July 11, 2009
ஆளை விடுங்க சாமி!!!!
7 மணிக்கு கார்டை கதவில் இழுத்துட்டு ஓடினேன் உள்ளே.
7.30 வரை பேண்ட்ரி. அருமையான டீ, சம்சா!
8க்கு வந்த போது எல்லா கடையும் அதாவது கம்பனியும் திறந்தாச்சு.
8.30க்கு மீட்டிங் கால்!
மீட்டிங்!
"மிஸ்டர் குமார் எனக்கு 40 mm 12 மீட்டர் ராட் 40 டன்க்கு வேணும்"
"சாரி சார் கிடைக்காது"
"ஏன்"
""ஏற்கனவே வாங்கி வச்சாச்சு, இது உங்க போன மாச மீட்டிங்கிங் மறு பதிவு"
"ரொம்ப அதிகமா பேசற!
"சரி ஃப்ளோர் அதிகமா போய்கிட்டு இருக்கு லைட் வெயிட் பிளாக் வாங்கனும் குவைத்துல இருந்து குமார்! உடனே போன் செஞ்சு ரிசல்ட் சொல்லு"
"சார் எனக்கு கார்டு தரலை இந்த மாசம்"
"சரி என் போன்ல இருந்து பண்ணு"
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
"என்ன குமார்ஜி"
"சாயந்திரம் என்னா குழம்பு"
"மரியாதை கெட்டுடும் நீங்க தான் இன்னிக்கு டேர்ன்"
"அப்ப சாம்பார் வச்சிடலாமா"
"என்ன ஜி கடுப்பை கிளப்புறீங்க! நேத்தும் சாம்பார்தான்"
"அப்ப கோழி வச்சுடலாம்"
உடனே பிராஜக்ட் மேனேஜர் கிட்ட கொடுத்தேன்.
"சார் காதிலே கேளுங்க"
"ஓக்கே"
"குட் குமார் சப்லையர் ஓக்கேன்னு சொல்லிட்டார் நீங்க நல்ல பர்ச்செசர்"
"நன்றி சார்"
மீட்டிங் முடிஞ்சுச்சு.
காலை 11 மணி! "மணி டீ கொண்டுவா"
"தெலுகுமே செப்பு சார்"
12 மணிக்கு குசும்பன் போன்! "நான் அடுத்த 10 நிமிஷத்தில் அங்க இருப்பேன்"
குசும்பன் வந்தாச்சு!
"என்னங்க இது டெஸ்க் டாப்ல தீபா வெங்கட்"
"இரு இப்ப பிராஜக்ட் மேனேஜர் வருவாரு அப்ப அவரு போட்டோ மாத்திடுவேன்"
"மதியம் 1 மணி"
"மணி சாப்பாடு சூடு செஞ்சாச்சா"
"ஆச்சு சார் ஆம்லெட்டும் கேண்டீண்ல இருந்து வாங்கியாச்சு"
1.10
நான் தூங்கியாச்சு. காலை தூக்கி டெஸ்க் டாப் மேல போட்டுகிட்டு
2. 00மணி ஒரு எழவுகெட்ட போர்மென் வந்து "நான் கேட்ட பாலியூரித்தீன் சவுண்ட்ட் இன்சுலேஷன் போர்ம் எங்கன்னு கேக்குறான்.
3 மணிக்கு மீட்டிங் \
"சார் நீங்க இன்னிக்கு ரொம்ப ஸ்மார்ட்"
"யூ ப்ளீஸ் கெட் அவுட்"
"அப்பாடா இதுக்கு தானே அந்த வார்த்தை சொன்னேன் பாலகுமாரா"ன்னு நெனைச்சு வெளியே வந்து பழனியை கூப்பிட்டேன்.
"அவசரமா ஸ்டாஃப் கேண்டீண் வா ஒரு வேளை இருக்கு"
4.50க்கு போன் என் வண்டிக்கு!
சீக்கிரம் வா
5.20க்கு வீடு.
6,20க்கு சமையல் முடிதல்.
7க்கு சாப்பாடு.
9 வரை வரை அழுகாச்சு சீரியல்.
பின்ன தூக்கம்!
இப்படியா போய்கிட்டு இருந்த வாழ்க்கை இப்ப காலை முதல் தூக்கம் இரவு வரை. பின்ன அமரிக்கா வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கேன்! போதும் நான் சம்பாதிச்சது. ஆளை விடுங்க சாமி!!!!!!
