பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

December 27, 2014

"பாரத்ரத்னா கலைஞர் மு.கருணாநிதி"


"பாரத்ரத்னா" - இந்தியாவின் மாபெரும் உயரிய சிவிலியன் விருது. அந்த விருதுக்கு இந்த வருடம் இந்து மாகான சபையை தோற்றுவித்த மதன்மோகன் மாளவியா மற்றும் வாஜ்பாய் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றது. அது பற்றி கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை...


இந்த நேரத்தில் தந்தை பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் "பாரத்ரத்னா" வழங்க வேண்டும் என்ற குரல் கலைஞரிடம் இருந்து ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. உடனே சில தோழர்கள் குறிப்பாக விடுதலை சிறுத்தை அமைப்பு தோழர்கள் சிலரிடம் இருந்தே கலைஞர் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கின்றார் என்று இணையத்தில் எழுதி வருகின்றனர்.


நான் கேட்கின்றேன். கலைஞருக்கு "பாரத் ரத்னா" கொடுக்க வேண்டும் என கேட்டால் என்ன தவறு? கலைஞருக்கு ஏன் பாரத்ரத்னா கொடுக்க வேண்டும் என பட்டியலிட்டால் அந்த கட்டுரைகள் பல பாகங்கள் வரும்.  இன்னும் சொல்லப்போனால் கலைஞருக்கு பாரத்ரத்னா ஏன் இன்னும் கொடுக்கவில்லை என அதிகாரமாக ஆக்ரோஷமாக கேட்க வேண்டும் தமிழனாக பிறந்த எவனும். திராவிடனாய் பிறந்த எவனும். நிலமை அப்படி இருக்க "கலைஞர் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கின்றார்" என எழுதுவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். இதுவே கலைஞர் அவர்கள் உயர்சாதி வகுப்பில் பிறந்து இருந்தால் அகில இந்தியாவுமே கொண்டாடி இருக்கும். மாற்றாக அவர் மிகவும் பிற்ப்பட்ட சமூகத்தில் வந்து பிறந்து விட்ட பாவத்தால் தான் இப்படி நம்மை சார்ந்த தோழர்களே ஏளனம் செய்யும் நிலையில் இருக்கின்றார்.


பொதுவாக இந்திய ஜனாதிபதி தான் (அஃப்கோர்ஸ் மத்திய அமைச்சரவை முடிவு செய்தாலும்) "பாரத்ரத்னா" விருதுக்கு உரியவரை தேர்ந்தெடுக்கும் கையெழுத்து போட வேண்டிய ஆசாமி. ஆனால் அந்த ஆசாமியையே பல முறை தேர்ந்தெடுத்தவர் அகில இந்திய அளவில் தன் ஆளுமையால் தேர்ந்தெடுத்தவர் கலைஞர் அவர்கள் தான். அதே போல "பாரத்ரத்னா" விருதுக்கு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் முக்கிய பதவியான "பிரதமர்" அவர்களையே பல முறை தேர்ந்தெடுத்த ஆளுமை கொண்டிருந்தவர் கலைஞர் அவர்கள். உடனே சில தோழர்கள் ..மாற்றுக்கட்சி தோழர்கள் "வாயாலயே வடை சுட வேண்டாம். கலைஞர் எப்போது ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தார் " என மனம் போன போக்கில் எழுதலாம். இதோ கலைஞர் அவர்களின் ஆளுமையை பாருங்கள். இந்தியாவின் 8 பிரதமர்கள், 7 குடியரசு தலைவர்களை உருவாக்கிய தலைவர் கலைஞர் அவர்களின் ஆளுமையை "திரும்பிப்பார்" என்னும் தலைபில் என் வலைப்பூவில் செப்டம்பர் 13, 2011ல் எழுதிய கட்டுரையில் இருந்து  சில வரிகளை எடுத்து இங்கே தருகின்றேன். படியுங்கள் தோழர்களே!


\\ 1957ல் கலைஞர் உட்பட 15 பேர் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தாகிவிட்டது. குடியரசு தலைவர் தேர்தல் வருகின்றது. எப்போதும் போல வடநாட்டவர் போட்டி. வடக்கு வாழ்கின்றது. தெற்கு தெய்கின்றது என்கிற மனக்கிலேசம் தென்னகத்தில் பரவலாக இருந்த நேரம் அது. அண்ணாவின் தலைமையில் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவதில்லை என முடிவெடுக்கின்றது. ஆனால் அப்போதைய மத்திய அரசுக்கு பிராந்திய கட்சிகளின் ஆதரவு ஒரு பொருட்டல்ல. அவர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் பிற்காலம் எப்படி ஆகும் என்று அவர்களுக்கு அப்போது கணிக்க தெரியவில்லை, கணிக்க வேண்டிய அவசியமும் நேருவுக்கு நேரவில்லை அப்போது.


ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் குடியரசு தலைவராக இருந்த ஜாகீருசேன் மறைவையொட்டி நடக்க இருந்த குடியரசு தேர்தலில் திமுகவும் , கலைஞரும் அந்த தேர்தலில் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க முக்கிய ஆளுமையாக இருந்தனர் என்பதை தான் சொல்ல வருகின்றேன்.




மத்தியில் ஆளும் கட்சி காங்கிரஸ் கட்சி. அவர்கள் கை காட்டும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம் போல அவர்களுக்குள் சண்டை. பாபுஜெகஜீவன்ராம் அதாவது இப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் தந்தையார் தலித் இனத்தை சேர்ந்தவர் குடியரசு தலைவராக வேண்டும் என்பது இந்திராகாந்தியின் சாய்ஸ். ஆனால் காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா தன் தென்னிந்தியாவை சேர்ந்த நீலம் சஞ்சீவரெட்டியை ஜனாதிபதியாக ஆக்க வேண்டும் என பிடிவாதம்.


பிரச்சனை என்று வந்தாகிவிட்டது. கட்சிக்குள் ஓட்டெடுப்பு நடத்தி யார் வேட்பாளர் என முடிவு செய்யலாம் என காங்கிரசின் ஆட்சிமன்ற கூட்டம் நடந்து ஓட்டெடுப்பும் நடந்து நிஜலிங்கப்பாவின் ஆதரவு பெற்ற நீலம்சஞ்சீவரெட்டி தேர்வானார். அது வரை எல்லாம் நல்லா தான் போய்கொண்டு இருந்தது. கலைஞர் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த ஆளுமை தெரியாதவர்களே! நன்றாக கேளுங்கள், அந்த நேரத்தில் தான் கலைஞர் மூக்கை நுழைக்கிறார். தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதி ஆவது ஒரு சந்தோஷம் தான். ஆனாலும் அதிலும் குறிப்பாக தமிழும் தெரிந்த ஒருவர் ஜனாதிபதி ஆனால் என்ன என்கிற ஆர்வம் கலைஞரை ஒரு பிராந்தியகட்சியின் தலைவர், பிராந்திய கட்சியை சேர்ந்த முதல்வர் அங்கே இந்தியா சுதந்திரம் அடைந்து 25 ஆண்டு ஆன பின்னே ஒரு பிராந்திய கட்சி ,மாநில கட்சி முதன் முதலாக ஜனாதிபதி தேர்வில் தன் ஆளுமையை செலுத்த தொடங்கியது. யார் ? கலைஞர்!


அப்போது துணை ஜனாதிபதி மற்றும் ஆக்டிங் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி தான் போட்டியிட போவதாக அறிவிக்கிறார். ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டிய பதவி இப்போது தேர்தல் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டது. எதிர்கட்சிகள் ஒன்று கூடின. பலரும் பல கருத்துகளை சொல்ல கலைஞர் ஜெயப்ரகாஷ்நாராயணன் நிற்கட்டும் என்கிறார். இப்படியாக எல்லோரும் கூடிக்கூடி பேசுவது காங்கிரஸ் வேட்பாளர் நீலம் சஞ்சீவரெட்டிக்கு சாதகமாக அமையகூடிய சூழல். காலம் கடந்து போய் கொண்டிருந்த நேரத்தில் திடீரென கலைஞர் ஒரு அறிவிப்பு செய்கின்றார். திராவிட முன்னேற்ற கழகம் ஜனாதிபதி தேர்தலில் வி. வி. கிரி அவர்களை ஆதரிக்கும் என்று.


ஆக தேர்தலில் மந்திய ஆளும் கட்சி சார்பில் நீலம் சஞ்சீவரெட்டியும் எதிர்கட்சிகள் சார்பாக வி.வி. கிரியும் வேட்பாளர்கள். அப்போதைய பாஷையில் சொல்லப்போனா அபேட்ஷகர்கள். இந்திரா ஒரு அறிவிப்பு செய்தார் புத்திசாலித்தனமாக. கொறடா உத்தரவு போட மாட்டார். தங்களுக்கு இஷ்டமானவர்களுக்கு ஓட்டு போடலாம் என தன் கட்சிகாரர்களுக்கு உத்தரவு போடப்படுகின்றது. தேர்தல் முடிந்தது. வி.வி.கிரி வெற்றி பெற்று குடியரசுதலைவர் ஆகின்றார். தமிழ் தெரிந்த ஒருவர் ஆகின்றார். முதல் நன்றியே கலைஞருக்கு தான் சொல்கின்றார்.


ஆக அந்த குடியரசு தலைவர் தேர்தலில் கலைஞரின் ஆளுமை இருந்ததா இல்லியா? முதன் முதலாக மாநிலகட்சி ஒரு குடியரசு தலைவர் தேர்தலில் மூக்கை நுழைக்க வைத்தவர் கலைஞரா இல்லியா? ஆளும் மத்திய அரசின் வேட்பாளரை தோற்கடித்து எதிர்கட்சி வேட்பாளர் வி வி கிரி அவர்களை ஜனாதிபதி நாற்காலியில் அமரவைத்தவர் கலைஞரா இல்லியா?


அதன் பின்னர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதியாக ஆனார். அதற்கு அவருக்கு கலைஞரின் உதவி தேவைப்பட்டது. கலைஞருக்கு கடிதம் எழுதினார். ஆதரவு கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு பதவி காலம் முடிவடையும் போது அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்த போது இந்திராவின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றார் கலைஞர். அப்போது இந்திராவின் மனதில் இருந்த இருவர் ஆர். வெங்கட்ராமன் மற்றும் நரசிம்மராவ். நரசிம்மராவ் வேண்டாம் என கலைஞர் மறுத்த காரணம், ஏற்கனவே பதவில் இருந்து வருபவர் ஆந்திராவை சேர்ந்தவர், மீண்டும் ஆந்திராவை சேர்ந்தவர் வந்தால் வடநாட்டவர்களின் ஒட்டு மொத்த வெறுப்பும் தேவையில்லாமல் தாங்க வேண்டும், அதே போல ஆர்.வெங்கட்ராமன் வருவதிலும் கலைஞருக்கு ஒரு சதவிகிதம் கூட ஆர்வம் இருக்காது. அதற்கான காரணம் 1980 சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு ஆர்.வெங்கட்ராமைன் பொறுப்பற்ற பேச்சுகள் என்று மனதில் நினைப்பு. ஆனால் அதை காரணமாக இந்திராவிடம் சொல்லாமல் பிரதமராகிய நீங்களும் உயர்சாதி, ஆர்.வெங்கட்ராமனும் உயர்சாதியாக இருப்பதால் மக்களிடம் ஒரு வித இறுக்கம் தென்படும் , எனவே பொற்கொல்லர் வகுப்பை சேர்ந்த கியானிஜெயில்சிங் ஒரு சிறுபான்மை மதத்தையும் சேர்ந்திருப்பதால் அவரையே குடியரசு தலைவர் ஆக்கலாம் என சொல்லி அதற்கு திமுக, அதிமுக என ஆதரவும் கொடுத்து ஜனாதிபதியாக்கினார். பின்னர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதி ஆன பின்னே இந்தியாவுக்கு பிடித்த பீடையாக பல கெட்டகாரியங்கள் நடந்தன என்பதும் வரலாறு. கலைஞர் முன்பு ஆர்.வெங்கட்ராமனை ஜனாதிபதியாக ஆக்காமைக்காக தன் நன்றிக்கடனை கூட ஒரு ஹிண்டுவில் வந்த வாசகர் கடிதத்தை வைத்தே திமுக ஆட்சியை கலைத்து தன் மனக்காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டார் என்பதும் வரலாறு.


ஆக கலைஞரின் ஆளுமைகள் இந்திய அரசியலில் இருந்ததா இல்லையா என்பதை சும்மா சிரித்து வைப்போமே என சிரித்து வைப்பவர்களை விட சரித்திரம் அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பவர்களுக்காக எழுதி வைத்தோம் என்னும் மனதிருப்தியுடன் எழுதுகிறேன். \\

இது தான் கலைஞர் அவர்கள் ஜனாதிபதிகளை உருவாக்கிய வரலாறு. வி பி சிங் முதல், ஐ கே குஜ்ரால், தேவகவுடா என இவர் பிரதமர் ஆக்கிய வரலாறுகளும் உண்டு.
சமகால தோழர் பேராசிரியருடன் தலைவர் கலைஞர்


அரசியல் ஆளுமைகள் மட்டுமா கலைஞரிடம் இருந்தது. கலைத்துறை என எடுத்துக்கொண்டால் நாடகம், சினிமா, கதை, கவிதை, கட்டுரை, கவிதைகள், உரைவீச்சுகள், மேடைப்பேச்சுகள் என பட்டியல் போட்டு மாளாது.
அரசியல் பதவிகள் எனில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 – 1962
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 1962 – 1967
பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு 1967 – 1969
தமிழக முதலமைச்சர் 1969 – 1971
இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சர் 1971 – 1976
தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் 1977 – 1983
தமிழக சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் 1984 – 1986
மூன்றhம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1989 – 1991
நான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1996 – 2001
ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 2006 - 2011
அதன் பின்னர் இப்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்கிறார் தன் 92 வது வயதிலும்.


தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞரின் பங்கு என்பது கீழ்க்கண்ட தொகுதிகளில் இருந்து .......


குளித்தலை 1957-62
தஞ்சாவூர் 1962-67
சைதாப்பேட்டை 1967-71
அண்ணாநகர் 1977-76
அண்ணாநகர் 1977-80
அண்ணாநகர் 1980-83
சட்ட மேலவை உறுப்பினர் 1984-1986
துறைமுகம் 1989-91
துறைமுகம் 1991
சேப்பாக்கம் 1996-2001
சேப்பாக்கம் 2001-2006
சேப்பாக்கம் 2006 லிருந்து
திருவாரூர் 2011லிருந்து இப்போது தன் 92 வது வயது நடக்கும் போதும் தொடர்கின்றார்.


இதோ இந்த வயதிலும் போராட்டம் எனில் முதல் ஆளாக தன் சக்கர நாற்காலியில் சென்றும் கலந்து கொள்கின்றார்.

தலைவர் கலைஞர் அவர்கள் சிறைக்கு அதாவது மக்கள் போராட்டங்களுக்காக ...கவனிக்கவும் சிலரைப்போல ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இல்லை.... இல்லவே இல்லை... சமூக போராட்டங்களுக்காக 500 நாட்களுக்கு மேலாக சிறை சென்றுள்ளார். இப்போது  அகில இந்திய அளவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அரசியல் தலைவர்களில் எத்தனை பேர் இப்படி 500 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர் என "பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கின்றார் கலைஞர்" என ஏளனம் பேசுவோர் விரல் விட்டு சொல்லட்டும் பார்க்கிறேன்! இது சவால்! எத்தனை அரசியல்வாதிகள், எத்தனை சமூக சிந்தனாவாதிகள் இவரைப்போல 500 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர்... சொல்லட்டும் பார்க்கலாம்.


