பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 4, 2013

என் தலைவன் தமிழின தலைவர் கலைஞர் ஒரு நவரசத்தலைவர்!!!

இது முரசொலியில் வந்த என் எழுத்துகள்!



என் தலைவன் தமிழின தலைவர் கலைஞர் ஒரு நவரசத்தலைவர், ஆமாம் இது வார்த்தை ஜாலம் இல்லை. நவரசம் என்றால் காதல்,இன்பம்,துன்பம்,கோபம்,கருணை,அருவருப்பு,பயம்,வீரம்,ஆச்சர்யம் என சேர்ந்த ஒன்பது வகை .

காதல்: அவருக்கு தமிழ்மேல் காதல்,  அதனால் பிறந்தது பல கவிதைகள், பல புதினங்கள், பல இலக்கியங்கள், பல நாடகங்கள், அவருக்கு தன் மனைவியர் மீது காதல், அதனால் பிறந்தது ஆறு சொத்துக்கள், அவருக்கு தன் பிள்ளைகள் மீது காதல் அதனால் பிறந்தது தமிழக அரசியலில் அடுத்த 50 ஆண்டுகாலம் வழி நடத்த வலிமையுள்ள தளபதி மற்றும் அவர் உடன்பிறந்தோர். அவருக்கு அரசியல் மீது காதல், அதனால் விளைந்தது அவரது தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்க்கும் மேலாக திராவிட ஆட்சிகள், அவருக்கு போர்களத்தின் மீது காதல், அதனால் பிறந்தது இது வரை 12 முறை சட்ட மன்ற உறுப்பினர், ஐந்து முறை முதல்வர், எதிர்கட்சி தலைவர் என பல பதவிகள், அவருக்கு தமிழர்கள் மீது காதல் அதனால் பிறந்தது நல்ல பல திட்டங்கள், தமிழர்களுக்கான சுய மரியாதை இன்னும் பல,

இன்பம்: அவருக்கு எப்போதும் இன்பம் என்பது இருக்கின்றதோ இல்லியோ அவரை காணும் தமிழர்களுக்கு அவர் முகத்தை காணும் தமிழர்களுக்கு இன்பம். ஏழைகளுக்கு இவரைக்கண்டால் சிரிப்பு. ஏழைகள் இவரால் பயன் பெற்றார்கள், ஏழைகள் இவரால் படித்தார்கள், ஏழைகள் இவரால் பணியில் அமர்த்தப்பட்டார்கள். அண்ணா சொன்னது போல இவர் ஏழையின் சிரிப்பினிலே இறைவனை கண்டார். அதனால் ஏழைகளின் சந்தோஷம், மகிழ்ச்சி, இன்பம் அவர்களை காணும் போதெல்லாம் இவருக்கும் தொற்றிக்கொள்ளும். ஆகவே இன்பம் கொண்டார் எப்போதும் இவர்.

துன்பம்: யாரோ எப்போதோ எப்படியோ செய்து விட்ட சில பல தவறுகளால் ஒட்டு மொத்த தமிழினம் அழிக்கப்பட்ட போதும் கையறுநிலையிலே பக்கத்தில் இருக்கும் நாம் இருக்கும் நிலை போல சில பல சமயங்களில் வரும் போதேல்லாம் துன்பம் அவரை தீயாய் சுடும். அதே போல தமிழன் உலகினில் எங்கெல்லாம் அவமானப்படுகின்றானோ அப்போதெல்லாம்  என் தலைவன் அணலில் விழுந்த அன்னமாய் துடிப்பதை நாங்கள் பார்த்து கொண்டு தானிருக்கின்றோம். துன்பம் இல்லா உலகினில் ஒரு துளி இடம் இருந்தால் சொல்லுங்கள். எம் தலைவனை அங்கே அமரவைத்து அழகு பார்க்கின்றோம்.

கோபம்: நவரசத்திலும் தலைவருக்கு பங்குண்டு என்றாலும் அவரின் கோவம் என்னும் குணம் கொஞ்சம் குறைவாகவே இருப்பதாக உணர்கின்றோம். யார் கண்டது தொண்டர்களிடம் அப்படி ஒரு தோற்றம் இருந்தாலும் ஒன்னரை கோடி உறுப்பினர் கொண்ட கட்சியின் தலைவனாக இருக்கும் போது, ஏழு கோடி தமிழர்களை ஆட்சி செய்த தலைமை பொறுப்பில் இருந்த போதும், குடும்பம், குழந்தை என தன் சொந்த விஷயங்களிலும் அவரது கோவம் எத்தனை வலியது என தொண்டர்கள் அறிய முடிவதில்லை. ஆனால் தொண்டர்களை, மக்களிடம் அவரது கோவம் என்பது யாரும் பார்த்தறியா குணம். "கலைஞர் கோபப்பட்டார்" என புனைவெழுதி புளகாங்கிதம் அடையும் புலன்விசாரணை பத்திரிக்கைகளை நாங்கள் சிரித்து விட்டு புறம்தள்ளி விடுவதே நடைமுறை!

கருணை: தன்னை வசைபாடுபவர்களை, ஊடகங்களை இவர் ஆட்சியில் இருந்த நேரத்திலும் இல்லாத நேரத்திலும் மன்னித்து அருள்வாரே அது தான் கருணை

அருவருப்பு: ஆம், நிறைய உண்டு. தலைவரிடம் அது நிறைய உண்டு. தன் பதினான்கு வயதில் தமிழ்க்கொடி ஏந்தி புறப்பட்ட அந்த புயல் சந்திக்காத இந்திய தலைவர்களே இல்லை என்னும் நிலையில் கால ஓட்டத்தில் நேருவோடு, லால்பகதூரோடு, இந்திரா, ஜெயப்ரகாஷ்நாராயணன், சஞ்சீவரெட்டி, வி வி கிரி, பஃக்ருதீன் அலிஅகமது, ஜெயில்சிங், நாராயணன், மொரார்ஜி, ஜகஜீவன்ராம், வாஜ்பாய், அத்வானி, பிஜுபட்நாயக் என அகில இந்திய அளவிலும் பின்னர் இங்கே ஜஸ்டிஸ்கட்சி, நீதிக்கட்சி தலைவர்கள் அதன் பரிணாமம் திராவிடர்கழக தலைவர்கள், பெரியார், அண்ணா, காமராசர், ராசாசி  என எல்லாம் அரசியல் செய்து அவர்களை ஆட்டிவித்து, அரவணைத்து, அழகுற பழகி அருமையான அரசியல் செய்த நம் தலைவர் இன்றோ கால ஓட்டத்தில் ஜெயா, விசயகாந்து , தா.பாண்டியன், சமீபத்தில் கூட யாரோ ஒரு வர்.. என்னவோ பெயர் ... சேகுவாரா பனியன் எல்லாம் போட்ட ஒருவர் சினிமா எல்லாம் கூட எடுப்பாரோ, நடிப்பாரோ தெரியலை அவர்கள் எல்லாம் "கருணாநிதியே உன்னை கேட்கிறேன்" என மேடையில் முயங்கும் போது (ஆமாம் எழுத்து பிழை இல்லை முயங்கும் தலைவர்கள் தான்) என் தலைவனுக்கு மட்டும் அல்ல தொண்டர்கள் எங்களுக்கும் அருவருப்பு தான் வருகின்றது. என்ன செய்யட்டும்? நவரசத்தில் இந்த ரசம் ஒரு துளி விஷம் தான்:-(

பயம்: பல சமயம் தலைவர் பயப்படுவது உண்டு. தமிழன் எப்போதும் மனசு இரக்கம் கொண்டவன். அதை பயன் படுத்தியே பெரியாரும், அண்ணாவும் ,அதன் பின்னே தலைவரும், ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களும் ஊட்டி வளர்த்த பகுத்தறிவு பாதை ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழன் மனதில் வந்து குடிபுகும் போதெல்லாம் கொஞ்சம் பயம் வரும் தலைவருக்கு. அதற்காக கலங்கியது இல்லை. உடனே களை எடுத்து விடும் பணியினை செய்து கொண்டே தான் இருப்பார்.

வீரம்: அன்னை அஞ்சுகம் தாய் பெற்றது ஒற்றை ஆண் மகவு அல்ல. அது ரெட்டை குழந்தை. ஒன்றின் பெயர் கருணாநிதி, மற்றும் ஒரு குழந்தைக்கு பெயர் வீரம். ஆமாம். கலைஞரின் கருவில் இருந்தே கூட வளரும் உடன்பிறப்பு தான் வீரம். தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கும் போதும், பாளையங்கோட்டையில் பாம்புகள், பல்லிகள் நடுவினில் தனிமை சிறையினில் கிடக்கும் போதும் அவருக்கு உற்ற தோழனாக, கூடப்பிறந்த பிறப்பாக உடன் இருப்பது இந்த வீரம் தான். இந்த என்பத்தி ஒன்பது வயது கிழ சிங்கம் சமீபத்தில் கர்ஜித்தது எப்போது தெரியுமா? "உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிடும்".. வீரமான அந்த கர்ஜனை இன்று என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்தி விட்டது தெரியுமா? தமிழக அரசியலை புரட்டி போட்டு விட்டது. அதன் தாக்கங்கள் சில. 1. 40 சதம் சீட் வேண்டும் என அஞ்சாமல் கேட்ட காங்கிரஸ் இன்று நிலைகுலைந்து போனது. அதன் முதல் நாள் வரை வாயை காதுவரை இழுத்து பேசிய இளங்கோவன்கள், யுவராசாக்கள் எங்கே போயினர் என தெரியவில்லை. இது வரை வேட்பாளர் யார் என தெரியவில்லை. சத்தியமூர்த்தி பவன் சண்டைமூர்த்தி பவன் ஆகியது.எல்லோரும் தனியாக தேர்தலை சந்திக்கும் போது அவர்கள் தனித்தனியாக சந்திக்கின்றனர். ஆமாம் எல்லா கோஷ்டியும் பிரிந்து போய் கிடக்கின்றன. ஆக இத்தனை நாள் அவர்கள் கட்சியின் ஒற்றுமை கூட என் தலைவனால் தான் சாத்தியம் என டெல்லிக்கு புரிந்து இருக்கும் இப்போது. 2. அதிமுக வலுவான கூட்டனியாக இருந்ததை ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதி பிரிக்கவோ, சேர்க்கவோ செய்ய முடியாத கூட்டணிகளை என் தலைவ்னின் ஒற்றை வார்த்தை கிழித்து போட்டு விட்டது. ஆமாம் அங்கே தேமுதிக தனியாக... எல்லாமே தனித்தனியாக ...புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது வந்து கட்டிக்கொள்ளுங்கள் என விசயகாந்து கூவியும் ராமகிருஷ்ணய்யர் மட்டுமே ஓடி வந்து ஒட்டி கொண்டார் அந்த நடிகர் மேல். நாம் தமிழர் எனும் லேபிள்காரர்கள் அதிமுகவின் "ரெண்டல்" கட்சியாகிப்போனது. தா.பாண்டியன் கட்சி "மெண்டல்" கட்சியாகிப்போனது. வைக்கோ கட்சி சைக்கோதனமாக புலம்பிக்கொண்டு இருக்கின்றது. மருத்துவர் அய்யாவோ வைத்தியம் தேவைப்படும் அளவு ஆகிவிட்டார்.
என் தலைவனின் வீரம் அந்த ஒற்றை அறிக்கை. அதிலே தமிழக அரசியலையே அசைக்க முடியும் என்கிற போது அந்த வீரத்தின் வீரியத்தை புரிந்துகொள்ளுங்கள்!

ஆச்சர்யம்: என் தலைவனுக்கு ஆச்சர்யமான சில விஷயங்கள் எப்போதும் நடந்து கொண்டே இருக்கும். சமீபத்திய உதாரணம், நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் முடிவுகள். ஏன் வெற்றிவாய்ப்பை இழந்தோம் என இன்னமும் காரணம் கண்டுபிடிக்க முடியா கேள்வி அவரிடம் ஒரு ஆச்சர்யம். அதை விடுங்கள். எங்களுக்கு அவர் மேல் ஒரு ஆச்சர்யம் உண்டு. அவருக்கு ஒரு குணம் உண்டு. அவர் இராமாயணகால வாலி போல. அவருக்கு எதிரே நின்று அவரை ஜெயிக்க முடியாது. எதிராளியின் பாதி பலம் இவருக்கு வந்துவிடும். இது எங்களுக்கு அவரைப்பற்றிய ஒரு ஆச்சர்யம். அதனால் தானோ என்னவோ ஆதிக்க சக்திகள் பலமுறை இவரை முதுகில் குத்தியே ஆரிய ராமன் போல வீழ்த்துகின்றன. ஆனாலும் இவர் ஒரு பீனிக்ஸ்போல. சாம்பலில் இருந்தும் வெளியே முழுமையாக வருவார். அதான் என் தலைவர்.இது மிகப்பெரிய ஆச்சர்யம் இவரைப்பற்றி!
இப்போது சொல்லுங்கள்! என் தலைவர் நவரசத்தலைவன் தானே?
அதே போல என் தலைவன் போல பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் என் தலைவன் போல உலகத்தில் ஒரு தலைவனை காண இயலுமா?

ஒருவன் வாழ்வில் பெறவேண்டிய பதினாறு செல்வங்கள் எவையென்பதை,

// "துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
அதிதானியம் செளபாக்கியம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை அறம்குலம் நோயின்மை பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே" //

என்ற காளமேகப்புலவரின் பாடல் நமக்குப் புலப்படுத்துகிறது.
அதாவது புகழ், கல்வி, வெற்றி, மக்கட்பேறு, துணிவு, செல்வம், மிகுந்த தானியம், சுகம், இன்பம், அறிவு, அழகு, புதிதுபுதிதாக ஏற்படக்கூடிய சிறப்புக்கள், அறவுணர்வுடைய குடிப்பிறப்பு, நோயற்ற வாழ்வு, நீண்ட வயது ஆகியவைகளே பதினாறு பேறுகள் ஆகும். இருந்தாலும் இவற்றினுள் சிறந்த பேறாகக் கருதப்படுவது மக்கட்பேறாகும்.

