பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 21, 2012

அவ்வ்வ்வ்வ்வ்வ்.... என் மூஞ்சி அத்தனை பிஞ்சாவா இருக்கு????


எனக்கும்  சமீபகாலமாக (?) வயசாகி கொண்டு இருப்பதாக உணர்கிறேன். காலை எட்டு மணிக்கு எல்லாம் "என்னாச்சு இட்லி" எனவும் மதியம் 1 மணிக்கு "இன்னிக்கு கறி சோறு இல்லியா?" எனவும் அது போல டான்னு இரவு எட்டு மணிக்கு  "அய்யோ பசிக்குதே" என அலறும் போது தான் எனக்கும் வயசு ஆகிகிட்டே இருப்பதை உணர்ந்தேன்.

என் வயசில் இருப்பவன் எல்லாம் எங்கள் ஊரில் நாலு பஞ்சாயத்து எட்டு கோர்ட்டுன்னு போய் கொண்டு இருக்கும் போது நான் மட்டும் தேமேன்னு இருப்பதாய் உணர்ந்தேன். உடனே ஓடிப்போய்  என் வயது தாதாவாய் பில்டப்பு ஆனவனை கேட்டேன். அவனுக்கு வருவது எல்லாம் டைவர்ஸ் கேஸ் தான் என்றும்,  தான் அதில் தான் எக்ஸ்பர்ட் எனவும் சொன்னான்.

கிட்ட தட்ட எல்லா தாதாவுக்கும் பைனான்ஸ் கேஸ் தான் முதலில் வரும் என்றும் பின்னே "சீனியர்" ஆன பின்ன தான் டைவர்ஸ் கேஸ் எல்லாம் வரும் எனவும் சொன்னான். ஆனால் அவனுக்கு முதலில் வந்ததே டைவர்ஸ் கேஸ் தான் எனவும் மேலும் "டேய் முதல்ல டைவர்ஸ் கேஸ் வந்த  தாதா எல்லாம் பெரிய ஆளுங்கடா" என அவன் சொன்ன  போதே நான் முதலில் டைவர்ஸ் கேஸ் தான் என் முதல் கேஸ் என முடிவெடுத்து வந்து விட்டேன். எனக்கு எப்போதுமே டாப் கியர் தான் ஒத்து வரும்.

வீட்டுக்கு வந்து என் மனைவியிடம் "சரி இப்ப சொல்லு யாருக்கு டைவர்ஸ் வேணும்?" என   நாற்காலியில் அட்டானிக்கால் போட்டு முதல் கேள்வியை நான் கேட்டது என் முதல் தப்பு. "எனக்குங்க எனக்குங்க எனக்குங்க" என என் மனைவி சொன்னது எனக்கு என்னவோ அபசகுணமா பட்டுச்சு.
ஒரு வழியா சமாதானம் செய்து விட்டு என் அக்கா பையன்கள், என் மனைவியின் அக்கா பையன், பொண்ணுங்க எல்லாருக்கும் டைவர்ஸ் வாங்கி பஞ்சாயத்தை ஆரம்பிக்கலாம் என நினைத்து என் முயற்சியை தொடர்ந்தேன்.

அடுத்த நாளே என் மனைவியின் அக்கா பையன் போன் செய்தான்..." சித்தப்பா ஒரே பிரச்ச்னையா இருக்கு, அது மாசமா ஆகிடுச்சு" என சொல்லிகிட்டு இருக்கும் போதே நான் "டைவர்ஸ் செஞ்சுடலாம் ஒன்னியும் பிரச்சனை இல்லை"ன்னு மேல மேல பஞ்சாயத்தை தொடர அவன் போனை கட் பண்ணிட்டான். அடச்சே... சந்தோஷமா சொல்லியிருக்கான் போலிருக்கு. பொண்டாடி வாந்தி எடுப்பதுக்கு  எல்லாம் டைவர்ஸ் செய்ய மாட்டாங்க  போலிருக்கு....

