பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 28, 2007

பர்மிஷன் கிடைத்தது குரங்கு ராதாவிடமிருந்து!!!

28/05/07
கிடேசன் பார்க்
துபாய்
.
அன்பு குரங்கு ராதா,
.
இங்கு நான் மிக்க நலம். நீ எப்படி இருக்கிறாய். என்னதான் போன் ,நெட்டுன்னு எது வந்தாலும் கடிதம் எழுதும் பழக்கம் தனி சுகம் என நீதானே சொல்வாய்! இப்போ உனக்கு என்ன ஆச்சு? கடிதம் போடுவதை ஏன் நிறுத்தி விட்டாய். போனில் ஒருமுறை கலாய்ச்சதால நீ போனும் செய்வதில்லை!
.
உன் நினைவுகள் எனக்கு எப்பவுமே உண்டு ராதா! நாம் 8ம் வகுப்பு படிக்கும் போது ஸ்கூல் பாய்ஸ் டாய்லெட்டில் "சாந்தி ஐ லவ் யூ"ன்னு நான் எழுதியபோது என்னை நீ கையும் சாக்பீசாகவும் பிடித்து நருக்குன்னு ஒரு கேள்வி கேட்டு என் அறிவு கண்ணை திறந்தது மறந்து போகுமா?(நாதாறி, பாய்ஸ் டாய்லெட்டுல எழுதினா சாந்தி வந்து படிப்பாளா?), பின் உன் அறிவுரை படி நான் மிகுந்த சிரமத்துக்கு பின் ஒரு ஞாயிறு சென்று கேர்ல்ஸ் டாய்லெட்டில் எழுத முற்படும் போது அங்கு ஏற்கனவே "சாந்தி ஐ லவ் யூ - இப்படிக்கு ராதாகிஸ்ணா"ன்னு எழுதி இருந்ததை பார்த்து கூட இருந்தே குழி பறிச்சுட்டயே ராதான்னுகொஞ்சம் கூட உன் மேல் கோபம் வச்சிக்காம அந்த ராதாகிஸ்ணாவை மாத்திரம் அழிச்சுட்டு என் பேரை எழுதினேனே அப்படிப்பட்ட நட்பல்லவா நம் நட்பு. ஆனால் உனக்கு இப்போ எனக்கு ஒரு லெட்டர் எழுத வலிக்குது. ஹூம்.
.
அதே எட்டாம் கிளாஸில் உன்னை தினமும் பென்ச் மேல நிக்க வச்ச சரித்திர சாரை மறக்க முடியுமா. நீயும் கொஞ்சம் கூட சொரனையே இல்லாம ஏதோ அவர் பிரமோஷன் குடுத்த மாதிரி ராஜராஜ சோழன் பட போஸ்டர்ல சிவாஜி குடுக்கும் போஸ் மாதிரி நின்னு சந்தோஷபட்டியே அப்போ கூட நான் தான் அது அசிங்கம்டான்னு உனக்கு புரிய வச்சேன். பின்ன அவரை பழி வாங்க கூட ஐடியா குடுத்தனே அதை மறந்து போயிட்டியா?
.
பின்ன ஒரு நாள் பரிட்சையில் அவர் சூப்பர்வைசராக வந்து உன் மேல் அவர் சந்தேகப்பட்டு உன்கிட்டயே நிற்கும் போது உன் சிகப்புஇங்க் பேனாவின் நிப் முனையை அவர் வேட்டியில் படும் மாதிரி வச்சு அது உள்ளங்கை அளவு பெரிதாகி அன்னிக்கு முழுக்க அவரை பைல்ஸ் பேஷண்ட் மாதிரி அலைய வச்சியே.....ஹும் வெளியே வந்து கட்டி பிடுச்சுகிட்டயே என்னை "மாப்ள உன் ஐடியா சூப்பர், என்ன கைமாறு செய்வேன்"ன்னு சொல்லி கண்ணுல தண்ணி வச்சுகிட்டியே ராதா, அது மறந்து போகுமா உனக்கு, அதே போல அன்னிக்கே அவர்கிட்ட உன்னய போட்டு குடுத்து அடுத்த நாள் உன் முதுகை பழுக்க வச்ச உண்மையை அப்பவே உன்னிடம் சொன்னா நம் நட்புக்கு பங்கம் வந்துவிடுமேன்னு இந்த நிமிஷம் வரை மறைத்து நம் நட்பை காப்பாத்தி வர்ரனே ஆனா உனக்கு எனக்கு லெட்டர் போட நேரமில்லை அப்படிதானே!
