பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 18, 2012

குண்டாமணி என்கிற செல்வராஜ் அண்ணன் மற்றும் மூவலுர் மூர்த்தி அண்ணன் ராக்ஸ்! மின்வெட்டு போராட்டம் மாபெறும் வெற்றி!

கூட்டம் கூடிக்கொண்டு இருக்கின்றது
மின்சார பாடை வந்தாச்சு
வக்கீல் சீனிவாசன் பாடையை சுற்றி வந்து அஞ்சலி செலுத்தும் காட்சி
சுற்றி வந்து அழுது அஞ்சலி செலுத்துகின்றனர் மின்சாரத்துக்கு
மின்சாரத்துக்கு அஞ்சலி செலுத்தும் நகர செயலர் குண்டாமணி அண்ணன் கூட நானும்!
அரசை எதிர்த்து போராட்ட முழக்கம்


காலை 7 மணி முதலே கூட்டம் கூடியது! ஒன்றியமும் நகரமும் ஒரே இடத்தில் என முடிவானது. இருவரும் சேர்ந்து நகராட்சி வாசல் மற்றும் தாலுக்கா ஆபீஸ் முன் ஆர்பாட்டம் என முடிவானது.

காலை ஆர் டி ஓ ஆபீஸ் முன்னர் கூடிய கூட்டம் இடம் பெயர்ந்தது. அண்ணன் குண்டாமணி அழுக்கான சட்டையுடன் மைக் செட் கட்டிக்கொண்டு இருக்க அவருக்கு துணையாக கவுன்சிலர் அசோக் மற்றும் முருகதாஸ் உதவி செய்ய நான் ஓடிப்போய் " அண்ணே எனக்கு என்ன வேலை?" என கேட்டேன்.

"நீ ஒன்னியும் பண்ண வேண்டாம், ஒனக்கு பெரிய நியூஸ் இருக்கு, அது சஸ்பென்ஸ்" என நகரம் சொன்னது.

யோசனையுடன் வந்தேன் வீட்டுக்கு. குளித்து முடித்து வீட்டுக்கு வரும் வழியில் நகரம் குண்டாமணி அண்ணன் எதிரே போனது. "தம்பி அங்க போய் நில்லு, நான் குளிச்சிட்டு வரேன்" என சொன்னது. என்னவோ புதிர் இருக்க போவுதுன்னு மாத்திரம் மனசுக்கு தெரிஞ்சுது. ஆனா என்னான்னு புரியலை.

காலை பத்துமணி. அண்ணன் முன்னாள் எம் எல் ஏ சத்தியசீலன்  வந்தாச்சு. ஜெகவீரபாண்டியன் அண்ணன் வந்தாச்சு. எஸ். என் ஜி அன்பு அண்ணன் வந்தாச்சு. இதோ மூவலூர் மூர்த்தி அண்ணன் கூட வந்தாச்சு. இன்னும் குண்டாமணி அண்ணாச்சியை காணும்.

கூட்டம் கூடிகிட்டே இருந்துச்சு. என் கிட்ட கேமிரா கூட இல்லை. திடீரென வேற வழியா குண்டாமணி அண்ணன் வந்தாச்சு.

"அண்ணே, என் கிட்டே கேமிரா இல்லை"

"நோ ப்ராப்ளம், இன்ஸ்பெக்டர் நமக்கு தெரிஞ்சவரு தான், எடுக்க சொல்லியிருக்கேன். வீடியோவே கிடைக்கும். பேசாம இரு"

போலீஸ் கூட்டம் வந்தது. அண்ணன் எங்கயோ போயிட்டாரு. போலீஸ் என் பக்கம் வந்தாங்க. கையில் வீடியோ கேமிரா, ஸ்டில் கேமிரா சகிதம்!
எங்கயோ இருந்து நகரம் குரல் கேட்டது!
"தொல்காப்பீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ"

"என்னாண்ணேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ"

"நான் சொன்ன மேரி வந்தாங்களா"

"ஆமாண்ண்ணேஏஏஏஏஏஏஏஏஏஏஎ"

"கைல பொருள் எல்லாம் இருக்காகாஆஆஆ"

"இருக்கூஊஊஊஊ"

இன்ஸ்பெக்டர் கேட்டார்... "என்னப்பா உங்க நகரம் என்னா சொல்லுது?"

"சார் மேற்கால தான் ஒன்றிய ஆட்கள் வராங்களாம், அங்க கொஞ்சம் பாதுகாப்பு போடனும்னு நகரம் இப்ப பேசிகிட்டு இருந்த போது சொன்னுச்சு சார்"

"அதல்லாம் நாங்க பார்த்துப்போம்"

கூட்டம் அதிகமானது. சோழன் போக்குவரத்து கழகத்தில் இருந்து எப்பவோ ஓய்வான ராஜசேகர் கண்டக்டர் தலைமையில் தொ மு ச கொடி ஏந்திய தோழர்கள் வந்தார்கள். என்னை பார்த்து சினேக சிரிப்பை உதிர்த அவர்கள் புரோட்டாகால் படி அழகாக பிரிண்ட் செய்யப்பட்ட வாசகங்கள் அடங்கிய பிரசுரம் வினியோகித்தனர்.

வரிசையாக நகர் மன்ற தலைவி பவானி சீனிவாசன், வக்கீல் சீனிவாசன், அலக்சாண்டர், எஸ். என் ஜி அன்பு, தம்பி சத்யா (பலர் பேரை நான் விட்டிருப்பேன்) என எல்லாரும் வருகை தர அண்ணன் குண்டாமணியை காணும்!

எல்லாரும் எங்கே எங்கே என தேடிக்கொண்டு இருக்க பட்டமங்கல தெருவில் இருந்து சாவு மேள சத்தம்..... மிகப்பெரிய பாடை.... எங்கள் ஊர் பாணியில் மிகப்பெரிய பாடை... சுற்றியும் கருப்பு சட்டை போட்ட நம் இயக்க தோழர்கள். ஒப்பாரி வைத்து வரும் பெண்கள். பாடையில் ஒரு பிணம்!  "நான் தான் மின்சாரம்" என எழுதப்பட்ட பிணம்! கொள்ளி சட்டியை தூக்கி வந்தவர் எங்கள் நகரம்! ஊதுபத்தி எடுத்து வந்தவர்கள் எங்கள் கவுன்சிலர்கள்!

பாடையை கிடத்திவிட்டு சுற்றி வந்து அழ வேண்டும் என்கிற போது இளைஞர்கள் கொஞ்சம் கூச்சப்பட  80 வயது ரங்கன் மாமா " எலேய் என்னாங்கடா, இன்னிக்கு 92 வயசு ஆச்சு பேராசிரியர்க்கு அவரு மாதவரத்திலே கத்திகிட்டு இருக்காரு பிறந்த நாள்னு கூட பார்க்காம, தலைவருக்கு இதோ 90 ஆச்சு, வள்ளுவர் கோட்டம் கிடுகிடுக்குது அந்த கிழவனால, அட்ரா குத்து, மின்சார பிணத்தை சுத்தி அழுங்கடா" என சொல்லி நெஞ்சில் அடித்து அழ ஆரம்பித்தார்.

இதில் ஒரு ஆச்சர்யம் என்னவெனில் நாகை மாவட்டத்தில் இறந்து போன விவசாயிகள் குடும்ப பெண்களை அழைத்து வந்து ஒப்பாரி வைக்க சொன்னது எங்கள் நகா செயலரின் ஹைலைட். அந்தம்மா பாடிய ஒப்பாரி அனைவரையும் அழச்செய்தது என்பது நூறு சதம் உண்மையோ உண்மை!

போலீசார் ஆடிப்போய்விட்டனர்! "உனக்கு ஒரு சஸ்பென்ஸ் இருக்கு" என எங்கள் நகரம் சொன்ன போது எனக்கு புதிராக இருந்தது. ஆனால் இப்போது புரிந்து விட்டது. உடனே எங்களுக்கு இந்த போட்டோவோ செய்தியோ பகிர முடியாத சூழலில் இன்று முழு நேர மின்வெட்டால் நான் சென்னை நண்பர்களுக்கு போன் செய்தேன். உடனே தோழர் சரவணகுமார் முழு செய்தியும் கேட்டுவிட்டு அழகாக அதை தன் அலுவலக நேரத்திலும் அப்டேட் செய்தார்.

ஆர்ப்பாட்டம் ஒரு மணி நேரம் நடந்தது. மிகப்பெரிய ஆர்ப்பாட்டம். சும்மா சொல்லக்கூடாது. மதியம் 12 வரை ஆர்ப்பாட்டம் நடந்தது. எழுதி வைத்த வாசங்களை முன்னாள் எம் எல் ஏ ஜெகவீரபாண்டியன் படிக்க மற்றவர்கள் சொல்ல களை கட்டியது ஆர்ப்பாட்டம். பின்னர் எல்லோரும் பேசினர். எங்கள் ஒன்றியம் மூவலூர் மூர்த்தி அண்ணன் மீடியா பேட்டி கொடுத்தார். அப்போது நகரம் வழக்கம் போல கூட்டம் ஒழுங்கு செய்ய பிசிக்கல் பிரயோகத்தில் இருந்தார் - செயல் வீரன் அல்லவா!

போராட்டம் என்னவோ வெற்றி தான்! ஆனால் காலை 12 மணிக்கு முடிந்த போராட்டத்தை பற்றிய பதிவு போட எனக்கு இப்போது தான் மின்சாரம் வந்தது!  இந்த ஆட்சி போக வேண்டும்! இதற்கு மேல் சொல்ல எதும் இல்லை!

December 6, 2012

கலைஞரின் பிறந்த நாள் 5.12.2012 !!!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அந்த தருணம்

நேற்று நான் மயிலாடுதுறையில் இருந்தேன். நேற்றைக்கே இந்த பதிவு எழுதியிருப்பேன். எழுதும் மனோநிலை இல்லை. இன்று கொஞ்சம் மனம் ஆசுவாசம் அடைந்த பின்னர் எழுதுகிறேன். காரணம் கலைஞரை பற்றிய வதந்தி தான்:-(

நேற்று டிசம்பர் ஐந்து விடிகாலை 4 மணிக்கு தான் மன்னார்குடி எக்ஸ்பிரசில் வந்து சேர்ந்தேன். வந்ததும்  ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு குளித்து முடித்து மாயவரம் காற்றை சுகமாய் சுவாசிக்க வேண்டி காலை ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து கிளம்ப வண்டி எடுத்த போது தான் எங்கள் நகர் சந்திரனை பார்த்தேன். தீபாவளிக்கு பின்னர் அவரை பார்க்காமையால் "என்னங்க தீபாவளி எப்படி போச்சு" என குசலம் விசாரிக்க "நமக்கென்னங்க தீபாவளி எல்லாம். நமக்கு ஒன்லி பொங்கல் தான். பசங்க தான் வெடி வெடிக்கு காசை காரியாக்கினாங்க, சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம்" என சொன்னார். அதற்கு நான் "விடுங்க பசங்க ஆசைக்கு நாம ஏன் தடா போடனும். வாங்கி கொடுங்க. பின்னாளில் அவங்களே புரிஞ்சுகிட்டு திருந்திடுவாங்க, பாருங்களேன் எப்போதும் ஸ்வீட் வாங்கி வருவேன். இன்னிக்கு கடை திறக்கலைன்னு வாங்கி வரலை, என் பையன் ஏன் ஸ்வீட் வாங்கி வரலைன்னு என் கிட்ட கோவிச்சுகிட்டே ஸ்கூல் போயிருக்கான்" என சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

இப்படித்தான் ரொம்ப இயல்பான பொழுதாய் அந்த நாள் ஆரம்பித்தது.  வண்டியை எடுத்து  சின்ன மாரியம்மன் கோவில் அருகே வரும் போது அந்த போன் வந்தது. என் நண்பன் ஒருவன் தான். சென்னையில் இருந்து போன் வந்தது.

"நீ எங்க இருக்க?" - அவன்

"மாயவரம் வந்தேன். என்ன விஷயம்"

"ஒண்ணும் இல்லை. சும்மா தான். எதுனா விஷயம் இருக்கா?"

"இல்லியே. ஏன்? நீ தானே போன் செஞ்சே. நீதான் விஷயம் சொல்லனும்"

"ஒண்ணுமில்லை. வச்சிடவா"

"ம் வச்சிடு"

"டேய்.. வந்து"

"சொல்லுடா"

"ஒண்ணுமில்லை. போனை வச்சிடு"

வைத்து விட்டான். எனக்கு குழப்பம் அதிகமாகியது. மீண்டும் வண்டிய எடுத்தேன். மீண்டும் போன். பக்கத்தில் சியாமளாதேவி ஆலயம் வந்துவிட்டது. அங்கே வண்டிய நிறுத்தி போனை எடுத்தேன்.

"அபிஅப்பா எங்க இருக்கீங்க?" இது அடுத்த ஒரு  இணைய உடன்பிறப்பு.

"நீங்க எங்க இருக்கீங்க? நான் மாயவரம்"

"நான் மகாபலிபுரம். சரி இங்க ஒரு ரூமர் ஓடிகிட்டு இருக்கு"

"என்ன ரூமர்?" குரலில் கொஞ்சம் பதட்டம் எனக்கு. மனசு திக் திக் என அடித்து கொண்டது.

"நம்ம கலைஞர்க்கு உடம்பு சரியில்லயாம்"

"என்னப்பா சொல்ற.." எனக்கு அடி வயிற்றில் லேசான பயம் உருள தொடங்கியது.

"இல்ல... இல்ல.. இறந்துட்டதா சொல்றாங்க" என சொல்லிவிட்டு விசும்ப தொடங்கினார் அந்த உடன்பிறப்பு.

எனக்கு போனை கையில் பிடிக்கும் தைரியமோ தெம்போ சட்டென காணாமல் போனது. அதற்குள் மனது ஒரு வினாடியில் ஏகப்பட்ட விசயங்கள் யோசித்தது. கலைஞர் இது போல பலமுறை வதந்திகளால் சாகடிக்கப்பட்டவர். அவருக்கு எதும் ஆகாது.

சில தினங்கள் முன்பாக ஒரு போலீஸ் அதிகாரியின் மகனுக்கும் கலைஞரின்  கொள்ளு பேத்திக்கும் காதலாகி அந்த போலீஸ் அதிகாரி கலைஞரிடம் வந்து சொன்ன போது "கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லுய்யா இருவரையும். இன்னும் மூன்றரை வருஷத்தில் நான் சி. எம் ஆகியதும்நானே கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். என்ன யோசிக்கிறே? நான் இருப்பேன். பவர் புஃல் சி எம் ஆக இருப்பேன்" என சொன்னதை நக்கீரனில் படித்த நியாபகம் வந்தது. என் தலைவனின் தன்னம்பிக்கை, தன் உடல் நிலை மீது மட்டுமல்ல தன் அரசியல் மீதும் என்ன ஒரு தன்னம்பிக்கை இந்த 89 வயதில் என நினைத்து சிலிர்த்து கொண்டேன் அதை படிக்கும் போது. என்பதை தொட்ட தாத்தா பாட்டிகள் எல்லாம் திண்ணையில் படுத்து கொண்டு "என்னை எப்போது கொண்டு போவ ஆண்டவா" என தன்னம்பிக்கை இல்லாமல் புலம்பும் இந்த உலகில் இப்படி ஒரு பதிலை சொல்ல எத்தனை ஒரு மன வலிமை வேண்டும். என் தலைவனை தவிர உலகில் யாருக்கும் இல்லாத ஒரு வரப்பிரசாதம் இது.

