பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label ஜெயா. Show all posts
Showing posts with label ஜெயா. Show all posts

October 17, 2014

அம்மா - தீபாவளி ரிலீஸ்!


இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அளித்தது சட்டப்படியாகன்னு  ஒரேயடியாகன்னு சொல்ல முடியாவிட்டாலும் சட்டத்துக்கு உட்பட்டு மனிதாபிமானத்துடன் கூடிய ஒரு விவேகமான தீர்ப்பு. இதில் அதிமுகவினர் கொண்டாட எதுவுமில்லை. இன்று நீதியரசர் தத்து அவர்கள் அங்கே கேட்ட கேள்விகள் அதிமுகவினர் நாக்கை பிடிங்கி கொள்ளும் அளவுக்கானது.



இன்னும் சொல்லப்போனால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் யாருமே வாதிடவில்லை. ஒப்புக்கு சப்பானியாக ரெட்டை நாக்கு பவானிசிங் கூட கலந்து கொள்ளவில்லை. சட்டப்படி தேவையும் இல்லை என்றே நினைக்கிறேன். 10 வருடத்துக்கு மேல் தண்டனை எனில் உச்சநீதிமன்றத்திலும் அரசு தரப்பு வக்கீல் தேவை. அரசு தரப்பு வழக்கறிஞர் தான் சொல்ல வேண்டியதை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே சொல்லிவிட்டாரே! தேவைப்பட்டால் அட்டர்னி ஜெனரல் ஆலோசனையை கேட்டு விட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் உண்டு/ இல்லை என்று சொல்லி விடலாம். ஆனால் தண்டனை நிறுத்தி வைக்கும் அவசியம் ஏன் வந்தது என ஒரு கேள்வி எழலாம்.



ரொம்ப சிம்பிள்... நான் இதற்கு முன்பு எழுதிய பதிவில் சொன்னது போல விசாரணை குற்றவாளிக்கு தான் ஜாமீன் கொடுக்க முடியும். இவரோ குற்றவாளி என தீர்ப்பு சொல்லப்பட்டு நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் என முழுமை பெற்ற குற்றவாளி. ஆக குற்றவாளிக்கு பரோல் தான் கொடுக்க முடியும். ஆனால் இவர்கள் அப்பீல் செய்து விட்டிருந்தால் அதாவது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தால் அதன் பின்னர் ஜாமீன் கேட்டிருந்தால் ஜாமீன் கொடுக்கலாம். ஆனால் மேல் முறையீடு செய்வோம் என ஃபாலி நாரிமன் உறுதிமொழி அளித்ததால் "தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்து" கவனிக்கவும் ரத்து செய்து அல்ல... நிறுத்தி வைத்து "ஜாமீன்" வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். ஆனால் தீர்ப்பில் கை வைக்கவில்லை. அதாவது "ஜெயலலிதா குற்றவாளி" என்கிற தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கைவைக்கவில்லை. இதுவே அதிமுகவுக்கும் ஜெயாவுக்கும் மிகப்பெரிய அடி.



வாதிட ஆரம்பிக்கும் முன்பே ஃபாலிநாரிமன் அவர்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் திரு.ராம்ஜெத்மலானி போல நீதிபதி குன்ஹா தீர்ப்பை விமர்சிக்கவில்லை. முன்னுதாரணங்களை அடுக்கவில்லை. தனக்கு என்ன தேவையோ அதை மட்டும் கேட்டார். அதற்கான காரணம் சொன்னார். அதாவது..."நான் நீதியில் குறுக்கிடவில்லை. அதை எல்லாம் மேல் முறையீட்டில் வாதமாக வைத்து கொள்வோம். ஆனால் 17 விதமான நோய்கள் என் கட்சிகாரருக்கு இருக்கின்றது. உடல் எடை 4 கிலோ குறைந்து விட்டது. உயர்சிகிச்சை அவசரமாக தேவைப்படுகின்றது..." என்றே ஆரம்பித்து வாதத்தை வைத்தார். ஒரு கட்டத்தில் "லட்சக்கணக்கான தொண்டர்கள்..." என சொல்ல ஆரம்பிக்கும் போது நீதிபதிகள் "எங்களுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் பற்றி கவலை இல்லை. அதல்லாம் இங்கே தேவையும் இல்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு உங்கள் வாதத்தை வைக்கவும்" என நெற்றிப்பொட்டில் அடித்தால் போல சொல்லிவிட்டனர். அதே போல திரு.ஃபாலி நாரிமென் அவர்களும் அதன் பின்னர் அது பற்றி வாயை திறக்கவில்லை.



ஒரு கட்டத்தில் நீதிபதிகள் "நாங்கள் ஜாமீன் கொடுத்தால் நீங்கள் வழக்கை தாமதம் செய்வீர்கள், நாங்கள் ஜாமீன் கொடுத்தால் அப்படி செய்வீர்கள், நாங்கள் ஜாமீன் கொடுத்தால் இப்படி செய்வீர்கள்" என வரிசைக்கிரமமாக ஜெயா முந்தைய காலகட்டங்களில் செய்த மாய்மாலங்களை அடுக்கி கொண்டே வர வர திரு.ஃபாலிநாரிமென் அவர்கள் அந்த ஒவ்வொறு மாய்மாலங்களுக்கும் "இந்த முறை அப்படி செய்ய மாட்டோம் , இந்த முறை அப்படி நடக்காது" என்று வாய் மொழி உறுதி கொடுத்து கொண்டே வந்தார். இறுதியாக "நான் இதற்கான உத்தரவாதத்தினை எழுத்து பூர்வமாக வேண்டுமாகின் தருகின்றேன்" என சொல்ல நீதிபதிகள் "வேண்டாம். நீங்கள் ஒரு சீனியர் வக்கீல்.. வாய்மொழி உத்தரவாதமே போதுமானது. அதுவும் உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நேரிடையாகவே வாய்மொழி உத்தரவாதம் கொடுத்துள்ளீர்கள். போதுமானது" என சொல்லி "கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அத்தனை ஆவணங்களையும் ... அது எத்தனை பக்கம் வரும்... " என கேட்க அதற்கு ஃபாலி நாரிமன் அவர்கள் "அது  சுமார் 35,000 பக்கங்கள் வரும் கனம் கோர்ட்டார் அவர்களே" என சொல்லிவிட்டு "எனக்கு 3 வாரம் அவகாசம் தாருங்கள் அதற்குள் அந்த 35,000 பக்க ஆவணங்களை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சமர்பித்து மேல்முறையீடு செய்து விடுகின்றேன். அதே போல மேல் முறையீடு செய்த பின்னரும் கூட இத்தனை மாதத்தில் முடிக்க வேண்டும் என நீங்கள் உத்தரவிட்டாலும் அதையும் ஏற்கிறேன். ஆனால் இன்றைக்கு இடைக்கால ஜாமீனாவது வழங்குங்கள்" என கேட்க அதற்கு நீதிபதிகள் "முன்று வாரம் என்ன மூன்று வாரம் நாங்கள் நான்கு வாரம் தருகின்றோம். டிசம்பர் 18, 2014க்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அந்த 35,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை புத்தகமாக ஸ்பைரல் பெண்டிங் போட்டு சமர்பித்து மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 18ல் விசாரணைக்கு இங்கே வரும் போது அந்த தகவலை உறுதி செய்ய வேண்டும். மேல் முறையீடு செய்த பின்னர் அன்றிலிருந்து மூன்று மாதங்களில் வழக்கை முடிக்க தேவையான ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். இதற்கு ஒத்து கொண்டால் இடைக்கால ஜாமீன் வழங்குகின்றோம். டிசம்பர் 18,2014 குள்  மேல்முறையீடு செய்யாவிட்டால் இந்த இடைக்கால ஜாமீன் டிசம்பர் 18,2014 அன்று தானாகவே ரத்து ஆகி விடும். (மீண்டும் விசாரித்து ரத்து என்பது இல்லை. இன்றைய தீர்ப்பின் படியே ரத்து ஆகும்) அதே போல மேல் முறையீடு செய்தது முதல் 3 மாதத்தில் வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் உச்சநீதிமன்றமே நேரிடையாக மேல் முறையீட்டை முன்வந்து விசாரிக்கும்" என தீர்ப்பு கொடுத்து விட்டனர்.



 இன்னும் ஒரு படி மேலே போய் ஃபாலி நாரிமன் அவர்களிடம் இந்த தீர்ப்புக்கு பின்னர் நீதிபதிகளை வசைபாடுவது அல்லது பாராட்டுவது எல்லாம் கண்டிப்பாக கூடாது. குன்ஹா, சந்திரசேகரா ஆகியோர் கன்னடியன் என சொல்லி வசைபாடுவது எல்லாம் கண்டிப்பாக கூடாது. நானும் கூட கன்னடியன் தான். இப்போது ஜாமீன் கொடுக்கின்றேன். நானும் கூட கன்னடியன் தான். அதே போல சுப்ரமணியசாமி போன்றவர்களை தொல்லை செய்ய கூடாது. ஏற்கனவே நீதிபதிகளை அவமதித்ததுக்காக இந்த உச்சநீதிமன்றம் கடுமையாக வருத்தம் தெரிவித்தது என நீங்கள் நேரிடையாக ஜெயலலிதாவிடம் தெரிவிக்க வேண்டும் என்று கடுமையாக எச்சரித்தனர்.



