பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label ஆ.ராசா. Show all posts
Showing posts with label ஆ.ராசா. Show all posts

April 18, 2014

2G ஸ்பெக்ட்ரம் விளக்கம்! உண்மையான நடுநிலையாளர்களின் கவனத்துக்கு!!!!



நான் கிட்ட தட்ட 2010ம் ஆண்டு மத்தியில் இருந்தே 2G ஸ்பெக்ட்ரம் பிரச்சனை சம்பந்தமாக பல இடங்களில் விவாதித்தும், அதே போல  நானே அவ்வப்போது கட்டுரைகள் எழுதியும், மேலும் சில சமயங்களில் பாட்டியாலா  சி பி ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெறும் விவாதங்கள் மற்றும் பல்டி அடித்த ட்ராய் முன்னாள் அதிகாரி மாத்தூர் போன்றவர்கள் முகத்திரை கிழித்தும் வந்துள்ளேன். இது தேர்தல் நேரம். சென்ற 2011 தேர்தலின் போது இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த போது கூட திமுகவில் இருக்கும் பலருக்கே கூட 2G ஸ்பெக்ட்ரம் என்பதின் முழு பரிமாணம் சரியாக கிடைக்கவில்லை.


 திமுகவினரே கொஞ்சம் பயந்து தான் அது பற்றி அதிகமாக வாய் திறக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் பெரம்பலூர், அரியலூர், கோவை,தஞ்சை  மாவட்டங்களில் 2 ஜி விஷயத்தில் தெளிவான பரப்புரை இருந்தது. திருச்சி சிவா, திராவிட தென்றல் சுப.வீ அய்யா போன்றவர்கள் மற்றும் திராவிடர் கழகம் இவர்களே இந்த விஷயத்தில் பரப்புரையை சரியான நேர்க்கோட்டில் எடுத்து சென்றனர். அதன் பலன் அந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் தலா இரு தொகுதிகள் திமுக வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


இப்போது இந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் நிலைமை அப்படி இல்லை. திமுகவுக்கு எதிரானவர்கள் இதே 2 ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி பேசும் முன்பே திமுகவினர் ஒரு தெளிவான புரிதலுடன் அது பற்றிய விளக்கம் கொடுத்து வருகின்றனர். ஆனாலும் மூளை சலவை செய்யப்பட்ட  சில பொய் பரப்புரையாளர்கள் பழைய பொய்யையே மீண்டும் மீண்டும் சொல்லி வருவதால் இதே விஷயத்தை பற்றி நான் இதுவரை எழுதிய கட்டுரைகள், விவாதங்கள் அனைத்தையும் தொகுத்து சிறியதாக ஆனால் அதே நேரம் எல்லோருக்கும் புரியும் விதத்தில் எழுத நினைத்தேன்.

ஆனால் எங்கள் நண்பர் திரு. ஜே.பி. பிரகாஷ் மிக அருமையான ஒரு கட்டுரையை தன் முக நூலில் வெளியிட்டார். எனவே அந்த கட்டுரையை இங்கே நான் பகிர்கிறேன். நடு நிலையாளர்களும், 2 ஜி விஷயத்தில் உண்மையிலேயே என்ன நடந்தது என ஆர்வம் கொண்டோரும் தயவு செய்து இந்த கட்டுரையை படித்து தெளிவடையவும்! நன்றி திரு. ஜே.பி பிரகாஷ் அவர்களுக்கு! இதோ கட்டுரையை படியுங்கள்!


*********************


திரும்ப திரும்ப சிலர் 2Gயில் ஊழல் ஊழல் என்று கிளிப்பிள்ளையை போல சொல்லி கொண்டு இருக்கிறார்கள்....(நீண்ட பதிவு....2G விஷயத்தில் முழுமையான விளக்கம் கிடைக்க தயவுசெய்து முழுதும் படிக்கவும்)


CAG அறிக்கையில் கூட, எந்த ஓர் இடத்திலும் ' ஊழல் ' ( Scam ) என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. வருவாய் இழப்பு ( Loss of revenue ) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் ஊக இழப்பு.....presumptive loss என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.....


அரசிற்கான வருவாயை அரசின் கொள்கையின் அடிப்படையில் குறைத்துகொள்வது, வருவாய் இழப்பு அல்ல....


Reserve Bank of India Governor D. Subbarao, who served as Finance Secretary to the Centre during 2007-08 said, “It is correct that while determining policy, the government has to make a balance between welfare maximisation and revenue maximisation. In this case, if there was a sacrifice of some revenue, it cannot be said that the government suffered a loss.”


மேலும் , நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் TRAI, 2G அலைகற்றையை ஏலத்தில்தான் விடவேண்டும் என்று என்று சொல்லியிருகின்றதா???


The Telecom Regulatory Authority of India (TRAI) has said in court that it had never recommended an auction for the 2G spectrum..


தொலைத் தொடர்புக் கொள்கை பற்றிய முடிவுகளை எடுக்க, ' TRAI ' ( Telecom Regulatory Authority of India ) என்று ஒரு குழு உள்ளது. அந்தக் குழு, 1994 இல், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை (  2G Spectrum) ஏலத்திற்கு விட வேண்டுமென முடிவெடுத்தது. அதனை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. அந்தக் கொள்கைக்கு ' 1994 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு தேசியக் கொள்கை ' (  NTP 94 - National Telecom Policy - 1994 ) என்று பெயர். அதன் அடிப்படையில், சில பெரிய நிறுவனங்கள் அதனை ஏலத்துக்கு எடுத்தன. ஆனால், அவை தங்களுக்கு வணிக அடிப்படையில் கட்டுபடியாகவில்லை ( Commercially not viable ) என்று கூறி 1998 இல் அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டன. அதனால், அந்தக் குழு ( TRAI ), 99ஆம் ஆண்டு மீண்டும் கூடி, இனி ஏலத்திற்கு விட வேண்டாம். முதலில் வருகின்றவர்களுக்கு முதலில் ( First come first serve basis ) என்னும் அடிப்படையில் கொடுக்கலாம் என முடிவெடுத்தது. அதனை நாடாளுமன்ற மும்,அன்றைய அமைச்சரவையும் ஏற்றன. புதிய கொள்கைக்கு, ' New NTP 99' என்று பெயர். TRAI குழு, ஏன் ஏலத்திற்கு விட வேண்டாம் என்று முடிவெடுத்தது? அந்தக் குழுவே கூறும் காரணம் இதுதான், ஓர் அரசு எல்லாவற்றிலும் இலாப, நட்டக் கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மக்கள் நலத் திட்டங்களால் ஏற்படும் இழப்பை அரசு ஏற்க வேண்டும் என்பதுதான். ரேஷன் அரிசி, உரம், எரிபொருள் முதலியனவற்றிற்கு அரசு மானியம் வழங்கப் படுகிறது. அரசிற்கு நட்டம்தான். வேண்டாம் என்றோ, ஊழல் என்றோ அதனைக் கூற முடியுமா?


 எனவே எந்த ஒரு கொள்கை முடிவையும், அமைச்சராக இருந்த ஆ.ராசா தனித்து எடுக்கவில்லை. அப்படி முடிவெடுக்க எந்த அமைச்சருக்கும் அதிகாரமில்லை. 1999 முதல், அத்துறைக்கு அமைச்சர்களாக இருந்த பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதி மாறன் அனைவரும், அக்கொள்கைப்படி, முதலில் வருபவருக்கு முதலில் என்ற அடிப்படையில்தான் உரிமம் கொடுத்தனர். ஆ.ராசாவும் அதனைத்தான் செய்தார்.


டிராயின் பரிந்துரையின்படி 2003ல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில், ஜஸ்வந்சிங், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கொண்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை முடிவின்படி, அடிப்படைத் தொலைபேசி சேவையில் இருக்கும் நிறுவனங்கள், செல்லுலார் சேவைக்கும், செல்லுலார் சேவையில் இருக்கும் நிறுவனங்கள் அடிப் படைத் தொலைபேசி சேவைக்கும் 2001 இல் நிர்ணயிக் கப்பட்ட உரிமக் கட்டணமான ரூ.1658 கோடியை செலுத்தி, ஏலமின்றி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, வருவாயில் பங்கு போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதனடிப்படையில் ஏலமின்றி 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில், 51 நிறுவனங்களுக்கு இராசா பதவி ஏற்கும் வரை உரிமங்கள் வழங்கப்பட்டன. ஏலமுறையை ரத்து செய்தது பி.ஜே.பி. அரசே தவிர இராசா அவர்கள் அல்ல..


குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டல கதையாக இன்னும் சிலர் தங்களின் 2G கோவணம் லட்சம் கோடி துண்டுகளாய் கிழிந்தபின்னும், ராசா தவறே செய்யவில்லையா என்று கேட்கிறார்கள்....


2007 ஆம் ஆண்டின் நிலவரப்படி, தொலைதொடர்பு வழிகாட்டுதல் ஆணையம் ட்ராய்யோ (TRAI), இல்லை, தேசிய தொலை தொடர்ப்பு கொள்கையோ, 2G அலைகட்ற்றையை ஏலம் விடவேண்டும் என்று சொல்லவில்லை....அப்படி அவர்கள் சொல்லியிருந்து, ராசா அவர்கள் அதை மீறி முதலில் வருபவர்க்கு முன் உரிமை என்ற வழிமுறையை கையாண்டு இருந்தால் அது தவறு..ஆனால் அப்படி ஒன்றும் இல்லை..


டெலிகாம் நிருவனங்களிடையே லெவல் பிளேயிங் இருக்கவேண்டும், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைதொடர்பு சேவை கிடைக்கவேண்டும் என்பதால் அதே விலையில் லைசென்சுகள் அளிக்கப்பட்டன...


தொலைத்தொடர்பில் முன் அனுபவம் இல்லாத நிறுவனகளுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கப்பட்டது - இதில் என்ன தவறு ??? அரசின் டெண்டர் விதிமுறைகளை பின்பற்றும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் உரிமையை அளிக்கலாம்...முன் அனுபவம் கொண்ட நிறுவனகளுக்கு மட்டும் தான் ஸ்பெக்ட்ரம் என்று விதிமுறை உள்ளதா ?? அல்லது ஏற்க்கனவே அவ்வாறு விதிமுறை இருந்து, அதை ராசா மற்றினாரா ????


இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன் அனுபவம் கொண்டவர்கள் மட்டும் தான் அந்த துறையில் இருக்கமுடியும் என்றால், வெறும் BSNL மட்டும் தான் இருக்கவேண்டும்...பாரதி மிட்டல், ஹட்ச் எஸ்ஸார், ஏர்செல் போன்ற நிறுவனங்கள் இந்திய தொலைதொடர்ப்பு துறையில் இறங்குவதற்கு முன், இந்த துறையில் முன் அனுபவம் இருந்ததா ???   கட்-ஆப் தேதியை மாற்றினார் - உதாரணத்திற்கு, 100 லட்டு இருக்கிறது, 15ஆம் தேதிக்குள் முதலில் வருபவர்களுக்கு தலா ஒரு டோக்கன் தரப்படும் , அந்த டோக்கனை தந்து ஒரு லட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் பத்தாம் தேதியே நூற்றுக்கும் அதிகமானோர் வந்து வரிசையில் நின்று, டோக்கனை பெற்றுகொள்கிரார்கள்....அப்போது என்ன செய்வார்கள்...கவுண்டரை 15ஆம் தேதி வரை திறந்திருப்பார்களா இல்லை 10ஆம் தேதியே, டோக்கன் முடிந்து விட்டது என்று சொல்லி முடிவிடுவார்களா??? அதுதான் இதிலும் நடந்தது...நூறாவது டோக்கனுக்கு மேல் உள்ளவர்களுக்கும், மீண்டும் லட்டு வந்தப்பின் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.....(More Additional Spectrom)


 சரி, டோக்கன் உள்ள 100 பேருக்கும் லட்டு உறுதியானது என்ற பிறகு, 10ஆம் டோக்கன் வைதிருந்தவருக்கு முதலிலும், 3ஆம் டோக்கன் வைத்திருப்பவர்க்கு அடுத்தும் கொடுத்தால் என்ன...அதே போல தான் அந்த கட்-ஆப் தேதிக்குள் விண்ணப்பித்த அனைவருக்கும் அலைகட்ற்றை வழங்கப்பட்டது..இதில் என்ன விதி மீறல் உள்ளது...


சரி, அந்த நிறுவனகளிடம் ராசா பணம் பெற்றார் என்றால், இதோ மூன்று வருடங்கள் ஆகிறது, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் உள்ள இந்த வழக்கில், அனைத்து புலனாய்வு அமைப்புகளும் இதுவரை என்ன கண்டுபிடித்து உள்ளார்கள்???? எதை நிருபித்து உள்ளார்கள் ??


வடநாட்டு, ஆரிய ஊடகங்கள் செய்த இடைவிடாத பொய் பிரச்சாரம், சுசாமி, பூஷன் போன்ற நிழல் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் சதி, அதற்க்கு சிஏஜி போன்ற அரசியல் சாசன அமைப்புகள் ஒத்துபோதல், எதிர் கட்சிகளின் தொடர் போராட்டம், நாடாளுமன்றத்தை முடக்குவது என்ற செயல்பாடுகள், சுப்ரீம் கோர்ட் புரிந்துகொண்டவிதம் இவை எல்லாம் சேர்த்துதான் இந்த வழக்கை தீர்மானித்தன....


 2G - மேலும் சில விளக்கங்கள்:-

விளக்கம் : 1

குறைந்த விலைக்கு 2G லைசென்ஸ் வாங்கிய நிறுவனங்கள், அவற்ற்றை மிகபெரிய விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தன. அந்த கொள்ளை லாப தொகைக்கு 2G லைசென்சை ராஜா நேரடியாக விற்றிருகவேண்டும் என்று, ஷேர் விற்பனை மற்றும் FDI போன்றவற்றின் அடிப்படை தெரியாமல் பொங்ககூடாது...எதோ சந்தையில் ஒரு பொருளை 10 ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்று 90 ரூபாய் லாபம் என்ற ஒரு மொக்கையான விஷயம் அல்ல இது... 2G லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் எதுவும் equaty ஷேர் (ப்ரோமோட்டர் ஷேர்) விற்கவில்லை. முதலீட்டு மூலதனத்தை உயர்த்திக்கொள்ள, சட்டபடியான வெளிநாட்டு நேரடி முதலீடிற்கான வழிமுறையில் ஷேர் விற்பனை செய்து தங்களது முதலீட்டு மூலதனத்தை உயர்த்தி கொண்டுள்ளன. இது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒன்று.
டெலிகாம் FDI அனுமதிக்கப்பட்ட ஒன்று, முதலீடிற்க்காக சட்டபடியாதானே ஷேர் விற்று இருக்கிறார்கள்..


"No sale of promoter's equity has been taken place. This was only (infusion) of an additional capital through FDI. It does not amount to divesting of promoter's equity,"

"companies can raise additional capital which come through FDI by divesting their equity." All such transactions were legal in nature as only transfer of above 49% shares needs regulatory approvals the present law permits an FDI upto 76% in telecom companies.

//the Central Board of Direct Taxes has said Swan and Unitech never sold their licenses to their foreign partners and that the sale of equity was above board....//

//They didn't sell their equities. They expanded the equity of the company and brought in new people. That's not the same thing.//

//"The question was whether it was divestment (sale) of promoter’s equity or dilution of equity by issue of fresh shares... This was examined by the Ministry of Finance.// //“Both were cases of dilution of equity by issue of fresh shares. The Prime Minister wanted to know if it was a case of dilution of equity or divestment.// //“I do not think there was any sale of spectrum. The spectrum was allocated to the company which got licence and the spectrum remained with the company. The company issued fresh shares,” he said.//


http://www.ndtv.com/article/india/2g-spectrum-scam-case-falling-apart-134876 


 http://twocircles.net/2011jan16/ahluwalia_defends_swan_unitech_stake_sale_after_spectrum_allocation.html 


 http://www.thehindubusinessline.com/industry-and-economy/article2292572.ece 


  http://www.dnaindia.com/india/report_2g-scam-govt-defends-equity-sale-to-foreign-entities_1475166 

தளபதி  அவர்களின் தீவிர பிரச்சாரத்தின் போது!

விளக்கம் : 2

கட்டுமான நிறுவனங்கள் வங்கியில் தவறான முறையில் கடன் வாங்கி 2G லைசென்ஸ் பெற்றதாய் குற்றம்சாட்டினார்கள்...வங்கிகளும் இதில் சம்பந்தம் இருப்பதாய்  பொங்கினார்கள்.. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் மேற்கூறிய குற்றசாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை, கடன் கொடுக்கப்பட்டது விதிகளுக்கு உட்பட்டதுதான் என்று சிபிஐ சொல்லியிருப்பதாக செய்தி.


CBI closes probe into banks' role in 2G spectrum scam Sources in the investigating agencies said they had "not found any irregularity in banks giving loans to those companies which got 2G spectrum licences during A Raja's tenure in 2007-2008".


 http://timesofindia.indiatimes.com/india/CBI-closes-probe-into-banks-role-in-2G-spectrum-scam/articleshow/10058553.cms 

தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களோடு மக்களாக!

விளக்கம் : 3

கிராஸ் ஹோல்டிங் வைத்து நிறுவனங்கள் தவறாக 2G லைசென்ஸ் பெற்றதாய் எழுந்த குற்றசாட்டுக்கும் ஆதாரம் இல்லை.. லூப் டெலிகாம்ல் எஸ்ஸார் கிராஸ் ஹோல்டிங் (மறைமுக பங்கு) வைத்து 2G லைசென்ஸ் பெற்றதாய் வந்த குற்றசாட்டும் தவறு..


Essar didn't violate rules: Law ministry CBI's case was that when Essar was a major telecom player, Loop Telecom -- controlled by its associate Khaitan group -- had been allotted spectrum in breach of eligibility conditions.

The MCA took a second look at the Essar-Loop corporate link and reiterated its earlier stand that "the documents of the companies examined do not substantiate 'associate' relationship between Essar group and Khaitan group".


The additional input from law ministry has now left CBI's prosecution department, which weighs evidence to decide if a case is fit for filing of chargesheet, in a dilemma.


http://timesofindia.indiatimes.com/india/Essar-didnt-violate-rules-Law-ministry/articleshow/10058745.cms

 ***************


உண்மையான நடுநிலையாளர்களே! உங்களுக்கு மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் கூட நீங்கள் கேட்கலாம். விளக்கம் கொடுக்க தயாராக இருக்கின்றோம்! வழக்கு இப்போது ஒரு நாள் கூட வாய்தா வாங்காமல் மிக வேகமாக நடந்து கொண்டுள்ளது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும். இதோ இப்போது மக்கள் மன்றத்தில் நிற்க்கின்றார் திரு. ஆ. ராசா அவர்கள். நீலகிரி தொகுதியில் உங்கள் மேலான வாக்குகளை எதிர்பார்த்து நிற்க்கின்றார். உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்!
தகதகத்தாய சூரியனுக்கு இதே போல வெற்றிமாலை சூட்டுங்கள்!


ஆதரிப்பீர் உதய சூரியனை!




October 27, 2013

எனக்கு ஏன் அண்ணன் ஆ.ராசா அவர்களை பிடிக்கும்?



எனக்கு ஏன் ஆ.ராசா அண்ணனை பிடிக்கும் என யோசித்து பார்க்கிறேன். எப்போதில் இருந்து பிடிக்கும் எனவும் யோசித்து பார்க்கிறேன். பல ஆண்டுகள் பின்னோக்கி போகின்றது மனது. சின்ன வயதில்  யாராவது "நீ என்ன பெரிய டாட்டா, பிர்லாவா?" என கேட்கும் போதெல்லம் என் மனதில் "அவர்கள் என்ன பெரிய ஆள்.. அவர்கள் வந்து என்னை பார்க்க "நேரம்" கேட்க வேண்டும்.அந்த இடத்தில் நாம் இருக்க வேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால் நான் சாமானியன். மிக மிக சாமானிய ஒரு சின்ன நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர வர்க்கம். இதல்லாம் சாத்தியமா?


சாத்தியம் ஆனது. என்னால் அல்ல. என்னைப்போல ஒரு சாமானியனால். மிக மிக சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்த, ஒரு வறட்சியான நகரத்தில் பிறந்த ஒரு மனிதனால். அது அண்ணன் ஆ.ராசா அவர்கள். அவர் மத்தியில் கேபினட் அமைச்சர் ஆனார். உலகம் அவரை திரும்பி பார்த்தது. அவரோ  அப்போது கூட தலைக்கனம் இல்லாமல் தான் வாழ்ந்த பிரதேசத்தை வறட்சி நீக்கி வளம் கொழிக்க வைக்க அந்த பகுதியை பார்த்தார். தன்னைப்போன்ற மக்களை பார்த்தார். இது முதலே எனக்கு அண்ணனை பிடித்து போனது. டாட்டாவும், பிர்லாவும், அம்பானிகளுமே கூட இவரை சுற்றி சுற்றி வந்தனர். என்னைப்போன்ற சாமான்யர்கள் சந்தோஷப்பட்டனர். ஆதிக்க வர்க்கம் இதை ஒத்துகொள்ளுமா? வாய்ப்பில்லை.