கோடிக்கணக்கான ரசிகர்கள்
70 ,00,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்கள்
80,000 மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்பு கடிதங்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்
500 நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்
75 திரைப்படங்கள்
72 ஆண்டுகால பொது வாழ்க்கை
70 ஆண்டுகாலமாக பத்திரிகையாளர்
65 ஆண்டுகால கலைத்துறை பங்களிப்பு
60 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ச்சியான தேர்தல் வெற்றி
50 ஆண்டுகாலமாக சட்டசபை பணிகள்
18 ஆண்டுகாலம் தமிழக முதல்வர்
இந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசு தலைவர்களை உருவாக்கியதில் அரசியல் ஆளுமை
3 தமிழின் நாயகன்
என்றும் தமிழினத்தின் தலைவர்

ஒரே கலைஞர்  ... இவருக்கு "பாரத்ரத்னா" கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுப்பது? இதோ "ராஜபக்ஷெ"வுக்கு  "பாரத் ரத்னா"கொடுக்க வேண்டும்  என கொக்கரிக்கும் சுப்ரமணிய சுவாமிகளின் பேச்சுகளுக்கு கண்டனம் கூட தெரிவிக்காத சிலர் கலைஞருக்கு "பாரத்ரத்னா" கொடுப்பதை கேலி பேசுவது வெட்கக்கேடான விஷயம்.

தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த போது ஆற்றிய பணிகள், சமூக பணிகள் பற்றிய பெரிய கட்டுரை கூட எழுதினேன். அதை எல்லாம் இங்கே இந்த பதிவில் சொன்னால் படிப்பவர்களுக்கு அயற்சியாகவும், கலைஞருக்கு பாரத்ரத்னா கொடுக்க வேண்டும் என சொன்னதை கேலி பேசியவர்களுக்கு அதிர்ச்சியாகவும் இருக்கும்.


கலைஞருக்கு "பாரத்ரத்னா" கொடுக்க அவரது அரசியல், கலை, இலக்கிய, சினிமா, எழுத்து, மேடைப்பேச்சு என எத்தனையோ துறைகள் இருப்பினும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்னும் மாபெரும் புரட்சியை தமிழகத்தில் செய்து பசியில்லா பெருவாழ்வை தமிழகமக்களுக்கு கொடுத்த சமூக புரட்சி ஒன்றுக்காகவே அவருக்கு "பாரத்ரத்னா" கொடுக்கலாம். உடனே நீங்கள் கேட்கலாம்... "இப்போது விலையில்லா அரிசி கொடுக்கப்படுகின்றதே" என்று. இல்லை... அதை அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. "விலையில்லா அரிசி "என்பது மக்கள் அரிசி வாங்கக்கூட நாதியற்றவர்கள் என்பதாக உலகுக்கு உணர்த்தும். ஒருவன் தான் சாப்பிடும் உணவை தான் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்கிற சுயமரியாதையை தகர்க்கும் விஷயம் அந்த "விலையில்லா அரிசி" என்பது. குறைந்த பட்சம் ஒரு கிலோ ஒரு ரூபாய் என்பது தான் காசு கொடுத்து வாங்கி உணவு உண்ணும் திருப்தியும் சுயமரியாதையும் உண்டாகும் அந்த பயனாளிக்கு. ஆகவே ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசி என்னும் அந்த சமூகப்புரட்சி என்கிற ஒரு காரணம் போதும் கலைஞருக்கு "பாரத்ரத்னா" விருது கொடுக்க!




கலைஞருக்கு "பாரத்ரத்னா" இன்னும் கொடுக்கப்படவில்லை எனில் அசிங்கம் கலைஞருக்கு இல்லை. இந்த தேசத்துக்கு தான் அசிங்கம். அந்த அசிங்கம் துடைக்கப்பட வேண்டும் எனில் அடுத்த வருடமாவது கலைஞருக்கு "பாரத்ரத்னா" வழங்கப்பட வேண்டும். இது ஒரு திமுக தொண்டனின் குமுறல் இல்லை. ஒட்டு மொத்த திராவிட இனத்தின் குரல். அதே போல மிகப்பெரிய சமூக மாற்றத்தை இந்தியாவில் விதைத்து விட்டு சென்ற தந்தை பெரியார் அவர்களுக்கும், திராவிட இனத்தை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து அழகுபார்த்த "அறிஞர் அண்ணா" அவர்களுக்கும் ஆக தமிழகத்தின் விடிவெள்ளிகள் "தந்தை பெரியார்", "அறிஞர் அண்ணா" , "கலைஞர்" ஆகியோர்களுக்கும் இந்த மும்மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் அடுத்த வருடமே "பாரத்ரத்னா" விருது வழங்கி இந்திய அரசு தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்ள வேண்டும்!







மீண்டும் சொல்கிறேன்... இது ஒரு திமுக தொண்டனின் குமுறல் இல்லை. ஒட்டு மொத்த திராவிட இனத்தின் குரல்.....
எதிர்கால தமிழகத்துடன் தலைவர் கலைஞர்

February 19, 2014

மூவர் உள்ளிட்ட எழுவர் விடுதலையும் ஜெயா ஆடப்போகும் நாடகமும்!

இங்கே தமிழ் நாட்டில் இரண்டு கட்சிகள் தான் உள்ளன. ஒன்னு திமுக. அடுத்து அதிமுக. திமுகவுக்கும் அதிமுக மீது எவ்வித காழ்ப்புணர்வும் இல்லை. ஆனால் அதிமுக தலைவிக்கும் எங்கள் திமுகவுக்கும் ஏதோ தனிப்பட்ட காழ்”புணர்வு” இருப்பதாகவே நினைக்கிறேன்!

முருகன், சாந்தன், பேறறிவாளன் ஆகியோர் தூக்கு ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அது போல ரத்து செய்யப்படின் உடனே விடுதலை செய்யபட வேண்டும் எனவும் 25 லட்சம் பேர் ஒப்புதலுடன் ஒரு தீர்மானம் போட்டது திமுக.

இது போல அதிமுக எதாவது செய்ததா எனில் இல்லை என்பதே பதில். அது போல “போர் எனில் பொது மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்ற பொன் மொழியை உதிர்த்தவர் இன்றைய முதல்வர்.

அப்போது தலைவர் கலைஞர் பதில் சொன்னார்.... “காலம் பதில் சொல்லும் இவர்களுக்கு”

என்ன அஒரு தீர்க்கதரிசி அவர். இது தேர்தல் காலம். இன்றைக்கு சாமான், நெடுமரம், சைக்கோ போன்றவார்கள் ஜெயா முள்ளி வாய்க்கால் முற்றம் இடிப்பினும் கூட அந்த ஜே சி பி இயந்திரத்தை கைது செய்ய வேண்டும் என்று “முழக்கமிடும்” அளவு காயடிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில்... தேர்தல் “காலம்” என இப்போது வந்து விட்ட இந்த “காலத்தில்”... அங்கே உச்ச நீதிமனறத்தில் ஒரு சிறப்பான தீர்ப்பு வழங்கப்படுகின்றது.

காலம் தாழ்ந்து விட்டது கிட்ட தட்ட 24 ஆண்டுகள் தினம் தினம் ஒருவர் தூக்கு கயிறு வாசனையில் இருக்கும் போது காலம் தாழ்த்தியமை என்பது பெரும் கொடுமை! ஒன்று .... என்று தீர்ப்பு சொல்லப்பட்டதோ அன்று அதை ஜனாதிபதி ஆம், இல்லை என சொல்லி நிறை வேற்றி இருக்க வேண்டும். இல்லாவிடில் ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் காலம் தாழ்த்தி உச்ச நீதி மன்ற தீர்ப்பையே கேலிக்குரியதாக செய்து விட்டனர். அதாவது தீர்ப்பில் “ஒரு இருபத்தி நான்கு ஆண்டுகள் சிறை... பின்னர் தூக்கு” என நீதி வழங்கி இருப்பின் அதில் ஒரு கந்தாயம் இருக்கும். ஆனால் இது போல ஜனாதிபதிகள் காலம் தாழ்த்தியது அவர்களுக்கு கொடுத்த தண்டனையை மேலும் நீட்டிப்பதாகவே பொருள் கொள்ளப்படுகின்றது. எனவே இந்த உச்ச நீதி மன்றம் அவர்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்கின்றது. அது போல் அவர்களுக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகின்றது. அது போல இவர்கள் 24 ஆண்டுகாலம் சிறையில் இருந்து விட்ட படியால் இவர்களை விடுதலை செய்வது என்பது மாநில அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது. அவர்கள் விரும்பின் விடுதலை “கூட” செய்யாலாம். இதில் உச்ச நீதி மன்றம் தலையிட முடியாது!” என சொல்லிவிட்டது!

சபாஷ்! சபாஷ்! சபாஷ்! இங்கே தான் கலைஞர் உள்ளே புகுந்தார். (இதற்கு முன் 48 மணி நேரம் முன்பே தனக்கு முன்னர் ஒரு 25 லட்சம் பேர் இருக்கும் தைரியத்தில் சொல்லிவிட்டார். தூக்கு தண்டனை என்பதே கூடாது. அதிலும் இந்த மூவர் தண்டனை ஏற்புடையது அல்ல என சொல்லி விட்டார். அது போலவே அப்பாடி ரத்து செய்யப்படும் பட்சத்தில் தமிழக அரசு “விடுதலை” செய்ய வேண்டும் என அழுத்தம திருத்தமாக சொல்லி விட்டார்.

இப்போது நான் இங்க கட் பண்ணி அங்க போகிறேன்! ஏதோ இவர்களை “விடுதலை” செய்தது என்பது தமிழினம் மீது இருக்கும் பற்று காரணமாகவா? அல்லது செத்துப்போன “ஈழத்தாய்” பட்டம் ரினிவலுக்காகவா? அல்லது இன்று வாய் மூடி கிடக்கும் சாமான், நெடுமரம், சைக்கோ கும்பல் உன்னை புழக வேண்டும் என்பதற்காகவா???? இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை

இதே ஒரு வாரம் முன்பாக தன் 90 வயது தகப்பன் சாகும் நிலையில் கூட இருக்க வேண்டும் என பரோல் கேட்ட இதே நளினிக்கு இதே தமிழக அரசு நீதிமன்றத்தில் “இவரை வெளியே விட்டால் (அதாவது பரேலில் விட்டால் கூட) தமிழக சட்டம் ஒழுங்கு பாதித்து விடும்” என காரசாரமாக வாதிட்டது. ஆனால் இன்று நீதியரசர் சதாசிவம் கொடுத்த குட்டு தலையில் வலி உண்டாக்கியதா அல்லது ஓட்டுக்காக விடுதலையே செய்தாரா என நடுனிலையாளர்கள் மற்றும் சாமான், நெடுமரம் , சைக்கோ போன்ற ஈழ வியாபாரிகள் நினைத்து பார்க்க வேண்டும். ஆக ஒரு வாரம் முன்பாக நளினியை விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் எனில் இந்த ஒரு வாரத்தில் எல்லாம் சரி செய்யப்பட்டு தமிழகம் சட்டம் ஒழுங்கில் சீராகிவிட்டதா எனில் இல்லை.... இல்லை... இதே சென்னையில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கூட ஊரப்பாக்கத்தில் படுகொலை ... போன்ற சங்கதிகள் தினம் தோறும் நடந்து கொண்டு தான் உள்ளது!

எனவே! இது ஜெயாவின் தமிழர் பாசம் இல்லை.... இது சதாசிவம் அய்யா போட்ட கிடுக்கிப்பிடி தான்!
அன்று கலைஞர் சொன்னாரே “காலம் பதில் சொல்லும்” என்று... இது தான் அந்த காலம்! “தேர்தல் காலம்” உனக்கு ஓட்டு விழ எது வேண்டுமானாலும் செய்வாய்!

ஆனாலும் அதற்கும் “கலைஞர்” அவர்களே காரணம் என்பதை சாமான், நெடுமரம், சைக்கோ குரூப்ஸ் உணரட்டும்!

இந்த மூவர் மட்டும் இல்லை. நளினி உள்ளிட்ட அந்த ஏழு பேரின் விடுதலைக்கு கலைஞரே காரணம்!

அரசியல் சதுரங்கத்தில் உனக்கு செக் வைத்த ராஜா “கலைஞர்” மற்றும் தமிழின “யானை” சதாசிவம்” அய்யாவே காரணம்! இன்று நீ தோற்று போனது தான் உண்மை! தமிழர்கள் தான் வெற்றி பெற்றனர்! நீ தோற்று விட்டாய்! உன்னை இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்த அவர்களுக்கு என் நன்றிகள்!

February 12, 2014

இணையமும் திமுகவும்!

இணையத்தில் திமுக வளர்ந்த கதையும் கலைஞரின் வேகமும்!!!

ஒரு இயக்கம் வெற்றி பெற வேண்டுமாயின் அதன் கொள்கைகள், கருத்துகள், தாம்
செய்யப்போகும் திட்டங்கள், செய்த திட்டங்கள் என எல்லாம் மக்களிடம் போய்
சேர வேண்டும். அதற்கு மக்கள் புழக்கம் எங்கு அதிகமோ, மக்கள் ரசனை எதில்
நாட்டம் அதிகமோ அந்த வழியே இயக்கமும் சென்று தன் கருத்துகளை அவர்களிடம்
சென்று சேர்ப்பிக்க வேண்டும். அதன் பெயர் தான் "பிரச்சாரம்". இதைத்தான்
திராவிட இயக்கங்கள் ஆரம்பம் முதல் சரியாக செய்து வெற்றிக்கனி பறித்தன.

 1950 களில் ஓரளவு படித்த மக்கள் பத்திரிக்கைகள் படித்தனர். பாமரர்கள்
நாடகம், தெருக்கூத்து பார்த்தனர். இதை புரிந்து கொண்ட திராவிட இயக்கங்கள்
அவர்கள் விரும்பும் அந்த ஊடகங்கள் வழியே தன் கொள்கையை பரப்பியது. படித்த
மக்களை சென்றடைய பத்திரிக்கைகள் நடத்தின. குடியரசு, விடுதலை, திராவிடன்,
திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், தோழன், நகரதூதன், போர்வாள், தாய்நாடு,
குயில், இனமுழக்கம், தென்றல், தென்னகரம், தாரகை, தன்னாட்சி, தனியரசு,
மாலைமணி, நம்நாடு, பிறப்புரிமை, நக்கீரன், அண்ணா, தென்புலம், மன்றம்,
முல்லை, நீட்டோலை, புதுவாழ்வு, தம்பி, மக்களாட்சி, அறப்போர், அன்னை,
முன்னணி, காஞ்சி, பகுத்தறிவு, உரிமை வேட்கை, மக்களரசு, தீப்பொறி, ஈட்டி,
திராவிடஸ்தான், தமிழரசு, தென்னரசு, திராவிட ஏடு, அருவி, பொன்னி, ஞாயிறு,
பூம்புகார், வெள்ளி வீதி, கனவு, அமிர்தம், தஞ்சை அமுதம், தென்னாடு,
முன்னேற்றம், தீச்சுடர், களஞ்சியம், திருவிடம், பூமாலை, சங்கநாதம்,
எரியீட்டி, புரட்சிக்குயில், திருவிளக்கு இப்படியாக தமிழகமெங்கும்
பத்திரிக்கைகள் திராவிடர்களுக்கு இருந்தன. திராவிட கருத்துகளை அமுதம் போல
அள்ளி வழங்கின. படித்தவர்கள் திராவிட இயக்கம் பக்கம் வந்தனர். தம்
மக்களுக்கு தமிழில் பெயர் சூட்டுவது முதல் அனைத்தும் மொழி, இனம் சார்ந்து
செயல்படும் வகையில் தங்களை மாற்றிக்கொண்டனர்.