இதிலே இன்னும் ஒரு விசேஷம் என்னவெனில் 100 கோடி ரூபாய் அபராதம் என்பதாலும், நான்கு வருடம் சிறை என்பதாலும் ஷ்யூரிட்டி எல்லாம் என்ன என்பதை கர்நாடக உயர்நீதிமன்றம் தான் இரு நபர் சால்வன்சி டாக்குமெண்ட் எல்லாம் கொடுத்து குறைந்த பட்சம் ஒரு வட்டாட்சியர் அளவிலான அதிகாரி கொடுத்த சால்வன்சி டாக்குமெண்ட் வேண்டும்... சொத்து ஜாமீன்) ... இதல்லாம் கர்நாடக உயர்நீதிமன்றம் செய்ய போகின்றதா அல்லது அது மீண்டும் திரு.  குன்ஹா அவர்களை கைகாட்டி விடப்போகின்றதா என இனிமேல் தான் தெரியும்.  இன்னும் என்ன என்ன கண்டிஷன்கள் என இன்னும் படித்து முடிக்கவில்லை. அவர்கள் தங்கி இருக்கும் வீட்டில் தற்போதைய முதல்வர் போய் தினமும் ஆலோசனை செய்யலாமா என்றெல்லாம் கண்டிஷன்களை இனி படித்தால் மட்டுமே புரியும். கிட்ட தட்ட வீட்டுச்சிறை என்பது போலத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் கண்டிப்பாக கொடநாடு பங்களாவுக்கோ, வழக்கில் இருக்கும் பையனூர், சிறுதாவூருக்கோ போக முடியாது. ரேஷன் கார்டு இருக்கும் வேதா நிலையம் தான் கதி என்றும் நினைக்கிறேன். இனிமேல் முழுவதும் படித்தால் தான் தெரியவரும். ஆனால் நாளை சனிக்கிழமையும் பரப்பன அக்கிரஹார நீதிமன்றம் உண்டு என நினைக்கிறேன். என்ன நடக்க போகின்றது என பார்ப்போம்.



மீண்டும் சொல்கிறேன். திமுகவுக்கு ஜெயா போல காழ்ப்புணர்வு என்பதெல்லாம் எப்போதும் கிடையாது. நள்ளிரவில் கைது செய்வது, ஒரு கட்சி தலைவரை கைது செய்து வெயில் வாட்டி எடுக்கும் திருச்சி சிறையில் அடைத்து ஜாமீனில் வெளியே வரும் போது மீண்டும் கைது செய்வது, நீதிமன்றம் நீதிமன்றமாக போலீஸ் கூண்டு வண்டியில் வைத்து அலைக்கழிப்பது என எதுவும் காழ்ப்புணர்வு என்பது எப்போதும் கிடையாது. மேலும் முக்கியமான பண்டிகை காலத்தில் ஜெயேந்திரர் என்னும் ஒரு மதத்தலைவரை சிறையில் வைத்து பழி வாங்கியது போல இப்போதும் தங்களை மூச்சுக்கு மூச்சு தீயசக்தி மண்ணாங்கட்டி தெருப்புழுதி என தூற்றும் அவர்களை சிறையில் வைத்து பார்க்க வேண்டும் என நினைக்கும் வக்கிர புத்தி திமுகவுக்கு கிஞ்சித்தும் இல்லை. சட்டத்தை ஏமாற்றி சொத்து குவித்த ஜெயா மீது வழக்கு தொடரவும் அந்த வழக்கு நியாயமாக நடக்கவும் திமுக தன் ஜனநாயக கடமையை செய்தது. அவ்வளவே. தீர்ப்பு வந்த போது அதை கொண்டாடவும் இல்லை. நமட்டு சிரிப்பு சிரிக்கவும் இல்லை. அதே போல தீர்ப்பு வந்த பின்னர் மற்ற கட்சிகள் பவானிசிங் வேண்டாம், ஜாமீன் கொடுக்காதே என்றெல்லாம் ஆர்ப்பரித்த போது கூட அமைதிகாத்தது. சொல்லுவாங்களே ஒரு பழமொழி... "புள்ளய பெத்தவ பொத்திகிட்டு படுத்து கிடக்கா, பார்க்க வந்த பங்காளி செறுக்கி பொங்க வச்சுகிட்டு இருக்கா" என்பது போலத்தான் திமுக அமைதியாக இருந்தது. பாமக, தேமுதிக ஆகியவை பொங்கி தீர்த்தன.



இனி அதன் ஜனநாயக கடமையை மேல் முறையீட்டில் சட்டப்படி, ஜனநாயகக்கடமையை செய்யும். அது வரை மக்கள் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகைகளை நிம்மதியாக கொண்டாட வேண்டி இந்த தீர்ப்பையும் அமைதியான முறையில் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளும் என்றே நினைக்கிறேன்! ஒரு காலத்தில் ஜெயலலிதா நடித்த படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் ஏங்கிய காலத்தில் இருந்து இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவார்களா என தொண்டர்கள் ஏங்கும் நிலை  என்பது ஒரு அபரிமிதமான பரிணாம வளர்ச்சி. வாழ்க தமிழ்நாடு! மார்ச் 18,2015க்குள் நீதி கண்டிப்பாக நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன்.

February 19, 2014

மூவர் உள்ளிட்ட எழுவர் விடுதலையும் ஜெயா ஆடப்போகும் நாடகமும்!

இங்கே தமிழ் நாட்டில் இரண்டு கட்சிகள் தான் உள்ளன. ஒன்னு திமுக. அடுத்து அதிமுக. திமுகவுக்கும் அதிமுக மீது எவ்வித காழ்ப்புணர்வும் இல்லை. ஆனால் அதிமுக தலைவிக்கும் எங்கள் திமுகவுக்கும் ஏதோ தனிப்பட்ட காழ்”புணர்வு” இருப்பதாகவே நினைக்கிறேன்!

முருகன், சாந்தன், பேறறிவாளன் ஆகியோர் தூக்கு ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அது போல ரத்து செய்யப்படின் உடனே விடுதலை செய்யபட வேண்டும் எனவும் 25 லட்சம் பேர் ஒப்புதலுடன் ஒரு தீர்மானம் போட்டது திமுக.

இது போல அதிமுக எதாவது செய்ததா எனில் இல்லை என்பதே பதில். அது போல “போர் எனில் பொது மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்ற பொன் மொழியை உதிர்த்தவர் இன்றைய முதல்வர்.

அப்போது தலைவர் கலைஞர் பதில் சொன்னார்.... “காலம் பதில் சொல்லும் இவர்களுக்கு”

என்ன அஒரு தீர்க்கதரிசி அவர். இது தேர்தல் காலம். இன்றைக்கு சாமான், நெடுமரம், சைக்கோ போன்றவார்கள் ஜெயா முள்ளி வாய்க்கால் முற்றம் இடிப்பினும் கூட அந்த ஜே சி பி இயந்திரத்தை கைது செய்ய வேண்டும் என்று “முழக்கமிடும்” அளவு காயடிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில்... தேர்தல் “காலம்” என இப்போது வந்து விட்ட இந்த “காலத்தில்”... அங்கே உச்ச நீதிமனறத்தில் ஒரு சிறப்பான தீர்ப்பு வழங்கப்படுகின்றது.

காலம் தாழ்ந்து விட்டது கிட்ட தட்ட 24 ஆண்டுகள் தினம் தினம் ஒருவர் தூக்கு கயிறு வாசனையில் இருக்கும் போது காலம் தாழ்த்தியமை என்பது பெரும் கொடுமை! ஒன்று .... என்று தீர்ப்பு சொல்லப்பட்டதோ அன்று அதை ஜனாதிபதி ஆம், இல்லை என சொல்லி நிறை வேற்றி இருக்க வேண்டும். இல்லாவிடில் ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் காலம் தாழ்த்தி உச்ச நீதி மன்ற தீர்ப்பையே கேலிக்குரியதாக செய்து விட்டனர். அதாவது தீர்ப்பில் “ஒரு இருபத்தி நான்கு ஆண்டுகள் சிறை... பின்னர் தூக்கு” என நீதி வழங்கி இருப்பின் அதில் ஒரு கந்தாயம் இருக்கும். ஆனால் இது போல ஜனாதிபதிகள் காலம் தாழ்த்தியது அவர்களுக்கு கொடுத்த தண்டனையை மேலும் நீட்டிப்பதாகவே பொருள் கொள்ளப்படுகின்றது. எனவே இந்த உச்ச நீதி மன்றம் அவர்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்கின்றது. அது போல் அவர்களுக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகின்றது. அது போல இவர்கள் 24 ஆண்டுகாலம் சிறையில் இருந்து விட்ட படியால் இவர்களை விடுதலை செய்வது என்பது மாநில அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது. அவர்கள் விரும்பின் விடுதலை “கூட” செய்யாலாம். இதில் உச்ச நீதி மன்றம் தலையிட முடியாது!” என சொல்லிவிட்டது!

