பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 2, 2012

அடடே இந்த பதிவை இப்படி கூட எழுதலாம்! ஈரோடு பதிவர் சங்கமம் - சில சங்கடங்கள்....

!

நான் ஈரோடு சங்கமம் சென்று வந்தேன். எனக்கு அங்கே பிடித்தது மிக்க மகிழ்வான உணவு. நான் ஈரோடு வந்தது முதல் விடைபெறும் வரை அருமையான உபசரிப்பு.

இப்படியாக கூட எழுதலாம். ஆனால் நான் போன வருடம் கடைசியில் எழுதிய பதிவு... ம் ம் ம் கொஞ்சம் காரம் தான் போலிருக்கு. சரி வேற மாதிரி கூட எழுத முயற்சிக்கிறேனே!

ஈரோடு பதிவர் சங்கமம்! சில சங்கடங்கள் பார்ட் 2

நாங்கள் போய் வந்தோம். மிகவும் அருமையான ஒரு நிகழ்வு. நானும் கூட அது பற்றி ஒரு பதிவு எழுதினேன். நீண்ட நாட்கள் பின்னர் நான் பதிவு எழுதுவதாலோ அல்லது இந்த சங்கமம் பற்றிய பல நிகழ்வுகள் எழுதியதாலோ நிறைய பின்னூட்டம் வந்தது. மிக்க மனம் மகிழ்வு. "இது போல எழுதி தொலைச்சால் என்ன? " என்று மும்பை அனுஜன்யா குறைபட்டுக்கொள்ளும் அளவு கூட இருந்து தொலைச்சுது.

அதன் பிறகு என்னிடம் நான் அங்கு வந்தமைக்காக சில ஈரோடு குழும பதிவர்கள் நன்றி சொல்லி பேசிய போது கிட்டதட்ட கொல்லிமலை செந்தில்குமார் பதிவு வந்திருந்தது. அதில் நான் படித்த போது கூட எனக்கு எதும் "ரைட்டா" தெரியவில்லை எனும் போதிலும் "தப்பா"வும் எதும் தெரியலை. ஏன்னா நான் பதிவுலகில் மிகவும் கருத்து வேறுபாடு கொண்ட ஜோதிடர் ஆர் கே சதீஷ்குமார் அது தவிர வக்கீல் நாண்டு நொரண்டு ஆகியோர் வரவில்லை என தெரிந்த போது கூட நான் " அட ஒரு வீட்டு கல்யாணம்னா சில சித்தப்பா பெரியப்பா 'எனக்கு நேரில் வந்து சொல்லலை"ன்னு கோவிப்பாங்களே அது போல இருக்கும்" என கூட கருத்து சொன்னேன் தொலைபேசியில்.

பின்னர் அங்கே விருது வாங்கின உண்மை தமிழன் பதிவை படிக்கும் போது எங்கோ என் மனசில் ஓடிய ஒரு நெருடல் என்னை இடிக்க ஆரம்பித்தது. உண்மைதமிழன் சரவணன் " நீ ஏன் வரவில்லை?" என சஞ்சய் கிட்டே கேட்க " எனக்கு ஏன் தரவில்லை" என்ற சஞ்சய் கேள்வி மிக்க சரி தான் என எனக்கு பட்டது. ஆமாம் அப்போது தான் நான் எனக்கே கேட்டுக்கொண்டேன். " எனக்கு ஏன் தரவில்லை?"

தமிழ்மணம் விருது கொடுக்குறாங்கன்னா அது ஓட்டு போடுதல், பின்ன மீண்டும் ஓட்டு போடுதல், பின்ன பதிவர்கள் சிலரை வச்சு நடுவர்... அதன் பின்னே அபிஅப்பாவை நிராகரித்தல் என இந்த 3 வருஷமா போய்கிட்டே இருக்கும் போது... இங்கயுமா அந்த மாதிரி என்னும் எரிச்சல்...

