பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 27, 2009

அதிஷாவின் KFC பதிவும் அபிஅப்பாவின் கெண்டக்கி அனுபவமும்!!!!


நேற்றைக்கு அதிஷா ஒரு பதிவு போட்டிருந்தார். உடனே நானும் ஆமை சுத்த ஆரம்பிச்சுட்டேன். நான் மட்டும் சுத்தினா போதுமா பத்து பேர் கிட்டயாவது அதை பொலம்பி தீர்க்கலைன்னா தூக்கம் வருமா? அதான் அதான் சிரிச்ச மூஞ்சி பதிவர்கள் இருக்காங்களே. அதான் எழுதிட்டேன்.நெட் கூட ஒரு வாரமா சொதப்பிடுச்சு வீட்டிலே.
MSc Wild Life Biology என்னும் படிப்பு இந்தியாவிலே ரெண்டு காலேஜ்ல தான் இருக்கு. ஒன்னு எங்க காலேஜ் அடுத்து பூனாவிலே ஒரு காலேஜ். அதனால அந்த கோர்ஸ்ல மட்டும் இந்தியா, வெளிநாட்டில் இருந்து எல்லாம் வந்து பீட்டர் விட்டுகிட்டு இருப்பாங்க. அப்படித்தான் விவேகானந்தன்னு ஒரு பீட்டர் பார்ட்டி. அவங்க அப்பா அம்மா எல்லாம் லண்டன்ல இருந்தாங்க. இவனும் அங்க படிச்சவன் தான். இங்க வந்து அந்த கோர்ஸ்ல சேர்ந்தான். அவனை பார்த்தாலே எங்களுக்கு வேப்பங்காய். பின்னே எங்க கிட்ட வந்து பீட்டர் விட்டா கடுப்பு வராதா. அதிலும் ராதாவுக்கு கோவம் கோவமா வரும். "இந்த இங்கிலீஷ் கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையிலே மாட்டினா செத்தாண்டா மொவன்"ன்னு கதறுவான்.

ஒரு நாள் எங்க கிட்ட வந்து "இந்த ஊர்ல KFC எங்க கிடைக்கும்"ன்னு கேட்டான்.அது என்ன வஸ்துன்னே தெரியாது எங்களுக்கு. உடனே கிரிக்கெட் வீரர்லாம் இப்ப விக்கெட் எடுத்தா வட்டமா தோள் மேல கைபோட்டுகிட்டு நிக்கிறாங்களே அது போல நின்னு கிட்டு அது என்ன கந்தாயம்ன்னு டிஸ்கஸ் செஞ்சோம். நான் சொன்னேன் "டேய் அது ஒரு வகை ஸ்வீட்டுடா". அதுக்கு கந்தசாமி "அட போடா அவன் லண்டன்ல படிச்சவன். அநேகமா அது எதுனா புத்தமமா இருக்கும்"ன்னு சொல்ல, அதுக்கு சங்கரோ " டேய் இது ஸ்போர்ட்ஸ் சம்மந்தப்பட்ட பேட் மாதிரிடா என சொல்ல நம்ம ராதா "போங்கடா லூசுங்கலா இவன் பாரின்காரன். எல்லா கெட்ட பழக்கமும் இருக்கும். அனேகமா அது எதுனா காண்டம் வகையறாவா இருக்கும்" அப்படின்னு சொல்ல எல்லோருக்கும் அது சரின்னு பட்டுது.வட்ட சங்கிலி மாநாட்டை பிரிச்சுட்டு ராதா தான் அவன் கிட்ட பேசினான்.

"நீ கேக்குற பிராண்ட் இருக்காது. வேற பிராண்டு தான் இருக்கும். எல்லா பெட்டிகடையிலும் இருக்கும். பெரியாஸ்பத்திரி போனா ப்ஃரீயாவே கிடைக்கும்"ன்னு சொன்னான். பீட்டர் பார்ட்டிக்கு புரிஞ்சு போச்சு நாங்க எல்லாம் வெத்துவேட்டு கேஸுன்னு. "மேன் அது புஃட் அயிட்டம்யா"னு சொல்லிட்டு எகத்தாளமா பார்த்தான். அதுக்கு ராதா "அப்படின்னா காளியாகுடில கேட்டு பாரு"ன்னு சொல்ல அவன் தலையில அடிச்சுகிட்டு போனான். அதன் பிறகு நாங்க KFC ன்னா என்னான்னு தெரிஞ்சுக்க ஏறாத மலை இல்லை, சுத்தாத அரசமரம் இல்லை. விடை கிடைத்தபாடில்லை. சரி ச்சீ சீ இந்த அயிட்டம் புளிக்கும்ன்னு அதை மறந்துட்டோம். இதல்லாம் நடந்தது 1986ல்.நிற்க.