July 7, 2009
நம்ம தங்கச்சி இயற்கைக்கு இன்னிக்கு பிறந்த நாள்!!!
காலை துபாய் வந்து இறங்கி போன் செஞ்சுது தங்கச்சி. எங்கம்மா இருக்கன்னு கேட்டேன். "ஏர்போர்ட்ல அண்ணா" அப்படியா ஒரு டாக்சி பிடி.
"பிடிச்சாச்சு"
"டிரைவர் கிட்ட போன் கொடு"
"அவருக்கு தமிழ் தெரியலையே"
"பரவா இல்லை கொடு"
"ஆங் ஜி"
"ஜி ஆங்"
"அல் கூஸ் மாலுமே கிராண்ட் சிட்டி மால் ஒ ரவுண்டபுட் சே சீத நேஷனல் டாக்சி ரோட் பக்கடோ பிர் ஏக் நம்பர் ரைட்டு. சீத ஆவோ. T ஜங்ஷன் ஆயகா. உதர் ரைட் மாரோ. பஸ் கலாஸ் அம் உதரியே கடேயகா"
"யோவ் தமிழ்ல சொல்லுய்யா வெண்ணை, ஏன் இந்திய கொல்ற"
"அட நான் பாகிஸ்தானின்னு நெனச்சு பாப்பா சொல்லிடுச்சு, அக் மார்க் முத்திரை குத்தின மாயவரம் தான் ந்நானும்"
"அட அப்படியா எந்த தெரு தங்கச்சிகிட்ட போன் கொடு"
"அண்ணா இவர் தமிழ் தான் போல"
"ஆமாடா இரு நானும் அண்ணியும் கீழே வர்ரோம் நட்டுவோட! உனக்காக ஸ்பெஷல் சமையல் ஆகிடுச்சு. சாப்பிட்டு கோவிலுக்கு போவோம்"
இரவு 2 மணி. என் ரூம் மெட் எழுப்பறான். ஜி சாப் ஜி சாப்!
"என்னைய்யா"
"நீங்க ஜூஸ் குடிக்கவே இல்லை"
"அருமையான கனவை கலைச்சுட்டியே"
"ஆமா உங்களுக்கு என்ன தங்கச்சி கல்யாண நாள், தம்பி பர்த்டேன்னு கனவு வரும். எங்களுக்கு நீங்க நல்லா இருக்கனும்"
"தங்கச்சி கல்யாண நாள் இல்லைய்யா, பிறந்த நாள்"
"இது எந்த தங்கச்சி"
"ராஜி - இயற்கைன்னு பேர்ல அழகா எழுதும்"
"என் வாழ்த்தையும் சொல்லிடுங்க அதுக்கு முன்ன ஜூஸ் குடிங்க நான் டூட்டிக்கு போறேன்"
அன்பு தங்கைக்கு அண்ணனின் வாழ்த்துக்களும்!
"
June 26, 2009
மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வலைப்பூ!
a.raasaa@gmail.com இது அவரின் மெயில் ஐடி.
http://rajadmk.blogspot.com இது அவர் பிளாக் ஐடி! வலைபதிவர் கள் அவரிடம் கும்மி அடிக்காமல் கேட்கும் அவர் பதிவில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவார்.
அவரை சேட்ல சேர்த்துக்கலாம். ஆனா "என்ன சார் அதிஷாவுக்கும் லக்கிலுக்கும் தோஸ்தாமே"ன்னு கேள்வியை தவிர்க்கவும்!
June 21, 2009
உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்துச்சு?
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் பெயர் தொல்காப்பியன். பெயரின் காரணம் பல பதிவர்களுக்கு தெரியும். இதை இப்ப இங்க சொன்னா அரசியல் பதிவா ஆகிவிடும். "அபிஅப்பா" என்கிற என் பெயர் எனக்கு வந்த காரணம் அபியால் தான். "ஏங்க, இந்தாங்க" இப்படியே கூப்ப்பிட்டுகிட்டு இருந்த என் மனைவி தான் முதல்ல "அபிஅப்பா இங்க பாருங்க"ன்னு ஆரம்பிச்சு வச்சாங்க.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இன்று காலை. அபியிடம் இருந்து வந்த ஒரு மெயில். தந்தையர் தின பரிசு எனக்கு. இருங்க காபி பேஸ்ட் செய்றேன்.