சபாஷ்! சபாஷ்! சபாஷ்! இங்கே தான் கலைஞர் உள்ளே புகுந்தார். (இதற்கு முன் 48 மணி நேரம் முன்பே தனக்கு முன்னர் ஒரு 25 லட்சம் பேர் இருக்கும் தைரியத்தில் சொல்லிவிட்டார். தூக்கு தண்டனை என்பதே கூடாது. அதிலும் இந்த மூவர் தண்டனை ஏற்புடையது அல்ல என சொல்லி விட்டார். அது போலவே அப்பாடி ரத்து செய்யப்படும் பட்சத்தில் தமிழக அரசு “விடுதலை” செய்ய வேண்டும் என அழுத்தம திருத்தமாக சொல்லி விட்டார்.

இப்போது நான் இங்க கட் பண்ணி அங்க போகிறேன்! ஏதோ இவர்களை “விடுதலை” செய்தது என்பது தமிழினம் மீது இருக்கும் பற்று காரணமாகவா? அல்லது செத்துப்போன “ஈழத்தாய்” பட்டம் ரினிவலுக்காகவா? அல்லது இன்று வாய் மூடி கிடக்கும் சாமான், நெடுமரம், சைக்கோ கும்பல் உன்னை புழக வேண்டும் என்பதற்காகவா???? இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை

இதே ஒரு வாரம் முன்பாக தன் 90 வயது தகப்பன் சாகும் நிலையில் கூட இருக்க வேண்டும் என பரோல் கேட்ட இதே நளினிக்கு இதே தமிழக அரசு நீதிமன்றத்தில் “இவரை வெளியே விட்டால் (அதாவது பரேலில் விட்டால் கூட) தமிழக சட்டம் ஒழுங்கு பாதித்து விடும்” என காரசாரமாக வாதிட்டது. ஆனால் இன்று நீதியரசர் சதாசிவம் கொடுத்த குட்டு தலையில் வலி உண்டாக்கியதா அல்லது ஓட்டுக்காக விடுதலையே செய்தாரா என நடுனிலையாளர்கள் மற்றும் சாமான், நெடுமரம் , சைக்கோ போன்ற ஈழ வியாபாரிகள் நினைத்து பார்க்க வேண்டும். ஆக ஒரு வாரம் முன்பாக நளினியை விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் எனில் இந்த ஒரு வாரத்தில் எல்லாம் சரி செய்யப்பட்டு தமிழகம் சட்டம் ஒழுங்கில் சீராகிவிட்டதா எனில் இல்லை.... இல்லை... இதே சென்னையில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கூட ஊரப்பாக்கத்தில் படுகொலை ... போன்ற சங்கதிகள் தினம் தோறும் நடந்து கொண்டு தான் உள்ளது!

எனவே! இது ஜெயாவின் தமிழர் பாசம் இல்லை.... இது சதாசிவம் அய்யா போட்ட கிடுக்கிப்பிடி தான்!
அன்று கலைஞர் சொன்னாரே “காலம் பதில் சொல்லும்” என்று... இது தான் அந்த காலம்! “தேர்தல் காலம்” உனக்கு ஓட்டு விழ எது வேண்டுமானாலும் செய்வாய்!

ஆனாலும் அதற்கும் “கலைஞர்” அவர்களே காரணம் என்பதை சாமான், நெடுமரம், சைக்கோ குரூப்ஸ் உணரட்டும்!

இந்த மூவர் மட்டும் இல்லை. நளினி உள்ளிட்ட அந்த ஏழு பேரின் விடுதலைக்கு கலைஞரே காரணம்!

அரசியல் சதுரங்கத்தில் உனக்கு செக் வைத்த ராஜா “கலைஞர்” மற்றும் தமிழின “யானை” சதாசிவம்” அய்யாவே காரணம்! இன்று நீ தோற்று போனது தான் உண்மை! தமிழர்கள் தான் வெற்றி பெற்றனர்! நீ தோற்று விட்டாய்! உன்னை இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்த அவர்களுக்கு என் நன்றிகள்!

October 19, 2013

கொஞ்சு தமிழில் விளையாடக்கூட மட்டுமல்ல ,வசைபாடவும் இன்னும் யார் பிறக்க போகின்றனர்?



கொஞ்சு தமிழில் விளையாடவும் மட்டுமல்லா ,வசைபாடவும்  இன்னும் யார் இங்கே பிறக்க  போகின்றனர்? இந்த நாவடக்கம் இல்லா நயவஞ்சக பேயை நாயை விமர்சிக்க அவள்  16.10.2013ல் எழுதிய கடிதமே போதும். அந்த நாய் இது சம்மந்தமாக வழக்கு தொடுப்பின் அவள் வாக்குமூலம் 16.10.2013 இருக்கின்றது! வழக்கை போட்டுப்பார்! அவமானம் சந்தித்துப்பார்!



*****************************************

நாடாளும் பெண்ணே, நாவடக்கம் தேவை!

(குறிப்பு :- இந்த அறிக்கை சற்றுக் கடுமையாக எழுதப்பட்டது என்று
யாராவது நினைத்தால், முதலமைச்சர் பொறுப்பிலே இருக்கும் ஜெயலலிதா
16-10-2013 அன்று விடுத்துள்ள அறிக்கையை முழுவதுமாகப் படித்துப்
பார்க்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது என்ற செய்தி வந்தாலும் வந்தது; நடுத்தெரு நாராயணியாம் ஜெயலலிதாவுக்கு """"நடுங்கா நாக்கழகி"" என்று
பட்டமும் பதக்கமும் கிடைக்க வேண்டுமென்ற நப்பாசையோடு யாரைப் பார்த்துக் குரைக்கலாம், எவரைத் தாக்கிக் கடித்துக் குதறலாம் என்ற வெறி பிடித்து விட்டது.


என்றைக்காவது ஒரு நாள், திடீரென்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொள்வார். அவரை பூமான், கோமான், சீமான் என்றெல்லாம்
புகழ்ந்து தள்ளி விட்டு, அதே நேரத்தில் என் மீது பிறாண்டுவார்! அவருடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் அரசியல் நிகழ்ச்சிகள் அல்லது தேர்தல்கள்
போன்ற முக்கியமான நேரம் வரும் போதெல்லாம் முக்காடிட்டு, முழங்காலைக் கட்டிக் கொண்டு பெங்களூரு வழக்கு என்ன ஆகுமோ? எப்படியெல்லாம்
அதைத் திசை திருப்பலாம்; அந்த வழக்கில் வென்றிட என்ன தான் வழி, என்ன செய்யலாம் சதி; என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு திடீரென்று
வந்து விடும் ஞானோதயம்! அந்த ஞானோதயம் வந்து விட்டால், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி இந்த அம்மையார் செய்த பழைய அர்ச்சனைகள்
எல்லாம் அவருக்கு மறந்தே போய் விடும் அல்லது பறந்தே போய் விடும். அந்தக் காலத் திலிருந்து அவருடைய பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கலை
வாழ்விலும், பொது வாழ்விலும் உச்சத்துக்கு வர வேண்டுமென்ற நினைப்புடன் நச்சரவுக் கருத்துக்களை நாட்டில் பரப்புவதிலும் ஏட்டில் அறிக்கைகளாகத்
தருவதிலும் ஜெயலலிதாவைப் போன்ற ஒரு கொள்ளி வாய்ப் பைசாசத்தை வலை போட்டுத் தேடினாலும் எந்தக் கட்சியிலும் கண்டு பிடிக்க முடியாது.

பிரதமர் பதவிக்கு உங்கள் ஆதரவு நரேந்திர மோடிக்கு உண்டா என்று யாரோ கேட்ட போது அந்தப் பதவிக்கு தன் பெயரை அல்லவா முன் மொழிய வேண்டும் என்று தருக்கு மிகக் கொண்டு தாண்டிக் குதித்தவர் ஜெயலலிதா
என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவர் தான் இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தன்னுடைய கட்சியின் தொண்டர்களைத் தயார் படுத்துவதாக
எண்ணிக் கொண்டு அவர்களை உசுப்பி விட்டு வேலை வாங்குவது என்றால், அதற்கு முதல் பலியாக என்னைத் (கருணாநிதி) தாக்கி தொண்டர்களைத்
துhண்டி விட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு புறப்பட்டிருக்கிறார். அவருடைய அநாகரீக, அறிமுக அறிக்கையை தமிழ்நாட்டில் உள்ள தாசானுதாசர்களான ஏடுகள் சிலவும், எகிறிக் குதித்து வெளியிட்டு எக்காள
மகிழ்ச்சியில் திளைத் திருக்கின்றன. பாவம்! பரிதாபத்திற்குரிய தமிழ் மக்கள் !


