இதோ இப்போ ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. என் வலைப்பூவுக்கு ஐந்தாம் ஆண்டு ஆரம்பம் இன்று. மிக்க சந்தோஷம். ஏதோ முக்கி முக்கி முன்னூறு பதிவிட்டாகி விட்டது. இதோ நீங்கள் படித்து கொண்டிருப்பது முன்னூறாவது பதிவு. ஐந்தாம் ஆண்டு விழா என்பதால் கூட்டிப்பார்த்தேன். அட! ஆச்சரியம் சரியாக 300! உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்!
*************
இன்று நான் ஈரோடு சங்கமம் நிகழ்சிக்கு போயிருக்க வேண்டியவன். வேறு ஒரு அவசர வேலை வந்துவிட்டமையால் போக முடியவில்லை. என் நினைப்பு முழுவதும் அங்கயே இருந்தது. இருபது நாட்கள் முன்னதாகவே அபிஅம்மாவிடம் நான் ஈரோடு போக வேண்டி பர்மிஷன் கேட்டபோது "ஏன்?, என்றைக்கு?"ன்னு கேட்டாங்க. டிசம்பர் 26ம் தேதி என சொன்ன போது "அடடே அன்னைக்கு தானே உங்க பிளாக் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்"ன்னு சொன்னாங்க. எனக்கு எதிரிகள் வெளியில் இல்லை. ஐந்தாம் ஆண்டு ஆரம்பநாள் கொண்டாட்டம்னு அழகா சொன்னா என்னா குறைந்தா போயிடும். விட்டா என் பிளாக்குக்கு காரியம் செஞ்சிடுவாங்க போலிருக்கு.
"இப்போ எதுக்கு அதுக்கு எல்லாம் போகனும்?"ன்னு சொன்ன போது வழக்கம் போல பொய் வரிசையா சொல்லிகிட்டே இருந்தேன். யோசிச்சு சொன்னா தான் எனக்கு பொய் உடான்ஸ் ஆகிடும். யோசிக்காம சொன்னா சும்மா டான்ஸ் ஆடும்.
"அதாவது நான் ஒரு மூத்த பதிவர் இல்லியா, எனக்கு பாராட்டு விழா நடத்த தான் எல்லா பதிவர்களும் வர்ராங்க. அதான் கதிர் என்னை அங்க ஒரு உதாரணபுருஷனா.. சாரி உதாரண பதிவரா நிக்க வச்சு புது பதிவர்களுக்கு பாடம் எடுக்க போராரு"
எனக்கு தானே தெரியும். நிக்க வச்சு "இந்த பாருங்க மக்கா, அஞ்சு வருஷம் ஆகியும் பெரிசா எதும் முன்னேற்றம் இல்லை. இவரு போல இல்லாம நல்லா எழுதனும்"ன்னு உதாரணம் காமிச்சு பேசுவார்ன்னு:-(
"சரி உங்களை கூப்பிட்டு பாராட்டு விழா நடத்தினா என்ன குடுப்பாங்க?"
கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னேன். "பொற் கிழிதான்", வர்ரேன்னு சொல்லிட்டு வராம போனா கிழி கிழின்னு கிழிப்பாருன்னு உங்களுக்கே தெரியும். கல்யாண பரிசு பைரவன் மாதிரி ஈரோட்டில் இருந்து வரும் போது ஒரு மாலை வாங்கிகிட்டு வரவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன்.
இயற்கை ராஜிகிட்டே கேட்டுகிட்டேன். வந்தா சோறு போடுவீங்களா?ன்னு. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமைன்னு பதில் வந்தது. ச்சே மத்திய அரசு ரொம்ப கெடுத்து வச்சிருக்கு எல்லாரையும்.
இத்தனை முஸ்தீபுகள் நான் செஞ்சாலே அதுக்கு போக முடியாம போயிடும் என்பதுக்கு இதும் ஒரு உதாரணம். ஒரு நல்ல நிகழ்சியை மிஸ் பண்ணிட்டேன்.அடுத்த தடவை.. ம் சொல்ல மாட்டேன்.
