பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 1, 2011

கனிமொழி விடுதலையை நாங்கள் பார்த்து கொண்டோம்! மூவரின் விடுதலை என்ன ஆனது ச்ச்சீ'மானே?

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குதண்டனை எதிர்நோக்கியிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் கண்டிப்பாக தூக்கில் தொங்க வேண்டும் என்பதில் சீமான் ஆசைப்படுவதாகவே நம்புகிறேன். ஏனனில் அந்த மூவருக்கும் 3 மாதம் முன்னதாக துக்கிலிட செய்யப்பட்ட முஸ்தீபுகளின் போது இலங்கையை சேர்ந்த முருகன் தன் உடலை சீமானிடம் கொடுக்க வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து இருந்தார். அப்படி ஒரு நிகழ்வு நடக்குமேயானால் சீமான் இன்னும் கொஞ்ச காலம் அந்த பிணத்தின் மீது நின்று "தமிழ், தமிழன் " என கூப்பாடு போட்டு அடிமட்ட அரசியல் செய்திருக்க முடியும்.

அந்த நேரத்தில் திமுகழகம் "அதிமுக அரசு இந்த மூவரின் விடுதலைக்காக அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்து ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும். அப்படித்தான் நாங்கள் தியாகு, புலவர் கலியபெருமாள் ஆகியோரை காப்பாற்றினோம்" என சொன்னபோதும், திமுக தொண்டர்கள் கூட மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுத்த போதும் எங்கே தன் பிண அரசியல் இவர்களால் செல்லாக்காசாகிவிடுமோ என்று நினைத்த சீமான் "கருணாநிதியே கனிமொழியின் ஜாமீனை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள், மூவரின் விடுதலையை நாங்கள் பார்த்து கொள்கிறோம்" என கொக்கரித்தார். திமுகவின் தொண்டர்களும் "போடா வெண்ணை" என போய்விட்டனர். இதோ கனிமொழி ஜாமீனில் வெளியே கொண்டு வந்தாகிவிட்டது. நீங்கள் திமுக தொண்டர்கள் வாயை அடைக்க அப்போது போட்ட கொக்கரிப்பு என்ன ஆயிற்று? மூவரின் விடுதலைக்காக துறும்பையாவது கிள்ளிப்போட்டீங்களா? இல்லை... ஏன்? உங்கள் பிண அரசியல் அஸ்தமித்துவிடும் என்கிற மனோபாவம் தானே?

தமிழக அரசு மூவரின் விடுதலை சம்மந்தமாக தீர்மானம் போட்ட போது அந்த தீர்மானம் ஒன்றும் அவர்களை காப்பாற்றிவிட முடியாது என தெரிந்து "ஆகா ஓகோ" என சீமான் வகையறாக்கள் கூப்பாடு போட்டு பாராட்டு விழாவும் நடத்தின. ஆனால் அதே வழக்கு உயர்நீதிமன்றத்தில் வந்த போது தமிழக அரசு "அந்த மூவரையும் தூக்கிலிட எந்த வித ஆட்சேபனையும் இல்லை, தீர்மானம் போட்டதெல்லாம் ஊலூலூலாய்க்கு" என சொல்லிவிட சீமான் கோஷ்டியினர் சீமான் வாயில் இருந்து உதிரும் முத்துகளுக்காக ஏங்கிய போது வாய்திறந்தார். என்னவென்று... தமிழகம் தழுவிய ......தமிழகம் தழுவிய ......தமிழகம் தழுவிய......... கோலப்போட்டி நடத்தப்படும் " என்று. இதை படிக்கும் நண்பர்கள் உடனே ஆவலாய் கேட்க இருக்கும் கேள்வி... ஏன் கலைஞர் அதை செய்து அந்த மூவரையும் விடுதலை செய்திருக்க கூடாது என்பதற்கு சக வலைப்பதிவர் நண்பர் யுவகிருஷ்ணா அழகான பதில் சொன்ன பின்னர் நான் அதை தாண்டி அழகாய் சொல்லிவிட ஏதும் இல்லை என்கிற காரணத்தால் அதையே கொடுக்கின்றேன் பதிலாக. \\ சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகிய நான்கு பேர் மீது என்ன குற்றம் சாட்டப்பட்டதோ, அதே குற்றம்தான் கலைஞர் மீதும் ஜெயின் கமிஷனால் சாட்டப்பட்டது. என்ன சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட முடியவில்லை என்பதுதான் வித்தியாசம். 91, மே 21 சம்பவத்தால் அதிகம் இழந்த இயக்கம் திமுகவே. இது வரலாறு. எவனாலும் மாற்றி எழுதிவிட முடியாது. “இதில் எங்களுக்கு சம்பந்தமில்லை. விடுதலைப்புலிகளே காரணம்” என்று எந்த இக்கட்டான சூழலிலும் காட்டிக் கொடுக்காத நேர்மை கலைஞருக்கு இருந்தது.
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு ஆயுள்தண்டனையாக தண்டனையை குறைத்தவர் கலைஞர். அவரே ஏற்கனவே சொன்னபடி, அவரால் எந்த நேரத்துக்கு எது முடியுமோ, அதை மட்டும்தான் செய்யமுடியும். கலைஞர் சூப்பர்மேனோ, கடவுளோ அல்ல. அவ்வாறு இருந்திருந்தால் அவரது மகள் 192 நாட்கள் திகார் சிறையில் வாட விட்டிருக்க மாட்டார் \\ இதுதான் உங்கள் ஆர்வ கேள்விக்கு பதில்.