"தினத்தந்தி"யின் புகழ் பெற்ற உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் மறைந்த போது; ஒரே பகுதியில், மூன்றாவது வீட்டிலே இருந்த ஜெயலலிதாவுக்கு சிவந்தி
வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரிக்கத் தோன்றவில்லை. ஓர் அமைச்சரைக் கூட அதற்காக அனுப்பவில்லை. ஆனால் இன்றைக்கு ராமச்சந்திர ஆதித்தன் மறைந்தவுடன் நான்கு அமைச்சர்கள், ஜெயலலிதாவால் துக்கம் கேட்க அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பொது மக்களே, புரிகிறதா?

தேர்தல் வருகிறது என்றாலே அம்மாவுக்கு திடீரென்று இது போன்ற ஞானோதயங்கள் எல்லாம் பிறக்கும். காயிதே மில்லத் நினைவிடத்தில் மலராடை
போர்த்த வேண்டும் என்ற எண்ணம் கூட தேர்தல் வரும்போது தான் அம்மாவுக்கு ஏற்படும். எஞ்சியுள்ள நாட்களில் காயிதேமில்லத் நினைவிடம் எங்கே
இருக்கிறது என்று கூடத் தெரியாது. அவ்வளவு ஏன்?

எம்.ஜி.ஆர். பற்றிய நினைவே கூட சிக்கலான வழக்கு, சிக்கலான தேர்தல் வந்தால் தான் அம்மையார் மூளையில் திடீரெனத் தோன்றும்!

அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக தீட்டிய திட்டங்களை, மத்திய அரசு நிறைவேற்றிட நினைத்தாலும் அதற்கு குறுக்கே நின்று அந்தத் திட்டத்தைக் குழி தோண்டிப் புதைப்பதிலே பலே கில்லாடியாக ஜெயலலிதா விளங்குகிறார்.

சேது சமுத்திரத் திட்டத்தை நுhறாண்டு காலக் கனவாகத் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து அதை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கும்போது அந்தத் திட்டத்திற்காக """"எழுச்சி நாள்"" கொண்டாடுங்கள் என்று எந்த அண்ணா அவர்கள் அறிவித்தாரோ, அந்தத் திட்டத்தையே மட்டம் தட்டி மறுப்புக் கூறி, உச்ச நீதி மன்றத்தில் அதற்குத் தடை கோரிய தாட்சாயணி தான் இந்த அம்மையார் என்பதை நாடு நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது.

சேதுத் திட்டம் என்பது வெறும் சில்லறைத் திட்டமல்ல; எதிர்காலத் தமிழகத்தை வாழ வைக்கக் கூடியதும், பல துறைமுகங்கள் உருவாகி, வாணிபத்தை நாடுகள் பலவற்றிலும் பெருக்கிடக் கூடியதுமான வளமார் திட்டம். வளமான பொருளாதாரத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் திட்டம்.
"நீரின் வந்த நிமிர் பரிப் புரவியுங்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
ஈழத்துணவும் காழகத் தாக்கமும்""

என வரும் பட்டினப்பாலை பாடலை மீண்டும் நினைவுபடுத்தி; மாண்ட நம் புகழை யெல்லாம், மறு மலர்ச்சிக்கு உரியதாக்கும் திட்டம்; அந்தத் திட்டத்தைத் தான் நிறைவேற்ற வேண்டுமென்று அதற்காக """"எழுச்சி நாள்"" கொண்டாடுங்கள் என்று தி.மு.கழகத் தோழர்களை யெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டு ஆட்சி அமைந்தவுடன் உசுப்பி
விட்டார். அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து
கொண்டு நடைபெற்ற அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவினை அடுத்துப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றிருந்தால் இந்நேரம் எத்தனையோ துறைமுக
நகரங்கள் தமிழகத்தில் தோன்றியிருக்கும்.

அதையெல்லாம் கெடுத்தது யார்? எந்தச் சண்டாளர்கள்
கெடுத்தார்கள்?

இப்போதும் அந்தத் திட்டம் வந்து விடக் கூடாது என்பதற்காக உச்ச நீதி மன்றத்திலே வழக்கு தொடுத்திருப்பது யார்? அந்த வஞ்சகர்கள், வன்கணாளர்கள் அண்ணாவின் கனவையே நிறைவேற்ற முடியாது என்று நீதி மன்றத்திற்குச் சென்றிருப்பவர்கள் - அண்ணாவைப் பற்றிப் பேச
அணுவளவும் அருகதை இல்லாதவர்கள் என்பதை நாட்டிலே உள்ள நல்லறி வாளர்கள் - நாடு வாழ வேண்டும் வளமாக வாழ வேண்டும், வலிமையான
பொருளாதாரமும், வளமான வாணிபத் துறையும் பெற்று வையகத்தில் பெரும் புகழ் நாட்டிட வேண்டும் என்று கனவு காணுகிற நம்மைக் கயவர்கள்
என்றும், துரோகிகள் என்றும், அண்ணாவின் கொள்கைகளுக்கு விரோதிகள்
என்றும் பேசித் திரிபவர்கள் அறிக்கை விட்டு அங்கலாய்ப்பவர் கள் யார் என்று
புரிகிறதா?

"அண்ணா நாமம் வாழ்க" என்று கூறிக் கொண்டே அவருக்கு பட்டை நாமம் சாற்றுகின்ற சண்டாளத்தனத்தை, தமிழகம் இனியும் பொறுத்துக்
கொண்டிருக்காது.

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து சர்வாதிகாரத்தைத் தர்பாரில் உட்கார வைத்திருப்பவர்களுக்கு அறவழியில், ஜனநாயகப்
பாதையில் தமிழ் நாட்டு மக்கள் வாக்குச் சீட்டையே பயன்படுத்திப் பாடம் புகட்டி இவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியே தீருவார்கள்.

அதற்குள்ளாக இவர்களுக்கு நெஞ்சிலே இருக்கிற கொழுப்பு வாய் வழியாக வெளிவருமானால் அந்தக் கொழுப்பே கொடிய விஷமாக மாறி
இவர்களுடைய திமிரை அடக்கிக் காட்டும்.

யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

இந்தக் குறளை அய்யன் வள்ளுவர்; இப்படிச் சில பிறவிகள் தமிழ்நாட்டில் தலையெடுப்பார்கள் என்று முன்பே அறிந்து தான் பாடி வைத்திருக்கிறார்
போலும்!

என்றைக்காவது ஒரு நாள், திடீரென்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொள்வார். அவரை பூமான், கோமான், சீமான் என்றெல்லாம்
புகழ்ந்து தள்ளி விட்டு, அதே நேரத்தில் என் மீது பிறாண்டுவார்! அவருடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் அரசியல் நிகழ்ச்சிகள் அல்லது தேர்தல்கள்
போன்ற முக்கியமான நேரம் வரும் போதெல்லாம் முக்காடிட்டு, முழங்காலைக் கட்டிக் கொண்டு பெங்களூரு வழக்கு என்ன ஆகுமோ? எப்படியெல்லாம்
அதைத் திசை திருப்பலாம்; அந்த வழக்கில் வென்றிட என்ன தான் வழி, என்ன செய்யலாம் சதி; என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு திடீரென்று
வந்து விடும் ஞானோதயம்! அந்த ஞானோதயம் வந்து விட்டால், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி இந்த அம்மையார் செய்த பழைய அர்ச்சனைகள்
எல்லாம் அவருக்கு மறந்தே போய் விடும் அல்லது பறந்தே போய் விடும். அந்தக் காலத் திலிருந்து அவருடைய பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கலை
வாழ்விலும், பொது வாழ்விலும் உச்சத்துக்கு வர வேண்டுமென்ற நினைப்புடன் நச்சரவுக் கருத்துக்களை நாட்டில் பரப்புவதிலும் ஏட்டில் அறிக்கைகளாகத்
தருவதிலும் ஜெயலலிதாவைப் போன்ற ஒரு கொள்ளி வாய்ப் பைசாசத்தை வலை போட்டுத் தேடினாலும் எந்தக் கட்சியிலும் கண்டு பிடிக்க முடியாது.

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து சர்வாதிகாரத்தைத் தர்பாரில் உட்கார வைத்திருப்பவர்களுக்கு அறவழியில், ஜனநாயகப்
பாதையில் தமிழ் நாட்டு மக்கள் வாக்குச் சீட்டையே பயன்படுத்திப் பாடம் புகட்டி இவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியே தீருவார்கள்.


அதற்குள்ளாக இவர்களுக்கு நெஞ்சிலே இருக்கிற கொழுப்பு வாய் வழியாக வெளிவருமானால் அந்தக் கொழுப்பே கொடிய விஷமாக மாறி
இவர்களுடைய திமிரை அடக்கிக் காட்டும்.


யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.


