பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 28, 2007

ஒரு முக்கிய அறிவிப்பு!!!

மக்களே! இது ஒரு முக்கிய அறிவிப்பு. தமிழ்மணத்திலே என்னை காணவில்லை. காரணம் என் சமீபத்திய பதிவுகள் 30 மார்க் தாண்டி போயிடுச்சு.

தமிழ்மணத்திலே ஏதாவது பெயர் தெரிஞ்சாதான் 4 பேர் வந்து துப்பிட்டு போவாங்க. கொத்ஸ், வெட்டிதம்பி,தேவ் பொன்ஸக்கா எல்லாரும் வந்து ஒரு ஒரு ஐடியா குடுத்துகிட்டு இருக்காங்க.

நான் என்ன சொல்றன்னா... இது ஒரு பதிவுன்னு நெனச்சுகாதீங்க. தலைப்ப பாத்துட்டு வந்ததுதான் வந்தீங்க நம்ம பிளாக்குக்கு.. அப்டீயே சிரமத்த பாக்காம என் மத்த பதிவுக்கு போய் பாத்துட்டு பின்னூட்ட பிச்சை போடுறதா இருந்தா அங்க போடுங்க.

இந்த பதிவுக்கு ஸாரி...அறிவுப்புக்கு பின்னூட்டாதீங்க. அதை நானே பாத்துக்கறேன். அடிக்கடி வந்து ஒரு ஸ்மைலி போட்டுக்கறேன். இது மத்த பதிவுக்கான அழைப்பு மட்டுமே!

அடுத்த பதிவு ரெடியானா இந்த அறிவிப்பை நானே தூக்கிடறேன்.

மக்களே இந்த ஐடியா பரவாயில்லயான்னு கருத்து சொல்லுங்க...

பி.கு: இதுவரை பின்னூட்ட கயமை செஞ்சிகிட்டு இருந்தானுங்க. இப்ப பதிவு கயமை ஸ்டாட் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்களேன்னு தமிழ்மண நிர்வாகிகள் நினைப்பது புரிகிறது. இது சும்மா ஒரு ஜாலி பதிவு.

February 26, 2007

"அந்த" ஏழு நாட்கள்!!!

முதல் நாள்

அன்னக்கி காலைல எழுந்திருக்கும் போதே கத கதன்னு ஜுரம் அடிச்சுது. ''ஆஹா ஜாலி இன்னக்கி லீவு போடலாம் போலருக்கேன்னு ஒரு சந்தோஷம்.
.
.
போன எடுத்து வராத முக்கல வரவழச்சி " ரொம்ம்ப ஜொரமா இருக்கு, நான்னா மெதுவா வந்து பன்ச் பன்னிட்டு போய்டவா"ன்னு ஆபீஸ்ல கேட்டேன். "பரவாயில்ல நீ வந்து என்னாத்த கிழிக்கபோர, ரெஸ்ட் எடுத்துக்கோ"ன்னு பதில் வந்துச்சி. மயக்கத்தோட கூடிய தூக்கம் வந்துச்சி. அப்டியே தூங்கிட்டேன். முதநாள் பாத்த "தீபாவளி" மனசுக்குள்ள ஓடுச்சு. பாவனாவுக்கு வந்த மாதிரி நமக்கும் 2 வருஷம் எல்லாம் மறந்துச்சுன்னா என்ன ஆவும்ன்னு நெனச்சிகிட்டே தூங்கிட்டேன்.
.
.
திடீர்ன்னு முழிச்சு பாத்தா அது ராத்திரியா பகலா எதுவுமே தெரியல. சரி எதுக்கும் சன் டிவி பாப்போம்னு போட்டேன். சொர்க்கம் சீரியல் ஓடிக்கிட்டு இருந்துச்சி. நா சன் டி.வி பாத்து 1.5 வருஷமாச்சு.காரணம் 'அம்பிகை' சீரியல். "நா போய் அவன் கிட்ட 450 கோடிய வாங்கிகிட்டு வர்ர வ்ழியில சலூன்காரருக்கு 40 கோடி நான் தரவேண்டியிருக்கு, அதை குடுத்துட்டு, கோவில் வாசல்ல ஒரு பிச்சைக்காரன் ரொம்ப நாளா கஷ்டப்படுறான் அவனுக்கு 1 கோடி போட்டிட்டு 10 நிமிஷத்துல வரேன்" ன்ற ரீதியில் டயலாக். எனக்கு அந்த சீரியல் பாத்து டிசன்ட்ரி தொந்தரவு வந்ததால ஒட்டு மொத்தமா டி.வி பார்ப்பதை விட்டுட்டேன்.
.
.

ரொம்ப நாளாச்சே எல்லாரும் திருந்தியுருப்பாங்க, சரி பாப்போம்ன்னு பாத்தேன். மௌனிகா வழக்கம் போல சவால்வுட்டுகிட்டு இருந்தாங்க. நா 1.5 வருஷத்துக்கு முன்ன பாத்த காட்சிகளின் அடுத்த எபிசோட் மாதிரி இருந்துச்சு. எனக்கு பயமா போயிடுச்சு. பாவனாவுக்கு வந்த மாதிரி எனக்கும் 1.5 வருஷ ஞாபகம் எல்லாம் அவுட்டா??? பயந்துகிட்டே திரும்பி படுத்துட்டேன்.
.
.

சாயந்திரம் கொஞ்சம் கண்ண தொறந்து பாத்தேன். மை டியர் பூதம் ஓடிச்சு. இருக்குற பூதம் பத்தாதுன்னு எல்லா குழ்ந்தைகளும் சன் டிவிக்கு எழுதிபோட்டிருப்பாங்க போல. அன்னிக்கு ஒரு புது பூதம் கேரக்டர் புதுசா நுழைச்சிருந்தாங்க. அதுக்கு பேர்"அசின் பூதம்". நம்புங்க. இது காமெடியில்லை. சந்தேகம் இருந்தா ரெகுலரா சன் டி.வி பாக்குறவங்ககிட்டே கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
.
.
அதுக்குள்ள பழம், பால். இளநீர் அப்டீன்னு ரூம் கலை கட்டிடுச்சு. அப்புறம் என்ன..வரிசையா ஆனந்தம், மலர்கள், கஸ்தூரி,கோலங்கள், அரசி,லெஷ்மி அப்டீன்னு ரவுண்டு கட்டி அடிச்சாங்க.
.
.

'கோலங்கள்'ல ஆதி, அபிய போட்டு துவச்சி எடுத்துட்டு, அடுத்த 5 நிமிஷத்துல தலைய வழிச்சு சீவிகிட்டு 'அரசி'ல வந்து ரவுசு வுடுறார். எனக்கு ஏகப்பட்ட குழப்பம். இது கதைக்காவாதுன்னு தூங்கிட்டேன். (கீதா மேடம் வேற என்கிட்ட கோலங்கள் அபிக்கு ஒரு 3 கோடி தரக்கூடாதா தரக்கூடாதான்னு கேக்குறாங்க....அபிபாப்பாவுக்கு கொடுத்தாகூட ஆப்பிள் உண்டியல்ல போட்டு ஒழிச்சுவச்சுக்கும். கோலங்கள் அபிகிட்ட குடுத்தா போற வழியிலேயே தொலச்சிட்டு அழுதுகிட்டு இருக்கும்)
.
.

இரண்டாம் நாள்
.