பாமரர்கள் பார்க்கும் தெருக்கூத்து, நாடகங்கள் இவைகளையும் திராவிட
இயங்கங்கள் விட்டு வைக்கவில்லை. அண்ணா, கலைஞர் என இயக்கத்தின் மேல்தட்டு
தலைவர்களே நாடகங்களில் தோன்றி நடித்தனர். மக்களிடம் தங்கள் கொள்கையினை
கொண்டு சேர்த்தனர்.

அதன் பின்னர் அதன் பரிமாண வளர்ச்சியான திரைப்படம்... இதிலே திராவிட இயக்க
முதல் கட்ட தலைவர்கள் தங்கள் எழுத்துகளால் உயிரூட்டினர். அதன் இரண்டாம்
கட்ட தலைவர்கள் அதில் நடித்து மக்களை ஈர்த்தனர்.
"கோவில் கூடாதென்பது அல்ல என் நோக்கம், கோயில் கொடியவர்களின்
கூடாரமாகிவிடக்கூடாது என்பதே என் நோக்கம்" என திராவிட கருத்துகள்
கொப்பளித்தன கலைஞர் வசனத்தில். "அத்தி மரத்தில் கிளையில் காய்க்கும்
காய், வேரில் காய்க்கும் காய் இரண்டுக்கும்  ஒரே சுவை எனில் பிரம்மனுக்கு
தலையில் பிறந்தவன் என சொல்லப்படுபவனுக்கும் காலில் பிறந்தவன் என
சொல்லப்படுபவனுக்கும் வேறு வேறு குணமா இருக்க முடியும்?" என பகுத்தறிவு
வினா திரைப்படம் வாயிலாக வினாத்தொடுத்தார் கலைஞர். மக்கள் உணர்ந்தனர்.
அது போல ஊருக்கு ஊர் , தெருவுக்கு தெரு மேடை போட்டு தங்கள் திராவிட இயக்க
கருத்துகளை கொண்டு சேர்த்தனர். மக்கள் கூட்டம் திரவிட மேடை நோக்கி
நகர்ந்தது.

தமிழகத்தின் சுவர் விளம்பரங்கள் முழுவதும் " இராகுகாலம் பார்ப்போருக்கும்
சாகும் காலம் உண்டு" என பகுத்தறிவு வாங்கியங்கள் பொங்கி பிரவாகமாக
பளிச்சிட்டது. திராவிட இயக்கம் ஆட்சியை பிடித்தது. காலங்கள் மாறின.
பிரச்சாரயுக்தி பரிமாண வளர்ச்சி அடைந்தது. மக்கள் பத்திரிக்கை படிப்பதை
விட, அரங்குகள் சென்று பார்ப்பதை விட தன் வீட்டு கூடத்தில் அமர்ந்து
வசதியாய் உலக நடப்புகளை தெரிந்து கொள்ளும் "தொலைக்காட்சி" வந்தது.

அந்த தொலைக்காட்சியையும் முதலில் பிடித்தது திராவிட இயக்கத்தின் முதல்
தரமான கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் தான். 1991 முதல் 1996 வரையிலான
தமிழகத்தின் இருண்ட ஆட்சியின் அவலங்களை மக்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்து
கொண்டே பார்த்து ஒரு முடிவுக்கு வந்து அதன் பின்னர் திமுகவுக்கு 1996ல்
மீண்டும் ஆட்சியை கொடுத்தது.

ஆக தமிழகத்தின் கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் மாறி வரும் பிரச்சார
உத்திக்கு ஏற்றபடி திமுகவும் தன்னை மாற்றிக்கொண்டு அந்த நவீன
பிரச்சாரத்தில் முதன்மையே பெற்றது. ஆரியர்கள் ஆடிப்போயினர். இந்த கால
கட்டத்தில் தான் "இணையம்" என்ற புதிய நவீன பிரச்சார வடிவம் 2000 ஆண்டு
முதல் பிரபல்யம் ஆனது. அதுவரை அனைத்து பிரச்சார முனைகளிலும் முதன்மை
பெற்ற திமுக இந்த ஒரு விஷயத்தில் அத்தனை ஆர்வம் காட்டவில்லையா அல்லது
என்ன காரணம் என தெரியவில்லை, கொஞ்சம் சுனக்கம் காட்டியது என்பதே உண்மை.
கிடைத்த இடைவெளியில் உள்ளே புகுந்தது ஆரியப்பாம்பு. இணையம் வழியே 2000ம்
ஆண்டுகளில் அமேரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து கொத்த தொடங்கியது.
2001ல் அதன் தாக்கம் மிகப்பெரியதாக வெளியே தெரியவில்லை. புற்று நோய்
கட்டி போல மெல்ல மெல்ல வளரத்தொடங்கியது.

ஆனாலும் திமுகவினர் விடவில்லை. தாமதம் ஆனாலும் விழித்துக்கொண்டு இன்று
ஓடத்தொடங்கி இன்று பல்லாயிரக்கணக்கானோர் இணைய வழி பிரச்சாரத்தில்
ஈடுபட்டு வருகின்றனர். 2000ம் ஆண்டுகளில் இணையத்தில் பிரச்சாரம்
மேற்கொண்டவர்கள் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். வளைகுடா
நாடுகளில் பணியாற்றிய "அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்", அமேரிக்கா
வாஷிங்டனில் இருந்து மயிலாடுதுறை சிவா, சிங்கப்பூரில் இருந்து செயல்பட்ட
"உடன்பிறப்பு" என்னும் பெயரில் எழுதிய சம்சுதீன், "கிழுமத்தூர்
எக்ஸ்பிரஸ்" என்னும் பெயரில் எழுதிய பெ.மகேந்திரன், மற்றும் தமிழகத்தில்
இருந்து இயங்கிய லக்கிலூக் என்னும் யுவகிருஷ்ணா, எம்.எம்.அப்துல்லா, டான்
அசோக் என்னும் இளவரசன், கொக்கரக்கோ சௌம்யன், சூர்யா பார்ன் டு
வின்,மெல்வின் பாக்கியநாதன்,  வைரமுத்து, இவர்களுடன் எஸ்.எஸ்.சிவசங்கர்
(இப்போதைய அரியலூர் மாவட்ட செயலர் மற்றும் குன்னம் சட்ட மன்ற தொகுதி
உறுப்பினர் மற்றும் புதுகை மாவட்ட செயலர் பெரியண்ணன் அரசு,
தாமைரைச்செல்வன் எம்.பி,  ஆகிய  அனைவரும் தங்கள் சொந்த வலைப்பூ வைத்து
கொண்டு அந்த ஆரிய பாம்பு கூட்டங்களுக்கு சரிசமமாக போரிட்டனர். ஒரு
மாபெரும் படையை நம் திமுகவின் மேற்கண்ட சிறிய குழு தன்னால் இயன்றவரை
போராடி அடக்கப்பார்த்தது.

குறிப்பாக 2006ல் ஆட்சிக்கு வந்த திமுக கழகத்தை அதன் இலவச வண்ண
தொலைக்காட்சி திட்டத்தை  "அய்யோ தமிழக வருவாய் முழுக்க கருணாநிதி இலவசம்
என்னும் பெயரால் அழித்து வருகின்றார்" என இணையம் முழுக்க கூக்குரலிட்ட
போது அபிஅப்பா என்கிற தொல்காப்பியனின் கட்டுரையில் " புதிதாய் ஒரு வீடு
கட்டினால் வீட்டுக்கு வாசலில் ரோசா செடியும், மல்லிகை செடியும் வைப்பது
போல வண்ணத்தொலைக்கட்சி கொடுக்கும் திட்டம். அதே வீட்டில் பின் பக்க
கொல்லையில் புளிய விதை நடுகின்றானே வீட்டு சொந்தக்காரன், அது அவன் சந்ததி
அந்த வீட்டை பயன் படுத்தும் போது பயன் பட வேண்டி நடப்பட்டது. அது போல
கொள்ளையில் நடும் புளிய விதை  போன்றது தான் சேது சமுத்திர திட்டம். இதை
திமுக  போராடி பெற்றது. வீட்டை அழகு படுத்த ரம்மியமாக்கவே வாசலில் நடும்
பூச்செடி போல வண்ணத்தொலைக்காட்சி திட்டம்" என விளக்கம் கொடுத்தது இணையம்
முழுக்க பிரசித்தமானது.

இப்படியாக ஒரு பெரிய ஆரியப்படைகள்  முன்னதாக இந்த திமுகவின் சிறிய குழு
தன் முழு பலப்பிரயோகமும் காட்டியது. ஆனாலும் திராவிட இயக்கத்தினால் பலன்
பெற்று கணிணி பயின்ற திராவிட இயக்க வழிவந்த புதுவாக்காளர்களே அந்த
ஆரியப்படையின் சூழ்ச்சியல் அவர்கள் செய்த பொய்ப்பிரச்சாரத்தால்
அவர்களுக்கு  கூறிய மந்திர வார்த்தையான "மாற்றம் வேண்டும்" என்பதை நம்பி
ஆரிய ஆட்சியை 2011ல் ஆட்சியில் அமர்த்த வழி வகுக்கும் வகையில் தங்கள் 25
லட்சம் புது வாக்குகளை அள்ளி வழங்கினர்.  பின்னர் தான் திமுக சிந்தனை
கொண்ட இணையம் புழக்கத்தில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டனர்.

இதோ இன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் இணையம் வழி திமுக கொள்கைகளை பரப்பி
வருகின்றனர். ஆரியப்படை திக்குமுக்காடி போய் செய்வதறியாது நிற்கின்றது.
இந்த பத்தாயிரம் பேரில் அபிஅப்பா என்கிற தொல்காப்பியன், டான் அசோக்,
சூர்யா, கொக்கரக்கோ சௌம்யன், பால்ராஜ், ஜே பி பிரகாஷ், திராவிடப்புரட்சி
போன்ற சிலர் கட்டுரையாளர்கள், ஹாங்காங் அன்சாரி, நாகூர் ஜலால் போன்ற
சிலர் (கார்டூனிஸ்ட் போல) போட்டோனிஸ்ட்கள்,  கோகுல், சித்தன்,
ரா.அசோக்,சம்பத்குமார், சரவணகுமார், அருள்பிரகாசம் போன்ற  சிலர்
அண்ணாவைப்போல, கலைஞரைப்போல "பன்ச் டயலாக்" வித்தகர்கள், மரியா அல்போன்ஸ்
பாண்டியன் போன்ற சிலர் நம்மை எதிர்த்து எழுதும் வெகுஜன பத்திரிக்கைகளின்
இணைய தளத்தில் அவர்களுக்கு பதில் சொல்வதையே முழு நேரப்பணியாக செய்து
வருபவர்கள். சிலர் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை ஆராய்ந்து திமுக மீது தவறு
இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் வகையில்  செயல்படுபவர்கள்.
இந்த கட்டுரை எழுதும் என்னைப்போல சிலர் திமுகவின் அனைத்து
நிகழ்வுகளுக்கும் சென்று புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு
செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள். நான் இது வரை எடுத்து
வெளியிட்ட புகைப்பட எண்ணிக்கை 50,000 தாண்டி விட்டது.

5 வருடம் முன்பகவே தளபதி இணையம் பக்கம் வந்து கழக செய்திகள், கொள்கைகள்
என வெளியிட்டு நேரிடையாக மக்கள் முன் வந்து விட்டார். இதோ ஒரு வருடம்
முன்பாக கலைஞர் அவர்களும் இணையம் பக்கம் வந்து விட்டார். தன் பேச்சுகள்,
தன் அறிக்கைகள், தன் நேர்காணல்கள் என அனைத்து அதிலே வந்து நேரிடையாக
மக்களை சென்று அடைந்து வருகின்றது. நம் "முரசொலி"கூட யூனிக்கோட் வழி
வந்து இன்று உலகம் முழுக்க "முரசொலி" பட்டொளி வீசிப்பறக்கின்றது.
உலகிலேயே 90 வயது அரசியல்வாதி ஒருவர் ஒரு நவீன உலகின் வெளிப்பாடான
"இணையம்" வழி மக்களை சந்திக்கிறார் எனில் அது நம் தலைவர் கலைஞர் ஒருவர்
மட்டுமே. ஒரே ஒருவர் மட்டுமே. நாம் கொடுத்த இலவச வண்ணத்தொலைக்காட்சி
பெட்டி வழியே "பொய்ப்பிரச்சாரம்" செய்து மக்களை 'மாற்றம் வேண்டும்' என
சொல்லி ஆட்சிக்கு வந்து  ஏமாற்றம் கொடுத்து கொண்டிருக்கும் ஆரிய
ஆட்சிக்கு இன்று அவர்கள் கொடுக்கும் இலவச லேப்டாப் மூலமாக நாம் "இணைய
வழி" உண்மை பிரச்சாரம் செய்து பதிலடி கொடுத்து மீண்டும் திமுகவை
ஆட்சியில் அமர்த்துவோம்.

இன்று 90 வது பிறந்த நாள் நம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு. "மாணவ நேசன்"
என்று தன் கைப்பட எழுதி கையெழுத்து பிரதியாக தன் 13 வயதில் தொடங்கிய
அவரது திராவிடப்பிரச்சாரம் பின்னர் அச்சு பிரதியாகி, நாடக நடிகராகி,
திரைப்பட எழுத்தாளர் ஆகி, மேடைப்பிரச்சரம் என வளர்ந்து, பின்னர் ரேடியோ,
தொலைக்காட்சி என விரிவடைந்து இன்று அவருடைய 90 வது வயதில்
"இணையப்பிரச்சாரம்" என்னும் நிலைக்கு வந்துள்ளது. எதிர்காலத்தில் ஒருவர்
கண் மூடி படுத்து இருந்தால் கூட ஒரு பட்டனை தட்டினால் கண்ணுக்கு முன்னதாக
எழுத்துகள் வரி வடிவிலும் , திரைப்பட வடிவிலும் (விஷூவல்) தெரிவது மாதிரி
ஏதாவது புது அறிவியல் கண்டுபிடிப்பு வரலாம். அது இப்போது இணையத்தில்
இருக்கும் எங்களுக்கு புதிகாக இருக்கலாம். ஆனால் கலைஞருக்கு அதுவும்
பழகும். கண்மூடி படுத்தாலும் கலைஞர் தாக்கம் இருக்கும். அப்போது அனேகமாக
நாங்கள் பேசிக்கொள்வோம் " இது என்ன கலைஞர் பயன்படுத்துவது புதுவித
டெக்னிக்காக இருக்கே, இதை நாம் எப்படி பயன்படுத்துவது" என எங்களுக்குள்
பேசிப்பேசி குழம்பி நாங்கள் அதனுள் செல்லும் போது கலைஞர் அனேகமாக இந்த
நவீன யுகத்தின் அதற்கடுத்த  டெக்னாலஜிக்கு தன் பிரச்சாரத்தை
மாற்றிக்கொண்டு போயிருப்பார். அவரது வேகத்துக்கு நாம் ஈடுகொடுக்க இயலுமா?
அது நடக்கும் விஷயமா? வாழ்க கலைஞர்!வெல்க திமுக!

October 19, 2013

கொஞ்சு தமிழில் விளையாடக்கூட மட்டுமல்ல ,வசைபாடவும் இன்னும் யார் பிறக்க போகின்றனர்?



கொஞ்சு தமிழில் விளையாடவும் மட்டுமல்லா ,வசைபாடவும்  இன்னும் யார் இங்கே பிறக்க  போகின்றனர்? இந்த நாவடக்கம் இல்லா நயவஞ்சக பேயை நாயை விமர்சிக்க அவள்  16.10.2013ல் எழுதிய கடிதமே போதும். அந்த நாய் இது சம்மந்தமாக வழக்கு தொடுப்பின் அவள் வாக்குமூலம் 16.10.2013 இருக்கின்றது! வழக்கை போட்டுப்பார்! அவமானம் சந்தித்துப்பார்!