இதல்லாம் அந்த ஒரு நொடியில் என் மனதில் வந்து போனது. யாருக்கு போன் செய்வது? என்னவென்று கேட்பது? "ஏதோ ரூமராமே?" என கேட்கலாம். அவங்க பதிலுக்கு " என்ன ரூமர்?" என கேட்டால் என்ன சொல்வது? "கலைஞரை பற்றி" என சொல்ல என் மனதுக்கு எப்படி தைரியம் வரும்? அந்த சியமளாதேவி கோவில் படியில் அப்படியே உட்காந்தேன். மயக்கமாக உணர்ந்தேன். பக்கத்தில் தான் டீ கடை . போய் ஒரு டீ குடித்தால் தேவலை. போக தெம்பில்லை கால்களுக்கு. யாராவது ஒரு சோடா வாங்கி கொடுத்தால் கூட குலுக்கி முகத்தில் அடித்து கொள்ளலாம். சரி கொஞ்சம் அமைதியாக எதையும் சிந்திக்காமல் உட்காருவோம். எதற்கும் மனைவிக்கு ஒரு போன் செய்து நான் இங்கே கோவில் வாசலில் இருக்கிறேன் என சொல்லிவிடலாமா என நினைத்தேன். நாலாம் நம்பர் பஸ் ரோட்டில் வடகரை நோக்கி போனது. மிக வேகமாக ஹார்ன் அழுத்தி கொண்டு போனார் ஓட்டுனர். ஆனால் என் காதுகளுக்கு அந்த சத்தம் மிக குறைவாகவே கேட்டது. கண்களின் முன்பாக கூட பலப்பல வண்ண புழுக்கள் நீந்துவது போல அதாவது ஆழ்நிலை தியானத்தில் நெற்றிப்பொட்டில் எண்ண அலைகளை குவிக்கும் போது வருமே அது போன்ற அழகிய வண்ண வண்ண புழுக்கள் நீந்தி கொண்டு இருந்தன. தொல்காப்பியா பயப்படாதே பயப்படாதே என மனசு சொன்னது. இதயத்துக்கு பக்கத்தில் வைப்ரேஷனில் இருந்த போன் மீண்டும் கிர்ர்ர்ர்ரியது. அது இன்னும் இடைஞ்சலாக இருந்தது மனதுக்கும் இதயத்துக்கும். எடுத்தேன்.

"கலைஞர் நம்மை விட்டு போயிட்டாராமே" என்ற அழுகை குரல் இன்னும் ஒரு உடன்பிறப்பினுடையது. போன ஆஃப் செய்தேனா இல்லையா என தெரியவில்லை. இருக்காது. இருக்காது. இருக்க வாய்ப்பே இல்லை. இன்னும் அவர் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய உள்ளது. அவர் போக மாட்டார் என வலுக்கட்டாயமாக என்னை நானே திடப்படுத்திக்கொண்டேன். என் முழு சக்தியையும் பிரயோகித்து சியாமளாதேவி கோவில் இரும்பு கேட்டை பிடித்து கொண்டு எழுந்தேன். கால்கள் மரத்துப்போய் இருந்தன. உதறிக்கொண்டேன். மெல்ல பிரகாரம் வந்தேன். பிள்ளையார் சன்னதிக்கு பக்கத்தில் இருந்த குடிநீர் குழாயை திறந்தேன். அப்படியே குத்துக்காலிட்டு தண்ணீரில் முகத்தை காட்டினேன். தலை, சட்டை, பேண்ட் எல்லாம் நனைந்த பிரங்ஞை கூட இல்லை. காலையில் தானே அயன் செய்து போட்டு கொண்டு வந்தோம் என்ற உறுத்தல் கூட இல்லை. இப்போதைக்கு பிழைக்க வேண்டும். அவர் கண்டிப்பாக நன்றாக இருப்பார் என மீண்டும் மீண்டும் எண்ணத்துக்கு வலு ஏற்றினேன்.

ஏதோ பஸ் ரோட்டில் மிகுந்த சப்தமாக ஹார்ன் அடித்து போனது. ஆகா என் காதுகளுக்கு கேட்கும் திறன் வந்து விட்டது .அந்த சப்தம் நான் மீண்டும் சகஜ நிலைக்கு வந்துவிட்டதை உணர்த்தியது. போனை எடுத்தேன். யாருக்கு போன் செய்து என்ன கேட்பது என புரியவில்லை. அகர வரிசைப்படி அப்துல்லா நம்பர் வந்தது . போன் செய்தேன். நம்பர் எங்கேஜ்ட். அடுத்தது அரியலூர் மாவட்ட செயலர் நம்பரை அரியலூர் என வைத்து இருப்பேன். அவருக்கு போன் செய்யலாமா? ஒரு மாவட்ட செயலரிடம் இதை எப்படி கேட்பது என்கிற தயக்கம் எதும் இல்லை. ஆசை வெட்கமறியாது என்பது போல பயமும் வெட்கமறியாது போலிருக்கு. உடனே அவருக்கு போன் செய்தேன். அதே போல போன் எங்கேஜ்ட். என் தம்பி கொக்கரக்கோ சௌமியனுக்கு போன் செய்தேன். "நான் பேங்ல ஒரு மீட்டிங்ல இருக்கேன். எதுனா அவசரமா?" என கேட்டான். எதும் சொல்லாமல் போனை வைத்து விட்டேன்.

கடந்த சட்ட மன்ற தேர்தல் நேரம். மார்ச்  23 , 2011 அன்று பிரச்சாரத்துக்காக கலைஞர் திருவாரூர் போகும் போது மயிலாடுதுறை வழியாக வந்தார். அவர் எங்கள் மயிலாடுதுறை உடன்பிறப்புகளை கடந்து போன அந்த இரண்டு நிமிடங்களை பற்றி என் வலைப்பூவில் ஒரு பதிவு "மயிலாடுதுறைக்கு தலைவர் கலைஞர் வந்தார்" என்ற தலைப்பில் எழுதினேன். அதில் கடைசி பத்தியில் கீழ் கண்டவாறு எழுதியிருந்தேன்.(http://abiappa.blogspot.in/2011/03/blog-post_24.html )

\\ தலைவரு இந்த பீரியட் முதல்வரா முடிக்கும் போது 92 வயசு ஆகியிருக்கும். 7 வது முறை முதல்வரா இருந்து முடிக்கும் போது 97 ஆகியிருக்கும். அப்படின்னா அவரது நூற்றாண்டு விழாவுல அவரு எட்டாவது முறையா முதல்வராக இருப்பாரு. சூப்பர்டா.." என சொல்லிக்கொண்டே போனான். இதான் திமுக தொண்டன். தலைவர் சாவிற்க்கு அப்பாற்பட்டவர் என்ற எண்ணம் வலுவாக இருக்கின்றது. ஆச்சர்யப்பட எதும் இல்லை. இருப்பார். அவரது நூற்றாண்டை முதல்வராக தானே இருந்து நடத்துவார்.\\

இப்படி ஒரு தொண்டர் பேசிக்கொண்டு போவதை எழுதியிருந்தேன். அந்த தொண்டன் மட்டுமல்ல, நான் மட்டுமல்ல கிட்ட தட்ட எல்லா திமுக தொண்டர்களுமே எங்கள் தலைவர் மரணத்துக்கு அப்பாற்பட்டவர் என்றே நினைத்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அப்படிப்பட்ட எங்களுக்கு இந்த வதந்தி எப்படிப்பட்ட பாதிப்பை உண்டு செய்யும்:-(

இப்படியாக பலவித எண்ணங்கள் என்னை சூழ்ந்து இம்சிக்கவே , சரி அண்ணா பகுத்தறிவு மன்றம் போகலாம் என மெதுவாக வண்டிய எடுத்தேன். அதை ஸ்டார்ட் செய்யும் முன்னரே போன் மீண்டும் அடித்தது. அரியலூர் மாவட்டம் தான். "சார்" என்றேன். எதிர் முனையில் இருந்து "தலைவர் சூப்பரா இருக்காரு. இதோ வீட்டில் இருந்து அறிவாலயத்துக்கு காரில் போய் கிட்டு இருக்காரு. அங்க போய் டிவிக்கு பேட்டி கொடுப்பாரு. கவலை வேண்டாம்" என நான் எதும் கேட்கும் முன்பே அரியலூர் மாவட்ட செயலர் போனில் சொல்ல எனக்கு உலகமே மீண்டும் என் கைக்கு வந்தது போன்ற உணர்வு. ஆயிரம் யானை பலம் மனதுக்கு வந்தது. என் தலைவனுக்கு சாவே கிடையாது என மனம் குதூகலித்தது. இதே மனம் தான் சிறிது நேரம் முன்பாக என்னை பயம் காட்டி என்னை குப்புற தள்ளியது. அதே மனம் இப்போது "கலைஞருக்கு தான் மரணம் என்பதே கிடையாதே" என என்னை பார்த்து சொல்லி கண் சிமிட்டுகின்றது. மனம் ஒரு குரங்கு. என்ன தான் தலைவர் நன்றாக இருக்கின்றார் என ஒரு மாவட்ட செயலரே சொன்னாலும் கலைஞரே டி வியில் சொன்னால் தான் மனம் இன்னும் அமைதியடையும். இந்த பாழாய் போன ஆட்சியில் தான் எங்கள் பகுதியில் 18 மணி நேர மின்வெட்டு ஆயிற்றே.

நேராக அண்ணா பகுத்தறிவு மன்றம் சென்றேன். அப்போதே கிட்டதட்ட 200 உடன்பிறப்புகள் அங்கே கூடியிருந்தனர். யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. எல்லாம் முகத்திலும் குழப்பமும், பயமும், அதிர்வும் அப்பி இருந்தன. தேர்தலில் அப்பட்டமாக தோற்ற நேரத்திலும் கூட அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் கூடும் போது கேலியும் கிண்டலும் கரைபுரண்டு ஓடும். ஆனால் நேற்று அப்படி இல்லை. இன்வர்டர் உதவியால் கலைஞர் செய்திகள் ஓடிக்கொண்டு இருந்தது. "இது வதந்தி" என ஸ்க்ரோலிங் ஓடாதா என அத்தனை கண்களும் கண் கொத்தி பாம்பாக பார்த்து கொண்டு இருந்தன. அவரவர்கள் தங்களுக்கு தெரிந்த மேலிடத்துக்கு போன் செய்து ஏதோ கேட்டுக்கொண்டு இருந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாகி மன்றம் நிரம்பி சாலைக்கு வந்து விட்டது. சாலையில் எதிர்பக்கம் வரை கூட்டம். எங்கும் திமுக கரை வேட்டி உடன்பிறப்புகள். எல்லோரும் வேலைக்கு சென்றவர்கள். வதந்தியை கேள்விப்பட்டவுடன் அந்த நாளின் சம்பளத்தை துச்சமென வேலையை உதறிவிட்டு இங்கே ஓடி வந்தவர்கள்.

ஸ்க்ரோலிங் ஓடியது. "கலைஞர் நலமுடன் உள்ளார்" . கூட்டம் ஆரவரித்தது. ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டனர். சிலர் ஆனந்தமாக அழுதனர். ஒட்டு மொத்தமாக எல்லார் வாயில் இருந்தும் தலைவர் கலைஞர் வாழ்க எங்கள் தானைத்தலைவர் வாழ்க என்ற கோஷம் வெளிப்பட்டது. சிறிது நேரத்தில் கலைஞர் அறிவாலயத்தில் வந்து இறங்கிய செய்தியும், பின்னர் அவரது பேட்டியும் வெளியாகின. "என்னைப்பற்றிய வதந்தியை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்" என கலைஞர் பேசியதை கூட யாரும் காதால் கேட்கவில்லை. கலைஞரை பார்த்த சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர். நான் ஓடிப்போய் எதிர் கடையில் ஸ்வீட் வாங்கினேன். முதலில் நானே ஒரு வாய் சாப்பிட்டேன். என் மனக்குரங்கிடம் கெக்கலித்து சிரித்து கொண்டேன். எங்கிருந்தோ ஒரு பெரிய ஆயிரம் வாலா சரம் எடுத்து கொண்டு ஓடிவந்த என் நகர் சந்திரன் அதை பற்ற வைக்க  அந்த அண்ணா பகுத்தறிவு மன்ற வாசல் கொண்டாட்ட பூமியாகியது. சிலர் ஓடிச்சென்று மாலை வாங்கி பேருந்து நிலைய அண்ணா சிலைக்கு அணிவித்தனர். ஒருவர் ஓடிவந்து புதிய திமுக கொடி ஏற்றினார். அடுத்த அரை மணிக்கு ஒரே வெடி சத்தம் மட்டுமே அங்கே கேட்டுக்கொண்டு இருந்தது.

வெடி வெடித்து முடித்து என் அருகே வந்த சந்திரனை நான் அர்த்த புஷ்டியோடு பார்த்தேன். தன் பசங்க வெடி வெடிக்க ஆசைப்பட்ட போது "காசை கரியாக்காதே" என அறிவுரை சொன்ன அப்பனா அது? அதே போல அவரும் என் கையில் இருந்த ஸ்வீட் பாக்சை பார்த்து சிரித்தார். தான் பெற்ற பையனுக்கு ஸ்வீட் வாங்கி வராத அப்பனா இது? பேருந்துகளை நிறுத்தி ஜன்னல் வழியே ஸ்வீட் கொடுத்துகொண்டு இருந்தது ஒரு கூட்டம்.

பொதுவாக அண்ணா பகுத்தறிவு மன்ற வாசலில் இப்படி ஸ்வீட் கொடுத்தால் தலைவர் பிறந்த நாள் அல்லது தளபதி பிறந்த நாள் என்றே மக்கள் நினைப்பது வழக்கம்.  ஒரு பாட்டி ஸ்வீட் எடுத்துக்கொண்டு "ஏம்ப்பா இன்னிக்கு கலைஞர் பிறந்த நாளா?" என்றது. நான் "ஆமாம் பாட்டி" என்றேன் அழுத்தமாக!

வதந்தி பரப்பிய கொரூர மனநோயாளிகளே! நீங்க போங்காட்டம் ஆடுகின்றீர்கள். 89 கோட்டையும் அழிங்க. நாங்க முதல்ல இருந்து கலைஞர் பிறந்த நாளை கொண்டாட ரெடி. 5.12.2012 கலைஞர் பிறந்த நாள் என மீண்டும் ஆட்டம் ஆரம்பிப்போம்! எங்க தலைவர் ரெடி, நீங்க ரெடியா?

October 24, 2012

கலா ரசிகமணியும் ஒரு சின்ன கதையும்!


(முதல் வரிசையில் இடமிருந்து வலமாக ஐந்தாவதாக திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள்)


ஒரு விஷயத்தில் ஒருவர் பெரிய அப்பாடக்கராக இருப்பது ஒரு தனி திறமை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அந்த விஷயத்தின் வீரியத்தை அதன் நுனுக்கத்தை அணு அணுவாக ரசிப்பது, ரசிக மணியாக இருப்பது என்னைப்பொறுத்த வரை ரொம்ப பெரிய விஷயம். ரசிக்கும் போது அந்த விஷயத்தில் இருக்கும் நிறை மட்டும் சிலரது கண்ணுக்கு தெரியும். சிலருக்கு "சுப்புடு"த்தனம் இருக்கும். அதல்லாம் விஷயமில்லை. ஆனால் ரசிக்கும் மனோபாவம் இருக்கின்றதே... அதற்கு மிகப்பெரிய ஞானம் வேண்டும். இது சம்மந்தமாக ஒரு கதை கூட உண்டு. அனேகமாக இது மகாபாரதத்தில் வரும் ஒரு குட்டிக்கதை என நினைக்கிறேன்.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தானாம் என்று பொத்தாம் பொதுவாக ஆரம்பிப்பதை விட விஜயபுரி என்னும் தேசத்தை விஜயன் என்னும் மகாராஜா ஆண்டு வந்தான் என ஆரம்பிப்பது உங்களை இன்னும் கொஞ்சம் குழந்தை பருவத்துக்கு அழைத்து சென்று குதூகலிக்க வைக்கும் என்பதால் அப்படியே ஆரம்பிப்போம்.

அந்த மன்னன் விஜயனுக்கு  பிறந்த நாள் வந்தது. வழக்கமாக அவன் பிறந்த நாளுக்கு பள்ளி பாடசாலைகளுக்கு சென்று அங்கு பயிலும் மாணவர்களின் தனித்திறமைக்கு போட்டி வைத்து பரிசுகள் வழங்குவது வழக்கம். அந்த வருடமும் அது போல போட்டிக்கு மந்திரி ஏற்பாடு செய்து இருந்தார். மன்னன் விஜயன் மந்திரியை பரிசுக்கு தேர்ந்தெடுக்கும் குழுவுக்கு தலைவராக நியமனம் செய்தான். போட்டிகள் ஆரம்பம் ஆனது. ஒரு சின்ன பெண் குழந்தை அந்தரத்தில் ஒரு கயிற்றின் மீது நடந்து வந்தது. ஒரு பையன் தீ வளையத்தில் புகுந்து வந்தான். ஒரு பையன் சிறிய ஊசியை தரையில் இருந்து கண்களால் எடுத்து காட்டி அசத்தினான்.  எல்லா குழந்தைகளும் தங்கள் திறமையை காட்டி அசத்தினர்.

