பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 16, 2014

முகநூல் என்பது மு.க நூலாகவும், மு.க.ஸ்டாலின் நூலாகவும் ஆனது!

தளபதியின் தமிழ் முகநூல் பக்கம்


அது மார்ச் மாதம் 31ம் தேதி, 2011ம் தேதி... தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்திருந்த நேரம். தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராகவும், நம் பாசமிகு தளபதி அவர்கள் துணை முதல்வராகவும் கொலுவீற்றிருந்து நல்லாட்சி நல்கிய காலம் அது. அன்று தான் நம் துணை முதல்வர் அண்ணன் தளபதி அவர்கள் இணையத்தில் முகநூல் பக்கம் முதன் முதலாக நுழைகின்றார். அதற்கு முன்பே டாட்.காம் வழியே இணையத்தில் அவர் கோலேச்சிக்கொண்டிருந்தாலும் Facebook என்னும் சமூகவலைதளமான "முகநூலில்" அப்போது தான் நுழைகின்றார். அதன் பின்னர் ஏப்ரல் 3ம் தேதி 2011 அன்று ஒரு சோதனை பதிவிடுகின்றார். என்னவென்று தெரியுமா?


"ஆதரிப்பீர் உதயசூரியன்"


. இது தான் அந்த ஒற்றை வரி. தன் நாடி நரம்புகளில் திமுக மீதும், அதன் இரு வண்ண கொடி மீதும், அதன் உதயசூரியன் சின்னத்தின் மீதும், அதன் கொள்கைகள் மீதும் அதி தீவிர வெறி கொண்ட ஒருவரால் மட்டுமே இது சாத்தியம். ஆத்திகர்கள்  புதிதாய் ஒரு பேனா வாங்கினால் எழுத ஆரம்பிக்கும் போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பர். சுயநலமிகள் தன் பெயரை எழுதிப்பார்ப்பர். ஆனால் தளபதி அவர்கள் விழிப்பிலும், உறக்கத்திலும் உதயசூரியனை மனதில் சுமப்பவர் என்பதால் முதல் பதிவே "ஆதரிப்பீர் உதயசூரியன்".



இன்னும் சொல்லப்போனால் அப்போது முகநூல் வழி பிரச்சாரம்  செய்தது என்பது தளபதி அவர்களை தவிர்த்து விரல் விட்டு எண்ணும் அளவுக்கே திமுகவின் சார்பாய் இருந்தனர். இன்னும் மிகக்குறிப்பாக சொல்லப்போனால் 2011ல் மே மாதம்  சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்த பின்னர் தான் "இணையதள திமுக" என்னும் முகநூல் குழுவை மெல்வின் பாக்கியநாதன், டான் அசோக் உள்ளிட்ட சிலர் சேர்ந்து ஆரம்பித்தனர். இன்று பலநூறு திமுக முகநூல் குழுக்கள் இருப்பதற்கு முன்னோடியான முதல் குழு "இணையதள திமுக" ஆகும். ஆனால் அதற்கும் முன்பாகவே திமுக சார்பாக முழு நேர முகநூல் பிரச்சார பீரங்கியாக இருந்தது தளபதி அவர்களின் முகநூல் பக்கமே ஆகும். போர் என்றால் முன் வரிசையில் வழிநடத்தி போகும் வீரனே "தளபதி". திமுகவின் பிரச்சார போரில் கூட நவீன அறிவியல் பிரச்சாரத்தை திமுகவில் முதன் முதலில் முன்னின்று வழிகாட்டியது  கழக பொருளாளர் திரு.மு.க.ஸ்டாலின்  என்பதால் தான் "தளபதி" என அன்பாக திமுகவினர்  அவரை அழைக்கின்றனர் என்பதை இதிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.



அந்த காலகட்டத்தில் சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் பல லட்ச "விருப்ப"ங்களோடு முகநூலில் உலாவந்த காலகட்டம் அது. அப்போதெல்லம் சுப்ரமணியசுவாமி போன்றவர்கள் முகநூல் கணக்கு துவங்கி பல வருடங்கள் ஓடிவிட்ட நிலை. அதே போல கிரிக்கெட் உலகின் கடவுள் எனப்படும் சச்சின் போன்றவர்களும் அதே நிலையில் இருந்தனர். ஆனால் ஒரு பிராந்திய கட்சியின் தலைவர்களில் ஒருவரான துணை முதல்வர் முகநூல் பக்கம் வந்தது அப்போது தான். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் தன் முகநூல் பக்கத்தை துவங்கினார். எத்தனை பேர் தன் முகநூல் பக்கத்தில் விருப்ப சொடுக்கிட்டு வருகின்றனர் என்பது பற்றியெல்லாம் அவர் கவலை கொண்டதாக தெரியவில்லை. அதே போல விருப்ப சொடுக்கு வாங்க வேண்டும் என்பதற்காக சுப்ரமணிய சுவாமி போல ஹேஷ்யங்கள் எழுதுவதும், அவதூறுகள் எழுதுவதும், மற்றவர்களை அவதூறு பேசுவதுமெல்லாம் இல்லை.


