறக்கணித்த செயல் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால் மனம் போன போக்கில் எழுதி குவித்து விட்டேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
சம்பவம் 3: திருச்சியில் திமுகவின் பத்தாவது மாநில மாநாடு பிப்ரவரி 15,16 தேதிகளில் 2014ம் ஆண்டு நடக்க தேதி குறித்து விழா ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருந்தன. எல்லா பத்திருக்கைகளும் அதே செய்தியை தான் வெளியிட்டன. எங்கும் பரபரப்பு. யார் பேசினாலும் திருச்சி திமுக பத்தாவது மாநில மாநாடு பற்றிய பேச்சுகள் தான். இந்த நிலையில் அதாவது மாநாடு நடக்க இருந்த பதினைந்து நாட்கள் முன்பாக ஜனவரி 31ம் தேதி, 2014ல் இதே “தி இந்து தமிழ் நாளிதழ்” ஒரு அரைப்பக்க கட்டுரை வெளியிடுகின்றது. தலைப்பு என்ன தெரியுமா? ”ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்” . இது தான் அந்த தலைப்பு. முழுக்க முழுக்க தலைவர் கலைஞர் தலைமையிலான இந்த திமுக அஸ்தமனம் ஆகிக்கொண்டிருப்பதாக கட்டுரை சொன்னது. படிக்க படிக்க கோவம், கண்ணீர் என எனக்கு தாங்க முடியவில்லை. கட்டுரையின் முடிவில் எழுதியது யார் என போட்டிருந்தார்கள். எழுதியவர் “சமஸ்” அவர்கள். நண்பர் சமஸ் அவர்கள் அப்போது விகடன் குழுமத்திலிருந்து தி இந்து தமிழ் நாளிதழுக்கு சென்று விட்டார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நான் மிகுந்த மதிப்பு வைத்திருந்த ஒரு நண்பர் இப்படி ஒரு கட்டுரை எழுதினால் என்னவென்று சொல்வது? அதுவும் தன் முதல் இதழில் தலைவர் கலைஞர் அவர்களை புறக்கணிப்பு செய்த பத்திரிக்கையில் இன்னும் 15 நாளில் 25 லட்சம் திமுக தொண்டர்கள் கூட இருந்த நிலையில் இப்படி ஒரு கட்டுரை அரைப்பக்கம் வருகின்றது எனில் என்ன காரணமாக இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விடுகின்றேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWbdY_ehRLmcBpzczgyKtlhpTkb6K9YkJm6llYADdEL1P93m7XoS79m5hoOV-FFtMX0kKTT1yG66zlh8I9aFBOs6bqQP6mScDT5ffsJRB2vdjXSIYm-DyEk-31hXaGHSvQYA0C-YXcD2M/s1600/maxresdefault+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWbdY_ehRLmcBpzczgyKtlhpTkb6K9YkJm6llYADdEL1P93m7XoS79m5hoOV-FFtMX0kKTT1yG66zlh8I9aFBOs6bqQP6mScDT5ffsJRB2vdjXSIYm-DyEk-31hXaGHSvQYA0C-YXcD2M/s640/maxresdefault+%25281%2529.jpg" width="640" /></a></div>
<br />
<br />
சம்பவம் 4: பிப்ரவரி 15,16, 2014 திமுக பத்தாவது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறுகின்றது. இரண்டாம் நாள் அதாவது 16.2.2014 அன்று திமுகவின் அண்ணன் துரைமுருகன் அவர்கள் பேசுகின்றார்... அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்ன ஏது என்றெல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை. 15 நாட்கள் முன்பாக தி இந்துவில் வந்த அந்த “பேரியக்கத்தின் அஸ்தமனம்” கட்டுரையை எடுத்து பிரித்து மேய்கின்றார். கட்டுரையாளர் சமஸ் அவர்களை தூக்கி போட்டு பந்தாடுகின்றார். மேடையில் தலைவர் கலைஞர், பேராசிரியர், நம் செயல்தலைவர், தோழமை கட்சி, கூட்டணி கட்சி தோழர்கள் என எல்லோரும் இருக்கின்றனர். கூட்டத்தில் நம் இணைய தோழர்கள் தினகரன் அரசு உள்ளிட்ட நாங்கள் ஒரு குழுவாக அமர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். மேடையின் இடது பக்கத்தில் அரியலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான திரு எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு மேடையில் தாவி ஏற வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் இருக்கும் போது அண்ணன் துரை முருகன் அவர்கள் பேச்சுக்கு இங்கே விசில் பறக்கின்றது. எழுந்து நின்று கை தட்டுகின்றோம். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வேலையை விட்டு விட்டு மேடையிலிருந்த திரு. எஸ்.எஸ் சிவசங்கர் சார் அவர்கள் துரைமுருகன் அண்ணன் அவர்கள் பேச்சை அருகில் நின்று கேட்டு மெய்மறந்து நிற்கின்றார். ஆக கடந்த 15 நாட்களாக “பேரியக்கத்தின் அஸ்தமனம்” என்னும் நெஞ்சில் பாய்ந்த முள்ளை எடுத்து வீசிவிட்டு அந்த காயத்தில் களிம்பு தடவும் அண்ணன் துரைமுருகன் அவர்கள் பேச்சு அன்றைக்கு அப்படி ஒரு பேச்சு!<br />
<br />
***************<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA10LAliyZ-BgefEX9fIcMSAXqWYV9W-Di7jyG7BlHjCoDUtFLlXtv1RcPtCHgsigKVlk9oA2enX0zlGTqM9tWpK-hKOtVcXkU69gH5JcLER4eW7AcCVUXtYChyphenhyphenW_tRhRVIGp6pdJG_jc/s1600/BOOK+ADVT.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="544" data-original-width="320" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA10LAliyZ-BgefEX9fIcMSAXqWYV9W-Di7jyG7BlHjCoDUtFLlXtv1RcPtCHgsigKVlk9oA2enX0zlGTqM9tWpK-hKOtVcXkU69gH5JcLER4eW7AcCVUXtYChyphenhyphenW_tRhRVIGp6pdJG_jc/s320/BOOK+ADVT.jpg" width="188" /></a></div>
<br />
<br />
ஆக மேற்கண்ட இந்த நான்கு சம்பவங்களும் இப்போது நான் படித்து முடித்த “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” புத்தகத்தை படித்து முடித்த போது நெஞ்சில் நிழலாடுவதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை என்பதால் முதலில் அதை பகிர்ந்து கொண்டு பின்னர் அந்த புத்தகத்துக்கு வருகின்றேன். மேலே சொன்ன சம்பவங்களில் சம்பவம் 2ல் நான் என் வலைப்பூவில் “"தி இந்து" - தமிழ் தினசரி நாளிதழ் - "தரம்" பத்து பைசா!!!” என எழுதினேன் என்று சொன்னேன் அல்லவா... அதில் முத்தாய்ப்பாக ஒரு வரி எழுதி இருந்தேன்... //40 பக்கம் நான்கு ரூபாய். அதாவது பக்கத்துக்கு பத்து பைசா விலை! இதன் "தரமும்" பத்து பைசா மதிப்பிலானது மட்டுமே! இந்த பத்து பைசா என்னும் தரத்தை “தி இந்து தமிழ் நாளிதழ்” உயர்த்திக்கொள்ள வேண்டும் எனில் இதே புறக்கணிக்கப்பட்ட அந்த மாபெரும் பத்திரிக்கையாளர் - அரசியல்வாதி போன்ற பன்முகம் கொண்ட தலைவர் கலைஞரை பற்றி “உண்மை” களை எழுதி பிராயச்சித்தம் தேடிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை! // இது தான் அந்த முத்தாய்ப்பு வரிகள்! ( அந்த வலைப்பூவின் சுட்டி இதோ http://abiappa.blogspot.com/2013/09/blog-post_16.html ) ஆக சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து தி இந்து தமிழ்நாளிதழ் மற்றும் “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” புத்தகத்தின் நூல் பொறுப்பாசிரியருமான திரு சமஸ் அவர்களும் ஒரு அருமையான பிராயச்சித்தம் தேடிக்கொண்டனர்.<br />
<br />
தலைவர் கலைஞர் அவர்களை தன் முதல் இதழில் புறக்கணித்தமைக்காகவும், பேரியக்கத்தின் அஸ்தமனம் என எழுதியமைக்காக திரு. சமஸ் அவர்களையும் நான் நிந்தித்தேன். அதற்காக இந்த நூலை படித்த பின்னர் இப்போது வருத்தமும் தெரிவித்து பகிரங்க மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றேன். ஏனனில் புத்தகம் அல்ல அது. சுமார் நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் பொக்கிஷங்களில் ஒன்று! திமுகவினர் வீட்டில் வைத்து பாதுகாக்க வேண்டிய ‘பத்திரம்’ அது! கலைஞர் என்றாலே எட்டிக்காயாக மனதில் பதியம் போட்டு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது!<br />
<br />
மொத்தம் 210 பக்கங்கள்! அத்தனையும் முத்துக்கள். அட்டையையும் விட்டு வைக்கவில்லை. “தமிழ்வெல்லும்” என தலைவர் கலைஞரின் கையெழுத்தால் ஆரம்பிக்கப்பட்ட புத்தகத்தின் கடைசி பி அட்டையில் நம் அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டதையும், அதற்கான காரணங்கள் இன்னமும் இருக்கின்றன என விளக்கம் கொடுத்தமையுடன் முடிகின்றது அந்த புத்தகம்!<br />
<br />
அந்த புத்தகம் தனி ஒருவரால் எழுதப்பட்டது அல்ல. அதை ஒரு தொகுப்பு. தலைவர் கலைஞர் அவர்களை பற்றி மேல்நாட்டு அறிஞர் டேவிட்ஷூல்மன் (சங்க இலக்கியத்தை ஹீப்ரூ மொழியில் மெழிபெயர்த்தவர்) முதல் கலைஞரின் உதவியாளர்கள் திரு.நித்யா, சமையல் பணியாளர் திரு முத்து செல்வம் பிரகாஷ் வரை இந்த புத்தகத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள். தலைவர் கலைஞரையும், திராவிடத்தையும் வாழ்த்தியிருக்கின்றார்கள்.<br />
<br />
இந்தியாவின் சிறந்த அரசியல்வாதிகள், தோழமை கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், முன்னாள் பிரதமர், நீதியரசர்கள், காவல்துறை உயரதிகாரிகள், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், இந்திய காவல்பணி அதிகாரிகள், பிரபல பத்திரிக்கையாளர்கள், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்கள், தலைவர் கலைஞரின் வாரிசுகள், உறவினர்கள் அத்தனை ஏன்.... சாமானியர்கள் கூட கலைஞரை பற்றி தங்கள் எண்ணங்களை ஆசையுடன் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட எல்லா பிரிவினரும் தங்கள் சார்ந்த துறையில் கலைஞரின் செயல்பாடுகள் என்ன என்பதை சொல்லும் போது பிரம்மிப்பு தான் மேலிடுகின்றது!<br />
<br />
அதில் சில பொருளாதார கட்டுரைகள் .... எனக்கு எப்போதுமே... எனக்கு மட்டுமல்ல நான் பொதுவாக சொல்கிறேன்... பொருளாதார கட்டுரைகள் படிக்கும் போதே பாதியில் நல்ல தூக்கம் வரும். நான் கூட நினைப்பதுண்டு... இவர்கள் தங்கள் பேனா மையில் நைட்ரோவிட் கலந்து எழுதுகின்றார்களா என்று. ஆனால் இந்த புத்தகத்தில் அப்படி இல்லை. கொஞ்சம் கலோக்கியல் மாத்திரையும் கலந்து கொடுத்திருப்பது தான் சிறப்பு! அதற்கு பின்னர் வருகின்றேன்!<br />
<br />
முதலில் நான் சிலாகித்த கட்டுரை என்பது எழுத்தாளர் ஒருவர் எழுதியது. ஒரு வேளை... ஒரு வேளை என்னை எழுதியிருக்க சொல்லியிருந்தால் அந்த மூன்று பக்கங்கள் எழுத்தாளர் இமயம் என்னும் பெயருக்கு பதில் “சாமானியன் அபிஅப்பா” என வந்திருக்க கூடும். அதை எழுதியது ஒரு சாதாரணன். திட்டக்குடி ஆள். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்ப்பினர் என்பதை அவரது வாக்கியங்கள் மூலம் உணர்கின்றேன். அவர் எழுத்து என்பது தான் அபாரம். அந்த சிறுவன் கட்சியில் எப்படி சேர்ந்தான்.. அதற்கு அவன் வாடகை சைக்கிள் எடுத்து போன விஷயம்.. அங்கே டீக்கடை வைத்திருக்கும் ஒன்றிய செயலர் தனக்கும் டேபிள் மீது இலை போட்டு இட்லி வைத்து உபசரித்து, கட்சியில் சேர படிவம் கொடுத்து.... அடடே.. அடடே.. அந்த சின்ன பையன் சின்ன வயதில் “நம்மையும் மதித்து டேபிள், சேர், வாழை இலை.. அதில் இட்லி, பின்னர் தோளில் கை போட்டு உறுப்பினர் படிவம்... இதை படிக்கும் போது சிலிர்க்காமல் இருந்தால் அது அனேகமாக “அந்த 74 நாட்கள்” புகழ் ஜெயாவாக மட்டுமே இருக்க முடியும்! அந்த பையன் கட்டுரையை முடிக்கின்றார்.... (கவனியுங்கள்... பையன் சின்னவனா இருந்த போது ந் விகுதி... இப்போது இர் விகுதிக்கு நான் வந்து விட்டேன். // அவனுடைய வாழ்க்கையில் கலைஞருக்கு யாரெல்லாம் எதிரிகளோ அவர்கள் எதிரிகள். கலைஞருக்கு பிடித்தமானவர்கள் அவனுக்கும் பிடித்தமானவர்கள். எம்.ஜி.ஆருக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் கலைஞரை காட்டிலும் 100 மடங்கு பகை அவனுக்கு இருந்தது. அவர் நடித்த சினிமாக்கள் கூட பார்க்க மாட்டான். அப்படித்தான் ஜெயா மீதும், வைக்கோ மீதும், பயணங்கள் போது கலைஞரை பற்றி யாராவது குறை சொன்னால் பாய்ந்து விடுவான். தன் அப்பா, அம்மாவை திட்டினால் கூட அமைதி காப்பான். கலைஞரை திட்டி விட்டால் அவ்வளவு தான்/// இது தான் அந்த வைர வரிகள். அதில் முத்தாய்ப்பு வைக்கிறார் பாருங்கள்.....<br />
<br />
// “இன்று அவன் பெயர் இமையம். எழுத்தாளர். யோசித்துப்பார்க்கின்றார். கட்சி அவருக்கு கொடுத்தது என்ன? நேரிடையாக அவருக்கு அது அள்ளிக்கொடுத்து விடவில்லைதான்! ஆனால் ‘கட்சி கூட்டத்துக்கு வா! கட்சிக்காரன் திருமணத்துக்கு வா! கட்சிக்காரன் செத்து விட்டான் வா!// என அவனை சாதி பாராமல் அழைக்கும் தகுதியை அந்த உறுப்பினர் கார்டு அவருக்கு கொடுத்ததை சொல்கின்றார் அந்த எழுத்தாளர் இமையம்! <br />
<br />
கட்சியில் அவருக்கு பொறுப்பு கிடையாதாம். அவரே சொல்கின்றார். ஆனால் பெரிய பதவி ஒன்று உண்டாம். ஆனால் தலைவர் கலைஞர் ஊருக்கு வந்து விட்டால் உச்சஸ்தாயில் “டாக்டர் கலைஞர் வாழ்க” என்னும் அந்த பொறுப்பை மட்டும் அவரிடமே வைத்துள்ளாராம்... இதில் போட்டி போட எந்த சாதி வேண்டுமாகின் வந்து பார்க்கட்டும் என மல்லுகட்டும் உயர்தர திமுககாரர் கட்டுரை அது! இந்த நேரத்தில் நான் என் வலைப்பூ பதிவான '’கலைஞரின் சொத்து மதிப்பு எத்தனை கோடி?' ( http://abiappa.blogspot.com/2012/01/blog-post_05.html ) என்னும் பதிவை நினைத்துப்பார்க்கின்றேன். எழுத்தாளர் இமையம் என்பர் இருக்கும் இடம் நோக்கி கரம் குவிக்கின்றேன்!<br />
<br />
ஒரு கட்டுரை ... நான் ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்களின் நேர்முக அரசு உதவியாளர் திரு சண்முகநாதன் அவர்கள் பதிவை முழுவதும் பதிந்து விட்டேன். அது பற்றி பின்னர் பேசுகின்றேன். அடுத்து தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போதும், இப்போது ஓய்வுபெற்ற போதும் (நான் நேர்முக உதவியாளர் பற்றி சொன்னேன்... தலைவருக்கு ஓய்வு ஏது?) இப்போதும் உடனிருக்கும் திரு. இராஜமாணிக்கம் அவர்கள்! மிக மிக மிக அருமையான கட்டுரை அது! அடிப்படையில் திரு இராஜமாணிக்கம் அவர்கள் ஒரு மொழிப்போர் தியாகி. திரு. எம். நடராசன் அவர்கள் போன்ற மொழிப்போர் தியாகி! எம். நடராசன் என்பவர் சமீபம் 30 ஆண்டுகளாக மட்டுமே சசிகலா நடராசன் என நம்மாள் அறியப்பட்டார் என்பது தான் காலக்கொடுமை. திரு. எம் நடராசன் அவர்களோடு மொழிப்போர் தியாகிகள் தான் திரு. இராசமாணிக்கம் அவர்கள். திரு இராசமாணிக்கம் அவர்கள் ஒரு படிப்பறிவு இல்லாத கிராமத்தில் பிறந்த சாதாரண ஆள். அதிலே படித்து இன்றைக்கு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆகி ஓய்வு பெற்று இப்போதும் தலைவர் கலைஞர் கூட இருப்பவர். (இவரைப்பற்றி கூட என் வலைப்பூவில் நான் எழுதியதை பார்க்க வேண்டுமா ... இங்கே பாருங்கள் http://abiappa.blogspot.com/2012/06/blog-post_12.html ) இவரது அந்த கட்டுரை அல்லது நேர்காணல் என எதுவேண்டுமாகின் வைத்துக்கொள்ளுங்கள்...<br />
<br />
அதில் ஒரு கேள்வி... “தலைவர் கலைஞர் எதற்கெல்லாம் கோபப்படுவார்?” ... இவர் பதிலை பாருங்கள்.... பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் விஷயம் வரும் போது அதில் வார்த்தை தவறி யாராவது பிற்ப்பட்டோர் என சொல்லி விட்டால் கோபப்படுவார்.<br />
<br />
ஆக நான் மேலே சொன்ன ஒரு வரி என்பது ஒரு பி ஹெச் டிக்கான ஆய்வு கட்டுரைக்கான தலைப்பு! ஒரு முனைவர் பட்டத்துக்கான தலைப்பு என் தலைவரின் சாதாரண ஒரு சொல் வாக்கியம் என்பதை உணர்க! இதில் ஒரு சமூக கருத்தும், தமிழ் விளையாட்டும் இருக்கின்றது. பிற்படுத்தப்பட்டோர் என்னும் சொல்லாடலுக்கும் பிற்பட்டோர் என்னும் சொல்லாடலுக்கும் இருக்கும் வித்யாசத்தை எவன் ஒருவன் உணர்கின்றானோ அது தான் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வித்யாசம்! தட்ஸ் ஆல்!<br />
<br />
பிற்ப்பட்டோர் என சொன்னால் அவன் நிஜமாகவே பிற்ப்பட்டவன்... ஆனால் பிற்படுத்தப்பட்டவன் என சொன்னால் அவனுக்கு மேலே ஒரு ஆதிக்க சாதி இருந்து செயல்பட்டது என்பது பொருள். அவனை பிற் படுத்தினார்கள் யாரோ என்னும் பொருள் இருக்குதா இல்லியா? திரு. இராஜமாணிக்கம் என்னும் அவரது ஐ ஏ எஸ் படித்த உதவியாளர் அந்த பேட்டியில் ஜஸ்ட் லைக் தட் சொல்லி விட்டு சென்ற வார்த்தைகளில் தலைவர் கலைஞர் விளையாடியதை காண்பீர் மக்களே! காண்பீர்!<br />
<br />
நம் செயல்தலைவர் அவர்களிடம் ஒரு பேட்டி... அடடா அருமை...<br />
<br />
அப்பா உங்களை அடித்தாரா போன்ற சில்லி கேள்விகள்.. அதை விடுங்கள்.. ஆனால் அவரது பதில்கள் தான் அற்புதம்... செயல்தலைவரின் பதில்களில் இருந்து ஒரு விஷயம் நன்கு புரிந்து கொள்ள இயலும்.... இதை எத்தனை பேர் உணர்ந்தார்கள் என புரியவில்லை. எம் தலைவர் செயல்தலைவர் அவர்கள் என்பது ஒரு சுயம்பு... யாரும் கைதூக்கி வளராது தானாக வளர்ந்த சுயம்பு என்பது புரிய வரும்! சொல்கிறேன் கேளுங்கள்...<br />
<br />
பொதுவாக நம் பிள்ளைகள் விஷமம் செய்தால் என்ன செய்வோம். அதிக பட்சம் பக்கத்து வீட்டு ராமநாதன் கிட்டே சொல்வோம்... “சார் அவன் சைக்கிள்ல ரொம்ப வேகமா போறான். நான் சொன்னா கேட்க மாட்டான். நீங்களாவது கொஞ்சம் அதட்டி சொல்லுங்க சார்” ... இதானே நடக்கும்.. ஆமாம் அதான் நடந்தது. செயல்தலைவர் விஷயத்திலும் அதான் நடந்தது.என்ன ஒன்று... நம் லெவலுக்கு பக்கத்து வீட்டு ராமநாதன். தலைவர் கலைஞர் லெவலுக்கு எம்.ஜி. ஆர். அது தான் நடந்தது. “இனி நீ திமுக கூட்டம் எல்லாம் போடக்கூடாது. இது தான் உன் அப்பா விருப்பம்” என எம் ஜி ஆரால் அன்பாக கண்டிக்கப்பட்டவர் தான் நம் செயல்தலைவர்! எம் ஜி ஆரால் கண்டிக்கப்பட்டவர்கள் பலருண்டு. அதில் சிலர் இப்போது சுண்டு விரல் மற்றும் ஆட்காட்டி விரல் மட்டும் நீட்டி மற்ற விரல் மடக்கி காண்பிக்கின்றனர். ஆனால் அந்த 16 வது வயதில் தன் நடுவிரலை மட்டும் நீட்டி காண்பித்தவர் தான் நம் செயல்தலைவர் அவர்கள்!<br />
<br />
எம். ஜி .ஆர் அவர்களை அழைத்து வந்து கோபாலபுரம் வாசலில் போட்ட அண்ணா பிறந்தநாள் கூட்டம் போட்டவர் அவர்! முரசே முழங்கு என்னும் நாடகத்தை தமிழகம் முழுமையும் 40 இடங்களில் நடத்தி விட்டு வந்து 1971ல் திமுக வெற்றி பெற்றதும் வெற்றிக்கூட்டம் நடத்தியவர் தான் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். ஆக நம் செயல் தலைவரின் முதல் பிரச்சார வெற்றி என்னும் அந்த 185/234 என்பதை இன்னும் திமுகவே எட்டவில்லை. அப்போது அந்த “முரசே முழங்கு”் நாடகத்தி வெற்றி விழா எம். ஜி ஆர் தலைமையில் நடந்த போது தலைவர் கலைஞர் சொன்னார்... “இது நிறைவு விழா” என்று. ஆனால் நம் செயல்தலைவரோ “இது முடிவல்ல... ஆரம்பம்” என்றார் அப்போதே... ஆக நம் தலைவர் என்னும் சூராவளியால் தடுக்க இயலா சுயம்பு தலைவர் தான் எம் சுனாமி செயல்தலைவர் அவர்கள்!<br />
<br />
அடுத்து தலைவரின் தவப்புதல்வி திருமதி கனிமொழி அவர்களின் பேட்டி!<br />
<br />
அந்த கட்டுரையில்.... மாடியில் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து விட்டு திரு முரசொலி மாறன் அவர்கள் வேகமாக மாடிப்படி இறங்கி வருகின்றார்கள். கீழே சிறுமியாக நம் இப்போதைய திமுக பாராளுமன்றக்குழு தலைவர் திருமதி கனிமொழி அவர்கள்! அந்த சிறுமியை பார்த்து நின்று அய்யா முரசொலி மாறன் சொல்கின்றார் “உன் அப்பாவை எல்லா நேரத்திலும் அரசியல்வாதியாக இருக்க சொல்லாதே” என! பின் கார் கிளம்பி செல்கின்றது. சிறுமி கனிமொழி மேலே செல்கின்றாள்... அப்பாவை பார்க்கின்றாள்... “என்னம்மா உன் பெரிய அத்தான் என்ன சொல்லிட்டு போறான்?” என்கிறார் தலைவர்!<br />
<br />
அந்த சிறுமிக்கு அந்த நேரத்தில் தன் தந்தையின் வாசகங்கள் மனதில் படியவில்லை. தன் பெரிய அத்தான் திரு.முரசொலி மாறன் சொன்ன வார்த்தைகள் தான் மனதில் பதிகின்றன! நான் நினைத்துப்பார்க்கின்றேன். பல சமயம் சில விவாதங்களில் “அபிஅப்பா நீங்க அவர் இடத்தில் இருந்து பாருங்க” என்னும் சொல் திருமதி கனிமொழி அவர்களிடத்தில் இருந்து வரும்! நான் அமைதியாகிவிடுவேன். இந்த இடத்தில் நான் நினைத்துப்பார்ப்பது ஒரு விஷயம் .... நம் செயல்தலைவர் “அவரை நான் மட்டுமல்ல, என் தங்கை கனிமொழி மட்டுமல்ல எல்லோருமே தலைவர் என்று தான் அழைப்போம்” என்னும் வாக்கியம் பாருங்கள். அதுவும் உண்மை தான். நானே பலமுறை திருமதி கனிமொழி அவர்களிடம் கேட்டுள்ளேன். தலைவரை எப்படி அழைப்பீர்கள் என்று!<br />
<br />
அதற்கு அவர்கள் ஒரு முறை “தி ரோஸ் ஈஸ் தி ரோஸ் ஈஸ் தி ரோஸ்.... என சொல்லி சிரித்தபடியே... “நான் மட்டுமல்ல, அண்ணன் கூட ... அண்ணன் மட்டுமல்ல என் அம்மா கூட, பெரியம்மா கூட தலைவர்ன்னு தான் சொல்லுவோம்... மிக சில சமயம் நான் அப்பா என்பேன்....” என்றார். இந்த இடத்தில் நான் அய்யா முரசொலி மாறன் அவர்கள் ஒரு சண்டை போட்டுக்கொண்டே கீழே வந்து திருமதி கனிமொழி அவர்களிடம் (அப்போது சிறுமி என வைத்துக்கொள்ளுங்கள்) சொன்னது “எப்போதுமே அரசியல்வாதி என இருக்க சொல்லாதே”...<br />
<br />
மனசாட்சியாக இருந்தாலும் கட்சி என வந்து விட்டால் குடும்பம் கூட கட்சி தான் எனத்தான் பார்த்துள்ளார் தலைவர் கலைஞர்!ஆனால் எனக்கென்னவோ அப்படி தெரியவில்லை. அப்படியாகின் “இதோ கீழே இறங்கி போகும் முரசொலி ஆசிரியர் என்ன சொன்னார் என்றோ அல்லது நம் கட்சி எம்.பி என்ன சொன்னார் என்றோ கேட்டிருக்க வேண்டும்! ஆனால் “உன் பெரியத்தான் என்ன சொன்னார்?” என கேட்கும் தொணி என்ன? ஒரு வேளை மனிரத்னம் படம் போல அஷோக்கை கவுதம் என்றோ , கவுதமை அஷோக் என்றோ வேண்டுமென்றே அழைக்கும் விஜயகுமாரின் உத்தியா? யாமறியேன் பராபரமே!<br />
<br />
இதையெல்லாம் விடுங்கள்! இன்னும் ஒரு கட்டுரை இருக்கு.... விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் கட்டுரை தான் அது! அதன் கடைசி வரிகள்! நான் பார்த்தவரை இந்த பேட்டியாளர்கள், கட்டுரையாளர்கள் எல்லோருமே கடைசி பாராவில் கலங்க வைத்து விட்டனர். ரவிக்குமார் கட்டுரை போலவே தான் திரு சண்முகநாதன் கட்டுரையும்! “அய்யா, நான் 11 மணி வரை இங்க தான் இருக்கேன். என்னை திட்டுவீங்களே! அதற்காகவாவது கூப்பிடுங்கள்” என கதறிய போது கலங்காத நெஞ்சம் உண்டா? அது போலவே ரவிக்குமார் கட்டுரையும் முடிகின்றது..<br />
<br />
// விட்ட இடத்தில் இருந்து தான் பேசுவார் அவர். அதாவது மனசில் நம்மோடு பேசிக்கொண்டு இருக்கின்றார். இப்போது அப்படியே தான்... அதாவது என்னோடு பேசிக்கொண்டு தான் இருக்கின்றார். அது எனக்கு கேட்கின்றது// இந்த விரிகள் படிக்கும் போது தான் நான் அழுதேன்... ஆமாம் நானும் அதை உணர்ந்தேன்... விட்ட இடத்தில் இருந்து தான் அவர் கண்கள் பேசியது. நானும் அதை தொடர்ந்தேன். மௌனம் என்பது அழகிய மொழி என்பது எனக்கும் அப்போது தான் புரிந்தது. ரவிக்குமார் ... நீங்கள் நல்ல எழுத்தாளர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை!<br />
<br />
பேராசிரியர் கட்டுரை... அடடா அருமை! தன் ஊர் அதாவது எங்கள் ஊர் மயிலாடுதுறை பற்றி பேசுகின்றார். அதில் மகாதானத்தெரு, பட்டமங்கலத்தெரு பற்றி பேசுகின்றார்.. அடடா... இந்த புத்தகத்தில் இரண்டு இடத்தில் மயிலாடுதுறை வருகின்றது. 1930களில் மயிலாடுதுறை, மாயூரநாதர் கோவில் பிரவேசம் பற்றிய ஒரு இடத்தில் மற்றும் பேராசிரியர் கட்டுரையில் வருகின்றது. அதில் மகாதானத்தெருவை மகாதேவத்தெரு என எழுத்துப்பிழையா அது அல்லது சொற்ப்பிழையா என தெரியவில்லை. எனக்கு பேராசிரியர் ஞாபக சக்தியில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை. இதை அடுத்த பதிப்பில் திருத்துவார்கள் என நம்புகிறேன். அது போல “ர்” விட்டுப்போன ஒரு இடம் இருக்கு! அது எல்லாம் பெரிய குறை இல்லை இத்தனை பெரிய பொக்கிஷத்தில்!<br />
<br />
அண்ணன் துரைமுருகன் கட்டுரை.... ஒரு சமயம் கடையநல்லூரில் இருந்து ராஜாமணி என்கிற தொண்டர் வந்தார். வந்ததும் தன் மாவட்ட உள்ளூர் கோஷ்டி சண்டையை நீளமாக விவரித்தார். கலைஞருக்கு கோபம் வந்தது. “என்னய்யா நான் உசிரை கொடுத்து கட்சியை காப்பாத்திகிட்டு இருக்கேன். நீங்க சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க”ன்னு செல கோவமா திட்டிட்டார். வந்தவர் போய்விட்டார். பின்னர் என்ன நினைத்தாரோ தலைவர். உடனே எங்களை கூப்பிட்டு அவரை அழைத்து வர சொன்னார். அந்த தொண்டர் பஸ்ஸ்டாண்டு போய்விட்டார். நாங்கள் அவரை பிடித்து அழைத்து வந்தோம். உடனே தலைவர் “யோவ்... நான் என்னவோ கோவத்தில் இருந்தேன். நீ உன் குறையை சொல்ல வந்திருக்க ... இத்தனை தூரம் பயணம் செஞ்சு! நான் பாட்டுக்கு என் கோவத்தை கொட்டிட்டேன். என்னை மன்னிச்சுடுய்யா” என்றார். அந்த பெரியவர் அழுதுவிட்டார். இது தான் கலைஞர் என்று தன் கட்டுரையில் சொல்லி இருக்கின்றார். அண்ணன் துரைமுருகன் போன்றவர்கள் பல நூல்கள் எழுதலாம். அத்தனை கருக்கள் இருக்கின்றன அவர்களிடம்!<br />
<br />
இதே போல ஒரு முறை தங்கம் தென்னரசு சார் ஒரு விஷயம் சொன்னார்... “ஒரு முறை ஒரு முக்கியஸ்தர் வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. வந்தவுடன் தலைவர் “ஏன்யா லேட்டு?” என்றார். அதற்கு அவர் “மவுண்ட் ரோட்டுல ரொம்ப ட்ராபிக் ஆகிடுச்சு தலைவரே”ன்னு சொன்னது தான் தாமதம். தலைவர் ரொம்ப கோபமாகிட்டார். “அடடே! அந்த மவுண்ட் ரோடு என்பது அண்ணாசாலை என கெசட்ல மாறிடுச்சுய்யா. இது கூட தெரியாம எப்படி?”ன்னு கேட்டார்” என சொல்ல சொல்ல நாங்கள் எல்லாம் “இதுக்கெல்லாமா கோவப்படுவாங்க” என்பது போல நான் தங்கம் சாரை பார்த்தேன். “ஐஞ்சு பைச திருடினா தப்பா?” என அன்னியன் கேட்கும் டயலாக் தான் எனக்கு அவர் முகத்தில் தெரிந்தது. அப்போது காரை ஓட்டியது மதன்குமார். காரில் இருந்தது நான், சதக், அறந்தை ராஜுமுருகன், சூரியன் சக்தி, ஆரூர் பாலா... இது நடந்தது இந்த புத்தகம் வெளிவந்த மூன்று ஆண்டுகள் முன்பாக கத்தாரில். ஆனால் இப்போது வெளியான இந்த புத்தகத்தில் தலைவர் கலைஞரின் நேர்முக உதவியாளர் திரு. ராஜமாணிக்கம் அவர்கள் பேட்டியில் இதே விஷயம் இருக்கின்றது. ஆக தலைவர் கலைஞர் அவர்களின் பர்ஃபெக்ஷன் என்பது எல்லா விஷயத்திலும் தெரிகின்றதா?<br />
<br />
நான் சொல்ல வந்த விஷயத்தில் கொஞ்சம் கூட சொல்லி முடிக்கவில்லை... நிறைய இருக்கின்றது அந்த புத்தகம் பற்றி!<br />
<br />
எனக்கு இந்த புத்தகம் பரிசளித்த என் அன்பு அண்ணன் திரு. கு.மா.பா. இளங்கோவன் அவர்களுக்கு நன்றிகள்!<br />
<br />
பின்னர் மீண்டும் தொடர்கின்றேன்....<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBZr1Apf-Nycobjgn_KoqVP7Ia8kviP7aVMIVYXB5DQtYOI-SIkrrAMJyPBNk-JRrztHpn1m2Xu5ppKNL9VLZeiEhiBCnLQ8Yslnz4F58t2UP77fwJJKTzXbs7XLZKGNgaD1KfpHYDI5Q/s1600/24chvcm-edit2-karunanidhi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="503" data-original-width="630" height="510" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBZr1Apf-Nycobjgn_KoqVP7Ia8kviP7aVMIVYXB5DQtYOI-SIkrrAMJyPBNk-JRrztHpn1m2Xu5ppKNL9VLZeiEhiBCnLQ8Yslnz4F58t2UP77fwJJKTzXbs7XLZKGNgaD1KfpHYDI5Q/s640/24chvcm-edit2-karunanidhi.jpg" width="640" /></a></div>
<br />அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-51406795578069818242017-12-21T18:58:00.000+05:302017-12-21T18:58:52.735+05:30 திமுகவின் பொருளாளராக அமர திருமதி. கனிமொழி அவர்களுக்கு காலம் “கனி”ந்து விட்டது!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL0TS_F0rIV3zZqH7rA2D5kx8zs9DpzAOhd6US9lA-DnEeKJxm9HzxknKLhe_udT9V0bH9GpURZA_FPwNx3lF5z_yMkpcF4cUwbukQRQBPMXaeXOvZ7ZDoqUBXgUUTN3H40W0pewX3BHY/s1600/17203104_1356185524417175_9136783457028106570_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="744" data-original-width="960" height="494" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL0TS_F0rIV3zZqH7rA2D5kx8zs9DpzAOhd6US9lA-DnEeKJxm9HzxknKLhe_udT9V0bH9GpURZA_FPwNx3lF5z_yMkpcF4cUwbukQRQBPMXaeXOvZ7ZDoqUBXgUUTN3H40W0pewX3BHY/s640/17203104_1356185524417175_9136783457028106570_n.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<b><span style="font-size: x-large;"> <span style="color: blue;">“ஸ்பெக்ட்ரம்” வழக்கில் “திமுக” விடுதலை!</span></span></b><span style="color: blue;"> </span>ஆமாம்! இது தனிப்பட்ட நபரான அண்ணன் ஆ.ராசா அவர்கள் விடுதலையோ அல்லது தனிப்பட்ட அம்மா திருமதி தயாளு அம்மையார் அவர்கள் விடுதலையோ அல்லது தனிப்பட்ட திருமதி கனிமொழி அவர்கள் விடுதலையோ என கருத முடியாது! இது திமுகவின் விடுதலை! மேற்சொன்ன தயாளு அம்மையார் அனுபவித்த மன உளைச்சல், ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் அடைந்த மன உளைச்சல், சிறைவாசம், அவமானங்கள் ஆகியவைகளை குறைத்தும் மதிப்பிட முடியாது! அதே நேரம் திமுக என்னும் இயக்கம் பட்ட இன்னல்கள் என்பதை ஒரு பட்டியலில் அடைத்தும் விட முடியாது. திமுக என்பது சுமார் ஒரு கோடி உறுப்பினர்களால் கட்டமைக்கப்பட்ட கோட்டை. அதில் ஒரு செங்கல் பழுதானாலும் அந்த கோடி தொண்டனுக்கும் மன உளைச்சல் தான்! ஆனால் அண்ணா கண்ட அந்த இயக்கத்தை 50 ஆண்டுகளாக எவ்வித சேதாரமுமின்றி காத்து வரும் தலைவர் கலைஞர் அவர்கள் இந்த “ஸ்பெக்ட்ரம்” பழியால் பட்ட வேதனை சொல்லி மாளாது! ஆகவே இது கொண்டாடப்பட வேண்டிய தீர்ப்பு!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQSE7g7Jxh-uqRLHYmhLiMwTmZE5qIGGbNhoAJCQ0AoGHcsQDFDua27FtxtcjdJP2yYPpe9EoJYC9dY7lyH6xPEPtbnw3Z7wNWAumuxGhxvFtO9x35dche0qI0Vc1FgT1PwdmmSXO27Sw/s1600/15823455_1293509650684763_27240183117845373_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="937" data-original-width="960" height="624" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQSE7g7Jxh-uqRLHYmhLiMwTmZE5qIGGbNhoAJCQ0AoGHcsQDFDua27FtxtcjdJP2yYPpe9EoJYC9dY7lyH6xPEPtbnw3Z7wNWAumuxGhxvFtO9x35dche0qI0Vc1FgT1PwdmmSXO27Sw/s640/15823455_1293509650684763_27240183117845373_n.jpg" width="640" /></a></div>
<br />
எப்படி கொண்டாடலாம் என்பதில் தான் இப்போதைக்கு திமுகவின் கவனம் இருக்க வேண்டும்! அந்த கொண்டாட்டங்கள் தமிழகத்தின் கடைக்கோடி ஆட்களை சென்றடைய வேண்டும்! என்ன செய்யலாம் அதற்கு? ஒரு மாநில மாநாடு நடத்தி “ஸ்பெக்ட்ரம்” விழா எடுக்கலாம்! திமுகவின் 11 வது மாநில மாநாடு “ஸ்பெக்ட்ரம் சிறப்பு மாநாடு” என பெயரிட்டு அதை கொண்டாடலாம். அதற்கு முன்பாக அந்த மாநாட்டு விளக்க கூட்டம் தமிழகம் முழுமையும் நடத்தி பொதுமக்களிடம் நம் அப்பழுக்கின்மையை கொண்டு சேர்க்கலாம்! ஸ்பெக்ட்ரம் வழக்கு என்பதே தனிப்பட்ட நபர்களை அழிக்க நடத்தப்பட்ட வியூகம் அல்ல! 1949ல் ஆரம்பிக்கப்பட்டு அண்ணா அவர்களையும் சேர்த்து ஆறு முறை முதல்வர் பதவியையும் பிடித்த இயக்கம்! சமூக நீதியை காத்த இயக்கம்! அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டமியற்றிய இயக்கம்! அப்படிப்பட்ட இயக்கத்தை அழிக்க நடந்த யுத்தத்தில் திமுக இப்போது வென்றுள்ளது. ஆகவே இதன் “வெற்றிக்கொண்டாட்டம்” என்பது விண் முட்ட நடத்தப்பட வேண்டியது அவசியம். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2dJAM2OZJ8gdI3UVx7v6li5Iy-LapCEruB_y-LOCgcdE0G3-B7bOw6Hyh0hLAFMfo8Vps03T4rLlGSegUFPwVfchOD4wSO5n64SSixR6yqWE2y3gaqI81aCKHtu1qmd7EWTPxlkL_enw/s1600/212g2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="472" data-original-width="670" height="450" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2dJAM2OZJ8gdI3UVx7v6li5Iy-LapCEruB_y-LOCgcdE0G3-B7bOw6Hyh0hLAFMfo8Vps03T4rLlGSegUFPwVfchOD4wSO5n64SSixR6yqWE2y3gaqI81aCKHtu1qmd7EWTPxlkL_enw/s640/212g2.jpg" width="640" /></a></div>
<br />
<br />
இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு என்பது திமுக என்னும் இயக்கத்தின் மீது மத்திய ஆட்சியாளர்கள் மற்றும் ஆதிக்க சக்திகளை ஒருங்கே தன்னகத்தே கொண்ட ஒரு விஷப்பாம்பு புற்றான மத்திய தணிக்கைக்குழு, அதற்கு மகுடி ஊதும் பிடாரன்களான ஆதிக்க ஊடகங்கள் ஆகியவைகள் சேர்ந்து தொடுக்கப்பட்ட யுத்தம்! யுத்தகளத்தில் அந்த எதிரணியினர் பிணையாக பிடித்து வைத்து போரை ஆரம்பித்தது யாரைத்தெரியுமா.... தயாளு அம்மையார், ஆ.ராசா, கனிமொழி ஆகியவர்களைத்தான்! இந்த போரில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது! ஆம்! பிணையில் பிடிபட்டவர்களே யுத்தமும் செய்தார்கள். திமுகவின் ஒட்டு மொத்த படையணியும் ஊக்கம் கொடுத்தது! இயக்க தலைமையோ தன் முழு ஆதரவையும் கொடுத்து அழகு பார்த்தது! பிணையில் பிடிபட்டவர்கள் போராடினார்கள். ஒரு வருடம்,இரு வருடம் அல்ல... ஏழு ஆண்டுகள் நடந்த தொடர் போராட்டம் அது! போர் தொடுத்தவர்கள் தான் அடிக்கடி நிராயுதபாணியாகினர். பிடிபட்ட ஆ.ராசா அவர்களோ “இன்று போய் நாளை வா” என அனுப்பிய அதிசயம் அடிக்கடி நிகழ்ந்தது. போரின் முடிவில் கூட வெற்றி தோல்வியை அறிவிக்க கூட அவர்கள் நேற்று போய் இன்று தான் வந்தனர் என்பது தான் ஆச்சர்யமே! இன்றோ திமுக என்னும் இயக்கத்தை அழிக்க நடந்த போரில் நம்மவர்கள் திமுக தலைமைக்கோ, அல்லது தொண்டர்கள் என்னும் படையணிக்கோ அல்லது தங்களுக்கோ எவ்வித சேதாரமும் இல்லாமல் வெற்றிக்கனியை பறித்துக்கொண்டு வந்து நம் செயல்தலைவர் காலடியில் சமர்பித்து விட்டனர். அதை நம் செயல்தலைவரோ தலைவரிடமுமும், பொதுச்செயலாளரிடமும் பகிர்ந்து கொண்டார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEju5RFAarEKRTXl_V8hv1c9phZ-0rTj4p8zgU1ARaTjQPIWx9pd5By2WKeLIAb17E1D3dnQ1l9Q-GGHH-jF5BvA1hGp1RmhgYBu5GzJvmhXAgl_nDAFsVfM5dEjHIQ9hj2-607B7ux8lDU/s1600/13100877_1105449039490826_811326315471670269_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="639" data-original-width="960" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEju5RFAarEKRTXl_V8hv1c9phZ-0rTj4p8zgU1ARaTjQPIWx9pd5By2WKeLIAb17E1D3dnQ1l9Q-GGHH-jF5BvA1hGp1RmhgYBu5GzJvmhXAgl_nDAFsVfM5dEjHIQ9hj2-607B7ux8lDU/s640/13100877_1105449039490826_811326315471670269_n.jpg" width="640" /></a></div>
<br />
பொதுவாக ஒரு போருக்கு பின்னால் அதன் வெற்றிக்கு பின்னாள் போர் செய்த அந்த வெற்றி வீரருக்கு மன்னர் பரிசளிப்பது வழக்கம் தானே? அதைத்தான் நம் செயல்தலைவர் அவர்களும் செய்வார் என நம்புகின்றோம் படையணியின் கடைக்கோடி வீரர்கள்!<br />
<br />
திமுக என்னும் ஆலமரத்தின் விதை போட்டு அதை செடியாக்கி, மரமாக்கியவர் நம் அண்ணா அவர்கள்! 1949ல் நம் இயக்கத்தை தோற்றுவித்த போது அதற்கு தலைமை பொறுப்பான தலைவர் கிடையாது, பொதுச்செயலாளர் கிடையாது, பொருளாளர் கிடையாது. ஒரு கூட்டுக்குழு தான் அனைத்து பொறுப்புகளையும் கவனித்து வந்தது. அதன் பின்னர் இயக்கம் வளர்ந்து வளர்ந்து வரும் போது அதாவது மூன்றாண்டுகளில் 1952ல் அந்த கூட்டுக்குழு மட்டுமே சமாளித்து விட முடியாது என்னும் நிலை வந்தது. அப்போது தான் அண்ணா அவர்கள் பொதுச்செயலாளர் ஆனார். அப்போது நெடுஞ்செழியன், ஈ.வி.கே சம்பத் ஆகியோர் தலைமை நிலைய செயலர்கள் ஆனார்கள். கவனிக்க... அப்போது துணைப்பொது செயலாளர் என்னும் பதவி திமுகவில் இல்லை. தலைவர் பதவி என்பதை அண்ணா அவர்கள் “பெரியாருக்காக” காலியாக வைத்திருந்தார். அந்த 1952ல் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அந்த மாபெரும் இயக்கத்துக்கு கும்பகோணத்தை சேர்ந்த திரு. குடந்தை கே.கே.நீலமேகம் அவர்கள் முதன் முதலாக பொருளாளர் ஆனார்கள். அப்போது திமுகவுக்கென்று சொத்துகள் கிடையாது. “பொருள்” அவ்வளவாக கிடையாது. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் காலணா தான் கட்சியின் பொருள். அதற்கு கூட அப்போதிருந்தே திமுக தன் வரவு செலவுகளை துல்லியமாக வைத்திருந்தது. ஆக அப்படி முதல் பொருளாளர் ஆனவர் தான் குடந்தை கே.கே.நீலமேகம் அவர்கள். அப்போது அவருக்கு அண்ணா அவர்களுக்கு சமமான வயது தான் இருக்கும்! அதாவது 40 பிளஸ் தான்! ஆக நம் இயக்கத்தில் ஒரு பொறுப்புக்கு வர வேண்டும் எனில் வயது என்பது ஒரு பொருட்டல்ல. உழைப்பும் தியாகமும் தான் பொறுப்புக்கு தகுதி என்னும் நிலை தான் அப்போது முதலே!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6QszZwr6jDtMaITSti0Gm4ta9QWe0ASNW3ZbJ-lHXUgFxjL-KqlhShqiRyQG277EFUPtm7a4FOEdalrIWlBQPBUBi-AqJlJT5hYjgpQaPCqfBjm7eCKrNGVAGnxnurvzctkM9b2aJkzg/s1600/13103541_1101970876505309_6766776854570526028_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="448" data-original-width="960" height="298" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6QszZwr6jDtMaITSti0Gm4ta9QWe0ASNW3ZbJ-lHXUgFxjL-KqlhShqiRyQG277EFUPtm7a4FOEdalrIWlBQPBUBi-AqJlJT5hYjgpQaPCqfBjm7eCKrNGVAGnxnurvzctkM9b2aJkzg/s640/13103541_1101970876505309_6766776854570526028_n.jpg" width="640" /></a></div>
<br />
அதன் பின்னர் வருடம் ஆக ஆக, இயக்க பொறுப்புகள் பலருக்கு வருகின்றது. அது போலவே அண்ணா அவர்கள் காலத்திலேயே நம் தலைவர் அவர்களுக்கும் “பொருளாளர்” பொறுப்பும் வருகின்றது. தலைவர் அவர்கள் பெயரிலேயே “நிதி” வைத்திருப்பவர் அல்லவா? அதனால் திமுக என்னும் இயக்கத்துக்கு ஆங்காங்கே கட்சி அலுவலகங்கள் இயக்கத்தின் பெயரால் தொண்டர்களிடம் துண்டேந்தி வாங்கப்படுகின்றது. அது போல தேர்தல் நேரத்தில் நிதி திரட்ட வேண்டுமா? அஞ்சியதே இல்லை இந்த கருணா “நிதி” அவர்கள்! தேர்தல் நேரத்தில் தேர்தல் நிதி வசூல் செய்யும் பொறுப்பு அப்போது பொருளாளர் ஆக இருக்கும் இப்போதைய தலைவர் கலைஞர் அவர்களிடம் இருந்தது. அண்ணா அவர்கள் பத்து லட்சம் இலக்கு என சொன்ன போது அதை 11 லட்சமாக கொண்டு வந்து கொட்டியவர் கலைஞர். அது போல தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படுகின்றது அண்ணாவால்! அந்த மாபெரும் கூட்டத்தில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் பெயரை அறிவித்துக்கொண்டே வந்த அண்ணா அவர்கள் கடைசியாக “சைதாப்பேட்டை தொகுதி....” என சொல்லிவிட்டு அமைதி காக்க... கூட்டம் ஸ்தம்பித்து போய் நிற்கின்றது. இது வரை கலைஞர் பெயரை சொல்லவில்லை அண்ணா எனும் போது தொண்டர்களுக்கோ குழப்பம். ஏனனில் அப்போதே கலைஞர் அவர்கள் சட்ட மன்றத்துக்கு பத்து வருட சீனியர். ஆமாம் 1957ல் குளித்தலை, 1962ல் தஞ்சை என வெற்றி பெற்றவர். அண்ணா கூட்டத்தினரின் ஆரவாரத்தை அதிகப்படுத்தி “சைதாப்பேட்டை தொகுதியில் நிற்பவர் மிஸ்டர் 11 லட்சம்” என அறிவித்தார்! இது தான் ஒரு பொருளாளர் அவர்களுக்கு அழகு! பொருளாளராக தலைவர் கலைஞர் அவர்கள் சிறப்பாக செயல்பட்டமைக்காக அண்ணாவால் கொடுக்கப்பட்ட பரிசு தான் அந்த “மிஸ்டர் 11 லட்சம்” என்னும் பட்டம்!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI9GqDJ_6DF7Ip2IZjXuNp3WPEZS5VuS2Ga-KK45_pjM0NGgmGH5xAidAVyOBL4lFagepjywsl5O3ECZX-oKLKzHjpNNM-73-KHtRruIeEBt0AB0lPwH5Zfg_4Q5c3UmZHQxMF2D8AIvU/s1600/13315579_1117527244949672_8426068467379244410_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="640" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI9GqDJ_6DF7Ip2IZjXuNp3WPEZS5VuS2Ga-KK45_pjM0NGgmGH5xAidAVyOBL4lFagepjywsl5O3ECZX-oKLKzHjpNNM-73-KHtRruIeEBt0AB0lPwH5Zfg_4Q5c3UmZHQxMF2D8AIvU/s640/13315579_1117527244949672_8426068467379244410_n.jpg" width="426" /></a></div>
<br />
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அந்த பொருளாளர் பதவி என்பதை அண்ணாவின் மறைவுக்கு பின்னர் இயக்கத்துக்கு புதிய பொறுப்புகள் அமைக்கப்பட்டு கலைஞர் அவர்கள் தலைவர் பதவிக்கு வருகின்றார். அப்போது பொருளாளர் ஆனவர் தான் எம் ஜி ஆர். எம் ஜி ஆரை பொருளாளர் ஆக்கியவர் தலைவர் கலைஞர். 1969ல். பொருளாளர் பதவி என்பது நம் இயக்கத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய பதவியாகும். பின்னாளில் அதே எம் ஜி ஆர் “கணக்கு கேட்டு” இயக்கத்தை உடைத்து துரோகம் செய்து விட்டு போனவர் என்பதை நாடே அறியும். “கணக்கு சொல்ல வேண்டிய இடத்தில்” இருந்த எம் ஜி ஆர் அவர்களே “கணக்கு கேட்ட” விந்தை எல்லாம் ஏன் நடந்தது எனில் எம் ஜி ஆர் போன்ற நம்பிக்கையில்லா ஆட்கள் அந்த பதவிக்கு வந்தமைதான் காரணம்!<br />
<br />
அதன் பின்னர் சில பல மாற்றங்கள் ஆன பின்னர் பிற்காலத்தில் அண்ணன் சாதிக்பாட்சா பொருளாளர் ஆனார். அவர் மறைவுக்கு பின்னர் அண்ணன் ஆற்காடு வீராசாமி அவர்கள் பொருளாளர் ஆனார். அவரது வயோதிகத்தின் காரணமாக பின்னர் அப்போது துணைப்பொதுச்செயலாளர் ஆக பொறுப்பு வகித்த நம் செயல்தலைவர் அவர்கள் பொருளாளர் பொறுப்புக்கு வந்தார்! அதன் பின்னர் பொருளாளர் பொறுப்பில் இருக்கும் போதே நம் தலைவர் அவர்களின் வயோதிகத்தின் காரணமாக நம் இயக்க தொண்டர்கள் விருப்பத்தாலும், அனைத்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் நீண்ட நாள் வற்புறுத்தல் காரணமாகவும், மிக மிக முக்கியமாக தன் 14 வயது முதல் கழக கொடி பிடித்து மிசாவில் அடிபட்டு ரத்தம் சிந்தி, இளைஞர் அணியை தொடங்கி இயக்கத்தில் புதுரத்தம் பாய்ச்சி, வைக்கோ போன்றவர்கள் பிரிந்த பின்னரும் இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்தி வந்த தகுதியின் அடிப்படையில் நம் செயல்தலைவருக்கு அந்த பொறுப்பை வழங்கி மகிழ்ந்தார் தலைவர். அன்றைக்கே பொருளாளர் பொறுப்பை மற்ற யாருக்காவது தலைவர் ஒதுக்கி தந்திருக்கலாம். ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் காலம் கனியட்டும் என காத்திருந்தார்.<br />
<br />
<span style="color: red;"><b>இன்றைக்கு தான் அந்த காலம் “கனி”ந்துள்ளது என நம் செயல்தலைவர் அவர்களும் உணர்ந்திருப்பார்கள்.</b></span> கடந்த பத்து நாட்களாகவே இந்த 2 ஜி வழக்கின் தீர்ப்பு தேதி குறித்த பின்னரே திருமதி கனிமொழி அவர்களுக்கு பெரிய வரலாறு கொண்ட திமுகவின் பொருளாளர் பொறுப்பை கொடுக்கலாமா என்பது பற்றிய ஹேஷ்யங்கள் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தன. பேராசிரியரும், செயல்தலைவரும் சாதாரணமாக சந்தித்தால் கூட இது பற்றிய பேச்சுகள் தான் நடந்தன என புலனாய்வு பத்திரிக்கைகள் எழுதின. சமூக வலைத்தளங்களில் இயக்கத்தினர் உள்ளேயே ஒரு சிலர் இது பற்றி எழுதுவதும், அதற்கு பதில் சொல்லும் விதமாக சண்டை நடப்பதும் நடந்து கொண்டுள்ளதை பார்க்க முடிகின்றது. நல்ல விபரமான ஒரு முகநூல் கட்டுரையாள நண்பர் ஒருவர் கூட “கனிமொழிக்கு பொருளாளர் பதவிக்கான தகுதி இருக்கின்றதா எனில் கண்டிப்பாக ஆம் என்பேன். ஆனால் தவிர்க்க வேண்டும் என்பேன். காலம் கனியட்டும் என்பேன்” என முத்தாய்ப்பு வைத்தார்.<br />
<br />