\\
அப்பா உன்னை ஏன் பிடிக்க வில்லை?
1.அப்பா ஒரு மே மாதம் 3ம் தேதி இரவு 11.30க்கு என்னை ஏன் கையில் ஏந்தினாய்? அப்போது முதலே என் தனி தண்மையும் உன் தனி தண்மையும் போயிடுச்சே? அபிஅப்பாவின் பொண்ணா நீ என என்னையும் அபிஅப்பாவா நீங்கன்னு உன்னையும் உலகம் கேட்குதே?
2. நான் ராக்கெட்டில் பறக்க ஆசை! நீ என்னை சைக்கிள் ல போனா கூட பின்னாடி வண்டி எடுத்துகிட்டு வந்து டார்ச்சர் பண்றே. நம்மை பார்த்து தான் "அபியும் நானும்" எடுத்த மாதிரி இருக்கே.
3. ஆட்டோகாரர் கூடத்தான் நான் ஸ்கூல்கு போறேன். செங்கனிசெல்வி தினமும் அவ அப்பா கூட சைக்கிள்ல வரா. எனக்கு அவளை பார்க்க பொறாமையா இருக்கு. ஒரே ஒரு தடவை என்னை நடந்தாவது ஸ்கூல்க்கு அழைச்சிட்டு வந்து விடுப்பா
4. அப்பா நீ ஒரு சுயநலக்காரன் அப்பா. பாசம் வைத்து மோசம் செய்பவன்.
5.உன்னை ஆசை ஆசையா திட்ட மனசிலே இருக்கு. வார்த்தை தான் காணும். மீதியை நீயே திட்டிக்கோ.
மறந்துடேனே. இன்றைக்கு தந்தையர் தினமாமே. பிடிச்சுக்கோ என் வாழ்த்தை.\\
இதை படித்த எந்த அப்பனும் அழுவான். அதை தான் நானும் செஞ்சேன்.
3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்காது. ஆனா ரொம்ப அழகா முத்து முத்தா இருக்கும். நான் எழுதி பலவருஷம் ஆச்சு. இப்போது தினமும் 200 கையெழுத்து போடுவது தான் நான் பேனா பிடிக்கும் தருணம்.
4.பிடித்த மதிய உணவு என்ன?
இதிலே 3 வகை இருக்கு.
1. நல்ல பொன்னி பச்சரிசி குழைய வடித்து அதிலே எறுமை கெட்டி தயிர் போட்டு (நல்லா கவனிக்கவும் மிக்சி இல்லை) அம்மியில் அரைத்து பின்னே அதுலே கறிவேப்பிலை கடுகு வெள்ளை ஊசி மிளகாய் தாளிச்சு(ரொம்ப எண்ணெய் விட கூடாது) அதை சரியான அளவு உப்பு போட்டு அழகா ஒரு பீங்கான் தட்டிலே வச்சு அதன் தலையில் இரண்டு பெரு நெள்ளிகாய் ஊருகாய் வச்சு அதிலே ஒரு ஸ்பூன் குத்தி குளித்து முடித்து மடியாக அபிராமி அந்தாதி சொல்லிகிட்டே ஒற்றை நாணய பொட்டும், காட்டன் புடவையும்,காதில் ஆடும் ஜிமிக்கியும், வைர மூக்குத்தியும்,மெல்லிசா சத்தம் போடும் கொலுசுவும், கிச்சன்ல இருந்து வரும் போது தரையும் கால் விரலும் மெதுவா சண்டை போடுவதால் வரும் மெட்டி சத்தமும், கிட்டே வரும் போது நேற்று இரவு போட்ட மருதாணியால் சிவந்த கையும் சகிதமாக வரும் அந்த சாப்பாடு எனக்கு பிடிக்கும்.
2. சின்ன சின்ன செங்கால மீன் வாங்கி அழகா சுத்தம் செஞ்சு அழகாக மீன் குழம்பு(கொஞ்சம் புளி அதிகம் விட்டு) அதிலே மாங்காய் 2 துண்டு விட்டு சுட சுட பொன்னி சாதம் கூட கெட்டி தயிர் எடுத்துட்டு வரும் நைட்டி பொண்டாட்டி உணவும் பிடிக்கும்.
