அழகுன்னா இன்னா, கொஞ்சம் வந்து செப்புன்னு கொத்ஸ், "தம்பி"ய கேக்க தம்பி என்னய கேக்க நான் இப்போ உங்க முன்னால நிக்கிறேன். 6 அழகுதான் சொல்லனுமான்னு கேக்க "எத்தனை வேணுமின்னாலும் சொல்லுங்க"ன்னு தம்பி சொல்லிட்டார். சரி தோனியது அத்தனையும் பகிர்ந்துகலாம்ன்னு ஐடியா.
இடம்:
எனக்கும் தங்கமணிக்கும் நீண்ட நாள் ஆசை, நம் இஷ்டத்துக்கு ஒரு வீடு கட்டனும்ன்னு, எங்களுக்கே எங்களுக்காய் அழகாய் கட்ட ஆசை. 6 மாதம் முன்பு அது நிறைவேறியது. கட்டி முடித்த பிறகு தான் நான் போனேன். அதுவரை போட்டோ கூட அனுப்ப வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்.
வீட்டுக்கு முன் ஒரு சின்ன கிரவுண்ட், அந்த வழியே போனா நேருக்கு நேர் வீட்டை பார்க்கலாம். அந்த வ்ழியா போனேன். 100 மீட்டர் முன்பே வண்டியில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன். முதன் முதலாக அப்போ தான் பார்க்கிறேன். நான் இத்தனை வருஷம் கனவில் கண்ட மாதிரி அச்சு அசலாக அப்படியே இருந்தது. கிட்ட நெருங்க நெருங்க பட படப்பு. பெயிண்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது.
கிட்ட போய் மெதுவா தொட்டேன். உடம்பு முழுக்க மின்சாரம் பாய்ந்தது மாதிரி உணர்வு. "அப்பா"ன்னு அது என்னை கூப்பிடுவது மாதிரி ஒரு பிரம்மை. மறு நாள் கிரகபிரவேசம்.
வீட்டில் எல்லா இடமும் எனக்கு பிடிக்கும்.மாடிப்படியில் உக்காந்துப்பேன், வாசலில், மொட்டை மாடியில், பால்கனி இப்படி எல்லா இடத்திலும் உக்காந்துப்பேன். வெறும் தரையில் படுத்துப்பேன்.
இப்போது நான் ரொம்ப மிஸ் பண்ணுவது என் இந்த அழகைதான்.
மாதம்:
மாதங்களில் எனக்கு பிடித்த அழகான மாதம் ஐப்பசி தான். எனக்கு மட்டுமல்ல கிட்டத்தட்ட 75%மயிலாடுதுறைவாசிகளுக்கு பிடித்த அழகான மாதமே அதுதான். முதல் தேதியில் இருந்து 30 தேதி வரை அமர்களம் தான். பெரிய கோவில்ல இருந்து சண்டிகேஸ்வரர், வினாயகர், முருகர், அவயாம்பிகை, மாயூரநாதர் எல்லாரும் தனி தனி வெகிக்கில்ல ஜாலியா காவிரிக்கு குளிக்க கிளம்பிடுவாங்க. சன்னதி தெருவிலே 20 நாதஸ்வரம், 20 தவில் மல்லாரி இசைக்க கிளம்பி பட்டமங்கல தெரு வழியா காவிரிக்கு போய் தீர்த்தம் குடுத்துட்டு மகாதான தெரு வழியா திரும்பி வருவாங்க. அந்த தெருவில தான் எங்க ஸ்கூல் இருக்கு.
மேள சத்தம் கேட்டதும் (நான் ஆரம்ப பள்ளி படித்து கொண்டிருந்த போது) ஒட்டு மொத்த பசங்களும் ஓடிப்போய் பார்ப்போம். சாமியை பார்ப்பது விட பூதம், பூதச்சி வாகனங்கள் மேல் ஒரு காதல். இது நான் 11வது, 12வது படிக்கும் வரை நீடித்தது.