காலைல கொஞ்சம் லேட்டா எழுந்திருச்சேன். வேற வழி. சன் டிவிதான். போட்ட உடனே ஒரு அம்மணி மண்ணை வாரி வாரி என் மேல எறியறாங்க. ஆஹா, நா எந்த வம்புதும்புக்கும் போகாதவனாச்சே!! அப்புறம்தான் தெறிஞ்சுது அது 'சூர்யா' சீரியலின் பிளாஷ்பேக் சீன். சரின்னு தங்கமணிக்கு போன் செய்து அம்மை போட்டதை சொல்லாமல்" பாப்பா ஸ்கூலுக்கு போயாச்சா?"ன்னு கேட்டேன். திரும்பவும் சீரியலில் முழுகிவிட்டேன்.
.
.
மாலை பூதம் பாத்துட்டு இருக்கும்போது விஜய டிஆரின் அரட்டைஅரங்கம் விளம்பரம். ஏதோ குந்திதேவி குந்திதேவிங்குறார். எனக்கு பக்கு பக்குங்குது. பயந்துகிட்டே தூங்கிட்டேன்.
.
.

திரும்பவும் முழிச்சபோது சூர்யா ஓடிச்சு. ஆஹா ரொம்ப நேரம் தூங்கிடோமேன்னு வீட்டுக்கு போன் செய்து "பாப்பா ஸ்கூலுக்கு போயாச்சா?"ன்னு கேட்டேன். தங்கமணியிடமிருந்து 'நற நற நற'. அப்புறம்தான் தெரிஞ்சுது டாக்டர் மூணு வேளைக்கு மருந்து குடுப்பது மாதிரி இந்த 'சூர்யா' காலை, மதியம்,இரவுன்னு ஓடிக்கிட்டே இருக்குமாம். நடுராத்திரி பாக்கணும்னா சன் டிவிக்கு ஒரு போன் போட்டா போதுமாம். உடனே போடுவாங்களாம்.
.
.

என்ன பாக்க வந்தவங்ககிட்டே "சன் டிவியால ரொம்ப அவதிபடுறேன். ஏதாவது புது படம் சி.டி இருந்தா கொண்டு வாங்க"ன்னேன். இதுதான் சொ.செ.சூங்கிறது.
.
.

3 வது நாள்
.

காலைல 9 மணிக்கு சி.டி வந்துச்சு. படத்தோட பேர பாத்ததுமே கை,காலெல்லாம் நடுங்குது. ரொம்ப நாள் வெறியோட இருந்திருக்கானுங்க பய புள்ளைங்க. இதுதான் சாக்குன்னு வச்சிட்டானுங்க ஆப்பு.
சரி வேண்டாம் சன் டி.வியே பாப்போம்ன்னு போட்டேன். வீராசாமி திரை விமர்சனம் ஓடுச்சு. ஐயோன்னு நெனச்சுகிட்டு உக்காந்தா அரட்டைஅரங்க விளம்பரம் 2 நிமிஷத்துக்கு ஒரு தடவை. திரும்பவும் குந்திதேவி, குந்திதேவின்னு ரப்சர் தாங்கலை.
.
.
சரி சன்நியூஸ் பாப்போம்ன்னு மாத்துனா கலைஞர் வெளிறி போன முகத்தோட ஒரு தியேட்டரில் இருந்து வர்ரார். கூட வர்ரவுங்க நம்ம டுபுக்கர் சொல்ற மாதிரி சவ ஊர்வலத்தில் வாயில துண்ட கடிச்சுகிட்டே வர்ர மாதிரி வர்ராங்க. பின்னாடியே விஜய டி.ஆர். 'வீராசாமி' பிரத்யோக காட்சி பாத்துட்டு வர்ராராமா!!!
.
.
சரி!! சனி ரவுண்டு கட்டிட்டார் நம்மலன்னு நெனச்சுகிட்டு எந்த பிரச்சனையா இருந்தாலும் நேருக்கு நேர் மோதிபாத்துடலாம்னு சி.டி ய போட்டேன். பார்த்தேன். வலையுளக மக்களே இப்ப தெறிஞ்சுதா நம்ம தைரியம். நாங்கல்லாம் வீர பரம்பரல்ல!!!
.
.

மும்தாஜ் தன் காதலை டி.ஆர் கிட்ட சொல்லும்போது இவருடைய நடிப்பு, நல்லா வாயை பொளந்துகிட்டு, கலங்குண கண்ணோடு தாவங்கட்டய மேல் பக்கமா தூக்கிகிட்டு எல்லா திசைக்கும் முகத்த திருப்புவார் பாருங்க...நா அழுதுட்டேன். ஆமா நெசமா. புல்லரிக்குதுன்னு ஒரு கட்டிய போட்டு சொறிஞ்சா ரத்தம் வராதா...வலிக்காதா..பின்ன அழுவமாட்டனா!!!
.
.

ஆக இப்படியா அடுத்த அடுத்த 4 நாட்கள் போச்சு!! இதுனால நா தெரிஞ்சுகிட்டது என்னன்னா....
.

1. பந்தங்கள் பாத்தா சொந்த பந்தங்கள் நம்மை விட்டு போயிடும். (ஆமா நானு அத பாத்து சொக்கிகிடக்கும் போது வந்த தங்கமணி போனை எடுக்காததால் ஏகப்பட்ட கட முடா)
.

2. சொர்கம் பாத்தா நரகம் கிட்டும்
.

3.நிம்மதி பாத்தா அது போயிடும்
.

4.ஆனந்தம் பாத்தா அது போயிடும்
.

5.கோலங்கள் பாத்தா வாழ்க்கை அலங்கோலமாயிடும்
.

6.மொத்தத்துல வீராசாமி பாத்தா உயிரே போய்டும்.
.

இந்த லச்சணத்தில வெட்டிபாலாஜி ஆசையா பாத்தீங்களா??
.

இந்த ஏழு நாளில் 7.5 சனி புடிச்சுவிட்டுடுச்சு!!! இனி எல்லாம் சுகமே!!!

February 22, 2007

"வீராசாமி" விமர்சனம்!!!



தமிழ்நாடு,ஆற்காட்டில் குப்பிடிச்சாத்தம் என்னும் குக் கிராமத்தில் 21/04/1937 ம் ஆண்டு பிறந்த இவரின் பெயர் வீராசாமி. பள்ளி இறுதிவரை படித்த இவர் திருமணம் ஆனவர். 1 மனைவியும் 3 மக்களும் உடையவர்.
.
.
இவருடைய தொழில் விவசாயம்.
.
.
தற்போது 39, 'A' பிளாக், அண்ணா நகர், சென்னை - 600102 (044-26263643/044-26263647(இ)) என்னும் விலாசத்தில் வசித்துவரும் இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் பதவியில் இருந்து வருகிறார்.
.
.
1967-71 வரை, 1971-76 வரை, 1989-91 வரை, 1996-2001 வரை - இந்த காலகட்டங்களில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் தற்போதைய சட்டமன்றத்திலும் உறுப்பினர் மற்றும் மின்துறை அமைச்சராகவும் இருக்கிறார். மேலும் 1977-83 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
.
.
மின்துறை அமைச்சராக, யூனிட் கட்டணம் உயராமை, பவர் கட் இல்லாமை, மின் கசிவு குறைப்பு, உற்பத்தி திறன் அதிகரிப்பு, சிறு தொழில் மின் கட்டண சலுகைகள், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் போன்ற இவரின் பணிகள் சிறப்பாகவே உள்ளது என்றாலும் 1% கூட அந்த துறையின் ஊழலை இவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.
.
.
"அமைச்சர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு நாட்டை முன்னேற்ற பாடுபட வேண்டுமே தவிர 24 மணி நேரமும் முதல்வர் கலைஞர் கூடவேயிருந்து துதிபாடிக்கொண்டிருக்க கூடாது அதிலும் குறிப்பாக ஆற்காடு வீராசாமி போன்றவர்கள் இதை உணர வேண்டும்" என்று கலைஞரின் மனசாட்சியான மறைந்த திரு. முரசொலி மாறன் அவர்களால் பாராட்டுப்பெற்றவர் இவர்.
.
.
இன்றளவும் அந்த பாராட்டை மனதில் இருத்தி, அதிலிருந்து கிஞ்சித்தும் மாறாமல் நடந்து வருகிறார் திரு. ஆற்காடு வீராசாமி அவர்கள்.
.
.
தற்போது திரைத்துறையை கலக்கிக்கொண்டிருக்கும் ஒரு படத்தால் தனது பெயர் உலகலாவில் புகழடைந்தது குறித்து தான் மிகவும் நெகிழ்ந்து போயிருப்பதாக தன் நண்பர்களிடம் அவர் குறிப்பிட்டதாக ஒரு செவிவழி செய்தியும் உண்டு

February 20, 2007

பாரதிக்கும் பாரதமாதாவுக்கும் என்ன பிரச்சனை?