தன் கருத்துகள், திமுகவின் கொள்கைகள், திமுகவின் வளர்ச்சிகள், திமுக சந்திக்க வேண்டிய சவால்கள், திமுக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், திமுக தொண்டர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள், தன் திமுக இளைஞரணி செயல்பட வேண்டிய வழிகள், தன் சுற்றுப்பயணங்கள் இப்படியாக தினம் தினம் தன் இயக்கத்துக்கான போர்வாளாக தன் "முகநூல்"பக்கத்தை நாள் தோறும் மிளிர வைத்தார்.


கடமையை செய் - பலனை எதிர்பாராதே என இவர் தன் பிரச்சாரத்துக்காக மட்டுமே முகநூலை பயன்படுத்தி வருவதால் இன்று முகநூலின் அதிகாரபூர்வ அங்கீகாரமான வெரிபைடு அந்தஸ்தையும் பெற்று விட்டது. ஆமாம் தமிழகத்தின் மட்டுமல்ல இந்திய அரசியல் தலைவர்களில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது தமிழ் முகநூல் பக்கம் இன்றைய நிலையில் (இன்றைய தேதி 16.10.2014 ) 2,90,475 விருப்பங்களுடன் முன்னிலையில் உள்ளது. (இரண்டு லட்சத்தி 90 ஆயிரத்து நானூற்று எழுபத்தி ஐந்து) இந்த கட்டுரை உங்கள் கண்ணில் படும் நேரத்தில் அனேகமாக அது 3 லட்சத்தை தாண்டி போகக்கூடும். அதே போல தளபதி அவர்களின் ஆங்கில முகநூல் பக்கம் 1,15,919 (ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 919) விருப்பங்களுடன் உள்ளது.  அதில் குறிப்பாக 18 முதல் 25 வயது கொண்டவர்களே அதிகமானோர் என்பது இன்னும் ஒரு வியப்பான செய்தியாகும்.
தளபதியின் ஆங்கில முகநூல் பக்கம்



இதற்கடுத்தபடியாக நம் தலைவர் கலைஞர் அவர்களின் முகநூல் பக்கம் இன்றைய நிலையில் 2,69,481 (இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 481) விருப்பங்களுடன் அடுத்த நிலையில் உள்ளது. இத்தனைக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் முகநூல் கணக்கை தொடங்கிய தேதி 13.08.2012 அன்று தான். அதாவது கிட்ட தட்ட தளபதி அவர்கள் ஆரம்பித்த பின்னர்  17 மாதங்களுக்கு பின்னரே துவங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைவர் கலைஞர் அவர்களது இந்த சாதனையை பாராட்டி தி இந்து தமிழ் நாளிதழ் கூட நான்கு நாட்கள் முன்பாக தலைவர் கலைஞர் அவர்கள் முகநூல் விருப்ப கணக்கில் முதலிடம் வகிப்பதை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டது. அப்போதே தளபதி அவர்கள் முகநூல் விருப்ப கணக்கு அதை விட தாண்டி இருந்தது என்றாலும் திமுக தொண்டர்கள் எவருமே இதை ஒரு போட்டியாக கருத வில்லை என்பதால் "தி இந்து" நாளிதழின் செய்தியை குறை கூறாமல், தவறை சுட்டிக்காட்டாமல்  கொண்டாடியே மகிழ்ந்தனர். வேருக்கு கொடுக்கும் மரியாதையை உணர்ந்தவர்கள் திமுக தொண்டர்கள் என்பதுக்கு இதுவே ஒரு சாட்சியாகும். இதைத்தான் தளபதி அவர்களும் விரும்புவார்கள்.
தலைவரின் முகநூல் பக்கம்




விரைவில் தலைவர் அவர்களும், தளபதி அவர்களும் இந்திய அரசியல்வாதிகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி என சொல்லப்படும் இணைய வழி பிரச்சாரங்களில் வேறு எந்த அரசியல்வாதிகளும் தொட முடியாத தூரத்தில் இருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். (இப்போதே அப்படித்தால் உள்ளது நிலமை)எதிர்கால இளைஞர் கூட்டத்தை  இணைய வழி பிரச்சாரம் மட்டுமே ஈர்க்கும் என்பதை உணர்ந்த அரசியல் இளைஞர்கள் திமுகவின் தலைவர் கலைஞர் அவர்களும் தமிழகத்தின் எதிர்காலம் தளபதி அவர்களும்  என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  அந்த இரு கண்களுக்கும் திமுக தொண்டர்கள் சார்பாக வாழ்த்துக்கள்!
தலைவர் கலைஞர் முகநூல் வெற்றியை பற்றி "தி இந்து" நாளிதழ்



தலைவர் கலைஞர் அவர்களின் முகநூல் பக்கம் https://www.facebook.com/Kalaignar89


தளபதியின் தமிழ் முகநூல் பக்கம் https://www.facebook.com/MKStalin


தளபதியின் ஆங்கில முகநூல் பக்கம் https://www.facebook.com/MKStalin.Official.English?fref=ts


தளபதியின் ட்வீட்டர் பக்கம் https://twitter.com/mkstalin


தளபதியின் இணைய பக்கம் http://mkstalin.in/




6 comments:

  1. இவ்வளவு விருப்பங்கள் இருந்தும் தேர்தல் வந்தா மக்களால் ஏன் வெறுப்பங்கள் ஆகுது..

    ReplyDelete
  2. nee oru loosu செம ஜால்ரா

    ReplyDelete
  3. அருமையான பதிவு!

    ReplyDelete
  4. அருமையான பதிவு

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))