ஆமாம் என் தலைவன் எங்களுக்கு கொடுத்த பெரிய பாக்கியம் எங்கள் தளபதி. கருணாநிதி பெற்றெடுத்த "சுழல்நிதி" எங்கள் ஒய்வறியா சூரியன் எங்கள் தலைவர் தளபதி அவர்களை என் தலைவன் பெற்ற பதினாறு செல்வத்தில் பெரிய செல்வம் அல்லவா?

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற" என வள்ளுவன் சொன்னதைப்போல என் தளபதியை எங்களுக்கு கொடுத்த தலைவா நீ வாழ்க வாழ்க!!!!!

என் தலைவன் சமீபத்திய சட்டமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்துக்காக மயிலாடுதுறை வழியாக திருவாரூர் சென்ற போது ஒரு சாதாரண தொண்டனின் பார்வையில்  அவரது வருகையை சிலாகித்து நான் என் வலைப்பூவில் எழுதியதன் கடைசி பாரா. இது.


\ //  மதியம் 3.30க்கு 2728 என்கிற எண்ணுடைய ஒரு காரில் தலைவர் வந்தார். முன்பக்க சீட்டில் அமைச்சர் பொன்முடி இருக்க பின்பக்க சீட்டில் தலைவரும், கனிமொழியும் இருக்க கூட்டத்தை பார்த்து நிற்க குண்டாமணியும், லிங்கராஜனும் வந்து பொன்னாடை கொடுக்க அதை கனிமொழி வாங்கி பாதுகாப்பு போலீசாரிடம் கொடுக்க, அந்த இடமே கஜாமுஜான்னு ஆக தலைவர் வாழ்க என குரல் கொடுக்க தலைவர் கலைஞர் அதி அற்புதமான சிரித்த முகத்துடன் கையை காட்ட ஒட்டுமொத்த கூட்டமும் மெய்சிலிர்த்தது. சிலர் வாய்விட்டு அழுதனர் உணர்ச்சி மேலீட்டால். சிலர் தான் எப்படி வாழ்த்து சொல்கின்றோம் என்று தனக்கே தெரியாத அளவு இஷ்ட்டத்துக்கு வாழ்க வாழ்க என உணர்சி குவியலாய் கத்த தொடங்க தலைவரின் கான்வாய் மயிலாடுதுறையை கடந்து சென்றது.

"அப்பாடா சாவதுக்குள்ள தலைவரை கிட்டத்துல பார்க்கனும்னு இருந்தேன். பார்த்துட்டேன்" என சொன்ன ஒருவருக்கு வயது 50 இருக்கும். அவரை பக்கத்தில் இருந்தவர் முறைக்க "நான் என்னை சொன்னேன். நான் சாவறத்துக்குள்ள " என அவர் திருத்தி சொன்னார். ஒட்டு மொத்த கூட்டமும் கலைந்து சென்றது. ஒருவன் சத்தமாக பேசிக்கொண்டே போனான். தலைவரு இந்த பீரியட் முதல்வரா முடிக்கும் போது 92 வயசு ஆகியிருக்கும். 7 வது முறை முதல்வரா இருந்து முடிக்கும் போது 97 ஆகியிருக்கும். அப்படின்னா அவரது நூற்றாண்டு விழாவுல அவரு எட்டாவது முறையா முதல்வராக இருப்பாரு. சூப்பர்டா.." என சொல்லிக்கொண்டே போனான். இதான் திமுக தொண்டன். தலைவர் சாவிற்க்கு அப்பாற்பட்டவர் என்ற எண்ணம் வலுவாக இருக்கின்றது. ஆச்சர்யப்பட எதும் இல்லை. இருப்பார். அவரது நூற்றாண்டை முதல்வராக தானே இருந்து நடத்துவார். வாழ்க கலைஞர்.வாழ்க கலைஞர். வாழ்க வாழ்கவே!!!\\\\\\\\\\\\\\\

 இது தான் அந்த கடைசி பத்தி அந்த பதிவினில். அதன் லிங் இதோ இது தான் http://abiappa.blogspot.com/2011/03/blog-post_24.html
என் தலைவனைப்பற்றி எழுத இந்த ஒரு பதிவு போதுமா? இணையத்தின் ஒட்டு மொத்த இடமும் கொடுத்தாலும் எழுதித்தீர்க்க முடியுமா?

June 3, 2013

திருவாரூரில் இருந்து வந்த மஞ்சள் பை மகான் என்போரே...... மகா கோடீஸ்வரன் என்போரே......








இரு நாட்கள் முன்பாக என் முகநூலில் ஒரு கீழுள்ளது போல ஒரு நிலைத்தகவலிட்டிருந்தேன்.


\\ எனக்கு ஒரு பின்னூட்டம் வந்தது. "மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி?"... சபாஷ்... எனக்கு ஜுன் 3 பதிவுக்கு தலைப்பு இல்லையே என கவலைப்பட்டேன். தலைப்பு கொடுத்த தோழருக்கு நன்றிகள். தலைப்பு... "மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி?"... இது எப்டி இருக்கு????\\


இது போல ஒரு எதிர்மறை தலைப்பு வைக்க நினைத்த காரணம்.... கலைஞரை வசைபாடும் கூட்டமும் வந்து பார்க்கட்டுமே என்பது ஒரு பக்கம். அடுத்து கலைஞரை வசைபாடும் கூட்டம் எப்போதும் கலைஞர் ஒரு மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் எறி திருவாரூரில் இருந்து வந்து இன்று கோடீஸ்வரன் ஆனது எப்படி என அரைத்த மாவை அரைக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதனால் தான். எதிர்மறை தலைப்பு வைத்தால் அந்த வசவாளர்கள் கூகிள் தேடுதளத்தில் தேடும் போது இந்த பதிவு சுலபமாய் கிடைக்கும் என்பதால் மட்டுமே. ஆனாலும் நாளை 90 ம் பிறந்த தினம் காண இருக்கும் தமிழின தலைவரை குறித்து எழுதும் போது எதிர்மறை தலைப்பு வேண்டாம் என் மனது சொன்னதால் மாற்றி விட்டேன்.


அது என்ன மஞ்சள் பை, திருட்டு ரயில்,ஆதாரம் என்ன  என அவர்களிடம் கேட்டோமானால் உடனே கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்னும் புத்தகத்தை சொல்வார்கள். கண்ணதாசன் என்ன இந்திய சட்டம் எழுதிய அண்ணல் அம்பேத்காரா? அல்லது சத்திய சோதனை வடித்த மகாத்மா காந்தியா? உலகில் ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என ஒரு உதாரணம் வேண்டுவோர் உடனே குறிப்பிட வேண்டிய ஒரு புழு. மிகச்சிறந்த கவிதை வடித்திருக்கின்றாரே என கேட்போர்களுக்கு ஒரே வரி பதில் சொல்வேன். குப்பையில் இருந்து மின்சாரம் கிடைக்கின்றதாம். அதற்காக குப்பையை அள்ளி தலையிலே போட்டுக்கொள்ள முடியும்? கலைஞரே ஒரு முறை சொல்லிவிட்டார். நான் ரயிலில் வரும் போது பக்கத்து இருக்கையில் அமர்ந்து வந்தவர்கள் போல பேசுகின்றனர் என அந்த பேச்சுகளை புறம் தள்ளிவிட்டு போய்விட்டார்.


அவர்களிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி. கலைஞர் மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட தன் மூளையை கழட்டி திருவாரூர் கமலாலயத்தில் வீசி விட்டா வந்தார். அவர் பிறந்தது 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி. 1944ல் தன் இருபதாவது வயதில் ஜூபிடர் பிக்சர்ஸ்ல் கதாசிரியராக வேலைக்கு சேர்ந்து விட்டார். இன்றைக்கு இதே கலைஞரை வசைபாடும் கழுதைக்கூட்டத்தில் யராவது தன் 20 வயதில் சுய சம்பாதித்யம் சம்பாதித்தது உண்டா என தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். தன் அப்பன் காசில் வாழும் ஊதாரிகள் வசைபாட கலைஞர் தான் கிடைத்தாரா?

அவர் அரசங்க உத்யோகத்தில் வேலைக்கு சேர்ந்த அண்டு 1957ம் ஆண்டு தான். ஆம் சட்ட மன்ற உறுப்பின்ராக. ஒரு அரசாங்க உத்யோகத்தில் சேருபவர் மிக அதிக பட்சமாக மிக மிக அதிக பட்சமாக 42 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். ஆனால் 1957ல் அரசாங்க சம்பளம் வாங்க ஆரம்பித்த இவர் இன்று தன் 90 வயது ஆகிவிட்ட நிலையில் கூட கிட்ட தட்ட அர நூற்றாண்டுகள் கடந்தும் 56 வருடங்களாக அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டுள்ளார். இதில் ஐந்து முறை முதல்வராக சட்ட மன்ற சம்பளத்தில் அதிகப்படியன சம்பளம் வாங்கியுள்ளார். இவர் வாங்கும் அரசாங்க சம்பளம் என்பது இன்று ஐடி துறையில் பணி செய்வோர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம். ஒரு வருடத்தில் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களே உடனே ஒரு கார், சொந்த வீடு என சுபிட்சமாக இருக்கும் போது 56 வருடங்கள் அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டு இருக்கும் இவர் கோடீஸ்வரனாக இருக்க கூடாதா என்ன?


சரி போகட்டும். அரசாங்க உத்யோகம் இவருக்கு கைகூடும் முன்னர் என்ன செய்தாரெனில் அந்த பொறாமை கொண்ட வசவாளர்கள் சொல்வது போல மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட இவர் தன் 20 வது வயதில் திரைத்துறைக்கு வந்து தன் 24 வது வயதில் ராஜகுமாரி என்னும் படத்துக்கே வசனம் எழுத ஆரம்பித்து விட்டார். அது தான் எம் ஜி ஆர் அவர்களுக்கும் முதல் படம். தன் 28 வது வயதில் இவர் எழுதிய பராசக்தி படம் திரையுலகில் ஒரு திருப்பு முனை படம். அந்த படத்தின் சம்பளம் எல்லாம் வாங்கி எல்லாம் முடிந்த பின்னர் அதன் வசனங்கள் மட்டும் சிறிய புத்தகமாக போட்டு விற்பனை செய்யலாம் என ஏ வி எம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்து இவரிடம் அனுமதி கேட்ட போது இவர் அதற்காக கேட்ட தொகை என்பது முழு பத்தாயிரம் ரூபாய். அப்போது ஒரு சவரன் 20 ரூபாய் என்னும் போது இப்போது அந்த பத்தாயிரம் ருபாய்க்கு என்ன மதிப்பு என கணக்கிட்டு கொள்ளுங்கள். அப்போது ஒரு ப்யூக் கார் விலையே 7000 ரூபாய் மட்டுமே. அப்போதே கார் வாங்கி விட்டார். எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோர் கதாநாயகனாக அப்போது நடித்துக்கொண்டு இருந்த போதே அத்தனை சம்பளம் வாங்கியது இல்லை. தான் 1957ல் சட்ட மன்ற உறுப்பினர் ஆகும் முன்னரே 30000 (முப்பதாயிரம் ரூபாய்)க்கு தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார். (அதையும் இப்போது தன் 87ம் பிறந்த நாளின் போது தன் காலத்துக்கு பின்னர் ஏழைகளுக்கான மருத்துவமனையாக ஆகும் படி அஞ்சுகம் ட்ரஸ்டுக்கு எழுதி வைத்து விட்டார்)


இவர் திரைத்துறையில் சம்பாதிக்க  பணம் எடுத்துக்கொண்டு திருவாரூரில் இருந்து வரவேண்டும் என்பதில்லையே. அந்த மஞ்சள் பையில் ஒரு பேனாவும் அதில் நிறைய இங்க்ம், தன் மூளையும் மட்டுமே மூலதனமாக போதுமே. 1960ல் மேகலா பிக்சர்ஸ் என்னும் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ஆக 1944 முதல் 1960 வரை தன் மூளையை மூலதனமாக கொண்டு சம்பதித்ததை மேலும் அதிகரிக்க சொந்த பட தயாரிப்பு நிறுவனமே தொடங்கி விட்டார். பின்னர் பூம்புகார் புரடக்ஷன்ஸ். இதும் அவரது சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தான். பின் ஏன் அவர் கோடீஸ்வரன் ஆக மாட்டார்? கலைஞர் திரைப்பட துறையில் மட்டுமா சம்பாதித்தார். இல்லை. தன் எழுத்துகளை புத்தகமாக்கினார். நாடகம் ஆக்கினார். அவர் தொட்ட துறை எல்லாமே நிதியை அள்ளி கொடுத்தன. அவர் அன்று மட்டுமல்ல. இதோ இன்று தன் 90 வது வயதில் எழுதிய இரு புத்தகங்கள் ஒரே நாளில் இவர் புத்தக வெளியீட்டு மேடையை விட்டு இறங்கும் முன்னரே 15 லட்சத்தில் 74 ஆயிரத்துக்கு விற்று தீர்ந்தது. அவர் ஏன் கோடீஸ்வரன் ஆக மாட்டார்?


