பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 28, 2008

அபிஅப்பாவின் தசாவதாரம்!!!

1.ஜெயந்தி! நான் ஷார்ப்பா மார்ச் 27 இரவு கிளம்பி 28 காலை பெங்களூர் வந்திடுவேன். பாப்பாவை நீதான் பார்த்துக்கனும், தம்பிய 3 நாளைக்கு ஜீவ்ஸ் தங்கமணிகிட்ட தத்து கொடுத்திடலாம். மங்களூர் சிவாவுக்கும், பொடியன் சஞ்சய்க்கும் எனக்கும் ஓர சீட் தான். நம்ம வாத்தி இளவஞ்சியும் நானும் ஹம்பி போன பின்ன தனியா கிளம்பிடுவோம் நீதான் உன் அண்ணிய என் பக்கம் திரும்பாம பார்த்துக்கனும். ஆஹ நாம மார்ச் 30 தூள் கிளப்பறோம். அப்பாகுரங்கு நாமக்கல் சிபி கூட வர்ரார்.(அப்பாகுரங்குன்னா என்னான்னு குட்டி குரங்கு துர்க்காகிட்ட கேட்டுக்கலாம்)


2.குசும்பா! நீ எப்படின்னு எனக்கு தெரியலை! ஆனா நான் சொன்ன சொல் தவற மாட்டேன் என உனக்கு நல்லாவே தெரியும். ஷார்ப்பா மார்ச் 30 காந்தி காக்காய் ஓட்டும் இடத்துக்கு மாலை 5க்கு வந்திடுவேன். தல பாலபாரதி அரேஞ் பண்ணின மீட்டிங்க்கு வந்திடுவேன். நாம உன் கல்யாண பத்திரிக்கை குடுத்துடுவோம். தூள் கிளப்பிடலாம்.

3.எக்ஸ்: என்னப்பா, உன் அப்பாவுக்கும் வயசாச்சு, இனிமே நீதான் நம்ம சியாமளா கோவில் டிரஸ்ட்டியா இருக்கனும் என்ன சொல்றே!

நான்: என்னங்க நான் துபாய்ல இருக்கேன், கோவில் பொருப்பு எல்லாம் எனக்கு எதுக்கு!

எக்ஸ்: அதனால என்ன நீங்க அங்க இருந்தா என்ன ரப்ரிதேவி ஆட்சி பண்னுங்க!

நான்:மனதுக்குள் (பூலாந்தேவிய போய் ரப்ரிதேவின்னு சொல்றாங்களே) சரி மார்ச் 30க்கு மீட்டிங் போட்டுடுங்க நான் ஷார்ப்பா மாலை 5க்கு வந்திடுவேன்!!

4.ஸ்கூல் HM: தொல்ஸ், நம்ம சீமாச்சு 20 நாள் முன்ன வந்த போது ஏதோ ஏர்கலப்பை பத்தி சொன்னார். நம்ம ஸ்கூல் ஸ்டாப்ஸ் எல்லாருக்கும் சொல்லி குடுத்துட்டு போப்பா!

நான்: அதுக்கு என்ன சார் சொல்லி குடுத்தா போச்சு! நம்மா ஸ்டாப்ஸ் எல்லாரையும் ஷார்ப்பா மார்ச் 30 க்கு காந்தி காக்காய் ஓர்ரும் இடத்துக்கு வர சொல்லிடுங்க!

ஸ்கூல் HM: ஓ நம்ம மீட்டிங் ஹாலா! வர சொல்லிட்டா போச்சு!

5.வீட்டுக்கு எதிர்ல உள்ள கிரவுண்டு பசங்க: அங்கிள், நாங்க நம்ம திருவள்ளுவர் நகர் கிரிக்கெட் டீம் vs ராஜேஸ்வரி நகர் டீம் மேட்ச் நடக்குது அங்கிள்,

நான்: சரி, யார் கேப்டன்!

பசங்க: நம்ம ராமசாமி தான்! அங்கிள், நீங்க தான் மேட்சுக்கு தலைமை தாங்கி நம்ம டீமுக்கு ஸ்டெம்ப், பேட், கிளவ்ஸ் எல்லாம் வாங்கி தரணும்ன்னு நாங்க முடிவு செஞ்சுட்டோம்!