அய்யோ தவறான வழிகாட்டுதலில் நாம் நம் சக்தியை விரயமாக்கிவிட்டோமோ என நினைத்த நாம்தமிழர் இயக்க தொண்டர்கள் மெல்ல மெல்ல விலக தொடங்க ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் சீமானோ இண்ஸ்டண்ட் ஈழத்தாய் ஜெயாவின் அடாவடித்தனத்தை பற்றியோ, ஈழம் பற்றி பேசினால் நடத்தப்படும் அடக்குமுறை பற்றியோ வாயை மட்டும் அல்ல எந்த துவாரத்தையும் திறக்கவில்லை. திறந்தால் நாடுதழுவிய கோலப்போட்டி நடத்திய அவரின் நாடா தழுவிய கேஸ் தூசி தட்டப்படும் என தெரியும் அவருக்கு.

நவம்பர் மாதம் பிரபாகரன் பிறந்தநாள் "மாவீரர் தினமாக" அனுஷ்டிக்கப்படும் என சினிமா வாய்பில்லாதபோது முழங்கிய சீமான் வகையறாக்கள் இப்போது அதிமுக அரசால் அந்த விழா தடை செய்யப்பட்ட போது "நாங்கள் ஒரு கதவடைத்த திருமண மண்டபத்திலாவது நடத்தி கொள்கிறோம்" என கெஞ்ச தான் முடிந்ததே தவிர வேறு என்ன செய்ய முடிந்தது உங்களால்?இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் ஈழப்போர்வை போர்த்திக்கொண்டு அரசியல் செய்ய உத்தேசம்? அவர்கள் ஏமாறும் வரையிலா? அல்லது உங்களை நம்பி ஏமாந்த மிச்ச சொச்ச தமிழ் இளைஞர்கள் உங்கள் கூட ஒட்டிக்கொண்டு இருக்கும் வரையிலா?

ச்சீ தூ வெட்கம்! இனி உங்களை சீமான் என்பதற்கு பதில் ச்சீமான் என்றே அழைத்து கொள்ளுங்கள்!

29 comments:

  1. அப்ப கனி தப்பே செய்யவில்லை. ஜாமீனில் வந்தால் கூட பெரிய மேட்டர் ஆகா இது தான் திராவிடமா

    ReplyDelete
  2. இந்த மூன்று பெரும் தூக்கில் தொங்க வேண்டும் என்பதே தலைவரின் ஆசை

    ReplyDelete
  3. soniyaavidam kai yenthungal....aval illayendru solluvathillai......

    ReplyDelete
  4. One of the best from AbiAppa

    ReplyDelete
  5. அவனுக என்ன நாட்டுக்கு சுதந்திரம் வாங்குற போராட்டத்துலையா உள்ள போனானுக......கொலைக்கேசுல உள்ள போனவனுக தொங்கினா என்னய்யா தப்பு.....அதுலயும் அவுனுக கழுத்துலே குப்பி கட்டிக்கிட்டு சாவைத்துச்சமா நினைக்கிற வீரப்பசங்க....அவனுக போயி இப்படி கருணை மனு , குருணை மனு ன்னு போட்டு கிட்டு கெஞ்சுறது நல்லாவா இருக்கு...இதுக்கு தமிழ்க்குல வீரனுக சப்போர்ட் வேற

    ReplyDelete
  6. வைகோவையாவது பொடா கேஸில் தான் ஜெயலலிதா உள்ளே போட்டார், சீமானுக்கு அந்த கொடுப்பினை கூட இல்லை, அவர் ரேஞ்சுக்கு ரேப் கேஸ் தான் போல

    ReplyDelete
  7. சுதந்திரப் போராட்ட தியாகி கவிநர் கனிமொழி
    வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!

