பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label சுபவீ. Show all posts
Showing posts with label சுபவீ. Show all posts

August 6, 2012

நாஞ்சில் சம்பத் என்னும் பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாய் கொக்கரிக்கின்றது ..... (டெஸோ மாநாடு)


டெஸோ மாநாடு நடைபெற இருக்கும் Y M C A மைதானத்தில் பந்தல் வேலையை பார்வையிடும் (தன் 90வது வயதிலும்) கலைஞர் அவர்கள்

எதிர்வரும் ஆகஸ்ட் 12ம் தேதி 2012 அன்று சென்னையில் டெஸோ மாநாடு நடத்தப்படும் என கலைஞர் அறிவித்த அன்றைய தினத்தில் இருந்து திமுகவினரோ, அல்லது அந்த டெஸோ அமைப்பில் இருப்பவர்களோ கூட யாரும் இந்த மாநாட்டு செய்திகளை முனைப்போடு மக்களிடம் எடுத்துச்செல்லவில்லை என சொல்லும் அளவுக்கு இலங்கை அரசும், (ஆமாம், இலங்கை அரசே தான்), மற்றும் எப்போதும் போல கலைஞர் எது செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற மனோநிலையில் இருக்கும் மனோவியாதியஸ்தர்களும் வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்க ஆரம்பித்ததன் விளைவு... டெஸோ குழுவினருக்கு "விளம்பர" மிச்சம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது கிண்டல்கள், கேலிகள் என கலைஞர் எதிர்ப்பாளர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்க, இங்கே டெஸோ மாநாட்டு குழுவினர்  அமைதியான முறையில் அதே நேரம் துரித கதியில் மாநாட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு உள்ளனர்.

கலைஞர் அவர்கள், தன் 24 மணி நேரம் போதாமல் மாநாட்டு வேலைகளில் மூழ்கிக்கிடக்க அவரது பரிவாரங்கள் தான் பாவம். அனேகமாக அவர்கள் ஆகஸ்ட் 12க்கு பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டு ஆசுவாசம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை.

இதனிடையே மதிமுகவின் வைக்கோ, நெடுமாறன், சீமான் போன்ற,  ஈழப்பிரச்சனையை அரசியல் வியாபாரமாக்கிவர்கள் வயிற்றில் புளி கரைக்கப்பட்டு என்ன பேசுகிறோம் என எதும் தெரியாமல் பிதற்றிக்கொண்டு இருக்கின்றனர். ஒருவனை முதுகில் அடிக்கலாம். வயிற்றில் அடிக்கலாமா கலைஞரே? அவர்கள் பிழைப்பில் மண் போடலாமா? அதனால் தான் பிதற்றுகினனர் போல.  பிணம் தின்னி அரசியல்வாதிகளை அப்படி அடித்தால் கூட தவறில்லை என்றே தோன்றுகின்றது இப்போது. ஏனனில் அவர்களது சமீபத்திய உளறல்கள் அப்படியாகவே இருக்கின்றன.

இதில் நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் இதயத்தை இரும்புப்பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு பேசும் பேச்சுகள் பல சமயம் எரிச்சலாகவும் சில சமயங்களில் அயற்சியாகவும் உள்ளன. சமீபத்தில் கூட  "டெஸோ மாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கூட எங்களுக்கு இனி எதிரிகள் தான். அவர்களும் தமிழின விரோதிகள் மற்றும் துரோகிகள் தான்" என திருவாய் மலர்ந்துள்ளார். இனியாவது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் "டெஸோ" மாநாடு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் திமுகவின் 36 மாவட்ட செயலர்கள் தங்கள் தங்கள் மாவட்ட குழு கூட்டம் நடத்தி முடித்து விட்டனர். நகர, ஒன்றிய, பேரூர் கழகங்கள் தங்கள் கூட்டம் நடத்தி முடித்து விட்டன. கிளைக்கழக கூட்டம் எல்லாம் முடிந்து விட்டன. அதிலே எடுத்த முடிவின் படி பொதுமக்களும் மாநாட்டுக்கு ஏன் வ வேண்டும் என தெருமுனைக்கூட்டங்களும், பெரிய கூட்டங்களும் நடந்து கொண்டு உள்ளன. கிட்டத்தட்ட திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் வரை செய்தி போய் சேர்ந்து விட்டது. டெஸோ மாநாட்டுக்கு வர வேண்டி போக்குவரத்து, தங்குமிடம், சாப்பாடு ஆகிய விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன தொண்டர்கள் மத்தியில்.  சிறை நிரப்பும் போராட்டத்துக்கே இரண்டு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் என்றால் இதற்கு அதை விட ஐந்து மடங்கு கூட்டம் வரும் என காவல்துறை கைபிசைந்து நிற்கின்றது. முதல்வரோ இதற்கெல்லாம் கவலைப்படாமல் கொடநாட்டில் இருக்கின்றார்.