நான் வீட்டில் நுழையும் போது பாப்பா டைகரிடம் " நீங்கள் எல்லாருமே என் குழந்தைகள்" ன்னு சொல்லிட்டு இருந்தா. நா நேரா தங்கமனிட்ட போய் டைகருக்கு என்னாச்சுன்னு கேட்டேன். வீடே கொஞ்சம் பரபரன்னு இருந்துச்சு.

"டைகருக்கு ஒன்னும் ஆகல. நீங்க போய் பாப்பா தலை சைஸ்க்கு ஒரு கிரீடம், ஒரு வேல் ரெண்டும் எங்கேர்ந்தாவது புடிச்சுட்டு வாங்க. எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.சீக்கிரம் போங்க"

என்னாச்சு....சரி பாப்பா ஏதாவது ஜெயசந்திரன் கோல்டு ஹவுசுக்கு மாடல் ஆகப்போவுது போலயிருக்கு. நாம கொடுத்த வேலய செய்வும்ன்னு வெளியே வந்துட்டேன். பாப்பா அப்பவும் டைகர்கூட அதையே பேசிட்டுஇருந்தா.

வாசலுக்கு வந்தா அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் எல்லாரும் வந்து தப தபன்னு நுழைறாங்க. அப்புரம்தான் தெரிஞ்சுது. ஸ்கூல் குடியரசு தினத்துக்கு விழாவில் பாப்பாதான் பாரதமாதாவாம். இன்னிக்கு சாயந்திரம் விழா. அட்ரா சக்கை. எனக்கும் பரபரப்பு தொத்திகிச்சு.

தங்கமனிகிட்ட 'கான்செப்ட்' என்னன்னு கேட்டேன். " எனக்கு நெறய வேல இருக்கு. சொன்னத செய்ங்க"ன்னு பதில் வந்தது. என் கஷ்டத்த பாத்து அபியோட பெரியம்மா பொண்ணு சொன்னா" பாப்பாவ ஸ்டேஜ்ல ஒரு ஸ்டூல் போட்டு நிருத்தி காந்தி, நேரு, பாரதி, காமராஜர்,சரோஜினி நாயுடு இப்டி பல தலைவர்கள் வேஷம் போட்ட பையன்களும் பொண்ணுகளும் சுத்தி சுத்தி வருவாங்களாம். கடைசியா பாப்பா எல்லாரையும் பாத்து "நீங்கள் எல்லாரும் என் குழந்தைகள்" என்ற டயலாக் சொல்லனுமாம்" என்றது. ஓ அதுதான் பாப்பா டைகரிடம் இதை சொல்லிட்டுருந்தாளோ. அதுக்குள்ள பாப்பாவுக்கு மேக்கப் ஸ்டாட் ஆயிருச்சு. நமக்கு கொடுத்த வேலைய நாம பாப்போம்ன்னு வெளியே வந்தேன்.

டைகர் என்னய பாத்து "நீங்கள் எல்லாம் என் குழந்தைகள்"ன்னுச்சு. அடிப்பாவி டயலாக் மனப்பாடம் செய்யிறேன் டயலாக் மனப்பாடம் செய்யிறேன்னு சொல்லி நாய பேச வச்சுட்டாளேன்னு நெனச்சுகிட்டு கிரீடம், வேல் வாங்க கெளம்பிட்டேன்.

ஒரு வழியா வேல் மட்டும் மோப் குச்சியில் முனைல அட்டயால் வேல் மாதிரி செஞ்சு அதில ஜிகினா பேப்பர் ஒட்டி குடுத்தார் பூக்கடை சவுந்திரம். எடுத்துகிட்டு வூட்டுக்கு ஓடினா பாப்பா ரெடி, தங்கமனி ரெடி, எல்லாரும் ரெடி, டைகர் கூடரெடி எக்ஸப்டு நானு. நா எப்படியும் கொண்டுவரமாட்டன்ற நம்பிக்கைல தங்கமனி நெக்லெஸ்ஸ தலகீழ பாப்பா தலைல கட்டி நிமிந்து நிக்க ஈர்க்க குச்சிவச்சி கட்டி ஆனா நல்லாதான் இருந்துச்சி.

"பாப்பா அப்பாகிட்ட மேக்கப்ப காட்டு"ன்னு யாரோ கூட்டத்துல சொல்ல பாப்பா வேலை கையில புடுச்சிகிட்டு லொடுக்கு பாண்டி மாதிரி நிக்குது. எங்க டயலாக்க சொல்லுன்னு நா சொல்ல "ஃஹீங்க ஃஹெல்லாம் ஹென் ஃஹொழந்தங்க" ன்னு ஏகப்பட்ட ஃ வருது. வாய் பொளந்தே வச்சிருக்கு. (லிப்ஸ்டிக் அழிஞ்சிடக்கூடாதாமா!!) பாப்பாவ பாத்தா எனக்கே பாவமா இருக்கு.

அதுக்குள்ள 3 ஆட்டோ வந்து நிக்குது. சகுணம் பாக்குறாங்க அம்மா. திருஷ்டி பொட்டு வக்கிறாங்க. பாப்பா மேல பட்டும் படாமலும் மெலிசான காசி துண்ட போத்தி தங்கமனி தூக்கிகிட்டு முதல் ஆட்டோல ஏறிக்க, பைலட் மாதிரி நா என் வண்டில ஹாரன் அடிச்சிகிட்டே(வேலையும் நாதான் கைல வச்சிகனும்) போகனும்னு ஆர்டர் தங்கமனிகிட்டேயிருந்து. நானும் கொஞ்சம் கூட வெக்கமில்லாம உழைப்பாளி ரஜினி மாதிரி... போய் ஸ்கூல்ல சேந்தாச்சு.

செம கூட்டம். த்ங்கமனி, பாப்பால்லாம் ஸ்டேஜ்க்கு பின் பக்கம் மேக்கப்ரூம்க்கு போயாச்சு. நமக்கெல்லாம் அங்கு சீந்தி பாக்க ஆள் இல்லை. சரின்னு வந்து ஸ்டேஜுக்கு முன்னாடி ஒக்காந்துட்டேன். பக்கத்து சீட்ல ராமனாதன். பக்கத்து வீட்டுகாரர். அவர் பையனும் நாடகத்துல நடிக்கிறானாம். 17 பக்க வசனம் பேசுவதாக சொன்னார். அவன் 4 வது படிக்கிறான். 17 பக்கம் பேசலாம். "என்னங்க உங்க பொண்ணுக்கு 1 வரி டயலாக்தனாமே"ன்னு நக்கல் வேறு.

