பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 17, 2011

அரசியல் மிக்ஸ்! இன்றைய நிலை!!!!

இந்த அனானிங்க தொல்லை தாங்கலைப்பா. நான் பல்லிடுக்கில் சிக்கிய பாக்குதூளை பத்தி எழுதினதும் இவனுங்க ஆட்டம் தாங்கலை. இவனுங்க என்னா சொல்றாங்கன்னா என் அம்மாவை திட்டுவானுங்களாம் அதை நான் பிரசுரிக்கனுமாம். 4 பின்னூட்டம் அப்படி. பின்னாடி அதை ஏன் பிரசுரிக்கலைன்னு கேள்வி. உங்க கேள்வி நியாயம் தான். ஆனா என்னால பிரசுரிக்க முடியலை அனானி நாய்ஸ். பாவம் அம்மா, அது படு கிழவி, உங்க ஆசையை நிறைவேத்தி அது பாவத்தை ஏன் கொட்டிக்கனும்னு விட்டுட்டேன்.

அதை எல்லாம் விடுங்க. இப்ப பல்லிடுக்கில் சிக்கிய பாக்கு தூளுக்கு வ்ருவோம். இந்த அரசை எதிர்த்து போராட்டம்ன்னு ஆரம்பிப்பானுங்க பாருங்க. அங்க தான் காமடியே இருக்கு. "எனக்கு ஒபாமா மாதிரி சம்பளம் வேணும்"னு முதல்ல ஆரம்பிப்பானுங்க. அப்படியே பெருசா போகும். ரொம்ப பெருசா போகும். அரசும் இறங்கி வரும் பேச்சு வார்த்தைக்கு. ஆனா ஒத்துக்க மாட்டானுங்க. அடம் பிடிப்பானுங்க. உடனே தூக்கி உள்ள போடும். ரகளை நடக்கும். திரும்பவும் பேச்சு வார்த்தை. அப்ப ஒரு முடிவுக்கு வரும். என்னான்னா உள்ள பேச்சு வார்த்தைக்கு போனவன் வெற்றி வெற்றி"ன்னு கூவிகிட்டே வெளியே வருவான். "நம்ம கோரிக்கையை அரசு ஏத்துகிடுச்சு. பணிஞ்சுடுச்சு"ன்னு கூவுவான். உடனே வெளியே இருப்பவன் வெற்றி வெற்றின்னு கூப்பாடு போடுவான். என்னடா வெற்றி என்னடா கோரிக்கைன்னு பார்த்தா " ஸ்ட்ரைக் நடந்த இந்த பத்து நாளுக்கும் சம்பளம் வேணும், இதிலே ஒழுங்கு நடவடிக்கை எடுத்தவங்களுக்கு அந்த கேசை வாபஸ் வாங்கனும்" இது தான் கோரிக்கையா இருக்கும். அதை அரசு ஏத்துக்கும். ஆக தொழிலாளி கேட்டதை அரசு ஒத்துகிச்சு அதாவது பேச்சு வார்த்தையில். அரசு மறைமுகமாகவும் நேர்முகமாகவும் மிரட்டியதுக்கு பணியலை என்பது அரசுக்கு மட்டுமே தெரியும். ஆனா கூப்பாடு என்னவோ பயங்கரமா இருக்கும். நான் ஏன் இதை சொல்றேன்னா 110 சீட்டு, துணை முதல்வர், 3ல் ஒரு பங்கு அமைச்சர் இதல்லாம் கோடிக்கையா வச்சு அது 90 சீட்டா ஆன பின்னே நான் ஒரு பது போட்டேன். அதாவது "அந்த 89க்கு பின்னே வருமே அந்த 90 ஆ"ன்னு. நான் அந்த 110 மற்றும் அந்த 5 அம்ச கோரிக்கை எல்லாம் கூட சொல்லலை. ஆனா அப்பவே கலைஞர் 60ன்னு இருககாரு. ஆனா 63ன்னு இப்ப முடிவாகிடுச்சு.

