அமீரக தமிழர்களை தவிர மற்ற உலக தமிழர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்ட வழியில்லை. லோ பிரஷர் உள்ளவங்க நலனுக்காகவே நடத்தப்படும் FM இது இங்கே. சர்ர்ர்ர்ன்னு பிரஷர் எகிறும். நான் காலை 6.20 முதல் 7.00 மணி வரை மட்டுமே கேட்பேன். வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம்.
பாம்பப்பன்: காலையில் சாலையில் செல்லும் நீங்கள் அதை சோலையாக மாற்றி மாலையாக ஆக்கி மாலையில் வீடு திரும்ப(அடங்கொய்யால இதுக்கு தல கவிதையே பெட்டர்) வாழ்த்தும் பாம்பப்பன் ஹஹ் ஹஹ் ஹா (நடுவில என்ன சிரிப்பு) இன்னைக்கு SMS கேள்வி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடிச்சு வெளி வந்த பிரம்மாண்ட படத்தின் பெயர் என்ன? ஹஹ் ஹஹ் ஹா இப்ப லைன்ல இருக்கும் ரசிகர் கிட்ட பேசுவோமா?
ஹலோ பக்தி FM ல இருந்து பாம்பப்பன் நீங்க யாரு?
வணக்கம் பாம்பப்பன் சார் நான் தோப்புதுறை ஜமால் பேசறேன்
வாங்க தோப்புதுறை ஜமால் நீங்க காலையில் சாலையில் போகும் போது சோலை........... ஹஹ் ஹஹ் ஹா என்ன சொல்ல வர்ர்றீங்க
பாம்பப்பன் சார் நல்ல அறிவுபூர்வமான கேள்வி ஆனா ஒரு சின்ன குளூ குடுத்தீங்கன்னா நல்ல இருக்கும்
வாழ்த்துக்கு நன்றி, இப்படி அறிவு பூர்வமா கேட்டு தமிழர்களின் அறிவை வளர்ப்பதே நாம் பக்தி FM மின் கடமை, நீங்க கேட்டதுக்காக ஒரு சின்ன க்ளூ அந்த படத்தின் முதல் எழுத்து சி சரி நேயர்களே இது வரை 15 பேர் சரியான விடை அனுப்பி இருக்காங்க வாங்க பாட்டுக்கு போகலாம்
பாட்டு !@#$%^^&*()_++_)(*&^%$#@!
பாம்பப்பன்: என்ன நேயர்களே பாட்ட நல்லா இருந்துச்சுல்ல இப்ப அடுத்த நேயர் லைன்ல இருக்கார் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
ஹலோ பக்தி FM ல இருந்து பாம்பப்பன் நீங்க யாரு?
வாணக்கம் பாம்பப்பன் சார் நானு ஜேபலலில இருந்து கோபி
ஹஹ் ஹஹ் ஹா வாங்க கோபி என்ன பதில் தெரிஞ்சுதா? சாலையில் போகும் நீங்க சோலை காலை மாலை (கன்றாவி தலை எழுத்து)
சார் இன்னுமொறு சின்ன குளூ தாங்க சார்
சரி கோபி படம் 3 எழுத்து அதில கடைசி எழுத்து ஜி சர் நேயர்களே இப்ப செய்தி நேரம்
பக்தி FM செய்திகள் வாசிப்பது பாம்பப்பன், பாமக தலை வர் டாக்டர் ராமதாஸ் முதல்வர் கருணாநிதியை கம்மனாட்டி என்று திட்டினார் ஆனாலும் தொடர்ந்து ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பேன் என கூறினார். வடக்கு வல்வெட்டிதுறையில் கந்த சாமி ராசப்பன் மகிந்த ரசபக்சே அரசால் கொல்லப்பட்டார். சானியா 1 இடம் முன்னேறினார்.!@#$%^&*()_++_)(*&^%$#@
இத்துடன் செய்திகள் முடிவடைந்தது...ஹஹ் ஹஹ் ஹஹ்ஹா( நீ செய்தி வாசிச்ச லெட்சனத்துக்கு சிரிப்பா)
அடுத்த நேயர் யாருன்னு பார்ப்போமா ஹல்லோ பக்தி FM ல இருந்து பாம்பப்பன் நீங்க யாரு
வணக்கம் பாம்பப்பன் சார் நானு முத்துபேட்டை தாஜுதீன் பேசறேன் SMS கேள்விக்கு இன்னும் ஒரு குளூ தர முடியுமா
கண்டிப்பா தரேன் எப்படியாவது அமீரக தமிழர்களிடம் அறிவை வளர்ப்பதே பக்தி FM மின் முதல் நோக்கம் என்பது உலகம் அறிந்த ஒரு விஷயம். ஹஹ்ஹஹ் ஹா நடு எழுத்து "வா" இப்ப அடுத்த பாட்டுக்கு போவோமா
***********************************************************************************************
போதும் நான் காலையில் அனுபவிக்கும் சந்தோஷத்தை தமிழ்மணமும் அனுபவிக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் எழுத பட்டதே இந்த பதிவு, பாதிக்க பட்டவங்க யாராவது இருந்தா வந்து என் கண்ணை தொடச்சிட்டு போங்கப்பா. இதன் தாக்கம் ஆபீஸ் ல 2 மணி நேரம் நீடிக்குது தினமும். பின்ன என்னாத்துக்கு கேக்குற ஆஃப் பண்ண வேண்டியது தானேன்னு கேட்பவர்களுக்கு பதில் சொல்ல மாட்டேன்!