நிகழ்சி ஆரம்பம் ஆனது. கொஞ்ச நேரத்துலேயே ராமனாதன் பையன் நடிக்கும் நாடகம்"திருவிளையாடல்" ஆரமிச்சுது. அவரு பரவசத்துல உச்ச்த்துல இருந்தார். "சார் எங்க சார் உங்க பையன காணும்"ன்னு கேட்டேன். "அதோ அதோ"ன்னார். எனக்கு எங்கன்னே தெரியல. "அவனுக்கு என்னமா பொருந்தியிருக்கு பாருங்க சார் அந்த பிள்ளையார் வேஷம்" அப்டீன்னார். அப்பதான் தெரிஞ்சுது யானை மண்டைக்குள்ள இருக்குறது அவன் மண்டைன்னு. பொருந்தியிருகில்ல...பெருந்தொந்தியிருக்கு அவனுக்குன்னு நெனச்சுகிட்டு அவனின் 17 பக்க டயலாக்குகாக காத்திருந்தேன்.

"அப்பா பழம் எனக்குத்தான்" அப்டீன்னு சொன்னவுடனே அடி விசில் கிழிச்சுட்டார். நாடகம் முடியும் வரை அவன் வேறு எதுவும் பேசலை. அவரிடம் நா எதுவும் கேக்கலை. அவர் கைல இருந்த நோட்டை எங்கிட்ட கொடுத்துட்டு பையனை தேடி ஓடிட்டார். நா மெதுவா நோட்டை பிரித்து பார்த்தேன். "அப்பா பழம் எனக்குத்தான்" "அப்பா பழம் எனக்குத்தான்" அப்டீன்னு 17 பக்கத்துக்கு எழுதியிருந்துச்சு.

க்ளைமாக்ஸ் வந்துச்சு. காந்தி, நேரு, காமராஜர், சரோஜினிநாயுடு, பாரதி, சுபாஸ் சந்திர போஸ், எல்லாரும் ரெடி. எனக்கு படபடங்குது. ஸ்டேஜ்கிட்ட போயி மேல ஏறி சைடுல தங்கமனிகிட்ட நின்னுட்டேன்.(அடிபாவி நீ மட்டும் பட்டு புடவை, நா மட்டும் சாதாரண டிரஸ்ஸா?)

ஒரு ஸ்டூல் போட்டு பின்னாடி பெரிய கொடி நட்டு பாப்பாவ தூக்கி நிப்பாட்டி கைல வேல கொடுத்துட்டாங்க. சுத்தி வர தலைவர் எல்லாரும் ரெடி.

திரை விலக்கப்பட்டது. "ரகுபதி ராகவ ராஜாராம்" காந்தி பாட எல்லாரும் அதையே திரும்ப பாட முதல் சுத்து நல்லபடியா முடிஞ்சுது. தங்கமனி தாலிய கண்னுல ஒத்திக்க, "நானா பாரதமாதா, பாப்பாதான"ன்னு சொல்ல அந்த அவசரத்திலும் ஒரு முறைப்பை மாத்திரம் வாங்கிகிட்டு கவனிக்கலானேன்.

ஆனா பாப்பா லிப்ஸ்டிக் காரணத்தால் வாயை பொளந்தபடியே இருந்தாள். ரெண்டாவது சுத்தும் நல்லபடி முடிஞ்சுது. 3 வது சுத்து ஆரம்பம்.

பாப்பாவுக்கு அந்த ஜிகினா டிரஸ் ஒத்துக்கல போலயிருக்கு. முதுகுல அரிச்சுது போல. வலது கையில இருந்த வேலை இடது கைக்கு மாத்துனா. வலது கைய லாவகமா மடிச்சு...அப்போ இடதுகை வேலின் பின்பக்கம் பின்னோக்கி போக காந்ந்திதாத்தா கம்போட இடிக்க தாத்தா பின்னாடி வந்த பாரதி மேல விழ கூடவந்த சரோஜினி நாயுடுவும் தடுமாற இதுல யார் ஸ்டூல ஒதச்சாங்கன்னு தெரியல பாரத மாதா பொதக்கடீர்ன்னு குப்புரவுழுந்துட்டாங்க.(இத்தன கலேபரத்திலும் லிப்ஸ்டிக்க காப்பாத்த பாப்பா வாயை மூடலை).

முதல்ல பாய்ந்தது வேற யாரு. தங்கமனிதான். பெத்த பாசம்னா சும்மாவா!! ஆனா பாப்பாவ முதல்ல தூக்கினது நாதான். பாப்பா தலைலேர்ந்து விழுந்த கிரீடத்த தங்கமனி எடுக்க நா நின்ன இடம் அப்போது மைக்குக்கு நேரா. உடனே பாப்பா "ஃஹீங்க ஃஹெல்லாம் ஹென் ஃஹொழந்தங்க" ன்னு டயலாக் விட்டா மைக்ல. (உன் கடமையுணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லியா).

கீழ எறக்கிவுட்டோன்ன புடுச்சிகிட்டா காந்திய பாத்து '' பாரதி கொரங்கு ஏண்டா என்னய தள்ளிவுட்ட..ஊவும்..ஊம்..."ன்னு அழுகை வேற. ஆஹா காந்திய பாத்து பாரதிங்கறாளே, கீழ வுழுந்ததுல எக்கு தப்பா அடி கிடி பட்டுடுச்சோன்னு நெனச்சுகிட்டு " பாப்பா அது பாரதியில்ல காந்தி"ன்னேன்.

"நா இப்ப என்ன பாரதமாதாவா, அதுதான் முடிஞ்சுடுச்சே. அவன் காந்தி வேஷம் போட்ட பாரதிப்பா. அவன் பேரு பாரதி"

அப்ப நாதான் லூசா!!!!

February 17, 2007

வீடு கட்டலையோ வீடு!!!!

முடிவெடுத்துவிடேன். மாத்திக்க முடியாது. கவிதை எழுதிதான் தீருவேன். இளகிய மனசு உள்ளவர்கள்....மனதை மாற்றிக்காம தயவு செஞ்சு படிச்சுடுங்க. அப்பதான் இந்த ஜென்மம் சாபல்யம் அடையும்.

வீடு கட்டலையோ வீடு!!!

அழகான பொண்ணு பொறந்து
நாட்கள் ரொம்ப ஆயாச்சு
நெத்தி பக்கம் நரை வந்து
எட்டி பார்க்கலாயாச்சு

பாஸ்ட் ஃபார்வேர்டு ஓடவிட்டா
பொண்ணும் புகுந்த வூடு போயாச்சு
தனியே எங்களுக்கு ரொம்ப போரடிச்சு
திரும்பவும் ரீவைண்டு போட்டு
பழைய நிலைக்கு வந்தாச்சு

அடுத்தகட்ட ஆலோசனை
அருமையாய் முடிஞ்சாச்சு
தல சாஞ்சு நாங்க படுக்க
படி ஒன்னு வேணுமடி
பார்ப்பதற்கு லச்சணமாய்
வீடு என்னும் ஆண் மகவு
ரெண்டு பேரும் பெத்துப்போம்

நீயோ இலவச கொத்தனாரு
நானோ இலவச பைனான்சியரு
என்னவென்னு கேட்டபோது
மெல்ல மெல்ல தலையசச்சி
பெத்துகிட ஒத்துகிட்டா

இடம் பார்த்து முடிச்சாச்சு
நாற் புறமும் கோயில்கள்
பசுமை அழகுகள்,பள்ளிக்கூடங்கள்
அப்புறமென்ன...