.
அதெல்லாம் போகட்டும், காலேஜ் படிக்கும் போது செலவுக்கு காசு இல்லாம கஷ்டப்பட்டோமே, அப்போ நீ குடுத்த ஐடியா மாதிரி இந்த உலகத்துல ஒரு பய குடுக்க முடியுமா? "மாப்ள கழுத்துல போட்டிருக்கும் செயினை அடகு வச்சுட்டா வீட்ல தெரியும். அதனால அதே மாதிரி கல்யாணி கவரிங் வாங்கி போட்டுகிட்டு இதை அடகு வைக்கலாம்"ன்னு நான் சொன்னப்போ "போடா போக்கத்தவனே வச்சி அழுவறதை விட வித்து அழுவலாம்டா"ன்னு சொலவடை சொன்னியே ராதா அது உனக்கு மறந்து விடுமோ?
அப்பகூட நான் "வித்தா அம்மா கேப்பாங்களே அப்ப என்ன செய்வது"ன்னு கேட்டப்ப நீ "ரெண்டி ரெண்டு கரனையா வெட்டி பத்தர் பாலுகிட்ட வித்து செலவு செய்யலாம்"ன்னு சூப்பர் ஐடியா குடுத்தியே என்னால் மறக்க முடியாதுடா.(இப்போ கூட கண்ணுல தண்ணி எனக்கு). பின்ன மூணே மாதத்துல நெஞ்சு வரை இருந்த சங்கிலி உட்கழுத்து சங்கிலியான பின்ன அம்மா கூப்பிட்டு "இது எப்படிடா"ன்னு கேட்டப்ப "நம்ம ராதா ஐடியாதாம்மா இது"ன்னு பெருமையா சொன்னனே அப்ப அம்மா என்னய பெத்த நிமிஷத்த விட பல மடங்கு சந்தோஷப்பட்டாங்களே அதை நீ மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். (அம்மா வெளக்குமாத்தாள சாத்துபடி குடுத்ததை இங்கே சொல்ல பிடாது ஏன்னா இது பப்ளிக் பிளேஸ்)
.
அவ்வளவு ஏன் மேத்ஸ் படிச்ச நானும், லிட்ரேச்சர் படிச்ச நீனும்தாண்டா இந்த உலகத்திலேயே லேப்ஃபீஸ் கட்ட வீட்டில பணம் வாங்கியவங்க. அது தவிர சாதாரண ராதாவா இருந்த உன்னை "குரங்கு ராதா"வா ஆக்கியது நான் தானேடா. அப்படிப்பட்ட எனக்கு ஒரு லெட்டர் போட்டா குறைஞ்சு போயிடுவியா?
.
ஹும்...நீ என்ன பண்ணுவ, இங்கிட்டு துபாய்ல போஸ்டல் டிபார்ட்மெண்ட் நெம்ப மோசம். ரெண்டு மாதம் முன்ன"அவசரமா 10000 தேவை, இந்த லெட்டரை தந்தி போல் பாவித்து உடன் அனுப்பவும்"ன்னு நீ போட்ட கடிதம் கூட என் கைக்கு வந்து சேரலைன்னா பாத்துகோயேன் போஸ்டல் டிபார்ட்மெண்ட் லெட்சனத்தை.
.
மத்தபடி வேற சேதியில்லை. இனிமேலாவது அடிக்கடி கடிதம் போடு!
.
இப்படிக்கு
உன் கடிதத்துக்கு ஏங்கும்
.
அபிஅப்பா