****************
வழக்கம் போல மயிலாடுதுறையில் அரசாங்க பொது மருத்துவமனை இரண்டாம் முறையாக , "முறையாக" அமைச்சர் பெருமக்களால் திறந்து வைக்கப்பட்டது.அமைச்சர்களே உங்களுக்கு தான் தெரியுமே எங்களை பற்றி, இனிமேலாவது அடிக்கல் நாட்டும் போதே திறப்புவிழா கல்வெட்டையும் திறந்து விடுங்கள். மயிலாடுதுறை ரயிலாக இருந்தாலும் சரி, பாலமாக இருந்தாலும் சரி, மருத்துவமனையாக இருந்தாலும் சரி, கட்டி முடித்த பின் உடனே திறக்காமல் அமைச்சருக்காக வெயிட்டிங் என்கிற சாக்கு போக்கு எல்லாம் எங்க கிட்டே வேண்டாம். அப்படி இல்லாவிட்டால் 29.12.2010 ஜூவியில் 29ம் பக்கத்தில் வந்த மாதிரி செய்தி போடுவாங்க.ஜாக்கிரதை ஆமாம்.
****************
எங்கள் பள்ளி தி.ப.தி.அர. தேசிய மேல்நிலைப்பள்ளி 55000 சதுர அடியில் சுமார் ஆறு கோடி மதிப்பீட்டில் இப்போது இருப்பதை இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட இருக்கின்றது. அது பற்றிய மேலதிக விபரங்கள் எங்க பள்ளியின் "தாயின் புன்னகை" வலைப்பூவில் பார்க்கவும். அதன் முன்னர் அபிஅப்பாவின் வலைப்பூவில் கட்டி முடிக்க இருக்கும் பள்ளிக்கூடத்தின் படம் வெளியிடுவதில் எல்லையில்லா மகிழ்சி!
***************
கடந்த ஒரு வாரமாக எனக்கு தமிழ்மணம் திறக்கவேயில்லை. இது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு தெரியலை. ஆனாலும் தமிழ்மணம் இல்லைன்னா கைநடுக்கம் அதிகம் ஆகுது என்பதும் உண்மை தான்.
************
வலைப்பூ ஆரம்பித்ததில் இருந்து இந்த வருசம் மிகக்குறைந்த அளவிலேயே பதிவுகள் இட்டுள்ளேன். என் அலுவலகத்தில் என் மேசையில் என் நாற்காலியில் அடக்கமா உட்காந்துகிட்டு வஞ்சனையில்லாம பதிவு போடும் சுகம் ஆஹா ஓஹோ தான். "என்னங்க பசங்க ஸ்கூல் பீஸ் கட்டிட்டு வாங்க, என்னங்க ஈ பி பணம் கட்டிட்டு வாங்க, என்னங்க பாலு வீட்டு கல்யாணம் விசாரிச்சுட்டு வாங்க தொல்லைகளுக்கு நடுவே என் எழுத்துப்பணி(????) தடை பட்டுப்போவது உண்மையோ உண்மை. எதிர்வரும் 2011 (கூட்டு எண் 4, என் பிறந்த தேதி கூட்டு எண் 4 ஆகா சூப்பர்.. பகுத்து அறிந்த விசயம் ) எனக்கு பிரைட்டா இருக்கும் என நாழியூர் காராயணன் மீது சத்தியமாக நம்புகிறேன்.அடிக்கடி இனிமேல் எழுத முயற்சிப்பேன். இது எச்சரிக்கை:-)
அப்படியாகநாங்கள்கலக்கத்தில்இருந்தபோதுதான்ராதாகைநிறையஅசோகசிங்கஸ்டாம்பும், காக்கிகவருமாகவந்தான். அவன்அப்பாகிட்டேஇந்தியாமேப்வாங்ககாசுவாங்கஅவர்வேலைசெய்யும்தாலுக்காபீஸ்போனபோதுஅவர்அக்கம்பக்கம்திரும்பியநேரத்தில்அவர்டேபிளில்இருந்துஅடிச்சுட்டுவந்ததைபெருமையாகசொன்னபோதுஏதோகுவாட்டருக்குவடிவேல்சைட்டிஷ்க்குபதிலாசெய்வதுபோலகட்டிபிடித்துஉச்சிமுகர்ந்தேன்.