    ReplyDelete
  8. விடுதலைக்கும் ஜாமீனுக்கும் என்ன வித்தியாசம்னு தெரிஞ்சுட்டு வாங்க உ.பி.,
    அவ ஒரு திருடி, அதுலேருந்து ஜாமீன்ல வெளிவந்திருக்கா அதற்கு இவ்ளோ கொக்கரிப்பா....
    முதல்ல நீதிமன்றம் கனிமொழி குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கட்டும் அப்புறம் இந்தமாதிரியான பதிவை எழுதுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. பொசுக் பொசுக்னு சொம்பை வெளில எடுத்துடறாங்கப்பா..

    ReplyDelete
  9. டேய், போங்கடா நீங்களும் உங்க கலைஞர் புராணமும்...

    ReplyDelete
  10. விடுதலைக்கும் ஜாமீனுக்கும் என்ன வித்யாசம்னு எல்லாம் எங்களுக்கு தெரியும் அனானி சார்வாள்! பொத்திகிட்டு போங்க!

    ReplyDelete
  11. 1. //அவனுக என்ன நாட்டுக்கு சுதந்திரம் வாங்குற போராட்டத்துலையா உள்ள போனானுக//
    2. //முதல்ல நீதிமன்றம் கனிமொழி குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கட்டும் அப்புறம் இந்தமாதிரியான பதிவை எழுதுவதில் ஒரு நியாயம் இருக்கிறது//

    இந்த நியாயங்களைப் பதிவில சொல்லையே, கட்டாயம் நகைச்சுவைமாதிரி டேக் இருக்கும்னு நினைச்சேன். 'அரசியல் காமெடி'ன்னு டேக் போட்டிருக்கிறது இதுனாலியா?

    'கனிமொழியை முதல்வராக்கு!'
    கனிமொழி ரசிகையர் மன்றம்,
    ஓபாமா குறுக்குச் சந்து
    அமெரிக்கா.

    ReplyDelete
  12. அண்ணனுக்கு வணக்கம்,இந்த கட்டுரையில் நீங்கள் சொன்ன செய்தியில் ஒரு பிழை உள்ளது,அதாவது பிரபாகரன் பிறந்தநாள் தான் மாவீரர் நாள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அது தவறு,நவம்பர் 27 விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் களப்பலியான கேணல்.சங்கர் அவர்களின் நினைவு நாள்தான் மாவீரர் நாளாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் முன்னெடுக்கப்படுகிறது.
    நன்றி.

    இர.செந்தில்.

    ReplyDelete
  13. ஒரு மிகபெரிய நகைச்சுவை என்னன்னா இந்த சாமான் ஏனோ முல்லைபெரியாறு, கூடங்குளம் இதெல்லாம் மறந்துட்டு கோலபோட்டி. விவேக், சுந்தர் .சி ரெண்டுபேரும் ஒரு திரைப்படத்துல நீதிபதியா போய் சேட்டை பன்னுவங்கள்ள அதே மாத்ரின்னு போன பெட்டைகள் எல்லாம் சொன்னாங்க நான் சொல்லப்பா சாமான்

    ReplyDelete
  14. ஒரு மிகபெரிய நகைச்சுவை என்னன்னா இந்த சாமான் ஏனோ முல்லைபெரியாறு, கூடங்குளம் இதெல்லாம் மறந்துட்டு கோலபோட்டி, விவேக், சுந்தர் .சி ரெண்டுபேரும் ஒரு திரைப்படத்துல நீதிபதியா போய் சேட்டை பன்னுவங்கள்ள அதே மாத்ரின்னு போன பெட்டைகள் எல்லாம் சொன்னாங்க நான் சொல்லப்பா சாமான்

    ReplyDelete
  15. முன்பெல்லாம் ஒரு திரைப்படம் அய்ம்பது நூறு நாள் ஓடினாதான் விழா கொண்டாடுவாங்க. இப்ப அது அய்ஞ்சி நாள் பத்து நாள் ஓடினாலும் விழாதான். அது போல நீங்களும்,ஜாமீனுக்கெல்லாம் வெற்றி விழா கொண்டாடுறீங்க போல :-)

    ம்..ம்..
    கொண்டாடுங்க கொண்டாடுங்க

    ReplyDelete
  16. Vaiutha rani amma vaiyula bun, seemaan vaiyula manu. Itha sollu engal annan abi kannu.