அந்த மாத கடைசியில் கட முழுக்கு, முட முழக்கு வரும். காவிரியில் ஆரம்பிச்சு, சின்ன கடைதெரு வரை கடைகள், பலூன் சுடும் கடை, பெண் தலை பாம்பு, ராட்டினம், பஞ்சு மிட்டாய், சல சலன்னு மழை... ஹூர்ரே!!! எல்லாமே அழகுதான்.
அதுவும் காவிரிக்கு தெற்கே எங்க பக்கத்து மாயூரநாதர், ஐயாரப்பர், காசி விஸ்வநாதர் போன்ற ஜாம்பவானக்ள் (இந்த பக்க வலைப்பூ ஆளுங்கன்னு பாத்தா எல்லே ராம், மூக்கு சுந்தர், மயிலாடுதுறை சிவா, அபிஅப்பா) காவிரியில் நிற்க, வடக்கு கரையில் தெஷ்ணாமூர்த்தி கோயில் தலைமையில் அந்த பக்க ஜாம்பவான்கள்( அந்த பக்க வலைப்பூ சீமாச்சு அண்ணா, மற்றும் பலர்) நிற்க தெற்கு பக்கத்துக்கும் வடக்கு பக்கத்துக்கும் சிக்னல் கொடியசைப்புதான்.(இப்போ செல் போனாயிருக்கலாம் யார் கண்டது) முதலில் மாயூரநாதர் தீர்த்தவாரி பின்ன அத்தனை சாமிகளும், அதுவரை தலையில் தண்ணீர் படாமல் இருந்தவர்கள், காவிரியில் மூழ்க ஏகப்பட்ட பிக்பாக்கெட் அந்த 1 நிமிஷத்தில் நடக்கும்.
பல சமயம் தீபாவளியும் அந்த மாதத்தில் வந்து விடும். கேக்கவே வேண்டாம் சந்தோஷத்தை. ஆக அபிஅப்பா வுக்கு பிடிச்ச அழகு ஐப்பசி மாதம் தான்.
ஆறு/காடு
ஆறுன்னாவே அழகுதான். அதிலும் பிரச்சனைக்குரிய காவிரின்னா எனக்கு பிடிக்கும். அதிலும் மயிலாடுதுறையில் சுடுகாடு பக்கத்தில் காவிரி சட்ரஸ் இடம் அந்த சுடுகாடு ரொம்ப பிடிக்கும்.
எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து அதே இடம் தான் எரியூட்டும் இடம். அந்த இடத்தை பார்க்கும் போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு வரும். எனக்கு ஏகப்பட்ட தாத்தா, பாட்டி. எல்லாரும் கிட்டதட்ட ஒரே தெரு தான். எல்லாருக்குமே அதே சுடுகாடுதான். சின்ன வயசுல நாங்க சகோதரர்களே வச வசன்னு 25,30 பேர் இருப்போம்.
ஏதாவது தாத்தா போயிட்டா எங்களுக்கு தீபாவளிதான். கடைசியா சுடுகாட்டுக்கு எடுத்து போகும் போது மட்டும் ரொம்ப அக்கறையா ஏதாவது சித்தப்பா எங்களை ஒன்னு திரட்டி அங்க போக விடாம தடுத்துடுவாங்க. பயந்துடுவோம்ன்னு..அதுக்காக. சரி விடுங்கடா சின்ன தாத்தாவுக்கு பாத்துப்போம்ன்னு மனச தேத்திப்போம்.
இப்போல்லாம் நாமதான பெரிய மனுசன். தாரளமா போகலாம். 6 மாதம் முன்ன ஊருக்கு போன போது கடைசி தாத்தா போயிட்டார். சுடுகாட்டில் எரியூட்டுபவருக்கு பணம் கொடுக்கும் போது ரொம்ப பிசிரி பிசிரி தான் பணம் கொடுப்பாங்க. எனக்கு அது பிடிக்காது. ஏன் அப்படின்னு கடைசி தாத்தாவை ஒரு முறை கேட்டபோது"நிறைய குடுத்தா, இவங்க ரொம்ப நல்லவங்க, அடிக்கடி அவங்க வீட்டுல சாவு விழனும்"ன்னு வேண்டிகிட்டா ன்னு தான் இப்டி பிசிரி பிசிரி தர்ரோம்ன்னு சொன்னார். இப்போ அவரே போயிட்டாரா, வேற ஒரு பெரியப்பா பிசிரிகிட்டு இருந்தார்.