மந்திரியும் எல்லோருக்கும் மதிப்பெண் கொடுத்து கொண்டே வந்தார். கடைசியாக ஒரு சின்ன பையன் களத்தில் குதித்தான். அவனோ கால் கொஞ்சம் ஊனமுற்ற மாற்று திறனாளி. அவன் களத்தில் குதித்ததும் எல்லோரும் சிரித்தனர். ஆனால் அவன் பொருட்படுத்தவில்லை. தான் எல்லோராலும் கேலி செய்யப்படுவதைப்பற்றி கவலைப்படவில்லை.

உடனே மன்னர் அந்த பையனைப்பார்த்து "தம்பி உனக்கே கால் முடியாது. இங்கே பார்த்தாயா, எத்தனை பேர் என்ன என்ன விதமான பிரம்மிக்க தக்க வகையில் தங்கள் திறமையை காட்டினர். உன்னால் அது போல முடியுமா? அதனால் நீ போட்டியில் இருந்து விலகிவிடு" என்றார். அதற்கு அந்த மாணவன் "இல்லை மன்னரே, எனக்கு தெரிந்த வித்தையை நான் செய்ய அனுமதி கொடுங்கள்" என்றான். மன்னரும் அவனிடம் " சரி நீ என்ன செய்ய போகின்றாய்" என கேட்டார். அதற்கு அவன் "மன்னா நான் பசுவின் கன்றுக்குட்டி போல துள்ளி துள்ளி குதிக்கும் வித்தையை செய்ய போகிறேன்" என்றான். உடனே இதை கேட்ட மன்னர் முதலான எல்லோரும் சிரித்தனர். கன்றுகுட்டி போல துள்ளி குதிப்பது எல்லாம் ஒரு வித்தையா, இதை தான் எல்லாரும் சுலபமாக செய்யலாமே என எள்ளி நகையாடினர். ஆனால் மந்திரி மட்டும் சிரிக்காமல் அதில் ஏதோ விஷயம் கண்டிப்பாய் இருக்கும் என நம்பி அமைதியாக இருந்தார். மன்னரும் அந்த மாணவன் மனம் நோகாமல் இருக்க வேண்டி வித்தை காட்ட அனுமதி கொடுத்தார்.

அந்த மாணவனும் அந்த விளையாட்டுக்களத்தில் கன்றுக்குட்டி போல துள்ளி துள்ளி வந்தான். எல்லோரும் மீண்டும் சிரித்தனர். கூர்ந்து கவனித்த மந்திரி மட்டும் களத்தின் உள்ளே குதித்து அந்த கன்றுக்குட்டியாய் துள்ளிக்கொண்டு இருந்த மாணவன் அருகே சென்றார். பின்னர் அந்த பையன் முதுகில் தன் விரலால் தொட்டார். மீண்டும் வந்து தன் இருக்கையில் மன்னரின் அருகே அமர்ந்து கொண்டார்.

எல்லோரும் தங்கள் திறமையை காட்டி முடிந்த பின்னர் மந்திரி அவரவர்களுக்கான மதிப்பெண் இட்டு வரிசைப்படுத்தி முதல் பரிசை அறிவிக்க எழுந்தார். மன்னன் விஜயனும் முடிவை ஆர்வமாக பார்க்க வேண்டி எழுந்து நின்றான். தீயில் புகுந்து வந்த மாணவனும், அந்தரத்தில் கயிற்றில் நடந்து வந்த மாணவியும் மிகுந்த ஆர்வத்துடன் தாங்கள் தான் முதல் பரிசு பெறுவோம் என்ற நம்பிக்கையில் எழுந்து நின்றனர்.

மந்திரி முதல் பரிசை அறிவித்தார். 5....4.... 3..... 2......1 .... அந்த கன்றுக்குட்டி போல் துள்ளிக்குதித்த மாற்றுத்திறனாளிக்கு முதல் பரிசு என அறிவித்தார். மன்னன் விஜயன் மற்றும் அந்த கூட்டமே அதிர்ச்சியானது. மன்னன் விஜயன் மந்திரியை பார்த்து "மந்திரியாரே, இந்த பையனை விட மற்றவர்களின் திறமை அசாத்தியமாக இருக்க நீர் ஏன் இந்த மாணவனை பரிசுக்கு தேர்ந்தெடுத்தீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" என கோபமாக கேட்டான்.

அதற்கு மந்திரி "மன்னா, கயிற்றில் நடப்பதும், தீயில் புகுந்து வருவதும் ஓரளவு பயிற்சியால் வந்து விடக்கூடிய திறமை தான். ஆனால் இந்த மாணவன் கன்றுக்குட்டியாகவே மாறினான். அதற்கு அசாத்திய யோக பயிற்சி வேண்டும். உலகத்தில் எந்த மனிதருக்கும் இல்லாத ஒரு குணம்  மாடுகளுக்கு உண்டு. நம்மை ஒருவர் தொட்டால் நம் உடம்பே சிலிர்க்கும். ஆனால் மாடுகளை நாம் ஒரு இடத்தில் தொட்டால் அந்த இடம் மட்டுமே சிலிர்க்கும். அந்த மாணவன் கன்றுக்குட்டி போல துள்ளும் போது நான் போய் அவனை முதுகில் விரலால் தொட்டேன். உடனே அவன் அந்த தொட்ட இடத்தை மட்டும் சிலிர்த்து காட்டினான். அவன் அந்த கன்றுக்குட்டி வித்தை காட்டும் போது கன்றுக்குட்டியாகவே மாறிவிட்டான். அதிலே மனம், மூளை எல்லாம் ஒன்று திரட்டி ஒன்றிவிட்டான். இதற்கு தான் மற்ற வித்தைகளை விட அசாத்திய பயிற்சி வேண்டும்" என சொன்னார்.

உடனே மன்னர் அந்த மாணவனுக்கு பரிசு கொடுத்தது மட்டுமல்லாமல் மந்திரியின் அபரிமிதமான ரசிப்பு தன்மைக்கும் பரிசு கொடுத்தார்.

கதை முடிந்தது. இதை ஏன் இங்கே சொல்கிறேன் எனில் இந்த பதிவின் முதல் பாராவுக்கு மீண்டும் செல்லுங்கள். ......... இப்போது மீண்டும் இங்கே வாருங்கள். சில வருடங்கள் முன்பாக "கன்னத்தில் முத்தமிட்டால்" என்னும் படத்தில் வரும் "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடலை பதிவர் தோழி ஜெஸீலா ஒரு விமர்சனம் செய்து பதிவிட்டு இருந்தார்கள். நான் பல இடங்களில் அந்த பதிவை சிலாகித்து எழுதி இருக்கின்றேன். அந்த தாக்கத்துக்கு பின்னர் இப்போது ஒரு பதிவு படித்தேன்.

ஒரு சட்ட மன்ற உறுப்பினர், ஒரு மிகப்பிரபல கட்சியின் மாவட்ட செயலர்.... காலை கண் விழித்தவுடனேயே தொகுதி பிரச்சனை, மாவட்ட பிரச்சனை, அரசியல் பிரச்சனைகள், சண்டைகள், சமாதானங்கள்... இரவு தூங்கும் வரை பிரச்சனகள் என முழு நேரமும் போராட்ட வாழ்க்கையின் ஊடே அவரது காரில் மேட்டுப்பாளையம் நோக்கி போகும் போது தான் கேட்கும் ஒரு பாடலை சிறியதாக மிக சிறியதாக ஆனால் வீரியமாக ஒரு விமர்சனம் எழுதுகின்றார். அவரது முகநூல் மற்றும் சமீபத்தில் ஆரம்பித்து இருக்கும் தன் வலைப்பூவில் அதை பதிகின்றார்.

 பொதுவாக எனக்கு கங்கை அமரன் மீது பெரிய அபிப்ராயம் என்பது இருந்தது இல்லை. இளையராஜா குரல் பிடிக்கும், ஜானகி குரல் பிடிக்கும், இளையராஜா இசை ரொம்ப பிடிக்கும் தான். ஆனால் இந்த விமர்சனத்துக்கு பின்னர் கங்கை அமரன் மீது "அடடே இவர் ஒரு நல்ல கவிஞர்" என்னும் அபிப்ராயமும் இளையராஜா மற்றும் ஜானகி அவர்கள் குரல் மீது காதலும் இளையராஜாவின் இசை என்பது ஒரு "பிரவாக நதி" என்னும் எண்ணமும் என் மனதில் வந்து சிம்மாசனம் போட்டு அமந்து விட்டது . அவரது விமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும் http://ss-sivasankar.blogspot.in/2012/10/blog-post_21.html . முகநூலுக்கு அவர் பழையவர்  என்பினும்  இப்போது புதிதாக வலைப்பூ பக்கம் வந்துள்ள குன்னம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர்அவர்கள்,  சட்டமன்ற நிகழ்வுகள், தான் பார்த்தது, கேட்டது, ரசித்தது ஆகியவற்றை  தன் வலைப்பூ பக்கங்களில் எழுத இருப்பதாக கூறியுள்ளார். தான் முகநூலில் எழுதிய சில பதிவுகளை தன் புதிய வலைப்பூவில் இதுவரை சுமார் 45 பதிவுகள் பதிந்துள்ளார். இன்னமும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைக்கவில்லை. விரைவில் இணைப்பார். அவரை பதிவர்கள் சார்பாக வரவேற்போம்.

October 13, 2012

நிஜமாகவே போலீசார் மக்களின் நண்பர்கள் தான்! வாழ்க காவல்துறை! மிக்க நன்றி!


என் செல்போன் இப்போது என்னிடம் இல்லை :

அது ஒரு பெரிய சுவாரஸ்யாமான கதை. நேற்று நான் சென்னையில் இருந்து மயிலாடுதுறை வர வேண்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தேன். அடுத்த ரயில் மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் தான் என சொன்னதால் எனக்கு பேருந்து பயணம் ஒத்து வராமையால் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து விட்டேன். அப்போது நண்பர்கள் போனில் பேசிக்கொண்டு இருந்தமையால் போனில் பேட்டரி தீர்ந்து விட்டது. உடனே அங்கே இருந்த  பாயிண்டில் ஏற்கனவே மூன்று போன்கள் இருந்தன. அதிலே ஒன்றில் மாட்டி விட்டு பக்கத்தில் அமர்ந்து பேப்பர் படிக்க தெடங்கினேன்.

ஒரு இரண்டு நிமிடம் தான் அதிகபட்சமாக ஆகியிருக்கும். என் செல்போனை காணவில்லை. சார்ஜரும் இல்லை. அங்கே சார்ஜ் போட்டுக்கொண்டு இருந்த இரு கல்லூரி பெண்களிடம் "அய்யோ என் செல்போனை காணவில்லை. யாராவது எடுத்து போனதை பார்த்தீர்களா, கொஞ்சம் உங்க போனில் இருந்து என் போனுக்கு போன் செய்யுங்க" என சொன்னதுக்கு அவங்க பயந்து கொண்டு மாட்டேன் என சொல்ல நான் ஓடிப்போய் ரயில்வே பாதுகாப்பு ஸ்டேஷனுக்கு விஷயத்தை சொன்னேன்.

அந்த ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கொஞ்சம் பீதியை கிளப்பியது. ஒருவனை ஜட்டியோடு கைவிலங்கு இட்டு அதை ஒரு நாற்காலியில் பினைத்து இருந்தனர். எல்லாருமே ஒரு வித பரபரபுடன் வேலை செய்து கொண்டு இருக்க என்னை ஒரு இன்ஸ்பெக்டர் விசாரித்து விட்டு "ஆமா காலைல இருந்து பத்து பேர் வந்து புகார் சொல்லிட்டாங்க, ஆனா புகார் எழுதி கொடுங்கன்னு சொன்னா யாரும் முன்வரவில்லை" என சொல்ல அதற்கு நான் "சார் நான் புகார் எழுதி தர்ரேன் சார்" என சொன்னேன். அவர் ரைட்டரை நோக்கி கைகாண்பிக்க அவர்களே பேப்பர் பேனா எல்லாம் கொடுக்க நான் விளக்கமாக புகார் எழுதி கொடுத்தேன். இன்ஸ்பெக்டர் அவரது போனில் இருந்து என் நம்பருக்கு அழைக்க அது ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது.

புகாரை பதிவு செய்யலாமா என அவர் மீண்டும் கேட்க நான் "தாராளமா செய்யுங்க சார்" என சொன்னேன். அப்போது மதியம் 2.30 ஆகி இருந்தது. நான்கு மணிக்கு கிளம்ப வேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் வந்து நிற்க நான் போய் ஏறிவிட்டேன்.மனசே சரியில்லாமல் பக்கத்தில் இருந்த ஒருவரிடம் செல்போன் வாங்கி என் நம்பருக்கு போன் செய்ய அதிஷ்டவசமாய் ரிங் போனது. யாரோ எடுத்தாங்க. உடனே நான் "சார் அது என் செல்போன் தான். நான் எக்மோர்ல இருக்கேன். அதை கொடுத்தா நான் அதிலே இருக்கும் நம்பர் எல்லாம் எடுத்து கிட்டு போனையும் உங்க கிட்டே தர்ரேன்" என சொல்லி கொண்டே இருக்கும் போது அவன் போனை கட் பண்ணிட்டான்.

நான் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் ஓடிவந்து "சாமி" என்கிற வேறு ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தார். அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் என்னை "பதட்டப்படாதீங்க. உங்க நம்பரை சொல்லுங்க" என சொல்லி விட்டு என் நம்பருக்கு போன் செய்தார். ரிங் போனது. அவன் எடுத்தார். உடனே அந்த கிரைம் இன்ஸ்பெக்டர் " அய்யா வணக்கமுங்க. நான் ஒரு பிஸ்கட் கம்பனில கூலி வேலை பார்க்குறனுங்க. நான் சென்னைக்கு வந்தேனுங்க. நான் சென்னைக்கு போக வேண்டிய ஆள் நம்பர் அதுல இருக்குதுங்க. கொஞ்சம் நீங்க எங்க இருக்கீங்கன்னு சொன்னா நான் வந்து நம்பர் வாங்கிப்பேனுங்க. என் கைல முன்னூத்து சொச்சம் பணம் இருக்குதுங்க. அதையும் தர்ரேங்க. அந்த போனும் நீங்களே வச்சுகுங்கய்யா. புண்ணியமா போவுமுங்க" என சொல்ல அந்த மனமிளகிய திருடன் "அய்யய்யோ நான் பாண்டிபசார்ல பக்கத்துல சத்யா பசார்ல இருக்கேனே. சரி காசோட வாங்க"ன்னு சொல்ல அதற்கு அந்த இன்ஸ்பெக்டர் "அடடே பாண்டிபசாருங்களா, அங்க என் நண்பர் இருக்காருங்கய்யா, கொஞ்சம் இருங்க அவரு நம்பரை கான்பரன்ஸ்ல போடுறேன். அவரு ஒரு குடை யாவாரிங்க, அவரு கிட்ட கொடுத்துங்கய்யா" என சொல்ல அந்த திருடனும் சரி என்றான்.

உடனே நம்ம இன்ஸ்பெக்டர் கொஞ்சம் இருங்கன்னு சொல்லி அவனை ஹோல்டுல போட்டுட்டு வேற நம்பருக்கு போன் செஞ்சாரு " பாண்டிபஜார் கிரைம் இன்ஸ்பெக்டர் அய்யாங்குளா. நான் எக்மோர் ஆர் பி எஃப் கிரைம் இன்ஸ்பெக்டர் சாமி பேசுறேங்க.வணக்கமுங்க அய்யா. இப்ப லைன்ல ஒரு அக்யூஸ்டு ஹோல்டுல இருக்கான். இப்ப உங்க பேரு தொரைசாமிங்கய்யா, குடையாவாரி. அவன் அங்க பக்கத்திலே சத்யா பசார்ல இருக்கான், செல்போன் தீஃப்ய்யா அவன். அனேகமா ஒரு பத்து செல்போன் அவன் கைல இருக்கும். இருங்க அவனை கான்பரன்ஸ்ல போடுறேன். அவன் அடையாளம் கேட்டுட்டு போய் அள்ளுங்கய்யா, நானும் அங்க வர்ரேன்" என சொல்லிவிட்டு அவருடன் லைன் கொடுத்தார்.