நான்: அதல்லாம் வாங்கி தர்ரேன் ஆனா நம்ம நட்டுதான் கேப்டன் ஓக்கேவா!

பசங்க: அது எப்படி முடியும் அங்கிள்!

நான்: முடியும் பசங்களா! முடியும்!(படத்தை பார்க்கவும்)


சரி எப்போ மேட்ச்!

பசங்க: ஷார்ப்பா மார்ச் 30 மாலை 5க்கு நீங்க பரிசு தர்ரீங்க!

6.அம்மா: தம்பி! உன் கிட்ட கொஞ்சம் பேசனும்டா! நீ எப்போ ஃப்ரீ;

நான்: மார்ச் 30 மாலை 5க்கு நான் ரொம்ப ஃப்ரீமா உன் மடில படுத்துகிட்டே பேசலாம்!

7.நான்: சார் எப்படியிருக்கீங்க நான் அபிஅப்பா!

முத்துலெஷ்மிஅப்பா: தம்பி! எப்படி இருக்கீங்க! எப்போ வந்தீங்க, எப்போ வீட்டுக்கு வர்ரீங்க, ஆதிரையான் எப்படி இருக்கார்!(ஆதிரையான் முத்துலெஷ்மி அம்மா வச்ச பேர்)

நான்: நல்லா இருக்கேன்! பாப்பா, தம்பி, கூட்டிகிட்டு ஷார்ப்பா மார்ச் 30 மாலை 5க்கு வந்திடுவேன் சார்!

8.தங்கமணி: என்னங்க என் அக்கா பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க வர்ராங்க எந்த தேதில வந்தா உங்களுக்கு சவுகரியமா இருக்கும்?

நான்: மார்ச் 30 மாலை 5 மணிக்கு நான் ஃப்ரீ

9.அபிபாப்பா: அப்பா என் பிரண்ட் மொஃபீனா வீட்டுக்கு போகனும் எப்போ போகலாம்! எங்க அப்பாதான் உலகத்திலேயே அழகு அப்பான்னு சொல்லிட்டேன்!

நான்: அதுக்கு என்னடா கண்ணு நான் மார்ச் 30 மாலை 5க்கு ரொம்ப ஃப்ரீ வந்துடலாம்!

10.திருவள்ளுவர் நகர் வாசிகள்: அபிஅப்பா! உங்களுக்காகத்தான் வெயிடிங்! நாம நெனச்ச மாதிரி இல்ல நம்ம கவுன்சிலர் மாங்கா மண்டி கிரவனன்! அநியாயத்துக்கு குடிச்சுட்டு அலப்பறை பண்றான். நாம நமக்கு நாமே திட்டத்துல சேர்ந்து ரோடு போடுவோம்!

நான்: ங்கொய்யால அவன் குடிக்கிறானா, நான் கேக்குறேன் அவனை! அவன் இப்ப எங்க இருக்கான்! சரி மார்ச் 30 மாலை 5க்கு மீட்டிங் போடுங்க, ஷார்ப்பா வந்திடுவேன்!
******************************************************
சந்திரசேகர்(அட்வகேட்): அபிஅப்பா, எப்ப வந்தீங்க! நம்ம பசங்க எல்லாம் உங்களை பார்க்க ஆசையா இருக்காங்க! எப்ப வர்ரீங்க!

நான்: சார் நான் வந்து……

சந்திரசேகர்: இல்ல சார்! நீங்க மார்ச் 30 ரொம்ப பிசி! போகட்டும்! நீங்க எப்போதும் போல உங்க நண்பர்கள் திருமணத்துக்கு செய்வது போல் இப்பவும் செய்யுங்க அபிஅப்பா! புண்ணியத்தை பரிசா கொடுப்பது நீங்க மட்டும் இல்லைன்னு இப்போ புரிஞ்சுகிகிட்டேன் உங்க சீனியர் உங்க சீமாச்சு அண்ணன் பதிவுகளை பார்த்து!

நான்: சார்! அய்யனார் கல்யாணத்துக்கு ஏப்ரல் 14 சாப்பாடு பின்ன என் பெரிய கூட்டத்தோட வந்து ஏப்ரல் 15 செம சாப்பாடு குசும்பன் என்கிற சரவணன் கல்யாணத்துக்கு!!! சார் நான் உங்களுக்கு கொடுத்த வாக்கை எப்பவாவது மீறி இருக்கேனா????????????????