பின்னே 1990ல் அபுதாபி வந்துவிட்டேன். என் ஆபீஸ்க்கு எதிரே KFC கடை நல்ல சிவந்தமண்னா இருந்துச்சு. என் கூட வேலை பார்த்த ஹாஜா கிட்ட கேட்டேன் அது என்ன கடைடான்னு. அது ஒரு ஹோட்டல்ன்னு சொன்னான். கடையின் ஜம்பத்தை பார்த்தா நிச்சயமா பில் 200 அல்லது 300 திர்காம் வரும் போல அதனால ஒரு சம்பளம் வாங்கி மொத்தமா எடுத்துகிட்டு போய் என்னன்னு பார்த்துடலாம்ன்னு ஒரு சபலம் எனக்கு. ஹாஜாவுக்கும் அதே.

சம்பள நாள் வந்தது. ஹாஜா என் கிட்ட "அந்த கடை பார்த்தாலே ரொம்ப டீசண்ட்டா இருக்கு. அதனால நாம நம்ம கெட்டப்பையே மாத்திகிட்டு போவோம்டா"ன்னு சொன்னான். உடனே புது ஷூ, புது பேண்ட், சட்டை, ஒரு தொப்பி ,10 திர்காம் ஸ்டிக்கர் ஒட்டின டியூப்ளிகேட் ரேபாண்ஸ் சன் கிளாஸ் எல்லாம் வாங்கிட்டோம். இந்த லெட்சனத்துல ஹாஜா ஆபரேஷன் செய்யும் டாக்டர் மாதிரி கையுறை, நம்புங்க ஜட்டி பனியன் கூட புதுசு.
சம்பளத்துக்கு முதல் நாள் இரவு தூக்கமே வரலை. இரவு 11 மணிக்கு ஹாஜா சோகமா வந்தான் என் ரூம்க்கு. என்னடான்னு கேட்டதுக்கு "நம்ம அக்கவுண்டண்ட் ரொம்ப சிடு மூஞ்சிடா"ன்னு சொன்னான். ஏன்னு கேட்டதுக்கு "நாளை சம்பளம் கண்டிப்பா போடுவீங்கதானே சார்"ன்னு போன்ல இப்ப கேட்டதுக்கு கன்னா பின்னான்னு திட்டிட்டு போனை வச்சுட்டார்டான்னு சொன்னான். நான் அதுக்கு "நீ எத்தனை தடவை போன் செஞ்சே"ன்னு கேட்டேன். ஒரு தடவை தான்னு சொன்னான். ஹாஜாவுக்கு தெரியாது நான் அதுக்கு முன்னமே 4 தடவை போன் செஞ்சு இதே கேள்வியை கேட்டு 4 வது தடவை "அடுத்த தடவை எவனாவுது போன் செஞ்சா போலீசை கூப்பிடுவேன்"ன்னு திட்டியதும்.

ஒரு விழியா தூங்காத இரவா கழித்துவிட்டு காலை ஆபீஸ் போயாச்சு. காலை முதல் வேலையே ஓடலை. எப்போதும் 10 மணிக்கு சம்பள கவர் கொடுத்துதிடுவாங்க. அன்றைக்குன்னு பார்த்து மதியம் 1 மணிக்கு கூட பெட்டியை திறக்கலை அக்கவுண்டண்ட். போச்சு 1-2 லன்ச் KFC சாப்பிட முடியாம போச்சு. அதை நம்பி சாப்பாடு கூட எடுத்து வரலை. பசியோட கிடந்தோம். 5 மணிக்கு ஆபீஸ் முடியும். 4.45க்கு கொடுத்தாங்க. ஆபீஸ்லயே தலைசீவி , முகத்துக்கு கிரீம் தடவி, பவுடர் போட்டு மேக்கப் எல்லாம் முடிஞ்சு வெளியே இருட்டி விட்டது கிட்டதட்ட. பகீர்ன்னு ஆகி போச்சு. இருக்காதா பின்ன சன்கிளாஸ் போட முடியாதே. பரவாயில்லைன்னு போட்டுகிட்டு தான் போனோம்.