*****************************************

நாடாளும் பெண்ணே, நாவடக்கம் தேவை!

(குறிப்பு :- இந்த அறிக்கை சற்றுக் கடுமையாக எழுதப்பட்டது என்று
யாராவது நினைத்தால், முதலமைச்சர் பொறுப்பிலே இருக்கும் ஜெயலலிதா
16-10-2013 அன்று விடுத்துள்ள அறிக்கையை முழுவதுமாகப் படித்துப்
பார்க்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது என்ற செய்தி வந்தாலும் வந்தது; நடுத்தெரு நாராயணியாம் ஜெயலலிதாவுக்கு """"நடுங்கா நாக்கழகி"" என்று
பட்டமும் பதக்கமும் கிடைக்க வேண்டுமென்ற நப்பாசையோடு யாரைப் பார்த்துக் குரைக்கலாம், எவரைத் தாக்கிக் கடித்துக் குதறலாம் என்ற வெறி பிடித்து விட்டது.


என்றைக்காவது ஒரு நாள், திடீரென்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொள்வார். அவரை பூமான், கோமான், சீமான் என்றெல்லாம்
புகழ்ந்து தள்ளி விட்டு, அதே நேரத்தில் என் மீது பிறாண்டுவார்! அவருடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் அரசியல் நிகழ்ச்சிகள் அல்லது தேர்தல்கள்
போன்ற முக்கியமான நேரம் வரும் போதெல்லாம் முக்காடிட்டு, முழங்காலைக் கட்டிக் கொண்டு பெங்களூரு வழக்கு என்ன ஆகுமோ? எப்படியெல்லாம்
அதைத் திசை திருப்பலாம்; அந்த வழக்கில் வென்றிட என்ன தான் வழி, என்ன செய்யலாம் சதி; என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு திடீரென்று
வந்து விடும் ஞானோதயம்! அந்த ஞானோதயம் வந்து விட்டால், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி இந்த அம்மையார் செய்த பழைய அர்ச்சனைகள்
எல்லாம் அவருக்கு மறந்தே போய் விடும் அல்லது பறந்தே போய் விடும். அந்தக் காலத் திலிருந்து அவருடைய பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கலை
வாழ்விலும், பொது வாழ்விலும் உச்சத்துக்கு வர வேண்டுமென்ற நினைப்புடன் நச்சரவுக் கருத்துக்களை நாட்டில் பரப்புவதிலும் ஏட்டில் அறிக்கைகளாகத்
தருவதிலும் ஜெயலலிதாவைப் போன்ற ஒரு கொள்ளி வாய்ப் பைசாசத்தை வலை போட்டுத் தேடினாலும் எந்தக் கட்சியிலும் கண்டு பிடிக்க முடியாது.

பிரதமர் பதவிக்கு உங்கள் ஆதரவு நரேந்திர மோடிக்கு உண்டா என்று யாரோ கேட்ட போது அந்தப் பதவிக்கு தன் பெயரை அல்லவா முன் மொழிய வேண்டும் என்று தருக்கு மிகக் கொண்டு தாண்டிக் குதித்தவர் ஜெயலலிதா
என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவர் தான் இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தன்னுடைய கட்சியின் தொண்டர்களைத் தயார் படுத்துவதாக
எண்ணிக் கொண்டு அவர்களை உசுப்பி விட்டு வேலை வாங்குவது என்றால், அதற்கு முதல் பலியாக என்னைத் (கருணாநிதி) தாக்கி தொண்டர்களைத்
துhண்டி விட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு புறப்பட்டிருக்கிறார். அவருடைய அநாகரீக, அறிமுக அறிக்கையை தமிழ்நாட்டில் உள்ள தாசானுதாசர்களான ஏடுகள் சிலவும், எகிறிக் குதித்து வெளியிட்டு எக்காள
மகிழ்ச்சியில் திளைத் திருக்கின்றன. பாவம்! பரிதாபத்திற்குரிய தமிழ் மக்கள் !


"தினத்தந்தி"யின் புகழ் பெற்ற உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் மறைந்த போது; ஒரே பகுதியில், மூன்றாவது வீட்டிலே இருந்த ஜெயலலிதாவுக்கு சிவந்தி
வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரிக்கத் தோன்றவில்லை. ஓர் அமைச்சரைக் கூட அதற்காக அனுப்பவில்லை. ஆனால் இன்றைக்கு ராமச்சந்திர ஆதித்தன் மறைந்தவுடன் நான்கு அமைச்சர்கள், ஜெயலலிதாவால் துக்கம் கேட்க அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பொது மக்களே, புரிகிறதா?

தேர்தல் வருகிறது என்றாலே அம்மாவுக்கு திடீரென்று இது போன்ற ஞானோதயங்கள் எல்லாம் பிறக்கும். காயிதே மில்லத் நினைவிடத்தில் மலராடை
போர்த்த வேண்டும் என்ற எண்ணம் கூட தேர்தல் வரும்போது தான் அம்மாவுக்கு ஏற்படும். எஞ்சியுள்ள நாட்களில் காயிதேமில்லத் நினைவிடம் எங்கே
இருக்கிறது என்று கூடத் தெரியாது. அவ்வளவு ஏன்?

எம்.ஜி.ஆர். பற்றிய நினைவே கூட சிக்கலான வழக்கு, சிக்கலான தேர்தல் வந்தால் தான் அம்மையார் மூளையில் திடீரெனத் தோன்றும்!

அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக தீட்டிய திட்டங்களை, மத்திய அரசு நிறைவேற்றிட நினைத்தாலும் அதற்கு குறுக்கே நின்று அந்தத் திட்டத்தைக் குழி தோண்டிப் புதைப்பதிலே பலே கில்லாடியாக ஜெயலலிதா விளங்குகிறார்.

சேது சமுத்திரத் திட்டத்தை நுhறாண்டு காலக் கனவாகத் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து அதை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கும்போது அந்தத் திட்டத்திற்காக """"எழுச்சி நாள்"" கொண்டாடுங்கள் என்று எந்த அண்ணா அவர்கள் அறிவித்தாரோ, அந்தத் திட்டத்தையே மட்டம் தட்டி மறுப்புக் கூறி, உச்ச நீதி மன்றத்தில் அதற்குத் தடை கோரிய தாட்சாயணி தான் இந்த அம்மையார் என்பதை நாடு நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது.

சேதுத் திட்டம் என்பது வெறும் சில்லறைத் திட்டமல்ல; எதிர்காலத் தமிழகத்தை வாழ வைக்கக் கூடியதும், பல துறைமுகங்கள் உருவாகி, வாணிபத்தை நாடுகள் பலவற்றிலும் பெருக்கிடக் கூடியதுமான வளமார் திட்டம். வளமான பொருளாதாரத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் திட்டம்.
"நீரின் வந்த நிமிர் பரிப் புரவியுங்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
ஈழத்துணவும் காழகத் தாக்கமும்""

என வரும் பட்டினப்பாலை பாடலை மீண்டும் நினைவுபடுத்தி; மாண்ட நம் புகழை யெல்லாம், மறு மலர்ச்சிக்கு உரியதாக்கும் திட்டம்; அந்தத் திட்டத்தைத் தான் நிறைவேற்ற வேண்டுமென்று அதற்காக """"எழுச்சி நாள்"" கொண்டாடுங்கள் என்று தி.மு.கழகத் தோழர்களை யெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டு ஆட்சி அமைந்தவுடன் உசுப்பி
விட்டார். அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து
கொண்டு நடைபெற்ற அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவினை அடுத்துப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றிருந்தால் இந்நேரம் எத்தனையோ துறைமுக
நகரங்கள் தமிழகத்தில் தோன்றியிருக்கும்.

அதையெல்லாம் கெடுத்தது யார்? எந்தச் சண்டாளர்கள்
கெடுத்தார்கள்?

இப்போதும் அந்தத் திட்டம் வந்து விடக் கூடாது என்பதற்காக உச்ச நீதி மன்றத்திலே வழக்கு தொடுத்திருப்பது யார்? அந்த வஞ்சகர்கள், வன்கணாளர்கள் அண்ணாவின் கனவையே நிறைவேற்ற முடியாது என்று நீதி மன்றத்திற்குச் சென்றிருப்பவர்கள் - அண்ணாவைப் பற்றிப் பேச
அணுவளவும் அருகதை இல்லாதவர்கள் என்பதை நாட்டிலே உள்ள நல்லறி வாளர்கள் - நாடு வாழ வேண்டும் வளமாக வாழ வேண்டும், வலிமையான
பொருளாதாரமும், வளமான வாணிபத் துறையும் பெற்று வையகத்தில் பெரும் புகழ் நாட்டிட வேண்டும் என்று கனவு காணுகிற நம்மைக் கயவர்கள்
என்றும், துரோகிகள் என்றும், அண்ணாவின் கொள்கைகளுக்கு விரோதிகள்
என்றும் பேசித் திரிபவர்கள் அறிக்கை விட்டு அங்கலாய்ப்பவர் கள் யார் என்று
புரிகிறதா?

"அண்ணா நாமம் வாழ்க" என்று கூறிக் கொண்டே அவருக்கு பட்டை நாமம் சாற்றுகின்ற சண்டாளத்தனத்தை, தமிழகம் இனியும் பொறுத்துக்
கொண்டிருக்காது.

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து சர்வாதிகாரத்தைத் தர்பாரில் உட்கார வைத்திருப்பவர்களுக்கு அறவழியில், ஜனநாயகப்
பாதையில் தமிழ் நாட்டு மக்கள் வாக்குச் சீட்டையே பயன்படுத்திப் பாடம் புகட்டி இவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியே தீருவார்கள்.

அதற்குள்ளாக இவர்களுக்கு நெஞ்சிலே இருக்கிற கொழுப்பு வாய் வழியாக வெளிவருமானால் அந்தக் கொழுப்பே கொடிய விஷமாக மாறி
இவர்களுடைய திமிரை அடக்கிக் காட்டும்.

யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

இந்தக் குறளை அய்யன் வள்ளுவர்; இப்படிச் சில பிறவிகள் தமிழ்நாட்டில் தலையெடுப்பார்கள் என்று முன்பே அறிந்து தான் பாடி வைத்திருக்கிறார்
போலும்!

என்றைக்காவது ஒரு நாள், திடீரென்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொள்வார். அவரை பூமான், கோமான், சீமான் என்றெல்லாம்
புகழ்ந்து தள்ளி விட்டு, அதே நேரத்தில் என் மீது பிறாண்டுவார்! அவருடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் அரசியல் நிகழ்ச்சிகள் அல்லது தேர்தல்கள்
போன்ற முக்கியமான நேரம் வரும் போதெல்லாம் முக்காடிட்டு, முழங்காலைக் கட்டிக் கொண்டு பெங்களூரு வழக்கு என்ன ஆகுமோ? எப்படியெல்லாம்
அதைத் திசை திருப்பலாம்; அந்த வழக்கில் வென்றிட என்ன தான் வழி, என்ன செய்யலாம் சதி; என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு திடீரென்று
வந்து விடும் ஞானோதயம்! அந்த ஞானோதயம் வந்து விட்டால், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி இந்த அம்மையார் செய்த பழைய அர்ச்சனைகள்
எல்லாம் அவருக்கு மறந்தே போய் விடும் அல்லது பறந்தே போய் விடும். அந்தக் காலத் திலிருந்து அவருடைய பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கலை
வாழ்விலும், பொது வாழ்விலும் உச்சத்துக்கு வர வேண்டுமென்ற நினைப்புடன் நச்சரவுக் கருத்துக்களை நாட்டில் பரப்புவதிலும் ஏட்டில் அறிக்கைகளாகத்
தருவதிலும் ஜெயலலிதாவைப் போன்ற ஒரு கொள்ளி வாய்ப் பைசாசத்தை வலை போட்டுத் தேடினாலும் எந்தக் கட்சியிலும் கண்டு பிடிக்க முடியாது.

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து சர்வாதிகாரத்தைத் தர்பாரில் உட்கார வைத்திருப்பவர்களுக்கு அறவழியில், ஜனநாயகப்
பாதையில் தமிழ் நாட்டு மக்கள் வாக்குச் சீட்டையே பயன்படுத்திப் பாடம் புகட்டி இவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியே தீருவார்கள்.


அதற்குள்ளாக இவர்களுக்கு நெஞ்சிலே இருக்கிற கொழுப்பு வாய் வழியாக வெளிவருமானால் அந்தக் கொழுப்பே கொடிய விஷமாக மாறி
இவர்களுடைய திமிரை அடக்கிக் காட்டும்.


யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.


இந்தக் குறளை அய்யன் வள்ளுவர்; இப்படிச் சில பிறவிகள் தமிழ்நாட்டில் தலையெடுப்பார்கள் என்று முன்பே அறிந்து தான் பாடி வைத்திருக்கிறார்
*********************************

இப்போது புரிகின்றதா! இவர் "தீ" என தெரிகின்றதா?


June 24, 2013

இயக்குனர் மணிவண்ணன் நிஜமான போராளி என்றால்....


நல்ல இயக்குனர், நல்ல பெரியாரியவாதி, நல்ல தமிழ் உணர்வாளர்  திரு. மணிவண்ணன் இறந்து போனது வருத்தமே. அவர் இறந்த பின்னர் என் மனம் அமைதி இழந்தது, மனம் கனத்து போனது, இதயம் அழுதது எல்லாம் உண்மையே.


ஆனால் அதற்கு அடுத்து அடுத்து நடந்த சம்பவங்கள் தான் கொடுமையே! பாரதிராஜா என்னும் தன் குரு திட்டியதால் தன் மணிவண்ணன் மன உளைச்சல் காரணமாக இறந்தார் என நாம் தமிழர் என்னும் டம்ளர் பாய்ஸ் சொல்வது சிரிப்பை உண்டாக்குது.


ஒரு மன உளைச்சலால் சாகக்கூடிய பூஞ்சை மனசு மணிவண்ணனிடம் இருந்தால் பாரதிராஜா இவர் அவரிடம் மாணவராக இருக்கும் போது திட்டிய போதே (திட்டுவாராம்) செத்து போயிருக்கனும். சரி அப்போ அவர் மனதும் உடலும் திடம் என வைத்து கொண்டாலும் கூட உச்சகட்டமாக பிரபாகரனை தன் மானசீக மாவீரன் என மனதளவில் கொண்டாடிய மாவீரன் மரித்த போதே மன உளைச்சள் காரணமாக இறந்து போயிருக்க கூடும்.


அப்படி என்ன மணிவண்ணன் இலவம் பஞ்சின் மனது கொண்டவரா எனில் அதும் இல்லை. அவர் மேடைகளில் தன் எதிரிகளை வசை பாடியது இல்லியா? கழுவி கழுவி ஊத்தினது இல்லியா? அது என்ன வசைபாடும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு, மற்றவர்களுக்கு அது கிடையாது என்னும் மனோபாவம் அவருக்கு என நீங்கள் நினைக்கலாம். அப்படி இல்லை. மணிவண்ணனுக்கு தெரியும். நாம் மேடையில் யாரையாவது வசைபாடினால் தனக்கும் அது போல திரும்பி வரும் என தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை அவர். அதை எல்லாம் தெரிந்து தான் மேடை ஏறியிருப்பார். அதனால் பாரதிராஜா இவரை  திட்டினார், அதனால் இவர் செத்தார் என டம்ளர் பாய்ஸ் கூறுவதை ஒரு சிரிப்புடன் தான் நாம் கடந்து போக வேண்டும்.