    ReplyDelete
  17. KANIMOZHI SHUD TAKE LESSONS FROM KANCHI JAYENDRAN ABT HW TO BRIBE JUDICIARY TO GET AWAY WITH THE CRIME THEY COMMITTED.SADIQ BATCHA WUD MEET SANKARA RAMAN IN PARADISE.THEY BOTH WILL SHARE THEIR EXPERIENCE ABT FIGHTING THE POWERFUL.

    ReplyDelete
  18. /// இதுதான் உங்கள் ஆர்வ கேள்விக்கு பதில்.///
    நீங்கள் திமுகவுக்கு ஜால்ராபோட்டுக் கொள்ளுங்கள் அது உங்கள் உரிமை ஆனால் உண்மை வேறு... அந்த மூவருக்கும் தற்போது (ஆட்சியில் இல்லாத போது) நீட்டி முழக்கிக் குரல் கொடுப்பதையே ஆட்சியில் இந்த விசயம் வந்த போது காட்டியிருககலாமே... குறைந்த பட்சம் பரிந்துரைதானே... ஜெ யை இப்படி செய்யவார் என்று யாரும் நம்பவில்லை.. ஆனால் செய்தார்.. தமிழனத்தின் தலைவன் என்பவர் செய்தது என்ன நளினியில் மேல் சிறையில் இருக்கும் போதே செல் போன் வழக்கு... விடுதலையானால் சென்னை பக்கம் வந்தால் சட்ட்ம் ஓழுங்கு கெடும் என்ற கூற்று.. இதையெல்லாம் தமிழனத் தலைவன் என்ற பெயர் போட்டுக் கொண்டு செய்ய வேண்டாமே.... சாதாரண திமுக தலைவன் என்று செய்யட்டுமே யாரும் ஒன்றும் சொல்ல முடியாதல்லவா...ஆட்சேபனை ஒன்றுமில்லை...

    ReplyDelete
  19. மொக்கை பதிவு..

    ReplyDelete
  20. அய்யோ தவறான வழிகாட்டுதலில் நாம் நம் சக்தியை விரயமாக்கிவிட்டோமோ என நினைத்த நாம்தமிழர் இயக்க தொண்டர்கள் மெல்ல மெல்ல விலக தொடங்க ஆரம்பித்துவிட்டனர்.///

    இது உண்மையோ உண்மை....நான் எந்த அளவிற்கு சீமானை ஆதரித்தேன் என்பதை இப்பதிவுகளில் கண்டு கொள்ளலாம்...

    http://lakaram.blogspot.com/2010/07/blog-post_13.html

    சீமானே ...திருந்துங்கள்...அல்லது காணாமல் போய்விடுவீர்கள்....

    விருப்பமில்லையெனில் கோலப்போட்டியை தொடர்ந்து , மாலை கட்டும் போட்டிக்கு ரெடி ஆகுங்கள்...

    பாய்...பாய் பாவம் சீமான்!