ஆக <span style="color: red;"><b>கனிமொழி அவர்களுக்கு பொருளாளர் பதவி கொடுத்து அவரது தியாகத்துக்கும், உழைப்புக்கும் மரியாதை செய்வது என்பது குறித்து கிட்டத்தட்ட எல்லோருக்குமே ஆர்வம் உள்ளது என்பது புலனாகின்றது. ஆக கனிமொழி அவர்களுக்கான வயது தான் அவர்களுக்கு ஒரு காரணமாக இருக்கின்றது எனில் முதல் பொருளாளர் திரு. கே.கே.நீலமேகம் அவர்கள் அந்த பதவிக்கு வந்த போது அவருக்கு ஆன வயதை விட திருமதி கனிமொழி அவர்களுக்கு சற்று கூடுதலாகத்தான் ஆகின்றது. 1969ல் பிறந்த அவர் இதோ இன்னும் 15 நாட்களில் ஜனவரி 5ம் தேதி 2018 அன்று தன் 49 வயதை எட்டுகின்றார். தியாகத்துக்கும் எவ்வித குறைவும் வைக்கவில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியிலும் திமுக என்னும் இயக்கத்துக்கு மிகுந்த பெயரை பெற்றுத்தந்துள்ளார். இயக்க தேர்தல் பரப்புரைகள், தனக்கு இயக்கத்தில் கொடுக்கப்பட்ட மகளிர் அணி பொறுப்பு என எதிலும் அவர் தன் திறமையை காட்ட தவறியது இல்லை. தொண்டர்களிடம் பாசமாக பழகும் இயல்பு கொண்டவர்.இந்திய தலைவர்கள் எல்லோரிடமும் அறிமுக பழக்கம் ஆனவர். எல்லாவற்றுக்கும் மேலாக நம் செயல்தலைவர் அவர்கள் ஒரு கோடிட்டால் அந்த கோட்டின் மீது மட்டுமே நடக்கும் குணம் கொண்டவர். தலைமைக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவர். இவர் மீது இதுவரை சொல்லப்பட்ட சொத்தை வாதம் 2 ஜி வழக்கு என்பதும் இப்போது தீயிலிட்ட சருகாகிவிட்டது. ஆகவே திருமதி கனிமொழி அவர்களுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் “பொருளாளர்” பொறுப்பை கொடுப்பதற்கு இதுவே சரியான தருணம்! அப்படி கொடுக்கும் பட்சத்தில் அந்த இனிய செய்தி தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நிலையில் கூட யாரும் எதிர்பாராத அதீத முன்னேற்றத்தை கொடுக்கும் என்பதில் ஐயமேதுமில்லை! </b></span><br />
<span style="color: red;"><b><br /></b></span>
<span style="color: red;"><b>திமுகவை அழிக்க நினைத்து ஆதிக்க சக்திகளை எதிர்த்து போரிட்டு வென்றமைக்கான பரிசாக நம் செயல்தலைவர் இதை அறிவிக்கலாமே!</b></span><br />
<br />
<span style="color: magenta; font-size: large;"><b>இது ஒரு சாதாரண கடைக்கோடி தொண்டன் செயல்தலைவர் தளபதி அவர்களுக்கு வைக்கும் கோரிக்கை மட்டுமே என்பதையும் மற்றவர்கள் உணர்க!</b></span><br />
<div>
<br /></div>
அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5480728769334597752017-11-10T01:57:00.000+05:302017-11-10T02:14:53.604+05:30 “ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா” - நூலின் மீதான என் பார்வை!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV_bu4NSIu9Ok-7_BmonBAXa6KK6dISutWdQoj5hpdcwwPNqy0ImZzWgf_bKKNIFWxSPEBHUAV19xc6J-NS8__kA4i5gvpn1F41FZulV-xOkSvUIlJODf7sWCHDGnb_Ca99TzugHEeedw/s1600/23439293_10214757480469913_1700937754_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="723" data-original-width="502" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV_bu4NSIu9Ok-7_BmonBAXa6KK6dISutWdQoj5hpdcwwPNqy0ImZzWgf_bKKNIFWxSPEBHUAV19xc6J-NS8__kA4i5gvpn1F41FZulV-xOkSvUIlJODf7sWCHDGnb_Ca99TzugHEeedw/s640/23439293_10214757480469913_1700937754_n.jpg" width="444" /></a></div>
<br />
<br />
பெயரை கேட்டாலே ஒரு வித பயம் வந்து அடிவயிற்றில் பிசைகின்றதா? ஆமாம். அது ஒரு சின்ன நூல் தான். மொத்தம் 46 பக்கங்கள் தான் அந்த நூல். பொதுவாக 46 பக்கங்கள் கொண்ட ஒரு அச்சு பிரதியை “கையேடு” என சொல்வதே வழமை. ஆனாலும் நான் அதை “நூல்” என சொல்கின்றேனெனில் அதன் உள்ளீடு அத்தகையது. எழுதியவர் மீது <span style="color: red;"><b>“தேச துரோக குற்றம்”</b></span> சுமத்தி வழக்கு பதியவைக்கும் அளவுக்கு அந்த 46 பக்கங்களில் விஷயம் இருக்கின்றது எனில் அது “நூல்” வகையறாக்களை சார்ந்தது என்பதே என் கருத்து!<br />
<br />
<br />
பொதுவாக எல்லோரும் ஆறுகள், தண்ணீர் வராமை, வறட்சி, வட நாட்டில் வெள்ளம் போன்ற செய்திகள் வரும் போதெல்லாம் முனுமுனுக்கும் வார்த்தைகள் “கங்கையும் காவிரியையும் இணைக்க வேண்டும். அக்கே தண்ணீர் வெள்ளமாக போகின்றது, இங்கே காவிரி உள்ளிட்ட தென்னக ஆறுகள் காய்ந்து கிடக்கின்றன, ஆகையால் அவைகளை இணைக்க வேண்டும்” என்பதாகவே இருக்கும். போதாக்குறைக்கு பாரதியார் வேறு பாட்டெல்லாம் பாடி விட்டு போய்விட்டார் எனும்போது இந்தியாவின் வடக்கில் ஓடும் ஆறுகளை தெற்கில் இருக்கும் ஆறுகளோடு இணைக்க வேண்டும் என்னும் எண்ணம் நம் மனதில் பசுமரத்து ஆணியாக பதிந்து விட்டது என்பதே உண்மை. நிலைமை இப்படி இருக்க திடீரென்று ஒரு கலகக்குரல் “நதிகளை இணைக்க வேண்டாம்” என எழுந்தால் நாம் முதலில் அதை புறந்தள்ளுவோம். பின்னர் பரிகசிப்போம், ஏளனம் செய்வோம், கோபப்படுவோம் உச்சகட்டமாக “அந்த கலகக்காரனை புடிச்சு உள்ள போடுங்க போலீஸ்கார்” என வீரவசனம் பேசுவோம். யாராவது ஒருவராவது “அந்த கலகக்காரர் நதிகளை இணைப்பதை ஏன் எதிர்க்கின்றார்” என்பது பற்றி அவருடைய கருத்தை கேட்டோமா எனில் இல்லை என்பதே உண்மை.<br />
<br />
<br />
ஜப்பான் வாட்டர் ட்ரீட்மெண்ட் என்கிற ஒரு விஷயம் உண்டு. காலை வழக்கமாக ஒருவர் எழுந்திருக்கும் நேரத்தின் ஒரு மணி நேரம் முன்பாக அலாரம் வைத்து எழுந்து 3 லிட்டர் குளிர்நீர் குடிக்க வேண்டும். அதற்கு முன்னர் பல்துலக்குவது என்பது கூடாது. இது ஒரு ட்ரீட்மெண்ட். அத்தனையே. முடிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிடில் புறந்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருங்கள். அவ்வளவு தான் விஷயம்! அதே போலத்தான் இந்த புத்தகமும். அதன் உள்ளே இருக்கும் விஷயம் என்ன என்றே தெரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ள முயலவும் இல்லாமல் அதை பரிகசிப்பதும், எதிர்பதும் அத்தனை ஒரு உத்தமமான செயல் அல்ல!அது போலவே எந்த கருத்தாக இருந்தாலும் முதலில் கேளுங்கள்! சாத்தியமா, சாத்தியப்பட்டால் பலன் கொடுக்குமா என்பதை பகுத்தறிந்து பின்னர் பரிகசிக்கவோ அல்லது எதிர்கவோ செய்யுங்கள் என்பதே என் வாதம்!<br />
<br />
<br />
நதிகளை இணைக்க வேண்டும் என்னும் விஷயம் நம் குழந்தை பருவத்தில் இருந்து மந்திர சொல் போல மனதில் பதிந்து விட்டது. அதை இந்த 30 ரூபாய் நூல் கொண்டு அத்தனை சுலபமாக அழித்து விட இயலுமா எனில்.... இயலும் தான் போலிருக்கின்றது. காரணம் அதற்கான முகாந்திரம் இருப்பதால் தான் அரசு எழுதிய நூலாசிரியர் மீது “தேச துரோக வழக்கு” தொடுத்துள்ளது. இதே திராவிட முன்னேற்ற கழகம் சார்ந்த மாநில செய்தி தொடர்பு செயலர் திரு. கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் நதிகளை இணைக்க வேண்டி பல சட்ட வழி போராட்டங்களை தனிப்பட்ட முறையில் செய்து வருகின்றார் பல ஆண்டுகளாக! உச்சநீதி மன்றம் வரை நடையாய் நடந்து ஒரு சில தீர்ப்புகளையும் பெற்று விட்டார். அவரது இலக்கு என்பதும் தமிழக விவசாய நலன் தான் முடிவுப்புள்ளி. அதே போல இந்த நூலின் ஆசிரியர் பேராசிரியர் ஜெயராமன் அவர்களின் இலக்கும் அதே தமிழக விவசாய நலன் தான். வழிகள் தேன் வேறு வேறு. ஆனால் இலக்கு என்பது ஒன்றே ஒன்று “விவசாய நலன்”. ஆக பேராசிரியர் ஜெயராமன் இந்த நூல் வழியாக எந்த விதமான தேச துரோகத்தை செய்து விட்டார் என்பது தான் புரியவில்லை. அனேகமாக வழக்கை தொடர்ந்த அரசுக்கும் புரியாது என்றே நினைக்கின்றேன். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அது பற்றி பேசிக்கொள்வோம். இப்போது நூலின் கருத்துக்கு வரலாம்!<br />
<br />
<br />
நதிகள் இணைப்பு எனில் நம் மனதில் ஓடும் பிம்பம் என்பது கங்கை முதல் காவிரி வரை வாய்க்கால் வெட்டி அதன் வழியே தண்ணீரை கொண்டு வருவது. அது பாய்ந்து அடித்து நுரை பொங்க உத்தபிரதேசத்தில் இருந்து மத்திய பிரதேசம் வந்து அந்த மாநிலத்தை வளம் பெற செய்து, அங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா என வரும் வழி முழுமையும் வளமாக்கி பின்னர் தமிழகம் வந்து தமிழக அனைத்து மாவட்டம் வழியாக பாய்ந்து ஓடி வளமாக்கி... இத்யாதி... இத்யாதி... இப்படித்தானே கற்பனையில் இருக்கின்றோம்... ஆனால் இந்த நூலில் ஆசிரியர் அவர்கள் அதில் தான் தன் முதல் சந்தேகத்தை தெளிவாக தெளிக்கின்றார்.<br />
<br />
<br />
இந்திய நதிகளை இணைக்க ஆகும் செலவு, அதற்கான கால அவகாசம், அந்த கால அவகாசம் முடியும் போது குறிப்பிட்ட அந்த செலவு எத்தனை அதிகமாகும் என்பதில் ஆரம்பித்து தொடர்கின்றார். அரசு மதிப்பில் 20 லட்சம் கோடி ஆகும். அது கால்வாய் வெட்டி முடிக்கும் போது 30 லட்சம் கோடியை தொடும் என அரசு சொன்னதை எடுத்து இயம்புகின்றார். இந்த பணத்துக்கு அரசு எங்கே போகும் என வினா எழுப்புகின்றார். அங்கே தான் முதல் இடி விழுகின்றது அவருக்கும் நமக்கும்! அதாவது அரசு அந்த பணத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பனிகள் மற்றும் உலக வங்கிகள், அயல்நாட்டு வங்கிகள் வழியாக மூலதனமாக பெறும். சும்மா வருவாளா சுந்தரி?<br />
<br />
<br />
சுமார் இருபது வருடங்கள் முன்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன. தங்க நாற்கர சாலைகள் இந்தியா முழுமையும் நான்கு வழி சாலைகளாக போடப்பட்டுள்ளதே? அது போது மாநில நெடுஞ்சாலைகள் கூட போடப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் நிதி எங்கிருந்து வந்தது? இவற்றில் பல கிலோமீட்டர் சாலைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சாலை போட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு கொடுத்து விட்டு சுங்க வரி வசூலித்து அதை எடுத்துக் கொள்கின்றனர். சாலை போடுவதற்கும், அதை பராமரிக்கவும் சாலையில் செல்லும் இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் எல்லாமே சாலை வரி கட்டுகின்றோம். ஆனாலும் இந்த தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட சாலைகளுக்கு தனியாக ஒவ்வொறு பயணத்தின் போதும் சுங்க வரி (டோல்கேட்) கட்டுகின்றோம். அதே போல இந்திய கார்ப்பரேட் கம்பனிகள், வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பனிகள் எல்லோரும் நதிகளை இணைக்க முன்வரும் போது அந்த நதிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்? சாலை போட்டால் அதில் பயணிக்கும் வாகனங்களில் இருந்து சுங்க வரி வசூலிக்கலாம். அதுவே நதி எனில் என்ன செய்வார்கள்? யார் யாருக்கு தண்ணீர் தருகின்றார்களோ அவர்களிடம் மீட்டர் போட்டு காசு வசூலிப்பார்கள். ஆனால் இப்போது காவிரியில் தண்ணீர் வருகின்றது எனில் விவசாயிகளுக்கு இலவசமாக தண்ணீர் வரும். தண்ணீர் இலவசம் என்பதால் அந்த விவசாயி தான் விதைக்காகவும், உரம், பூச்சி மருந்துகள், விவசாய கூலி போன்ற செலவுகள் போக தனக்கான லாபம் வைத்து ஒரு குறிப்பிட்ட விலைக்கு அந்த விளைச்சலை விற்க இயலும். அதுவே கார்ப்பரேட் கம்பனிகளிடம் இருந்து முக்கிய மூலதனமான தண்ணீரை விலை கொடுத்து வாங்கினால் என்ன ஆகும்? விற்பனை செலவு பன்மடங்காக உயரும். கொள்முதல் இடத்திலேயே விலை உயர்வு எனில் கடைசியாக அது தரகர்கள் வழி பயணித்து பயனாளிக்கு வரும் போது அந்த விளைச்சலின் விலை என்பது இப்போது இருப்பதை விட மும்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்பதை தான் நூலாசிரியர் தன் சந்தேகமாக சொல்கின்றார். அவர் தெளிவாக இப்போதைக்கு 30 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசோ அல்லது அந்த நதி பாய்ந்து வரும் மாநில அரசுகளோ இந்த செலவை செய்ய முடியாது அதனால் வேறு வழியில்லாமல் உலக மற்றும் இந்திய கார்ப்பரேட் கம்பனிகளுக்கு ஆறுகளை விற்பதை தவிர வேறு வழி இல்லை என்கிறார்.<br />
<br />
மேலும் அந்த கார்ப்பரேட் கம்பனிகள் விவசாயத்துக்கு கொடுப்பதை விட தொழிற்சாலைகளுக்கு அதுவும் கார்ப்பரேட் கம்பனிகளுக்கு தான் முன்னுரிமை தருவார்கள் என்றும் ஐயுறுகின்றார். அவரது அச்சத்திலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கின்றது. மறுப்பதற்கில்லையே! இதோ தாமிரபரணியை உறிஞ்சி எடுத்து பெப்சி தயாரிப்பதை நாம் கண் முன் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம். இப்படி நதிகள் இணைப்பால், காசு கொடுத்தால் கார்ப்பரேட் கம்பனிகளில் இருந்து தண்ணீர் கிடைக்கும் என அறிந்தால் அகில உலகுக்கும் இந்த செயற்கை குளிர்பான கம்பனிகள் ஒட்டு மொத்த உற்பத்தி இடமாக இந்தியாவைத்தானே தேர்வு செய்யும். அப்படி செய்யும் போது “ஆகா நமக்கு ஏற்றுமதி வரி கிடைக்கின்றது. நாம் வல்லரசு ஆகலாம்” என அரசியல்வாதிகள் சப்பை கட்டு கட்டுவார்கள். அந்த நதிகளின் புதிய கார்ப்பரேட் முதலாளிகள் விவசாயி தண்ணீருக்கு கொடுக்கும் காசை விட கொஞ்சம் தூக்கலாக கொடுக்கும் தொழிற்சாலை முதலாளிகளுக்கு தானே முன்னுரிமை கொடுப்பார்கள். ஆக விவசாயம் படுத்து விடும். இந்தியா முழுமையும் நதிகள் இணைந்தாலும் விவசாய நிலம் தரிசாக கிடக்கும். அதை ஏன் தரிசாக போட்டுக்கொண்டு என்று அந்த நிலத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்வான் அந்த ஏழை விவசாயி என அச்சப்படுகின்றார் நூலாசிரியர் பேராசிரியர் ஜெயராமன்.<br />
<br />
நதிகள் இணைப்பினால் நடக்கும் முதல் கோணல் இது! அடுத்தது “சாத்தியமின்மை” பற்றி அந்த நூலில் விரிவாக சொல்கின்றார். உலகில் எங்கெங்கு நதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் எத்தனை சாத்தியமானது. அப்படி சாத்தியமானதற்கு காரணம் என்ன? அப்படியே இணைத்த பின்னர் அந்த திட்டம் தோல்வியில் முடிந்த வரலாறுகள் எல்லாம் விரிவாக அந்த நூலில் குறிப்பிடுகின்றார். உதாரணத்துக்கு “சீனாவில் வடக்கு - தெற்கு நீர் மாற்றும் திட்டம்”. இதில் திட்டம் சாத்தியமானதற்கு காரணம் சீனா முழுமையும் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாச்சாரம் என்பதால் இணைப்பு சாத்தியம் ஆனது. ஆனால் மிகப்பெரிய பலனை தரவில்லை என்கிறார் ஆசிரியர். 80 பில்லியன் டாலர் செலவில் 2002ல் தொடங்கி அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. 3,30,000 மக்கள் தங்கள் குடியிருப்புகளை இழந்தனர். 45 பில்லியன் கனமீட்டர் நீர் தெற்கில் இருந்து வடக்கே மஞ்சள் ஆறுக்கு கொண்டு செல்லப்பட்டும் முழுமையான பலன் தரவில்லை என்கிறார் ஆசிரியர். (பலன் தரவில்லை என்று ஒரு வரியில் முடித்து விட்டார் தவிர எப்படி பலன் தரவில்லை என விளக்கவில்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். 45 பில்லியன் கன மீட்டர் மடைமாற்றம் செய்யப்பட்டும் பலன் இல்லை என்பது என்னளவில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை) ஆனால் அதே நேரம் 3,30,000 குடியிருப்புகள் இழப்பு என்பது ஒரு வரலாற்று சோகம் என்பதை மறுப்பதற்கில்லை.<br />
<br />
அடுத்து ஸ்பெயின் நாட்டில் டாகுஸ் - சேகுரா நீர் மாற்றம் திட்டம்! இது 1978ல் நிறைவேறிய திட்டம் இது. இதில் நான்கு ஆறுகள் இணைக்கப்பட்டன. டாகுஸ், ஜூகார்,சேகுரா, குவாடியானா ஆகிய ஆறுகள் இணைக்கப்பட்டதால் 1.7 லட்சம் ஹெக்டேர் நில பாசனம், தவிர 78 நகராட்சிகளுக்கு குடிநீர் என கோலாகலமாக நடந்தது. ஆனால் நாள்பட நாள்பட டாகுஸ் ஆற்றில் நீர் வற்றி அங்கிருந்த மீன் வகைகள் அழிந்து மேலும் நிலையான தண்ணீர் இல்லாமல் அத்திட்டம் தோல்வி என்கிறார் ஆசிரியர்.ஆனால் அது ஒற்றை கலாச்சாரம், மொழி என்பதால் இணைப்பு என்பது சாத்தியம் ஆனது என தெளிவு படுத்துகின்றார். இதே போல தென் ஆப்பிரிக்காவில் லெசோதா பீடபூமி நீர்த்திட்டம் 1950ல் ஆரம்பிக்கப்பட்டு 36 வருடங்கள் கழித்து அந்த திட்டம் முடிந்தது. அதுவும் ஒரே தேசிய இனத்தின் உள்ளேயே நடந்த இணைப்பு என்பதால் சாத்தியம் ஆனதாக சொல்கின்றார் ஆசிரியர். ஆனால் பல தேசிய இனங்கள் கொண்ட இந்தியாவில் நதிகள் இணைப்பு என்பது சாத்தியம் இல்லை என்பதில் நூலாசிரியர் உறுதியாக இருக்கின்றார். காரணம் அவர் ஏற்கனவே இங்கு பார்த்து கொண்டிருக்கும் சண்டைகள்!<br />
<br />
ஆனால் நூலாசிரியர் ஒத்துக்கொண்ட ஒரு நதிநீர் இணைப்பு என்பது இந்தியாவின் உள்ளே கிருஷ்ணா - கோதாவரி இணைப்பு என்றே நினைக்கின்றேன். இந்த ஆறுகள் விஜயவாடா அருகே இணைக்கப்பட்டது. அந்த ஆறுகள் ஒரே தேசிய இனமான தெலுங்கு பேசும் மக்கள், ஒரே கலாச்சார மக்கள் போன்ற காரணங்களால் சாத்தியம் ஆனது என்பதை ஆசிரியர் விளக்குகின்றார். அதனால் 1 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுவதையும் ஆசிரியர் சொல்லி விட்டு இதை கருத்தில் கொண்டு அனைத்து ஆறுகளையும் இணைத்து விடலாம் என நினைக்கக்கூடாது என்கிறார்... அதற்கான காரணத்தையும் சொல்கின்றார். இதோ அவர் சொல்லும் உதாரணம் தெலுங்கு கங்கா திட்டம். கிருஷ்ணா நிதியை சென்னை ஸ்ரீசைலம் அணையில் இருந்து 406 கிமீ தூரம் கால்வாய் அமைத்து பூண்டி நீர்த்தேக்கம் கொண்டு வந்து சென்னை மக்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்வது என்பது திட்டம். ஆந்திரா என்பது வேறு மொழி, தமிழ் வேறு தேசிய இனம் என்கிறார் ஆசிரியர். இதில் எனக்கு உடன்பாடில்லை. இருவருமே திராவிடம் என்னும் ஒரே இனம் தான். மொழி தான் வேறு என்பது என் கருத்து. ஆனால் நூலாசிரியர் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் அடிப்படையில் ஒரு தமிழ்தேசியவாதி என்பதால் எனக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை என்பினும் அவர் சொல்ல வந்த கருத்தை சொல்கிறேன். அதாவது இந்த திட்டம் 1977ல் தமிழ்நாட்டுக்கும், கிருஷ்ணா நதி நீர் பயன்பாட்டாளர்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய நான்கு மாநிலம் சேர்ந்து கையெழுத்தானது. அதன் படி மற்ற மூன்று மாநிலமும் மாநிலத்துக்கு 5 டி எம் சி தண்ணீர் என சேர்த்து 15 டி எம் சி தண்ணீர் தமிழகத்துக்கு தர வேண்டும். ஒரு வழியாக திட்டம் 1996ல் தான் நிறைவேறியது. அதற்கு எம் ஜி ஆர் அரசும் (அன்னை இந்திரா, என் டி ஆர் முன்னிலையில் அப்போது எம் ஜி ஆர் 30 கோடி ரூபாய் காசோலையை ஒரு சந்தன பேழையில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் முன்பணமாக கொடுத்தார்) கலைஞர் அரசும், பின்னர் ஜெயலலிதா அரசும் மாறி மாறி வகை தொகையில்லாமல் பணம் கொடுத்து கொடுத்து அந்த கால்வாய் 1991- 1995ல் மிக தாமதமாக கிடப்பில் போடப்பட்டும், மெதுவாக நடந்தும் ஒரு வழியாக திமுகவின் ஆட்சி காலத்தில் 1996ல் செப்டம்பர் 26ல் கலைஞர் ஒரு பொதுமேடையில் சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து ஒரு குடம் தண்ணீர் பெற்றார். மொத்தம் சுமார் 700 கோடியில் முடிய வேண்டிய திட்டம் 2013 வரை சுமார் 4000 கோடியை தாண்டி விழுங்கி விட்டது.<br />
<br />
இதோ இப்போது சமீபத்தில் ஜெயலலிதா மறைந்த உடன் ஓ.பன்னீர்செல்வம் குறுகிய காலம் முதல்வராக இருந்த போது அவர் ஓடிச்சென்று ஆந்திர முதல்வரிடம் கேட்டாராம். அவரும் தண்ணீர் கொடுத்தாராம் என எல்லா பத்திரிக்கையிலும் மாய்ந்து மாய்ந்து எழுதினார்களே... அதன் பின்புலத்தை விளக்குகின்றார் நூலாசிரியர் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள். <span style="color: red;">அங்கே தண்ணீர் கேட்க சென்ற தமிழக முதல்வரிடம் ஆந்திர முதல்வர் கேட்ட தொகை 443 கோடி. உடனே ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு பகுதி பணத்தை கொடுப்பதாக ஒத்துக் கொண்டு தண்ணீர் பெற்றார். மேலும் சந்திரபாபு நாயுடு அவர்கள் தமிழக பள்ளிகளில் தெலுங்கு மொழி தொடர வேண்டும் என கேட்டமைக்கும் தமிழக முதல்வர் தலையை ஆட்டிக்கொண்டு வந்தார். அப்படி இருந்தும் ஒப்பந்தப்படி 15 டி எம் சி தண்ணீர் இது வரை வந்தது இல்லை. ஓ.பன்னீர் செல்வம் 2 டி எம் சி வேண்டும் என கேட்க அதற்கு சந்திரபாபு நாயுடு தான் ஏற்கனவே 1 டி எம் சி தந்து விட்டதாகவும் மீதியை தருவதாகவும் சொன்னார். (2007ல் திமுக ஆட்சியில் அதிகபட்சமாக 4 டி எம் சி வந்தது. 2013ல் 2 டி எம் சி வந்தது. மற்ற படி அதிமுக ஆட்சியில் நீர் வரவே இல்லை. இது தான் நடந்தது. </span><br />
<br />
ஆக வேறு வேறு மொழிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் வழியாக நதி நீர் இணைப்பு என்பது எப்படி சாத்தியமில்லை என்பதற்கு மேற்படி உதாரணத்தை தருகின்றார் ஆசிரியர். ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் அவர் சொல்வதை! ஆக ஒரு மாநிலத்துக்கும் அடுத்த மாநிலத்துக்குமே நதி நீர் இணைப்பில் நீர் பெறும் மாநிலம் இத்தனை கோடி கொடுத்து தான் போராடி நீர் வாங்கும் நிலை. இதிலே கார்ப்பரேட் கம்பனிகளுக்கு நதிகளை தாரை வார்த்து விட்டு அவர்களிடம் காசு கொடுத்து விவசாயிகள் வாங்க வேண்டிய நிலை வந்தால் என்ன ஆகும் என்பது தான் நூலாசிரியரின் ஆதங்கம்!<br />
<br />
அடுத்து ஆசிரியர் நதிநீர் இணைப்பால் நிகழும் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றி அதிகமாக கோபப்படுவதை இந்த நூலில் நாம் எங்கும் பார்க்க நேரிடுகின்றது. ஆறுகள் வீணாக கடலில் கலக்கின்றது என்பதை ஆசிரியர் சரி தான் என்பது தான் எனக்கு ஒத்துக்கொள்ள இயலவில்லை. அவர் அதாவது அவர் எனில் அவரில்லை... பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நதிகள் கடலில் கலக்காமல் போவதால் கடலின் உப்புத்தன்மை அதிகரிக்கும். அதனால் கடல்வாழ் உயிரினங்கள் அழியும் என ஒரு வாதம் வைக்கின்றார்கள். கடலில் கலக்கும் ஆறுகள் என்னைப்பொறுத்தவரை கடலில் கரைக்கும் பெருங்காயம் போலத்தான். ஆறுகள் வழியே கலக்கும் நன்னீர் கடலின் உப்புத்தன்மையை மிதமாக்கும் என்கிற வாதத்தை என்னால் ஏற்க இயலவில்லை. அது போல ஒரு படுகையில் இருந்து புதிதாக ஒரு கால்வாய் வெட்டி அதன் வழியாக வரும் மீன்கள் புதிய படுகையில் வாழாது அழிந்து விடும் என சொல்வதையும் என்னால் ஏற்க இயலவில்லை. ஏனனில் ஒரு வரை உயிரினம் தான் வாழ தகுதி இல்லை தான் போகும் இடம் என அறிந்தால் அங்கு போகாது. உதாரணத்துக்கு காவிரி ஆறு பூம்புகாரில் கடலில் கலக்கின்றது. காவிரியில் விரால், ஆத்து கெண்டை, குறவை போன்ற ஆற்று மீன்கள் வாழும். அவைகள் தவறிக்கூட காவிரி கலக்கும் பூம்புகாரில் அப்படியே கடலுக்கு உப்பு தண்ணீரில் சென்று விடாது. தன் இருப்பிடம் எது என தெரியும் அவைகளுக்கு. அது போல கொள்ளிடம், ராஜா வாய்க்கால் பகுதிகளில் முதலைகள் உண்டு. அந்த ஆறுகள் கடலில் தான் கலக்கின்றன. என்றாவது ஒரு நாள் ஒரு முதலையாவது உப்பு நீருக்கு தவறிப்போய் சேர்ந்து இறந்து மிதந்தது உண்டா? கிடையாது. இயற்கை அந்த சக்தியை அந்த உயிரினங்களுக்கு வழங்கி இருக்கின்றது. அது போல அந்த முகத்துவார பகுதிகளில் மடவாய் மீன் என்று ஒன்று இருக்கும். அந்த மீன்கள் கடலின் உப்பு நீர், ஆற்றின் நன்னீர் ஆகியவை கலக்கும் இடத்தில் இருக்கும். அவைகள் சுத்த உப்பு நீரான ஆழ் கடலுக்கும் செல்லாது. அது போல சுத்தமான நன்னீரான ஆற்றின் மற்ற பகுதிகளுக்கும் வராது. அவைக்ள் நன்னீர்+உப்புநீர் கலக்கும் இடத்தில் மட்டுமே வாழும். இது தான் இயற்கை! அதனால் நூலாசிரியரின் அந்த வாதத்தை நான் ஒத்துக்கொள்ள போவதில்லை.<br />
<br />
அதே போல கால்வாய் வெட்டுவதால் அங்கு வாழும் மனிதர்கள் இடம் பெயர வேண்டும் என அவர்களுக்காக பச்சாதாபம் அடைகின்றார் பேராசிரியர் ஜெயராமன். உண்மை தான். ஆனால் தவிர்க்க இயலாதது. அவர் இது விஷயமாக ஆதங்கப்படும் போது “தஞ்சாவூரில் வைரமுத்து பேசும் போது நதிகளை இணைக்க வேண்டும் என புரியாமல் பேசுகின்றார்” என்கிறார். நியாயமாக பார்த்தால் பேராசிரியரின் இந்த விஷயத்துக்காக அதாவது பல லட்சம் மக்கள் குடிபெயர வேண்டும் என்கிற காரணத்துக்காக வேண்டியாவது நதிகள் இணைப்புக்கு திரு. வைரமுத்து அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஏனனில் வைகை அணை கட்டப்பட்ட போது தன் கிராமம் அழிந்ததை அழுது அழுது பேயத்தேவர் என்னும் கதாபாத்திரத்தை கதாநாயகனாக கொண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதியவர் தான் திரு. வைரமுத்து அவர்கள். இப்படி நதிகள் இணைக்கும் போது பல கள்ளிக்காட்டு இதிகாசங்கள் பிறக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்!<br />
<br />
மேலும் இந்த நதிகள் இணைப்பு ஏன் சாத்தியமில்லை என்பதற்கு நூலாசிரியர் சொல்லும் இன்னும் ஒரு காரணம்..... சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் பன்னாட்டு நதிகள். அவைகள் சீனா, வங்காள தேசம், பாகிஸ்தான், நேப்பாளம் ஆகியவை சம்பந்தப்பட்ட ஆறுகள். நாம் நம் வசதிக்கு கங்கையை, பிரம்மபுத்திராவை, சிந்து நதியை கால்வாய் வெட்டி தெற்கே கொண்டு வந்து விட முடியாது. அதற்கு மற்ற நாடுகள் அனுமதி வேண்டும். அப்படி அவைகள் அனுமதித்தால் சீனாவும் நாங்களும் எங்கள் பகுதியில் வரும் அந்த ஆறுகளை வெட்டி உள்ளே இழுத்துக் கொள்கிறோம் என உரிமை கோரும். அது போல பாகிஸ்தான், வங்காள தேசம், நேப்பாள் ஆகியவைகள் போர்க்கொடி தூக்கும் அபாயம் இருக்கின்றது என்கிறார் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள். ஆக இதுவும் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம் தான்!<br />
<br />
சரி வேறு என்ன தான் வழி? ஒரு திட்டம் கொண்டு வ்ந்தால் அதற்கு குறை சொல்லும் கலகக்காரர்கள் தான் இருப்பார்கள். தீர்வு சொல்ல மாட்டார்கள் என சொல்வார்கள். அதாவது ஒரு பழமொழி “கட்டுன வீட்டுக்கு நொட்டை சொல்ல வந்துட்டான்” என்பார்கள். ஆனால் பேராசிரியர் அவர்கள் தீர்வாக ஒரு விஷயம் சொல்லி இருக்கின்றார். தமிழகத்தை பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அது மட்டுமே காவிரிக்கு உரிய நீரை பெற்றுத்தரும்.உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்தாலே போதும் தமிழகத்துக்கு தேவையான நீர் கிடைத்து விடும் என்கிறார் பேராசிரியர். இப்போது தமிழகத்தில் 84 அணைகள் இருப்பதை ஆசிரியர் குறிப்பிட்டு அதில் நீர் தான் இல்லை என்பதையும் கோடிட்டு காட்டுகின்றார். காவிரி தீர்ப்பாயம் தனது இறுதி தீர்ப்பில் தமிழகத்துக்கு 192 டி எம் சி நீர் தர வேண்டும் என்றது. அது இயற்கைக்கு மாறானது. ஆனால் தமிழக அரசு 250 டி எம் சி வேண்டும் என உச்சநீதிமன்றம் சென்றது. ஆனால் (ஜெயலலிதா ஆட்சியில்) தமிழக வழக்கறிஞர் வாயையே திறக்கவில்லை. ஆக இது போன்ற குளறுபடிகள் தீர்க்கப்பட்டாலே போதும் தமிழகத்துக்கு தேவையான நீர் கிடைக்கும். இயற்கை வளம் அழியாது. யாரும் குடிபெயர வேண்டாம். இது மட்டுமே ஒரே தீர்வு என்கிறார் நூலாசிரியர்.<br />
<br />
மேலே நான் சொன்னது எல்லாம் அந்த நூலில் இருந்து மேலோட்டமாக சொன்ன விஷயங்கள் மட்டுமே. அந்த நூலில் இயற்கை ஆர்வலர்கள், பொறியாளர்கள், இந்திய நதிகளை இணைக்க வேண்டி செயல்பட்ட திட்ட பொறியாளர்களின் கூற்றுகள், அப்துல் கலாம் அவர்களின் திட்டம், அது போல இந்தியா முழுமைக்கும் ஆறுகள் வழியே கிடைக்கும் நீர் எவ்வளவு? அதில் வீனாக போவது, ஆவியாதல் போன்றவைகள் போக மீதம் நாம் பயன்படுத்தும் நீரின் அளவு போன்ற பல விஷயங்களை ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளார்!<br />
<br />
<br />
இப்போது நதிநீர் இணைப்பை ஆதரிப்போர் நாளையே நதிகள் இணைக்கப்பட்டு, பின்னர் கார்ப்பரேட் ஆசாமிகள் காசுக்கு நீரை விவசாயிக்கு விற்கும் நிலை வந்தால் இப்போது ஆதரிப்பவர்கள் தங்கள் சொத்தை விற்று விவசாயிகளுக்கு பதில் அந்த நீருக்கான காசை கொடுப்பார்களா என கோபமுடன் கேட்கின்றார் நூலாசிரியர்! பதில் தான் இன்னும் வரவில்லை! என்னைக்கேட்பின், இப்படி ஒரு வராத பதிலை நதிகள் இணைப்புக்கு முட்டு கொடுக்கும் பலரை கேட்பதை விட ஒற்றை சாளர முறையில் அரசாங்கத்திடமே “நதிகளை இணைத்தால் எங்களுக்கு இலவச நதி நீர் எப்போதும் போல வேண்டும். அதில் மாநில உரிமை மறுக்கப்படக்கூடாது, விளை நிலங்களை கார்ப்பரேட் கம்பனிகள் தொழிற்சாலை அமைக்க விற்பனை செய்ய தடை சட்டம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் ஆறுகளை இணைக்க ஒப்பந்தம் போட வேண்டும்” என்கிற விஷயங்களை கேட்டு போராடலாமே என்பது தான்!<br />
<br />
<br />
<br />
<span style="color: red;">தவிர கார்ப்பரேட் சாமியார்களின் ஆட்டம் நதிகள் இணைப்பு விஷயத்தில் ஜக்கி வாசுதேவ் போன்ற காட்டை அழித்தவர்கள் திடீரென நதிகளை பாதுகாக்கவும், இணைக்கவும் குபீரென புறப்பட்டு மிஸ்டு கால் கொடுக்க சொல்வது எல்லோருக்குமே கொஞ்சம் பயத்தை தான் கூட்டுகின்றது. எலி ஏன் அம்மனமாக ஓடுகின்றது என நினைக்க தோன்றுகின்றது.</span><br />
<br />
<br />
நான் மேலே சொன்ன விஷயங்கள் தான் “ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா” என்கிற பேராசிரியர் ஜெயராமன் அவர்களின் நூல் பற்றிய என் கருத்துகள்!<br />
<br />
<br />
<span style="color: blue;">நிற்க..... இந்த நூலின் ஆசிரியர் அவர்கள் இந்த நூலை எழுதி வெளியிட்டு மூன்று நாட்களில் அவர் மீது தேச துரோக வழக்கு பாய்ந்து விட்டது! அப்படியெனில் எங்கோ இடிக்கின்றதே! ஆக பேராசிரியர் நதிகள் இணைப்பினால் வரப்போகும் தீமைகளை பட்டியலிட்டாரே... அதன் படி தான் நடக்க போகின்றதா? இந்திய அரசு ஆறுகளை கார்ப்பரேட் கம்பனிகளுக்கு விற்கப்போவது உண்மையா?</span><br />
<br />
<br />
இந்த நதிகள் இணைப்பு என்பது என்னளவில் சாத்தியப்படக்கூடியது என்பதும், காசு கொடுத்து கார்ப்பரேட் கம்பனிகளிடம் இருந்து வாங்க தேவை இருக்காது என்றும் நினைக்கின்றேன். ஆனால் பேராசிரியரின் கருத்துகளை புறந்தள்ளவும் இயலாது!<br />
<br />
*****************************************<br />
<br />
<span style="background-color: magenta;"><b>நூலின் பெயர் : நதிகள் இணைப்புத் திட்டம் - “ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா” </b></span><br />
<span style="background-color: magenta;"><b><br /></b></span>
<span style="background-color: magenta;"><b>நூலாசிரியர் : முனைவர், பேராசிரியர் த.ஜெயராமன் M.A., M.Phil., P.hd., </b></span><br />
<span style="background-color: magenta;"><b><br /></b></span>
<span style="background-color: magenta;"><b>நூல்களை பெற: புத்தகச்சோலை (பதிப்பகத்தார் மற்றும் விற்பனையாளர்)</b></span><br />
<span style="background-color: magenta;"><b><span style="white-space: pre;"> </span>பெரியார் மாளிகை, </b></span><br />
<span style="background-color: magenta;"><b><span style="white-space: pre;"> </span>44, மகாதானத்தெரு,</b></span><br />
<span style="background-color: magenta;"><b><span style="white-space: pre;"> </span>மயிலாடுதுறை - பின் கோடு 609 001</b></span><br />
<span style="background-color: magenta;"><b><br /></b></span>
<span style="background-color: magenta;"><b>போன்: <span style="white-space: pre;"> </span>04364 228634</b></span><br />
<span style="background-color: magenta;"><b><br /></b></span>
<span style="background-color: magenta;"><b>செல்:<span style="white-space: pre;"> </span>9842007371,9443395550</b></span><br />
<span style="background-color: magenta;"><b><br /></b></span>
<span style="background-color: magenta;"><b>விலை:<span style="white-space: pre;"> </span>ரூபாய் 30/=</b></span><br />
<br />
நூலாசிரியர் பற்றிய மேலதிக விபரங்களை இத்துடன் இணைத்துள்ள இன்று வெளியான ஜூனியர் விகடன் கட்டுரையை புகைப்படமாக வெளியிட்டுள்ளேன். அதில் பார்க்கவும்!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8_Cc9GeWsBGIwSIukABXeUM5Qax-Y7rODurQPYO1ZszqIwV3moAkmBRgusa1AEG9K9CJSIkWbXJyArxzCFUwDSt_ClwZj1V3c389rhuqM2Dutq4uGcDd1-SbbjHecok0Iy7Xa80bA9VE/s1600/23439241_10214755837668844_1524910423_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="451" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8_Cc9GeWsBGIwSIukABXeUM5Qax-Y7rODurQPYO1ZszqIwV3moAkmBRgusa1AEG9K9CJSIkWbXJyArxzCFUwDSt_ClwZj1V3c389rhuqM2Dutq4uGcDd1-SbbjHecok0Iy7Xa80bA9VE/s640/23439241_10214755837668844_1524910423_n.jpg" width="360" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_hs3Iw-jwgaTup5KuHype4AhUg9mvTe5HO62CwU3RmeNzvttza01juio9u-JLDpenfJlnOc31yR_oDyxXZeA8veypHyyTyWjb6sjjLi4oFThmAOevm6nH9TKW3v7J5apJmJ7T6W9nlMY/s1600/23476215_10214755838868874_1442522523_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="451" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_hs3Iw-jwgaTup5KuHype4AhUg9mvTe5HO62CwU3RmeNzvttza01juio9u-JLDpenfJlnOc31yR_oDyxXZeA8veypHyyTyWjb6sjjLi4oFThmAOevm6nH9TKW3v7J5apJmJ7T6W9nlMY/s640/23476215_10214755838868874_1442522523_n.jpg" width="360" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b><span style="color: blue; font-size: x-large;">நன்றி! வணக்கம்!</span></b></div>
<span style="white-space: pre;"> </span> <br />
<br />
<br />அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-34415825073864847272017-08-30T16:57:00.000+05:302017-08-30T16:57:02.379+05:30நெல்லை ஆரோக்ய எட்வின் அவர்களின் “நீட் தேர்வு” பற்றிய ஒரு பார்வை!இது எங்கள் நண்பர் <span style="color: red;"><b>திரு. நெல்லை நாங்குநேரி தொகுதி திமுகவின் ஆரோக்ய எட்வின் </b></span>அவர்கள்<span style="color: blue; font-family: Georgia, Times New Roman, serif;"> <b style="background-color: white;"><span style="font-size: large;">“நீட் தேர்வு”</span></b></span>பற்றிய ஒரு மினி ஆய்வுக்கட்டுரை. கட்டுரையின் அனைத்து அம்சங்களும் அருமை. இதற்காக அவர் சேர்த்து தொகுத்து எழுதியிருக்கும் பல விஷயங்கள் புதியவைகள். கட்டுரை சம்பந்தமாக அவர் தயாரித்த கிராஃப் படங்கள் புரியும் படியான புதுமைகள். அந்த கட்டுரை அவரது முகநூல் பக்கத்தில் வந்துள்ளது. ஆனால் கருப்பு வெள்ளை எழுத்துகளில் படிப்பதைக்காட்டிலும் சில முக்கிய குறிப்புகளை அடிக்கோடிட்டு காட்டி, வேறு வேறு வண்ணத்தில் தீட்டி, தேவையான இடத்தில் தேவையான புகைப்படங்களை இட்டு அழகாய் காட்டும் பொருட்டு நான் இதை என் வலைத்தளத்தில் பதிகின்றேன். ஒரு வேளை எட்வின் அவர்களுக்கு இந்த கட்டுரையின் வடிவம் பிடித்து இருப்பின் அவரே ஒரு வலைப்பூ ஆரம்பிக்க இந்த முயற்சி ஒரு உந்து சக்தியாக விளங்கும் என நினைக்கின்றேன். இனி கட்டுரையை வாசியுங்கள்!<br />
<br />
***********************************<br />
<span style="color: red; font-size: large;"><b><u>தமிழக மருத்துவக்கல்லூரி இடஒதுக்கீடு, பயனடையும் தாழ்த்தப்பட்டவர்கள்! மங்காத மருத்துவ தரம்!</u></b></span><br />
<br />
<span style="color: blue; font-size: large;"><b>ஆய்வு: நெல்லை எட்வின்</b></span><br />
<br />
நீட் தேர்வு அநீதி குறித்து தற்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் “நீட்” தேர்வை ஆதரிப்போர், மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு குறித்தும் குறிப்பிடுவதோடு, இந்த இட ஒதுக்கீட்டால் மருத்துவத்துறையின் தரம் குறைவதாகவும் (!) குறைபட்டுக்கொள்கிறார்கள்.<br />
<br />
<br />
நீட் தேர்வால் சமூக நீதிக்கு ஆபத்தா? இடஒதுக்கீட்டால் மருத்துவத்துறையின் தரம் குறைந்ததா ? மருத்துவர்களின் தரம் குறைந்ததா ? நமது மாநிலத்தின் மருத்துவத்துறை எவ்வாறு உள்ளது என்று கடந்த பல நாட்களாக, பல்வேறு தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்தேன்.<br />
<br />
<br />
அதன் சாராம்சம்தான் இந்த சிறு ஆய்வுக்கட்டுரை . இந்த கட்டுரையில் கடந்த ஐந்தாண்டு நடைபெற்ற மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை டேட்டா சேகரிக்கப்பட்டு அலசி ஆராயப்பட்டது. அதன் தாக்கத்தை உண்மை நிலையை வெளிகொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன்.<br />
உண்மையிலேயே இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் இந்த துறையில் முன்னேறியிருக்கிறார்களா என்பதும் ஆராயப்பட்டுள்ளது.<br />
<br />
<br />
இந்த டேட்டா அனைத்தும் அரசால் பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட பல வெப்சைட்களில் தேடி எடுக்கப்பட்டவை. ஒருசில டேட்டாவை நான் இப்போது இருக்கும் நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் என்ன ஆகும் என்று கூர்நோக்கி (projection) பார்த்துள்ளேன்.<br />
இந்த எதிர்கால ப்ரோஜெக்ஷன் என்னுடைய தனிப்பட்ட மற்றும் பல வெப்சைட்களில் நான் படித்ததினால் வந்தது.<br />
<br />
<br />
<b><u><span style="color: magenta;">மாணவர் சேர்க்கையும் இட ஒதுக்கீடும்:-</span></u></b><br />
<br />
தமிழக மாணவர் சேர்க்கையானது நீட் தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இடஒதுக்கீடு (69%) அடிப்படையில்தான்.<br />
<br />
அதாவது<br />
<b><span style="color: #b45f06;">Other category (Open Competition) – 31 %, BC – 30 %, MBC – 20 %, SC – 18 % , ST – 1 %</span></b><br />
<b><span style="color: #b45f06;">இதற்குள் அருந்ததியருக்கு மற்றும் இஸ்லாமியருக்கு உள் ஒதுக்கீடும் உண்டு </span></b>ஆனால் இதுதான் பிரதான ஒதுக்கீடு.<br />
<br />
இந்த ஆய்வில் நான் தெரிந்துகொண்டது இந்த மருத்துவத்துறையை டாமினேட் செய்வது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே (நீங்கள் நினைப்பதுபோல் உயர் சாதியினர் அல்ல).<br />
<br />
இடஒதுக்கீடு மட்டுமல்லாமல் ஓபன் காம்பெடிஷன் (Other Category) சீட்டுகளையும் அதிகம் பிடிப்பது பிற்படுத்தப்பட்ட மாணவர்களே.<br />
அதாவது இந்த துறையில், எம்பிபிஎஸ் படிப்பில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏதெனும் ஒருவகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களே!<br />
<br />
அதாவது, 100இல் 95 சீட் பிற்படுத்தப்பட்டவர்களுக்கே.<br />
ஒட்டுமொத்தமாக 95% இருக்கும் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 95%தான் கிடைக்கிறது. மீதி 5% இருக்கும் உயர்சாதினர்களில் , 3% சீட்களை பிராமணர்களே பெற்றுக்கொண்டுவிடுகிறார்கள் . இது அவர்களோடு உயர்சாதிப்பிரிவில் போட்டியிடும் சைவ பிள்ளைமார் , கார்காத்தார் பிள்ளைமார் போன்ற வகுப்பினருக்கு மிகவும் கடினமாக இருக்கிறது..<br />
<br />
உயர்சாதியினர் போட்டியிடும் ஓபன் காம்பெடிஷனிலும் அவர்களுடன் போட்டியிட்டு அதிக சீட்களை வெல்பவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களே (BC, MBC etc) கடந்த பத்து வருடங்களாக (இந்த வருடம் நீங்கலாக ..ஏனென்றால் இந்த வருடம் ரேங்க் இல்லை) டாப் 20 ரேங்க் பட்டியலில் 16ல் இலிருந்து 18 இடங்களை பிடிப்பது பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான்.<br />
<br />
மேலே சொன்ன அனைத்தும் நான் மிக துல்லியமாக (ஒரு சில குறைகள் இருந்தாலும்) ஆராய்ந்து அழகான கம்ப்யூட்டர் சார்ட்டில் (computer based charts) செய்துள்ளேன்.. கீழே இருக்கும் படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdXJt5nbsT29hLOjAdRkn0EqsLU6e99Y6nuVmZslq51f7cBIUHJUpuDSfhkNutxzBtCyrl2mWU8v2BkqXQK8GoqH480z6CARHsZ7viVyZO5nXnm2oShWJJvqzGdUWlYuWl_go8xlF6WQc/s1600/padm+1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="515" data-original-width="960" height="342" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdXJt5nbsT29hLOjAdRkn0EqsLU6e99Y6nuVmZslq51f7cBIUHJUpuDSfhkNutxzBtCyrl2mWU8v2BkqXQK8GoqH480z6CARHsZ7viVyZO5nXnm2oShWJJvqzGdUWlYuWl_go8xlF6WQc/s640/padm+1.png" width="640" /></a></div>
<br />
<br />
<br />
இந்த படம் கடந்த 5 ஆண்டுகளில் எந்த சாதியினர் எத்தனை சீட் பெற்றுள்ளனர் என்பதை காட்டுகிறது இந்த படம் ஒன்றே போதும் எவ்வாறு பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று மருத்துவ துறையில் கொடிகட்டி பறக்கிறார்கள் என்று சொல்வதற்கு.<br />
<br />
அடுத்து<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBEg5T-Ok8xDyQuaWdiPt2F15szBILbDZNW5wFKS578D1NM3RuJHXUJ5WJ0NhPvupkJ6Fzhg1am5nmjyyax52dJq7OwpZbUjPTv8M-l1kcdCJN0kp3pv2Hw9lHyvoAqzUNxG571-6E388/s1600/padam+2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="512" data-original-width="960" height="340" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBEg5T-Ok8xDyQuaWdiPt2F15szBILbDZNW5wFKS578D1NM3RuJHXUJ5WJ0NhPvupkJ6Fzhg1am5nmjyyax52dJq7OwpZbUjPTv8M-l1kcdCJN0kp3pv2Hw9lHyvoAqzUNxG571-6E388/s640/padam+2.png" width="640" /></a></div>
<br />
மேலே இருக்கும் படத்தில் ஓப்பன் கோட்டா <b><span style="color: red;">(open category where anyone can compete for the seats)</span></b> என்ற பிரிவில் அதாவது உயர் சாதியினருடன் போட்டியிட்டு தேர்வில் வெற்றிபெற்று அங்கேயும் அதிக இடத்தை பிடிக்கிறது பிற்படுத்தப்பட்டமக்கள்தான் (BC,MBC,SC etc)<br />
<br />
<br />
ஏன் நீட் தேர்வை நமது கட்சியும், தளபதி அவர்களும் இவ்வளவு எதிர்க்கிறார்கள் என்பதற்கு அடுத்து வரும் புள்ளிவிவரங்கள்தான் காரணம்.<br />
கடந்த 10 வருடங்களாக, உயர்சாதியினர் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே சேர்கிறார்கள் (இந்த வருடம் நீட் தேர்வினால் இது 8% ஆகியிருக்கிறது)<br />
இங்குதான் பிரச்சினை.<br />
<br />
<span style="color: red; font-size: large;"><b>வெறும் 48ஆக இருந்த அவர்கள் எண்ணிக்கை இன்று திடீரென 211ஆக உயர்கிறது.</b></span><br />
<span style="color: red; font-size: large;"><b><br /></b></span>
இப்படி வருடா வருடம் சென்றால் கூடிய விரைவில் உயர்சாதியினரின் எண்ணிக்கை பலமடங்கு கூடி மறுபடியும் பிற்படுத்தப்பட்டவர்கள்பின்னுக்கு செல்லும் நிலை ஏற்படலாம். நாளை இதையே காரணம் காட்டி, இடஒதுக்கீடையும் ஏதாவது செய்தால் பிற்படுத்தப்பட்ட்பிள்ளைகளின் கனவு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூக நீதியே சமாதியாகிவிடும்.<br />
<br />
அடுத்து<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvBnI4CajxAuwdarkwxD5R5d4REblqa1FtOanTSWORkjatpsPYUIRb-PBMVUQeQtqczrE_BjFGTdRu7MRse8OfQ82q-BDDgI-fuWIIeOfH06A6k2JsmTJkJH-AZnjFEw7EsyMt8pUc_us/s1600/padam+3.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="501" data-original-width="960" height="334" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvBnI4CajxAuwdarkwxD5R5d4REblqa1FtOanTSWORkjatpsPYUIRb-PBMVUQeQtqczrE_BjFGTdRu7MRse8OfQ82q-BDDgI-fuWIIeOfH06A6k2JsmTJkJH-AZnjFEw7EsyMt8pUc_us/s640/padam+3.png" width="640" /></a></div>
<br />
<br />
மேலே உள்ள இந்த படமானது கடந்த 5 வருடங்களில் இட ஒதுக்கீடு இருந்தால் எவ்வளவு பேர்இல்லையென்றால் எவ்வளவு பேர் ஒவ்வொரு சாதிபிரிவிலும் மருத்துவர்களாகியிருப்பார்கள் என்பது விளக்கப்படுகிறது.<br />
<br />
<span style="color: red;"><b>அதாவது இடஒதுக்கீடு அடிப்படியில் மாணவர் சேர்க்கை இல்லை என்றால் , பிற்படுத்தப்பட்ட (BC) மற்றும் உயர்சாதி (FC) மாணவர்கள் 350இலுருந்து 400 சீட்கள் அதிகம் வாங்குவார்கள் . தலித் (SC) மற்றும் மிகவும் பின்படுத்தப்பட்ட (MBC) மாணவர்கள் கணிசமாக இழப்பார்கள்.</b></span><br />