(புலிமார்க்வாசனைசீயக்காய்தூள்போலிருக்கு) ஆளுக்குகொஞ்சமாஅரசாங்கசொத்தைபாகம்பிரிச்சுகிட்டுஇருக்கும்போதுதான்ராதாசொன்னான். "இந்தகாக்கிகவர்லகோழிகிறுக்கினதுபோலஎழுதனும். மறக்காமநம்மோடபெயருக்குகீழேத/பென்னுபோட்டுஅப்பாபெயரைஎழுதனும். கவர்மெண்டுகடுதாசின்னாஎம்ப்ளதுவயசானாலும்அப்பாபேரைபோடுவானுங்கஅப்பதான்போஸ்டுமேனுக்குசந்தேகம்வராது" எனசொன்னான். நான்அதற்குஎன் பங்காக "அப்படியே உன் பேனாவிலே இங்கிலே பாதி தண்ணி ஊத்தி எழுதனும்"என்றேன். ஏன் என அவன் கேட்டதுக்கு "எங்க அப்பா ஆபீஸ்ல டெஸ்பாட்ச் கிளார்கு ஒரு இங்க் பாட்டில்ல பாதிய வூட்டுக்கு எடுத்துட்டு போயிட்டு மீதி பாதில தண்ணிய ஊத்தி அதை தான் ஆபீஸ் முழுக்க குடுப்பாரு. அதான் எல்லா அரசாங்க கடிதாசும் நமக்கு வரும் போது சோகையா இருக்கும்.எல்லாடெஸ்பாட்சுகிளார்க்கும்அப்புடித்தானேஇருப்பாங்க. அதான்சொன்னேன்" என்றேன். அவனோட நான் கூட்டு களவானித்தனம் செஞ்சாலும் மாட்டிக்காம விஞ்ஞானப்பூர்வமா சித்திப்பேன்ல:-))
எல்லாம்நல்லபடியாகமுடிந்துநானும்அவனும்அவங்கஅவங்கவீட்டுக்குபோனதும்நேருஇந்திராவுக்குகடிதம்எழுதியரேஞ்சில் அவனும் அண்ணா தம்பிக்கு எழுதிய மாதிரி நானும் எழுதஆரம்பித்தோம்.எழுதபேப்பர்கிடைக்காமல்அவசரமாகபள்ளிகூடரஃப்நோட்கிழித்துஎழுதஆரம்பித்தேன். "அன்புள்ளராதா, நாளைக்குஎன்னவீட்டுப்பாடம்?" இப்படிக்குஉன்னைஎன்றும்மறக்காத, நீசெய்தஇந்தஸ்டாம்புதிருடினஉதவியைஎன்றும்மறக்காததொல்காப்பியன்" எனகடிதம்எழுதிஒட்டிகொண்டிருக்கும்போதேராதாஅவசரஅவசரமாகஓடிவந்தான். "என்னடாசிஐடிபோலீஸ்வச்சுநம்மைகண்டுபிடிச்சுட்டாங்களா?" எனகேட்டேன்.நாங்கசிஐடிலெவலுக்குஒர்த்இல்லைஎனினும்உள்ளுவதெல்லாம்உயர்வுள்ளல்என்கிறகோட்பாடுதான்.
இருந்தும்ராதாவுக்குஒரேக்யூரியாசிட்டி. நாங்கள்எப்படிமாட்டியிருப்போம்னு. தன்அப்பாவிடம் "அப்பாநீஎப்படிப்பாகண்டுபிடிச்சே"ன்னுகேட்கஅவர் "போஸ்ட்மேன்தான்கண்டுபிடிச்சார். என்னாண்டவந்துசொன்னார்"ன்னுசொன்னார். போஸ்ட்மேன்எப்படிகண்டுபிடித்தார்என்பதுபின்னர்தான்தெரியவந்தது. ஒருஆர்வத்தில்ராதா, அனுப்புனர்விலாசத்தில் "ஜனாதிபதி, செங்கோட்டை, புதுடெல்லி" எனதமிழில்எழுதிஎழுதிஅனுப்பியிருக்கான். டெல்லிலஇருந்துதமிழில்ஜனாதிபதிகிட்டஇருந்துஇவனுங்களுக்குலெட்டர்வருமான்னுதபால்காரருக்குசந்தேகம்வரவேநாங்கமாட்டிட்டோம்.அந்த காலத்தில் விசயகாந்து படம் எதும் நடிக்கவில்லை. நடித்திருந்தா ஸ்காட்லாந்து போலீஸ்கிட்டே தமிழ்ல பேசுவது, பாகிஸ்தானிகிட்டே பத்து பக்க தமிழ் வசனம் பேசுவது எல்லாம் பார்த்து தபால்காரரும் ஜனாதிபதி ஆபீஸ்ல இருந்து தமிழ்ல கடிதம் வந்ததை பெரிய விஷயமா நினைச்சு இருக்க மாட்டாரு.