மீண்டும் மீண்டும் நான் பேசிய போதெல்லாம் இது ஒரு குழு எடுத்த முடிவல்ல. ஒரு தனி நபர் எடுத்த ஒரு முடிவு என்றும் புரிந்தது. இதே இதற்கு முன்னர் எழுதிய பதிவில் பரிசல் பெயரை கூட தவறாக குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும். அதற்கும் பரிசலுக்கும் சம்மந்தம் இல்லை. அது வெண்பூ பின்னூட்டம் பார்த்த பின்னர் தான் தெரிந்தது.

நான் நான்கு நாட்கள் முன்னர் இந்த பதிவு போட்ட பின்னர் கதிர் கிட்டே சொல்லிட்டு அவர் இட்ட பின்னூட்டம் இட்டு விட்டு தான் வெளியூர் போனேன். இன்று மதியம் வரும் போது பார்த்தேன். எல்லா கூத்துகளும். நான் பதிவு போட்டவுடன் அத்திவெட்டி ஜோதிபாரதி எப்போதும் போல வம்புக்காக அலைந்து கொண்டிருந்தார்:-)) ( சிரிப்பான் போட்டிருக்கேன் அவெஜோபா)

அதனால் அவருக்கு அந்த லிங் கொடுத்து விட்டு நகர்ந்தேன். அதே போல கதிர்க்கு கூட "இதை தமிழ்மணத்திலே சேர்க்க முடியலை சேர்க்க முடியுமா?" என கேட்ட போது அவர் கோவமாக சொன்ன பதில் எனக்கு சிரிப்பை தான் கொடுத்தது. ஏன்னா நான் அப்படித்தான்.

நான் மீண்டும் சொல்கிறேன். ஈரோடு சங்கமம் முதல் வருடம் அங்கே போய் வந்தவர்களால் பாராட்டப்பட்டது. எப்படி? "அங்கே உணவு நன்றாக இருந்தது" என. இரண்டாவது வருடம் "பரிசல் போன்றவர்கள் அருமையாக நிகழ்சி நடத்தினர், அத்தோடு உணவும் அருமை" ஆனால் மூன்றாவது வருடம்... விருது 15 பேருக்கு சிறந்த வலையுலக ஜாம்பவான்களுக்கு கொடுக்க போகின்றோம் என அறிவிக்கப்படவில்லை. கலந்துரையாடல் என சொன்னாலும் அது பிரதானப்படுத்தப்படவில்லை. உணவு எப்போதும் போல பிரதானப்படுத்தப்பட்டது. அப்படிபட்ட சூழலில் வருபவன் அதுக்கு தகுந்த "பிரிப்பரேஷன்"ல தான் வந்து தொலைவான் என்பது எல்லாருக்கும் பிரிந்ததே. இதை நீங்க பிரமாதப்படுத்த எதும் இல்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இங்கே இணையத்தில் இருப்பவன் எவனுமே அன்னாடம்காய்ச்சி இல்லை. அவன் மற்றவர்களை தொடர்புகொள்ளவே கூட மாதம் 500 முதல் 1000 வரை செலவு செய்யும் ஆள் தான்.(நெட் செலவை சொல்கிறேன்) அவனுக்கு கறி சோறு ஒரு பொருட்டு இல்லை. இல்லவே இல்லை. அவனவன் வந்த தூரத்தை கணக்கிட்டு பாருங்கள். அவன் போக்குவரத்துக்கு செய்த செலவிலே இதை விட அருமையாக அதே கறி சோறு சாப்பிட முடியும். ஆனால் அங்க வந்த ஒரே காரணம்.. அங்கே கிடைக்கும் அன்பு, மரியாதை, அரவணைப்பு, பதிவர்களை ஒரு சேர பார்க்கும் பாக்கியம்.... இங்கே இவனுக்கு என்ன தேவை? ஒரு கலந்துரையாடல். அவன் என்ன கருத்து எழுதினாலும் அவன் ஒரு படைப்பாளி என்னும் அங்கீகாரம் கொடுத்த தன்மை. ஆனால்.... 3ம் வருட சங்கமத்தில் அது மிஸ்ஸிங்.......

எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர் கே சதீஷ்குமார் பிடிக்காது. ஆனால் அவருடைய பதிவுகள் படிக்கும். என்னை எரிச்சல் அடைய செய்யும் அளவு ஒரு படைப்பாளி படைக்கும் அந்த எழுத்துக்கு நான் அடிமை. கிட்ட தட்ட நான் அந்த விஷயத்தில் ஒரு மாசோகிஸ்ட் போல. அதை தேடி தேடி படிப்பேன். எரிச்சல் அடைவேன். அங்கேதான் அந்த எழுத்தாளனின் திறமை இருக்கு. அந்த எழுத்தாளன் அதே ஊரை சேர்ந்தவரை கூப்பிடலை என நினைக்கும் போது.... என்னவா இருக்கும் அதன் உள்ளே இருக்கும் அரசியல் என நினைத்து பார்க்க தோன்றியது. தட்ஸ் ஆல்....

அதே தருமி சார், நான் உமாசங்கர் என்னும் ஐ ஏ எஸ் ஆபீசர் பற்றி ஒரு அரசாங்கம் எடுத்த ஒரு அஃபீசியல் முடிவு பற்றி பொங்கி எழுந்த போது நான் மட்டும் சொன்னேன்.... "சார் இது ஒரு அரசாங்கம் எடுக்கும் ஒரு சாதாரண முடிவு. இதுகெல்லாம் உணர்சி வசப்பட்டு முடிவெடுக்க கூடாது"ன்னு. அவர் சொன்ன வார்த்தைக்காக ஒரு 40 பதிவர்கள் ஒரே நேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக பதிவிட நான் மட்டுமே அதற்கு எதிராக பதிவிட்டவன். அதன் காரணமாக முதன் முதலாக 40 மைனஸ் ஓட்டுகள் கூட பெற்றவன்.

இன்றைக்கு நானே என் முந்தைய பதிவில் தருமி சாருக்கு விருது கொடுக்கலாம் என சொன்னேன். ஏன்? அவருடைய திறமை! ஒரு சேர 40 பதிவர்களை திரட்டி அரசாங்கத்தை எதிர்க்கும் திறமை யாருக்கு வரும்? அதனால் அவருக்கு விருது கொடுக்க வேண்டும் என நினைத்தேன். இது தவறா? அதே நேரம் ஒரு பதிவு போட்டு அந்த 40 பேரையும் நான் எதிர்த்தேன். தகுந்த காரணங்கள் கொண்டு. அதனால் எனக்கு விருது கொடுத்து இருக்க வேண்டும். நான் கேட்பதில் என்ன தவறு? இதோ அந்த நான் போட்ட பதிவின் லிங் http://www.abiappa.blogspot.com/2010/08/ias.html

இது காமடிபீஸ் மொக்கைன்னா இப்படிப்பட்ட காமடிபீஸ் மொக்கை பதிவு போட நான் எப்போதும் தயார். இதோ... சென்ஷி... என் மீது எப்போதும் விழுந்து பிறாண்டும்.. (அதே கதிர் வார்த்தைகள்.... சென்ஷி... இதே போல ஒரு காமடிபீஸ் மொக்கை இது வரை போட்டதுண்டா? சொன்னால் நான் மொட்டை போட்டு கிட்டு வீதியூர்வளம் வரத்தயார். இல்லை எனில் நான் இது வரை போட்ட 350 பதிவிலே ஒரு 100 பதிவாவது சென்ஷி பின்னூட்டம் போட்ட பதிவை எடுத்து இங்க லிங் கொடுக்கவா? நான் மரண மொக்கை போட்டா அதுக்கு எதுக்கு பாராட்டி பாராட்டி பின்னூட்டம் போடனும்.