<br />
அடுத்து<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRSwY9XmeXLYWOP37OUT0E50dsN90Zdf3-Oz2OOYBkvU6lj1g1gxNdmx2jC76EFhMaY41BZeiWjHzEazpn0U10-jo4mM59ovx4l4tNfHL0TJTdBlngGVYOVzuzkBjMb5x_4Itv0z2eqZk/s1600/padam4.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="403" data-original-width="960" height="268" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRSwY9XmeXLYWOP37OUT0E50dsN90Zdf3-Oz2OOYBkvU6lj1g1gxNdmx2jC76EFhMaY41BZeiWjHzEazpn0U10-jo4mM59ovx4l4tNfHL0TJTdBlngGVYOVzuzkBjMb5x_4Itv0z2eqZk/s640/padam4.png" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
<b><span style="color: red;">இந்த படமானது நீட் தேர்வின் அடிப்படியில் நடந்தால் வெறும் 48 சீட்டிலிருந்து உயர்சாதியினர் 2020இல் 400 சீட்கள் பெறுவார்கள்.</span></b><br />
<b><span style="color: red;">அதாவது இதுவரை 2% பெற்றவர்கள் இதனால் 20%இருக்கும் மேலே பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பிற்படுத்தப்பட்ட் நானூறுபேர் மருத்துவராக முடியாது. பிற்படுத்தப்பட்ட (MBC,BC,SC etc) சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு காத்திருக்கிறது.</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
அடுத்ததாக<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3pNESo7szxDvf16nlseTBuY-NUKvjzYzH9IS0XgaasQJg328PwQy-ZNSMhGejrYRgoSQHLsdZV_A9-pP6W8OYF-XcxJhFjKRYx89ZIIex7DuvRGixn_z3R0FzayfKynlZyL9l69OuaVg/s1600/padam+5.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="522" data-original-width="954" height="350" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3pNESo7szxDvf16nlseTBuY-NUKvjzYzH9IS0XgaasQJg328PwQy-ZNSMhGejrYRgoSQHLsdZV_A9-pP6W8OYF-XcxJhFjKRYx89ZIIex7DuvRGixn_z3R0FzayfKynlZyL9l69OuaVg/s640/padam+5.png" width="640" /></a></div>
<br />
<b><span style="color: red;">இப்போது இருக்கும் 5 ஆண்டு டேட்டாவை வைத்து (2017ஐ அடித்தளமாக வைத்துகொன்டு/Base year) எதிர்காலத்தை கணித்தால் அதாவது இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தால் அல்லது இப்போது ரத்து ஆனால் உயர்சாதியினர் பாதிக்குமேல் அதாவது 5% உள்ள அவர்கள் 50% சீட்களை வெல்வதற்கு வாய்ப்பு அதிகம் .</span> </b><br />
<br />
அதாவது இட ஒதுக்கீடு இல்லையென்றால் இந்தத்துறையும் உயர்சாதியினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.<br />
இடஒதுக்கீட்டால் நமது மருத்துவத்துறை பாதிப்படைந்ததா?<br />
இல்லை, கடந்த பல வருடங்களாக நமது மாநிலத்தில் இடஒதுக்கீடு மூலம்தான் இந்த துறையில் மாணவ சேர்க்கை நடக்கிறது.<br />
ஆனாலும் இந்தியாவிலேயே தலைசிறந்த மருத்துவத்துக்கு நமது மாநிலம் முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவிலேயே மெடிக்கல் டூரிசம் என்று சொல்லப்படும் மருத்துவத்திற்காக வெளிநாட்டிலும் மற்ற மாநிலத்திலும் அதிகம் விரும்பும் நகராக நமது சென்னை விளங்குகிறது.<br />
நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவ காலோரிகள் இங்குதான் உள்ளது . தலைசிறந்த மருத்துவர்கள் இங்குதான் உள்ளார்கள்.<br />
எந்த ஒரு நோயை எடுத்துக்கொண்டாலும் அதற்கு <b style="background-color: white;"><span style="color: magenta;">மூன்று அடுக்கு வைத்தியம் அல்லது கவனிப்பு தேவை (three levels of “care”)</span></b><br />
<b style="background-color: white;"><span style="color: magenta;"><br /></span></b>
<b style="background-color: white;"><span style="color: magenta;"><br /></span></b>
<b style="background-color: white;"><span style="color: magenta;">1. முதல் அடுக்கு -Primary Care – to Prevent the Disease – நோய் வராமல் தடுக்க. அல்லது ஆரம்ப நிலையில் வைத்தியம் பார்க்க</span></b><br />
<b style="background-color: white;"><span style="color: magenta;"><br /></span></b>
<b style="background-color: white;"><span style="color: magenta;"><br /></span></b>
<b style="background-color: white;"><span style="color: magenta;">2. இரண்டாவது அடுக்கு -Secondary Care – To Treat Disease – வைத்தியம் பார்க்க</span></b><br />
<b style="background-color: white;"><span style="color: magenta;"><br /></span></b>
<b style="background-color: white;"><span style="color: magenta;"><br /></span></b>
<b style="background-color: white;"><span style="color: magenta;">3. மூன்றாவது அடுக்கு -Tertiary Care – To Treat Complications – நோயினால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க</span></b><br />
<span style="background-color: white;"><span style="color: magenta;"><br /></span></span>
<br />
இதில் முதல் அடுக்கு கவனிப்பை ஆரம்ப சுகாதார நிலையங்களும் (அந்த இயக்குனரகத்தில் பெயரில் ஆரம்ப சுகாதாரம் , தடுப்பு மருத்துவம் இருப்பதை கவனியுங்கள்) இரண்டாம் அடுக்கு கவனிப்பை அரசு மருத்துவமனைகளும், மூன்றாம் அடுக்கு கவனிப்பை மருத்துவக்கல்லூரிகளும் அளித்து வருகின்றன<br />
.<br />
உதாரணமாக<br />
<br />
• சுகப்பிரசவம் என்றால் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பார்க்கலாம்<br />
<br />
• அறுவை சிகிச்சை என்றால் அரசு மருத்துவமனைகளில் பார்ப்பார்கள்<br />
<br />
• சிறிது சிக்கல் (உயர் இரத்த அழுத்தம், வெட்டு, மஞ்சள்காமாலை, இரட்டை குழந்தைகள், இரத்த போக்கு) என்றால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் பார்க்கலாம்.<br />
<br />
இந்த மூன்றடுக்குமே அரசாங்கத்தால் மிக சிறப்பாக பல வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வருவதும் நம் மாநிலத்திலேதான்.<br />
<br />
வட மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது நாம் எவ்வளவு மேம்பட்டு இருக்கிறோம் என்பது கீழ்வரும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. .<br />
<br />
<br />
<b>மருத்துவர்களின் எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)<span style="color: red;"> தமிழ் நாடு - 149 </span>; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 87 ; மபி - 41 ; உபி - 31; ராஜஸ்தான் - 48 ; சத்தீஸ்கர் - 23 ;<span style="color: red;"> இந்திய சராசரி : 36</span></b><br />
<b><br /></b>
<b><br /></b>
<b>Infant Mortality Rate (IMR சிசு மரண விகிதம் 1000 பிறப்புக்கு) :- </b><br />
<b><span style="color: red;">தமிழ் நாடு - 21</span> ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் - 46 ; <span style="color: red;">இந்திய சராசரி : 40</span></b><br />
<br />
<br />
<b>Maternal Mortality Rate (MMR - ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்) <span style="color: red;">தமிழ் நாடு - 79 </span>; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285 ; ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ;<span style="color: red;"> இந்திய சராசரி : 167</span></b><br />
<br />
<br />
<b>தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் (vaccination coverage) :- <span style="color: red;">தமிழ் நாடு - 86.7%</span> ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 55.2% ; மபி - 48.9% ; உபி - 29.9% ; ராஜஸ்தான் - 31.9% ; சத்தீஸ்கர் - 54% ; <span style="color: red;">இந்திய சராசரி : 51.2%</span></b><br />
<span style="color: red;"><br /></span>
<br />
<b>கல்வி விகிதாசாரம் (Literacy Rate) :- <span style="color: red;">தமிழ் நாடு - 80.33%</span> ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 79% ; மபி - 70% ; உபி - 69% ; ராஜஸ்தான் - 67% ; சத்தீஸ்கர் - 71% ; <span style="color: red;">இந்திய சராசரி : 74%</span></b><br />
<br />
<br />
<b>ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):- ----------------------------------------------------------- <span style="color: red;">தமிழ் நாடு - 943</span> ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; ராஜஸ்தான் - 888 ; <span style="color: red;">இந்திய சராசரி : 919</span></b><br />
<b><br /></b>
<b><br /></b>
<b>மனித வள குறியீடு (Human Development Index)</b><br />
<b><span style="color: red;">தமிழ் நாடு - 0.6663 ;</span> பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ;ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; <span style="color: red;">இந்திய சராசரி : 0.6087</span></b><br />
<b><br /></b>
<b><br /></b>
<b>ஏழ்மை சதவீதம் (Poverty % of people below poverty line) தமிழ் நாடு - 11.28% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 16.63% ; மபி - 31.65% ; உபி - 29.43% ; ராஜஸ்தான் - 14.71% ; சத்தீஸ்கர் - 39.93% ; இந்திய சராசரி : 21.92%</b><br />
<br />
<br />
<b>ஊட்டசத்து குறைபாடு குழந்தைகள் (Malnutrition) <span style="color: red;">தமிழ் நாடு - 18% </span>; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 33.5% ; மபி - 40% ; உபி - 45% ; ராஜஸ்தான் - 32% ; சத்தீஸ்கர் - 35% ; <span style="color: red;">இந்திய சராசரி : 28%</span></b><br />
<br />
<br />
நண்பர்களே… இட ஒதுக்கீட்டால் மருத்துவத்துறையில் பாதிப்பு ஏற்படுகிறதா? இந்த இட ஒதுக்கீட்டால் பயன்பெறுபவர் எவர்? நீட் தேர்வால் பாதிக்கப்பு யாருக்கு என்ற கேள்விகளுக்கெல்லாம் தற்போது விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.<br />
<br />
நீட் தேர்வை நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய அவசியத்தையும் இந்த ஆய்வு தெளிவாக்கியிருக்கும் என்றும் நம்புகிறேன்.<br />
இதில் ஏதேனும் சந்தேகம் தங்களுக்கு இருந்தால் கேட்கலாம்.<br />
<br />
<div style="text-align: center;">
<span style="color: cyan;">******************************</span></div>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFr0UqYr_DyIf6aod2naBESJIdGc99R2eelPpi7L01qeKN_QDHKy_vfqh4yPwIXgcT7qChMFFlzn2c1ysrg4HA7Z-IU6v0fy-nQTk-i4HA0LTYr-EYBX2kca5JCCw7zBL2VIqL_NDBn4I/s1600/edwin.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="960" data-original-width="960" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFr0UqYr_DyIf6aod2naBESJIdGc99R2eelPpi7L01qeKN_QDHKy_vfqh4yPwIXgcT7qChMFFlzn2c1ysrg4HA7Z-IU6v0fy-nQTk-i4HA0LTYr-EYBX2kca5JCCw7zBL2VIqL_NDBn4I/s200/edwin.jpg" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">கட்டுரையாளர்: நெல்லை நாங்குநேரி ஆரோக்ய எட்வின்</td></tr>
</tbody></table>
<br />
<div style="text-align: center;">
<br /></div>
திரு. எட்வின் அவர்களின் இந்தப்பதிவின் முகநூல் சுட்டி<br />
<br />
https://www.facebook.com/permalink.php?story_fbid=750200835152798&id=747725028733712அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74850514651179304162016-07-09T22:16:00.001+05:302016-07-09T22:16:15.109+05:30மீண்டும் நான் அபிஅப்பா இங்கே!<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
அப்போதெல்லாம் பள்ளிக்கு சேர்க்கும் போது அந்த குழந்தைக்கு 2 ரூபாய்க்கு ஒரு மாலை எல்லாம் வாங்கி போட்டு கன்னத்தில் சந்தனம் எல்லாம் தடவி கையிலே ஒத்த பைசா சாக்லெட் கொடுத்து அந்த சாக்லெட் வாயில் பாதியும் கையில் மீதியுமாக வாயில் எச்சில் ஒழுகவும், கண்ணில் கண்ணீர் ஒழுகவும் வந்து தான் காதை சுத்தி மூக்கை தொட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சுபயோக சுபதினத்தில் நான் என் ஒன்றாம் வகுப்பு லெஷ்மி டீச்சர் வகுப்பில் அழுது கொண்டே அமரும் போது பக்கத்தில் இருந்தவன் பெயர் பாலாஜி. அவன் அப்பா பெயர் செல்வராஜ் பி.ஏ.பி.எல். பள்ளிக்கு எதிர்வீட்டுக்கு 8 வீடு தள்ளி தான் அவன் வீடு. ஆச்சுதா... எனக்கு என் வலது பக்கத்தில் அமர்ந்து இருந்த ராதாவை பிடித்த அளவுக்கு பாலாஜியை பிடிக்கவில்லை. அவன் ஒரு உம்மணாம் மூஞ்சியாக இருந்தான்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஏனனில் ராதா என்னுடன் இந்த தேசிய ஆரம்பப்பள்ளி வரும் முன்னரே ஆரியபாலா, அவ்வையார் ஸ்கூல், புதுத்தெரு என பல பள்ளிகளில் பள்ளி தோழனாக (4ம் வயதில் நான்கு பள்ளிகள் நாங்கள் கொட்டம் அடித்து விரட்டப்பட்டும், தானாக வெளியேறியதும் முன்பே எழுதி இருக்கின்றேன்) இருந்தமையால் ராதாவிடமான என் நட்பு பிடித்து இருந்தது. ஆனால் பாலாஜியை என்னால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஆனால் என் துரதிஷ்டம் என் அடுத்த அடுத்த வகுப்பிலும் இதே பாலாஜி தான் என் வகுப்பு தோழன். தோழன் என சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது. வகுப்பு எதிரி. எதிரி என்றால் நாங்கள் அடித்து கொள்வோம் என்றெல்லாம் இல்லை. பேசிக்கவே மாட்டோம். ஆனால் செட்டித்தெரு சிவசங்கரன் மாத்திரம் இவனிடம் பேசுவான். (அவன் இப்போது மகாதானத்தெரு அம்பாபாய் திருமண மண்டபம் பக்கத்தில் கடை வைத்து இருக்கான்)</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அவனை நான் முறைப்பதும் அவன் என்னை முறைப்பதுமாக பல ஆண்டுகள் ஓடின. அந்த பள்ளியில் இருந்து அடுத்த பள்ளியான உயர்நிலை பள்ளிக்கு வந்த பின்னரும் கூட எங்கள் இருவருக்கும் ஒரே வகுப்பு தான் அமைந்தது. அப்பவும் பேசுவது இல்லை. ஒரு சில நாட்கள் “வீட்டு பாட நோட்டு வேண்டும்” என ஒரு துண்டு சீட்டில் எழுதி அவன் எனக்கு தள்ளி விடுவதும் பதிலுக்கு நான் “தரேன்.. ஆனா மரியாதையா அதிலே நடுப்பக்கம் பேப்பர் கிழிக்காமல் தரவும்” என ‘நோட்’ எழுதி அதை தள்ளி விடுவதும் தான் தொடர்ந்ததே தவிர வாய் வார்த்தைகள் எதும் இல்லை.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
சரின்னு அப்படியே வாழ்க்கை போனது.. ஆனால் வகுப்பு பிரிக்கும் போது கூட எங்கள் இருவருக்கும் மட்டும் மாறாது... ஒரு கட்டத்தில் 9ம் வகுப்பு முதள் நாள் நான் வந்து அந்த “எதிரி”க்கு சீட் போட்டு விட்டு காத்திருந்தேன். லேட்டாக வந்த அவன் ஓடி வந்து என்பக்கத்தில் அமர்ந்ததும், அது போல பத்தாம் வகுப்பில் என்.வி சார் வகுப்பில் அவன் எனக்கு இடம் போட்டு வைத்ததும் கூட நடந்தது... பத்தாம் வகுப்பு முடிந்தது.... சரி இனி சனி விட்டது... நான் பாலிடெக்னிக் போய்விடுவேன் என நினைத்து இருந்த போது தான் அந்த விபத்து நடந்தது.... ஆமாம் இருவருக்கும் பாலிடெக்னிக் கிடைக்கவில்லை....</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
மீண்டும் 11 வது ஏ பிரிவில் இருவருக்கும் அடுத்த அடுத்த இடம். அது எங்கள் பள்ளியில் 3ம் நம்பர் வகுப்பு. அதே போல அதற்கு மேலாக இருப்பது 12 வது ஏ. ஆக அந்த இரண்டு வருடம் கூட அப்படித்தான் கழிந்தது. அப்போதும் பேசிக்கொள்வது கிடையாது. ஒரு வழியாக 12ம் வகுப்பு முடிந்தது....</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அடுத்து காலேஜ் சேர வேண்டும்....</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
முதல் நாள் அட்மிஷன்... நல்ல மார்க் வாங்கினவனுக்கு எல்லாம் இன்னும் லிஸ்ட் வராத நிலையில் எனக்கு வந்து விட்டது. ஈ.எஸ்.கணபதி பிள்ளை அவர்கள் சிபாரிசால் எனக்கு முதல் லிஸ்ட் பெயர். அதை போய் கல்லூரியில் பார்க்கும் போது அட ராமா... அவன் பெயர் எனக்கு முன்னாடி நிக்குது. அவன் ராதாபிள்ளை சிபாரிசால் உள்ளே வந்து விட்டான். சரின்னு காலேஜ் அட்மிஷன் போகும் போது என் அப்பா என்னை அழைத்து போக, அவன் அவன் அப்பாவுடன் அதாவது செல்வராஜ் அப்பாவுடன் வந்தான். நால்வரும் நேருக்கு நேராக பார்த்துக் கொண்டோம்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அப்பா தன் முகத்தை திருப்பிக் கொள்ள, அவன் அப்பாவும் முகத்தை திருப்பிக் கொண்டார். அட்மிஷன் முடிந்து வெளியே வந்தோம்...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
என் அப்பா என்னிடம் “டேய் அந்த செல்வராஜ் ரொம்ப திமிர் காரண்டா... ஒன்னாவது முதல் சிஸ்த்பாரம் வரை ஒன்னாதான் படிச்சோம். என் பக்கத்தில் தான் அவன் சீட்டு. பி ஆர் தான் வாத்தியார். நாங்க பேசிக்கிட்டதே இல்லை. ரொம்ப திமிர்காரன்” என சொன்னாங்க....</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அந்த மூன்று வருடங்களும் நாங்க பக்கத்து பக்கத்துல தான். ஆனாலும் பேச்சு வார்த்தை கிடையாது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அப்பாடான்னு பி எஸ் சி முடிந்த பின்னர் கூட நாங்கள் கடைத்தெரு, பள்ளி என எங்கு பார்ப்பினும் பேசுவது கிடையாது... ஒழிஞ்சாண்டா என நினைத்துக் கொள்வேன்...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பின்னர் 1992ல் நான் முதன் முதலாம அபுதாபி போன போது சிரியன் ஏர்வேஸ்ல மும்பையில் (அப்போ பம்பாய்) இருந்து போகும் போது கூட பக்கத்து சீட்டில் இவன் வந்துடுவானோ என நினைத்து பயந்தேன்... நல்ல வேளை ... இல்லை...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பின்னர் 1994ல் தான் அவனை பார்த்தேன்... என் வீடு அப்போது மாயூரநாதர் வடக்கு வீதி. அவன் வீடு மகாதானத்தெரு... கூப்பிடு தூரம்...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
வீட்டுக்கு வந்தான். நான் அப்போது லீவில் வந்திருந்தேன்... வாசலில் நின்று ஹார்ன் அடித்தான். மனசு திக் திக் என ஆனது. பேசிடுவானோ என பயந்தேன்... பேசவில்லை... ஒரு பத்திரிக்கை கொடுத்தான். விர்ரென போயிட்டான்...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அவனுக்கு கல்யாணமாம்.... எனக்கு அப்போது தான் பெண் பார்க்கும் படலம்....</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நானும் கல்யாணத்துக்கு போனேன்... அமைதியாக போய் மேடையில் நின்ற அவன் முகம் கூட பார்க்காமல் அன்பளிப்பை அவன் மனைவி கையில் கொடுத்தேன். வந்து விட்டேன். சாப்பிடவில்லை...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அதன் பின்னர் நான் அந்த ஒரு மாத லீவில் ஒரு நாள் அவன் வீட்டு வாசலில் என் வண்டியில் (அப்பாவின் கைனடிக் ஹோண்டா) ஒரு ஆடு குறுக்கே வந்ததால் சறுக்கி விழுந்தேன். எழுந்தேன்... வாசலில் இருந்தவன் வந்தான். பின்னர் உள்ளே போய் விட்டான். அவன் வீட்டு வாசலில் அமர்ந்தேன். டங் என ஒரு லோட்டா தண்ணீர் கொண்டு வந்து வைத்தான். ஒரு காசித் துண்டை எடுத்து என் மீது போட்டான். காயத்தை துடைத்துக் கொள்ள வேண்டுமாமாம். உள்ளே போய் விட்டான்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நானும் மீண்டும் 1995ல் வந்தேன். என் திருமணம்... அவனுக்கு சென்று பத்திரிக்கை கொடுக்க போனேன். அவன் இல்லை. கதவிடுக்கில் அழைப்பிதழை தள்ளி விட்டு வந்து விட்டேன். அவனுக்கு நண்பனாக இருக்கும் சிவசங்கரை கேட்டேன்... “டேய் அவனுக்கு பேச்சு வருமா? வராதா?” என்றேன்.... சிவசங்கர் சொன்னார் “இதையேத்தான் அவனும் கேட்டான்” ...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
என் திருமணத்துக்கு வந்தான். மேடையில் என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி அன்பளிப்பை என் மனைவி கையில் கொடுத்தான் போய்விட்டான்....</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அடுத்து சில நாட்களில் ஒரு பேய் மழை... எங்கோ போய் விட்டு வண்டியில் வந்து கொண்டு இருந்தான். என் வீடு வந்ததும் நிப்பாட்டினான்... நான் கேட்டை திறந்து விட்டேன். கொட்டும் மழையில்நனைந்து இருந்தான். நான் உள்ளே போய் ஒரு துண்டை எடுத்து வந்து அவன் மீது போட்டேன். பின்னர் உள்ளே போய்விட்டேன்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இதல்லாம் 1995.....</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இன்று 09.07.2016... மாலை நான் வண்டியில் வந்து கொண்டு இருந்தேன்.... அவனும் நானும் அதே எங்கள் பள்ளிக்கு எதிரே சந்தித்துக்கொண்டோம்....</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நான் வண்டியை நிப்பாட்டி விட்டேன். அவனும் எதிர்புரம் வண்டியை நிறுத்தி விட்டான்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
சற்று நேரம் இருவரும் பார்த்துக் கொண்டோம்... பின்னர் அவன் போய்விட்டான். நானும் வந்து விட்டேன். வீட்டுக்கு வந்து என் மனைவியிடம் எல்லாம் சொன்னேன்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
“அடடே பாலாஜி பொண்ணு கூட நம்ம அபி கூடத்தான் படிக்கிறா... சேர்க்கும் போது அவரும் அவர் மனைவியும் தான் வந்தாங்க. ஆனா பேசலை நாங்க. பின்ன மயிலாடுதுறை என்றதும் தான் அவங்க மனைவி பேசினாங்க. அனேகமாக அபி க்ளாஸ் தான் இருக்கனும். ஆனா தெரியலை” என சொன்னாங்க....</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஆக மூன்றாம் தலைமுறையாக அந்த நடக்காத சண்டை நடந்து கொண்டு இருக்க வேண்டும்....</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
..............</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-top: 6px;">
நிற்க.... ஒரு வேளை பாலாஜியும் இது போல முகநூல் பதிவுகள் எழுதுபவனாக இருந்தால் இதே பதிவை எழுதி இருக்கலாம். யார் கண்டது? ஆகவே பாலாஜி என தேடிப்பார்த்து உங்கள் நேரத்தை செலவடிப்பதை விட இதே பதிவில் என் பெயர் வரும் இடத்தில் அவன் பெயரையும் அவன் பெயர் இடத்தில் என் பெயரையும் போட்டு படித்து பார்த்து புலகாங்கிதம் அடையும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்!</div>
அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39540068358696309502014-12-29T10:51:00.002+05:302014-12-29T10:51:21.085+05:30மெடிகல்சீட் வாங்கலியோ மெடிகல் சீட்!!!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix1KcOWQFVS0wRKb7e7_hrRdrok9U8ULdDYrND47484SLTQbURcVHtzPWPGIPCpUmsrqqITN_3ydy_oKqywTB9fTfR6-2yd7zVLjL3-slS2ahbVz_LyHf4SAFQ6k-xmEktlnAug0PzHsc/s1600/natraj+4.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix1KcOWQFVS0wRKb7e7_hrRdrok9U8ULdDYrND47484SLTQbURcVHtzPWPGIPCpUmsrqqITN_3ydy_oKqywTB9fTfR6-2yd7zVLjL3-slS2ahbVz_LyHf4SAFQ6k-xmEktlnAug0PzHsc/s1600/natraj+4.JPG" height="300" width="400" /></a></div>
<br /><br />இந்த டெலிமார்கெடிங் ஆசாமிகளுக்கு எப்படித்தான் டேட்டாஸ் கிடைக்கிறதோ தெரியவில்லை. சமீபமாக ஒரு கம்பனியில் இருந்து போன். <br />
<br /><br />"சார் நீங்க தான் அபிராமி அப்பாவா?"<br /><br />"ஆமாம்" <br /><br />"உங்க பொண்ணை மெடிகல் சேர்கனுமா?"<br /><br />"ஆமாங்க ஆமாம்"<br /><br />"ரொம்ப சிம்பிள். அப்ராட்ல படிக்க வையுங்க. ஜஸ்ட் 25 லட்சம் தான். பிலிப்பைன்ஸ்ல... போக்குவரத்து செலவு, கட்டுசோறு செலவு உட்பட மெடிகல் முடிஞ்சு அதிலே பி ஜியும் முடிச்சு அதன் பின்னே இங்க இந்தியாவிலே ஒரு டெஸ்ட் இருக்கு, அதையும் பாஸ் பண்ண வச்சு உங்க கிட்ட டாக்டரா ஒப்படைக்கும் வரை ஜஸ்ட் 25 லட்சம் தான்"<br /><br />"ஜஸ்ட்(!?) 25 லட்சம் தானா, இருக்கட்டும்க, அவ மார்க் என்னான்னு பார்த்துகிட்டு பின்ன பேசுவோம்"<br /><br />"சார் இப்ப அட்மிஷன் நடக்குது வெறும் ஒன்னரை லட்சம் கட்டி சீட் வாங்கிடுங்க. மத்ததை பின்ன பார்த்துப்போம். பாஸ்போர்ட் கூட நாங்க அப்ளை பண்ணி வாங்கி, விசா ப்ராசஸ் பண்ண ஆரம்பிச்சிடுவோம்"<br /><br />"பிசாத்து காசு ஒன்னரை லட்சம் தானே. குடுத்தா போச்சு. (அவ்வ்வ்வ்) பின்ன பேசிப்போம்"<br /><br />ஒரு வழியா போனை கட் பண்ணும் வரை போதும் போதும் என்றாகிவிடும். பேசுவது ஆண்களா இருந்தா கூட கொஞ்சம் கடுமையா சொல்லி வைக்கலாம். எல்லாம் பொம்பள பசங்க. கடுமையா பேசி நோகடிக்க மனசும் வரலை. பாவம் அவங்க பொழப்பு அது. <br /><br />இப்படியாக நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போன் கூட அல்லாடிக்கொண்டு இருந்தேன். <br /><br />இப்படித்தான் இரண்டு நாள் முன்பாக இரவு வெகுநேரம் கழித்து வந்தேன் வெளியூரில் இருந்து. காலையில் அசந்து தூங்கி கொண்டு இருந்த போது போன் வந்தது. எடுக்கலாம் என நினைக்கும் போது அசதியில் முடியவில்லை. என் மகன் நட்ராஜ் தான் எடுத்தான். தூக்க கலக்கத்தில் அந்த சம்பாஷனைகளை மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தேன்.<br /><br />"ஹலோ சார், எப்படி இருக்கீங்க?"<br /><br />"நான் நல்லா இருக்கேன்" - நட்ராஜ்<br /><br />(நட்ராஜ்க்கு எப்போதும் போனை ஸ்பீக்கர்ல போட்டு பேசுவது தான் வழக்கம். காது வலிக்கும் என டேபிள் மேலே வச்சுட்டு நடந்து நடந்து எல்லாம் பேசுவான்)<br /><br />"யாரு தம்பி இது. வீட்டிலே அப்பா இல்லியா? அப்பா கிட்டே கொடுங்க நல்ல பிள்ளை தானே நீங்க?"<br /><br />"நான் நல்ல பிள்ளை தான். அப்பா தூங்குறாங்க. எழுப்பினா கத்துவாங்க"<br /><br />"சரி அம்மா கிட்ட கொடுங்க"<br /><br />"அம்மா கோவிலுக்கு போயாச்சு. அக்கா ட்யூஷனுக்கு போயாச்சு. இன்னிக்கு ஃபுல் டெஸ்ட் இருக்கு பிசிக்ஸ்ல"<br /><br />"சரி வீட்டிலே பெரியவங்க இருந்தா கொடுங்க"<br /><br />"நானே பெரியவங்க தான். என் பிரண்ட் கோகுலோட தம்பி நகுல் எல் கே ஜி தான் படிக்கிறான். அவனே என்னை "அண்ணா"ன்னு தான் சொல்லுவான். அதனால நானே பெரியவங்க தான். அதனால என் கிட்ட சொல்லுங்க"<br /><br />"அது வந்துப்பா... அபிராமிக்கு மெடிகல் சீட் பிலிப்பைன்ஸ்ல படிக்கிறது விஷயமா பேசனும்"<br /><br />"பிலிப்பைன்ஸ் எங்க இருக்கு?"<br /><br />"தூரமா இருக்கு. அப்பாவை எழுப்புங்க"<br /><br />"மேக்னா மெட்ரிகுலேஷன் ஸ்கூலை விட தூரமா?"<br /><br />"என்னது? ...இது ரொம்ப தூரம், பிளைட்ல போகனும், அப்பாவை எழுப்புங்க"<br /><br />"ஆட்டோவுல தான் நான் போவேன். அதுக்கு மாசம் 600 ரூப்பீஸ். பிளைட்ல தினம் போகனும்னா எவ்ளோவ் பீஸ்"<br /><br />"தம்பி நல்ல பிள்ளை தானே நீங்க. அப்பாவை எழுப்புங்க"<br /><br />"நான் பிலிப்பைன்ஸ்ல படிக்க எவ்ளோவ் ஆகும்"<br /><br />கொஞ்சம் சலிப்புடன் "25 லட்சம் ஆகும்"<br /><br />"நான் ஃபோர்த் ஸ்டேண்டர்ட் போனதும் நானும் பிலிப்பைன்ஸ்ல வந்து படிக்கட்டா"<br /><br />"தம்பி வீட்டிலே பெரியவங்க வேற யாரும் இருந்தா கொடுங்க"<br /><br />"நானே பெரியவங்க தான். வேணுமின்னா நகுல் கிட்டே கேளுங்க. அவன் அம்மா நம்பர் தரவா"<br /><br />"தம்பி நீங்க +2 முடிச்சதும் இங்க வந்து படிக்கலாம். இப்ப அப்பாவை எழுப்புங்க"<br /><br />"அதான் சொன்னனே அப்பாவை எழுப்பினா கத்துவாங்க. 25 லட்சம்னா ட்வண்டி ஃபைவ் போட்டு எத்தினி சைபர்"<br /><br />அவங்க மனசுகுள்ள கணக்கு போட்டு பார்த்திருப்பாங்க போலிருக்கு..... கொஞ்சம் இடைவெளி விட்டு "அது நிறைய சைபர் இருக்கு"<br /><br />"அய்யோ, மேக்னா ஸ்கூல்ல 14 போட்டு மூணு சைபர் தான். அம்மா அதுக்கே கத்துறாங்க. நெறய சைபர்க்கு நெறய கத்துவாங்க"<br /><br />"அது வேற ...இது வேறப்பா. அப்பாவை எழுப்பு"<br /><br />"ப்ளைட் பெருசா இருக்குமா? கோகுல், வித்யா எல்லாம் என் ஆட்டோவிலே வருவாங்க, அவங்களும் அங்க சேர்ந்தா எல்லாரும் பிளைட்ல போலாம்ல"<br /><br />"ஆமாம், அம்மா வந்தாச்சா கோவில்ல இருந்து" <br /><br />"இன்னும் வரலை. வந்தாலும் தரமாட்டேன். எனக்கு சொல்லுங்க பிளைட் பெரிசா இருக்குமா?"<br /><br />"ம் இருக்கும்" ரொம்ப டயர்டா ஆகிட்டாங்க போலிருக்கு. <br /><br />"நீங்களும் பிலிப்பைன்ஸ்ல தான் படிச்சீங்கலா"<br /><br />"இல்ல. அங்க படிச்சா நான் ஏன் டெலிமார்கெடிங்ல இருக்கேன்"<br /><br />"டெலிமார்கெடிங்னா என்னா?"<br /><br />போன் டக்கென வைக்கப்பட்டது. <br /><br />சரியான "மூடர் கூடத்தில்" வந்து மாட்டிகிட்டோம்னு நினைச்சிருப்பாங்க அந்த பெண்.<br />
<br />அதன் பின்னர் இதுவரை அவங்க கிட்ட இருந்து போன் வரலை. அவங்க பட்ட கஷ்டம் அவங்களுக்கு தானே தெரியும்!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-47059833176410595612014-12-27T15:32:00.001+05:302014-12-27T15:32:49.636+05:30"பாரத்ரத்னா கலைஞர் மு.கருணாநிதி"<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLSSEgzIX5YcenxMshPV0csWzFuoIMcUctdI5pYn1qX1on_4NfL3FcxP3xlIxVIhyHiEkWiud3J6_dCtlu3XQhORoZpeVPbMs1UwGKgzVw9AtHwaxl0Z2DVHG-LNyImGtCOjx3MSijaYo/s1600/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLSSEgzIX5YcenxMshPV0csWzFuoIMcUctdI5pYn1qX1on_4NfL3FcxP3xlIxVIhyHiEkWiud3J6_dCtlu3XQhORoZpeVPbMs1UwGKgzVw9AtHwaxl0Z2DVHG-LNyImGtCOjx3MSijaYo/s1600/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+1.jpg" height="392" width="640" /></a></div>
<br />"பாரத்ரத்னா" - இந்தியாவின் மாபெரும் உயரிய சிவிலியன் விருது. அந்த விருதுக்கு இந்த வருடம் இந்து மாகான சபையை தோற்றுவித்த மதன்மோகன் மாளவியா மற்றும் வாஜ்பாய் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றது. அது பற்றி கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை... <br />
<br />
<br />இந்த நேரத்தில் தந்தை பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் "பாரத்ரத்னா" வழங்க வேண்டும் என்ற குரல் கலைஞரிடம் இருந்து ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. உடனே சில தோழர்கள் குறிப்பாக விடுதலை சிறுத்தை அமைப்பு தோழர்கள் சிலரிடம் இருந்தே கலைஞர் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கின்றார் என்று இணையத்தில் எழுதி வருகின்றனர். <br />
<br /><br />நான் கேட்கின்றேன். கலைஞருக்கு "பாரத் ரத்னா" கொடுக்க வேண்டும் என கேட்டால் என்ன தவறு? கலைஞருக்கு ஏன் பாரத்ரத்னா கொடுக்க வேண்டும் என பட்டியலிட்டால் அந்த கட்டுரைகள் பல பாகங்கள் வரும். இன்னும் சொல்லப்போனால் கலைஞருக்கு பாரத்ரத்னா ஏன் இன்னும் கொடுக்கவில்லை என அதிகாரமாக ஆக்ரோஷமாக கேட்க வேண்டும் தமிழனாக பிறந்த எவனும். திராவிடனாய் பிறந்த எவனும். நிலமை அப்படி இருக்க "கலைஞர் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கின்றார்" என எழுதுவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். இதுவே கலைஞர் அவர்கள் உயர்சாதி வகுப்பில் பிறந்து இருந்தால் அகில இந்தியாவுமே கொண்டாடி இருக்கும். மாற்றாக அவர் மிகவும் பிற்ப்பட்ட சமூகத்தில் வந்து பிறந்து விட்ட பாவத்தால் தான் இப்படி நம்மை சார்ந்த தோழர்களே ஏளனம் செய்யும் நிலையில் இருக்கின்றார். <br />
<br /><br />பொதுவாக இந்திய ஜனாதிபதி தான் (அஃப்கோர்ஸ் மத்திய அமைச்சரவை முடிவு செய்தாலும்) "பாரத்ரத்னா" விருதுக்கு உரியவரை தேர்ந்தெடுக்கும் கையெழுத்து போட வேண்டிய ஆசாமி. ஆனால் அந்த ஆசாமியையே பல முறை தேர்ந்தெடுத்தவர் அகில இந்திய அளவில் தன் ஆளுமையால் தேர்ந்தெடுத்தவர் கலைஞர் அவர்கள் தான். அதே போல "பாரத்ரத்னா" விருதுக்கு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் முக்கிய பதவியான "பிரதமர்" அவர்களையே பல முறை தேர்ந்தெடுத்த ஆளுமை கொண்டிருந்தவர் கலைஞர் அவர்கள். உடனே சில தோழர்கள் ..மாற்றுக்கட்சி தோழர்கள் "வாயாலயே வடை சுட வேண்டாம். கலைஞர் எப்போது ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தார் " என மனம் போன போக்கில் எழுதலாம். இதோ கலைஞர் அவர்களின் ஆளுமையை பாருங்கள். இந்தியாவின் 8 பிரதமர்கள், 7 குடியரசு தலைவர்களை உருவாக்கிய தலைவர் கலைஞர் அவர்களின் ஆளுமையை "திரும்பிப்பார்" என்னும் தலைபில் என் வலைப்பூவில் செப்டம்பர் 13, 2011ல் எழுதிய கட்டுரையில் இருந்து சில வரிகளை எடுத்து இங்கே தருகின்றேன். படியுங்கள் தோழர்களே!<br />
<br />
<br />\\ 1957ல் கலைஞர் உட்பட 15 பேர் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தாகிவிட்டது. குடியரசு தலைவர் தேர்தல் வருகின்றது. எப்போதும் போல வடநாட்டவர் போட்டி. வடக்கு வாழ்கின்றது. தெற்கு தெய்கின்றது என்கிற மனக்கிலேசம் தென்னகத்தில் பரவலாக இருந்த நேரம் அது. அண்ணாவின் தலைமையில் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவதில்லை என முடிவெடுக்கின்றது. ஆனால் அப்போதைய மத்திய அரசுக்கு பிராந்திய கட்சிகளின் ஆதரவு ஒரு பொருட்டல்ல. அவர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் பிற்காலம் எப்படி ஆகும் என்று அவர்களுக்கு அப்போது கணிக்க தெரியவில்லை, கணிக்க வேண்டிய அவசியமும் நேருவுக்கு நேரவில்லை அப்போது.<br />
<br /><br />ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் குடியரசு தலைவராக இருந்த ஜாகீருசேன் மறைவையொட்டி நடக்க இருந்த குடியரசு தேர்தலில் திமுகவும் , கலைஞரும் அந்த தேர்தலில் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க முக்கிய ஆளுமையாக இருந்தனர் என்பதை தான் சொல்ல வருகின்றேன்.<br />
<br />
<br />
<br />
<br />மத்தியில் ஆளும் கட்சி காங்கிரஸ் கட்சி. அவர்கள் கை காட்டும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம் போல அவர்களுக்குள் சண்டை. பாபுஜெகஜீவன்ராம் அதாவது இப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் தந்தையார் தலித் இனத்தை சேர்ந்தவர் குடியரசு தலைவராக வேண்டும் என்பது இந்திராகாந்தியின் சாய்ஸ். ஆனால் காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா தன் தென்னிந்தியாவை சேர்ந்த நீலம் சஞ்சீவரெட்டியை ஜனாதிபதியாக ஆக்க வேண்டும் என பிடிவாதம்.<br />
<br /><br />பிரச்சனை என்று வந்தாகிவிட்டது. கட்சிக்குள் ஓட்டெடுப்பு நடத்தி யார் வேட்பாளர் என முடிவு செய்யலாம் என காங்கிரசின் ஆட்சிமன்ற கூட்டம் நடந்து ஓட்டெடுப்பும் நடந்து நிஜலிங்கப்பாவின் ஆதரவு பெற்ற நீலம்சஞ்சீவரெட்டி தேர்வானார். அது வரை எல்லாம் நல்லா தான் போய்கொண்டு இருந்தது. கலைஞர் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த ஆளுமை தெரியாதவர்களே! நன்றாக கேளுங்கள், அந்த நேரத்தில் தான் கலைஞர் மூக்கை நுழைக்கிறார். தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதி ஆவது ஒரு சந்தோஷம் தான். ஆனாலும் அதிலும் குறிப்பாக தமிழும் தெரிந்த ஒருவர் ஜனாதிபதி ஆனால் என்ன என்கிற ஆர்வம் கலைஞரை ஒரு பிராந்தியகட்சியின் தலைவர், பிராந்திய கட்சியை சேர்ந்த முதல்வர் அங்கே இந்தியா சுதந்திரம் அடைந்து 25 ஆண்டு ஆன பின்னே ஒரு பிராந்திய கட்சி ,மாநில கட்சி முதன் முதலாக ஜனாதிபதி தேர்வில் தன் ஆளுமையை செலுத்த தொடங்கியது. யார் ? கலைஞர்!<br />
<br /><br />அப்போது துணை ஜனாதிபதி மற்றும் ஆக்டிங் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி தான் போட்டியிட போவதாக அறிவிக்கிறார். ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டிய பதவி இப்போது தேர்தல் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டது. எதிர்கட்சிகள் ஒன்று கூடின. பலரும் பல கருத்துகளை சொல்ல கலைஞர் ஜெயப்ரகாஷ்நாராயணன் நிற்கட்டும் என்கிறார். இப்படியாக எல்லோரும் கூடிக்கூடி பேசுவது காங்கிரஸ் வேட்பாளர் நீலம் சஞ்சீவரெட்டிக்கு சாதகமாக அமையகூடிய சூழல். காலம் கடந்து போய் கொண்டிருந்த நேரத்தில் திடீரென கலைஞர் ஒரு அறிவிப்பு செய்கின்றார். திராவிட முன்னேற்ற கழகம் ஜனாதிபதி தேர்தலில் வி. வி. கிரி அவர்களை ஆதரிக்கும் என்று.<br />
<br /><br />ஆக தேர்தலில் மந்திய ஆளும் கட்சி சார்பில் நீலம் சஞ்சீவரெட்டியும் எதிர்கட்சிகள் சார்பாக வி.வி. கிரியும் வேட்பாளர்கள். அப்போதைய பாஷையில் சொல்லப்போனா அபேட்ஷகர்கள். இந்திரா ஒரு அறிவிப்பு செய்தார் புத்திசாலித்தனமாக. கொறடா உத்தரவு போட மாட்டார். தங்களுக்கு இஷ்டமானவர்களுக்கு ஓட்டு போடலாம் என தன் கட்சிகாரர்களுக்கு உத்தரவு போடப்படுகின்றது. தேர்தல் முடிந்தது. வி.வி.கிரி வெற்றி பெற்று குடியரசுதலைவர் ஆகின்றார். தமிழ் தெரிந்த ஒருவர் ஆகின்றார். முதல் நன்றியே கலைஞருக்கு தான் சொல்கின்றார்.<br />
<br /><br />ஆக அந்த குடியரசு தலைவர் தேர்தலில் கலைஞரின் ஆளுமை இருந்ததா இல்லியா? முதன் முதலாக மாநிலகட்சி ஒரு குடியரசு தலைவர் தேர்தலில் மூக்கை நுழைக்க வைத்தவர் கலைஞரா இல்லியா? ஆளும் மத்திய அரசின் வேட்பாளரை தோற்கடித்து எதிர்கட்சி வேட்பாளர் வி வி கிரி அவர்களை ஜனாதிபதி நாற்காலியில் அமரவைத்தவர் கலைஞரா இல்லியா?<br />
<br /><br />அதன் பின்னர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதியாக ஆனார். அதற்கு அவருக்கு கலைஞரின் உதவி தேவைப்பட்டது. கலைஞருக்கு கடிதம் எழுதினார். ஆதரவு கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு பதவி காலம் முடிவடையும் போது அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்த போது இந்திராவின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றார் கலைஞர். அப்போது இந்திராவின் மனதில் இருந்த இருவர் ஆர். வெங்கட்ராமன் மற்றும் நரசிம்மராவ். நரசிம்மராவ் வேண்டாம் என கலைஞர் மறுத்த காரணம், ஏற்கனவே பதவில் இருந்து வருபவர் ஆந்திராவை சேர்ந்தவர், மீண்டும் ஆந்திராவை சேர்ந்தவர் வந்தால் வடநாட்டவர்களின் ஒட்டு மொத்த வெறுப்பும் தேவையில்லாமல் தாங்க வேண்டும், அதே போல ஆர்.வெங்கட்ராமன் வருவதிலும் கலைஞருக்கு ஒரு சதவிகிதம் கூட ஆர்வம் இருக்காது. அதற்கான காரணம் 1980 சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு ஆர்.வெங்கட்ராமைன் பொறுப்பற்ற பேச்சுகள் என்று மனதில் நினைப்பு. ஆனால் அதை காரணமாக இந்திராவிடம் சொல்லாமல் பிரதமராகிய நீங்களும் உயர்சாதி, ஆர்.வெங்கட்ராமனும் உயர்சாதியாக இருப்பதால் மக்களிடம் ஒரு வித இறுக்கம் தென்படும் , எனவே பொற்கொல்லர் வகுப்பை சேர்ந்த கியானிஜெயில்சிங் ஒரு சிறுபான்மை மதத்தையும் சேர்ந்திருப்பதால் அவரையே குடியரசு தலைவர் ஆக்கலாம் என சொல்லி அதற்கு திமுக, அதிமுக என ஆதரவும் கொடுத்து ஜனாதிபதியாக்கினார். பின்னர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதி ஆன பின்னே இந்தியாவுக்கு பிடித்த பீடையாக பல கெட்டகாரியங்கள் நடந்தன என்பதும் வரலாறு. கலைஞர் முன்பு ஆர்.வெங்கட்ராமனை ஜனாதிபதியாக ஆக்காமைக்காக தன் நன்றிக்கடனை கூட ஒரு ஹிண்டுவில் வந்த வாசகர் கடிதத்தை வைத்தே திமுக ஆட்சியை கலைத்து தன் மனக்காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டார் என்பதும் வரலாறு.<br />
<br />
<br />ஆக கலைஞரின் ஆளுமைகள் இந்திய அரசியலில் இருந்ததா இல்லையா என்பதை சும்மா சிரித்து வைப்போமே என சிரித்து வைப்பவர்களை விட சரித்திரம் அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பவர்களுக்காக எழுதி வைத்தோம் என்னும் மனதிருப்தியுடன் எழுதுகிறேன். \\<br />
<br />இது தான் கலைஞர் அவர்கள் ஜனாதிபதிகளை உருவாக்கிய வரலாறு. வி பி சிங் முதல், ஐ கே குஜ்ரால், தேவகவுடா என இவர் பிரதமர் ஆக்கிய வரலாறுகளும் உண்டு. <br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixvG5k0TnEdcpQAXg0YIUJMPu_ERrK_nFaIur_JS3oUORslNbGixeSc-_i3Vc0P8aOrFIp6yobNPvZNZLUGGoUZBPOZovcCJqxK9M71xzWY1aIl6MsuvEwyl-d4-St5g-M2mnblwkCsyk/s1600/Kalaignar89.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixvG5k0TnEdcpQAXg0YIUJMPu_ERrK_nFaIur_JS3oUORslNbGixeSc-_i3Vc0P8aOrFIp6yobNPvZNZLUGGoUZBPOZovcCJqxK9M71xzWY1aIl6MsuvEwyl-d4-St5g-M2mnblwkCsyk/s1600/Kalaignar89.jpg" height="464" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">சமகால தோழர் பேராசிரியருடன் தலைவர் கலைஞர் </td></tr>
</tbody></table>
<br /><br />அரசியல் ஆளுமைகள் மட்டுமா கலைஞரிடம் இருந்தது. கலைத்துறை என எடுத்துக்கொண்டால் நாடகம், சினிமா, கதை, கவிதை, கட்டுரை, கவிதைகள், உரைவீச்சுகள், மேடைப்பேச்சுகள் என பட்டியல் போட்டு மாளாது. <br />அரசியல் பதவிகள் எனில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 – 1962<br />தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 1962 – 1967<br />பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு 1967 – 1969<br />தமிழக முதலமைச்சர் 1969 – 1971<br />இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சர் 1971 – 1976<br />தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் 1977 – 1983<br />தமிழக சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் 1984 – 1986<br />மூன்றhம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1989 – 1991<br />நான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1996 – 2001<br />ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 2006 - 2011<br />அதன் பின்னர் இப்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்கிறார் தன் 92 வது வயதிலும். <br />
<br /><br />தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞரின் பங்கு என்பது கீழ்க்கண்ட தொகுதிகளில் இருந்து .......<br />
<br /><br />குளித்தலை 1957-62<br />தஞ்சாவூர் 1962-67<br />சைதாப்பேட்டை 1967-71<br />அண்ணாநகர் 1977-76<br />அண்ணாநகர் 1977-80<br />அண்ணாநகர் 1980-83<br />சட்ட மேலவை உறுப்பினர் 1984-1986<br />துறைமுகம் 1989-91<br />துறைமுகம் 1991<br />சேப்பாக்கம் 1996-2001<br />சேப்பாக்கம் 2001-2006<br />சேப்பாக்கம் 2006 லிருந்து<br />திருவாரூர் 2011லிருந்து இப்போது தன் 92 வது வயது நடக்கும் போதும் தொடர்கின்றார். <br />
<br /><br />இதோ இந்த வயதிலும் போராட்டம் எனில் முதல் ஆளாக தன் சக்கர நாற்காலியில் சென்றும் கலந்து கொள்கின்றார். <br /><br />தலைவர் கலைஞர் அவர்கள் சிறைக்கு அதாவது மக்கள் போராட்டங்களுக்காக ...கவனிக்கவும் சிலரைப்போல ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இல்லை.... இல்லவே இல்லை... சமூக போராட்டங்களுக்காக 500 நாட்களுக்கு மேலாக சிறை சென்றுள்ளார். இப்போது அகில இந்திய அளவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அரசியல் தலைவர்களில் எத்தனை பேர் இப்படி 500 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர் என "பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கின்றார் கலைஞர்" என ஏளனம் பேசுவோர் விரல் விட்டு சொல்லட்டும் பார்க்கிறேன்! இது சவால்! எத்தனை அரசியல்வாதிகள், எத்தனை சமூக சிந்தனாவாதிகள் இவரைப்போல 500 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர்... சொல்லட்டும் பார்க்கலாம். <br />