கலைஞர் திரைத்துறையில் பணியாற்றினார் பணியாற்றினார் என்று மட்டுமே தெரிந்த நமக்கு அவர் எத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளார் என்னும் விபரத்தை சௌம்யா தியேட்டர்ஸ் உரிமையாளரும், வசனகர்த்தா, பாடலாசிரியர், சினிமா தயாரிப்பாளர், நாடக நடிகர், பத்திரிக்கையாளர் என பன்முக கலைஞர் திரு. டி. வி. ராதாகிருஷ்ணன் ஒரு 8 பாகங்களாக தன் வலைப்பூவில் எழுதி பின்னர் "அகநாழிகை" பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டு கலைஞரின் 87ஆம் அகவையில் வெளியிடப்பட்டு செம்மொழி மாநாட்டில் அகநாழிகை பதிப்பகத்தாரால் பலருக்கு இலவசமாக (செம்மொழி மாநாட்டை முன்னிட்டு) வழங்கப்பட்டது. நூலின் விலை 20 ரூபாய் மட்டுமே. கிடைக்குமிடம் "அகநாழிகை பதிப்ப்கம்", 33, மண்டபம் தெரு, மதுராந்தகம், பின்: 603 306 , போன்: 999 4541010.  மிக்க நன்றி திரு. டி வி.இராதாகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கும், அகநாழிகை பதிப்பக உரிமையாளர் திரு அகநழிகை வாசுதேவன் அவர்களுக்கும்!


இதோ அந்த நூலில் இருக்கும் கலைஞர் அவர்களின் திரையுலக பங்களிப்பை விரிவாக காணுங்கள்.

**********************************************************

கலைஞர் அவர்கள் கிட்டத்தட்ட 70 படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார்.கதை,திரைக்கதை,வசனம் இருபது படங்களுக்கு எழுதி இருக்கிறார்.கதை,திரைக்கதை இரு படங்களுக்கு எழுதி இருக்கிறார். திரைக்கதை,வசனம் முப்பத்தி மூன்று படங்களுக்கு எழுதி இருக்கிறார்.நான்கு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.பதினெட்டு படங்களில் பாடல் எழுதியுள்ளார்.

.1924ல் பிறந்த கலைஞர் வசனத்தில் வந்த முதல் படம் 1947ல்..அதாவது அவரின் 23ஆம் வயதில் வந்த படம் ராஜகுமாரி.1948ல் அபிமன்யூ படம்.

ராஜகுமாரி ஜூபிடெர் பிக்சர்ஸ் எடுத்தபடம்..எம்.ஜி.ஆர்., நடித்துள்ளார்.


1948ல் வந்த அபிமன்யூவில் அவர் பெயர் டைடில் கார்டில் போடவில்லை..என்பது கலைஞருக்கு வருத்தம் ஏற்படுத்திய நிகழ்ச்சி.

1950ல் மருத நாட்டு இளவரசி..எம்.ஜி.ஆர்., ஜானகி நடித்தது..

1950ல் வந்த இன்னொரு படம் மந்திரிகுமாரி..இப்படத்தில்..'என் எருமைக் கன்னுக்குட்டி'என்ற பாடலும் எழுதி..பாடலாசிரியர் ஆனார் கருணாநிதி


1951ல் தேவகி..கலைஞரின் அருமையான வசனங்கள்..எம்.ஜி.ஆர்., பத்மினி நடித்த படம் இப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பிச்சைக்காரனாக சிறு வேடத்தில் நடித்திருப்பார்.

இப்படத்தில் வரும் ஒரு வசனம் "பெரியம்மா குத்துவிளக்கு , சின்னம்மா எலெக்டிரிக் விளக்கு" இப்படத்திற்கு ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார்.


1951 மணமகள் இப்படத் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார்.திரைக்கதை கலைஞர்.எஸ்.வி.சகஸ்ரநாமம்,என்.எஸ்.கே.,லலிதா,பத்மினி ஆகியோர் நடித்துள்ளனர்.


1952ல் தமிழ்த் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் பராசக்தி.தயாரிப்பு பி.ஏ.பெருமாள், மற்றும் ஏ.வி.எம்., நிறுவனம்.சுதர்சனம் இசை.வி.சி. கணேசனுடன்..எஸ்.எஸ்.ஆருக்கும் முதல் படம்.கலைஞரின் இப்படத்திற்கான வசனம் எங்கும் பேசப்பட்டது.வசனத்திற்கான இசைத்தட்டு வெளியாகி சக்கைப் போடு போட்டது.நீதிமன்ற வசனங்கள் அப்போது அனைவருக்கும் மனப்பாடம்.கலைஞரின் அன்றைய ஒரு வசனம்..சமீபத்தில் காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் விஷயத்தில் இன்றும் பொருந்துகிறது.


'பூசாரியைத் தாக்கினேன்..பக்திக்காக இல்லை..அந்த பக்தி பகல் வேஷம் ஆகிவிடக் கூடாதே என்று'

அப்படத்தில்..'கா..கா..' என்ற பாடலும்..'பூமாலை நீ ஏன் மண்மீது வந்தேன் பிறந்தாய்' என்ற பாடல்கள் கலைஞர் எழுதியது.
மாபெரும் வெற்றி பெற்ற அப்படம் 42 வாரங்கள் ஓடியது.


52ல் வந்த மற்றொரு வெற்றி படம் 'பணம்'
என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் வந்த இப்படத்திற்கான திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி கணேசன் கதாநாயகன்.இசை விஸ்வனாதன் - ராமமூர்த்தி


53ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் 'திரும்பிப்பார்'
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.டி.ஆர்.சுந்தரம் இயக்கம்.சிவாஜிக்கு நெகடிவ் பாத்திரம்.இப்படத்தில் அரசியல் நையாண்டி வசனங்கள் அதிகம்.இச்சமயம்..நேரு..தி.மு.க., கட்சியைப் பற்றி அடித்த கமெண்ட் 'நான்சென்ஸ்'என்று.இப்படத்தில்..நேருவைப்போல கறுப்பு கண்ணாடி அணிந்து சிவாஜி அவ்வார்த்தையை அடிக்கடி கூறுவார்.பண்டரிபாய்,தங்கவேலு ஆகியோர் உடன் நடித்திருந்தனர். படம் வெளிவந்து 57 ஆண்டுகள் ஆகியும்..இன்னும் பாத்திரத்தின் பெயர் மனதில் நிற்கிறது என்றால்..அதற்கு கலைஞரே காரணம்.

பராசக்தியில்..சிவாஜியின் பெயர் குணசேகரன்,ஸ்ரீரஞ்சனி பெயர் கல்யாணி. திரும்பிப்பாரில் சிவாஜி பெயர் பரந்தாமன்.


1953 ல் வந்த படம் 'நாம்'

ஏ.காசிலிங்கமும்..கலைஞரின் மேகலா பிக்சர்ஸும் சேர்ந்து எடுத்த படம்.எம்.ஜி.ஆர்., பி.கே.சரஸ்வதி நடித்தபடம்.

இப்படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரை பி.எஸ்.வீரப்பா காலால் உதைப்பது போன்ற காட்சி வரும்..பாத்திரத்தின் தன்மையை அறிந்த மக்கள் அதை அன்று ஏற்றுக் கொண்டனர்.

1954ல் வந்த படங்கள்

மனோகரா..ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு . வசனம் கலைஞர். எல்.வி.பிரசாத் இயக்கம்.சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்., கண்ணாம்பா,டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோர் நடித்தது.கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணாம்பா பேசும் வசனங்கள்..அருமை.இதே கதை பம்மல் சம்பந்த முதலியார் நாடகமாகப் போட்டபோது சிவாஜி நாடகத்தில் பெண் வேஷத்தில் நடித்தாராம்.


அதே ஆண்டு..அதிகம் பேசவைத்த மற்றொரு படம் "மலைக்கள்ளன்".கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை கதைக்கு கலைஞர் திரைக்கதை,வசனம் எழுதி இருந்தார்.இந்திய அரசின் முதல் வெள்ளிப் பதக்கம் பெற்ற படம்.எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்கம்.


அடுத்து "அம்மையப்பன்.".எஸ்.எஸ்.ஆர்., ஜி.சகுந்தலா ஆகியோர் நடித்துள்ளனர்.கதை கலைஞர்..இசை டி.ஆர்.பாப்பா இயக்கம்..ஏ.பீம்சிங்

1956ல் வந்த படங்கள்

"ராஜாராணி"..சிவாஜி,பத்மினி நடித்தது.இதில் என்.எஸ்.கே.அவர்களின் பலவித சிரிப்பு பற்றிய பாடல் இடம் பெற்றது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..சிவாஜி ஒரு கட்சியில் சேரன் செங்குட்டுவனாக 16 பக்கங்கள் வசனத்தை ஒரே டேக்கில் நடித்தாராம்.

"ரங்கோன் ராதா"...அறிஞர் அண்ணாவின் கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி,பானுமதி நடித்தது.இப்படத்தில் கலைஞர் எழுதி இருந்த 'பொது நலம்' பாடல் ஹிட்.அதிலிருந்து சில வரிகள்

\\ திண்ணை தூங்கி பண்டாரம்

திருவோடு ஏந்தும் பரதேசி

தெருவில உருளும்

திருப்பதி கோவிந்தா..கோவிந்தா

இந்த சோம்பேறி நடைப்பிணங்களுக்கு

உயிர் கொடுக்கும் மருந்து..நல்ல மருந்து பொது நலம்

என்றும் எதிலும் பொதுநலம் \\



1957ல்

புதையல்..சிவாஜி,பத்மினி நடித்தது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்.படம் ஹிட்.விண்ணோடும் முகிலோடும் பாடல் இடம் பெற்ற படம்.விஸ்வனாதன் ராமமூர்த்தி இசை.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கம் புதுமைப்பித்தன்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..எம்.ஜி.ஆர்., நடித்திருந்தார்.இயக்கம் டி.ஆர்.ராமண்ணா


1960ல் வந்த படம் குறவஞ்சி..

இதில் சிவாஜி, சாவித்திரி நடித்திருந்தனர்,கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.காசிலிங்கம் இயக்கம்.டி.ஆர்.பாப்பா இசை.கலைஞர் வசனத்தில் வந்த இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியடையவில்லை.

1960ல் வந்த மற்றொரு படம் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' ஜெமினி,சரோஜாதேவி நடித்தது.ஜூபிடர் பிக்சர்ஸ் தயரித்த இப்படம் டி.பிரகாஷ்ராவ் இயக்கம்.இசை விஸ்வனாதன் ராமமூர்த்தி


1961ல் வந்த படம் தாயில்லாப்பிள்ளை.இப்படத்தின் இயக்குநர் எல்.வி.பிரசாத்..கே,வி.மகாதேவன் இசை.பாலையா,எஸ்.ராமாராவ் ..காமெடி நன்றாக இருக்கும்.பிராமணரல்லா ராமராவ்..பிராமணப்பெண்ணை மணப்பார்.ஆனால் அவர்கள் மாப்பிள்ளை பிராம்மணர் என்று வெளியே கூறுவர்.இதைவைத்தே தன் காரியங்களை ராமராவ் சாதித்துக் கொள்வார்..திரைக்கதை,வசனம் கலைஞர்.


1961ல் வந்த மற்ற படம் 'அரசிளங்குமரி'..எம்.ஜி.ஆர்.,பத்மினி நடித்தபடம்,ஜி,ராமநாதன் இசை., எம்.சோமசுந்தரம் இயக்கம்..தயாரிப்பு ஏ.எஸ்.ஏ.சாமி...கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்..இப்படத்தில் பட்டுக்கோட்டயாரின் 'சின்னப்பயலே..சின்னப்பயலே..'என்ற அருமையான பாடல் உண்டு.

1963ல் வந்த படம் இருவர் உள்ளம்..சிவாஜி,சரோஜாதேவி நடித்தது.பிரபல நாவலாசிரியை லட்சுமியின் பெண்மனம் என்ற நாவலைத் தழுவியது.திரைக்கதை வசனம் கலைஞர்.இயக்கம் எல்.வி.பிரசாத்..கே.வி.மகாதெவன் இசை.எல்லாப் பாடல்களிலும்..இனிமையும்..இளமையும் இருக்கும்..எம்.ஆர்.ராதாவின் வக்கீல் காமெடி..வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்..அருமையான படம்.

1963ல் வந்த மற்றொரு படம் காஞ்சித்தலைவன்..கே.வி.மகாதேவன் இசை.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..இந்த படம் தணிக்கையிலிருந்து பல வெட்டுகளுடன் தப்பியது.அண்ணாவையே காஞ்சித்தலைவன் என்று சொல்வதாக சொல்லப்பட்டது தணிக்கைத் தரப்பு. .எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தனர்.படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

1964ல் கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம் பூம்புகார்..எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி நடித்தது.சுதர்சனம் இசை..கலைஞர் திரைக்கதை,வசனம்..கவுந்தி அடிகளாக கே.பி.சுந்தராம்பாள் நீண்ட நாட்களுக்குப் பின் திரையில் தோன்றினார்.அவரது கணீர் குரலில்..கலைஞரின்..'வாழ்க்கை என்னும் ஓடம்' பாடல் இடம் பெற்றது.வெற்றி படம்.

1965 விஜயகுமாரி நடிக்க மேகலா பிக்சர்ஸ் படம்..பூமாலை..கலைஞர் கதை திரைக்கதை, வசனம்.

1966ல் வந்த படம் அவன் பித்தனா...இசை ஆர்.பார்த்தசாரதி..எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தார்...'இறைவன் இருக்கின்றானா' என்ற பாடல் பிரசித்தம்.படத்தின் திரைக்கதை, வசனம் கலைஞர்.