பின்னர் அந்த பாண்டி பஜார் இன்ஸ்பெக்டர் " அய்யா வணக்கமுங்க. நான் தொரசாமிங்கய்யா. கொடை யாவாரிங்க. அய்யா அடையாளம் சொன்னா வந்து வாங்கிபனுங்கய்யா" என சொல்ல அவன் அடையாளம் சொல்ல .... பின்னர் அந்த இன்ஸ்பெக்டரிடம் இருந்து நம்ம இன்ஸ்பெக்டர் கிட்டே போன் வந்துச்சு. இவர் எல்லாத்துக்கும் "உம் உம் சரிங்கய்யா சரிங்கய்யா" என சொல்லி விட்டு என்னிடம் ஒரு பேப்பரில் ஒரு அட்ரஸ் எழுதி கொடுத்து விட்டு இங்க இருக்கும் உங்க போன் அங்க போய் வாங்கிகுங்க" என சொன்னார். அப்போது மணி மாலை 3 மணி. ஒரு மணி நேரத்தில் நான் அங்கே போய் இடம் தேடி வாங்கிட்டு ரயிலை பிடிக்க முடியாது என்பதால் ரயில் ஏறிவிட்டேன். மயிலாடுதுறை போனதும் சென்னையில் இருக்கும் யாரிடமாவது பேசி வாங்கலாம் என அரை மனதுடன் ஏறிவிட்டேன்.

இதிலே என்ன ஒரு கூத்துன்னா பாண்டிபசார் இன்ஸ்பெக்டர் ஜீப்ல அங்க ரெண்டே நிமிஷத்திலே போயிட்டாரு. இவன் சொன்ன அடையாளத்திலே அவனை நோக்கி போகும் போதே செல்போன்கள் இருந்த பையை விற்க வந்த கடையிலேயே போட்டு விட்டு ஓடிட்டான். அவனை பிடிக்க வந்த இஸ்மாயில் என்னும் கடைக்காரரை கீழே தள்ளிவிட்டு ஓடிட்டான். கிட்ட தட்ட இருபது செல்போன்கள்.

அந்த இஸ்மாயில் கிட்டே பாண்டிபசார் இன்ஸ்பெக்டர் கிடைத்த எல்லா செல்போன்கள் மாடல் மற்றும் பெயர்கள் எல்லாம் எழுதி வாங்கிட்டு எல்லா போனுக்கும் அதிலே இருக்கும் எதுனா நம்பருக்கு போன் செஞ்சு செல்போன் ஓனர் யார்ன்னு கேட்டு ஒப்படைத்து அவங்க கிட்டே கையெழுத்து வாங்கிட்டு அதை என் கிட்டே கொண்டு வந்து கொடுக்கனும் என சொல்லிட்டு போயிட்டார்.

அந்த இஸ்மாயில் என் போன்ல இருந்த முதல் நம்பராக இருந்த "அப்துல்லா" நம்பருக்கு போன் செய்ய அது ஸ்விட் ஆஃப் ஆகி இருந்தைமையால் அவர் வேறு நம்பரை தேட அதிலே நம் நண்பர் பதிவர் காரைக்கால் இஸ்மாயில் பெயரை வைத்து இருக்க "அடடே நம்ம பெயரா இருக்குதே" என நினைத்த இஸ்மாயில் அந்த பதிவர் இஸ்மாயில்க்கு போனை போட்டு "இது யார் போனுங்க" என கேட்க இது "அபிஅப்பா" போன் என சொல்ல அதற்கு அந்த இஸ்மாயில் "அப்படியாங்க. இது திருட்டு போய் கிடைச்சுது. அவரு கிட்ட சொல்லி என் கிட்ட வந்து வாங்கிக்க சொல்லுங்க" என சொன்னதும் நம்ம பதிவர் இஸ்மாயில் என் நண்பர் என்பதால் என் மனைவி நம்பருக்கு மயிலாடுதுறைக்கு போன் செய்து "அண்ணி, அபிஅப்பா செல்போன் ரயில்வே ஸ்டேஷனில் திருட்டு போச்சுது. அது பாண்டி பசார்ல இன்ன அட்ரஸ்ல இருக்குது. போய் வாங்கிக்க சொல்லுங்க" என சொல்ல உடனே என் மனைவி  சென்னையில் இருக்கும் என் அண்ணன் சம்மந்தம் என்பவருக்கு போன் செய்து விஷயம் சொல்ல நான் இரவு பத்து மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும் முன்ன என் போன் கிடைத்து விட்டது. ஆனால் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை. இன்னும் இரண்டு நாளில் நான் மீண்டும் சென்னைக்கு போனதும் தான் என் கைக்கு வரும்.

நான் சாமி என்னும் ஆர் பி எஃப் கிரைம் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து நன்றி சொன்னேன். அதற்கு அவரு "சார், காலை முதல் செல்போனை குறிவச்சு ஒருத்தன் அடிச்சிருக்கான். ஆனா வந்து யாரும் தைரியமா ஒரு புகார் எழுதி தரலை. ஏன்னா பயம். கோர்ட் கேஸ்ன்னு ஆகுமேன்னு பயம். பின்ன எப்படி நாங்க எங்க போய் தேடுவது. பாருங்க இப்ப பாதிக்கப்பட்டவங்க எல்லாரும் புகார் கொடுத்தா நாங்க இன்னிக்கு பிடிச்ச 20 செல்போனையும் அந்த புகார் செஞ்சவங்களுக்கு திருப்பி கொடுத்திருக்கலாம். போலீசார் உங்கள் நண்பன்னு ஏன் இன்னனும் நினைக்காம இருக்காங்க மக்கள்? நன்றில்லாம் வேண்டாம். இனிமே இது போல அலட்சியமா இருக்காதீங்க." என சொன்னார்.

நிஜமாகவே போலீசார் மக்களின் நண்பர்கள் தான்! வாழ்க காவல்துறை! மிக்க நன்றி! மிக்க நன்றி!

October 9, 2012

"பிள்ளையார் "பிடிக்க அது "பெரியார்" ஆனது!




அக்டோபர் முதல் தேதி 2012 அன்று  அதிமுக "மெஜாரிட்டி" அரசின் அடக்குமுறைகளை , அரசின் மக்கள் நலம் கவனிக்கப்படாத நிலைகள்... இவைகள் எல்லாம் குறித்து விவாதிக்க  திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞரால் கூட்டப்பட்டது. கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்திக்கின்றார் கலைஞர். அதிமுக அரசின் செயல்பாடுகளை மற்றும் செயல்படாத ....அதனால் மக்கள் படும் பாடுகளை எல்லாம் கண்டித்து தமிழக மாவட்ட தலைநகரங்களில் கருப்பு உடை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடைபெறும், சென்னையில்  ஆட்சியர் அலுவலகம் முதல் கலங்கரை விளக்கம் வரை தன் தலைமையிலேயே மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கிறார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் "அய்யா நீங்கள்  சென்னையில்  மனித சங்கிலி நடத்த இருக்கும் சாலையில் உங்கள் பெயர் தாங்கிய கல்வெட்டை அகற்றி விட்டு அங்கே ஜெயாவின் பெயர் தாங்கிய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதே? அதனால் அந்த சாலையில் நீங்கள் மனித சங்கிலி நடத்தினால் உங்கள் தொண்டர்கள் அதை பார்த்து உணர்சி வசப்பட்டு அதனால் அசம்பாவிதம் நடக்கும் என நினைத்து போலீசார் அனுமதி தருவார்களா? என கேட்கின்றார். மைக் பிரச்சனையால் அவர் என்ன கேட்கின்றார் என தலைவருக்கு சரியாக காதில் விழாமல் மீண்டும் கேட்கிறார். பத்திரிக்கையாளர் மீண்டும் இதை சொல்ல கலைஞர் அதற்கு "இதல்லாம் ஒரு பிரச்சனை இல்லை" என ஒற்றை வரியில் பதிலளித்து விட்டு அடுத்த கேள்விக்கு போகின்றார்.

நன்றாக கவனித்து பாருங்கள். இந்த பேட்டி ஒரு நேரலை நிகழ்சி. இதிலே ஒரு முறைக்கு இரு முறை அந்த பத்திரிக்கையாளர் இப்படி ஒரு கேள்வி கேட்கின்றார். அவர் கேள்வியில் திமுக தொண்டர்களை இந்த சாதா கல்வெட்டு பிரச்சனையால் அசம்பாவிதம் நடக்க வேண்டும் என தொண்டர்களை "தூண்டி" விடுகின்றாரா? அல்லது காவல் துறைக்கும் அரசுக்கும் மனித சங்கிலி நடைபெறாமல் தடுக்க வேண்டி காரணம் சொல்லி கொடுக்கின்றாரா என புரியவில்லை. இது தான் இப்போதைய "நான்காவது தூணின்" நிலைமை தமிழகத்தில். உணருங்கள் தோழர்களே!

எது எப்படியோ அந்த பத்திரிக்கையாளரின் ஆசை நிறைவேறுகின்றது. சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கும் மனித சங்கிலி நடத்தக்கூடாது என காவல்துறை அனுமதி மறுக்கின்றது. தமிழகத்தில் ஜெயா ஆட்சி அமைந்த மே 13 - 2011 முதல் திமுகவும் சளைக்காமல் நீதிமன்றம் செல்வதும் பின்னர் நீதிமன்றங்கள் அரசின் தலையில் சுத்தியால் அடிப்பதும் வழக்கம் தான் எனினும் இந்த முறை தலைவர் கலைஞர் எடுத்த முடிவு அசாதாரமான ராஜதந்திர முடிவு. மூன்றாம் தேதி இரவு வரை காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை.

நான்காம் தேதி காலை கலைஞர் பத்து மணிக்கு அறிவாலயம் வரும் போது அரசின் தலையில் இப்படி ஒரு இடி இறங்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. வரும் போதே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பகுத்தறிவு சீருடை பளபளக்க வருகின்றார். கருப்பு சட்டை, அதன் மேல் தன்மான வெள்ளை துண்டு அணிந்து வருகின்றார். பார்ப்பவர்கள் பதைபதைத்து போகின்றனர். "என்ன இது கோலம் அய்யா?" என அழவில்லை. "ஆகாஇதுதானய்யா நாங்கள் எதிர்பார்த்த  உங்கள் உருவம்" என ஆனந்த கூத்தாடுகின்றனர். அறிவாலயத்தில் கலைஞரை வரவேற்ற தளபதி மற்றும் தளபதியின் தளபதிகள் மேயர் மா.சு, தோழர் ஜின்னா, மாவட்ட செயலர் ஜெ. அன்பழகன் அண்ணன் ஆகியோர் அரக்க பரக்க ஓடுகின்றனர். எங்கிருந்தோ கிடைத்த கடையில் இருந்து எத்தனை கருப்பு சட்டைகள் கிடைக்கின்றனதோ அத்தனையும் வாங்கி வந்து நான் முந்தி நீ முந்தி என உடுத்துகின்றனர்.

தமிழகம் முழுக்க தகவல் சொல்கின்றனர். எஸ். எம் எஸ் பறக்கின்றது. ஆண்களும் பெண்களும் கருப்பு உடை நோக்கி விரைகின்றனர். அறிவாலயம் முழுக்க கூட்டம் வழிந்து நிரம்புகின்றது. அறிவாலய மாடியில் இயங்கும் "கலைஞர் தொலைக்காட்சி" நிலைய செய்திப்பிரிவினர் ஓடிவருகின்றனர். பி டி ஐ, யு என் ஐ செய்தி நிறுவனத்தினருக்கு செய்தி போகின்றது. அத்தனை இந்திய தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் அலுவலகங்களின் பேக்ஸ் மற்றும் தொலை பேசிகள் இந்த செய்தியை அலறுகின்றன. அனைத்து ஊடகங்களும் அறிவாலயத்தில் முற்றுகை இட தொடங்கின. அவசர கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்படுகின்றது. நாளை மனித சங்கிலியை அனுமதி கொடுக்காவிடினும் நடத்தி சிறை செல்லலாமா என தலைமைக்கு கேட்டுக்கொண்டு இருந்த அரியலூர் மாவட்டம், புதுகை மாவட்டம், காஞ்சி மாவட்ட செயலர்கள் தலைமையை தொடர்பு கொண்டு "இன்றே நாங்களும்கருப்பு உடை அணிந்து விட்டோம், அடுத்து என்ன?" என கேள்வியால் துளைக்க தலைமை நிலைய செயலர் சதாசிவம் அவர்கள் "இருங்க மாவட்டம்...தலைவர் இதோ ப்ரஸ் மீட்க்கு ஏற்பாடு செய்ய சொல்லிட்டார்... எங்களுக்கும் எதும் புரியலை" என சொல்லிக்கொண்டே இருந்தார்.

ப்ரஸ்மீட் ஆரம்பம் ஆனது. "மனித சங்கிலி நாளை நடக்காது. ஆனால் அதற்கு பதிலாக திமுகவினர் கருப்பு உடை அணிந்து அதிமுக அரசின் அராஜக போக்கினை துண்டு பிரசுரம் மூலமாக மாவட்டத்துக்கு மாவட்டம், நகரத்துக்கு நகரம், ஒன்றியத்துக்கு ஒன்றியம், பேரூருக்கு பேரூர், வார்டுக்கு வார்டு ,தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு கொண்டு சேர்ப்பர்" என சொல்கிறார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் கேட்கின்றார்... "அய்யா இதற்கு முன்னர் கருப்பு சட்டை போட்ட நிகழ்வு தமிழகத்தில் எப்போது என நியாபகம் உள்ளதா?" ... அதாவது ஒரு கட்டத்தில் எம் ஜி ஆர் அவர்கள் தன் மந்திரிசகாக்களுடன் கருப்பு சட்டை சிலநாட்கள் அணிந்தார். அதைத்தான் அந்த பத்திரிக்கையாலர் கேட்கின்றார். அதற்கு தலைவர் அவர்கள் " தமிழகத்தில் நீங்கள் நினைக்கும் அந்த நிகழ்வுக்கு முன்பே கருப்பு சட்டை போட்டவன் இந்த கருணாநிதி" என்கிறார். கேட்டவர் வாயடைத்து போனார். அவரிடமேவா? கருப்பு சட்டை பகுத்தறிவு பல்கலைகழக முதல் பேட்ஜ் மற்றும் முதல் மாணவரிடமேவாஅந்த கேள்வி?

கருப்பு உடையில் தலைவர் கலைஞர் அய்யா பெரியார் போல இருக்கிறார், கருப்பு உடையில் தலைவர் ஆசிரியருக்கு ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல இருக்கிறார் என்றெல்லாம் அறிவாலய கூட்டம் சிலாகிக்கின்றது.

பெரியார் திடல் தோழர்கள் ஆனந்த கூத்தாடுகின்றனர். மகிழ்வின் உச்சத்தில் அமிழ்கிறார் ஆசிரியர் வீரமணி அய்யா அவர்கள். சுபவீ அய்யா கருப்பு உடை அணிந்து அறிவாலயம் வருகின்றார். எங்கு திரும்பினும் கருப்பு உடைகள். நான் மயிலாடுதுறை திரும்ப வேண்டி பேருந்தில் வரும் சமயம் ஏகப்பட்ட எஸ். எம். எஸ்கள் என என் இன்பாக்ஸ் நிரம்பி வழிகின்றது.தலைவர் கலைஞரின் பேஸ்புக்ல் பார்த்தேன். "நான் இன்றைக்கே கருப்பு உடை அணிந்து விட்டேனே" என சொல்லி சிரிக்கின்றார். கடலூர்  வந்த போது எடுத்து பார்த்தேன். அதன் பின்னர் என் வெள்ளை சட்டை எனக்கு உறுத்தியது. ஓடிப்போய் ஒரு கடையில் கருப்பு சட்டை கேட்டேன். "இல்லீங்க போங்க" என கோவப்பட்ட கடைக்காரரிடம் ஏனய்யா கோவம் என கேட்டமைக்கு " பல வருஷமா விற்காம இருந்த கருப்பு சட்டை எல்லாம் இன்றைக்கு  காலை முதல் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து விட்டேன். கருப்பு துணி கூட ஒரு பண்டல் இல்லாம விற்பனை ஆகிப்போச்சு. இப்ப வந்து கேக்குறீக்களே" என அங்கலாய்த்தார்.