<br />
<br />கோடிக்கணக்கான ரசிகர்கள்<br />70 ,00,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்கள்<br />80,000 மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்<br />1000 த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்பு கடிதங்கள்<br />1000 த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்<br />500 நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்<br />75 திரைப்படங்கள்<br />72 ஆண்டுகால பொது வாழ்க்கை<br />70 ஆண்டுகாலமாக பத்திரிகையாளர்<br />65 ஆண்டுகால கலைத்துறை பங்களிப்பு<br />60 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ச்சியான தேர்தல் வெற்றி<br />50 ஆண்டுகாலமாக சட்டசபை பணிகள்<br />18 ஆண்டுகாலம் தமிழக முதல்வர்<br />இந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசு தலைவர்களை உருவாக்கியதில் அரசியல் ஆளுமை<br />3 தமிழின் நாயகன்<br />என்றும் தமிழினத்தின் தலைவர்<br />
<br />ஒரே கலைஞர் ... இவருக்கு "பாரத்ரத்னா" கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுப்பது? இதோ "ராஜபக்ஷெ"வுக்கு "பாரத் ரத்னா"கொடுக்க வேண்டும் என கொக்கரிக்கும் சுப்ரமணிய சுவாமிகளின் பேச்சுகளுக்கு கண்டனம் கூட தெரிவிக்காத சிலர் கலைஞருக்கு "பாரத்ரத்னா" கொடுப்பதை கேலி பேசுவது வெட்கக்கேடான விஷயம். <br />
<br />தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த போது ஆற்றிய பணிகள், சமூக பணிகள் பற்றிய பெரிய கட்டுரை கூட எழுதினேன். அதை எல்லாம் இங்கே இந்த பதிவில் சொன்னால் படிப்பவர்களுக்கு அயற்சியாகவும், கலைஞருக்கு பாரத்ரத்னா கொடுக்க வேண்டும் என சொன்னதை கேலி பேசியவர்களுக்கு அதிர்ச்சியாகவும் இருக்கும்.<br />
<br />
<br />
<span style="color: blue;"><b>கலைஞருக்கு "பாரத்ரத்னா" கொடுக்க அவரது அரசியல், கலை, இலக்கிய, சினிமா, எழுத்து, மேடைப்பேச்சு என எத்தனையோ துறைகள் இருப்பினும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்னும் மாபெரும் புரட்சியை தமிழகத்தில் செய்து பசியில்லா பெருவாழ்வை தமிழகமக்களுக்கு கொடுத்த சமூக புரட்சி ஒன்றுக்காகவே அவருக்கு "பாரத்ரத்னா" கொடுக்கலாம். உடனே நீங்கள் கேட்கலாம்... "இப்போது விலையில்லா அரிசி கொடுக்கப்படுகின்றதே" என்று. இல்லை... அதை அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. "விலையில்லா அரிசி "என்பது மக்கள் அரிசி வாங்கக்கூட நாதியற்றவர்கள் என்பதாக உலகுக்கு உணர்த்தும். ஒருவன் தான் சாப்பிடும் உணவை தான் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்கிற சுயமரியாதையை தகர்க்கும் விஷயம் அந்த "விலையில்லா அரிசி" என்பது. குறைந்த பட்சம் ஒரு கிலோ ஒரு ரூபாய் என்பது தான் காசு கொடுத்து வாங்கி உணவு உண்ணும் திருப்தியும் சுயமரியாதையும் உண்டாகும் அந்த பயனாளிக்கு. ஆகவே ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசி என்னும் அந்த சமூகப்புரட்சி என்கிற ஒரு காரணம் போதும் கலைஞருக்கு <span style="color: red;">"பாரத்ரத்னா" <span style="color: blue;">விருது</span> </span>கொடுக்க!</b></span><br /><br />
<br />
<br /><br />கலைஞருக்கு "பாரத்ரத்னா" இன்னும் கொடுக்கப்படவில்லை எனில் அசிங்கம் கலைஞருக்கு இல்லை. இந்த தேசத்துக்கு தான் அசிங்கம். அந்த அசிங்கம் துடைக்கப்பட வேண்டும் எனில் அடுத்த வருடமாவது கலைஞருக்கு "பாரத்ரத்னா" வழங்கப்பட வேண்டும். இது ஒரு திமுக தொண்டனின் குமுறல் இல்லை. ஒட்டு மொத்த திராவிட இனத்தின் குரல். அதே போல மிகப்பெரிய சமூக மாற்றத்தை இந்தியாவில் விதைத்து விட்டு சென்ற தந்தை பெரியார் அவர்களுக்கும், திராவிட இனத்தை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து அழகுபார்த்த "அறிஞர் அண்ணா" அவர்களுக்கும் ஆக தமிழகத்தின் விடிவெள்ளிகள் "தந்தை பெரியார்", "அறிஞர் அண்ணா" , "கலைஞர்" ஆகியோர்களுக்கும் இந்த மும்மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் அடுத்த வருடமே "பாரத்ரத்னா" விருது வழங்கி இந்திய அரசு தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்ள வேண்டும்!<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /><span style="font-size: large;"><span style="color: red;"><b>மீண்டும் சொல்கிறேன்... இது ஒரு திமுக தொண்டனின் குமுறல் இல்லை. ஒட்டு மொத்த திராவிட இனத்தின் குரல்.....</b></span></span><br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM2D8O5hJUc53Qx5bqBkvvW_kEb5bDpDjA1FysxN-t_mXX3-MxC0RzAy6ZHWp0sEeGKJTvkeGGAOhycP7bqQBzQdPaOju2aLMEDV1bWG4yQf4XLrGOoTosYlDDqpYS7O71ba4bYH1cBUo/s1600/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM2D8O5hJUc53Qx5bqBkvvW_kEb5bDpDjA1FysxN-t_mXX3-MxC0RzAy6ZHWp0sEeGKJTvkeGGAOhycP7bqQBzQdPaOju2aLMEDV1bWG4yQf4XLrGOoTosYlDDqpYS7O71ba4bYH1cBUo/s1600/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF.jpg" height="360" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">எதிர்கால தமிழகத்துடன் தலைவர் கலைஞர் </td></tr>
</tbody></table>
<br />அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56937713327822230592014-12-21T10:51:00.000+05:302014-12-21T10:51:50.697+05:30திருமதி.மனோரஞ்சிதம் டர்பிடோ அவர்களுக்கு வீரவணக்கம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAkhD34lGAfBW2kOhf69z7x4nFq-0vuXV6LC-u1ZuuccGWrH_fjNcIpVe66UAvPPwLa_54A93575E5ScgC1Z0rigpYoaIeF1ltthr7Hjgh4OtqJSeyXSUjHcbO0w5z5vTmZT63I5hBfYs/s1600/manoranjitham.a.p.j+111.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAkhD34lGAfBW2kOhf69z7x4nFq-0vuXV6LC-u1ZuuccGWrH_fjNcIpVe66UAvPPwLa_54A93575E5ScgC1Z0rigpYoaIeF1ltthr7Hjgh4OtqJSeyXSUjHcbO0w5z5vTmZT63I5hBfYs/s1600/manoranjitham.a.p.j+111.jpg" height="400" width="350" /></a></div>
<br /><br />எங்கள் மயிலாடுதுறையில் திமுகவை வளர்த்தவர்கள் என சொன்னால் அதில் முக்கிய பங்கு M.B.ராதாகிருஷ்ணன் என்னும் ராதாமாமாவுக்கு உண்டு. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அவர் ஒரு தொழுநோயாளி. இருப்பினும் காலை 5.30க்கு தன் வீட்டில் இருந்து திமுக கொடி கட்டிய சைக்கிளில் தன் கட்சிப்பணியை தொடங்கினால் இரவு தூங்கும் வரை கட்சிப்பணி தான். அவர் என்னை " டர்பிடோ"ன்னு கூப்பிடுவார். எனக்கு அந்த பட்ட பெயரில் உடன்பாடு இருக்காது எனினும் அவரை ஒன்னும் சொல்லவும் முடியாது. ஒரு நாள் கேட்டேன் அவரிடம். "மாமா டர்பிடோன்னா என்னா? அதுக்கு அவரு சொன்னாரு. "எலேய் தம்பி, இந்த ஆசாரி எல்லாம் வச்சிருப்பாங்களே தொரப்பனம், மரத்தை ஓட்டை போட ... {இந்த இடத்தில் நான் தொரப்பனம் பத்தி சொல்லிடுறேன். ரொம்ப சிம்பிள்... இப்போ நாம் பார்க்கிறோமே Drill Machine அதான் தொரப்பனம். அது அப்போ மேன்லியா இருந்த போது மிஷின் இல்லாத போது அந்த ட்ரில் பிட்டை அந்த கருவியின் முனையில் வச்சி அந்த கருவியின் நடுவே கயிறு சுத்தி இரண்டு பக்கமும் இரண்டு பேர் முன்னும் பின்னும் இழுத்தால் அந்த ட்ரில் பிட் சுத்தி சுத்தி ஓட்டை விழும். அது தான் இப்போ அழிந்து போய் ட்ரில் மிஷின் முனையில் ட்ரில் பிட் வச்சு புழக்கத்தில் இருக்கு.. இப்போ ராதாமாமா சொல்வதை கேட்போம்} அந்த தொரப்பனம் மாதிரியே இங்கிலீஸ்காரன் மிலிட்டரில ஒரு மிசினு இருக்கும். அதுக்கு மொனையிலே ஓட்டை போட அந்த இரும்பிலே செஞ்ச குண்டு இருக்கும்(drill bit). இந்த போர்க்கப்பல் வருதுல்ல அதுக்கு பக்க வாட்டிலே போய் இந்த மிசின வச்சி இங்கிலீஸ்காரன் சுட்டா சும்மா சாட்டைல இருந்து பம்பரம் போவுமே அப்புடி அந்த குண்டு பாய்ஞ்சு போய் கப்பல் வவுத்துல குத்தும். குத்திட்டி நிக்காது. சுத்தும். அப்புடி சுத்தும் போது அது மரம் தானே... அதுல ஓட்டை வுழுந்துடும். அது வழியே தண்ணி பூந்து கப்பல் கவுந்துடும். அந்த துப்பாக்கிக்கு பேர் தான் டர்பிடோ. அந்த மாதிரி ஒருத்தர் நம்ம கட்சில இருக்காரு. அவரு பேரு ஏ.பி.ஜனார்தன நாயுடு. இந்த ஆளு பேசினா மேடையிலே பேசினா அந்த வார்த்தை எதிரியை துளைத்து அவன் இதயத்தை ஓட்டை போட்டு ஆளை அடிச்சிடும். அத்தனை கூர்மையாக சுத்தும் வார்த்தைகள் அது. இதுகாண்டியே அவரை எல்லாரும் டர்பிடோன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அவரு பெரியாருக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு. அண்ணாவுக்கு பிரண்டு. பூர்வீகம் தெலுங்கு. அப்போ சென்னை ராஜதானியா இருந்தப்ப திராவிட நாடு எல்லாம் சேர்ந்து தான் சென்னை மாகாணம். பின்ன இவரு வேலூருக்கு வந்து படிச்சாரு. பின்ன சென்னைல படிச்சாரு. தெலுங்குல மேடைல பேசுவாரு. இங்கிலீசுல பேசுவாரு. பின்னால கலைஞர் விடுதலைல ஈரோட்டிலே வேலை செஞ்சப்ப ஈரோட்டிலே இவரு ஆங்கில பத்திரிக்கை ஜஸ்டிசைட்ல வேலை செஞ்சாரு. <br /><br />அந்த ஆளு மாரியே நீ படார் படார்ன்னு பேசிடுற ... கேக்குறவன் நெஞ்சை துளைக்கிற மாரி ஆகுது. அதனாலத்தான் ஒன்ன டர்பிடோன்னு சொல்றேன்"ன்னு பெரிய விளக்கம் கொடுத்தார். அது முதல் எனக்கு டர்பிடோ ஏ.பி.ஜனார்தனம் மீது ஒரு ஈடுபாடே வந்து விட்டது. உடனே நான் என்னை டர்பிடோ அளவுக்கு என்னை உயர்த்திகிறேன் என இதை படிப்பவர்கள் என்னைப்பற்றி தவறாக நினைக்கக்கூடாது. இது ராதா மாமாவின் பழக்கம். ஒவ்வொறுவரையும் அவர் இப்படி நீதிக்கட்சி தலைவர்கள் பெயரால் அழைப்பது வழக்கம். {எப்படியெல்லாம் கட்சியை வளர்த்து இருக்காங்க பாருங்க} ஒருத்தனை பார்த்து "வாய்யா ரவு ஸ்வெடசல்லபதி ராமகிருஷ்ண ரங்காராவ்"ன்னு அழைப்பார். ஒருத்தனை பார்த்து "யோவ் டி.எம்.நாயரே"ன்னு கூப்பிடுவார். இந்த "ரவு ஸ்வெடசல்லபதி ராமகிருஷ்ண ரங்காராவ்" பெயர் மாத்திரம் எங்களுக்கு மனப்பாடம் செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கும். அதை பார்த்து ராதாமாமா "பசங்கலா வாயில வரலைன்னா பொப்பிலி அரசர்"ன்னு சொல்லிடுங்க என்பார். அதான் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான பொப்பிலி அரசரின் உண்மையான பெயர் என்பதே எங்களுக்கு அப்போது தான் தெரியும். (அப்போது எங்கள் வயது 12 முதல் 15 வரை தான் இருந்த கால கட்டம்) சரி...கம் டு தி பாயிண்ட்...<br /><br />இப்படியாக அடியேனுக்கு டர்பிடோ மீது இனம் புரியாத காதல் வந்ததது. நான் 1983 முதல் 1986 வரை டிகிரி முடித்த பின்னர் சென்னைக்கு வேலைக்கு சென்ற போது 1987ல் ஒரு நாள் பேப்பரில் டர்பிடோ ஏ.பி.ஜனார்தனம் மறைவு என முரசொலியில் தலைவர் கலைஞர், பேராசிரியர் எல்லாம் இரங்கல் தெரிவிச்சு இருந்தாங்க. அதே போல நாவலர் நெடுஞ்செழியன் அப்போது நிதிஅமைச்சர் ஆக இருந்தார். எம் ஜி ஆர் ஆட்சி காலம். அவரும் மக்கள் குரல் பத்திரிக்கைல பெரிசா இரங்கல் செய்தி கொடுத்தார். 13 வயதில் ராதா மாமா ஊட்டிய அந்த டர்பிடோ காதல் மீண்டும் துளிர்க்க அவர் இறந்தமைக்கு போக வேண்டும் என நினைத்தேன். அப்போது போக முடியவில்லை. ஆனால் அதன் பின்னர் சில நாள் கழித்து நானும் ஜானப்பா என்ற (இப்போது துபாயில் இருக்கிறார்) என் முதலாளி மகனும் ஒரு சில்வர் பிளஸ் வண்டி எடுத்து கிட்டு அவங்க வீட்டை கண்டு பிடிச்சு போனோம். <br /><br />அங்கே அவர் மனைவி மனோரஞ்சிதம் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு மகள். டாக்டர்ன்னு சொன்னாங்க. எனக்கு அப்போ வயசு 21 இருக்கும். அவங்க சின்ன பசங்க ஆர்வமா வந்திருக்காங்கனு உட்கார வச்சி பேசினாங்க. டர்பிடோ பத்தி நிறைய பேசினாங்க. என் பெயர் கேட்டாங்க. தொல்காப்பியன் என சொன்னேன். சுத்தமான தமிழ் பெயர்ன்னு பாராட்டினாங்க. <br />"தம்பி என் பெயர் என்ன தெரியுமா? மனோரஞ்சிதம்"ன்னு சொன்னாங்க. நான் தெரியும் என சொன்னேன். உடனே " என் வீட்டு பெயர் எல்லாம் தெரியுமா? என் தங்கைகள் பெயர் சிலப்பதிகாரம், மணிமேகலை. அது போல என் தம்பிகள் பெயர் சாந்தகுணாளன், தசகிரீவன். இந்த சாந்தகுணாளன் யார் தெரியுமா? அதாவது அந்த புராண காலத்திலேயே "கடவுள் இல்லை"ன்னு சொன்ன கேரக்டர். எங்களுக்கு எல்லாம் முன்னோடி. இரணியன் தான் சாந்த குணாளன். அது மாதிரி இந்த தசக்கிரீவன் யார் தெரியுமா? இராவணன் - திராவிடன்"ன்னு சொன்ன போது ஆச்சர்யமாக இருந்தது. மேலும் சொன்னாங்க....<br />"நாங்க பேரி செட்டியார்ன்னு சாதியாம். அதனால அந்த காலத்திலே பேரிசெட்டியார் சமூகத்திலே நீதிபதியா இருந்த எஸ்.ஏ.அய்யாசாமி செட்டியாரின் பையனுக்கு என்னை பொண்ணு கேட்டு வந்தாங்க. ஆனா எங்கப்பா கேளம்பாக்கம் பொன்னுசாமி ஒரு பெரியார் தொண்டராச்சா. அதல்லாம் முடியாது. காசு பணம் எனக்கு முக்கியம் இல்லை. சாதி பார்த்து திருமணம் செய்ய மாட்டேன். அய்யா பெரியார் எந்த பையனை சொல்றாரோ அவருக்கு தான் திருமணம் செஞ்சு வைப்பேன்னு சொல்லிட்டாக. பின்ன அய்யா தான் இந்த டர்பிடோவுக்கு கடுதாசி போட்டு வரவழைச்சு திருச்சில பெரியார் மாளிகைல அம்பதாறுல திருமணம் ஆச்சுது. பெரியாரே செலவு செஞ்சு சுயமரியாதை திருமணம் செஞ்சு வச்சாரு. அப்போ எனக்கு 20 வயசு. டர்பிடோவுக்கு 38 வயசு. டர்பிடோ தெலுங்கர். நாயுடு சாதி. நானோ செட்டியார் சாதி. எங்க ஒரே பொண்ணு டாக்டர் வெண்ணிலா திராவிட சாதி"ன்னு சொல்லிட்டு சிரிச்சாங்க. <br /><br />மேலும் நிறைய விஷயங்கள் டர்பிடோ அவர்களை பத்தி பேசினாங்க. அவரின் ஆங்கில புலமை, கலைஞரின் "கிழவன் கனவு" என்னும் புத்தகத்துக்கு டர்பிடோ எழுதின முன்னுரை, அண்ணா பத்தி டர்பிடோ எழுதிய புத்தகம், பெரியார் பத்தி எழுதிய புத்தகம் எல்லாம் சொன்னாங்க. மேலும் "தம்பி, ஒரு திருமணத்துக்கு போவதுக்கு தானே புருஷன் பொண்டாட்டி எல்லாம் ஜோடியா போவாங்க. ஆனா நாங்க ஜெயிலுக்கே ஜோடியாத்தான் போவோம்"ன்னு சொன்னாங்க. இவங்க திராவிட போராட்டங்கள் இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல போராட்டங்களுக்கு சிறை சென்றவங்க. பின்னர் என்ன சாப்பிடுறீங்கன்னு கேட்ட போது ஒன்றும் வேண்டாம் என்றோம். ஆனால் மோர் குடுத்தாங்க. (இதை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் எனில் மோர் குடித்ததை பதிவு செய்தால் கிச்சன்ல மோர் குடிச்சுட்டு பழத்தை வாங்கிக்கொள்ளும் புள்ளையார்ன்ன்னு நாலு பேர் புகைச்சலாக எழுதட்டுமே என்று தான். அதை படிக்கும் நாலு பேர் சிரித்து சந்தோஷமாக இருந்தா சரி தான்) <br /><br />ஆக இப்படிப்பட்ட மனோரஞ்சிதம் அம்மையார் அவர்கள் நேற்று நம்மை விட்டு பிரிந்து இயற்கை எய்தினார்கள். மரணத்தை மிக சந்தோஷமாக எதிர்கொண்டு பாரதியை போல "காலா என் அருகில் வாடா உன்னை என் காலால் எட்டி உதைக்கிறேன்" என்கிற வகையில் சந்தோஷமாக எதிர்கொண்டு மறைந்தார்கள். இறந்த பின்னர் தன் உடலை மருத்துவ படிப்புக்கு பயன்படும் வகையில் "உடல் தானம்" செய்ய வேண்டும் என சாசனம் எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார் அம்மையார். இதோ எங்கள் முகநூல் தோழர் திரு. அருள்பிரகாசம் சார் (காஞ்சிபுரம்) அவர்களின் தந்தையாரும் தாயாரும் உடல் தானத்துக்கு சாசனம் எழுதி வைத்தது போல, எங்கள் எதிர்கால தமிழகம் தளபதியும், அண்ணியாரும் தங்கள் மறைவுக்கு பின்னர் உடல்தானம் எழுதி வைத்துள்ளது போல, சாலை இளந்திரையன் தம்பதிகள் எழுதி வைத்தது போல நம் மனோரஞ்சிதம் அம்மையாரும் உடல்தானம் செய்துள்ளார்கள். <br /><br />இன்று பொதுமக்கள் பார்வைக்காக சென்னை பெரியார் திடலில் அம்மையார் உடல் பகலில் வைக்கப்பட்டு இருக்கும், பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு அளிக்கப்படும் என ஆசிரியர் தனது இரங்கல் செய்தியில் சொல்லி இருக்கின்றார். தலைவர் கலைஞர் அவர்களும் தனது இரங்கல் செய்தியினை தெரிவித்துள்ளார். அம்மையாரைப் பற்றியும் மறைந்த திரு.டர்பிடோ ஏ.பி.ஜனார்தனம் அவர்களை பற்றியும் நிறைய எழுதலாம். அத்தனை விஷயங்கள் உள்ளன. <br /><br /><span style="color: red;"><b>அம்மையார் திருமதி.மனோரஞ்சிதம் புகழ் ஓங்குக! எங்கள் வீரவணக்கங்கள் உரித்தாகுக!</b></span>அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-21736842105005723802014-11-07T20:34:00.001+05:302014-11-07T20:34:56.834+05:30கமல் - அற்புதமான அறுபது! வாழ்க பல்லாண்டு!!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaj0EL1QOc_X5MZZ7hxBYSfGaOeDokeUapDuyHVJOKcVQqlEGq3QqFtiH_t4hAVzV4_RfTgxp4qDTv3CffGETwMTcrkGiQJ8TKImSsw__43ll17TGk2ymj2O-oj_GbbI7XilLHiTWNFnE/s1600/10440656_310201169168776_1467747568990833589_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaj0EL1QOc_X5MZZ7hxBYSfGaOeDokeUapDuyHVJOKcVQqlEGq3QqFtiH_t4hAVzV4_RfTgxp4qDTv3CffGETwMTcrkGiQJ8TKImSsw__43ll17TGk2ymj2O-oj_GbbI7XilLHiTWNFnE/s1600/10440656_310201169168776_1467747568990833589_n.jpg" height="480" width="640" /></a></div>
<br />
<br />
கமல் அவர்களை எனக்கு எப்போது இருந்து பிடிக்கும்??? யோசித்து பார்க்கின்றேன். திடீரென அவர் கதாநாயகனாக ஆனதில் இருந்து..... அல்லது திடீரென ஒரு நாள் குணா படம் பார்த்தேன், நடிப்பு பிடிச்சுது அதிலிருந்து பிடித்தது ... புன்னகை மன்னன் படத்திலே அருவில குதிக்கும் அந்த ஷணம் எனக்கு கமலை பிடித்து போனது... அன்பே சிவம் படத்தில் நொண்டி நொண்டி வரும் அழகை பார்த்து பிடித்தது... 16 வயதினிலே படத்தில் ஆத்தா ஆடு வளர்த்த நொடியில் இருந்து பிடித்தது... சிப்பிக்குள் முத்து வில் அப்புராணியா நடிச்சது முதல்... அப்புவாக அரை மனிதனாக ஆக்ட் குடுத்தது முதல்... அவ்வை சண்முகியில் கனல் கண்ணன் கையை முறுக்கும் போதிலிருந்து.... தசாவதாரத்தில் கொக்கியில் தொங்கிகிட்டே உச்சஸ்தாயில் ஓம் நமோ நாராயணாய.... மும்பை எக்ஸ்பிரசில் டவர் கிரேனில் தொங்கும் போது.... மூன்றாம் பிறையில் கடைசி காட்சியில் ஆடுடா ராமா ஆடுடா ராமா.... விஸ்வரூபத்தில் பத்து நொடியில் எதிரிகளை துவம்சம் செய்யும் போது.... இல்லை ... இதல்லாம் இல்லவே இல்லை...<br />
<br />
<br />
<br />
குறத்தி மகன் என்ற ஒரு படம். நான் ரொம்ப சின்ன பையன் அப்போது. மயிலாடுதுறை சுந்தரம் தியேட்டர்... ஐந்து பெரிய வேப்பமரங்கள் இருக்கும் லேடீஸ் கவுண்டர் முன்பாக.. அந்த நிழலில் கார்த்தியாயினி பெரியம்மா இடுப்பில் (டிக்கெட் வாங்காமல் ... இது குழந்தைங்க.. பாருங்க இடுப்பிலே வச்சிருக்கேன்) அமர முடியாமல் அமர்ந்து (உள்ளே போனதும் இறங்கிடலாம்) படம் பார்த்த அன்றே எனக்கு கமல் அவர்களை பிடித்து போனது. கத்தி மாதிரி தைத்த டைட் பேண்ட் போட்ட ஒரு சிறு வேடம் அதில் அவருக்கு. இன்னும் சொல்ல போனால் மாஸ்டர் சேகரோ யாரோ தான் குறத்தியின் ( கே ஆர் விஜயா) மகன். மெயின் ரோல். இவருக்கு வி எஸ் ராகவன் பையன் ரோல் தான். சின்ன ரோல். நடிக்க சந்தர்ப்பமே இல்லாத ஒரு கேரக்டர். ஆனால் அதில் கூட அழகாய் தன் "கடமை"யை செய்திருப்பார். ஏனோ அந்த கண்கள் பிடித்து போனது. நியாயமாக இடுப்பில் அமர்ந்து டிக்கெட் கவுண்டரில் போய் படம் பார்க்கும் சிறுவனுக்கு அந்த குறத்தியின் மகனை தான் பிடித்து இருக்க வேண்டும். ஆனாலும் தனக்கு விதிக்கப்பட்டது இது தான் என தெரிந்தும் அதை செவ்வனே செய்யும் அந்த "தொழில் பக்தி" "தொழில் நேசிப்பு" தான் எனக்கு கமலிடம் பிடித்த விஷயம். ஒரு முறை பாரத்ரத்னா சச்சின் கிட்டே ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கிரிக்கெட் விளையாட வராவிட்டால் என்ன செஞ்சு இருப்பீங்க? என்கிற அதிமுக்கிய டீஃபால்ட் கேள்வி கேட்கப்பட்ட போது அவர் "டாக்டராகி இருப்பேன்" என்றெல்லாம் கதை விட வில்லை. அவர் சொன்ன பதில் "பந்து பொறுக்கி போடும் பையனாக இருந்திருப்பேன். ஆனாலும் அந்த வேலையில் கூட "மிகச்சிறந்த பந்து பொறுக்கி போடும் பையனாகவே இருந்திருப்பேன்".... இது தான் அவரை "பாரத்ரத்னா" வரை கொண்டு வந்து விட்டது. அதே போல கமல் அவர்களிடம் ஒரு முறை இதே கேள்வி வேறு விதத்தில் கேட்கப்பட்ட போது அதாவது "நடிக்க வராட்டி என்ன செஞ்சு கிட்டு இருந்திருப்பீங்க?" என்றதற்கு கமல் "நடிக்க முயன்று கொண்டு இருந்திருப்பேன்" ஒற்றை வரி பதில்.<br />
<br />
<br />
<br />
ஆக தங்கள் துறையில் வெற்றிக்கொடி நாட்டிய இவர்கள் இருவருமே தங்கள் இலக்கு என்ன என்பதை தீர்மானித்து விட்டார்கள். அதை அடைய தீவிர உழைப்பில் இருந்திருக்கின்றனர். அதே போல தங்களுக்கு கிடைத்த இடத்தில் தன் பங்கை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் திடமாக இருந்துள்ளனர். அதுவே இவர்களை வெற்றியின் உச்சம் பார்க்க வைத்தது. இதுவே கமலை எனக்கு பிடிக்க காரணமாகியது.<br />
<br />
<br />
<br />
அதே போல கமல் அவர்கள் மூளை எதையோ அல்லது எதையாவது எப்போதுமே தேடிக்கொண்டே இருந்து கொண்டிருந்தது..கொண்டிருக்கின்றது... திடீரென கவிதை எழுதுவதும், பாடல் பாடுவதும், இலக்கியம் பேசுவதும், கம்யூனிசம், நாத்திகம், பார்ப்பனீயம், தீவிரவாதம், சமூகம் என்பன போன்ற கடினமான விஷயங்களில் தன் வெளிப்பாடுகளை குழப்பமில்லாமல் ஆனால் புரிந்து கொள்ள தெளிவற்றதாக சொல்லி வருவதும் பிடிக்கும். "கடவுள் இல்லைன்னு சொல்லலை. இருந்தா நல்லா இருக்கும்" போன்ற வசனங்கள் ஒரு ஆராய்ச்சிக்குண்டான அளவிலான குழப்பமான தெளிவு. (அய்யோ ...கமல் மாதிரியே வந்துடுச்சே இந்த பத்தி)<br />
<br />
<br />
<br />
அதே போல மூன்றாம் பிறை என்னும் படத்துக்கு கமல் அவர்களுக்கு தேசிய விருது தரப்பட்ட போது ... ஸ்ரீதேவி படம் முழுக்க பின்னி பெடல் எடுத்து நடித்தும் ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கொடுக்காமல் கடைசி காட்சியில் கமல் நடித்த ஒரு காட்சிக்காக கமலுக்கு தேசிய விருது கொடுத்து விட்டார்கள் என அங்கலாய்த்த பத்திரிக்கைகள் இந்த ஆதங்கத்தை கமல் அவர்களிடமே நேரிடையாக கேட்க மிகவும் இயல்பான ஒரு உண்மையை அவர் சொன்னார் " முடியாது... ஸ்ரீதேவிக்கு இந்த விருதை தந்திருந்தால் அவரே இதை ஒத்துக்கொள்ள மாட்டார். ஏனனில் இந்த விருது "சிறந்த நடிகருக்கான" ஆண்பால் விருது. இந்த விருது எனக்கும் ஸ்ரீதேவிக்குமான போட்டி அல்ல. இப்போது சிறந்த நடிகை விருது வாங்கியவருக்கும் ஸ்ரீதேவிக்குமிடையேயான போட்டி. எனவே எனக்கு கொடுத்த விருதை ஸ்ரீதேவிக்கு கொடுத்திருக்கலாம் என சொல்வது ஸ்ரீதேவியின் பெண்மை தன்மையை பரிகசிக்கும் விஷயமாகும்" என சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். இந்த பதிலில் இருக்கும் புத்திசாலித்தனமான உண்மையை பாருங்கள். இதை விட சிறந்த காரணம் எனக்கு ஏதும் இருக்க முடியுமா கமலை பிடித்துப்போவதற்கு?<br />
<br />
<br />
<br />
ஒருகாலகட்டம் வரை தன் நடிப்பு திறமையை வெளிக்காட்ட வேண்டும் வேண்டும் என்கிற தீவிர வெறியில் இருந்த கமல் பின்னர் ஸோலோ பர்மார்மன்ஸ் என்பதை "டீம் ஒர்க்" ஆக ஆக்கிக்கொண்டார். ஏனனில் மக்கள் இவரை சிறந்த நடிகர் என ஒத்து கொண்டு விட்டதை பல விருதுகள் இவருக்கு தெரிவித்து விட்டன. எனவே "டீம் ஒர்க்" என்பதற்கு தயார் ஆனார்.<br />
<br />
<br />
<br />
நன்றாக நடிக்க வந்தவர்களை இனம் கண்டு கொண்டார். சோபிக்காத பலரை இவர் சோபிக்க வைத்தார். அது போல மிகப்பழைய நடிகர்கள் "நடிக்க" தெரிந்த நடிக நடிகையர்களை, பாடகர்களை இவர் தன் டீமுக்கு உள்ளிழுத்து வந்தார்<br />
<br />
.<br />
<br />
எஸ். வரலெஷ்மி ..... மிகப்பெரிய பாடகியும் நடிகையும்... இவர் குரலில் அடிக்கும் பிருகாக்கள் கிட்ட தட்ட அந்த கால டி ஆர் மகாலிங்கம் அவர்களை போட்டி போட அழைக்கும். அவரை தன் குணா படத்தில் தாசியாக நடிக்க வைத்து "உன்னை நானறிந்தால்" என்னும் பாடலில் ஒரு பல்லவி பாட வைத்து இருப்பார். அந்த பல்லவி முடிவில் ஒரு பிருகா அடிப்பார் அந்த பாட்டி பாருக்கள்... யப்பா... பிரம்மாண்டம்... அதே படத்தில் அந்த காலத்தில் மனோகரா படத்தில் நடித்த காகா ராதாகிருஷ்ணன் என்னும் தாத்தாவை அழைத்து வந்து டாக்டராக நடிக்க வைத்து இருப்பார். அடடே அடடே.... கமல் மட்டுமே இதை செய்ய இயலும்....<br />
<br />
<br />
<br />
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்... ஒரு பிரபல நடிகையை ஒரு நகைச்சுவை நடிகர் தான் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க அழைத்த போது அந்த நடிகை "நோ" சொல்லி விட்டாராம். அதாவது அந்த நடிகைக்கு தன் நடிப்பின் மீதும் அந்த கதையின் மீதும் நம்பிக்கை இல்லை. தன் சதையின் மீது இருக்கும் நம்பிக்கை அந்த கதையின் மீது இல்லா சினிமா உலகத்தில் இவர் ஒரு கதைக்கு கோவை தமிழ் பேச வேண்டும் என்பதற்காக நகைச்சுவை நடிகை கோவை சரளாவை தனக்கு கதாநாயகியாக ஆக்கி கொண்டு ஒரு டூயட் பாடல் கூட பாடி நடித்து அந்த நடிகைக்கும் மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்தார்... அப்படி கூட சொல்லக்கூடாது... நடிப்பு என்னும் அந்த கலைக்கு மரியாதை கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.<br />
<br />
<br />
<br />
அது போல நாசர், வடிவேலு, வையாபுரி, பசுபதி, டெல்லி கணேஷ், மணி வண்ணன், ஜெமினிகணேசன், சந்தானபாரதி, ஸ்ரீமன், ரமேஷ் அரவிந்த், ஜெயராம், பசி சத்யா, சண்முகசுந்தரத்தம்மாள், எஸ்.என்.பார்வதி பாட்டி, யூகிசேது , ஊர்வசி, ரேவதி, கள்ளபார்ட் நடராசன், ரோகினி அத்தனை ஏன் பேராசிரியர் ஞானசம்பந்தம் வரை திறமை இருக்கும் யாரையுமே இவர் விட்டு வைத்தது இல்லை. அதே போல கமலின் சிங்காரவேலன் படத்தில் வடிவேலு இசைக்கருவிகளை துடைக்கும் மைக்கேல் ஜாக்சன் தங்கை என்னும் கதாபாத்திரத்தில் வருவார். (அதில் வடிவேலு அடிக்கும் லூட்டிகளை இப்போது பாருங்கள் .... கிட்ட தட்ட குறத்திமகன் படத்தில் கமல் நடித்தது போல தன் வேலையை அழகாய் செய்தமை புரியும்)அவர்கள் கூட நடிக்கும் போது இவர் அடக்கி வாசித்து அவர்கள் நடிக்க வழி விடும் அழகிய "டீம் ஒர்க்" வேலையினை கச்சிதமாக செய்வார்.<br />
<br />
<br />
<br />
இப்போ பாருங்க ஒரு உதாரணத்துக்கு ஒரு நாதஸ்வர கச்சேரி இருக்குதுன்னா அதிலே நாதஸ்வரம், தவில், தாளம், சுருதி எல்லாம் இருக்கும். எல்லாம் அதது அததன் வேலையை ஒழுங்கா செஞ்சா மட்டுமே கச்சேரி முழுமை அடையும். கேட்கவும் நன்றாக இருக்கும். தவில் என்பது யம பேரிகை என சொல்வார்கள். சத்தம் பெரிதாக இருக்கும். இதே வளையப்பட்டி அவர்கள் அந்த தவில் இசையில் தனித்துவமான ஆள் என்பதால் ஒரு கச்சேரியில் அவர் தன் திறமை மட்டும் காண்பித்து தடால் மொடால் என வாசித்து கொண்டிருந்தால் அது சுமமான கச்சேரியாக இருக்காது. அடக்கி வாசிக்க வேண்டிய நேரத்தில் அடக்கி வாசித்து தனி ஆவர்த்தனத்தில் பிளந்து கட்ட வேண்டும். அதைத்தான் கமல் செய்து கொண்டு இருக்கின்றார்.<br />
<br />
<br />
<br />
அவ்வை சண்முகி படத்தில் ஒரு காட்சி. நாசர், டெல்லி கணேஷ், ஜெமினிகணேசன், இவர்களுடன் கமல் அவ்வை சண்முகியாக நடிக்கும் ஒரு நகைச்சுவை காட்சி. அதிலே நாசர் ஒரு பாய். அவர் அய்யர் வேஷமிட்டு அந்த வீட்டில் சமைக்க வந்திருப்பார்.அதுவும் ஊமையாக. டெல்லி கணேஷ், ஜெமினி ஆகியோர் அய்யர் கதாபாத்திரம். இதிலே டெல்லி கணேஷ் அவர்கள் ஜெமினி எது சொன்னாலும் ஆமாம் ஆமாம் என சொல்லும் ஜால்ரா வேடம். இந்த ஊமை அய்யர் நாசரை "மந்திரம் தெரியுமா உனக்கு? எங்கே காயத்ரி மந்திரம் சொல்லு" என சொல்ல பாய் ஆன நாசரோ ஊமை பாஷையில் பள்ளிவாசலில் ஓதும் பாங்கு சொல்ல ஆரம்பிக்க ஜெமினி, டெல்லிகணேஷை இடைமரித்து "இவன் சமைக்க தானே வந்திருக்கான். புரோகிதமா பண்ண வந்திருக்கான். அதல்லாம் வேண்டாம்" என சொல்ல டெல்லி கணேஷ் தன் முதலாளிக்கு ஜால்ரா போடும் விதமாக அதாவது நாசரை வேலைக்கு சேர்த்து கொள்ளும் விதமாக அந்த ஊமை பாஷை பாங்கு சொல்வதையே "ஆகா அண்ணா என்னா பிரமாதமா காயத்ரி மந்த்ரம் சொல்றான் பாருங்கோ... அப்படித்தான் ஓம் பூர் புவஸ்ஸூவ ஹூம் சொல்லு சொல்லு தத் சவிதுர்வரேண்யம் ம்.. அப்படித்தான் பர்கோ தேவஸ்ய தீமஹி சபாஷ் ..சொல்லு தியோ யோ ந: ப்ரசோதயாத்... அண்ணா என்னா ஸ்பஷ்டமா காயத்ரி மந்த்ரம் சொல்றான் பாருங்கோ... போதும் டா போதும்... இன்னிக்கு என்ன ஆவணி அவிட்டமா சொல்லிண்டே இருக்காய்.. போதும்டா" .... இந்த காட்சியில் நடிப்பு என்பது டெல்லிகணேஷ், நாசர், ஜெமினி ஆகியோர் மட்டுமே. அவ்வை சண்முகியாகிய கமல் அமைதியாக தவித்து கொண்டு நிற்க மட்டும் தான் வேண்டும். தவிக்கிறேன் பேர்வழின்னு கொடுத்த காசுக்கு மேலே கூவி அதிகமா தவிச்சா எல்லார் பார்வையும் கமல் மேல் தான் இருந்திருக்குமே தவிர்த்து அந்த நகைச்சுவை எடுபட்டிருக்காது. இது தான் கமல் அவர்களின் "டீம் ஒர்க்" .மற்றவர்களை நடிக்க வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பது. ஒட்டு மொத்த சினிமாவையும் "நல்லா இருக்கு" என பார்வையாளரை சொல்ல வைப்பது.<br />
<br />
<br />
<br />
அதே போல அதே படத்தில் ஒரு காட்சி. உச்சபட்சமாக ஜெமினி மீது பார்வையாளர்களுக்கு கோவம் வர வேண்டும். ஜெமினியில் சாதித்திமிர் தெரிய வேண்டும் என ஒரு காட்சி. ஒரு கண்ணாடி அறைக்குள் ஜெமினியிடம் கமல் பெண் கேட்க வேண்டும். பெண் மீனா கண்ணாடி அறையின் வெளியே நின்று அதை கவனிக்க வேண்டும். ஜெமினி பேசும் வசனம். "தோ பாருங்கோ... (மேலே மூன்று படங்கள் மாட்டி இருக்கும்) முதல் படத்தில் இருப்பது ராமச்சந்திரய்யர் என் தோப்பனாரின் தோப்பனாரின் தோப்பனார். அடுத்து வெங்கட்ராமய்யர் என் தோப்பனாரின் தோப்பனார், அடுத்து கிருஷ்ணமூர்த்தி அய்யர் என் தோப்பனார்... இந்த வரிசையில் பாண்டி ... நன்னாவா இருக்கும்... சிரிச்சுண்டே பாருங்கோ ..வெளில என் பொண்ணு நம்மை கவனிச்சுண்டே இருக்கா" - இங்கே கமல் அந்த பழம்பெரும் நடிகர் ஜெமினிக்கு நடிக்க வாய்ப்பை விட்டு கொடுப்பது அழகியலின் உச்சம். அஃப்கோர்ஸ் இதல்லாம் கமல் செய்யவில்லை டைரக்டர் தான் செய்தார் என்பன போன்ற வாதங்கள் எல்லாம் கமல் விஷயத்தில் எடுபடாது. கமல் தான் அடக்கி வாசிச்சார் என்பதே உண்மை.<br />
<br />
<br />
<br />
இப்படியாக கமல் பற்றி சொல்லிக்கொண்டெ போகலாம். இவர் இந்த 50 வருட திரையுலக அவரது காலத்தில் அவர் அடைந்த உச்சமும் இல்லை. அதே போல அவர் அடைந்த அவமானங்களும் இல்லை. "சினிமா 100" என்னும் விழாவில் சில சில்லுண்டிகள் அமர்ந்திருக்க கமல், ரஜினி, இளையராஜா போன்ற தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் அவர்கள் பின்னால் தங்கள் சப்தநாடிகளும் அடங்கிப்போய் அவமானத்தால் கூசிக்குறுகி நின்றதும், அதே போல விஸ்வரூபம் பட பிரச்சனையில் தன் சொத்துகள் எல்லாம் கைவிட்டு போகும் நிலைக்கு ஆனதும், இந்த நாட்டை விட்டே போகிறேன் என மனம் வெதுப்பும் அளவுக்கு போனதும் கூட நடந்தது. அதையும் தாண்டி கமல் நிற்கின்றார். அவரை சினிமா 100 விழாவில் அவமானம் செய்த அம்மையார் அவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பாகி பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த போது அவருக்கு பூமாரி பொழிந்து வரவேற்பு கொடுக்கப்பட்டதை கமல் அவர்களும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பார். அவருக்கு அவர் நடித்த மகாநதி திரைப்படத்தில் அவர் பேசிய ஒரு வசனம் நியாபகம் வந்திருக்கும். "ஒரு நல்லவனுக்கு கிடைக்கும் அத்தனை மரியாதையும் கெட்டவனுக்கும் கிடைக்குதே"... அவருக்கு மட்டுமா நியாபகம் வந்திருக்கும் ... நமக்கும் தான். ....<br />
<br />
<br />
<br />
<b><span style="color: red; font-size: large;">இன்றைக்கு கமல் அவர்களுக்கு 60 ஆண்டு மணிவிழா பிறந்தநாள். இந்த இனிய நாளில் அவரை வாழ்த்துகின்றேன். இன்னும் அவர் சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும். செய்வார். </span></b><br />
<br />
<br />
<br />அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9402732211336440942014-10-17T17:55:00.002+05:302014-10-17T17:55:57.226+05:30 அம்மா - தீபாவளி ரிலீஸ்!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5sVDi2GKL68uRuzdnS1HH-FULh3kAbjs5rJoiYgl8kyQbpNGnwr20sBQASfxmUbs3cNjNa_dwifrFvMUmfS5ED4Crfi3wnXJQwV69FJxBZYyeFEk2Q4ozx4Z__n2E8pRYXBg8KJ7Sqq0/s1600/dhathu.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5sVDi2GKL68uRuzdnS1HH-FULh3kAbjs5rJoiYgl8kyQbpNGnwr20sBQASfxmUbs3cNjNa_dwifrFvMUmfS5ED4Crfi3wnXJQwV69FJxBZYyeFEk2Q4ozx4Z__n2E8pRYXBg8KJ7Sqq0/s1600/dhathu.png" height="400" width="400" /></a></div>
<br />
இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அளித்தது சட்டப்படியாகன்னு ஒரேயடியாகன்னு சொல்ல முடியாவிட்டாலும் சட்டத்துக்கு உட்பட்டு மனிதாபிமானத்துடன் கூடிய ஒரு விவேகமான தீர்ப்பு. இதில் அதிமுகவினர் கொண்டாட எதுவுமில்லை. இன்று நீதியரசர் தத்து அவர்கள் அங்கே கேட்ட கேள்விகள் அதிமுகவினர் நாக்கை பிடிங்கி கொள்ளும் அளவுக்கானது.<br />
<br />
<br />
<br />
இன்னும் சொல்லப்போனால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் யாருமே வாதிடவில்லை. ஒப்புக்கு சப்பானியாக ரெட்டை நாக்கு பவானிசிங் கூட கலந்து கொள்ளவில்லை. சட்டப்படி தேவையும் இல்லை என்றே நினைக்கிறேன். 10 வருடத்துக்கு மேல் தண்டனை எனில் உச்சநீதிமன்றத்திலும் அரசு தரப்பு வக்கீல் தேவை. அரசு தரப்பு வழக்கறிஞர் தான் சொல்ல வேண்டியதை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே சொல்லிவிட்டாரே! தேவைப்பட்டால் அட்டர்னி ஜெனரல் ஆலோசனையை கேட்டு விட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் உண்டு/ இல்லை என்று சொல்லி விடலாம். ஆனால் தண்டனை நிறுத்தி வைக்கும் அவசியம் ஏன் வந்தது என ஒரு கேள்வி எழலாம்.<br />
<br />
<br />
<br />
ரொம்ப சிம்பிள்... நான் இதற்கு முன்பு எழுதிய பதிவில் சொன்னது போல விசாரணை குற்றவாளிக்கு தான் ஜாமீன் கொடுக்க முடியும். இவரோ குற்றவாளி என தீர்ப்பு சொல்லப்பட்டு நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் என முழுமை பெற்ற குற்றவாளி. ஆக குற்றவாளிக்கு பரோல் தான் கொடுக்க முடியும். ஆனால் இவர்கள் அப்பீல் செய்து விட்டிருந்தால் அதாவது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தால் அதன் பின்னர் ஜாமீன் கேட்டிருந்தால் ஜாமீன் கொடுக்கலாம். ஆனால் மேல் முறையீடு செய்வோம் என ஃபாலி நாரிமன் உறுதிமொழி அளித்ததால் "தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்து" கவனிக்கவும் ரத்து செய்து அல்ல... நிறுத்தி வைத்து "ஜாமீன்" வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். ஆனால் தீர்ப்பில் கை வைக்கவில்லை. அதாவது "ஜெயலலிதா குற்றவாளி" என்கிற தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கைவைக்கவில்லை. இதுவே அதிமுகவுக்கும் ஜெயாவுக்கும் மிகப்பெரிய அடி.<br />
<br />
<br />
<br />
வாதிட ஆரம்பிக்கும் முன்பே ஃபாலிநாரிமன் அவர்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் திரு.ராம்ஜெத்மலானி போல நீதிபதி குன்ஹா தீர்ப்பை விமர்சிக்கவில்லை. முன்னுதாரணங்களை அடுக்கவில்லை. தனக்கு என்ன தேவையோ அதை மட்டும் கேட்டார். அதற்கான காரணம் சொன்னார். அதாவது..."நான் நீதியில் குறுக்கிடவில்லை. அதை எல்லாம் மேல் முறையீட்டில் வாதமாக வைத்து கொள்வோம். ஆனால் 17 விதமான நோய்கள் என் கட்சிகாரருக்கு இருக்கின்றது. உடல் எடை 4 கிலோ குறைந்து விட்டது. உயர்சிகிச்சை அவசரமாக தேவைப்படுகின்றது..." என்றே ஆரம்பித்து வாதத்தை வைத்தார். ஒரு கட்டத்தில் "லட்சக்கணக்கான தொண்டர்கள்..." என சொல்ல ஆரம்பிக்கும் போது நீதிபதிகள் "எங்களுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் பற்றி கவலை இல்லை. அதல்லாம் இங்கே தேவையும் இல்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு உங்கள் வாதத்தை வைக்கவும்" என நெற்றிப்பொட்டில் அடித்தால் போல சொல்லிவிட்டனர். அதே போல திரு.ஃபாலி நாரிமென் அவர்களும் அதன் பின்னர் அது பற்றி வாயை திறக்கவில்லை.<br />
<br />
<br />
<br />
ஒரு கட்டத்தில் நீதிபதிகள் "நாங்கள் ஜாமீன் கொடுத்தால் நீங்கள் வழக்கை தாமதம் செய்வீர்கள், நாங்கள் ஜாமீன் கொடுத்தால் அப்படி செய்வீர்கள், நாங்கள் ஜாமீன் கொடுத்தால் இப்படி செய்வீர்கள்" என வரிசைக்கிரமமாக ஜெயா முந்தைய காலகட்டங்களில் செய்த மாய்மாலங்களை அடுக்கி கொண்டே வர வர திரு.ஃபாலிநாரிமென் அவர்கள் அந்த ஒவ்வொறு மாய்மாலங்களுக்கும் "இந்த முறை அப்படி செய்ய மாட்டோம் , இந்த முறை அப்படி நடக்காது" என்று வாய் மொழி உறுதி கொடுத்து கொண்டே வந்தார். இறுதியாக "நான் இதற்கான உத்தரவாதத்தினை எழுத்து பூர்வமாக வேண்டுமாகின் தருகின்றேன்" என சொல்ல நீதிபதிகள் "வேண்டாம். நீங்கள் ஒரு சீனியர் வக்கீல்.. வாய்மொழி உத்தரவாதமே போதுமானது. அதுவும் உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நேரிடையாகவே வாய்மொழி உத்தரவாதம் கொடுத்துள்ளீர்கள். போதுமானது" என சொல்லி "கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அத்தனை ஆவணங்களையும் ... அது எத்தனை பக்கம் வரும்... " என கேட்க அதற்கு ஃபாலி நாரிமன் அவர்கள் "அது சுமார் 35,000 பக்கங்கள் வரும் கனம் கோர்ட்டார் அவர்களே" என சொல்லிவிட்டு "எனக்கு 3 வாரம் அவகாசம் தாருங்கள் அதற்குள் அந்த 35,000 பக்க ஆவணங்களை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சமர்பித்து மேல்முறையீடு செய்து விடுகின்றேன். அதே போல மேல் முறையீடு செய்த பின்னரும் கூட இத்தனை மாதத்தில் முடிக்க வேண்டும் என நீங்கள் உத்தரவிட்டாலும் அதையும் ஏற்கிறேன். ஆனால் இன்றைக்கு இடைக்கால ஜாமீனாவது வழங்குங்கள்" என கேட்க அதற்கு நீதிபதிகள் "முன்று வாரம் என்ன மூன்று வாரம் நாங்கள் நான்கு வாரம் தருகின்றோம். டிசம்பர் 18, 2014க்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அந்த 35,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை புத்தகமாக ஸ்பைரல் பெண்டிங் போட்டு சமர்பித்து மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 18ல் விசாரணைக்கு இங்கே வரும் போது அந்த தகவலை உறுதி செய்ய வேண்டும். மேல் முறையீடு செய்த பின்னர் அன்றிலிருந்து மூன்று மாதங்களில் வழக்கை முடிக்க தேவையான ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். இதற்கு ஒத்து கொண்டால் இடைக்கால ஜாமீன் வழங்குகின்றோம். டிசம்பர் 18,2014 குள் மேல்முறையீடு செய்யாவிட்டால் இந்த இடைக்கால ஜாமீன் டிசம்பர் 18,2014 அன்று தானாகவே ரத்து ஆகி விடும். (மீண்டும் விசாரித்து ரத்து என்பது இல்லை. இன்றைய தீர்ப்பின் படியே ரத்து ஆகும்) அதே போல மேல் முறையீடு செய்தது முதல் 3 மாதத்தில் வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் உச்சநீதிமன்றமே நேரிடையாக மேல் முறையீட்டை முன்வந்து விசாரிக்கும்" என தீர்ப்பு கொடுத்து விட்டனர்.<br />
<br />
<br />
<br />
இன்னும் ஒரு படி மேலே போய் ஃபாலி நாரிமன் அவர்களிடம் இந்த தீர்ப்புக்கு பின்னர் நீதிபதிகளை வசைபாடுவது அல்லது பாராட்டுவது எல்லாம் கண்டிப்பாக கூடாது. குன்ஹா, சந்திரசேகரா ஆகியோர் கன்னடியன் என சொல்லி வசைபாடுவது எல்லாம் கண்டிப்பாக கூடாது. நானும் கூட கன்னடியன் தான். இப்போது ஜாமீன் கொடுக்கின்றேன். நானும் கூட கன்னடியன் தான். அதே போல சுப்ரமணியசாமி போன்றவர்களை தொல்லை செய்ய கூடாது. ஏற்கனவே நீதிபதிகளை அவமதித்ததுக்காக இந்த உச்சநீதிமன்றம் கடுமையாக வருத்தம் தெரிவித்தது என நீங்கள் நேரிடையாக ஜெயலலிதாவிடம் தெரிவிக்க வேண்டும் என்று கடுமையாக எச்சரித்தனர்.<br />
<br />
<br />
<br />
இதிலே இன்னும் ஒரு விசேஷம் என்னவெனில் 100 கோடி ரூபாய் அபராதம் என்பதாலும், நான்கு வருடம் சிறை என்பதாலும் ஷ்யூரிட்டி எல்லாம் என்ன என்பதை கர்நாடக உயர்நீதிமன்றம் தான் இரு நபர் சால்வன்சி டாக்குமெண்ட் எல்லாம் கொடுத்து குறைந்த பட்சம் ஒரு வட்டாட்சியர் அளவிலான அதிகாரி கொடுத்த சால்வன்சி டாக்குமெண்ட் வேண்டும்... சொத்து ஜாமீன்) ... இதல்லாம் கர்நாடக உயர்நீதிமன்றம் செய்ய போகின்றதா அல்லது அது மீண்டும் திரு. குன்ஹா அவர்களை கைகாட்டி விடப்போகின்றதா என இனிமேல் தான் தெரியும். இன்னும் என்ன என்ன கண்டிஷன்கள் என இன்னும் படித்து முடிக்கவில்லை. அவர்கள் தங்கி இருக்கும் வீட்டில் தற்போதைய முதல்வர் போய் தினமும் ஆலோசனை செய்யலாமா என்றெல்லாம் கண்டிஷன்களை இனி படித்தால் மட்டுமே புரியும். கிட்ட தட்ட வீட்டுச்சிறை என்பது போலத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் கண்டிப்பாக கொடநாடு பங்களாவுக்கோ, வழக்கில் இருக்கும் பையனூர், சிறுதாவூருக்கோ போக முடியாது. ரேஷன் கார்டு இருக்கும் வேதா நிலையம் தான் கதி என்றும் நினைக்கிறேன். இனிமேல் முழுவதும் படித்தால் தான் தெரியவரும். ஆனால் நாளை சனிக்கிழமையும் பரப்பன அக்கிரஹார நீதிமன்றம் உண்டு என நினைக்கிறேன். என்ன நடக்க போகின்றது என பார்ப்போம்.<br />
<br />
<br />
<br />
மீண்டும் சொல்கிறேன். திமுகவுக்கு ஜெயா போல காழ்ப்புணர்வு என்பதெல்லாம் எப்போதும் கிடையாது. நள்ளிரவில் கைது செய்வது, ஒரு கட்சி தலைவரை கைது செய்து வெயில் வாட்டி எடுக்கும் திருச்சி சிறையில் அடைத்து ஜாமீனில் வெளியே வரும் போது மீண்டும் கைது செய்வது, நீதிமன்றம் நீதிமன்றமாக போலீஸ் கூண்டு வண்டியில் வைத்து அலைக்கழிப்பது என எதுவும் காழ்ப்புணர்வு என்பது எப்போதும் கிடையாது. மேலும் முக்கியமான பண்டிகை காலத்தில் ஜெயேந்திரர் என்னும் ஒரு மதத்தலைவரை சிறையில் வைத்து பழி வாங்கியது போல இப்போதும் தங்களை மூச்சுக்கு மூச்சு தீயசக்தி மண்ணாங்கட்டி தெருப்புழுதி என தூற்றும் அவர்களை சிறையில் வைத்து பார்க்க வேண்டும் என நினைக்கும் வக்கிர புத்தி திமுகவுக்கு கிஞ்சித்தும் இல்லை. சட்டத்தை ஏமாற்றி சொத்து குவித்த ஜெயா மீது வழக்கு தொடரவும் அந்த வழக்கு நியாயமாக நடக்கவும் திமுக தன் ஜனநாயக கடமையை செய்தது. அவ்வளவே. தீர்ப்பு வந்த போது அதை கொண்டாடவும் இல்லை. நமட்டு சிரிப்பு சிரிக்கவும் இல்லை. அதே போல தீர்ப்பு வந்த பின்னர் மற்ற கட்சிகள் பவானிசிங் வேண்டாம், ஜாமீன் கொடுக்காதே என்றெல்லாம் ஆர்ப்பரித்த போது கூட அமைதிகாத்தது. சொல்லுவாங்களே ஒரு பழமொழி... "புள்ளய பெத்தவ பொத்திகிட்டு படுத்து கிடக்கா, பார்க்க வந்த பங்காளி செறுக்கி பொங்க வச்சுகிட்டு இருக்கா" என்பது போலத்தான் திமுக அமைதியாக இருந்தது. பாமக, தேமுதிக ஆகியவை பொங்கி தீர்த்தன.<br />
<br />
<br />
<br />