1966ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் மறக்கமுடியுமா? கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் எஸ்.எஸ்.ஆர்., தேவிகா நடித்திருந்தார்கள்.முரசொலி மாறன் இயக்கம்.திரைக்கதை வசனம் கலைஞர்.படத்தின் இசை அமைப்பாளர் ராமமூர்த்தி..படத்தில் ஒரு முக்கிய இடத்தில் பாடல் ஒன்று தேவைப்பட்டது.பாடலாசிரியர் மாயவநாதன் எழுதுவதாய் இருந்தது.ராமமூர்த்திக்கு திருப்தி ஏற்படவில்லை.எப்படித்தான் வேண்டும்..என மாயவநாதன் கேட்க..சற்று கோபத்தில் இருந்த ராமமுர்த்தி..'மாயவநாதா..மாயவநாதா..மாயவநாதா..' ன்னு எழுது என்றாராம்.இதனால் மாயவனாதன் கோபித்துக் கொண்டு போய்விட..விஷயம் அறிந்த கலைஞர்..தானே அதே போல் பாடல் இயற்றினாராம்.அதுதான் பி.சுசீலா பாடி பிரபலமான 'காகித ஓடம்..கடலலைமீது..போவது போல...மூவரும் போவோம்' என்ற பாடல்.


1966ஆம் வருடம் வந்த படம்..மணிமகுடம்..எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.முன்னர் நாடகமாக நடித்துக் கொண்டிருந்த கதை.இசை சுதர்ஸனம்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்

1967ல் வந்த படம் தங்கத்தம்பி..ரவிச்சந்திரன்,பாரதி நடிப்பு.இசை கே.வி.மகாதேவன்..திரைக்கதை வசனம் கலைஞர்


1967ல் வந்த மற்றொரு படம் வாலிப விருந்து.மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.அண்ணாவின் கதைக்கு கலைஞர் வசனம்.முரசொலி மாறன் இயக்கம்.ரவிச்சந்திரன்,பாரதி,சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.சந்திரபாபு பாடிய 'ஒன்றைக்கண்ணு டோரியா' என்ற பாடல் ஹிட்.


1970ல் மேகலா பிக்சர்ஸ் எடுத்த படம் எங்கள் தங்கம்..எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.கலைஞர் கதை..கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்...இசை விஸ்வநாதன்.

இந்த தொடர் பதிவு தொடரும் முன் 1970ல் எங்கள் தங்கம் படம் வெளிவந்த பின்..சிறிது சிறிதாக எம்.ஜி.ஆர்., கருணாநிதி உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் இப்படம் எடுத்த பின்னர்..மாறன்..இனி படங்களே எடுக்கப்போவதில்லை என்று சலிப்புடன் கூறினார்.


1972ல் எம்.ஜி.ஆருக்கு மாற்றாக கலைஞரின் மகன் மு.க. முத்து வை கதாநாயகனாக அறிமுகம் செய்வித்தார் கலைஞர்.எம்.ஜி.ஆர்., பாணியிலேயே ந்டிக்க ஆரம்பித்த முத்து..சொந்தக்குரலில் வேறு பாடினார்.மேகலா பிக்சர்ஸ் 'பிள்ளையோ பிள்ளை' முதுவின் முதல் படம்.லட்சுமி நாயகி.இப்படத்தில்..'உயர்ந்த இடத்தில் நான்..ஓய்வில்லாமல் உழைப்பவன் நான்' என்ற பாடலுடன் முத்து அறிமுகம் ஆவார்.

அப்படத்தில் வாலி எழுதிய மற்றொரு பாடல் 'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ..நீ மூவேந்தர் வழி வந்த மன்னவரோ..' என்ற பாடலும் உண்டு.

ஒருநாள் எம்.ஜி.ஆர்., வாலியுடன் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபடியே..வாலி..நீங்கள் இப்படி பாட்டு எழுதியது சரியா? மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா? என்று கேட்டு..வருத்தப் பட்டாராம்..ஆனால் வாலி அதற்குக் கூரிய பதில் எதையும் அவர் ஏற்கவில்லையாம்.


பின்னர்..டி.என்.பாலு வசனத்தில் முத்துவின் "பூக்காரி "வந்தது.

கலைஞர் கதை மட்டும் எழுத "அணையா விளக்கு" வந்தது

பிறகு வேறு சில படங்கள் வந்தாலும்..முத்து எதிர்ப்பார்த்த அளவிற்கு பின்னால் சோபிக்கவில்லை.

1978ல் வந்த படம் வண்டிக்காரன் மகன்..மேகலா பிக்சர்ஸிற்கு பதிலாக பூம்புகார் புரடக்ஷன்ஸ் பெயரில் வந்த படம்.திரைக்கதை,வசனம் கலைஞர்.ஜெயஷங்கர்,ஜெயலலிதா நடித்த இப்படத்திற்கு இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.


1979ல் வந்த படம் நெஞ்சுக்கு நீதி..கதை திரைக்கதை வசனம் கலை ஞர்..ஜெயஷங்கர்,சங்கீதா நடிப்பில்..ஷங்கர்-கணேஷ் இசையில் வந்த இப்படத்தின் இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு


1979ல் வந்த மற்றொரு படம் ஆடு பாம்பே..பூம்புகார் புரடக்சன்ஸ்..அமிர்தம் இயக்கம் கதை,திரைக்கதை,வசனம் கலைஞர் அமிர்தம் இயக்கம்


1981ல் வந்த படம் குலக்கொழுந்து..தயாரிப்பு ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்..ஜெயஷங்கர்,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இயக்குநர் ராமண்ணா..இசை விஸ்வநாதன்


1981ல் வந்த இன்னொரு படம் மாடி வீட்டு ஏழை..சிவாஜி,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.திரைக்கதை வசனம் கலைஞர்.பூம்புகார் தயாரிப்பு.


1982ல் கலைஞர் கதை திரைக்கதை வசனத்தில் வந்த படம் தூக்குமேடை

1983ல் இது எங்க நாடு..படம் வெளியானது.ராம நாராயணன் இயக்கம் சுரேஷ்,சுலக்க்ஷனா நடிப்பு.


1984ல் திருட்டு ராஜாக்கள்..பூம்புகார் தயாரிப்பு.ராமநாராயணன் இயக்கம்.


1984 காவல் கைதிகள் ..பூம்புகார் புரடக்ஷன்ஸ் தயாரிப்பு..ராம நாராயணன் இயக்கம்.

1985ல் குற்றவாளி என்ற படம் வந்தது.ராம நாராயணன் இயக்கம்.பூம்புகார் தயாரிப்பு.ரவீந்தர்,விஜி நடிப்பு

1986ல் பூம்புகார் தயாரிப்பில் காகித ஓடம் வந்தது. ராம நாராயணன் இயக்கம்.பூம்புகார் தயாரிப்பு.


1986ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் பாலைவன ரோஜாக்கள்..பூம்புகார் தயாரிப்பு..மணிவண்ணன் இயக்கம்.இளையராஜா இசை.பிரபு,நளினி நடித்தது.


1987ல் நீதிக்கு தண்டனை. கலைஞர் திரைக்கதை வசனத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சங்கர்-கணேஷ் இசையில் நிழல்கள் ரவி,ராதிகா நடித்தது.


1987ல் வந்த மற்றொரு படம் ஒரே ரத்தம்.கார்த்திக்,ராதா நடிக்க கே,சொர்ணம் இயக்கம்


1987ல் வந்த படம் வீரன் வேலுத்தம்பி.கலைஞர் திரைக்கதை வசனம் ராம நாராயணன் இயக்கம்.ராதரவி நடிப்பு. இசை எஸ்.ஏ. ராஜ்குமார்.


1987ல் வந்த படம் சட்டம் ஒரு விளையாட்டு.எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கம்.விஜய்காந்த் நடிக்க திரைக்கதை வசனம் கலைஞர்


1987ல் புயல் பாடும் பாட்டு.பூம்புகார் தயாரிப்பு.மணிவண்ணன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை வசனம் இளைய ராஜா இயக்கம்.



1987ல் நான்கு படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் கலைஞர்,இது ஒரு சாதனை.



1988 மக்கள் ஆணையிட்டால் ராம நாராயணன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை வசம்.விஜய்காந்த் நடித்தது.இசை எஸ்.ஏ. ராஜ்குமார்.



1988 பாசப்பறவைகள் வி.எம்.சி.ஹனிஃபா இயக்கம்.இளையராஜா இசை.திரைக்கதை வசனம் கலைஞர்.சிவகுமார்,லட்சுமி,ராதிகா நடித்தது.



1988ல் வந்த மற்றொரு படம் இது எங்கள் நீதி.கலைஞர் திரைக்கதை,வசனம்.எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கம் இளையராஜா இசை.

1988ல் வந்த படம் பாடாத தேனீக்கள்.பூம்புகார் தயாரிப்பு.இளையராஜா இசை,சிவகுமார்,அம்பிகா நடித்திருந்தனர்.



1989ல் வந்த படம் தென்றல் சுடும்..ராதிகா,நிழல்கள் ரவி நடிக்க மனோபாலா இயக்கம்



1989ல் வந்த மற்றொரு படம் பொறுத்தது போதும்..பி.கலைமணி இயக்கம்.விஜய்காந்த் நடித்தது..இளையராஜா இசை



1989ல் வந்த படம் நியாயத் தராசு.கே.ராஜேஷ்வர் இயக்கம்.மேனகா பிக்சர்ஸ் தயாரிப்பு.நிழல்கள் ரவி,ராதா நடிக்க சங்கர்-கணேஷ் இசை



1989ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் ஹனீஃபா இயக்கத்தில் சிவகுமார்,ராதிகா நடிக்க இளைய ராஜா இசையில் பூம்புகார் தயாரிப்பு பாச மழை



1990ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் பிரபு,நிரோஷா நடிக்க இளையராஜா இசையில் சந்தான பாரதி இயக்கத்தில் வந்த படம் காவலுக்கு கெட்டிக்காரன்



1993ல் வந்த படம் மதுரை மீனாட்சி.கலைஞர் திரைக்கதை, வசனம்



1996ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் செல்வா,சுகன்யா நடிக்க வந்த படம் புதிய பராசக்தி



பின் 9 ஆண்டுகள் கழித்து 2005ல் வந்த படம்..கண்ணம்மா..கலைஞர் கதை வசனத்தில் பிரேம் குமார்,மீனா நடிக்க எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாபா இயக்கத்தில் வந்த படம்



2008ல் வினீத்,கீர்த்தி சாவ்லா நடிக்க கலைஞர் திரைக்கதை,வசனத்தில் இளையராஜா இசையில் இளவேனில் இயக்கத்தில் வந்த படம் உளியின் ஓசை



அதன் பின்னர் மீரா ஜஸ்மின் நடித்த  பெண் சிங்கம்,பின்னர் பிரசாந்த் நடிக்க பொன்னர் சங்கர் வந்தது.



தவிர மனோகரா(1954) தெலுங்கு,ஹிந்தி திரைக்கதை கலைஞருடையது.பராசக்தி(1957) தெலுங்கு திரைக்கதை கலைஞருடையது



1951ல் ஆடா ஜென்மா,தெலுங்கு(தேவகி)1957ல் வீர கங்கனம் தெலுங்கு (மந்திரிகுமாரி)1967ல் ஸ்திரீ ஜன்மா தெலுங்கு (பூமாலை) ஆகிய படங்களுக்கு கதை,திரைக்கதை கலைஞருடையது.



இடைவிடாமல் 90 வயது இளைய கலைஞர் இன்னமும் கலைத்துறைக்கு ஆற்றிவரும் தொண்டு பாராட்டுக்குரியது.



இதே கலைஞர் அவர்கள் திரைத்துறையில் மட்டுமா ஜொலித்தார்.



நெஞ்சுக்கு நீதி 5ம் பாகம் வெளியீடு  ஜூன் 2, 2013

ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், வெள்ளிக்கிழமை, நெஞ்சுக்கு நீதி (5 பாகம்) இனியவை இருபது, சங்கத்தமிழ், குறளோவியம், பொன்னர் -சங்கர், தொல்காப்பியப்பூங்கா போன்ற பொக்கிஷங்களை கொடுத்துள்ளார். இதை தவிர ஏராளமான சிறுகதைகள், எண்ணிலடங்கா கவிதைகள், மற்றும் நாடகங்களான மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், உதயசூரியன், தூக்கு மேடை, காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, சிலப்பதிகாரம் ஆகியவை முக்கியமானதாகும். தூக்கு மேடை, காகிதப்பூ இவற்றில் அவரே நடித்துள்ளார். ரஷ்ய இலக்கிய மேதை கார்க்கி எழுதிய "தாய்" நாவலை தமிழில் கவிதை நடையில் எழுதியுள்ளார். அது தான் பின்னர் கவிஞர் பா.விஜய் நடிக்க "இளைஞன்" என்னும் பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.



*********************************



ஆக தமிழக சினிமா தன் நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில் எல்லீஸ் ஆர் டங்கன் . டி ஆர். சுந்தரம் என்னும் ஜாம்பவான்களுடன் திரைத்துறையில் பணியாற்றிய கலைஞர் அவர்கள் தமிழக திரைப்பட வரலாற்று நூற்றாண்டின் இறுதியில் இப்போது ஆஸ்கார் விருது வாங்கிய ஏ ஆர் ரகுமான் போன்றவர்களுடன் கூட வேலை செய்து செம்மொழி நூற்றாண்டு பாடலை கூட எழுதி வரும் கலைஞர் மஞ்சள் பை நிறைய பணம் எடுத்து வந்து தான் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்னும் நிலையில் இல்லை. ஒரே ஒரு பேனாவும் அவரது மூளையும் மூலதனமாக போதும்.