May 27, 2007

குரங்கு ராதாவுக்கு ஓர் கடிதம்!

.




































.
தத்துவம்:
அடுத்தவங்க கடிதத்தை சம்பந்தபட்டவங்க அனுமதி இல்லாம படிக்க கூடாது. என் பர்மிஷன் ஓக்கே. ராதா பர்மிஷன் வந்த பின்ன படிங்க!

திஸ்கி: உஷ் அப்பாடா நல்ல வெயில்ல ஒரு மொக்கை போட்டாச்சு!

May 23, 2007

நானும் சாமியாரா போக போறேன்!!!

திஸ்கி:
சும்மா ஜாலியா எழுதிகிட்டு 4 பேர் சிரிச்சாங்களா போனோமான்னு இருந்தேன். கண்மணி டீச்சர் வந்து கலக்க ஆரம்பிச்சதுல நம்ம கடை யாவாரம் கம்மியா போச்சு. சரி வந்தவரை லாபம்ன்னு இருந்தேன், இப்போ முதலுக்கே மோசம் ஆவது போல நம்ம அவந்திகா பொண்ணு காமடி போஸ்ட் போட்டு கலக்க ஆரம்பிச்சிட்டதால நான் காவி கட்டிக்க முடிவெடுத்துவிட்டேன். அதுக்கு முன்னோடியா இந்த சாமி பதிவு

**************************
மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ தூரத்தில் (செம்பனார்கோவில் போகும் வழி)விளநகர் என்னும் சிறிய கிராமத்தில் இந்த கோயில் உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து பார்த்தாலே தெரியும். சுற்றிலும் பச்சை வயல் நடுவே இக் கோயில், கோயிலின் வடக்கு பக்கம் கொஞ்ச தூரத்திலேயே சல சலக்கும் காவிரி. அதன் பக்கத்தில் முந்திரி காடு. முன்பெல்லாம் சைக்கிள் கூட அந்த இடத்துக்கு போக முடியாது. நாம் வயல் வரப்பில் நடந்து தான் உள்ளே போகமுடியும். ஆனால் இப்போ சின்னதா ஒரு மண் ரோடு போட்டு கார் கூட உள்ளே வந்துடுது. அதிலே எனக்கு சின்ன வருத்தம் தான்.
.
கோயில் உரிமையாளர் பெயர்....ஸ்ரீ பச்ச காத்தாயி அம்மன் எங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் அவ வாங்கிகிட்டு எங்களுக்கு சுகம் கொடுப்பாள் எங்க குல தெய்வமான அவள்.இதோ ஜம்முன்னு உக்காந்து இருக்கும் அழகை பாருங்க
.
Photo Sharing and Video Hosting at Photobucket
அவங்களுக்கு பாடிகார்ட்ஸ் உண்டு. வாழ் முனீஸ்வரர், கஞ்சமலை, பஞ்ச முனி இவிங்க தான்.
இதோ இவருதான் வாழ்முனீஸ்வரர்
Photo Sharing and Video Hosting at Photobucket
.
நாங்க சின்ன பிள்ளையா இருக்கும் போது அவர் கிட்டயே போக பயப்படுவோம். ஆனா எங்க பசங்க அவரை சுத்தி சுத்தி கொஞ்சம் கூட பயப்படாம விளையாடுதுங்க. ஆள் எப்படி ஆஜானு பாகுவா இருக்கார் பாருங்க!
.
இவங்க தான் பஞ்சமுனி. வாழ் முனிஸ்வரருக்கு பக்க பலம்ஸ் இவங்க, அவரி விட கொஞ்சம் சின்ன சைஸ் வேஷ்டி போதும் இவங்களுக்கு
.
Photo Sharing and Video Hosting at Photobucket
.
இவர் கஞ்சமலை,
.
Photo Sharing and Video Hosting at Photobucket
.
பச்சகாத்தாயி சக்தி அவதாரம்தானே அதானால தன் பிள்ளைகளுக்கும் தன்வீட்டிலே இடம் அதாங்க கணபதி, முருகன் வித் தங்கமணீஸ்
.
Photo Sharing and Video Hosting at Photobucket
.
இந்த கோயில் பூசாரி இருக்காரே அந்த வாழ்முனீஸ்வரர் மாதிரியே இருப்பார். நோய் நொடி இல்லாம உம் புள்ள குட்டிகளை காப்பாத்துன்னு உச்சஸ்தாயில நீட்டமா ஒரு டயலாக் கொடுக்கும் போது குலை நடுங்கும்.
கோயில் வளாகத்திலே ரொம்ப பெரிய அரசமரமும் வேப்பமரமும் பின்னி பிணைஞ்சு இருக்கும். ஒரு சொம்பு மட்டும் இருந்தா அந்த மரமேடைல உக்காந்து 1000 பஞ்சாயத்து பண்ணலாம். அப்புடி ஒரு சுகமான காத்து வரும் அங்கே.
.
ஆடிமாசம் கடைசி வெள்ளி கிழமை எங்க சொந்த பந்தங்கள் எந்த ஊர்ல இருந்தாலும் அங்க போயிடுவோம். அதை பத்தி எழுதினா அது காமடி பதிவா போய்டும் அதனால விட்டு விடுவோம்.
.
இப்பவம் நான் என் தம்பி இரவில் சில சமயம் தங்கமணி, குழந்தைகளோடு இரவு 8.00 மணிக்கு மேல் போய் அங்கேயே கொண்டு போகும் இட்லி வகையராக்களை தின்னுட்டு இரவு 11.00 மணிக்கு திரும்புவோம். எங்களையும் அந்த சாமிகளையும் தவிர வேற ஆசாமிகளே பொறாமை,சூழ்ச்சிதனங்கள் இல்லாத அந்த உலகமே தனி சுகம்.
.
இன்னும் சில தினங்களில் அங்கே கும்பாபிஷேகம் நடக்க போவுது. என் மனசு அங்கேயே சுத்துது!