இதே பாரதிராஜா நெய்வேலி போராட்டத்தின் போது "ஊ ஆர் யூ" என கலைஞரை வினவியதையும் எல்லோரும் அறிவோம். அப்போது இதோ இன்று "அம்மா" புகழும் பாடிக்கொண்டு, சன் டிவியில் கூட தொடர்பில் இருக்கும் மிஸ்டர் ராதிகா சரத்குமார் எல்லாம் அப்போது இதே பாரதிராஜாவை என்ன என்ன பேசினாங்க என கூட எல்லருக்கும் தெரியும். அதே ராதிகா குரூப்  இப்போது கலைஞருக்கு எதிரிகள். ஆனால் பாரதிராஜா இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் சீரியல் இயக்குனர். இது தான் நிதர்சனம். உணர்சிவசப்படுதலால் நிரம்பி வழிவது தான் சினிமா உலகம். இந்த நாடியை கலைஞர் நன்கு உணர்ந்தவர். ஆனால் 400 படங்களில் நடித்தும், 50 படங்கள் இயக்கியும் இருந்த மணிவண்ணனுக்கு இதல்லாம் தெரியாது என நினைப்பது டம்ளர் பாய்ஸ்ன் முட்டாள்தனம்.

எம் ஜி ஆர் இறந்த அன்று கலையில் வந்த முரசொலியில் எம் ஜி ஆரை கிண்டலடித்து கார்டூன் வந்தது, செய்தி வந்தது என சொல்லும் முட்டாள்கள் இருக்கும் நாடு தான் இது. எம் ஜி ஆர் இறந்தது விடிகால 4 மணிக்கு. தினசரிகள் அச்சேறும் நேரம் இரவு 10 மணிக்கு. எம் ஜி ஆர் விடிகாலை இறந்து போவார் என அச்சேற்றும் கடைநிலை ஊழியருக்கு அங்கே தெரிந்தால் கூட அதை அச்சேற்ற மாட்டார்கள். அதே நிலை தான் இப்போதும். ஆனந்த விகடன் குழுமத்துக்கு மணிவண்ணன் இறந்து போவார் என தெரிந்து இருந்தால் பாரதிராஜாவின் பேட்டியை வெளியிட்டு இருப்பார்களா என சிந்தித்து பார்க்கும் அளவு புத்தியும் இல்லை, நேரமும் இல்லை போலிருக்கு.

பாரதிராஜா இப்படித்தான் பேசுவார் என நான் சப்பைக்கட்டு கட்டவில்லை. அவர் பேசிய பேச்சுகள் தவறாகவே இருக்கட்டும். அதனால் "கொலைப்பழி" அளவுக்கு எல்லாம் பாரதிராஜா ஒர்த் இல்லை. பின் ஏன் பாரதிராஜா அந்த சாவு வீட்டுக்கு வரவில்லை என கேட்கும் நபர்களே, எளிதில் உணர்சி வசப்படும் ஒரு கூட்டம் அங்கே புலிக்கொடி போர்த்த சொன்னால் கூட டம்ளர் கொடி போர்த்தி வைத்திருக்கும் ஒரு கூட்டத்தில் அங்கே பாரதிராஜா உள்ளே வருவது, கலைஞரை நடு இரவில் கைது செய்து கொடுமை செய்த கூட்டத்தினை சேர்ந்த  151 பேர் நடுவே சட்டமன்றத்துக்கு சக்கர நாற்காலியில் போவது எப்படி  "தற்கொலை"க்கு சமமோ அதைப்போல  தான் என்பதை உணருங்கள்.


சாகும் முன்னர்  சில நாட்கள் முன்பாக கூட கலைஞரை இதே மணிவண்ணன் எதேற்சையாக சந்தித்த போது ...

"என்ன மணி எப்படி இருக்கே?" - இது கலைஞர்!

"அண்ணே, முதுகு பிரச்சனை இருக்குண்ணே, ஆபரேஷன் நடந்து இருக்கு. நடக்க கூட முடியவில்லைண்ணே"

"ஆக நீயும் என்னைப்போலத்தான். எனக்கும் அந்த பிரச்சனை தானே"

"ஆமாம் அண்ணே, ஆனா ஒன்னு உங்க கிட்டே பேங் பேலன்ஸ் இருக்கு. என் கிட்டே அது இல்லை அண்ணே"

உடனே கலைஞர் சிரித்து கொண்டே... "இவரு நம்மாளுய்யா" என பக்கத்தில் இருந்தவர்களிடம் சொல்கிறார்.


உடனே திமுகவின் நண்பர்கள் கோவித்து கொள்கின்றனர். யார் மீது? கலைஞர் மீது! "கலைஞர் இந்த சினிமாகாரனுக்கு ஏன் இத்தனை கரிசனம் காட்டுறார். இதே இந்தம்மா ஜெயா இப்படி செய்யுமா? கிட்டத்திலே நின்னு பேச அனுமதிக்குமா. கலைஞர் ஜெயா போல நடந்துக்கனும். கலைஞர் இன்னும் கத்துக்க வேண்டும்" என தனக்கு தெரிந்த "அறிவுரை"களை அள்ளி வீசுகின்றனர்.


அப்படி சொல்பவர்களை நான் பார்த்து ஒரே கேள்வி கேட்கிறேன். இதே ஜெயாவைப்பார்த்து "கலைஞர் மாதிரி நடந்து கொள்ளுங்கள்" என சொல்ல தைரியம் இருக்குதா உங்களிடம். ஏன்னா கலைஞர் என்றல் இலவசமா இழுத்து வைத்து இஸ்திரி போடலாம் என்னும் நினைப்பு தானே உங்களுக்கு? அந்த நினைப்பு திமுக உறுப்பினர்களுக்கே இருக்கும் போது எதிர் முகாமில் இருக்கும் மணிவண்ணனுக்கு இருக்காதா?



நான் இதை எதற்கு இங்கே சொல்கிறேன் எனில் தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை இருந்தவரிடம் எப்படி நாசூக்காக பேச வேண்டும் என்கிற சாதாரண அடிமட்ட அறிவு கூட இல்லாத மணிவண்ணன், இதே பாரதிராஜா இப்படி தன் சீடனை பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் எனில் எந்த அளவு இந்த மறைந்த மணிவண்ணன் அவரை பேசியிருப்பார் என நினைத்துப்பாருங்கள் தோழர்களே!



ஒருவர் திட்டியதுக்கே செத்து போகிறார் ஒருவர் எனில் அவரை போராளி என்றோ அவருக்கு அஞ்சலி செலுத்த "வீர வணக்கம்" என வாசகங்கள் அச்சடிப்பதோ மகா அசிங்கம். மீண்டும் மீண்டும் பாரதிராஜா திட்டியதால் மணிவண்ணன் இறந்தார் என சொல்லி அந்த நிஜமான போராளியை அசிங்கம் செய்யப்போகின்றீர்களா டம்ளர் பாய்ஸ்???


மனதார சொல்கிறேன் ... மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம்! அவரை "போராளி"யாகவே இருக்கவிடுங்கள் அட்லீஸ்ட் இறந்த  பின்னராவது! அவர் சாவில் அரசியல் செய்யாதீர்கள்!

June 4, 2013

என் தலைவன் தமிழின தலைவர் கலைஞர் ஒரு நவரசத்தலைவர்!!!

இது முரசொலியில் வந்த என் எழுத்துகள்!



என் தலைவன் தமிழின தலைவர் கலைஞர் ஒரு நவரசத்தலைவர், ஆமாம் இது வார்த்தை ஜாலம் இல்லை. நவரசம் என்றால் காதல்,இன்பம்,துன்பம்,கோபம்,கருணை,அருவருப்பு,பயம்,வீரம்,ஆச்சர்யம் என சேர்ந்த ஒன்பது வகை .

காதல்: அவருக்கு தமிழ்மேல் காதல்,  அதனால் பிறந்தது பல கவிதைகள், பல புதினங்கள், பல இலக்கியங்கள், பல நாடகங்கள், அவருக்கு தன் மனைவியர் மீது காதல், அதனால் பிறந்தது ஆறு சொத்துக்கள், அவருக்கு தன் பிள்ளைகள் மீது காதல் அதனால் பிறந்தது தமிழக அரசியலில் அடுத்த 50 ஆண்டுகாலம் வழி நடத்த வலிமையுள்ள தளபதி மற்றும் அவர் உடன்பிறந்தோர். அவருக்கு அரசியல் மீது காதல், அதனால் விளைந்தது அவரது தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்க்கும் மேலாக திராவிட ஆட்சிகள், அவருக்கு போர்களத்தின் மீது காதல், அதனால் பிறந்தது இது வரை 12 முறை சட்ட மன்ற உறுப்பினர், ஐந்து முறை முதல்வர், எதிர்கட்சி தலைவர் என பல பதவிகள், அவருக்கு தமிழர்கள் மீது காதல் அதனால் பிறந்தது நல்ல பல திட்டங்கள், தமிழர்களுக்கான சுய மரியாதை இன்னும் பல,

இன்பம்: அவருக்கு எப்போதும் இன்பம் என்பது இருக்கின்றதோ இல்லியோ அவரை காணும் தமிழர்களுக்கு அவர் முகத்தை காணும் தமிழர்களுக்கு இன்பம். ஏழைகளுக்கு இவரைக்கண்டால் சிரிப்பு. ஏழைகள் இவரால் பயன் பெற்றார்கள், ஏழைகள் இவரால் படித்தார்கள், ஏழைகள் இவரால் பணியில் அமர்த்தப்பட்டார்கள். அண்ணா சொன்னது போல இவர் ஏழையின் சிரிப்பினிலே இறைவனை கண்டார். அதனால் ஏழைகளின் சந்தோஷம், மகிழ்ச்சி, இன்பம் அவர்களை காணும் போதெல்லாம் இவருக்கும் தொற்றிக்கொள்ளும். ஆகவே இன்பம் கொண்டார் எப்போதும் இவர்.

துன்பம்: யாரோ எப்போதோ எப்படியோ செய்து விட்ட சில பல தவறுகளால் ஒட்டு மொத்த தமிழினம் அழிக்கப்பட்ட போதும் கையறுநிலையிலே பக்கத்தில் இருக்கும் நாம் இருக்கும் நிலை போல சில பல சமயங்களில் வரும் போதேல்லாம் துன்பம் அவரை தீயாய் சுடும். அதே போல தமிழன் உலகினில் எங்கெல்லாம் அவமானப்படுகின்றானோ அப்போதெல்லாம்  என் தலைவன் அணலில் விழுந்த அன்னமாய் துடிப்பதை நாங்கள் பார்த்து கொண்டு தானிருக்கின்றோம். துன்பம் இல்லா உலகினில் ஒரு துளி இடம் இருந்தால் சொல்லுங்கள். எம் தலைவனை அங்கே அமரவைத்து அழகு பார்க்கின்றோம்.

கோபம்: நவரசத்திலும் தலைவருக்கு பங்குண்டு என்றாலும் அவரின் கோவம் என்னும் குணம் கொஞ்சம் குறைவாகவே இருப்பதாக உணர்கின்றோம். யார் கண்டது தொண்டர்களிடம் அப்படி ஒரு தோற்றம் இருந்தாலும் ஒன்னரை கோடி உறுப்பினர் கொண்ட கட்சியின் தலைவனாக இருக்கும் போது, ஏழு கோடி தமிழர்களை ஆட்சி செய்த தலைமை பொறுப்பில் இருந்த போதும், குடும்பம், குழந்தை என தன் சொந்த விஷயங்களிலும் அவரது கோவம் எத்தனை வலியது என தொண்டர்கள் அறிய முடிவதில்லை. ஆனால் தொண்டர்களை, மக்களிடம் அவரது கோவம் என்பது யாரும் பார்த்தறியா குணம். "கலைஞர் கோபப்பட்டார்" என புனைவெழுதி புளகாங்கிதம் அடையும் புலன்விசாரணை பத்திரிக்கைகளை நாங்கள் சிரித்து விட்டு புறம்தள்ளி விடுவதே நடைமுறை!

கருணை: தன்னை வசைபாடுபவர்களை, ஊடகங்களை இவர் ஆட்சியில் இருந்த நேரத்திலும் இல்லாத நேரத்திலும் மன்னித்து அருள்வாரே அது தான் கருணை

அருவருப்பு: ஆம், நிறைய உண்டு. தலைவரிடம் அது நிறைய உண்டு. தன் பதினான்கு வயதில் தமிழ்க்கொடி ஏந்தி புறப்பட்ட அந்த புயல் சந்திக்காத இந்திய தலைவர்களே இல்லை என்னும் நிலையில் கால ஓட்டத்தில் நேருவோடு, லால்பகதூரோடு, இந்திரா, ஜெயப்ரகாஷ்நாராயணன், சஞ்சீவரெட்டி, வி வி கிரி, பஃக்ருதீன் அலிஅகமது, ஜெயில்சிங், நாராயணன், மொரார்ஜி, ஜகஜீவன்ராம், வாஜ்பாய், அத்வானி, பிஜுபட்நாயக் என அகில இந்திய அளவிலும் பின்னர் இங்கே ஜஸ்டிஸ்கட்சி, நீதிக்கட்சி தலைவர்கள் அதன் பரிணாமம் திராவிடர்கழக தலைவர்கள், பெரியார், அண்ணா, காமராசர், ராசாசி  என எல்லாம் அரசியல் செய்து அவர்களை ஆட்டிவித்து, அரவணைத்து, அழகுற பழகி அருமையான அரசியல் செய்த நம் தலைவர் இன்றோ கால ஓட்டத்தில் ஜெயா, விசயகாந்து , தா.பாண்டியன், சமீபத்தில் கூட யாரோ ஒரு வர்.. என்னவோ பெயர் ... சேகுவாரா பனியன் எல்லாம் போட்ட ஒருவர் சினிமா எல்லாம் கூட எடுப்பாரோ, நடிப்பாரோ தெரியலை அவர்கள் எல்லாம் "கருணாநிதியே உன்னை கேட்கிறேன்" என மேடையில் முயங்கும் போது (ஆமாம் எழுத்து பிழை இல்லை முயங்கும் தலைவர்கள் தான்) என் தலைவனுக்கு மட்டும் அல்ல தொண்டர்கள் எங்களுக்கும் அருவருப்பு தான் வருகின்றது. என்ன செய்யட்டும்? நவரசத்தில் இந்த ரசம் ஒரு துளி விஷம் தான்:-(

பயம்: பல சமயம் தலைவர் பயப்படுவது உண்டு. தமிழன் எப்போதும் மனசு இரக்கம் கொண்டவன். அதை பயன் படுத்தியே பெரியாரும், அண்ணாவும் ,அதன் பின்னே தலைவரும், ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களும் ஊட்டி வளர்த்த பகுத்தறிவு பாதை ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழன் மனதில் வந்து குடிபுகும் போதெல்லாம் கொஞ்சம் பயம் வரும் தலைவருக்கு. அதற்காக கலங்கியது இல்லை. உடனே களை எடுத்து விடும் பணியினை செய்து கொண்டே தான் இருப்பார்.

