பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 23, 2013

எஸ். எஸ். சிவசங்கர் .B.E.,M.B.A., M.L.A., (அரியலூர் மாவட்ட செயலர், திமுக)

(அன்பகம் இணைய நண்பர்கள் கூட்டத்தில்)


எஸ். எஸ். சிவசங்கர்............. இந்த பதிவை எப்படி எழுதப்போகிறேன் என தெரியவில்லை. விஷயம் நிறைய இருக்கு மனசிலே. அதை கோர்வையாக சொல்ல முடியுமா என்றால் .... தெரியல... அனேகமா பதிவு அடிக்கும் போது சொதப்பிடுவேன் என்றே நினைக்கிறேன்... இருப்பினும் சொல்கிறேன்..

அவரை நான் முதன் முதலாக சந்தித்ததே அன்பகத்தில் தான். திமுக இளைஞரணி அலுவலகம். அங்கே இணையத்தில் புழங்கும் திமுக நண்பர்கள் சந்திப்பு. முதல் வரிசையில் லக்கி யுவகிருஷ்ணா, நான், அப்துல்லா உட்பட எல்லோரும் பேண்ட், சட்டை சகிதம் அமர்ந்திருக்க அடுத்தடுத்து பெரியண்ணன் அரசு (புதுகை மாவட்ட செயலர்... அவர் என் தம்பி செட் பூண்டி புஷ்பம் காலேஜ்ல பி ஜி படிக்கும் காலத்தில், என் தம்பி கெமிஸ்ட்ரி, அவரு பிசிக்ஸ்) அடுத்து எஸ். எஸ். சிவசங்கர். எனக்கு இருவரையுமே தெரியாது. ஆனா இருவரும் அருமையான பேண்ட் சர்ட்ல் வந்திருந்தாங்க. அதே போல புரபசர் சுப.வீரபாண்டியன் அய்யாவும் பேண்ட் சர்ட். அதே போல மின்னும் மன்னை ச.ம.உ டி ஆர் பி ராஜாவும் பேண்ட் சட்டை. பாவம் டி கே எஸ் இளங்கோவன் அண்ணன் மாத்திரம்  வேட்டி சட்டை. வந்ததும் சிவசங்கர் சாரை பார்த்து கடிந்து கொண்டார். "என்ன சிவா, ஒரு போன் போட்டு சொல்லக்கூடாதா? என் கிட்ட பேண்ட் சட்டை இல்லியா? நீங்கல்லாம் மாத்திரம் காலேஜ் பசங்க மாதிரி இருக்கீங்க. நான் மட்டும் "பெரிசு" மாதிரி வேட்டி சட்டையிலே வந்திருக்கேன்" என சொல்ல ஒரே சிரிப்பு.

நான் பக்கத்தில் இருந்த யுவாவிடம் கேட்டேன் "யுவா யாரு அது?" . யுவா சொன்னாரு "அண்ணே அவரு தான் அரியலூர் மாவட்டம்" எனக்கு தூக்கிவாரிப்போட்டது. பின்னர் அவரிடம் பேசினேன். பின்னர் அவர் மேடைக்கு போய்விட்டார். அதற்கு முன்னர் முனைவர் ஞானமணி என்னும் தோழர் ..அவர் அரியலூர் சேர்ந்தவர். பேசும் போது அண்ணன் ராசா அவர்களை பற்றி பேசினார். உணர்சி மேலீட்டால் அழுதே விட்டார். பின்னர் எஸ். எஸ். சிவசங்கர் சார் பேசும் போது அந்த ஞானமணி அவர்கள் பேச்சுக்கு வரிக்கு வரி பதில் சொல்லி நாமெல்லாம் பெரம்பலூர் அரியலூர் என்றால் பெருமைப்பட வேண்டும் என அழுத்தம் திருத்தமாக பேசினார். நான் பல மாவட்ட செயலர்களை பார்த்து இருக்கேன். சிலர் கேஷுவலாக பேசுவாங்க. சிலர் சீரியசாக பேசுவாங்க. சிலர் டிபிக்கல் மேடைப்பேச்சாளர்களாக பேசுவாங்க. ஆனா இவர் பேச்சு அன்னிக்கு அப்படி ஒரு பேச்சு. ஒரு தேர்ந்த மேடைப்பேச்சாளர் பேச்சு போல, ஒரு கேஷுவல் பேச்சாளர் போல, ஒரு நண்பன் சக நண்பனிடம் பேசுவது போல ... இன்னும் எப்படி எப்படியோ.... பின்னர் நான்  அவரை சந்தித்ததும் அதே அன்பகத்தில் தான். அதாவது பெரம்பலூர், அரியலூர் மாவட்ட இளைஞரணி "இண்டர்வியூ"வுக்கு வந்த போது. அவர் கூடவே அவர் மாவட்ட இளைஞர்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். அத்தனை பேரையும் கட்டி போட்டு இருந்தார். அத்தனை கூட்டத்திலும் அவரது பார்வைக்கு கட்டுப்பட்டனர்.

அன்பகத்துக்கு எதிரே இருக்கும் டீக்கடையில் டீ குடிக்க போகலாம் என நினைத்து அவர் போகும் போது "பசங்கலா" என அவர் அழைத்த அழைப்புக்கு அங்கே 50 இளைஞர்கள் "அண்ணே" என்றார்கள். சாலையை கடந்து டீக்கடை  போகும் போதும் அதே ஒழுங்கு. அடடே... அன்பால் கட்டுப்படுத்த முடியும் என புரிந்து கொண்டேன். கலைஞருக்கு ஒரு சண்முகநாதன் போல இவருக்கு லூயிகதிரவன். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். டீக்கடையில் காசு கொடுப்பது முதல் பசங்க யார் யார் இன்னும் சாப்பிடலை என்பது வரை இவர் கண் அசைப்பு எல்லாம் லூயிக்கு தெரியும். உடனே சரி செய்வார்.

அப்படித்தான் ஒரு நாள் அக்டோபர் 11ம் தேதி 2012 என நினைக்கிறேன், நான் சென்னையில் திருவான்மியூரில் இருந்தேன். போன் செய்தார். "நான் வீட்டை விட்டு கிளம்பிட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க வீட்டுக்கு வருவேன்"..... எனகு கையும் ஓடலை, காலும் ஓடலை... அட ஒரு மாவட்ட செயலர்... நான் "வீட்டுக்கு வாங்க சார்"என சொன்னதுக்காக வருகின்றார்.... அரக்க பரக்க ஓடி குளித்தேன். "நான் வந்து விட்டேன்" என சொன்னார். ஓடிப்போய் வரவேற்றேன். சத்யா எனும் கமல் படம் பார்த்து இருப்பீங்க. அதிலே அமலா கமல் வீட்டுக்கு வரும் போது ஜட்டி எல்லாம் நாத்காலியில் கிடக்குமே.. அப்படி இருந்தது வீடு. நானும் கிட்டத்தட்ட அந்த கமல் நிலையில் தான் இருந்தேன். ஒரு நீண்ட அரசியல் பேச்சு. அப்பாடா... திகட்ட திகட்ட அரசியல் பேசினோம். அன்று தான் திமுக மாநில இளைஞர் அணி மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிப்பு வெளிவந்தது முரசொலியில். அப்போது சொன்னார் சிவசங்கர் சார் " நான் என் மாவட்டத்தை விட அதிகம் எதிர்பார்த்தது தஞ்சை மாவட்டம் தான். ஏன்னா தம்பி வி. எஸ். கே . செந்திலுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் கும்பகோணம் குட்டி என்கிற தெட்சினாமூர்த்திக்கு கிடைத்துவிட்டது. செந்தில் தம்பிக்கு போன் செய்யனும்" என சொல்ல நான் உடனே செந்திலுக்கு போன் செய்தேன். சாரே பேசினார். "செந்தில்! உங்க உழைப்பு கட்சிக்கு என்னான்னு தலைமை வரை தெரியும். சோர்ந்து விட வேண்டாம். நிச்சயம் உங்களுக்கான மரியாதை கட்சியில் கிடைக்கும்" என சொன்ன போது செந்தில் உணர்சி வசப்பட்டார். ஒரு அண்டை மாவட்ட செயலர் தனக்கு ஆறுதலாக சொல்லும் போது ஒரு கட்சிக்காரன் , உழைத்தவன் மன நிலை எப்படி சந்தோஷத்தில் குதிக்கும்! இது தான் சிவசங்கர் சார்!

நிற்க! இப்படியாக இருக்கும் போது கடந்த பிப்ரவரி முதல் தேதி என் பெரிய அக்காவின் 3 வது பையனுக்கு ஹைதராபாத்தில் கல்யாணம். ஜனவரி 30 மாலையே கிளம்பியாச்சு. நானும் என் தம்பி கொக்கரக்கோ சௌமியனும் "டேய் நாளை அங்க போனதும் மொதல்ல நம்ம சிவசங்கர் சார் அப்பாவை பார்க்க போகனும்" என பேசிக்கொண்டோம். ஏனனில் அவங்க அப்பா முன்னாள் ச.ம.உ, முன்னாள் மாவட்ட செயலர், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர், இன்னாள் திமுக சட்ட திருத்த குழு உறுப்பினர் அய்யா சிவசுப்ரமணியம் அவர்கள் ஒரு அறுவை சிகிச்சைக்காக ஹைதை நிம்ஸ் மருத்துவமணையில் இருந்தார். 31ம் தேதி நானும் என் தம்பியும் தவிர என் அக்கா பசங்க (கல்யாண மாப்பிள்ளை உட்பட) இருவரும் போனோம்.
(ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் )


அய்யா சிவசும்ரமணியம் அவர்களை பார்த்தோம். அறுவை சிகிச்சை முடிந்து இரு நாட்கள் ஆகி இருந்தன. கைலி உடை. அதில் கறை கருப்பு சிவப்பு. அட கைலியில் கூட கருப்பு சிவப்பா என ஆச்சர்யப்பட்டோம். அதை கேட்கவும் செய்தோம். "மனசு வச்சா கருப்பு சிவப்பு நிறம் எங்கும் வரும்" என சொன்னார்.

பின்னர் பேசிக்கொண்டு இருந்தோம். பொதுவாய் எங்கள் வீட்டு திருமணத்துக்கு எல்லாம் கலைஞர் வீட்டில் இருந்து எல்லோரும் வருவார்கள் எனினும் நாங்கள் இப்போது இருப்பதோ ஹைதராபாத். அக்கா பையன் ஐ டி யில் வேலை செய்வதால் கூட ஒர்க் பண்ணும் ரெட்டி பொண்ணை உசார் பண்ணிட்டான். ரெட்டிய தாக்குறொம், பொண்ணை தூக்குறோம் என்றில்லாமல் ரெட்டி சகல மரியாதையுடன் கல்யாணம் செஞ்சு கொடுக்க முன்வந்தார். அதுக்கு கட்சிகாரங்க இல்லாம கல்யாணமா என்னும் மன சஞ்சலம் இருந்து கொண்டே இருந்தது.

மெதுவாய் நானும் என் தம்பியும் விஷயத்தை சிவசங்கர் சாரிடம் சொல்ல "அட அதுக்கென்ன, நாளை கல்யாணத்துக்கு வரேன்" என சொன்னார். நன்றாக நினைத்து பாருங்கள்! ஒரு மாவட்ட செயலர்.... அவரை கேட்டு தான் அவங்க மாவட்டத்தில் திருமண தேதி வைப்பார்கள். ஆனா எங்க அதிஷ்டம்... நாங்க அடுத்த நாள் திருமணத்துக்கு முதல் நாள் கூப்பிடுகிறோம். வரேனு சொல்லிட்டாரு...

அடுத்த நாள் வந்து விட்டார் திருமணத்துக்கு. ரெட்டிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பரபரப்பு. ரெட்டி மெதுவா வந்து கேட்கிறார் நம் சிவசங்கர் சார் கிட்டே ...

'நிஜங்கானே நீரு எம் எல் ஏ னா'

"அவுனு நேனு எம் எல் ஏ னே"

"நீக்கு கன்மேன் எவரு லேதா"

"அட்லாண்டி தப்பு நேனு செய்யலேதுண்டி"
(அப்பா, நான், சௌமி, சௌமியன் பையன் சர்வோதயன், நட்ராஜ் ஆகியோருடன் மாவட்டம்)


நான் தாலிய எடுத்து கன்ணில் ஒத்திக்காத குறை தான். எங்க மாவட்டம் தெலுகு எல்லாம் பேசுதுன்னு. பின்ன தான் நியாபகம் வந்தது அவரின் முகநூலில் அவருக்கு தெரிந்த மொழிகள்னு பார்த்தா தமிழ், ஆங்கிலம், தெலுகு, கன்னடம் இப்படியாக திராவிட மொழிகள் எல்லாம் தெரியும் என்பது. பின்னர் தான் யோசித்தேன். சார் B.E., M.B.A முடித்து விட்டு பெங்களூருவில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் வேலை செய்தவர் என்பது!