3. "எனக்கு முடியலே இன்னிக்கு. ஹோட்டல்ல சாப்பிடுவோமே"ன்னு சொன்ன பின்னே அதுவும் பிடிக்கும்.
5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
பாஸ்
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி என்னவோ தலையிலே குட்டுவது போல என்னை இம்சிப்பது போல இருக்கும். கடல் அதுவும் துபாய் கடல் ஆர்பரிக்காம ராமேஸ்வரம் கடல் மாதிரி நம்ம வீட்டு படுமாடு மாதிரி அத்தனை ஒரு சுகம். இங்க ஜுமைரா பெய்டு பீச்சிலே வெள்ளி காலை மெல்லிசா ரொம்ப மெல்லிசா ஒரு பெக் அடிச்சிட்டு போகனும். காரை மெதுவா ஓட்டனும். ஏசி பேட கூடாது. "நீ காற்று நான் மரம் என்ன சொன்னாஅலும் தலையாட்டுவேன்"ன்னு ஒரு கேசட் போடனும். 3 அல்லகை கூட்டிக்கனும். கார் பார்க்கில் அடுத்த பெக் அடிக்கனும்.
ஒரு படுக்கை குடை வாங்கிகனும். பின்ன என்ன போட்டோ பாருங்க!
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?.
உடல் மொழி! எனக்கு 3 நிமிடம் போதும். மொத்த ஜாதகம் கணிக்க. முதலில் உட்கார சொல்லுவேன். அட்டாணிகால் போடும் வலமா இடமான்னு பார்ப்பேன். அப்பவே கிட்ட தட்ட அவங்க கிட்ட பேச போவது பற்றி முடிவெடுத்து விடுவேன். நான் கணிக்க முடியாத ஒருத்தர் ஆசீப் மீரான். அடுத்து இதை தான் சொல்லுவார்ன்னு நினைப்பேன். ஆனா சரியா 100 சதம் மாற்றி பேசுவார்.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?.
என் கீழ் வேலை செய்பவர்களை திட்டுவது எனக்கே பிடிக்காது. "சார் திட்டினா என்ன இந்த மாசமும் காலீத் பிரியாணி உண்டு"ன்னு என் காதுபடவே அவங்க பேசிகிட்டு போவதும் நானும் அது போல செய்வதும் பிடிக்கும்.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
அட! நான் இதுக்கு தனி பதிவே போடலாம். கோபத்தை மௌன மொழியில் சொல்வது பிடிக்காது.ஏதாவது கத்தி திட்டு என்பேன். அதுக்கும் மௌனமா இருக்கும்.
அது போல பிடித்ததுன்னு சொன்னா எதை சொல்வது. கிட்ட தட்ட எல்லா பதிவர்களுக்கும் தெரியும். நான் கொடுத்து வச்சவன்.
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
உலகம் அறிந்த விஷயம்
14.பிடித்த மணம்?
வயலில் நாத்து நடும் போது வருமே ஒரு சேத்து வாசனை அது பிடிக்கும். அது போல கரும்பு வெட்டின பின்னே இரவு போய் அந்த கழிவுகள் கொளுத்துவோம். அடுத்த நாள் காலை அங்கேகிடைக்கும் வாசம் பிடிக்கும்.
15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
நான் அழைக்கபோவது முதலில் என் நண்பி என் கூட படிச்ச குறத்தி மாலா, அடுத்து ராமலெஷ்மி என்னும் என் பிரண்ட், அடுத்து என் மகள் அபி.
16.பிடித்த விளையாட்டு?
எனக்கு அப்பப்ப எதுனா பிடிக்கும். சமீபத்துல பிடிச்சது "வாந்திய தேவன் " படிங்க புரியும். வாந்தி முடுஞ்ச பின்னே அடுத்த விளையாட்டுக்கு ஆரம்பிச்சுட்டேன். என் தங்கமணி "நீங்க கால்ல மாட்டிகிட்டு பங்கி ஜம்ப் செஞ்சா நான் ஆணில மாட்ட வேண்டி இருக்கும் தாலியை"
இதுக்கு என் பிரண்டு வேற சப்போட்டு சப்போட்டு சப்போட்டு
சரி போ உன் கழுத்திலே மாட்டிகிட்டு இருன்னு விட்டுட்டேன்
17.கண்ணாடி அணிபவரா?