வீரம்: அன்னை அஞ்சுகம் தாய் பெற்றது ஒற்றை ஆண் மகவு அல்ல. அது ரெட்டை குழந்தை. ஒன்றின் பெயர் கருணாநிதி, மற்றும் ஒரு குழந்தைக்கு பெயர் வீரம். ஆமாம். கலைஞரின் கருவில் இருந்தே கூட வளரும் உடன்பிறப்பு தான் வீரம். தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கும் போதும், பாளையங்கோட்டையில் பாம்புகள், பல்லிகள் நடுவினில் தனிமை சிறையினில் கிடக்கும் போதும் அவருக்கு உற்ற தோழனாக, கூடப்பிறந்த பிறப்பாக உடன் இருப்பது இந்த வீரம் தான். இந்த என்பத்தி ஒன்பது வயது கிழ சிங்கம் சமீபத்தில் கர்ஜித்தது எப்போது தெரியுமா? "உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிடும்".. வீரமான அந்த கர்ஜனை இன்று என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்தி விட்டது தெரியுமா? தமிழக அரசியலை புரட்டி போட்டு விட்டது. அதன் தாக்கங்கள் சில. 1. 40 சதம் சீட் வேண்டும் என அஞ்சாமல் கேட்ட காங்கிரஸ் இன்று நிலைகுலைந்து போனது. அதன் முதல் நாள் வரை வாயை காதுவரை இழுத்து பேசிய இளங்கோவன்கள், யுவராசாக்கள் எங்கே போயினர் என தெரியவில்லை. இது வரை வேட்பாளர் யார் என தெரியவில்லை. சத்தியமூர்த்தி பவன் சண்டைமூர்த்தி பவன் ஆகியது.எல்லோரும் தனியாக தேர்தலை சந்திக்கும் போது அவர்கள் தனித்தனியாக சந்திக்கின்றனர். ஆமாம் எல்லா கோஷ்டியும் பிரிந்து போய் கிடக்கின்றன. ஆக இத்தனை நாள் அவர்கள் கட்சியின் ஒற்றுமை கூட என் தலைவனால் தான் சாத்தியம் என டெல்லிக்கு புரிந்து இருக்கும் இப்போது. 2. அதிமுக வலுவான கூட்டனியாக இருந்ததை ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதி பிரிக்கவோ, சேர்க்கவோ செய்ய முடியாத கூட்டணிகளை என் தலைவ்னின் ஒற்றை வார்த்தை கிழித்து போட்டு விட்டது. ஆமாம் அங்கே தேமுதிக தனியாக... எல்லாமே தனித்தனியாக ...புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது வந்து கட்டிக்கொள்ளுங்கள் என விசயகாந்து கூவியும் ராமகிருஷ்ணய்யர் மட்டுமே ஓடி வந்து ஒட்டி கொண்டார் அந்த நடிகர் மேல். நாம் தமிழர் எனும் லேபிள்காரர்கள் அதிமுகவின் "ரெண்டல்" கட்சியாகிப்போனது. தா.பாண்டியன் கட்சி "மெண்டல்" கட்சியாகிப்போனது. வைக்கோ கட்சி சைக்கோதனமாக புலம்பிக்கொண்டு இருக்கின்றது. மருத்துவர் அய்யாவோ வைத்தியம் தேவைப்படும் அளவு ஆகிவிட்டார்.
என் தலைவனின் வீரம் அந்த ஒற்றை அறிக்கை. அதிலே தமிழக அரசியலையே அசைக்க முடியும் என்கிற போது அந்த வீரத்தின் வீரியத்தை புரிந்துகொள்ளுங்கள்!

ஆச்சர்யம்: என் தலைவனுக்கு ஆச்சர்யமான சில விஷயங்கள் எப்போதும் நடந்து கொண்டே இருக்கும். சமீபத்திய உதாரணம், நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் முடிவுகள். ஏன் வெற்றிவாய்ப்பை இழந்தோம் என இன்னமும் காரணம் கண்டுபிடிக்க முடியா கேள்வி அவரிடம் ஒரு ஆச்சர்யம். அதை விடுங்கள். எங்களுக்கு அவர் மேல் ஒரு ஆச்சர்யம் உண்டு. அவருக்கு ஒரு குணம் உண்டு. அவர் இராமாயணகால வாலி போல. அவருக்கு எதிரே நின்று அவரை ஜெயிக்க முடியாது. எதிராளியின் பாதி பலம் இவருக்கு வந்துவிடும். இது எங்களுக்கு அவரைப்பற்றிய ஒரு ஆச்சர்யம். அதனால் தானோ என்னவோ ஆதிக்க சக்திகள் பலமுறை இவரை முதுகில் குத்தியே ஆரிய ராமன் போல வீழ்த்துகின்றன. ஆனாலும் இவர் ஒரு பீனிக்ஸ்போல. சாம்பலில் இருந்தும் வெளியே முழுமையாக வருவார். அதான் என் தலைவர்.இது மிகப்பெரிய ஆச்சர்யம் இவரைப்பற்றி!
இப்போது சொல்லுங்கள்! என் தலைவர் நவரசத்தலைவன் தானே?
அதே போல என் தலைவன் போல பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் என் தலைவன் போல உலகத்தில் ஒரு தலைவனை காண இயலுமா?

ஒருவன் வாழ்வில் பெறவேண்டிய பதினாறு செல்வங்கள் எவையென்பதை,

// "துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
அதிதானியம் செளபாக்கியம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை அறம்குலம் நோயின்மை பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே" //

என்ற காளமேகப்புலவரின் பாடல் நமக்குப் புலப்படுத்துகிறது.
அதாவது புகழ், கல்வி, வெற்றி, மக்கட்பேறு, துணிவு, செல்வம், மிகுந்த தானியம், சுகம், இன்பம், அறிவு, அழகு, புதிதுபுதிதாக ஏற்படக்கூடிய சிறப்புக்கள், அறவுணர்வுடைய குடிப்பிறப்பு, நோயற்ற வாழ்வு, நீண்ட வயது ஆகியவைகளே பதினாறு பேறுகள் ஆகும். இருந்தாலும் இவற்றினுள் சிறந்த பேறாகக் கருதப்படுவது மக்கட்பேறாகும்.

ஆமாம் என் தலைவன் எங்களுக்கு கொடுத்த பெரிய பாக்கியம் எங்கள் தளபதி. கருணாநிதி பெற்றெடுத்த "சுழல்நிதி" எங்கள் ஒய்வறியா சூரியன் எங்கள் தலைவர் தளபதி அவர்களை என் தலைவன் பெற்ற பதினாறு செல்வத்தில் பெரிய செல்வம் அல்லவா?

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற" என வள்ளுவன் சொன்னதைப்போல என் தளபதியை எங்களுக்கு கொடுத்த தலைவா நீ வாழ்க வாழ்க!!!!!

என் தலைவன் சமீபத்திய சட்டமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்துக்காக மயிலாடுதுறை வழியாக திருவாரூர் சென்ற போது ஒரு சாதாரண தொண்டனின் பார்வையில்  அவரது வருகையை சிலாகித்து நான் என் வலைப்பூவில் எழுதியதன் கடைசி பாரா. இது.


\ //  மதியம் 3.30க்கு 2728 என்கிற எண்ணுடைய ஒரு காரில் தலைவர் வந்தார். முன்பக்க சீட்டில் அமைச்சர் பொன்முடி இருக்க பின்பக்க சீட்டில் தலைவரும், கனிமொழியும் இருக்க கூட்டத்தை பார்த்து நிற்க குண்டாமணியும், லிங்கராஜனும் வந்து பொன்னாடை கொடுக்க அதை கனிமொழி வாங்கி பாதுகாப்பு போலீசாரிடம் கொடுக்க, அந்த இடமே கஜாமுஜான்னு ஆக தலைவர் வாழ்க என குரல் கொடுக்க தலைவர் கலைஞர் அதி அற்புதமான சிரித்த முகத்துடன் கையை காட்ட ஒட்டுமொத்த கூட்டமும் மெய்சிலிர்த்தது. சிலர் வாய்விட்டு அழுதனர் உணர்ச்சி மேலீட்டால். சிலர் தான் எப்படி வாழ்த்து சொல்கின்றோம் என்று தனக்கே தெரியாத அளவு இஷ்ட்டத்துக்கு வாழ்க வாழ்க என உணர்சி குவியலாய் கத்த தொடங்க தலைவரின் கான்வாய் மயிலாடுதுறையை கடந்து சென்றது.

"அப்பாடா சாவதுக்குள்ள தலைவரை கிட்டத்துல பார்க்கனும்னு இருந்தேன். பார்த்துட்டேன்" என சொன்ன ஒருவருக்கு வயது 50 இருக்கும். அவரை பக்கத்தில் இருந்தவர் முறைக்க "நான் என்னை சொன்னேன். நான் சாவறத்துக்குள்ள " என அவர் திருத்தி சொன்னார். ஒட்டு மொத்த கூட்டமும் கலைந்து சென்றது. ஒருவன் சத்தமாக பேசிக்கொண்டே போனான். தலைவரு இந்த பீரியட் முதல்வரா முடிக்கும் போது 92 வயசு ஆகியிருக்கும். 7 வது முறை முதல்வரா இருந்து முடிக்கும் போது 97 ஆகியிருக்கும். அப்படின்னா அவரது நூற்றாண்டு விழாவுல அவரு எட்டாவது முறையா முதல்வராக இருப்பாரு. சூப்பர்டா.." என சொல்லிக்கொண்டே போனான். இதான் திமுக தொண்டன். தலைவர் சாவிற்க்கு அப்பாற்பட்டவர் என்ற எண்ணம் வலுவாக இருக்கின்றது. ஆச்சர்யப்பட எதும் இல்லை. இருப்பார். அவரது நூற்றாண்டை முதல்வராக தானே இருந்து நடத்துவார். வாழ்க கலைஞர்.வாழ்க கலைஞர். வாழ்க வாழ்கவே!!!\\\\\\\\\\\\\\\

 இது தான் அந்த கடைசி பத்தி அந்த பதிவினில். அதன் லிங் இதோ இது தான் http://abiappa.blogspot.com/2011/03/blog-post_24.html
என் தலைவனைப்பற்றி எழுத இந்த ஒரு பதிவு போதுமா? இணையத்தின் ஒட்டு மொத்த இடமும் கொடுத்தாலும் எழுதித்தீர்க்க முடியுமா?

June 3, 2013

திருவாரூரில் இருந்து வந்த மஞ்சள் பை மகான் என்போரே...... மகா கோடீஸ்வரன் என்போரே......








இரு நாட்கள் முன்பாக என் முகநூலில் ஒரு கீழுள்ளது போல ஒரு நிலைத்தகவலிட்டிருந்தேன்.


\\ எனக்கு ஒரு பின்னூட்டம் வந்தது. "மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி?"... சபாஷ்... எனக்கு ஜுன் 3 பதிவுக்கு தலைப்பு இல்லையே என கவலைப்பட்டேன். தலைப்பு கொடுத்த தோழருக்கு நன்றிகள். தலைப்பு... "மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி?"... இது எப்டி இருக்கு????\\


இது போல ஒரு எதிர்மறை தலைப்பு வைக்க நினைத்த காரணம்.... கலைஞரை வசைபாடும் கூட்டமும் வந்து பார்க்கட்டுமே என்பது ஒரு பக்கம். அடுத்து கலைஞரை வசைபாடும் கூட்டம் எப்போதும் கலைஞர் ஒரு மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் எறி திருவாரூரில் இருந்து வந்து இன்று கோடீஸ்வரன் ஆனது எப்படி என அரைத்த மாவை அரைக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதனால் தான். எதிர்மறை தலைப்பு வைத்தால் அந்த வசவாளர்கள் கூகிள் தேடுதளத்தில் தேடும் போது இந்த பதிவு சுலபமாய் கிடைக்கும் என்பதால் மட்டுமே. ஆனாலும் நாளை 90 ம் பிறந்த தினம் காண இருக்கும் தமிழின தலைவரை குறித்து எழுதும் போது எதிர்மறை தலைப்பு வேண்டாம் என் மனது சொன்னதால் மாற்றி விட்டேன்.


அது என்ன மஞ்சள் பை, திருட்டு ரயில்,ஆதாரம் என்ன  என அவர்களிடம் கேட்டோமானால் உடனே கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்னும் புத்தகத்தை சொல்வார்கள். கண்ணதாசன் என்ன இந்திய சட்டம் எழுதிய அண்ணல் அம்பேத்காரா? அல்லது சத்திய சோதனை வடித்த மகாத்மா காந்தியா? உலகில் ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என ஒரு உதாரணம் வேண்டுவோர் உடனே குறிப்பிட வேண்டிய ஒரு புழு. மிகச்சிறந்த கவிதை வடித்திருக்கின்றாரே என கேட்போர்களுக்கு ஒரே வரி பதில் சொல்வேன். குப்பையில் இருந்து மின்சாரம் கிடைக்கின்றதாம். அதற்காக குப்பையை அள்ளி தலையிலே போட்டுக்கொள்ள முடியும்? கலைஞரே ஒரு முறை சொல்லிவிட்டார். நான் ரயிலில் வரும் போது பக்கத்து இருக்கையில் அமர்ந்து வந்தவர்கள் போல பேசுகின்றனர் என அந்த பேச்சுகளை புறம் தள்ளிவிட்டு போய்விட்டார்.


அவர்களிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி. கலைஞர் மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட தன் மூளையை கழட்டி திருவாரூர் கமலாலயத்தில் வீசி விட்டா வந்தார். அவர் பிறந்தது 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி. 1944ல் தன் இருபதாவது வயதில் ஜூபிடர் பிக்சர்ஸ்ல் கதாசிரியராக வேலைக்கு சேர்ந்து விட்டார். இன்றைக்கு இதே கலைஞரை வசைபாடும் கழுதைக்கூட்டத்தில் யராவது தன் 20 வயதில் சுய சம்பாதித்யம் சம்பாதித்தது உண்டா என தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். தன் அப்பன் காசில் வாழும் ஊதாரிகள் வசைபாட கலைஞர் தான் கிடைத்தாரா?

அவர் அரசங்க உத்யோகத்தில் வேலைக்கு சேர்ந்த அண்டு 1957ம் ஆண்டு தான். ஆம் சட்ட மன்ற உறுப்பின்ராக. ஒரு அரசாங்க உத்யோகத்தில் சேருபவர் மிக அதிக பட்சமாக மிக மிக அதிக பட்சமாக 42 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். ஆனால் 1957ல் அரசாங்க சம்பளம் வாங்க ஆரம்பித்த இவர் இன்று தன் 90 வயது ஆகிவிட்ட நிலையில் கூட கிட்ட தட்ட அர நூற்றாண்டுகள் கடந்தும் 56 வருடங்களாக அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டுள்ளார். இதில் ஐந்து முறை முதல்வராக சட்ட மன்ற சம்பளத்தில் அதிகப்படியன சம்பளம் வாங்கியுள்ளார். இவர் வாங்கும் அரசாங்க சம்பளம் என்பது இன்று ஐடி துறையில் பணி செய்வோர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம். ஒரு வருடத்தில் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களே உடனே ஒரு கார், சொந்த வீடு என சுபிட்சமாக இருக்கும் போது 56 வருடங்கள் அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டு இருக்கும் இவர் கோடீஸ்வரனாக இருக்க கூடாதா என்ன?