இந்தக் குறளை அய்யன் வள்ளுவர்; இப்படிச் சில பிறவிகள் தமிழ்நாட்டில் தலையெடுப்பார்கள் என்று முன்பே அறிந்து தான் பாடி வைத்திருக்கிறார்
*********************************

இப்போது புரிகின்றதா! இவர் "தீ" என தெரிகின்றதா?


May 29, 2013

இன்று "அம்மா" திறந்து வைக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் ஒரு சின்ன கதையும்!

அவ்வப்போது வந்து பணிகளை பார்வையிடும் மு.க.ஸ்டாலின்


பழைய தமிழ் படங்களில் ஒரு வசனம் வரும். "உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றிவிடுவேன்". எல்லா அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கும் இந்த வசனம் சனி கிரகம் மாதிரி ஒரு முறையாவது கடந்து போகும். அந்த தண்ணி இல்லா காடுதான் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். இத்தனைக்கும் காவிரி அதன் அருகே தான். இந்த அவப்பெயரை நீக்கத்தான் திமுக அரசு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்தது.


இந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய நகராட்சிப்பகுதிகள், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 17 பேரூராட்சி பகுதிகள், 18 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகள், ஆக மொத்தம் 6,755 குடும்பங்களை சேர்ந்த 30 லட்சம் மக்கள் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரை பெறலாம். அந்த திட்டம் கடந்து வந்த பாதையை பார்ப்போம்!



* 1997ல் பிப்ரவரி மாதம் திமுக ஆட்சியில் இதற்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டது. 576 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டமாக தொடங்கப்பட்டு  பின்னர் புளோரைடு வியாதிகளை தடுக்கும் அல்லது குறைக்கும் சுகாதார திட்டமும்  அத்துடன் இணைந்து இதற்கு ஜப்பானிய நாட்டு நிதி நிறுவனம் வழியே அந்த திட்ட மதிப்பீடு தொகை 576 கோடி இந்திய ரூபாய்களை பெற அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு திட்டம் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது மத்தியில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி. வாஜ்பாய் பிரதமர்.





*1998 மார்ச் - திட்டத்துக்கான கள ஆய்வுப்பணி திமுக அரசால் ஆரம்பிக்கப்பட்டது. காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டி அதற்கான தடையில்லா சான்றிதழ் கோரி  மத்திய பாஜக அரசுக்கு திட்ட நகல் அனுப்பி வைக்கப்பட்டது.


*இதற்கிடையே தமிழகத்தின் திமுக ஆட்சி, ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் அந்த 576 கோடி ரூபாய் கடனாக கொடுக்க ஒப்புதல் அளித்தனர்.


* 1998  மே மாதம் வாஜ்பாய் அரசு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதன் விளைவாக ஜப்பான் கடன் தர மறுத்து விட்டது.


*1998 செப்டம்பர் மாதம் பாஜகவின் மத்திய அரசு தனது மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் மூலமாக காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி கொடுத்து தடையில்லா சான்றிதழ் வழங்கியது.


*அதன் பின்னர் திமுக ஆட்சி காலத்தில் இரண்டாண்டுகள் வேறு எந்த வகையில் பணம் கிடைக்கும் என பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.  ஒன்னரை ஆண்டுகள் கழித்து நிலமை சீரானது. ஆனால் அதற்குள் 2001 தேர்தல் வந்ததது.


*2001 தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்து அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திமுக திட்டம் என்பதால் அது கைவிடப்பட்டது. அதிமுகவுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி,ஓசூர் மக்கள் நலனை விட திமுகவின் திட்டத்தை நாம் செயல் படுத்துவதா என்னும் ஈகோவே ஜெயாவுக்கு பெரிதாய் இருந்தது. அதனால் 2001 முதல் 2006 வரை ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஒரு இருண்ட காலம் எனலாம். திட்டத்துக்கு மூடுவிழா நடந்தது அதிமுக ஆட்சியால்.


*2006 மே மாதம் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது.இந்த திட்டத்தை செயல்படுத்தும் உள்ளாட்சித்துறை அமைச்சகத்துக்கு தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் ஆனார்கள்.


*11.8.2006ல் சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது காவிரி நீரைக்கொண்டு மீண்டும் ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி அவர்கள் அறிவித்தார். அதாவது 110 தலைவிதியின்படி  அல்ல. விவாதத்துக்கு பின்னர் எடுக்கப்பட்ட முடிவு அது.


*27.1.2007 அன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசும் போது கலைஞர் அவர்கள் "ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு (அப்போது காங்கிரஸ் அரசு) மிகுந்த முன்னுரிமை அதாவது தமிழ்ல சொல்லப்போனா ஃபர்ஷ்ட் ப்ரியாரிட்டி பேசிஸ் ல (இப்ப புரியுதா) இந்த திட்டத்துக்கு காசு கொடுக்கனும்னு ஜப்பான் காரன் கிட்டே சொல்லுச்சு. அப்புடியே ஜப்பான் காரன் காசு கொடுக்காட்டியும் தமிழக அரசு அண்டா  குண்டானை அடகு வச்சாவது வேற எப்படியாவது காசு புரட்டி இதை நாங்க செஞ்சுடுவோம்" என கலைஞர் அறிவித்தார்.


*23.3.2007 அன்று தமிழக பட்ஜெட்ல இதுக்கான வேலைக்கான ஆரம்ப கட்ட காசு ஒதுக்கியது திமுக அரசு. ஆரம்ப கட்ட வேலை எல்லாம் தொடங்கியது.


* 6.2.2008 அன்று தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு நிபுனர் குழுவோடு ஜப்பான் போனாரு. போகும் போதே காசு கேக்குறது கேக்குறோம் அப்படியே சென்னை மெட்ரோ வாட்டர் திட்டத்துக்கும் சேர்த்து கேட்போம் என கேட்டார். அங்க ஜப்பான் கூட்டுறவு வங்கியின் இயக்குனர் திரு. டிசியோகுசின்னு ஒருத்தரை பார்த்து 9,700 கோடி சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் அது போல அப்போதைய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மதிப்பான 1330 கோடி ரூபாய் திட்டத்துக்கும் சேர்த்தே காசு கொடுங்கன்னு தளபதி கேட்டாரு.


* ஜப்பான் நிபுனர் குழு தமிழகம் வந்து ஆய்வு செய்தது. காசு கொடுக்கலாமா, கொடுத்தா சரியா திரும்பி வருமா என 2007ம் ஆண்டு அதே பிப்ரவரி, மாசம் வந்து ஆய்வு செஞ்சுது. உடனே ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி மெட்ரோ ரயில் திட்டம் 9,700 கோடி மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 1,330 கோடி ரூபாய் இரண்டுக்கும் ஒப்புதல் கொடுத்து காசு கொடுத்தது. (படிப்படியாக வேலை முடிய முடிய காசு கொடுத்து கொண்டு வந்தது)
அதாவது திமுகவின் முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டதை 2001-2006ல ஜெயாவின் அதிமுக அரசு கைவிடாம தொடர்ந்து செயல் படுத்தி இருந்தா இதே திட்டம் 576 கோடி ரூபாய்ல முடிஞ்சு போயிருக்கும். மக்களுக்கும் அப்போதே தண்ணி கிடைச்சு இருக்கும். ஆனா அந்த 5 வருஷம் சும்மா கிடப்பிலே போட்டதால தமிழக மக்கள் பணம் 750 கோடி ரூபாய் எள்ளு. (ச்சீ தூ... ஜெயாவெல்லாம் ஒரு நல்ல அட்மினிஸ்ட்ரேட்டர்ன்னு சொல்லும் ஊடகங்கள் ஆரத்தி கரைச்சு வையுங்க, அம்மாவுக்கு ஆரத்தி கரைச்சு வையுங்கன்னு பாடுவதுக்கு பதிலா சாணிய கரைச்சு ஊத்துங்க, ஓயா மேல சாணிய கரைச்சு ஊத்துங்க"ன்னு பாடலாம்...ச்சீ தூ)


* 26.2.2008ல் தர்மபுரியில் நடந்த ஆரம்ப விழாவில் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் ஆரம்பம் ஆகியது.


* திட்ட செலவு விலைவாசி உயர்வினால் அதிகரித்தமையால் திருத்திய நிர்வாக ஒப்புதலின் படி திட்ட மதிப்பு தொகை 1928 கோடியே 80 லட்சம் ஆக உயர்ந்ததப்பட்டது.


*ஐந்து செக்டர்களாக வேலைகள் பிரிக்கப்பட்டது. முதல் செக்டர் வேலைகளுக்கு டெண்டர் விடப்பட்டது. மொத்தம் பத்து கம்பனிகள் அவங்கவங்க கம்பனி ஜாதகத்துடன் டெண்டர் அப்ளை செய்தனர். அப்படியே அதை மூட்டை கட்டி தமிழக அரசு ஜப்பன்ல கடன் கொடுக்கும் பேங்குக்கு அனுப்பியது. அவங்க ஜாதக பொருத்தம் எல்லாம் பார்த்து "இன்ன கம்பனிக்கு கொடுத்தா தான் ஒழுங்கா வேலை நடக்கும். அது ஒழுங்கா முடிஞ்சா தான் என் கடன் வசூலாகும்" என சொல்ல அதன் படி வேலை கொடுக்கப்பட்டது.