அந்த இருட்டிலே சன்கிளாஸ், கையுறை சகிதமா எங்களை பார்த்தவுடன் என்ன நினைச்சு இருப்பாங்க. ஏதோ பார்வையற்றவர்கள் போலன்னு பரிதாபப்பட்டு ஒடனே ஒடிவந்தான் ஒரு பிலிப்பைனோ சிவப்பு சட்டை, சிவப்பு தொப்பி சர்வர். ஆனா எங்களுக்கு எல்லாமே கருப்பா தான் தெரிஞ்சுது. அவன் பேசின இங்கிலீஷ் என்னன்னு புரியலை. ஹாஜா உடனே "ஒன் KFC" ன்னு சொல்ல அவன் அதுக்கு என்னவோ சொல்ல நாங்க ஓக்கே ஓக்கேன்னு சொல்லிட்டு சுத்தியும் பார்த்தா எல்லா பிலிப்பைனி கஸ்டமரும் டவுசர் பாண்டியாவும், கிழிச்சிவுட்ட ஜீன்சுமா இருக்கானுங்க.

கொடுத்த ஆர்டர் வந்தது வட்ட வட்ட பன்னும், முட்டைகோஸ்(தயிரில் ஊறவச்சது), தக்காளி சாஸ், பிஃங்கர் சிப்ஸ். "என்னடா ஹாஜா பன்னு கொண்டாந்து வைக்கிறான் சரி சரி கண்டுக்காம சாப்பிடு"ன்னு மதிய பசி வேற. ஆளுக்கு 12 பன், முட்டை கோஸ் சாப்பிட்டோம். ஹாஜா உடனே "டேய் எப்படியா இருந்தாலும் பில் தீட்ட போறான் அதனால இன்னும் கொஞ்சம் பன் சாப்பிடலாம்ன்னு சொல்லிட்டு சர்வரை கூப்பிட்டு இன்னும் பன் கேட்க அவன் ஒரு மாதிரியா பார்த்தான். எனக்கு அப்பவே என்னவோ நடக்குது மர்மமா இருக்குதுன்னு பயம் வந்துடுச்சு. அவன் மட்டுமா அப்படி பார்த்தான் அங்க சாப்பிட்டவன் எல்லாரும் அப்படி பார்த்தானுங்க.
நான் நடுவே எழுந்து கடை வாசலில் இருக்கும் காயின் பூத்ல காசு போட்டு இந்தியாவில் இருந்த ராதாவுக்கு போன் செஞ்சேன். அவன் அப்பா தாசில்தார் ஆச்சா அதனால வீட்டிலே போன் இருந்துச்சு. ராதா அம்மா தான் எடுத்தாங்க. "என்னடா அம்பி எதுனா சொல்லனுமா ராதாகிட்ட"ன்னு கேட்டாங்க. "ஒண்ணுமில்லைம்மா KFCன்னா பன்னு தான்னு சொல்லுங்க"ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க "என்னவோ போங்கடா கோட் வேர்டுல பேசிக்கறேள்ன்னு மாத்திரம் புரியர்து"ன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டாங்க.