மயிலாடுதுறை வரும் முன்னர் என் அக்கா பையன் போன் செய்தான். "மாமா நான் மகாபலிபுரம் வந்தேன். இங்க ஒரே கருப்பு சட்டையா இருக்கு. என்ன எதுனா பிரச்சனையா?" என கேட்டான். "ஆமாம் தமிழகம் முழுக்க பிரச்சனை தான். மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை... அதனால் தமிழகம் முழுக்க இனி இருண்ட காலம் என்பதை காட்டத்தான் இந்த கருப்பு சட்டை" என்றேன். சிறிது நேரம் கழித்து அவனே போன் செய்தான். "மாமா இங்க ஏன் இத்தனை கருப்பு சட்டை என கேட்ட ஒரு ஆங்கிலேயரிடம் ஒரு கருப்பு சட்டைக்காரர் 'ஹியர் இன் தமிழ்நாடு.. நோ எலக்ட்ரிசிட்டி, நோ வாட்டர், நோ அக்ரிகல்சர், நோ லா அண்டு ஆர்டர், ஃபுல் ஆஃப் தெஃப்ட் அண்டு ராபரி பட் ஒன்லி ,அரஸ்ட் ஆஃப் ஆப்போசிட் பார்டீஸ்.. ஸோ ஒன்லி ப்ளாக் ட்ரஸ்" என சொன்னாரு. அவங்களும் அதை கேட்டு கிட்டு அதையே போன்ல யார் கிட்டயோ சொன்னாங்க" என சொன்னான்.

மயிலாடுதுறைக்கு வந்தேன். கடைகளில் "இங்கே கருப்பு சட்டை மற்றும் கருப்பு துணி இருப்பு இல்லை" என்னும் அறிவிப்பு பலகைகள் துணிக்கடைகள் வாசல் தோரும் தொங்கக்கண்டேன்.

ஆக ஒரு நாள் கூத்தாக முடிந்து இருக்க வேண்டிய மனிதசங்கிலியை இப்படியாக உலகம் முழுக்க தெரியவைத்தது ஜெயாவின் ஆலோசகர்கள் என்னும் கும்பல்கள் தான். மூளைக்காரர்களாம் இவர்கள்:-))

இந்த மூளைக்காரர்கள்  செய்த லீலைகளின் பயன்கள்,

 1. மஞ்சள் துண்டு மகான் என  இனி  கலைஞரை கேலியும் கிண்டலும் செய்ய இயலாவண்ணம் பகுத்தறிவு சீருடைக்கு கொண்டு வந்து ஒரு இனத்தையே தட்டி எழுப்பியது.

2. திமுகவினர் அனைவரும் கருப்பு உடை அணிவதால் ஒரு ரயில் பெட்டியிலோ, ஒரு பேருந்திலோ அனைவரும் இவன் நம்ம இனத்தான் என எளிதில் அடையாளம் காண்பது.அதன் காரணமாய் ஒற்றுமை ஓங்குவது .


3.சுனக்கமாய் போனதாய் சொன்ன பெரியாரியல் கொள்கைகள் ஒரே நாளில் வீறு கொண்டு எழுந்தது.

 4. ஒரே நாளில் முடியக்கூடிய மனித சங்கிலி போராட்டத்தை விட பல மடங்கு பெரிதாக்கி சாதாரண நடுநிலையாளர்களும் ஏன் இத்தனை மக்கள் கருப்பு சட்டை போடுகின்றனர் என கேள்வி கேட்டு அதற்கு கருப்பு சட்டைகாரர்கள் பதிலுக்கு துண்டு பிரசுரம் செய்வதால் கடைக்கோடி வாக்காளனுக்கும் அரசின் அவலட்சனம் தெரிவது.

பொதுவாக "பிள்ளையார் பிடிக்க குரங்கானது" என சொல்வார்கள். ஆனால் அந்த மூளைக்காரர்கள் (???) "பிள்ளையார் "பிடிக்க அது "பெரியார்" ஆனது!சூரியனே கருப்பு சட்டை போட்டபின் சுட்டெரிக்கும் நெருப்பென்ன, சுழண்டு அடிக்கும் காற்றென்ன... கருப்பு சட்டை அணிந்திடுவோம். இனமானம் காத்திடுவோம்!

September 15, 2012

அறிஞர் அண்ணாவும் சிவசேனை பால்தாக்ரேவும்!



அண்ணா அவர்கள் 1968ல்  அமேரிக்க பயணத்தின் போது "யேல்" பல்கலைகழகத்தில் பிரமாதமாக பேசினார், அவரது ஆங்கில புலமை கேட்டு அங்கே வியந்தனர். "Because என்ற சொல்லை ஒரு வாக்கியத்தில் மூன்று முறை தொடர்சியாக வர வழைக்க இயலுமா என கேட்டமைக்கு அண்ணா அவர்கள் ' No sentence begins with because, because, because is a conjuction"  என சொன்னார், என்றெல்லாம் இங்கே சரித்திரம் உள்ளது. ஆனால் அவர் "யேல்" பல்கலை கழகம் போவதற்கு முன்பாகவே ஹவாய் தீவில் கலந்து கொண்ட ஒரு பல்கலைகழகத்தில் அவரை நோண்டி நொங்கு எடுத்து விட்ட விஷயம் உங்களுக்கு தெரியுமா?

அறிஞர் அண்ணா அவர்கள் அமேரிக்கா சென்ற போது ஹவாய் பல்கலைகழக கிழக்கு மேற்கு அமைப்பின் சார்பில் ( east west center) அளிக்கப்பட்ட வரவேற்பின் போது இந்திய மாணவர்களின் (கவனிக்க தமிழக மாணவர்கள் இல்லை இந்திய மாணவர்கள்) கேள்விக்கு அளித்த பதிள்களின் தமிழாக்கம் இவைகள்!

கேள்வி: அமேரிக்காவை சுற்றி ப்பார்த்த போது உங்கள் மனதில் தோன்றும் முதல் எண்ணம் என்ன?

அண்ணா: இந்த நாட்டில் இயற்கை தந்திருக்கும் செல்வம் மட்டும் அல்ல, மனிதர்கள் தங்கள் முயற்சியினால் பல்வேறுவிதமான ஆற்றல்களினால் அடைந்த முன்னேற்றமும் அவர்களுடைய வெற்றியும் என் உள்ளத்தை தொடும் முதல் எண்ணம் ஆகும்.

கேள்வி: இந்திய ஜனநாயகத்தின் தலைவிதி என்ன?

அண்ணா: இந்தியர்கள் எப்போதும் தலைவிதியையே சரணடைகின்றனர். ஆனால் இந்திய ஜனநாயகம் பற்றி பேசுகையில் தலைவிதி என்னும் சொல்லை நீங்கள் பயன் படுத்துவது சரியில்லை என நான் கருதுகிறேன். இந்தியாவில் ஜனநாயகத்துக்கு ஒரு விதமான அபாயமும் கிடையாது. ஏனனில் நம்முடைய பண்பாடு ஜனநாயக பண்பாடு ஆகும். இப்பண்பாட்டால் நம் அன்றாட வாழக்கையில் கூட ஜனநாயகம் இருக்கின்றது என சொல்லலாம். இந்தியா தான் உலகிலேயே மிகப்பெரிய, புதிய மற்றும் ஏழ்மையான ஜனநாயக நாடு. இருந்த போதிலும் நான்கு பெரிய தேர்தல்களை வெற்றிக்கரமாக நடத்தி இருக்கிறோம். இந்தியாவை பற்றி அறிந்துள்ள பல மேநாட்டார்  தேர்தல் சமயத்தில் பயங்கர போராட்டங்களும் புரட்சிகளும், ரத்தம் சிந்துதலும் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் ஆங்காங்கே சில மோதல்கள் இருந்த போதிலும் நான்கு தேர்தலில்களிலும் ஏற்பட்ட எல்லா சேதங்களையும் கூட்டிப்பார்த்தால் அமேரிக்காவில் ஒரு வருடத்தில் உண்டாகும் விடுமுறை விபத்துகளை விட மிகக்குறைவாக உள்ளன. ஜன நாயகத்தை கையாள்வதில் நமக்குள்ள ஆற்றல் பற்றி தவறான அபிப்ராயம் கொண்டு விடவும் வேணடாம். ஜனநாயம் பற்றி மெத்தனமாகவும் இருந்து விட வேண்டாம்.

கேள்வி: நீங்கள் இது வரை நடந்த 4 தேர்தல்களும் வெற்றியாக முடிந்ததாக சொன்னீர்கள், அது வெற்றிகரமாகவும் திட்டமிடப்பட்டும் முன் யோசனையோடும், ஒழுங்காக நடந்ததாக எண்ணுகிறீர்களா? முக்கியமாக காஷ்மீரில் நடந்த தேர்தலை பற்றி பல்தரப்பட்ட பேச்சுகள் இருந்தன. மேலும் 1967க்கு முன் நடந்த  3 தேர்தல்களும் ஒழுங்காக நடக்கவில்லை என்று நாம் எண்ண எல்லா காரணங்களும் இருக்கே அய்யா?

அண்ணா: தேர்தல்கள் நாணயம் இல்லாமல் இருக்கின்றன என்னும் குற்றச்சாட்டு எல்லா நாடுகளிலும் எல்லா பகுதிகளிலும் இருக்க கூடிய குற்றச்சாட்டு தான். முதல் 2 தேர்தல்களிலும் நாணயம் சற்று குறைவாக இருந்தது உண்மையாக இருக்கலாம். ஆனாலும் நாணயமற்ற முறைகள் அல்லது வேறு விதமான குறைகளை பார்த்த வரையில் மனிதர் குணம் இருக்கிற நிலையில் நிச்சயமாக எல்லா நாட்டிலும் எல்லா தேர்தல்களிலும் ஏதோ ஒரு நாணயமின்மை இருக்கத்தான் செய்யும்.இந்த பயங்கரத்தை பொறுத்த வரையில் நம் நாட்டு தேர்தலில் ஆங்காங்கே நாணயம் அற்ற நடப்புகள் இருப்பினும் பொதுத்தேர்தல் என்னும் கண்டத்தின் வழியே நான்கு முறை வெற்றிகரமாக வெளி வந்து விட்டோம். அதே சமயம் பல நாடுகளில் தேர்தல் நடுவில் நிறுத்தப்பட்டும் , முழுவதுமாக கைவிடப்பட்டும் , தடைபடுத்தப்பட்டும் போயுள்ளன. மேலும் நம்மோடுஜனநாயக ஆட்சியை தொடங்கிய பல நாடுகள் கடைசியில் ராணுவ ஆட்சியிலோ, அடிப்படை ஜனநாயகத்திலோ, அல்லது வழி நடத்தி செல்லும் ஜனநாயகம் என்னும் ஜனநாயகத்திலோ வந்து சரணடைந்து விட்டன.

கேள்வி: சென்னை மாநிலம் ,மும்மொழி திட்டத்தை விட்டு விட்டு இரு மொழி திட்டத்துக்கு போய்விட்டது அல்லவா? வருகின்ற வருடங்களில் இதே கொள்கையை கடைபிடுப்பீர்களா? அல்லது மும்மொழி திட்டம் ஏற்க்கப்படுமா?

அண்ணா: நீங்கள் , மும்மொழியை விரும்புகிறீர்களா அல்லது இரு மொழியை விரும்புகிறீர்களா என்று விவரித்த பின்னர் இந்த கேள்வியை கேளுங்கள் என நான் கூறுவேன். (சிரிப்பு) மும்மொழி திட்டத்தின் பின்னால் ஒரு சரித்திரமே இருக்கின்றது. மும்மொழி திட்டம் பல மாவட்டங்களிலேயே சமரச திட்டங்களாக பல வருடங்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. இந்திய நாட்டை ஒற்றுமையாக நிலைக்கச்செய்ய எல்லா மாநிலங்களும் மூன்று மொழிகள் கொண்டு இருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அவற்றில் ஒன்று மாநில மொழியாகவும், இரண்டு ஆங்கிலம், மூன்று அவர்கள் தேசிய மொழி என கருதிய அவர்கள் சொன்ன ஒரு மொழி. நான் அச்சமயம் எதிர்கட்சியில் இருந்தேன். அதை நான் எதிர்த்தேன். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி  மும்மொழி திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. அந்த திட்டம் எல்லா மாநிலத்துக்கும் செய்யப்பட்டது. நல்ல ஜனநாயக பிரதிநிதியாக நான் முதலில் அதை எதிர்த்த போதிலும் அது அமலுக்கு வந்த பின் இடையில் நுழைத்து தொல்லை தவில்லை. திட்டம் நடக்க ஆரம்பித்து விட்டது. அதை நான் கெடுக்க விரும்ப வில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னும் ஆறு மாதம் அது இருந்தது. சென்னை மாநிலம் மும்மொழி திட்டத்தில் மிகவும் உண்மையாக ஊக்கமாக இருந்தது. ஆனால் மற்ற மாநிலங்களுக்கும் இந்த சமரச திட்டத்தை ஒத்துக்கொண்டு ஒரு தரப்பாக இருந்த வட மாநிலங்கள் இந்த திட்டத்தை அமல் செய்வதில் உண்மையாக இல்லை. சிலர் அவர்கள் தென்னிந்திய மொழிகள் எதையும் படிக்க அவசியம் இல்லை என கூறிவிட்டனர்.

ஒரு மாநிலம், ஆங்கில கூட தேவை இல்லை என கூறிவிட்டது. அவர்கள் மாநில மொழியே போதும் என சொன்னார்கள். ஆகவே மும்மொழி திட்டம் பல மாநில ஊக்கத்தோடும் நம்பிக்கையோடும் அமல்படுத்தவில்லை. பாராளுமன்றத்தில் புது மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் வட இந்திய மாநிலங்கள் மும்மொழி திட்டத்தை அவமதிப்பதை உணந்தாலும் என் மாநிலத்தில் தமிழும் ஆங்கிலமும் இரு மொழி திட்டத்தை கொண்டு வந்தேன். இரு மொழி திட்டத்தை மாற்ற வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள் என்றால் ஆட்சியையும் மக்கள் மாற்றுவார்கள். ஆனால் நான் ஆட்சியில் இருக்கும் வரை இரு மொழி திட்டத்தை மாற்றுவதாக இல்லை, மும்மொழிக்கு போவதாகவும் இல்லை (செம கைதட்டல்)

கேள்வி: கல்லூரிகளில் கூட மாநில மொழியை பாட மொழியாக மாற்றுவதாக கேள்விப்படும் போது சில சமயங்களில் அது நல்லதாக படுகின்றது. பொதுவாக நம் மொழியில் நாம் படிப்பது நல்லது தான். ஆனால் எல்லா விஞ்ஞான படிப்புகளையும் அப்படி செய்ய முடியுமா? ஜப்பானில் அது நடந்துள்ளது. அப்படியாக தமிழில் விஞ்ஞானத்தை மொழி பெயர்த்து "தொழில் நுட்ப கல்விகளை: செய்யும் உத்தேசம் உள்ளதா?

அண்ணா: நீங்கள் ஜப்பானை பற்றி சொல்லும் போதே அதில் பாதி பதில் அடங்கி விட்டது. ஆனால் நான் அதில் இருந்து பதில் உண்டாக்க போவதில்லை. தமிழ்நாடு பொறுத்த வரை தொழில்கல்விகளாகிய மருத்துவம், பொறியியல், இயந்திர நுணுக்கவியல் ஆகியவற்றில் இன்னும் தமிழை பாட மொழி ஆக்கப்படவில்லை. கலைக்கல்வியில் மட்டுமே இதுவரை ஆக்கியுள்ளோம். விரைவில் எல்லாமும் வரும். மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் அவை பயிற்றுவிக்கப்படும். ஜப்பானில் உள்ளது போல எல்லாமே மொழியாக்கம் செய்விக்கப்பட்டு பொறியியல் முதல் எல்லாம் தமிழில் வரும். ஆனால் ஆங்கில இரண்டாம் மொழியாக இருக்கும். திமுக ஆட்சி இதைநீண்ட கால திட்டமாக செய்யும்.