எங்களுக்கு ஒரே பெருமை தான் அன்று முழுமைக்கும். ஒரு திமுக மாவட்டம் எங்கள் வீட்டு திருமணத்துக்கு வந்தமை குறித்து. ஆனால் அந்த செய்தியை நான் அன்று வெளியிட வில்லை. காரணம் அன்று சட்டசபை கூட்டம் இருந்தது. அதற்கு நான்கு நாட்கள் முன்பாகத்தான் ராசா அண்ணன் நேரிடையாக ஹைதை வந்து அப்பாவை பார்த்து விட்டு சென்றார். அதற்கு இரு நாட்கள் முன்பாகத்தான் தளபதி அவரிடம் தொலைபேசியில் அவங்க அப்பா உடல் நிலை குறித்து கேட்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால் கல்யாணத்துக்கு வரும் போது தான் திருமதி கனிமொழி அவர்கள் அப்பாவின் உடல் நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்து இருந்தார். ஆனால் அன்றைக்கு தான் பேஸ்மேக்கர் ட்யூனிங் என்பதால் இவரால் சட்டமன்ற கூட்டம் போக இயலவில்லை.
(திருமணத்தின் போது மணமக்களுடன்)


நான் கேட்டேன் .... "தளபதிக்கு சொல்லியாச்சா, நீங்க வரலைன்னு" ... அவர் சொன்னார்... "இல்லை... இதுக்கு தளபதிகிட்டே லீவ் சொல்லக்கூடாது, கட்சி கொறடாவுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். அவர் தான் எங்களுக்கு க்ளாஸ் லீடர்" அட, இதான் கட்சி... இதான் உண்மையான ப்ரோட்டோகால்.... தன் அப்பாவுக்கு அன்று முக்கியமான ட்ரீட்மெண்ட் இருப்பினும் எங்கள் வீட்டு திருமணத்துக்கு வந்தமை குறித்து எங்களுக்கு பெருமையோ பெருமை!
"ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்... இன்னும் 50 ஆண்டுகாலத்துக்கு பெரம்பலூர் , அரியலூர் மாவட்டம் இவரது உள்ளங்கையின் உள்ளே மட்டும் என்பது நிச்சயம்" சார் திருமணத்துக்கு வந்து போன பின்னே ஒரு 78 வயது பழம்பெரும் திமுக தொண்டரான என் அப்பா உதிர்த்த வார்த்தைகள் இது!

சமீபத்தில் கூட நான் சென்னையில் அருள் பிரகாசம் சார் வீட்டில் இருந்த போது எப்போதும் போல "வீட்டுக்கு வாங்க சார்" என சொன்னமைக்காக வந்தார். பின்னர் ஒரு இணைய நண்பர் மனைவி மருத்துவமனையில் இருப்பதை அறிந்து தானும் வந்தார். மிகுந்த சந்தோஷமாக இருந்தது. வெளியில் வந்து "அவங்களுக்கு என்ன விதமான மருத்துவ உதவி வேண்டுமோ அதை தயங்காமல் கேளுங்க. செய்வோம்" என ஆறுதல் கொடுத்தார்.

அப்பாடா.... என்னவோ மனசில் பட்டதை எல்லாம் அடிச்சுட்டேன்... இன்று அவருக்கு பிறந்த நாள். அவருக்கு உங்களின் வாழ்த்தை சொல்லுங்களேன் நண்பர்களே!

March 15, 2013

காங்கிரசை "கை"கழுவ திமுகவுக்கு சரியான தருணம் இது!



எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் Vs பி ஜே பி என்பது சர்வநிச்சயம். இதிலே மூன்றாவது அணி அமைந்தால் அதிலே  யார் யார் கூட்டு என்பது பற்றி எல்லாம் நாம் அதிகமாக  யோசிக்க வேண்டியதில்லை.அது நம் வேலையும் இல்லை இப்போதைக்கு.

இப்போதைக்கு என் பிரச்சனை.. நாம் காங்கிரசுடன் கூட்டணி தொடர்கிறோம்  என்றால் நம் கூட்டணியின் பலம் என்ன?  பலவீனம் என்ன? என யோசித்து  பார்ப்பின்  பலம் என்பது பூஜ்ஜியம். பலவீனம் என்பது 200 சதம் என்பதே உண்மை. காங்கிரசை எதிர்த்து மேடையில் முழங்க இந்திய அளவில் அதாவது அரசியல் கட்சிகள் நிலையில்  பார்த்தால் ஸ்பெக்ட்ரம் விஷயம் , நிலக்கரி சுரங்க ஊழல், சமீபத்திய ஹெலிகாப்டர் ஊழல் என பெரிய பெரிய விஷயங்கள் , மற்றும் இலங்கை மீதான வெளியுறவு கொள்கையில் இருக்கும் வழவழா கொழகொழா நிலை என பேச பெரியதாக இருக்கும் நிலையில், பொதுமக்களை பொறுத்தவரை ரயில் கட்டணம் உயர்வு,கேஸ் மானியம் நிறுத்தம், குறைந்த அளவினால கேஸ் சிலிண்டர் ஒதுக்கீடு ஆகியவையும் இப்போது மேலும் ரயில் கட்டண உயர்வு வரப்போகின்றது என்பதும், அடுத்து மிகப்பெரிய பாதிப்பாக டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வும், அதனால் பொது மக்கள் நேரிடை பாதிப்புக்கு உள்ளாவதும் காங்கிரசை ஒரு "கை" பார்த்து விட துடிக்கின்றன.

சரி அதே காங்கிரசுக்கு மாநிலத்துக்கு மாநிலம் என்ன பிரச்சனைகள் என பார்த்தோமானால் ... இப்போதைக்கு நாம் இக்கட்டுரையில் தமிழகத்தை பற்றி மட்டுமே பார்ப்போம். தமிழகத்தை பொறுத்த மட்டில் இப்போது மிக முக்கியமாக ராகுல் மீது எந்த திராவிட கட்சிகளுக்கும் ஒரு ஈர்ப்பும் இல்லை. முதல் காரணம் அவர் எடுக்கும் முடிவுகள் எல்லாமே சிறுபிள்ளை தனமாகவே இருந்து தொலைக்கின்றன துரதிஷ்டவசமாக. தவிர தமிழகத்தை பொறுத்த மட்டில் கொஞ்சம் மரியாதை எதிர்பார்க்கும் ஒரு வித கலாச்சாரம் விரவிக்கிடக்கும் மாநிலம். இதுவரை கலைஞரை வந்து ஒரு மூத்த கூட்டணி கட்சி  தலைவர் என்னும் முறையில் கூட  மரியாதை நிமித்தம் சந்திக்காமை  போன்ற நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அடுத்து மிக மிக முக்கியமாக இலங்கை பிரச்சனை.

இது ஒட்டு மொத்த தமிழக தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடிய பெரிய சக்தியாக திகழும் என்னும் நிலை தான். ஏனனில் மாணவர்கள் அதாவது கல்லூரி மாணவர்கள் ஓட்டுகள் என்பது ஈழ விஷயத்தில் நிச்சயம் காங்கிரசுக்கு எதிராக மட்டுமே அமையும். 2009 தேர்தல் நேரத்தில் ஈழத்தில் உச்சகட்ட போர் நிகழ்ந்தது. மே 13 தேர்தல் எனில் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் பிரபாகரன் படுகொலை... இதற்கே தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு சில பல தொகுதிகள் இழக்க வேண்டியும் சிதம்பரம் போன்றவர்கள் நொண்டி அடிக்கும் நிலையிலும் மணிசங்கர் எல்லாம் மண் கவ்வும் நிலைக்கும் ஆளானது. இதனாலேயே அதிமுகவுக்கு கனிசமாக தொகுதிகள் கிடைத்தன. இது தான் உண்மை. இத்தனைக்கும் தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு சிறப்பான ஆட்சி நடைபெற்று கொண்டு இருந்தது. ஆனால் மக்கள் அப்போதைக்கு எது உக்கிரமான பிரச்சனையோ அதை தான் வைத்து தேர்தல் ஓட்டு போடுகின்றனர். போதாத குறைக்கு சீமான், வைக்கோ, நெடுமாறன் ஆகிய ஓட்டு வங்கி இல்லாதவர்களும் கூட அதிமுகவுக்கு ஆதரவாக அதாவது திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என சொன்னால் தானாக அடுத்த கூட்டணி என பார்த்தால் அதிமுக கூட்டணி தானே? அங்கே போய்விட்டனர் நடுநிலையாளர்கள்.

அதன் பின்னர் இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் மிகப்பெரிய நலத்திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டன. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், நவீன சாலைகள், மிகப்பெரிய பெரிய பாலங்கள், தேர்தல் வாக்குறுதிப்படி கோடி குடும்பங்களுக்கு வண்ண தொலைக்காட்சி, ஒரு ரூபாய் அரிசி திட்டம், மகளிர் திட்டங்கள், சுய உதவிக்குழு, விவசாயிகளுக்கு முடிந்த வரை இருந்த வரைசீர் செய்யப்பட்ட விளை நிலம் வழங்குதல், கடைசி கட்டமாக தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நூறு சதம் முடிந்து விட்ட நிலையில் புதியதாக தமிழகம் முழுமையாக குடிசை வீடுகளே இல்லை  எனும் நிலையாக 25 லட்சம் கான்கிரீட் வீடுகள் என ஒரு திட்டம் தீட்டி அதில் ஒன்னரை லட்சம் பயனாளிகளுக்கு வழங்கியும் மீதமுள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்ட சான்றிதழும் வழங்கி தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதை செய்வோம் என சொல்லியும் ...இப்படியாக என ஒரு நல்லாட்சி நடைபெற்றும் சட்டசபையில் பிராதன எதிர்கட்சி கூட இல்லை என்னும் நிலை வந்தது.

அதற்கு காரணம் தமிழக மக்கள் மனதில் உள்ளே  "கடலுக்கு அடியில் சுனாமி" என்பது போல மேலே அமைதி உள்ளே சுனாமி என ஈழமக்கள் நிலை அவர்களை அழ வைத்த பெரும்பங்கு அப்போது செய்யப்பட்ட பிரச்சாரமேயாகும். அதை திமுக தவிர்த்திருக்க நல்ல வாய்ப்பும் அமைந்தது. திமுகவினர் தங்கள் மரியாதைக்குரிய ராஜமாதாவாக நினைக்கும் தயாளு அம்மையாரை அறிவாலய முதல் தளத்தில் சி பி ஐ விசாரிக்க அந்த சி பி ஐ ன் உச்சகட்ட தலைவர் என சொல்லப்படும் மத்திய உள்துறை அமைச்சர் கீழ் தளத்தில் "சீட்டு பேரம்" செய்தமையை எந்த திமுகவினரும் ரசிக்கவில்லை. மேலும் திமுகவின் அவசர உயர்நிலை செயல்திட்ட கூட்டம் கூடி காங்கிரசுடன் இனி உறவு இல்லை என அறிவித்த போது திமுகவினர் அதிகபட்சமாக  தங்கள் மகிழ்வை நாடெங்கும் வெளிப்படுத்தியமை யாரும் மறுக்க இயலாது. (அப்போது அன்றைய தினத்தில் எழுதப்பட்ட "பல்லிடுக்கில் சிக்கிய பாக்குத்தூளை காறித்துப்பினோம்" என எழுதப்பட்ட கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்)