May 21, 2007

நாங்கல்லாம் பெரிய இலக்கிய ஆர்வலர்களாக்கும்!!!

எங்க ஸ்கூல்ல "அது" மாத மாதம் நடக்கும். தமிழ் வாத்தியார் ஹெச்செம் ரூம் பக்கம் வந்துட்டு போனார்னாவே எங்களுக்கு நியூஸ் வந்திடும். ஆஹா நாளைக்கு "அது" நடக்க போவுதுடான்னு நாங்க பிளான் பண்ன ஆரம்பிச்சுடுவோம். அதிலும் நான் சொதப்பல் ஐடியா மன்னன் வேற. ஒவ்வொரு தடவையும் போன தடவ நடந்த தப்பு நடக்காம வேற வேற ஐடியா குடுப்பேன்.

அன்னிக்கும் அது போலத்தான் தமிழ்சார் ஹெச்செம் ரூம்க்கு போயிட்டு நேரா அடியாள் சார் குரூப் இருக்காங்க 4 பேர் அவங்க கிட்ட போய் "அது" நாளைக்கு நடக்கும் விஷயத்தை சொல்லிட்டு ஆட்டைய ஸ்டார்ட் பண்ணிட்டார். அந்த 4 சாரும் அவங்க துணை ராணுவப்படை எல்லாம் தயார் பண்ணிட்டு (அதாங்க 10 தடி தாண்டவராயன்ஸ் )வியூகம் வகுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இப்பவாவது நான் அந்த பாழாப்போன "அது" என்னன்னு சொல்லியே ஆகனும். "தமிழ் இலக்கிய மன்றம்" .இந்த தமிழ் இலக்கிய மன்ற கூட்டம் மாசம் ஒரு தடவை நடத்துலன்னா தமிழுக்கு தலைகுனிவுங்குற மாதிரி அந்த தமிழ் சாருக்கு வேர்த்து கொட்டும். சரி அவர் தான் ஆசை படுறாரே நாமும் கலந்துகிட்டு கேட்டு வைப்போம்ன்னு நாங்க விட்டு குடுத்து போகாம முரண்டு தான் போங்க. அக்கம் பக்கத்துல உள்ள ஸ்கூல்ல இருக்கும் தமிழ் வாத்தியார் யாராவது சீஃப் கெஸ்ட்ன்னு பேர்ல வந்து ஏதாவது பேசுவாங்க, அதுல சில சார் சோக்கு வேற அடிப்பாங்க. அந்த நேரத்துல கூட்டத்துல குத்த வச்சி உக்காந்து இருக்க நாங்க கை தட்டனும். அது சோக்குன்னு எங்களுக்கு புரிஞ்சி கைதட்டங்காட்டிலும் விடிஞ்சுடும். அவன்க தான் கை தட்டலையே தொடர்ந்து பேசுவோமின்னு இல்லாம அவரும் வெயிட் பண்ணுவார்.

இந்த மாதிரி எக்குதப்பா ஆயிட கூடாதுன்னு தமிழ் சார் கிராஃப்ட் சாரை நியமிச்சார். அதாவது எங்களுக்கு குடுத்த இன்ஸ்ட்ரக்ஷன் படி நாங்க அவரையே பாத்துகிட்டு இருக்கணும். அவர் கை தட்டினா நாங்க தட்டனும். அவர் சிரிச்சுகிட்டே வேகமா தட்டினா நாங்களும் சிரிச்சுகிட்டே வேகமா தட்டனும். அவர் ஜெண்டிலா தட்டினா நாங்களும் அது போல தட்டனும். இதிலயும் ஒரு பிரச்சனை வந்துச்சு. கிராஃட் நிற்கும் திசையே நாங்க பார்த்துகிட்டு அவர் பக்கமே விழுந்து விழுந்து போலியா சிரிச்சு அதிலும் குரங்கு ராதா ஓவர் ஆக்டிங்ல மண்னை அள்ளி தலையில போட்டுகிட்டு வுழுந்து வுழுந்து சிரிப்பான், அந்த கொடுமை பெரிய கொடுமை. பேசும் சீஃப் கெஸ்ட்டுக்கு சந்தேகம் வந்திடுச்சு ஒரு தடவை. அதனால எங்க தமிழ் சார் அடுத்த கூட்டத்துல கிராஃப்டை சீஃப் கெஸ்ட்க்கு பின்னால நிக்க வச்சு சரி பண்ணினார்.