இனி அதன் ஜனநாயக கடமையை மேல் முறையீட்டில் சட்டப்படி, ஜனநாயகக்கடமையை செய்யும். அது வரை மக்கள் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகைகளை நிம்மதியாக கொண்டாட வேண்டி இந்த தீர்ப்பையும் அமைதியான முறையில் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளும் என்றே நினைக்கிறேன்! ஒரு காலத்தில் ஜெயலலிதா நடித்த படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் ஏங்கிய காலத்தில் இருந்து இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவார்களா என தொண்டர்கள் ஏங்கும் நிலை என்பது ஒரு அபரிமிதமான பரிணாம வளர்ச்சி. வாழ்க தமிழ்நாடு! மார்ச் 18,2015க்குள் நீதி கண்டிப்பாக நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன்.அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-7016091750248719682014-10-16T21:07:00.001+05:302014-10-17T16:35:23.983+05:30முகநூல் என்பது மு.க நூலாகவும், மு.க.ஸ்டாலின் நூலாகவும் ஆனது!<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-WsacpVeeq2oJCBn4ep4s0lnDnkCLzgum6di_UJlglQk5hiFGZrvnezXwWiKEYBDQlDu_x_w2M6Ix4VUnr4bKJIF3UCHIjFWYfrPAuT8rYn8z9q5WhYGPDCgtXfJ1DvgTZzJStsMcUHg/s1600/thalapathi+page.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-WsacpVeeq2oJCBn4ep4s0lnDnkCLzgum6di_UJlglQk5hiFGZrvnezXwWiKEYBDQlDu_x_w2M6Ix4VUnr4bKJIF3UCHIjFWYfrPAuT8rYn8z9q5WhYGPDCgtXfJ1DvgTZzJStsMcUHg/s1600/thalapathi+page.png" height="358" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தளபதியின் தமிழ் முகநூல் பக்கம்</td></tr>
</tbody></table>
<br />
<br />
அது மார்ச் மாதம் 31ம் தேதி, 2011ம் தேதி... தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்திருந்த நேரம். தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராகவும், நம் பாசமிகு தளபதி அவர்கள் துணை முதல்வராகவும் கொலுவீற்றிருந்து நல்லாட்சி நல்கிய காலம் அது. அன்று தான் நம் துணை முதல்வர் அண்ணன் தளபதி அவர்கள் இணையத்தில் முகநூல் பக்கம் முதன் முதலாக நுழைகின்றார். அதற்கு முன்பே டாட்.காம் வழியே இணையத்தில் அவர் கோலேச்சிக்கொண்டிருந்தாலும் Facebook என்னும் சமூகவலைதளமான "முகநூலில்" அப்போது தான் நுழைகின்றார். அதன் பின்னர் ஏப்ரல் 3ம் தேதி 2011 அன்று ஒரு சோதனை பதிவிடுகின்றார். என்னவென்று தெரியுமா?<br />
<br />
<br />
<b><span style="color: red; font-size: large;">"ஆதரிப்பீர் உதயசூரியன்"</span></b><br />
<br />
<br />
. இது தான் அந்த ஒற்றை வரி. தன் நாடி நரம்புகளில் திமுக மீதும், அதன் இரு வண்ண கொடி மீதும், அதன் உதயசூரியன் சின்னத்தின் மீதும், அதன் கொள்கைகள் மீதும் அதி தீவிர வெறி கொண்ட ஒருவரால் மட்டுமே இது சாத்தியம். ஆத்திகர்கள் புதிதாய் ஒரு பேனா வாங்கினால் எழுத ஆரம்பிக்கும் போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பர். சுயநலமிகள் தன் பெயரை எழுதிப்பார்ப்பர். ஆனால் தளபதி அவர்கள் விழிப்பிலும், உறக்கத்திலும் உதயசூரியனை மனதில் சுமப்பவர் என்பதால் முதல் பதிவே "ஆதரிப்பீர் உதயசூரியன்". <br />
<br />
<br />
<br />
இன்னும் சொல்லப்போனால் அப்போது முகநூல் வழி பிரச்சாரம் செய்தது என்பது தளபதி அவர்களை தவிர்த்து விரல் விட்டு எண்ணும் அளவுக்கே திமுகவின் சார்பாய் இருந்தனர். இன்னும் மிகக்குறிப்பாக சொல்லப்போனால் 2011ல் மே மாதம் சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்த பின்னர் தான்<b><span style="color: red;"> "இணையதள திமுக"</span></b> என்னும் முகநூல் குழுவை <b><span style="color: red;">மெல்வின் பாக்கியநாதன், டான் அசோக் </span></b>உள்ளிட்ட சிலர் சேர்ந்து ஆரம்பித்தனர். இன்று பலநூறு திமுக முகநூல் குழுக்கள் இருப்பதற்கு முன்னோடியான முதல் குழு "இணையதள திமுக" ஆகும். ஆனால் அதற்கும் முன்பாகவே திமுக சார்பாக முழு நேர முகநூல் பிரச்சார பீரங்கியாக இருந்தது தளபதி அவர்களின் முகநூல் பக்கமே ஆகும். போர் என்றால் முன் வரிசையில் வழிநடத்தி போகும் வீரனே "தளபதி". திமுகவின் பிரச்சார போரில் கூட நவீன அறிவியல் பிரச்சாரத்தை திமுகவில் முதன் முதலில் முன்னின்று வழிகாட்டியது கழக பொருளாளர் திரு.மு.க.ஸ்டாலின் என்பதால் தான் "தளபதி" என அன்பாக திமுகவினர் அவரை அழைக்கின்றனர் என்பதை இதிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.<br />
<br />
<br />
<br />
அந்த காலகட்டத்தில் சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் பல லட்ச "விருப்ப"ங்களோடு முகநூலில் உலாவந்த காலகட்டம் அது. அப்போதெல்லம் சுப்ரமணியசுவாமி போன்றவர்கள் முகநூல் கணக்கு துவங்கி பல வருடங்கள் ஓடிவிட்ட நிலை. அதே போல கிரிக்கெட் உலகின் கடவுள் எனப்படும் சச்சின் போன்றவர்களும் அதே நிலையில் இருந்தனர். ஆனால் ஒரு பிராந்திய கட்சியின் தலைவர்களில் ஒருவரான துணை முதல்வர் முகநூல் பக்கம் வந்தது அப்போது தான். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் தன் முகநூல் பக்கத்தை துவங்கினார். எத்தனை பேர் தன் முகநூல் பக்கத்தில் விருப்ப சொடுக்கிட்டு வருகின்றனர் என்பது பற்றியெல்லாம் அவர் கவலை கொண்டதாக தெரியவில்லை. அதே போல விருப்ப சொடுக்கு வாங்க வேண்டும் என்பதற்காக சுப்ரமணிய சுவாமி போல ஹேஷ்யங்கள் எழுதுவதும், அவதூறுகள் எழுதுவதும், மற்றவர்களை அவதூறு பேசுவதுமெல்லாம் இல்லை.<br />
<br />
<br />
தன் கருத்துகள், திமுகவின் கொள்கைகள், திமுகவின் வளர்ச்சிகள், திமுக சந்திக்க வேண்டிய சவால்கள், திமுக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், திமுக தொண்டர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள், தன் திமுக இளைஞரணி செயல்பட வேண்டிய வழிகள், தன் சுற்றுப்பயணங்கள் இப்படியாக தினம் தினம் தன் இயக்கத்துக்கான போர்வாளாக தன் "முகநூல்"பக்கத்தை நாள் தோறும் மிளிர வைத்தார்.<br />
<br />
<br />
கடமையை செய் - பலனை எதிர்பாராதே என இவர் தன் பிரச்சாரத்துக்காக மட்டுமே முகநூலை பயன்படுத்தி வருவதால் இன்று முகநூலின் அதிகாரபூர்வ அங்கீகாரமான வெரிபைடு அந்தஸ்தையும் பெற்று விட்டது. ஆமாம் தமிழகத்தின் மட்டுமல்ல இந்திய அரசியல் தலைவர்களில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது தமிழ் முகநூல் பக்கம் இன்றைய நிலையில் (இன்றைய தேதி 16.10.2014 ) <b><span style="color: red; font-size: large;">2,90,475 விருப்பங்களுடன் முன்னிலையில் உள்ளது. (இரண்டு லட்சத்தி 90 ஆயிரத்து நானூற்று எழுபத்தி ஐந்து) இந்த கட்டுரை உங்கள் கண்ணில் படும் நேரத்தில் அனேகமாக அது 3 லட்சத்தை தாண்டி போகக்கூடும். அதே போல தளபதி அவர்களின் ஆங்கில முகநூல் பக்கம் 1,15,919 (ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 919) விருப்பங்களுடன் உள்ளது. </span></b> அதில் குறிப்பாக 18 முதல் 25 வயது கொண்டவர்களே அதிகமானோர் என்பது இன்னும் ஒரு வியப்பான செய்தியாகும்.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHfJXd2exgEOPeWPdklc5OOsL8IHQLu60pQV3MhbpO_X2vdXVApl_xvEehMsSN6bFS5vKWwuyE2eLVa9DOIBJs1FB8bzxngs58CEo9KMUnLVB-DQ8rKvBTt7hT0xkpsxKbeZWHpPMAHUA/s1600/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHfJXd2exgEOPeWPdklc5OOsL8IHQLu60pQV3MhbpO_X2vdXVApl_xvEehMsSN6bFS5vKWwuyE2eLVa9DOIBJs1FB8bzxngs58CEo9KMUnLVB-DQ8rKvBTt7hT0xkpsxKbeZWHpPMAHUA/s1600/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.png" height="358" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தளபதியின் ஆங்கில முகநூல் பக்கம்</td></tr>
</tbody></table>
<br />
<br />
<br />
இதற்கடுத்தபடியாக நம் <b><span style="color: red; font-size: large;">தலைவர் கலைஞர் அவர்களின் முகநூல் பக்கம் இன்றைய நிலையில் 2,69,481 (இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 481) விருப்பங்களுடன் அடுத்த நிலையில் உள்ளது.</span></b> இத்தனைக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் முகநூல் கணக்கை தொடங்கிய தேதி 13.08.2012 அன்று தான். அதாவது கிட்ட தட்ட தளபதி அவர்கள் ஆரம்பித்த பின்னர் 17 மாதங்களுக்கு பின்னரே துவங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைவர் கலைஞர் அவர்களது இந்த சாதனையை பாராட்டி தி இந்து தமிழ் நாளிதழ் கூட நான்கு நாட்கள் முன்பாக தலைவர் கலைஞர் அவர்கள் முகநூல் விருப்ப கணக்கில் முதலிடம் வகிப்பதை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டது. அப்போதே தளபதி அவர்கள் முகநூல் விருப்ப கணக்கு அதை விட தாண்டி இருந்தது என்றாலும் திமுக தொண்டர்கள் எவருமே இதை ஒரு போட்டியாக கருத வில்லை என்பதால் "தி இந்து" நாளிதழின் செய்தியை குறை கூறாமல், தவறை சுட்டிக்காட்டாமல் கொண்டாடியே மகிழ்ந்தனர். வேருக்கு கொடுக்கும் மரியாதையை உணர்ந்தவர்கள் திமுக தொண்டர்கள் என்பதுக்கு இதுவே ஒரு சாட்சியாகும். இதைத்தான் தளபதி அவர்களும் விரும்புவார்கள்.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjUkNZXV58MegI2Ci_0OADzi-xp9gR9nMRPPs5KbpGVh6JkCeD2zV8-0tKtytbEK0rIxZ-Eu_ej_bG8EllftUg66dtsg4CUqQCVymkUzYf78dbWNsYFzN3pZk_838tHr8XJbCTX91E3SM/s1600/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjUkNZXV58MegI2Ci_0OADzi-xp9gR9nMRPPs5KbpGVh6JkCeD2zV8-0tKtytbEK0rIxZ-Eu_ej_bG8EllftUg66dtsg4CUqQCVymkUzYf78dbWNsYFzN3pZk_838tHr8XJbCTX91E3SM/s1600/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.png" height="356" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தலைவரின் முகநூல் பக்கம்</td></tr>
</tbody></table>
<br />
<br />
<br />
<br />
விரைவில் தலைவர் அவர்களும், தளபதி அவர்களும் இந்திய அரசியல்வாதிகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி என சொல்லப்படும் இணைய வழி பிரச்சாரங்களில் வேறு எந்த அரசியல்வாதிகளும் தொட முடியாத தூரத்தில் இருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். (இப்போதே அப்படித்தால் உள்ளது நிலமை)எதிர்கால இளைஞர் கூட்டத்தை இணைய வழி பிரச்சாரம் மட்டுமே ஈர்க்கும் என்பதை உணர்ந்த அரசியல் இளைஞர்கள் திமுகவின் தலைவர் கலைஞர் அவர்களும் தமிழகத்தின் எதிர்காலம் தளபதி அவர்களும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த இரு கண்களுக்கும் திமுக தொண்டர்கள் சார்பாக வாழ்த்துக்கள்!<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfL7GS3xzwHoeGiFscyD2SftssriRo2zYnN672bh5ZHvb2BbKE2dMp0uvqJX08Af0UFxsgpE1_OrTT32j_CmkCHJjjvda_MWAC-Vun1UwpcmmkDtdDPGB3qiB6D2WPanACNEU1fpds2sA/s1600/68979_712729835462887_3289317072082462742_n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfL7GS3xzwHoeGiFscyD2SftssriRo2zYnN672bh5ZHvb2BbKE2dMp0uvqJX08Af0UFxsgpE1_OrTT32j_CmkCHJjjvda_MWAC-Vun1UwpcmmkDtdDPGB3qiB6D2WPanACNEU1fpds2sA/s1600/68979_712729835462887_3289317072082462742_n.jpg" height="458" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தலைவர் கலைஞர் முகநூல் வெற்றியை பற்றி "தி இந்து" நாளிதழ்</td></tr>
</tbody></table>
<br />
<br />
<br />
தலைவர் கலைஞர் அவர்களின் முகநூல் பக்கம் <a href="https://www.facebook.com/Kalaignar89">https://www.facebook.com/Kalaignar89</a><br />
<br />
<br />
தளபதியின் தமிழ் முகநூல் பக்கம் <a href="https://www.facebook.com/MKStalin">https://www.facebook.com/MKStalin</a><br />
<br />
<br />
தளபதியின் ஆங்கில முகநூல் பக்கம் <a href="https://www.facebook.com/MKStalin.Official.English?fref=ts">https://www.facebook.com/MKStalin.Official.English?fref=ts</a><br />
<br />
<br />
தளபதியின் ட்வீட்டர் பக்கம் <a href="https://twitter.com/mkstalin">https://twitter.com/mkstalin</a><br />
<br />
<br />
தளபதியின் இணைய பக்கம் <a href="http://mkstalin.in/">http://mkstalin.in/</a><br />
<br />
<br />
<br />
<div>
<br /></div>
அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72547729247391483582014-08-31T21:14:00.000+05:302017-02-14T11:02:52.836+05:30ஜெயலலிதா அம்மையாரின் சொத்து குவிப்பு வழக்கு - 18 வருடம் கடந்து வந்த பாதை!!! <br />
செப்டம்பர் 20, 2014 - சரித்திரத்தில் இடம் பெறப்போகும் நாள். ஜெயா அம்மையார் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாள். கடந்த 28.08.2014 அன்று வாத, பிரதிவாதங்களை எல்லாம் முடித்து விட்டு நீதிபதி டி குன்ஹா அவர்கள் எதிர்வரும் 20.09.2014 அன்று தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZThecEtu7Uez6cAUMJvvcHovkI9Qwx4tw9TjumjHdTfHltRFTw3KEZ_ORnxY8Su1uOZPLIQmGzeEB84vtfgukdS_SdTn66sctMUVFJEa18wVmQY98mkLHIXLIlw2zzAfD-FDlX9N9jNc/s1600/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZThecEtu7Uez6cAUMJvvcHovkI9Qwx4tw9TjumjHdTfHltRFTw3KEZ_ORnxY8Su1uOZPLIQmGzeEB84vtfgukdS_SdTn66sctMUVFJEa18wVmQY98mkLHIXLIlw2zzAfD-FDlX9N9jNc/s1600/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE.jpg" width="572" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">நல்ல தீர்ப்பு நல்க இருக்கும் நீதியரசர் மைக்கேல் டி குன்ஹா அவர்கள் </td></tr>
</tbody></table>
<br />
<br />
ஆக இடையே 23 முழு நாட்கள் உள்ளன. அந்த நீதிபதி சரியான தீர்ப்பை எழுத வசதியாக திமுகவினர் நாம் ஒவ்வொறுவரும் தலைவர் எழுதிய "சொத்து குவிப்பு வழக்கு - ஒரு தொடர்கதை" என்னும் அந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பை அனுப்பி வைத்தால் அவருக்கும் இந்த வழக்கில் அம்மையார் இந்த 18.09.1996 அன்று எஃப் ஐ ஆர் போட்டதில் இருந்து தீர்ப்பு வர இருக்கும் 20.09.2014 வரை இந்த 18 ஆண்டுகளில் எத்தனை நீதிபதிகள், எத்தனை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அழுது விட்டனர், எரிச்சல் அடைந்தனர், கண்டித்தனர் என்ற சரித்திரம் முழுமையும் அந்த நீதிபதிக்கும் புரியவரும். அந்த சொத்து குவிப்பு வழக்கின் இந்த 18 ஆண்டு சரித்திரத்தை என்னால் முடிந்த அளவு இங்கே சுருக்கமாக பதிகின்றேன். தலைவர் எழுதிய புத்தகத்தின் சாறு தான் இந்த பதிவு. அல்லது அந்த புத்தகத்தின் சுருக்கம் என்றோ அல்லது "புத்தக விமர்சனம்" என்றோ கூட வைத்துக்கொள்ளுங்கள் தோழர்களே!<br />
<br />
<br />
தலைவர் கலைஞர் எழுதிய புத்தகத்தை சுமார் 81 தனித்தனி செய்திகளாக வரிசைக்கிரமமாக வடிகட்டி கொடுத்துள்ளேன் இங்கே. சொத்து குவிப்பு வழக்கு சொத்து குவிப்பு வழக்கு என்றெல்லாம் பேசும் பலருக்கு கூட அதன் முழுபரிமாணம் தெரியவில்லை. ஏனனில் இது ஒரு கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம். இந்த சொத்து குவிப்பு நடந்த போது பிறந்த குழந்தைகள் இன்று திருமணம் ஆகி பிள்ளைகுட்டிகளுடன் இரண்டு முறை தேர்தலில் ஓட்டும் போட்டு விட்டவர்கள். ஆகவே நம் இந்திய திருநாட்டின் மூத்த அரசியல்வாதியான மிகப்பழுத்த அரசியல் ஞானமும், அரசியல் அறிவும், ஞாபக சக்தியும் கொண்டு இந்த 91 வயதிலும் இதோ தன் தொகுதிக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் குறித்துக்கொண்டு களமாட கிளம்பிவிட்ட வீர சிங்கம் டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய அந்த புத்தகத்தை சிலர் படித்து இருக்கலாம். பலர் படிக்காமல் கூட இருக்கலாம் என்பதால் நான் இங்கே அதை பிழிந்து சாறு எடுத்து கொடுத்துள்ளேன்.<br />
<br />
<br />
<br />
இதிலே நான், விசாரணையின் போது ஜெயா தரப்பினர் செய்த மாய்மாலங்கள், நாடகங்கள், பொய்கள், புரட்டுகள் இவைகளை பற்றி எல்லாம் சொல்லவில்லை. ஆனால் எப்படி இந்த 18 வருடம் இழுத்தடிக்கப்பட்டது என்பதை மட்டும் சொல்லி இருக்கின்றேன். எத்தனை நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஜெயா தரப்புக்கு சாதகமாக இருந்து வந்தனர், அதை எல்லாம் மீறி எப்படி நம் திமுகவின் பொது செயலாளர் பேராசிரியர் திரு. அன்பழகன் அவர்கள் இந்த வழக்கை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள் என்பதை மட்டுமே இந்த பதிவில் சொல்லி இருக்கின்றேன். இப்போது படியுங்கள். இதை படிக்க கொஞ்சம் பொறுமை அவசியம். ஆனால் படித்து பாருங்கள். எத்தனை விதமாக நீதியை தங்களுக்கு சாதகமாக ஆக்க முயன்றனர் ஜெயா தரப்பினர் என்பது புரியும். இதோ இப்போது படியுங்கள்......<br />
<br />
<br />
<br />
1. 1991 முதல் 1996 மே மாதம் வரை ஜெயா அவர்கள் தமிழக முதல்வராக இருந்தார். அவர் முதல்வராக ஆவதற்கு முன்னர் 01.07.1991 அன்று அவரே தாக்கல் செய்த அபிடவிட் டின் படி அவரது சொத்து மதிப்பு என்பது 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய்.<br />
<br />
<br />
<br />
2. ஐந்து ஆண்டுகள் அவர் முதல்வராக பதவி வகித்த பின்னர் 30.04.1996ல் அவரது சொத்து மதிப்பு 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாய். இத்தனைக்கும் அவர் அந்த 5 வருடத்தில் வாங்கிய சம்பளம் என்பது மாதத்துக்கு 1 ரூபாய் மட்டுமே. ஆக 5 வருடத்துக்கு சேர்த்து அவர் வாங்கிய சம்பளம் என்பது வெறும் 60 ரூபாய் மட்டுமே.<br />
<br />
<br />
<br />
3. அவர் ஆட்சியில் இருந்த போதே, ஜெயா அவர்கள் ஊழல் செய்து சொத்து குவித்து வருவதாக அப்போதைய ஆளுனர் டாக்டர் சென்னா ரெட்டியிடம் திமுக சார்பாக 28 ஊழல்களை பட்டியலிட்டு (539 பக்கம்) கொடுத்தது. அதில் 25 வது ஊழல் தான் இந்த வழக்கு.<br />
<br />
<br />
<br />
4. 15.04. 1995ல் இந்தியா டுடே பத்திரிக்கை ஜெயாவின் சொத்து குவிப்பு பற்றி நீண்ட கட்டுரை வெளியிட்டது.<br />
<br />
<br />
<br />
5. சுப்ரமணிய சுவாமியும் ஆளுனரிடம் ஜெயா சொத்து குவித்து வருவதாகவும் அதனால் வழக்கு தொடர அனுமதி கொடுக்கும் படியும் ஆளுனர் டாக்டர் சென்னா ரெட்டியிடம் அனுமதி கேட்டார். அதன் காரணமாக சுப்ரமணிய சுவாமி மற்றும் சந்திரலேகா ஆகியோர் மீது அதிமுகவினர் 06.04.1995 அன்று ஜனதா கட்சி கூட்டத்தில் புகுந்து கற்கள் மற்றும் செருப்பால் அடித்து அராஜகம் செய்தனர்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhp2XmsnHS_IbW4l8x6DIiENQv21wMiS-FSjFci-InfCmbcZlbj5QL113K-1ScyZ8tUyJ8dfELmAMI_dDGZoiRP5Rvz0sjZw6woBvZpwemEgFNzQUvQOcvqCX-FNprTLr-CPNNKJWIUPkk/s1600/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhp2XmsnHS_IbW4l8x6DIiENQv21wMiS-FSjFci-InfCmbcZlbj5QL113K-1ScyZ8tUyJ8dfELmAMI_dDGZoiRP5Rvz0sjZw6woBvZpwemEgFNzQUvQOcvqCX-FNprTLr-CPNNKJWIUPkk/s1600/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.jpg" width="332" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">அப்போதைய தமிழக ஆளுனர் டாக்டர் சென்னா ரெட்டி அவர்கள்</td></tr>
</tbody></table>
<br />
<br />
6. ஆளுனர் சென்னாரெட்டி அவர்கள், வழக்கு தொடுக்க சுப்ரமணிய ஸ்வாமிக்கு அனுமதி கொடுத்தார். அதன் காரணமாக ஆளுனர் சென்னா ரெட்டியை திரும்ப அழைத்து கொள்ள வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் ஜெயா அவர்கள் 27.04.1995 அன்று தீர்மானமே போட்டார்.<br />
<br />
<br />
<br />
7. சுப்ரமணிய ஸ்வாமி ஜூன் 14,1996ம் தேதி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததை சுட்டி காட்டி மனு தாக்கல் செய்தார்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF4TQW7WjGy7kdwyfrVO090uPRnvjMtk0gvgs3lz1vhv4MoeO2aM8oyyLBzZICu_tiT5kiYrH2SfK5qhRSbrseDVZ8P2DZO0pS9MckvkSVZL7vYPDDp9_kGrpMzUmO59bm5o-X2qkNlA4/s1600/lathika_saran.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF4TQW7WjGy7kdwyfrVO090uPRnvjMtk0gvgs3lz1vhv4MoeO2aM8oyyLBzZICu_tiT5kiYrH2SfK5qhRSbrseDVZ8P2DZO0pS9MckvkSVZL7vYPDDp9_kGrpMzUmO59bm5o-X2qkNlA4/s1600/lathika_saran.JPG" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">போலீஸ் அதிகாரி லத்திகாசரண் அவர்கள்</td></tr>
</tbody></table>
<br />
<br />
8. நீதிமன்றம், அப்போது போலீஸ் அதிகாரியாக இருந்த லத்திகாசரண், மற்றும் வி.சி பெருமாள் ஆகியோரை விசாரிக்கும் படி 26.06. 1996 அன்று உத்தரவிட்டது.<br />
<br />
<br />
<br />
9. அந்த விராசணையை தடுக்க வேண்டும் என ஜெயா தமிழக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதனால் சிறிது காலம் வழக்கு விசாரிக்கப்படவில்லை. பின்னர் உயர் நீதிமன்றம் அந்த தடையை நீக்கியது. உடனே ஜெயா தனக்கு முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் <b><span style="color: red;">நீதிமன்றம் "முடியாது. இதில் ஊழலுக்கான முகாந்திரம் உள்ளது" என அதை தள்ளுபடி செய்தது.</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<br />
<br />
10. பின்னர் போலீஸ் அதிகாரி வி.சி பெருமாள் தன் விசாரணையை நடத்தி இந்த வழக்கில் ஊழல் செய்தமைக்கான ஆதாரம் உள்ளது என்பதை அறிந்து திரு.நல்லம்ம நாயுடு அவர்களையும் அவர்களுக்கு துணையாக 16 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவை அமைத்தார். அந்த குழுவை அமைத்த தேதி 07.09.1996.<br />
<br />
<br />
<br />
1<b><span style="color: red;">1. திரு.நல்லம்ம நாயுடு அவர்கள் எஃப் ஐ ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்த தேதி 18.09.1996 ஆகும்.</span></b><br />
<br />
<br />
<br />
12 ஜெயாவின் வீட்டையும் , ஐதராபாத் திராட்சை தோட்டத்தையும் நேரில் சென்று சோதனை செய்ய திரு.நல்லம்ம நாயுடு அவர்கள் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட தேதி 16.10.1996.<br />
<br />
<br />
<br />
13. அனுமதி கிடைத்த தேதி 06.12.1996. ஆனால் அன்றைய தேதியில் அம்மையார் ஜெயா அவர்கள் வேறு ஒரு வழக்கில் கைதாகி சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தார்.<br />
<br />
<br />
<br />
14. ஆகவே அங்கு சென்று திரு.நல்லம்ம நாயுடு அவர்கள் ஜெயாவிடம் வீட்டை சோதனை செய்ய அனுமதி கொடுத்த நீதிமன்ற ஆணையை காட்டி அதன் படி ஜெயாவும் தன் பிரதிநிதிகளாக (ரெப்ரசெண்டிடிவ் ஆக ) ஜெயராமன், விஜயன் ஆகியோரை நியமித்தார்.<br />
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEYelWGURwneiBz0wBdJupZEVPkjqc5HwDnAzuYswiT_F6f6nJLpZ81w3KUd3rM9LviPcnxc9SjYixvVSoG3klMxWY-AKcRTrbEWEx-3s_9cZzFctomzGObqs2EQLccMvwufopA8L6nzE/s1600/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEYelWGURwneiBz0wBdJupZEVPkjqc5HwDnAzuYswiT_F6f6nJLpZ81w3KUd3rM9LviPcnxc9SjYixvVSoG3klMxWY-AKcRTrbEWEx-3s_9cZzFctomzGObqs2EQLccMvwufopA8L6nzE/s1600/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE.jpg" width="412" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ஜெயலலிதா மற்றும் சசிகலா (நகைகளுடன்)</td></tr>
</tbody></table>
<br />
15. அதன் பின்னர் 07.12.1996 முதல் 12.12.1996 வரை ஜெயாவின் வீடும், ஐதராபாத் தோட்டமும் சோதனை செய்யப்பட்டு அங்கே இருந்த தங்க, வைர நகைகள், வெள்ளி பாத்திரங்கள், ரொக்க பணம் எல்லாம் கைப்பற்றப்பட்டு அதிலே வெள்ளி பாத்திரங்கள் தவிர மற்றவை எல்லாம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அவைகள் சென்னை ரிசர்வ் பேங்கில் வைக்கப்பட்டன.வெள்ளி பாத்திரங்கள் ஜெயாவின் பிரதிநிதியாக (ரெப்ரசெண்டேடிவாக )ஜெயாவால் நியமிக்கப்பட்ட ஜெயராமன் மற்றும் விஜயன் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டன. அவைகள் போயஸ் தோட்டத்துக்கு மீண்டும் எடுத்து செல்லப்பட்டன. <b><span style="color: red;">(இது நடந்தது 12.12.1996, இதனால் வந்த சிக்கல் அதாவது வழக்கு இழுத்தடிக்கும் செயல் 17 வருஷம் கழித்து 2013ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வரும் பாருங்கள். அது இந்த பதிவின் பாயிண்ட் # 57)</span></b><br />
<br />
<br />
<br />
16. பின்னர் இதற்காக தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் சிறப்பு நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. <b><span style="color: red;">ஜூன் 4, 1997ம் தேதி அன்று சென்னை தனி நீதிமன்றத்தில் ஜெயா அம்மையார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.</span></b><br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUYixyzd8UqncjIKgYF0qMfP2T46em2UyYhZOfkr7mjT54ce2zW3WfgbgthRnu7o6GwQO6A4wf5_uhyYB8p2ZZevajheCq3TxZ-xgdnSTJeCzucRD5wEk-yL9K8O_BfTi9gwIRVOB-Sp4/s1600/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="307" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUYixyzd8UqncjIKgYF0qMfP2T46em2UyYhZOfkr7mjT54ce2zW3WfgbgthRnu7o6GwQO6A4wf5_uhyYB8p2ZZevajheCq3TxZ-xgdnSTJeCzucRD5wEk-yL9K8O_BfTi9gwIRVOB-Sp4/s1600/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">இரண்டு மற்றும் நான்காம் குற்றவாளிகள் சசிகலாவும் இளவரசியும்</td></tr>
</tbody></table>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtOMrTGtS8_zuHEF8whNX0IriaKpnUXpjYWEobFlI6hf80XzSpvExSp9IIwtxo-wgulqgJmYdm_J2IDzkQqwCf-IoQvv8entpgo9Qk8lhR2wAqTN8ZwwCCUAwtGuB_4loPAYUuonVY-1w/s1600/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtOMrTGtS8_zuHEF8whNX0IriaKpnUXpjYWEobFlI6hf80XzSpvExSp9IIwtxo-wgulqgJmYdm_J2IDzkQqwCf-IoQvv8entpgo9Qk8lhR2wAqTN8ZwwCCUAwtGuB_4loPAYUuonVY-1w/s1600/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மூன்றாம் குற்றவாளி சுதாகரன் அவர்கள் </td></tr>
</tbody></table>
<br />
<br />
17. ஜூன் 5,1997ல் ஜெயா,சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கோர்ட் சம்மன் அனுப்பியது.<br />
<br />
<br />
<br />
18. வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றம் சென்றனர். அது தள்ளுபடி ஆன தேதி அக்டோபர் 21, 1997. பின்னர் வழக்கில் அவர்களும் சேர்க்கப்பட்டு 259 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர்.<br />
<br />
<br />
<br />
19. தனிநீதிமன்றம் அமைக்கப்பட்டது செல்லாது என ஜெயா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அது அங்கே தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் அதே வழக்கை உச்சநீதிமன்றம் எடுத்து சென்றார். அங்கும் 14.05.1999 அன்று நீதிபதிகள் ஜி டி நானாவதி, எஸ்.பி.குர்துக்கர் ஆகியோர் அதை தள்ளுபடி செய்து தனி நீதிமன்றம் அமைத்தது சரி தான் என தீர்ப்பு அளித்தனர்.<br />
<br />
<br />
<br />
***************************<br />
<br />
<br />
<b>கிட்ட தட்ட இது வரை 5 வருடங்கள் முடிந்து விட்டன. இந்த ஐந்து வருடமும் அதாவது 1996 மே மாதம் முதல் 2001 மே மாதம் வரை திமுக ஆட்சி தான் நடந்து வந்தது. ஆயினும் ஜெயா தரப்பில் மிக சுலபமாக இந்த ஐந்து ஆண்டுகளும் வழக்கை செஷன்ஸ் கோர்ட், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தனி சிறப்பு நீதிமன்றம் என எல்லாவற்றிலும் மாற்றி மாற்றி தடை கேட்டு கேட்டு வழக்கை இழுக்கடிக்க முடிந்தது. ஆனால் மே மாதம் 2001ல் திமுக ஆட்சி போய் ஜெயா தலைமையிலான அதிமுக ஆட்சி வந்து விட்டது. பின்னர் அம்மையார் அந்த அரசு வழக்கை எப்படி இழுக்கடிப்பார் என்பதை இப்போது பார்ப்போம்....</b><br />
<br />
**************************<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAgbdD6FYe4pwLc7NzaC4w-vzZrDn5k-OcoGPXnSWvpDzD299qyxkRkRB7WT8mtL7eJ-2YXnH0IDWBSfG6gtMrI10qNmIGAYWnMwT3SLeTFL4cuTdMQRQbUYT-nSfzhSb_NsmL94dpDBk/s1600/%E0%AE%92+%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="259" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAgbdD6FYe4pwLc7NzaC4w-vzZrDn5k-OcoGPXnSWvpDzD299qyxkRkRB7WT8mtL7eJ-2YXnH0IDWBSfG6gtMrI10qNmIGAYWnMwT3SLeTFL4cuTdMQRQbUYT-nSfzhSb_NsmL94dpDBk/s1600/%E0%AE%92+%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ஓ.பன்னீர் செல்வம் அவர்கள்</td></tr>
</tbody></table>
<br />
<br />
20. மே மாதம் 2001ல் பதவி ஏற்ற ஜெயா அவர்கள் பதவி ஏற்றதே செல்லாது என 21.09.2001ல் உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. அதன் காரணமாக ஜெயா முதல்வர் பதவியில் இருந்து விலகி ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் ஆனார்.<br />
<br />
<br />
<br />
<br />
21. மீண்டும் 02.03.2002ல் இடைத்தேர்தலில் வென்று ஜெயா முதல்வர் ஆனார். அதுவரை வழக்கு ஆமை வேகத்தில் தான் சென்றது. மீண்டும் இந்த தனி நீதிமன்ற வழக்கு நவம்பர் மாதம் 2002ல் தான் தொடங்கியது. அப்போது தனி நீதிமன்ற நீதிபதியாக ஆர்.ராஜமாணிக்கம் இருந்தார்.<br />
<br />
<br />
<br />
22. ஏற்கனவே சாட்சியம் அளித்த 76 பேரிடம் மீண்டும் விசாரணை என நீதிமன்றம் அறிவித்தது. அதன் படி அந்த விசாரணை பிப்ரவரி 2003 வரை நடந்தது. அந்த சாட்சிகள் இப்போது அதிமுக ஆட்சி நடந்தமையால் பல்டி சாட்சிகள் ஆயினர். உயிர் பயம் இருக்கத்தானே செய்யும் அவர்களுக்கும்..<br />
<br />
<br />
<br />
23. அப்போது குற்றவியல் சட்டம் 313ன் படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றம் வராமல் அவர்கள் இருப்பிடம் சென்று வாக்குமூலம் வாங்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக நடந்த இந்த அநியாயத்தை அரசு வழக்கறிஞர் கொஞ்சம் கூட ஆட்சேபிக்கவில்லை. ஏனனில் அவர் ஜெயா அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_aYsI5uzlO0wG34jXMNgLGVu-CyYdZqcJOusu574jBF9kYidlxM5r92Ql7ZHkR5hyphenhyphenkRL19oQLwSq9-Y9VsqPezOyOpyioT60xv11X9iSGHPfQJ6A0EPGKbzKB2tgMwgYx8xfL9fRb8Zs/s1600/%E0%AE%95.%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.gif" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_aYsI5uzlO0wG34jXMNgLGVu-CyYdZqcJOusu574jBF9kYidlxM5r92Ql7ZHkR5hyphenhyphenkRL19oQLwSq9-Y9VsqPezOyOpyioT60xv11X9iSGHPfQJ6A0EPGKbzKB2tgMwgYx8xfL9fRb8Zs/s1600/%E0%AE%95.%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.gif" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வழக்கின் சூத்திரதாரியில் ஒருவரும் கழக பொது செயலாளருமாகிய பேராசிரியர் க.அன்பழகன் </td></tr>
</tbody></table>
<br />
<br />
24. <b><span style="color: red;">இதனால் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் விசாரணை அதிகாரிகளும் அரசு வழக்கறிஞரும் ஜெயாவுக்கே சாதகமாக செயல்படுவார்கள் எனவே வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">25. சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 28, 2003ல் இந்த வழக்கு விசரணைக்கு தடை விதித்தது. அதன் பின்னர் உச்சநீதிமன்றம் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் வழக்கை விசாரித்து இந்த வழக்கை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் மாற்றியது . அப்படி மாற்றிய தேதி நவம்பர் 18, 2003.</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<br />
<br />
26. அப்படி பேராசிரியர் அன்பழன் அவர்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எஸ்.எஸ்.ஜவகர் ஐ ஏ எஸ், என்.வி பாலாஜி என்னும் ஆடிட்டர் ஆகியோர் சாட்சிகள் பல்டி சாட்சிகள் ஆனதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ் .என். வரியவா, எச்.கே.சீமா ஆகியோர் குறிப்பிட்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றினர்.<br />
<br />
<br />
<br />
27. <b><span style="color: red;">அந்த தீர்ப்பில் நீதிபதிகள் ஜெயாவை "இவர்கள் நீதியில் குறுக்கிடுகின்றார்" என கடுமையாக எச்சரிக்கின்றனர்.</span></b><br />
<br />
<br />
<br />
28. அந்த தீர்ப்பிலே நீதிபதிகள் "கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் கர்நாடக அரசோடு கலந்து பேசி இந்த வழக்குக்காக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். அதுவும் ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும், அது போல குற்றவியல் சட்டத்தில் மிக மிக அனுபவம் கொண்ட ஒரு மூத்த வழக்கரிஞரை அரசு வழக்கறிஞராக நியமித்து அவருக்கு ஒரு ஜூனியர் வக்கீலும் கொடுக்க வேண்டும். வழக்கை தினம் தினம் விடாமல் நடத்த வேண்டும். பல்டி சாட்சி சொன்னவர்களை விசாரித்து பல்டி அடித்தது உண்மை எனில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சாட்சிகளுக்கு கர்நாடக போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கடுமையான உத்தரவு பிறப்பித்தனர்.<br />
<br />
<br />
<br />
29. மேற்படி தீர்ப்பை வழங்கிய தேதி 18.11.2003. ஆனால் பெங்களூரில் நீதி மன்றம் அமைத்தாலும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விடுவிப்பு செய்தால் தான் அங்கே வழக்கு தொடர முடியும். ஆனால் அம்மையார் ஆட்சி தமிழகத்தில் நடந்ததால் அந்த வழக்கை பத்து மாதங்கள் கழித்து தான் விடுவிப்பு செய்து பெங்களூருக்கு மாற்றியது. அப்படி மாற்றிய தேதி 10.09.2004. அதாவது இதற்கே எட்டு வருடங்கள் ஓடிவிட்டன. (அதன் பின்னர் பெங்களூரில் இந்த வழக்கு பத்து வருடங்கள் நடந்து வருகின்றது)<br />
<br />
<br />
<br />
30. 28.03.2005ல் பெங்களூரு கோர்டில் வழக்கின் எல்லா ஆவணங்களும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தவிர தமிழக அரசுக்கும் கொடுக்கப்பட்டது.<br />
<br />
<br />
<br />
31. அப்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பப்புசாரே என்பவர். அவரிடம் ஜெயா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனு செய்யப்பட்டது. பின்னர் 1 மாதம் அவகாசம் கேட்கப்பட்டது.<br />
<br />
<br />
<br />
32. 18.04.2005 அன்று வரை நீதிபதி பப்புசாரே வழக்கை ஒத்தி வைத்தார். அன்றும் ஜெயா, சசி என குற்றம் சாட்டப்பட்டவர்கள் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஜெயா தரப்பு சீனியர் வக்கீல் கூட வரவில்லை.ஏன் என்று அவர் ஜூனியரிடம் நீதிபதி கேட்ட போது "சீனியர் வக்கீலுக்கு ஜுரம்" என காரணம் சொல்லப்பட்டது. அதற்கு நீதிபதி அவர்கள் "சரி அவர் வராமல் போகட்டும், ஆனால் ஜெயா, சசி , இளவரசி, சுதாகரன் எங்கே? <span style="color: red;">இனியும் அவர்கள் வராவிட்டால் நான் இதை வராமையை காரணம் காட்டியே நீதிமன்ற தீர்ப்பை சொல்ல நேரிடும் என கடுமையாக எச்சரித்தார். பின்னர் மே மாதம் 9ம் தேதி 2005க்கு வழக்கை ஒத்தி வைத்தார்.</span><br />
<br />
<br />
<br />
33. மே மாதம் 9ம் தேதியும் ஜெயா வரவில்லை. ஆனால் அவர் வழக்கறிஞர் நீண்ட அவகாசம் கேட்டார். எரிச்சல் அடைந்த நீதிபதி பப்புசாரே அவர்கள் "அதல்லாம் முடியாது. 16.05.2005 அன்று வழக்கை ஒத்தி வைக்கிறேன். அன்று ஜெயா, சசி உள்ளிட்ட எல்லோரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். கடந்த ஆறு மாதமாக நான் தினம் தினம் வந்து உட்காந்து விட்டு போகிறேன். எனக்கு தனிமை சிறையில் இருப்பது போல இருக்கின்றது என கோபமாக உத்தரவிட்டார். ஒரு நீதிபதியே தான் தனிமை சிறையில் இருப்பது போல இருக்கின்றேன் என கூறியது அகில இந்திய அளவில் நீதிமன்றங்களை அதிர வைத்தது. ஆனால் 16.05.2005 அன்றும் ஜெயா , சசி, உள்ளிட்ட யாரும் நீதிமன்றத்துக்கு வரவில்லை.அதன் பின்னர் நீதிபதி பப்புசாரே ஓய்வு பெற்றுவிட்டார். பிறகு நீதிபதி பி.ஏ.மல்லிகார்ஜுனையா பதவிக்கு வந்தார்.<br />
<br />
<br />
<br />
34. 16.05.2005 அன்று ஜெயாவின் வழக்கறிஞர் தங்களுக்கு லண்டன் சொத்து குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிக்கை தங்களுக்கு வேண்டும் என (இந்த வழக்குக்கு சம்பப்ந்தம் இல்லா வேறு வழக்கு அது) கேட்க அதற்கு நீதிபதி <b><span style="color: red;">பி.ஏ.மலிகார்ஜுனையா அவர்கள் " இது வழக்கை இழுத்தடிக்கும் செயல்" என கடும் கோபத்துடன் எச்சரித்தார்.</span></b><br />
<br />
<br />
<br />
35.மேலும் நீதிபதி அவர்கள் "சரி நான் தருகிறேன். அதை கொடுத்த பின் நாளை முதலாவது நீங்கள் வாதாட முடியுமா?" என கேட்டு விட்டு 1800 பக்க அந்த லண்டன் சொத்து குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிக்கையை கொடுத்தார். உடனே ஜெயாவின் வக்கீல் "இதை படித்து பார்த்து முடிக்க எனக்கு 3 வார கால அவகாசம் வேண்டும் என்றார். பின்னர் வழக்கு 25.05.2005 க்கு ஒத்தி வைக்கப்பட்டது.<br />
<br />
<br />
<br />
36. ஜெயாவின் லண்டன் சொத்து குவிப்பு வழக்கு தனியே சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தூங்கி கொண்டு இருந்தது. அதை இந்த வழக்கோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஜெயா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடுத்தார். அது வரை இந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த முடியவில்லை. சில பல நாட்கள் விசாரணைக்கு பின்னர் பெங்களூரு உயர் நீதிமன்றம் அதற்கு அனுமதி கொடுத்தது.<br />
<br />
<br />
<br />
37. பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கோடு லண்டன் சொத்து குவிப்பு வழக்கை சேர்த்து நடத்தினால் தேவை இல்லாமல் இழுத்தடிக்கும் செயல் இது என்று பேராசிரியர் அன்பழகன் அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று இந்த வழக்கை தனியாக நடத்த வேண்டும் என வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. பின்னர் பேராசிரியர் கோரிக்கையை ஏற்று பெங்களூரு சிறப்பு நீதி மன்றம் சொத்து குவிப்பு வழக்கை மட்டும் தொடர்ந்து விசாரணை செய்யலாம் என தீர்ப்பளித்தது.<br />
<br />
<br />
<br />
38. இப்படியாக நான்கு ஆண்டுகள் பல வித வாய்தாக்கள் வாய்தாக்கள் என இழுக்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் 3.3.2010 அன்று 42 அரசு தரப்பு சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டதை மாற்றம் செய்ய வேண்டிஅதே சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயா தரப்பு ஒரு புதிய வழக்கு தாக்கல் செய்தது. அது 5.3.2010 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.<br />
<br />
<br />
<br />
39. இதற்கிடையே சென்னை சிறப்பு நீதிமன்றம் லண்டன் சொத்து குவிப்பு வழக்கில் 5.6.1997ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய வழக்கு தொடுத்தார் ஜெயா. அதுவும் 10.3.2010ல் கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.<br />
<br />
<br />
<br />
40. உடனே கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த அந்த வழக்கை ஜெயா தரப்பு உச்சநீதிமன்றம் எடுத்து சென்றனர். ஒரு வழியாக உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படி இந்த சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணையை தொடரலாம் 3.5.2010 என நாள் குறித்தது சிறப்பு நீதிமன்றம்.<br />
<br />
<br />
<br />
41. உடனே அதே சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயா தரப்பினர் "இந்த விசாரணை முழுவதும் சட்ட விரோதம். எனவே இத்துடன் விசாரணையை நிறுத்த வேண்டும்" என 18.04.2010ல் புதிய மனு தாக்கல் செய்தனர். அதை 27.04.2010ல் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனே இதை எதிர்த்து ஜெயா தரப்பு உச்சநீதிமன்றம் சென்று புதிய மனு தாக்கல் செய்தனர்.<br />
<br />
<br />
<br />
42. உச்சநீதிமன்றம் "இந்த மனுவை நீங்கள் எஸ்.எல்.பி மனுவாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் வர தேவையில்லை. அதனால் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு சென்று அங்கே மனு தாக்கல் செய்யவும்" என சொல்லி திருப்பி அனுப்பிவிட்டனர்.<br />
<br />
<br />
<br />
43. மீண்டும் 07. 5.2010 அன்று விசாரணை நீதிமன்றத்தில் "இந்த வழக்கு பற்றி உச்சநீதிமன்றத்தில் 11.5.2010 அன்று விசாரணைக்கு வருவதாகவும், அதனால் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்து அது சிறப்பு நீதிமன்றத்தில் ஒத்துகொள்ளப்பட்டு விசாரனை ஒத்தி வைக்கப்பட்டது.<br />
<br />
<br />
<br />
44. அதே மே மாதம் 2010ல் 70,000 பக்கங்கள் கொண்ட அந்த சொத்து குவிப்பு ஆவணங்கள் மூன்று காப்பிகள் வேண்டும் என ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டு அதுவும் 26.6.2010ல் கொடுக்கப்பட்டது. அதுவரை விசாரணை இல்லாமல் ஆகியது.<br />
<br />
<br />
<br />
45. உடனே 15.7.2010 அன்று இதே சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயா சார்பில் அந்த 70,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை ஆங்கிலத்தில் வேண்டாம் என புதிய மனு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் 21.7.2010ல் சுதாகரன் தரப்பிலும் அதே போன்று ஆங்கிலத்தில் வேண்டாம், தமிழில் தான் வேண்டும் என புதிய மனு கொடுக்கப்பட்டது. இவை இரண்டையும் 22.7.2010ல் சிறப்பு நீதிமன்றம் சில வழிகாட்டுதல்கள் கூறி நிராகரித்தார்.<br />
<br />
<br />
<br />
46. உடனே சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயா தரப்பு கர்நாடக உச்ச நீதிமன்றம் சென்றது. ஆனால் சாட்சிகள் வந்திருந்தும் சிறப்பு நீதிமன்றம் அவர்களிடம் விசாரிக்க முடியவில்லை. ஏனனில் குற்றவாளிகள் தரப்பு தான் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு போய் விட்டதே. அதனால் மீண்டும் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.<br />
<br />
<br />
<br />
47. மீண்டும் ஒரு வழியாக கர்நாடக உயர்நீதிமன்றம் அவர்களை சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தது. மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் 19.10.2010ல் விசாரணைக்கு தடை கேட்டனர். பின்னர் ஒத்தி வைப்பு... பின்னர் 16.11.2010, 18.11.2010 என ஒத்தி வைப்பு மீண்டும் கர்நாடக உயர்நீதிமன்றம் செல்லுதல் பின்னர் 25.11.2010, பின்னர் அங்கேயும் நிராகரிப்பு பின்னர் 30.11.2010க்கு ஒத்தி வைப்பு, பின்னர் ஜெயா தரப்பு இதை எடுத்து கொண்டு உச்சநீதிமன்றம் சென்று புதிய மனு தாக்கல், அதன் பின்னர் வழக்கு 15.12.2010க்கு ஒத்தி வைத்தல்...பின்னர் நான்கு நாட்கள் விசாரணை, பின்னர் 18.1.2011க்கு ஒத்தி வைத்தல், பின்னர் வழக்கறிஞரின் தந்தையார் இறந்து விட்டதாக மீண்டும் ஒத்திவைத்தல், இப்படியாக பல முறை வாய்தாவும் மனு போட்டு தடுத்தலும் இடையிடையே சாட்சிகள் விசாரணை மற்றும் குற்றவாளிகள் விசாரணை ... இப்படியாக போய் கொண்டு இருந்த போது இங்கே தமிழகத்தில் திமுக ஆட்சி மாறி மே மாதம் 2011ல் ஜெயா தரப்பு அதிமுக ஆட்சிக்கும் வந்து விட்டது.<br />
<br />
<br />
<br />