அதுக்குள்ளா அடுத்த 12 பன் வந்து இருந்துச்சு. அதையும் வயிறு முட்ட சாப்பிட்டு அத்தனை பெரிய பெப்சியையும் புல்லா குடிச்சுட்டு எழுந்திருக்க முடியலை. சர்வரை கூப்பிட்டு "சர்வர் பில்"ன்னு கேட்டோம். சர்வர் ஒரு மாதிரியா பார்த்துட்டு ஒரு பக்கெட் முழுக்க லெக் பீஸ், செண்டர் பீஸ்ன்னு சொறிமுத்து அய்யனார் மாதிரி எங்களை பார்த்து கண் அடிக்குது எல்லா கோழியும். கூடவே 85 திர்காம் பில். நானும் ஹாஜாவும் பேசிக்கவே இல்லை. ரெண்டு பேர் முகத்திலும் ஈயாடலை. அதை சாப்பிடவும் ஒரு செண்டிமீட்டர் கூட இடம் இல்லை.. சரி அதை பார்சலா ரூம்க்கு எடுத்துட்டு போகலாமான்னு தெரியலை. வெட்கம் வேற. அங்க இருந்த மொத்த கூட்டத்தின் கண்களும் எங்க மேலத்தான். 100 ரூபாய் பில் கொடுத்துட்டு அவன் மீதி 15 கொடுத்த போது அவசரப்பட்டு ஹாஜா "டிப்ஸா வச்சிக்கோ"ன்னு சொல்ல எனக்கு அழுகையே வந்துடுச்சு.

சர்வர் அந்த நன்றிக்காக "சார் சாப்பிடலையா"ன்னு கேட்க நாங்க ஒரே குரலில் "we dont like this item'' ன்னு சொல்ல அந்த மொத்த கூட்டமும் தலையிலே அணுகுண்டு போட்ட மாதிரி எழுந்துட்டாங்க. கேஷ்ல உட்க்காந்து இருந்தவன் கீழே விழுந்துட்டான்.

வெளியே வந்தோம். "எதுனா பேசுடா ஹாஜா"ன்னு நான் தான் மௌனம் கலைத்தேன். அதுக்கு அவன் " 85 திர்காம் கொடுத்து பன்னு தின்னது பத்தி எந்த காலத்திலயும் யார்கிட்டயும் சொல்லிடாதே. அதுவும் ஜட்டி முதல் புதுசா போட்டதை கண்டிப்பா சொல்லிடாதே"ன்னு சொன்னான். நானும் இதுவரை யார் கிட்டயும் மூச்சு விடலை.

September 11, 2009

இன்னும் 24 மணி நேரத்தில் என்னை நாய் கடிக்க போவுது!!!!!


எங்க வீட்டிலே ஒரு பழக்கம். 5 வயது ஆன பின்னே தான் நான்வெஜ் கொடுப்பாங்க. எனக்கோ கோழி கறி சாப்பிட நாலு வயது முதலே ஆசை வந்து விட்டது. சரியா ஐந்து வயதாகும் போது பக்கத்து வீட்டு டாமி கடித்துவிட்டது. அதுக்கு யார் மேல கோவமோ என்னை கடிச்சிடுச்சு.
நாய் கடிச்சா தொப்பிலை சுத்தி 64 ஊசி போடனும் என வள்ளியம்மை அத்தை ஆரம்பிச்சு பேரம் எல்லாம் முடிந்து கடைசியா 30 ஊசிக்கு வந்தாங்க. அத்தனை ஊசிக்கு என் தொப்புல் ஒர்த் இல்லைன்னு சொன்னா கூட யாரும் கேட்கலை. என் பாட்டி நம்புத்தாய் அம்மாள் தான் டாக்டர் ஏஜண்ட் எங்க எல்லார் குடும்பத்துக்கும்.

என்னை தூக்கிகிட்டு ராமூர்த்தி டாக்டர் கிட்ட போய் "டாக்டர் ஒரு 32 ஊசி போடுங்க"ன்னு சொன்னாங்க. அப்ப டாக்டர் கௌரவ டாக்டரா மயிலாடுதுறை பெரிய ஆஸ்பத்திரியிலே வாரம் இரு முறை வருவார். அதுக்கு டாக்டர் "இவனுக்கு வயிறே தொப்புல் சைஸ் தான் இருக்கு 32 எல்லாம் அதிகம். தவிர இப்ப எல்லாம் 32 ஊசி கிடையாது 16 தான். இவனுக்கு 15 வயசுல நாய் கடிக்கும் போது அனேகமா 1 ஊசி தான் போட வேண்டி இருக்கும்"ன்னு சொன்னார். என்னா ஒரு தீர்க்க தரிசனம்.