பாஸ்
24 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா
இருக்கு! ஒரு சிகரட்ல 300 ரவுண்டு விடும் கின்னஸ் சாதனை மிறியடிக்கும் திறமை இருக்கே. கின்னஸ் சாதனை 249 ரவுண்டு!(கேவலம் தான் சொல்லி தானே ஆகனும்)
அய்யோ போதுமே வல்லிம்மா, சூரிசார், ஷை எல்லாரும் மன்னிகனும்.போட்டோ எல்லாம் கூட போடலை.
June 19, 2009
இந்த குட்டிம்மா யாரு? உதயசூரியனுக்கு ஓட்டு கேட்கும் எங்க வீட்டு பிள்ளை!!!
June 18, 2009
நட்ராஜ் பிறந்த நாள்!
நான் நல்லா இருக்கேன். கொஞ்ச நேரம் கழிச்சு போன்பண்ணுங்க நான் அவயாம்பா சந்நிதில அர்ச்சனைல இருக்கேன்"
ஓக்கே
கொஞ்ச நேரம் கழித்து ஒரு போன். நான் கட் பண்ணிட்டு போன் செஞ்சேன்.
"அல்லோ தம்பி கிட்ட கொடு. அவனுக்கு வாழ்த்து சொல்லனும்"
"அப்ங்லககிங்ககலிய"
"என்னடா தம்பி சொல்ற புரியலையே"
"அப்ங்லககிங்ககலிய"
\"அய்யோ கிருஷ்ணா அவன் என்ன சொல்றான்?"
"அவன் தான் தெளிவா நீங்க எப்படி இருக்கீங்க அபியும் நானும் நல்லா இருக்கோம்ன்னு சொல்றானே"
"அப்படியா சரி அவன் கிட்ட கொடு"
லிக மாலிநானு சாப் ல்ய்ச்""ங்மலிங்க
"அய்யோ கிருஷ்ணா இப்ப என்ன சொல்றான்"
"சந்தான குருக்கள் சர்க்கரை பொங்கல் கொடுத்தாராம்"
"அவன் தமிழே பேச மாட்டானா?"
"பேசுவானே தமிழ் படம் பார்க்கும் போது எல்லாம் தமிழ் பேசுவான்"
"'எங்க பேச சொல்லு"
"இருங்க ஸ்பீக்கர்ல போடுறேன்"
"தம்பி "பசங்க படம் பார்த்தியா அது மாரி பேசு"
"அம்மா அம்மா"(இது நட்டு)
"என்னாடி செல்லம்"(இது என் மனைவி)
"என் குஞ்சுமணி வெளியே வந்து விழுந்துடுச்சும்மா"
"ஊக்கூம் அது எப்ப உள்ள இருந்துச்சு. அப்படியே கிடக்கட்டும்" இது கிருஷ்ணா!
அய்யோ என் மகன் அழகா சினிமாவின் காரணமாக தமிழ் பேசுறான் என சந்தோஷ படுவதா? என் மனைவியின் பதிலுக்காக சிரிப்பதா?
June 17, 2009
நட்டுமுட்டு!!!
அதுக்காகவே ஒருத்தன் இருக்கான்.அவன் பேர் என்னன்னு யாருக்கும் தெரியாது. சும்மா நான் சின்ன பையனா இருந்த போது அவன் நாராசமான வாத்தியத்தை கேட்டு "அய்யோ என்ன பார்வதி குருக்களே என்ன அவன் தத் தித்தும் நம் நொம்னு கூட அடிக்காம நட்டு முட்டுன்னு அடிக்கிறானே"ன்னு கேட்க அவரோ " விடுடா கொழந்த இவன் இங்க தாளம் போடுறவன். உன் கவர்மெண்ட் மிருதங்க வித்வானா கொடுத்து இருக்கு கோவிலுக்கு, அவேம்பா கொடுத்து வைச்சது அத்தினியே, அவளுக்கு நட்டுமுட்டு போதும்"
அன்றைக்கு முதல் அவன் பெயர் "நட்டுமுட்டு" ஆகி போச்சு. காலை 5.30க்கு ஓதுவார் அய்யா சுப்ரமணிய தேசிகர் எங்களுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பிக்கும் போது "குழந்தைகாளா முதல்ல சாப்பிடிடுங்க"ன்னு தான் சொல்லுவார். நட்டுமுட்டுதான் எடுத்து வருவான். பொதுவா சிவன் கோவிலில் உப்புமா செய்து பார்த்தது உண்டா நீங்க? ஆனா எங்களுக்காக(எப்படியாவது நாங்க ஒரு 30 பேராவது காலை 5.30க்கு வந்து தேவாரம் திருவாசகம் ஆண்டாள் பாசுரம் படிச்சா போதும் என்றே) அவர் உப்புமா, பொங்கல், அப்படின்னு வித்யாசமா போடுவார்.