48. 2011ல் மத்தியில் இங்கே தமிழகத்தில் திமுக ஆட்சி மாறி அதிமுக ஆட்சி அமைந்து குற்றவாளி ஜெயா தமிழக முதல்வர் ஆனார். அதனால் வழக்கை சட்டமன்ற நாள், உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம், என்றெல்லாம் காரணம் காட்டி மிக சுலபமாக இரண்டு வருடம் வாய்தா மேல் வாய்தா வாங்கி கடத்தினர்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwg_HQNn2Yu4ySdC6aUO7JuXRlr8-4CfVlaogqvVLzydEgPRjuzImX8s_nPxN-xyvghy3n2J2ZMCO-Z8mY1sVRV4WHS_Peak-OPjntsqB-cYTo3POgAwH8ZpU0mHwxJQlAeXoZASsfVHg/s1600/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+2.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="610" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwg_HQNn2Yu4ySdC6aUO7JuXRlr8-4CfVlaogqvVLzydEgPRjuzImX8s_nPxN-xyvghy3n2J2ZMCO-Z8mY1sVRV4WHS_Peak-OPjntsqB-cYTo3POgAwH8ZpU0mHwxJQlAeXoZASsfVHg/s1600/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+2.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மனம் கொந்தளித்து பதவி விலகிய அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா அவர்கள்..</td></tr>
</tbody></table>
<br />
<br />
49. அதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்த திரு. ஆச்சார்யா அவர்கள் மிகுந்த திறமை உள்ளவர் குற்றவியல் வழக்குகளில்.... அவரும் <b><span style="color: red;">அதிமுக மற்றும் முதல்வராக ஆகிவிட்ட ஜெயா அரசு கொடுத்த தொல்லைகள் காரணமாக வழக்கில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார். திரு.ஆச்சார்யா அவர்கள் பதவி விலகிய நாள் 17.01.2013. மே மாதம், 2011ல் ஜெயா தமிழக முதல்வராக வந்த பின்னர் திரு. ஆச்சார்யாவுக்கு கொடுத்த தொல்லைகளை அவரே தனது ராஜினாமாவை கொடுத்து விட்டு மனம் நொந்து புலம்பிவிட்டு தான் விலகினார்</span></b>. அவர் தன் ராஜினாமா கடிதத்தை கர்நாடக உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி திரு. விக்ரமஜீத் சென் அவர்களுக்கு அனுப்பிய போது அவர் அதை ஏற்கவில்லை. பின்னர் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக சென்ற பின்னர் வந்த கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ஸ்ரீதர் ராவ் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டார். இதற்கெல்லாம் முன்பாகவே பெங்களூரு சிறப்பு நீதிபதி மல்லிகார்ஜுனா ஓய்வு பெற்று சென்று அங்கே புதிய நீதிபதியாக பாலகிருஷ்ணா அவர்கள் வந்து விட்டார். அதே போல ஆச்சார்யாவுக்கு பதிலாக பவானிசிங் என்பவர் அரசு வழக்கறிஞராக ஆனார். அதனால் காட்சிகள் மாறின. வழக்கு வேறு வித போக்கோடு போனது. பவானிசிங் கிட்ட தட்ட ஜெயா தரப்பு வக்கீல் போலவே செயல்பட்டார். அதே போல நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்களும் ஒரு மாதிரியாக நடந்து கொண்டார். நல்லவேளை அவர் ஓய்வு பெறும் நிலைக்கு வந்தார்.<br />
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw_RRLukAnIwtgszF8u4JNh7QTubewYlD8O8oiHwai_eQP9lDPHbluvcnS7n1dAJ-aBfa_y1F7WXwL-HtSXz3U2UiTfrlg056sGQEkp7T9qZ4dAkgKORyIB7saKI-8reS0poENhVx23wo/s1600/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw_RRLukAnIwtgszF8u4JNh7QTubewYlD8O8oiHwai_eQP9lDPHbluvcnS7n1dAJ-aBfa_y1F7WXwL-HtSXz3U2UiTfrlg056sGQEkp7T9qZ4dAkgKORyIB7saKI-8reS0poENhVx23wo/s1600/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">திமுகவின் பேராசிரியர் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி (தர்மபுரி) திரு. தாமரைச்செலவன் அவர்கள்</td></tr>
</tbody></table>
<br />
50. வழக்கை உன்னிப்பாக கவனித்து வரும் திமுக தரப்பு, பவானிசிங் அவர்கள் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதை கண்டுபிடித்தது. இதே போன்று தான் 2003ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் இதே வழக்கு நடந்த போது அரசு வழக்கறிஞர் அவர்கள் முதல்வராக இருந்த ஜெயாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதால் திமுகவின் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் வழக்கு தொடுத்து கர்நாடகாவுக்கு மாற்றினார். அதே போல பத்து ஆண்டுகளுக்கு பின்னர் 2013ல் தமிழகத்தில் ஜெயா ஆட்சி வந்ததும் கர்நாடகாவின் அரசு வழக்கறிஞரே இப்படி ஜெயா தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதால் திமுகவின் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் மீண்டும் பவானிசிங் அவர்களை நீக்கி வேறு நல்ல வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு தொடுத்த தேதி 2.2.2013.<br />
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6tgGXELhtmPDYfKZ2ZscbtmaB4QLwLwb88ueWnpmoUMvfwMZKH4u6KajlmgUHh12d6DiVMFVs_5GILAG6et-1NhpIQso-na1BN4gWI15xS72n8ULsQTc4E-xC0FO8csu43h6_PMfQP0Q/s1600/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6tgGXELhtmPDYfKZ2ZscbtmaB4QLwLwb88ueWnpmoUMvfwMZKH4u6KajlmgUHh12d6DiVMFVs_5GILAG6et-1NhpIQso-na1BN4gWI15xS72n8ULsQTc4E-xC0FO8csu43h6_PMfQP0Q/s1600/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.jpg" width="637" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"> 37 எம் பிக்கள் தங்கள் பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டிய அரசு வழக்கறிஞர் உயர்திரு.பவானிசிங் அவர்கள்</td></tr>
</tbody></table>
<br />
51. இதில் தான் மிக மிக அதிசயமான இந்திய நீதிமன்றம் மற்றும் உலக நீதிமன்ற வரலாற்றில் ஒரு நிகழ்வு நடந்தது. அதாவது ஜெயா தரப்பில் " எங்களுக்கு அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் தான் வேண்டும், அதே போல எங்களுக்கு நீதிபதியாக ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணா தான் வேண்டும் என பேராசிரியர் அன்பழகன் அவர்கள் மனுவில் (உச்சநீதிமன்றத்தில் இது நடந்தது) வாதிட்டனர். ஆனால் உச்சநீதிமன்றம் கர்நாடக உயர்நீதிமன்றம் தான் பவானிசிங்கை நியமித்தது என்பதால் அவரை மாற்ற வேண்டும் எனில் கர்நாடக உயர்நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றும் அது போல ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணா மீண்டும் இதில் தேவை இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியது.<br />
<br />
<br />
<br />
52. அதே நேரம் கர்நாடக உயர்நீதிமன்றம் பேராசிரியரின் மனுவை விசாரித்து பவனிசிங்கை நீக்கி உத்தரவிட்டார். அதை எதிர்த்து ஜெயா தரப்பு மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றது. அங்கே சென்று "எங்களுக்கு எதிராக வாதாட அரசு தரப்பில் திரு.பவானி சிங் தான் வேண்டும்" என்கிற விசித்திர வாதத்தை வைத்தது. மகா..ஸ்ரீ..ஸ்ரீ நீதிபதி சவுகான் அவர்கள் (உச்சநீதிமன்றம்) "அப்படியே ஆகட்டும்.. பவானி சிங் அவர்களே உங்களுக்கு எதிராக வாதாடட்டும்" என ஒப்புதல் கொடுத்தார் என்பது தான் விசித்திரம்.<br />
<br />
<br />
<br />
*******************<br />
<br />
இந்த வழக்குக்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒரு விஷயம் இங்கே இடையிலே சொல்ல வேண்டும். ஜெயாவுக்கு இப்போது சொந்தமாக இருக்கும் கொடநாடு எஸ்டேட் விஷயமாக (அதுவும் ஒரு ஆங்கிலேயரிடம் இருந்து மிரட்டி வாங்கப்பட்டது தான்) அங்கே இருந்த பொது பாதையை ஜெயா தரப்பினர் ஆக்கிரமித்து பாதையை மூடிவிட அது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காகியது. அதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் சில காரணங்களால் மாற்றப்பட்டு வேறு நீதிபதி வந்தார். அதை எதிர்த்து ஜெயா தரப்பினர் "எங்களுக்கு பழைய நீதிபதி தான் வேண்டும் என அங்கேயே மனு தாக்கல் செய்தனர். உடனே உயர் நீதிமன் தலைமை நீதிபதி அவர்கள் "நீதிபதிகளை மாற்றும் அதிகாரம் எங்களுக்கு உண்டு" என கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டனர்.<br />
<br />
ஆனால் ஜெயா தரப்பு விடாப்பிடியாக இந்த பிரச்சனையை உச்சநீதிமன்றம் எடுத்து சென்று மனு செய்தனர். அங்கே அதை விசாரித்த உச்சநீதிமன்றம் மிக மிக கோபமாக இந்த தீர்ப்பை வழங்கியது.<br />
<b><span style="color: red;">\\ The chief justice of India asked : "what do you want? Ypu are bench hunting. The chief justice of chennai high court knows many things which you may not know. You have absolutely no right to say that your matter should be heard by a particular judge \\</span></b><br />
<br />
அதாவது \<b><span style="color: red;">\ உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களுக்கு நீங்கள் சொல்லும் நீதிபதி தான் வேண்டும் என வேட்டையாடுகின்றீர்களா? உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தெரியும். குறிப்பிட்ட நீதிபதி தான் வேண்டும் என கேட்க உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை\\</span></b><br />
<br />
இப்படி தீர்ப்பு சொன்னவர் இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள். இதல்லாம் நடந்தது 04.04.2008 அன்று... டெல்லி உச்ச நீதிமன்றத்தில். இப்படி கடுமையாக குட்டு வாங்கியும் திருந்தாத ஜெயா அவர்கள் மீண்டும் 2013லிலும் அதே போல தனக்கு நீதிபதி பாலகிருஷ்ணாதான் வேண்டும், தனக்கு எதிராக வாதாட அரசு வக்கீலாக பவானிசிங் தான் வேண்டும் என கேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றார் என்பதை இங்கே மீண்டும் நியாபகப்படுத்துகின்றேன். இப்போது மீண்டும் நாம் பாயிண்ட் நம்பர் #53ல் இருந்து இந்த பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கின் சரித்திரத்தின் உள்ளே போவோம் வாருங்கள்!<br />
<br />
***********************<br />
<br />
<br />
<br />
53. இந்த பவானி சிங் எப்படி அரசு வழக்கறிஞர் ஆனார்? என நாம் பார்க்க வேண்டும். ஆச்சார்யா அவர்கள் பதவி விலகிய போது அவருக்கு பதில் வேறு ஒரு மூத்த குற்றவியல் வழக்கறிஞரை நியமிக்க வேண்டிய கட்டாயம் கர்நாடக அரசுக்கு இருந்தது. உடனே கர்நாடக அரசு நான்கு திறமையான மூத்த குற்றவியல் வழக்கறிஞர்கள் பட்டியலை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியது. அந்த பட்டியலில் இருந்த ஒருவரை கூட நியமிக்காமல் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக (தற்காலிக) இருந்தவர் தன்னிச்சையாக இந்த பவானிசிங்கை நியமித்தார். இதை நாம் சொல்லவில்லை. அரசு அட்டர்னி ஜெனரல் வாகன்வதி அவர்கள் தான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அந்த நீதிபதி யார் தெரியுமா? கொஞ்சம் மேலே சென்று பாயிண்ட் # 49 ஐ படியுங்கள். ஆச்சார்யாவின் ராஜினாமாவை ஏற்காமல் இருந்து பின்னர் உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதியாக சென்று விட்ட நீதிபதி திரு. விக்ரமஜீத் சென் அவர்களுக்கு பின்னர் கர்நாடக உயர்நீதிமன்ற தற்காலிக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர்ராவ்... அவசர அவசரமாக ஆச்சார்யா வின் ராஜினாமாவை ஏற்று கொண்டாரே அவர்தான் அரசு கொடுத்த பட்டியலில் இல்லாத பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தார். அம்மையார் ஜெயா அவர்கள் திரு. ஸ்ரீதர்ராவ் அவர்களுக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளார். ஹூம்... சட்டம் ஒரு இருட்டறை என அண்ணா சொன்னது தான் நியாபகத்தில் வருகின்றது.<br />
<br />
<br />
<br />
54. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி திரு.நல்லம்ம நாயுடு அவர்கள். அவர் ஓய்வு பெற்ற பின் அந்த இடத்தில் அதிமுக அரசு டி.எஸ்.பி. திரு. சம்பந்தம் அவர்களை நியமித்தது. இவர் இந்த வழக்கில் 99 வது சாட்சியாவார். இவரை நீதிமன்றம் சம்மன் செய்து அழைத்து சாட்சியை பதிவு செய்ய வேண்டிய நிலையில் அவர் ரகசியமாக கொண்டு வரப்பட்டு குற்றவாளிகளுக்கு சாதகமாக சாட்சி அளிக்க செய்தார்கள். இதை கடுமையாக எதிர்க்க வேண்டிய பவானி சிங் கொஞ்சம் கூட எதிர்க்காமல் சும்மாவே இருந்தார்.<br />
<br />
<br />
<br />
55. இந்த டி எஸ் பி சம்பந்தம் முன்னர் அரசு வக்கீலாக இருந்த ஆச்சார்யா காலத்திலேயே அவருக்கு தெரியாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.பாலகிருஷ்ணாவுக்கு "இந்த வழக்கை மீண்டும் ஆரம்பம் முதல் விசாரணை செய்ய வேண்டும்" என கடிதம் எழுதினார். உடனே திமுக இதில் தலையிட்டு விஷயத்தை கர்நாடக உயர்நீதி மன்றத்துக்கு சென்று அங்கே இந்த டி.எஸ்.பி சம்பந்தம் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார். அப்படிப்பட்ட அந்த டி எஸ் பி சம்பந்தம் இப்போது எப்படி சாட்சி சொல்லி இருப்பார்????<br />
<br />
<br />
<br />
56.இதுவரை ஜெயா தரப்பு வக்கீல்கள் வாய்தா வாங்கியதையும் , நீதிமன்ற தடை வாங்கியதையும் தான் பார்த்திருப்பிர்கள் இந்த சொத்து குவிப்பு வழக்கில். இனிமேல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் வாய்தா வாங்கும் விந்தை எல்லாம் பார்க்க போகின்றீர்கள். பவானி சிங் 28.2.2013 அன்று 259 சாட்சிகளின் சாட்சிய விபரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்களை படித்து பார்க்க இரண்டு மாதம் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என வாய்தா கேட்டார். ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணா கொடுக்கவில்லை. ஆனால் பவானிசிங் இதற்காக கர்நாடக உயர்நீதிமன்றம் கூட செல்லவில்லை. ஆனால் நீதிமன்றம் பக்கம் வரவில்லை.இவரின் இது போன்ற செயல்களை கண்ட திமுக,சிறப்பு நீதிமன்றத்தில் தங்களையும் அரசு தரப்போடு சேர்ந்து இந்த வழக்கில் வாதாட அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது. ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா அவர்கள் "வாதாட அனுமதி இல்லை என்றும் ஆனால் சொல்ல வேண்டியதை எழுத்து பூர்வமாக அவ்வப்போது கொடுக்கலாம்" என்றும் தீர்ப்பளித்தார். அதன் பின்னர் தான் திமுகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (அப்போது பாராளுமன்ற உறுப்பினர்) திரு. தாமரைசெல்வன் உள்ளிட்ட மூவர் அந்த வழக்கில் ஆஜராகி கவனித்து அவ்வப்போது எழுத்துபூர்வ பதில்களை தாக்கல் செய்தனர். பவானிசிங் வாங்கிய முதல் வாய்தா இது. பின்னர் தொடர்ந்து அவர் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் வாங்கியதை விட அதிக அளவில் வாய்தா வாங்கி சாதனை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பார்ப்போம்....<br />
<br />
<br />
<br />
57. நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு ஓய்வு பெற இன்னும் ஒரு மாதகாலமே இருந்த நிலையில் ஜெயாவிடம் இருந்து கைப்பற்றப்பட்டு சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்த வைர, வைடூரிய, தங்க நகைகள் மற்றும் வெள்ளி பாத்திரங்கள் (இந்த வெள்ளி பாத்திரங்கள் மட்டும் ரிசர்வ் வங்கியில் இல்லாமல் ஜெயாவின் பிரதிநிதிகளிடம் இருந்தது. அதை கொஞ்சம் மேலே போய் அதாவது 12.12.1996 , 17 வருஷம் முன்பாக.... இதே பதிவில் பாயிண்ட் # 15ல் பார்க்கவும்) ஆகிய வற்றை சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு அதை நீதிபதி பாலகிருஷ்ணா பார்வையிட்ட பின்னர் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால் தான் ஓய்வு பெறும் முன்பாகவே இதை எல்லாம் பார்வையிடாமல் தீர்ப்பு சொல்லிவிட வேண்டும் என நீதிபதி பாலகிருஷ்ணா அவசரம் காட்டினார். ஏனனில் மிக விரைவில் ஒரு வருடத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர இருந்தது. அதற்கு முன்பாக ஜெயா தன்னை குற்றமற்றவர் என வெளியே வந்து விட வேண்டும் என துடித்தார். அதற்கு நீதிபதி பாலகிருஷ்ணாவும் உடன்பட்டார் என்பதால் தானே இதே நீதிபதியும் இதே அரசு வழக்கறிஞரும் தான் எனக்கு வேண்டும் என ஜெயா உச்சநீதிமன்றம் வரை சென்றார் என்பது இதை படிக்கும் உங்களுக்கு புரிகின்றதா?<br />
<br />
<br />
<br />
58. ஒருவழியாக சில பல தடைகளுக்கு பின்னர் கர்நாடக அரசு, கர்நாடக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் எல்லாரும் அங்கே இங்கே என இழுக்கடித்து (அதுவரை விசாரணை தடை) பின்னர் நீதிபதி பாலகிருஷ்ணா மீது நீதிமன்ற வட்டாரத்தில் மதிப்பு குறைந்து விடும் நிலையில் நீதிபதி பாலகிருஷ்ணா "என் சொந்த காரணங்களால் பதவி நீட்டிப்பு வேண்டாம்" என சொல்லிவிட செப்டம்பர் 30, 2011 அன்றே விடுவிக்கப்பட்டார். பின்னர் தற்காலிகமாக நீதிபதி முடிகவுடர் என்பவரை அக்டோபர் 3,2013ல் கர்நாடக உயர்நீதிமன்றம் நியமித்தது. அதன் பின்னர் அக்டோபர் 29 , 2013 அன்று கர்நாடக உயர்நீதிமன்ற குழு கூட்டம் கூடி நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா என்பவரை தனி நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது. அவர் நவம்பர் 7, 2013ல் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் நவம்பர் 7,2013 முதல் 28.08.2014 வரை இந்த வழக்கை தீர விசாரித்தார். இந்த பத்து மாதத்தில் இவரது விசாரணை காலத்தில் கூட பலவித தடைகள், வாய்தாக்கள் என மிகவும் சிரமப்பட்டு கடைசியில் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் தொகுத்து வழங்கும் கடைசி கட்டத்தில் கூட இழுத்தடிப்பு செய்யப்பட்டு கடந்த 28.08.2014 அன்று நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அவர்கள் தனது முடிவுரையாக " இத்துடன் இந்த வழக்கு விசாரணை முடிந்தது. 14 நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால் நான் மேலும் சில ஆவணங்களை படித்து பார்க்க வேண்டும். எனவே எனக்கு முழுமையாக 3 வாரங்கள் தேவைப்படுகின்றது. எனவே எதிர்வரும் செப்டம்பர் 20, 2014 அன்று தீர்ப்பு வழங்கப்படும். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டவர்களான ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார். இப்போது மைக்கேல் டி குன்ஹா அவர்கள் விசாரணை காலத்தில் அந்த பத்து மாதத்தில் ஜெயா தரப்பால் மற்றும் அரசு வழக்கறிஞர் தரப்பால் செய்யப்பட்ட தடைகளை இனி பார்ப்போம்...<br />
<br />
<br />
<br />
59. மைக்கேல் டி குன்ஹா நீதிபதியாக வந்த பின்னர் 27.1.2014 அன்று ஜெயா தமிழக முதல்வராக இருப்பதால் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், சசிக்கு கண் வலி என்றும், இளவரசிக்கு சர்க்கரை நோய் என்றும் சுதாகரனுக்கு மூட்டு வலி என்பதாலும் அவர்களும் விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள் என குற்றவாளிகள் தரப்பு மனு செய்தது. இதை எதிர்க்க வேண்டிய பவானிசிங் அமைதியாக இருந்தார். எனவே நீதிபதி குன்ஹாவுக்கு வேறு வழி இல்லாமல் வாய்தா கொடுக்க நேர்ந்தது. ஆனாலும் அவர் "மருத்துவ சான்றிதழ் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் இந்த ஒரு முறை மட்டும் வாய்தா தருகின்றேன்" என்றார்.<br />
<br />
<br />
<br />
60. அடுத்து ஜெயாவின் வக்கீல் "கைப்பற்ற பொருட்களை திரும்ப தர வேண்டும்" என புதிய மனு தாக்கல் செய்தார். நீதிபதி அவர்கள் "இத்தனை நாள் கேட்காமல் இப்போது கேட்பது வழக்கை இழுத்தடிக்கும் செயல்" என்றார். அப்போது நீதிபதி பவானி சிங் அவர்களை பார்த்து "உங்கள் பதில் என்ன இதற்கு? என கேட்ட போது பவானிசிங் "இதற்கு பதில் சொல்ல எனக்கு 2 வாரம் வாய்தா வேண்டும்" என்றார். இந்த அதிசயமும் நடந்தது. குற்றவாளிக்கு சாதகமாக அரசு வழக்கறிஞர் வாய்தா கேட்டமை. இதற்கு தான் உச்சநீதிமன்றம் வரை சென்று ஜெயா தரப்பு பவானிசிங் சார்பாக வாதாடி பெற்றது போலும்.<br />
<br />
<br />
<br />
61. <b><span style="color: red;">மீண்டும் மீண்டும் பவானிசிங் வாய்தா கேட்ட போது நீதிபதி அவர்கள் "இது நீதிமன்றமா? வாய்தா மன்றமா?" என கோபமாக கேட்டார். பின்னர் ஜனவரி 20, 2014 அன்று ஜெயா தரப்பு கைப்பற்ற பொருட்கள் பட்டியல் வேண்டும் என கேட்டு ஒரு மனு செய்தது. அதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.</span></b><br />
<br />
<br />
<br />
62. பின்னர் வழக்கறிஞர்களின் இறுதி வாதம் பிப்ரவரி 3ம் தேதி முதல் நடைபெறும் எனவும், முதலில் அரசு தரப்பு பவானிசிங் அதன் பின்னர் ஜெயா தரப்பு வாதம் என்றும் இது தினம் தோறும் நடக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவு என்றும் கண்டிப்பாக சொன்னார் நீதிபதி அவர்கள்.<br />
<br />
<br />
<br />
63. <b>பிப்ரவரி 3ம் தேதி இறுதி வாதம் தொடங்கினால் மே மாதம் 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தீர்ப்பு வெளியாகிவிடும் என்பதால் பயந்து போனது ஜெயா தரப்பு. உடனே தங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு வழக்கறிஞர் பவானிசிங் மூலமாகவே அதே பிப்ரவரி 2014ல் ஒரு புதிய மனு தாக்கல் செய்ய வைத்தது. அந்த புதியமனுவில் பவானிசிங் "17 வருடம் முன்பாக ஜெயாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க, வைர, வைடூரிய நகைகளை நீதிபதி முன்பாக சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து கொண்டு வந்து பார்வையிட செய்ய வேண்டும் என முன்பு பேராசிரியர் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார் அல்லவா? அந்த பட்டியலில் இருந்த வெள்ளி பொருட்களையும் 1,116 கிலோ அதாவது ஒரு டன்னுக்கும் மேலாக இருந்த வெள்ளி பொருட்களையும் இங்கே கொண்டு வர வேண்டும் என மனு தாக்கல் செய்தார். கொஞ்சம் மேலே சென்று (17 வருஷம் மேலே போக வேண்டாம். பாயிண்ட் # 15க்கு போகவும்) படியுங்கள். அந்த வெள்ளி பொருட்களை அரசு கைப்பற்றவே இல்லை. ஜெயாவின் பிரதிநிதிகளான ஜெயராமன், விஜயன் ஆகியோரிடம் ஒப்படைத்தாகி அவைகள் போயஸ்கார்டனுக்கு போய் விட்டாகியது. அதை த்தான் மீண்டும் இங்கே கொண்டு வர வேண்டும் என பவானிசிங் மனு தாக்கல் செய்தார். மேலும் அந்த பிரதிநிதி பாஸ்கரன் என்பவர் இறந்தும் விட்டார்.</b><br />
<br />
<br />
<br />
64. <b>இத்தனைக்கும் பாஸ்கரன் இறந்து விட்டமைக்கான சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டும் அதை ஏற்காமல் பவானி சிங் பாஸ்கரன் தான் அந்த வெள்ளி பொருட்களை திரும்ப கொடுக்க வேண்டும் என கேட்டு காலம் தாழ்த்திக்கொண்டு இருந்தார். இதை விசாரித்து முடித்து அந்த மனுவை தள்ளுபடி செய்ய மைக்கேல் டி குன்ஹாவுக்கு ஒரு மாதம் பிடித்தது. ஆகவே இறுதி வாதம் என்பது பிப்ரவரி 3ல் ஆரம்பிக்க வேண்டியது<span style="color: red;"> மார்ச் 7,2014க்கு தள்ளி போனது. அந்த ஒரு மாத காலம் இழுத்தடிக்காமல் இருந்தால் வழக்கின் தீர்ப்பு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வந்து இன்றைக்கு 37 எம் பிக்களும் அதிமுகவில் வெற்றி பெற்றிருக்க முடியாது. எனவே இந்த 37 அதிமுக எம்பிக்களும் தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து கும்பிட வேண்டிய தெய்வம் திரு.பவானிசிங் அவர்களே!</span></b><br />
<b><br /></b>
<br />
<br />
65. மீண்டும் மார்ச் 7,2014 அன்று இறுதி வாதம் செய்ய வேண்டிய பவானி சிங் நீதிமன்றத்துக்கு வரவே இல்லை. மீண்டும்10ம் தேதி ஒத்திவைப்பு, அப்போதும் பவானி சிங் வரவில்லை. மீண்டும் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு. பின்னர் 14ம் தேதி வந்த பவானிசிங் தனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் 10 நாட்கள் வாய்தா வேண்டும் என கேட்க நீதிபதி மிகவும் எரிச்சலடைந்து பவானிசிங்கின் ஒரு நாள் ஊதியமான 65,000 ரூபாயை அபராதமாக விதித்தார். மீண்டும் 15ம் தேதியும் பவானிசிங் ஆஜராகவில்லை. அதனால் அன்றைக்கும் 65,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டது.<br />
<br />
<br />
<br />
66. சரி என்று நீதிபதி ஜெயா தரப்பு வக்கீலை இறுதி வாதத்துக்கு அழைக்க அவர்களோ "முதலில் அரசு வழக்கறிஞர், பின்னர் தான் நாங்கள் வாதிடுவோம்" என மறுத்து விட்டனர். பின்னர் மீண்டும் ஒத்திவைப்பு.<br />
<br />
<br />
<br />
67. அதன் பின்னர் சிறப்பு நீதிமன்றம் தனக்கு விதித்த அபராதம் 1 லட்சத்தி 30 ஆயிரம் ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டும் என பவானிசிங் கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றார். அங்கே வேலைக்கு ஆகவில்லை என உச்சநீதிமன்றம் சென்றார். அங்கே தனக்காக வாதாட நாகேந்திர ராவ் என்ற ஒரு "சிட்டிங்" வாதாட பல லட்சம் வாங்கும் மூத்த வழக்கறிஞரை நியமித்து வாதாடினார். அந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி பி. எஸ்.சவுகான். இவர்தான் ஜெயா தரப்பு "எங்களுக்கு எதிராக பவானிசிங் தான் வாதாட வேண்டும்" என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது அந்த விசித்திர வழக்கை விசாரித்து "சரி பவானிசிங்கே நடத்தட்டும். பாவம் குற்றவாளிகள் ஆசைபடுகின்றார்கள். அதனால் பவானிசிங்கே நடத்தட்டும்" என்கிற ரீதியில் தீர்ப்பு அளித்தவர் ஆவார். பவானிசிங் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மூன்று வாரங்கள் (21 நாட்கள்) வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.வழக்கோ அபராதம் நீக்கப்பட வேண்டும் என்று. ஆனால் தீர்ப்போ "பவானிசிங் உடல் நிலை சரியில்லை எனவே மூன்று வாரம் ஒத்தி வைப்பு என்று. இந்த கொடுமை எங்காவது நடக்குமா? இங்கே நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலையில் அடித்து கொள்ளாத குறை தான். எந்த உச்சநீதிமன்றம் இவருக்கு "தினமும் இந்த வழக்கை நடத்தி விரைவில் தீர்ப்பு சொல்ல வேண்டும் என சொன்னதோ அதே உச்சநீதிமன்ற பென்ச் 3 வாரம் தடை விதித்து ஜெயாவை நாடாளுமன்ற தேர்தல் வரை காப்பாற்ற நினைக்கின்றது.<br />
<br />
<br />
<br />
68. பின்னர் உச்ச நீதிமன்றத்திலேயே விசாரணை. இருவர் பென்ச். யார் தெரியுமா நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் ஜே.செல்லமேஸ்வரன் அடங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்.<br />
அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயையும் குறைத்து 20 ஆயிரம் மட்டும் அபராதம் எனவும் தீர்ப்பு வழங்கினர். தவிர "<b><span style="color: red;">அம்மா செத்துட்டாங்க, ஆயா செத்துட்டாங்கன்னு ஆஜராகாமல் இருக்க கூடாது" என தீப்பளித்து உத்தரவிட்டனர்.</span></b><br />
<br />
<br />
<br />
69. 21.3.2014 முதல் பவானிசிங் தன் இறுதி வாதத்தை வேறு வழி இல்லாமல் தொடங்கினார். கிட்ட தட்ட 65 கோடி அளவுக்கு இருந்த இந்த சொத்து குவிப்பு வழக்கு என்பது இந்த 18 வருடத்தில் 5000 கோடிக்கு உயந்து விட்டது. அதை நீதிமன்றம் மட்டுமல்ல இந்திய தேசமே ஒரு வித பயத்துடன் பார்த்தது. இதையே தன் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் சுட்டி காட்டி விளக்கி பேசினார்.<br />
<br />
<br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">70. ஜெயா வாங்கி குவித்துள்ள சொத்துகள் பட்டியல் என்பது மிக மிக மிக அதிகம். அதில் சில்வற்றை மட்டும் இங்கே தருகின்றேன். (இது நான் சொன்னது இல்லை. பவானிசிங் - அரசு வழக்கறிஞர் கொடுத்த பட்டியலில் சில மட்டும்) சென்னை- வாலாஜாபாத்தில் 600 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கர் பரப்பளவில் பங்களா, நீலாங்கரையில் 2 ஏக்கர் பங்களா, கொடநாட்டில் (ஊட்டி)800 ஏக்கர் மற்றும் அதன் உள்ளே பங்களாக்கல்,காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்யாகுமரியில் மீர்குளம்,சிவரங்குளம்,வெள்ளங்குளம் பகுதியில் 1,190 ஏக்கர்கள், தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர், ரிவர்வே அக்ரோ ஃபார்ம் பெயரில் 100 ஏக்கர், 30 கலர்களில் கார்கள் மற்றும் ட்ராக்டர்கள், ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், 32 புதிய கம்பனிகள், அந்த கம்பனிகள் பெயரில் பல சொத்துகள்,தவிர தங்கம், வைரம், வைடூரியம், வெள்ளி, கைக்கடிகாரங்கள், பட்டு புடவைகள் (இவைகள் பல கோடி மதிப்பு) இப்படியாக 306 இடங்களில் அசையா சொத்துகள் தமிழகம் மற்றும் ஆந்திராவில்......... ஆக மொத்தம் சுமார் 5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதை நீதிமன்றத்தில் தக்க ஆதாரங்களுடன் அரசு வழக்கறிஞர் பட்டியலிட்டார்.</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<br />
<br />
71. இப்படியாக மார்ச் மாதம் 2014ல் வழக்கு போய்கொண்டு இருந்த போதே லெக்ஸ் ப்ராபர்டி என்னும் ஜெயாவின் கம்பனி சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு புதிய வழக்கு தொடுத்தது. (அடுத்த தடை?) "எங்கள் கம்பனி சொத்துகளை ஜெயாவின் சொத்தாக காட்டப்பட்டுள்ளது. எனவே அதை விடுவிக்க வேண்டும். அந்த விசாரணை முடியும் வரை மூல வழக்கை விசாரிக்காமல் தடை விதிக்க வேண்டும்" (அதான பார்த்தேன்) என புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.<br />
<br />
<br />
<br />
72. நீதிபதி குன்ஹா உங்கள் வழக்கையும் விசாரிக்கிறேன். ஆனால் மூல வழக்குக்கு தடை என்பதை ஏற்க முடியாது. அந்த விசாரணை கண்டிப்பாக தனியே நடக்கும் என கூறி அதை தள்ளுபடி செய்தார்.மேலும் நீதிமன்றத்தில் வழக்கை இழுத்தடிக்க முயன்ற காரணத்தால் லெக்ஸ் ப்ராபர்டி கம்பனிக்கு 10,000 அபராதம் விதித்தார். இது நடந்தது மார்ச் 14, 2014 அன்று.<br />
<br />
<br />
<br />
73. <b><span style="color: red;">உடனே லெக்ஸ்ப்ராபர்டி கம்பனி இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றது. அங்கே நீதிபதி சத்யநாராயணா ஒரு சிறந்த தீர்ப்பை வழங்கினார். "சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராதம் மிகவும் குறைவு. எனவே அதை பத்து மடங்கு உயர்த்தி ஒரு லட்சம் ஆக 15 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்றார். (எத்தனை செருப்படிகள்???)</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<br />
<br />
74. ஆனால் லெக்ஸ் ப்ராபர்டி கம்பனி இதை தூக்கி கொண்டு உச்சநீதிமன்றம் சென்றது. அங்கே நம் செல்ல நீதிபதி அதாவது பவானிசிங் இருக்கட்டும் என ஜெயாவுக்கு ஆதரவாக தீர்ப்பு சொன்ன சவுகான் இருந்தார். அவரும் லெக்ஸ்ப்ராபர்டிக்கு (அந்த பென்சில் செல்லமேஷ்வரன், இக்பால் ஆகியோரும் இருந்தனர்) எச்சரிக்கை செய்து தள்ளுபடி செய்தனர்.<br />
<br />
<br />
<br />
75. இதே போல மெடோ அக்ரோ ஃபார்ம், ரிவர்வே அக்ரோ ஃபார்ம் ஆகிய கம்பனிகளும் தனி தனியாக மூல வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு பரிசாக "அபராதம்" பெற்றனர்.<br />
<br />
<br />
<br />
76. அடுத்த அஸ்திரமாக சசி, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்கள் சொத்து முடக்கி வைத்ததை எதிர்த்து (இந்த 18 ஆண்டுக்கு பின்னர் வழக்கு முடியும் தருவாயில்) புதிய மனு செய்து வழக்கை இழுக்க பார்த்தனர். இப்போது நீதிபதி டி குன்ஹாவே கிட்ட தட்ட வக்கீல் போல சில பல கேள்விகளை கேட்க எல்லோரும் வாயடைத்து போயினர். பின்னர் 2500 பக்கங்கள் கொண்ட தொகுப்பை பவானி சிங் தன் இறுதி வாதமாக வைத்து ஒரு வழியாக முடித்தார்.<br />
<br />
<br />
<br />
77.பின்னர் உச்சநீதிமன்றமும் லெக்ஸ் ப்ராபர்டி சொத்துகள் ஜெயாவின் சொத்துகளே என தீர்ப்பளித்தது. இது நடந்தது 13.05.2014.<br />
<br />
<br />
<br />
78. பின்னர் டி எஸ் பி சம்பந்தம் சாட்சியில் மறைத்த விவகாரங்கள் பின்னர் டி.குன்ஹா, பின்னர் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எல்.நாராயணசாமி, பின்னர் விடுமுறை கால நீதிபதி ஆனந்த பையா ரெட்டி ஆகியோர்கள் மிக மிக கடுமையாக அதிமுக அரசின் டி எஸ் பி சம்பந்தம் மற்றும் அவரது குழுவினரை (ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு) கண்டித்து "உங்களின் இது போன்ற செயல்கள் உங்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும் போது பாதிப்பை உங்களுக்கு உண்டாக்கும்" என எச்சரித்தனர்.<br />
<br />
<br />
<br />
79. <b><span style="color: red;">25.05.2014 அன்று ஜெயா வக்கீலில் தாயார் இறந்து விட்டதால் அன்றைக்கு சசி வக்கீலை பார்த்து வாதம் செய்யுங்கள் என நீதிபதி அழைக்க அவர்கள் "ஜெயா வக்கீல் முடித்த பின்னர் தான் நாங்கள் ஆரம்பிபோம்" என அடம் பிடிக்க நீதிபதி 3000 ரூபாய் அபராதம் விதித்தார்.</span></b><br />
<br />
<br />
<br />
<br />
80. இப்படியாக ஆகஸ்ட் மாதம் 10 தேதி வரை வரை எல்லா குற்றவாளி தரப்பும் வாதம் முடிந்த பின்னர் அரசு தரப்பு தொகுப்பு வாதம் 5 நாட்கள் பவானிசிங் நடத்தினார். அதன் பின்னர் ஜெயா தரப்பு தொகுப்பு வாதம் முடிந்தது. அப்போது கூட அடுத்த குற்றவாளிகள் தொகுப்பு வாதம் செய்ய இழுக்கடித்தனர். ஒரு வழியாக நீதிபதி நீங்கள் தொகுத்து வழங்காவிட்டால் நான் அதை கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பு தேதியை அறிவிப்பேன் என எச்சரித்தார்.<br />
<br />
<br />
<br />
81. <b><span style="color: red;"><u>அதன் பின்னர் ஆகஸ்ட் 28, 2014 அன்று எல்லாம் முடிந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு. மைக்கேல் டி குன்ஹா அவர்கள் எதிர்வரும் "இந்த வழக்கின் வாத பிரதிவாதம் , பின்னர் தொகுப்பு வாதம் எல்லாம் முடிந்தது. பொதுவாக 2 வாரத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால் நான் இன்னும் சில ஆவணங்களை படிக்க வேண்டி இருப்பதால் எனக்கு முழுமையாக 3 வாரங்கள் தேவைப்படுகின்றது. எனவே இந்த வழக்கின் தீர்ப்பை நான் எதிர்வரும் 20ம் தேதி, செப்டம்பர் மாதம் 2014 அன்று வழங்க இருக்கின்றேன். எனவே வழக்கில் சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளியான ஜெ.ஜெயலலிதா, இரண்டாம் குற்றவாளியான சசிகலா, மூன்றாம் குற்றவாளி வி.என்.சுதாகரன் மற்றும் நான்காம் குற்றவாளியான இளவரசி ஆகியோர் கண்டிப்பாக அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்" என முடித்துள்ளார்.</u></span></b><br />
<b><span style="color: red;"><u><br /></u></span></b>
<br />
<br />
********************************<br />
<br />
<br />
<br />
<b>ஆக ஜூன் 14, 1996ல் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கானது அங்கிருந்து பயணப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் சென்று அங்கிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்து அங்கிருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சென்று அங்கிருந்து கர்நாடக உயர்நீதிமன்றம், பின்னர் உச்சநீதிமன்றம் மீண்டும் கர்நாடக உயர்நீதிமன்றம், மீண்டும் பெங்களூரு பரப்பன அக்கிரஹாரம் சிறப்பு நீதிமன்றம்... என ஒரு பெரிய சுற்று சுற்றி வந்துள்ளது இந்த வழக்கு. பல நீதிபதிகள் இந்த வழக்கை பார்த்து விட்டனர். பல அரசு வழக்கறிஞர்கள் இதில் உள்ளே நுழைந்து வெளியே வந்து விட்டனர். வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் இறந்தும் விட்டனர். இன்னும் சொல்லப்போனால் முதன் முதலாக இந்த சொத்து குவிப்பு விஷயத்தை ஆளுனரிடம் போய் புகாராக கொடுத்த திமுக பெரும் தலைகளில் அய்யா முரசொலி மாறன், நாஞ்சிலார் ...அத்தனை ஏன் ஆளுனராக இருந்த டாக்டர் .சென்னா ரெட்டி ஆகியோர் கூட மறைந்து விட்டனர். 66 கோடியாக இருந்த சொத்து குவிப்பு வழக்கு என்பது இப்போது 5000 கோடியாக மாபெரும் வளர்ச்சி பெற்று விட்டது. 1991-1996 ல் நடந்த இந்த குற்றம் காரணமாக போடப்பட்ட இந்த வழக்கு இடையே இரண்டு முறை திமுக ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகளை கடந்து விட்டது. அதே போல குற்றவாளி தரப்பும் இரண்டு முறை எட்டாண்டுகாலம் ஆட்சிக்கு வந்து விட்டது. நடுவே பத்தாண்டுகாலம் வழக்கு தொடுத்த திமுக மத்தியில் கூட ஆட்சி அதிகாரத்தில் இருந்து விட்டது. இத்தனை மாற்றங்கள் இருப்பினும் "வாய்தா" என்பது மட்டுமே மாறாத ஒன்றாக இருந்தது இந்த வழக்கில். </b><br />
<br />
<br />
<br />
கலைஞரின் இந்த புத்தகம் "சொத்து குவிப்பு வழக்கு - ஒரு தொடர்கதை" என்னும் இந்த புத்தகம் சுமார் எட்டு நாட்கள் (2014 பாராளுமன்ற தேர்தலுக்கும் ஓட்டு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட காலத்தில் ) முரசொலியில் கலைஞர் உடன்பிறப்புக்கு எழுதிய கடிதங்களே ஆகும். அதையே திராவிட முன்னேற்ற கழகம் புத்தக வடிவில் வெளியிட்டுள்ளது.<br />
<br />
<br />
<br />
<b><span style="color: red;">இந்த புத்தகத்தை இந்திய தண்டனை சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு (B.L., M.L.,) பாடமாக வைக்கக்கூடிய அனைத்து தகுதிகளையும் கொண்டது. ஒரு வழக்கில் எந்த எந்த விதத்தில் வாய்தா வாங்க சட்டத்தில் இடம் உண்டு என்பதையும், அதே நேரத்தில் எப்படி எல்லாம் சில நீதிபதிகள் சட்ட விரோதமாக நடந்து கொள்ள கூடாது என்பது பற்றியும் போதிக்கின்றன. அதே போல 18 ஆண்டுகள் ஒரு வழக்கை குற்றவாளிகள் எப்படி எல்லாம் சட்டத்தின் ஓட்டையில் புகுந்து தப்பிக்கின்றனர் என்பதையும் சுட்டி காட்டுகின்றது. எனவே இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு சட்டத்தின் ஓட்டைகளை சரி செய்யும் நிபுணர்கள் கொண்டு இனி இப்படி ஒரு தவறு இந்திய சட்ட விதிகளில் இருக்க கூடாது என நினைத்து அதை சரி செய்யவும் கூட இந்த புத்தகம் பயன் படும்..பயன்பட வேண்டும். 91 வயதில் ஒருவர் ஒரே ஒரு வழக்கை மையமாக கொண்டு ஒரு ஆராய்ச்சியே செய்து முடித்து ஆய்வு கட்டுரை (தீசிஸ் சப்மிட்) சமர்பித்துள்ளது போல இருக்கின்றது இந்த புத்தகம். இந்த ஒரு காரணத்துக்காகவே நம் தமிழக அம்பேத்கார் சட்ட பல்கலைகழகம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு "டாக்டர்" பட்டம் வழங்க வேண்டும். </span></b><br />
<br />
<br />
<br />
இந்த 18 வருடங்களில் எத்தனை எத்தனை நிகழ்வுகள் இந்த ஒரே வழக்கில் நடந்துள்ளன என்பதை விட இந்த வழக்கின் தீர்ப்புக்கு இன்னும் முழுமையாக 20 நாட்கள் இருக்கும் நிலையில் இந்த வழக்கு இன்னும் எத்தனை தடைகளை தாண்ட வேண்டி இருக்குமோ என அஞ்சவும் தோன்றுகின்றது. இதை எல்லாம் மீறி செப்டம்பர் 20, 2014 அன்று தீர்ப்பு வெளிவர வேண்டும். அதுவும் நல்ல தீர்ப்பாக,நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்ப்பாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என நேற்று 30.08.2014ல் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதும் நியாபகம் வருகின்றது. அதே போல இந்த வழக்கு ஒரு தாய் வழக்கு தான். இதன் தீர்ப்புக்கு பின்னர் இந்த வழக்கு போடபோகும் குட்டி வழக்குகள் எத்தனை எத்தனை வரும் தெரியுமா? இன்னும் சொல்லப்போனால் இப்போது திமுகவினர் மீது "சொத்து அபகரிப்பு, நில அபகரிப்பு" வழக்குகள் பொய்யாக போடப்படுகின்றதே... அப்படி இல்லாமல் உண்மையான நில அபகரிப்பு, சொத்து அபகரிப்பு வழக்குகள் கொடநாடு எஸ்டேட்டை அடிமாட்டு விலைக்கு விற்ற(மிரட்டி பிடுங்கிய) ஆங்கிலேயர் முதல் இசை அமைப்பாளர் கங்கை அமரன் வரை வரிசை கட்டி நிற்கப்போகின்றனர். அதே போல ஆள் கடத்தல், மிரட்டுதல் என வரிசை கட்டி வரப்போகின்றன இப்போது உள்துறையை தன்னிடம் வைத்து கொண்டு இருக்கும் முதல்வர் மீது. சட்டம் என்ன செய்ய போகின்றது என பார்ப்போம்!<br />
<br />
<br />
<br />
<span style="color: red; font-size: large;"><b><u><i>நீதி வெல்லட்டும்! நியாயம் பிறக்கட்டும்!! </i></u></b></span><br />
<u><i><br /></i></u>
<br />
<br />
புத்தகத்தின் பெயர்: "சொத்து குவிப்பு வழக்கு - ஒரு தொடர்கதை"<br />
ஆசிரியர்: டாக்டர் கலைஞர். மு.கருணாநிதி<br />
வெளியீடு: திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா அறிவாலயம், 367&369, அண்ணா சாலை, சென்னை - 600 018<br />
விலை: 50 ரூபாய்<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2A6FUagfZIEZnBiM6xjJUlTk076R-vrrLiI2FyOpuOZHFux7jBPJVNDlLJLL3t6o8soibO4kKGp9HEZxPW9hwRFxXxmwmrRGvz3C5TROomCiDNP1QevbJyoySFETmRRvHUbYXn212uqY/s1600/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="398" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2A6FUagfZIEZnBiM6xjJUlTk076R-vrrLiI2FyOpuOZHFux7jBPJVNDlLJLL3t6o8soibO4kKGp9HEZxPW9hwRFxXxmwmrRGvz3C5TROomCiDNP1QevbJyoySFETmRRvHUbYXn212uqY/s1600/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கும் நல்ல தலைவர்கள்!</td></tr>
</tbody></table>
<br />
<br />அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16920352341543619382014-06-19T12:14:00.000+05:302014-06-19T12:14:38.324+05:30கேபிள் சங்கரின் "தொட்டால் தொடரும்" படத்தின் "பாஸு பாஸு" பாடல் விமர்சனம்!!!<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/RNHks79qB58?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
<br />
<br />
<span style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">இது எங்கள் இனிய நண்பர் கேபிள் சங்கர் அவர்கள் இப்போது இயக்கி வரும் "தொட்டால் தொடரும்" சினிமாவின் பாடல் ப்ரமோ வீடியோவின் சின்ன விமர்சனம். நண்பர்களே தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பாருங்கள். இப்</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">போது இந்த பட்டை கேளுங்கள். உங்கள் அன்பான ஆதரவை தாருங்கள் இந்த படத்துக்கு!<br /><br />*****************<br /><br />பாட்டை கேட்டேன் கேபிள்ஜி! பாட்டு மட்டும் ஓடிகிட்டு இருக்கு. ஆனால் மனசு மட்டும் எங்கோ பறந்து கிட்டு இருக்கு. இந்த சினிமா உலகில் ஜெயிக்க நீங்க நடத்திய போராட்டம், உழைப்பு, அர்ப்பணிப்புகள், இழப்புகள், வேதனைகள், உங்களை சினிமாவுக்கு நேர்ந்து விட்டு ஒத்துழைப்பு கொடுத்த உங்கள் குடும்பம், நீங்க சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்கிற உங்க அப்பாவின் ஆசைகள், இன்று இதை பார்க்க அப்பா இல்லியே என்னும் வருத்தம் இன்னும் எத்தனையோ எத்தனையோ மனசுல ஓடுது கேபிள்ஜி! உங்களின் இந்த முதல் இயக்குனர் ஆகும் இந்த தருணம் என்னால் விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டது என்றே நினைக்கிறேன். ஏனனில் "பிடிக்குது... நல்லா இருக்கு... ஆஹா... ஓஹோ... சூப்பர்" என மனதில் முன்முடிவோடுத்தான் பாட்டை பார்த்தேன்.... அதனால் மட்டுமல்ல .... உண்மையாகவே பாட்டு பிடிச்சிருக்கு.... பாடல்களும் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தியேட்டரில் அதன் 100வது நாளில் நாங்கள் தியேட்டர் டிக்கெட் கிழிப்பவரிடம் "கேபிள்ஜி எங்க நண்பர் தான் தெரியுமா" என பெருமை அடித்துக்கொள்ள வேண்டும். அதைக்கேட்ட அந்த டிக்கெட் கிழிப்பவர் "எனக்கு கூடத்தான் சிவாஜி கணேசன் நண்பர்... பேசாம போய்யா படம் பார்க்க உள்ளே"ன்னு சலிச்சுக்கனும்.... நடக்கும் கேபிள்ஜி... இப்படி நடக்க வேண்டும்! என் அன்பான வாழ்த்துக்கள்!</span>அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9790586608758980392014-06-01T15:57:00.000+05:302014-06-01T15:57:26.730+05:30அரை மணி நேரத்தில் "உலக கோப்பை கால்பந்து வெறியன்" ஆவது எப்படி?<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFFbeGw8yfG9k7SqO3iBiSDp9zWmEWhvAcxLMgWm4tSt9VmNw-seF0BlqWXBir2ugjneTEXg19CpoKxFWoJff0YyUI4mDR06dBRHjrvucAIeQGvPIcBdeUiENIqAunnsWlI1TtUXNwVvE/s1600/images+(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFFbeGw8yfG9k7SqO3iBiSDp9zWmEWhvAcxLMgWm4tSt9VmNw-seF0BlqWXBir2ugjneTEXg19CpoKxFWoJff0YyUI4mDR06dBRHjrvucAIeQGvPIcBdeUiENIqAunnsWlI1TtUXNwVvE/s1600/images+(1).jpg" height="358" width="640" /></a></div>