டிஸ்கி:”அன்பகம்” செவிடு ஊமை குழந்தைகளும் நம் குழந்தைகளே!!!

March 27, 2008

Naan Romba Busy!!!!

பாப்பா ஷூக்கு பாலிஷ் போட்டாச்சு வேற என்ன செய்யனும்!

தம்பி உச்சா போயிட்டான், நானே அவன் டவுசரை மாத்திட்டேன்….

நைலக்ஸ் புடவைக்கு அஞ்சு நிமிஷம் சுத்த விட்டா போதுமா?

வாட்டர் டேங்கை என்னமா சுத்தம் பண்ணியிருக்கேன் பாரு!

ஹல்லோ அவத்திகீரை கிடைக்கலை அதுக்கு பதிலா வேற எதுனா கீரை வாங்கியாரவா?

குக்கர் இதுவரை அஞ்சு விசில் அடிச்சுடுச்சு ஸ்டவ்வை ஆஃப் பண்ணிடலாமா?

துணி எல்லாம் காய்ஞ்சுடுச்சு எடுத்து வந்துடவா

அதனால என்ன எனக்கும் மானாட மயிலாட பிடிக்காது நாம ஜோடி நம்பர் 1 பார்க்கலாமே ஒன்னும் பிரச்சனை இல்லை!

ஃபேனை துடைச்ச பின்ன பாத்ரூம் கழுவலாமா இல்ல முதல்ல பாத்ரூம் கழுவிடவா?

பாப்பா ஹோம் ஒர்க்கை முடிச்சுட்டேன்!

ஹய்யோ நீ எதுக்கு வெங்காயம் எல்லாம் உரிச்சுகிட்டு, நான் இருக்கேனே பார்த்துக்க மாட்டேனா?

என்னது டெபாசிட்ன்னா உன் பேர்லயும் இன்சூரன்ஸ்ன்னா என் பேரிலுமா ஓக்கே டன்!

வண்டி ரெடி, இன்னிக்கு எந்த கோவிலுக்கு?

என் ஹெல்த் மேல என்ன ஒரு கரிசனம் உனக்கு, காபில சர்க்கரையே இல்லியே!

உனக்கு பிடிச்சு இருந்தாலும் சரி நான் ஒத்துக்க மாட்டேன், இந்த சீரியலை மாத்து, அவ மூக்கை பார்த்தாலே வெண்டைக்காய் மாதிரி இருக்கு, காதை பாரு எத்தினி தோடு…சே இவளெல்லாம் எதுக்கு நடிக்க வர்ரா! உவ்வே!

பேங்க்குக்கு போயிட்டு, எலக்ரிக் பில் கட்டிட்டு, அரிசி மூட்டை எடுத்துகிட்டு வரும் போது கேஸ்க்கு பதிய வச்சுட்டு, மங்கையர்மலர் வாங்கிட்டு சுருக்க அஞ்சு நிமிஷத்துல வரனுமா, வந்துட்டா போச்சு!

என்னது வாசல்ல சங்கர், கார்த்தி வந்திருக்காங்கலா, நான் இல்லைன்னு சொல்லிடு!

எட்டு புள்ளி எட்டு வரிசை எல்லாம் டூ மச் தான் இருந்தாலும் ட்ரை பண்றேன்!

என்னது குசும்பன் கல்யாணத்துக்கு பட்டு புடவையா? ஓக்கே டன்(காசு வசூல் பண்ணிக்கலாம் குசும்பன் கிட்ட இருந்து)

டேனி&டேடி மாதிரி நான் டேன்ஸ் ஆடனுமா, அப்பதான் தம்பி சிரிப்பானா, கஷ்டம் தான் முயற்சி பண்றேன்!

வாசல்ல எவனோ தம் அடிக்கிறான் போல இருக்கு, போய் விரட்டி விடு! எனக்கு அந்த புகை நாத்தம் அலர்ஜின்னு உனக்கு தெரியாதா?

தம்பி மீதி வச்ச செரிலாக்கை வீனாக்காம சாப்பிடனுமா, அய்யோ வாந்தி வருமே வந்தாலும் பரவாயில்லை நீ சொன்னா அப்பீல் ஏது?

தமிழ்மணமா அப்படீன்னா????