ஈழத்தமிழர்களே! ஒரு பத்து லட்சம் பேரை ஒரே இடத்தில் திரட்டி உலகின் முக்கிய பதவிகளில் இருக்கும் நபர்களை கொண்டு வந்து அவர்களை வைத்தே மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்றி.... இந்த மாநாடு என்பது ஏதோ திமுகவினரின் பொழுது போக்கிற்காக இல்லை... ஒரு சென்சிட்டிவான ஈழப்பிரச்சனைக்காக என்பதை வரும் முக்கியஸ்தர்களிடம் விளக்கி அதை அவர்கள் எந்த அளவு கொண்டு சென்று உலக அளவில் பரப்ப வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு ஒரு அருமையான நிகழ்வு நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் ..... நரம்பில்லா நாக்குக்கும், மூளை இல்லா கபாலத்துக்கும், இதயம் இல்லா மார்புக்கும் சொந்தக்காரர்களுக்கு பதில் சொல்ல வேண்டியே இப்பதிவு.

என்னது அது? நாஞ்சில் சம்பத்தா, அல்லது நஞ்சில் தோய்த்த அம்பா? என்னது அது? ம்ம்ம்ம்... டெஸோ மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளும் அவர்களுக்கு இனி எதிரியாமாம். என்ன ஒரு உணர்வு. சீமான், நெடுமாறன், வைக்கோ, சம்பத் போன்ற இன்ன பிற செல்லாக்காசுகள் இத்தனை நாள் இது போல ஒரு கூட்டம் கூட்டி உலக நாடுகளை அவர்கள் பக்கம்  திரும்பச்செய்தனரா? அல்லது இனிமேலாவது அப்படி உலகப்பார்வையை உங்கள் மீது விழ வைத்து ஈழத்தமிழர் பிரச்சனையை உலகலாவிய பிரச்சனை ஆக்க முயற்சியாவது செய்தது உண்டா? அல்லது அந்த தெம்போ, திராணியோ உங்களுக்கு இருக்கின்றதா முதலில். இதோ நாங்கள் மாநாட்டுக்கு வரும் சில முக்கியஸ்தர்களை பற்றி சொல்கின்றோம். அவர்களை நீங்கள் எல்லாம் போய் அவர்கள் நாட்டிலாவது பார்க்க இயலுமா? அல்லது பார்த்தாலும் உங்கள் ஒரு கை ஓசை ஒலி எழுப்புமா? அத்தனை பேரையும் ஒரே இடத்தில் கூட்டக்கூடிய வலிமையோ அல்லது திறமையோ உங்களுக்கு உண்டா? உங்களால் முடிந்தது எல்லாம் பாவம்... அந்த புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் காசுகளில் நார்வே, ஸ்வீடன், செர்மனி, அமரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என இன்ப சுற்றுலா போய் அங்கே ஒரு மூடிய அரங்கில் தொண்டை நரம்பு புடைக்க முழக்கமிட்டு கைத்தட்டல் போதையை ஏற்றிக்கொண்டு விமானம் ஏறி தமிழகம் வந்து "போய் வந்த" பொருளாதார திமிரில் கலைஞரை வசை பாடுவீர்கள்.