அப்போது திமுகவினருக்கு எழுந்த ஒரு உணர்சி வெள்ளத்தை அப்படியே தேர்தல் வேலைக்கு பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு காங்கிரசால் ஏற்பட்ட களங்கத்தை போக்கியிருக்கலாம். ஆனால் உயர்நிலை செயல்திட்டத்தின் படி ராஜினாமா செய்ய டெல்லி சென்ற மத்திய அமைச்சர் பெருமக்கள் காங்கிரசுக்கு 63 தொகுதிகள் என கட்சியை அடமானம் வைத்து விட்டதாக அப்போது சோலை போன்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் அழுது எழுதினர். திமுகவினர் சோர்ந்து போயினர். அப்போது வெற்றி பெற்ற 24 திமுக உறுப்பினர்கள் காங்கிரஸ் உறவு இல்லாவிட்டாலும் வெற்றியடைந்து இருப்பர் என்பது நிச்சயம். தவிர மாவட்டத்துக்கு ஒரு மூன்று தொகுதிகள் இன்னும் அதிகமாக கிடைத்து இருக்கும். ஆக ஆளும்கட்சி என்னும் நிலை இல்லாவிடினும் கூட கண்டிப்பாக வலுவான எதிர்கட்சியாக இருந்திருக்கும். அதே நேரம் அதிமுகவோ மைனாரிட்டி அதிமுக அரசாக ஆகியிருக்கும். அந்த பொன்னான வாய்ப்பை கூட திமுக நழுவ விட்டது காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே என்பது உண்மை. ஆக ஈழப்பிரச்சனை அத்தோடு முடிந்ததா இந்த இரு வருடங்களில் அதாவது இன்னும் சொல்லப்போனால் 2009 மே 17 க்கு பின்னர் கூட காங்கிரசுக்கு ஈழத்தின் மீதான வெறி தணிந்ததா எனில் இல்லை இல்லை இல்லவே இல்லை என்பதை சமீபத்தில் சுஷீல்குமார் ஷிண்டே "இலங்கை நட்பு நாடு" என சிலாகித்து சொன்னது கொம்பேரி மூக்கன் பாம்பின் நிலையில் தான் காங்கிரஸ் இன்னமும் ஈழமக்கள் மீது கொண்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

சரி! காங்கிரஸ் இப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தோல்வி அடைய இந்த ஈழம் மட்டுமே காரணமா என நினைத்து பார்ப்பின் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மீது நடுநிலையாளர்கள் கொண்டிருந்த வெறுப்பு இப்போது வழக்கு நடைந்து கொண்டு இருக்கும் போது பலவித பரிணாம வளர்சியுடன் காங்கிரஸ் பக்கம் முழுவதுமாக திரும்பி விட்டது.  திமுகவை பொறுத்த மட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் இருந்து முழுமையாக அல்ல 90 சதம் விலகி வந்து விட்டது . அதனால் இதில் இனிமேல் திமுகவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஜே பி சி க்கு பகிரங்கமாக கேட்டாகிவிட்டது..."என்னை விசாரிக்கவும்" என திமுக தரப்பில் இருந்து. இப்போது ஒட்டு மொத்த இந்திய மனநிலை "ராசாவே  தன்னை விசாரிக்க சொல்லி கெஞ்சிகிட்டு இருக்காரு, அவங்க ஒத்துக்கலைன்னா என்னா அர்த்தம்? மன்மோகன் சிங், சிதம்பரம் இவங்களை காப்பாத்த காங்கிரஸ் நினைக்குது'' இதான் இப்போதைய நடுநிலயளர்கள்  மனநிலை. தவிர வழக்கு விரைவாக முடிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா அவர்கள் தனது முழு ஒத்துழைப்பும் நீதிமன்றத்துக்கு தருவதோடு மட்டுமல்லாமல் தினம் தினம் வழக்கு நடைபெற்று ராசாவே தனக்காக வாதாடுவதும், சாட்சிகள் பொய்சாட்சிகள் என நிரூபிக்கப்பட்டு கொண்டு இருப்பதும் அப்போது ஊடகங்களால் பரப்பப்பட்ட ஒன்னேமுக்கால் லட்சம் கோடி என்பது ஒரு கற்பனை எண் என்றும், ராசா ஏலம் விடாமை இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்திவிட்டது, ஏலம் விட்டால் இந்தியாவில் பாலாறும் தேனாரும் ஓடும் என சொல்லி பொய்பரப்புரை எல்லாம் இப்போது ஏலம் விட்டதால் என்ன ஆனது என்பதை நடுநிலைவாதிகள் புரிந்து கொண்டு விட்டனர்.

தவிர ராசா அவர்கள் தமிழகத்துக்கு நீதிமன்ற வார விடுமுறைக்கு வரும் போதெல்லாம் தனது கட்சியின் கொள்கை பரப்பு பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் போது மக்களிடை ஏற்படும் ஆரவாரம், தவிர அவரது தொகுதிக்கு போகும் போது கிடைக்கும் வரவேற்புகள் எல்லாம் 2ஜி ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் 90 சதம் திமுக விலகி வந்து விட்டதையே உணர்த்துகின்றன. அது என்ன மீதி பத்து சதம் எனில் அது காங்கிரஸ் கூட்டு தான். அதையும் விட்டு விலகி விட்டால் முழுமையாக 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனை என்பது காங்கிரஸ் பிரச்சனையாகிப்போகும். திமுக தன் தரப்பு நியாயத்தை நீதிமன்றம் மூலம் வெகுசுலபமாக பெற்றுவிடும். ஆகையால் காங்கிரசுக்கும் இப்போது தமிழகத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு தலைமேல் தொங்கும் கத்தி தான்.

அடுத்து காங்கிரசுக்கு தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள வேறு என்ன பிரச்சனை? காவிரி... ஆமாம்.. தமிழக வாழ்வாதாரம் காவிரி நீர். இன்று காவிரி நடுவர்மன்ற  தீர்ப்பு வெளியாகி அது அரசிதழில் வந்தமைக்காக அதிமுக அதில் சொந்தம் கொண்டாடி பாராட்டு விழா நடத்தி "பொன்னியின் செல்வி"யாகிவிட்டது. இதில் திமுக வரிந்து கட்டிக்கொண்டு சொந்தம்  கொண்டாட  முழு உரிமையும் உள்ளது. நீங்கள்   கடைசியாக நடந்த கிரிக்கெட் உலக கோப்பை போட்டி பார்த்தது உண்டா. அதில் ஸ்ரீசாந்த் என்னும் ஒரு பந்து வீச்சாளர்  வெற்றிக்கோப்பையை தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவார். அவருக்கு பின்னால் அமைதியாக டோணி வருவார். அஃப்கோர்ஸ்  ஸ்ரீ சாந்த் ஓரிரு விக்கெட் கூட எடுத்தார். ஆனால் அவரால் அந்த தொடரில் பல சோதனைகள் இந்திய அணிக்கு. ஆனாலும் கடைசி போட்டியில் அணி வெற்றி பெற்ற போது அவரும் ஒரு அணி உறுப்பினர் தானே அதனால் கோப்பையை தலையில் வைத்து கொண்டு ஆட உரிமை உள்ளது தானே என்னும் நினைப்பில் கேப்டன் டோணி அவர்கள் அமைதியாக பின்னால் வருவார். ஆனால் மக்களுக்கு தெரியும் . இந்த வெற்றி டோணியால்  என்று. ஆனால் அந்த வெற்றி ஊர்வலத்தில் ஆஸ்திரேலிய பவுலர் ஒருவர் ஆனந்த கூத்தாட முடியுமா? "நான் தான் ரன்கள் வாரி வழங்கினேன். நான் தான் சரியாக பந்து வீசவில்லை. அதனால் தான் இந்தியா வெற்றி பெற்றது. ஆக இந்தியா வெற்றிக்கு நான் தான் காரணம்" என கூவினால் எந்த அளவு அபத்தமோ அப்படித்தான் காங்கிரஸ் தமிழக காவிரி வெற்றிக்கு எவ்வித சொந்தமும் கொண்டாட இயலாது. ஏனனில்  அந்த காவிரி நடுவர் மன்றம் அமைத்தது திமுக ஆட்சியில் 1989ல் மத்தியில் வி.பி சிங் ஆட்சி. அரசிதழில் வெளியிட்டது இப்போது காங்கிரஸ் ஆட்சியில் தான் எனினும் உச்சநீதிமன்ற குட்டுக்கு பின்னர் அது பிப்ரவரி 20குள் வெளியிட்டே ஆக வேண்டும் என பெரிய குட்டாக காங்கிரஸ் அரசின் தலையில் போட்ட பின்னர் தான் அது நடந்தது... நடுவே வாஜ்பாய் பிரதமராக இருந்த போது சில நன்மைகள் நடந்தன. ஆனால் காங்கிரஸ் எங்கும் தலைகாட்டவில்லை. காரணம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி வந்து போகும் வாய்ப்பு இருந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் தமிழகத்தில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பதால் காவிரி பிரச்சனை பற்றி காங்கிரசுக்கு எப்போதும் கவலை இருந்தது இல்லை. எனவே காவிரி பிரச்சனையிலும் காங்கிரஸ் அவுட்.

அடுத்து தமிழகத்தில் இருந்து சமீபமாக ஐ ஏ எஸ் போன்ற சிவில் தேர்வுகளில் தேர்வாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழக கிராமப்புற மாணவர்கள். வழக்கம் போல காங்கிரஸ் அரசு இதிலும் மண் அள்ளி போட்டது இரு நாட்கள் முன்பாக. இனி தமிழ் வழி எழுத முடியாது. அப்படி எழுத வேண்டும் எனில்... என்று சொல்லி சில குளறுபடி சட்டங்களை போட்டு அத்தோடு விடாமல் அதாவது குதிரை கீழே தள்ளியது மட்டும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்னும் கதையாக இந்திக்கு வாடா, தமிழுக்கு தடா என சொல்லாமல் சொல்லி இந்தி திணிப்புக்கு மீண்டும் அச்சாரம் போட்டுவிட்டது. இங்கே ஏற்கனவே இரு நாட்கள் முன்னதாக தமிழக அரசு தேர்வானைய தேர்வுகளுக்கு கூட தமிழ் இனி கிடையாது என அறிவித்த மாநில அதிமுக அரசுக்கு நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என சொல்லும் படியாக காங்கிரஸ் மத்திய அரசு நடந்து கொண்டுள்ளது.

அடுத்து தமிழக மீனவர்கள் இதுவரை 500 பேர் வரை சுட்டு கொல்லப்பட்ட போது வாய்மூடி நிலைமையை மத்திய அரசு உற்று நோக்குகின்றது என்ற புளித்து போன வசனத்தையே பேசிக்கொண்டு இருந்த காங்கிரசின் மத்திய அரசு இன்றைக்கு இரு கேரள மீனவர்கள் மன்னிக்கவும் இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்ட போது சுட்டுக்கொன்ற இத்தாலிய மாலுமிகளை சிறை வைத்து ஜாமீனில் நாட்டுக்கு அனுப்பி இப்போது அவர்கள் அங்கே உட்காந்து கொண்டு இந்தியாவுக்கு பெப்பே காட்டிய பின்னர் விழித்துக்கொண்டு பதிலடியாக இத்தாலிய தூதரை நாட்டுக்கு அனுப்ப மாட்டோம் என சொல்கின்றதே, இதையே 500 தமிழக மீனவர்கள் செத்து போனபோது ஏன் இலங்கை தூதரை நாட்டுக்கு அனுப்ப மாட்டோம் என சொல்லவில்லை என நாம் கேட்கவில்லை. நடுநிலையாளர்கள் கேட்கின்றனர்.

ஆக காங்கிரசுக்கு தமிழகத்தில் ஈழம், தமிழக மீனவர்கள், காவிரி, இந்தி ,ஸ்பெக்ட்ரம் ஆகிய பெரிய பிரச்சனைகள் தமிழகத்தில் பாராளுமன்ற  தேர்தலில் விழுங்க காத்து கிடக்கின்றன. அதை தவிர அதற்கு கொசுறாக ரயில்வே கட்டணம், கேஸ் சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு, மானியம் நிறுத்தம், பெட்ரோல் , டீசல் என ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன.

ஆகவே திமுக இனியும் காங்கிரசை தூக்கி சுமக்க வேண்டுமா? அதும் தேர்தல் சீட்டு பேரத்தின் போது அவர்கள் அடிக்கும் கூத்துகள், தவிர கூட்டணி கட்சிக்கு மானசீகமாக உழைக்காமை போன்ற இன்ன பிற காரணங்களால் திமுக இனியும் தாமதிக்காமல் காங்கிரசை கை கழுவ வேண்டிய நேரம் இது என நடுநிலையாளர்கள் மட்டுமல்ல திமுகவினரும் விரும்புகின்றனர்.

இதனிடையே எப்போதும் போல ஒரு கோஷமும் இப்போது கிளம்பி உள்ளது அல்லது கிளப்பி விடப்பட்டுள்ளது. திமுக எம் பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும். இது போன்ற கோரிக்கைகள் 2009 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் கூட எழுந்தது. 2009ல் திமுக எம் பிக்கள் ராஜினாமா செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? இங்கே தமிழகத்தில் சட்டமன்றத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் வாங்கி இருக்கும். அதிமுக தன்னிடம் இருந்த சில்லரை எம் பிக்களை வைத்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு முட்டு கொடுத்து விட்டு இங்கே காங்கிரஸ் தயவுடன் மைனாரிட்டி ஆட்சி அமைத்து இருப்பார்.