ஆனா 6 மாசத்துக்கு கோழிகறி , முட்டை எதுவும் கொடுக்க கூடாதுன்னு சொல்லிட்டார். அதிலிருந்து எவ்வரி 6 மாதம் முடியும் போதும் எதுனா ஒரு நாய் என்னை கவ்வி கொண்டு ராமூர்த்தி டாக்டர் கூட மருத்துவ வளர்சி காரணமாய் தொப்பிள் விளையாட்டு எல்லாம் நிப்பாட்டி இடுப்பு ஊசிக்கு வந்துட்டார். ஆனாலும் இந்த நாய்கள் என்னை விடுவதா இல்லை. "கொஞ்சமாவது சதை இருந்தாதானே மனிதன் என நினைக்கும். ஒரு எலும்புகூடு கண்டா நாய் கடிக்க தான் செய்யும் என கந்தசாமியால் கிண்டலடிக்கப்பட்டேன்.



ஆச்சு எல்லா ஆறு மாதத்துக்கும் தவறாம ஏதோ ஒரு டைகரோ, பிங்குவோ கடித்து வைத்தது. கோழி கறியும் முட்டையும் நான் மறந்தே போனேன். ராதா ஒரு ஐடியா சொன்னான். "டேய் நீ நாய் வெறுப்பவன் என நாய் சங்கத்திலே முடிவு செஞ்சுடுச்சு. அதனால நீயே ஒரு நாய் வளர்த்து பார்க்கலாமே". நான் உடனே "ராதா சரிடா அதுக்கு ஒரு சடை நாய் வளர்த்தா தாண்டா நல்லா இருக்கும்"ன்னு சொன்னதுக்கு "டேய் ஒரு 75 ரூவா கொடுத்தா கைப்புள்ள கிட்ட நான் சடை நாய் வாங்கி தரேன்"ன்னு சொன்னான்.


நான் 10 வது படிக்கும் போது இது நடந்தது. என் பாட்டி என்னை கூப்பிட்டு "எலேய் தம்பி நானோ படுத்த படுக்கையா ஆகிட்டேன். இனி உன்னை ராமூர்த்தி டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போக தெம்பில்லை. நாயெல்லாம் நமக்கு வேண்டாம்" என சொல்லியும் கேட்காமல் அதை வளர்த்தேன். ஆனா அதுக்கு தான் முடி வளரவே இல்லை. அப்போ என்ன என்னவோ போட்டு குளிப்பாட்டினேன். எனக்கு தான் மீசை வளர்ந்ததே தவிர நாட்டு நாய்க்கு எப்படி வளரும்.


ஒரு சுபயோக சுபதினத்தில் மே 1 - 1980 என் பாட்டி காலை என்னை கூப்பிட்டு "இன்னிக்கு எங்கயும் போகாதே, நாயை கொல்லைல கட்டி போடு"ன்னு சொல்ல "ஆத்தா இன்னிக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு ஜெயிச்ச டீமை தோத்த டீம் சகலகலாவல்லவன் கமல் படம் அழைத்து போகனும் ஆமா இதுக்கும் டைகரை ஏன் கட்டி போடனும்" அதுக்கு பாட்டி ஆளுங்க அதிகமா வருவாங்கய்யா அதனால குழந்தையம்மா வீட்டிலே (டி. ராஜேந்தர் வீடு)கட்டி போடு"

சரின்னு கட்டி போட்டேன். அந்த கொல்லையும் எங்க வீட்டு கொல்லையும் சின்ன மதில் தான். கட்டி போட்டு விட்டு வந்தா ஆத்தா செத்து போச்சு. அழுக முயற்சித்தும் அழுகை வரலை. வயசு அப்படி. எல்லாரும் என்னை பார்த்து தலைக்கு வைகோல் தலயனை தான் வைக்கனும் குழந்தையம்மா வீட்டிலே இருந்து எடுத்து வா என சொல்லிய போது பாய்ந்து குதித்தேன்.