நான் தான் இப்போ பெரிய மனுசன் லிஸ்ட்ல வந்துட்டனா ஏதாவது பேசியாகனுமேன்னு எரியூட்டுபவரை பாத்து "விடுப்பா அடுத்தடுத்து விசேஷம் இருக்கு பாத்துக்கலாம்"ன்னு சொல்லிட்டு இருமல் பெரியப்பாவை பார்த்தேன். போச்சு, அதோட அவர போட்டு காய்ச்சி எடுத்துட்டாங்க என் அண்ணன் தம்பிங்க. சரி போகட்டும்ன்னு வீட்டுக்கு வந்தா எங்க அம்மா சின்ன அக்காகிட்ட பேசிகிட்டு இருந்தாங்க. அப்போ அம்மா "அடுத்து எப்பம்மா வருவ"ன்னு கேக்க அதுக்கு சின்ன அக்கா"பெரியப்பா கையிலதான் இருக்கு"ன்னு சொல்லிட்டு அவரை பார்க்க...சே என்ன ஃபேமிலிடா..
சுடுகாடு அழகுன்னு சொன்ன அபிஅப்பா வியர்டுன்னு சொன்னாலும் மனுசன் ஆடி கடைசியா அடங்கும் அந்த இடம், அமைதி, அமானுஷ்யம், பல தத்துவார்தங்களை உள்ளடக்கிய அந்த இடம் அழகுதான்.
6 அழகிலே 3 சொல்லியாச்சு. பதிவு பெருசா இருப்பதால இத்தோட போதும்.
நான் கூப்பிட போகும் அந்த 3 பேர் யாரு?
1. பாசமலர் இம்சை அரசி
2. மூக்கு சுந்தர்
3.அபிஅப்பாவின் மனசாட்சி
April 7, 2007
போய் வாருங்கள், ஆனால் எங்களை மறந்துவிடாதீர்கள்!!
நேத்து எனக்கு லீவ். மதியம் 1.15க்கு ஒரு போன் வந்தது. பெண் குரல். என்னை தெரியுதான்னு கேட்டாங்க.
"ஊகூம் தெரியலை" நீங்க சன் டி.வி அர்ச்சனாதானன்னு கேட்ட்க நினைத்து அந்த குரலில் உணரப்பட்ட கண்ணியத்தால் நாக்கை அடக்கி கொண்டேன்.
"நான் வலைப்பதியும் உங்கள் நண்பி தான்"
என் மர மண்டைக்கு அப்போதும் புரியவில்லை.
"நான் தான் ராமச்சந்திரன் உஷா"
"ஆஆஆ, கொஞ்சம் இருங்க மேடம் இங்கே ரேஞ்ச் கிடக்கலை"ன்னு சொல்லிகிட்டே மொட்டை மாடிக்கு ஓடினேன். அவங்க கிட்டே பேசனும் என்பதை விட என் ஜீனியஸ் தனத்தை காட்டி அசத்தனும் என்கிற கேவலமான மனப்பான்மை தான் அப்போது இருந்தது எனக்கு.
ஒரு வழியாக மொட்டை மாடிக்கு வந்து பேச ஆரம்பித்ததும், அவங்க "நான் இந்தியா திரும்ப போகிறேன், அதனால் தான் உங்க எல்லார் கிட்டயும் போய் வருகிறேன் என்று சொல்லிக்கதான் போன் செய்தேன்"ன்னு சொன்னாங்க.
அவங்க 1 மாதம் முன்னயே இந்தியா திரும்பி விட்டதாக யாரோ சொன்ன ஞாபகம் எனக்கு. அதனால் "நீங்க இன்னும் போகலையா?"ன்னு கேட்டேன்.
"ஏன், நா போறதுல அவ்வளவு ஆர்வமா?"
முதல் பாலிலேயே நான் அவுட். ஜீனியஸ் அபிஅப்பா ஓடியே போய்ட்டார். அந்த இடத்தில் ஒரிஜினல் அபிஅப்பா வந்து குந்திகிட்டார்.