எல்லாரும் முதலில் பந்தி. பின்ன ஆரம்பிச்சிடுவார்.
"சூடிக் கொடுத்தச் சுடர்கொடியே தொல்பாவைபாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீவேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்நாங்கடவா வண்ணமே நல்கு."
பின்னே அதல்லாம் முடிஞ்ச பின்னே அந்த கோவில்ல நட்டுமுட்டு ராஜ்யம் தான்.
நான் வளர வளர அவனும் வளர்ந்தான். ஆனா கூட அவன் தான் அர்தசாம பூசை மிருதங்கம். "டேய் உனக்கு என்ன தான் பிரச்சனை? எப்பதான் அவேம்பாவை நிம்மதியா தூங்க வைப்பே?"ன்னு கேட்டேன். அதுக்கு அவன் "எலேய் நான் பல வருஷம் அவேம்பாவை தூங்க வைக்க நட்டுமுட்டு அடிச்சுட்டேன். நான் சாவருத்துக்குள்ளே ஏ.கே. பி கூட சரிசமமா உட்காந்து தவில் வாசிக்கனும்"
எனக்கு சொரேர்ன்னு ஆகிடுச்சு. எங்க கோவில்ல அப்பதான் நவராத்திரி நடந்துகிட்டு இருந்துச்சு. 10 நாளும் செம கச்சேரி இருக்கும். அன்னிக்கு திருமிச்சூர் பசங்க நாதஸ்வரம், ஏ கே பி தவில், அவருக்கு இனையா டி ஏ கே . இது முடிவாகி பத்திரிக்கை எல்லாம் அடிச்ச பின்ன டி ஏ கே லண்டன் போயிட்டார் காரைக்குடி மணி குரூப் கூட.
ஏ கே பிக்கோ செம கோவம் வரும். உடனே கோவிலில் இருந்தே ஏ கே பி க்கு வலங்கைமானுக்கு போன் செஞ்சேன்.
"அண்ணே"
"சொல்லு தம்பி, கார் சொல்லிட்டேன் வந்துடுவேன்"
"அது இல்லைன்ணே"
"வேற என்ன"
"கலியமூர்த்தி அண்ணன் காரைகுடி மணி அய்யா கூட லண்டன் போயிட்டாரு"
"தெரியுமே"
"அதனால நான் வேற ஏற்பாடு பண்ணிட்டேன். உங்களை மாதிரி தாள கணக்கு வழக்குல 64, 74 ன்னு பின்னுவாரு. அவரை ஏற்பாடு பண்ணிட்டேன்"
"அப்ப சரி வந்துடறேன்"
உடனே நான் "அடேய் பல்லு வேலு நட்டுமுட்டை தூக்குடா ஆறுமுகம் சலூனுக்கு"ன்னு குரல் வீடும் போது பார்வதி குருக்கள் "டே கொழந்தே உன் விளையாட்டை ஏ கே பி கிட்ட வச்சிக்காத. உன் தோப்பனாருக்கு தெரிஞ்சா என்னை கடிச்சிடுவார்"ன்னு சொல்ல நான் "அய்யா எல்லாம் நான் பார்த்துக்கிறேன்"ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டோம்.
வீரசேகரவிலாஸ்க்கு எதிரே இருந்த ஆறுமுகம் சலூன்ல நாங்க 6 பேர். அவனுக்கு முடி வெட்டி (போண்டா மணி மாதிரி இருப்பான்) சிகப்பாக்கி உச்சிகால வேளைக்கு முன்ன கோவில் கொண்டு வந்து திருகுளத்தில் குளிக்க வச்சி பட்டை சோறு கொண்டு வந்து குடுத்து தூங்குடான்னு சொல்லிட்டு வீட்டுக்கு ஓடிட்டேன்.