நல்ல நாள் பாத்தாச்சு
"பூமிபூசை போட்டாச்சு"
அதாவது
"புள்ளதாச்சிக்கு நாட்டுமருந்து கொடுத்தாச்சு"

பொசு பொசுன்னு வளருது அது..
அடிக்கடி வலி வருது மண் இல்லை,கல் இல்லை
இது அந்த பக்க தொல்லை

குறத்தி பிள்ளை பெக்க
குறவன் மருந்து தின்னது போல
எனக்கும் வலி வருது
பைனான்ஸ் ரூபத்துல
இது இந்தபக்க தொல்லை

ஆனாலும் குழப்பமில்ல
அடிக்கடி நல்ல சேதி..
ஆச்சு! வந்தாச்சு சீமந்தம்
கூப்புடுங்க சொந்த பந்தம்
இதுதாங்க "நிலை முகூர்த்தம்"

அதுக்கடுத்த மூணு மாசம்
பெத்தெடுத்தா எந்தங்கம்
பொறந்ததோ சொக்கதங்கம்

பெத்த மகன காண
பறந்துவர முடிவு செஞ்சேன்
பாஞ்சு வந்து பாத்தபோது
பரவசத்தால் பூரிச்சேன்

பேரு வைக்க விழாவுக்கு
அப்போதே நாள் வச்சேன்
அக்காக்கள் வந்தாக
மருமகனை பாக்க
எங்கள பெத்தவுங்க வந்தாக
பேர புள்ளய பாக்க

ஷவர் அடியில் நின்ன அப்பா
திரு திருன்னு ஓடி வந்தார்

முகத்த நனச்சிட்டான்
முத்தான என் பேரன்
அது சிறுவானி தண்ணியுன்னு
செருக்காக சொல்லிகிட்டார்

மருமவனுக்கு பகுடர் போட
அத்தைகள் சண்டை போட
அதுவே கோலமா ஆனது..

அவனுக்கு கொலுசு போட
அங்கங்கே சண்டைங்க.
அது அழைப்பு மணீயானது.

கூப்பிட்ட சொந்தங்கள்
கும்மாலமா இருக்க
பசு மாட்டோட கன்னுகுட்டி
அதன் கூட என் குடும்பம்
அத்தனையும் உள்ளே வர

நூறு ஆண்டு வாழ்கவென
ஆயிரம்பேர் வாழ்த்த
அமக்களமா நடந்துச்சு
அய்யா வூட்டு
கிரஹ பிரவேசம்

February 15, 2007

ஆனந்தவிகடனில் அபிஅப்பா......

எல்லாத்துக்கும் ஒரு கும்பிடு அடிச்சுக்கறேன் முதல்ல. 7 நாள் முன்ன 'தம்பி'யும்,கோபிநாத்தும், நானும் கிடேசன் பார்க்கில் நடத்திய சந்திப்ப பத்தி யாரும் மூச்சுவிடலை. நானும் ஒரு 7 நாள் கழிச்சு வந்து பாத்தா, தமிழ்மணம் சர்வ அமைதியா இருக்கு. சரி நாமலே அந்த சந்திப்ப பத்துன விஷயத்த உங்க எல்லார்கிட்டயும் பகிர்ந்துகலாம்ன்னு முடிவு செஞ்சுட்டேன்.

வெட்டிதம்பி,தம்பி மத்தமத்த எல்லாருக்கும் பதிவுக்கான மேட்டர் பஞ்சமே வரமாட்டங்குது. 5 பதிவ்ய் போட்ட எனக்கு அதுக்குள்ள பஞ்சம் தலய விரிச்சுபோட்டு குத்து டான்ஸ் போடுது. சரி இந்த விஷயத்த சந்திப்புல வச்சிட்டோம்ணா தம்பி நைசா ஏதுனா ஐடியா எடுத்துவுடுவார்ன்னு பிட்ட போட்டேன்.

அவரும் சில டிப்ஸ் எடுத்துவுட்டார். பெட்டர் காப்பி பேஸ்ட்தான்னு சொன்னார். எனக்கும் அது நல்லதாவே பட்டுச்சு.

காப்பி பேஸ்ட்ன்னு முடிவாகிபோச்சு. இதுல எதுக்கு அடுத்தவங்க மேட்டரு...நம்ப ஆனந்தவிகடன்ல எழுதினதையே போடலாமேன்னு அவர்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர் ''என்னங்க...எல்லேராம்,உஷாராமச்சந்திரன் மாதிரி ஆ.வி லல்லாம் எழுதுவீங்களா" ன்னு ஆச்சர்யமா கேட்டார்.

"அவங்க அளவு இல்லாட்டியும் ஓரளவு எழுதுவேன்" என்றேன். பின்பு "அதை எப்படி போடுவது, ஸ்கேன் செய்து போடலாமா?"ன்னு கேட்டேன்.அதற்கு அவர் " அதெல்லாம் வேண்டாம், ஜஸ்ட் டைப் செய்து போடுங்க..யாராவது நம்பலைன்னா பின்ன ஸ்கேன் செஞ்சு போடலாம்"ன்னு சொன்னார்.

நேத்திக்கு மூத்த பதிவர் செந்தழலார்கூட பேசிக்கிட்டு இருக்கும்போது"இதனால ஏதும் காப்பிரைட் பிரச்சனை வருமா?"ன்னு கேட்டேன். அதுக்கு அவர் " எதுவும் வராது தைரியமா போடுங்க"ன்னார்.

ஓக்கே... நா ஆ.வி ல எழுதுனதே ஒரு கதை. ஒரு நாள் எஸ். பாலசுப்ரமணியன் என்னிடம் கேட்டார். "நிறைய புத்தகம் வாங்குற பழக்கம் உள்ள உங்களுக்கு, எழுத்து மேல ஆசை அதிகம் இருக்கும்ன்னு தெறியுது. நீங்க ஏன் நம்ம ஆ.வில எழுதக்கூடாது"ன்னு கேட்டார்.

"நமக்கு ஏது சார் நேரம்"ன்னு மையமா சொல்லி வச்சேன். ஆனா அவர் பத்த வச்ச நெருப்பு மாத்திரம் தக தகன்னு எரிய ஆரம்பிச்சுது.

ஒரு நாள் உக்காந்து எழுதினேன். தம்பி சொன்ன மாதிரி அப்படியே கீழே கொடுத்திருக்கேன். படித்துவிட்டு பாராட்டனும் என்று சிரம் தாழ்ந்து கேட்டுக்கறேன்.
_____________________________________________________________



1. மஞ்சள் தூள்---------1 பாக்கெட்
2. உப்பு--------------------2 பாக்
3. க. பருப்பு------------1/2 கிலோ
4.உ. பருப்பு-----------2 கிலோ
5.து. பருப்பு----------2 கிலோ

6. ப.பருப்பு-------------1/2 கிலோ
7.சன் பிளவர் ஆயில்---2 கிலோ
8. இதயம் நல்லெண்ணெய்----1 கிலோ
9.ரமணா'ஸ் சத்து மாவு ----2 பாக்கெட்
10. சூடம்-------------1 பாக்கெட்
11. பத்தி---------3 பாக்கெட்
12. குழம்பு மிளகாய் தூள்-----2 கிலோ
13. பேரீச்சம் பழம்-----கடைகாரர் சும்மா குடுத்தா!!

-------------------------------------------------------------------------------------------

இப்படியாக, நம்ம வீட்டு தங்கமனி கிச்சன் உள்ளயிருந்து சொன்னதை நான் ஹாலில் இருந்து அவசரத்துக்கு வேற பேப்பர் கிடைக்காததால் பக்கத்துல இருந்த புது ஆனந்த விகடன்ல சர புரன்னு எழுதிதள்ளிவிட்டு ஆனந்த விகடன்ல எழுதிய ஆனந்தத்தோட காதுல பஞ்ச வச்சிகிட்டு உக்காந்துட்டேன்.