இதே 2007ல் இளைய நக்கீரன் என்னும் பெரியரில் ஒரு பதிவர் என்னை திட்டி ஒரு பதிவு போடும் போது திட்டின்னா பயங்கரமா இல்லை ரொம்ப சாதாரணமா " அபிஅப்பா போன்ற பதிவர்கள் எடுக்கும் வாந்திகள் இணையத்தை நாறடிக்குது" என சொன்ன ஒரே வார்த்தைக்காக இதே சென்ஷி பொங்கி பொங்கி அவரை திட்டி எழுதிய பதிவும் எல்லோருக்கும் தெரியும். அந்த லிங் வேண்டுமா? அதே சென்ஷி தான் இதே சென்ஷியா? ஆக அவரது மனோநிலை மாறிவிட்டது அல்லது இரட்டை நிலை என்பதற்கெல்லாம் நான் பதில் சொல்லதான் ஆகவேண்டுமா?

ஆக சென்ஷி என்னை தனிமனித தாக்குதல் செய்வதால் தான் பெரிய ஆளாக நினைக்கும் பட்சத்தில் நான் அதற்கு மனப்பூர்வ அனுமதி அளிக்கின்றேன். தவறே இல்லை. எப்படியாவது "கவனிக்கப்படவேண்டும்" என்னும் உன் ஆர்வம் எனக்கு புரிகின்றது என்றே பொருள் கொள்கின்றேன்.

ஆக "இணையம் முழுக்க என எடுத்து கொண்டால் அந்த 20 பேரில் நீங்க கொடுத்த சிலர் தகுதி குறைவானவர்கள். தவிர என்னை தேர்ந்தெடுக்காதது தப்பு. அல்லது நீங்க அந்த 15 பேரை முன்னமே அறிவிக்காதது தவறு! இதான் என் முந்தைய பதிவின் சாரம்சம்.

இப்ப வாங்க! நான் இதற்கு முன்ன போட்ட பதிவுக்கு கூகிள் பஸ்ல லிங் கொடுத்தவங்க... அதுக்கு சென்ஷி போன்றவர்கள் கொடுத்த பதில்கள் அதுக்கு லைக் போட்டவங்க... அதுக்கு சரியான பதிலடி கொடுத்த மணிஜி போன்றவர்கள் எல்லாரும் வாங்க.... நான் இனி 3 நாட்கள் ஆன்லைன்ல இருப்பேன்... தொடர்ந்து 24 மணி நேரமும் இருப்பேன்....
குறிப்பு: நான் இன்னும் அந்த + எல்லாம் படிக்கலை. கேள்விப்பட்டது மாத்திரமே!






8 comments:

  1. அபி அப்பா, 72 மணி நேரம் ஆன்லைனிலேயேவா? ஏதாவது சாதனை முயற்சியா?

    ReplyDelete
  2. பதிவை படிச்சுட்டு ஆன்லைன்ல இருக்கீங்களானு தேடுறேன். ஆளை காணாம்...

    தொல்ஸ்........ நீங்க எங்க இருக்கீங்க...........

    ReplyDelete
  3. //அந்த 15 பேரை முன்னமே அறிவிக்காதது தவறு!//

    point...

    ReplyDelete
  4. இது என்னவோ பின்னூட்டத்தில் புது முயற்சியாக இருக்கிறதே?

    ReplyDelete
  5. அபி அப்பா, எனது கமெண்ட் பப்ளிஷ் போகாததால் மறுபடி, மறுபடி முயற்சித்தேன். தாங்கள் அனைத்தையுமே பப்ளிஷ் செய்துவிட்டீர்களே! (பதிவர்கள் பொருத்தருள்க!)

    ReplyDelete
  6. அபிஅப்பா :இந்த பதிவுக்கும் சேட் ஹிஸ்ட்ரி வருமா?

    ReplyDelete
  7. //கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா//

    கண்டிப்பா சொல்லனுமா :))

    ReplyDelete
  8. ஆண்டவா டெரர்கும்மி விருதுகள் நல்லபடியா நடத்திக்குடுப்பா.....

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))