"அய்யோ அப்படியில்லை, நா அந்த அர்த்தத்துல சொல்லலை, ஸாரி"ன்னு வழிஞ்சுட்டு சாதாரணமா பேச ஆரம்பிச்சாச்சு.
"என்னை மாயவரத்து மருமகள் ன்னு சொல்லுவாங்க"
இந்த வார்த்தை போதாதா எனக்கு. அவங்க எழுத்தின் காரணமாக எனக்கு இருந்த பயம் போய் ஒரு அன்னியோன்யம் வந்து விட்டது.
மாயவரத்துல எங்கன்னு ஆரம்பிச்சு அபிபாப்பா, ஆணாதீக்கம், தமிழ்மனம் எல்லாத்த பத்தியும் நல்ல தெளிவா கருத்து சொன்னாங்க.
ஆணாதீக்கம் பத்தி பேசும் போது நான் அவசரகுடுக்கையாக"நான் என் தங்கமணிக்கு முழு சதந்திரம் கொடுத்துள்ளேன்"ன்னு சொன்னேன்.
"பத்தீங்களா கொடுக்கும் இடத்தில் நீங்க இருக்கீங்கன்னு சொல்றீங்க, அப்படீன்னா எப்போ வேண்டுமானாலும் திருப்பி எடுத்துக்கலாம் அப்படிதானெ அர்த்தம்"
எனக்கு வியர்த்து விட்டது.(நான் தான் சொன்னேனே மொட்டை மாடியில் இருக்கேன்ன்னு)
"நாய் சேகரிய நான் ரொம்ப கேட்டதா சொல்லுங்க, இப்போ புடிங்க இந்த அருள் வாக்கை"ன்னு சொல்லிட்டு ஒரு அருள் வாக்கு தந்தாங்க. சிரிச்சு கிட்டே வாங்கிகிட்டேன்.
"சரி 12 வருஷ்ம் துபாய்ல குப்பை கொட்டியாச்சு, போய் வருகிறேன்" ன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டாங்க.
மனசு பாரமா இருந்துச்சு. ஏதோ என் நெருங்கிய சொந்தம் விருந்தாளியா வந்துட்டு ஊருக்கு போகும் போது ஏற்படும் உணர்வில் இருக்கேன்.
போய் வாருங்கள் அண்ணியாரே, ஆனால் எங்களை மறந்து விடாதீர்கள்.
திஸ்கி: இதென்ன அண்ணியாரேன்னா, அவங்க கணவரின் தம்பியும் நானும் நண்பர்கள், இது அவங்க பேசிகிட்டு இருக்கும் போதுதான் தெரிந்தது.
"ஊகூம் தெரியலை" நீங்க சன் டி.வி அர்ச்சனாதானன்னு கேட்ட்க நினைத்து அந்த குரலில் உணரப்பட்ட கண்ணியத்தால் நாக்கை அடக்கி கொண்டேன்.
"நான் வலைப்பதியும் உங்கள் நண்பி தான்"
என் மர மண்டைக்கு அப்போதும் புரியவில்லை.
"நான் தான் ராமச்சந்திரன் உஷா"
"ஆஆஆ, கொஞ்சம் இருங்க மேடம் இங்கே ரேஞ்ச் கிடக்கலை"ன்னு சொல்லிகிட்டே மொட்டை மாடிக்கு ஓடினேன். அவங்க கிட்டே பேசனும் என்பதை விட என் ஜீனியஸ் தனத்தை காட்டி அசத்தனும் என்கிற கேவலமான மனப்பான்மை தான் அப்போது இருந்தது எனக்கு.
ஒரு வழியாக மொட்டை மாடிக்கு வந்து பேச ஆரம்பித்ததும், அவங்க "நான் இந்தியா திரும்ப போகிறேன், அதனால் தான் உங்க எல்லார் கிட்டயும் போய் வருகிறேன் என்று சொல்லிக்கதான் போன் செய்தேன்"ன்னு சொன்னாங்க.