2010 ஆரம்பம் முதலே இவர் மீது குறி வைத்தது. கிட்ட தட்ட பிப்ரவரி, மார்ச் மாதங்கள் முதல் இவரை கொத்த தொடங்கின. ஒரே வருடம்... அடுத்த 12 மாதத்தில் அதாவது 2011 பிப்ரவரியில் இவரை தூக்கி காராக்கிரகத்தில் அடைத்து குதூகலித்தது. ஒன்னேகால் வருடம் இவர் சிறையில் இருந்தார். மனிதன் கொஞ்சமும் கலங்கவில்லை. பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்ததும் போய் பார்க்கலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஏனனில் நான் இந்த 2ஜி அலைக்கற்றை பிரச்சனையில் அண்ணன் ஆ.ராசா அவர்களை ஊடகங்கள் தாக்க தொடங்கியதில் இருந்தே அது பற்றி அதிகமாக விவாதித்துக்கொண்டிருந்தேன் இணையத்தில். அது பற்றி எந்த செய்தி எங்கே வந்தாலும் மனதில் சேகரிக்க தொடங்கி இருந்தேன். சி ஏ ஜி அறிக்கையை முழுமையாய் படித்து முடித்திருந்தேன். அது போலவே அய்யா திராவிட தென்றல் சுபவீ மற்றும் அண்ணன் திருச்சி சிவா ஆகியோர் எங்கு இது பற்றி பேசினாலும் போய் கேட்டுக்கொண்டு இருந்தேன். எனக்கு இருந்த சந்தேகங்களை விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெளிந்து கொண்டிருந்தேன். அது போல எனக்கு புரிந்த விஷயங்களையும் மற்றவர்களிடம் நேரிலும், இணையம் வாயிலாகவும் புரியவைக்க முயன்று கொண்டிருந்தேன். இதல்லாம் பிப்ரவரி முதல் வாரம் 2011 அண்ணன் சிறை புகும் முன்னரேயே  நடந்து கொண்டிருந்தன.


சிறைக்கு சென்ற பின்னர் வழக்குகளை உன்னிப்பாய் பார்க்க தொடங்கினேன். இப்போது அண்ணன் சிறையில் இருந்து வெளிவந்தாகிவிட்டது என்னும் நிலையில் அதாவது சென்ற வருடம் 2012 அக்டோபரில் நான் சென்னையில் இருந்த போது ராசா அண்ணன்  சென்னையில் இருப்பதாக செய்தி அறிந்து அரியலூர் மாவட்டம் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர் சாருக்கு போன் செய்தேன். "நான் ராசா அண்ணனை பார்க்க வேண்டுமே. எனக்கு "நேரம்" வாங்கி தர இயலுமா? என்றேன். நான் இணையத்தில் இந்த 2ஜி அலைக்கற்றை விஷயமாக பல இடங்களில் வாதிடுவதை அவரும் அறிவார். உடனே அவர் சொன்னார்... "தாராளமாக.. இன்று ஞாயிற்று கிழமை. காலையில் இங்கு (பெரம்பலூரில்)ஒரு கட்சி திருமணம். கலந்து கொள்ள பெரம்பலூர் வந்தாங்க அண்ணன். இன்று மதியம் அனேகமாக சென்னைக்குள் நுழையலாம். நீங்க நான் சொல்லும் இடத்துக்கு போய் பாருங்க. நான் அண்ணனிடம் நேரம் வாங்கிய பின்னர் மீண்டும் போன் செய்கிறேன்" என்றார். அது போலவே அடுத்த பத்து நிமிடத்தில் "நீங்க 2 மணிக்கு நான் சொல்லும் அட்ரசுக்கு போங்க. அங்கே விவேகானந்தன் என்னும் அண்ணனின் உதவியாளர்  இருப்பாங்க. அவங்க கிட்டே உங்க பெயரை சொல்லுங்க. பார்த்து விட்டு வாங்க" என சொல்லி அட்ரஸ் கொடுத்தார். மணி அப்போது மதியம் ஒன்று. இன்னும் ஒரு மணிநேரத்தில் நான் திருவான்மியூரில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு போகவேண்டும். சாத்தியமா? இல்லை. ஏனனில் என்னிடம் டூவீலர் கூட இல்லை.


உடனே இணைய தோழர் சரவணகுமாருக்கு போன் செய்து விஷயம் சொன்னேன். அதற்கு அவர் "கரும்பு தின்ன கூலியா? கிளம்பி மாடியில் இருந்து கீழே வாங்க. இன்னும் 10 நிமிடத்தில் நான் அங்கே வருவேன். சரியாக 2 மணிக்குள் அங்கே போகலாம்" என சொன்னார். அது போலவே வந்தார். அண்ணனுக்கு பரிசளிக்க புத்தகம் எதும் வாங்கிப்போம் என கடை தேடினோம். அன்று ஞாயிறு என்பதால் கடை எதும் இல்லை. ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி போய்கொண்டு இருக்கும் போதே "அடடே நம் தம்பியண்ணன் அப்துல்லாவை கூப்பிடலாமே" என யோசித்தேன். உடனே போன் செய்தேன். மிகவும் ஆர்வமான அப்துல்லா "அண்ணே நீங்க பிரசிடண்ட் ஹோட்டல் வாசலில் நில்லுங்க. நான் பத்தே நிமிஷத்தில் அங்கே இருப்பேன். சேர்ந்து போகலாம்" என சொல்ல ... மணி 1.50க்கு நாங்கள் மூவரும் பிரசிடண்ட் ஹோட்டல் வாசலில் சந்திக்கும் போது தான் ராசா அண்ணன் கார் எங்களை கடந்து அவருடைய வீட்டை நோக்கி சென்றது. ஆமாம்... அப்போது தான் பெரம்பலூரில் இருந்து வந்து நுழைகிறார்.


நாங்கள் மூவரும் ஒரு ஐந்து நிமிட இடைவெளி விட்டு அங்கே வீட்டுக்கு சென்றோம். வாசலில் கூட்டம் இருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் இருந்தனர். நாங்கள் உள்ளே நுழைந்து சிவசங்கர் சார் சொன்னது போல அண்ணனின் உதவியாளர்  திரு.விவேகானந்தன் அவர்களை சந்தித்தோம். அதற்கு அவர் "முதல்ல சாப்பிடுங்க" என்றார். "இல்லை. நாங்கள் சாப்பிட்டாச்சு சார்" என்றோம். கொஞ்சம் அந்த ஹால்ல போய் வெயிட் பண்ணுங்க. சார் இப்ப தான் வந்தாங்க. ஒருத்தர் கூட பேசிகிட்டு இருக்காங்க. ஐந்து நிமிடத்தில் அவர் வெளியே வந்துடுவார். வந்ததும் நீங்க உள்ளே போங்க" என்றார்.


நாங்கள் ஒரு ஐந்து நிமிடம் அந்த ஹாலில் காத்திருந்தோம். உள்ளே பேசிக்கொண்டு இருந்த நபர் வெளியெ வந்ததும் நாங்கள் மூவரும் உள்ளே சென்றோம். எழுந்து நின்று அப்துல்லா கொண்டு வந்த  சால்வையை போர்த்தினோம். "என்னப்பா இது ஃபார்மாலிட்டீஸ் எல்லாம். இதல்லாம் எதுக்கு?" என்றார்.

எனக்கு அங்கே என்ன நடக்குது என்று புரியவே இல்லை. பிரதமர் கூட பேசினவர், பேசிக்கொண்டு இருப்பவர், பேசப்போகின்றவர், என் தலைவர் கூட காரில் போகும் நபர், என் தளபதி கூட இருப்பவர், டாட்டா, அம்பானி போன்றோர்கள் இவரை கண்டு பேதி போய் கொண்டு இருக்கின்றனர்... அவர் அருகே நான். தவிர என் ஆதர்ஷன புருஷர். இன்னும் சொல்லப்போனால் இணையத்தில் ஆ.ராசா என தேடினால் இவரை திட்டாதவன் எவனும் இல்லை.உலகமே இவரது வழக்கை உற்று நோக்குகின்றது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தூக்கத்தில் கூட ஆ.ராசா என்றே கனவு வரும் நிலையில் இருப்பவர், இப்போது அவர் அருகில் நான்.... நான் இணையத்தில் 2 ஜி அலைக்கற்றை சம்மந்தமாக எனக்கு எழுந்த சில சந்தேகங்களை கேட்க வேண்டும் என நினைத்து வந்தேன். ஆனால் என் உடம்பு கொஞ்சம் நடுங்குகிறது. ஏன்? ஏன்? அது குளிரூட்டப்பட்ட அறை என்பதாலா? இல்லை. நிச்சயமாக இல்லை... ஒரு பெரிய ஆகிருதி என் முன்னே... தும்பைப்பூ வேட்டியும் முழுக்கை பளீர் வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார். "எந்த கடையில் அயர்ன் செய்கிறார்" என மனது அல்பமாக நினைத்துக்கொண்டது.


அவர் அறையை நான் நோட்டமிடுகிறேன். அவருக்கு எதிரே அந்த அறையில் வலது மூலையில் ஒரு பெரிய எல் சி டி டிவி. இவர் டேபிள் ரொம்ப பெரிதாக இருக்கு. டேபிளின் வலது பக்கம் ஒரு பத்து புத்தகங்கள். மேலே இருந்த புத்தகம் பெயர் பார்க்கிறேன். அதுவரை நான் அதை கேள்விப்பட்டது கூட இல்லை. தமிழ் புத்தகங்கள் தான். அவர் நாற்காலி கருப்பு கலர். அது போல எதிரே இருந்த எங்கள் நாற்காலிகளும் கருப்பு கலர் தான். இப்போது கேஷுவலாக சாய்ந்து அமர்ந்து கொள்கிறார். எதிரே இரண்டு செல்பேசிகள். ஒன்று ஸ்மார்ட் போன். அடுத்து ஏதோ ஒறு 1100 மாடல் போன்ற சாதாரண போன். இவைகள் தானே இத்தனை களேபரங்களுக்கும் காரணம் என நினைத்துக்கொண்டேன்.


"சொல்லுங்கப்பா.... இணையத்தில் நீங்கள் எல்லாம் எழுதுறீங்க. ம்.. சிவா சொன்னாப்டி. ம்..கேளுங்க"


அப்துல்லா முதலில் "அண்ணே, எப்டின்னே போகுது கேஸ் எல்லாம். இந்த 2ஜி பத்திதான் நிறைய கேட்கனும் அண்ணே"


"கேஸ் தான் தினம் தினம் நடக்குதே. கிட்ட தட்ட 50 சதம் முடிஞ்சுடுச்சு. நல்ல ஃபாஸ்ட். கேள்வி கேளுங்க. ஆனா அதுக்கு முன்னே எடுத்ததும் டாப் கியரில் போகாம, ஆரம்பம் முதல் கேளுங்க. ஒரு டீக்கடை வாசலில் அமர்ந்து டீ குடிக்கும் ஒரு சாமானிய மனிதன் என்னை பார்த்தா கேட்கக்கூடிய கேள்வி என்னவாயிருக்கும்? அப்படி ஆரம்பிங்க"


நான் உடனே "அண்ணே மாத்தூர் இருக்காரே"


அவர் உடனே "ஹூம்.. எந்த சாதாரண ஆளுக்கு மாத்தூர் பத்தில்லாம் தெரியும்? ஒரு ரிக்ஷா தொழிலாளி என்னை பார்த்தா முதலில் எந்த கேள்வியில் ஆரம்பிப்பார்ன்னு உங்களுக்கு படுதோ அதில் இருந்தே ஆரம்பிங்கப்பா... டோண்ட் ஹெசிட்டேட்"


எங்களுக்கும் தெரியும் ஒரு டீக்கடை வாசலில் அமர்ந்து பேசுபவர்கள் எப்படி பேசுவார்கள் என்று. ஆனால் ஒரு சிம்மத்தின் முன்னே அதை எப்படி கேட்க இயலும் என நான் யோசித்து கொண்டு இருக்கும் போதே அப்துல்லா பேசினார்.


"அண்ணே, அந்த ஸ்பெக்ட்ரம் 2ஜி யில் அடிச்ச ஒன்னே முக்கால் கோடி ரூபாயை எங்க கொண்டு வந்து வச்சிருக்கீங்க?"


எனக்கும் சரவணகுமாருக்கும் பகீர் என ஆனது. எப்படி இப்படி ஒரு தைரியம் வந்தது அப்துல்லாவுக்கு? அது தான் திமுக. மனதில் பட்டதை தைரியமாக கேள்வியாக கேட்டு பதில் வாங்கி அதை வெட்டியாய் புறம் பேசும் வீணர்களுக்கு விளக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் நாங்கள் வந்திருக்கிறோம் இன்று அண்ணனை பார்க்க. அப்படி எனில் இப்படித்தான் கேட்க வேண்டும். இந்த தைரியமான கேள்வியை எதிர்கொள்ள ஜெயா போன்றவார்களுக்கு தைரியம் உண்டா? அல்லது ஜெயா முன்பு எந்த அதிமுக தொண்டனாவது கேட்க இயலுமா? முடியாது.. ஏன்.. மடியில் கனமில்லை. அதனால் கேள்வியை எதிர்கொள்ள ராசா அண்ணனுக்கு பயம் இல்லை.


மிக அழகாக பதில் சொன்னார். "சி ஏ ஜி கூட ஊழல்  தட் மீன்ஸ் ஸ்கேம் என்னும் பதத்தை பயன் படுத்தவில்லை தன் அறிக்கையில். அரசுக்கு வருவாய் இழப்பு என்றே சொன்னது. இது அடிமட்டு மக்களுக்கு ஒன்னேமுக்கால் லட்சம் கோடி ஊழல் என்ற வகையில் எப்படி போய் ஆதிக்க ஊடகங்களால் பரப்பப்பட்டது என விளக்கினார்.


பின்னர் பேச்சு அந்த பிரச்சனையின் அடி ஆழம் முதல் போனது. பாஜகவின் பிரமோத்மகாஜன், அருண்ஷோரியில் இருந்து ஆரம்பித்து தயாநிதிமாறன் பின்னர் ராசா அண்ணன் வரை தொடர்ந்த்து. இதில் ட்ராய் என்னும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் அது சி ஏ ஜி போன்ற தன்னிச்சையான ஆனால் அரசின் கொள்கை முடிவெடுக்கும் மத்திய கேபினட் அமைச்சரவையின் கீழ் வருவது போன்ற எல்லாம் பேசப்பட்டது.


கிட்ட தட்ட நாங்களும் ரிக்ஷா தொழிலாளி நிலையில் இருந்து கொஞ்சம் மேலெழும்பி இணையத்தில் விவாதிக்கும் நபர்கள் என்னும் நிலைக்கு வந்து கேள்வி கேட்க தொடங்கினோம். அப்போது எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தையும் நான் கேட்டேன். அந்த கேள்வி....


\\ அண்ணே, கிட்ட தட்ட நீராராடியாவுடன் நீங்கள் பேசியதாக கிட்ட தட்ட ஏப்ரல் 2010ல் செய்திகள் வந்தன... பிரச்சனையே நீங்கள் 2 ஜி யை ஏலம் விடாமல் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என சொன்னதால் தான் என ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டி கொண்டு இருந்தன. அப்போது அதே மே மாதம் 20ம் தேதி 2010ம் வருஷம் நீங்கள்  3 ஜி யை ஏலம் விட்டதால் அரசுக்கு 67,719 கோடி ரூபாய் லாபம். ஆனால் அரசு ப்ரொஜக்ஷன் என்பது  35,000 கோடி எனவும் கிட்ட தட்ட டபுள் ஆக கிடைத்தமை குறித்து நான் அந்த துறையின் அமைச்சர் என்ற வகையில் பெருமை படுகிறேன்" என்றும் சொன்னீங்க. பொருளாதார புலி பிரதமரும், நிதி அமைச்சர் பிரணாப்பும் கூட ரொம்ப பெருமைப்பட்டாங்க. உடனே ஊடகங்கள் "பத்தீங்களா, பத்தீங்களா மக்களே, இதே 2 ஜி யை ஏலம் விட்டிருந்தா நாடு எங்கயோ போயிருக்கும்" என வரிந்து கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்தன. என் கேள்வி இப்போ என்னன்னா அந்த 2 ஜி ஏலம் விடாம பிரச்சனை வந்ததால் தான் நீங்க 3 ஜியை ஏலம் விட்டீங்களா? இதனால் தானே ஊடகங்கள் எல்லாம் குதற ஆரம்பிச்சுது?\\ கேள்வியை கேட்டு விட்டு மூச்சு வாங்கினேன்.... என்ன பதில் வருமோ என பயம்....


பதில் தெளிவாக இருந்தது.


அண்ணன் ஆரம்பித்தார்....."முதலில் உன் கேள்வியில் இரண்டாம் பகுதிக்கு வரேன். அதாவது "2ஜியை ஏலம் விடக்கூடாது முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை, அது போல 3ஜியை ஏலத்தில் தான் விட வேண்டும்" இப்படி ஒரு ஆர்டர் போட்டது "ட்ராய்". நான் அல்ல. நான் அதில் எதும் செய்ய முடியாது. ட்ராய் அப்படி செஞ்சது மத்திய கேபினட் அமைச்சரவையின் முடிவுப்படி, அதாவது இது இந்திய அரசின் கொள்கை முடிவு. இந்திய அரசின் கொள்கை முடிவை மாற்ற இந்த ராசா என்னும் தனிப்பட்ட மனிதனாலும் முடியாது. மன்மோகன் சிங் என்னும் தனிப்பட்ட மனிதனாலும் முடியாது. மத்திய கேபினட் அமைச்சரவை கூடி அரசின் கொள்கை முடிவை மாற்ற வேண்டும். அது சின்ன பார்மாலிட்டி இல்லை. அதன் பின்னரும் வால் போல நீண்டு கொண்டு போகும் பிரச்சனை. இன்னும் சொல்லப்போனால் அப்படி ஒரு கொள்கை முடிவு எடுக்கப்படின் எதிர்கட்சியான பாஜகவுக்கு பார்லிமெண்டில் பதில் சொல்ல வேண்டும். ஏனனில் அந்த கொள்கை முடிவு வாஜ்பாய் காலத்தில் எடுக்கப்பட்ட அரசு கொள்கை, இது பாலிசி மேட்டர்.

இதில் இன்னும் ஒரு விஷயம் என்னான்னா அந்த ஜி.ஓ என்பதே ஒரு A4 ஷீட்ல முதல் பாராவில் "2ஜியை முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொடுக்க வேண்டும்" என்றும் இரண்டாம் பாராவில் "3 ஜியை ஏலம் விட வேண்டும்" என்றும் இருக்கும். அடுத்த அடுத்த  ஜி.ஓ கூட இல்லை. அல்லது ஒரே ஜி.ஓ வில் அடுத்த அடுத்த பக்கங்கள் கூட இல்லை. ஒரே A4 ஷீட்ல அடுத்த அடுத்த பாரா தான்". - இது ராசா அண்ணன் பதில்


நான் சொன்னேன்.... "அண்ணே, ஏன் இப்படி இருக்கு அரசு கொள்கை? பாஜக கொண்டு வந்த அரசு கொள்கை சரியில்லை எனில் மாத்த வேண்டியது தானே. அதை தானே இப்போது இணையத்தில் எங்களை கேட்கிறாங்க. "முன்னாடி உள்ளவன் தப்பு செஞ்சா, அதே தப்பை நானும் செய்வேன்  எனில் எதுக்கு ஒரு கேபினட் அமைச்சர்? அதுக்கு ஒரு பத்தாம் வகுப்பு படித்த குமாஸ்தா போதுமே"ன்னு கேட்கிறாங்க அண்ணே?" என்றேன்.


அதற்கு ராசா அண்ணன் "நான் மேலே சொன்ன பதிலில் அந்த கொள்கை தவறானதுன்னு சொல்லவில்லையே. இன்னும் என்னை தனிப்பட்ட முறையில் கேட்டா அது மிக மிக சரியான கொள்கை தான். இதை இப்ப உணர மாட்டீங்க. ஒரு வேளை இப்போ இதில் அமைச்சரா இருக்கும் கபில்சிபல் 2ஜி யை ஊடக வாய்களுக்கு பயந்து "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" என்பதை எடுத்து விட்டு எடுத்து விட்டுன்னா அமைச்சரவை கூடி ஏலமுறை என அரசு கொள்கையை மாற்றினால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். யாரும் ஏலம் எடுக்க முன் வர மாட்டாங்க. இது தான் நடக்கும்".  என்றார்.