"நா இன்னும் படிக்ககூட இல்ல, அதுங்காட்டிலும் இந்த பாவி மனுசன் செய்யுற அக்குறும்ப கேக்க ஆளேயில்லியா" ன்னு மெதுவா காதில விழுந்துது.

செந்தழுலாரே!! உங்க பேச்ச கேட்டிகிட்டு நாபாட்டுக்கு எழுதிட்டேன். காப்பிரைட் பிரச்சனை எதுவும் வந்துடாதே. ஆ.வி ஏதுனா கேஸ் கீஸ் போட்டுட போறாங்க. எதுக்கும் விக்கி பசங்க கிட்டெ கேட்டு கிளியர் செஞ்சுக்கனும்.

இதுல அந்த S. பாலசுப்ரமணியன் யாருன்னு கேக்களியே!!!! நா எப்போதும் போய் புக் வாங்கியார பெட்டி கடைகாரரு.

February 12, 2007

நான் வந்துட்டேனே!!! இப்ப என்ன பன்ணுவீங்க!!!

ஒரு வழியாக துபாய் வலைப்பதிவர் சந்திப்பு நல்லபடியாக முடிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஜெகஜோராக தம்பியும், கோபிநாத்தும்,நானும் கூடி கும்மியடிச்சோம். எந்தவித இலக்கியமும் பேசப்படவில்லை. கவிதையும் பேசப்படவில்லை. புறியாத எந்த விஷயமும் பகிர்ந்துகொள்ளபடவில்லை. நிறைய சந்தோஷம் மட்டுமே திகட்ட திகட்ட பரிமாறிக்கொள்ளப்பட்டது. சரி அவர்கள் போய்விட்டார்கள். காலையில் கண்விழித்து பார்த்தால் ......மாப்பு... வச்சுட்டான்டா ....ஆப்பு.... அம்மை போட்டுடுச்சு...... இன்னிக்கோட 4 நாள் ஆச்சு. ராஸ்கல்.... கண்ணுக்குள்ள வந்துட்டான். தம்பி பயந்துபோயிடார். கோபி உக்காந்து ஓன்னு அழுவுறார். லியோ சுரேஷ் கடந்து கதற்றார். நா " இருங்கய்யா இருங்கய்யா பதிவுதான வேன்ணும்...போடறேன்...போடறேன்.." ன்னு சொல்லிட்டி உக்காந்துட்டேனே!!!!!!!

February 9, 2007

துபாய் வலைப்பதிவர் சந்திப்பு

மெதுவா ஒட்டகம் மாதிரி நொழஞ்சாச்சு. கவிதை, காமெடி,சமூகம்,சண்டை(நெசமான சண்டையில்ல) இப்டீன்னு ஒரு ரவுண்டு வந்தாச்சு. முழு பிளாக்கர் ஆகனும்னா அடுத்தது என்ன செய்யுனும்னு நல்லா யோசிச்சு பாத்தா ஒன்னு பாக்கி இருந்துச்சி.

அதுதாங்க, 'வலைப்பதிவர் சந்திப்பு'. சரி இதையே காமெடியா எழுதிடலாம்ன்னு நெனச்சா டுபுக்கு ஐயா அதுல் பின்னி பெடலு எடுத்துட்டார். அதுனால சீரியசா ஒரு வலிப்பதிவாளர் சந்திப்பு போட்டுடலாம்னு முடிவு செஞ்சு அதுக்கான ஏற்பாடு செஞ்சேன்.

நா கத்துக்குட்டி. நா கூப்புட்டா வாரத்துக்கு ஒரே ஒரு மூத்த பதிவர்தான் ஒத்துகிட்டார். ஒருத்தர் மட்டுமே கலந்துகிட்டா அது வலைப்பதிவாளர் சந்திப்பாகுமான்னு ஒரு டவுட்டு. அப்பதான் நம்ம சூடான் புலி மனசுக்குள்ள வந்தாரு. அவரு துபாய் வந்த போது''தம்பிய மட்டும் சந்திச்சா அது வலைப்பதிவர் சந்திப்பாகுமா?"ன்னு ஒரு பிட்ட போட்டாரு.

அதுக்கும் ஒரு 45 பேர் வந்து ''பின்ன இல்லியா?"ன்னு குமுறி குமுறி கும்மியடிச்சிட்டு போனாங்க. அந்த தைரியத்துல நானும் அந்த மூத்த பதிவரை வர சொல்லிட்டேன். ஒத்துகிட்டாரு. சந்தோசம். மகிழ்ச்சி.

என்க்கு 5 மணி வர பொட்டி தட்டுனும்.(புது வார்த்தைக்கு நன்றி தல). அதனால ஒரு 6.30க்கு அவர என் வூட்டுக்கு வர சொல்லிட்டேன். வூட்டுக்கு பக்கத்துல "கிடேசன் பார்க்"ன்னு ஒன்னு இருக்கு. அங்கியே நம்ம கச்சேரி வச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டேன். இன்னிக்கு நம்ம தங்கமனியும், மை டியர் குட்டிசாத்தானும் வூட்டுல இல்ல. (அதனால தான் இந்த சந்திப்பே)

போகும் வழியிலேயே எல்லாத்தையும் வாங்கிகிட்டேன். சரியா 6.25க்கு வந்துட்டார். உள்ள வரலமான்னு கேட்டப்போ "வாங்க சார், வாங்க சார்"ன்னு சொல்லிட்டு பரபரப்பாயிட்டேன். நாங்க முத முத அப்பதான் நேர்ல அறிமுகம். தனக்கு இத்தன வயசுன்னு சொன்னப்ப என்னால நம்பவே முடியலை.

அவருதான் ஆரம்பிச்சார் டாப்பிக்க. பின்நவீனத்துவம், பெரியார்,ஆன்மீகம்,வலைப்பூக்களின் ஆதிக்கம், இலக்கியம்,ஷெல்லி கீட்ஸ், முருஹன், கனிமொழி,எழுத்துதிமிர், அடங்கமறு, பாலியல், பெண்ணீயம்,நா.க,பார்த்தசாரதி, ஞாநி,சயின்ஸ் தாத்தா......போதும் போதும்..

சார், நாம கிடேசன் பார்க் போலாமா?ன்னு கேட்டேன். உடனே கிடேசனுக்கும் பார்க்குக்கும் நடுப்புர உள்ளத பத்தி பேச ஆரம்பிச்சுட்டார். பின்ன மெதுவா எந்திரிச்சு நிக்க பாத்தார். மெதுவா கேட்டார்"நாம இங்கியே கண்டின்யூ பன்னுவோமே". எனக்கும் அது உசிதமாகப்பட்டதாள் திரும்பவும் ஒக்காந்துட்டோம்.

கவிதை சொல்லவான்னு கேட்டார். சொல்லுங்கன்னு சொல்றத்துக்கு முன்னயே சொல்ல ஆரம்பிச்சுட்டார்.

இளைஞ்னே,
கவலைகள் என்ன நீ
கட்டிக்கொண்ட மனைவியா
ஒட்டிக்கொண்ட புல்தானே
தட்டிவிட்டு நடை போடு
தடைகளே வழியாகும்!!!

"மேல சொல்லுங்க சார். கொஞ்சம் இருங்க சூடா வடை சொல்லியிருக்கேன் வந்துடும் ' ன்னேன்.

வடைய யாரு எடுத்துட்டு வருவாங்கன்னு கேக்குரத்துக்கு பதிலா"வடை யார் கூட வரும்"ன்னார். இட்லிகூட வரும்னு சொன்னேன். பதறிட்டார். "யோவ் அவன் போட்டோ புடிச்சு போட்டுவான்யா"ன்னு அலறிட்டார்.