திமுக ஆரம்பித்த நலட்திட்டங்கள் எல்லாம் அப்போது 25 முதல் 40 சதம் வரை மட்டுமே முடிவடைந்த நிலை. என்ன ஆகியிருக்கும்? 2011ல் திமுக ஆட்சியில் விட்டு போன போது 95 சதம் முதல் 99 சதம் வரை முடிந்த நலத்திட்டங்கள் கூட அதிமுக ஆட்சி வந்த பின்னர் கிடப்பில் போடப்பட்டு அதில் நெம்மேலி கடல்நீரை குடிநீராக ஆக்கும் திட்டம் மட்டும் இப்போது தென்சென்னை வாசிகள் முழுமையாக பயன்படுத்தும் அளவுக்கு இப்போது இரண்டரை ஆண்டுக்கு பின்னர் தான் வேறு வழி இல்லாமல் கொண்டு வரப்பட்டது. மற்ற திட்டங்கள் எல்லாம் என்ன ஆயிற்று? மின் திட்டங்கள் எல்லாம் 80 சதம் பணி முடிந்த திட்டங்கள் கூட அதிமுக அரசு செயல்படுத்தாமல் விட்டு விட்டு தமிழகம் இருளில் மூழ்கிவிட்டது. இந்த நிலை 2011 முதல் தானே. இந்த குபீர் தமிழுணர்வாளர்கள் சொன்னதை கேட்டு அப்போதே 2009ல் நாம் ஆட்சியை இழந்திருந்தால் தமிழகம் இன்னும் ஒரு இரண்டரை ஆண்டுக்கு முன்பே சுடுகாடு ஆகும் பணி ஆரம்பித்து இருக்கும் அத்தனையே! ஆனால் அப்போது 2009ல் ஆட்சி இழந்திருந்தால் ஜெயா டிவி "மைனாரிட்டி திமுக ஆட்சி" என சொல்வது நின்று போயிருக்கும். ஆனால் கலைஞர் டி வியோ "அதிமுக மைனாரிட்டி அரசு" என சொல்லியிருக்காது நாகரீகம் கருதி. இது மட்டுமே நடந்திருக்கும்.

இந்த குபீர்கள் பற்றி ஒரு சில வரிகள் சொல்லியாக வேண்டும். சீமான், நெடுமாறன் போன்ற சிறு கும்பல் குபீர்கள் 2009 முதலே திமுகவுக்கு எதிராக மிக பயங்கரமாக விமர்சித்து வந்தனர். இவர்கள் சொன்ன வாதம், திமுக மத்திய அரசில் இருந்து வாபஸ் வாங்க வேண்டும் அப்படி வாங்கினால் நாங்கள் திமுகவை கொண்டு போய் உச்சாணிக்கொம்பில் வைத்து விடுவோம். அட! என்னே ஒரு சக்தி அவர்களுக்கு! 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட போது  சந்திரசேகர் பிரதமர், கலைத்தவர் ஆர்.வெங்கட்ராமன். என்ன காரணம்? விடுதலைப்புலிகள் நடமாட்டம் தமிழகத்தில். சரி போகட்டும் அதன் பின்னர் வந்த தேர்தலில் இந்த குபீர் பெருமக்கள் திமுகவை உச்சாணிகொம்பில் கொண்டு வந்து வைத்தனரா? இல்லையே. அவர்கள் அப்போது பிறக்கவே இல்லையா? அல்லது ஓட்டு போடும் வயதுக்கு வரவில்லையா? சரி அதல்லாம் போகட்டும். 2011 திமுக ஆட்சி போகும் வரை இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என திருவாய் மலர்ந்த அதிமுக தலைமைக்கு ஆதரவாக பேசி வந்த சீமான், நெடுமாறன் கோஷ்டியினர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களிடம் போய் "என்ன ஆயிற்று உங்கள் கோஷம் இலை - ஈழம் என கேட்டார்களா எனில் இல்லை.

 அவர்கள் தங்கள் போராட்ட வியூகத்தை (??) மாற்றிக்கொண்டனர். ஆமாம் மாபெரும் கோலப்போட்டி போராட்டம். என்ன கொடும இதல்லாம்? மக்கள் இப்போது அவர்களை புரிந்து கொண்டுவிட்டனர். ஆகா இவர்கள் பி.டி உஷா போல வேகம் காட்டுபவர்கள் இல்லை. பிடி கத்தரிக்காய் போல "இனப்பெருக்கத்துக்கு" உதவாத பிண்டங்கள் என்று! அம்மையார் ஆட்சியில் வாய்மூடி மௌனசாமியாராய் இருந்த அவர்கள் இன்று கலைஞர் தலைமையில் "டெஸோ" மீண்டும் புத்துயிர் பெற்றவுடன் மீண்டும் தலையை தூக்கி எட்டிப்பார்த்து திமுக எம் பிக்கள் வாபஸ் வாங்க வேண்டும் என கோஷம் கிளப்பி விட்டுள்ளனர். ஆனால் மறந்தும் கூட அந்த குபீர்கள் அதிமுக எம்பிக்கள் பற்றி வாயை மட்டுமல்ல எதையுமே திறப்பது இல்லை. திறந்தால் என்ன ஆகும் என அவர்களுக்கு தெரியும். இப்போது கூட மாணவர்கள் ஈழப்பிரச்சனை காரணமாக உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி உண்ணாவிரத பந்தலை இழுத்து மூடிய அதிமுக அரசை கண்டிக்காமல் அப்படி செய்த "ஏட்டய்யா" மீது தனது கண்டனத்தை பதியவைத்து தங்கள் வீரத்தை நிலைநாட்டிக்கொண்டுள்ளனர். இதே குபீர்கள் தான் முத்துமுகார் தீக்குளித்த போது கல்லூரிக்கு விடுமுறை விட்டு ஈழப்புரட்சியை மழுங்கடிக்க செய்தார் கலைஞர் என வாயும் ,ஆசனவாயும் கிழிய கிழிய பேசினர். இதே 1964-65ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது மாணவர்கள் 5 மாதம் விடுமுறையில் தான் இன்னும் நல்ல முறையில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர் என அப்போராட்டத்தின் போது மாணவராக இருந்து கொண்டு கலந்து கொண்ட வைக்கோவுக்கு ஏன் மறந்து போனது. லீவ் விட்டால் சினிமாவுக்கு அல்லது வீட்டுக்கு ஓடிவிட வேண்டும் போராட்டம் புஸ் ஆகிவிடும் என சொல்லி மாணவர்களை கொச்சை படுத்தும் இந்த குபீர்களை என்ன சொல்வது?

சரி! 2009ல் இருந்த நிலை இப்போது இல்லை திமுகவுக்கு. காங்கிரசை கை கழுவி விட்டால் இங்கே உடனே அதிமுக ஆட்சி கவிழாது. திமுக ஆட்சிக்கு உடனடியாக வர இயலாது. திமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது அதிமுக ஆட்சியில் நின்று போன மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த இயலாது உடனடியாக. சரி மத்தியில் திமுக ஆட்சியில் பங்கெடுப்பதால் மீதி இருக்கும் ஒரு வருடத்தில் புதிதாய் எதும் கிழித்து விட இயலாது. இதுவரை ரயில்வே நிலைக்குழு தலைவர் பதவி மட்டுமே வகித்து வந்த டி.ஆர் பாலு அவர்கள்  சமீபத்திய ரயில்வே பட்ஜெட்டில்  கூட கிட்டத்தட்ட 15 புதிய ரயில் திட்டம் இன்னும் பல பல திட்டங்கள் தமிழகத்துக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார். பொது பட்ஜெட்ம் போட்டாகி விட்டது. இனி அடுத்த மத்திய பட்ஜட் புதிதாய் பதவி ஏற்கும் மத்திய அரசு மட்டுமே போட இயலும். ஆக மத்தியில் பதவியில் இருந்தால் தமிழகத்துக்கு நன்மை செய்ய  இயலும் என சொல்ல இனி எதுவும் இல்லை. 2ஜிஸ்பெக்ட்ரம் போன்ற திமுகவுக்கு அவப்பெயர்  கொடுத்த வழக்குகளில் கூட திமுகவை பலி கொடுத்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே காங்கிரஸ் இந்தநிமிடம் வரை நினைத்துக்கொண்டு காய் நகர்த்திக்கொண்டு உள்ளது. அதே ஸ்பெக்ட்ரம் வழக்கை விட பெரிய மாஜிக் நம்பர் கொண்ட நிலக்கரி ஊழல் என்ன ஆனது என தெரியவில்லை. அதே ஸ்பெக்ட்ரம் ராணுவத்துக்கு ஒதுக்கியதில் ஐ எஸ் ஆர் ஓ வுக்கு ஒதுக்கியதில் மன்மோகன் நேரடி சம்மந்தம் உள்ள நிலையில் அந்த பிரச்சனை என்ன ஆனது என  தெரியவில்லை. ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் பி ஜே பியிடம் "பாராளுமன்ற விவாதம் மட்டுமே, அதற்கு மேல ஜே பி சி விசாரணை மட்டுமே" என கண்டித்து கூறிவிட்டது போல 2ஜி  வழக்கில் ஏன் சொல்லவில்லை?

ஆக காங்கிரசை நம்பி இனியும் திமுகவுக்கு பலன் இல்லை. மேலும் அவப்பெயர் மட்டுமே மிஞ்சும். உடனே இப்போது சிலர்  "காங்கிரசை விட்டு திமுக வெளி வராது. ஏனனில் மத்திய அமைச்சராக அழகிரி இருக்கும் வரை மட்டுமே அந்த அம்மா கைது செய்யாது. ராஜினாமா செய்தால் உடனே பிடித்து உள்ளே போட்டுவிடும்" என புதிதாக சொல்லிவருகின்றனர். இதல்லாம் சும்மா கதை. அந்த அம்மையாருக்கு ஒருவரை கைது செய்ய வேண்டும் எனில் அது சசிகலா வீட்டு ராவணன் ஆக இருந்தாலும் சரி கைது செய்யும். ஆளானப்பட்ட இந்தியாவின் மூத்த தலைவராக இருந்தவரையே நடு இரவில் கொடூரமாக கைது செய்த அந்த அம்மையாருக்கு அழகிரி கைது என்பது அத்தனை பெரிய விஷயம் இல்லை. தவிர கலைஞர் ரத்த அழகிரி கைதுக்கு பயந்தவரும் இல்லை என்பதை நிரூபிக்கவாவது திமுக தனது எம் பிக்களை ராஜினாமா செய்து விட்டு தன் மீது இருக்கும் காங்கிரஸ் கரையை நீக்கிக்கொள்ள வேண்டும். வீரபாண்டி ஆறுமுகம், கே என் நேரு, பொன்முடி, சுரேஷ்ராஜன் என அதிமுக அரசு வழக்கு போட்டு கைது செய்யாத ஆட்களே திமுகவில் இல்லை. சிறைவாசம், அலைக்கழித்தல் என செய்யவில்லையா? இதே வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை கிடைத்து விட்டதே. லைவ் ரிலே அனால் கொஞ்சம் டிலே என்பது போல அவரது லைஃப் முடிந்த பின் விடுதலை என்பது மட்டும் வருத்தமான நிகழ்வு. மற்றபடி எந்த திமுகவினரும் சிறைக்கு அஞ்சுபவர்கள் கிடையாது. அப்படி அஞ்சினால் அவர்கள் திமுகவினர் கிடையாது. இது தான் திமுக வரலாறு. இன்றைக்கும் பார்க்கலாமே மு.க.ஸ்டாலின் வீட்டில் இல்லாத போது கூட ஏதோ வழக்குக்காக போலீஸ் தேடி வந்தால் அடுத்த நாள் இவர் போலீஸ் வீட்டுக்கு போய் என்ன விஷயம் என கேட்கும் அளவு நெஞ்சுரம் கொண்டவர்கள் தானே திமுகவினர். இதில் அழகிரி அவர்களின் பெயரை கெடுக்கும் விதத்தில் ஏன் ஊடகங்கள் செயல்படுகின்றனர் என்பது புரியவில்லை.