" உடனே நான் அப்படின்னா அந்த கொள்கை முடிவு எப்படி சரின்னு இந்த குருவி மூளைக்கு புரியும் படி சொல்ல முடியுமா அண்ணே" என்றேன்.


"முடியும்... இப்போ ரேஷன் கடையில் விற்கும் அரிசி என்ன விலை?"


"இப்போ சும்மா குடுக்குறாங்க"


"சரி இப்போ விடு. இதற்கு முன்னர்?" - ராசா அண்ணன்.


"ஒரு ரூபாய் ஒரு கிலோ" - சரவண குமார்


"பாய் பிரியாணி அரிசி எவ்ளோவ்யா?"அப்துவிடம் கேட்டார்.


"அண்ணே அது 45 ரூவாய் முதல் 100 ரூவாய் வரை இருக்குண்ணே" - தம்பியண்ணன் அப்துல்லா.


"இரண்டுமே அரிசி தானே. பின்ன ஏன் மாறுபட்டு இருக்கு விலை?"


"தரம்னு ஒன்னு இருக்குல்ல அண்ணே" - இது நாங்கள்


"சரி, ஒரு ரூவாய் அரிசி வாங்குவது யாரெல்லாம்?"- ராசா அண்ணன்

"ஏழைகள், நடுத்தர வர்க்க மக்கள்" - நாங்கள்

"பிரியாணி அரிசி?"- ராசா அண்ணன்

"அது பணம் இருக்குறவன் வாங்குவான்" - நாங்கள்


"சரி இப்போ இந்த ஏழைகள் வாங்கும் அரிசி ஒரு ரூபாய் அரிசியால் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா. இழப்பு தெரியுமா? - அமைச்சர்


எங்களுக்கு புரிந்தது.இவர் எங்கே வருகின்றார் என.

மீண்டும் தொடர்ந்தார்......


"இப்ப தெளிவா கோர்வையா சொல்றேன் பாருங்க, மேலே நாம பேசினதையே அதாவது .2 ஜி என்பது பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி போன்றது. 3ஜி என்பதோ பிரியாணிக்கு பயன்படும் உயர்தர பாசுமதி அரிசி போல! பொது விநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என்பதற்காக, பாசுமதி அரிசியை ஒப்பீடு காட்டி 'ஒரு ரூபாய் அரிசி விநியோகத்தால் அரசுக்கு நஷ்டம்' என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? 2 ஜி சேவை என்பது சாதாரண மனிதனுக்கும் போய்ச் சேரவேண்டிய குரல் (Voice) சேவை. 3 ஜி என்பது வர்த்தக ஆவணங்களை அனுப்புவதற்கும், வீடியோ சினிமா போன்ற உயர்ரக சேவைக்கும் உரியது. 2 ஜி சேவை கல்வி, சுகாதாரம், கிராமிய வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கடைசி மனிதனுக்கும் பயன்படவேண்டிய ஒன்று. 3ஜி என்பது வர்த்தகம் சார்ந்த மற்றும் வசதி படைத்தவர்களுக்கு சேவை அளிக்கக் கூடியது. ஒழுங்குமுறை ஆணையம் உலக நாடுகளில் உள்ள நடைமுறைகளை எல்லாம் கருத்தில்கொண்டுதான், 3ஜி அலைவரிசையை ஏலம்விட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இப்போதைய இந்தியாவின் சமூகப் பொருளியல் புள்ளி விவரங்களின் அடிப்படையில், சாதாரண குரல் வழி சேவை வழங்கும் 2ஜி சேவைதான் சாதாரண சாமானிய மக்களுக்கு தேவையே தவிர, 3ஜி அல்ல! இன்னுமொரு 4 அல்லது 5  ஆண்டுகள் கழித்து நிலைமை மாறலாம். 1994-ம் ஆண்டு 2ஜி சேவை வந்தபோது எத்தனை பேர்கள் செல்போனை பயன்படுத்தினார்கள்? இப்போது நிலை என்ன? அதேபோல கல்வி அறிவும், தொழில்நுட்ப தாக்கமும் சாதாரண மக்களிடையே உயருமானால் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு 3ஜி சேவைகூட எளிதாக்கப்படலாம்; படவேண்டும்! அப்போது, 4ஜி சேவையும் வந்துவிடும். இதுகுறித்து ஒழுங்குமுறை ஆணையம் உரிய முடிவுகளை சூழலுக்கு ஏற்ப எடுக்கும். இப்போதைய ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவின்படி 3ஜி ஏலம் விடப்படுகிறது.'' இது ராசா அண்ணன் பதில்.


 எங்களுக்கு மூச்சு முட்டியது.


"அண்ணே, புரியுது. அபிஅப்பா கேட்ட கேள்விக்கு முதல் பகுதிக்கு இன்னும் பதில் சொல்லலையே... அந்த லேடி நீராராடியா.. நீராராடியா" - இது அப்துல்லா.


சிரித்து கொண்டார்....

"அதாவது நீரா ராடியா டாடா கம்பனியின் அஃபீஸியல் பி ஆர் ஓ. இது நான் சொல்லலை.  டாடா கம்பனியே  தெளிவா நியூஸ் லெட்டர்  வெளியிட்டது. எந்தத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சருக்கும் இருக்கும் முக்கியமான வேலைன்னா  - இத்துறையில் உள்ள பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட தொலைபேசி நிறுவனங்களிடையே அரசோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, யாவாரத்தை  சீராக வைத்திருப்பதுதான். அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் பலமுறை என்னை சந்திக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி என்னை சந்திக்கிறார். அதேபோல வோடஃபோன், ஏர்செல் போன்ற எல்லா நிறுவனங்களின் தலைவர்களோ, தலைமை அதிகாரிகளோ சந்திப்பதும் சாதாரணமானது. அந்த வகையில் 'டாடா டெலிகம்யூனிகேசன்' நிறுவனத்துக்காக நீரா ராடியா ஆபரேட்டர் மீட்டிங்லயும் , வேற பல  மீட்டிங்லயும்  கலந்து கிட்டாங்க. என்னிடம் பல்வேறு சட்டப்படியான கோரிக்கைகளை கடந்த காலத்தில் வலியுறுத்தியுள்ளார்.


ஒன்னு புரிஞ்சுக்கனும்... ஒரு நிறுவனத்தின் தலைவரோ, அதிகாரியோ என்னை துறை சார்பாக சந்திக்கிறார் என்பதற்காக அவர் துறைக்கு வெளியேயும் மத்த இடத்திலும் பார்க்கும் சினிமா முதல் பேசும் பழகும் நபர்கள் எல்லாத்துக்கும்  நான் எப்படி ரெஸ்பான்ஸ் ஆவேன்? என்னோடு இன்னிக்கு நீங்க உட்காந்து பேசிகிட்டு இருக்கீங்க. போட்டோ எடுத்துகுறீங்கன்னு வச்சுப்போம். நீங்க வீட்டுக்கு போகும் போது ட்ராஃபிக் ரூல்ஸ் மீறி போலீஸ் உங்களுக்கு ஃபைன் போட்டுச்சுன்னா  அதுக்கு நானா பொறுப்பு? இது போல் ஊடகங்கள் செய்தி வெளியிட முயற்சிப்பது அயோக்கியத்தனம் தவிர்த்து வேறில்லை. " என்றார் அண்ணன் ஆ.ராசா அவர்கள்!

நான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதை மீண்டும் படியுங்கள். \\  சின்ன வயதில்  யாராவது "நீ என்ன பெரிய டாட்டா, பிர்லாவா?" என கேட்கும் போதெல்லம் என் மனதில் "அவர்கள் என்ன பெரிய ஆள்.. அவர்கள் வந்து என்னை பார்க்க "நேரம்" கேட்க வேண்டும்.அந்த இடத்தில் நாம் இருக்க வேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால் நான் சாமானியன். மிக மிக சாமானிய ஒரு சின்ன நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர வர்க்கம். இதல்லாம் சாத்தியமா? \\

 இதோ இங்கே இது சாத்தியம் ஆயிற்று பாருங்கள். ஒரு சாமானியனை இந்த அளவு உயர்த்திய திராவிடத்துக்கும், பெரியாருக்கும், அதை சாத்தியம் செய்த அண்ணாவுக்கும் என் தலைவர் கலைஞர் அவர்களுக்கும், எங்கள் தளபதி அவர்களுக்கும் இந்த நேரத்தில் கண்ணீருடன் நன்றி சொல்கிறேன்!



மீண்டும் சரவணகுமார் கேட்டார் ஒரு கேள்வி....


"அண்ணே, நீராராடியா அமைச்சராக யார் வர வேண்டும் என்றெல்லாம் பேசினதாக செய்தி வந்துச்சே? -


"ஓர் அரசு புதிதாக அமையும்போது, எந்தவொரு துறைக்கும் வரப்போகும் புதிய மினிஸ்டர் யார் வருவாங்கன்ன்னு தெரிஞ்சுக்க  பல்வேறு நிறுவனங்களும், தொழிலதிபர்களும், ஊடகங்களும் ஆர்வம் காட்டுவார்கள். இது இயற்கை. உதாரணமாக, 'ஆ.இராசாவுக்கு அமைச்சரவையில் மீண்டும் இடமில்லை' என்று பல டி.வி. சேனல்கள் ஒளிபரப்பின. அதற்காக அந்த சேனல்கள், பிரதமரின் அதிகாரத்தில் தலையிட்டன என்று சொல்ல முடியுமா? பிரதமரிடம் கேட்டுக்கொண்டா அப்படி அவர்கள் செய்தி வெளியிட்டார்கள்? இவையெல்லாம் அனுமானங்கள் மட்டுமல்ல... அது அவங்களோட சொந்த விருப்பு வெறுப்பு தான். இதுக்கெல்லாம்  எந்த அமைச்சரும் விளக்கமளிக்க முடியாது.


அதே மாதிரி , இந்த முறை அரசு அமைந்தபோது, 'ஆ.இராசாவுக்கு மந்திரிப் பதவி உண்டா?’ உண்டு எனில் எந்த இலாகா என்பதை எனக்கு வேண்டியவங்களும் கூட ஆராய்ந்து இருப்பாங்க. 'இல்லையா' என்பதை அறிய வேண்டாதவர்களும் தெரிஞ்சுக்க முயற்சி செஞ்சிருப்பாங்க . அதே மாதிரி  என் கிட்டயும்  பல அதிகாரிகள்,  அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிக்கை நண்பர்கள் அந்த நேரத்தில் வெவ்வேறு கருத்துகளை கூட சொன்னாங்க. ஆனால், தலைவர் கலைஞரைத் தாண்டி - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதப் பிரதமர் ஒப்புதல் இன்றி இன்னொருவர் எனக்கு அமைச்சர் பதவியையோ குறிப்பிட்ட இலாகாவையோ தர முடியும் என்று நம்புகிற அளவுக்கு நான் அரசியலில் - அட்மினிஸ்ட்ரேஷன்ல முட்டாள் அல்ல. இதல்லாம் மே மத்தியில் 2010ம் வருடத்தில் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியின் போது கூட இதையே சொன்னேன்" - இது அண்ணன் ஆ.ராசா!


நாங்கள் அண்ணன் ராசா அவர்கள் அறைக்கு சென்ற போது மதியம் 2.10 .... இப்போது மணி 3.50 ஆகி இருந்தது. அண்ணன் அவர்களுக்கு இரவு 8 மணிக்கு டெல்லி செல்ல விமானம். இதற்கிடையே தலைவரின் நேர்முக உதவியாளர் திரு.சண்முகநாதன் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 5 மணிக்கு தலைவர் வீட்டில் இருந்து அறிவாலயம் செல்ல கிளம்ப வேண்டும். 4.50க்கு நீங்கள் தலைவர் வீட்டில் இருக்க வேண்டும்" என்று.


நடு நடுவே இரண்டு முறை தேனீர் வந்தது. நான் அறைக்குள் நுழைந்த போது எனக்கு இருந்த குளிரோ அல்லது நடுக்கமோ இப்போது  இல்லை. உடம்பே லேசானது போல உணர்ந்தேன். எழுந்தோம்... அவரும் எழுந்தார்.
"இது சம்மந்தமா என்ன சந்தேகம் இருப்பினும் எப்போதும் தயங்காம கேளுங்க. ஏனனில் இணையத்தில் பலதரப்பட்ட மக்கள் இருக்காங்க. அவங்களுக்கு புரிய வைக்கும் படி விவாதம் செய்யனும். எப்போதுமே தவறான தகவல் தந்து விடக்கூடாது" என்றார்.


நால்வரும் பேசிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தோம்... வாசலில் இருந்த மழைமரம் தந்த நிழலில் நாங்கள் பேசியது எல்லாம் கனவா நிஜமா யோசித்து சிரித்து கொண்டோம்.  தெளிவான மனோநிலையுடன் வண்டியை எடுத்து எதிர்காற்று காதில் சில்லிட பறந்தோம்.


இது நடந்து ஒரு வருடம் ஆகின்றது. இப்போது தான் இதை வெளியிடுகிறேன். காரணம்... கடந்த நான்கு வருடங்களாக அண்ணன் ராசா அவர்கள் இணையத்தில் கற்பழிக்கப்பட்டது போல யாரும் சீரழிந்து இருக்க மாட்டார்கள். அப்போதெல்லாம் மௌனமாக பதில் சொல்லி கொண்டு இருந்தேன். ஆனால் நேற்று அவருக்கு பிறந்த நாள் ( 26.10.2013). இணையத்தில் எங்கு திறப்பினும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பதிவுகள். நான் மட்டுமே என்ன எழுதுவது எப்படி எழுதுவது என குழம்பிவிட்டேன். நேற்று தொலைபேசியில் இதை சிவசங்கர் சார் கிட்டே சொன்னபோது "நீங்கள் போய் அண்ணனை  பார்த்து விட்டு கேள்வி கேட்டு பெற்ற பதிலையே கூட பதிவாக போடலாமே" என சொன்னார். அதனால் இதை இப்போது வெளியிட்டு விட்டேன்.

இதே சந்திப்பில் நாங்கள் பேசியது இன்னும் பல விஷயங்கள் இருக்கு. புதியதலைமுறை பேட்டி, காங்கிரஸ், உள்கட்சி விவகாரங்கள்,மாவட்ட விவகாரங்கள் என பல இருப்பினும் அதல்லாம் இங்கே தேவை இல்லை என்பதால் விட்டுவிட்டேன்.

இப்போது நினைத்துப்பார்க்கிறேன். இதே 26.10.2011 ல் அண்ணன் ஆ.ராசா அவர்கள்  டெல்லி திகார் சிறையில் இருந்த போது இதே இணையத்தில் எத்தனை ஒரு எகத்தாளம், ஏளனம், நய்யாண்டிகள்.... ஆனால் இன்று 26.10.2013 இன்று பிறந்த நாள் காணும் அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கு பல நடுநிலையாளர்கள் வாழ்த்துகளை அள்ளி குவிக்கின்றனர். ஏன்??? 2 ஜி வழக்கு கிட்ட தட்ட 80 சதம் முடிந்து விட்டது. ஒன்னே முக்கால் லட்சம் கோடி என்னும் மாய பலூன் உடைந்து விட்டது. இது அல்ல உண்மையான கொண்டாட்டம். அடுத்த வருடம் 26.10.2014 தான் உண்மையான கொண்டாட்டங்கள் உள்ளன. ஏனனில் வழக்கில் இருந்து அண்ணன் ஆ.ராசா குற்றமற்றவர் என வெளியே வரும் நாள்  வெகு விரைவில் உள்ளது.... தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்... தர்மம் மீண்டும் வெல்லும்!


February 25, 2013

"இரட்டைக் குவளை முறை" கொடுமை இந்திய கிராமங்களில் மட்டுமல்ல.........:-((



2010ன் மத்தியிலேயே "2 ஜி ஸ்பெக்ட்ரம்" என்னும் வார்த்தை புகுந்து புறப்படாத வாய்களே இந்தியாவில் இல்லை என்னும் அளவு வெற்றிகரமான பிரச்சாரத்தை  இந்திய ஆதிக்க ஊடகங்கள்  அலறித்துடித்து செய்தன. "ஆ.ராசா - தொலைத்தொடர்பு துறை - திமுகவை சேர்ந்த அமைச்சர் ஒன்னேமுக்கால் லட்சம் கோடி ரூபாய்களை வாரி சுருட்டிக்கொண்டு தமிழகத்துக்கு கொண்டு போய்விட்டார். " "இதுக்குதான்யா சொல்வது இந்த பிராந்திய கட்சிகளை நம்பக்கூடாதுன்னு. இப்ப பாரு நம்ம ஸ்டேட் பணத்தையும் சேர்த்து கொண்டு போய்ட்டானுங்க" என்ற ரீதியிலான பேச்சுகள் எங்கும் எங்கும், பங்கு சந்தை முதல் பொதுக்கழிப்பிடம் வரை இது மட்டுமே பேச்சு.


தமிழக மக்களோ பகலில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சீரியலில் மட்டுமே கோடிகளை பார்த்தவர்கள். "அம்மா நான் பேங்குல போய் ஒரு 300 கோடி எடுத்துகிட்டு வரும் போது ஒரு பத்து கோடிக்கு டீ சாப்பிட்டு, 24 கேடிக்கு ஹேர்கட் பண்ணிகிட்டு அப்படியே அந்த ராமசாமி பணம் கேட்டான் அவனுக்கு ஒரு 32 கோடி கொடுத்துட்டு வர்ரேன்" என்பன போன்ற சீரியல்களில் மட்டுமே கோடிகளை பார்த்து வந்தவர்களுக்கு இந்த ஒன்னேமுக்கால் லட்சம் கோடி என்பது அதும் அரசாங்கத்தை சேர்ந்த சி பி ஐ போன்ற "பெரிய போலீஸ்" சொல்வது எல்லாம் நினைத்து  அரண்டு போயினர். இப்போது அந்த வழக்கு கிட்ட தட்ட முடியும் தருவாயில் அந்த "பெரிய போலீஸ்" என்னும் சி பி ஐ என்பது "சிரிப்பு போலீஸ்" ஆனது தேசிய கொடுமைதான்!


தமிழகத்திலோ இது எல்லாவற்றுக்கும் மேலாக விரைவில் 2011 மத்தியில்  தேர்தல் வர இருந்த நிலை. ஆதிக்க சக்திகளுக்கோ ஜெயாவை இப்போது முதல்வராக ஆக்காவிடில் இன்னும் எத்தனை ஜென்மம் ஆகுமோ தெரியாது அவர்கள் முதல்வர் அதிகாரத்தில் அமர! இதுவே காஞ்சி மடமாக இருப்பின் ஒரு பிரச்சனையும் இல்லை. ஒரு இருள்நீக்கி சுப்ரமணியம் பாலியல் குற்றச்சாட்டில் வெளியே போயின் அடுத்து ஒரு செந்தமிழ்செல்வனோ, தேன்துளிவளவனோ வந்து அந்த நாற்காலியில் அமர வாய்ப்பில்லை. அதனால் அந்த பதவி பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. ஆனால் முதல்வர் நாற்காலி அப்படியா? அண்ணா போட்டு வைத்த அஸ்திவாரம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு  போதுமானதாக இருந்தாலும் நடுவே எம் ஜி ஆரின் சில வீக்னெஸ் காரணமாக நடுவே அதிஷ்டவசமாக ஜெயாவின்  ஆட்சி அவர்களுக்கு கிடைத்தது. அதை மீண்டும் தக்க வைக்க வேண்டும் எனில் ராசாவுக்கு எதிராக இப்போது கிடைத்த ஸ்பெக்ட்ரம் ஆயுதத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே இயலும் என அவர்கள் உனர்வுகளை மட்டுமே டெலிபதி மூலம் கூடி பேசிக்கொண்டு செயல்பட்டனர். அதன் விளைவு 2 ஜி ஸ்பெக்ட்ரம் விஷயம் ஊதிப் பெருக்கப்பட்டது. என்ன நடக்கின்றது என நடுநிலையாளர்கள் யூகிக்கும் முன்பே ஆ.ராசா அவர்கள் கைது செய்யப்பட்டு, ஊடகங்கள் ஆடித்தீர்த்து விட்டனர். நீதிபதிகள் கூட திகைத்து போயினர்.


சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. சி பி ஐ வழக்கு தொடுத்தது. ராசா அவர்கள் மொரீசியஸ்ல பணம் வச்சிருக்காரு, துபாய்ல பணம் வச்சிருக்காரு என சி பி ஐ டைரக்டரே "இந்தியா டைம்ஸ்"க்கு பேட்டி கொடுத்தார். ஆச்சு 2 வருஷத்துக்கு மேல. இதுவரை சி பி ஐ முட்டைக்கு முடி புடுங்கி கொண்டு இருந்ததா என தெரியவில்லை. ஆனால் துபாய், மொரீசியஸ் பணம் விவகாரம் என்ன ஆச்சு என ராசா அவர்கள் சி பி ஐ டைரக்டரிடம் கேட்கும் போது "அதல்லாம் ஊலூலூலாய்க்கு" என்கின்றனர்.

சி ஏ ஜி முதலில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி என்றது. அதை சி பி ஐ நம்பியது. வழக்கு போடும் போது அது 33000 கோடியாக சுருங்கியது. பின்ன கொஞ்சம் கொஞ்சமாக காற்றுப்போன பலூன் போல 7000 கோடி ஆனது. பின்னர் போகிற போக்கை பார்த்தால் அரசாங்கம் ராசாவுக்கு 10000 கோடி தரவேண்டும் என சொல்லும் போலிருக்கு.


அதல்லாம் போகட்டும். சி பி ஐ வழக்கு அதன் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருக்கு. அதை உச்சநீதிமன்றம் தனிக்கவனம் செலுத்தி கவனித்துக்கொண்டு உள்ளது. இதனிடையே  ஆ.ராசா அவர்கள் ஆட்சிக்காலத்தில் தொலைத்தொடர்புத்துறை அனுமதி அளித்த 122 அலைக்கற்றை உரிமங்கள் உச்சநீதிமன்றத்தால் நீக்கப்படுகின்றது. வழக்கில் சம்மந்தப்பட்ட ஆ.ராசா அவர்கள் அந்த வழக்கில் விசாரிக்கப்படவில்லை. ஏன்? ஏன்? ஏன்?? ஏனனில் உச்சநீதிமன்றம் "முன்முடிவெடுத்து" விட்டதோ என்கிற ஐயம் பொதுமக்களுக்கு வருகின்றது. உடனே ஆ. ராசா அவர்கள் வழக்கை மறுசீராய்வு செய்ய வேண்டும் என கேட்டு மனு செய்கிறார். அதில் தன்னையும் விசாரிக்க வேண்டும். தன் தரப்பு விளக்கங்களை கேட்க வேண்டும் என சொல்கிறார். அது மட்டுமல்ல மத்திய அரசும் மறு சீராய்வுக்கு கேட்கின்றது. இரண்டுமே தள்ளுபடி ஆகின்றது. இதில் நீதி எங்கே போனது? இது என்ன கொடுமை? இது தான் ஜனநாயக நாட்டின் முறையா? தான் சம்மந்தப்பட்ட வழக்கில் தன் மீது பழி வரும் வகையில் ஒரு தீர்ப்பு தன்னை விசாரிக்காமலே, தன் விளக்கத்தை கேட்காமலே என்னும் கொடுமை ஆ.ராசா என்னும் தனிப்பட்ட நபருக்கு! இது தான் இந்திய நீதியா?



ஆனால் ஒரு பக்கம் சி பி ஐ நீதிமன்றம் வழக்கு நடக்கும் போதே தினம் தினம் ராக்கெட் வேகத்தில் நடக்கும் போதே, இடயே பாரளுமன்றம் விழித்துக்கொண்டது. அரசு கொள்கை முடிவில் நீதிமன்றம் எப்படி தலையிடலாம்? ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரனை செய்யட்டும் என ஒரு குழுவை பாராளுமன்ற சபாநாயகர் திருமதி. மீராகுமார் அமைத்தார். நல்ல விஷயம் தான். அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அதில் உறுப்பினர்கள். பி சி ச்சாக்கோ என்னும் கேரள எம் பி தான் அந்த நாடாளுமன்ற கூட்டு விசாரனை குழுவுக்கு தலைவர். அதிலே அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இந்த சாக்கோ அவர்கள் நல்லவர், வல்லவர், நீதிமான், நேர்மையின் சிகரம் என்றெல்லாம் பாராட்டப்படுபவர். நல்லது.


அங்கும் விசாரனை. ஆனால் இதுவரை குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா அவர்கள் விசாரிக்கப்படவில்லை. இதிலே பிரதமர் மன்மோகன் சிங்கையும், அப்போது நிதிஅமைச்சராகவும் இப்போதும் நிதி அமைச்சராகவும் இருக்கும் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்ற பாஜக கட்சியின் கோரிக்கை இதுவரை பி.சி சாக்கோவால் நிராகரிக்கப்பட்டுக்கொண்டுள்ளது. அதற்கு காங்கிரஸ் எம் பிக்கள் (அந்த குழுவில் இருக்கும் எம் பிக்கள்) ஒத்துக்கொள்ளவில்லை. என்ன பயமோ? யார் அறியோம். இதற்கிடையே அந்த குழுவில் இருக்கும் திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா போன்றவர்கள் அந்த விசாரனையில் ஆ.ராசாவையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். ஏன்? மடியில் கனமில்லை. விசாரனைக்கு பயமில்லை. இதுவரை அந்த கோரிக்கையும் மறுக்கப்பட்டுக்கொண்டுள்ளது. என்ன காரணம்?


சரி, இவர்களை விசாரிக்காமலே நல்ல தீர்ப்பு வருமா என பார்க்கின் அதற்கான வாய்ப்பும் குறைவாக தெரிகின்றது. காரணம்... அங்கே சாட்சிகளாக வரும் தொலைத்தொடர்பு அதிகாரிகளும், அட்டர்னி ஜெனரல் போன்றவர்களும் முன்னுக்கு பின் முரணாக, தான் தப்பித்துகொண்டால் போதும் என்கிற ரீதியில் ராசா அவர்கள் மீது பழி போட்டு வருகின்றனர். இத்தனைக்கும் அவர்கள் சி பி ஐ நீதிமன்றத்தில் சொன்ன சாட்சிகள் வேறு மாதிரி. இதை எல்லாம் பத்திரிக்கையில் பார்க்கும் ஆ.ராசா அவர்கள் தன்னையும் ஜே பி சி யில்  விசாரிக்க வேண்டும் என கோரி சபாநாயகர் திருமதி மீராகுமார் அவர்களுக்கு நான்கு நாட்கள் முன்பாக ஒரு மூன்று பக்க கடிதம் எழுதுகிறார். அதன் தலைப்பிலேயே "ரகசியம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் முடிவெட்டும் கடையில் கூட வழித்த முடியை துடைத்து போட அந்த கடித நகல் தான் இன்று இந்தியா முழுமையும் பயன்படுகின்ற அளவு இணையம் முழுக்க வெளிவந்து விட்டது. இந்திய அரசாங்கம் "ரகசியங்களை" பாதுகாக்கும் லட்சனம் இது. அது நமக்கு இப்போதைக்கு தேவையில்லை. ஆனால் அதன் சாராம்சம் என்ன? இதோ அந்த கடித்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை பாருங்கள்..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


மதிப்பிற்குரிய  பாராளுமன்ற சபாநாயகர் அவர்களுக்கு!


1998 ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட 2 G அலைக்கற்றை கொள்கை, அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நான் ஆஜராக வேண்டும் என்று அதில் இடம் பெற்றுள்ள சில உறுப்பினர்கள் கோரி வருவதாக அறிகின்றேன்.

2007ம் ஆண்டு மே 17 முதல் 2010 ம் ஆண்டு நவம்பர் 14 வரை மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக நான் இருந்த போது 2008ம் ஆண்டில் 122 அலைக்கற்றை உரிமங்கள் ஒதுக்கப்பட்டன.

அலைக்கற்றை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எனது தரப்பு விளக்கத்தை அறிந்து கொள்ள வாய்ப்பளிக்காமல் 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி அந்த 122 அலைக்கற்றை உரிமங்களையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது. அதை மறு சீராய்வு செய்யக்கோரி நான் தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக மத்திய தொலை தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், அட்டர்னி ஜெனரல் போன்றோர் ஆகராகி வருகின்றனர். ஆனால் துரதிஷ்ட வசமாக அவர்கள் குழுவிடம் அளிக்கும் விளக்கம் உண்மைக்கு புறம்பாகவும் குற்றத்தை வேறொறுவர் மீது சுமத்தும் வகையில் இருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகும் செய்தியின் மூலம் அறிகின்றேன்.

இந்த விவகாரத்தில் தவறாகவும், முழுமையான ஆதாரங்கள் இல்லாமலும் பாராளுமன்ற கூட்டுக்குழு வழிநடத்தக்கூடாது. அதனால் பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நானே நேரில் ஆஜராகி தொலைதொடர்பு கொள்கை, தொலைதொடர்பு உரிமங்கள் வழங்குவதில் அரசு கடைபிடித்த கோட்பாடு, இதில் யாருக்கெல்லாம் உரிமையும் பங்கும் உண்டு என்பதை விளக்குவதே சரியாக இருக்கும்.

அலைக்கற்றை தொடர்பான தீர்ப்பில் இந்திய ராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட அரிய இயற்கை வளமான அலைக்கற்றை   பண பலம் கொண்ட சிலராலும் அரசு நடைமுறையை மாற்றும் சக்தி படைத்தவர்களாலும் அனுபவிக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஆலைக்கற்றை முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை சி பி ஐ நீதிமன்றத்தில் எனது பதவிக்காலத்தில் ராணுவம் பகிர்ந்து கொண்ட அல்லது அது பயன்படுத்தி வந்த அலைக்கற்றை வழங்கப்படவில்லை என சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். எனது பதவிக்காலத்தில் பயன் படுத்தாமல் இருந்த அலைக்கற்றையை கண்டறியவும் அவற்றை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதை ஒருக்கிணைக்கும் பணியையும் மத்திய தொலைத்தொடர்பு துறை மேற் கொண்டது.

ஆனால் எனக்கு முன்பு அமைச்சராக இருந்தவர்கள் அலைக்கற்றையை பயன்படுத்தாமல் இருந்ததால் தான் அரசுக்கு உண்மையான வருமான இழப்பு ஏற்ப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத்தலைவர் மூலம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அதில் ஏலம் நடத்தி அலைக்கற்றையை ஒதுக்குவது அரசின் நோக்கம் அல்ல , நாட்டின் தொலைத்தொடர்பு வளர்ச்சியை அதிகரிக்க நிறுவனங்களின் வருவாய் அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கலாம் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான அதிகாரிகள் விளக்கினர். மேற்க்கண்டவாறு 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நிலவும் பல முரண்பாடுகளை பாராளுமன்ற கூட்டுக்குழுவிடன் என்னால் விளக்க முடியும். இதன் மூலம் மறைக்கப்படும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். சி பி ஐ நீதிமன்றத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சட்ட விரோதமாக அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கு தான் விசாரிக்கப்படுகின்றது இப்போது. அந்த விசாரணை பாதிக்காத வண்ணம் அலைக்கற்றை கொள்கை அதை அமல்படுத்திய நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதனால் என்னை விசாரனைக்கு அழைக்கும் படி பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு உத்தரவு இட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

ஆ. ராசா


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு மனிதன் தனக்கான நீதி கிடைக்க எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது. என்னை விசாரியுங்கள் விசாரியுங்கள் என கதறுவது இந்த பக்கம். ஆனால் ஆனால்....

கடந்த 17 வருடமாக ஜெயலலிதா மீது ஒரு சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து கொண்டுள்ளது. இதுவரை இந்திய சரித்திரத்தில் இல்லாத அதிசயமாக 100 முறைக்கும் மேல் வாய்தா வாங்கப்பட்டு அல்லது கொடுக்கப்பட்டு, நீதிபதிகள் மேலேயே குற்றம் சாட்டப்பட்டவர் புகார் சொல்வதும், என்னால் மன உளைச்சல் தாங்க இயலவில்லை என ஆச்சார்யா என்னும் அரசு வழக்கறிஞர் துண்டைக்காணும் துணியைக்காணும் என ஓடுவதும் இன்னும் வழக்கு முடிந்தபாடில்லை. ஏன்? ஏன்? ஏன்? இத்தனைக்கும் அந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தால் அதன் வழிகாட்டுதல் படி தான் சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து கொண்டுள்ளது. ஏன் என நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டாமா?


ஆ.ராசா அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட போது திமுக தலைவர் சொன்னார் "ராசா ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீது கொண்ட பொறாமையால் அவதூறு சொல்லப்படுகின்றது" என்றார். உடனே நடுநிலை நாயகர்கள் "இந்த கருணாநிதிக்கு வேறு வேலை இல்லை. சென்சிட்டிவ் பிரச்சனை வரும் போதெல்லாம் தாழ்த்தப்பட்டவன் என்ற ஆயுதம் எடுப்பார்" என கேலி பேசின.


ஆனால் இன்று நடக்கும் நிகழ்வுகளை பாருங்கள். உண்மை என்ன? தன்னை விசாரிக்க சொல்லும் ஆ.ராசாவுக்கு  மறுக்கப்படுகின்றது, ஆனா ஜாதி இந்துக்கள் ப.சிதம்பரம் தன்னை விசாரிக்க கூடாது என சொன்னால் அது ஏற்கப்படுகின்றது. ஆதிக்க சாதியை சேர்ந்த ஜெயாவுக்கு 17 வருசம், 100க்கு மேல் வாய்தா என அள்ளி அள்ளி சலுகைகள் வழங்கப்படுகின்றது. மேலும் டான்சி வழக்கில் கூட ஜெயா குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட போதும் கூட "கொழந்தே, அப்டீல்லாம் செய்யக்கூடாது. அரசாங்க சொத்தை ஆட்டைய போட்டியா.. ஒடனே திருப்பி கொடுத்துடு, நீ போட்ட கையெழுத்து போடலைன்னு சொன்னியா, இனி அப்படி செய்யக்கூடாது கொழந்தே" என சொல்லி விட்டு தண்டனை இல்லை என சொல்கின்றது நீதிமன்றம்.


ஆனால்ஆ. ராசா அவர்களுக்கு?????? தான் குற்றமற்றவர் என நிரூபிக்க தன்னை விசாரியுங்கள் என சொல்லியும் இனியும் பாராளுமன்ற கூட்டுக்குழுவில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுமானால் "இரட்டைக்குவளை முறை" கொடுமை இந்திய கிராமங்களில் மட்டும் நடக்கவில்லை... இந்திய நீதியிலும் ரெட்டை குவளை முறை தான் நடந்து கொண்டுள்ளது என்பது ஊர்ஜிதமாகும்! காந்தி தேசத்தில் காந்திக்கு செய்யும் உண்மையான மரியாதை ரூபாய் நோட்டுகளில் அவரை படம் போடுவது மட்டுமல்ல... அவரது தீண்டாமை கொடுமை  ஒழிப்பு கொள்கைக்கு  புடம் போடுவதும் கூடத்தான் என்பதை இந்த தேசம் உணரட்டும்!

July 8, 2012

2G வழக்கும், திரு.ஆ.ராசா அவர்கள் நேர்காணலும் பின்னே ஒரு புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆன மாய பலூனும்!

2 G வழக்கு! இந்த வழக்கை நான் ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருபவன் என்பதாலும் இது ஒரு சித்தரிக்கப்பட்ட வழக்கு என நான் பல ஆதாரங்களை கொண்டு நம்பியதாலும் நான் இன்றைக்கு இதிலே இந்த வழக்கிலே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திரு ஆ.ராசா அவர்களின் நேர்காணல் "புதிய தலைமுறை" தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய போது கூர்ந்து கவனித்தேன். ஏனனில் இந்த வழக்கில் அக்டோபர் மாதம் 2010ல் தன் அமைச்சர் பதவியை திரு.ராசா அவர்கள் ராஜினாமா செய்து விட்டு வந்த பின்னர் "தி ஹிண்டு" பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த போது அவரது வாயால் சொன்னதை எழுத்தாய் பார்த்த பின்னர் இன்று தான் அவரது வாயால் "வாக்குமூலமாக" சொல்வது போல சொல்கிறார். அதனால்  அவர் என்ன சொல்கிறார் என்று கவனித்தேன்.

இந்த நேர்காணல் என்பது கிட்டத்தட்ட தமிழகத்தில் பல ஆயிரம் "உண்மையான" நடுநிலைவாதிகளை சிந்திக்க வைத்திருக்கும் என்றே நம்புகிறேன். நான் சிறிது நேரம் முன்னர் என் முகநூலில் ஒரு நிலைத்தகவல் வெளியிட்டேன். "புதிய தலைமுறை" தொலைக்காட்சி ஏன் இதை ஒளிபரப்ப வேண்டும்?" என கேட்டவர்களிடம் நான் "உப்பு தின்றவன் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். பொய்பரப்புரை செய்தவர்கள் தான் இதை ஒளிபரப்பி பாவம் கழுவிக்கொள்ள வேண்டும்" என பதில் சொன்னேன். அதையே திரு ராசா அவர்கள் தன் நேர்காணலில் "அங்கே சிறையில் தமிழில் பொதிகை தொலைக்காட்சி வரும். நான் வேறு சேனல்கள் கேட்ட போது அரசியல் கட்சி சாராத நடுநிலை தொலைக்காட்சி தான் தர இயலும் என சொல்லி 'புதிய தலைமுறை" தொலைக்காட்சி கொடுத்தார்கள். அதிலே கூட இது பற்றிய விவாதங்களில் எல்லாம் மெத்த படித்தவர்கள், பொருளாதார நிபுனர்கள், நான் மிகப்பெரிய அறிவாளி என நினைத்தவர்கள் கூட தவறாய் புரிந்து கொண்டு பேசினர். கட் ஆஃப் தேதியை முன்கூட்டியே முடித்து விட்டனர் என விஷயமே புரிந்து கொள்ளாமல் பேசினர்" என சொன்னார். பின்னர் அது பற்றி விளக்கினார். ஆக நான் சற்று முன்னர் வெளியிட்ட நிலைத்தகவல் போல இந்த நேர்காணலை வெளியிட்டதன் மூலமாக  உப்பு தின்ற புதியதலைமுறை தண்ணீர் குடித்தது. வழக்கு நடந்து கொண்டு இருக்கின்றது. அப்படி இருக்கும் போது அது பற்றி  பொதுவெளியில் பேசக்கூடாது என அழகாய் எல்லோரும் விலகி விடுவர். ஆனால் திரு.ராசா அவர்கள் அடிபடையில் ஒரு வழக்கறிஞராகவும் இருக்கும் காரணத்தால் 'விசாரனை முடிந்த' விஷயங்களை அழகாய் நேர்காணலில் விளக்கியும் சொல்லக்கூடாததை தவிர்த்தும் பேசினார்.ஒரு அழகான பேட்டியின் முத்தாய்ப்பாக கடைசி கேள்விக்கு ஒரு பதில்.... "நரகத்திலும் நரகம்"யாருக்கு கிடைக்கும் என்பது பற்றி சொன்ன போது சிரிப்பும் சிலிர்ப்பும் ஒருசேர வந்தது எனக்கு!

இப்போது நேர்காணல் பற்றி பார்ப்போம்......


முதல் கேள்வியே "நீங்கள் 13 ஆண்டுகாலம் மிக உயர்ந்த மத்திய அமைச்சர் பதவியில் எல்லாம் இருந்து விட்டு இப்போது 15 மாத காலம் சிறைவாசம் அனுபவித்தது சிரமமாக இல்லையா" என்கிற தொணியிலான கேள்வி. அதற்கு திரு.ராசா சொல்கிறார் "இல்லை. நான் சார்ந்த இயக்கம் திராவிடர்கழக - திராவிட முன்னேற்ற கழகத்தில் எனக்கான பயிற்சியிலேயே இதை எல்லாம் பயின்றவன் நான்". இதை எங்கே திமுக அவருக்கு பயிற்றுவித்தது? எந்த சிலபஸ்ல பயிற்சி கொடுக்கப்பட்டது என எடக்கு மடக்காக கேட்கும் ஆசாமிகளுக்கு அவருடைய பதில் "நான் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி படித்து படித்து பக்குவப்பட்டுவிட்டேன் என்கிறார். ஆமாம் அதிலே வரும் வாசகங்கள் ... அண்ணா சொல்கிறார் கலைஞரைப்பார்த்து "தண்டவாளத்தில் தலைவைத்துப்படு என்றாலும் அமைச்சர் பதவி ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாகவே பார்ப்பவர் தான் என் தம்பி கருணாநிதி".... பதில் வந்துவிட்டதா? திமுக என்னும் பல்கலைகழகத்தில் நெஞ்சுக்கு நீதி என்னும் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர் ஆ.ராசா அவர்கள் அந்த 15 மாதகாலம் ... எந்த டெல்லி வீதிகளில் சிவப்பு விளக்கு சுழல காவலர் காவலில் சென்று வந்தாரோ அதே டெல்லி மாநகரில் அதே போல சிவப்பு விளக்கு சுழல சுழல காவலர் காவலில் ... ஆனால் இது வேறு விதம்... கிட்ட தட்ட தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கும் நிலை போன்றதொரு நிலை. ஆனால் கலைஞரின் நெஞ்சுரம் திரு ராசாவுக்கும் நெஞ்சுக்கு நீதியால் பாய்ச்சப்பட்டதை சொல்கிறார். பெரியார் அவர்கள் சொன்ன வார்த்தையை கோடிட்டு காட்டுகின்றார் திரு.ராசா அவர்கள். "பொதுவாழ்க்கை என்று வந்த பின்னர் மான அவமானங்களை பற்றி கவலைப்பட்டால் பொதுவாழ்க்கையிலே செய்ய வேண்டிய தொண்டினை செய்ய முடியாமலே போகும்" என்ற பெரியாரியல் தத்துவத்தை நினைவு கூறுகின்றார்.