Showing posts with label ஆத்திரம். Show all posts
Showing posts with label ஆத்திரம். Show all posts
August 14, 2007
February 5, 2007
அந்தரங்கம் விற்பவர்களை செருப்பால் அடி!!!
சமீபத்தில் மனதை மிகவும் பாதித்த நிகழ்வு இது. கடலூர் மாவட்ட ஒரு கிராமத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. வழக்கம் போல் அன்றிறவே முதலிரவு. மறு நாள் அந்த பெண்ணின் அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். காரணம் அந்த பெண் தன் உறவினர்களிடம் முறையிட்ட நெஞ்சம் பதைக்க வைக்கசெய்யும் புகார்.
அதாவது தன் முதலிரவில் தான் தனது கணவரின் நண்பர் மூலமாக வீடியோ எடுக்கப்பட்டதாக. பின்னர் அந்த வீடியோ கேசட் வெளிநாட்டு விற்பனைக்காக விமான நிலையம் வரை போய் விட்டதாகவும் அந்த மணப்பெண் தெரிவித்தார். இதை கேள்விப்படும் எந்த தந்தையும் இந்த தந்தை எடுத்த முடிவுதான் எடுப்பார் என்பது உண்மைதான்.
இதில் எந்த அளவு உண்மை என்பது விசாரனையில் இருக்கட்டும். உண்மையாய் இருக்குமேயானால் என்பது பற்றியே இப் பதிவு.
அந்தரங்கம் விற்பனை எங்கு ஆரம்பமாகின்றது? ஒரு உறவினர் மணமகளை முதலிரவுக்கு அனுப்பும் முன்பே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறேன் பேர்வழி என்று, அந்த பெண் மறுநாள் தன்னிடமே அவள் அவளுடைய அந்தரங்கத்தை விற்பனை செய்யவேண்டி, 'அறிவுரை' என்ற முதலீட்டை இடுகின்றாள். மறுதினம் "சந்தோஷமா இருந்தியா?" என்ற கொக்கியில் மாட்டி அந்த பெண் தன் அந்தரங்கத்தை இலவசமாக வாரி இறைக்கிறாள்.
மணமகனோ வேறு வழியில். அவனுடைய ஆண்மைதனம் பற்றிய அகங்காரம் அவனுடைய நண்பர்களிடம் பீற்றிக்கொள்ள வைக்கின்றது. இலவச கிலுகிலுப்புகள் கிடைக்கப்பெற்றவர்கள் இன்னும் இன்னும் கொக்கிகளை போட அந்த உளருவாயனோ தனக்கே தெரியாமல் தன் அந்தரங்க விற்பனையை அமோகமாய் நடத்துகிறான்.
அந்த இருவருக்குமே சொல்வதுயாதெனில் நீங்கள் விற்பனை செய்வது உங்களுக்கு மட்டுமேயானது அல்ல. உங்களை தவிர மறைமுகமாக வேறு சிலரின் மானம் சம்பந்தப்பட்டதும் உள்ளடங்கியிருக்கிறது என்பதை உணருங்கள்.
விலைமாதுவிடம் சென்று வந்தவன் கூட அவன் லீலைகளை, அகங்கார ஆண்மைதனத்தை அடுத்தவனிடம் சிலாகித்துக்கொள்ள எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் அவள் அவனிடம் மட்டுமே தன் மானத்தை விற்க ஊதியம் பெற்றாலொழிய இவன் வெளியே வந்து மற்றவர்களிடம் அவள் மானத்தை(மிச்சமிருப்பதை)விற்க எந்த விற்பனை உரிமையும் தரவில்லை. அப்படியிருக்கும் போது புதுமண தம்பதிகளின் இந் நடத்தை, கலாச்சார சீர்கேடு என்ற புற்று நோயின் ஆரம்ப விழாவிற்கான அழைப்பிதழே.