கேள்வி: இந்தியாவில் இப்போது இருக்கும் பல முக்கிய பிரச்சனைகளை விட தேசிய மொழி பிரச்சனை முக்கியமானது என்று நீங்கள் நினைக்கிற்களா?

அண்ணா: என் நல்ல காலம் உங்கள் கேவியிலேயே பதிலும் உள்ளது. நீங்கள் கேட்பது போல பல மிக முக்கிய பிரச்சனைகள் இருக்கையில் நாம் முதலில் அவற்றை முடித்து விட்டு பின்னர் மொழியை பற்றி சிந்திக்கலாம்.

கேள்வி: சென்னையில் உங்கள் திமுக அடைந்த வெற்றி போல மற்ற மாநிலங்களில் வேறு கட்சிகள் வலிமை அடைய வாய்ப்பு உள்ளதா? பஞ்சாப், மகாராஷ்ட்டிரா ஆகிய இடங்களில் "சிவசேனை" என்னும் கட்சி வெற்றி அடையுமா?

அண்ணா: திமுகவின் வெற்றியைப்பற்றி எண்ணும் போது அதன் சரித்திரமும் சேர்த்து பார்க்க வேண்டும். நாங்க 1949ல் கட்சி ஆரம்பிச்சோம். அதன் பின்னர் பல தேர்தல்ல நிக்கவே இல்லை. மிகுந்த யோசனைக்கு பின்ன கட்சிக்குள்ள கேட்டுகிட்டு ஆலோசிச்சுகிட்டு பின்ன 1957ல் நின்னோம். முதல்ல 15 சட்டப்பேரவை இடம் மட்டுமே கிடைச்சுது. நாடாளுமன்றத்துக்கு இரண்டு இடம் மட்டுமே கிடைச்சுது. அடுத்த தடவை 50 சட்ட மன்ற உறுப்பினர்களும், எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கொடுத்தாங்க மக்கள். பின்ன நாங்க 1967ல் நின்ன போது நாங்க 134 சட்ட மன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்துக்கு 25 உறுப்பினர்களும் பெற்றோம் என்றால் ஒரே இரவில் நிகழ்ந்த சாதனை இல்லை இது. ஏதோ ஒரு தலைவன் ஒரே இரவில் தன் மனமாச்சர்யங்களுகாக கட்சி ஆரம்பிச்சா ஆரம்பத்தில் பிரகாசமா இருப்பது போல தெரிந்தாலும் நாளடைவில் நிற்காது. இதை சிவசேனை போன்ற கட்சிகளுக்கு சொல்கிறேன். அவங்க நல்லது செஞ்சா நல்லது நடக்கும். அத்தனையே! ஆனால் சிவசேனை வளர்கிறது. அதற்கு காங்கிரசும் அதன் ஆட்சி செயல்பாடுகளும் கூட காரணமாக இருக்கலாம்.

கேள்வி: இளைஞர் பலருக்கு நீங்கள் முதன் முதலில் திமுகவில் இளமை நாட்களில் கொண்டிருந்த பல கொள்கைகளை கைவிட்டு விட்டதாகவும் இப்போது நீங்கள் கொண்டுள்ள கருத்துகள் புரியாத புதிராகவும் காணல் நீராகவும் தோன்றுகின்றன. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

அண்ணா: உங்களை ஒன்று கேட்கிறேன்! நான் பிரிவினை பற்றி பேசியபோது 50 இடங்கள் மட்டுமே தந்து விட்டு நான் பிரிவினை கொள்கையை விட்ட பின்னர் 134 இடங்கள் தருகின்றனர் மக்கள். இதை எண்ணும் போது அவர்கள் என் மீது கோவம் கொண்டது போல் தெரிகின்றதா? நிச்சயம் இல்லை. நீங்கள் அதற்கு என்ன விளக்கம் தர முடியும்?

கேள்வி: தேசிய நிலையில் வட இந்திய , தென்னிந்தியா பற்றி உங்கள் கருத்துகளையும் மாநில அளவில் சென்னையில் பிரமண அல்லாதோர் பற்றி உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன் அய்யா?

அண்ணா: சென்னையை பொறுத்த வரை பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் பிரச்சனை இறந்தொழிந்து விட்டது. நீங்கள் இங்கே எத்தனை ஆண்டுகளாக இருக்கின்றீர்?

கேள்வி: திமுக தேசிய பிரபல்யம் அடைந்து நீங்கள் பிரதம மந்திரி ஆனால் நீங்கள் என்னன்ன முயற்சிகள் எடுத்து கொல்வீர்கள்?

அண்ணா: உங்கள் கேள்வி எனக்கு ஒரு மயக்குறு கேள்வியாக உள்ளது. இப்படி மனதை மயக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை விட அவற்றை பற்றி சிந்திப்பதில் நேரம் செல்விடுவது நேர விரயத்தை தடுக்கும் செயலாகும்.

கேள்வி: மொழிப்பிரச்சனை  பற்றி இன்னும் ஒரு கேள்வி, போன வருடம் எழுந்த மொழிக்கலவரங்கள் மக்களிம் மொழி பற்றிய உள்ளார்ந்த உணர்வால் எழுந்ததா? அல்லது வெறும் சாக்கா? அவர்கள் பட்டினியின் கோவத்தை வெளிப்படுத்த எழுந்ததா?

அண்ணா: 1965 ல் உண்டான மொழிக்கலவரம் பற்றிய கேள்வியாகும் இது என நினைக்கிறேன்.

கேள்வி: ஆமாம்!

அண்ணா: அது நிச்சயமாக மொழி தீர்மானத்தை எதிர்த்து மாணவர்களால் தொடங்கப்பட்டதாகும். பிறகு அந்த கிளர்சியில் மற்ற வெளியாட்கள் சேர்ந்து பழைய கோவங்களுக்கு பழி தீர்த்து கொண்டனர். ஆனால் அதை ஆரம்பித்த மாணவர்கள் உண்மையாகவே நாடாளுமன்றத்து மொழி தீர்மானம் தம்முடைய எதிர்காலத்தை கெடுக்க கூடியதாக இருப்பதை உணர்ந்து கிளர்ந்து எழுத்தனர். எந்த கட்சியும் அவர்களை தூண்டி விடவில்லை. ஆனால் அதில் பெரும்பான்மையான மாணவர்கள் "மாணவர் திமுக" அணியினர் "என்பதால் இப்படி ஒரு பெயராகி போனது.

கேள்வி: சிறிது நேரத்துக்கு முன் கருத்துகளை கூறுவதை விட செயல்முறையில் காட்டுவது அதிக நம்பிக்கை என கூறினீர்கள். ஆட்சிக்கு வரும் முன் கொண்டிருந்த கருத்துகளில் மறைவாக கொண்டிருந்த கொள்கைகளில் எவற்றை எல்லாம் செய்து காட்டினீர்கள்?

அண்ணா: முதலிலே கருத்துகளை கூறுவதாக இல்லை என்று நான் சொன்னால் "மறைவு" என்ற வார்த்தையை நீங்கள் உபயோகிக்க அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன்.

கேள்வி: மன்னிக்கவும், திருத்தத்தை ஒப்புக்கொள்கிறேன்!

அண்ணா:நான் உங்களை ஒன்று கேட்கிறேன். என் கருத்துகளை எல்லாம் செயல் படுத்த ஓர் ஆண்டு போதுமா?

கேள்வி: போதாது. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் சிறிதளவவது செயல்பட்டுள்ளீர்களா?

அண்ணா: உங்களுக்கும் அது பற்றி தெரிவிக்க வேண்டுமே! விளைச்சலை அதிகம் ஆக்கியுள்ளோம், காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி கைவிடப்பட்ட ரேசன் முறையை மீண்டும் ஆரம்பித்து உள்ளோம், விலவாசியை குறைத்து இருக்கின்றோம். ஒரே ஆண்டில் இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்க இயலும்?

கேள்வி: நான் கேட்பது அமேரிக்க நண்பர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்கு தான். இங்கு வரும் செய்திகள் அதிகள் இல்லை.

அண்ணா: கேள்வியாக நான் கேட்பது உங்களுக்கு சவால் விட அல்ல. ஆங்கில மொழி வாங்கியங்கள் கேள்வியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது அல்லவா..

கேள்வி: நீங்கள் இங்கே வந்திருப்பது அரசியல்  காரணம் மட்டும் அல்லாது சென்னையில் ஏதோ தொழிற்சாலை தொடங்க பேச்சுகள் நடத்த வந்திருப்பதாக இங்கே பத்திரிக்கையில் பார்த்தோம்.

அண்ணா: ஆமாம் , ஜெனரல் மோட்டார் கம்பெனியுடன் இந்திய கம்பெனி ஒன்று கூட்டு சேர்ந்து சென்னையில் விவசாய கருவிகள் செய்யும் தொழிற்சாலை உணடாக்க எண்ணி இருந்தனர். இங்கே வரும் போது ஜெனரல் மோட்டார் கம்பனியின் நிர்வாகிகளை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். ஆனால் கூட்டு சேர இருந்த இந்திய கம்பனி மோசடி முத்திரையை வாங்கி விட்டதால் வேறு ஒரு கம்பனி முன்வரும் வரை இங்குள்ள கம்பனியாரை சந்திப்பதில் பொருத்தம் இல்லை. அதனால் நான் அவர்களை சந்திக்கவில்லை.

*******************

அண்ணா! எம் தீர்க்கதரிசி அண்ணா! உனக்கு இன்று வயது 104! உன் புகழ் இன்னும் பல நூறு ஆண்டுகள் கடந்தும் நிற்கும் அண்ணா! எம் அண்ணா!


குறிப்பு: "அறிஞர் அண்ணாவும் அமேரிக்க பேட்டியும்" என தலைப்பு வச்சா எவன் வருவான் கட்சிகாரனை  தவிர! ஒரு பேமஸ் கூட நொட்டோரியசை சேர்த்து கொண்டால் ஆஹ்ஃகா... கூட்டு பிரமாதமா இருக்கும் என்பதால் மட்டுமே இந்த தலைப்பு!


September 14, 2012

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களே! கொஞ்சம் இதை படித்து பாருங்கள்!



கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே என நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு என்னை வசை பாடி மகிழ்ந்தீர்களே, இதோ 19.9.2012 தேதியிட்டு இன்று வந்த "சோ" வை ஆசிரியராக கொண்ட "துக்ளக்" பத்திரிக்கையில் "இலங்கை பிரச்சனை" என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் சில பகுதிகளை பாருங்கள்.  "சோ" அவர்கள் "ஜெ" அவர்களின் ஆஸ்தான குருநாதர் ஆவார் என்பதும் உங்களுக்கு தெரியும்.

ஆனாலும் உங்களுக்கு வசைபாட வசதியாக "கலைஞர்"தான் கிடைப்பார். இதற்கு மேலும் நீங்கள் கலைஞரை மட்டுமே வசை பாடினால் இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் தான் உண்மை என்ற நிலைக்கு தமிழக "பொதுமக்கள்"  வர வேண்டி இருக்கும் என்பதை உணருங்கள். இதற்கு மேல் உங்கள் விருப்பம்.


இதோ அந்த "துக்ளக்" கட்டுரையின் சில ... மிகச்சில குறிப்புகள்.



**************************


1. விடுதலைப்புலிகளின் தூண்டுதலினால் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்திய அமைதிப்படையினர் மீது அபாண்டமான பழிகளை சுமர்த்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நின்று, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச தமிழ் மக்கள் அமைதி முயற்சியை முறியடித்தனர்.

2. இந்திராகாந்தியால் ஆயுத உதவியும் ராணுவ பயிற்சியும் பெற்ற புலிகள் இலங்கை தமிழர்களுக்கு நல்ல தீர்வை தடுத்தது மட்டும் இன்றி இந்திராவின் மகனை கொன்றனர்.

3. இந்திய உதவி இல்லாமல் வளந்தே இருக்க முடியாத ஒரு கூட்டம் இந்தியாவை அயல் நாட்டினராக அறிவித்து சிங்களர்களை சகோதரர்களாக கொண்டாடி இந்திய அமைதிப்படையை வெளியேற சொல்லியது. அந்த கூட்டம் இலங்கையில் இருந்த தமிழ் தலைவர்களை எல்லாம் கொன்றது. அப்பாவி தமிழர்களை எல்லாம் கொன்றது. இறுதியில் தானும் அழிந்தது. அழிந்த அந்த கூட்டத்துக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிகள் நடக்கின்றன.

4.பல வருடங்களாக நடந்து வந்த புலி- அரசு மோதல்கள் போது வெளியேறி அயல்நாடுகளில் குடியேறி விட்ட இலங்கை தமிழர்கள் பலர் இலங்கையில் தமிழர் பிரச்சனை தீர்வதை விரும்பவில்லை.

5.நம் நாட்டில் பங்களாதேஷ் விடுதலை பெற்ற பின் அங்கிருந்து இங்கு வந்த அகதிகள் திரும்பி செல்ல வேண்டும் என்று கோருவது போல சில நாடுகளில் குரல்கள் எழலாம். உங்கள் நாட்டில் நீங்கள் பட்ட அவதியின் காரணமாக இங்கு வந்தீர்கள். இப்போது உங்கள் நாட்டில் தான் அமைதி திரும்பி விட்டதே. ஆகையால் நீங்கள் திரும்பி செல்லுங்கள் என்று சில நாடுகளில் சில அமைப்புகள் கூற தொடங்கலாம்.

6.இதை விட முக்கியமாக இப்போது ஈழம் பெற வேண்டிய போர்.. அதற்கான ஆயுதம் செய்ய நிதி தேவை என்று இலங்கையில் தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதால் அவர்களுக்கு நிதி தேவை என்று, அல்லது இது மாதிரி வேறு காரணங்கள் கூறி அயல் நாடுகள் சிலவற்றில் இலங்கை தமிழ் முக்கியஸ்தர்கள் பண வேட்டை நடத்துகின்றனர். இது மிரட்டல் மூலமாகவும் நடக்கின்றது. பணத்துக்கு பணம். ஆதிக்கத்துக்கு ஆதிக்கம்.இது தொடர வேண்டும் எனில் இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாக யாரும் ஒப்புக்கொள்ள கூடாது. ஆகையினால் இலங்கையில் இன்றும் தமிழர்கள் வேட்டையாடப்படுகின்றார்கள் என்று அயல் நாட்டு அமைப்புகள் முன் காட்ட அயல்நாடுகளுக்கு சென்று ஆதிக்கம் புரிந்து வசதியாக வாழகின்ற இலங்கை தமிழர்கள் முயல்கிறார்கள்.

7. இந்த ஈழ பிசினஸ் தொடங்குவதற்காக அவர்கள் வசூல் செய்யும் நிதியில் ஒரு பங்கு இதற்கான பிரச்சாரத்துக்காக செலவிடப்படுகின்றது. அந்த நிதி எங்கெங்கோ செலவிடப்படுகின்றது. யார் யாருக்கோ பிரச்சார சம்பளம் தரப்படுகின்றது என்பது எல்லாம் இலங்கை அரசு ஆராய வேண்டிய விஷயங்கள். இப்படி நடக்கிற பிரச்சாரத்தின் காரணமாக இன்றும் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதை நாம் நம்பி விடக்கூடாது.

