பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 16, 2011

மயிலாடுதுறையில் சிறை சென்ற சிங்கங்கள்!!!

போராட்ட வீரர் திரு . வெற்றிச்செழியன் அவர்கள் "சமச்சீர்" வெற்றிச்செழியன் ஆகின்றார்
நகர்மன்ற தலைவர் லிங்கராஜனுக்கு சமச்சீர் விருது வழங்குபவர் மாவட்ட செயலர் ஏ கே எஸ் விஜயன்
நடுவே கைதட்டி கொண்டு இருப்பது தான் ரங்கன்மாமா

நகர செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ் சமச்சீர் விருது வாங்குகின்றார். அருகில் சீர்காழி மு.ச.ம.உ வக்கீல் பன்னீர்செல்வம்
வக்கீல் சேயோன் அவர்களுக்கு சமச்சீர் விருது
முன்னாள் ச.ம.உ ஜெகவீரபாண்டியனுக்கு சமச்சீர் விருது
தம்பி சத்யாவுக்கு (நகர் மன்ற து. தலைவர்) சமச்சீர் விருது
நா.முருகதாஸ் அவர்களுக்கு சமச்சீர் விருது
செந்தில் என்கிற சண்முகம் (33வது வார்டு பிரதிநிதி) சமச்சீர் விருது வாங்கிகுகின்றார்
நகர்மன்ற உறுப்பினர் ஆர். கே. சங்கர் அவர்கள் விருது வாங்கும் போது
சமீபத்தில் நடந்த சமச்சீர் கல்வி போராட்டத்தின் போது கிட்ட தட்ட எல்லா ஊர்களிலும் கைது செய்து ஒரு கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்து விட்டுட்டாங்க. ஆனால் எங்க மயிலாடுதுறையில் மாத்திரம் அங்கு போராடிய அத்தனை பேரையும் கைது செய்து அட்மாஸ் திருமண மண்டபத்தில் அடைத்த போது எண்ணிக்கை கிட்ட தட்ட ஆயிரத்தை தாண்டிவிட்டது. கிட்டதட்ட எல்லோருமே ஒரு மஞ்சள் பையில் மூன்று செட் வேட்டி சட்டை துண்டு, உள்ளாடைகள், ஒரு ரப்பர் ஸ்லிப்பர் (சிறையில் தண்ணீர் தொட்டிகள் புழங்க வேண்டுமே அதற்காக) ஒரு சைபால் டப்பா (இதும் முன்னெச்சரிக்கை தான். அங்கே கூட்டம் அதிகம் இருக்கும். இரவில் ஒரே செல்லில் நாற்பது பேர் வரை படுக்க வேண்டி இருக்கும், அங்கே ஒரு டாய்லெட் இருக்கும், அதை ஒரு மண் சட்டி கொண்டு மூடி இருப்பாங்க. இரவு இந்த நாற்பது பேரில் யாருக்காவது "அவசரம்" எனில் ஒரு அதிலே தான் போக வேண்டும். அதை மீதி 39 பேரும் வேடிக்கை பார்ப்பாங்க என்னும் நினைப்பிலேயே வெட்கத்திலேயே வந்ததும் உள்ளே போயிடும். அந்த தொல்லைக்காகவே ஒரு துண்டு எடுத்து தன் இரு கைகளாலும் மறைப்பு (விதை மறை காய் மறைவாங்க:-)) கட்டிக்கொண்டு போக வேண்டும். அந்த துர்நாற்றம் மீதி இருக்கும் 39 பேரின் தூக்கத்தையும் கெடுத்து விடும். அதனால் மாலை 5 மணிக்கு கொடுக்கப்படும் அச்சடித்த சோறு பட்டையையும் முள்ளங்கி சாம்பாரில் முள்ளங்கியை தூக்கி எறிந்துவிட்டும் சாப்பிட்டு தட்டை கழுவி நம் செலில் வைத்துவிட்டு உடனே பொதுக்கழிப்பிடம் போய் முக்கி முக்கி வந்தவரை ஏதோலாபம் என போய்விட்டு தான் "ரோல்கால்" பக்கம் ஓட வேண்டும். முள்ளங்கி சாப்பிட்டாம் இரவு ஒன்னுக்கு வந்து தொலையும். அதே போல மாலை 4 மணிக்கு கொடுக்கும் கடலை உருண்டை அல்லது வ்ந்த கடலை ஆகியவற்றை மடித்த்து வைத்து கொண்டால் இரவு பசிக்கும் போது சாப்பிடலாம், அல்லது அங்கே மிசா கதைகள் பேசுக்கொண்டே சாப்பிடலாம். ரோல்கால் முடிந்து மாலை ஆறு மணிக்கு செல்லின் உள்ளே போனால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தான் அந்த கதவு திறக்கப்படும். இப்படியாக ஒன்னுக்கு ரெண்டுக்கு எல்லாம் அடக்கி வச்சு அடக்கி வச்சு கான்ஸ்டிபேஷன் வந்து அது எல்லாம் முற்றி மூலவியாதி வருபவர்களும் உண்டு. அதே போல கழிப்பிடம் சுத்தமின்மையால் படை சொறி போன்றவைகளும் நூறு சத உத்தரவாதம். அதனால் தான் சைபால் டப்பா.