குதித்தது என் நாயின் மேலே!!! தொடையை கவ்வி இழுத்தது. ஆஹா வள்ர்த்த கடா தொடைல பாஞ்சிசிடுச்சு. போச்சு ஆத்தா 40க்கு கூட கோழி திங்க முடியாது.
இன்னும் சில நாட்களில் சில நாய்கள் வீட்டு வாசல்க்கு வந்து லொல் லொல் என்று குறைக்கும் போது என் காதில் தொல்ஸ் தொல்ஸ் என விழும். ஓடிப்போய் பார்த்து கடி வாங்கிட்டு வருவேன். ங்கொய்யால டைம் பாஸ்க்காக பல்லை கூர் தீட்டிப்பதுக்காக என்னை கடிக்கிதுக்துங்க.


அபி பிறந்தவுடன் எனக்கு பயம். எங்கே நம்மள மாதிரியே அபிக்கும் நாய்கடி ராசி அமைஞ்சிட போவுதுன்னு. நல்ல வேலையா அதுக்கு நேர் எதிரே நல்ல விலங்கு ராசியா கிட்ட தட்ட தேவர் பிலிம்ஸ் தேவர் மாதிரி நாய், பூனை, மாடுன்னு எல்லாம் நல்ல ராசி அபிக்கு. யானையை தான் இன்னும் டெஸ்ட் பண்ணலை. அவ எல்.கே.ஜி படிக்கும் போது சிதம்பரம் அண்ணாமலை நகர்ல வீடு. பக்கத்து வெங்கடாசலம் என்கிற யுனிவர்சிட்டி இஞினியர் வீடு. அவர் ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு வச்சிருந்தார். ஆனா கட்டி எல்லாம் போடுவதில்லை. நாட்டு நாய் மாதிரி தான் ட்ரீட்மெண்ட் அதுக்கு. இஷ்டத்துக்கு தெருவிலே சுத்தி சுத்தி கடிச்சுது. ஒரு தடவை நான் லீவ்க்கு போனப்ப என்னையும் போட்டு தாக்கிச்சு.


வெங்கசாசலம் சாருக்கு மட்டுமே பயப்படும். ஆனா அது அபி மேல என்னை விட பாசம் வச்சது தான் ஆச்சர்யம். அதன் வாயீலே எல்லாம் கைவிடுவா. ஆன்னு காட்டிகிட்டு இருக்கும். காலை அபி ஸ்கூல் ஆட்டோ வந்ததும் எங்க இருந்தாலும் வந்துடும். யுனிவர்சிட்டில இருந்து ராஜேந்திரன் சிலை வரை ஆட்டோ வேகத்துக்கு ஈடு கொடுத்து ஆட்டோவின் முன்பாக வலதும் இடதுமா ஓடும். அது போலவே மதியம் ஆட்டோ நேரத்துக்கு ராஜேந்திரன் சிலைக்கு போய்விடும். அங்க இருந்து வீடு வரை அப்படியே வரும்.
என் மனைவி கூட "அந்த நாயை பாருங்க எத்தன ஆசை வச்சிருக்கு அபி மேல, நீங்களும் தான் இருக்கீங்கலே"ன்னு சொன்னாங்க. என் பாசத்தை காட்ட நானும் ராஜேந்திரன் சிலை வரை ஆட்டோ முன்னாடி வலதும் இடதுமா ஓடியா நிரூபிக்க முடியும்?


பின்னே மாயவரம் வந்ததும் அபி தீவிரமா நாய் வளர்க்க ஆரம்பித்து என் மனைவின் அக்கா வீட்டு பமரேனியன் குட்டி போட்டதும் ஒரு குட்டி கொண்டு வந்துட்டா. நாய்ன்னா ஆய் எல்லாம் போகும் வேண்டாம்ன்னு சொல்லி பார்த்தும் அவ கேட்கலை. அதுவும் ஒரு ஒரு சுக்லபட்ச தினத்தில் என்னை கடித்தது. சந்தோஷம் மகிழ்ச்சி.