March 9, 2008

மண்டபத்து சரக்கு!(சும்மா சோம்பல் முறிச்சுக்க இந்த பதிவு)

நம்ம பசங்களுக்கு ஒரு கெட்ட பழக்கம். நமக்கு ஏதாவது நல்ல காமடியோ, நல்ல படமோ உதாரணத்துக்கு ஒரு நமீதா படம்ன்னு வச்சுகோங்களேன் மெயில்ல வந்தா, சரி நாம் பெற்ற இன்பம் நம்ம பசங்களும் பெறட்டும் என்கிற நல்ல எண்ணத்தில் அனுப்பினா உடனே பதில் வரும் மெயிலை திறந்து பார்க்காமலே"அண்ணே இது நான் சின்ன பையனா இருக்கும் போது எனக்கு வந்துடுச்சு, நீங்க வர வர மொழி பாஸ்கர் மாதிரி ஆயிட்டீங்க"ன்னு ஸ்டேண்டர்டு டெம்பிளேட் பதில் வரும். இதனாலத்தான் நான் ஏதும் சொல்வதே இல்லை. பாருங்களேன் இந்த பதிவுக்கு கூட இதே மாதிரி பின்னூட்டம் தான் வரும்:-))

ஒரு பாட்டி தன் அழகான பேத்திகூட ஒரு ஊர்ல இருந்து அடுத்த ஊருக்கு போக ஒரு ரயில்வே ஸ்டேஷனில் நிக்கிறாங்க. அப்போ ஒரு ஸாஃப்ட்வேர் இஞ்சினியர் (நம்ம ராம் மாதிரின்னு வச்சுகோங்க)தன் பிராஜக்ட் மேனேஜர் கூட பாட்டி போகும் அதே ஊருக்கு போக வந்தார். ரயிலுக்காக காத்துகிட்டு இருக்கும் நேரத்திலே நம்ம இஞ்சினியர் அந்த பொண்ணை டாவடிக்க ஆரம்பிச்சுட்டான். அந்த பொண்ணும் கம்பெனி குடுக்க ஆரம்பிச்சுடுச்சு. மேனேஜருக்கும் பாட்டிக்கும் செம கடிப்பாகிடுச்சு. ஆனாலும் ராம் தன் சேவையை தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்கார்.

அந்த நேரம் பார்த்து ரயில் வந்துடுச்சு. 4 பேரும் ரயில்ல ஒரே பெட்டியிலே ஏறிகிட்டாங்க. டாவு தொடருது. அப்ப ரயில் ஒரு டணலுள்ளே போகுது. அதனால ரயில் முழுக்க இருட்டாகிடுச்சு. அப்ப சக்குன்னு ஒரு முத்த சத்தமும் அதை தொடர்ந்து பளார்ன்னு ஒரு அரை விழும் சத்தமும் கேக்குது. பின்ன ரயில் டணலை விட்டு வெளியே வந்துடுச்சு.

மேனேஜர் நினைச்சுகிட்டார். "அடப்பாவி நம்ம ராம் கிஸ்ஸடிச்சுட்டான் போல இருக்கு அந்த பொண்ணை. அது நாமதான்னு தப்பா நினைச்சுகிட்டு நம்மை அடிச்சிடுச்சே"

அந்த பாட்டி நினைச்சுகிட்டாங்க "சபாஷ் நம்ம பேத்தின்னா பேத்திதான். அந்த இஞ்சினியருக்கு நல்லா வேணும். பேத்திக்கு முத்தம் குடுத்தான், அதான் அவ சரியா அடிச்சிட்டா"

பேத்தி நினைச்சுகிட்டா "என்னா சூப்பரா கிஸ் பண்ணினார் நம்ம இஞ்சினியர். பாவம் நம்ம பாட்டி கொஞ்சமும் இங்கிதம் இல்லாம அடிச்சிடுச்சே, பாவம் நம்ம ஆளு"

நம்ம ராம் நெனச்சிகிட்டார் "இந்த மேனேஜர் தொல்லை தாங்கலை, நிம்மதியா சேட் பண்ண விடுறதில்ல ஆபீஸ்ல, அதனாலத்தான் அவளுக்கு கிஸ் அடிச்ச அடுத்த நிமிஷம் மேனேஜருக்கு வுட்டேன் ஒரு அடி"