மேற்படி விஷயம் எல்லாம் ரங்கன் மாமா போன்ற போராட்ட பழங்கள் எல்லாம் சொல்ல சொல்ல சின்ன வயது போராளிகள் குறித்து கொண்டனர். ஆனால் மதியம் இரண்டு மணி வாக்கில் "எல்லா ஊர்களிலும் வெளியே விட்டுகிட்டு இருக்காங்கப்பா" என தகவல் வர சிலர் அட்மாஸ் திருமண மண்டபத்தை விட்டு வெளியே வந்துவிட, மற்றவர்கள் " ஏய் மாப்ள கொஞ்சம் நில்லு. என் பையை வீட்டிலே கொடுத்துடு. அதான் நாங்க சாயந்திரம் வந்திடுவோம்ல" என சொல்லி பையை கொடுத்தனுப்பிவிட்டனர்.

ஆனால் மால ஆறு மணி ஏழு மணி எட்டு மணி ஆனதும் ஒரு சப் இண்பெக்டர் வந்து ஒரு 45 பெயர்களை படிச்சு, "நான் படிச்ச லிஸ்டுல இருக்குறவங்க மாத்திரம் இங்க இருங்க, மீதி எல்லாரும் ஓடுங்க" என சொல்ல ஒரே குழப்பம் அங்கே. இந்த 45 பேருக்கும் ஓரளவு புரிந்து போனது. "இங்க பாருங்கப்பா, இந்த 45 பேரும் உங்க செல் போனை எல்லாம் கொண்டு வந்து மேசை மேல வையுங்கப்பா என சொல்ல உடனே வக்கீல் சேயோன் அவரை நோக்கி " என்ன சார் விஷயம் என்னான்னு சொல்லுங்க" என கேட்க அவர் அதற்கு "உங்க 45 பேர் மேல வழக்கு போட்டிருக்கோம், அடிதடி, கொலைமுயற்சி, அரசாங்க ஊழியரை வேலை செய்யவிடாமல் தடுத்தல், அத்து மீறி கல்விக்கூடங்கள் மேல் நுழைந்ததும் இல்லாமல் மாணவர்களை தாக்கியும் பள்ளி சொத்தை சேதப்படுத்தியும்..." என அவர் அடுக்கி கொண்டே போக வக்கீல் சேயோன்... "சரி மொத்தம் எத்தனை செக்ஷன்? அதை சட்டுபுட்டுன்னு சொல்லுங்க. மாஜிஸ்ட்ரேட் கிட்டே எப்போ கொண்டு போகப்போறீங்க? அதுக்கு முன்ன நாங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு போன் செய்யனும்" என சொல்ல அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