*அதே போல இரண்டாவது, மூன்றாவது ஐந்தாவது கட்ட வேலைகளுக்கும் டெண்டர் விடப்பட்டு  மேலே சொன்னது போல செய்யப்பட்டு வேலைகள் துரித கதியில் நடந்தன. உள்ளாட்சி துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாதம் ஒரு முறை கண்டிப்பாக போய் பார்த்து ஊக்குவித்துவிட்டு வந்தார்.



*ஜப்பான் பேங்கு சொன்னது போல அதாவது 2009 ஜூலையில் டெண்டர் எல்லாம் விடப்பட வேண்டும், 2009 டிசம்பரில் களப்பணிகள் ஆரம்பிக்க வேண்டும், 2012 டிசம்பரில் வேலை எல்லாம் முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர வேண்டும்.


* 2011 மே மாதத்தில் கிட்ட தட்ட 90 சத பணிகள் முடிந்து விட்டன. இன்னும் ஆறு மாத காலம் இதே நிலையில் வேலைகள் துரிதமாக நடந்தால் 2012 பிப்ரவரியில் திட்டம் அதாவது பத்து மாதம் முன்பாகவே முடிந்து இருக்கும்.


* ஆனால் தமிழக மக்களின் துரதிஷ்டம் காரணமாக 2011 மே மாதம் ஆட்சி மாறியது. திட்டம் சுனங்கிப்போனது. இன்னும் 10 சதம் வேலை மீதி இருக்கும் நிலையில்.... அதிமுக ஆட்சி இது திமுக திட்டம் என்கிற காரணத்தால் திட்டத்தின் மீது கவனம் செலுத்தவில்லை. தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களின் தண்ணீர் தேவையை விட அதிமுக அரசுக்கு ஈகோ பிரச்சனை தான் முன்னே நின்றது.




* பணம் கொடுத்த ஜப்பான்காரன் தன் பணம் மீண்டும் கிடைக்க வேண்டுமே என நினைத்து தானே தன் ஆட்களை கொண்டு வந்து தமிழக அரசு ஒத்துழைப்பு அத்தனை சிறப்பாக இல்லாவிடினும் வேலை செய்தனர்.இன்று முழுமை பெறாமலேயே நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இன்று 29.5.2013 அன்று மிக தாமதமாக மிக மிக மிக தாமதமாக தமிழக அரசால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது.


இது தான் ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கடந்த கால வரலாறு.


எனக்கு தெரிந்து ஒரு உண்மைக்கதை. ஒரு ஊர்ல ஒரு புருஷன், பொண்டாட்டி இருந்தாங்க. அவங்களுக்கு ஒரே பெண் குழந்தை. அம்மாக்காரி அத்தனை ஒரு நல்லவ இல்லை. பெண்ணுக்கு திருமண வயது வந்தது. அப்பாகாரர் அங்க இங்க கடனை வாங்கி திருமணம்  பண்ணி வைக்க போராடினார். கடன் வாங்க போன இடத்திலே பிர்ச்சனை. திருமணம் ஒத்திப்போனது. பின்னர் பிரச்சனை தீர்ந்த பின்னர் அப்பா மீண்டும் திருமண  ஏற்பாடுகள் செஞ்சாரு. ஒரு பைனன்சியர் அப்பாகாரரின் நாணயத்தை வந்து பார்த்து விட்டு மாப்பிள்ளையும் பெரிய இடம்.


கல்யாணம் முடிந்த பின்னர் மாப்பிள்ளை கூட தனது கடனை அடைத்து விடக்கூடிய அளவு பெரிய இடம் தான். எனவே பைனான்ஸ் செய்தால் பணம் கண்டிப்பா திரும்பிடும் என நினைத்து பைனான்ஸ் செய்தார். கல்யாண வேலை எல்லாம் ஜரூராக நடந்தது. நிச்சயம் கூட பெரிய விழாவாய் நடந்தது. பின்னர் எல்லா கல்யாண வேலையும் 90 சதம் முடிந்து தாலி கட்டும் நாளுக்கு முதல் நாள் அப்பா ஒரு வேலை கிடைத்து  வெளியூர் போய்விட்டார் வேறு வழி இல்லாமல். போனவர் எக்கு தப்பாய் ஒரு அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டுவிட ஐந்து வருடம் கழித்து தான் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டிய நிலை. கல்யாணம் கிடப்பில் போடப்பட்டது. தாலி கட்டும் நாள் "தேதி குறிப்பிடப்படமல்" ஒத்திப்போடப்பட்டது. பெண்ணின் அம்மா தான் கொஞ்சம் "அப்படி இப்படி"யாகிற்றே. பெண்ணின் கல்யாணம் பற்றி கவலைப்படவில்லை.தன் நல்ல புருஷன் பார்த்த மாப்பிள்ளைக்கு கட்டி வைப்பதா என ஈகோ காரணமாய் திருமணத்தை கண்டுக்காமல் விட பணம் கொடுத்த பைனான்சியர் தன் பணம் வர வேண்டுமே என்கிற நோக்கில் தானே திருமண வேலையை முன்னின்று நடத்த  ஒரு வழியாக மிக தாமதமாக திருமண  தேதி முடிவானது.


பெண்ணின் அம்மாவுக்கு வேறு வழி இல்லை. பத்திரிக்கை அடித்தாள். என்னவென்று. அப்பன் பெயரை போடாமல் ஏதோ தான் மட்டுமே பெத்த பெண் என்பது போலவும், தனே அந்த திருமணத்தை சிரமப்பட்டு பணம் புரட்டி ஏற்பாடு செய்தது போலவும் ஒரு பத்திரிக்கை. கல்யாணம் நல்லபடி முடிந்தது. ஆனாலும் அப்பன்காரன் சொன்னது போல முழு சீரும் செய்யாமல் ஏதோ அரைகுறையாக நடந்தது. பெண்ணை பெற்ற அப்பன் காரன் காதில் செய்தி விழுந்தது. ஏதோ இந்த மட்டிலும் செய்தாளே அந்த மகாபாவி என வாழ்த்தினார். எப்படியோ பெண்ணின் திருமணம் நடந்தால் சரி. மீதி சீர் வரிசை எல்லாம் தான் நாட்டுக்கு வந்த பின் முழுமையாக செய்வதாக பெண்ணிடம் சேதி அனுப்பினார்.


கல்யாணத்துக்கு வந்தவர்கள், அந்த தெருவில் இருந்தவர்கள் எல்லோருக்கும் அந்த பெண்ணின் அப்பனைப்பற்றியும் தெரியும். ஆத்தாளை பற்றியும் தெரியும். அம்மாகாரியை காறித்துப்பி விட்டு அந்த பெண்ணை வாழ்த்தி விட்டு போனார்கள். அந்த அம்மாகாரிக்கு என சில அல்லக்கைகள் இருக்குமே அதுகள் "அம்மா" வாழ்க என வாழ்த்துப்பா பாடுகின்றன. ஏற்கனவே நெம்மேலி கடல் நீரை சுவைநீராக ஆக்கி பெருமை கதையும் இப்படித்தான். வெட்கம் கெட்ட ஜென்மங்கள்!



இந்த மேற்கண்ட உண்மைக்கதைக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட வரலாறுக்கும் ஒரு வித்யாசமும் இல்லை.


இன்னும் ஒரு விஷயம்... 98 சதம் வேலை முடிந்த பின்னர் தலைமை செயலகம் திமுக அரசால் திறந்து வைக்கப்பட்ட போது "செட்டிங்ஸ்" போட்டு ஒரு திறப்பு விழாவா? என கூப்பாடு போட்ட நடுநிலை நாயகம் எல்லாம் இன்றைக்கு சினிமா நடிகைகள் கிசுகிசுக்கள் எழுதிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருக்கின்றன. நடக்கட்டும் நடக்கட்டும். எல்லாவற்றையும் நாட்டு மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர்!!

September 14, 2012

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களே! கொஞ்சம் இதை படித்து பாருங்கள்!



கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே என நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு என்னை வசை பாடி மகிழ்ந்தீர்களே, இதோ 19.9.2012 தேதியிட்டு இன்று வந்த "சோ" வை ஆசிரியராக கொண்ட "துக்ளக்" பத்திரிக்கையில் "இலங்கை பிரச்சனை" என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் சில பகுதிகளை பாருங்கள்.  "சோ" அவர்கள் "ஜெ" அவர்களின் ஆஸ்தான குருநாதர் ஆவார் என்பதும் உங்களுக்கு தெரியும்.