ஆனால் டெஸோ மாநாடு அப்படி இல்லை நஞ்சில் புழுத்த புழுக்களே, யாரெல்லாம் உலக அரங்கில் உன்னத நிலையில் மனிதாபிமானத்தோடு, மனிதநேயத்தோடு உலகை உலுக்கும் சக்தியோடு இருக்கின்றனரோ அவர்களை இங்கே ஒரே குடைக்கு கீழே கொண்டு வருகிறோம். உரக்க பேசுவதை விட அவர்களுக்கு உரைக்கும் விதத்தில் பேசப்போகிறோம். உங்களைப்போல மூடிய அரங்கில் முக்காடிட்டு அழுவது போல அல்லாமல் திறந்த அரங்கில் உலகமே பார்க்கும் படி ஈழத்தமிழர்களின் வாழ்வாதார உரிமைக்காக, வரும் உலக தலைவர்களை உலுக்கப்போகின்றோம்.  மனித நேயம் மாண்டுவிட்டதா என அவர்கள் மனதை கரைக்கப்போகிறோம். அவர்கள் உங்களுக்கு இனி எதிரிகளா? நாஞ்சில் சம்பத் என்னும் பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என கொக்கரிக்கின்றது. எங்களுக்கு பூனைகளை பற்றி கவலை இல்லை. மனிதர்களைப்பற்றி மட்டுமே அக்கரை. இதோ அந்த மாநாட்டுக்கு வரும் ஒரு சிலர் பற்றிய அவர்களது விபரங்களை தந்து இருக்கிறோம். படியுங்கள். இனியாவது தெளியுங்கள்!



ஸ்வீடன் - திரு. நசீம் மாலிக்

திரு.நசீம் மாலிக் அவர்கள்

திரு. நசீம் மாலிக் ஸ்வீடன் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினரும், அந்த நாட்டின் பழமையானதும், மிகப் பெரியதுமான சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் சர்வதேசப் பிரிவின் தலைவரும் ஆவார்.


மனித உரிமை ஆர்வலரான இவர் பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்த பல்வேறு கருத்தரங்கள், ஆய்வரங்களில் கலந்து கொண்டுள்ளார்.
தமிழ் ஈழப் பிரச்சனை குறித்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டுக் கூட்டத்திலும், ஸ்வீடன் பாராளுமன்றத்திலும் பேசக்கூடிய வாய்ப்பை பெற்றவர்.


The International Human Rights Commission (IHRC) has appointed H.E. Malik Nasim Ahmed (Elected Reserve Member of the Swedish Parliament) as the International Human Rights Commission’s Ambassador for Human Rights and Peace At Large for Scandinavia Countries from Sweden from 16th April 2012.
H.E. Malik Nasim was also appointed as a GOODWIL AMBASSADOR OF PEACE AND HUMANITY, Sweden, by Dr. Dr. Datu Camad Ali, Founding Chairman & Executive President of Southern Philippines Muslim &Non-Muslim Unity & Development Association (SPMUDA International).


H.E. Malik Nasim is renowned for his services to humanity and his efforts for the efforts of human rights and peace. He is working for the democracy, Right of vote for all the citizens of every country and freedom of expression and speech, as these are the fundamental requirements for the establishment of lasting peace in the world.

He also is working against the severe persecutions on religious and ethnic grounds. He is a firm believer of religious freedom and tolerance. These two important appointments are clear evidence of his love and services for mankind.


ஓ.ஐ.சி: - திரு, கெமால் யில்டிரிம்


இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஓ.ஐ.சி யில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் உறுப்புநாடுகளாக உள்ளன. இந்த ஓ.ஐ.சி அமைப்பானது ஐக்கிய நாடுகள் அவையின் UNTC (United Nations Treaty Collection)-ன் கீழ் இயங்கும் பன்னாட்டு அமைப்பு ஆகும். இந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் சர்வதேச மனித உரிமை ஆணையமும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளனர். சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் தூதரான திரு, கெமால் யில்டிரிம் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தில் ஈழப் பிரச்சனை தொடர்பாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றிட முயல்வளார்.


நைஜீரியா: இதில் இருந்து டெஸோ மாநாட்டுக்கு வருகை தருகின்றனர்.

நைஜீரியா நாடு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த ஐக்கிய நாடுகள் அவையின் ஏதிலிகள் நல ஆணையத் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடு ஆகும். நைஜீரிய அரசாங்கத்தின் சார்பாக டெஸோ மாநாட்டுக்கு வருகை தருவதாக உறுதி அளித்துள்ளனர். வரும் செய்தி உறுதி செய்யப்பட்ட பின் அவர்கள் பெயர்கள் மற்றும் விபரங்கள் இங்கே அப்டேட் செய்யப்படும் தோழர்களே!