எல்லார் வீட்டிலிருந்தும் அதே மஞ்சள் பை வந்தது. அதற்குள் திமுக சீனியர் வக்கீல் முருகு. மாணிக்கம் அண்ணனுக்கு தகவல் போய் அவரும் வந்தார். "யார் உங்களுக்கு புகார் கொடுத்தது? யாரை கொலை செய்ய இவங்க முயற்சி செஞ்சாங்க? என வரிசையாக கேட்க "அதிமுக நகர செயலர் செந்தமிழன் கொடுத்த புகார்" என சொல்லப்பட்டது. இரவு உணவு போலீஸ் கொடுக்க தயாராக இருந்ததா இல்லையா என தெரியாது, ஆனால் நகர திமுக சார்பாக 5 இட்லி கொண்ட பொட்டலம் கொடுக்கப்பட்டது. இரவு இரண்டு மணி வரை பேச்சும், குழப்பமுமாக இருக்க ஒரு பஸ் கொண்டு வந்து எல்லோரும் ஏற்றப்பட்டனர். எங்கே போகிறோம் எதற்காக போகிறோம் என யாருக்கும் எதும் புரியவில்லை. இரவு இரண்டு மணிக்கு அந்த வாகனம் புழுதி கிளப்பி போகும் போது அந்த 45 பேரில் பலர் 24 மணி நேரம் முன்பாக அதே சாலையில் திமுக கொடிகள் கட்டிக்கொண்டும் , சுவர் விளம்பரம் செய்து கொண்டும் அடுத்த நாள் நடக்க இருக்கும் போராட்டம் பற்றி அதை வென்றெடுக்க வேண்டும் என்கிற வெறியுடன் வேலை செய்து விட்டு "உன்னிடம் காசு இருக்கா? என் கிட்டே 20 ரூபா இருக்கு, பத்து டீ வாங்கியாயேன்" என பகிர்ந்து குடித்த டீ ஞாபகம் வர வைத்தா டீக்கடை கடந்து போனது இவர்கள் பேருந்து. இரவு முழுக்க அப்படி கண் விழித்து விட்டு காலை 5 மணிக்கு போய் படுத்து 8 மணிக்கு போராட்டத்துக்கு வந்து இதோ இந்த இரவு 2 மணிக்கு எங்கே போகிறோம், எத்தனை நாள் சிறைவாசம் என தெரியாமல் போய் கொண்டு இருந்த அந்த திமுக தொண்டனுக்கு முகம் தான் சோர்வாக இருந்ததே தவிர இதயம் சிரித்து கொண்டு இருந்தது. தலைவனின் கட்டளையை போராட்டத்தை வெற்றியாக்கிய மமதை மனதில் எக்காளமிட்டு கொண்டிருந்தது.

பேருந்து போய் நின்ற இடம் ஒரு பெண் நீதிபதி வீடு. அவங்க வரிசையாக பெயரை படித்து விட்டு நீங்க இன்னன்ன குற்றம் செஞ்சு இருக்கீங்கன்னு புகார். இது சம்மந்தமா எதும் சொல்றீங்களா? என கேட்க வக்கீல் சேயோன் "கேஸ் ஆடுறோம்மா. ஏன்னா நாங்க எந்த குத்தமும் செய்யலை" என சொல்ல அதற்கு நீதிபதி அம்மையார் "அப்படின்னா உங்க எல்லாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கிறேன்" என சொல்ல டப்பு டுப்புன்னு எழுதிய பழுப்பு அரசாங்க காகிதம் மதிப்பிற்குரிய காகிதமாக ஆகி, அரசாங்க முத்திரை, பச்சை கையெழுத்து என அரசாங்க ஆவணம் ஆகியது. அதற்கு ஐந்து நிமிடம் வரை சாதாரண காகிதம் இப்போது ஒரு 45 பேரை சிறையில் அடைக்கும் கொடிய வஸ்துவானது.

பேருந்து திருச்சி மத்திய சிறை நோக்கி போனது. காலை 6 மணிக்கு திருச்சி மத்திய சிறை. வரிசையாக பெயர்கள், அப்பா பெயர், அம்மா பெயர், சாதி, வீட்டு விலாசம், உட்பட சகல குறிப்பும் எடுக்கப்பட்டு கைரேகை உருட்டப்பட்டு, அரைஞான் கயிறு அறுக்கபட்டு, கையிலே போட்டிருந்த மோதிரம், கடிகாரம் கழட்டப்பட்டு, மூக்கு கண்ணாடி மட்டும் அணிந்த, வேட்டி சட்டை கட்டிய அம்மண மனிதனாக உள்ளே போயினர் அந்த 45 உடன்பிறப்புகளும்.