ஆனா வெற்றி வெற்றின்னு கூப்பாடு போடும் இவங்களை பத்தி "எலேய் நீங்க கேட்டது 5 அம்ச கோரிக்கை என்னாச்சு? 110 என்னாச்சு? புதுசா என்னவோ K 72 ன்னு பார்முலா சொன்னானே ஒரு பையன் கார்த்திக் சிதம்பரம் அவன் கோரிக்கை என்னாச்சு? எவனாவது இது வரைபதிவுலகில் கேட்டானா இல்லியா இல்லை தானே? உடனே அடுத்த அஸ்திரம் "நாங்க கேட்ட தொகுதி வேண்டும்" ... என்ன சின்ன புள்ள தனமா இருக்கு? உங்களுக்கு எது வேண்டும்ன்னு கேட்க தெரியுமா முதல்ல? சரி அதுக்கு ஏன் 4 நாள் இழுத்தடிப்பு? அப்படின்னா கேட்டது எல்லாம் வந்துடுச்சா? அது போல போடி, தர்மபுரில உங்களுக்கு இடம் கிடைச்சுதா? அதாவது சின்ன சின்ன பையன் பார்முலாப்படி? என்னவோ போங்க.இப்ப கூட்டணி கட்சியா போயிடீங்க. அதனால தப்பிச்சீங்க.நாங்க காலை வாற மாட்டோம். உங்க இளைஞர் அணி தலைவர் எங்க தளபதியை பார்த்தாச்சு. ஈரோட்டிலே உங்களுக்கு வெற்றி தான். பீ கூல்... நாளை நடப்பதை நாம பார்ப்போம்.

அடுத்து... அதிமுக கூட்டணி பத்தி பார்ப்போம். அம்மாடியம்மோவ். ஒரு மாதம் முன்னே நாஞ்சில் சம்பத் மாயவரம் மீட்டிங் வந்தாரு. அப்பவே ஒரு திராவிட கட்சி பேச்சாளர் வருகின்றார்ன்னு மரியாதை நிமித்தமாக போய் பார்த்தோம். இதை ஒரு பதிவருக்கு கூட சொன்னேன். "தம்பிகளா, வாங்க என்னை கூப்பிட்டு பேச சொன்ன கட்சிகாரன் கூட வரலை. நீங்க வந்திருகீங்க"ன்னு சந்தோசமா பேசினாரு. நடுவே ஒரு வார்த்தை கூட விட்டாரு. "ஏம்ப்பா எதுனா கத்தி கித்தி எடுத்து வந்து இருக்கீங்களா?"ன்னு. அப்ப எங்க கூட வந்த ஒருத்தன் சொன்னான். "அண்ணே நீங்க பேசின பேச்சுக்கு நாங்க கொல்லனும்னு நினைச்சிருந்தா நீங்க செத்து 20 வருஷம் ஆகியிருக்கும் அண்ணே, அது போல நம்ம வெற்றிகொண்டான் அண்ணன் இந்நேரம் அப்பல்லோவிலே படுத்திருக்க மாட்டாரு அண்ணே, எப்பவோ பெரம்பலூர்ல சாம்பலா ஆகியிருப்பாரு அண்ணே": இதை கேட்ட நாஞ்சில் சம்பத் ஒரு நிமிடம் அழுதாரு.(அப்போது அண்ணன் வெ.கொ உயிரோடு இருந்தார்) ஆனால் அப்போது அவரை பார்க்க அந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்ச அந்த முக்கிய கட்சிகாரர்கள் யாரும் இப்படி வரவில்லை.

நான் இங்கே இப்போது தான் சொல்கிறேன். ஆனால் அன்றைக்கே ஒரு பழுத்த கலைஞர் எதிர்ப்பாளர் cum பதிவர் கிட்டே சொன்னேன் என்பதையும் இங்க சொல்லிக்கிறேன்.