இதல்லாம் கேள்வி அல்ல. அடுத்தடுத்து வந்தது அணுகுண்டு கேள்விகள். அத்தனைக்கும் புரியும்படியும் தெளிவாகவும் பதில் சொல்கிறார் பாருங்கள்.

1.75 லட்சம் கோடி அரசுக்கு உங்களால் இழப்பாமே என்ற கேள்விக்கு ராசா அவர்கள் தெள்ளத்தெளிவாக ஒரு பதில் சொல்கிறார். \\ 1.75 லட்சம் கோடி இழப்பு என சி ஏ ஜி அதாவது மத்திய தணிக்கை குழு சொன்னது. நியாயமாக பார்த்தால் அந்த சி ஏ ஜி என்பது ஒரு தன்னதிகாரம் கொண்ட அதாவது தேர்தல் கமிஷன் போல இதுவும் ஒரு குழு. மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட குழு. அது அரசுக்கு தன் அறிக்கையை சமர்பிக்கலாம். அத்தனையே. ஆனால் அந்த குழுவால் அரசில் பாலிசி மேட்டர் அதாவது கொள்கை சார்ந்த முடிவுகளில் தலையிட முடியாது. கூடவும் கூடாது. சாதாரண மக்கள் கூட சென்போனை பயன்படுத்த வேண்டும் என்கிற ட்ராய் என்னும் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் எடுத்த முடிவின் மீது தனது ஆதிக்கத்தை சி ஏ ஜி செலுத்த முடியாது. மத்திய தணிக்கை குழு தனது அறிக்கையை பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவுக்கு அளிக்கலாம். அதை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் அந்த பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு மட்டுமே. ஆனால் அதை  சி ஏ ஜி அறிக்கையை அந்த குழு நிராகரித்து விட்டது.

 அதாவது "அரசன் தவறு செய்ய மாட்டான்" என்னும் நம்பிக்கை மாதிரி அந்த குழு தப்பு செய்யாது என்ற நம்பிக்கையில் ஏற்படுத்தப்பட்ட அந்த குழுவின் அறிக்கை எப்போது பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவால் நிராகரிக்கப்பட்டதோ அப்போதே அரசன் தவறு செய்து விட்டான் என்னும் நிலைக்கு வந்தாகிவிட்டது. பின்னரும் சி ஏ ஜி குழு அறிக்கையை அடிப்படை ஆதாரமாக கொண்டு பத்திரிக்கைகள் மற்றும் மற்றைய ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கிய போது அதையே ஆதாரமாக கொண்டு சி பி ஐ வழக்கு தொடுத்தது.

ஆனால் 1.75 லட்சம் கோடி என்னால் அரசுக்கு இழப்பு என சி பி ஐ வழக்கு பதிவு செய்ய முடிந்ததா என காட்டுங்கள். சரி போகட்டும், சி பி ஐ 30,000 கோடி இழப்பு என்றது. அதாவது நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டதா என காட்டுங்கள். இப்படி எந்த சி ஏ ஜி குழு 1.75 லட்சம் கோடி என்றதோ அந்த தொகைக்கான நீதிமன்ற குற்றச்சாட்டு எங்கே உள்ளது என காட்டுங்கள். \\ இப்படி திரு ராசா அவர்கள் சொன்ன போது நடுநிலையாளர்கள் சிலர் "ஆமாவா?" என பெங்களூர் தமிழர்கள் மாதிரி மனசுக்குள் கேட்டுக்கொண்டு கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

1.75 லட்சம் கோடி என்பதை பற்றி அந்த நேர்காணலாளர் அதன் பின்னர் கேட்கவே இல்லை. அடுத்து "முதலில் வந்தவருக்கு முன்னுரிமை, ஏலம் கூடாது என நீங்க சொன்னதால இழப்பு ஏற்பட்டுச்சு. இல்லாவிடில் 3ஜி யை ஏலம் விட்டால் வரும் வருமானம் போல 2 ஜியையும் ஏலம் விட்டிருந்தால் வருமானம் வந்திருக்கும் என சொல்றாங்களே?" என கேட்ட போது....

"ஏலமுறை வேண்டாம், முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை" என்னும் அரசு கொள்கையை வகுத்தவன் ராசா இல்லை, டாக்டர் மன்மோகன் இல்லை, டாக்டர் கலைஞர் இல்லை. 1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசில் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (ட்ராய்) வகுத்த அரசு கொள்கை இது. இதை அதன் பின்னர் அருண்ஷோரி, தயாநிதிமாறன் பின்னர் நான் என வரிசையாக அதையே பின்பற்றினோம். நான் பதவி ஏற்கும் 29 நாட்களுக்கு முன்னர் எனக்கு முன்பாக அந்த துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் அவர்கள் கூட அதே முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை நிலைப்பாட்டையே எடுத்தார். எடுத்து தான் ஆக வேண்டும். அது தான் அரசின் கொள்கை முடிவு என்னும் போது மாற்றி செய்ய இயலாது. அதில் என்னை குற்றம் சொல்வது ஏற்க இயலாதது" என்கிரார்.

இப்போது நேர்காணலை விடுங்கள். நான் பல இடங்களில் விவாதம் செய்யும் போது பலரும் சொல்லும் குற்றச்சாட்டு அதாவது உதாரணம் காட்டி எல்லாம் குற்றம் சுமத்துவர். அதாவது "சரிய்யா 1999ல் ஒரு வீடு பத்து லட்சம் ரூபாய்க்கு ஒருத்தன் விற்றான். அதையே பத்து வருஷம் கழிச்சு அதே வீட்டை பத்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வாயா? இப்போது அதன் மதிப்பு கோடி ரூபாய் ஆயிற்றே. எனக்கு முன்னால் இருந்தவன் விற்றான்  நானும் அதே விலைக்கு விற்றேன் என சொல்ல அந்த பதவிக்கு ஒரு எஸ் எஸ் எல் சி படிச்ச குமாஸ்தா போதுமே? எதற்காக ஒரு ராசா என்னும் அமைச்சர்" என கேட்பாங்க. அதீத புத்திசாலித்தனமான கேள்வியாக நினைத்துக்கொண்டு மற்றவர்களும் கைதட்டுவர்.

உதாரணம் எல்லாம் சரி தான். ஆனா அதன் உள்ளே போய் பார்க்கும் போது தான் விஷயம் தெரியும். ராசா அவர்கள் பதவிக்கு வந்த போது மொத்த கையிருப்பு ஸ்பெக்ட்ரம் என்பது 100 மெஹா ஹெர்ட்ஸ். அதிலே 35 சதம் ஏர்செல், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட ஐந்து கம்பனிகள் மட்டுமே பயன் படுத்தியும் , 30 சதம் இராணுவமும், மீதி 35 சதம் சும்மாவும் கிடந்தன. அப்போது அந்த 35 சதத்தை அந்த ஐந்து கம்பனிகளும் தான் விலை நிர்ணயம் செய்து விற்று வந்தன. ஆக நம் வீட்டு பொருளுக்கு யாரோ விலை நிர்ணயம் செய்து நம் வீட்டு மக்களுக்கே விற்கும் நிலை. இதை அவர்கள் ஒரு சிண்டிகேட் ஆக கூடிக்கொண்டு செய்து வரும் நிலையில் தான் ராசா அவர்கள் இராணுவம் பயன்படுத்தும் 30 சதத்தை தவிர மீதி இருக்கும் 65 சதத்தையுமே விற்க முன்வந்தார். அப்படி வரும் போது சந்தையில் போட்டி வரும். இந்த ஐந்து கம்பனிகளை தவிர மற்ற கம்பனிகளும் இதில் ஈடுபடும் போது போட்டியால் மக்களுக்கு சொற்ப பணத்தில் செல்போன் வசதி கிடைக்கும். அப்படி கிடைக்கும் பட்சத்தில் ஏழை மக்களும் இதனால் பயன் அடைவர். பயனாளிகள் எண்ணிக்கையும் கூடும் என்றெல்லாம் நினைத்தார். ஆனால் பத்து லட்சம் வீடு கதை எல்லாம் சும்மா டுபாக்கூர் வாதங்கள். ஏனனில் ராசா அவர்கள் தெளிவாக சொல்கிறார் தன் பேட்டியில்.... அவர்கள் அந்த ஐந்து கம்பனிகளும் சிண்டிகேட் அமைத்து கொண்டு செயல்படும் போது அவர்களுக்கு போட்டியாக மற்ற கம்பனிகளை  உள்ளே கொண்டு வந்து விட்டு மீதம் சும்மா கிடக்கும் அந்த 30 சதம் ஸ்பெக்ட்ரமையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் போது இந்த சிண்டிகேட் ஆசாமிகளுக்கு வயிற்றில் புளி கரைக்குது.

ராசா சொல்கிறார்.இந்த உதாரணம் பாருங்கள். ஒருத்தன் ஒரு காரை பத்து லட்சம் கொடுத்தும் வாங்கலாம், ஒரு கோடி ரூபாய்க்கு பென்ஸ் காரும் வாங்கலாம். ஆனால் லைசன்ஸ் என்பது சொற்ப விலைக்கு மட்டுமே தானே வாங்குவான். ஆக ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ்க்கான தொகை சிறியது. ஆனால் அதை வைத்து அவர்கள் வியாபாரம் எத்தனை விரிவா செய்கின்றரோ அந்த வரும் வருமானத்தில் அரசாங்கத்துக்கு பங்கு (ஷேர் ) உண்டு என்கிற உண்மையை அந்த வீடு - பத்துலட்சம் - இப்ப ஒரு கோடி என உதாரணம் காட்டுவோர் புரிந்து கொள்வது இல்லை என்கிறார். ஆக எத்தனை கம்பனிகள் அந்த ஸ்பெக்ட்ரம் பயன்படுத்தினாலும் அவர்களின் மறைவான பார்ட்னராக பங்குதாரராக அரசாங்கம் உண்டு. ஆக அந்த விற்பனை விரிவாக்கத்தினால் அரசுக்கு அதற்கான பங்கு வந்துவிடுகின்றது. இதிலே என்ன குறை? அதுவும் கூட 1999 தொலை தொடர்பு கொள்கையால் தான். இதிலே மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? சரி ஊடக மகாராஜாக்கள் சொல்வது போல ஏலத்துக்கு விடுவதாக வைத்துக்கொண்டால் அதிக விலைக்கு ஏலம் கேட்பவர்கள் அதை எங்கே போய் சம்பாதிக்க வேண்டும்? மக்களிடம் தானே? அப்போது எப்படி பத்து பைசாவுக்கு போன் செய்ய இயலும்? இதை கொஞ்சமாவது சிந்திச்சு பாருங்களேன்.

சரி, இதை படிக்கும் மக்களே, நான் ஒன்று கேட்கிறேன். 2ஜியில் ஏலம் விடாதது தான் பிரச்சனை என்று சொல்லி 3ஜி ஏலத்தில் விட்டதால் அது அடித்தட்டு மக்களை சென்று சேர்ந்ததா? இல்லையே? ஏன்? மெட்ரோ சிட்டிகளில் இருப்பவர்கள் மட்டுமே மனிதர்களா? இதோ இன்னும் மயிலாடுதுறை என்னும் மிகச்சிறப்பான பாராளுமன்ற தொகுதியில் கூட வரவில்லை 3ஜி. ஏன்? அதையே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் பழைய 1999 கொள்கை நிலைப்பாட்டில் இருந்து செய்திருந்தால் இந்நேரம் 3ஜி எங்கள் ஊர் குப்பனும் சுப்பனும் கூட வைத்திருப்பான். ஏனனில் 1999 தொலை தொடர்பு கொள்கையில் "மக்கள் நலம்" என்னும் கந்தாயம் கலந்து இருந்தது. ஆனால் இந்த பிரச்சனையை சி ஏ ஜி ஏற்படுத்திய பின்னர் அரசாங்கம் பயந்து விட்டது. அதனால் "மக்கள் நலம்" புறக்கணிக்கப்பட்டு அரசும் ஒரு கார்பரேட் நிறுவனமாக ஆகிப்போய் பணம் பண்ணும் வஸ்துவாகிப்போய் இன்று எங்கள் ஊர் குப்பனும் சுப்பனும் பழையபடி பின் தங்கிவிட்டனர்  மெட்ரோ நகர மக்களை ஒப்பிடும் போது:-( இது சி ஏ ஜிக்கு வேண்டுமானால் வெற்றியாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கான அரசாங்கம் என்னும் அரசாங்கத்துக்கு உண்டான தோல்வியே!

இதே ராசா அவர்கள் கூட மே மாதம் 20ம் தேதி 2010ல் 3 ஜி ஏலம் விட்ட பின்னர் மகிழ்வுடன் தெரிவிக்கிறார். அதாவது அப்போதே இந்த 2ஜி ஏலம் விடாமல் போனதால் தான் அரசுக்கு இழப்பு என்று ஊடகங்கள் ஊதிக்கொண்டு இருந்த உச்ச நேரம். அதன் காரணமாக 3ஜி ஏலத்தில் விடப்பட்டது. அப்போது ராசா அவர்கள் அலைக்கற்றை ஏலம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்து முடிந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 67,719 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது அரசு எதிர்பார்த்ததை விட அதிக தொகையாகும். இந்த பெரும் வருமானம் அரசுக்கு கிடைத்துள்ளதால், அத்துறை அமைச்சர் என்ற வகையில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் நன்கு கவனிக்கவும் 3ஜி யில் அரசுக்கு வருவாய் எத்தனை? ஆனால் 2ஜியால் வந்த வருமானம் எத்தனை? அதிலே மக்கள் நலம் எப்படி இருந்தது? 3 ஜி ஏலம் முறையால் எங்கள் பகுதிகள் பின் தங்கிவிட்டது. ஏனனில் இங்கே வரவில்லை 3ஜி தொழில்நுட்பம். ஏன்? ஏன்?  ( 3ஜி ஏலம் எடுத்தவர்கள் விபரம் : ஐடியா நிறுவனம் ரூ. 5,765 கோடிக்கு 11 பகுதிகளையும், ஏர் டெல் நிறுவனம் 12,290 கோடி ரூபாய்க்கு 13 பகுதிகளையும், ஓடாபோன் 11,617 கோடி ரூபாய்க்கு 9 பகுதிகளையும், ரிலையன்ஸ் 8,583 கோடி ரூபாய்க்கு 13 பகுதிகளையும், டாடா 5,864 கோடி ரூபாய்க்கு 8 பகுதிகளையும், எஸ் டெல் 337 கோடி ரூபாய்க்கு 3 பகுதிகளையும் ஏலத்தில் பெற்றுள்ளன.ஏலம் விடப்பட்ட பகுதிகளில் அதிகத் தொகையாக 3,317 கோடி ரூபாய்க்கு தில்லி பகுதியும், அடுத்தப்படியாக 3,247 கோடிக்கு மும்பை பகுதியும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன)
ஆனால் ஏல முறை இல்லாமல் போட்டி முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என இருப்பின் அப்படி உரிமை அளிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஒரு மறைமுக பங்குதாரர் என சொல்லி இருப்பின் அதாவது 2ஜி யைப்போல.... இந்நேரம் இந்தியா முழுமைக்கும் அந்த திட்டம் குக்கிராமம் வரை சென்று சேர்ந்திருக்கும்.
ஒரு சி ஏ ஜி அறிக்கையை கொண்டு ஒரு குற்ற வழக்கு போடலாம் என்னும் முன்னுதாரணத்தை இந்த 2 ஜி வழக்கு ஏற்படுத்தி கொடுத்த பின்னர் நாளை என்ன நடக்கும்? கேஸ் சிலிண்டர்காக, பெட்ரோலுக்காக, விவசாயத்துக்காக, மின்சாரத்துக்காக, அரிசிக்காக கொடுக்கும் எல்லா சப்சிடியிலும் அரசுக்கு இழப்பு உண்டு தான். அதை எல்லாம் சி ஏ ஜி குற்றம் சொல்லும் தான். நாளை ஒரு பொதுநல வழக்காக இந்த 2ஜி வழக்கு சி ஏ ஜி அறிக்கையின் படி ஏற்படுத்தப்பட்டதோ அதை முன்னுதாரனமாக காட்டி தொடரப்பட்டால் மக்கள் நிலை என்ன ஆகும்? அல்லது எந்த அரசாங்கமாவது மானியம் கொடுக்கவோ அல்லது மக்கள் நலனை சிந்திக்கவோ செய்யுமா? இது ஏழைகளின் சார்பாக வைக்கப்படும் கேள்வி!

எப்படி ஒரு சி ஏ ஜி அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கு சித்தரிக்கப்பட்டதோ அப்போதே ராசா அவர்கள் வழக்கில் அவர்களை இழுத்து கொண்டு வந்து மேற்படி கேள்விகளை அவர்களை நோக்கி கேட்டால் என்ன ஆகும்? அதை தான் ராசா நேர்காணலில் சொன்னார். இழுப்பேன்... நீதிமன்றத்திடம் அதற்கான அனுமதி கேட்பேன் என்றார். கேளுங்கள் ராசா அவர்களே, கேளுங்கள். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. அய்யா சி ஏ ஜி பெருமகன்களே, அரசாங்கம் என்பது வேறு. மக்கள் நலம் சார்ந்தது என்பதை புரிய வையுங்கள் ராசாவே! சரி மீண்டும் நேர்காணலுக்கு வருவோம்!

அடுத்து ஒரு கேள்வி! "நிங்கள் ஸ்வான், யூனிடெக் போன்ற கம்பனிகளுக்கு  சாதகமாக செயல்பட்டதாகவும் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்பதில் கட் ஆஃப் தேதியை முன்கூட்டி முடித்து விட்டதாகவும் சொல்லப்படுகின்றதே" என்னும் ஒரு அணுகுண்டு கேள்வி!

அதற்கு அழகாக பதில் சொல்கிறார். "முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்னும் நிலைப்பாடு என்னுடையது அல்ல என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். அது போல உங்கள் (புதியதலைமுறை) தொலைக்காட்சியில் கூட ஒரு மெத்தப்படித்த பொருளாதார நிபுனர் கூட ராசாவீட்டுக்கு முதலில் போனவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது என்பது போல பேசினார். நான் சிறையில் இருந்த போது அதைப்பார்த்தேன். இது என்ன திருவிழாவில் மிட்டாய் வாங்கும் விஷயமா? இல்லை. அது போல அல்ல. ஸ்பெக்ட்ரம் விற்பனைக்காக மனு செய்ய சொல்லப்பட்ட கடைசி தேதி என்பது மாற்றப்படவில்லை. அதை மாற்றினால் மட்டுமே தவறு. ஆனால் ஐநூத்தி சொச்சம் மனு வந்தது. ஆனால் இருக்கும் ஸ்பெக்ட்ரம் அளவு 65 மெகாஹெட்ஸ் மட்டுமே. அதனால் அந்த ஐநூத்தி சொச்சம் பேரில் தகுதியான அதாவது ட்ராய் வகுத்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மனு செய்த  கம்பனிகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனாலும் வந்த மனுவில் ஏ, பி, சி, டி என சீனியாரிட்டி போடப்பட்டது. அதிலே கூட ஏ இருக்கும் இடத்தில் டி யையும் டி இருந்த இடத்தில் சி யையும் மாற்றினோம் தவிர ஒட்டு மொத்தமாக இசட்டை கொண்டு வந்து எல்லாம் முதலில் உட்காரவைக்கவில்லை. ஆனால் அப்படி மாற்றியமைக்கான சரியான காரணங்கள் கூட எங்களிடம் உண்டு. அது சம்மந்தமான விஷயம் இப்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. நான் அங்கே ஏன் மாற்றினோம் என்பதற்கான காரணம் சொல்வேன். இதற்கு மேல் இங்கே இப்போது சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்ற விவகாரம். அதை மீறி இங்கே சொல்லக்கூடாது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் முதலில் விண்ணப்பித்த வர் முதலில் பரிசீலிக்கப் படுவதால், முதலில் வந்த வருக்கு முதலில் சேவை என்ற கொள்கை கடை பிடிக்கப்படும் வரை, கடைசி தேதி என்பது அர்த்தமற்றது. அலைக் கற்றை இருப்பின் தோராய மதிப்பீடு மற்றும் 2009 செப்டம்பர் 25 அன்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட வரை யில் பெறப்பட்ட விண் ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அந்தத் தேதி வரையில் பெறப் பட்ட விண்ணப்பங்களின் முதல் தொகுதி பரிசீலிக் கப்பட்டது. ஏதாவது விண்ணப்பம் புறக்கணிக் கப்பட்டதா அல்லது பின் னுக்குத் தள்ளப்பட்டதா என்பதுதான் கேள்வி.மீதமுள்ள விண்ணப் பங்கள் அலைக்கற்றை இருப்பைப் பொறுத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மீத முள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்பது ஊட கத்துறையில் உள்ள சில தவறான கருத் தாகும் என்கிறார் ஆ.ராசா. அவர் சொன்னதை எனக்கு சரியாக இங்கே சொல்ல தெரியவில்லை எனினும் அந்த நேர்காணலை பார்த்தவர்கள் அதிலிருக்கும் நியாயத்தை உணர்வார்கள் என்றே நம்புகிறேன்.