நா "மேல சொல்லுங்க சார்" ன்னேன்.

நீ
படுத்துக்கொண்டிருக்கும் வரை
உன்னை
படிக்கட்டாகத்தான்
பயன்படுத்துவார்கள்
எழுந்து நில்
எண் திசைக்கும்
வழிகாட்டும்
வழிகாட்டியாக..

"சழி பாத்ரூம் எங்க?"

மீதிய அங்க சொல்லப்போறார்ன்னு நெனக்கிறேன்.

"எங்க வுட்டன்"

"பாத் ரூம்ல சார்"

"யோவ், கவுஜய எங்க வுட்டன்"

"நாபகம் இல்ல சார்"

"ஆங் புடிச்சுட்டேன்"ன்னு ரவுச ஆரம்பிச்சுட்டார்.

நீ
விழுந்து கிடப்பது
மலர்களை போல்
மடிவதற்கள்ள
விதைகளை போல்
எழுவதற்கு..

"போதும் சார்.. பிரியமாட்டங்குது. ஆன்மீகம் பேசுவோம் சார்"ன்னு சொல்லி முடிக்கல லிங்கம் எடுத்துட்டார். வாயிலேர்ந்து. பின்ன வாய தொடச்சிவுட்டு படுக்கவச்சுட்டேன்.

இப்படியாக இனிதாக துபாய்-Al Quoz Area வலைப்பதிவர் சந்திப்பு முடிந்தது.

ஆக நானும் ஒரு பதிவு போட மேட்டர் கிடைத்தது.

சொல்ல மறந்துட்டேனே! என் கூட சந்திப்பில் கலந்து கொண்ட அந்த மூத்த(வயதில்.....ஆச்சு அவருக்கு 27)வலைப்பதிவர்???? ''அபிஅப்பா" (இருக்குடீ, பாத்ரூம் போம்போது பாப்பா பொம்மைய உடச்சில்ல)

February 5, 2007

அந்தரங்கம் விற்பவர்களை செருப்பால் அடி!!!

சமீபத்தில் மனதை மிகவும் பாதித்த நிகழ்வு இது. கடலூர் மாவட்ட ஒரு கிராமத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. வழக்கம் போல் அன்றிறவே முதலிரவு. மறு நாள் அந்த பெண்ணின் அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். காரணம் அந்த பெண் தன் உறவினர்களிடம் முறையிட்ட நெஞ்சம் பதைக்க வைக்கசெய்யும் புகார்.

அதாவது தன் முதலிரவில் தான் தனது கணவரின் நண்பர் மூலமாக வீடியோ எடுக்கப்பட்டதாக. பின்னர் அந்த வீடியோ கேசட் வெளிநாட்டு விற்பனைக்காக விமான நிலையம் வரை போய் விட்டதாகவும் அந்த மணப்பெண் தெரிவித்தார். இதை கேள்விப்படும் எந்த தந்தையும் இந்த தந்தை எடுத்த முடிவுதான் எடுப்பார் என்பது உண்மைதான்.

இதில் எந்த அளவு உண்மை என்பது விசாரனையில் இருக்கட்டும். உண்மையாய் இருக்குமேயானால் என்பது பற்றியே இப் பதிவு.

அந்தரங்கம் விற்பனை எங்கு ஆரம்பமாகின்றது? ஒரு உறவினர் மணமகளை முதலிரவுக்கு அனுப்பும் முன்பே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறேன் பேர்வழி என்று, அந்த பெண் மறுநாள் தன்னிடமே அவள் அவளுடைய அந்தரங்கத்தை விற்பனை செய்யவேண்டி, 'அறிவுரை' என்ற முதலீட்டை இடுகின்றாள். மறுதினம் "சந்தோஷமா இருந்தியா?" என்ற கொக்கியில் மாட்டி அந்த பெண் தன் அந்தரங்கத்தை இலவசமாக வாரி இறைக்கிறாள்.

மணமகனோ வேறு வழியில். அவனுடைய ஆண்மைதனம் பற்றிய அகங்காரம் அவனுடைய நண்பர்களிடம் பீற்றிக்கொள்ள வைக்கின்றது. இலவச கிலுகிலுப்புகள் கிடைக்கப்பெற்றவர்கள் இன்னும் இன்னும் கொக்கிகளை போட அந்த உளருவாயனோ தனக்கே தெரியாமல் தன் அந்தரங்க விற்பனையை அமோகமாய் நடத்துகிறான்.

அந்த இருவருக்குமே சொல்வதுயாதெனில் நீங்கள் விற்பனை செய்வது உங்களுக்கு மட்டுமேயானது அல்ல. உங்களை தவிர மறைமுகமாக வேறு சிலரின் மானம் சம்பந்தப்பட்டதும் உள்ளடங்கியிருக்கிறது என்பதை உணருங்கள்.

விலைமாதுவிடம் சென்று வந்தவன் கூட அவன் லீலைகளை, அகங்கார ஆண்மைதனத்தை அடுத்தவனிடம் சிலாகித்துக்கொள்ள எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் அவள் அவனிடம் மட்டுமே தன் மானத்தை விற்க ஊதியம் பெற்றாலொழிய இவன் வெளியே வந்து மற்றவர்களிடம் அவள் மானத்தை(மிச்சமிருப்பதை)விற்க எந்த விற்பனை உரிமையும் தரவில்லை. அப்படியிருக்கும் போது புதுமண தம்பதிகளின் இந் நடத்தை, கலாச்சார சீர்கேடு என்ற புற்று நோயின் ஆரம்ப விழாவிற்கான அழைப்பிதழே.

கிலுகிலுப்பு கிடைக்கப்பெற்றவர்கள் எப்படி வலை விரித்தாலும் உங்களுக்கு எங்கே போகிறது புத்தி?

இந்த வாய் வழி விற்பனையே வளர்ந்து ஊடகத்துறை என்றெல்லாம் கடந்து இதோ இந்த பதிவின் ஆரம்பத்தில் கண்ட கடலூர் மாவட்ட நிகழ்வெல்லாம் நடைபெறுகின்றன.

உணருங்கள் - அந்தரங்கம் புனிதமானது

February 3, 2007

அபிராமி இ.ஆ.ப

என்னால ஒரு விஷயம் முடியலைன்னா அத அப்டியே விட்டுடற ஆளு இல்ல நானு.

அப்டிதான் நா 10ம்பு படிக்கும் போது பால் வாங்க போன வீட்டுல 'ஆசை இருக்கு தாசில் பண்ன அதிஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க' ன்னு அந்த் வீட்டு ஓனர் என்னய அவமானப்படுத்த(அவர் நாற்காலியில் உக்காந்த காரணத்தால்) உடனே சபதம் போட்டாச்சு மனசுல. தாசில்தார் என்ன பிசாத்து..கலெட்டராவே ஆயிடுறதுன்னு. பாலை வாங்கிட்டு வீட்டுக்கு வந்த உடனேயே அதை மறந்து போயிட்டேன். அத்தன சீக்கிரம் மறந்துபோனது தப்பு தான்.

காலம் உருண்டு போச்சு. தோ...அபி குட்டிய ஸ்கூல்ல போட வேண்டிய நேரமும் வந்தாச்சு. அபி அம்மாவும் நானும் என்ன படிக்க வைக்கலாம்னு பயங்கர ஆலோசனை.

பாழா போன I.A.S மாத்திரம் மனசுக்குல்ல வரலை. அதை தவிர கிட்டத்தட்ட எல்லா படிப்புமே ஆலோசனை வட்டத்துக்குள் வந்துவிட்டது. நான் சொல்வதை அபி அம்மாவும் அவங்க சொல்வத நானும் ரிஜக்டட் ரிஜக்டட் ன்னு சொல்லிகிட்டே வந்தோம்.