8. உலகத்திலேயே சப்மரைன் முதல் விமானம் வரை சேர்த்து வைத்து இருந்த, தன் மக்களையே கேடையமாக வைத்து இருந்த, சிறுவர்களை முன்னிருத்தி பலிகடா ஆக்கிய , தமிழ் தலைவர்களை கொன்று போட்ட ஒரு கொலைகார கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது இலங்கை அரசுக்கு.அதை எதிர்கொண்டு அந்த கும்பலை அரசு ஒடுக்கியது என்பது பாராட்டத்தக்க ஒரு சாதனையாகும். அந்த மாதிரி ஒரு வெறிச்செயலை இலங்கை அரசு எதிர்கொண்ட போது பல சிவிலியன்கள் உயிர் இழக்க நேரிட்டது மிகவும் வருத்தமான ஒரு விஷயம் தான் எனினும் சிவிலியன்களை கேடயமாக புலிகள் பயன் படுத்திய போது, ஆஸ்பத்திரிகளில் புலிகள் பதுங்கி தங்கள் தாக்குதலை நடத்திய போது ராணுவத்தின் எதிர் தாக்குதலில் சிவிலியன்கள் உயிரிழப்பு என்பது சகஜம் தானே! இதற்கு எல்லாம் புலிகள் தானே காரணம்!

9. தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அல்ல.. பல்லாயிரக்கணக்கான அளவு கன்னி வெடிகள் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை நீக்கி விட்டு தான் குடியேற்றம் நடத்த வேண்டும். இதனால் ஏற்படும் தாமதத்துக்கு இலங்கை அரசா பொறுப்பு???

10. ஐ நா சபையில் இலங்கைக்கு எதிராக வந்த ஒரு தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களித்தது ஒரு மாபெரும் தவறு. அந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்து இருந்தால் இரு நாடுகளின் உறவு வலுப்பெற அது உதவி இருக்கும்.


****************

இதன் பின்னரும் நீங்கள் கலைஞரை மட்டுமே வசை பாடுவேன், திமுகவினரை தான் குறி வைத்து தாக்குவேன் என்று கூறினால்... உங்கள் தலையெழுத்து யாராலும் மாற்ற இயலாத நிலை தான் என்பதை உணருங்கள்!



September 7, 2012

அய்யா ஒரு பீஃப் பிரியாணி ப்ளீஸ்....

"அய்யா ஒரு முரசொலி கொடுங்க" என ஆரம்பித்தது என் இன்றைய பொழுது!
திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் அதிஷ்டானம் வரை வாக்கிங் போய் திரும்பி
வந்தால் அந்த கடை திறந்து இருக்கும். ஒரு கிழவன் , கிழவி... கடையின் மீது
"எம் ஜி ஆர் அவர்கள் கொடுத்த நன்கொடை இந்த கடை" என போட்டிருக்கும்.
முரசொலியை வாங்கி முதுகில் பனியனுக்குள் வைத்து கொண்டேன். (கிட்ட தட்ட
எங்க ஊர்ல அரிவாள் ஸ்டாண்ட் போல)

என்னவோ நியாபகம் வர "அய்யா ஒரு 'அவள் விகடன்' கொடுங்க என கேட்க அதே
நேரத்தில் ஒருவர் அதே போல கேட்க ... கடைக்கார அய்யா குழம்பி விட்டார்.
"இங்க ஒரு அவள் விகடன் ஒன்னு தான் சார் இருக்கு" என சொல்ல நான் "அவர்
கிட்டயே கொடுங்க" என விலகினேன்.

"மருந்தீஸ்வரர் கோவில் கிட்டே கூப்பிடு தூரம் சார், அருமையான பிளாட்
சார்.. பக்கத்தில் டி பி ஆஸ்பத்திரி இருக்கு சார் ( அட பாவமே என்னய
பார்த்து ஏண்டா இது போல சொல்ற) வெயில்னா அங்க இருப்பவங்க "இன்னா"ன்னு
கேட்பாங்க சார், சும்மா பதினேழு லட்சம் தான்  சார்) . அந்த மருந்தீஸ்வரரை
பார்த்திடலாம் இன்னிக்கு என நினைத்துக்கொண்டேன்.

எல்லா நியாபகங்களும் வர நடந்தேன். சரி இரண்டு நாளா இருமல் அதிகமா இருக்கே
என கோவில் பக்கம் போக நினைத்த போது அந்த "அவள் விகடன்" தோளை தொட்டார்.

"சார் ரொம்ப தேங்ஸ். என் ஆத்துக்காரி அவள் விகடன் இல்லைன்னா செத்துடுவா.
காப்பாத்திட்டிங்க"

"எங்க சார், கோவிலுக்கா? நானும் அங்க தான் இருங்க செருப்பு போட்டுட்டு வர்ரேன்"

"சார் இதான் வன்னி மரம். என் பொண்ணுக்கு கடி ஜோக் போட்டி வச்சா சங்கரா
ஸ்கூல்ல . அவ தான் பஷ்ட். என்னா கடின்னா "ராமதாஸ்க்கு பிடிச்ச மரம் எது?
ஹி ஹி ஹி அதான் வன்னி மரம்"ன்னு சொன்னேன். அவ தான் சார் பஷ்ட் வந்தா கடி
ஜோக்ல. அப்படின்னா இந்த கோவில் என்ன ஒரு கிரியேட்டிவிட்டி கொடுக்கும்
கோவில்னு பார்த்துகுங்க"

"சார் , இங்க கோவில்ல ரொம்ப அநியாயம் சார். தக்கினூண்டு புளியோதரை 5
ரூவா. கொஞ்சம் வெயிட் பண்ணினா அவாளே கோவில்ல கொடுப்பா. ரொம்ப பிராமாதமா
இருக்கும்"

"சார், முதல்ல கணபதி கிட்டே வேண்டிகுங்க. இந்த கணபதி கடன் தீர்க்கும்
கணபதி. நான் பிளாட் வாங்கின போது லோன் கிடைக்கனும்னு இந்த கணபதிட்ட
வேண்டிகிட்டே இருந்தப்ப எல் ஐ சில இருந்து போன். லோன் சாங்கஷன்"

"சார் இந்த திரிபுரசுந்தரி இருக்காளே, பவர் புல்... இவ கிட்ட
வேண்டிகிட்டா நடக்காததும் நடக்கும்" அப்போது ஒரு மாற்று திறனாளி தவழ்ந்து
வந்து வேண்டிகிட்டாரு. அவருக்கு வழி விட்டோம்.

பின்ன மருந்தீஸ்வரர் சன்னதிக்கு வந்த போது அவர் 'சார் இவர் சுயம்பு. இவர்
கிட்டே வேண்டிகிட்டவன் எவனும் கெட்டு போனதா சரித்திரம் இல்லை.." என
சொல்லி கிட்டே அய்யருக்கு ஒரு இருபது ரூபாய் போட்டார். அவரும் இவருக்கு
சின்ன பூ மாலை போட்டு பதில் மரியாதை செய்தார். என் கிட்டே சில்லரை இல்லை
இரு 100 ரூபாய் நோட்டும் இரண்டு ரூபாய் காசும், ஒரு ரூபாய் காசும்
இருந்துச்சு. அனேகமாக செருப்பு கடைக்கு சில்லரை காசு தேவைப்படும். பாவம்
அவங்க கிட்டே 100 ரூபாய் நோட்டுக்கு மீதி இருக்காது என நினைத்தேன்.
ஆனாலும் சில்லரை காசு எடுத்து போடும் போது அவர் தடுத்தார். "சார் மானம்
போகுது. நோட்டா இருந்தா  தட்சனை கொடுக்கலாம். சில்லரை எல்லாம் தப்பு
சார். அவர் என்னமா மந்தரம் சொல்றார். அவருக்கு தட்சனை கொடுக்காட்டி கூட
பரவாயில்லை. ஆனா அவமானப்படுத்தக்கூடாது சார்.இவருக்கு கொடுத்தா டைரக்டா
ஈஸ்வரனுக்கு கொடுத்தது போல. ஈஸ்வரனுக்கு கொடுத்தா அவர் மக்களுக்கு
திருப்பி கொடுப்பார்" என்றார். எனக்கு மனதில் வேற கணக்கு ஓடியது. அவர்
சொல்வது சரிதான். இருக்கும் 100 ரூபாயை டாஸ்மாக் என்னும் குருக்கள்
கிட்டே கொடுத்தா அது அரசாங்கம் என்னும் ஈஸ்வரன் கிட்டே போகும். அதை வச்சு
அரசாங்கம் மக்களுக்கு நன்மை செய்யும். அடடே... ஆரம்ப காலம் முதலே
இருக்கும் கணக்கு தானா இது நினைத்து டாஸ்மாக் குருக்கள் கிட்டே சாயரட்சை
பூசைல கொடுக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.

பின்னர் அப்படியே வெளியே வரும் போது பசு மாட்டு தொழுவம் இருந்தது. இவர்
போய் கும்பிட்டார். கும்பிட்டார். கும்பிட்டு கிட்டே இருந்தார். ஓடி
என்னிடம் வந்து "சார் பசுவுக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுத்தா நாம இது வரை
செஞ்ச பாவம் எல்லாம் போய்டும் சார். கொஞ்சம் இருங்க, நான் போய்  வெளியே
புல் விற்கும், வாங்கிட்டு வர்ரேன், உங்களுக்காகவும் ஒரு கட்டு வாங்கி
வர்றேன். காசெல்லாம் கொடுக்க வேண்டாம்" என சொன்ன போது நான் "இல்லீங்க..
எனக்கு வேண்டாம். நான் இதுவரை பாவம் எதும் செய்யலிங்க" என சொன்ன போது...
"சார் செம காமடியா பேசுறீங்க கொஞ்சம் இருங்க" என சொல்லி விட்டு வெளியே
போய் பின்னர் வந்தார்.

ஜெயிலில் இருந்த பசுக்களுக்கு புல் கொடுத்தார். வெளியே வந்தோம். நான்
போய் செருப்பு கடை காண்டிராக்ட் எடுத்த கடையில் மூச்சு வாங்கி
கொண்டிருந்த ஒரு பெண் கிட்டே மூன்று ரூபாய் கொடுத்தேன். "அண்ணே, ரெண்டு
ரூவா தான் அண்ணே" என சொன்னது. அது கர்பஸ்த்ரீ. "என்னிக்கும்மா டெலிவரி
டேட் சொல்லியிருக்காங்க"ன்னு கேட்டேன். "இன்னும் ரெண்டு நாள்
இருக்குண்ணே" என சொன்னது.

அதற்குள் என் நண்பர் கோபுரத்தின் இரண்டு பக்கமும் ஓடி ஓடி ரன் எடுப்பது
போல தன் செருப்புகளை "கலெக்ட்" செஞ்சுட்டு வந்தார். என்னிடம் சொன்னார் "
சார்... ஊதாரித்தனமா செலவு செஞ்சா எனக்கு பிடிக்காது சார். ஜோடியா போட்டா
தான செருப்பை திருடுவானுங்க. ஜோடிய பிரிச்சு போட்டு ஏமாத்தனும் சார்.
இந்த செருப்பு திருட்டு எப்ப தான் ஒழியுமோ இந்த நாட்டுல அப்ப தான் சார்
நம்ம நாட்டிலே ஒரிஜினலா சுதந்திரம் கிடைச்ச மாதிரி. சரி சார் அப்ப நான்
விடை பெறுகிறேன் நமஸ்காரம்"

எனக்கு பசி வயிற்றை கிள்ளியது. பக்கத்தில் தான் வீடு. ஆனாலும் ஹோட்டல்
பிரியாணி மீது ஒரு ஆவல் வந்தது. ஒரு 15 நாட்கள் முன்னதாக சென்னை சி ஐ டி
நகரில் ஒரு ஹோட்டலில் என் நண்பர்களுடன் சாப்பிட போன போது "தோழர் பீஃப்
சாப்பிடுங்க, என சொன்னார் ஒரு தோழர். எனக்கு  பீஃப் சாப்பிட்டு பழக்கம்
இல்லை. இருந்தாலும் அவர் மனம் கோணக்கூடாதே என சகித்து கொண்டு
சாப்பிட்டேன்.அதை நோக்கி என் மனம் சென்றது. ஹோட்டலில் அமர்ந்த பின்
சர்வரிடம் "ஒரு பிரியாணி கொடுப்பா. பீஃப் பிரியானியா இருந்தா உத்தமம்" என
சொன்னேன்!

September 4, 2012

பேராசிரியர் க. அன்பழகனார் - ஒரு வியத்தகு அரசியல் பழம்!


அது 1957, நம் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்து 8 ஆண்டுகள் ஆன நிலை. தேர்தலில் நாம் முதன் முதலாக போட்டியிடுகின்றோம். மொத்தம் உள்ள சட்ட மன்ற இடங்களில் நம் கட்சி போட்டியிட்டது 124, அது போல பாராளுமன்ற தேர்தலில் நாம் போட்டியிட்ட இடங்கள் 11. நமக்கு முதன் முதலாக கிடைத்த வெற்றிகள் என்பது சட்டமன்றத்தில் 15 இடங்கள். பாராளுமன்றத்தில் இரண்டு இடங்கள். சட்ட மன்றத்தில் வெற்றி வாகை சூடியவர்கள் அண்ணா, கலைஞர், பேராசிரியர், ப.உ  ச, ஆசைத்தம்பி, சத்தியவாணி முத்து, களம்பூரார்(அண்ணாமலை), சந்தானம், நடராசன், இருசப்பன், ஆனந்தன், கோவிந்தசாமி, சாரதி, சுப்ரமணியம், செல்வராஜ் ஆகியோர். அது போல பாராளுமன்றத்துக்கு ஈ வி கே சம்பத், தருமலிங்கம் ஆகிய இருவர். செமத்தையான வெற்றி தான்! ஏனனில் அப்போது மக்கள் மத்தியில் காங்கிரஸ் மட்டுமே கட்சியாக இருந்து தொலைத்தது. ஆக நாம் காங்கிரஸ் என்னும் மரத்தின் வேருக்கு ஊற்றிய முதல் ஆசிட் பாட்டிள்கள் அந்த 15 சட்டமன்ற உறுப்பினர்களும். போகட்டும்..... இதல்லாம் எனக்கு இப்போ தேவை இல்லை. நேற்று என் வாழ்நாள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடந்தது.

நான் நேற்று ( 03.09.2012) இரவு சென்னை வர வேண்டி இரவு 11.30க்கு மயிலாடுதுறை வரும் கம்பன் விரைவு ரயில் வண்டிக்காக கொஞ்சம் மு கூட்டியே இரவு பத்து மணிக்கு இரயில்வே நிலையம் போனேன். போகும் போது வழக்கம் போல நக்கீரன், ஜூவி, (ரிப்போர்டர் வாங்குவதில்லை) ஆகியன வாங்கி போனேன். முதல் பிளாட்பாரம்ல  புகைவண்டி வரும் என்பதால் அமைதியாக அமர்ந்து வாசிக்க ஆரம்பிக்கும் போது என் முதுகின் பின்னால் யாரோ "டொக். டொக்" என நடந்து போவது உணந்தேன். யாராக இருக்கும் என திரும்பி பார்க்கும் போது தான் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் செயலற்றவனாக ஆகிப்போனேன்.

ஆமாம்! வந்தது அந்த தள்ளாத வயதில் "ஓய்வறை" நோக்கி செல்லும் அந்த மா மனிதன் நம் கழக பேராசிரியர் அன்பழகனார் அவர்கள் தான். எனக்கு முதலில் என்ன செய்வது என தெரியவில்லை. இந்த விஷயம் கலைஞர் காதுக்கு போனால் தளபதி கதி என்ன? தளபதி காதுக்கு போனால் மயிலாடுதுறை திமுக நிர்வாகிகள் அதாவது நகரம், ஒன்றியம், இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி என எல்லார் நிலையும் என்ன? சும்மா விடுவாரா தளபதி? ஒரு பழுத்த திராவிட கிழவன் தடியூன்றி தானாக நடந்து வருவதை பார்த்தால் மயிலாடுதுறை திமுகவினர் கண்ணீர் விட்டே செத்துப்போவர்:-(

நான் ஓடிப்போய் அதை ஒரு புகைப்படமாக எடுப்போம் என நினைத்தது என் மகா முட்டாள் தனம். கற்பழிக்கப்படும் பெண்ணை  காப்பாற்றாமல் புகைப்படம் எடுத்த கயவர்கள் போல் ஆவேன் நான். எனினும் அதை செய்தேன். பின் பக்கம் பார்த்தேன். அண்ணன் குத்தாலம் கல்யாணம் அண்ணன் ஓடி வந்து கொண்டு இருந்தார். நான் போய் பேராசிரியரிடம் "அய்யா... கட்சியின் ப்ரோட்டோகால் சொல்லி கொடுக்கும் நீங்களே இப்படி எங்க மாவட்டம் ஏ  கே எஸ் அண்ணன் அனுமதி இல்லாமலோ அல்லது எங்கள் நகரம் குண்டாமணி அண்ணன் இல்லாமலோ தனியாக வரலாமா?" என நேரிடையாக கேட்டேன்.