இந்த மாதிரி தொல்லையெல்லாம் தங்காமத்தான் என்னய மாதிரி பாதிக்கப்பட்டவங்க எல்லாம் வீட்டுக்கு ஓடி போயிடுவோம். பின்ன சுத்தமா கூட்டமே இல்லாம போய் வரும் சீஃப் கெஸ்ட்டுகிட்ட அவமானபடாம இருக்கனும்ன்னு தான் தமிழ்சார் கிராஃட் தலைமைல பாதுகாப்பு வளையம் போட்டுடுவார் நாங்க தப்பிக்காம இருக்க. அதையும் மீறி எங்க தெறமை எல்லாத்தையும் காட்டி நாங்க தப்பிச்சு வீர சாகசம் செஞ்சிடுவோம்.

இப்போ 2 வது பாராவுக்கு போகலாம் வாங்க.மருநாள் காலை ஸ்கூல் மதியம் வரை பின்ன லன்ச் முடிஞ்சவுடன் ஸ்கூலின் இரண்டு வாசல் பக்கமும் பூட்டிட்டாங்க, பூட்டி காவலுக்கு 10,11,12ம் கிளாஸ் கடேசி பென்ச் வீரர்கள் போட்டாச்சு.


இப்போ தப்பிக்க என்னென்ன வழி இருக்குன்னு பார்ப்போம். மெயின் வாசல் இரண்டு, அது வழியா முடியாது. அடுத்து கேர்ல்ஸ் டாய்லெட் பக்கமா போய் குடிதண்ணி பைப் மேல ஏறி பக்கத்து ஆரம்ப பள்ளில குதிச்சு அந்த ஸ்கூல் மெயின் வாசல் வழியா வெளியே போயிடலாம். அடுத்து பாய்ஸ் டாய்லெட்ல வழியா ஏறி ஸ்கூலுக்கு பின்னால உள்ள மூத்திர சந்து வழியா ஸ்ரெயிட்டா ஓடினா சின்ன கடை தெரு வந்திடும். ஆனா இது கொஞ்சம் ரிஸ்க்.

ஆனா நாங்க அன்னிக்கு பார்த்த விதத்திலே 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி இருப்பது நல்லாவே தெரிஞ்சது. சீஃப் கெஸ்டும் வந்துட்டார். எங்க ஸ்கூலுக்கு வரும் சீஃப் கெஸ்ட்க்கு தரப்படும் மரியாதையே அலாதியானது. காளியாகுடி போண்டா வித் கெட்டி சட்னி 1 செட்+1துண்டு அல்வா மற்றும் 1காபி கண்டிப்பா உண்டு. அவரையும் இந்த காளியாகுடி வகையராக்களையும் ஒரு ரூமில் போட்டு வெளிபக்கமா சாத்திட்டு காவலுக்கு ஒரு NCC பையனையும் போட்டு ஏதோ வெளிநாட்டு விருந்தினரை கலாம் கவனிச்சுப்பது போல பெருமையா வளம் வருவார் தமிழ் சார்.

3.00 மணிக்கு கூட்டம் ஆரம்பம். அதுக்கு முன்ன 2.30க்கே நாங்க எல்லாம் ஸ்கூல் நடுவே இருக்கும் கிரவுண்ட்க்கு வந்திடனும். 2.30க்கு பெல் அடிச்ச உடனே ஓன்னு கத்திகிட்டே கிரவுண்ட் நடுவே எல்லா கிலாஸ் பசங்களும் ஓட எங்க குரூப்பும் ஓடி போய் முன் வரிசைல உக்காந்திட்டோம். நாங்க தான் ஐடியா பண்ணிட்டோமே முன்னாடியே. தமிழ் சாருக்கு ஏக சந்தோஷம். பசங்கன்னா இப்டீல்ல இருக்கனும்ன்னு.