இனியாவது கலைஞரை மஞ்சள் பையுடன் வந்தார் இன்று கோடீஸ்வரன் ஆகிவிட்டார் என புலம்பும் பொறாமை கொண்டவர்களிடம் இதை நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்லலாம். ஊரான் சொத்துகளை எல்லாம் கலைஞரின் சொத்து என பொய்ப்பிரச்சாரம் செய்யும் புண்ணியாத்மாக்களிடம் புரியும் படி இதை நாம் சொல்லலாம்.


இன்று 90ம் ஆண்டு பிறந்த நாள் காணும் அழகு தமிழ் , முத்தமிழ் அறிஞர் கலைஞர் தன் வாழ்நாளிலேயே தன் நூற்றாண்டு விழாவினை காண வேண்டும். நாம் இன்று கொண்டாடுவதை விட இன்னும் மிகச்சிறப்பாக அதை கொண்டாட வேண்டும் என வாழ்த்துவோம்!



வாழ்க கலைஞர்! வாழ்க தளபதி!!வெல்க திமுக!!!

May 29, 2013

இன்று "அம்மா" திறந்து வைக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் ஒரு சின்ன கதையும்!

அவ்வப்போது வந்து பணிகளை பார்வையிடும் மு.க.ஸ்டாலின்


பழைய தமிழ் படங்களில் ஒரு வசனம் வரும். "உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றிவிடுவேன்". எல்லா அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கும் இந்த வசனம் சனி கிரகம் மாதிரி ஒரு முறையாவது கடந்து போகும். அந்த தண்ணி இல்லா காடுதான் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். இத்தனைக்கும் காவிரி அதன் அருகே தான். இந்த அவப்பெயரை நீக்கத்தான் திமுக அரசு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்தது.


இந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய நகராட்சிப்பகுதிகள், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 17 பேரூராட்சி பகுதிகள், 18 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகள், ஆக மொத்தம் 6,755 குடும்பங்களை சேர்ந்த 30 லட்சம் மக்கள் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரை பெறலாம். அந்த திட்டம் கடந்து வந்த பாதையை பார்ப்போம்!



* 1997ல் பிப்ரவரி மாதம் திமுக ஆட்சியில் இதற்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டது. 576 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டமாக தொடங்கப்பட்டு  பின்னர் புளோரைடு வியாதிகளை தடுக்கும் அல்லது குறைக்கும் சுகாதார திட்டமும்  அத்துடன் இணைந்து இதற்கு ஜப்பானிய நாட்டு நிதி நிறுவனம் வழியே அந்த திட்ட மதிப்பீடு தொகை 576 கோடி இந்திய ரூபாய்களை பெற அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு திட்டம் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது மத்தியில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி. வாஜ்பாய் பிரதமர்.





*1998 மார்ச் - திட்டத்துக்கான கள ஆய்வுப்பணி திமுக அரசால் ஆரம்பிக்கப்பட்டது. காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டி அதற்கான தடையில்லா சான்றிதழ் கோரி  மத்திய பாஜக அரசுக்கு திட்ட நகல் அனுப்பி வைக்கப்பட்டது.


*இதற்கிடையே தமிழகத்தின் திமுக ஆட்சி, ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் அந்த 576 கோடி ரூபாய் கடனாக கொடுக்க ஒப்புதல் அளித்தனர்.


* 1998  மே மாதம் வாஜ்பாய் அரசு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதன் விளைவாக ஜப்பான் கடன் தர மறுத்து விட்டது.


*1998 செப்டம்பர் மாதம் பாஜகவின் மத்திய அரசு தனது மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் மூலமாக காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி கொடுத்து தடையில்லா சான்றிதழ் வழங்கியது.


*அதன் பின்னர் திமுக ஆட்சி காலத்தில் இரண்டாண்டுகள் வேறு எந்த வகையில் பணம் கிடைக்கும் என பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.  ஒன்னரை ஆண்டுகள் கழித்து நிலமை சீரானது. ஆனால் அதற்குள் 2001 தேர்தல் வந்ததது.


*2001 தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்து அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திமுக திட்டம் என்பதால் அது கைவிடப்பட்டது. அதிமுகவுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி,ஓசூர் மக்கள் நலனை விட திமுகவின் திட்டத்தை நாம் செயல் படுத்துவதா என்னும் ஈகோவே ஜெயாவுக்கு பெரிதாய் இருந்தது. அதனால் 2001 முதல் 2006 வரை ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஒரு இருண்ட காலம் எனலாம். திட்டத்துக்கு மூடுவிழா நடந்தது அதிமுக ஆட்சியால்.


*2006 மே மாதம் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது.இந்த திட்டத்தை செயல்படுத்தும் உள்ளாட்சித்துறை அமைச்சகத்துக்கு தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் ஆனார்கள்.


*11.8.2006ல் சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது காவிரி நீரைக்கொண்டு மீண்டும் ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி அவர்கள் அறிவித்தார். அதாவது 110 தலைவிதியின்படி  அல்ல. விவாதத்துக்கு பின்னர் எடுக்கப்பட்ட முடிவு அது.


*27.1.2007 அன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசும் போது கலைஞர் அவர்கள் "ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு (அப்போது காங்கிரஸ் அரசு) மிகுந்த முன்னுரிமை அதாவது தமிழ்ல சொல்லப்போனா ஃபர்ஷ்ட் ப்ரியாரிட்டி பேசிஸ் ல (இப்ப புரியுதா) இந்த திட்டத்துக்கு காசு கொடுக்கனும்னு ஜப்பான் காரன் கிட்டே சொல்லுச்சு. அப்புடியே ஜப்பான் காரன் காசு கொடுக்காட்டியும் தமிழக அரசு அண்டா  குண்டானை அடகு வச்சாவது வேற எப்படியாவது காசு புரட்டி இதை நாங்க செஞ்சுடுவோம்" என கலைஞர் அறிவித்தார்.


*23.3.2007 அன்று தமிழக பட்ஜெட்ல இதுக்கான வேலைக்கான ஆரம்ப கட்ட காசு ஒதுக்கியது திமுக அரசு. ஆரம்ப கட்ட வேலை எல்லாம் தொடங்கியது.


* 6.2.2008 அன்று தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு நிபுனர் குழுவோடு ஜப்பான் போனாரு. போகும் போதே காசு கேக்குறது கேக்குறோம் அப்படியே சென்னை மெட்ரோ வாட்டர் திட்டத்துக்கும் சேர்த்து கேட்போம் என கேட்டார். அங்க ஜப்பான் கூட்டுறவு வங்கியின் இயக்குனர் திரு. டிசியோகுசின்னு ஒருத்தரை பார்த்து 9,700 கோடி சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் அது போல அப்போதைய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மதிப்பான 1330 கோடி ரூபாய் திட்டத்துக்கும் சேர்த்தே காசு கொடுங்கன்னு தளபதி கேட்டாரு.


* ஜப்பான் நிபுனர் குழு தமிழகம் வந்து ஆய்வு செய்தது. காசு கொடுக்கலாமா, கொடுத்தா சரியா திரும்பி வருமா என 2007ம் ஆண்டு அதே பிப்ரவரி, மாசம் வந்து ஆய்வு செஞ்சுது. உடனே ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி மெட்ரோ ரயில் திட்டம் 9,700 கோடி மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 1,330 கோடி ரூபாய் இரண்டுக்கும் ஒப்புதல் கொடுத்து காசு கொடுத்தது. (படிப்படியாக வேலை முடிய முடிய காசு கொடுத்து கொண்டு வந்தது)
அதாவது திமுகவின் முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டதை 2001-2006ல ஜெயாவின் அதிமுக அரசு கைவிடாம தொடர்ந்து செயல் படுத்தி இருந்தா இதே திட்டம் 576 கோடி ரூபாய்ல முடிஞ்சு போயிருக்கும். மக்களுக்கும் அப்போதே தண்ணி கிடைச்சு இருக்கும். ஆனா அந்த 5 வருஷம் சும்மா கிடப்பிலே போட்டதால தமிழக மக்கள் பணம் 750 கோடி ரூபாய் எள்ளு. (ச்சீ தூ... ஜெயாவெல்லாம் ஒரு நல்ல அட்மினிஸ்ட்ரேட்டர்ன்னு சொல்லும் ஊடகங்கள் ஆரத்தி கரைச்சு வையுங்க, அம்மாவுக்கு ஆரத்தி கரைச்சு வையுங்கன்னு பாடுவதுக்கு பதிலா சாணிய கரைச்சு ஊத்துங்க, ஓயா மேல சாணிய கரைச்சு ஊத்துங்க"ன்னு பாடலாம்...ச்சீ தூ)


* 26.2.2008ல் தர்மபுரியில் நடந்த ஆரம்ப விழாவில் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் ஆரம்பம் ஆகியது.


* திட்ட செலவு விலைவாசி உயர்வினால் அதிகரித்தமையால் திருத்திய நிர்வாக ஒப்புதலின் படி திட்ட மதிப்பு தொகை 1928 கோடியே 80 லட்சம் ஆக உயர்ந்ததப்பட்டது.


*ஐந்து செக்டர்களாக வேலைகள் பிரிக்கப்பட்டது. முதல் செக்டர் வேலைகளுக்கு டெண்டர் விடப்பட்டது. மொத்தம் பத்து கம்பனிகள் அவங்கவங்க கம்பனி ஜாதகத்துடன் டெண்டர் அப்ளை செய்தனர். அப்படியே அதை மூட்டை கட்டி தமிழக அரசு ஜப்பன்ல கடன் கொடுக்கும் பேங்குக்கு அனுப்பியது. அவங்க ஜாதக பொருத்தம் எல்லாம் பார்த்து "இன்ன கம்பனிக்கு கொடுத்தா தான் ஒழுங்கா வேலை நடக்கும். அது ஒழுங்கா முடிஞ்சா தான் என் கடன் வசூலாகும்" என சொல்ல அதன் படி வேலை கொடுக்கப்பட்டது.


*அதே போல இரண்டாவது, மூன்றாவது ஐந்தாவது கட்ட வேலைகளுக்கும் டெண்டர் விடப்பட்டு  மேலே சொன்னது போல செய்யப்பட்டு வேலைகள் துரித கதியில் நடந்தன. உள்ளாட்சி துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாதம் ஒரு முறை கண்டிப்பாக போய் பார்த்து ஊக்குவித்துவிட்டு வந்தார்.



*ஜப்பான் பேங்கு சொன்னது போல அதாவது 2009 ஜூலையில் டெண்டர் எல்லாம் விடப்பட வேண்டும், 2009 டிசம்பரில் களப்பணிகள் ஆரம்பிக்க வேண்டும், 2012 டிசம்பரில் வேலை எல்லாம் முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர வேண்டும்.


* 2011 மே மாதத்தில் கிட்ட தட்ட 90 சத பணிகள் முடிந்து விட்டன. இன்னும் ஆறு மாத காலம் இதே நிலையில் வேலைகள் துரிதமாக நடந்தால் 2012 பிப்ரவரியில் திட்டம் அதாவது பத்து மாதம் முன்பாகவே முடிந்து இருக்கும்.


* ஆனால் தமிழக மக்களின் துரதிஷ்டம் காரணமாக 2011 மே மாதம் ஆட்சி மாறியது. திட்டம் சுனங்கிப்போனது. இன்னும் 10 சதம் வேலை மீதி இருக்கும் நிலையில்.... அதிமுக ஆட்சி இது திமுக திட்டம் என்கிற காரணத்தால் திட்டத்தின் மீது கவனம் செலுத்தவில்லை. தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களின் தண்ணீர் தேவையை விட அதிமுக அரசுக்கு ஈகோ பிரச்சனை தான் முன்னே நின்றது.




* பணம் கொடுத்த ஜப்பான்காரன் தன் பணம் மீண்டும் கிடைக்க வேண்டுமே என நினைத்து தானே தன் ஆட்களை கொண்டு வந்து தமிழக அரசு ஒத்துழைப்பு அத்தனை சிறப்பாக இல்லாவிடினும் வேலை செய்தனர்.இன்று முழுமை பெறாமலேயே நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இன்று 29.5.2013 அன்று மிக தாமதமாக மிக மிக மிக தாமதமாக தமிழக அரசால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது.


இது தான் ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கடந்த கால வரலாறு.


எனக்கு தெரிந்து ஒரு உண்மைக்கதை. ஒரு ஊர்ல ஒரு புருஷன், பொண்டாட்டி இருந்தாங்க. அவங்களுக்கு ஒரே பெண் குழந்தை. அம்மாக்காரி அத்தனை ஒரு நல்லவ இல்லை. பெண்ணுக்கு திருமண வயது வந்தது. அப்பாகாரர் அங்க இங்க கடனை வாங்கி திருமணம்  பண்ணி வைக்க போராடினார். கடன் வாங்க போன இடத்திலே பிர்ச்சனை. திருமணம் ஒத்திப்போனது. பின்னர் பிரச்சனை தீர்ந்த பின்னர் அப்பா மீண்டும் திருமண  ஏற்பாடுகள் செஞ்சாரு. ஒரு பைனன்சியர் அப்பாகாரரின் நாணயத்தை வந்து பார்த்து விட்டு மாப்பிள்ளையும் பெரிய இடம்.