அடுத்ததாக ஒரு கேள்வியில் 1650 கோடி ரூபாய்க்கு உங்களிடம் அதாவது அரசாங்கத்திடம் வாங்கி விட்டு அதை பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு விற்ற கம்பனிகள் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்னும் கேள்வி. இது பரவலாக எல்லோருமே ஜூவி போன்ற காழ்ப்புணர்வு பத்திரிக்கை படிக்கும் மேதாவிகள் கேட்கும் கேள்வி. அதற்கு ராசா அவர்கள் " ஆமாம் உண்மை தான். எங்களிடம் 1650 கோடி கொடுத்து ஸ்பெக்ட்ரம் வாங்கியவர் அதை வைத்து மணியாட்டி கொண்டா இருக்க முடியும்? ஒரு டவர் போட 60 லட்சம் செலவாகும். சென்னையை மட்டுமே எடுத்துக்கொண்டால் குறைந்த பட்சம் 200 டவர் போட வேண்டும். தமிழ்நாடு முழுமைக்கும் எத்தனை ஆகும்? இந்தியா முழுமைக்கும் எத்தனை ஆகும்? 1650 கோடி கொடுத்து எங்களிடம் வாங்கியவன் இன்னும் சில பங்குதாரர்களை சேர்த்து கொள்வதையோ, பங்கு வணிகம் மூலமாக பணம் திரட்டுவதையோ ட்ராய் அல்லது நாங்கள் செய்யவில்லை. அது நிதித்துறை அவர்களுக்கு கொடுத்த அனுமதி. இதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. அது ஒரு லைசன்ஸ்தாரரின் உரிமை என நிதித்துறை நினைக்கும் போது நாங்கள் எதும் செய்ய இயலாது" என்கிறார்.

மேலும் அந்த நிருபர் " தொலைத்தொடர்பு துறையில் முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு கொடுத்தது ஏன்?" என்ற கேள்வி கேட்க அதற்கு ராசா அவர்கள் "இதற்கு தர்க்க ரீதியாக கேட்டால் தர்க்க ரீதியாக பதில் சொல்லலாம். சட்ட ரீதியாக கேட்டால் சட்ட ரீதியாகவும் சொல்லலாம்" என சொல்லிவிட்டு "ட்ராய் அமைப்பின் சட்ட விதிகளிலோ அல்லது எந்த அரசாங்க சட்ட விதிகளிலோ முன் அனுபவம் உள்ள ஒருவர் தான் அந்த தொழில் செய்ய வேண்டும் என இருக்கும் ஒரு வரியை காண்பியுங்கள்" என சட்டரீதி பதிலை சொல்லிவிட்டு "அப்படி பார்த்தால் ஸ்பெக்ட்ரம் என்னும் விஷயமே இந்தியாவுக்கு புதியது என்னும் போது பி பி எல், டாட்டா, அம்பானி, பிர்லா என  யாருமே  கூட அந்த துறையில் முன் அனுபவம் இல்லாதவர்கள் தான் " என தர்க்க ரீதியாக பதில் சொல்கிறார். இதிலே நான் சொல்வது என்னவெனில் நடுநிலைவாதிகளே, மெத்த படித்த மேதாவிலாசம் கொண்டோரே, முன் அனுபவம் இல்லாமல் முதலிரவு நடத்தி அஸ்வினி முதல் ரேவதி முதல் 27 குழந்தை பெற்றுக்கொள்ளும் கிருஷ்ண பரமாத்மாவின் தோழர் குசேலரை ஒத்துக்கொள்லும் நீங்கள் தொலைதொடர்பு வேலைக்கு மாத்திரம் ஏன் முன் அனுபவம் பின் அனுபவம் என கேட்கின்றீர்கள்?

இப்படியாக எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சரவெடியாக வெடிக்கும் போது நேர்காணளாலர் கேட்கிறார்... "சரி நீங்கள் ஜாமீன் வாங்க ஏன் இத்தனை காலம் எடுத்து கொண்டீர்கள்?" அதற்கு ராசா அவர்கள் " ஸ்பெக்ட்ரம் ஒன்னேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் என்னும் மாயவலை மாய பலூன் பார்த்து உச்சநீதிமன்றமே அதிர்வாகி விட்டது. அதனால் தான் திருமதி. கனிமொழி உட்பட பலரும் ஜாமீன் கேட்டு சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், பின்னர் உச்சநீதிமன்றம் எல்லாம் சென்ற போது அவர்கள் "தொகை பெரியது" என காரணம் காட்டினர். நான் இதற்கிடையில் வழக்கை சந்தித்து அந்த மாயபலூன் காற்றினை பிடுங்கி விடும் வேலையை சாட்சிகள் விசாரணை போன்று வழக்கில் ஈடுபட ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக காற்றை இறக்கிவிட்டு பின்னர் அதை சாதாரண வழக்காக நீதிமன்றம் நினைக்க ஆரம்பித்த பின்னர் ஜாமீன் கேட்டேன். கிடைத்தது" என சொன்னார். ஆக ஸ்பெக்ட்ரம் காற்று இறங்கி விட்டது.

பின்னர் கட்சி தலைமை மற்றும் தலைவர் மேல் அவர் வைத்திருக்கும் பக்தி, கலைஞர் இவர் மேல் கொண்ட நம்பிக்கை எல்லாம் பேசினார். கடைசியாக ஒரு கேள்வி... "நீங்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஆகா இவர் நமக்கு உதவவில்லையே, பழிவாங்கி விட்டாரே என்றெல்லாம் யாரையாவது குறிப்பிட இயலுமா?" என்னும் கேள்விக்கு ராசா அவர்கள் " இல்லை.. யாரும் எனக்கு வந்து உதவி செய்யனும் என நான் நினைக்க இயலாது. இது சிவில் வழக்கு இல்லை. ஒரு பிரம்மாண்டமான குற்றவியல் வழக்கு என்மீது. நான் மட்டுமே இதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும். என்னை நான் தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்" என சொல்லிவிட்டு ஒரு அறிஞர் எழுதிய தத்துவத்தை சொல்கிறார் ஆங்கிலத்தில். "அதாவது  ஒருவருக்கு ஒரு பிரச்சனை பற்றிய நியாயங்கள் உண்மைகள் தெரிய வந்தும் அவர் நான் நடுநிலையாக இருக்கிறேன் என நினைத்து வாய்மூடி மௌனியாக உண்மையை மறைத்தார் எனில் அவருக்கு நரகத்திலும் கூட மோசமான ஒரு நரக பகுதி தான் கிட்டும். அஃப்கோர்ஸ் எனக்கு சொர்கம் நரகம் மீது எல்லாம் நம்பிக்கை இல்லாவிடினும் அந்த அறிஞர் சொன்னதை சொல்கிறேன்" என சொல்லிவிட்டு சிரிக்கின்றார். திரு.ராசா அவர்களின் இந்த பதில் எத்தனை பேருக்கு வயிற்றில் பயப்பந்தை உருள செய்திருக்குமோ என தெரியவில்லை. 

07.07.2012 இரவு 9 மணி முதல் பத்து மணி வரை இந்த நேர்காணல் புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகியது. நான் இரவு 11 மணி முதல் இந்த பதிவை டைப் செய்ய ஆரம்பித்து விட்டேன். ஆனால் எனக்கு மின்சாரம் நேற்று இரவு 11.30 முதல் 12.30 வரை நிறுத்தம் ஆகியது. பின்னர் மீண்டும் அடிக்க ஆரம்பித்தேன். பின்னர் 1.15க்கு நின்றுவிட்டது. சரி காலையில் எழுந்து அடிக்கலாம் என இருந்த போது 7 மணி முதல் 9 வரை மின்சாரம் இல்லை. இப்போது கூட எப்போது வேண்டுமானாலும் மின்சாரம் போய்விடும் நிலை தான். ஆனால் எனக்கு செல்போன் தடை இல்லாமல் கிடைக்கின்றது. இதே கட்டுரையை ஒரு அரை மணி நேரம் நான் என் செல்போன் வழியாக ஒரு சிலருக்கு படித்து காட்டலாம். ஆனால் ஆயிரம் பேர் படிக்க என்ன செய்யலாம்?

வேறு வழி இல்லை. கனம் நீதிமான்களே! மாண்புக்குரிய மத்திய அரசே, இந்த வழக்கு முடிந்த பின்னர் திரு.ஆ.ராசா அவர்களை மத்திய மின் துறை அமைச்சர் ஆக்குங்கள். தடையில்லா மின்சாரமும், அதுவும் குறைந்த விலை மின்சாரமும் கிடைக்க செய்வார் என்னும் நம்பிக்கை இருக்கின்றது. இன்று மதியம் மீண்டும் 1 மணிக்கு ( 08.07.2012) அதே புதியதலைமுறை தொலைக்காட்சியில் மீள் ஒளிபரப்பாகின்றது அந்த நேர்காணல். பாருங்கள். நான் சொல்வது உண்மை என புரியும்!

May 15, 2012

தகதகத்தாய சூரியன் பொய்மேகங்கள் கலைத்து வெளியே வந்தது!!!




இரண்டாம் அலைக்கற்றை விவகாரத்தில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொகை ஊடகங்கள் மற்றும் சி ஏ ஜி  மதிப்பில் (???!!!) ஒரு லட்சத்தி எழுபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய் இந்திய பணம் என்பதில் தொடங்கி பின்னர் சி பி ஐ கணக்குப்படி  35000 கோடி  என்று வழக்கு பதிவும் செய்து கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி 2010ம் ஆண்டு திமுகவை சேர்ந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும்,  முன்னாள் தொலை தொடர்பு அமைச்சருமான ஆ.ராசா அவர்கள்  கைது செய்யப்பட்டு இன்று 15 மாதங்கள் முடிவடைந்து விட்டன.கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி 2010ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கையும் சி பி ஐ ஆல் தாக்கல் செய்யப்பட்டது.  அவருடன் மற்றும் அவருக்கு பின்னர் இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மீதம் 16 பேரின் பிணை வழக்குகள் விசாரிக்கப்பட்டு சி பி ஐ நீதிமன்றத்தின், டெல்லி உயர்நீதிமன்றத்தில், சில உச்சநீதிமன்றத்தில் கூட பிணை கொடுக்கப்பட்டு அவர்கள் விடுதலையும் செய்யப்பட்டு அவர்கள் தினம் தோரும் வழக்கிற்காக நீதிமன்றம் (விடுமுறை நாட்களை தவிர்த்து) வந்து விசாரனை நடைபெற்று கொண்டு இருக்கின்றனர்.


இதுவரை  40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாக்குமூலங்கள் 1500 பக்கங்களுக்கு மேலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 100க்கும் மேலான வழக்கு ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு அதன் மீதான சரிபார்ப்பு மற்றும் பரிசீலனையும் முடிந்தும் விட்டன. அதாவது கிட்டத்தட்ட வழக்கு பாதிக்கும் மேலாக முடிவடைந்து விட்டது.

இதுவரையிலான வழக்கில் ஆ.ராசா அவர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்துக்கும், வழக்கு தொடுத்துள்ள சி பி ஐ க்கும் எவ்வித முட்டுக்கட்டைகளும் போடப்படவில்லை என்பதும் விசாரணை வாய்தாக்கள் கேட்கப்படவில்லை என்பதும் முழுமையான ஒத்துழைப்பு தருவதாக சி பி ஐ கூட தெரிவித்து இருப்பதும் எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. இதே இந்திய நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா போன்றவர்கள் தங்கள் மீது நிலுவையில் இருக்கு வழக்குகளில் எப்படி எல்லாம் வழக்கை இழுத்தடிக்கும் கூத்துகளும் நடந்து கொண்டு இருக்கின்றன, அதிலே எல்லாம் எத்தனை முறை வாய்தா வாங்கப்பட்டு கொண்டு இருக்கின்றன என்பதும், தனக்கு வழக்கு விபரங்கள் இன்ன இன்ன மொழியில் வேண்டும் என்றெல்லாம் நீதிக்கு வித்தை காண்பித்து கொண்டு இருக்கின்றனர் என்பதையும் மக்கள் பார்த்து கொண்டு தன் உள்ளனர்.

இது இப்படி இருக்க.... இந்த வழக்கு உண்மையா? சி ஏ ஜி அறிக்கை என்பது திராவிட, தலித்தியத்தின் மீதான காழ்புணர்வானதா? அல்லது உண்மையிலேயே அத்தனை இழப்பு ஏற்பட்டதா? அதே போல மற்ற மற்ற துறைகளில் அரசுக்கு இழப்பு என்பதே இல்லையா? அரசுக்கு இழப்பு ஏற்படுவதால் மக்களுக்கு பயன் உண்டா? அல்லது அரசுக்கு இழப்பு ஏற்படும் போதெல்லாம் மக்களுக்கும் இழப்பு தானா? அரசு என்பது ஒரு கார்பரேட் கம்பனி போல மக்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா? அல்லது கனிவான தாயைப்போல நடந்து கொள்ள வேண்டுமா?  ராசா அவர்கள் வழக்கில் தானே பலமுறை வாதாடியும் வருகின்றாரே, அவர் என்ன மாதிரியான கருத்துகளை முன்வைக்கிறார்? சி பி ஐ இதுவரை வழக்கின் போக்கில் சரியான பாதையில் தான் போகின்றதா? பாரபட்சம் காட்டி செயல் படுகின்றதா? யாரால் இந்த வழக்கு பிரபல்யம் அடைந்ததோ அந்த நீரா ராடியா கைது செய்யப்பட்டாரா? ரிலையன்ஸ் இதில் முக்கிய குற்றவாளி என சொன்ன சி பி ஐ அம்பானிகளை கைது செய்யாமல் அவர்கள் கம்பனிகளின் அம்புகளை மட்டும் கைது செய்து விட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட ஒரு கம்பனியில் கடன் மட்டுமே வாங்கியமைக்காக கனிமொழியையே கைது செய்தது அரசியல் காரணமா? வழக்கின் பின்னனி காரணம் என்னவாக இருக்கும்? என்னவாக இருக்க இயலும்? எந்த எந்த கட்சிகள் இதன் பின்னனியில் உள்ளன? என்ன என்ன இயக்கங்கள் இதன் உள்ளே புகுந்து ஆட்டுவிக்கின்றன? ஊடகங்கள் செய்த அயோக்கியத்தனம் இதில் என்ன? என்பன பற்றி எல்லாம் இதோ நவம்பர் 14 , 2010 அன்று தன் அமைச்சர் பதவியை துறந்து விட்டு ராசா அவர்கள் "தி ஹிண்டு" நாளேடுகளுக்கு அளித்த ஒரு முழுமையான நேர்காணலில் காண்போம்.

நாம் மேலே கேட்ட அத்தனை கேள்விக்கான பதிலும் அதில் இருக்கின்றன. ராசா என்பவர் ஒரு சாதாரண அரசியல் வாதி அல்ல. அவர் வாஜ்பாய் அரசில் இருந்து இன்றைக்கு இருக்கும் மன்மோகன் அரசு வரை "கேபினட் அமைச்சராக" பல ஆண்டுகள் பணியாற்றியவர். பல முறை பிரதமர்களால் தனது துறை சம்மந்தமாக பாராட்டுப்பெற்றவர். தனதுதொகுதி மக்களுக்கும், தான் சார்ந்த மாவட்ட மக்களுக்கும் அளவில்லா செயலாற்றியவர். மேலும் தான் ஒரு மிகச்சிறந்த வழக்கறிஞர் என இப்போது சி பி ஐ நீதிமன்றத்தில் நிரூபித்தவர். அவருக்காக நாம் யாரும் கட்டுரை எழுதி ஆதரிக்கிறேன் என "வக்காலத்து" வாங்கும் நிலையில் அவர் இல்லை. அதனால் அவர் வாதத்தை அவரே இங்கு வைக்கட்டும். நீதி  என்பது நீதிமன்றம் வழங்குவது மட்டும் அல்ல, மக்களே உங்கள் கையிலும் தான் உள்ளது. அவரது தரப்பு வாதத்தை கூர்ந்து படியுங்கள். அவர் என்னவோ ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகளாக கத்தை கத்தையாக கண்டெய்னரில் பெரம்பலூர் எடுத்து சென்றதாக பரப்பப்பட்ட செய்தியில் உண்மை உண்டா அல்லது தலித்திய காழ்புணர்சி மட்டுமே அதில் உள்ளதா என்பதை நீங்கள் எடை போடுங்கள்.

****************************************

கேள்வி : இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து கசிந்ததாகக் கூறப் படும் பகுதி, அலைக் கற்றை ஒதுக்கீட்டில் உங்களது கொள்கை மூலமாக வும், மேலும் பல நிறு வனங்களை அறிமுகப் படுத்தியதன் மூலமாக வும், சில உரிமை நிபந்த னைகள் சில வற்றில் மாற்றங்கள் மூலமாகவும், அரசுக்கு ரூ.1.77 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுகி றதே. தங்களால் விளக்க முடியுமா?

அமைச்சர் ஆ.இராசா : தற்போது எழுப்பப் பட்டுள்ள பிரச்சினைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவ தாக அரசுக்கு ஏற்பட்டு விட்ட தாகக் கூறப் படும் இழப்பு, இரண்டாவதாக நடை முறைத் தவறுகள்.

மத்திய அமைச்சரவையால் பரிசீலிக்கப் பட்டு நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப் பட்ட 1999ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஏலமுறையிலிருந்து (94ஆம் ஆண்டு கொள்கை) வருவாய்ப் பங்கீட்டு முறைக்கு (99ஆம் ஆண்டு கொள்கை) மாற அதிகாரம் அளிக்கிறது. கசிந் துள்ள தணிக்கை அறிக்கை நாங்கள் ஏல முறையைக் கடைப் பிடித்து 3 ஜி படகில் கணக்கு ரீதியிலான பயணம் மேற்கொண்டி ருக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவே, தற் போது ஏற்பட்டுவிட்ட தாகக் கருதப்படும் இழப் புகணக்கிடப்பட்டுள்ள தற்கான அளவு கோலே சரியானதல்ல.

இங்கே நமக்குள்ள பிரச்சினை அரசியல் சட்ட ரீதியிலான ஒரு அமைப் பான தலைமைத் தணிக்கை அதிகரிக்கும் மற்றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்புகளான மத்திய அமைச்சரவை, மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கு இடையிலான அபிப்ராய பேதம் (கருத்து வேறுபாடு ) ஆகும்.

தணிக்கை அதிகாரி, அமைச்சரவை, நாடாளு மன்றம் மற்றும் மற் றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்பான தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணை யம், மற்றும் திட்டக் கமிஷன் ஆகியவற் றோடு ஒப்புக்கொள்ள முடியாததது போலத் தோன்றுகிறது. இப்படிப் பட்ட நிறுவன முறை மீறலுக்கு நீதித் துறை மூலமாகவோ அல்லது நாடாளுமன்ற அமைப்பு மூலமோ தீர்வு காணப் பட வேண்டும் என்பது எனது கருத்து.

கேள்வி: இந்தக் கொள்கையால் இழப்பு ஏற்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் ரூ.1.77 லட்சம் கோடி பற்றி?