எங்க குரூப் 6 பேரும் மதியம் 2.00 மணிக்கே புஸ்தக மூட்டை எல்லாம் கொண்டு போய் பாய்ஸ் டாய்லெட் பக்கமா வச்சிட்டு வந்துட்டோம். அப்ப தான் சேதி வந்துச்சு மெயின் கேட்டுல சில வீரர்கள் பிடிபட்டனர்ன்னு. மெதுவா ராதா எழுந்து தமிழ்சாரை பார்த்து ஒரு விரலை காட்டினான். சாரும் "ஆசைப்பட்டு முன் வரிசைல வந்து உக்காந்த பய ஓடமாட்டான்ன்னு "சரி போ"ன்னு சொல்ல நான் அடுத்து எழுந்து அவரை பார்த்து ஒரு விரலை காட்டினேன்."ஒருத்தனுக்கு வந்தா உங்க குரூப்புக்கே வந்துடுமே சரி சரி போயிட்டு வாங்க"ன்னு சொல்ல நாங்க டாய்லெட் பக்கமா வந்தோம்.

ராதாதான் முதல்ல ஏறினான். ஏறி குதிச்ச பின்ன நான் அவன் புஸ்தக மூட்டையை தூக்கி போட்டுவிட்டு நான் ஏறினேன். அப்ப தான் ஒரு தடியன் பார்த்துட்டு ஒடி வந்தான். அதுக்குள்ள நான் மூத்திர சந்திலே குதிச்சுட்டேன். எங்க குரூப் மீதி 4 பேரும் மாட்டிகிட்டானுங்கன்னு எனக்கு அவிங்க போட்ட சத்தத்துல தெரிஞ்சுது. நான் என் புஸ்தக மூட்டைக்காக வெயிட் பண்ணிகிட்டு இருந்த அந்த நேரத்துல ராதா கண்ணு மண்ணு தெரியாம ஓடுறான். புடிபட்டாலும் கடமை தவராத நாலில் ஒருவன் என் புஸ்தக மூட்டையை தூக்கி போட்டதுல என் கண்ணே கலங்கிடுச்சு. ஆமா அது என் மூஞ்சில விழுந்துச்சு.

ராதாவையும் என்னையும் பிடிக்க அந்த தடியன்ஸ் சைக்கிள்ல மூத்திர சந்தின் மறு முனையான சின்ன கடை தெரு பக்கம் வர்ரானுங்கன்னு அவங்க பேசிகிட்டதுல தெரிஞ்சுது.

நான் மெதுவா புஸ்தக மூட்டைல இருந்த வேற டிராயர் சட்டை எடுத்து போட்டுகிட்டு என் யூனிஃபார்ம்+புஸ்தக மூட்டை இரண்டையும் வேற பெரிய பைல போட்டுகிட்டு தலைய கலச்சிகிட்டு பேப்பர் பொறுக்கிரவனாட்டம் மெதுவா நடந்து வந்தேன். அதுக்குள்ள ஸ்கூல் யூனிபாஃர்ம்ல ஓடி வந்த ராதாவை தடியன்ஸ் 3 பேர் கோழிகுஞ்சு மாதிரி அமுக்க நான் எதுமே எனக்கு சம்மந்தமில்லாது மாதிரி சம்பவ இடத்தை கிராஸ் செஞ்சு போனேன். ராதாவின் இரண்டு கைகளையும் இரண்டு பேர் தூக்கிகிட்டு போகும் போது ராதா அலறிகிட்டே கால்களை வதக்கு வதக்குன்னு உதச்சிகிட்டே போனது இன்னிக்கும் கண்ணுக்குள்ளயே இருக்கு.

இப்போ 1 வருஷம் முன்ன இப்போ இருக்கும் எங்க ஸ்கூல் ஹெட்மிஸஸ் என்னய கூப்பிட்டு "டேய் இலக்கிய மன்றத்துல சீஃப் கெஸ்ட்டா வந்து பசங்களுக்கு சொல்லிட்டு போடா"ன்னாங்க. சரி போண்டா, கெட்டிசட்னி,அல்வாவுக்கு ஆசைப்பட்டு ஒத்துகிட்டு டீச்சரை பார்த்து கேட்டேன்"டீச்சர் இப்பவும் பசங்க இலக்கிய மன்றத்துக்கு பயந்து ஓடுறாங்களா?".