 மலேசியா: - திரு. யுஸ்மாடி யூசுப்

திரு.யுஸ்மாடி யூசுப் அவர்கள்  கிழக்காசிய பசிபிக் ட்ரியேனியல் மாநாட்டில் பேசும் காட்சி 

திரு. யுஸ்மாடி யூசுப் அவர்கள் மலேசிய பாராளுமன்ற உறுப்பினராகவும் மலேசிய நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பீப்பிள்ஸ் ஜஸ்டிஸ் பார்ட்டியின் சர்வதேசப் பிரிவின் தலைவராகவும் உள்ளார்.

பீப்பிள்ஸ் ஜஸ்டிஸ் பார்ட்டி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சியாகும். மேலும் திரு. யுஸ்மாடி யூசுப் அவர்கள் தமிழ் அமைப்பினருடன் இணைந்து மலேசியாவில் உள்ள இலங்கைத் தூதரைச் சந்தித்து ஈழத்தமிழர் நலன்காக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பீப்பிள்ஸ் ஜஸ்டிஸ் பார்ட்டி ஈழத்தமிழர்கள் மற்றும் மலேசியாவில் ஏதிலிகளாகக் குடியேறியுள்ள ஈழத் தமிழர்களின் நலம் காட்க பல்வேறு நிதியுதவிகளையும் செய்துள்ளது. சமீபத்தில் இந்தக் கட்சியினர் ஈழத்தமிழர்களுக்காக நிதி சேகரித்துக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

\\ usmadi was born in Balik Pulau, Penang. A Kampung Boy (his story was written in an article entitled From Balik Pulau to Washington D.C. in Al Islam Magazine issue February 2006). He had his early education at Sekolah Kebangsaan Sungai Korok in Balik Pulau and continued his high school at SMKA Al-Mashoor (Lelaki), Pulau Pinang and Sultan Alam Shah Islamic College in Klang.

Yusmadi is a graduate of law (LL.B) from International Islamic University Malaysia where he studied both common law and Islamic law.. He is a Partner at a regional law firm law firm in Malaysia where he specializes in public interest litigation and criminal defense cases. Yusmadi’s involvement in Human rights activism at the local and international level was duly recognised when he was nominated by the US Embassy of Kuala Lumpur to participate in the International Visitors Leadership Program (IVLP) for Multi Regional Human Rights Advocacy Programme, 2004 in USA.

Apart from practicing law, he is a Fellow at the Institut Kajian Dasar (Institute for Policy Research) and a founding Director of GERAK (Movement for Democracy and Anti-Corruption) in Malaysia. Yusmadi was also a founding member of Malaysia America Friendship Alumni Association (MAFAA). In early 2005 Yusmadi was selected by Phoenix TV (a Hong Kong based TV station) to represent the Malaysian Youth for a documentary on successful Asian youths entitled The Neighboring Country Story. Yusmadi is a prolific writer and his views on law and politics are sought after by both print and electronic media in Malaysia.
He writes a weekly column, "Dengan Izin" ("May It Please the Court") on legal and social issues for the leading Malaysian daily, Utusan Malaysia.

In 2006 he was nominated as Hubert H. Humphrey Fellow for Law & Human Rights and was selected by the Fulbright Board to pursue posgraduate studies, LL.M (International Legal studies with specialization in Human Rights) at American University Washington College of Law in Washington D.C.
In Summer 2008, he was selected as Draper Hills Democracy & Development Fellow at Center on Democracy, Development & the Rule of Law, Stanford University.

In the recent Malaysia 12th general election, Yusmadi was elected as Member of Parliament of Malaysia for Balik Pulau, Pulau Pinang and was also appointed as Chairman of International Affairs, People's Justice Party (KeADILan). Yusmadi is married to Fahda Nur, a lawyer and they are blessed with two children (Aqil and Rayidah).

மொராக்கோ: - திரு. டாய்டா முகமது
மொராக்கா பாராளுமன்றம் - இங்கேயும் ஈழத்தமிழன் நிலை குறித்து வாதாட இயலும் திரு.டாய்டா முகமது அவர்களால்...

மொராக்கோ நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரான திரு. டாய்டா முகமது அந்நாட்டில் அனைவரும் அறிந்த மனித உரிமை ஆர்வலர் ஆவார். இவர் தனிப்பட்ட முறையிலும், சர்வதேச மனித உரிமை ஆணையம் மற்றும் தான் பொறுப்பு வகிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் பல்வேறு ஈழ ஏதிலிகளுக்கு உதவியுள்ளார். ஈழப்பிரச்சனை குறித்து மொராக்கோ பாராளுமன்றத்தில் பேசித் தீர்மானம் நிறைவேற்ற ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.