ஆனாலும் உங்களுக்கு வசைபாட வசதியாக "கலைஞர்"தான் கிடைப்பார். இதற்கு மேலும் நீங்கள் கலைஞரை மட்டுமே வசை பாடினால் இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் தான் உண்மை என்ற நிலைக்கு தமிழக "பொதுமக்கள்"  வர வேண்டி இருக்கும் என்பதை உணருங்கள். இதற்கு மேல் உங்கள் விருப்பம்.


இதோ அந்த "துக்ளக்" கட்டுரையின் சில ... மிகச்சில குறிப்புகள்.



**************************


1. விடுதலைப்புலிகளின் தூண்டுதலினால் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்திய அமைதிப்படையினர் மீது அபாண்டமான பழிகளை சுமர்த்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நின்று, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச தமிழ் மக்கள் அமைதி முயற்சியை முறியடித்தனர்.

2. இந்திராகாந்தியால் ஆயுத உதவியும் ராணுவ பயிற்சியும் பெற்ற புலிகள் இலங்கை தமிழர்களுக்கு நல்ல தீர்வை தடுத்தது மட்டும் இன்றி இந்திராவின் மகனை கொன்றனர்.

3. இந்திய உதவி இல்லாமல் வளந்தே இருக்க முடியாத ஒரு கூட்டம் இந்தியாவை அயல் நாட்டினராக அறிவித்து சிங்களர்களை சகோதரர்களாக கொண்டாடி இந்திய அமைதிப்படையை வெளியேற சொல்லியது. அந்த கூட்டம் இலங்கையில் இருந்த தமிழ் தலைவர்களை எல்லாம் கொன்றது. அப்பாவி தமிழர்களை எல்லாம் கொன்றது. இறுதியில் தானும் அழிந்தது. அழிந்த அந்த கூட்டத்துக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிகள் நடக்கின்றன.

4.பல வருடங்களாக நடந்து வந்த புலி- அரசு மோதல்கள் போது வெளியேறி அயல்நாடுகளில் குடியேறி விட்ட இலங்கை தமிழர்கள் பலர் இலங்கையில் தமிழர் பிரச்சனை தீர்வதை விரும்பவில்லை.

5.நம் நாட்டில் பங்களாதேஷ் விடுதலை பெற்ற பின் அங்கிருந்து இங்கு வந்த அகதிகள் திரும்பி செல்ல வேண்டும் என்று கோருவது போல சில நாடுகளில் குரல்கள் எழலாம். உங்கள் நாட்டில் நீங்கள் பட்ட அவதியின் காரணமாக இங்கு வந்தீர்கள். இப்போது உங்கள் நாட்டில் தான் அமைதி திரும்பி விட்டதே. ஆகையால் நீங்கள் திரும்பி செல்லுங்கள் என்று சில நாடுகளில் சில அமைப்புகள் கூற தொடங்கலாம்.

6.இதை விட முக்கியமாக இப்போது ஈழம் பெற வேண்டிய போர்.. அதற்கான ஆயுதம் செய்ய நிதி தேவை என்று இலங்கையில் தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதால் அவர்களுக்கு நிதி தேவை என்று, அல்லது இது மாதிரி வேறு காரணங்கள் கூறி அயல் நாடுகள் சிலவற்றில் இலங்கை தமிழ் முக்கியஸ்தர்கள் பண வேட்டை நடத்துகின்றனர். இது மிரட்டல் மூலமாகவும் நடக்கின்றது. பணத்துக்கு பணம். ஆதிக்கத்துக்கு ஆதிக்கம்.இது தொடர வேண்டும் எனில் இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாக யாரும் ஒப்புக்கொள்ள கூடாது. ஆகையினால் இலங்கையில் இன்றும் தமிழர்கள் வேட்டையாடப்படுகின்றார்கள் என்று அயல் நாட்டு அமைப்புகள் முன் காட்ட அயல்நாடுகளுக்கு சென்று ஆதிக்கம் புரிந்து வசதியாக வாழகின்ற இலங்கை தமிழர்கள் முயல்கிறார்கள்.

7. இந்த ஈழ பிசினஸ் தொடங்குவதற்காக அவர்கள் வசூல் செய்யும் நிதியில் ஒரு பங்கு இதற்கான பிரச்சாரத்துக்காக செலவிடப்படுகின்றது. அந்த நிதி எங்கெங்கோ செலவிடப்படுகின்றது. யார் யாருக்கோ பிரச்சார சம்பளம் தரப்படுகின்றது என்பது எல்லாம் இலங்கை அரசு ஆராய வேண்டிய விஷயங்கள். இப்படி நடக்கிற பிரச்சாரத்தின் காரணமாக இன்றும் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதை நாம் நம்பி விடக்கூடாது.

8. உலகத்திலேயே சப்மரைன் முதல் விமானம் வரை சேர்த்து வைத்து இருந்த, தன் மக்களையே கேடையமாக வைத்து இருந்த, சிறுவர்களை முன்னிருத்தி பலிகடா ஆக்கிய , தமிழ் தலைவர்களை கொன்று போட்ட ஒரு கொலைகார கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது இலங்கை அரசுக்கு.அதை எதிர்கொண்டு அந்த கும்பலை அரசு ஒடுக்கியது என்பது பாராட்டத்தக்க ஒரு சாதனையாகும். அந்த மாதிரி ஒரு வெறிச்செயலை இலங்கை அரசு எதிர்கொண்ட போது பல சிவிலியன்கள் உயிர் இழக்க நேரிட்டது மிகவும் வருத்தமான ஒரு விஷயம் தான் எனினும் சிவிலியன்களை கேடயமாக புலிகள் பயன் படுத்திய போது, ஆஸ்பத்திரிகளில் புலிகள் பதுங்கி தங்கள் தாக்குதலை நடத்திய போது ராணுவத்தின் எதிர் தாக்குதலில் சிவிலியன்கள் உயிரிழப்பு என்பது சகஜம் தானே! இதற்கு எல்லாம் புலிகள் தானே காரணம்!

9. தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அல்ல.. பல்லாயிரக்கணக்கான அளவு கன்னி வெடிகள் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை நீக்கி விட்டு தான் குடியேற்றம் நடத்த வேண்டும். இதனால் ஏற்படும் தாமதத்துக்கு இலங்கை அரசா பொறுப்பு???

10. ஐ நா சபையில் இலங்கைக்கு எதிராக வந்த ஒரு தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களித்தது ஒரு மாபெரும் தவறு. அந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்து இருந்தால் இரு நாடுகளின் உறவு வலுப்பெற அது உதவி இருக்கும்.


****************

இதன் பின்னரும் நீங்கள் கலைஞரை மட்டுமே வசை பாடுவேன், திமுகவினரை தான் குறி வைத்து தாக்குவேன் என்று கூறினால்... உங்கள் தலையெழுத்து யாராலும் மாற்ற இயலாத நிலை தான் என்பதை உணருங்கள்!



January 4, 2012

அடுத்தாத்து அம்புஜத்தை பார்தேளா?

தமிழகத்தில் "தானே" புயல் கடலூர் தலையெழுத்தை புரட்டி மாற்றி எழுதி 5 நாட்கள் ஆகின்றது. அங்கே மின்சாரம் இல்லை,குடிதண்ணீர் இல்லை, டி வி இல்லை, செய்திகள் இல்லை, செல்போன் இல்லை, தினசரி செய்திதாள் கிடையாது, அழும் குழந்தைக்கு பால் இல்லை என்பது மட்டுமல்ல , புயலால் செத்தவனுக்கு அடுத்த நாள் ஊத்தக்கூட பால் இல்லை, ரோட்டில் நடந்து போக இயலாது. மரங்கள் தற்கொலை செய்து கொண்டன. சுவற் உண்டு கூரை இல்லை, கூரை மட்டும் உண்டு சுவர் இல்லை என சமதர்மம் நிலவும் தெருக்கள். அரசாங்கம் என்பது எங்கே இருக்கு என யாருக்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.


வழக்கம் போல மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றது. எதிர்கட்சிகள் சத்தம் ஆளும் கட்சி அம்மையாரின் நித்திரையை எழுப்பவில்லை. முதல்வருக்கு அவர் தோழி போட்ட தடுப்புச்சுவற்றால் உளவுத்துறை தரும் தகவல் போவதில்லை. போயிருந்தா மட்டும் அம்மையார் மட்டைக்கு ரெண்டு கீத்தா பிளந்து போட்டிருப்பாங்க என சப்பைகட்டு கட்டின பத்திரிக்கைகள் ஒன்று சேர்ந்து ஒரு வழியாய் அந்த தோழிக்கு சமாதி கட்டி அனுப்பி விட்ட பின்னர் தான் தானே புயல் போட்டு தாக்கியது.


ஆச்சு ஐந்து நாள். தோழி இருந்த போதாவது இரண்டொரு நாட்களில் அம்மையார் "மூட்" அறிந்து காதில் போட்டிருப்பார்கள். ஆனால் இப்போது இருக்கும் ஆலோசகர்களுக்கு கடலூர் பற்றி எந்த கவலையும் இல்லை போலிருக்கு. எதும் சொல்லவில்லை.