அதுக்கு டீச்சர்"ம்...பயங்கர ஸ்ட்ரிக்டா இருந்தும் சந்து முனைல ஆள் போட்டும் ஒன்னு ரெண்டு மிஸ் ஆகுது"ன்னு சொன்னாங்க.அதுக்கு நான்"சட்டைய மாத்தி போட்டு ஏமாத்துவாங்க டீச்சர்"ன்னு சொன்னேன்.

அதுக்கு டீச்சர்"மகாபாவிகளா இப்புடி கூடவா செய்வானுங்க"ன்னு ஆச்சர்ய பட்டாங்க. அதுக்கு நான்"ஆமா டீச்சர் செய்வானுங்க. பின்னால அவிங்களே சீஃப் கெஸ்டா வந்தாலும் ஆச்சர்ய பட முடியாது"ன்னு சொல்லிவச்சேன்.

May 3, 2007

ஆல மரம் எப்படி இருக்கும்?

நான் சின்ன வயசுல படாத பாடு பட்டதா நெனச்சுகிட்டு பல பேரை படாத பாடு படுத்தியிருக்கேன். அஞ்சாப்பு படிக்கும் போதே ராதா தோள் மேல கைய போட்டுகிட்டு பக்கத்து ஹைய்ஸ்கூல்க்கு போய் லேப்ல இருக்கும் எலும்புக்கூடு பாத்து "ஐ என்னைப்போல் ஒருவன்"ன்னு ஆச்சர்யப்பட்டு அந்த லேப் அட்டண்டரால் அடித்து விரட்டப்பட்டு அவர் கிட்ட "நானும் ஒரு நாள் இந்த ஸ்கூல்ல படிப்பேன்ன்னு மனசுகுள்ள சவால் விட்டுட்டு அடுத்த வருஷமே அங்க போய் சேந்து சபதத்தை நிறை வேத்திட்டு சந்தோசப்பட்டுகிட்டேன்.

6ம் வகுப்புல சேந்ததுல இருந்து ஏதோ IIT ல சேந்த மாதிரி 5ம் கிளாஸ் பசங்களை பாத்து"டேய் நல்லா படிங்கடா அப்ப தான் அண்ணன் மாதிரி ஹைய் ஸ்கூல் சேர முடியும்"ன்னு பீலா வுட்டுகிட்டு இருந்தப்ப தான் பின்னந்தலைல நொட்டுன்னு ஒரு தட்டு. திரும்பி பாத்தா தடிமாடு கணக்கா 10ம் கிலாஸ் பயபுள்ள. அப்ப ஆரம்பிச்ச அடி அந்த ஸ்கூல்ல +2 வரை தொடர் கதையாவே ஆனதுதான் சோகம்.

அதிலயும் என் தமிழ் டீச்சர் என்னய போட்டு தாக்குனதையே தொடர் பதிவா போடலாம். என் தமிழ் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல அவங்க நொந்து நூலானது பத்தி எழுதினா எழுதிகிட்டே இருக்க்லாம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட.

எனது பள்ளி ன்னு கட்டுரை எழுத சொன்னப்போ எனது பல்லின்னு நான் எழுதியதை பார்த்து என் விரலை பிடிச்சு சுவத்துல பர பரன்னு தேய்ச்சு பின்னயும் வெரி அடங்காம ஓ ன்னு தேம்மி தேம்பி அழுதாங்க. ஒரு சின்ன தப்புக்கு இப்டி ஃபீல் பண்றாங்களேன்னு நெனச்சுகிட்டேன். அதோட விட்டாங்களா என்னய பழி வாங்கவே அந்த கட்டுரைய் முழு ஆண்டுலயும் கேட்டு வச்சு, எனக்கு அவங்க அப்டி பழி வாங்குவாங்கன்னு தெரியும் அதனாலயே பிட் வச்சிருந்தேன். உலக இஸ்டரில 6ம் கிளாஸ் படிக்கும் போதே பிட் அடிச்ச மாணவன் ஐயாதான்.

பிட் வச்சிருந்தனே தவிர எப்டி வெளியே எடுத்தேன் எப்படி எழுதினேன் என்பதெல்லாம் ஒரு ஹிட்ச்காக் படம் மாதிரி இருக்கும். அபிஅப்பா த்ரில் எழுதியிருக்கார்ன்னு கோபி யாருக்காவது போன்ல சொல்ல அவங்க விழுந்து விழுந்து சிரிக்க வேண்டாம் சாமீ. ஆனா கடைசியா சொதப்பிடுச்சு. ராதா நான் பிட் அடிகிறத பார்த்துட்டான். அவனுக்கு பட படப்பு. பேந்த பேந்த முழிக்கிறான். அதை பாத்துட்டு டீச்சர் அவன் கிட்ட வந்து "ஏண்டா பிட்டா வச்சிருக்க"ன்னு அதட்ட அந்த நாதாரி அழுதுகிட்டே என்னய போட்டு குடுத்துட்டான்.