இப்படி வைத்துக்கொள்வோம். ஒரு வேளை அதிமுக தனது ஒன்பது மக்களவை உறுப்பினர்களை இன்றே ராஜினாமா செய்ய சொல்லிவிட்டால் என்ன ஆகும். அதிமுகவுக்கு இழக்க எதும் இல்லை அதனால். இங்கே ஆட்சி கலையாது. ஆனால் அந்த 9 எம் பிக்களால் தமிழகத்துக்கும் பெரிதாக எதும் நன்மையும் மத்திய அரசால் கிடைக்கவும் இல்லை. இவர்களும் கேட்டதும் இல்லை எனும் போது  இன்னும் ஒரு வருஷம் தானே இருக்கு என நினைத்து ராஜினாமா செய்ய சொல்லிவிட்டால் சரித்திரம் என்ன ஆகும்? உடனே இந்த குபீர்கள் சும்மா விடுவார்களா? அதன் பின்னர் வரும் பாராளுமன்ற தேர்தலில் என்ன ஆகும்? இதை திமுக சிந்தித்து பார்க்க வேண்டுமல்லவா?


ஆக உடனடி முடிவாக திமுக காங்கிரசை "கை" கழுவினால் மட்டுமே இந்த குபீர்களால் திமுகமீது பூசப்பட்ட கறை நீங்கும். இது எல்லாம் ஒரு சாதரண திமுக தொண்டனுக்கே தெரியும் என்கிறதெனில் திமுக  தலைமைக்கும் நன்றாக புரியும். ஆனால் இதை எல்லாம் மீறியும் "கறை" நல்லது என திமுக நினைக்குமானால் அந்த "கறை"யை நீக்க எந்த சர்ஃப் போட்டாலும் முடியாது.திமுகவின் கறை போக்க சிறந்த சர்ஃப் என்பதே தொண்டர்கள் தாம். அந்த தொண்டர்களை சோர்வடைய செய்து விட்டு அதாவது எக்ஸ்பயரி டேட் கொண்ட சஃர்ப் போட்டு எந்த கறையையும் எடுக்க இயலாது.

திமுக தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு அதன் படி நடக்கும் ஒரு சாதாரண திமுக தொண்டனின் குரல் இது.

March 10, 2013

அபிஅப்பாவும், ஆரூர் மூனா செந்திலும்! கொஞ்சம் டோண்டு சாரும் உண்டு!

ஆகா! எனக்கு இந்த தமிழ்மணம் அதிலே ஓட்டு, சூடான இடுகை, வாசகர் பரிந்துரை எதிலும் நம்பிக்கை போயே போச்சு. எப்போ டாட்காமா இருந்த என்னை டாட் இன்னா "பேண்ட்" போடவிட்டாங்களோ அன்னிக்கு நளதமயந்தி மாதவன் மாதிரி விசுக்கு விசுக்குன்னு வலது காலை தூக்கி இல்லாத வேட்டியை அனிச்சையா மடக்கி கட்டினவன் தான். நேத்து வரை கட்டி கிட்டு கிடந்தவனை ஆரூர் மூனா செந்தில்தான் கூட்டிட்டு போய் உனக்கு பேண்டு சட்டை வாங்கியாறேன்னு சொல்லி அழகு பார்த்தாரு. சரி ஒரு நன்றி சொல்லுவோமேன்னு ஒரு ட்ராஃப்ட் அடிச்சு அதை "சேவ்" செய்கிறேன் பேர்வழின்னு  சேவ் செய்ய போனா "ஆரூர் மூனா செந்தில் already exists''...சரின்னு செந்தில் திருவாரூர், செந்தில்,எல்லாம் அடிச்சு பார்த்தா அதே போல வருது. சரின்னு ஒரு முடிவோட அதை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு ஆரூர் மூனா பூனா செந்தில்னு கூட அடிச்சு பார்த்தேன்... அட தக்காளி ... அதும் அல்ரெடி எக்சிஸ்ட்... ஆக இந்த செந்திலை நான் இரவு முழுக்க கடிச்சு கடிச்சு தின்னுருக்கேன்.அந்த மகாபாவிக்கு தான் இப்ப நன்றி சொல்லனும். என் சைஸ்க்கு இருந்தா சாதா  பாவி. கொஞ்சம் நார்மலா இருந்தா கூட ஸ்பெஷல் சாதா பாவின்னு வச்சுக்கலாம். ஆனா இவரு என் தம்பிக்கு போட்டியா இருப்பாரே... அதனால மகாபாவி... (அய்யோ ..முடியல..என்னால சப்ப கட்டு கட்ட முடியல...)

அந்த மகாபாவி என்னான்னா என்னை ஆகாஓகோங்குது.என்னை இதுவரை எழுத்துக்காக புகழ்ந்தது ரெண்டு பேர் தான். ஒரு நாள் காலைல ஆரூர் மூனா செந்தில். அவர் தான் இரவும் புகழ்ந்தார். ஆக ரெண்டு பேர். சமீபமா நான்  மதுவும் அருந்துவதில்லையா... உடனே ஓடிப்போய் அந்த ட்ராஃப்டை எல்லாம் படிச்சு செத்துட்டேன். அட, என்ன ஒரு கேவலமான விஷயத்துக்கு எல்லாம் ஆரூர் மூனா செந்திலை திட்டி இருக்கேன்...  அப்படின்னு நினைச்சு கிட்டு இருக்கும் போதே திடீர்ன்னு செந்தில் கிட்ட இருந்து ஒரு பின்னூட்டம் வருது. நீங்க உங்க பதிவை டாட் காம்ல மாத்தினா நீங்க தான் மகுடம்... இப்படியாக... மேலும்  ஒரு கோப்பையில் காசி ஆறுமுகம்,பில்கேட்ஸ், குழலி, பொன்ஸ்,  மயிலாடுதுறை சிவா, பெயரிலி எல்லாரையும் சம அளவில் போட்டு கலக்கவும் என செய்முறை வேறு....

செஞ்சேன்... அட ஆமாம் டபார்ன்னு டெஸ்ட் ட்யுப்ல அடில இருந்து ஒரு இண்ச் மேல கரு வளையம். சுரேகா ,ஷ்ரேயா ன்னு கத்திகிட்டேன் .நானும் நளதமயந்தி கிளைமாக்ஸ் மாதவன் மாதிரி கோட்டு சூட்டு ஆளாகிட்டேன். இன்னிக்கு நானும் மகுடமாம். இதல்லாம் எனக்கு அதிகம் கேட்டோ.....

ஆனா ஒன்னு என் அன்பான செல்ல எதிரி என் அன்பான ஆரூர் மூனா செந்திலுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

இதையே சொல்லிகிட்டு இருந்தா... அனேகமா செந்திலே கடுப்பாகிடலாம்...  நெக்ஸ்ட்....

இந்த செந்தில் இருக்காரே செந்தில்... (அய்யோ... இன்னிக்கு செந்தில் ப்ராணமாவே ஆகிடுச்சு. (அட தேவுடா ..அந்த ஆளு ஒரு 'ஆம்பளை ஆளு பிரா போட்ட' படத்தின் விளைவு...புராணம் 'ப்ரா'னம் ஆகிடுச்சு)..இந்த ஆள் குடிச்சா நல்லா எழுதுவாரு. ஆனா சிலர் குடிச்சா குழப்பம் ஆகிடுவாங்க.

இப்படித்தான்... ஒரு நாள் டோண்டு சார் இறந்துட்டாரு. உடனே ஒரு பதிவு போட்டேன் பேஸ்புக்ல. இதான் என்னால் செய்ய முடிஞ்ச அஞ்சலி. அதை விடுங்க. பகல்ல பதிவு போட்டாச்சு. சும்மா இருக்குமா மனசு, அதும் ராத்திரில.... போனை போட்டேன் டோண்டு சாருக்கு.

"சார்"
"நான் சார் இல்லை சாரி"

"அதன்ன சார் செத்து போனா பெண்பாலா ஆகிடுவாங்கலா. சாரின்னு சொல்றீங்க"

"அந்த சாரி இல்லை, இது இங்கிலீஷ் சாரி அதாவது sorry"

"மன்னிக்கனும்... ஐ நீட் டு ஸ்பீக் வித் டோண்டு சார்"


அடுத்து ஆம்பளை குரல்.... டோண்டுவே தான்...

சித்தப்பா என்னா எப்டி இருக்கீங்க?

"அட போங்க டோண்டு சார்... மொதல்ல பொம்பளை கொரல் இப்ப ஆம்பளை கொரலா"

"சரி சித்தப்பா, உங்களுக்கு ஓவர் ஆகிடுச்சு"

"யோவ் அது இல்லய்யா. நீர் செத்ததுக்கு அஞ்சலி சொல்ல வந்தேன்"

"ரைட்டோ... நடத்துங்க"

"யோவ் நான் என்ன உன் வூட்டு வாத்தியாரா? உம்ம காரியம் நடத்துவதுக்கு?... நான் ஒரு ஓரமா ஒக்காந்துட்டு போய்டுவேன்"

"சரி போங்க"

"ஆனா ஒன்னுய்யா ... செத்த பின்னயும் பேசுற பாரு... நீர் மனுசன்"

"ஆமாம்... "

"என்ன ஓமாம்"

"நான் இன்னும் சாகலை'

"இந்த உம்ம ...பீக் .....தன்னம்பிக்கை...பீக்... தான்யா ...பீக் பீக்...எனக்கு புடிச்சது.....க்"

"ங்கொய்யால வச்சுட்டியா... ஆனா காலைல திரும்பவும் பேசுவேன்"

குப்புற அடிச்சு படுத்துட்டேன்.

காலைல என் மனைவி எழுப்பினாங்க. பார்த்தா பத்ரகாளி மாதிரி நிக்கிறாங்க.

"என்னாங்க"

"சொல்லுங்க"

"ஏன் தண்டபாணிக்கு போன் செஞ்சீங்க? என்ன பேசுனீங்க? அவன் எங்க அக்காவுக்கு ஒத்தை பையன். அவன் செத்துட்டதா அவனையே கேட்டிருக்கீங்க... இதல்லாம் நல்லா இருக்கா? "

"இல்லையே, என் போன் காணாம போச்சு நேத்திக்கு கடைத்தெரு போகும் போது" என சொல்லிக்கொண்டே எடுத்து அடியில் வச்சுகிட்டேன். அந்த நேரம் எவனோ போன் செய்ய அது கிர்ர்ர்ர்ர் என நான் உடம்பை தூக்கி தூக்கி போட்டேன்.

பின்ன தான் தெரிஞ்சுது அந்த தண்டபாணியை "dandu" எனவும் நம்ம டோண்டு சாரை "dondu" எனவும் வச்சி தொலைஞ்சி இருக்கேன்.. நல்ல வேளை தண்டபாணி வீட்டுக்கு எழவு கேட்க போகலை!

இந்த குடியால் வரும் குழப்பங்கள் பத்தி இன்னும் ஒரு நாள் விலாவாரியா பேசுவோம்! இன்னும் ஒரு நாள் ......என்ன நாளையே கூட பேசலாம்! நீங்க எல்லாம் விரும்பினாக்க....

குறிப்பு: இது டோண்டு சாரை அவமதிக்கும் பதிவு இல்லை. இறந்தாலும் நம்ம கூட இருக்கார் என சொல்லும் ஒரு சின்ன நினைவூட்டல். அத்தனையே!

March 9, 2013

எம்பியே படிக்கலாமா அல்லது குந்திகிட்டு அருமையா படிக்கலாமா?

நேத்து ஒரு பதிவு எழுதினேன். அட, ஆச்சர்யம்...என் பழைய நண்பர்கள் எல்லாரும் வந்து தொலைபேசியிலும், பின்னர் தனி மடலாகவும் "ஹாய் அபிஅப்பா ஹவ் ஆர் யூ" என கேட்க எனக்கே ஒரு ஜில்லாகிப்போச்சு. பொடி விஷயம் பத்தி சிலர் சிலாகிச்சு சொன்னாங்க. அந்த பொடி மேட்டர் பதிவிலே இன்னும் ஏகப்பட்டது பாக்கி பொடி இருக்கு. பொடி வச்சுல்லாம் பேசலை. நெசமாவே பாக்கி பொடி இருக்கு. அதை இன்னிக்கு என்னோட "இட்லி நெய் ஜீனி" வரிசை பதிவிலே போட்டுடலாம் என ஆசை! ஆனா போடலை. ஏன்னா தினம் தினம் இனி காமடி பதிவு மொக்கை போட இருக்கேன். இன்னிக்கு பொடி பார்ட் டூ....

பொடி சமாச்சாரம்:

அனேகமா இதை எழுதி இருக்கலாம் நான். நான் நாய் வாய் வச்ச மாதிரி இணையத்தில் எல்லா இடத்திலும் இருப்பதால் எங்க எழுதினேன் எந்த சூழலில் எழுதினேன் என தெரியலை... அனேகமாக எழுதாமலும் இருக்கலாம்.