கல்யாணம் முடிந்த பின்னர் மாப்பிள்ளை கூட தனது கடனை அடைத்து விடக்கூடிய அளவு பெரிய இடம் தான். எனவே பைனான்ஸ் செய்தால் பணம் கண்டிப்பா திரும்பிடும் என நினைத்து பைனான்ஸ் செய்தார். கல்யாண வேலை எல்லாம் ஜரூராக நடந்தது. நிச்சயம் கூட பெரிய விழாவாய் நடந்தது. பின்னர் எல்லா கல்யாண வேலையும் 90 சதம் முடிந்து தாலி கட்டும் நாளுக்கு முதல் நாள் அப்பா ஒரு வேலை கிடைத்து  வெளியூர் போய்விட்டார் வேறு வழி இல்லாமல். போனவர் எக்கு தப்பாய் ஒரு அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டுவிட ஐந்து வருடம் கழித்து தான் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டிய நிலை. கல்யாணம் கிடப்பில் போடப்பட்டது. தாலி கட்டும் நாள் "தேதி குறிப்பிடப்படமல்" ஒத்திப்போடப்பட்டது. பெண்ணின் அம்மா தான் கொஞ்சம் "அப்படி இப்படி"யாகிற்றே. பெண்ணின் கல்யாணம் பற்றி கவலைப்படவில்லை.தன் நல்ல புருஷன் பார்த்த மாப்பிள்ளைக்கு கட்டி வைப்பதா என ஈகோ காரணமாய் திருமணத்தை கண்டுக்காமல் விட பணம் கொடுத்த பைனான்சியர் தன் பணம் வர வேண்டுமே என்கிற நோக்கில் தானே திருமண வேலையை முன்னின்று நடத்த  ஒரு வழியாக மிக தாமதமாக திருமண  தேதி முடிவானது.


பெண்ணின் அம்மாவுக்கு வேறு வழி இல்லை. பத்திரிக்கை அடித்தாள். என்னவென்று. அப்பன் பெயரை போடாமல் ஏதோ தான் மட்டுமே பெத்த பெண் என்பது போலவும், தனே அந்த திருமணத்தை சிரமப்பட்டு பணம் புரட்டி ஏற்பாடு செய்தது போலவும் ஒரு பத்திரிக்கை. கல்யாணம் நல்லபடி முடிந்தது. ஆனாலும் அப்பன்காரன் சொன்னது போல முழு சீரும் செய்யாமல் ஏதோ அரைகுறையாக நடந்தது. பெண்ணை பெற்ற அப்பன் காரன் காதில் செய்தி விழுந்தது. ஏதோ இந்த மட்டிலும் செய்தாளே அந்த மகாபாவி என வாழ்த்தினார். எப்படியோ பெண்ணின் திருமணம் நடந்தால் சரி. மீதி சீர் வரிசை எல்லாம் தான் நாட்டுக்கு வந்த பின் முழுமையாக செய்வதாக பெண்ணிடம் சேதி அனுப்பினார்.


கல்யாணத்துக்கு வந்தவர்கள், அந்த தெருவில் இருந்தவர்கள் எல்லோருக்கும் அந்த பெண்ணின் அப்பனைப்பற்றியும் தெரியும். ஆத்தாளை பற்றியும் தெரியும். அம்மாகாரியை காறித்துப்பி விட்டு அந்த பெண்ணை வாழ்த்தி விட்டு போனார்கள். அந்த அம்மாகாரிக்கு என சில அல்லக்கைகள் இருக்குமே அதுகள் "அம்மா" வாழ்க என வாழ்த்துப்பா பாடுகின்றன. ஏற்கனவே நெம்மேலி கடல் நீரை சுவைநீராக ஆக்கி பெருமை கதையும் இப்படித்தான். வெட்கம் கெட்ட ஜென்மங்கள்!



இந்த மேற்கண்ட உண்மைக்கதைக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட வரலாறுக்கும் ஒரு வித்யாசமும் இல்லை.


இன்னும் ஒரு விஷயம்... 98 சதம் வேலை முடிந்த பின்னர் தலைமை செயலகம் திமுக அரசால் திறந்து வைக்கப்பட்ட போது "செட்டிங்ஸ்" போட்டு ஒரு திறப்பு விழாவா? என கூப்பாடு போட்ட நடுநிலை நாயகம் எல்லாம் இன்றைக்கு சினிமா நடிகைகள் கிசுகிசுக்கள் எழுதிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருக்கின்றன. நடக்கட்டும் நடக்கட்டும். எல்லாவற்றையும் நாட்டு மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர்!!

May 27, 2013

எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய கலக்டர் சொக்கலிங்கம்!


இடமிருந்து வலமாக வெள்ளை உடையில் திரு. சொக்கலிங்கம்


இவருடைய பெயர் சொக்கலிங்கம். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் வழுவூர் மெயின் ரோட்டை அடுத்து சுந்தரப்பன்சாவடி என்னும் கிராமம்(அதே மெயின் ரோட்டிலேயே) இவருடையது. உடையார் சமூகத்தை சேர்ந்தவர். பக்கத்து கிராமங்கள் எல்லாம் அதாவது பண்டரவாடை, மங்கைநல்லூர், நெய்க்குப்பை, வழுவூர் இங்கெல்லாம் இவருடை சமூகத்தினர் அதிகம். அவர்கள் பெரிய நிலக்கிழார்களாக இருப்பினும் இவர் ஏழை. தன் தாய் தந்தையர்களுக்கு ஒரே மகன்.இவரது தந்தையார் இவருடைய சிறு வயதிலேயே காலமாகிவிட்டார். அம்மாவும் மகனும் மட்டும் தான் வீட்டில். இவரோ வயல் வேலைக்கு சென்று தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையெனினும் இவர் அங்கிருந்து தினமும் எட்டு கிலோ மீட்டர் நடந்தே வந்து மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்தார்.


தன் குடும்ப ஏழ்மை நிலையிலும் அண்ணாமலை பல்கலைகழகத்துக்கு சென்று பட்டப் படிப்பும் படித்தார். பின்னர் I.A.S தேர்வு எழுதி தேர்வாகி (தமிழ்நாடு கேடர்) தமிழக அரசின்  முதலமைச்சராக 1967ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.என்.அண்ணாதுரை அவர்களுக்கு நேர்முக உதவியாளர் ஆக பணியமர்த்தப்பட்டார். அண்ணாவின் மறைவுக்கு பின்னர் தமிழகத்தின் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியராக இருந்து பணியாற்றினார். தன் வருமானத்தில் தன் தந்தையாருக்கு (அதே சுந்தரப்பன் சாவடி மெயின் ரோட்டில்) தன் வீட்டுக்குள் (மெயில் ரோட்டை பார்த்து இருக்கும் கொல்லையில்) சிலை வைத்து கோவில் கட்டினார். அவர் எங்கு பணியாற்றினாலும் இங்கே தன் சொந்த கிராமத்துக்கு வந்து தான் விடுமுறையை கழிப்பார்.


அண்ணாவின் மீது அதீத  பற்று கொண்டவர். ஒரு முறை அண்ணா முதல்வராக இருக்கும் போது மயிலாடுதுறை வழியாக திருவாரூர் செல்லும் வழியில் தன் வீட்டில் மதிய உணவு உண்ண வேண்டும் என அண்ணாவை இவர் கேட்டுக்கொள்ள அண்ணாவும் சம்மதித்தார். ஆனால் இவரது தாயார் சிறிது மனநலம் குன்றி விட்ட நிலை அது. அண்ணாவுக்காக வித விதமாக சமைத்து வைக்க சொல்லி இவர் தன் தாயாருக்கு கடிதம் எழுதியும் அவர் அதை செய்யவில்லை. புளிக்குழம்பும், சுட்ட அப்பளமும் மட்டுமே வைத்து இருந்ததைக்கண்டு சொக்கலிங்கம் அதிர்ந்தார். ஆனால் அண்ணாவோ (முதல்வர்) இனிய முகத்தோடு "நான் நீண்ட நாளாக புளிக்குழம்பும், சுட்ட அப்பளமும் சாப்பிட வேண்டும் என நினைத்து இருந்தேன். என் தொத்தா( அண்ணாவின் வளர்ப்பு தாய்) அவர்களுக்கு மட்டுமே எனக்கு இது பிடிக்கும் என தெரியும். மிஸ்டர் சொக்கலிங்கம் உங்கள் அம்மாவின் உருவில் என் தொத்தாவை காண்கிறேன்" என அண்ணா இவரை தேற்றினார். ஆனாலும் அன்று தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் அன்று முதல் திரு. சொக்கலிங்கம் மதிய உணவை சாப்பிடும் பழக்கத்தையே விட்டு விட்டார். அத்தனை பக்தி அண்ணா மீது இவருக்கு.



தன் பணிக்காலத்தில் மிகவும் கண்டிப்பானவர் என்னும் பெயரைப்பெற்றார். எம் ஜி ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது தமிழக அரசின் தலைமை செயலர் என்னும் உயரிய அந்தஸ்து பெற்றார். எம் ஜி ஆர் அவர்களின் கடைசி காலத்தில் உடல் நலம் குன்றிய போது  அமரிக்க புரூக்ளின்  மருத்துவமனை சென்ற போது அவருடன் சென்ற சிலரில் தலைமைச்செயலர் திரு. சொக்கலிங்கம் அவர்களும் உண்டு. அப்போதைய முதல்வர் எம் ஜி ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் திரு.சொக்கலிங்கம் அவர்கள்.


பின்னர் பணி ஓய்வு பெற்ற பின்னர் தன் சொந்த கிராமத்துக்கு வந்து தன் வீட்டு கொல்லைப்பக்கம்  இன்றைய நாகரீகத்துக்கு ஏற்றது போல கான்கிரீட் வீடு ஒன்றை சிறியதாக கட்டிக்கொண்டு தன் வீட்டை சுற்றிலும் தோட்டங்கள், தென்னை மரங்கள் சூழ அமைதியான வாழ்க்கை நடத்தினார் தன் தாயாருடன். (அது வரை அவரது தாயாரும் இருந்தார்) அனால் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உயர் கல்வி கற்று அமரிக்க நாட்டிற்கு சென்று விட்டனர். இவரும் ஆறு மாதத்துக்கு ஒரு முறை அமேரிக்கா சென்று சில நாட்கள் தன் குடும்பத்துடன் வசித்து விட்டு மீண்டும் தன் கிராமத்துக்கு வந்து விடுவார். பின்னர் தன் தாயார் இறந்த பின்னர் தன் தந்தையாருக்கு கட்டிய கோவிலுக்கு பக்கத்தில் தாயாருக்கும் சிலை வைத்து தனிக்கோவில் கட்டினார்.


தான் சுந்தரப்பன் சாவடியில் வாழ்ந்த கடைசி காலத்தில் தனக்கு வரும் ஓய்வூதியப்பணம் மற்றும் தன் கொல்லையில் காய்க்கும் தேங்காய்களை விற்று வரும் வருமானம் இவைகளை கொண்டு நிம்மதியான வாழ்வு வாழ்ந்தார். ஒரு ரூபாய் கூட விரய செலவு செய்ய மாட்டார். அவரால் மயிலாடுதுறைக்கு பெருமை. அவரால் அவர் படித்த நகராட்சி மேல் நிலைப்பள்ளிக்கு பெருமை. அவரால் அவர் கிராமத்துக்கு பெருமை. சுற்றி இருந்த கிராமங்களுக்கு பெருமை.

இரு தினங்கள் முன்பாக அமரிக்கா சென்றிருந்த போது உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரது ஆசைப்படி அவரது உடல் சொந்த ஊருக்கு வருகின்றதாம். அமேரிக்கா சென்று இறந்தாலும் தான் நேசித்த மண்ணில் வந்து அமைதியாக உறங்கட்டும் திரு. சொக்கலிங்கம் அய்யா அவர்கள்!


"பத்திரிக்கா உலக" நியதிப்படி செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் சூதாட்டம் மற்றும்  கூட்டிக்கொடுக்கும் தொழிலதிபர்  குருநாத் மெய்யப்பன் இடம் பெற,திரு.சொக்கலிங்கம் அவர்கள் எட்டாம் பக்கத்தில் இரண்டு இன்ச் ஆக சுருங்கி போயிருந்தார்.



திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கு மயிலாடுதுறை மக்கள் சார்பாக அஞ்சலிகள் :-(

May 22, 2013

என் அருமை புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்காக இந்த பதிவு! உண்மையை உணருங்கள்!



சீமார், நெடுமரம், வைக்கோ கூட்டம் எல்லாம் ஒன்னு கவனிக்கனும். பிள்ளை பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைத்தது எப்பத்தில இருந்துன்னு கவனிக்கனும். திமுக, காங்கிரஸ் கூட்டனி புட்டுகிட்ட பின்ன தான். போன தேர்தல் இல்லை... 2009 தேர்தல்ல ஆரம்பிச்சு உங்க கூட்டம் காங்கிரசையும், திமுகவையும் பேசாத பேச்சில்லை. போன தேர்தல் வரை பிரபாகரன் படம் வச்சுகிட்டு நீங்க தமிழ்நாட்டிலே பண்ணாத ரவுசு இல்லை. (அதுக்கு முன்ன நீங்க பிறக்கவேயில்லையா?) கலைஞர் முதல்வராக இருந்த போது நீங்கள் பிரபாகரன் படம் வைத்து கொண்டு கூட்டம் நடத்திய போது இப்போது மாதிரி அத்தனை கெடுபிடி இல்லை. காங்கிரசும் வாயை திறக்கவில்லை. காங்கிரஸ் நினைத்து இருந்தால் உங்க வகையறாக்களை தேசிய பாதுகாப்பு சட்டப்படி (மத்திய அரசே நேரிடையாக) உள்ள தூக்கி போட்டு நொங்கு பிதுக்கி இருக்கலாம். ஆனால் கூட்டணி கட்சியாக திமுக இருந்ததால் வாயை மூடிகிட்டு இருந்துச்சு. நீங்களும் கலைஞரை கழுவி கழுவி ஊத்துனீங்க. கலைஞரும் காங்கிரசின் சிலுவையை தூக்கி சுமந்தார். இப்போது சிலுவையை காங்கிரசின் முதுகு மேலே தூக்கி வைத்து விட்டார்.