ஒரு கட்டத்தில் ஒரு டைவர்ஸ் கேஸ் கூட என் கிட்டே வராத காரணத்தால் கோவத்திலே அப்டி இப்டி இருந்துட்டு  வீட்டுக்கு வந்தேன். அப்போ நிஜமாகவே டைவர்ஸ்காக வீட்டுக்கு ஒரு பிரச்சனைக்காக வந்த அக்கா பையன் மற்றும் மருமகள் கிட்டே நான் பேசிய பேச்சு என் நண்பன்  நெப்போலியனை விட அதிகமாக கொடுத்த காசுக்கு மேல கூவியதால  அவங்க போகும் போது " எங்க வாழ்கையிலே வெளக்கு ஏத்தி  வச்சுட்டீங்க மாமா"ன்னு  போக எனக்கு மனசே ஒடிஞ்சு போச்சுது.

என் மனக்கவலையில் நான் சோகமாக இருக்க வீட்டுக்கு வந்த அம்மா "என்னடா தம்பி"ன்னு கேட்க நான் விபரம் எல்லாம் சொன்னேன். அதுக்கு அவங்க "இதுக்கு தாண்டா சொல்வாங்க பெத்தவங்க ஆசீர்வாதம் வேணும்னு" சொல்லி தனக்கும் அப்பாவுக்கு டைவர்ஸ் வாங்கி கொடுன்னு சொல்லி அவங்க சொல்ல நானும் சந்தோஷமாக முதல் பஞ்சாயத்தை எடுத்தேன்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அவ்வ்வ்வ்வ்... பஞ்சாயத்து முடிவில் அம்மாவுக்கு அது வரை தம்பி வீட்டில் சவுக்கியமாக இருந்த அம்மாவுக்கு கீழ் ரூமும், "நான் இருக்கும் வீட்டில் தான் அப்பாவும் இருப்பாங்க அதனால மேல் மாடி ரூம்ல 2 டன் ஏசி போட்டு அப்பாவுக்கும்" என சொல்ல ... போச்சுடா செலவு மேல செலவு....


என் மூஞ்சி ஒரு டைவர்ஸ்க்கு கூட யோக்கிதை இல்லாம போய்டுச்சான்னு நான் அழுதுகிட்டே என் மனைவி கிட்டே கேட்டேன். அதுக்கு அவங்க "நான் தான் அப்பவே சொன்னனே, உங்களுக்கு முதல் கேஸ் நான் கொடுக்கிறேன்"ன்னு சொல்லி பீதி கிளப்ப... கும்பகோணத்தில் அக்கா வீட்டின் அடுத்த வீட்டில் ஒரு டைவர்ஸ் கேஸ் வந்திருக்கு ன்னு நல்ல சேதி வந்துச்சு.

முதன் முதலாக ஒரு நல்ல பஞ்சாயத்து வந்ததால் குடும்ப சகிதம் சென்றேன். கேஸ் என்னவோ செம கேஸ் தான். பையன் பேர் பாலமுருகன். அவன் பொண்டாட்டி பேர்.... ம்ம்ம்ம் சரி பாலமுருகின்னு வச்சுகுங்க. பையன் சின்ன வயசில் இருந்தே எனக்கு தெரிந்தவன். ஆனா அவனுக்கு படிப்பறிவு சுத்தமா இல்லை. ஆனா பகுத்தறிவு ஜாஸ்தி. கிட்ட தட்ட அவன் பத்தாவது பாஸ் செய்யவும் அதன் பின்னே பாலிடெக்னிக் பாஸ் செய்யவும் அவன் அப்பா மட்டும் அல்ல ஒட்டு மொத்த அரசாங்கமும் எல்லா பகீரதபிரயதனும் செஞ்சாங்க.

அவன் கேஸ் தான் என் கிட்டெ வந்துச்சு. ஆனா படிப்பிலே தான் அப்டி இப்டி.. ஆனா லவ்ஸ்ல கெட்டிக்காரன். அடிச்சான் பாருங்க சிக்சர்... அவன் கூட எட்டாவது படிச்ச நம்ம பாலமுருகி ஒன்பதாவது போச்சுது.  பின்ன பத்தாவது, பின்ன ... அப்படியே எம் எஸ் சி படிச்சு எம் பில் கூட படிச்ச போது நம்ம பாலமுருகன் ஒரு வழியா பத்தாம்பு வந்து அங்கயே கான்கிரீட் போட்டு உட்காந்துட்டன்.