ஒரு கட்டத்துல வெறுத்து போய் நானு 'புண்னாக்கு B.A' ன்னு சொல்ல 'இஜக்டட்'ன்னு சின்ன குரல் கேக்குது. பாத்தா எங்க குட்டி வாயில விரல் போட்டுகினு குந்தினு இருக்கு.

சரி அப்பாவும் அம்மாவும் ரிஜக்டட் ரிஜக்டட் ன்னு ஏதோ விளையாடுறாங்க நாமளும் ஆட்டைல கலந்துபோமேன்னு அதுவும் கூவியிருக்கு.

சரி, குட்டிம்மாவயே கேட்டுடுவோம்னு அவளிடம் "பாப்பா என்ன படிக்க போறீங்க???"

படார்ன்னு பதில் வந்துச்சு.."L.K.G"

அதுவும் சரிதான். பத்தாவது ஸ்டேட் பஸ்ட் வந்த பயபுள்ள எவனுமே"மேல என்ன படிக்கபோறீங்க?"ன்னு தினத்தந்தி நிருபர் கேட்டாக்க டாக்டரு,இஞ்ஜினீரு,சுக்குனீருன்னு சொல்லுவானுங்கல தவிர 11வது படிக்க போறேன்னு சொல்லமாட்டான்.

ஆனா அபி பாப்பா என்னய பாத்து 'லூசு பையா, அதுக்கு மொதல்ல L.K.G படிக்கனும்டா'ன்னு சொல்லாம சொன்னது போல இருந்துச்சு. அவ இஷ்டப்பட்ட மாதிரியே L.K.G சேக்க முடிவு செஞ்சோம்.

நல்ல ஸ்கூலா பாத்து பாப்பாவ தூக்கிட்டு கெளம்பிட்டோம். அபிஅம்மா தூக்கிட்டே வர பாப்பா வழக்கம் போல வாயில விரல போட்டுக்கிட்டே வந்தா. அழுது அடம்புடிக்க போறான்னு 5 ஸ்டார்லாம் ஸ்டாக் வச்சிருந்தேன். அதுக்கெல்லாம் தேவையே இல்லாம போச்சு. அப்பாக்கு 5 ஸ்டார் புடிக்கும்னு பாப்பாவுக்கு தெரியாதா என்ன!!

பணமெல்லாம் கட்டி முடிச்சவுடனே பேக்,புஸ்தகம், நோட்டு, பென்சிலு எல்லாமே வஞ்சனையே இல்லாம நெறய கொடுத்தாங்க.

பாப்பாகுட்டி ஜென்டிலா ஒரு பென்சில மாத்திரம் கைல வச்சிகிட்டு இடுப்பல உக்காந்து வெரல் சப்பிக்கிட்டே வந்தா. நா தேமேன்னு எல்லாத்தையும் தூக்கிகிட்டே பிரின்சிபால் ரூமுக்கு மரியாதை நிமித்த சந்திப்புக்கு போனோம்.

"வாங்க...உக்காருங்க...உங்க பேரு என்ன?..வாயில விரல் வைக்கக்கூடாது. கெட்ட பழக்கம்" இது பிரின்ஸ்.

"என் பேரு தங்கால பிட்டா(நா செல்லமா கூப்பிடுவது). வெரல எடுத்தா அழுவன்" - இது அபி. இத எதுக்கு தூண்டிவிட்டுகிட்டுன்னு அடுத்த கேள்விக்கு போயிட்டாங்க.

"சரி, நாளைலேர்ந்து யூனிபாஃமெல்லாம் போட்டுகிட்டு வறீங்களா?"ன்னு கேட்டாங்க. அபி குட்டி சொன்னாலே ஒரு பதில். இப்ப நெனச்சா கூட 'சொரக்'குங்குது.

"ஊணிபாம் எனிக்கு பத்ல அப்பா போட்டுட்டு வர்வாங்க" ...மெதுவா வெளிய வந்துட்டோம்.

அபிஅம்மா நற நறங்கறாங்க. 'நல்லா பொறந்துறுக்கு அப்பனுக்கு தப்பாம..புஸ்தகத்த தூக்க ஒரு ஆளு, யூனிபாஃம் போட ஒரு ஆளு,இதல்லாம் பத்தாம அவுங்கள தூக்க ஒரு ஆளு... நல்லதா போச்சு என்னய போட்டுட்டு வான்னு சொல்லாம போச்சு...அதென்னங்க உங்கள மாதிரியே தட்டி கழிச்சு பக்கத்துல உள்ளவங்க தலையிலேயே போடுறது....யூனிபாஃம் விஷயத்திலுமா??? யூனிபாஃம் விஷயத்திலுமா??? யூனிபாஃம் விஷயத்திலுமா??? '

புத்தருக்கு போதி மரத்தடியில வந்த மாதிரி எனக்கு படார்ன்னு ஞானம் வந்துச்சு. 10 வது படிக்கும் போது நா எடுத்துகிட்ட சபதம் எல்லாம் ஞாபகம் வந்துச்சு. சரி விஷயத்துக்கு வருவோம்.

கண்டக்டர், டிரைவர், இஞ்சினீயர்,டாக்டர்,நர்ஸ்,பைலட்,லேபர்,போலீஸ்,மிலிட்டரி,போராளி,கைதி,வக்கீல்,நீதிபதி,தீவிரவாதி,சாமியார்,பாதிரியார். இப்படியாக எல்லாருமே அவங்க அவங்க தன்னோட யூனிபாஃமை அவங்களே போட்டுக்கும் போது நம்ம கலெக்டர் மட்டும் தன்னோட யூனிபஃம போட்டுக்க மாட்டங்குரார்.

பின்ன அவர எப்டிதான் கண்டுபிடிக்குறது??? அவர் பக்கத்துல டபேதார் போட்டுகிட்டு வருவார். தலப்பா,சிகப்பு கிராஸ் பெல்ட், பட்டயம் இத்யாதி இத்யாதி எல்லாம் டபேதாருக்குதான். கலெக்டரு ஹாயா டி ஷர்ட், ஜீன்ஸ் கூட போட்டுகிட்டு வந்துடுவார். உலகத்துலயே பக்கத்துல உள்ளவங்களுக்கு யூனிபாஃம் போட்டு தன்னை அடையாளம் காட்டுவது நம்ம கலெக்டர் ஐயாதானுங்கோ......

கண்டுபுடிச்சிட்டேன் அபி பாப்பாவுக்கு ஏத்த படிப்பு இ.ஆ.ப தானுங்கோ. சரி அபிகிட்டயே கேட்டுடுவோம்னு "தங்கம் எதுக்கும் இருக்கட்டும் I.A.S படிச்சுடுடா செல்லம்'' என்றேன்.

"சழி, அப்பாவாழ்ழம் ழானும் பழிக்கிழேன்"(சாக்லெட் உள்ளெ போய்கிட்டு இருந்தது).

"செழ்ழம்..அப்ழீல்லாம் அபழகுழமா பேஷ கூழாது". (நானும் சாக்லெட்) என்றேன்.

"அப்பாவாட்டம் படிச்சா அதுக்கு பேர் பில் கலெக்டர். உண்மையிலேயே நல்லா படிக்கனும்" இது அபிஅம்மான்னு சொல்லி தெரிய வேண்டியதில்லை உங்களுக்கு.

so இன்னும் 13,14 வருஷத்துல ஒரு கலெக்டர் ரெடி நம்ம வீட்டுல.