அம்னெஸ்டி இன்டர்நேசனல்: - ஒரு முக்கிய பிரமுகர் கலந்து கொள்கிறார்:


நோபல் பரிசு பெற்ற மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேசனல் உலகப் புகழ் பெற்ற அமைப்பாகும். ஈழத் தமிழர்கள் தொடர்ந்து அங்குள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து பலமுறை கண்டனங்களைத் தெரிவித்துள்ள அம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பு அவ்வப்போது இலங்கையில் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வறிக்கைகளை ஐக்கிய நாடுகள் அவைக்கும், உலக நாடுகளின் பார்வைக்கும் கொண்டுவருகிறது. அம்னெஸ்டி இன்டர்நேசனல் டெசோ அமைப்புடன் இணைந்து ஈழ மக்களுக்காகப் பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளது.

======================
மேலே இருக்கும் செய்திகள் உதவி திரு.அசன் முகமது ஜின்னா அவர்கள், டெஸோ மாநாட்டு வரவேற்பு குழு செயலர் - திமுக தலைமையகம்)

======================

நாஞ்சில் சம்பத் என்னும் பூனை தன் கண்ணைக் கட்டிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாய் கொக்கரிக்கின்றது




டெசோ குறித்து ஒரு ஈழ தமிழரின் பார்வை....(இணயத்தில் இருந்து) (செய்தி உதவி திரு ஜே பி பிரகாஷ் அவர்கள்)

\\ யார் குத்தி என்றாலும் அரிசியாக வேண்டும். தமிழீழத்தில் நான்கு இலட்சம் மக்கள் தற்காலிக கொட்டில்களில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக எந்த அடிப்படை வசதியும் இன்றி வாழ்கிறார்கள். போர்க்காலம் போலவே இராணுவம் வட - கிழக்கு மாகாணங்களில் குவிக்கப்பட்டு இராணுவ ஆட்சி நடைபெறுகிறது. சிவில் நிருவாகம் முடக்கப்பட்டுள்ளது. தமிழர்களது அன்றாட வாழ்க்கையில் இராணுவம் தலையிடுகிறது. கோயில் திருவிழா, விளையாட்டுப் போட்டி, திருமணம் எதுவாக இருந்தாலும் இராணுவம் தலையிடுகிறது. தங்களையும் அழைக்குமாறு நிர்ப்பந்தம் செய்கிறது. தமிழர்களுக்கு சொந்தமான காணிகளில் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்குப் பாரிய தளங்களை அமைத்து வருகின்றன. பவுத்தர்கள் வாழாத ஊர்களில் இராணுவம் விகாரைகள், தூபிகள், புத்தர் சிலைகள் ஆகியவற்றை நிறுவுகின்றது. தென்னிலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் அடாத்தாகக் கொண்டுவந்து குடியேற்றப்படுகிறார்கள். தமிழர்களது தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. சுருக்காகச் சொன்னால் இனச் சுத்திகரிப்பு நடைபெறுகிறது. பண்பாட்டுப் படுகொலை (Cultural Genocide) மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பின்னணியில் திமுக நடத்தும் டெசோ மாநாடு வரவேற்கப்பட வேண்டிய மாநாடு. அதனை எதிர்ப்பவர்கள் கள நிலை தெரியாது கருணாநிதி மீதுள்ள கோபத்தால் எதிர்க்கிறார்கள். இன்றைய கால கட்டத்தில் தமிழீழ மக்களின் இருப்புக்கு யார் ஒரு துரும்பைத் தூக்கிப் போட்டாலும் அது மலையளவு உதவியாக ஈழத் தமிழர்களால் எண்ணப்படும்....\\




****************


உண்மையாகவே ஈழத்தமிழர்கள் மீது அக்கரை இருப்பின் இனியாவது இந்தப்பக்கம் வாருங்கள் ஈழவியாபாரிகளே!ஆனால் வரும் போது வியாபாரி வேஷம் கலைத்து விட்டு மனிதநேயம் தாங்கி வாருங்கள்.ஆகஸ்ட் 12, 2012 - சென்னை டெஸோ மாநாட்டில் சந்திப்போம் தோழர்களே!