சரி போகட்டும். அரசாங்க உத்யோகம் இவருக்கு கைகூடும் முன்னர் என்ன செய்தாரெனில் அந்த பொறாமை கொண்ட வசவாளர்கள் சொல்வது போல மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட இவர் தன் 20 வது வயதில் திரைத்துறைக்கு வந்து தன் 24 வது வயதில் ராஜகுமாரி என்னும் படத்துக்கே வசனம் எழுத ஆரம்பித்து விட்டார். அது தான் எம் ஜி ஆர் அவர்களுக்கும் முதல் படம். தன் 28 வது வயதில் இவர் எழுதிய பராசக்தி படம் திரையுலகில் ஒரு திருப்பு முனை படம். அந்த படத்தின் சம்பளம் எல்லாம் வாங்கி எல்லாம் முடிந்த பின்னர் அதன் வசனங்கள் மட்டும் சிறிய புத்தகமாக போட்டு விற்பனை செய்யலாம் என ஏ வி எம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்து இவரிடம் அனுமதி கேட்ட போது இவர் அதற்காக கேட்ட தொகை என்பது முழு பத்தாயிரம் ரூபாய். அப்போது ஒரு சவரன் 20 ரூபாய் என்னும் போது இப்போது அந்த பத்தாயிரம் ருபாய்க்கு என்ன மதிப்பு என கணக்கிட்டு கொள்ளுங்கள். அப்போது ஒரு ப்யூக் கார் விலையே 7000 ரூபாய் மட்டுமே. அப்போதே கார் வாங்கி விட்டார். எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோர் கதாநாயகனாக அப்போது நடித்துக்கொண்டு இருந்த போதே அத்தனை சம்பளம் வாங்கியது இல்லை. தான் 1957ல் சட்ட மன்ற உறுப்பினர் ஆகும் முன்னரே 30000 (முப்பதாயிரம் ரூபாய்)க்கு தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார். (அதையும் இப்போது தன் 87ம் பிறந்த நாளின் போது தன் காலத்துக்கு பின்னர் ஏழைகளுக்கான மருத்துவமனையாக ஆகும் படி அஞ்சுகம் ட்ரஸ்டுக்கு எழுதி வைத்து விட்டார்)


இவர் திரைத்துறையில் சம்பாதிக்க  பணம் எடுத்துக்கொண்டு திருவாரூரில் இருந்து வரவேண்டும் என்பதில்லையே. அந்த மஞ்சள் பையில் ஒரு பேனாவும் அதில் நிறைய இங்க்ம், தன் மூளையும் மட்டுமே மூலதனமாக போதுமே. 1960ல் மேகலா பிக்சர்ஸ் என்னும் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ஆக 1944 முதல் 1960 வரை தன் மூளையை மூலதனமாக கொண்டு சம்பதித்ததை மேலும் அதிகரிக்க சொந்த பட தயாரிப்பு நிறுவனமே தொடங்கி விட்டார். பின்னர் பூம்புகார் புரடக்ஷன்ஸ். இதும் அவரது சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தான். பின் ஏன் அவர் கோடீஸ்வரன் ஆக மாட்டார்? கலைஞர் திரைப்பட துறையில் மட்டுமா சம்பாதித்தார். இல்லை. தன் எழுத்துகளை புத்தகமாக்கினார். நாடகம் ஆக்கினார். அவர் தொட்ட துறை எல்லாமே நிதியை அள்ளி கொடுத்தன. அவர் அன்று மட்டுமல்ல. இதோ இன்று தன் 90 வது வயதில் எழுதிய இரு புத்தகங்கள் ஒரே நாளில் இவர் புத்தக வெளியீட்டு மேடையை விட்டு இறங்கும் முன்னரே 15 லட்சத்தில் 74 ஆயிரத்துக்கு விற்று தீர்ந்தது. அவர் ஏன் கோடீஸ்வரன் ஆக மாட்டார்?


கலைஞர் திரைத்துறையில் பணியாற்றினார் பணியாற்றினார் என்று மட்டுமே தெரிந்த நமக்கு அவர் எத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளார் என்னும் விபரத்தை சௌம்யா தியேட்டர்ஸ் உரிமையாளரும், வசனகர்த்தா, பாடலாசிரியர், சினிமா தயாரிப்பாளர், நாடக நடிகர், பத்திரிக்கையாளர் என பன்முக கலைஞர் திரு. டி. வி. ராதாகிருஷ்ணன் ஒரு 8 பாகங்களாக தன் வலைப்பூவில் எழுதி பின்னர் "அகநாழிகை" பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டு கலைஞரின் 87ஆம் அகவையில் வெளியிடப்பட்டு செம்மொழி மாநாட்டில் அகநாழிகை பதிப்பகத்தாரால் பலருக்கு இலவசமாக (செம்மொழி மாநாட்டை முன்னிட்டு) வழங்கப்பட்டது. நூலின் விலை 20 ரூபாய் மட்டுமே. கிடைக்குமிடம் "அகநாழிகை பதிப்ப்கம்", 33, மண்டபம் தெரு, மதுராந்தகம், பின்: 603 306 , போன்: 999 4541010.  மிக்க நன்றி திரு. டி வி.இராதாகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கும், அகநாழிகை பதிப்பக உரிமையாளர் திரு அகநழிகை வாசுதேவன் அவர்களுக்கும்!


இதோ அந்த நூலில் இருக்கும் கலைஞர் அவர்களின் திரையுலக பங்களிப்பை விரிவாக காணுங்கள்.

**********************************************************

கலைஞர் அவர்கள் கிட்டத்தட்ட 70 படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார்.கதை,திரைக்கதை,வசனம் இருபது படங்களுக்கு எழுதி இருக்கிறார்.கதை,திரைக்கதை இரு படங்களுக்கு எழுதி இருக்கிறார். திரைக்கதை,வசனம் முப்பத்தி மூன்று படங்களுக்கு எழுதி இருக்கிறார்.நான்கு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.பதினெட்டு படங்களில் பாடல் எழுதியுள்ளார்.

.1924ல் பிறந்த கலைஞர் வசனத்தில் வந்த முதல் படம் 1947ல்..அதாவது அவரின் 23ஆம் வயதில் வந்த படம் ராஜகுமாரி.1948ல் அபிமன்யூ படம்.

ராஜகுமாரி ஜூபிடெர் பிக்சர்ஸ் எடுத்தபடம்..எம்.ஜி.ஆர்., நடித்துள்ளார்.


1948ல் வந்த அபிமன்யூவில் அவர் பெயர் டைடில் கார்டில் போடவில்லை..என்பது கலைஞருக்கு வருத்தம் ஏற்படுத்திய நிகழ்ச்சி.

1950ல் மருத நாட்டு இளவரசி..எம்.ஜி.ஆர்., ஜானகி நடித்தது..

1950ல் வந்த இன்னொரு படம் மந்திரிகுமாரி..இப்படத்தில்..'என் எருமைக் கன்னுக்குட்டி'என்ற பாடலும் எழுதி..பாடலாசிரியர் ஆனார் கருணாநிதி


1951ல் தேவகி..கலைஞரின் அருமையான வசனங்கள்..எம்.ஜி.ஆர்., பத்மினி நடித்த படம் இப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பிச்சைக்காரனாக சிறு வேடத்தில் நடித்திருப்பார்.

இப்படத்தில் வரும் ஒரு வசனம் "பெரியம்மா குத்துவிளக்கு , சின்னம்மா எலெக்டிரிக் விளக்கு" இப்படத்திற்கு ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார்.


1951 மணமகள் இப்படத் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார்.திரைக்கதை கலைஞர்.எஸ்.வி.சகஸ்ரநாமம்,என்.எஸ்.கே.,லலிதா,பத்மினி ஆகியோர் நடித்துள்ளனர்.


1952ல் தமிழ்த் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் பராசக்தி.தயாரிப்பு பி.ஏ.பெருமாள், மற்றும் ஏ.வி.எம்., நிறுவனம்.சுதர்சனம் இசை.வி.சி. கணேசனுடன்..எஸ்.எஸ்.ஆருக்கும் முதல் படம்.கலைஞரின் இப்படத்திற்கான வசனம் எங்கும் பேசப்பட்டது.வசனத்திற்கான இசைத்தட்டு வெளியாகி சக்கைப் போடு போட்டது.நீதிமன்ற வசனங்கள் அப்போது அனைவருக்கும் மனப்பாடம்.கலைஞரின் அன்றைய ஒரு வசனம்..சமீபத்தில் காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் விஷயத்தில் இன்றும் பொருந்துகிறது.


'பூசாரியைத் தாக்கினேன்..பக்திக்காக இல்லை..அந்த பக்தி பகல் வேஷம் ஆகிவிடக் கூடாதே என்று'

அப்படத்தில்..'கா..கா..' என்ற பாடலும்..'பூமாலை நீ ஏன் மண்மீது வந்தேன் பிறந்தாய்' என்ற பாடல்கள் கலைஞர் எழுதியது.
மாபெரும் வெற்றி பெற்ற அப்படம் 42 வாரங்கள் ஓடியது.


52ல் வந்த மற்றொரு வெற்றி படம் 'பணம்'
என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் வந்த இப்படத்திற்கான திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி கணேசன் கதாநாயகன்.இசை விஸ்வனாதன் - ராமமூர்த்தி


53ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் 'திரும்பிப்பார்'
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.டி.ஆர்.சுந்தரம் இயக்கம்.சிவாஜிக்கு நெகடிவ் பாத்திரம்.இப்படத்தில் அரசியல் நையாண்டி வசனங்கள் அதிகம்.இச்சமயம்..நேரு..தி.மு.க., கட்சியைப் பற்றி அடித்த கமெண்ட் 'நான்சென்ஸ்'என்று.இப்படத்தில்..நேருவைப்போல கறுப்பு கண்ணாடி அணிந்து சிவாஜி அவ்வார்த்தையை அடிக்கடி கூறுவார்.பண்டரிபாய்,தங்கவேலு ஆகியோர் உடன் நடித்திருந்தனர். படம் வெளிவந்து 57 ஆண்டுகள் ஆகியும்..இன்னும் பாத்திரத்தின் பெயர் மனதில் நிற்கிறது என்றால்..அதற்கு கலைஞரே காரணம்.

பராசக்தியில்..சிவாஜியின் பெயர் குணசேகரன்,ஸ்ரீரஞ்சனி பெயர் கல்யாணி. திரும்பிப்பாரில் சிவாஜி பெயர் பரந்தாமன்.


1953 ல் வந்த படம் 'நாம்'

ஏ.காசிலிங்கமும்..கலைஞரின் மேகலா பிக்சர்ஸும் சேர்ந்து எடுத்த படம்.எம்.ஜி.ஆர்., பி.கே.சரஸ்வதி நடித்தபடம்.

இப்படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரை பி.எஸ்.வீரப்பா காலால் உதைப்பது போன்ற காட்சி வரும்..பாத்திரத்தின் தன்மையை அறிந்த மக்கள் அதை அன்று ஏற்றுக் கொண்டனர்.

1954ல் வந்த படங்கள்

மனோகரா..ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு . வசனம் கலைஞர். எல்.வி.பிரசாத் இயக்கம்.சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்., கண்ணாம்பா,டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோர் நடித்தது.கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணாம்பா பேசும் வசனங்கள்..அருமை.இதே கதை பம்மல் சம்பந்த முதலியார் நாடகமாகப் போட்டபோது சிவாஜி நாடகத்தில் பெண் வேஷத்தில் நடித்தாராம்.


அதே ஆண்டு..அதிகம் பேசவைத்த மற்றொரு படம் "மலைக்கள்ளன்".கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை கதைக்கு கலைஞர் திரைக்கதை,வசனம் எழுதி இருந்தார்.இந்திய அரசின் முதல் வெள்ளிப் பதக்கம் பெற்ற படம்.எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்கம்.


அடுத்து "அம்மையப்பன்.".எஸ்.எஸ்.ஆர்., ஜி.சகுந்தலா ஆகியோர் நடித்துள்ளனர்.கதை கலைஞர்..இசை டி.ஆர்.பாப்பா இயக்கம்..ஏ.பீம்சிங்

1956ல் வந்த படங்கள்

"ராஜாராணி"..சிவாஜி,பத்மினி நடித்தது.இதில் என்.எஸ்.கே.அவர்களின் பலவித சிரிப்பு பற்றிய பாடல் இடம் பெற்றது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..சிவாஜி ஒரு கட்சியில் சேரன் செங்குட்டுவனாக 16 பக்கங்கள் வசனத்தை ஒரே டேக்கில் நடித்தாராம்.

"ரங்கோன் ராதா"...அறிஞர் அண்ணாவின் கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி,பானுமதி நடித்தது.இப்படத்தில் கலைஞர் எழுதி இருந்த 'பொது நலம்' பாடல் ஹிட்.அதிலிருந்து சில வரிகள்

\\ திண்ணை தூங்கி பண்டாரம்

திருவோடு ஏந்தும் பரதேசி

தெருவில உருளும்

திருப்பதி கோவிந்தா..கோவிந்தா

இந்த சோம்பேறி நடைப்பிணங்களுக்கு

உயிர் கொடுக்கும் மருந்து..நல்ல மருந்து பொது நலம்

என்றும் எதிலும் பொதுநலம் \\



1957ல்

புதையல்..சிவாஜி,பத்மினி நடித்தது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்.படம் ஹிட்.விண்ணோடும் முகிலோடும் பாடல் இடம் பெற்ற படம்.விஸ்வனாதன் ராமமூர்த்தி இசை.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கம் புதுமைப்பித்தன்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..எம்.ஜி.ஆர்., நடித்திருந்தார்.இயக்கம் டி.ஆர்.ராமண்ணா


1960ல் வந்த படம் குறவஞ்சி..

இதில் சிவாஜி, சாவித்திரி நடித்திருந்தனர்,கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.காசிலிங்கம் இயக்கம்.டி.ஆர்.பாப்பா இசை.கலைஞர் வசனத்தில் வந்த இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியடையவில்லை.

1960ல் வந்த மற்றொரு படம் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' ஜெமினி,சரோஜாதேவி நடித்தது.ஜூபிடர் பிக்சர்ஸ் தயரித்த இப்படம் டி.பிரகாஷ்ராவ் இயக்கம்.இசை விஸ்வனாதன் ராமமூர்த்தி


1961ல் வந்த படம் தாயில்லாப்பிள்ளை.இப்படத்தின் இயக்குநர் எல்.வி.பிரசாத்..கே,வி.மகாதேவன் இசை.பாலையா,எஸ்.ராமாராவ் ..காமெடி நன்றாக இருக்கும்.பிராமணரல்லா ராமராவ்..பிராமணப்பெண்ணை மணப்பார்.ஆனால் அவர்கள் மாப்பிள்ளை பிராம்மணர் என்று வெளியே கூறுவர்.இதைவைத்தே தன் காரியங்களை ராமராவ் சாதித்துக் கொள்வார்..திரைக்கதை,வசனம் கலைஞர்.


1961ல் வந்த மற்ற படம் 'அரசிளங்குமரி'..எம்.ஜி.ஆர்.,பத்மினி நடித்தபடம்,ஜி,ராமநாதன் இசை., எம்.சோமசுந்தரம் இயக்கம்..தயாரிப்பு ஏ.எஸ்.ஏ.சாமி...கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்..இப்படத்தில் பட்டுக்கோட்டயாரின் 'சின்னப்பயலே..சின்னப்பயலே..'என்ற அருமையான பாடல் உண்டு.

1963ல் வந்த படம் இருவர் உள்ளம்..சிவாஜி,சரோஜாதேவி நடித்தது.பிரபல நாவலாசிரியை லட்சுமியின் பெண்மனம் என்ற நாவலைத் தழுவியது.திரைக்கதை வசனம் கலைஞர்.இயக்கம் எல்.வி.பிரசாத்..கே.வி.மகாதெவன் இசை.எல்லாப் பாடல்களிலும்..இனிமையும்..இளமையும் இருக்கும்..எம்.ஆர்.ராதாவின் வக்கீல் காமெடி..வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்..அருமையான படம்.