பின்ன இவனை ஒட்டு மொத்த அரசாங்கமும் பின் பக்கம் தூக்கி தினத்தந்தி பேப்பரை கொளுத்தி காமிச்சு  பாஸ் பண்ண வச்சு பின்ன ஒரு பாலிடெக்னிக்ல ஒக்காத்தி வச்சி அவனும் "கேம்பஸ்"ல ஜெயிச்சு (ஜெயிக்க வச்சி) அட சாமிங்களா.. அவன் இன்னிக்கு நல்ல நிலையில் இருக்கான். அவன் "ஜில்லுன்னு ஒரு காதலா" நல்ல மெக்கானிக்கா .... இல்லை இல்லை இஞ்சினியரா இருந்து தொலைக்கிறான். அவன் பொண்டாட்டியாகிய பாலமுருகி கன்சால்டேட் பெசிஸ்ல அந்த ஊர்ல லெக்சரரா ஒரு காலேஜ்ல 2999 ரூபாய் வாங்கி கிட்டு இருக்கு.

போதும் இந்த முன்கதை சுருக்கம் எல்லாம். இப்ப நான் இங்க கும்பகோணம் வந்ததே இவங்க டைவர்ஸ்க்கு தான். பிரச்சனை எதும் இல்லை. தன் புருஷன் பி ஈ படிக்கனும். அதான் அதுக்கு ஆசை. இல்லாட்டி டைவர்ஸ்.

நான் போனேன். பேசினேன். பொண்ணு சொன்னுச்சு. "எனக்கு என் புருஷன் பி ஈ படிக்கனும். நான் கொஸ்டின் பேப்பர் வாங்கி தர்ரேன், நல்ல சூபர்வைசரா கொண்டு வந்து பிட் அடிக்க வைக்கிறேன், மொபைல்ல ஆன்சர் அனுப்பறேன், மொபலை அனுமதிக்க வைக்கிறேன், அதும் முடியலையா.. பேப்பர் சேஸ் பண்றேன்" இப்படியாக பேசப்பேச நான் என் மனைவியை தான் பார்த்து முறைத்தேன். இப்படில்லாம் ஒரு பொண்டாட்டி இருந்தா நானெல்லாம் ஜனாதிபதியா ஆகியிருப்பேன்:-(

முதல் சிட்டிங்ல கேஸ் முடிஞ்சிடுமா என்ன? சரி பரிட்சை எழுதட்டும். பய புள்ள எப்படியும் பாஸ் பண்ண மாட்டான். நமக்கு வெற்றி தான் என நினைத்து கொண்டேன்.

அத்தோடு அந்த கேஸ் பத்தி மறந்து விட்டேன். அதன் பிறகு அக்கா பையன்கள், மனைவியின் அக்கா பையன்கள், பொண்ணுகள் எல்லாம் என் கிட்ட பஞ்சாயத்துக்கு வரும் போது தனித்தனி ஆட்டோவிலே வந்துட்டு போகும் போது என் சுசுகில கட்டிபுடிச்சுகிட்டு டாட்டா சொல்லிட்டி " அங்கிள் பஸ்டாண்டிலே வண்டிய போட்டுட்டு போறேன், நீங்க நடந்து வந்து எடுத்துகுங்க"ன்னு சொல்லிட்டே போனாங்க.

ஒரு கட்டத்தில் நான் வெறுத்துப்போய் உட்காந்து இருக்க என் மனைவி "ஏங்க நாம வேணா டைவர்ஸ் பண்ணிக்கலாமா?" என மீண்டும் ஆசையாய் கேட்க  அப்போது தான் அந்த போன் வந்துச்சு. அந்த பாலமுருகி கிட்டே இருந்து. ஆண்டவன் என்னை கைவிடவில்லை என ஆசையாய் எடுத்தேன்.

"சார் உடனே வாங்க"ன்னு எனக்கு உடம்பெல்லாம் மின்சாரம். "போய்ட்டு வெற்றியோட  ஒரு டைவர்ஸ்ஸோட  வர்ரேன்"ன்னு சொல்லி கிளம்பினேன்.