அதற்கு அவர் "இல்லையப்பா, நான் சொந்த காரணமாக வந்தேன். இது கட்சி விசயம் இல்லை. ஆனா கோவக்கார தம்பி குத்தாலம் கல்யாணத்துக்கு நாளை பின்ன அவருக்கு சேதி தெரிஞ்சா கோவிப்பாரேன்னு அவரு கிட்ட மட்டும் சொன்னேன். தப்பா நினைக்காதீங்க" என சொன்ன போது எனக்கு  என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அய்யாவை  முதல் வகுப்பு இடத்தில் அமர வைத்து விட்ட நேரத்தில் குத்தாலம் அண்ணன் மனைவியார் அவர்கள் அய்யாவுக்கு இரவு சப்பாடை கொண்டு வர நான் அதற்குள் "அய்யா, வீட்டு இட்லியும் பூண்டு மிளகாய் பொடியும், வத்த குழம்பும் இருக்கு" என சொல்ல குத்தாலம் அண்ணன் "இல்லடா தம்பி இதை எல்லாம் அய்யா நல்லா சாப்பிட்டாலே போதும்" என சொல்லி தடுத்தார். பின்னர் அய்யா பேராசிரியரும், குத்தாலம் அன்பழகன் அண்ணனும் சாப்பிட அந்த சோபாவில் அமர, நானும் அண்ணியாரும் வைக்க அய்யா சாப்பிட ஆரம்பித்தார். நான் பின்னர் வெளியே வந்து எங்கள் நகரம் குண்டாமணி அண்ணனுக்கு போன் செய்தேன். கவனிக்க.. அப்போது மணி 10.50.

அதற்குள் அய்யா மூத்த வக்கீல் முருகு. மாணிக்கம் அவர்களும், பின்னர் எங்கள் மயிலாடுதுறை ஒன்றிய செயலர் அண்ணன் மூவலூர் மூர்த்தி அண்ணனும் வந்தனர். நான் மூர்த்தி அண்ணன் கிட்டே "சீக்கிரம் உள்ள போங்க அண்ணே, பேராசிரியர் தனியா உட்காந்து இருக்கார்" என சொன்னேன். அவர் அரக்க பரக்க ஓட அடுத்த நிமிடம் எங்கள் நகரம் குண்டாமணி அவர்கள் ஒரு சுமாராக 50 நகர பொறுப்பில் இருப்பவர்கள் புடை சூழ ஓடி வர எங்கிருந்தோ தொண்டர்கள் ஓடி வந்து "தலைவர் கலைஞர் வாழ்க! அய்யா பேராசிரியர் வாழ்க! அண்ணன் தளபதி வாழ்க! " என வாழ்த்து முழக்கமிட நாங்கள் அய்யாவின் ஓய்வறைக்கு போன போது அய்யா பேராசிரியர் "இல்லைப்பா, இது என் அஃபீசியல் விசிட் அல்ல. நான் திருவாரூர் வந்த வரை மட்டுமே அஃபீசியல். இது என் சொந்த விஷயமாக நான் படித்த பள்ளி, நான் பிறந்த இடம் பார்க்க வந்த சொந்த விஷயமப்பா, இதை பெரிசு பண்ணாதீங்க, எல்லாரும் எங்க பிள்ளைங்க தானே, நான் சொன்னா கேட்பீங்க தானே, அமைதியா இருங்க. இப்போ மணி இரவு 11 ஆச்சுது. நாம மத்த பயணிகளுக்கு தொல்லை கொடுக்கலாமா?"ன்னு கேட்க எங்கள் நகர செயலர், ஒன்றிய செயலர் எல்லாம் அழுதே விட்டனர்.

இவர்கள் எல்லாம் வரும் முன்னர் "தம்பி எனக்கு கால் மரத்து போகுது, நான் கொஞ்சம் இந்த டீப்பாயில் காலை எடுத்து வச்சுக்கவா" என நான் மட்டுமே இருக்கும் போது எனக்கு நெஞ்சே வெடித்து விடும் நிலை. " அய்யா, நானே எடுத்து காலை வச்சிவிடும் பாக்கியம் எனக்கு கிடைக்கட்டுமே" என்றேன்.

ஆனால் எல்லா கட்சி நிர்வாகிகளும் வந்து விட்ட நிலையில் அய்யா அவர்கள் தன் காலை இறக்கி கீழே வைக்க எங்கள் நகர செயலர் குண்டாமணி அவர்கள் "அய்யா மன்னிக்கனும்" என சொல்லி விட்டு மீண்டும் காலை எடுத்து டீப்பாயில் வைத்தார். ஒரே அமைதி அந்த இடத்தில். பேராசிரியரின் பக்கத்தில் எங்க எம் எல் சி  சோழமண்டல தளபதி கோ சி மணி அய்யாவின் பால்ய நண்பர் கட்சியின் மூத்த வழக்கறிஞர் திரு முருகு. மாணிக்கம் அவர்கள் அமர்ந்திருக்க அந்த இடம் ஒரு திராவிட மூத்த பழுத்த கிழ சிங்கம் முன்னாள் நிற்கும் சிங்க குட்டிகளாய் அமைதி காத்தது.

அய்யாவே அமைதி கலைத்தார். " ம் ... சொல்லுங்க யார் யார் என்ன பண்றீங்க? உங்க கூட நன் புகைப்படம் எடுத்துப்பேன். (வார்த்தையை கவனிக்கவும்... என் கூட நீங்க புகைப்படம் எடுத்துக்கலாம் என சொல்லாமல்... வந்திருக்கும் எல்லார் செல் போனிலும் தயாராக இருக்கும் கேமிராவை பார்த்து எப்படி சொல்கிறார் பாருங்கள்) வாங்க எல்லாரும் வாங்க"

"அய்யா நான் சீர்காழி, தென்பாதி முத்துராக்க மாரப்பன் பேரன் அய்யா"

"ஒ அப்படியா, அவரு இருக்காரா" என கேட்டுவிட்டு டக் என சுதாரித்து கொண்டு "நல்லா இருக்காரான்னு கேட்டேன்ப்பா" என சொன்னார். இதில் விஷயம் என்னவெனில் அந்த மேற்படி முத்துராக்க மாரப்பன் அவர்கள் இன்று உயிரோடு இருந்தா கிட்ட தட்ட 112 வயது ஆகியிருக்குமாம். அதை "கணக்கு" செய்து தான் பேராசிரியர் அப்படி கேட்டார் போல முதலில். ஆனாலும் ஒரு கண்ணியம் குறைவான வார்த்தை தன் வாயில் இருந்து வெளிப்பட்டு விட்டதோ என அஞ்சியே அதாவது தன் மனதுக்கு அஞ்சியே அவர் தன்னை திருத்திக்கொண்டார். பின்னர் அந்த நபர் "இல்லீங்கய்யா அவர் இறந்து ரொம்ப வருஷம் ஆச்சுய்யா" என சொல்ல பேராசிரியர் அவரை பற்றி சில வார்த்தைகள் பெருமையாக அவாரின் வாரிசுகிட்டே சொல்லிட்டு "ஒரு தபா தன் பேரனுக்கு ஒரு ஸ்டுடியோ வச்சு தரனும்"ன்னு சொன்னாருப்பா அவரு"ன்னு சொல்ல வந்தவர் அழுதே விட்டார். ஏனனில் அந்த ஸ்டுடியோ பேரன் அவர் தான் போல.

அடுத்து ஒருவரிடம் "தம்பி நீங்க என்ன தொழில் பண்றீங்க?"ன்னு கேட்க அதற்கு அவர் "அய்யா எனக்கு முழு நேர தொழில் அரசியல் தான் அய்யா"ன்னு சொல்ல அதற்கு பேராசிரியர் " நோ நோ தி எக்ஸ்ட்ரா டெசிமல் ஆக்டிவிட்டீஸ் ஷுட் பீ எக்ஸ்ட்ரா டெசிமல். பட் தெ ப்ரொப்பஷனல் ஷுட் பீ அனதர்" என சொல்ல நாங்க எல்லாரும் கை தட்டினோம். "மன்னன்" படத்தில் ரஜினி ஆங்கிலம் பேசிய அந்த இரண்டு நிமிடத்துக்காக இரு நூறு தடவை படம் பார்த்தவங்களாசே நாங்க:-))

மீண்டும் பேரசிரியர் "இல்லைப்பா தொழில்னா நீயும் உன் மனைவி மற்றும் குழந்தைகள் உன்னுடைய எந்த வருமானத்தில் சாப்பிடுறாங்க"ன்னு அர்த்தம். அரசியல் என்பது நம் ஆர்வம். சமூக ஆர்வம். சமூக ஆர்வம் மட்டும் இருக்கு எனக்கு. ஆனா பொண்டாட்டி பிள்ளையை சாப்பாடுக்கு கஷ்டப்படுத்துவேன் என்றோ அல்லது சமூக ஆர்வத்தினால் "கிடைக்கும்" வருவாய் கொண்டு பொண்டாட்டி பிள்ளையை சாப்பாடு கொடுப்பதோ தப்பு.இன்னும் புரியும் படி சொல்லவா? எனக்கு ஒரு திராட்சை தோட்டம் இருக்கு. நான் ஒரு விவசாயி'ன்னு சொல்லும் இந்த உலகில் நான் சைக்கிள் பஞ்சர் ஒட்டி தொழில் நடத்துறேன்"ன்னு சொல்லு. அது தான் திமிர். அந்த திமிர் தான் வேணும். எனக்கு எம் எல் ஏ பென்ஷன் வருதுப்பா... ஹா ஹா ஹா" என சிரிக்க அங்க இருந்த எல்லாரும் அமைதியை கிழித்து விட்டு சிரித்தோம்.

உடனே ஒருவர் "அய்யா நீங்க எங்க தெய்வம் அய்யா"ன்னு உணர்சி மேலிட கூட அவரை கிட்டே அழைத்து " ஊகூம்... எனக்கு மனிதனாக இருக்கவே ஆசை. சரி உனக்கு நான் தெய்வமாகவே இருந்தா கூட உன் மணிகட்டில் இத்தனை கயிறு கட்டிக்க சொல்ல மாட்டேன். உன்னையே நம்பு. உன் மூளையை நம்புன்னு தான் சொல்லியிருப்பேன். அது என்ன கயிறு? ஆங் "முடி கயிறு" தானே. ஆத்திகன் அதை முடி கயிறுன்னு சொல்றான். அதையே தான் பகுத்தறிவாளனும் சொல்றான்.. பாமரனுக்கும் புரியும் மொழியில் சொல்றான், ஆனா பகுத்தறிவாளன் சொல்லும் போது கோவம் வருது எல்லாருக்கும்"( may be மயிறு கயிறு???? :-)) ) என சொன்ன போது  பத்து வருடம் முன்னமேயே ஆயிரம் பிறை கண்டு முடித்த இவர்,  இன்றும் பெரியார் கருத்துகளை போதிக்கும் ஒரு பெரியார் சீடனாக அய்யா பேராசிரியரை கண்ட போது உடம்பு சிலிர்த்து அடங்கியது!

எங்கள் ஒன்றியம் மூவலூர் மூர்த்தி அவர்கள் தன்னை அறிமுகம் செய்து கொண்ட போது அவரின் தந்தையார் பற்றி சிலாகித்து பேசினார். எங்கள் நகரம்  திரு. குண்டாமணி அவர்கள் தன்னை அறிமுகம் செய்து கொண்ட போதும், எங்கள் நகராட்சி தலைவர் அவர்களின் கணவர் வக்கீல் சீனிவாசன் தன்னை அறிமுகம் செய்து கொண்ட போதும் "இது நம்ம ஊர் கோட்டைப்பா. தக்க வச்சுகுங்க" என சொன்னார்.

என்னை "கிட்ட வாங்க அபிஅப்பா, நீங்க மட்டும் ஏன் போட்டோவுக்கு வரலை" என சொன்ன போது... "இல்லீங்க அய்யா... எங்க நகரம், ஒன்றியம் போட்டோ எடுத்து காலைல நெட்ல போடனும் என்பதை தவிர எனக்குன்னு தனிப்பட்ட ஆர்வம் எதும் இல்லீங்கய்யா" என சொன்னேன். "பரவாயில்லை வாங்க தோழரே" என சொன்ன போது அந்த மனிதன் கிட்டே இருக்கும் கம்யூனிச பாசம் (அடிக்கடி கலைஞர் சொல்லுவாரே தான் ஒரு கன்யூனிஸ்ட் என்று அது போல) தெரிந்தது. ஓடிப்போய் அவர் சோபாவின் பக்கத்தில் ஒரு குழந்தையாய் அமர்ந்து கொண்டேன்.

புகைவண்டி வந்தது. எல்லோரும் நடந்து போனோம் பேராசிரியரை பின் பற்றி. அவரின் உதவியாளர்கள் இருவர் அவரின் படுக்கை, மற்றும் ஒரு பெட்டி எடுத்து வந்தனர். குத்தாலம் கல்யாணம் அண்ணன் "அண்ணே உங்களை தனியா அனுப்ப மனசு இல்லை அண்ணே" என கண் கலங்கினார். திடீரென ஒரு மாற்றுக்கட்சி முக்கிய புள்ளி ஒருவர் அந்த கூப்பேயில் இருந்து வெளிப்பட்டு பேராசிரியரை பார்த்து திடுக்கிட்டு அவர் பாதம் தொட்டு வணங்கி "அய்யா நான் இருக்கேன் இந்த பெட்டியில். நான் உங்களை சென்னையில் இறக்கி விடும் வரை தூங்க மாட்டேன் அய்யா" என சொல்லி விட்டு  பிளாட்பாரத்தில் நின்ற எங்களை பார்த்து "கவலை வேண்டாம். அவர் எல்லாருக்கும் பேராசிரியர் தான். நான் பார்த்துக்குறேன். காலை அவரை அழைக்க வருபவர்கள் கிட்டே ஒப்படைச்சுட்டு உங்களுக்கு போன் செய்கிறேன்" என குத்தாலம் அண்ணனிடம் சொன்னார்.

நான் பேராசிரியரிடம் சொன்னேன். "அய்யா நான் நான்கு பெட்டி தள்ளி தான் இருக்கேன். நான் வேண்டுமானா எல்லா ஸ்டேஷனிலும் வந்து பார்த்துக்குறேன்" அதற்கு அவர் " நான் என்ன பெரியாரா? இங்க படுத்தா சென்னைல தான் எழுந்திருப்பேன்" என சொல்ல அங்கே வந்திருந்த பெரியாரிஸ்ட் தோழர்கள் வாய் விட்டு சிரித்தனர். அதே நேரம் மனம் குளிர அழுதனர். "இவர் ஒரு வாழும் பெரியார்" என சொல்லி!!!!


குறிப்பு: நான் பார்த்ததை கேட்டதை எப்போதும் போல எழுதிய பின்னர் தோழர் திராவிடப்புரட்சி அவர்களுக்கு அனுப்பி அவர் சில விஷயங்கள் "எடிட்" செய்து அனுப்பிய பின் இட்ட பதிவு இது! நன்றி தோழர் திராவிடப்புரட்சி அவர்களுக்கு!

திராவிட சிங்கத்தின் பக்கத்தில் நான் - மிக பெருமையாக!
அண்ணன் மூவலூர் மூர்த்தி அவர்கள் பேராசிரியருடன்...
தனியே நடந்து வரும் திராவிட சிங்கம் பேராசிரியர் அவர்கள்



என் கேமிரா வழி எடுத்த சில புகைப்படங்கள் மட்டுமே இவைகள். இன்னும் எங்கள் நகரம் திரு.குண்டாமணி அண்ணன் எல்லாம் இருக்கும் புகைப்படங்கள் பின்னர் அப்டேட் செய்யப்படும்!