அதாவதுங்க பொடி இருக்கே பொடி... அந்த மனிதர்கள்... ஒரு தனி ஜாதி. அந்த ஜாதில ஆரியர், திராவிடர், ஆதி திராவிடர், கலப்பினர், இந்து, முஸ்லீம், கிருத்துவ என எந்த பிரிவும் கிடையாது. ஒரே சமத்துவம் தான்.அவசரத்துக்கு  ஒரு பாதிரி ஒரு குருக்கள் கிட்டே ஒரு சிட்டிகை கொடுன்னு மூக்கை நீட்டி கேட்டா போதும் கிடைச்சிடும். அது போல நேத்து பதிவிலே ஒரு பின்னூட்டம் "எல்லாருக்கும் பொடி கடைல ஃப்ரீயா பொடி கொடுப்பாங்கலாமே"ன்னு . இல்லை. கண்டவனுக்கும் கொடுக்க மாட்டாங்க. அவங்க ஜாதிக்காரனுக்கு கொடுப்பாங்க. அது பொடி ஜாதி.

12 இஞ்சிக்கு ஒரு தராசு பார்த்து இருக்கீங்களா? ...யெஸ்.. அதே தான்.. நகைக்கடையில் இருக்கும். 5 கிராம் படிக்கல் பார்த்தது உண்டா? நீங்க தினம் போகும் கத்திரிக்காய் கடையில்... இருக்காது... ஆனா ஜுவல்லரில இருக்கும். ஆக பொடியும், தங்கமும் ஒன்னு. ஆமாம் இங்க மட்டும் தான் 5 கிராம் படிக்கல் இருக்கும். ரொம்ப குழியா இருக்கும் அந்த ஒரு தட்டில் (தட்டில்னு சொல்லக்கூடாது... குழியில் 5 கிராம் பொடியை ஒரு நீண்ட சில்வர் கரண்டி... கரண்டின்னா குழம்பு கரண்டி இல்லை... அதோட மினியேச்சரின் மினியேச்சர்... அதை அந்த வடலூர் வெள்ளைக்களிமண் ஜாடில இருந்து (அந்த காலத்திலே நாம ஊறுகாய் வைப்போமே...அது போல ஜாடி) டிங் டிங் னு எடுத்து போடுவார். 5 கிராம் படிக்கல் அவசரத்துக்கு கிடைக்கலைன்னா தன் மோதிரத்தை எடுத்து போடுவார் அந்த கடைக்காரர். கவனிக்க...எத்தனை ஒரு துள்ளிய வியாபாரம்....

ஆக பொடி போட்டாச்சு...."விஸ்க்...".. நோ நோ.. தராசிலே போட்டாச்சு... இத்தனை துள்ளியமா கொஞ்சம் கூட கூடாம குறையாம போடும் அந்த ஆளுங்க பொடியை "ஃப்ரீயா"வா கொடுப்பாங்க. மாட்டாங்க. ஆனா கொடுப்பாங்க. ஏன்னா.... இருங்க பதிவை படிச்சு முடிங்க..... பின்ன தெரியும்..

சரி பொடியை எடை போட்டாச்சு. அதை எப்படி டப்பாவிலே மாற்ற வேண்டும்? .... கால் கிராம் அல்லது குண்டுமணி அளவு கூட வெளியே போகக்கூடாது. என்ன செய்யலாம்? அங்க தன் இருக்கு லாவகமே! வந்தவர் கிட்டே இருக்கும் வெள்ளி பொடி டப்பா அல்லது தகர டப்பா வை வாங்கி அதை மூடி கழட்டி அதை அப்படியே தராசு தட்டில் (குழி கிண்ணத்தில்) கவிழ்ப்பாரு. அந்த ஒன்னரை செண்டி மீட்டர்  டயா உள்ள வட்டமும் , ஒன்னரை இன்ச் நீளமுமான உருளை டப்பா வின் உள்ளே அந்த பொடி போய்டும். பின்ன அடுத்த அடுத்த இடத்தில் அந்த குழி கிண்ணத்தில் அமுக்கினா சபாஷ்....எல்லா பொடியும் 5 கிராம் பொடியும் உள்ளே போய்டும்!

கடைக்காரர், கஸ்டமர் இருவரும் ஹேப்பி.... உடனே அதை மூடி வேட்டில சுருட்டிப்பாங்க. ஆனா ஒன்னு மட்டும் முக்கியம். அந்த உருளை டப்பாவில் கீழே காத்து தான இருக்கும். (அதன் கொள் அளவு 23 கிராம்) அதனால மூடியை தட்டிட்டு தான் பொடி போடனும். இப்ப தெரியுதா? ஏன் பொடி போடும் பழைய நடிகர்கள் சாரங்கபாணி பிள்ளை, டி ஆர் ராமச்சந்திரன், எஸ் வி சுப்பையா என எல்லாரும்  டப்பிய தட்டிட்டு போடுறாங்கன்னு....

இந்த மாயவரம் மக்கள் மாத்திரம் ஒரு விஷயத்தில் ரொம்ப உறுதியா இருப்பாங்க. காபி பொடி வாங்கினா 50 கிராம். பொடி வாங்கினா 5 கிராம். ஏன்னா "அன்னின்னிக்கு யூஸ் பண்ணா தான் ஃப்ரஷா இருக்கும்டா" . அடிங்கொய்யால..

இன்றைக்கு மணிவண்ணன் என்னவோ துள்ளாதமனமும் துள்ளும் படத்திலே குவாட்டர் பாட்டிலை கீழே தட்டி மேலே ஓப்பன் செய்வதை அதிசயமாக பார்க்கும் வாசகர்களே, நான் சொன்ன இந்த அறிவியல்பூர்வ காரணம் இப்போது புரிகின்றதா?

இதிலே ஒரு கணக்கு பாடம் கூட சொல்லி இருக்கேன். ஒரு உருளை, அதன் விட்டம் ஒன்னரை செண்டி, உயரம் ஒன்னரை இண்ச், கொள்ளளவு எத்தினின்னு இன்னிக்கு என் பொண்ணு அபிகிட்ட கேட்டா படார்ன்னு சொல்லுவா இத்தினி கிராம் மூக்கு பொடின்னு. அவ அதுக்கும் மேலயும் சொல்லுவா... "ஒரு அன் சைஸ் மூக்குக்கு இத்தினி கிராம் தேவைப்படும். அதிலே இத்தனை நாத்தம் வரும், இத்தனை தும்மல் வரும், இத்தனை கைக்குட்டை துவைக்கனும்" என்கிற சரியான கணக்கு சொல்லுவா. அதை விடுங்க....

இதை எல்லாம் விடவும்... நான் விட்ட இடத்துக்கு வர்ரேன். ஒரு நண்பர் போட்ட பின்னூட்டத்துக்கு வரேன். பொடி ஒரு சிட்டிகை "ஃப்ரீயா" தருவாங்கலாமே??

நோ நோ... அதன் பின்னால் ஒரு பெரிய தாத்பர்யம் இருக்கு. இன்றைக்கு எம்பியே படிக்கும் மாணவர்கள் கூட அன்றைக்கு பொடிக்கடையில் உட்காந்தே படிச்ச விஷயம் அது!

ஆமாம்... இங்க தான் என் அப்பா கிட்டே வரேன். என் அப்பா படிக்கும் காலத்தில்... அட .. படிச்சாங்கப்பா..நம்புங்க.. டி பி டி ஆர் நேஷனல் ஸ்கூல்ல அது ஒரு பெரிய செட்டு. சேவிங் செட்டுல்லாம் இல்லை. நிஜமாகவே பெரிய செட்டு. எங்க பள்ளியில் நான் ஆசிரியராக இருக்கும் போது படிச்சவங்க. (அய்யோ... குழப்பிட்டேன்) நான் படிக்கும் போது ஆசிரியரா இருந்தவங்க. என். வி சார், எம் ஆர் சார், என் அப்பா வைத்தியநாதன் என்னும் வைத்தா , என் பெரியப்பா செல்வரத்தினம் என்னும் செல்வராஜ்ன்னு... ஒரு பெரிய கூட்டம்...இதிலே பெரிய கூத்து என்னான்னா  பி ஆர் சார் என் அப்பாவுக்கு வாத்தியார், எனக்கும் வாத்தியார்!

(அந்த பி ஆர் சார் தான் நாங்க படிக்கும் போது ஹெட்மாஸ்டர்! எல்லாரையும் அவங்க அப்பா பேரை சொல்லி தான் கூப்பிடுவாரு. டேய் வைத்திநாதான்னா நான் எந்திருக்கனும் என நான் பின்னர்  ஃபாரின் போவதுக்கு பாடம் எடுத்தவர் அவர். இமிக்ரேஷன்ல அப்படித்தான் கூப்பிட்டு தொலைப்பானுங்க, அது போல நடராஜான்னா பாலுவும்... டேய் உப்பிலின்னா நம்ம நம்ம பிரண்டும்... இப்படியாக... உப்பிலியை நான் இப்பவும் உப்பிலின்னு தான் கூப்பிடு தொலைக்கிறேன்... மாத்திக்கனும்டா தோழா)


டபார்ன்னு சில பாரா மாறிடுங்கப்பா... நான் கொஞ்சம் ஸ்கூல் விஷயம் அனத்திக்கனும்...


{பி ஆர் சார் இருக்காரே ... எங்க இருக்காரு அவரு போயாச்சு.... அவரு ஒரு காங்கிரஸ் ஆள். ஒரு நாள் "டேய் வைத்தி ...எந்திரிடா ..நான் நல்ல மூட்ல இருக்கேன்... நான் ஒரு பாட்டு பாடுறேன்... அது யார் கீர்தனைன்னு சொல்லு....நீதான் பெரிய இசைக்குடும்பம் ஆச்சே"

பாடினார். பாடினார்... பிட் அடிக்க வழி இல்லை. என்ன செய்யலாம். பக்கத்திலே இன்றைக்கு நன்னிலம் ஊராட்சி மன்ற பெருந்தலைவராகவும் இருக்கும் அதை விட பெரிய பதவி ஒன்றிய செயலர் வரத.கோ. ஆனந்த் சொன்னான்..."மாப்ள எப்டியும் அந்தாளு காங்கிரஸ்... அடிச்சு விடுடா காமராசர் பேரை"...

நான் சொன்னேன்... சார் காமராஜர்!

அவர் கொஞ்சமும் கோவமாகலை! "நான் இன்னிக்கு ரிட்டையட் ஆகிறேன்"

நான் சொன்ன பதிலாலயான்னு இது வரைலை!  எனக்கு தெரியலை. அதை விடுங்க!}

இதிலே அதிஷ்டவசமா என்.வி சார் என்னும் என். வெங்கட்ராமய்யர் (என் பள்ளி ஆசிரியர்) அவருக்கு கிட்ட தட்ட செகண்டு ஃபாரம் படிக்கும் போது அவரோட வீட்டுக்கு வேதம் படிக்கும் வரும் வாத்தியார் கிட்ட இருந்து லைட்டா பத்திகிச்சு பொடி.

ஆனா அவங்க அப்பாவோ ரொம்ப பெரிய வைதீகர். ரொம்ப கட்டுப்பெட்டியான ஆள். தன் பொடி டப்பாவை தன் மகன் கண்ணுக்கு காட்டவே மாட்டாரு. விடுவாரா என்.வி. உடனே காசு கொடுத்து காலணா கொடுத்து ஒரு டப்பா வாங்கினாரு நம்ம டி ஏ எஸ். ரத்தினம் பட்டணம் பொடிக்கடையிலே. இருங்க.... அங்க தான் நிக்கிறாரு நம்ம என். வி. சார்.... தான் அதை போடலை. தன் சக நண்பர்களுக்கு "ஃப்ரீ டிஸ்ட்ரிபூஷன்" . ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை. கிட்ட தட்ட 4 நாள். 5 வது நாள் இவரு வாங்கலை. பசங்க , அதாவது அவரோட நண்பர்கள் என் அப்பா, பெரியப்பா, எம்.ராமச்சந்திரன் சார் உள்ளிட்ட எல்லோரும் வந்து கேட்க அவரு "இல்லைடா மோனே... அவ்விட டுனீஷியா வெற்றி சின்னம் மணிக்கூண்டு கிட்டே போனா டி ஏ எஸ் ரத்தினம் பட்டிணம் பொடிக்கடை இருக்குமோல்யோ...."ன்னு சொல்ல.. இவா எல்லாம் அங்க ஓடினா ஓடினா... செம ஓட்டம்...