கும்பகோணம் போகும் போன பின்னே அந்த வீட்டில் நுழையும் முன்னமே எனக்கு சகுனம் சரியில்லை. ஏன்னா புருஷன் பொண்டாட்டி இருவருமே சந்தோஷமா  "வாங்க வாங்க"ன்னு கூப்பிட்டாங்க.

நானும் அமைதியா உட்காந்து கேட்டேன். "அண்ணே உங்க ராசியே ராசி, உங்க மூஞ்சி டைவர்ஸ் செய்யல்லாம் ஒத்து வரலைண்ணே" என அந்த பாலமுருகி கிண்டல் செய்தது என் வியாபாரத்துக்கு வைக்கும் ஆப்பு  மாதிரியே இருந்துச்சு.

அந்த பெண் தான் பேசிச்சு. "அண்ணே! நான் இவரை பி ஈ படிக்க ஆசைப்பட்டது என்னவோ உண்மை தான். நானும் கொஸ்டின் பேப்பர் எல்லாம் வாங்கினேன்.  சூபர்வைசர் எல்லாம் சரி கட்டினேன். ஆனா பாருங்க அன்னிக்கி பார்த்து இங்க கரண்ட் போச்சுது. என் மொபைல்லயும் சார்ஜ் இல்லை. சரி கொஸ்டின் பேப்பர் க்கு ஆன்சர் பண்ண முடியலைன்னு அந்த முயற்சிய கைவிட்டேன். பின்ன பேப்பர் ச்சேஸ் பண்ண ஆரம்பிச்சேன். அப்ப தான் அண்ணே நான் திருந்தினேன்"னு மூச்சு விடாம சொன்ன போது எனக்கு ஒரே குழப்பம். எல்லாம் சரியா தான பேச்சுதுன்னு. பின்ன அந்த பெண் தொடர்ந்து  பேசுச்சு.

"சரின்னு நான் பேப்பர் ச்சேஸ் பண்ண போன போது தான் அந்த பேப்பர் திருத்துபவர் வந்து இவரோட பேப்பரையே காமிச்சாரு அண்ணே. காமிச்சுட்டு "இனிமே உன் புருஷன்  பி ஈ பாஸ் செய்யனுமான்னு நீயே முடிவெடும்மான்னு சொல்லிட்டாரு அண்ணே"ன்னு சொன்னுச்சு.

அப்படி அந்த பேப்பரில் என்ன எழுதி இருந்துச்சுன்னு நானும் ஆர்வமா கேட்க அந்த பாலமுருகி சொன்னுச்சு "அண்ணே அவரு பேப்பரிலே " Hurry!! Recharge with Rs.64 (All Local call mobile calls at 30p/min for 30 days)& get free RC 12 (30 lacal /std mins for 3 days ) Recharge now" அப்படின்னு அந்த பேப்பர்ல இருந்துச்சு அண்ணே! இதுக்கு பின்ன என் புருசன் பி ஈ படிச்சா என்ன படிக்காட்டி என்ன? நாங்க இனி சந்தோசமா இருப்போம். எல்லாம் உங்க ராசி தாண்ணே"

நான் தொய்ந்து போய் வீட்டுக்கு வந்தேன். என் மனைவி என் சோக முகத்தை பார்த்து என்னிடம் ஒரு டம்ளர் மோர் கொடுத்து விட்டு முதலில் கேட்ட அதே கேள்விய கேட்டாங்க "ஏங்க நாம வேணா டைவர்ஸ் செஞ்சுப்புமா?"

அவ்வ்வ்வ்வ்வ்வ்.... என் மூஞ்சி அத்தனை பிஞ்சாவா இருக்கு????



7 comments:

  1. Sema comedy.. Vilunthu vilunthu sirichaen... Aana ado ethuvum padalanko...'!

    ReplyDelete
  2. ஹா...ஹா. தொடருங்கள்.

    ReplyDelete
  3. அரசியல் தூணைக் கட்டிப்பிடிக்காமல் இருந்தால் நீங்களும் களை கட்டுற மூஞ்சிதான்.

    வித்தியாசமான முயற்சி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. realy good comedy ,please write more articles

    ReplyDelete
  5. இப்படி இப்படியே எழுதுங்க

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))