சிலுவை சுமக்கும் காங்கிரஸ் பாரம் தாங்காமல் இதோ நாராயணசாமி மூலமாக முதல் பிள்ளையார் சுழி போட்டுவிட்டது . இதுவரை தமிழகத்தில் இருந்து சுப்ரமணிய சாமி, சோ.ராமசாமி போன்ற சாமிகள் மட்டுமே நேரிடையாக பிரபாகரனை தாக்கி பேசியும் எழுதியும் வந்தனர். அதை மக்கள் அத்தனை ஒரு சிரத்தை எடுத்து கவனிக்கவும் இல்லை. கவனித்தாலும் அவங்க  ரெண்டு பேரும் அரசியல்வாதியா இருந்தாலும் அடிப்படையில் ஒரு நகைச்சுவைவாதிகளாக இருந்தமையால் மக்கள் சிரித்து விட்டு போய்விட்டனர். தவிர அந்த ரெண்டு சாமியும் ஒண்டிக்கட்டை சாமிகள். இந்த நாராயணசாமி ஒண்டிக்கட்டை சாமி இல்லை. ஒரு தேசிய கட்சியின் , நாட்டை ஆளும் பிரதமர் அலுவலக தலைமை பியூன். நிலக்கரி சுரங்க ஊழலில் பிரதமரை காப்பாத்த சட்ட அமைச்சரை (கேபினட் அந்தஸ்த்து ) பலிகடா ஆக்கிவிட்டு சி பி ஐ அறிக்கையை திருத்திய இந்த நாராயணசாமி கழுவிய மீனில் நழுவிய மீன் என்பதை உணரவும். இதோ அந்த நாராயணசாமி பிரபாகரனை பற்றி பேசியதை பாருங்கள்.....

\\ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரன் என்கின்றனர். அவர் ஒரு கோழை. பெண்கள், சிறுவர்கள் மற்றும் அப்பாவி மக்களை போரில் கேடயமாக பயன்படுத்தியவர் ஒரு வீரனா? ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்றபோது ராணுவ வீரரால் தாக்கப்பட்டார். அந்த தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பினார்.
வெற்றியோ, தோல்வியோ போரை முன் நின்று நடத்துபவர் தான் வீரன், பதுங்கிக் கொண்டவர்கள் அல்ல. சீமான் தன்னுடைய கூட்டத்தில் காஷ்மீர் தீவிரவாதி யாசின் மாலிக்கை அழைத்து வந்து பேச வைத்துள்ளார். தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவற்றை தூண்டிவிடுபவர்கள் தேச துரோகிகள். பலமுறை சிறைக்கு சென்ற சீமான் மீண்டும் சிறைக்கு செல்ல விரும்புகிறார். தமிழக அரசின் வழக்குக்கு பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் வைக்க வேண்டும். நக்சலைட்டுகளின் தீவிரவாதத்தையும், அசாம் தீவிரவாதத்தையும் ஒடுக்கியுள்ளோம்.
எங்களை பொறுத்த வரை சீமான் போன்றோர் சுண்டைக் காய்கள். இந்தியாவில் இருந்து கொண்டு நம் நாட்டுக்கே எதிராக செயல்படுபவர்களை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றார்.http://tamil.oneindia.in/news/2013/05/20/india-narayanasamy-wants-tn-govt-arrest-seeman-175644.html \\

நான் கூட எழுதினேன். ...."கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே"  என்னும் தலைப்பில். அவர் டெஸோ மீண்டும் உயிர்பித்தவுடன். ஆனால் எனக்கு கிடைத்தது வசவுகள் தான். எங்கிருந்து? புலம்பெயர் புண்ணாக்குகளிடமிருந்து!

இந்த அளவுக்கு தைரியமாக எந்த ஒரு அரசியல் கட்சியும் இதுவரை தமிழகத்தில் பேசியது இல்லை. ஜெயலலிதா கூட பிரபாகரனை பிடித்து வந்து இந்தியாவில் வைத்து தூக்கில் போட வேண்டும் என்றும், போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றும் சொன்னதற்கே இன்று வரை திமுக உள்ளிட்ட கட்சிகள் காய்ச்சி எடுத்து வருகின்றன. சரி இந்த மாதிரி இனி சொன்னல் தமிழகத்தில் எடுபடாது என நினைத்த ஜெயா கூட இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என டுபாக்கூர் விட்டுத்தான் ஆட்சியை பிடிக்க முடிந்தது. ஆனால் காங்கிரஸ் அது போல எந்த காலத்திலும் சொல்லாது. ஏனனில் காங்கிரஸ் என்பது ஒரு கழுத்தறுக்கும் சாத்தான். திமுகவும் இங்கே காங்கிரசால் கைகழுவி விடப்பட்டு இனி தமிழகத்தில் இழக்க எதுவும் இல்லை என்னும் நிலையில் எது வேண்டுமானாலும் செய்யும்.

அண்ணாவால் கருவறுக்கப்பட்ட காங்கிரஸை சமாளிக்க ஆளானப்பட்ட திமுகவே தன் முழு பலத்தையும் காட்ட வேண்டியுள்ளது. சீமான், வைக்கோ, நெடுமரம் குரூப் எல்லாம் நாராயணசாமி சொன்னது போல சுண்டைக்காய் தான் அவர்களுக்கு என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை.

@ புலம் பெயார்ந்த புண்ணாக்குகளுக்கு!

இனியாவது சீமான் குரூப்க்கு பணம் அனுப்பி உங்கள் தலைவர் மேதகு பிரபாகரன் (??)மானத்தை காற்றில் பறக்க விட வேண்டாம் புலம் பெயர்ந்த புண்ணாக்குகளே! ஒழுங்கு மாரியாதையா இருங்க. இல்லாட்டி இருக்கும் இடத்தில் கூட ஆப்பு வரலாம்.இதே தமிழகத்தில் இருந்து கொண்டு அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞரை நீங்கள் திட்டி தீர்த்து விட்டு இப்போது அம்மையார் ஆட்சி வந்ததும் கனடா, ரஒராண்ரோ எல்லாம் போய் ஒளிந்து கொண்டு அங்கேயும் இருந்து கொண்டு கலைஞரை திட்டுவதும் எங்களுக்கு தெரியும். இனியும் திமுக தொண்டர்கள் சும்மா விட மாட்டோம். மீண்டும் கலைஞர் ஆட்சி வந்ததும் இங்கே வந்து அவரை நொட்டலாம் என நினைச்சா நாங்க சும்மா விட மாட்டோம். 

எல்லோரும் கலைஞர் இல்லை. திட்டினா கூட "பாவம் போ..."ன்னு சொல்ல. நாராயணசாமி போன்ற நச்சு பாம்புகளும் உண்டு. நீங்க செத்த பாம்பு. உங்களை அடிக்க நாராயணசாமிகள்  போன்ற மண்புழுக்கள் மட்டுமே போதும். இனியும் கலைஞரை தான் திட்டுவேன் என சொன்னா உங்க மேல அனுதாபப்பட மட்டுமே முடியும்!

நான் "கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே" என போட்ட பதிவுக்கு வந்ததை விட அதிக வசவுகள் இதற்கு வரும் என தெரியும். போடா புண்ணாக்குகளா, நாங்கள் ஈழத்தில் வாழும் உண்மையான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக டெசோ அமைப்பை வைத்து இருக்கின்றோம். அதற்காக உழைக்கின்றோம். ஆனால் நீங்கள் கனடா, அவுஸ்த்ரேலியா, றொரண்றோ, நோர்வே என சொகுசு வாழ்வு வாழ்ந்து கொண்டு "ஈழம் கிடைத்தால் எங்கே நாட்டுக்கு திரும்பி போக நேரிடுமோ" என்னும் மனநிலையில் இருக்கும் புண்ணாக்குகள். உங்களுக்கு நாடு முக்கியம் இல்லை. காசு தான் முக்கியம். ஆனால் நாங்கள் போரிடுவது தமிழீழத்தில் இருக்கும் நிஜமான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக!

இனிமேலாவது புலம் பெயர்ந்து குந்திகிட்டு என்னை திட்டுவதை விடுத்து யதார்த்தத்தை கவனியுங்க. உங்க சொந்த பந்தம் எல்லாம் ஈழத்தில் இருக்காங்களே மிச்ச மீதி... அவங்க நலனுக்காக வாயையும் அதையும் பொத்திகிட்டு இருங்க. எத்தனை நாள் சீமானுக்கு பணம் கொடுப்பீங்க??? உங்க வாழ்நாள் முடியும் வரைக்குமா? நிப்பாட்டுங்க ஒரு மாசம். பின்ன இங்க சத்தம் குறையும். அப்பவே நீங்க தெரிஞ்சுக்கலாம். இவன் காசு கொடுத்தா கூவும் கிளி தான். புலி இல்லை என!

May 20, 2013

மிஸ்டர் காக்கையார்!!!


வரும் புதன் அன்று கடைகளில் கிடைக்கும் 'பாவியர் வடகன்' இதழில் வரும் "மிஸ்டர் காக்கையார் " பகுதியில் சில வரிகள்:

வியர்வையில் குளித்து வந்த காக்கையார் " முதல்ல ஏ சி யை போடுங்கப்பா" என சொல்லி டேபிளில் வந்து அமர்ந்ததும் சோற்றுக்கற்றாழை ஜூசை கொடுத்தோம். அலகால் உறிஞ்சியவறே "யப்பா கடலூரில் வெயில் ரொம்ப அதிகம்" என சொன்னதும் காதை தீட்டிக்கொண்டு கேட்டோம். "என்ன காக்கையாரே, சீமானின் மாநாடு  கடலூரில் வெப்பம் தகிக்க செய்து விட்டதா?" என கொக்கியை போட்டோம். "ஆமாம், அது சீமானால் என்று சொல்வதை விட முதல்வர் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதால் வந்த வெப்பம் என்றும் சொல்லலாம். பேரணிக்கு தடை, மாநாட்டுக்கு தடை இதையெல்லாம் மீறி சீமான் ஒரு பூட்டிய வீட்டுக்குள் மாநாட்டை(?) நடத்தியது பின்னர் போலீஸ் கைது செய்ய போனதும் சீமான் பாபாராம்தேவ் போல  ஓடியது எல்லாம் தமாஷ் காட்சிகள். முதலில் சீமான் சுடிதார் போட்டு கொண்டு தான் தப்பிப்பதாக இருந்ததாம். பின்னர் அந்த 'கோலத்தை' பார்த்து யாராவது "மண்டையை" போட்டுட்டா கொலை கேசாக மாறிவிடும் அபாயம் இருப்பதை அவரது தம்பிமார்கள் அறிவுறுத்தியதால் அந்த திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதாம்"

"ஒ... அந்த அளவு ஆகிவிட்டாதா? சரி காஷ்மீர் விடுதலை முன்னனி தலைவர் யாசின்மாலிக் வருகை பற்றி சொல்லுங்கள் காக்கையாரே" என நாம் கேட்டதும் "ஏன் அவசரக்குடுக்கையாய் இருக்கிறீர்கள்" என சலித்துக்கொண்டே சொல்ல ஆராம்பித்தார்.

"யாசின்மாலிக் வருகை பற்றி ஒரு வாரம் முன்பாகவே சீமான் 'ஒரு முக்கிய தலைவர் வருகிறார். ஆனால் இப்போது அது யார் என சொல்ல மட்டேன்.கூட்டம் முடிந்ததும் கூட சொல்ல மட்டேன். வேண்டுமானா நீங்களே கண்டுபிடித்து கொள்ளுங்கள்' என சவால் விட்டதுமே  முதல்வர் தன் அந்தரங்க உளவுப்பிரிவை வைத்து அது யாசின்மாலிக் என மோப்பம் பிடித்து விட்டாராம். சென்னைக்குள் யாசின் காலடி வைத்ததுமே திருப்பி அனுப்ப முதல்வரிடம் அனுமதி கேட்டது உளவுப்பிரிவு . ஆனால் முதல்வர் "அப்படி வேண்டாம். வரட்டும் வந்து பேசட்டும். பேசிவிட்டு காஷ்மீருக்கும் திரும்பட்டும். பின்னர் வழக்கு பதிவு செய்து காஷ்மீருக்கு தமிழக போலீசை அனுப்பி கைது செய்து அழைத்து வந்து திருச்சி சிறையில் அடைக்கலாம் என சொல்லிவிட்டாராம்"

"ஏன் இப்படி முதல்வர் காதை சுத்தி மூக்கை தொட வேண்டும்?" என கேட்டோம். அதற்கு காக்கையார் "சரியான மங்குனி அமைச்சராக இருக்கின்றீரே" என நம்மை கலாய்த்து விட்டு " யாசின் மாலிக்கை உடனே திருப்பி அனுப்பி விடுவதை விட வந்து பேசி விட்டு காஷ்மீர் சென்ற பின்னர் வழக்கு பதிவு செய்து தமிழக போலீசாரை அனுப்பி கைது செய்து அழைத்து வந்தால் இந்தியாவே திரும்பி பார்க்குமே தமிழகத்தை. மேலும் ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்மணி என்னும் இமேஜும் இந்தியா முழுக்க பேச்சாகுமே. இந்த பேச்சுகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அம்மையார் நினைக்கிறார். பிரதமர் வேட்பாளர் மோடிக்கு இவரது இந்த மூவ் கிலி கொடுக்கபோவது என்னவோ உண்மை. ஜெயலலிதா பிரதமர் ஆனல் பாகிஸ்தான் மேல் எச்சில் துப்பி வம்புக்கு இழுத்து போரிட்டு ஜெயித்து வல்லரசாக மாற்றுவார் என மக்கள் நினைக்க செய்யும் அளவுக்கான மாஸ்டர் பிளான் இது என அரசியல் நோக்கர்களே வியந்து போவார்கள் பாருங்கள்.