எந்த வீட்டுக்கு போனாலும் முதலில் நாய் இருக்குதான்னு கேட்டுகிட்டுதான் கேட்டையே தொடுவேன். அது போலத்தான் சுந்தரேசன் என்ற நண்பர் வீட்டுக்கு போய் வாசல்ல இருந்து "சுந்தரேசன் நாய் இருக்கா"ன்னு கத்த அவர் மனைவிக்கு கோவம் வந்துடுச்சு. சுந்தரேசனுக்கும் நாய்க்கும் இடையே ஸ்பேஸ் விடாம கத்திட்டேன் போலருக்கு. எல்லாம் விதி. இதிலே சில பேர் வீட்டிலே "சும்மா பயப்படாதீங்க சார். இது கடிக்காது. இதுவரை யாரையும்ம் கடிச்சது இல்லை. நான் கட்டி போட்டிருக்கேன் வாங்கன்னு கெஞ்சுவாங்க. சரின்னு நம்பி போனா விழுந்து புடுங்கும். நாய்க்காரர் சந்தோஷமா " நீங்க தான் பஸ்ட் சார்ன்னு பெருமை பொங்க சொல்லுவார். நானும் பதிவுல போய் மீ த பஸ்ட் போட்ட சந்தோஷத்திலே வருவேன்.

இதல்லாம் எதுக்கு சொல்றேன்னா கடந்த மார்ச் 10 அன்று சைட்ல கிடந்த ஒரு நாய் விழுந்து புடுங்குச்சு. ஆக நாளையோட ஆறு மாதம் ஆகின்றது. அதனால இன்னும் 24 மணி நேரத்தில் என்னை நாய் கடிக்க போவுது அப்படின்னு தீர்மானமாக நம்பினேன். அதனால ரூமை விட்டு வெளியே போவதில்லை என முடிவெடுத்து நேற்று மாலை முதல் ரூம் உள்ளயே தான் இருந்தேன். இன்று லீவ் ஆகையால் விடிய காலை வரை கேரம் ஆடினோம். இரவு 3 மணிக்கு எல்லோருக்கும் டீ போட்டு எடுத்து வருவோமே என்று கிச்சன் போனேன். லைட்டை போட போகும் போது ஒரு பூனையை மிதித்து அது கடித்து தொலைத்துவிட்டது. விதி வலியது!!!!

September 6, 2009

சஞ்சய் மை ஸ்வீட் ராஸ்கல்!!!!!


சஞ்சய்! என் மனதுக்கு பிடித்த தம்பி! 2008ல் குசும்பன் கல்யாணத்துக்கு வரும் போது மாயவரம் ரயில்வே ஸ்டேஷனனில் அவரை நந்துவாகவே தான் நினைத்தேன். ஏனனில் இளையகவி கனேஷ் குமார், இம்சை வெங்கி எல்லாரும் அப்படித்தான் அறிமுகப்படுத்தினாங்க.
ஆனால் வீட்டுக்கு வந்த பின் ஆட்டோமேட்டிக்காக என் மனைவியிடம் தான் தான் சஞ்சய்ன்னு சொன்னார். பின்னே நட்ராஜ் அவர் கிட்ட தான். மாலை மாயவரத்தில் இருந்து கிளம்பி திருவாரூர் போனோம். குசும்பன் கல்யாணத்துக்கு.
காலைக்குள் சுரேகா, காயத்ரி, பாலைதினை காயத்ரி, நாகை சிவா, மாநக்கல் சிபி எல்லாரும் வர கல்யாணம் களை கட்டியது.
கல்யாணம் முடிந்த பின்னே எல்லோரையும் காரில் அனுப்பி விட்டு நான், சுரேகா, சஞ்சய் பஸ்ஸில் போனோம் மாயவரம். அப்போ நான் செஞ்ச அலப்பறை இங்க சொல்வதுக்கு இல்லை.
யார்கிட்டயும் ஒரு சண்டை சச்சரவு இல்லாத மனிதனாக பார்த்தேன் சஞ்சயை. இப்படி ஒரு கேரக்டர் இருக்க முடியுமா என வியந்தேன்.
தம்பிக்கு சீக்கிரம் ஒரு நல்ல பெண் கிடைத்து நல்ல படியா கல்யாணம் நடக்கனும். நாங்க எல்லாரும் போகனும் குசும்பன் கல்யாணத்துக்கு போன மாதிரியே!
தம்பிக்கு இன்று பிறந்தநாள்! இந்த நாளில் நான் அன்புடன் வாழ்த்துகிறேன்! இங்கே இரவு 10.30. ஊரில் 12 ஆச்சு! வாங்க எல்லாரும் வந்து வாழ்த்துங்க!!!!!
அன்புடன்
அபிஅப்பா