    ReplyDelete
  21. அன்பு சொம்பு அபி அப்பா ,
    உங்களுக்கும் சீமானுக்கும் உள்ள விரோதத்தில் அவர்கள் மூவரையும் இழுப்பது சரியா? கனிமொழியும் அவர்களும் ஒன்றா? அவர்கள் மீதான விசாரணை எந்த லட்சணத்தில் நடந்தது தெரியுமா? வரலாற்றை மறைக்க முயலவேண்டாம் அபி அப்பா, 91 இல் நீங்கள் பாதிக்கப்பட்டது முழுக்க முழுக்க நீங்கள் உங்களை ஈழ தமிழ் மக்களின் காவலனாக காட்டியதால் வந்த வினை . (ஆனால் நீங்கள் உண்மையிலேயே அப்படியா என்று கேளுங்கள் உங்கள் தலைவர் கொலைஞர் ஐ ) MGR அரசு பிரபாகரன் அவர்களையே கைது செய்தது ஆனால் குட்டிமணியை நீங்கள் காட்டி கொடுத்ததுபோல் செய்யவில்லை. நளினியை விடுதலை செய்தால் அவர் தங்கபோகும் இடம் அமெரிக்க தூதரகத்தின் அருகில் இருக்கிறது என்று இத்தாலிகாரியின் காலை அமெரிக்காவின் பெயரால் கழுவினார் கொலைஞர். கனிமொழி இருந்த இடம் பூ வைத்தால் வாடிவிடுமாம். மஞ்சதுண்டாருக்கு (பெரியார் கவனிக்க) நளினி இருக்கும் இடம் மறந்துபோனது ஏனோ? கொலைஞர் உண்ணாவிரதம் போலான நாடகத்திற்கு ஈடு இணை உண்டோ இவ்வுலகில்? சரி விடுங்கள், கனிமொழியின் ஜாமீனுக்கு பரவசப்படும் உடன் பிறப்புகளே, அவர் நாட்டு பிரச்சனைக்காக போராடி சிறை செல்லவில்லை மாறாக தன் குடும்பத்திற்கு சொத்து சேர்த்த (நம்ம தேசத்தோட சொத்த வித்து) வழக்கில் கைது செய்யப்பட்டு சென்றார். கொலைஞர் மவுனம் காத்தது தயாளுவை வெளியில் விட்டதற்காக (60 சதவீதம் வெளியே 20 உள்ளே). சரி இதே வழக்கில் கைது செய்யப்பட அண்ணன் ராசா எங்கே? நீங்கள் அவருக்காக போராடாதது ஏன்? ஆக உங்களுக்கு கட்சி என்றால் அது கொலைஞரின் விந்தில் வந்ததாக மட்டுமே இருக்க வேண்டும் சரியா??? நீங்களும் உங்கள் மானம் கெட்ட தி.மு.க வும்.... குஷ்பு வந்து வழிநடத்தி செல்லும் நிலையில் இருக்கும் நீங்கள் .........??? (நீங்களே நிரப்புங்கள்)

    ReplyDelete
  22. OSI WEBSITE,INTERNET KODUTHA YENNA VENALUM KIRUKKALAMAA ABI APPA?? POI VEETTA NALLA PATHUKKUNKO!!!DINAMALAR PAKKAM LAM UNGALA PAKKA MUDIYUMA???

    ReplyDelete
  23. \\RAYAR said...
    OSI WEBSITE,INTERNET KODUTHA YENNA VENALUM KIRUKKALAMAA ABI APPA?? POI VEETTA NALLA PATHUKKUNKO!!!DINAMALAR PAKKAM LAM UNGALA PAKKA MUDIYUMA???\\ டேய் டிராயர், டேய் நீ என்ன லூசு லுச்சா பயலா? தினமலம் நாங்க பார்க்காததா? சரிடா, நான் அபிஅப்பா என்கிற பெயரில் போடும் பின்னூட்டம் எல்லாம் அவனை போட சொல்லு முதல்ல. நீ ஒன் ஃபாதர்க்கு பிறந்தா! பின்ன நாம இங்க கதை பேசலாம்!

    ReplyDelete
  24. nice post and review.... thanks for sharing... I joined your website....please read my tamil blog in www.rishvan.com

    ReplyDelete
  25. கனிமொழி விடுதலை ஆவாரா, தண்டனை பெறுவாரா என்பதை கோர்ட் பார்த்துக்கொள்ளும். அவர் சிறைக்குச் சென்று வந்ததால் அவருக்கும் அவரது இயக்கத்துக்கும் எந்த அளவுக்குப் பலன் இருக்கும் என்று ஒரு பதிவைப் போடுங்கள் அண்ணே; இனியாவது அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா என்று பார்க்கணும். ஏனென்றால் தி.மு.க. இரண்டாம் கட்டத் தலைவர்களில் அவரளவுக்கு உலக அறிவு மற்றும் மொழி அறிவு பொருந்தியவர்கள் அவ்வளவாக இல்லை. பெயருக்கேற்றார்போல கனிவாகவும் மொழிகிறார்.

    ReplyDelete
  26. ஆனாலும் நீங்க சீமானை ச்சீமான்னு சொல்லப்படாது ஆமா..

    ReplyDelete
  27. loose koomutai abiappa

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))