பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 10, 2013

அபிஅப்பாவும், ஆரூர் மூனா செந்திலும்! கொஞ்சம் டோண்டு சாரும் உண்டு!

ஆகா! எனக்கு இந்த தமிழ்மணம் அதிலே ஓட்டு, சூடான இடுகை, வாசகர் பரிந்துரை எதிலும் நம்பிக்கை போயே போச்சு. எப்போ டாட்காமா இருந்த என்னை டாட் இன்னா "பேண்ட்" போடவிட்டாங்களோ அன்னிக்கு நளதமயந்தி மாதவன் மாதிரி விசுக்கு விசுக்குன்னு வலது காலை தூக்கி இல்லாத வேட்டியை அனிச்சையா மடக்கி கட்டினவன் தான். நேத்து வரை கட்டி கிட்டு கிடந்தவனை ஆரூர் மூனா செந்தில்தான் கூட்டிட்டு போய் உனக்கு பேண்டு சட்டை வாங்கியாறேன்னு சொல்லி அழகு பார்த்தாரு. சரி ஒரு நன்றி சொல்லுவோமேன்னு ஒரு ட்ராஃப்ட் அடிச்சு அதை "சேவ்" செய்கிறேன் பேர்வழின்னு  சேவ் செய்ய போனா "ஆரூர் மூனா செந்தில் already exists''...சரின்னு செந்தில் திருவாரூர், செந்தில்,எல்லாம் அடிச்சு பார்த்தா அதே போல வருது. சரின்னு ஒரு முடிவோட அதை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு ஆரூர் மூனா பூனா செந்தில்னு கூட அடிச்சு பார்த்தேன்... அட தக்காளி ... அதும் அல்ரெடி எக்சிஸ்ட்... ஆக இந்த செந்திலை நான் இரவு முழுக்க கடிச்சு கடிச்சு தின்னுருக்கேன்.அந்த மகாபாவிக்கு தான் இப்ப நன்றி சொல்லனும். என் சைஸ்க்கு இருந்தா சாதா  பாவி. கொஞ்சம் நார்மலா இருந்தா கூட ஸ்பெஷல் சாதா பாவின்னு வச்சுக்கலாம். ஆனா இவரு என் தம்பிக்கு போட்டியா இருப்பாரே... அதனால மகாபாவி... (அய்யோ ..முடியல..என்னால சப்ப கட்டு கட்ட முடியல...)

அந்த மகாபாவி என்னான்னா என்னை ஆகாஓகோங்குது.என்னை இதுவரை எழுத்துக்காக புகழ்ந்தது ரெண்டு பேர் தான். ஒரு நாள் காலைல ஆரூர் மூனா செந்தில். அவர் தான் இரவும் புகழ்ந்தார். ஆக ரெண்டு பேர். சமீபமா நான்  மதுவும் அருந்துவதில்லையா... உடனே ஓடிப்போய் அந்த ட்ராஃப்டை எல்லாம் படிச்சு செத்துட்டேன். அட, என்ன ஒரு கேவலமான விஷயத்துக்கு எல்லாம் ஆரூர் மூனா செந்திலை திட்டி இருக்கேன்...  அப்படின்னு நினைச்சு கிட்டு இருக்கும் போதே திடீர்ன்னு செந்தில் கிட்ட இருந்து ஒரு பின்னூட்டம் வருது. நீங்க உங்க பதிவை டாட் காம்ல மாத்தினா நீங்க தான் மகுடம்... இப்படியாக... மேலும்  ஒரு கோப்பையில் காசி ஆறுமுகம்,பில்கேட்ஸ், குழலி, பொன்ஸ்,  மயிலாடுதுறை சிவா, பெயரிலி எல்லாரையும் சம அளவில் போட்டு கலக்கவும் என செய்முறை வேறு....

செஞ்சேன்... அட ஆமாம் டபார்ன்னு டெஸ்ட் ட்யுப்ல அடில இருந்து ஒரு இண்ச் மேல கரு வளையம். சுரேகா ,ஷ்ரேயா ன்னு கத்திகிட்டேன் .நானும் நளதமயந்தி கிளைமாக்ஸ் மாதவன் மாதிரி கோட்டு சூட்டு ஆளாகிட்டேன். இன்னிக்கு நானும் மகுடமாம். இதல்லாம் எனக்கு அதிகம் கேட்டோ.....

ஆனா ஒன்னு என் அன்பான செல்ல எதிரி என் அன்பான ஆரூர் மூனா செந்திலுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

இதையே சொல்லிகிட்டு இருந்தா... அனேகமா செந்திலே கடுப்பாகிடலாம்...  நெக்ஸ்ட்....

இந்த செந்தில் இருக்காரே செந்தில்... (அய்யோ... இன்னிக்கு செந்தில் ப்ராணமாவே ஆகிடுச்சு. (அட தேவுடா ..அந்த ஆளு ஒரு 'ஆம்பளை ஆளு பிரா போட்ட' படத்தின் விளைவு...புராணம் 'ப்ரா'னம் ஆகிடுச்சு)..இந்த ஆள் குடிச்சா நல்லா எழுதுவாரு. ஆனா சிலர் குடிச்சா குழப்பம் ஆகிடுவாங்க.