ஆளுக்கு ஒரு டப்பா... பி ஆர் சார் கணக்கு பாடம் எடுக்கும் போதெல்லாம் ஒரே சர் சர் சர் சத்தம் தான். அவருக்கு சர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு கோவம் வந்துடுச்சு. "டேய் கம்மனாட்டிகளா! எவனோ மூக்கு பொடி போடுறான். அவனா எந்திரிச்சு வந்தா உத்தமம். இல்லே நானா கண்டு பிடிச்சா அந்த பொடி டப்பாவை அபஷ்கரிச்சுடுவேன்" என மிரட்ட ஒட்டு மொத்த வகுப்பும் எழுந்து நிக்குது.

பி.ஆர் சார் கண்ணுல ஜலம். இத்தனை பேர் கெட்டு போனாலும் என். வெங்கட்ராமன் மாத்திரம் ஸ்பஷ்டமா அவா தோப்பனார் மாரி இருக்கானே"ன்னு கண்ணுல ஜலம். அவரை கூப்பிட்டு கட்டிண்டார்"

எல்லாம் முடிஞ்சுது. அரைவெட்டு அடிச்ச அத்தனை பார்ட்டியும் (எல்லாரும் அப்போ அரைவெட்டு குடுமி தான்) என். வியை சுத்தி கிட்டு "அது எப்டிடா நீ மட்டும் பொடி டப்பா வைச்சுக்கலை" என கேட்க அவரு....

"டேஸ் ஃபூல்ஸ்... நேக்கு ஒரு நாளைக்கு எட்டு தரம் இழுத்தா போதும். அதுக்கு காலணா ஆகும். அதை எட்டு பேருக்கு பழப்படுத்திட்டா அவா நேக்கு ஒரு இழுப்பு தர மாட்டாளா... ஆனா இத்தனை பேர் இழுப்பேள்னு நேக்கு தெரியலைடா.... அதனால நான் டப்பா வாங்கலை"ன்னு சொன்னாராம்.

இப்ப புரியுதா? ஏன் அந்த பொடிக்கடையிலே பொடி ஃப்ரீயா தந்தாங்கன்னு? அடுத்து இப்ப தெரியுதா ஏன் டி பி டி ஆர்ல படிச்சவன் எல்லாம் இப்படி இருக்கான்னு? M.B.A க்கு பால பாடம் கத்து கொடுத்ததே இந்த சின்ன பொடி விஷயம் என்பதை நீங்க மறுக்க இயலுமா?

(பை தி பை... என் மகள் அபி இப்போ பத்தாவது பரிட்சை போகிறா, என் தம்பி பையன் சர்வோவும் தான் ... இருவருக்கும் உங்கள் ஆசிகள் வேண்டும்... இனி ஒரு 20 நாள் நான் இது போல காமடின்னு பேர்ல அனுபவ மொக்கை மட்டுமே போடுவேன். நோ அரசியல்... வாங்க ப்ளீஸ்)



March 8, 2013

இது ஒரு பொடி விஷயம்!



உடனே நீங்க இது ஒரு சின்ன விஷயம்னு நினைச்சா நான் அதுக்கு ஜவாப்தாரி இல்லை. நிஜமாகவே "பொடி" விஷயம். இந்த பொடி இருக்க்கே பொடி... அதுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு கால நட்பு. என்னவோ கலைஞரும் எம் ஜி  ஆரும் நட்பு மாதிரி நினைச்சுக்காதீங்க. நிஜமாகவே நாற்பது ஆண்டு கால நட்பு.

எங்க வீட்டிலே பொடி போடும் ஆட்கள் என பார்த்தா நான் சின்னதா இருக்கும் போது.. அதாவது ஒரு ஆறு அல்லது ஏழு வயசு... என் சித்தப்பா... ராமசாமி ...சித்தப்பா அப்போ இளைஞர்..தீவிர திமுக... அல்லது திமுக தீவிரவாதி எப்படி வேண்டுமானா வச்சுக்கலாம். அவரு கடந்த கி.மு காலத்தில் இருந்தே  இருந்தே அண்ணா பக்தர்.

இப்போ சமீபமா டாக்டர் அன்புமணி சொல்றாரே, ஒரு தலைவனை பார்த்து தான் தொண்டன் கெட்டு போறான்னு அது மாதிரி அண்ணாவை பார்த்து பொடி போடும் பழக்கத்துக்கு ஆளானவர்  சித்தப்பா. அஃப்கோர்ஸ் என் அப்பாவும் தான். காலையில் முறைவாசல் செய்ய வரும் அம்மா முதலில் திண்ணையில் தூங்கும் சித்தப்பா தலையணிக்கு அடில கை விட்டு பொடி டப்பா வை எடுத்து சாக்கடைல போட்டுட்டு தான் அன்றைய சண்டையை ஆரம்பிபாங்க. (என் அம்மா அப்பா கல்யாணத்தின் போது சித்தப்பாவுக்கு பத்து வயது தான்)



அண்ணா மாயவரத்துக்கு பொதுக்கூட்டம் வரும் போது வலது பக்கம் கிட்டப்பாவும் இடது பக்கம் தம்பி தேவேந்திரனும் இருப்பாங்களாம். அண்ணா ரொம்ப வீரியமா பேசிகிட்டு இருக்கும் போது வலப்பக்கம் கை நீட்டி "இதோ இருக்கிறாரே தம்பி கிட்டப்பா" என சொல்லும் அந்த கேப்ல கிட்டப்பா ஒரு சிட்டிகை பொடியை அண்ணாவின் வலது கையில் மணிக்கட்டும் முழங்கை மூட்டுக்கும்  இடையே வைப்பாராம், அடுத்த நொடி...இதோ இருக்கும் தம்பி தேவேந்திரன் என சொல்லி இடக்கை காட்டும் போது அந்த இடைப்பட்ட 2 நொடிகளில் அண்ணா தன் வலக்கையை மூக்கின் அருகில் கொண்டு போய் சர்ர்ர்ர்ரிடுவாராம். இப்படியாக சிலாகிக்கப்பட்ட காலம் அது!

அதல்லாம் சின்ன வயசு. பின்ன எனக்கும் பொடிக்கும் ஆன பழக்கம்னு பார்த்தா நான் 8ம் வகுப்பு படிக்கும் போது தான். எம்.பி ராதாபாய் அம்மாள்.... அதாவது உங்களுக்கு புரியனும்னா இப்ப சினிமாவிலே பாடுறாரே மாணிக்க வினாயகம் அவரோட சொந்த அப்பாவின் சொந்த தங்கை இவங்க. இவங்களும் எம் கே ராதாவும் சேர்ந்து நடிச்ச "மாயா மச்சீந்திரா" விலே எம் ஜி ஆர் ஒரு துணை நடிகர். அப்படின்னா பார்த்துகுங்க. அடுத்து குழந்தையம்மா. இது யாருன்னா நம்ம டி ராஜேந்தரின் பாட்டி. அதாவது டி ஆரின் அம்மா பேபி அம்மாளிம் அம்மா!

இவங்களுக்கு நான் தான் "வெப்பன் சப்ளையர்" . பொடிக்கு நாலணா எனக்கு நாலணா என அக்ரிமெண்ட். ஏன்னா அப்போ ராஜேந்தர் எல்லாம் சினிமாவுக்கு போய்விட்டபடியாலும் என்னை விட்டா அந்த பாட்டிகளுக்கு வேற பார்ட்டி எதும் கடைக்கு போக இல்லை என்பதாலும்...நான் தான் போய் பொடிக்கடைல பொடி வாங்கி வரனும்!

பொடிக்கடைன்னா மாயவரத்திலே  ஏ. வெங்கட்ராமன் அய்யர் கடைக்கு அடுத்த கடை. மணிக்கூண்டு பக்கத்தில்!

ஒரு நிமிஷம்..மொதல்ல ஏ. வெங்கட்ராமன் அய்யர் கடை பத்தி சொல்லிடுறேன். அவருக்கு இது நூற்றாண்டு ஆண்டு. அது ஒரு பக்கம் இருக்கட்டும். மக்கள் கொடுத்த காசுக்கு வஞ்சகம் இல்லாம தொழில் செய்யனும்னு நினைக்கும் ஒரு ஆத்மார்த்தமான கடை. அவங்க கடையை ஏ. வெங்கட்ராமன் அய்யர் கடைன்னா பழைய ஆளுகளுக்கு தெரியாது. "மர்ஃபி வெங்கட்ராமன் அய்யர் கடை"ன்னு சொன்னா தான் தெரியும். அது என்ன மர்பி? அது ஒரு பேமஸ் ரேடியோங்க. அதுக்கு சிம்பல்ன்னா ஒரு அழகிய குழந்தைதான். அவங்க கடை ஷட்டர்ல அந்த குழந்தை படம் இருக்கும். 1 சி - திருச்சிற்றம்பலம் பஸ்ல இருந்து வரும் பெண்கள் "யாத்தீ கேட்டியா இந்த கூத்தை... இந்த குழந்தை டெல்லி பட்டணமாம். எல்லாரும் கண்ணு வச்சி கண்ணு வச்சி செத்தே போய்டுச்சாம்..பாவம்டீ"ன்னு பேசுவதை நானே பலமுறை கேட்டுள்ளேன். இவங்க இப்ப சோனி டீலர்.. காலம் மாறிகிட்டே வருதுல்ல...நிற்க...

அதுக்கு அடுத்த கடை தான் இந்த டி. ஏ எஸ் ரத்தினம் பட்டிணம் கடை. அதுக்கு அடுத்த கடைன்னா அது கல்கத்தா விஸ்வநாத்ன்னு ஒரு சேட்டு கடை. ஸ்வீட் கடை. தாடி வச்ச சேட்டு விஸ்வநாத் இருப்பரு. கொசிறு கொடுப்பாரு. நல்லவரு. அதை எல்லாம் விடுங்க. நாம பொடிக்கடைக்கு பொடி நடையா போவும்!

அங்க என்ன விஷேஷம்னா காவிரில முழுக்குன்னா இங்க களை கட்டும். ஒரு ஆள் (லைஃப் சைஸ்) பொம்மை... ஒரு தொட்டி வச்சுகிட்டு ஒரு உலக்கை வச்சு கிட்டு பொடி இடிப்பாரு. என் அப்பால்லா "டெக்னாலஜி ஈஸ் இம்ப்ரூவ்டு டூ மச்"ன்னு சொல்லி கிட்டு போவாங்க. நாங்க அதை எல்லாம் வேடிக்கை பார்க்க போவோம்.

இப்படியான ஒரு பேமஸ் கடை.... அதிலே போய் "அய்யா நாலணாவுக்கு பொடி கொடுங்க"ன்னு கேட்டா ஏற இறங்க பார்த்துட்டு "ச்சே போடா"ன்னு திட்டுவாங்க. புரியலைல்ல உங்களுக்கு? இருங்க புரியும் படி சொல்றேன்... டாஸ்மாக்ல போய் புதுசா குடிக்க வந்தவன் "சார் ஒரு பெக் பீர் குடுங்க"ன்னு கேட்டா அந்த பணியாளருக்கு எத்தினி கோவம் வரும்? அதான்.. ஓக்கே கேரியான்... மேல போவும்..

"அண்ணே, ராதாம்மாக்கு பொடி வேணும், நெய்ப்பொடி, இன்னிக்கு நெய் கம்மியா ஆனா வேதாரண்யம் கொஞ்சம் ஜாதாவா, லைட்டா "அது" தூக்கலா"

இதான் இன்னிக்கு எனக்கு ராதாம்மா சொன்னது. ராதாம்மாவுக்கு ஒரு ஒரு நாளும் வித வித காம்பினேஷன்ல தேவைப்படும். அது எல்லாம் அவங்க சொன்ன மாதிரி அங்க சொன்னா அவங்களுக்கு புரியும். பொடின்னா நீங்க ஊதித்தள்ளிடலாம்னு நினைக்கும் பொடி இல்லை. ராதாம்மாவுக்கு கொடுப்பது ஒரு நாள் ஊதி தள்ளுவது மாதிரி இருக்கும், ஒரு நாள் பிசின் போல இருக்கும்...இப்படி பல வகை!