அமைச்சர் ஆ.இராசா : 2 ஜி அலைக்கற்றை ஏன் ஏலம் விடப்படவில்லை என்ற அடிப்படைக் கேள் விக்கு ‘இந்து’ நாளேட்டில் எனது முந்தைய பேட்டி யில் விளக்கியுள்ளேன். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து நாடாளு மன்றம் ஏற்றுக்கொண்ட 1999 ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஆவணம் மறுப் பதால், 2ஜி அலைக்கற் றையை ஏலத்தில் விட முடியாது.
நாடாளுமன்றம்தான் கொள்கையை திருத்த முடியும்

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம், பதினொறாவது ஐந்தாண்டுத்திட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஆகியவையும் 99 ஆம் ஆண்டு கொள்கை யின்படியே உள்ளன. 99 ஆம் ஆண்டு கொள்கை யில் ஏதாவது திருத்தம் தேவையென்றால் அதை நாடாளுமன்றம் மட்டும் தான் செய்ய முடியும்.
புதிய ஒருமைப் பயன் பாட்டு சேவை உரிமங்கள் மற்றும் 2ஜி அலைக் கற்றை வழங்குவதற்கான தற் போதைய கொள்கை 2003 ஆம் ஆண்டு நவம்பர் முதல் எந்தவித மாறுத லும் இன்றி, வெளிப் படையான கொள்கை யாக இருந்து வருகிறது. 2003 அக்டோ பர் 31 அன்று மத்திய அமைச்ச ரவையால் ஒப்புதல் அளிக் கப்பட்டக் கொள்கை யிலிருந்து எந்த விலகலும் இல்லை. 2003 நவம்பர் முதல் இன்றுவரை அடுத் தடுத்து வந்த அரசு களால், உரிமங்கள் வழங்குதல், அலைக் கற்றை ஒதுக் கீடு செய்தல், கட்டணங்கள் ஆகியவற் றிற்கான நடைமுறைக் கொள்கை கடை பிடிக்கப் பட்டு வந்துள்ளது.

61 சதவிகித மக்களுக்கு செல்போன் வசதி
அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கான வரிகள் மற்றும் ஒழுங்கு முறைக் கொள்கை முன் னேற்றுவதற்காக இருந்து வந்துள்ளது, இருக்கிறது. அதில் வருவாய் ஈட்டுதல் என்பதற்கு இரண்டாவது இடம்தான் தரப்பட்டுள்ளது. இவை இத்துறையில் முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சிக்கும், தொலைத்தொடர்பு அடர்த்தியில் மிகப்பெரும் தாவுதலையும் கண்டுள் ளது என்பதால் இந்தக் கொள்கைகள் மாற்றப்படவில்லை ( அதாவது, உலகிலேயே இரண்டாவதாக தற்போது 70 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் உலகிலேயே மிகக்குறைந்த கட்டணங் களில் செல் போன் வசதி யைப் பெற்றுள்ளனர் -) கிராமப்புறங்களில் 2010 செப்டம்பர் மாதம் அது 28.46 சதவீதமாகவும், கிராமப்புறம் மற்றும் நகர்ப் புறம் சேர்ந்து மொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி 60.99 சதவீத மாக உயர்ந்துள்ளன. ( அதாவது 100 இந்தியர் களில் சுமார் 61 பேருக்கு செல்போன் வசதி கிடைத் துள்ளது). தற்போது மொத்தம் உள்ள தொலை பேசிகளின் எண் ணிக்கை 72.3 கோடி ஆகும். இது 11வது ஐந்தாண்டுத் திட் டத்தின் இலக்கான 60 கோடிக்கும் அதிகமாகும்.

மேலும், அரசின் மிக அதிகமான வரி இல்லாத வருவாய் இத்துறையில் வருடாந்திர உரிமக் கட் டணமும், அலைக்கற்றை கட்டணமும் ஆகும். 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அரசு வருவாய்ப் பங்கீட்டு முறை மூலமாக ரூ.77,038 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

6.2 மெகா ஹட்ஸ்க்கு மேலானஅலைக்கற்றை ஒதுக்கீட்டில், இதன் காரணமாக அரசுக்கு ரூ.36,729 கோடி இழப்பு ஏற்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. என்னு டைய அமைச்சரவையில் உள்ள விவரங்களின்படி, ஒட்டுமொத்த வருவாயில் ஒரு சதவித வருவாய் பங்கீடு என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட சந்தாதாரர் அடித் தளத்தை அடைந்த தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 6.2 மெகா ஹட்ஸ்க்கு மேல் 10 மெகா ஹட்ஸ் வரை கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் முடிவை அப்போதைய அமைச்சர் பிரமோத் மகாஜன் 2002 ஜன வரி 31 அன்று எடுத்தார்.

அடுத்த அமைச்சர் அருண்ஷோரி 6.2க்கு மேல் 21 மெகா ஹட்ஸ் ஒதுக்கீடு செய்தார். தயாநிதிமாறன் 38.8-ம் நான் 12.6 மெகா ஹட்சும் ஒதுக்கீடு செய்தோம். நான் ஒதுக்கீடு செய்தபோது, 6.2 மெகாஹட்ஸ் என்பது ஒப்பந்த கலவை மிஞ்சி இருப்பதால் 6.2 மெகா ஹட்சுக்கு மேலான அலைக்கற்றைக்கு அர சால் நிர்ணயிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப் படும் என்று ஒரு விதியை வகுத்தேன்.

இது நான் எனக்கு முன் இருந்தவர்கள் மீது குற்றம் சுமத்துகிறேன் என்றோ, அவர்கள் மீது பொறுப்பை சுமத்து கிறேன் என்றோ அர்த்த மாகாது, 1999 முதல் நடைமுறை முழுவதும் தொடர்ந்து வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காதது ஏன்?
இழப்பு என்று கருதப் படுவதற்கு எந்தவிதமான தர்க்க ரீதியிலான அடிப் படையும் கிடையாது. அது பொருத்தமான கணக்கீட்டு முறையும் ஆகாது. கொள்கை மற்றும் செயல் முறையில் ஏற்பட்டிருக்கலாம், வந் திருக்கலாம் என்றெல் லாம் வழிகிடையாது என்பதால் ஊடகங்களின் அடிப்படையில் இழப்பை கணக்கிட முடியாது.

எதிர்க் கட்சிகள் விவாதத்தில் பங்கேற்றால் அவை அம்பலமாகிவிடும் என்பதால், அவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள்.

கேள்வி :- ஆனால் நீங்கள் அரசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தி விட்டீர்கள் என்பது குற்றச் சாட்டு . . . . ?

அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் ஒரு ஏகபோக சுயநல கும்பலை (உயசவநட) நான் உடைத்து விட்டேன் என்பதால் இந்தக் குற்றச் சாட்டுகள் கூறப்படு கின்றன என்று நம்புவ தற்கு எனக்கு உறுதியான காரணங்கள் உள்ளன. 1999 முதல் நான் பொறுப்பு ஏற்பதற்குச் சில நாட் களுக்கு முன்பு வரை இந்த ஏகபோக சுயநல கும்பலுக்குள் இதே கொள்கை நடை முறைப் படுத்தப்பட்டு வந்த வரை யில், எந்த அமைச் சரும் விமர்சிக்கப்பட வில்லை. 1998-99 ஆம் ஆண்டுக் கான தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை யைப் பாருங் கள்; அது அப்போதிருந்த உரி மங்களை நிர்ணயிக் கப்பட்ட கட்டண முறை யிலிருந்து வருவாய்ப் பங் கீட்டு முறைக்கு மாற்றிய கொள்கையைக் கடுமை யாக விமர்சித்தது. அதில் பல கடுமையான கண்ட னங்கள் இருந்தன. ஆனால் தலைமைத் தணிக்கை அமைப்புக்கே தெரிந்த காரணங்களை 2000-ம் ஆண்டு முதல் அது மவுன காட்சியாக விளங்கி, அடுத்தடுத்து அளித்த அறிக்கைகளில் அது அமைச்சகத்தை எப்போதும் கேள்வி கேட்டதில்லை.

உரங்கள், பெட்ரோ லியப் பொருட்கள், பொது விநியோக முறை யின் கீழ் வழங்கப்படும் அரிசி போன்றவற்றிற்கு அரசு மானியங்கள் தரும் உதாரணத்தைப் பயன் படுத்தி, இந்த இழப்பு கருத்தியலானது, உண்மை நிலையை அடிப்படை யாகக் கொண்டது அல்ல (nடிவiடியேட) என்பதை நான் விளக்குகிறேன். இந்தப் பொருட்களின் சந்தை விலைகளை எடுத்துக் கொண்டு, அவை மிகக் குறைந்த விலைகளில் (அரசு மானி யத்தால்) விற்கப்படுவதால் அரசுக்கு இவ்வளவு ஆயிரம் கோடி இழப்பு என்று சொன்னால், அதை ஏற்க முடியுமா?

அறிவார்ந்த காரணங் களின் அடிப்படையில் ஒரு கொள்கை இருக் கிறது. அவ்வப்போது மாறிவிடும் பிரச்சினை களை முடிவு செய்ய சட்ட ரீதியிலான ஒரு அமைப்பு உள்ளது. எனவே தொலைத் தொடர்புக் கொள்கை தீர்ப்பின்படி, வருவாய்ப் பங்கீட்டு முறைதான் எங்களுக்கு உள்ளது.

கேள்வி:- அலைக் கற்றைப் பிரச்சினையில் நீங்கள் ஏன் சட்ட அமைச் சகம் நிதி அமைச்சகம் ஆகியவற்றின் சேவை களைப் பயன்படுத்த வில்லை? நீங்கள் பிரதம ரின் ஆலோச னையையும் பொருட் படுத்த வில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?


அமைச்சர் ஆ. இராசா:- சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை தானாக வருவதில்லை. இருப்பில் உள்ள அலைவரிசை மிகக் குறைவாக இருப்பதால், வந்த ஏராளமான விண் ணப்பங்களை எப்படிக் கையாள்வது என்ற குறிப் பிட்ட பிரச்சினையில் எங்கள் அமைச்சகம் சட்ட அமைச்சகத்துக்கு ஒரு குறிப்பு அனுப்பியது. அந்தக் குறிப்பிலேயே நாங்களும் சில வழி முறை களைக் குறிப் பிட்டிருக்கி றோம். இதன்மீது அபிப்பி ராயத்தைக் கூறுவதற்கு மாறாக, சட்ட அமைச்ச கம் இதை அமைச்சர்கள் குழுவிற்கு அனுப்புமாறு ஆலோசனைக் கூறியது. இந்த ஆலோசனை அலைக்கற்றை விலை நிர்ணயிப்பு டனோ அல்லது வருவாய்ப் பங்கீட்டு அளவிலேயோ தொடர்புடை யது அல்ல. அலைக் கற்றை இருப் பைப் பொறுத்து முதலில் வந்த வர்களுக்கு முதலில் சேவை என்று இப் போதுள்ள கொள்கை அடிப்படையில் எங்கள் துறை செல்ல விரும்பிய தால் இது பிரதமரிடம் விளக்கப் பட்டது.

2001 ஆம் ஆண்டு நிர் ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று தொலைத் தொடர்புத் துறை செயலாளருக்கு நிதித்துறை செயலாளர் ஒரு கடிதம் எழுதினார். நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத் திடம் (டிராய்) தான் உள்ளது. 2007 -ம் ஆண்டு டிராய் நுழைவுக் கட்ட ணத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று மிக உறுதியாக, அறுதி யிட்ட பரிந்துரையை அளித்ததாலும், ஏற் கனவே அந்தக் கட்ட ணத்துக்கு நிதித்துறை அமைச்சகத்தின் பிரதி நிதியும் உறுப்பினராக உள்ள தொலைத் தொடர்பு கமிஷன் ஒப்பு தல் அளித்துள்ள தாலும், டிராய் பரிந்துரையை மேற்கோள் காட்டி தொலைத் தொடர்புத் துறை செயலாளர் நிதித் துறை செயலாளருக்கு பதில் அனுப்பினார் - அத் துடன் அந்த சுற்று முடிந்தது.

அதுபோலவே, அலைக் கற்றை ஒதுக்கீடு மற்றும் சந்தாதாரர் விதி முறை தொடர்பாக பிரத மர் சில குறிப்புகளை அனுப்பி னார். உத்தேசிக்கப்பட் டிருந்த அனைத்துப் பிரச் சினைகள் மற்றும் விதி முறைகள் ஆகியவை பிரத மருக்கு அனுப்பப்பட்டு அது வந்து சேர்ந்ததற் கான பதிலும் வந்தது. கேபினட் அமைச்சர்கள் ஒருவருக் கொருவர் கடி தங்கள் எழுதிக்கொள் வது, கேபினட் அமைச்சர் கள் பிரதமருக்கு கடிதங் கள் அனுப்புவதும் சாதா ரண வழக்கம் தான். எனக்கும் பிரதமருக்கும் இடையில் கடிதப் போக்கு வரத்து இருந்தது என் பதை மட்டும் அடிப்படை யாக வைத்து நான் பிரதமரின் ஆலோசனை யைப் பொருட்படுத்த வில்லை என்று ஊகிக்க முடியாது.
கடைசி தேதி என்பது அர்த்தமற்றது

கேள்வி :- உரிமங்கள் பெறுவதற்கான கடைசி தேதியை நீங்கள் ஏன் அப்பட்டமாக மாற்றினீர்கள்?

அமைச்சர் ஆ.இராசா:- முதலில் விண்ணப்பித்த வர் முதலில் பரிசீலிக்கப் படுவதால், முதலில் வந்த வருக்கு முதலில் சேவை என்ற கொள்கை கடை பிடிக்கப்படும் வரை, கடைசி தேதி என்பது அர்த்தமற்றது. அலைக் கற்றை இருப்பின் தோராய மதிப்பீடு மற்றும் 2009 செப்டம்பர் 25 அன்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட வரை யில் பெறப்பட்ட விண் ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அந்தத் தேதி வரையில் பெறப் பட்ட விண்ணப்பங்களின் முதல் தொகுதி பரிசீலிக் கப்பட்டது. ஏதாவது விண்ணப்பம் புறக்கணிக் கப்பட்டதா அல்லது பின் னுக்குத் தள்ளப்பட்டதா என்பதுதான் கேள்வி.

மீதமுள்ள விண்ணப் பங்கள் அலைக்கற்றை இருப்பைப் பொறுத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மீத முள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்பது ஊட கத்துறையில் உள்ள சில தவறான கருத் தாகும்.

பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்

கேள்வி :- நீங்கள் இலக்கிடப்பட்டுள்ளீர் கள் என்று நினைக்கிறீர் களா?

அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் மாற்றங்கள் கூடாது என்று விரும்பும் ஒரு பெரிய (ஆதரவு திரட் டும்) கும்பல் இருப்ப தாக நினைக்க நான் நிர்ப்பந் தக்கப்படுகிறேன். உதா ரணமாக (செல் போன் சேவையை எண்கள் மாறா மல் ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாற்றிக் கொள்ளும்) எண் சேவை மாற்ற முறைக்கு எதிரானவர்கள் சிலர் உள்ளனர். என்னைக் குறி வைத்து பிரகடனப்படுத்தி யுள்ள ஏகபோக சுயநல கும்பல் (ஊயசவநட) ஒன்று உள்ளது. அதற்கு ஊடகத் துறையின் மீது செல் வாக்கு உள்ளது. அதனி டம் மிகப் பெருமளவு நிதி ஆதாரங்களும், பணமும் உள்ளன. இந்த நிகழ்வுகள் சில அரசியல் கட்சிகளால் தி.மு.க.வுக்கு கெட்ட பெயரைத் தேடித் தரப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மக்கள் பயன டைந்துள்ளனர் என்ற உண்மை உள்ளது. அது என்னாலும் அரசாலும் நிர்ணயிக்கப்பட்ட கொள் கைகளாலும், எடுக்கப் பட்ட முயற்சிகளாலும் ஆகும்.

கேள்வி:- கொடுக்கப் பட்ட 122 உரிமங்களில் 85 தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத நிறு வனங்களுக்குச் கொடுக் கப்பட்டுள்ளது ஏன்?

அமைச்சர் ஆ.இராசா:- இதுவும் தெளிவற்ற கருத்து, தலைமை தணிக்கை அதிகாரி அரசி யல் சட்ட ஷரத்து 149 க்கு அப்பால் அதி காரங்களை அபகரிக்க முயலவோ, அரசியல் சட்ட ரீதியில் உச்சநீதி மன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் முறையே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள 32 மற்றும் 226வது பிரிவு களின் கீழ் பிரச்சினை களை முடிவு செய்யவோ முயலக்கூடாது. விண் ணப்ப தேதியில் கம்பெனி கள் பதிவாளரிடம் குறிக் கோள் மாற்றப் பிரிவு, நிகர மதிப்பு, கம்பெனியின் பெயர் ஆகியவை காண் பித்தால் அது தொடர் பாக தணிக்கை அதிகாரி அறிக் கையில் தகுதி யின்மை என்று கூறப்பட் டுள்ளது என்பதை விளக்க வேண்டும். நாங்கள் சுய மாக அளிக்கப்படும் சான்றை அடிப்படை யாகக் கொள்கிறோம். கம்பெனிகள் பதிவாளர் பதிவேட்டில் பதிவு செய் வது என்பது ஒரு நடை முறை. அந்தப் பதிவாள ரிடம் முந்தைய தேதியில் பதிவு செய்யப்படுவது, அதற்கான தீர்மானம் முறையாக நிறை வேற்றப் பட்டு கம்பெனி செயலா ளரால் சான்றிதழ் அளிக் கப்பட்டிருந்தால், எந்தவிதமான சட்ட சிக்க லும் இல்லை என்று சட்ட அமைச்சகம் தற் போது கருத்து தெரிவித் துள்ளது.

கேள்வி : 99 ஆம் ஆண்டு புதிய தொலைத் தொடர்புக் கொள்கை தவறான கொள்கை என்று ஏற்றுக் கொள் வீர்களா?

அமைச்சர் ஆ.இராசா:- இல்லை. அந்தக் கொள்கையின் தீர்ப்பினுடைய வடிவமும், உணர்வும், நிகழ்ந்து வருகிறது. அரசில் கட்சி நிலைமை மாறுவதால் கொள்கைகள் மாற்றப்படக் கூடாது. 99ஆம் ஆண்டு கொள்கை தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசால் உருவாக் கப்பட்டது. இதை பா.ஜ.க. தலைமையிலான அரசு வடிவ மைத்தது என்ப தால் மட்டும் அதை நான் மாற்ற விரும்பவில்லை. அப்போதைய அரசின் தொலைநோக்குப் பார்வை சரியானது என்று நான் நாடாளுமன் றத்திலேயே பேசியிருக் கிறேன்.
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்

கேள்வி : தணிக்கை அதிகாரியின் எதிரான கருத்தைத் தொடர்ந்து என்ன நடக்கிறது? நீங்கள் ராஜிமானா செய்வீர் களா?

அமைச்சர் ஆ.இராசா : அரசியல் சட்டத்தின் கீழ் தணிக்கைக் கான ஒரு நிறுவனமான தலைமை தணிக்கை அதிகாரியை நான் மதிக்கிறேன். இருப் பினும், முறையான நடை முறை தீர்க்கப்படும் வரை யில், ஒரு தணிக்கையரைத் தண்டிக்கவோ அல்லது அரசின் கொள்கை களைப் பற்றி முடிவுக்கு வரவோ தணிக்கை அதிகாரி அறிக்கையை நீதிமன்ற தீர்ப்பாக எடுத் துக் கொள்ள முடியாது.

மேலும், நாடாளு மன்றத்தின் மூலம் 2000 ஆம் ஆண்டில் வைக்கப் பட்ட தலைமை தணிக்கை அதிகாரியின் 1998 - 99 ஆம் ஆண்டுக்கான அறிக் கையிலும் இதுபோன்ற கருத் துக்கள் கூறப்பட்டி ருந்தன. பொதுக்கணக்கு குழுவோ, நாடாளு மன்றமோ, கொள்கையை மாற்ற முடிவு எதுவும் செய்ய வில்லை. பொதுக் கணக்கு குழுவிடமிருந்து எந்த விதமான ஆலோ சனையும், நடவடிக் கையும் வராத நிலையில், அதற்குப் பின்னர், 2010 ஆம் ஆண்டு வரையில் தலைமைத் தணிக்கை அதிகாரி எந்தத் தவறை யும் கண்டுபிடிக்க வில்லை. இதை தணிக்கை அதிகாரிதான் விளக்க வேண்டும்.

*************************
 மேலே இருக்கும் திரு ஆ.ராசா அவர்களின் நவம்பர் 14, 2010 தேதி  "தி ஹிண்டு" பேட்டியை ஒட்டியே இப்போதைய அவரது வாதங்கள் நீதி மன்றத்திலும் போய்க்கொண்டு இருக்கின்றது.