இப்படித்தான்... ஒரு நாள் டோண்டு சார் இறந்துட்டாரு. உடனே ஒரு பதிவு போட்டேன் பேஸ்புக்ல. இதான் என்னால் செய்ய முடிஞ்ச அஞ்சலி. அதை விடுங்க. பகல்ல பதிவு போட்டாச்சு. சும்மா இருக்குமா மனசு, அதும் ராத்திரில.... போனை போட்டேன் டோண்டு சாருக்கு.

"சார்"
"நான் சார் இல்லை சாரி"

"அதன்ன சார் செத்து போனா பெண்பாலா ஆகிடுவாங்கலா. சாரின்னு சொல்றீங்க"

"அந்த சாரி இல்லை, இது இங்கிலீஷ் சாரி அதாவது sorry"

"மன்னிக்கனும்... ஐ நீட் டு ஸ்பீக் வித் டோண்டு சார்"


அடுத்து ஆம்பளை குரல்.... டோண்டுவே தான்...

சித்தப்பா என்னா எப்டி இருக்கீங்க?

"அட போங்க டோண்டு சார்... மொதல்ல பொம்பளை கொரல் இப்ப ஆம்பளை கொரலா"

"சரி சித்தப்பா, உங்களுக்கு ஓவர் ஆகிடுச்சு"

"யோவ் அது இல்லய்யா. நீர் செத்ததுக்கு அஞ்சலி சொல்ல வந்தேன்"

"ரைட்டோ... நடத்துங்க"

"யோவ் நான் என்ன உன் வூட்டு வாத்தியாரா? உம்ம காரியம் நடத்துவதுக்கு?... நான் ஒரு ஓரமா ஒக்காந்துட்டு போய்டுவேன்"

"சரி போங்க"

"ஆனா ஒன்னுய்யா ... செத்த பின்னயும் பேசுற பாரு... நீர் மனுசன்"

"ஆமாம்... "

"என்ன ஓமாம்"

"நான் இன்னும் சாகலை'

"இந்த உம்ம ...பீக் .....தன்னம்பிக்கை...பீக்... தான்யா ...பீக் பீக்...எனக்கு புடிச்சது.....க்"

"ங்கொய்யால வச்சுட்டியா... ஆனா காலைல திரும்பவும் பேசுவேன்"

குப்புற அடிச்சு படுத்துட்டேன்.

காலைல என் மனைவி எழுப்பினாங்க. பார்த்தா பத்ரகாளி மாதிரி நிக்கிறாங்க.

"என்னாங்க"

"சொல்லுங்க"

"ஏன் தண்டபாணிக்கு போன் செஞ்சீங்க? என்ன பேசுனீங்க? அவன் எங்க அக்காவுக்கு ஒத்தை பையன். அவன் செத்துட்டதா அவனையே கேட்டிருக்கீங்க... இதல்லாம் நல்லா இருக்கா? "

"இல்லையே, என் போன் காணாம போச்சு நேத்திக்கு கடைத்தெரு போகும் போது" என சொல்லிக்கொண்டே எடுத்து அடியில் வச்சுகிட்டேன். அந்த நேரம் எவனோ போன் செய்ய அது கிர்ர்ர்ர்ர் என நான் உடம்பை தூக்கி தூக்கி போட்டேன்.

பின்ன தான் தெரிஞ்சுது அந்த தண்டபாணியை "dandu" எனவும் நம்ம டோண்டு சாரை "dondu" எனவும் வச்சி தொலைஞ்சி இருக்கேன்.. நல்ல வேளை தண்டபாணி வீட்டுக்கு எழவு கேட்க போகலை!

இந்த குடியால் வரும் குழப்பங்கள் பத்தி இன்னும் ஒரு நாள் விலாவாரியா பேசுவோம்! இன்னும் ஒரு நாள் ......என்ன நாளையே கூட பேசலாம்! நீங்க எல்லாம் விரும்பினாக்க....

குறிப்பு: இது டோண்டு சாரை அவமதிக்கும் பதிவு இல்லை. இறந்தாலும் நம்ம கூட இருக்கார் என சொல்லும் ஒரு சின்ன நினைவூட்டல். அத்தனையே!

3 comments:

  1. அண்ணா ரொம்ப நன்றிங்கண்ணா. கால இடைவெளி விடாமல் இது போன்ற நல்ல நகைச்சுவைப் பதிவுகளை வாரம் இரண்டாவது வெளியிட்டால் போதும் இந்த ரசிகனுக்கு.

    அரசியலில் ஆயிரம் கருத்து மோதல்கள் வரலாம். ஆனால் எனக்கு நீங்கள் தான் நகைச்சுவை கட்டுரைகளுக்கு குரு.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))