வேற எதுக்கு பட்டு வேட்டி வேணுமே. நல்லா நாலு இஞ்சி கரை உள்ள மயில்கண் பட்டு வேட்டி எடுத்துகிட்டு பார்வதி குருக்கள் வீட்டுக்கு வந்து "அய்யா அப்பா கிட்ட துண்டு இல்லை, நல்ல மயில் கண் துண்டு தாங்க அப்படியே உங்க அத்தர் பாட்டிலயும் தாங்க"ன்னு கேட்டு வாங்கிட்டு ஓடி வந்து கோவில்ல குடுத்துட்டு என் மத்த பொறுப்பை மத்த அல்லகைல விட்டுட்டு ஏ கே பி யை கூட்டிகிட்டு வர போயிட்டேன்.
வீட்டுக்கு போனா ஏ கே பி பஜ்ஜியும் தேங்கா சட்னியும் சாப்பிட்டுகிட்டு இருக்காரு."தம்பி வா! நான் ஒரு மணி நேரம் தூங்கிட்டு வரேன் கோவிலுக்கு "அப்படின்னு சொல்லிட்டு தூங்கிட்டார்.
ஆச்சு இரவு 7 மணி. சியாமளாதேவி கோவில்ல செம கூட்டம். ஏன்னா திருமிச்சூர் பசங்க நாதஸ்வரம், ஏ கே பி, டி ஏ கே தவில்ன்னு. டி ஏ கே லண்டன் போயாச்சாம் லண்டண் போயாச்சாம்ன்னு ஒரே கிசு கிசுன்னு பேச்சு.
எப்போதும் ஏ கே பி உட்காரும் போது ஒரே அப்ளாஸ் தான். ஆனா எங்க குரூப் சொன்ன மாதிரி யாரும் கை தட்டலை. வந்தாரு நம்ம நட்டுமுட்டு. வரும் போதே ஒரே அப்ளாஸ். எங்க அப்பாவின் மயில்கண் வேட்டியும், பார்வதி குருக்களின் துண்டும் ஆறுமுகம் முடிவெட்டும் நட்டுமுட்டுவை பெரிய ரேஞ்சுக்கு மாத்தியிருந்துச்சு.அப்ப கூட பார்வதி குருக்கள் "அம்பி வேண்டாம், கண்ணன் கொஞ்சமாவது ஒப்பேத்துவான் அவனை வாசிக்க சொல்லு"ன்னு சொன்னதுக்கு நான் ஒத்துக்கலை.
நம்ம நட்டுமுட்டு வந்து உட்காந்ததும் செம கைதட்டல். ஏ.கே. பழனிவேல் அசந்து போயிட்டார். வாய் குழைய வெத்தலை வேற. முதலில் சும்மா தட்டிகிட்டு இருந்தான். ராகம் கீர்தனைக்கு சமாளிக்க முடியாதா என்ன?
பின்ன தனி ஆவர்த்தனம் வந்துச்சு. எப்பவும் பழனிவேல் தான் ஆரம்பிப்பார். அவர் வாசிப்பதை தான் மத்தவங்க வாசிக்கனும். ஆனா நாங்க சொன்ன மாதிரி நம்ம நட்டுமுட்டு ஆரம்பிச்சிடுச்சு.
பழனிவேலுக்கோ கோவம்+ ஆச்சர்யம். ஒருவேளை தன்னை விட பெரிய ஆளா இருப்பாரோன்னு.
நட் முட் நட் முட்
நட் முட் நட் முட்
ஐந்து நிமிஷம் இதே தான் ஓடிகிட்டு இருக்கு. பழனிவேல் கூட "இவரு பெரிய ஆள் போல இருக்கு. நம்மையே சுத்தி விடுராறே"ன்னு ஆச்சர்யம். அப்ப் தான் நட்டுமுட்டு கவுத்துட்டான். டபார்ன்னு எழுந்து பழனிவேல் கால்ல சாஷ்டாங்கமா விழுந்துட்டான்.
அத்தோட நான் ஓடிட்டேன். கம்மினாட்டி அந்த மயில்கண் வேட்டிய கொடுக்கவே இல்லை.
பின்னே என் கல்யாணத்துக்கு கத்ரிகோபால்நாத் கூட வாசிக்க வரும் போது ஏ.கே பழனிவேல் இந்த நிகழ்சியை மைக்கில் சொல்லி மகிழ்ந்தார்!