ம் கம் டு தி பாயிண்ட்! காங்கிரஸ் திமுக போட்டியிடும் தொகுதிகளை வைத்தே ஜெ காய் நகர்த்துவார்ன்னு ஒரு பேச்சு இருந்துச்சு. அதாவது காங்கிரசுக்கும் திமுகவுக்கும் குடுமிபிடி சண்டையாம். அதானால திமுக காங்கிரசுக்கு ஓட்டு கேட்காதாம். ங்கொயால. எங்களுக்கும் காங்கிரசுக்கும் இருந்தது சும்மா பல்லிடுக்கில் சிக்கிய பாக்குதூள் மாதிரியான துக்கடா சண்டை. ஆனால் காடுவெட்டி குரு பேசிய பேச்சு அப்படி இல்லை. " கலைஞரின் தலையை சீவுவோம்"ன்னு பேசினாரு. ஆனா நடந்தது என்ன? காட்சிகள் மாறின. அப்பவும் குரு பிரச்சனை முடியவில்லை. உடனே ராமதாஸ் கலைஞரிடம் "உங்க பையன் குரு, நீங்க ஒரு சீட்டு தந்து ஜெயம்கொண்டான்ல ஜெயிக்க வைக்கனும்" ... இது பேச்சு. தமிழர்களின் சமாதான பேச்சு. "சரி நாளை கூட்டிட்டு வாங்க" இது கலைஞர். அடுத்த நாள் குருவுடன், டாக்டர் போகிறார். " குரு அய்யா கிட்டே நீ ஜெயம்கொண்டான்ல ஜெயிக்கனும்ன்னு ஆசி வாங்கு"--- இது டாக்டர். எல்லாம் நல்லபடியா நடக்குது. சரிசமமான சீட் கொடுக்கப்படுது குருவுக்கும். அங்க இருந்தே பெரம்பலூர் கட்சிகாரனுக்கு உத்தரவு போடுகின்ரார் கலைஞர். குரு ஊர் போய் சேரும் முன்னே அங்கு திமுக ஊழியர் கூட்டம் நடத்தி வெற்றி உறுதி செய்யப்படுகின்றது. அது போல நேற்று யுவராஜா போய் தளபதியை சந்திக்கின்றார். "நீ மத்த தொகுதிக்கு போப்பா, நானாச்சு உன் ஈரோட்டிலே ஜெயிக்க, அப்படி எதுனா தோத்தா நான் ரிசைன் பண்ணிட்டு அங்க உனக்கு சீட்... அதானால நீ தைரியமா போய் மத்த தொகுதியை கவனி"... இது தான் திமுக. யுவராஜா இனி இந்த கூட்டனி ராஜா. இளங்கோவன் எங்க ஆளு. இப்படியாக போய் கொண்டு இருக்கின்றோம். இருக்கின்ரனர். இப்போது சொல்லுங்க. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் அதிமுக போட்டியிட்டா என்ன அந்த ஆண்டவனே போட்டியிட்டா என்ன? நாங்க இருக்கோம். எங்களுக்கு அவங்க இருக்காங்க. அது போல இன்று விடுதலை சிறுத்தைகள், பாமக வின் ஒற்றுமை. காண கண் கோடி வேண்டும். நாங்க இனி பிரிக்க முடியாத சக்தின்னு சொல்ராங்க. இது தான் கூட்டணி. இங்க கிடைக்க போவது தான் வெற்றி.

ஆனால் நேற்று முதல் அதிமுக கூட்டணியில் நடந்தது என்ன?