ஒரு வாரம் பின்னர் ஜாமீனில் வெளியே வந்து இப்போது வழக்கு நடக்கின்றது. கடந்த 07/09/2011 அன்று அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் மாவட்ட செயலர் ஏ கே எஸ் விஜயன் தலைமையில் சிறை சென்ற சமச்சீர் தொண்டர்களுக்கு பாராட்டு விழாவும் கேடயமும் வழங்கப்பட்டது.

நகரச்செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ், நகர்மன்ற தலைவர் லிங்கராஜன், துணைத்தலைவர் தம்பி சத்யா, முன்னாள் ச.ம.உ ஜெகவீரபாண்டியன், நா. முருகதாஸ். ஆர்.கே.சங்கர், செந்தில் என்கிற ப. சண்முகம், நகர அவைத்தலைவர் டி எஸ் கே , வக்கீல் சேயோன், செட்டியார் சீனுவாசன், தங்கபாண்டியன், செந்தில் என எல்லோர் முகத்திலும் சிறைக்கு சென்று வந்த கவலை எதும் இல்லை. இனி அவர்களின் பெயர் முன்னே "சமச்சீர்" என்னும் பட்டம் தானாக ஒட்டிக்கொண்டது. யாரும் கொடுக்கவில்லை. தானாக வந்து ஒட்டிக்கொண்டது அந்த "சமச்சீர்" பட்டம்! வாழ்க அந்த உடன்பிறப்புகள்!


11 comments:

  1. என்னால் தமிழ்மணத்திலோ, இண்ட்லி, உடான்ஸ் எதிலயும் இனைக்க முடியவில்லை. யாராவது சேர்த்து விடுங்கப்பா. புண்ணியமா போகும்!

    ReplyDelete
  2. ” தலைவனின் கட்டளையை போராட்டத்தை வெற்றியாக்கிய மமதை மனதில் எக்காளமிட்டு கொண்டிருந்தது””......... ஆஹா

    -சரபோஜி

    ReplyDelete
  3. இது கண்மூடித்தனமான பக்தி என்றோ, உண்மையாக மக்களுக்கு சேவை செய்யும் எண்ணமோ, தொண்டர்களை வளரவிடும் எண்ணமோ எந்த கட்சி தலைவருக்கும் இல்லை என்று உங்களுக்கு தோன்றவில்லை?

    உங்கள் பதிவில் வந்து கும்மி அடிப்பதாக எண்ணினால் கமெண்டை நீக்கி விடுங்கள்.

    ReplyDelete
  4. கொள்கைக்காவே வாழ்பவன் திமுககாரன்

    ReplyDelete
  5. miga arputhamaanavargal niraya ezhuthalaam ivargalil palarai patri

    ReplyDelete
  6. i know that fucker senthamilan during my colleeg days , he is one of the worst fellows i never met in my life.. i dont know how he become a politician , a worst womanaiser in the junction area

    ReplyDelete
  7. நீ ஒரு லூசு அந்த 45 பேரும் உலம மகா லூசு ஏண்டா அம்பி நீ ஏதாச்சும் ஜெயிலுக்கு போனா தமிழ் பதிவுலுலகம் நல்லா இருக்குடமா சீக்கிரமே போடா

    ReplyDelete
  8. இந்த மூஞ்சியேல்லாம் 420ன்னு பார்தாலே தெரியுது. இதுங்களுக்கு பரிசு ஒரு கேடு. எவனாவது திமுகாரன்னு தைரியமாக தமிழக மக்கள்கிட்ட சொல்லுங்கிடா

    ReplyDelete
  9. Epdi ungalala kana moodikitu Karunanidhiya aatharikamudiyuthu?

    ReplyDelete
  10. Even I dont like DMK, but I like your writing-flow..


    Keep it up Sir.. I really njoing your Tamil..(sorry I dont have tamil-keypad in my system..thats i typed this in english..)

    -Rk

    ReplyDelete
  11. Winners never quit! We will never Quit!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))