<br />
தேர்தலும் முடிந்து விட்டது. ஐ பி எல் இன்றோடு முடிந்து விட்டது. இனி இணையத்தில் மொக்கை போடுவோர் சங்கம் என்ன ஆவது? அய்யகோ.. அப்படி ஒரு நிலையினை எப்படி இணையம் எதிர்கொள்ள போகின்றது என்ற மாபெரும் கவலையில் கன்னத்தில் கை வைத்து உட்காந்து இருக்கும் இணைய பொங்கல் வைப்போர்களுக்கான பிரத்யேகமான பயிற்சி வகுப்பு இது. இதோ இன்னும் பத்து நாளில் உலக கால்பந்து போட்டி நடக்க இருக்கின்றது. வாருங்கள்.. அங்கே போவோம். என்னது கால்பந்து பத்தி எதுவும் தெரியாதா?? அப்படியானால் உங்களுக்காகவே இந்த ஸ்பெஷல் கிளாஸ். கிரிக்கெட் தெரிந்த அளவு நமக்கு கால்பந்து தெரியாவிட்டாலும் நாமும் ஜோதியில் ஐக்கியம் ஆக வேண்டாமா? வாங்க வகுப்புக்கு போவோம்!<br />
<br />
<br />
முதலில் உங்களுக்கு என்று ஒரு கால்பந்து கடவுளை தெர்ந்தெடுத்துக்கொள்ள வெண்டும். கிரிக்கெட் எனில் "சச்சின்" கடவுள் என்பது போல கால்பந்துக்கு "பீலே" தான் கடவுள் என பலரும் கொண்டாடி வருகின்றனர். உடனே நீங்களும் "பீலெ" வை கொண்டாடிவிடாதீர்கள். பின்னர் நீங்கள் பத்தோடு பதினொன்று ஆகிவிடும் அபாயம் உள்ளது. பீலே விளையாடிய காலத்தில் விளையாடிய வேறு ஏதாவது பெயர் தெரிவு செய்து கொள்ளவும். உடனெ கார்த்திகை நிலவன், சரவண குமார் போன்ற பெயர்கள் வேண்டாம். ஃபாரின் பெயராய் இருப்பது உத்தமம். உதாரணத்துக்கு "புரூனோ மார்க்கஸிண்டஸ்"... இது எப்படி அக்மார்க் ஃபாரின் பெயராய் இருக்குதா... ஓக்கே.... அதுக்காக ராயபுரம் பீட்டர் வேண்டாம். பின்னே கோர்டுக்கு எல்லாம் அலைய வேண்டி இருக்கும். சரி.... புரூனோ மார்க்கஸிண்டஸ் அடிச்ச கோல் சுமார் 400 என பீலா விடுங்கள். அதுவும் ஒரே கேம்ல அடிச்சார்ன்னு சொல்லுங்க.கிரிக்கெட் லாரா ரசிகர்கள் கூட வாயடைச்சு போவான்... முதல் அடியே மரண அடியாக இருக்க வேண்டும்.<br />
<br />
<br />
அடுத்து ஒரு முக்கியமான "தியரம்" இருக்கு. அந்த தியரத்துக்கு என்ன பெயர் என பின்னர் சொல்கிறென். முதலில் தியரம் என்னவென்று பார்போம். இப்போ உலக கோப்பை கால்பந்துன்னு எடுத்து கிட்டா உடனெ அர்ஜண்டைனா, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரேசில்,இத்தாலி இவைகள் தான் ஜெயிச்சுகிட்டு வருது.... இந்த முறையும் அவைகளே ஜெயிக்கும் என பல பேர் இணையத்தில் எழுதுவாங்க. நீங்க அங்க தான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாரும் எதிர்பார்க்காத ஒரு நாட்டை சொல்லி அது தான் ஜெயிக்கும்ன்னு ஒரே பிடிவாதமாக விவாதம் செய்யவும். உடனே இந்தியா, இலங்கை, பங்களாதேன், நேப்பால்ன்னு உளற கூடாது. இன்னும் எட்டி ...இன்னும் எட்டி ....தூரதேசமா உங்க சிந்தனை போகனும். நம்ம ஊர்ல ஓட்டை போட்டா மெக்சிகோவுக்கு போகுமே அத்ததண்டி தூரமா மெக்ஸிகோ, உருகுவேன்னு எதுனா ஒரு நாட்டை எடுத்துக்கனும். உருகுவே தான் ஜெயிக்கும் என பந்தயம் கட்டுங்க. பந்தயப்பணம் கூட இந்திய ரூபாயில் கட்ட கூடாது. படீர்ன்னு 1000 இத்தாலியன் லிராஸ்ன்னு கட்டுங்க. எதிராளி பேதியாகிடுவான். (நீங்க பேதி ஆகிடாதீங்க. 1000 இத்தாலிய லிராஸ் என்பது இந்திய ரூபாய்க்கு சுமார் 200 , 300 ரூபாய் தான் ஆகும்... இல்லாட்டி ஈரான் கரன்சில கட்டுங்க, அது இன்னும் நல்லது - பாக்கெட்டுக்கு)<br />
<br />
<br />
<br />
உடனே நீங்கள் கேட்கலாம். அது ஏன் உருகுவேயை தேர்ந்தெடுத்தீங்கன்னு. காரணம் இருக்கு. இந்த தியரம் பேரே "தமிழருவி மணியன் தியரம்" தான். வெளங்காத எதுனா கட்சியை எல்லாம் கூட்டணி சேர்த்து இதான் ஆச்சியை பிடிக்கும், அத்தாச்சியை பிடிக்கும்னு சொன்னா நானூறு பேர் கழுவி ஊத்தினாலும் நாலு பேரு டிவி விவாதத்துக்கு கூப்பிடுவான். எக்குதப்பா ஜெய்ச்சுதுன்னா "நேக்கு கவர்னர் போஸ்ட்ன்னா ரொம்ப அலர்ஜியாக்கும்"ன்னு பேட்டி குடுக்கலாம். எனவே தான் இந்த தியரத்துக்கு பெயர் "தமிழருவி மணியன் தியரம்". இப்ப புரியுதா? சரி உருகுவே தான் ஜெயிக்கும் என முடிவு செஞ்ச பின்னே அந்த நாட்டிலே விளையாடும் எதுனா ஒரு ப்ளேயரை தேர்ந்தெடுத்துக்கனும். சரி இருங்க தேடி எடுப்போம்......<br />
<br />
<br />
<br />
எடுத்தாச்சு. பயபுள்ள பேரு லூயி சுவாரேஸ். ரொம்ப தேடவில்லை நான். கேப்டனையே எடுத்துகிட்டேன். கேப்டனாக இருப்பவன் எப்படியும் நல்லா ஆடித்தான் தொலைப்பான். முதல் வேலையா ஜூன் 12ம் தேதி முதல் நடக்க இருக்கும் போட்டிகளுக்கான டைம் டேபிள் பேப்பர் கட்டிங் எடுத்து அதை A3 சைஸ்ஸ்ல போட்டோ காப்பி எடுத்து உங்க ரூம்ல ஒட்டு வையுங்க. அதிலெ உருகுவே விளையாடும் போட்டி மெலெ எல்லோ ஹைலைட்டர் வச்சு பளிச் பண்ணுங்க. அது எந்த இந்திய நேரத்தில் வருதுன்னு சைடுல குறிச்சு வச்சுகுங்க. அதே போல லூயிசுவாரேன் படம் எதுனா கிடைச்சுதுன்னா பாருங்க. அந்த ப்ளோ-அப் பெருசா ரூம்ல, கதவிலே எல்லாம் ஒட்டுங்க. அதன் பக்கத்திலே நின்னு ஒரு போட்டோ எடுத்த் வாட்ஸ் அப்ல ஒரு 50 பேருக்கு தட்டி விடுங்க.<br />
<br />
<br />
<br />
அதிலே மிக முக்கியம் என்னான்னா "நான் கோவிலுக்கு போனேன், கக்கூஸ்க்கு போனேன்"ன்னு உயரிய பதிவுகள் போடும் அன்பர்களுக்கா பார்த்து அனுப்புங்க. மேட்டர் இல்லாம தவிக்கும் அவங்க உடனே நீங்க லூயி சுவாரேஸ் ப்ளோ-அப் பக்கத்தில் இருக்கும் போட்டோவை ஃபேஸ்புக்ல போடுவானுங்க. இது போதும்... பத்திக்கும். அப்படியும் பத்திக்கலையா உடனெ உங்க டைம்லைன்ல " சிரிச்சா கோணவாயாய்மாதிரி இருக்கும் ஒரு நண்பர் நான் என் ஆதர்சன கால்பந்து தெய்வம் லூயி சுவாரேஸ் கூட இருக்கும் புகைப்படத்தை தன் முகநூலில் பதிவிட்டுள்ளார். பதிவிடும் முன்னர் என்னிடம் பர்மிஷன் வாங்கனும் என்னும் அடிப்படை நாகரீகம் கூட தெரியவில்லை"ன்னு ஜாடையிலே போட்டு கிழிங்க. மறக்காம அந்த பதிவின் லிங் கொடுங்க. அப்புறம் என்ன சரவெடிதான்.... பை தி பை எப்போதும் உங்கள் லூயி சுவாரெஸை முழுப்பெயர் சொல்லி எழுதாதீங்க. செல்லமா லூ என்றோ லூயி என்றோ அல்லது சுவாரெஸ் என்றோ எழுதுங்க. நிச்சயம் அவரு பெயரில் எதுனா ஃபேஸ்புக், ட்விட்டர் பேஜ் இருக்கும். அதிலே அவரோட படம் இருக்கும். அதை காபி பேஸ்ட் அடிங்க. உங்க ப்ரொஃபைல் படமா அதை தினம் தினம் டிசைன் டிசைனா மாத்திகுங்க. "இதுவரை வெளிவராத லூயியின் படம்" என சொல்லி எதுனா படத்தை போடுங்க. அவ்ளோவ் தான்<br />
<br />
<br />
<br />
அடுத்த போட்டோ வெறும் ரெண்டு கால்கள் பந்தை உதைக்கும் மாதிரி கட் பண்ணி எடுத்துகுங்க ... பெரிசா லைவ் சைஸ்ல ... அந்த பந்து இருக்கும் இடத்தில் உங்க தலையை (அதே பந்து சைஸ்ல வெட்டி எடுத்துகுங்க. (உங்க போட்டோ தலை..நிஜ தலை இல்லை) அதை பந்துக்கு பதிலா ஒட்டி கீழே தத்து பித்துன்னு ஒரு கவிதை எழுதுங்க.<br />
<br />
<br />
<b><span style="background-color: cyan; color: red;">"லூயி சுவாரேஸ்! என் மூச்சே நீதான்</span></b><br />
<b><span style="background-color: cyan; color: red;"><br /></span></b>
<b><span style="background-color: cyan; color: red;">அடுத்த ஜென்மம் உன் கால் படும் பந்தாய் என் தலை ஆகட்டும்</span></b><br />
<b><span style="background-color: cyan; color: red;"><br /></span></b>
<b><span style="background-color: cyan; color: red;">ராமர் பாதம் பட்ட அகலிகைக்கும் </span></b><br />
<b><span style="background-color: cyan; color: red;"><br /></span></b>
<b><span style="background-color: cyan; color: red;">சரித்திரத்தில் இடம் உண்டு தானே"</span></b><br />
<br />
- இப்படிக்கு உன் வெறியன் என போட்டு உங்க பெயரை போடுங்க. அதை எடுத்து இணையத்தில் போட்டு லைக் அள்ளுங்க.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKB9e0xSTVOT7VYeTBK40_lweY4MhdkLasaFiLRUGbuYX_N8S1DRP1t8r6FWVcGjI3uhSz-RtnQljhFPl6aWfVgVNL-YFYqA2mNcS7hzEcg8-DMleB6xSedev2Kr97x4gszFD8zDC77wg/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKB9e0xSTVOT7VYeTBK40_lweY4MhdkLasaFiLRUGbuYX_N8S1DRP1t8r6FWVcGjI3uhSz-RtnQljhFPl6aWfVgVNL-YFYqA2mNcS7hzEcg8-DMleB6xSedev2Kr97x4gszFD8zDC77wg/s1600/images.jpg" height="398" width="640" /></a></div>
<br />
இப்ப இந்த சிலபஸ் கொஞ்சம் கஷ்டம். ஆனா இதையும் படிச்சுட்டா நீங்க தான் இந்த உலக கோப்பை முடியும் வரை இணையத்தில் ஹிரோ.<br />
அதாவது சுமார் ஒரு ஏழு அல்லது எட்டு நாடு... எது எதெல்லாம் கிட்ட தட்ட உலக கோப்பை வெல்லும்னு பேப்பர் எல்லாம் எழுதுதோ அந்த நாடுகளை எடுத்து அழகிய தமிழில் எழுதி வச்சுகிட்டு, அந்தந்த நாட்டில் எவன் நல்லா விளையாடுறானோ அவன் பெயர்களையும் எழுதி வச்சுகிட்டு மனப்பாடம் பண்ணிகுங்க.<br />
<br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">போர்சுகல் - கிருஸ்டியானோ ரொனால்டோ</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">அர்ஜண்டைனா - லியோனஸ் மெஸ்ஸி</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<br />
<b><span style="color: red;">இங்கிலாந்து - வெயின் ரூனி</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">பெல்ஜியம் - ஈடன் ஹசார்ட்</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">ஸ்பெயின் - ஆண்ட்ரே இனியஸ்டா</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">இத்தாலி - மரியோ பலோடோலி</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">பிரேசில் - நெய்மார்</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<br />
ஆச்சுதா... மேலே இருப்பதை மனப்பாடம் செய்வது மட்டுமே இந்த கோர்ஸ்ல கொஞ்சம் கஷ்டமான பாடம். இதை மட்டும் தயவு செஞ்சு படிச்சுடுங்க. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சுரை தும்பியை விட இது சுலபம் தான். சும்மா வருவாளா சுந்தரி!<br />
<br />
<br />
தட்ஸ் ஆல்...சிலபஸ் இத்தனையே. நீங்க பாஸ் செஞ்சாச்சு கால்பந்து வெறியன் கோர்ஸ்ல். இனி சொல்லக்கூடிய விஷயங்கள் எல்லாம் நீங்க அதிலே டிஸ்டிங்ஷன் வாங்குவதற்கான டிப்ஸ் தான்.<br />
<br />
<br />
போர்ச்சுகல் கிருஸ்டியானோ ரொனால்டோவுக்கு வயசு ஆகிடுச்சு. போன தயாவே கிழவன். முக்கி முக்கி தான் கோல் அடிச்சான். இவனை செலக்ட் செஞ்ச கேப்மாரி கைல கிடைச்சா கைமா போட்டுடுவேன்னு ஒரு நாள் ஒரு ஸ்டேடஸ்போடுங்க.<br />
<br />
<br />
ஒரு நாள் பெல்ஜியம் நாட்டு ஈடன் ஹசார்ட் கொடும்பாவியை கொளுத்துவேன்னு பயம் காட்டி ஒரு ஸ்டேடஸ் அடிச்சு விடுங்க.<br />
<br />
<br />
மரியா பலோடோலிக்கும் இங்கிலாந்து கவர்ச்சி நடிகைக்கும் கெட்ட சகவாசம்னு கிழிச்சு போடுங்க.<br />
<br />
<br />
உருகுவே மேட்ச் நடக்கும் அன்று அந்த நேரத்தை குறிப்பிட்டு உங்க ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாத்திலயும் "நண்பர்கள் தயவு செய்து இன்று நள்ளிரவு 1.45 முதல் 2.45 வரை தொலைபேசி மற்றும் ச்சேட்டிங்ல வர வேண்டாம்"ன்னு பதிவு போடுங்க. (ஊக்கூம் பகல்லயே கூப்பிட ஆள் இல்லை... இந்த லெட்சனத்துல இரவு ஒன்னே முக்காலுக்கு எவன் கூப்பிடப் போறான்). உணர்ச்சி வசப்பட்டு அந்த நேரத்தில் எவனுக்காவது போன் செஞ்சு "நான் பிசியா இருக்கேன்"ன்னு சொல்லி போனை வச்சிடாதீங்க. செம கடுப்பாகிவானுங்க.<br />
<br />
<br />
இங்கிலாந்தின் வெயின் ரூனிக்கு துபாய் நாட்டிலே பால்ம் ஐலேண்ட்ல 200 கோடி ரூவாய்க்கு வில்லா இருக்கு, இது எவன் அப்பன் வீட்டு சொத்து? அது சம்பாதிச்சு வாங்கினதா அல்லது சேம் சைடு கோல் அடிக்க வாங்கிய கையூட்டான்னு ஒரு நாள் விடிகாலையிலேயே பரபரப்பா ஒரு பதிவு போட்டு கலக்குங்க. படிக்கிறவன் பைத்தியமா அலையனும்!<br />
<br />
<br />
பிரேசிலின் நெய்மாரே முடிஞ்சா என் தலைவன் லூயி சுவாரேஸ்க்கு எதிரா ஒரு கோல் போடுடா. நான் மவுண்ட் ரோட்டிலே முண்டமா ஓடுறேன்னு சவால் விடுங்க. (அந்த கொடுமைக்கு பயந்தே கூட நெய்மார் உங்க ஆளுக்கு எதிரா கோல் என்ன உச்சா கூட அடிக்க மாட்டான்)<br />
<br />
<br />
ஆச்சுது... ஒரு மாசம் இப்படியாக உலககோப்பை கால்பந்து முடிஞ்சதும் ஒரு வேளை உருகுவே ஜெயிச்சுதுன்னா "நான் அப்பவே சொன்னேன். நான் சொன்னப்ப ஒரு பயலும் ஒத்துக்கலை. மழை பெய்யுது மழை பெய்யுதுன்னு சொன்னா சொன்னவனை பைத்தியக்காரன்னு சொன்னீங்க. இப்ப என்னாச்சு? விளையாட்டை ரசிக்கனும்... அதிலே என் தலைவன் கால் அசைவு ஒவ்வொன்னுத்தையும் அனு அனுவா பார்க்கனும். அப்ப தெரியும் அதன் லாவகம். சும்மாங்காட்டியும் பேப்பர்காரன் எழுதினதை வச்சுகிட்டு பெனாத்த கூடாதுக்கு.இந்த வெற்றியை என் ஃபுட்பால் கடவுள் புரூனோ மார்கண்டீஸ் அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்" என்கிற ரீதியில் பதிவு போடனும்.<br />
<br />
<br />
ஒரு வேளை உருகுவே தோத்து போச்சுதுன்னா உங்க கிட்டே எவனும் கேட்க மாட்டான். அப்படியே "உருகுவே ஏன் தோத்துச்சு"ன்னு கேட்டா தலைவர் கலைஞர் பாணியில் "கோல் அடிக்கலை. அதனால் வெற்றி வாய்பை இழந்தது" ன்னு சிம்பிளா சொல்லிகிட்டு போய்கிட்டே இருங்க. இல்லாட்டி கிரவுண்ட் சப்போர்ட் எங்களுக்கு இல்லை. கிரவுண்டில் இருந்த எல்லாருக்கும் தலா 200 டாலர் கொடுத்து கத்த சொல்லி ஜெர்மனி ஆரியர்கள் ஜெயிச்சாங்கன்னு ஒரு பிட்டை போட்டு எஸ்கேப் ஆகிடலாம். அதுவும் இல்லாட்டி போட்டி நடத்தின நடுவர்கள் அவங்களுக்கு ஆதரவா இருந்தாங்க. நாங்க கிரவுண்டுக்கு வரும் போது ரோட்டிலே சிக்னல் போட்டு நிப்பாட்டி வச்சாங்க. அவங்க போகும் போது மஞ்சள் லைட் போட்டு அவங்களுக்கு ஆதரவா இருந்தாங்கன்னு சொல்லுங்க.<br />
<br />
<br />
<span style="color: red;"><b>ஆனால் இணைய உலக வரலாற்றில் நீங்கள் ஒரு "தீவிர கால்பந்து வெறியன்" என்பது மட்டும் நிலைத்து இருக்கும்! இதானே நமக்கு வேண்டும்!</b></span><br />
<span style="color: red;"><b>உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!</b></span><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpoi7xN3xccd_quRX6kZ-hHCCqd5E161sPD11P1KCirFrT8KW0bBzUzjLljO35ZdINpMhUq0GyIFCDIp7HlKafBcsh2QnWLO5fkmmim42-W03u6bBkik4mGZWFp9EMXUXBpEe3LQXZZTs/s1600/luis-suarez-best-wallpaper.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpoi7xN3xccd_quRX6kZ-hHCCqd5E161sPD11P1KCirFrT8KW0bBzUzjLljO35ZdINpMhUq0GyIFCDIp7HlKafBcsh2QnWLO5fkmmim42-W03u6bBkik4mGZWFp9EMXUXBpEe3LQXZZTs/s1600/luis-suarez-best-wallpaper.jpg" height="400" width="640" /></a></div>
<br />அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-82802464059874928052014-05-16T00:24:00.000+05:302014-05-16T00:24:17.438+05:30அவள் பெயர் "முருகேசி" !!!<div>
அவள் பெயர் "முருகேசி".அவளுக்கு அந்த பெயர் வைக்க"கவுண்டரை" தவிர எவ்வித சிறப்பு காரணமும் இல்லை. அவர் ஒரு படத்தில் ஒரு குழந்தைக்கு "இந்த உலகில் யாருக்கும் வைக்காத பெயர் வைக்கிறேன்" என சொல்லி விட்டு முருகேசன் என வைத்து விட்டு அது முருகேசியான காரணம் தான் அந்த பெயர் எனக்கு பிடித்தமைக்கான நிகழ்வு. ஆமாம்!!!! என் மடிக்கணினியின் பெயர் "முருகேசி"! அவள் எனக்கு வாழ்க்கைப்பட்டு வந்த போது நான் வைத்த பெயர் அவளுக்கு அதுதான். </div>
<div>
<br /></div>
<div>
சில நாட்கள் எனக்கு இணைய மற்றும் கணினி தொடர்பு இல்லை. என் மனைவி உட்பட பலருக்கு சந்தோஷம். சிலருக்கு ஆச்சர்யம். வெகு சிலருக்கு கேள்விக்குறி! ஆனால் யாருக்கும் வருத்தம் இருப்பதாக உண்மை விளம்பி நடுநிலை ஊடகங்களான தந்தி டிவி போன்றவை உலகுக்கு செப்பவில்லை. அதை விடுங்கள். காரணம் "முருகேசி"யின் மரணம்! அகால மரணம் எனில் வருந்தலாம். இது அப்படி இல்லை. வாழ்த்து செத்த புண்ணியவதி இந்த முருகேசி. கல்யாண சாவு என்பார்களே அப்படியான ஒரு சாவு!</div>
<div>
<br /></div>
<div>
நல்ல வேளை! தேர்தல் முடிந்தும் ஒரு நாள் வரை கூட முருகேசி உயிருடன் இருந்தாள். என் தேர்தல் கடமையை நிறைவேற்றிய பின்னர் தான் மரித்தாள்.மூளைச்சாவு. அதாவது "Hard disk crack" . இன்னும் சில உறுப்புகள் உயிருடன் இருப்பதாக சொல்லப்பட்டதால் அவள் சிகிச்சைக்கு போன மடிக்கணினி ரிப்பேர் இடத்தில் ஐ சி யூவில் இருக்கின்றாள். அதை எடுத்த பின்னர் எனக்கு மீண்டும் வந்ததும் அவள் மீது ஒரு கட்டி சூடம் வைத்து எரித்து ஈமக்கிரியை செய்து விடலாம் என இருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம். முருகேசி உருவான இடமான HP ஒரு நல்ல குடும்பம் என்பதை உணர்க!நல்ல குடும்பத்து பெண். எனனில் இந்த கடந்த 8 வருடங்கள் 24 மணி நேரமும் அது என்னிடம் உழைத்த உழைப்பு வேறு எந்த குடும்ப மடிக்கணினியும் செய்ய இயலாதது. </div>
<div>
<br /></div>
<div>
அவள் என்னிடம் இருந்த வரை அவள் எனக்கு சம்பாதித்து கொடுத்தது என பார்ப்பின் .......1.ஏகப்பட்ட நண்பர்கள். 2. அதை விட அதிகமாக எதிரிகள். எதிரிகளை விடுங்கள். இல்லாவிடில் உலகமே வெறுமை சூழ்ந்திருக்கும். நண்பர்கள்???.. அடடே அபாரம்... </div>
<div>
<br /></div>
<div>
இந்த முருகேசி என்னிடம் வந்து சேர்ந்த போது என் மகன் நட்ராஜ் பிறக்கவில்லை. அபி தான் அப்போது குழந்தை. அபியை வலது இடுப்பிலும், முருகேசியை இடது கையிலும் பிடித்துகொண்டு அண்ணாமலை பல்கலைகழக வளாகத்தில் மாலை நேரத்தில் பேராசிரியர்கள் குடியிருப்பை தாண்டி மைதானத்துக்கு வருவேன். அபியை விளையாட விட்டு விட்டு அங்கே மருத்துவ கல்லூரி போகும் சாலையில் இருக்கும் பல்கலைகழக ஊழியர் நூலகத்தில் இந்த முருகேசியுடன் நுழையும் போது அங்கே வேதியியல் பேராசிரியரும், பின்னர் நெல்லை சுந்தரனார் பல்கலை கழக துனை வேந்தரும், இப்போது அதை எல்லாம் விட பெரிய பதவியான "திமுக இளைஞர் அணி"க்கு திராவிட பாடம் எடுக்கும் ஆசானுமாக இருக்கும் அண்ணன் முனைவர் சபாபதி மோகன் வருவார்கள். அந்தி மயங்கும் மாலையில் ஆரம்பித்து இரவு ஆகி பின்னர் விரல் சூப்பும் அபியை சில மருத்துவ மாணவிகள் தூக்கி க்கொண்டு வந்து "அபிஅப்பா, இவளுக்கு பசி வந்துடுச்சு, போங்க போய் சாப்பாடுக்கு உங்க வீட்டிலே குழந்தையை கொடுங்க" என சொல்லி கொடுக்கும் போது பேராசிரியரிடம் " அண்ணே, நாளை தொடருவோம்" என மனசே இல்லாமல் பேச்சை முடித்து கொண்டு மீண்டும் அபியை வலது இடுப்பு,முருகேசியை இடது கை பிடிப்பு என வீட்டுக்கு போவேன். </div>
<div>
<br /></div>
<div>
துபாயில் நான் இருக்கும் போது என் அறையில் இரண்டு பேர். அந்த திருச்சி கார்த்திக்கு இரவு முழுக்க முழு வீச்சில் குளிர்சாதனம் வேலை செய்ய வேண்டும். எனக்கோ அது அலர்ஜி. அப்போது எனக்கு இந்த முருகேசி தான் முழுத்துணை. இனைப்பை கொடுத்து விட்டு காலில் தலையனை போல வைத்து கொண்டால் கதகதவென இருக்கும். இப்படி எல்லாம் அதை பயன்படுத்தியதை அவள் பிறந்த HP குடும்பம் அறிந்தால் என் மீது மான நஷ்ட வழக்கு போட முழு முகாந்திரம் உண்டு. </div>
<div>
<br /></div>
<div>
அது போல என் மகன் நட்ராஜ் பிறந்த பின்னர் நான் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் அவன் சிறுநீர் கழிக்க தவழ்ந்து வந்து உபயோகப்படுத்தும் சின்னம்மா இவள் தான். கிட்டத்தட்ட மூன்று முறை நான் அவளை அடித்து உதைத்துள்ளேன். ஏதோ கோபத்தில். அவள் ஜராசந்தன் போல வரம் வாங்கி வந்தமையால் எத்தனை கிழித்து போட்டாலும் மீண்டும் ஒட்டிக்கொண்டு தன் கடமையை செய்து விட தயாராகிவிடுவாள். </div>
<div>
<br /></div>
<div>
அவள் என்னிடம் வந்தபோது எனக்கு ஒரு பெரிய மரியாதையை சமூகத்திடம் வாங்கி கொடுத்தது. அடடே ''இவன் கிட்டே மடிக்கணினி எல்லாம் இருக்கின்றதே'' என ஒரு மரியாதையை வாங்கி கொடுத்தது என்பது உண்மை. அது முதல் நிலை. அதே போல "இவன் கிட்டயும் மடிக்கணினி இருக்கு" என அதே சமூகம் கொஞ்சம் இயல்பாய் பார்த்தது.அது இரண்டாம் நிலை. பின்னர் ஒரு கட்டத்தில் நான் முக நூலில் தீவிரமாய் இயக்கும் நிலையில் அப்போது பலர் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் இயங்கும் நிலை வந்த பின்னர் "அய்யய்யே இவனிடம் எல்லாம் மடிக்கணினி வந்து மாட்டிக்கொண்டதே" என உதட்டை பிதுக்கியது சமூகம். அது மூன்றாம் நிலை. இப்படி இந்த முருகேசி இந்த மூன்று நிலைகளையும் கடந்து வந்து விட்டாள் என் வாழ்வில். </div>
<div>
<br /></div>
<div>
சிகிச்சைக்காக கொடுத்த இடத்தில் இன்று போய் பார்த்த போது என்னை வாஞ்சையுடன் பார்த்தாள். "என்னங்க.... எத்தனையோ உழைத்து விட்டேன் உங்க கிட்டே, என்ன ஒரு கவலை... 2006 தேர்தலில் நீங்க வெற்றி பெறும் போது கூட இருந்தேன். சந்தோஷமா இருந்துச்சு. 2009 தேர்தலில் மிக கடுமையா நீங்க சொன்னபடி எல்லாம் ஆடினேன். தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றீங்க. சரின்னு மீண்டும் உழைச்சேன். 2011ல் கடுமையா போராடியும் தோத்து போயிட்டோம். மீண்டும் கடுமையா உழைச்சோம். இதோ 2014ல் என்னால முடிஞ்ச வரை உழைச்சுட்டேன். என்ன ஒரு வருத்தம். நீங்க ஜெயிக்கும் நாளின் போது நான் இருக்க மாட்டேன். அதனால வருத்தப்படாதீங்க. உங்களுக்கு நான் இல்லாட்டி இன்னும் ஒருத்தி வருவா. என்னை விட நல்லா உழைப்பா. கவலைப்படாதீங்க" என சொல்லி என்னை வருடிக் கொடுத்தாள். </div>
<div>
<br /></div>
<div>
கண்களில் கொஞ்சம் கண்ணீர் வந்தது. நான் கண்ணீர் விடின் முருகேசிக்கு பிடிக்காது. எத்தனையோ கஷ்டங்கள் என் வாழ்வில். உடனே அவளை எடுத்து மடியில் வைத்து கொண்டுவிடின் போதும். என் கோவத்துக்கு அவள் வடிகாலாய் இருந்தாள். என் சந்தோஷத்துக்கு கட்டிக்கொண்டு சிரித்தாள். என் அவமானங்களுக்கு ஆறுதலாய் இருந்தாள். என் இயலாமைக்கு புத்திமதி சொன்னாள். அவளை தூக்கு கன்னத்தில் ஒத்திக் கொள்ளும் ஸ்பரிசம் எனக்கு ஜில் உணர்வை தரும். அத்தனை குளிர்வானவள். சாகும் முன் சில காலம் சூடாக இருந்தாள். அத்தனையே. அந்த சூடு கூட சுகமே எனக்கு. </div>
<div>
<br /></div>
<div>
சந்தோஷமாய் இருக்கிறேன். முருகேசி மீண்டும் பிறப்பாள். என்னுடன் அவளின் அடுத்த ஜென்மத்தில் மீண்டும் இணைவாள். எனக்கு வருத்தம் எதுவும் இல்லை. நாளை மே 16ம் தேதி 2014 அன்று என் வெற்றியை அவள் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்கிற ஒரு கவலை தவிர வேறு எதுவும் இல்லை. </div>
<div>
தயவு செய்து யாரும் "முருகேசிக்கு அஞ்சலிகள்" என பின்னூட்டத்தில் சொல்லி விடாதீர்கள். உடைந்து விடுவேன். அவள் என்னுடன் சாதித்தவைகள் அதிகம்! அந்த நினைவுகளுடன் வாழ்வேன்! இவளும் என் வாழ்வில் ஒரு பகுதியாய் வந்தாள். சென்றாள்! முருகேசியின் நினைவுகள் என் வாழ்நாள் வரை இருக்கும்!</div>
<div>
<br /></div>
<div>
குறிப்பு: என்னடா இது, ஒரு லேப்டாப் மரணித்ததை இத்தனை எழுதுகிறான் என நினைக்க வேண்டாம். என் வீட்டில் ஒரு கரண்டி இருக்கு. அதுக்கு பெயர் "நச்சினார்கினியவள்" :-)</div>
<div>
<br /></div>
<div>
</div>
<div>
<br /></div>
அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74395068116023163312014-04-18T21:36:00.000+05:302014-04-18T21:36:00.226+05:302G ஸ்பெக்ட்ரம் விளக்கம்! உண்மையான நடுநிலையாளர்களின் கவனத்துக்கு!!!!<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwzeeimLCrWKNd0VIdEWSetUJx8soSGtcCY-TPHyAehFWDhbdKbT32w7RSrb7ixs0Fpq9OQbxQCFMYkllKVzRHtoqzcPPKfGGwljvOpFC8ZZNhgamPAHuasQ7bb7yYZ21LTB5AYR9dTpg/s1600/images123.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwzeeimLCrWKNd0VIdEWSetUJx8soSGtcCY-TPHyAehFWDhbdKbT32w7RSrb7ixs0Fpq9OQbxQCFMYkllKVzRHtoqzcPPKfGGwljvOpFC8ZZNhgamPAHuasQ7bb7yYZ21LTB5AYR9dTpg/s1600/images123.jpg" height="406" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><br /></td></tr>
</tbody></table>
<br />
நான் கிட்ட தட்ட 2010ம் ஆண்டு மத்தியில் இருந்தே 2G ஸ்பெக்ட்ரம் பிரச்சனை சம்பந்தமாக பல இடங்களில் விவாதித்தும், அதே போல நானே அவ்வப்போது கட்டுரைகள் எழுதியும், மேலும் சில சமயங்களில் பாட்டியாலா சி பி ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெறும் விவாதங்கள் மற்றும் பல்டி அடித்த ட்ராய் முன்னாள் அதிகாரி மாத்தூர் போன்றவர்கள் முகத்திரை கிழித்தும் வந்துள்ளேன். இது தேர்தல் நேரம். சென்ற 2011 தேர்தலின் போது இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த போது கூட திமுகவில் இருக்கும் பலருக்கே கூட 2G ஸ்பெக்ட்ரம் என்பதின் முழு பரிமாணம் சரியாக கிடைக்கவில்லை.<br />
<br />
<br />
திமுகவினரே கொஞ்சம் பயந்து தான் அது பற்றி அதிகமாக வாய் திறக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் பெரம்பலூர், அரியலூர், கோவை,தஞ்சை மாவட்டங்களில் 2 ஜி விஷயத்தில் தெளிவான பரப்புரை இருந்தது. திருச்சி சிவா, திராவிட தென்றல் சுப.வீ அய்யா போன்றவர்கள் மற்றும் திராவிடர் கழகம் இவர்களே இந்த விஷயத்தில் பரப்புரையை சரியான நேர்க்கோட்டில் எடுத்து சென்றனர். அதன் பலன் அந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் தலா இரு தொகுதிகள் திமுக வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<br />
இப்போது இந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் நிலைமை அப்படி இல்லை. திமுகவுக்கு எதிரானவர்கள் இதே 2 ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி பேசும் முன்பே திமுகவினர் ஒரு தெளிவான புரிதலுடன் அது பற்றிய விளக்கம் கொடுத்து வருகின்றனர். ஆனாலும் மூளை சலவை செய்யப்பட்ட சில பொய் பரப்புரையாளர்கள் பழைய பொய்யையே மீண்டும் மீண்டும் சொல்லி வருவதால் இதே விஷயத்தை பற்றி நான் இதுவரை எழுதிய கட்டுரைகள், விவாதங்கள் அனைத்தையும் தொகுத்து சிறியதாக ஆனால் அதே நேரம் எல்லோருக்கும் புரியும் விதத்தில் எழுத நினைத்தேன்.<br />
<br />
ஆனால் எங்கள் நண்பர் திரு. ஜே.பி. பிரகாஷ் மிக அருமையான ஒரு கட்டுரையை தன் முக நூலில் வெளியிட்டார். எனவே அந்த கட்டுரையை இங்கே நான் பகிர்கிறேன். நடு நிலையாளர்களும், 2 ஜி விஷயத்தில் உண்மையிலேயே என்ன நடந்தது என ஆர்வம் கொண்டோரும் தயவு செய்து இந்த கட்டுரையை படித்து தெளிவடையவும்! நன்றி திரு. ஜே.பி பிரகாஷ் அவர்களுக்கு! இதோ கட்டுரையை படியுங்கள்!<br />
<br />
<br />
*********************<br />
<br />
<br />
திரும்ப திரும்ப சிலர் 2Gயில் ஊழல் ஊழல் என்று கிளிப்பிள்ளையை போல சொல்லி கொண்டு இருக்கிறார்கள்....(நீண்ட பதிவு....2G விஷயத்தில் முழுமையான விளக்கம் கிடைக்க தயவுசெய்து முழுதும் படிக்கவும்)<br />
<br />
<br />
CAG அறிக்கையில் கூட, எந்த ஓர் இடத்திலும் ' ஊழல் ' ( Scam ) என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. வருவாய் இழப்பு ( Loss of revenue ) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் ஊக இழப்பு.....presumptive loss என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.....<br />
<br />
<br />
அரசிற்கான வருவாயை அரசின் கொள்கையின் அடிப்படையில் குறைத்துகொள்வது, வருவாய் இழப்பு அல்ல.... <br />
<br />
<br />
Reserve Bank of India Governor D. Subbarao, who served as Finance Secretary to the Centre during 2007-08 said, “It is correct that while determining policy, the government has to make a balance between welfare maximisation and revenue maximisation. In this case, if there was a sacrifice of some revenue, it cannot be said that the government suffered a loss.”<br />
<br />
<br />
மேலும் , நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் TRAI, 2G அலைகற்றையை ஏலத்தில்தான் விடவேண்டும் என்று என்று சொல்லியிருகின்றதா??? <br />
<br />
<br />
The Telecom Regulatory Authority of India (TRAI) has said in court that it had never recommended an auction for the 2G spectrum..<br />
<br />
<br />
தொலைத் தொடர்புக் கொள்கை பற்றிய முடிவுகளை எடுக்க, ' TRAI ' ( Telecom Regulatory Authority of India ) என்று ஒரு குழு உள்ளது. அந்தக் குழு, 1994 இல், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை ( 2G Spectrum) ஏலத்திற்கு விட வேண்டுமென முடிவெடுத்தது. அதனை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. அந்தக் கொள்கைக்கு ' 1994 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு தேசியக் கொள்கை ' ( NTP 94 - National Telecom Policy - 1994 ) என்று பெயர். அதன் அடிப்படையில், சில பெரிய நிறுவனங்கள் அதனை ஏலத்துக்கு எடுத்தன. ஆனால், அவை தங்களுக்கு வணிக அடிப்படையில் கட்டுபடியாகவில்லை ( Commercially not viable ) என்று கூறி 1998 இல் அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டன. அதனால், அந்தக் குழு ( TRAI ), 99ஆம் ஆண்டு மீண்டும் கூடி, இனி ஏலத்திற்கு விட வேண்டாம். முதலில் வருகின்றவர்களுக்கு முதலில் ( First come first serve basis ) என்னும் அடிப்படையில் கொடுக்கலாம் என முடிவெடுத்தது. அதனை நாடாளுமன்ற மும்,அன்றைய அமைச்சரவையும் ஏற்றன. புதிய கொள்கைக்கு, ' New NTP 99' என்று பெயர். TRAI குழு, ஏன் ஏலத்திற்கு விட வேண்டாம் என்று முடிவெடுத்தது? அந்தக் குழுவே கூறும் காரணம் இதுதான், ஓர் அரசு எல்லாவற்றிலும் இலாப, நட்டக் கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மக்கள் நலத் திட்டங்களால் ஏற்படும் இழப்பை அரசு ஏற்க வேண்டும் என்பதுதான். ரேஷன் அரிசி, உரம், எரிபொருள் முதலியனவற்றிற்கு அரசு மானியம் வழங்கப் படுகிறது. அரசிற்கு நட்டம்தான். வேண்டாம் என்றோ, ஊழல் என்றோ அதனைக் கூற முடியுமா?<br />
<br />
<br />
எனவே எந்த ஒரு கொள்கை முடிவையும், அமைச்சராக இருந்த ஆ.ராசா தனித்து எடுக்கவில்லை. அப்படி முடிவெடுக்க எந்த அமைச்சருக்கும் அதிகாரமில்லை. 1999 முதல், அத்துறைக்கு அமைச்சர்களாக இருந்த பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதி மாறன் அனைவரும், அக்கொள்கைப்படி, முதலில் வருபவருக்கு முதலில் என்ற அடிப்படையில்தான் உரிமம் கொடுத்தனர். ஆ.ராசாவும் அதனைத்தான் செய்தார்.<br />
<br />
<br />
டிராயின் பரிந்துரையின்படி 2003ல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில், ஜஸ்வந்சிங், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கொண்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை முடிவின்படி, அடிப்படைத் தொலைபேசி சேவையில் இருக்கும் நிறுவனங்கள், செல்லுலார் சேவைக்கும், செல்லுலார் சேவையில் இருக்கும் நிறுவனங்கள் அடிப் படைத் தொலைபேசி சேவைக்கும் 2001 இல் நிர்ணயிக் கப்பட்ட உரிமக் கட்டணமான ரூ.1658 கோடியை செலுத்தி, ஏலமின்றி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, வருவாயில் பங்கு போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதனடிப்படையில் ஏலமின்றி 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில், 51 நிறுவனங்களுக்கு இராசா பதவி ஏற்கும் வரை உரிமங்கள் வழங்கப்பட்டன. ஏலமுறையை ரத்து செய்தது பி.ஜே.பி. அரசே தவிர இராசா அவர்கள் அல்ல..<br />
<br />
<br />
குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டல கதையாக இன்னும் சிலர் தங்களின் 2G கோவணம் லட்சம் கோடி துண்டுகளாய் கிழிந்தபின்னும், ராசா தவறே செய்யவில்லையா என்று கேட்கிறார்கள்....<br />
<br />
<br />
2007 ஆம் ஆண்டின் நிலவரப்படி, தொலைதொடர்பு வழிகாட்டுதல் ஆணையம் ட்ராய்யோ (TRAI), இல்லை, தேசிய தொலை தொடர்ப்பு கொள்கையோ, 2G அலைகட்ற்றையை ஏலம் விடவேண்டும் என்று சொல்லவில்லை....அப்படி அவர்கள் சொல்லியிருந்து, ராசா அவர்கள் அதை மீறி முதலில் வருபவர்க்கு முன் உரிமை என்ற வழிமுறையை கையாண்டு இருந்தால் அது தவறு..ஆனால் அப்படி ஒன்றும் இல்லை..<br />
<br />
<br />
டெலிகாம் நிருவனங்களிடையே லெவல் பிளேயிங் இருக்கவேண்டும், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைதொடர்பு சேவை கிடைக்கவேண்டும் என்பதால் அதே விலையில் லைசென்சுகள் அளிக்கப்பட்டன...<br />
<br />
<br />
தொலைத்தொடர்பில் முன் அனுபவம் இல்லாத நிறுவனகளுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கப்பட்டது - இதில் என்ன தவறு ??? அரசின் டெண்டர் விதிமுறைகளை பின்பற்றும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் உரிமையை அளிக்கலாம்...முன் அனுபவம் கொண்ட நிறுவனகளுக்கு மட்டும் தான் ஸ்பெக்ட்ரம் என்று விதிமுறை உள்ளதா ?? அல்லது ஏற்க்கனவே அவ்வாறு விதிமுறை இருந்து, அதை ராசா மற்றினாரா ????<br />
<br />
<br />
இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன் அனுபவம் கொண்டவர்கள் மட்டும் தான் அந்த துறையில் இருக்கமுடியும் என்றால், வெறும் BSNL மட்டும் தான் இருக்கவேண்டும்...பாரதி மிட்டல், ஹட்ச் எஸ்ஸார், ஏர்செல் போன்ற நிறுவனங்கள் இந்திய தொலைதொடர்ப்பு துறையில் இறங்குவதற்கு முன், இந்த துறையில் முன் அனுபவம் இருந்ததா ??? கட்-ஆப் தேதியை மாற்றினார் - உதாரணத்திற்கு, 100 லட்டு இருக்கிறது, 15ஆம் தேதிக்குள் முதலில் வருபவர்களுக்கு தலா ஒரு டோக்கன் தரப்படும் , அந்த டோக்கனை தந்து ஒரு லட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் பத்தாம் தேதியே நூற்றுக்கும் அதிகமானோர் வந்து வரிசையில் நின்று, டோக்கனை பெற்றுகொள்கிரார்கள்....அப்போது என்ன செய்வார்கள்...கவுண்டரை 15ஆம் தேதி வரை திறந்திருப்பார்களா இல்லை 10ஆம் தேதியே, டோக்கன் முடிந்து விட்டது என்று சொல்லி முடிவிடுவார்களா??? அதுதான் இதிலும் நடந்தது...நூறாவது டோக்கனுக்கு மேல் உள்ளவர்களுக்கும், மீண்டும் லட்டு வந்தப்பின் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.....(More Additional Spectrom) <br />
<br />
<br />
சரி, டோக்கன் உள்ள 100 பேருக்கும் லட்டு உறுதியானது என்ற பிறகு, 10ஆம் டோக்கன் வைதிருந்தவருக்கு முதலிலும், 3ஆம் டோக்கன் வைத்திருப்பவர்க்கு அடுத்தும் கொடுத்தால் என்ன...அதே போல தான் அந்த கட்-ஆப் தேதிக்குள் விண்ணப்பித்த அனைவருக்கும் அலைகட்ற்றை வழங்கப்பட்டது..இதில் என்ன விதி மீறல் உள்ளது...<br />
<br />
<br />
சரி, அந்த நிறுவனகளிடம் ராசா பணம் பெற்றார் என்றால், இதோ மூன்று வருடங்கள் ஆகிறது, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் உள்ள இந்த வழக்கில், அனைத்து புலனாய்வு அமைப்புகளும் இதுவரை என்ன கண்டுபிடித்து உள்ளார்கள்???? எதை நிருபித்து உள்ளார்கள் ??<br />
<br />
<br />
வடநாட்டு, ஆரிய ஊடகங்கள் செய்த இடைவிடாத பொய் பிரச்சாரம், சுசாமி, பூஷன் போன்ற நிழல் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் சதி, அதற்க்கு சிஏஜி போன்ற அரசியல் சாசன அமைப்புகள் ஒத்துபோதல், எதிர் கட்சிகளின் தொடர் போராட்டம், நாடாளுமன்றத்தை முடக்குவது என்ற செயல்பாடுகள், சுப்ரீம் கோர்ட் புரிந்துகொண்டவிதம் இவை எல்லாம் சேர்த்துதான் இந்த வழக்கை தீர்மானித்தன....<br />
<br />
<br />
2G - மேலும் சில விளக்கங்கள்:- <br />
<br />
விளக்கம் : 1<br />
<br />
குறைந்த விலைக்கு 2G லைசென்ஸ் வாங்கிய நிறுவனங்கள், அவற்ற்றை மிகபெரிய விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தன. அந்த கொள்ளை லாப தொகைக்கு 2G லைசென்சை ராஜா நேரடியாக விற்றிருகவேண்டும் என்று, ஷேர் விற்பனை மற்றும் FDI போன்றவற்றின் அடிப்படை தெரியாமல் பொங்ககூடாது...எதோ சந்தையில் ஒரு பொருளை 10 ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்று 90 ரூபாய் லாபம் என்ற ஒரு மொக்கையான விஷயம் அல்ல இது... 2G லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் எதுவும் equaty ஷேர் (ப்ரோமோட்டர் ஷேர்) விற்கவில்லை. முதலீட்டு மூலதனத்தை உயர்த்திக்கொள்ள, சட்டபடியான வெளிநாட்டு நேரடி முதலீடிற்கான வழிமுறையில் ஷேர் விற்பனை செய்து தங்களது முதலீட்டு மூலதனத்தை உயர்த்தி கொண்டுள்ளன. இது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒன்று. <br />
டெலிகாம் FDI அனுமதிக்கப்பட்ட ஒன்று, முதலீடிற்க்காக சட்டபடியாதானே ஷேர் விற்று இருக்கிறார்கள்..<br />
<br />
<br />
"No sale of promoter's equity has been taken place. This was only (infusion) of an additional capital through FDI. It does not amount to divesting of promoter's equity," <br />
<br />
"companies can raise additional capital which come through FDI by divesting their equity." All such transactions were legal in nature as only transfer of above 49% shares needs regulatory approvals the present law permits an FDI upto 76% in telecom companies.<br />
<br />
//the Central Board of Direct Taxes has said Swan and Unitech never sold their licenses to their foreign partners and that the sale of equity was above board....//<br />
<br />
//They didn't sell their equities. They expanded the equity of the company and brought in new people. That's not the same thing.//<br />
<br />
//"The question was whether it was divestment (sale) of promoter’s equity or dilution of equity by issue of fresh shares... This was examined by the Ministry of Finance.// //“Both were cases of dilution of equity by issue of fresh shares. The Prime Minister wanted to know if it was a case of dilution of equity or divestment.// //“I do not think there was any sale of spectrum. The spectrum was allocated to the company which got licence and the spectrum remained with the company. The company issued fresh shares,” he said.//<br />
<br />
<br />
<a href="http://www.ndtv.com/article/india/2g-spectrum-scam-case-falling-apart-134876" target="_blank">http://www.ndtv.com/article/india/2g-spectrum-scam-case-falling-apart-134876 </a><br />
<br />
<br />
<a href="http://twocircles.net/2011jan16/ahluwalia_defends_swan_unitech_stake_sale_after_spectrum_allocation.html" target="_blank"> http://twocircles.net/2011jan16/ahluwalia_defends_swan_unitech_stake_sale_after_spectrum_allocation.html </a><br />
<br />
<br />
<a href="http://www.thehindubusinessline.com/industry-and-economy/article2292572.ece" target="_blank">http://www.thehindubusinessline.com/industry-and-economy/article2292572.ece </a><br />
<br />
<br />
<a href="http://www.dnaindia.com/india/report_2g-scam-govt-defends-equity-sale-to-foreign-entities_1475166" target="_blank">http://www.dnaindia.com/india/report_2g-scam-govt-defends-equity-sale-to-foreign-entities_1475166 </a><br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj48Hw3nFyBCkpOV4nCfjEv1R0-aW70zYNHQmvCSgzXMB_6XF1Zkn1IQo8SyBFsNoWzcLgl__HvyBAbS8lnc95rk1lmyOeWnU0_Z3qPslIZoa8O4QjzFer_1g4OFm7keBQbjzJ7tnXRjAo/s1600/Evening-Tamil-News-Paper_6757318974.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj48Hw3nFyBCkpOV4nCfjEv1R0-aW70zYNHQmvCSgzXMB_6XF1Zkn1IQo8SyBFsNoWzcLgl__HvyBAbS8lnc95rk1lmyOeWnU0_Z3qPslIZoa8O4QjzFer_1g4OFm7keBQbjzJ7tnXRjAo/s1600/Evening-Tamil-News-Paper_6757318974.jpg" height="320" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தளபதி அவர்களின் தீவிர பிரச்சாரத்தின் போது!</td></tr>
</tbody></table>
<br />
விளக்கம் : 2<br />
<br />
கட்டுமான நிறுவனங்கள் வங்கியில் தவறான முறையில் கடன் வாங்கி 2G லைசென்ஸ் பெற்றதாய் குற்றம்சாட்டினார்கள்...வங்கிகளும் இதில் சம்பந்தம் இருப்பதாய் பொங்கினார்கள்.. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் மேற்கூறிய குற்றசாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை, கடன் கொடுக்கப்பட்டது விதிகளுக்கு உட்பட்டதுதான் என்று சிபிஐ சொல்லியிருப்பதாக செய்தி.<br />
<br />
<br />
CBI closes probe into banks' role in 2G spectrum scam Sources in the investigating agencies said they had "not found any irregularity in banks giving loans to those companies which got 2G spectrum licences during A Raja's tenure in 2007-2008".<br />
<br />
<br />
<a href="http://timesofindia.indiatimes.com/india/CBI-closes-probe-into-banks-role-in-2G-spectrum-scam/articleshow/10058553.cms" target="_blank">http://timesofindia.indiatimes.com/india/CBI-closes-probe-into-banks-role-in-2G-spectrum-scam/articleshow/10058553.cms </a><br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxXwNfVdMshXQt8J8y0aeWnkzLxQ2CbV1wNKrBNJ6HJltsllWw0sodFv1CjYz_ef41LqdMmlMqvz4XtliZ0TbcrL1-9ozJwB9YosH9Sxjx5ui2QUCt7VNWem4hZd4SJ7tyEU2diuN5sCc/s1600/123.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxXwNfVdMshXQt8J8y0aeWnkzLxQ2CbV1wNKrBNJ6HJltsllWw0sodFv1CjYz_ef41LqdMmlMqvz4XtliZ0TbcrL1-9ozJwB9YosH9Sxjx5ui2QUCt7VNWem4hZd4SJ7tyEU2diuN5sCc/s1600/123.jpg" height="393" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களோடு மக்களாக!</td></tr>
</tbody></table>
<br />
விளக்கம் : 3<br />
<br />
கிராஸ் ஹோல்டிங் வைத்து நிறுவனங்கள் தவறாக 2G லைசென்ஸ் பெற்றதாய் எழுந்த குற்றசாட்டுக்கும் ஆதாரம் இல்லை.. லூப் டெலிகாம்ல் எஸ்ஸார் கிராஸ் ஹோல்டிங் (மறைமுக பங்கு) வைத்து 2G லைசென்ஸ் பெற்றதாய் வந்த குற்றசாட்டும் தவறு..<br />
<br />
<br />
Essar didn't violate rules: Law ministry CBI's case was that when Essar was a major telecom player, Loop Telecom -- controlled by its associate Khaitan group -- had been allotted spectrum in breach of eligibility conditions. <br />
<br />