"ஒ... கதை இப்படி போகின்றதா?"

"ஆமாம்... பரவலாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அங்கு இருக்கும் பிராந்திய கட்சிகளுடன் அல்லது சில தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஒவ்வொறு வேட்பாளரை நிறுத்தும் பலே ஐடியாவும் அம்மாவிடம் இருக்கிறதாம். அனேகமாக டெல்லியில் ராமராஜன் நிறுத்தப்படலாம். அது போல காஷ்மீரில் நடிகர் தியாகு நிறுத்தப்படலாம், ஜார்கண்டில் நடிகர் செந்தில் நிற்பது உறுதியாகிவிட்டதாம். எம் ஜி ஆர் கூட பெயரில் மட்டும் தான் அனைத்திந்திய என்ற வார்த்தை சேர்த்தார். ஆனால் அம்மா நிஜமாகவே அதிமுகவை  அனைத்திந்திய அதிமுக வாக மாற்ற போட்ட மாஸ்டர் பிளானாம் இது.

"அடடே, எம் ஜி ஆரை விட அம்மாதான் கட்சி நடத்துவதிலும் ஆட்சி நடத்துவதிலும் டாப் என நிரூபித்து வருகின்றார். ஆமாம்... கேட்க மறந்து விட்டோம்... சீமான் கைது செய்யப்படுவாரா?"

"சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்படுமாம். ஆனால் கைது இருக்காதாம். விஜயலெஷ்மி வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருக்கின்றது. அதன் கூடவே இந்த வழக்கும் ஜோடி போட்டு உட்காந்து கொள்ளும். தேர்தல் நேரத்தில் கருணநிதியை வசை பாட இந்த வழக்குகள் பயன்படுமாம்.

"அம்மாவின் ஈராண்டு சாதனை மற்றும் அம்மா மெஸ் பற்றி மக்கள் வரவேற்பு எப்படியாம்" என அடுத்த கேள்வியை வீசினோம்.

"ஒ அதுவா, மிகப்பிரமாதமான வரவேற்பு. இந்தியா முழுக்க மூன்று முழுப்பக்கத்தில் அம்மாவின் சாதனை மின்சாரத்தில் இயங்கும் ஆயிரம் வாட்ஸ் பல்பாக பளிச்சிட்டது. அம்மா மெஸ் ஏழை எளிய மக்கள் வயிறார உண்டு வருகின்றனர். முகேஷ் அம்பானி கூட சென்ற வாரம் மும்பையில் இருந்து பறந்து வந்து தாலையில் துண்டு போட்டுக்கொண்டு ''அம்மா மெஸ்"ல் இட்லி வாங்கி சாப்பிட்டு தன் மனைவி நீதா அம்பானிக்கு ஒரு பார்சல் வேண்டும் என கேட்டாதாகவும் அதனால் மாநகராட்சியினருக்கும்  இவருக்கும் வாங்குவதம் வந்து பின்னர் மேயர் தலையிட்டு சமாதானம் செய்து தன் சொந்த அதிகாரத்தில் ஒரு பார்சல் கொடுத்ததாகவும் ஒரு செய்தியும் காக்கையார் காதுக்கு எட்டியது. அனேகமாக அம்மா  ஒரு அவசரக்கூட்டம் கூட்டி 110 விதி  அறிக்கை வாசித்து இனி நீதா அம்பானி போன்ற மகா ஏழைகளுக்கு பார்சல் கொடுக்கவும் ஏற்பாடுகள் ஆகிவருகின்றது.

வரும் தேர்தலில் பள்ளிகளில் வாக்குசாவடி வைப்பதற்கு பதிலாக அம்மா மெஸ்க்கு பக்கத்தில் ஒரு பந்தல் போட்டு அதிலே வைத்து விடலாம் என தேர்தலுக்கு பொறுப்பான சம்பத்தானவர் ஒரு ஆலோசனை சொல்லி இருக்கிறாராம் அம்மாவிடம். அம்மாவும் "ஏதோ பார்த்து செய்யுங்க" என சிரித்து கொண்டே பச்சை கொடி காட்டிவிட்டாராம்."

"பிரமாதம். பாவம் சகோதரர்கள் பத்திரிக்கைகளுக்கு மூன்று பக்க விளம்பரம் கொடுக்கவில்லையே. அது ஏனாம்? என்றோம்.

"இல்லை, சகோதரர்கள் அம்மாவிடம் ஒரு தூதுவரை அனுப்பி 'எங்களுக்கு விளம்பரம் கொடுக்க வேண்டாம், மற்ற பத்திரிக்கைகள் விளம்பரம் கொடுத்தால் தான் புகழ்ந்து எழுதுவார்கள். நாங்கள் என்ன அப்படியா? விளம்பரம் கொடுக்காவிட்டாலும் புகழ்வோம்" என செல்லமாக கோபித்துக்கொண்டனராம். அதனால் தான் அம்மா விளம்பரம் கொடுக்கவில்லை. மேலும் சகோதர்கள் அம்மாவிடம் அனுப்பிய தூதரிடம் "அம்மா மெஸ் பற்றி ஒரு தொலைக்காட்சி விளம்பரம் எடுத்து இப்போதிருந்தே ஒளிபரப்பினால் இன்னும் ரீச் அதிகமாக இருக்கும். அந்த விளம்பரம் கூட தாங்கள் நடத்தும் தொலைக்காட்சிக்கு கொடுக்க வேண்டாம்' என ஆலோசனையும் சொல்லி அனுப்பினார்களாம். அம்மாவும் தீவிரமாக "அம்மா இட்லி" விளம்பரம் எடுத்து வருகிறராம்.

"சரி, திமுக செய்திகள் எதும் இல்லியா?" என்றதற்கு காக்கையார் "ஒ உண்டே, பருப்பு இல்லாத சாம்பாரா? திமுக பேச்சாளர்கள் கூட்டம் நடந்தது. மேடையில் கருணாநிதி, ஆற்காடு, சற்குணபாண்டியன்  போன்றவர்கள் இருந்தனர். ஆனால் பேச்சாளர்கள் என்பவர்கள்  "கொள்கை பரப்பு செயலர்" பதவி வகிக்கும் ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் கீழ் தான் வருகின்றனர். ஆனால் அவர்கள் மேடையில் இல்லை. குஷ்பூ தலையை விரித்து போட்டு வந்திருந்தார் போன்ற அதி முக்கிய இன்னும் பல செய்திகள் உள்ளன. பின்னர் விரிவாக மெயில் அனுப்புகிறேன். இப்போது ஒரு முக்கிய வேலை இருக்கு" என சொல்லியவாரே கத்தாழை ஜூசுக்கு நன்றி சொல்லி விர்ர்ர்ர்ரினார்.

May 17, 2013

சண்டை, சச்சரவு, சமாதானம், சமரசம் பின்னே சமதர்மம் !!!

சமீபத்தில் வெளிவந்துள்ள சிவகார்த்தி நடித்த 'எதிர்நீச்சல்' படத்தில் 'குஞ்சிதபாதம்' என்னும் பெயரினால் வரும் அவமானங்கள் தான் கதையே என ஒட்டுமொத்தமாக எல்லோரும் தங்கள் 'சினிமா விமர்சனத்தில்' குறிப்பிட்டு வருகின்றனர். அதிலே என்ன அசிங்கம்?? எனக்கு புரியவில்லை. சிதம்பரம் நடராஜர் சிலைக்கு அலங்காரம் செய்யும் போது அவரது உடல் முழுக்க நகைகள் அலங்காரம் மட்டுமே இருக்கும். அவரது திருவாச்சியில் மட்டுமே பூ அலங்காரம் இருக்கும். மத்தபடி அவரது உடலில் பூ மாலை சூட்டும் இடமே அவரது தூக்கி நிறுத்திய இடது கால் பாதங்களில் அதாவது கனுக்காலில் சின்னதாய் நம் உள்ளங்கை அளவிலான குஞ்சம் வைத்த பூ மாலை சாற்றியிருப்பர். அதற்கு தான் குஞ்சித' பாதம் என்னும் பெயர். அது போகட்டும். இந்த பெயரை விடுங்கள். என் பெயர் "தொல்காப்பியன்" என்ன பாடு பட்டிருக்கு தெரியுமா என் பள்ளி பருவத்தில்???


நானே எலும்பும் தோலுமாய் இருப்பேன் அப்போது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை, தோலும் எலும்புமாய் இருக்கிறேன். அதை குறிக்கும் விதமாய் தோலு' காப்பியன், காப்பி, என பலவாறு கிண்டலடிக்கப்பட்டுள்ளேன். பள்ளிக்கு தடுப்பூசி போட வரும் போது பசங்க ஊசிக்கு அழுதுகிட்டு இருக்காங்களோ இல்லியோ வரும் ஊசிக்காரர் ஊசியை போட்டு விட்டு என் பெயரை தோல் காப்பியன் என மிகச்சரியாக தப்பாய் எழுத போவதை நினைத்து அழுவேன். ஊசி வலியை விட அது அதிகம். அது என்ன எழவோ தெரியலை... இப்போதும் கூட என் வாக்காளர் அடையாள அட்டையில் தோல் காப்பியனாகவே இருந்து தொலைக்கிறேன். அப்படி என் பெயரால் நான் ரொம்ப மனமொடிந்து போன நேரத்தில் அபி பிறந்து அபிஅப்பாவாக ஆன பின்னே தான் ஓரளவு நிம்மதி. அதையும் கூட சிலர் அபிஅப்பா என்பதை சில சமயம் அபிபாப்பா என எழுதி விடுகின்றனர்.


இப்படியாக என் பெயர் எனக்கு பல தொல்லைகளை கொடுத்த காலத்தில் அதாவது நான் ஏழாம் வகுப்பு படித்த காலத்தில் (ஏழாம் வகுப்பெல்லாம் படிச்சிருக்கேன் மை லார்ட்) ஒரு நான்கு மாதம் மயிலாடுதுறையில் இருந்து மேல்படிப்புக்காக மங்கைநல்லூர் கிராமத்துக்கு கொண்டு சேர்த்தார்கள். அங்கே பெயர் எல்லாம் வித்யாசமாய் இருக்கும். அதிலே ஒருத்தன் பெயர் "சமாதானம்". நம்புங்க. அவன் பெயரே சமாதானம் தான். அவன் அண்ணன் பெயர் "சமரசம்" தம்பி பெயர் "சமதர்மம்" .. இப்படியாக அந்த பள்ளியில் சமாதானம், சமரசம், சமதர்மம் ஆகிய சகோதர்கள் வந்து சேர்ந்தனர் அந்த பள்ளிக்கு. அவனுங்க பெயரை மற்ற மாணவர்கள் கிண்டலடிக்கும் போது நானும் சேர்ந்துப்பேன். பின்ன என்ன ... ஒரே அடிதடி, சண்டை, சச்சரவு தான். ஹய்... நல்லா இருக்குல்ல... சண்டை, சச்சரவு, சமாதானம், சமரசம் பின்ன சமதர்மம் ஆகா ... இந்த குழப்பத்தில் என் தொல்காப்பியன் பெயர் கிண்டலில் இருந்து தப்பித்து கொண்டது. பின்னர் நான் அந்த பள்ளியில் முதல் ரேங் வாக்கியமையால் அப்பாவுக்கு அந்த பள்ளி மீது இருந்த நம்பிக்கை போயே போயுந்தி. நம்ம பையனே பஷ்ட் ரேங் வந்தா அதல்லாம் ஒரு பள்ளிக்கூடமான்னு பள்ளி மீது கோவிச்சுகிட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்து பழைய பள்ளியிலேயே சேர்த்துட்டாங்க. மீண்டும் தொல்காப்பியன் என்பது தோலாய் ஆனது... அவ்வ்வ்


பின்னர் விபரம் தெரிந்த காலத்தில் தான் அந்த பெயர் எத்தனை தொன்மையான அழகிய தமிழ் பெயர் என்பது புரிந்தது. அது போலவே சமாதானம், சமரசம், சமதர்மம் என உயரிய நோக்கில் தன் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டிய அந்த அப்பனை நினைத்து மானசீகமாய் வணங்கினேன்.


பின்னர் என் இருபத்தி எட்டாம் வயதிலெல்லாம் நான் ஃபாரின் ரிட்டர்ன் ஆகி கண்ணாலம் காட்சின்னு ஆன பின்னர் ஒரு நாள் நான் லீவுக்கு வந்திருந்த போது ஒரு பத்திரிக்கை வந்திருந்தது. ஆமாம்! என் பால்ய காலத்தில் பழகிய அந்த சமாதானத்துக்கு திருமணம். எடுத்து பிரித்து பார்த்தேன். மணமகள் பெயரை பார்த்தததும் குபீர் என சிரித்து விட்டேன். நான் ஏற்கனவே என் மனவியிடம் இந்த "சமாதானம்" என்னும் பெயரை கேலி செய்த கதையை சொல்லி இனி அந்த பெயரை கேட்டால் சிரிக்க மாட்டேன் என சொல்லி இருந்தேன். ஆனாலும் சிரித்து விட்டேன். என் மனைவி அந்த அழைப்பிதழை வாங்கி பார்த்து விட்டு என்னை முறைத்த போது நான் அந்த "சமாதானம்" பெயருக்காக சிரிக்கவில்லை என சொல்லவில்லை. 


இரு நாட்கள் பின்னர் அந்த திருமணத்துக்கு போனேன். எல்லோரும் வாழ்த்திய பின்னர் நான் மேடைக்கு சென்று "சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்" என வாழ்த்தினேன். அவனுக்கு ரொம்ப கோவம் வந்து விட்டது. "போடா தோலு" என்றான். சிரித்து கொண்டே வந்து விட்டேன்.

அந்த மணமகள் பெயர்  "சாந்தி":-))