1963ல் வந்த மற்றொரு படம் காஞ்சித்தலைவன்..கே.வி.மகாதேவன் இசை.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..இந்த படம் தணிக்கையிலிருந்து பல வெட்டுகளுடன் தப்பியது.அண்ணாவையே காஞ்சித்தலைவன் என்று சொல்வதாக சொல்லப்பட்டது தணிக்கைத் தரப்பு. .எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தனர்.படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

1964ல் கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம் பூம்புகார்..எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி நடித்தது.சுதர்சனம் இசை..கலைஞர் திரைக்கதை,வசனம்..கவுந்தி அடிகளாக கே.பி.சுந்தராம்பாள் நீண்ட நாட்களுக்குப் பின் திரையில் தோன்றினார்.அவரது கணீர் குரலில்..கலைஞரின்..'வாழ்க்கை என்னும் ஓடம்' பாடல் இடம் பெற்றது.வெற்றி படம்.

1965 விஜயகுமாரி நடிக்க மேகலா பிக்சர்ஸ் படம்..பூமாலை..கலைஞர் கதை திரைக்கதை, வசனம்.

1966ல் வந்த படம் அவன் பித்தனா...இசை ஆர்.பார்த்தசாரதி..எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தார்...'இறைவன் இருக்கின்றானா' என்ற பாடல் பிரசித்தம்.படத்தின் திரைக்கதை, வசனம் கலைஞர்.

1966ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் மறக்கமுடியுமா? கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் எஸ்.எஸ்.ஆர்., தேவிகா நடித்திருந்தார்கள்.முரசொலி மாறன் இயக்கம்.திரைக்கதை வசனம் கலைஞர்.படத்தின் இசை அமைப்பாளர் ராமமூர்த்தி..படத்தில் ஒரு முக்கிய இடத்தில் பாடல் ஒன்று தேவைப்பட்டது.பாடலாசிரியர் மாயவநாதன் எழுதுவதாய் இருந்தது.ராமமூர்த்திக்கு திருப்தி ஏற்படவில்லை.எப்படித்தான் வேண்டும்..என மாயவநாதன் கேட்க..சற்று கோபத்தில் இருந்த ராமமுர்த்தி..'மாயவநாதா..மாயவநாதா..மாயவநாதா..' ன்னு எழுது என்றாராம்.இதனால் மாயவனாதன் கோபித்துக் கொண்டு போய்விட..விஷயம் அறிந்த கலைஞர்..தானே அதே போல் பாடல் இயற்றினாராம்.அதுதான் பி.சுசீலா பாடி பிரபலமான 'காகித ஓடம்..கடலலைமீது..போவது போல...மூவரும் போவோம்' என்ற பாடல்.


1966ஆம் வருடம் வந்த படம்..மணிமகுடம்..எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.முன்னர் நாடகமாக நடித்துக் கொண்டிருந்த கதை.இசை சுதர்ஸனம்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்

1967ல் வந்த படம் தங்கத்தம்பி..ரவிச்சந்திரன்,பாரதி நடிப்பு.இசை கே.வி.மகாதேவன்..திரைக்கதை வசனம் கலைஞர்


1967ல் வந்த மற்றொரு படம் வாலிப விருந்து.மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.அண்ணாவின் கதைக்கு கலைஞர் வசனம்.முரசொலி மாறன் இயக்கம்.ரவிச்சந்திரன்,பாரதி,சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.சந்திரபாபு பாடிய 'ஒன்றைக்கண்ணு டோரியா' என்ற பாடல் ஹிட்.


1970ல் மேகலா பிக்சர்ஸ் எடுத்த படம் எங்கள் தங்கம்..எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.கலைஞர் கதை..கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்...இசை விஸ்வநாதன்.

இந்த தொடர் பதிவு தொடரும் முன் 1970ல் எங்கள் தங்கம் படம் வெளிவந்த பின்..சிறிது சிறிதாக எம்.ஜி.ஆர்., கருணாநிதி உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் இப்படம் எடுத்த பின்னர்..மாறன்..இனி படங்களே எடுக்கப்போவதில்லை என்று சலிப்புடன் கூறினார்.


1972ல் எம்.ஜி.ஆருக்கு மாற்றாக கலைஞரின் மகன் மு.க. முத்து வை கதாநாயகனாக அறிமுகம் செய்வித்தார் கலைஞர்.எம்.ஜி.ஆர்., பாணியிலேயே ந்டிக்க ஆரம்பித்த முத்து..சொந்தக்குரலில் வேறு பாடினார்.மேகலா பிக்சர்ஸ் 'பிள்ளையோ பிள்ளை' முதுவின் முதல் படம்.லட்சுமி நாயகி.இப்படத்தில்..'உயர்ந்த இடத்தில் நான்..ஓய்வில்லாமல் உழைப்பவன் நான்' என்ற பாடலுடன் முத்து அறிமுகம் ஆவார்.

அப்படத்தில் வாலி எழுதிய மற்றொரு பாடல் 'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ..நீ மூவேந்தர் வழி வந்த மன்னவரோ..' என்ற பாடலும் உண்டு.

ஒருநாள் எம்.ஜி.ஆர்., வாலியுடன் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபடியே..வாலி..நீங்கள் இப்படி பாட்டு எழுதியது சரியா? மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா? என்று கேட்டு..வருத்தப் பட்டாராம்..ஆனால் வாலி அதற்குக் கூரிய பதில் எதையும் அவர் ஏற்கவில்லையாம்.


பின்னர்..டி.என்.பாலு வசனத்தில் முத்துவின் "பூக்காரி "வந்தது.

கலைஞர் கதை மட்டும் எழுத "அணையா விளக்கு" வந்தது

பிறகு வேறு சில படங்கள் வந்தாலும்..முத்து எதிர்ப்பார்த்த அளவிற்கு பின்னால் சோபிக்கவில்லை.

1978ல் வந்த படம் வண்டிக்காரன் மகன்..மேகலா பிக்சர்ஸிற்கு பதிலாக பூம்புகார் புரடக்ஷன்ஸ் பெயரில் வந்த படம்.திரைக்கதை,வசனம் கலைஞர்.ஜெயஷங்கர்,ஜெயலலிதா நடித்த இப்படத்திற்கு இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.


1979ல் வந்த படம் நெஞ்சுக்கு நீதி..கதை திரைக்கதை வசனம் கலை ஞர்..ஜெயஷங்கர்,சங்கீதா நடிப்பில்..ஷங்கர்-கணேஷ் இசையில் வந்த இப்படத்தின் இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு


1979ல் வந்த மற்றொரு படம் ஆடு பாம்பே..பூம்புகார் புரடக்சன்ஸ்..அமிர்தம் இயக்கம் கதை,திரைக்கதை,வசனம் கலைஞர் அமிர்தம் இயக்கம்


1981ல் வந்த படம் குலக்கொழுந்து..தயாரிப்பு ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்..ஜெயஷங்கர்,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இயக்குநர் ராமண்ணா..இசை விஸ்வநாதன்


1981ல் வந்த இன்னொரு படம் மாடி வீட்டு ஏழை..சிவாஜி,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.திரைக்கதை வசனம் கலைஞர்.பூம்புகார் தயாரிப்பு.


1982ல் கலைஞர் கதை திரைக்கதை வசனத்தில் வந்த படம் தூக்குமேடை

1983ல் இது எங்க நாடு..படம் வெளியானது.ராம நாராயணன் இயக்கம் சுரேஷ்,சுலக்க்ஷனா நடிப்பு.


1984ல் திருட்டு ராஜாக்கள்..பூம்புகார் தயாரிப்பு.ராமநாராயணன் இயக்கம்.


1984 காவல் கைதிகள் ..பூம்புகார் புரடக்ஷன்ஸ் தயாரிப்பு..ராம நாராயணன் இயக்கம்.

1985ல் குற்றவாளி என்ற படம் வந்தது.ராம நாராயணன் இயக்கம்.பூம்புகார் தயாரிப்பு.ரவீந்தர்,விஜி நடிப்பு

1986ல் பூம்புகார் தயாரிப்பில் காகித ஓடம் வந்தது. ராம நாராயணன் இயக்கம்.பூம்புகார் தயாரிப்பு.


1986ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் பாலைவன ரோஜாக்கள்..பூம்புகார் தயாரிப்பு..மணிவண்ணன் இயக்கம்.இளையராஜா இசை.பிரபு,நளினி நடித்தது.


1987ல் நீதிக்கு தண்டனை. கலைஞர் திரைக்கதை வசனத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சங்கர்-கணேஷ் இசையில் நிழல்கள் ரவி,ராதிகா நடித்தது.


1987ல் வந்த மற்றொரு படம் ஒரே ரத்தம்.கார்த்திக்,ராதா நடிக்க கே,சொர்ணம் இயக்கம்


1987ல் வந்த படம் வீரன் வேலுத்தம்பி.கலைஞர் திரைக்கதை வசனம் ராம நாராயணன் இயக்கம்.ராதரவி நடிப்பு. இசை எஸ்.ஏ. ராஜ்குமார்.


1987ல் வந்த படம் சட்டம் ஒரு விளையாட்டு.எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கம்.விஜய்காந்த் நடிக்க திரைக்கதை வசனம் கலைஞர்


1987ல் புயல் பாடும் பாட்டு.பூம்புகார் தயாரிப்பு.மணிவண்ணன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை வசனம் இளைய ராஜா இயக்கம்.



1987ல் நான்கு படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் கலைஞர்,இது ஒரு சாதனை.



1988 மக்கள் ஆணையிட்டால் ராம நாராயணன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை வசம்.விஜய்காந்த் நடித்தது.இசை எஸ்.ஏ. ராஜ்குமார்.



1988 பாசப்பறவைகள் வி.எம்.சி.ஹனிஃபா இயக்கம்.இளையராஜா இசை.திரைக்கதை வசனம் கலைஞர்.சிவகுமார்,லட்சுமி,ராதிகா நடித்தது.



1988ல் வந்த மற்றொரு படம் இது எங்கள் நீதி.கலைஞர் திரைக்கதை,வசனம்.எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கம் இளையராஜா இசை.

1988ல் வந்த படம் பாடாத தேனீக்கள்.பூம்புகார் தயாரிப்பு.இளையராஜா இசை,சிவகுமார்,அம்பிகா நடித்திருந்தனர்.



1989ல் வந்த படம் தென்றல் சுடும்..ராதிகா,நிழல்கள் ரவி நடிக்க மனோபாலா இயக்கம்



1989ல் வந்த மற்றொரு படம் பொறுத்தது போதும்..பி.கலைமணி இயக்கம்.விஜய்காந்த் நடித்தது..இளையராஜா இசை



1989ல் வந்த படம் நியாயத் தராசு.கே.ராஜேஷ்வர் இயக்கம்.மேனகா பிக்சர்ஸ் தயாரிப்பு.நிழல்கள் ரவி,ராதா நடிக்க சங்கர்-கணேஷ் இசை



1989ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் ஹனீஃபா இயக்கத்தில் சிவகுமார்,ராதிகா நடிக்க இளைய ராஜா இசையில் பூம்புகார் தயாரிப்பு பாச மழை



1990ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் பிரபு,நிரோஷா நடிக்க இளையராஜா இசையில் சந்தான பாரதி இயக்கத்தில் வந்த படம் காவலுக்கு கெட்டிக்காரன்



1993ல் வந்த படம் மதுரை மீனாட்சி.கலைஞர் திரைக்கதை, வசனம்



1996ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் செல்வா,சுகன்யா நடிக்க வந்த படம் புதிய பராசக்தி



பின் 9 ஆண்டுகள் கழித்து 2005ல் வந்த படம்..கண்ணம்மா..கலைஞர் கதை வசனத்தில் பிரேம் குமார்,மீனா நடிக்க எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாபா இயக்கத்தில் வந்த படம்



2008ல் வினீத்,கீர்த்தி சாவ்லா நடிக்க கலைஞர் திரைக்கதை,வசனத்தில் இளையராஜா இசையில் இளவேனில் இயக்கத்தில் வந்த படம் உளியின் ஓசை



அதன் பின்னர் மீரா ஜஸ்மின் நடித்த  பெண் சிங்கம்,பின்னர் பிரசாந்த் நடிக்க பொன்னர் சங்கர் வந்தது.



தவிர மனோகரா(1954) தெலுங்கு,ஹிந்தி திரைக்கதை கலைஞருடையது.பராசக்தி(1957) தெலுங்கு திரைக்கதை கலைஞருடையது



1951ல் ஆடா ஜென்மா,தெலுங்கு(தேவகி)1957ல் வீர கங்கனம் தெலுங்கு (மந்திரிகுமாரி)1967ல் ஸ்திரீ ஜன்மா தெலுங்கு (பூமாலை) ஆகிய படங்களுக்கு கதை,திரைக்கதை கலைஞருடையது.



இடைவிடாமல் 90 வயது இளைய கலைஞர் இன்னமும் கலைத்துறைக்கு ஆற்றிவரும் தொண்டு பாராட்டுக்குரியது.



இதே கலைஞர் அவர்கள் திரைத்துறையில் மட்டுமா ஜொலித்தார்.



நெஞ்சுக்கு நீதி 5ம் பாகம் வெளியீடு  ஜூன் 2, 2013

ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், வெள்ளிக்கிழமை, நெஞ்சுக்கு நீதி (5 பாகம்) இனியவை இருபது, சங்கத்தமிழ், குறளோவியம், பொன்னர் -சங்கர், தொல்காப்பியப்பூங்கா போன்ற பொக்கிஷங்களை கொடுத்துள்ளார். இதை தவிர ஏராளமான சிறுகதைகள், எண்ணிலடங்கா கவிதைகள், மற்றும் நாடகங்களான மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், உதயசூரியன், தூக்கு மேடை, காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, சிலப்பதிகாரம் ஆகியவை முக்கியமானதாகும். தூக்கு மேடை, காகிதப்பூ இவற்றில் அவரே நடித்துள்ளார். ரஷ்ய இலக்கிய மேதை கார்க்கி எழுதிய "தாய்" நாவலை தமிழில் கவிதை நடையில் எழுதியுள்ளார். அது தான் பின்னர் கவிஞர் பா.விஜய் நடிக்க "இளைஞன்" என்னும் பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.



*********************************



ஆக தமிழக சினிமா தன் நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில் எல்லீஸ் ஆர் டங்கன் . டி ஆர். சுந்தரம் என்னும் ஜாம்பவான்களுடன் திரைத்துறையில் பணியாற்றிய கலைஞர் அவர்கள் தமிழக திரைப்பட வரலாற்று நூற்றாண்டின் இறுதியில் இப்போது ஆஸ்கார் விருது வாங்கிய ஏ ஆர் ரகுமான் போன்றவர்களுடன் கூட வேலை செய்து செம்மொழி நூற்றாண்டு பாடலை கூட எழுதி வரும் கலைஞர் மஞ்சள் பை நிறைய பணம் எடுத்து வந்து தான் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்னும் நிலையில் இல்லை. ஒரே ஒரு பேனாவும் அவரது மூளையும் மூலதனமாக போதும்.


இனியாவது கலைஞரை மஞ்சள் பையுடன் வந்தார் இன்று கோடீஸ்வரன் ஆகிவிட்டார் என புலம்பும் பொறாமை கொண்டவர்களிடம் இதை நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்லலாம். ஊரான் சொத்துகளை எல்லாம் கலைஞரின் சொத்து என பொய்ப்பிரச்சாரம் செய்யும் புண்ணியாத்மாக்களிடம் புரியும் படி இதை நாம் சொல்லலாம்.


இன்று 90ம் ஆண்டு பிறந்த நாள் காணும் அழகு தமிழ் , முத்தமிழ் அறிஞர் கலைஞர் தன் வாழ்நாளிலேயே தன் நூற்றாண்டு விழாவினை காண வேண்டும். நாம் இன்று கொண்டாடுவதை விட இன்னும் மிகச்சிறப்பாக அதை கொண்டாட வேண்டும் என வாழ்த்துவோம்!



வாழ்க கலைஞர்! வாழ்க தளபதி!!வெல்க திமுக!!!