The MCA took a second look at the Essar-Loop corporate link and reiterated its earlier stand that "the documents of the companies examined do not substantiate 'associate' relationship between Essar group and Khaitan group". <br />
<br />
<br />
The additional input from law ministry has now left CBI's prosecution department, which weighs evidence to decide if a case is fit for filing of chargesheet, in a dilemma. <br />
<br />
<br />
<a href="http://timesofindia.indiatimes.com/india/Essar-didnt-violate-rules-Law-ministry/articleshow/10058745.cms">http://timesofindia.indiatimes.com/india/Essar-didnt-violate-rules-Law-ministry/articleshow/10058745.cms</a><br />
<br />
***************<br />
<br />
<br />
உண்மையான நடுநிலையாளர்களே! உங்களுக்கு மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் கூட நீங்கள் கேட்கலாம். விளக்கம் கொடுக்க தயாராக இருக்கின்றோம்! வழக்கு இப்போது ஒரு நாள் கூட வாய்தா வாங்காமல் மிக வேகமாக நடந்து கொண்டுள்ளது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும். இதோ இப்போது மக்கள் மன்றத்தில் நிற்க்கின்றார் திரு. ஆ. ராசா அவர்கள். நீலகிரி தொகுதியில் உங்கள் மேலான வாக்குகளை எதிர்பார்த்து நிற்க்கின்றார். உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்!<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXn4cpD4gcI3pQHh_BmZvwicpWNMNvYYE9mJI3MQ70hxIRpuo4xcXc0ury9Dui5j97z648YoUlfZ6Pkwzl_4u6CwGpi2_0va_AyKzm-tVCc9sD1xD6cIKri1kQOazKhIiG9sckqhTfqgQ/s1600/09THRAJA_1107892g.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXn4cpD4gcI3pQHh_BmZvwicpWNMNvYYE9mJI3MQ70hxIRpuo4xcXc0ury9Dui5j97z648YoUlfZ6Pkwzl_4u6CwGpi2_0va_AyKzm-tVCc9sD1xD6cIKri1kQOazKhIiG9sckqhTfqgQ/s1600/09THRAJA_1107892g.jpg" height="520" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தகதகத்தாய சூரியனுக்கு இதே போல வெற்றிமாலை சூட்டுங்கள்!</td></tr>
</tbody></table>
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2PG2HwsGQtVum67cg41AozWpZmFIGSOZOmufs1Sh_-OyrMKnpOvkHmaAU-kOPwfLaS6sKRcLyDBMXfzCMbCrHhCVQV9Dy_NgJtDy8OZqAJQaqksBPg9k4jCdElpMwmdYR83zURdeUiZM/s1600/uday+suriyan.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2PG2HwsGQtVum67cg41AozWpZmFIGSOZOmufs1Sh_-OyrMKnpOvkHmaAU-kOPwfLaS6sKRcLyDBMXfzCMbCrHhCVQV9Dy_NgJtDy8OZqAJQaqksBPg9k4jCdElpMwmdYR83zURdeUiZM/s1600/uday+suriyan.jpg" height="480" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ஆதரிப்பீர் உதய சூரியனை!</td></tr>
</tbody></table>
<br />
<br />
<br />
<br />அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68300213907402027922014-03-15T20:38:00.000+05:302014-03-15T20:38:08.498+05:30நாகை பாராளுமன்ற தொகுதியில் ஏன் அண்ணன் திரு. ஏ.கே.எஸ்.விஜயன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்???<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD5WoPilnEx7Lui7F0oTxTOfED-mKtUvNXSIwj7MTY2tLqus8YoWNHEtC917nY1sIeUwxQVvSOWG0r0UEmgXSn5N2jzpTfir_hpSJ-ox8Oxlj9itiKQiO-7vxM2gw6qJBAJHTIwYGiCT8/s1600/aks1.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD5WoPilnEx7Lui7F0oTxTOfED-mKtUvNXSIwj7MTY2tLqus8YoWNHEtC917nY1sIeUwxQVvSOWG0r0UEmgXSn5N2jzpTfir_hpSJ-ox8Oxlj9itiKQiO-7vxM2gw6qJBAJHTIwYGiCT8/s1600/aks1.jpg" height="640" width="448" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">அண்ணண் திரு. ஏ.கே.எஸ்.விஜயன் அவர்கள்</td></tr>
</tbody></table>
<br />
தலைவர் கலைஞர் அவர்கள் தேர்வாலும், வணக்கத்துகுரிய தளபதியின் வழிகாட்டுதலாலும் நாடாளுமன்ற உறுப்பினராக நாகை தொகுதியில் பணியாற்றிய திரு. ஏ.கே.எஸ். விஜயன் அவர்கள்,தான் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட போது செயல்படுத்திய திட்டங்கள் கீழே! அண்ணன் அவர்களையே மீண்டும் நாகை மக்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என கீழே கொடுக்கப்பட்ட சாதனைகளை பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் நாகை தொகுதி வாக்காளர்களே!<br />
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7cR3Bz8qTSJ4lmgcJDvUSUIhVeFZqXR7PcsU5g2_8Futk5JCYUbiflQ-qQHqXXotJDbxHGhchiILYRblyireM3WyXuS7Zvm52jOLElntHEyK3BBvIzztKNfbbRpzWz1RkPGen9WkZAdw/s1600/aks+2.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7cR3Bz8qTSJ4lmgcJDvUSUIhVeFZqXR7PcsU5g2_8Futk5JCYUbiflQ-qQHqXXotJDbxHGhchiILYRblyireM3WyXuS7Zvm52jOLElntHEyK3BBvIzztKNfbbRpzWz1RkPGen9WkZAdw/s1600/aks+2.jpg" height="362" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">கருகிய நெல் பயிர்களை தளபதிக்கு காட்டி தன் மாவட்டம் காவிரி வராமையால் படும் சிரமத்தை விளக்கும் போது!</td></tr>
</tbody></table>
<br />
<br />
** தஞ்சாவூர் - திருவாரூர் அகல ரயில்பாதை திட்டம் 1993ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டதை 2000ம் ஆண்டிலிருந்து மீண்டும் துவங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது<br />
<br />
<br />
**திருவாரூர் - நாகப்பட்டினம் - நாகூர் அகல ரயில்பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டது.<br />
<br />
<br />
** நாகப்பாட்டினம் - வேளாங்கண்ணி அகல ரயில்பாதை திட்டம் (புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திலிருந்து நிதி செலுத்தப்பட்டும்) கிடப்பில் கிடந்ததை நிறைவேற்றம் செய்யப்பட்டது.<br />
<br />
<br />
** மயிலாடுதுறை - திருவாரூர் அகல ரயில்பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டது.<br />
<br />
**திருவாரூர் - பட்டுக்கோட்டை அகல ரயில்பாதை அமைக்கும் பணி ஒரே நேரத்தில் துவங்கி நடைபெறும் என அமைச்சரின் பதிலை பெற்று பணி துவங்கப்பட்டுள்ளது.<br />
<br />
**திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில்பாதை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பாதையில் உள்ள பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.<br />
<br />
** வேளாங்கண்ணி - திருக்குவளை - திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.<br />
<br />
** திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி - திருவாரூர் - பட்டுக்கோட்டை ஆகிய பணிகளுக்கு ரூ 140 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கியுள்ள நிலையில் மீதமுள்ள பணிக்கு 2014 மார்ச் மாதத்துக்குள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அந்த பணிகளும் இந்த ஆண்டே தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.<br />
<br />
**தஞ்சாவூர்- திருவாரூர் - நாகப்பட்டினம் நான்குவழிச்சாலை மத்திய அரசின் அனுமதியோடு நிலம் கையகப்படுத்தப்பட்டும் மாநில அரசின் ஒத்துழைப்பு ஒப்பந்தம் வழங்காத காரணத்தால் தேசிய நெடுஞ்சாலை ஆணையமே 360 கோடிக்கு பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேற்கண்ட சாலை விரிவாக்கத்தில் திருவாரூர் விளமல் பகுதியில் சுமார் 250க்கும் மேற்ப்பட்ட வீடுகள் பாதிப்படைவதை அறிந்து மாற்றுவழியாக புறவழிச்சாலை அமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் உத்தரவை பெற்றுத்தந்தது.<br />
<br />
** தஞ்சை - மன்னை - திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் - கோடியக்கரை வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.<br />
<br />
** தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை அறிவித்த போது அதை முதலாவதாக நாகை மாவட்டத்துக்கு பெற்றுத்தந்தது.<br />
<br />
** தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியின் போது மத்திய பல்கலைகழகம் திருவாரூரில் அமைந்திட நாடாளும்ன்ற உறுப்பினர் என்ற வகையில் நாடாளும்ன்ற ஒப்புதலை பெற்று பல்கலைகழகம் அமைத்திட முழு முயற்சி எடுத்தது.<br />
<br />
**கேந்திர வித்யாலயா பள்ளி நாகை மற்றும் திருவாரூரில் அமைக்க அனுமதி வாங்கப்பட்டு நாகையில் அரசு இடம் தராத காரணத்தால் திருவாரூரில் முதலாவதாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.<br />
<br />
**அயல் நாடுகளில் வாழும் தொகுதி தமிழர்களுக்கு தேவையான உயிர்காப்பு மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கான அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தது.<br />
<br />
**காவிரி பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, காவிரி நதி நீர் பங்கீடு ஆணையை அரசிதழில் வெளியிட பிரதம அமைச்சர், நீர்வள அமைச்சர், ஆகியோரை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியது.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjE8IGtgWZhOgJIi9oYsCpiPb5YXx-Gyb0a26wPowxhkdhnH4uO34aX5RaDd1CVU3h4tU08e1aRj3DpuzGYsmE8ci6xolrX2yas4gwGTkdbioZ-wUc4xZoLVjm6YvyVr34NT5aEm82FNT0/s1600/aks+4.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjE8IGtgWZhOgJIi9oYsCpiPb5YXx-Gyb0a26wPowxhkdhnH4uO34aX5RaDd1CVU3h4tU08e1aRj3DpuzGYsmE8ci6xolrX2yas4gwGTkdbioZ-wUc4xZoLVjm6YvyVr34NT5aEm82FNT0/s1600/aks+4.jpg" height="546" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ஏழைகளுக்கு உதவி!</td></tr>
</tbody></table>
<br />
** நாகையில் மீனவர்கள் நலம் காத்திட மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தலைவர் காலைஞர் ஆலோசனைப்படி உச்ச நீதிமன்றத்தில் முதன் முதலாக வழக்கு தொடுத்தது.<br />
<br />
**சுனாமியின் போது பாதிப்படைந்த உப்பு உற்பத்தி தொழிலாளர்களுக்கு ரூ 6000/=ம், உப்பள உரிமையாளர்களுக்கு ரூ 15,000/=ம் நிவாராணத்தொகை பெற்றுத்தந்தது.<br />
<br />
**உப்பு உற்பத்தியாளர்களுக்கு நிலங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ 270 இலட்சத்தை தள்ளுபடி செய்தும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ750/=ஆக இருந்த வரிவிதிப்பை ரூ 102/= ஆக குறைத்து வரி விதிப்பு செய்து ஆணை பெற்று தந்தது.<br />
<br />
**மத்திய அரசு அனுமதித்த பாலிடெக்னிக் கல்லூரியை திருத்துறைப்பூண்டியில் அமைத்து தந்தது.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ-RvWfKwVnUABsrBPectcouNrtx3W08ciwgLskIUkjl6hp_4IRXpTWk4S3QoDCR1Z9swFSS2lAghZkmQDuVBwPTxpVwErTM-IoNXRM6dNKzZXhvHnWnCTtNk8vGu-W9jAnAbroFqJYNg/s1600/aks5.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ-RvWfKwVnUABsrBPectcouNrtx3W08ciwgLskIUkjl6hp_4IRXpTWk4S3QoDCR1Z9swFSS2lAghZkmQDuVBwPTxpVwErTM-IoNXRM6dNKzZXhvHnWnCTtNk8vGu-W9jAnAbroFqJYNg/s1600/aks5.JPG" height="424" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">சமச்சீர் கல்விக்காக ஜெயா ஆட்சியில் சிறை சென்ற எங்கள் நகரம் குண்டாமணி அண்ணனுக்கு கேடயம் கொடுத்து கௌரவித்த போது (மொத்தம் 45 பேர் சிறை புகுந்தனர்)</td></tr>
</tbody></table>
<br />
**தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரி திருக்குவளையில் துவக்கப்பட்டது.<br />
<br />
**சட்டமன்றத்தில் துணை முதல்வர் தளபதி அறிவிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.கே.எஸ்.விஜயன் அவர்களின் கோரிக்கையின்படி கூத்தானல்லூர் பாய்கார தெருவில் பாலம் அமைக்கப்படும் என அறிவித்தது.<br />
<br />
** நாகை துறைமுகம் விரிவாக்கம் செய்திட முதல்வர் கலைஞர் அவர்களிடமிருந்து ரூ 50/= கோடி பெற்று விரிவாக்கம் செய்தது.<br />
<br />
**வேதாரண்யம் மற்றும் திருத்துறைபூண்டியில் அரசு கல்லூரி துவங்க சட்டமன்றத்தில் துணை முதல்வர் தளபதி அவர்கள் பதிலுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.கே எஸ்.விஜயன் அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கால்லூரி அமைக்கப்படும் என அறிவித்து ஆணை பிறப்பித்தது.<br />
<br />
**திருவாரூரில் அரசின் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கலைஞர் அரசால் கொண்டுவரப்பட்டது.<br />
<br />
**கலைஞர் அரசால் அறிவிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை அமைக்கும் பணி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி துவங்கி பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது இப்போது இருக்கும் அரசினால்.<br />
<br />
**திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்திட வணக்கத்துக்குரிய தளபதி அவர்களால் உத்தரவு பெறப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவது.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKM0OiSVXjN1JRGGGgVKt9y7MpfZO3iE82OwfrZZcch0hT2RRj-8FeD97e_wi2tIlRMcboXHhV_gOPiQ56Le8KikELTDDVYWYFeun603aZftw0T_tOKUi6QayymTq7dgwUoOQXghZKum8/s1600/aks6.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKM0OiSVXjN1JRGGGgVKt9y7MpfZO3iE82OwfrZZcch0hT2RRj-8FeD97e_wi2tIlRMcboXHhV_gOPiQ56Le8KikELTDDVYWYFeun603aZftw0T_tOKUi6QayymTq7dgwUoOQXghZKum8/s1600/aks6.jpg" height="542" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">இந்த வருட தைப்புத்தாண்டில் வாழ்த்து பெற்ற போது - ஒரு இனிய அனுபவம்!</td></tr>
</tbody></table>
<br />
** (PMRF) பிரதமர் நிவாரண திட்டத்தின் கீழ் ரூ 70 இலட்சம் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக நாகை தொகுதி பயனாளிகளுக்கு பெற்று தந்தது.<br />
<br />
**இந்தியாவிலேயே பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி கமிட்டி சேர்மனாக பணியாற்றும் வாய்ப்பை பெற்றதால் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகானம் எம்.பி மேம்பாட்டு நிதி மூலம் வழங்கிட அரசாணை பெற்று வழங்கியது.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEju1gtWylP-wWiLYaDBBtID_C3BhkbINa6jT2XBT3OHhqS_6WMFS-rS6TWHjJdVNQ3XSeyZil0fg6nuqC9_TYFODLJTzHApmoqIMaYdyrl1ttee1NG0ZCqR11y3A9Q4bZEIeNFhRoZ7mA0/s1600/aks7.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEju1gtWylP-wWiLYaDBBtID_C3BhkbINa6jT2XBT3OHhqS_6WMFS-rS6TWHjJdVNQ3XSeyZil0fg6nuqC9_TYFODLJTzHApmoqIMaYdyrl1ttee1NG0ZCqR11y3A9Q4bZEIeNFhRoZ7mA0/s1600/aks7.jpg" height="480" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மயிலாடுதுறை நகர கழகம் சார்பாய் அண்ணன் அவர்களுடன் தமிழ் புத்தாண்டு விழா!</td></tr>
</tbody></table>
<br />
**தலைவார் கலைஞர் அவர்களால் கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி துவக்கி வைக்கப்பட்டும் இது நாள் வரை இந்த அரசால் செயல்படாமல் உள்ளது.<br />
<br />
** நாகையில் மீன் இறங்கு தளம் அமைக்க ரூ 32 கோடி நிதி தலைவர் கலைஞர் அரசால் பெறப்பட்டது.<br />
<br />
**முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுக்காவாக ஆணை பெறப்பட்டும் தமிழக அராசால் இதுவரை செயல்படுத்தாமல் உள்ளது.<br />
<br />
** குரூப் 1, +2 மாணவர்கள் நேரிடையாக பாலிடெக்னிக் சேருவதற்கு இருந்த தடையை நீக்கிட அகில இந்திய தொழில் நுட்ப தலைவரை அணுகி அந்த தடையை நீக்கி ஆண்டிற்கு சுமார் 10,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆணை பெற்றுத்தந்தது.<br />
<br />
** சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைக்கப்பட்ட முத்துப்பேட்டை ஒன்றியம் மேல் நம்மங்குறிச்சி - நம்மங்குறிச்சி பாலம் அமைத்தது. ஓரத்தூர் பாமணி ஆற்றில் பாலம் அமைத்து தந்தது. கொராடாச்சேரி-கிளரியம்-பத்தூர் பாலம் அமைத்து தந்தது.<br />
<br />
** நாடாளுமன்றத்தில் மக்கள் நலனுக்காக 464 கேள்விகளும், 97 விவாதங்களும், 18 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களும், 5 அரசு மசோதா சீட்டுகளும் (Government Bills) ஆகிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பணியாற்றியது.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSjFVlwjN4nsgC2WnnkLl0LRIPnbva0IOBYgqzqPfgm2Zjwj2y3LD7TKmggO6K1UvHhjOj3UCN2fBeTwKA9lR0m0xWSQW11BJBupenAzmCdPpCmQmxaP7NQJwdZ2AwwbBKZQn880Nq7lk/s1600/9.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSjFVlwjN4nsgC2WnnkLl0LRIPnbva0IOBYgqzqPfgm2Zjwj2y3LD7TKmggO6K1UvHhjOj3UCN2fBeTwKA9lR0m0xWSQW11BJBupenAzmCdPpCmQmxaP7NQJwdZ2AwwbBKZQn880Nq7lk/s1600/9.jpg" height="444" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தலைவர் கலைஞர் பிறந்த நாளில் ரத்த தானம் செய்யும் அண்ணன் ஏ.கே.எஸ் </td></tr>
</tbody></table>
<br />
இவைகளை தவிர ...............<br />
<br />
<b><u><i style="background-color: blue;"><span style="color: yellow;">பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து செய்யப்பட்ட பணிகளின் விபரம் கீழே:-</span></i></u></b><br />
<br />
பள்ளிக்கட்டிடம் - 115, சுற்றுச்சுவர் - 172, நூலக கட்டிடம் - 7, விளையட்டு மைதானாம் - 18, கணிணி பயன்பாடு - 10 = ரூபாய் 9,67,27,750 .00<br />
<br />
அங்காடி கட்டிடம், பொது வினியோக கட்டிடம் -44, சமுதாய கூடம் -29, வணிக வளாகம் - 3, உழவர் சந்தை-1 = ரூபாய் 4,82,43,000.00<br />
<br />
பாலங்கள் - 67, சாலைகள் - 273, படித்துறை - 47, மழை நீர் சேகரிப்பு - 4, ஜெனரேட்டர் அறை - 2, தொலைக்காட்சி அறை-2 = ரூபாய் 12,29,0,2500.00<br />
<br />
மின்விளக்கு - 83, தூர்வாருதல்-47,குப்பை வண்டி - 1, கல்வெட்டு அமைத்தல் -8, நீர் பாசன தடுப்பு அணை -15 = ரூபாய் 3,94,43,710.00<br />
<br />
குடி நீர் குழாய், குடி நீர் தொட்டி -64, மயான கொட்டகை, கருமாதி மேடை - 325, சைக்கிள் நிறுத்தம் - 7 = ரூபாய் 3,79,73,000.00<br />
<br />
பேருந்து நிலையம் - 217, மகளிர் சுய உதவி கட்டிடம் - 5, கால் நடை நிலையம்-2, சுகாதார வளாகம்- 18 = ரூபாய் 3,84,42,418.00<br />
<br />
துணை சுகாதார நிலையம் -1, கலை அரங்கம் - 1, சுற்றுலா பயணிகள் கட்டிடம் -1 = ரூபாய் 3,3,10,000.00<br />
<br />
<b><span style="color: red; font-size: large;">பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்யப்பட்ட பணிகளின் மொத்த தொகை = 38,70,42,378.00</span></b><br />
<br />
<br />
<br />
<u><i><b><span style="background-color: blue; color: yellow;">பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டு செய்யப்பட்ட சாலைப்பணிகள் விபரம்:-</span></b></i></u><br />
<br />
<span style="color: red; font-size: large;"><b>நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நடைபெற்ற சாலைப்பணி - 201, சாலை மேம்பாடு - 27, பாலம் - 2 = ரூபாய் 13,7,20,081.00</b></span><br />
<br />
இதே போல.......<br />
<br />
நாடாளுமன்ற உறுப்பினர் முயற்சியால் விரிவாக்கம் செய்யப்பட்ட இரயில் வண்டிகள் விபரம் - (தேதியுடன்) :-<br />
<br />
எர்ணாகுளம் - நாகூர் எக்ஸ்பிரஸ் விரிவாக்கம் - 30.03.2010<br />
<br />
<br />
சென்னை எக்மோர் - நாகூர் எக்ஸ்பிரஸ் - 24.04.2010<br />
<br />
<br />
நாகூர் - நாகை- வேளாங்கண்ணி பாசஞ்சர் - 20.12.2010<br />
<br />
<br />
வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் - 20.12.2010<br />
<br />
<br />
நாகூர் -பெங்களூர் வழி சேலம் எக்ஸ்பிரஸ் - 01.07.2012<br />
<br />
<br />
மயிலாடுதுறை - திருவாரூர் பாசஞ்சர் - 12.05.2012<br />
<br />
<br />
காரைக்கால் - மும்பை எக்ஸ்பிரஸ் - 12.05.2012<br />
<br />
<br />
மற்றும் பாசஞ்சர் ரயில்கள் - 27.10.2013<br />
<br />
<br />
வேளாங்கண்ணி - சென்னை link எக்ஸ்பிரஸ் - 22.06.2013<br />
<br />
<br />
<br />
<br />
மேற்கூறிய அனைத்தும் நாகை பாராளுமன்ற தொகுதியில் இப்போது வேட்பாளராக களத்தில் நிற்கும் நாகை மாவட்ட திமுகழக செயலாளர் திரு. <b><span style="color: red; font-size: large;">A.K.S.விஜயன். B.A., M.P </span></b>அவர்கள் நாகை தொகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது செய்த சேவைகள்.<br />
<br />
இதை தவிர வளைகுடா நாட்டில் பிழைக்க சென்ற தமிழர்கள் எதிர்பாராவிதத்தில் அந்த நாட்டு அரசால் தண்டனை விதிக்கப்பட்டு அடுத்த நாள் தூக்கிலிட இருந்த போது துரிதகதியில் செயல்பட்டு வெளிவிவகார துறை அமைச்சர், வெளி நாட்டு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் மற்றும் நேரிடையாக பிரதமர், அந்த நாட்டு தூதுவர் ஆகியோர்களை இரவோடு இரவாக சந்தித்து நிலமையை விளக்கி அந்த நாட்டின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களிடம் பிரதமரை பேச வைத்து அந்த உயிர்களை காப்பாற்றியது, அது போல சமீபத்தில் நாகை, அக்கரைப்பேட்டை மீனவர்கள், மற்றும் காரைக்கால் மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது உடனே கட்சி தலைவர் கலைஞரை தொடர்பு கொண்டு விஷயத்தை விளக்கி, தலைவர் ஆணைப்படி மூத்த அமைச்சராக இருந்த திரு.டி.ஆர்.பாலு அவர்களை அழைத்து வந்து நாகையில் உண்ணாவிரதம் இருந்த மீனவர்களிடம் பேசி, பின்னர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் அங்கிருந்தபடியே பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரிடம் பேசி உறுதிமொழி வாங்கி பின்னர் மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததை கைவிட்டனர். அதன் படியே இன்று ( 15.03.2014) வரை இலங்கை சிறையில் இருந்த எல்லா மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.<br />
<br />
அது போல தமிழக அரசை கண்டித்து மாவட்டம் முழுமையும் ஏராளமான மக்கள் போராட்டங்கள் நடத்தி வெற்றியும் கண்டுள்ளார். அது போல ஓய்வறியா உழைப்பாளியாக, தான் இருக்கும் திருவாரூர் மாவட்ட சித்தமல்லியில் இருந்து விடியல் காலை கிளம்பி தினம் தோரும் தன் தொகுதி மக்களின் மற்றும் தான் கழக செயலாளராக இருக்கும் நாகை மாவட்டம் முழுமையிலும் தன் கட்சி காரர்கள் என்று மட்டும் இல்லாமல் அனைத்து பொதுமக்களின் வீட்டு சுக, துக்க நிகழ்வுகளில் இவர் கலந்து கொள்ளாத நிகழ்வே இல்லை எனலாம். இவர் மூச்சுக்காற்று படாத இடமே இந்த மாவட்டத்தில் இல்லை எனும் அளவு இவர் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் பணியாற்றுபவர். பழக இனியவர். புன்னகை மாறாத முகத்துக்கு சொந்தக்காரர். கோபம் என்னும் குணம் ஒரு துளி கூட இவரிடத்தில் கிடையாது. தன் கட்சி, எதிர்கட்சி என எல்லோரிடமும் அன்பாய் பழகும் குணம் கொண்டவர். பழம்பெரும் கமயூனிஸ்ட் தலைவர் திரு. ஏ.கே சுப்பையன் அவர்களின் புதல்வராக இவர் இருப்பதால் கம்யூனிஸ்ட் கட்சிகாரர்கள் இவர் மீது அளப்பறிய அன்பு கொண்டவர்கள்.<br />
<br />
<br />
<b><span style="color: red; font-size: large;"><u><i>எனவே மேற்கூறிய காரணங்களில் இருக்கும் உண்மை நிலையினை கருத்தில் கொண்டு அண்ணன் திரு. ஏ.கே.எஸ். விஜயன் அவர்களை “உதயசூரியன்” சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்! </i></u></span></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPgp5Um3G6FhDwHAdMvt4r1y5uAH4OPZa_O5h9zS2A3TogjAOMeSF0KcG4DgHiGQToyr257wrpOK5oOLGdLxR9ruxkg1QSFE7cpdRHxuxPUXaBCUJSS3-uaHFGJdXjfI01DxnrgJt8BD4/s1600/uday+suriyan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPgp5Um3G6FhDwHAdMvt4r1y5uAH4OPZa_O5h9zS2A3TogjAOMeSF0KcG4DgHiGQToyr257wrpOK5oOLGdLxR9ruxkg1QSFE7cpdRHxuxPUXaBCUJSS3-uaHFGJdXjfI01DxnrgJt8BD4/s1600/uday+suriyan.jpg" height="480" width="640" /></a></div>
<br />அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-32399495561849340612014-03-09T19:46:00.002+05:302014-03-09T19:46:38.711+05:30சில்வேனியா குண்டலகேசி என்னும் அழகி!<br />
<br />
அவள் பெயர் சில்வேனியா குண்டலகேசி! என் வீட்டுக்கு பின்பக்கம் தான் எங்கியோ அவள் இருப்பிடம். என் வீட்டு வழியே தான் காலை ஐந்து மணி முதல் ஆறுக்குள் போவாள். பின்னர் மாலை அதே போல ஐந்துக்கு மேல் ஆறுக்குள் திரும்புவா. சரி வீட்டு வாசல் வழி போவான்னா... அதுவும் இல்லை. என் வீட்டில் கொல்லை பக்க மதில் வழியே நுழைந்து பின்னர் முன் வாசல் கேட் வழியே சாலையை தொட்டு கடந்து தான் போவாள்.ஷார்ட் கட்?? அவள் அழகுன்னா அழகு அத்தனை ஒரு அழகு. கருப்பும், ப்ரவுனும் சேர்ந்த இந்திய அழகிகள் கலர். சும்மா வழ வழன்னு வாழைத்தண்டு..... வெயிட்.. வெயிட்... ஜொள்ளர்ஸ் அஸோசியேஷன் தோழர்ஸ்... இது வேற கதை.<br />
<br />
<br />
அந்த சில்வேனியா குண்டலகேசி என்பது ஒரு பாம்பு தான்.(அந்த பெயரை நாங்கள் வைத்தமைக்கு விருமாண்டி என்ன கேஸ் போடாபோகிறாரா என்ன? அவர் மீது யாரும் கேஸ் போடாமல் இருந்தா சரி தான்) சுமார் ஒரு ட்யூப்லைட்டை விட கொஞ்சம நீளம் அதிகம். அதே போல மொத்தம் எனில் நல்ல முத்தின புடலங்காய் சைஸ். லேடி பாம்பு. (யார்ரா அது லேடின்னாலே பாம்பு தானேன்னு கொரல் கொடுக்குறது.... அதும் நேத்தி தான் வுமன்ஸ்டே வேற..கீப் கொய்ட்).. சரி விஷயத்துக்கு வருவோம். அந்த சில்வேனியா அப்படியாக என் வீட்டு வழியே காலை போய் மாலை திரும்புவதை என் வீட்டில் ஆரம்பத்தில் ஒரு வித அதிசயமாகவும், அவள் சின்சியாரிட்டி கண்டு ஆச்சர்யமாகவும், நிரம்ப பீதியுடனும் சிலாகித்து கொண்டிருந்தது போக இப்போதேல்லாம் ஒரு நாள் வரவில்லை எனில் “என்னாச்சி சில்வேனியாவுக்கு?” என்று ஒருவரை ஒருவர் “ நீ பாத்தியா அவளை” “ நீ பாத்தியா அவளை”ன்னு கேட்டுக்கொண்டும்... “ என்னங்க! இது ஆடிமாசம்ல... ஒரு வேளை அவள் ஆஃபீசில் ஆடி’ட்டிங் எதுனா இருக்கும்.இருட்டுக்கு மின்னாடியே போயிட்டு இருட்டினதும் வர்ரா” போலிருக்கு என சுயவிளக்கம் சொல்லிக்கொண்டும்... ஆக சில்வேனியா இல்லாத நாட்கள் எங்களுக்கு வெறுமை சூழ்ந்த நாட்கள் ஆகிவிடும் நிலைக்கு ஆகிவிட்டிருந்தோம்.<br />
<br />
<br />
இப்படி சுமூகமாக போய்க்கொண்டு இருந்த போது தான் ஒரு நாள் மாலை கவனித்தேன். சில்வேனியாவுக்கு முகம் வாடிப்போய் மெதுவாய் களைப்பாய் ஊர்ந்து வந்தது.வயிற்று பக்கம் கொஞ்சம் பெரிதாய் இருந்தது. அடடே என்னாச்சின்னு தெரியலையே என என் மனைவியை அழைத்து “ நாடி” பார்த்து எதுனா “விஷேஷமாக” இருக்குமோ என பார்க்க சொல்லலாம் என நினைத்த போதே என் மனைவியும் வர “அடடே சில்வேனியா மாசமா இருக்குது போலிருக்குங்க. கொஞ்சம் பால் எடுத்து வந்து ஊத்துங்க” என்றார் என் மனைவி. “ஏன் எதுக்கு? அது கிட்டத்துல போய் அதுக்கு பால் ஊத்தினா, அடுத்த நாள் எனக்கு பால் ஊத்திடலாம்னு ஆசையா? என்றேன். என் பயம் எனக்கு!<br />
<br />
<br />
அய்யய்யோ! சின்னமாரியம்மன் கோவில் பக்கம் தான் அது ஆஃபீஸ் போகும். அங்க நிறைய நல்ல பாம்பு (ஆண்) கிடக்கு. ஒன்னு கெடக்கு ஒன்னு ஆகியிருக்குமோ? அடடே விஷயம் வெளியே தெரிஞ்சா நாலு பாம்பு நாலு விதமா பேசுமே என்னும் கவலை எனக்கு. இதை பத்தி எல்லாம் சில்வேனியா கவலைப்படவில்லை. அடுத்த அடுத்த நாளும் சின்ன மாரியம்மன் கோவில் பக்கம் ஆஃபீஸ் போவதை தவிர்க்கவில்லை. சரி எதுனா “லிவிங் டு கெதர்”ஆக இருக்கும்... நமக்கென்ன என விட்டு விட்டேன்.<br />
<br />
<br />
ஒரு வாரம் முன்பாக மிகவும் மெதுவாக ஆஃபீஸில் இருந்து மிகவும் களைத்துப்போய் வந்தது. இப்போது கழுத்து முதல் கிட்ட தட்ட வால் வரையிலும் பருத்து போய் இருந்தது. அடடே... ஸ்கேன் எதும் எடுத்துச்சா? தெரியலையே? என்னிக்கு டேட் இருக்கும்? அந்த பாழாய் போன ஆஃபீஸில் மெட்டர்னிட்டி லீவ் எதும் கிடையாதா? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். இந்த நேரத்திலும் சில்வேனியாவை வேலைக்கு அனுப்பும் அதன் குடும்பத்தின் மீது கடுப்பாய் வந்தது. ஒருவேளை சில்வேனியா வீட்டில் ஒரு கிழவி மட்டும் தான் துணைக்கு இருக்கனும். அப்பா அம்மா இல்லாத பெண் போலிருக்கு. இவள் சம்பாதிச்சு தான் கிழவிக்கும் பால், முட்டை ஊத்தனும் போல. இப்படித்தான் ஒரு பாலகுமாரன் கதையில் ஒரு பொண்ணு. சிவில் இஞினியரிங் படிச்சு வேலைக்கு போவா. அவ வீட்டில் ஒரு கிழவி. அந்த பெண் ஆஃபீசில் ஒரு கிழவனோடு லவ்ஸ் ஆகிடும். ஒரு நாள் வேலைக்கு போகும் போது அந்த கிழவி இவளை பார்த்து “ஆண்டவன் உன் பக்கம் எப்பதான் கண் திறப்பானோ?” என்று சொல்லும் போது அந்த பெண் நினைத்துக்கொள்வாள்...”ஏற்கனவே நாலைஞ்சு தடவை தொறந்துட்டார்”ன்னு. அது போல சில்வேனியா வீட்டிலும் நடக்குமோ? என்றேல்லாம் மனதில் கற்பனை செய்து கொண்டேன்.<br />
<br />
<br />
பின்னர் ஒரு வாரம் சில்வேனியாவை என் வீட்டு பக்கம் காணவில்லை. மனசு கிடந்து அடித்துக்கொண்டது. என்ன ஆச்சுதோ தெரியலையே! வாயும் வயிறுமா இருந்த புள்ளயாச்சேன்னு கவலையோடு இருந்தேன். இன்று காலை விடிந்தும் விடியாத நேரம்.வாசல் பக்கம் வந்தேன். அடடே... மிக வேகமாக சில்வேனியா மீண்டும் தன் சிம்ரன் உடலோடு வந்தது. எப்போதும் ஒரே நீளமாக செல்லும் அது இன்று என்னை பார்த்ததும் ஒரு வித வெட்கத்துடன zig zag ஆக ஒரு நெளி நெளிந்து போனது. ஆகா டெலிவரி ஆகிடுச்சி போலிருக்கு. ஓடிப்போய் காலண்டரில் என்ன நட்சத்திரம் என பார்க்க தோனுச்சு. அப்படி தோணும் போதே ஆச்சர்யம். சில்வேனியா வந்த வழியில் ஒரு முழத்துக்கு ஒரு குட்டி சில்வேனியா. தன் அம்மா வழியில் போனது. அடடே அடுத்து ஒன்னு.... அடடே... இன்னும் ஒன்னு. மொத்தம் மூன்று குழந்தைகள். எல்லாம் அம்மா வழியில் போனது. அனேகமாக சில்வேனியா தன் ஆஃபீஸ்க்கு அழைத்துப்போய் தன் வீட்டுக்காரர் கிட்டே காமிக்கும் போலிருக்கு. “என்னங்க, பையன் என்னை போல இருக்கான். பொண்ணு உங்களைப்போல இருக்கால்ல” என கேட்கலாம். அப்பாடி... எது எப்படியோ சிசேரியன் இல்லாம சுக பிரசவம் ஆனது வரை எனக்கு சந்தோஷம். புள்ள பெத்த பச்ச மண்ணு சில்வேனியா இத்தனை வெரசாவா ஆஃபீஸ் வரனும் என மனசு தவித்தது!<br />
<br />
<br />
ஆச்சு! மாலை சில்வேனியா இப்போது தான் வீடு திரும்பியது. அதன் பின்னால் மூத்த மகள், அடுத்து ரெண்டாவது மகள். அடுத்து கடைக்குட்டி பயல். அவனுக்கு தான் கொஞ்சம் வால் ஜாஸ்தி. (வால் கொஞ்சம் நீளமாக இருந்ததால் நானே அதை ஆண் குழந்தை என முடிவு செய்து கொண்டேன்). இன்றைக்கு அது தான் பிரச்சனையே. பெண் குழந்தைகள் அழகாய் சில்வேனியா போல என் வாசல் கேட்டில் புகுந்து மண் வழியே சந்தில் புகுந்து கொள்ளைப்பக்கம் வழியே மதிலில் கீழே சில்வேனியா போட்டு வச்சிருந்த ஓட்டை வழியே போல இந்த வால்பையன் மாத்திரம் என் வீட்டு சிமெண்ட் போட்ட இடம் வழியே வந்து என் வண்டி மேல் ஏறி சந்து பக்கம் இறங்கி சில்வேனியாவுக்கு முன்னாடி போய் அந்த மதில் ஓட்டைக்கு ஓடினான். இதை சில்வேனியாவும் கண்டிப்பது போல தெரியவில்லை. மாறாக வீட்டுக்குப்போய் “அப்பனைப்போலவே ரொம்ப சுட்டி” என சொல்லி திருஷ்டி கழிப்பாள் போலிருக்கு! எனக்கு தான் அல்லுவிட்டு போச்சுது. கேட் வழி போவது எல்லாம் ஓக்கே தான். என் வண்டி நிறுத்தும் இடம் வழியே வந்தால்....?<br />
<br />
<br />
{ இது போலத்தான் மூன்று வருடம முன்பாக என் வீட்டுக்குள் வந்த ஒரு பாம்பு பற்றி நான் எழுதி நீங்கள் படித்திருப்பீர்கள். (அப்படி படிக்காதவர்கள் இந்த சுட்டிக்கு போய் படிக்கவும் <a href="http://abiappa.blogspot.com/2010/08/blog-post_25.html">http://abiappa.blogspot.com/2010/08/blog-post_25.html</a> ) }<br />
<br />
இந்த வால்பையன் அது போல எதுனா துடுக்குத்தனமா இருந்தா என்ன செய்வது? இதுக்காகவே எங்கள் நகரில் இருக்கும் “ நாகம்மா” கிழவி கிட்டே போய் கன்சல்ட் செய்ய போனேன்!<br />
<br />
<br />
“ஆத்தா, வீட்டுல வண்டி வைக்கும் இடம் வழியே பாம்பு குட்டி ஒன்னு வருது”<br />
<br />
<br />
“ஒரு மூணு வருசம் மின்னாடி கூட வந்துச்சுல்லா.. அப்ப நான் சொன்ன மேரி நீனு பெரியமாரியம்மன் கோவில் பின்னாக்க இருக்கும் புத்துல முட்டை வச்சியா?”<br />
<br />
<br />
“ம்.. வச்சனே, நாட்டு கோழி முட்டை வைக்கனுமா, ஒயிட்லகான் வைக்கலாமா? பால்வாடி டீச்சர் கிட்டே கம்மி காசுக்கு வாங்கின தானா அனா முட்டை போதுமான்னு கூட நான் கேட்டேன். நீ தான் எதுனா வையி. பாம்பு என்ன ஏ வி சிலயா போய் படிச்சுட்டு வந்திருக்கு கேட்டியே”<br />
<br />
“இது நடந்து மூணு வருஷம் இருக்கும்லா... ஒன் வூட்டு பாலு கூப்பன் கூட மாசா மாசம் மாத்துறீல்ல. (ரினீவல்). இது சாமி விசயம். மூணு வருசத்துக்கு ஒரு முட்டைன்னா கட்டுபடியாவுமா? எப்பாவோ ஒன் இக்கிரிமெண்டு காலாவதியாயிருக்கும். மாசா மாசம் வக்கினும். அதான் ஒனக்கு காட்டாப்பு காட்டிருக்கு நாவம்மா... இன்னிக்கே அங்கிட்டு போயி ஒரு முட்டை வச்சிட்டு வா”<br />
<br />
<br />
வீட்டுக்கு வந்தேன்.... ஃப்ரிட்ஜ் திறந்து பார்த்தேன். முட்டை எதும் இல்லை. ஆனால் சாப்பாட்டுக்கு தொட்டுக்க முட்டை மசாலா கறி இருந்தது. அதை ஒரு சின்ன டப்பாவில் கொட்டிக்கொண்டு புத்து பக்கம் போக வெளியே வந்தேன்.<br />
<br />
<br />
என் மனைவியும் மகளும், மகனும் என்னிடம் “ ‘சினேக்’ கா,அமலா ‘பால்”, இதல்லாம் பெண் குட்டிகளுக்கு, ஆண் குட்டிக்கு நட்ராஜ் ஆசைப்படி சோட்டா பீம் ... உங்களுக்கு ஆட்சேபனை இல்லியே”<br />
<br />
<br />
“ஊகூம் இல்லை” என சொல்லிவிட்டு முட்டை மசாலாவுடன் வெளியே நடந்தேன். அவரவர் கவலை அவரவர்களுக்கு! ஆனால் ஒன்னு மட்டும் நிச்சயம்! உலகத்திலேயே பாம்பு புத்துக்கு மசாலா முட்டை வைக்கப்போகும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்பது மட்டும் உண்மை!<br />
<br />அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5838817190698243002014-02-28T21:12:00.001+05:302014-02-28T21:12:27.074+05:30மகேந்திரன் என்னும் திமுக தொண்டன்!அது 1997. அப்போது நான் வெளிநாட்டில் சம்பாதிச்சது போதும் என முடிவெடுத்து இந்தியா வந்து பெரிய தொழிலதிபர்(???!) ஆகனும்னு நினைச்ச நேரம்! வெளிநாடு போய் பொண்டாட்டி புள்ளைகளை பார்க்காமல் இரவு பகல் என உழைத்து கையில் கொஞ்சம் காசு வந்த பின்னே வருமே ஒரு ஆசை. அது தான் எனக்கும் வந்தது!<br />
<br />
வந்து ஆரம்பிச்ச பிஸினஸ் என்பது ஒரு மெத்தை கடை! duroflex, kurlon, fibroflex, sleep வெல், என எல்லாத்துக்கும் மாவட்ட டீலர்! ஓஹோன்னு போச்சுது. அப்போது என் கடைக்கு ஒரு ஆள் தேவைப்பட்ட போது என் நண்பன் அப்சரா கார்த்தி கிட்டே கேட்டேன். அவன் சொன்னான்... “ஒழுங்கா உழைக்கும் வர்க்கம் எனில்... சும்மா ஓப்பி அடிக்காம உழைக்கும் வர்க்கம் எனில் தாழ்த்தப்பட்ட வர்க்கம் தான். அவர்கள் தான் உண்மையான உழைப்பாளிகள்” என சொல்லி தன் கடையில் வேலை செய்த பகலவன் தம்பி மகேந்திரனை அனுப்பினான்.<br />
<br />
கடை என்பதோ ஒரு மயிலாடுதுறையின் பிரபல மருத்துவமனை இருக்கும் கட்டிடம். அது முதல் மாடி! கீழே கடை . இரண்டாவது மாடியில் 12 வீடுகள். கிட்டதட்ட பத்து வீடுகள் டாக்டர்கள் வீடுகள். அதிலே என் வீடு 12ம் வீடு.<br />
<br />
இவன் மகேந்திரன் காலை 9 மணிக்கு வருவான். இரவு 9 மணிக்கு போவான். அப்போது அபிபாப்பா அவங்க அம்மா வயிற்றில் 6 மாத குழந்தை!<br />
<br />
இந்த மகேந்திரன் மற்றும் நான், என் மனைவி .... இது தான் குடும்பம். மதிய சாப்பாடு எங்கள் இருவருக்கும் (அல்ல மூவருக்கும்) என் மனைவி பிள்ளைதாச்சி எடுத்து இரண்டு மாடி இறங்கி எடுத்து வரும்.<br />
<br />
கடையை பாதி ஷட்டர் எடுத்து விட்டு நாங்கள் சாப்பிடுவோம்.<br />
<br />
பின்னர் என் மனைவி பிரசவத்துக்கு அவங்க வீட்டுக்கு போன பின்னே நானும் மகேந்திரன் மட்டுமே! மதிய சாப்பாடு அய்யப்பன்ல ஏதோ புரோட்டா வாங்கி வருவான். சாப்பிடுவோம். ஒரு நாள் என் மனைவிக்கு பிரசவ வலி என போன் வந்ததும் நான் ஓடினேன். அடுத்த நாள் காலை அவனும் வந்து விட்டான். வரும் போதே குழந்தைகளுக்கான ஒரு சின்ன Bet set வாங்கி வந்தான். வாங்கி வந்தான் என சொல்லக்கூடாது. எடுத்து வந்தான். ஏனனில் அது என் கடையில் இருக்கு. கொடுக்கும் போதே “அண்ணே, இது நான் எடுத்து வரலை, வாங்கிகிட்டு வந்திருக்கேன். என் சம்பளத்தில் கழிச்சுகுங்க” என சொன்ன போது சிரித்துக்கொண்டேன்.<br />
<br />
<br />
பின்னர் அபி பிறந்து 3 மாதம் ஆன போது அவளுக்கு தாய் தந்தை முகம் தவிர மகேந்திரன் முகம் கூட தெரிந்தது. அவள் வளர வளர “அண்ணே, அண்ணே”ன்னு அவன் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு போகும் போது அழ ஆரம்பித்தாள்.<br />
<br />
இப்படியாக இருக்கும் போது ஒரு நாள்... விடுதலை சிறுத்தைகள் ஒரு ஊர்வலம். என் கடையின் எதிரே தான் ஊராட்சி மன்ற அலுவலகம மற்றும் ஆர். டி ஓ ஆபீஸ். அதை நோக்கி ஊர்வலம். மிக கோபமாக சிறுத்தைகள் வர வர அங்கே கடைத்தெருவில் பல கடைகள் கண்ணாடிகள் உடைந்து விட்டது. விஷயம் போனில் வந்தது.<br />
<br />
இங்கே போஸ்ட் ஆபீஸ் வழியே கூட்டம் நுழைந்ததும் மகேந்திரன் என் கடையின் முன்னே நின்று கண்ணாடி சைன் போர்ட் முன்னே நின்று கொண்டு ஊர்வலம் பார்த்து “உம் போங்க போங்க”ன்னு கத்தினான். அதனால் என் கடை போர்டு தப்பியது! அப்போது ஆர். டி ஓ ஆபீஸ் முன்பாக இருந்த போலீஸ் படை முன்னேறி சுட ஆரம்பித்தது. சுட என்றால்... தோசை சுட இல்லை... நிஜ துப்பாக்கி சூடு. அதிலே நடுவே மாட்டிக்கொண்டது என் தம்பி கொக்கரக்கோ சௌம்யனின் மனைவியின் தோழியும் தான். அவங்க ஒரு காலேஜ்ல வேலை செஞ்சு கிட்டு இருந்தாங்க. அவங்க எக்கு தப்பா நடுவே மாட்டிகிட்டாங்க.<br />
<br />
நான் மகேந்திரனிடம் சொன்னேன். “டேய் போய் காப்பாத்துடா”ன்னு கத்தினேன். அதுக்குள்ள ரெண்டு ரவுண்டு சுட்டு முடிஞ்சுது. நாலு பேர் சுருண்டு கிடக்காங்க. ஓடிப்போய் அவங்களை இழுத்துட்டு வந்தான். அவங்க ரெண்டு மாடி ஓடி என் வீட்டில் மேலே ஒடுங்கிட்டாங்க.<br />
<br />
துப்பாக்கி சூடு நடக்கும் போதே ஒரு வண்டில இருந்து போலீஸ் வீடியோ எடுத்து கிட்டு இருந்துச்சு.<br />
<br />
பின்னே தான் தெரிந்தது “துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு” என!<br />
<br />
அடுத்து அடுத்து.... அரசு தன் வேலையை செய்ய தொடங்கியது! துப்பாக்கி சூடு நடந்த என் கடை முன்னே தன் கடை சைன் போர்டு காப்பாத்த நின்ன மகேந்திரன் கைது செய்யப்பட்டான். அது போல பலரும். ஆனால் மகேந்திரன் சின்ன வயசு. 18 கூட ஆகலை என்பதால் அவன் மயிலாடுதுறை கிளை சிறைச்சாலையில் வைக்கப்பட்டான். வைக்கும் படி செய்தேன் என கூட சொல்லலாம். ஏனனில் அப்போது திருச்சி ஜெயில் சூப்பரிண்டெண்ட் என் மைத்துனர் திரு தாஸ் அவர்கள். தாஸ் அத்தான் கிட்டே விஷயம் சொன்ன போது “ சரிடா மாப்ள! பையன் சின்ன பையன். செஞ்ச குத்தாமோ பெரிசு. என்ன செய்யலாம் சொல்லு” என்றே ஆரம்பித்தார். அத்தானிடம் விபரம் சொல்லி அவன் வயதை காரணம் காட்டி மயிலாடுதுறை கிளை சிறையில் வைத்தோம்!<br />
<br />
அதற்கு அடுத்த நாள் அபிக்கு ஒரு வயது பூர்த்தியாகி மொட்டை போட்டு காது குத்தனும். அதும் முடிஞ்சுது!<br />
<br />
இங்கே நான் போய் சிறையில் “எலேய் தம்பி பாப்பாக்கு மொட்டை போட்டு காது குத்தியாச்சு” என்றேன். அழுதான்.<br />
<br />
“ஏண்டா அழுவுற?”<br />
<br />
“போங்கண்ணே, அது பச்ச புள்ள... வலிக்கும்ல”<br />
<br />
சந்தானம் மாதிரி “அட கிருக்குபயபுள்ள”ன்னு சொல்லிட்டு வந்தேன்.<br />
<br />
அடுத்த நாள் அபிஅம்மா கோழி குழம்பு வச்சி “ஏங்க மகேந்திரனுக்கு இது” என கொடுக்க கொண்டு போய் கொடுத்தேன்! அங்கே எனக்கு கெடுபிடிகள் கிடையாது! மொட்டை தலையுடன் காதில் தோடு தொங்கட்டான் கூட அபியை தூக்கி கிட்டு ஜெயிலுக்கு போனேன். தூக்கி கொஞ்சினான். அவனுக்கு யாரோ கொடுத்த பிரட் கொடுத்தான்.ஊட்டி விட்டான். சாப்பிட்டது குழந்தை! நாங்க கொடுத்தா எதும் சாப்பிடாத குழந்தை சாப்பிட்டது! கண் கலங்கினேன்!<br />
<br />
இப்படியாக எங்கள் குடும்ப உறுப்பினர் மகேந்திரன்!<br />
<br />
பின்னர் வழக்கம போல ஃபாரின் போனவன் வாழ்க்கை ஃபாரின்ல தான் போய் முடியும் என்னும் சாபத்தின் படி நான் மீண்டும் துபாய் போனேன். ஆச்சு அதன் பின்னர் பல வருஷம்....<br />
<br />
<br />
கவனிக்க இந்த கதை எல்லாம் 1997-98 , 99 ல் இப்போ வருஷம் 2014.<br />
<br />
<br />
<br />
-------------------------------------------<br />
<br />
இரு நாட்கள் முன்பாக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை சீர்கேடு போராட்டம்!<br />
<br />
அப்போது ஒருத்தன் என் கிட்டே வந்தான். பளீர் வெள்ளை கருப்பு சிவப்பு கரை வேட்டி! ஆலயா சட்டை.! குண்டாண உருவம்!<br />
<br />
“என்னை தெரியுதா அண்ணே”<br />
<br />
“தெரியலையே”<br />
<br />
“திரும்ப பாருங்க... என்னை இன்னுமா தெரியலை?”<br />
<br />
“தெரியலைங்க...”<br />
<br />
“என்னாண்ணே, இங்க போட்டு பேசுறீங்க? நான் தான் உங்க மகேந்திரன்”<br />
<br />
எனக்கு அப்போதும் நியாபகம் வரலை.....<br />
<br />
“ நீங்க பேஸ்புக்ல இருக்கீங்கலா?”<br />
<br />
“அப்டீன்னா?”<br />
<br />
“எனக்கு தெரிஞ்சு S.P. மகேந்திரன்ன்னு ஒருத்தரு பேஸ்புக்ல இருக்காரு.. சாரி அதான் கேட்டேன்”<br />
<br />
“அண்ணே, அண்ணி நல்லா இருக்காங்கலா? அபிபாப்பா எப்டி இருக்கு? இப்ப என்ன படிக்குது? என்னை அதுக்கு தெரியுமா?”<br />
<br />
“புரியலைப்பா... நீங்க யாருன்னு?”<br />
<br />
<br />
இடி இடிச்சது போல சிரிச்சான்.<br />
<br />
“அண்ணே, சொல்வீங்களே! அப்போ சொல்வீங்களே! திமுக என்பது தான் உண்மையான இயக்கம். அங்கே சாதி மத பேதம் ஏதுமில்லை. கட்சிக்கு வரனும். வாடா வான்னு சொல்லுவீங்களே, நான் அப்போ எந்த கட்சியும் இல்லை. இப்போ திமுக! தவிர நத்தம் வைஸ் பிரசிடண்ட் அண்ணே! வைஸ் பிரசிடண்ட். ஒன்றியத்தில் நான் பெரிய ஆளு அண்ணே. எனக்கு இப்பவே என் பாப்பாவை பார்க்கனும் போல இருக்கு. அண்ணிய பார்க்கனும் போல இருக்கு. எல்லாரும் நல்லா இருக்காங்கலா அண்ணே....”<br />
<br />
மகேந்திரன் பேச பேச என் மண்டையில் திமுக ரத்தம் இன்னும் பீறிட்டு பாய்ந்தது!<br />
<br />
அங்கே மைக்கில் எங்கள் மாவட்டம் “ நாம எல்லாம் ஒரே ரத்தம்தான்யா.... “ன்னு ஏதோ பேசிக்கிட்டு இருந்தது காதில் வந்து விழுந்தது!<br />
<br />
அப்போது ரோட்டரி மிட் டவுன் இளங்கோ எனும் திமுக நண்பர் வந்து “வாங்க அபிஅப்பா உங்க வண்டி அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் தானே இருக்கு. அங்க கொண்டு விடுகிறேன்” என சொல்லி அழைத்து போனார்.<br />
<br />
<br />
அடடே! எனக்கே தெரியாமல் ஒரு கட்சி காரனை உண்டாக்கி இருக்கேன் என்னும் பெருமிதத்தில் வீடு வந்து சேர்தேன்!<br />
<br />அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com6