அவ்ளோவ்தான். அவங்களுக்கு பிரஷர் ஏறி சொர்னாக்கா மாதிரி பாஞ்சு வந்து "நானே பிட் பிடிக்கரதுல மன்னி, (அதாங்க மன்னனுக்கு எதிர் பதம்) என்கிட்டயேவா"ன்னு பிட்ட எடுத்து பாத்தா அது "எங்கள் பள்ளி"."ஏன்டா இதுதான் உனக்கு தெரியுமே"ன்னு அவங்க கேட்டப்ப "தெரியும் டீச்சர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்ன்னு பிட்ட பாத்து எழுதினேன்"ன்னு சொன்னப்ப தலைல அடிச்சு கிட்டாங்க.

7ம் வகுப்புக்கும் அவங்க தான் தமிழ் எடுத்தாங்க. முதல் நாள் கிளாஸ்க்கு வந்த உடனே பாடத்தை நடத்த ஆரம்பிக்கும் முன்ன சின்ன டிரெய்லர் போடுவது மாதிரி "ஆல மரம் எப்படி இருக்கும்?"ன்னு ஒரு கேள்விய போட்டாங்க. சரி இந்த வருஷமாவது அவங்க கிட்ட நல்ல பேர் எடுக்கலாம்ன்னு நான் டக்குன்னு எழுந்து "ஆலமரம் விசாலமா இருக்கும்"ன்னு சொன்னேன். நாதாரி கூட்டம் அத்தினியும் குபீர்ன்னு சிரிச்சுடுத்து. அவங்க பிரஷர் திரும்பவும் எகிறிடுச்சு. அப்ப தான் எனக்கு ஒரச்சிது அவங்க பேர் விசாலம். அவங்க குண்டா ஆலமரம் மாதிரி இருப்பாங்கலா அதான் எல்லாரும் சிரிச்சுட்டாங்க.அவங்களுக்கு அப்பதான் நான் அந்த கிளாஸ்ன்னு தெரிஞ்சுது. சர்ன்னு யு டர்ன் அடிச்சு ஹெட் மாஸ்டர் கிட்ட போயிட்டாங்க. எனக்கு இந்த கிளாஸ் வேண்டாம்ன்னு சொல்ல.

சாதாரணமா ஒரு கிளாஸ் பாஸ் பண்ணி வேற கிளாஸ் போகும் போது ஸ்டூடண்ட் தான் ஃபிரண்ஸை பிரிய மனசு இல்லாம எனக்கு இந்த கிளாஸ் வேண்டாம்ன்னு அழுவாங்க.ஆனா எனக்கு ப்யந்து கிட்டு இவங்க இப்டி பண்ணிட்டாங்க.

சமீபத்துல அவங்களை அவங்க மருமகள் கூட ஒரு ஹாஸ்பிட்டல்ல பார்த்தேன். 2 முறை ஹார்ட் அட்டாக் வந்திடுச்சாம். அவங்க மருமகள் கிட்ட என்னய அறிமுகப்படுத்தினாங்க. "எனக்கு முதல்ல பிரஷர் வர காரணமே இவன் தான். இவன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான். ஆக என் ஹார்ட் பிராப்ள்ம் ஸ்டார்ட் ஆனதுக்கு இவன் தான் காரணம்"ன்னு அறிமுகப்படுத்த அந்த மருமகள் என்னய பார்த்து"சந்தோஷம்"ன்னுது. என்னய சந்திச்சதுல சந்தோஷமா இல்ல அவங்களுக்கு அட்டாக் வர காரணமா இருந்ததுக்கு சந்தோஷமான்னு நான் ஆராய்ச்சி பண்னலை.

"ஏண்டா இப்பவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்றியா?"ன்னு கேட்டாங்க "இல்லை டீச்சர்" ன்னு சொன்னேன். "எப்படிடான்னு"ன்னு ஆச்சர்யமா கேட்டாங்க. "நான் இப்பொல்லாம் தமிழ் எழுத சந்தர்ப்பமே இல்லை
டீச்சர்"ன்னு சொன்னேன். நெஞ்சை பிடிச்சுகிட்டாங்க!!