இதோ சிறிது நேரம் முன்னர் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர்  ஆ. ராசா அவர்கள் இரு நபர் மற்றும்  20 லட்ச ரூபாய் பிணைத்தொகை, செலுத்த வேண்டும் என்றும், சென்னைக்கு செல்வதாக இருப்பின் நீதிமன்ற உத்தரவு வாங்கி மட்டுமே செல்ல வேண்டும் என்றும் சில நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரங்கள் , ஆரிய அடாவடித்தனங்கள் எல்லாவற்றையும் முறியடித்துவிட்டு  பொய் மேகக்கூட்டங்களில் இருந்து தகதகத்தாய சூரியனாக வெளி வந்துவிட்டார். இவரை "உள்ளே" அனுப்பிய கூட்டங்கள் இனி கைகூப்பி தொழுது வரவேற்றாக வேண்டும். அது காலத்தின் கட்டாயம். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!!!

April 16, 2012

2 ஜி அலைக்கற்றை வழக்கும், மாத்தூர் அடித்த அந்தர் பல்டியும் வழக்கம்போல் ஊடகங்களின் மௌனவிரதமும்!




பக்கத்து வீட்டுக்காரன் நம் மீது பொறாமைப்பட்டாலே நம்மால் தாங்க முடியவில்லை. இந்திய திருநாட்டின் மதிப்பு மிக்க காபினட் அமைச்சராக பல வருடம் வாஜ்பாய் தலைமையிலான அரசு முதலே பதவி வகித்து வரும் ஆ.ராசா அவர்களுக்கு பொருளாதார வளம் கொழிக்கும் தொலைத்தொடர்புதுறை 2009ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் முறையாக வழங்கப்பட்டதில் இருந்து பற்றி எரியாத வயிறுகளே இல்லை என்னும் அளவு இருந்தது என்னவோ உண்மை. இந்த கட்டுரையில் நான் திரு. ஆ.ராசா அவர்களுக்காக வக்காலத்து வாங்கப்போவதில்லை. அது என்னுடைய வேலையும் இல்லை. ஆனால் நடக்கும் விஷயங்கள் எல்லாம் ஆ.ராசா அவர்கள் விஷயத்தில் ஆரம்பம் முதல் இந்த அலைக்கற்றை விவகாரத்தில் அவர் தரப்பு மட்டும் ஏன் இப்படி ஒட்டு மொத்தமாக "கார்னர்" செய்யப்படுகின்றார் என்பதில் இருந்து என்னவோ நடக்கின்றது ஆனால் நடக்கும் விஷயங்கள் அத்தனை ஒரு நல்ல விஷயமாகப்படவில்லை என்றே மனதிற்கு படுகின்றது.

கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் எல்லாமே அலைக்கற்றை விஷயம் ஒட்டு மொத்த டெல்லி வட்டாரங்களையும் சூடாக்கி வரத்தொடங்கியது. எந்த வட இந்திய தொலைக்காட்சிகளை திறப்பினும் கோட், சூட் மாட்டிய எதேனும் ஒரு பொம்மைகள் ஒட்டு மொத்த இந்தியாவையே ஆ.ராசா அவர்கள் கொள்ளையடித்து பெரம்பலூருக்கு கண்டெய்னரில் ஏற்றிக்கொண்டு வந்தது போன்ற ஒரு பிரம்மை உண்டாக்கப்பட்டத. யாருக்கும் எதும் புரியவில்லை."ஸ்பெக்ட்ரம்" என்று ஆங்கிலத்தில் இருக்கும் வக்கபல்லரி புதிதாய் பலர் வாயில் புகுந்து புறப்பட்டது. அதற்கான தமிழ் வார்த்தை என்ன என்று அகராதி புரட்டிப்பார்க்கப்பட்டு "அலைக்கற்றை" என நாமகரணம் சூட்டப்பட்டது. அது முதல் தமிழக பத்திரிக்கைகள் தீனி போடப்பட்ட "மத" யானைகளாக பிளிறத்தொடங்கின.

யார் யாருக்கு எல்லாம் குறைந்த செலவில் செல்போன் சர்வீஸ் வழங்க ஆ.ராசா வழிவகை செய்தாரோ அந்த ரிக்ஷா தொழிலாளி முதல் அடித்தட்டு மக்கள் கூட "ஸ்பெக்ட்ரம்" பற்றி புதுப்புது கதைகளாக செல்பேசினர். ஆ.ராசாவின் கவனம் இதிலெல்லாம் சிதறியதாக தெரியவில்லை.2010 ம் ஆண்டு அக்டோபர் பத்தாம் தேதி ஐந்து நாள் பயணமாக ரஷ்யா சென்றார். அங்கே இரு நாடுகளுக்கு இடையே தகவல் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்வது குறித்து ரஷிய தொலை தொடர்பு துறை அமைச்சர் இகோர் செகோலேவுடன் அமைச்சர் ஆ.இராசா பேச்சு நடத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.இதனைத் தொடர்ந்து, ரஷிய நாட்டின் தகவல் தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் பார்வையிடும் ஆ.ராசா 16-ந்தேதி டெல்லி திரும்புகிறார். ஆக மடியில் கனமில்லை என்கிற மனோபாவம் மட்டும் ஆ.ராசா அவர்களின் செயல்பாடுகளில் நன்கு தெரிகின்றது. ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கின விஷயங்கள் பற்றி ஆ.ராசா அவர்கள் "பாவம் எதும் தெரியாதவர்கள். இல்லாத விஷயத்தை ஊதிப்பெரிதாக்கினால் அது நீதிமன்றம் சென்றால் கூட வழக்கு நிற்காது" என நினைத்து விட்டார் என்றே நினைக்கிறேன். ஆனால் அப்படி ஊதிப்பெருக்கியவர்களில் சிலருக்கு கூட "இது ஒன்றும் இல்லாத விஷயம் தான், ஆனால் ஊதிப்பார்ப்போம். அந்த புயலில் ராசா அடித்து செல்லப்பட்டால் லாபம். அசையாமல் நின்றால் நமக்கு நட்டமேதுமில்லை" என்று தான் ஆரம்பித்தனர். ஆனால் ஒட்டு மொத்த இந்திய ஆதிக்க ஊடகங்களும் அந்த விஷயத்தை இப்படி ஊதிப்பெரிதாக்கும் என ஆ.ராசா அவர்களோ அல்லது அவர் சார்ந்திருக்கும் திராவிட முன்னேற்ற கழகமோ சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றே இப்போது நினைக்க தோன்றுகின்றது.

ஆ.ராசா அவர்கள் ரஷ்ய பயணம் முடித்து விட்டு தாயகம் திரும்பும் முன் அந்த ஐந்து நாட்களில் இவர் மீது வழக்கு தொடுக்க தேவையான முகாந்திரம் இருப்பதாக சில ஆவணங்களை சி பி ஐ தயாரித்து விட்டது என்றே நினைக்கும் அளவுக்கு அப்போது தான் சுடச்சுட பதவி ஓய்வு பெற்ற அகில இந்திய டெலிகாம் செக்ரட்ரி பதவியில் இருந்த ஐ ஏ எஸ் அதிகாரி டி.எஸ்.மாத்தூர் என்பவரை கெட்டியாகப்பிடித்துக்கொண்டது சி பி ஐ. அந்த மாத்தூர் என்னும் உத்தமபுத்திரன் மீது ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்தார் என்ற அரசல் புரசல் செய்திகள் உலா வந்த நேரத்தில் அதுவே சி பி ஐக்கு வசதியாகப்போனது. அதை சொல்லி மிரட்டியே கூட இவரை பிடித்து எதாவது அவசர வாக்குமூலம் வாங்கினால் அதை உச்ச நீதிமன்றத்தில் காட்டியே ஆ.ராசா மீது வழக்கு தொடுப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக பிரதமர் அலுவலகம் சென்று அவரது அனுமதியோடு வழக்கு தொடுத்து விடலாம் என நினைத்தது சி பி ஐ.

சி பி ஐ நினைத்தது போலவே மாத்தூர் என்னும் மாடு அவர்கள் தாளத்துக்கு வசதியாக தலையாட்டியது. ‘2 ஜி’ அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு பற்றி நான் சொன்ன ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டார் அமைச்சர் ராசா. - ‘2 ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கியது தொடர்பான கோப்புகளில் நான் கையெழுத்திட வில்லை. மேலும் எனது ஒப்புதலையும் ராசா பெறவில்லை. ஏலம் விடுவதன்மூலம் ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்யலாம் என்ற எனது கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை" என சி பி ஐ வசம் டி எஸ் மாத்தூர் வாக்குமூலம் அளிக்க கிட்டத்தட்ட அதன் காரணமாகவே ஆ.ராசா அவர்கள் மீது வழக்கு சோடிக்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்துக்கு ராசாமீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனுமதி கேட்கப்பட்டது. அப்படி அனுமதி கேட்கப்பட்ட அனைத்து அரசு நடைமுறை கடிதங்கள் எல்லாமே டி எஸ் மாத்தூரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டே தயாரிக்கப்பட்டது.




( இக்கட்டுரையில் சாராம்சம் என்பது ராசா நிரபராதி என்று வாதிடுவதோ அல்லது அதற்கு சமமான விஷயங்களோ அல்ல. ஆனால் வழக்கின் போக்கு இப்போது எப்படி ஒருதலைப்பட்சமாக போய் கொண்டு இருக்கின்றது என்கிற ஆதங்கத்தினை பதிவு செய்யும் ஒரு முயற்சியேயாகும். )

இதற்கிடையே உச்சநீதிமன்ற கருத்து, பின்னர் ராசா அவர்கள் திமுக தலைமை கேட்டுக்கொண்டதுக்கு இணங்க அந்த வருட நேரு பிறந்த நாளில் பதவி விலகினார். பின்னர் கைது செய்யப்பட்டார் என்பது எல்லாம் கிடக்கட்டும். நாம் இங்கே குறிப்பிடப்படும் விஷயமே இத்தனைக்கு காரணமாக இருந்த டி எஸ் மாத்தூர் என்னும் உத்தம புத்திர யோக்கிய சிகாமணியின் வாக்குமூலம் தானே? அதாவது அவர் ஏலமுறை பின்பற்றலாம் என சொன்னதை ராசா கேட்காமல் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என செய்து நாட்டுக்கு ஒன்னேமுக்கால்லட்சம் கோடி நட்டம் ஆகிவிட்டது என்றெல்லாம் அண்டப்புளுகு ஆகாச புளுகு புளுகினாரோ ,அதன் பின்னர் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டது. என்ன தெரியுமா? "இல்லை, டி எஸ் மாத்தூர் சொல்வது யாவும் புனைவு மட்டுமே. அது சம்மந்தமாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்திலும் மாத்தூர் கலந்து கொண்டார். அத்தோடு மட்டுமல்லாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் பழைய நிலையே தொடர வேண்டும் என பரிந்துரை செய்தும் அவர் கைப்பட எழுதி பரிந்துரை செய்தும் கையெழுத்து போட்டுள்ளார். அவரது பரிந்துரையின் பேரிலேயே அமைச்சராக இருந்த ஆ.ராசா அவர்கள் அதை அமைச்சரவை ஒப்புதலுடன் கையெழுத்து இட்டுள்ளார்" என கூறியதோடு மட்டுமல்லாமல் அது அந்த மாத்தூர் கையெழுத்து இட்ட ஆவணங்கள் அனைத்தையும் வெளியிட்டது. (படத்தில் காணவும்)











ஆனால் அதற்குள் மாத்தூர் அவர்கள் காலை ஒரு தொலைக்காட்சியில் மதியம் ஒரு தொலைக்காட்சியில், இரவினில் ஒரு தொலைக்காட்சி என தன்னிடம் இருந்த அத்தனை விதமான கோட்டு, சூட்டுகள் பளபளக்க பேட்டி கொடுத்து கொண்டே இருக்க அந்த நேரம் ட்ராய் வெளியிட்ட மாத்தூரின் அண்ட புளுகு ஆதாரங்களை வெளிக்காட்ட எந்த ஒரு வட இந்திய சேனல்களும் முன்வரவில்லை, அச்சு ஊடகங்கள் அதற்கு மேல் வரிந்து கட்டிக்கொண்டு எழுத ஆரம்பித்தன. அது போதாது என்று தமிழக ஜெயா டிவியில் ரவிபெர்னார்ட் என்பவர் தன் லூயிபிலிப் சட்டை அழுக்காகாமல், ஷூ பாலீஷ் மின்னலடிக்க இதே மாத்தூரின் கருத்தை பல வித முகபாவங்களுடன் ஒரு விலைமகளுக்கே உரித்தான ஏற்ற இறக்கமுடன் பேட்டி எடுத்து கோயபல்ஸ் ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தார். இதே ரவிபெர்னாட் பற்றி ஊடக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஒரு வித எள்ளல் உண்டு. இவர் ஜெயா தொலைக்காட்சியில் சட்டசபை தேர்தலில் முடிவு அறிவிக்கவும் அது பற்றி விவாதிக்கவும் ஒரு முறை நியமிக்கப்பட்ட நேரத்தில் அதிமுக தோல்வியடைந்து திமுக வெற்றி வாகை சூடி பின்னர் கலைஞர் பதவிப்பிரமாணம் செய்து முடித்தும் விட்ட நிலையில் கூட நேரலை நிகழ்வில் "அதிமுக பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சி அமைக்க இருக்கின்றது" என்று சொல்லிகொண்டே இருக்க ஜெயா தொலைக்காட்சி ஊழியர்கள் சிலர் இந்த ரவிபெர்னார்டை "கொடுத்த காசுக்கு மேலே கூவிவிட்டாய் .போதும் போ " என சொல்லி குண்டுக்கட்டாய் தூக்கிப்போனதாக ஊடகவியலர் மத்தியில் கேலிப்பேச்சுகள் புழக்கத்தில் இப்போதும் உண்டு. (கேலி பேசியவர்கள் அதே வறுமை நிலையில் இருக்க ரவிபெர்னார்டோ இப்போது மாநிலங்கள் அவை உறுப்பினராக ஆகி பணம் பகட்டோடு இருக்கின்றார் என்பது உபரி செய்தி - நீதி: பணம் பத்தும் செய்யும், பொய் பதினொன்றும் செய்யும்)

ஆக எல்லாம் ஆனது. ராசா அவர்கள நீதிமன்றத்தில் வழக்கை சந்திப்பதாக ச்சொல்லி இதுவரை பிணை கூட கேட்காமல் நாள் தோறும் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு விபரங்களை தானே ஒரு வழக்கறிஞராகவும் இருப்பதால் தானே வாதாடியும் தன் வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு குறிப்புகள் கொடுப்பதும் (அவரது வழக்கறிஞரே அதை நீதிமன்றத்தில் நீதிபதியிடம் ஒரு முறை குறிப்பிட்டார்) ஆக வழக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

நாம் இங்கே குறிப்பிடுவது வழக்கு நடைபெறும் முறை குறித்தே. அது பற்றி மட்டுமே! வழக்கில் குற்றம் சாட்டப்படுபவர்கள் வழக்கு நடைபெறும் எல்லா நாட்களும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பது சட்ட விதிமுறையா என்பது குறித்து எமக்கு தெரியாது. ஆனால் பரப்பன அக்கிரகாரத்தில் நடைபெறும் ஜெயா மீதான வழக்கில் அப்படித்தான் ஜெயா ஆஜராகிக்கொண்டு இருக்கின்றாரா என்பது எம் கேள்வி! குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நேரிடை கேள்வி கேட்கும் வழக்கின் கடைசி கட்ட நடைமுறையின் போது கூட ஜெயாவும் அவரது தோழியாக இருந்து சமீபத்தில் தங்கையாகிப்போன சசிகலாவும் நீதிமன்றம் செல்ல முடியாது என அலைக்கழிக்கும் போது தினம் தினம் வழக்கில் ஆஜராகும் ஆ.ராசா அவர்கள் கடைசி வரிசையில் அமர்ந்தால் கூட பள்ளி மாணவரை ஆசிரியர் மிரட்டும் பாணியில் நீதிபதியால் அவமானப்படுத்தப்படுவதும் "முன் வரிசையில் வந்து பேசாமல் உட்கார்ந்து வழக்கை கவனிக்கவும்" என நீதிபதி சொல்வதும் அங்கே சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றதே, அப்போது நீதி என்பது இந்தியாவில் எல்லோருக்கும் சமம் என்பது பொய்யோ என்ற எண்ணம் நமக்கு வலுக்கின்றது.

சரி போகட்டும்! நாம் மேலே குறிப்பிட்ட டி எஸ் மாத்தூர் ஒரு நான்கு நாட்கள் முன்னதாக குறுக்கு விசாரணைக்கு ஆட்படும் போது அவர் ஏலமுறை வேண்டாம், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என பரிந்துரை செய்த ஆவணங்களை க்காட்டி ஆ.ராசாவின் வழக்கறிஞர் கேள்வி கேட்ட போது அதற்கு மாத்தூர் மழுப்பல் பதிலாக "ஆம் நான் இதில் கையெழுத்து போட்டது உண்மை தான், ஆனால் வாழ்மொழியாக அதல்லாம் வேண்டாம் ஏலத்தில் விடலாம் என சொன்னேன்" என மீண்டும் அண்டபுளுகு சொன்ன போது (கவனிக்க இவர் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி. இந்த ஒரு பதிலுக்காகவே ஐ ஏ எஸ் அதிகாரிகள் இவர் மீது ஐ ஏ எஸ் சங்க நடவடிக்கை எடுக்கலாம்) ராசாவின் வழக்கறிஞர் குரலை உயர்த்தி சில கேள்விகளை கேட்க நீதிபதியோ "நீங்கள் குரலை உயர்த்தி பேசினால் நானும் குரலை உயர்த்தி பேச வேண்டி இருக்கும்" என சொல்ல வழக்கம் போல ஊடகங்கள் வடையை தின்பதை விட்டுவிட்டு ஓட்டையை எண்ண ஆரம்பித்து விட்டன. வடையின் ருசி யாருக்கும் தெரியாமல் போனது. நீதிமன்றங்களில் சில சூழல்களில் குரல் உயர்த்தி பேசுவது என்பது எல்லாம் தவிர்க்க இயலாத விஷயம் தான் என சில வழக்கறிஞர்கள் கூட ஒத்துக்கொள்கின்றனர்.

எல்லா தொலைக்காட்சியிலும் மாய்ந்து மாய்ந்து மாத்தூர் சொன்ன பொய்யை காட்டிய அந்த தொலைக்காட்சி ஊடகங்கள் இப்போது எங்கே போயின? அழுக்கு படாத சட்டை போட்டு விலைமகள் நடிப்பை நடித்த ரவிபெர்னார்ட் எங்கே? 18 மாதங்கள் முன்னதாக பரப்பிய பொய்யை இப்போது உண்மை வெளிவரும் போதாவது காட்டி தங்கள் பாவத்தை கழுவ முன்வந்தனரா? இல்லை! ஏன் இப்படி ஒரு ஆதிக்க வெறி அந்த ஊடகங்களுக்கு!

ஒரு தெருவில் பத்து பெண்களின் தாலியை அறுத்து கொண்டு போன திருடன் ஒரு நாள் கையும் களவுமாக பிடிபட தாலி பறிகொடுத்த பெண்கள் அவனை கட்டிப்போட்டு விட்டு காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துவிட்டு ஆத்திரத்தில் நான்கு அடி அடித்தும் விடுகின்றனர். பின்னர் வந்த காவல்துறையினர் திருடியவனை பரிவோடு நடத்திவிட்டு தாலிபறிகொடுத்த பெண்களை "அடித்துவிட்டதாக" வழக்கு போட்டு உள்ளே தள்ளுகின்றனர். இது போன்ற செய்திகள் அடிக்கடி தினத்தந்தியில் வரும். இதற்கும் நாம் மேலே கூறிய பாட்டியாலா நிகழ்வுக்கும் ஆறு வித்யாசம் கண்டுபிடியுங்கள் பார்ப்போம். கண்டுபிடிக்க இயலாது!

இதை தமிழ் அச்சு ஊடகங்கள் கூட "ராசாவிடம் நீதிபதி கண்டிப்பு" என்கிற தலைப்பிட்டே வெளியிடுகின்றன! ஆனால் உலகமகா உத்தமன் யோக்கிய சிகாமணி மாத்தூர் பற்றியோ அவர் அப்போது எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் பரப்பிய பொய்யுரை பற்றியோ இப்போது நீதிமன்றத்தில் அடித்த அந்தர் பல்டி பற்றியோ ஏன் நம் ஊடகங்கள் வாய் திறக்கவில்லை? உங்களை கட்டிப்போட்ட மந்திர நூல் எது? எப்போது உண்மை பேசுவீர்கள்? இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே இருப்பீர்கள்?

காட்சிகள் மாறும்! காலம் மாறும்! ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்னும் நிலை வரும்!