ஒரு நாள் கடைக்காரன் என்ன கடுப்பில் இருந்தானோ, அல்லது நான் என்ன கடுப்பில் இருந்தனோ ராதாம்மா சொன்ன காம்பினேஷன் நான் சரியா சொல்லலை போலிருக்கு... போய் பொடியை கொடுத்ததும் 'எலேய் போய் தங்கப்பனை குதிரை வண்டி கட்ட சொல்லுடா"ன்னு சொன்னாங்க. மீண்டும் சைக்கிள்ல வந்து பொடி கடை பக்கத்தில் வந்து தங்கப்பனை "ராதாம்மா வர சொன்னாங்க" என சொன்னதும் "அம்மா கோவமா சொன்னுச்சா சாந்தமா சொன்னுச்சா"ன்னு அவன் வியாக்யானம் பேசுறான்.

ஆச்சு! ராதாம்மா வந்தாச்சு. உடம்பு முழுக்க நகை! வந்து டி ஏ எஸ் ரத்தினம் பட்டிணம் பொடிக்கடை வாசல்ல இறங்குச்சு. ராதாம்மா வந்ததும் ஏ. வெங்கட்ராமன் அய்யர் , கண்ணப்பன் அய்யர், மிட்டாய் கடை சேட்டு, வாதாமரத்து செட்டியார் என எல்லாரும் வந்தாச்சு. பொடியை தூக்கி போட்டு "தங்ங்கப்பா கட்டுடா வண்டிய, எலேய் ... ஒனக்கும் எனக்கும் இனி செத்தா வாழ்ந்தா இல்ல. ஒரு யாவாரம்...அதுல நாயம் இல்லை..என்ன கடை நடத்துற... தோ இங்க சுத்தி இருக்கும் அய்யாங்க எல்லாம் அய்யருமாருங்க எல்லாம் யாவாரம் பார்கலையா... ந்தா.. அந்த வந்தேறி சேட் கம்னாட்டி என்னவா நடத்துறான்"ன்னு சொல்லி கெளம்பிட்டாங்க. சேட்டுக்கு ஏண்டா இங்க வந்தோம்னு ஆகிடுச்சு.

எனக்கு கை கால் எல்லாம் நடுங்குது. ஆக இதுதான் எனக்கும் பொடிக்கும் உள்ள பந்தம்!

இதை எல்லாம் எதுக்கு சொல்றேன்னா,... கமான்.. கதைக்கு வாங்க.. அப்படியான எனக்கு ஒரு நாள் கண்ணாலம் ஆச்சுது. முதல் நாள் என் மனைவி கேக்குறாங்க. "ஏங்க பொதுவா மனுசன்னு பொறந்தா சில பல கெட்ட பழக்கம் எல்லாம் இருக்கும். நான் ஒரு லிஸ்ட் எழுதி வச்சிருக்கேன். அதிலே உங்களுக்கு என்ன பழக்கம் இருக்குன்னு சொன்னா நான் அதுக்கு தக்க மாதிரி வாழ பழகிக்குவேன்"

அட! இது ஒரு புது டெக்னிக்கா இருக்குதேன்னு லிஸ்டை வாக்கி பார்த்தா... அடிங்கொக்க மக்கா,,,,,, எல்லாமே எனக்கு பழக்கம் தான்! பொடி மட்டும் தான் பாக்கி இந்த பக்கிக்கு! சரி எல்லாத்தையும்  டிக் அடிச்சா முதல் ராத்திரி கடேசி ராத்திரியா ஆகிடுமேன்னு.... பொடியை மட்டும் டிக் அடிச்சேன்...

ஒரு வழியா 30 நாள் லீவ் முடிஞ்சு துபாய் போகும் போது கையிலே ஒரு பொட்டலம் திணிச்சாங்க. நானும் எதுனா லெட்டரா இருக்கும்னு நினைச்சு பாக்கெட்ல வச்சுகிட்டு சென்னை வந்துட்டேன். ஏர்போர்டிலே என்னை எல்லா இம்சைகளும் செஞ்சு முடிச்சு பின்ன ஒரு வெள்ளை பேண்ட் சட்டை காரர் "சார் ஹீ ஈஸ் ஹேவிங் சம் பவுடர்... மே பீ தி நெக்ஸ்ட் வர்சன் ஆஃப் ஹெராயின்" என அவன் மேலதிகாரிகிட்ட போட்டு கொடுக்க நான் சர்வ மரியாதையுடன் அழைத்து போகப்பட்டு... நடு நாயகமாக அமர வைக்கப்பட்டு ஆராயப்பட்டு... அந்த வஸ்து அதாங்க "பொடி" மேசை மீது வைக்கப்பட்டு அது என்னைப்பார்த்து சிரித்தது!

அட ஆண்டவா, பொண்டாட்டி ரூவத்திலா கஷ்டம் வரனும்னு நினைச்சு கிட்டு இருந்த போது தான் அந்த ஜிம்மி வந்துச்சு. அது பேர் ஜிம்மியான்னு தெரியாது. ஆனா பொதுவா நாய்ன்னா ஜிம்மி தானே! பேரை விடுங்க. நம்ம ஆராய்ச்சி அதுல வேண்டாம். நானே இக்கட்டிலே இருக்கேன். சரி... அது வந்துச்சு.

மோந்து பார்த்துச்சு. மோந்து பார்த்தா பரவாயில்லை... அது ராதாம்மா மாதிரி உறிஞ்சுச்சு. அவ்ளோவ் தான் "பிஸ்க்...பிஸ்க்...பிஸ்க்"ன்னு தும்மிகிட்டே கயித்தை புடுங்கிகிட்டு ஓடுது. அத்தனை ஆளுங்களும் பின்னாடியே ஓட... எனக்கு படம் வுட்டு போச்சு. மீதி இருந்த அந்த ஒத்தை ஆபீசர் கிட்டே சொல்றேன் " நாயா இருந்தாலும் மனுசனா இருந்தாலும் பொடின்னா தும்மல் வரத்தான் சார் செய்யும். என்னய கேட்டா சொல்லியிருப்பனே"

என் அறைக்கு வெளியே ஒரே பூட்ஸ் கால் சத்தம். ஓடிப்போய் உயரதிகாரிய கூட்டிட்டு வராங்கலாம்..... வந்தாரு ரங்காச்சாரின்னு ஒருத்தரு....

"ஹேய் மேன்.. மாயவரத்திலே எங்க"

"மாயவரம் சார்"

"உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அங்க எங்க?"

"சார் என்ன வேணும் உங்களுக்கு"

"பூண்டு பொடி இருக்கா? புதுசா கல்யாணம் ஆனவன். அனேகமா பொண்டாட்டி செஞ்சு கொடுத்துருப்பாளே"

"சார் நீங்களும் நம்ம பொடி சாதியா?"

"எஸ் மேன் எஸ்.... உனக்கு டைம் ஆகிடுச்சு ஃப்ளைட்டுக்கு.. ஓடு... வைத்தியநாதன்னு உன் அப்பா பேரை சொல்லி கதறிகிட்டு இருக்கானுங்க ... பை தி பை.... பூண்டு பொடியும், பன்னீர் புகையிலை, கும்மோணம் வெத்தலை மூணும் எடுத்து மேசைல வச்சுட்டு ஓடு.. நான் டூட்டின்னு வந்துட்டா ரொம்ப ஸ்ட்ரிக்ட்"

நான் சிரித்து கொண்டே பிளைட்க்கு ஓடினேன்!

March 1, 2013

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா!



வருஷா வருஷம் எனக்கு மார்ச் மாசம் ஒன்னாம் தேதி என் தலைவர் "தளபதி' அவர்கள் பிறந்த நாள் என நியாபகம் இருக்கும் அளவு அதற்கு அடுத்த நாள் என் மனைவியின் பிறந்த நாள் என நியாபகம் வருவது இல்லை... நான் அங்கே என் மனைவியின் கூட இருப்பதும் இல்லை. இந்த வருடமும் அப்படித்தான். நான் என் தளபதி பிறந்த நாளுக்காக இங்கே சென்னையில் இருக்க திடீரென தமிழ்மணம் பார்த்தால் துளசி டீச்சர் பதிவு.....

வாவ்.... என் கிருஷ்ணாவின் பிரதாபங்கள். இதுக்கு கீதாம்மா வேற பின்னூட்டம் வழி ஆகா ஒகோன்னு ஸ்ருதி.... போகட்டும்... டீச்சர்... நீங்க,கோபால் சார், கீதாம்மா, சாம்பு சார் எல்லாம் வீட்டுக்கு வந்ததே எங்க பாக்கியம். இதிலே பதிவு போட்டு பெருமை சேர்த்தா கிருஷ்ணாவை கைல பிடிக்க பிடிக்க முடியுமோ?  ஜோக்ஸ் அபார்ட்! நான் கிருஷ்ணாவை பத்தி பெருமையா சொல்லிப்பதாகவே இருக்கட்டும். போகட்டும்! ஐ லவ் ஹர்!

 \\ சில சமயம் நான் சண்டை போடும் மூட்ல இருந்தா அப்ப கிருஷ்ணா துரதிஷ்டவசமா வீட்டில் இல்லாட்டி கூட "என்னங்க நான் கோவிலுக்கு போயிருக்கேன். அஃப்கோர்ஸ் உங்க கண்ணாடி அனேகமா உங்க தலை மீது இருக்கலாம். அவசரமா திட்டனும்னா போன் செய்யவும். என் போன் நம்பர் கேஸ் அடுப்பு மேலே எழுதி வச்சிருக்கேன். இரண்டு நிமிஷம் மட்டும் திட்டவும். 1 ரூபாய் 66 காசுதான் இருக்கு உங்க போன்ல ... மிக முக்கிய பின் குறிப்பு # 1 : நான் வீட்டில் இருந்து கோவிலுக்கு போய் மீண்டும் வீட்டுக்கு வரும் வரை போனை ஆஃப் செய்து விடுவேன். பின் குறிப்பு # 2 : என் போன் நம்பரை கேஸ் அடுப்பின் மேல் எழுதி வச்சிருக்கேன் என்பதை மீண்டும் நியாபகப்"படுத்துறேன் " \\

 \\ என்னங்க! நீங்க உங்க கடேசி தாத்தா கிட்ட உங்க +2 பரிட்சைக்கு முன்ன போய் ஆசீர்வாதம் வாங்கினதும் அவரும் "நீ எல்லா பாடத்திலும் 90 மார்க்கு எடுக்கனும்னு ஆசீர்வாதம் செஞ்சதும் அது போலவே நீங்க எடுத்ததும் வெரி குட் ஆஃப் இந்தியா தாங்க.... ஆனா பரிட்சை எல்லாம் 200 மார்க்குன்னு நான் உங்க பசங்க கிட்ட இதுவரை சொல்லலைங்க.... \\

ஒரு நாள் திடீரென "என்னங்க, நான் ஒன்னு சொன்னா கோவிக்க மாட்டீங்களே" என கிருஷ்ணா சொன்ன போது லைட்டா பயம் வந்தாலும் "எப்படியும் கோவிக்கும் படி தான் சொல்வே, சொல்லு" என சொன்ன போது.... "சிதம்பரம் மெடிக்கல் ஹாஸ்பிட்டல், இப்ப திருவாரூர்ன்னு ஏகப்பட்ட மெடிகல் ஹாஸ்பிட்டல் வந்தாச்சுல்ல"

"ஆமாம்"

"இஞ்சினியரிங் காலேஜ் வந்தா பரவாயில்லை.ஆனா மெடிக்கல் பசங்க , மெடிகல் அனாடமி பாடத்துக்கு பாடிக்கு என்ன பண்ணுவாங்க?"



'வாயை மூடிகிட்டு படு"

இப்படி எடக்கு மடக்கா கேள்வில்லாம் கேட்டா கூட ஒரு நல்ல மனைவி அவங்க. ரொம்ப அதிகமா கிருஷ்ணா பத்தி  நியாபகம் வருதேன்னு நினைச்சுகிட்டே இருந்தேன். படீர்ன்னு பாத்தா துளசி டீச்சர் பதிவு தமிழ்மணத்திலே!துளசி டீச்சர் என் வீட்டுக்கு வந்ததே பெருமை. அதிலும் அவங்க அக்கா மாதிரி கிருஷ்ணான்னு சொன்னது அதை விட பெருமை. துளசி டீச்சர் பதிவை படிக்க இங்க போங்க  www.http://thulasidhalam.blogspot.in/2013/03/blog-post.html 
டீச்சர் சொன்ன மாதிரி, மூக்குத்தி, சாப்பாடு வைக்கும் விதம்... சாப்பாட்டின் ருசி... குழந்தைகளை வளர்க்கும் விதம்... அட எல்லாமே நான் கொடுத்து வச்சவன் கொடுத்து வச்சவன் என்பதை தான் உறுதி செய்யுது!

 என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா! தமிழ்ல சொல்லனும்னா  ஹேப்பி பர்த் டே   கிருஷ்ணா!