கிலுகிலுப்பு கிடைக்கப்பெற்றவர்கள் எப்படி வலை விரித்தாலும் உங்களுக்கு எங்கே போகிறது புத்தி?
இந்த வாய் வழி விற்பனையே வளர்ந்து ஊடகத்துறை என்றெல்லாம் கடந்து இதோ இந்த பதிவின் ஆரம்பத்தில் கண்ட கடலூர் மாவட்ட நிகழ்வெல்லாம் நடைபெறுகின்றன.
உணருங்கள் - அந்தரங்கம் புனிதமானது
அதாவது தன் முதலிரவில் தான் தனது கணவரின் நண்பர் மூலமாக வீடியோ எடுக்கப்பட்டதாக. பின்னர் அந்த வீடியோ கேசட் வெளிநாட்டு விற்பனைக்காக விமான நிலையம் வரை போய் விட்டதாகவும் அந்த மணப்பெண் தெரிவித்தார். இதை கேள்விப்படும் எந்த தந்தையும் இந்த தந்தை எடுத்த முடிவுதான் எடுப்பார் என்பது உண்மைதான்.
இதில் எந்த அளவு உண்மை என்பது விசாரனையில் இருக்கட்டும். உண்மையாய் இருக்குமேயானால் என்பது பற்றியே இப் பதிவு.
அந்தரங்கம் விற்பனை எங்கு ஆரம்பமாகின்றது? ஒரு உறவினர் மணமகளை முதலிரவுக்கு அனுப்பும் முன்பே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறேன் பேர்வழி என்று, அந்த பெண் மறுநாள் தன்னிடமே அவள் அவளுடைய அந்தரங்கத்தை விற்பனை செய்யவேண்டி, 'அறிவுரை' என்ற முதலீட்டை இடுகின்றாள். மறுதினம் "சந்தோஷமா இருந்தியா?" என்ற கொக்கியில் மாட்டி அந்த பெண் தன் அந்தரங்கத்தை இலவசமாக வாரி இறைக்கிறாள்.
மணமகனோ வேறு வழியில். அவனுடைய ஆண்மைதனம் பற்றிய அகங்காரம் அவனுடைய நண்பர்களிடம் பீற்றிக்கொள்ள வைக்கின்றது. இலவச கிலுகிலுப்புகள் கிடைக்கப்பெற்றவர்கள் இன்னும் இன்னும் கொக்கிகளை போட அந்த உளருவாயனோ தனக்கே தெரியாமல் தன் அந்தரங்க விற்பனையை அமோகமாய் நடத்துகிறான்.
அந்த இருவருக்குமே சொல்வதுயாதெனில் நீங்கள் விற்பனை செய்வது உங்களுக்கு மட்டுமேயானது அல்ல. உங்களை தவிர மறைமுகமாக வேறு சிலரின் மானம் சம்பந்தப்பட்டதும் உள்ளடங்கியிருக்கிறது என்பதை உணருங்கள்.
விலைமாதுவிடம் சென்று வந்தவன் கூட அவன் லீலைகளை, அகங்கார ஆண்மைதனத்தை அடுத்தவனிடம் சிலாகித்துக்கொள்ள எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் அவள் அவனிடம் மட்டுமே தன் மானத்தை விற்க ஊதியம் பெற்றாலொழிய இவன் வெளியே வந்து மற்றவர்களிடம் அவள் மானத்தை(மிச்சமிருப்பதை)விற்க எந்த விற்பனை உரிமையும் தரவில்லை. அப்படியிருக்கும் போது புதுமண தம்பதிகளின் இந் நடத்தை, கலாச்சார சீர்கேடு என்ற புற்று நோயின் ஆரம்ப விழாவிற்கான அழைப்பிதழே.
கிலுகிலுப்பு கிடைக்கப்பெற்றவர்கள் எப்படி வலை விரித்தாலும் உங்களுக்கு எங்கே போகிறது புத்தி?
இந்த வாய் வழி விற்பனையே வளர்ந்து ஊடகத்துறை என்றெல்லாம் கடந்து இதோ இந்த பதிவின் ஆரம்பத்தில் கண்ட கடலூர் மாவட்ட நிகழ்வெல்லாம் நடைபெறுகின்றன.
உணருங்கள் - அந்தரங்கம் புனிதமானது
Subscribe to:
Posts (Atom)