எல்லா உதிரி கட்சிகளையும் கூப்பிட்டு சீட் கொடுத்தாச்சு. ஆனால் இடதுசாரிகள், மதிமுக கூப்பிடப்படவில்லை. ஏன்? கடைசியாக மாக்சிஸ்ட் 19ம் தேதி வரை கெடு கொடுத்து 18 சீட் கேட்கிறாங்க. ஆனாலும் கூட தா.பாண்டியன் என்கிற அதிமுக விசுவாசி இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் அமைதிகாக்கின்றார். பின்னர் ஏதோ ஒதுக்கப்படுகின்றது. ஆனாலும் கூட மதிமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. மாலை 4 மணிக்கு தேமுதிகவின் மச்சான் சுதீஷ் வருகின்றார். "எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டை நானே கையெத்து போட்டு வாங்கி போகின்றேன். எங்க தலைவர் தான் எங்க தலைமையகத்தில் இருந்து வெளியிடுவார்" என சொல்கின்றார். கொடுத்து விட்டார் ஜெ. ஆனால் நடந்தது என்ன? அவர்களுக்கு கொடுத்த இடத்தில் எல்லாம் அதிமுக வேட்பாளர் படியல் வெளியாகின்றது.

அதன் பின்னர் நடந்து எல்லாம் எல்லாருக்கும் தெரியும். இப்போது தேமுதிக கட்சியின் தலைமையில் 3 வது அணி அமைய போகின்றது. இது ந்டக்குமா நடக்காதா என தெரியாது. ஆனால் விசயகாந்து விதித்த நிபந்தனை இப்போது 1. மதிமுகவுக்கு சீட் கொடுக்க வேண்டும். (இதில் விசய்காந்தின் நல்ல மனது தெரிகின்றது) 2.தேமுதிக கேட்ட அதாவது அதிமுக அறிவித்த வேட்பாளர்களில் 20க்கும் மேல் தேமுதிகவுக்கு மீண்டும் வேண்டும், 3, தேர்தல் பிரச்சாரம் எல்லாம் எங்க்ளை கேட்டு தான் முடிவு செய்ய வேண்டும்) சூப்பர். சூப்பர்.. இதை ஜெ எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதை ஜெ ஒத்து கொண்டால் அது ஜெ இல்லை. அடுத்து இனி எவனும் ஜெ க்கு காலில் விழ மாட்டன். அடுத்து முக்கியம் திமுகவுக்கு எதிர்கட்சி அதிமுக இல்லை விசயகாந்து மட்டுமே.

இதல்லாம் நடக்குமா? நடக்கவே நடக்காது. விசயாக்ந்தும் சரி ஜெவும் சரி. நான் என்கிற அகந்தை கொண்டவர்கள். இது இரண்டும் ஒரு இடத்தில் இருக்க முடியாது. ஆனால் அங்கே தா. பாண்டி இருக்காரு. அவரு ஜெவின் விசுவாசி. வைக்கோவை விட இன்னும் அதிகம். பார்ப்போம். நானும் உங்களைப்போல ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

ஆனால் இந்த நிமிடத்தில் நான் நேற்று நினைத்து பார்த்தது. அதாவது மருதமலை என்னும் படத்தில் வரும் சிரிப்பு காட்சி, இதில் கடைக்கார சிங்கமுத்து ஜெ, சிரிப்பு போலீஸ் வைகோ, பிச்சைகாரன் கார்திக் என நினைத்து பாருங்கள். சிரிப்பு நிச்சயம்.... இ...னி நடப்பதை பர்ப்போம்..

6 comments:

  1. அதாவது, மீசையில மண் ஒட்டலன்றீங்க..

    ReplyDelete
  2. சிரிப்புச் சேனல்கள்ல அடிக்கடி போடுற இந்த 'மருதமலை' காமெடியெ ஒரு நூறு தடவையாவது பார்த்திருப்பேன், ஆனா உங்க பதிவுல பார்த்துச் சிரிச்ச அளவுக்குச் சிரிச்சதே இல்ல.

    ReplyDelete
  3. Aiyo, Aiyo... Ore comedy anna unga kuda....

    ReplyDelete
  4. //அதாவது, மீசையில மண் ஒட்டலன்றீங்க..//

    அதேதான்.

    ReplyDelete
  5. காறிதுப்பிய பாக்குத்தூளை மீண்டும் எடுத்து சாப்பிட்ட பிறகு இந்த பதிவு தேவைதானா?

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))