நேற்று கலைஞர் விட்ட ஒரு அறிக்கை.... அம்மையாருக்கான சங்கு. ஆம் ஓங்கி ஒலித்தது அந்த சங்கு. அறிவாலயத்தில் இருந்து போயஸ் தோட்டம் வரை அந்த சத்தம் கேட்டது. அம்மையார் செவியை கிழித்தது. .. தலைவர் கலைஞர் விட்ட அந்த அறிக்கை " நானே கடலூருக்கு போகின்றேன், பாண்டி மக்களை பார்க்கிறேன், நாகை, திருவாரூர் மக்களை கண்டு வருகிறேன் " . அந்த அஸ்திரம் அம்மையாரின் காதை கிழித்தது. " சரி அப்படின்னா, நானும் வானத்தில் இருந்து குனிந்து பார்க்கிறேன்" என திருவாய் மலர ஏதோ கடலூருக்கு வெளிச்சம் வரும் வழி கொஞ்சம் தெரிந்தது. கடலூரை புயல் புரட்டிப்போட்டால் என்ன? எனக்கு எது பற்றியும் கவலை இல்லை என இருந்த அம்மையார், தலைவர் கலைஞர் "நான் போகிறேன்" என சொன்னதும் " அப்படின்னா நானும் போகிறேன்" என சொல்வது,என்னவோ அடுத்த வீட்டுக்காரி பட்டுப்புடவை வாங்கினால் தானும் வாங்க வேண்டும் என நினைப்பது போல இருக்கின்றது. இந்த அம்மையார் ஆட்சி நடத்துகின்றாரா அல்லது அடுக்களை பெண்ணா என சந்தேகம் வருகின்றது.இது தான் ஆலோசனை சொல்லும் "துக்ளக்" லட்சனம் போலிருக்கு. தூரத்தில் இருந்து விமர்சிக்க மட்டுமே சிலருக்கு கைகூடும். ஆனால் ஆட்சி நடத்த தேவையான ஆலோசனை சொல்ல அந்த துக்ளக்கிற்கு மண்டையில் சரக்கு பத்தாது என்பது தெளிந்து போனது. அடுத்தவன் குடியை கெடுக்க மட்டும் ஆலோசனை சொல்பவர்கள் மக்கள் நலனில் எங்கே கவனம் செலுத்த போகின்றனர்?


ஆக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழகம் அதன் நலம் என நினைப்பது கலைஞர் மட்டுமே. ஆனாலும் நம் தமிழ் இணையம் மட்டும் கலைஞரை வசை பாடுவதை நிறுத்தப்போவதில்லை. இந்த வார தமிழ்மண நட்சத்திரம் திரு. அமுதவன் எழுதியது போல கலைஞரை திட்டி தீர்த்து ஜெயாவை ஆட்சியில் உட்கார வைக்க பெரும் முயற்சி எடுத்த வலையுலகினர் இன்று கைபிசைந்து நிற்கின்றனர்.


எல்லாம் தமிழகத்தின் தலையெழுத்து!

August 7, 2011

புதிய தலைமை செயலகத்தின் இருட்டு ஜெயாவின் அகங்காரத்துக்கு போடப்பட்டுக் கொள்ளப்பட்ட ஆயிரம் வாட்ஸ் பல்பு!!!

(நன்றி: தி ஹிண்டு, எஸ். ஆர். ரகுநந்தன், தி ஹிண்டு 7.8.2011)



இன்றைய "தி ஹிண்டு" நாளிதழில் ஒரு அருமையான போட்டோ இட்டு ஒரு கட்டுரை வந்துள்ளது. அதன் லிங் போக இங்கே அமுக்கவும். அதாவது திமுக அரசால் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம், சென்னை மத்தியில் ஒரு முக்கியமான இடத்தில் எபடி இப்போது சீரழிந்து வருகின்றது என்பதற்கு சாட்சியாக அந்த கட்டுரை.

நேற்று நம் சக பதிவரான சக்தி செல்வி அவர்கள் கூட இது சம்மந்தமான ஒரு விஷயம் கூகிள் பஸ்ல் பகிர்ந்து கொண்டார்கள். அதன் சுட்டிக்கு செல்ல இங்கே அழுத்தவும். அந்த புதிய தலைமை செயலகத்தின் சிறப்புகள் பற்றி முன்பே ஒரு சக பதிவர் திரு. கீதப்பிரியன் எழுதிய ஒரு லிங் போக இங்கே அழுத்தவும்.

புதிதாக அமைந்த அதிமுக அரசு மாணவர்கள் மீது அதன் பெற்றோர்கள் மீது தன் ஈகோவை செலுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும்.பரவலாக எல்லா நடுநிலைவாதிகளாலும் இது இப்போது இந்த சமச்சீர் கல்வி விஷயத்தில் தெரிந்து விட்டது. ஆனால் அதே போலவே தான் மற்ற எல்லா விஷயங்களிலும் நடந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

ஒரு சாதாரண வீடு கூட ஒரு வாரம் பூட்டிவிட்டு வெளியூர் சென்றார்களேயானால் அங்கே வெளிச்சமோ, ஆள் நடமாட்டமோ இல்லையெனில் பெருச்சாளி புகுந்து நாசம் செய்யும். அதுவும் அந்த கட்டிடத்தின் உள்ளே இருக்கும் மீன் தொட்டி மீன்கள் எல்லாம் இன்னேரம் பூனை சாப்பிட்டிருக்கும். ரொம்ப மனசுக்கு கஷ்டமான ஒரு விஷயம். எது எதுக்கோ போராட்டம் நடத்தும் திமுக இதற்காக நடத்தாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. அந்த கட்டிடம் இருட்டாக இருட்டாக அந்தம்மாவின் அகங்காரம் வெளிச்சம் போடப்படுது மக்கள் மனதிலே, அதனால அப்படியே போகட்டும்னு விட்டுட்டாங்க போலிருக்கு:-( ஒரு பொதுவான நடுநிலைவாதிகளும், அதிமுக ஆட்சியை தாங்கிப்பிடிக்கும் மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும் கூட இந்த விஷயத்தில் இப்படி வேதனைப்படுவது என்றால் அந்த கட்டிடத்தின் நிலை என்ன இப்போது என நன்றாக உணர முடிகின்றது:-(

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ஒரு தலைமைச்செயலக கட்டிடத்தை தன் சொந்த ஈகோவால் இப்படி பாழ் செய்யும் அந்த கட்டிடத்தை "வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் " என ஆலோசனை கேட்டு "தி ஹிண்டு" அறிவிக்கும் அளவு நம் வரிப்பணம் என்பது நாதியற்றுப்போனதை நினைத்து வேறு வழியில்லை... அமைதியாக அழத்தான் முடியும்.... தலைமைச்செயலக மீன் தொட்டியில் இருக்கும் மீன்களைப்போல. தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்??

நேற்று திருவாரூர் பொதுகூட்டத்திலே துரைமுருகன் பேசிய பேச்சு:

\\ அந்த புதிய தலைமை செயலகம் கட்டும் போது ஒரு நாள் கலைஞர் எங்களிடம் "தினம் தினம் என் ரூமையே கொண்டு வந்து காட்டுகின்றீர்களே, அந்தம்மா ஜெயலலிதா - எதிர்கட்சி தலைவர் ரூமை கொண்டு போய் காட்டுங்கய்யான்னு சொல்ல அந்த சர்க்கர நாற்காலி அங்கே திருப்பப்பட்டது. அந்த ரூமுக்கு வெளியே "கோ க மணி அறைக்கு போகும் வழி" என ஒரு அம்புக்குறி போடப்பட்டு அந்த அம்பு இந்த அம்மையார் ரூமை சுட்டிகாட்டுவது போல அம்புபாய்வது போல இருந்தது, உடனே இவர் "முதலில் அந்த அம்புக்குறியை அகற்றிவிட்டு ஜெ.ஜெயலலிதா என்ற போர்டை மாட்டுங்கப்பா என உத்தரவிட்டுவிட்டு உள்ளே போய் பார்த்து விட்டு "இது போதாது, இன்ன்னும் ரெண்டு ரூம் போடுங்க, என் அறை முதல்வர் அறை எப்படி இருக்கோ அதே போலத்தான் அந்தம்மா அறையும் இருக்க வேண்டும்" என உத்தரவிட்டார்...\\ ஊடகங்கள் நேற்று திருவாரூரில் அதே கூட்டத்தில் கலைஞர் சொன்னது போல "கோந்து" போட்டு வாயை மூடிக்கொண்டு இருக்கின்றன. ஹூம்... வாழ்க ஜனநாயகம்!


புதிய தலைமை செயலகத்தின் இருட்டு ஜெயாவின் அகங்காரத்துக்கு போடப்பட்டுக் கொள்ளப்பட்ட ஆயிரம் வாட்ஸ் பல்பு!!!