அவங்க 1 மாதம் முன்னயே இந்தியா திரும்பி விட்டதாக யாரோ சொன்ன ஞாபகம் எனக்கு. அதனால் "நீங்க இன்னும் போகலையா?"ன்னு கேட்டேன்.
"ஏன், நா போறதுல அவ்வளவு ஆர்வமா?"
முதல் பாலிலேயே நான் அவுட். ஜீனியஸ் அபிஅப்பா ஓடியே போய்ட்டார். அந்த இடத்தில் ஒரிஜினல் அபிஅப்பா வந்து குந்திகிட்டார்.
"அய்யோ அப்படியில்லை, நா அந்த அர்த்தத்துல சொல்லலை, ஸாரி"ன்னு வழிஞ்சுட்டு சாதாரணமா பேச ஆரம்பிச்சாச்சு.
"என்னை மாயவரத்து மருமகள் ன்னு சொல்லுவாங்க"
இந்த வார்த்தை போதாதா எனக்கு. அவங்க எழுத்தின் காரணமாக எனக்கு இருந்த பயம் போய் ஒரு அன்னியோன்யம் வந்து விட்டது.
மாயவரத்துல எங்கன்னு ஆரம்பிச்சு அபிபாப்பா, ஆணாதீக்கம், தமிழ்மனம் எல்லாத்த பத்தியும் நல்ல தெளிவா கருத்து சொன்னாங்க.
ஆணாதீக்கம் பத்தி பேசும் போது நான் அவசரகுடுக்கையாக"நான் என் தங்கமணிக்கு முழு சதந்திரம் கொடுத்துள்ளேன்"ன்னு சொன்னேன்.
"பத்தீங்களா கொடுக்கும் இடத்தில் நீங்க இருக்கீங்கன்னு சொல்றீங்க, அப்படீன்னா எப்போ வேண்டுமானாலும் திருப்பி எடுத்துக்கலாம் அப்படிதானெ அர்த்தம்"
எனக்கு வியர்த்து விட்டது.(நான் தான் சொன்னேனே மொட்டை மாடியில் இருக்கேன்ன்னு)
"நாய் சேகரிய நான் ரொம்ப கேட்டதா சொல்லுங்க, இப்போ புடிங்க இந்த அருள் வாக்கை"ன்னு சொல்லிட்டு ஒரு அருள் வாக்கு தந்தாங்க. சிரிச்சு கிட்டே வாங்கிகிட்டேன்.
"சரி 12 வருஷ்ம் துபாய்ல குப்பை கொட்டியாச்சு, போய் வருகிறேன்" ன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டாங்க.
மனசு பாரமா இருந்துச்சு. ஏதோ என் நெருங்கிய சொந்தம் விருந்தாளியா வந்துட்டு ஊருக்கு போகும் போது ஏற்படும் உணர்வில் இருக்கேன்.
போய் வாருங்கள் அண்ணியாரே, ஆனால் எங்களை மறந்து விடாதீர்கள்.
திஸ்கி: இதென்ன அண்ணியாரேன்னா, அவங்க கணவரின் தம்பியும் நானும் நண்பர்கள், இது அவங்க பேசிகிட்டு இருக்கும் போதுதான் தெரிந்தது.
April 1, 2007
நான் தான் பத்த வச்சேன்...ஒத்துகிறேன்!!!
அப்போ நான் 9 வது படித்து கொண்டிருந்தேன். நாங்கள் ஒரு 6 பேர் ஒரு குரூப்பாதான் திரியுவோம். அதிலும் நானும் குரங்கு ராதாவும் அப்டி என்னதான் பேசிப்போம்னே தெரியாது அவ்ளோவ் பேசுவோம்.
ஞாயித்து கிழமையானா கூட அப்டி பேசுவோம். என் வீட்டுக்கும் அவன் வீட்டுக்கும் நடுவேதான் எங்க ஸ்கூல் கிரவுண்ட். கிரவுண்டு சுத்தியும் புளிய மரங்கள் இருக்கும். நட்ட நடுவே ஒரு மாமரம். அது ஒரு பட்ட மரம். ஏற வசதியா இருக்கும். ஏறினா கிளைக்கு இடையே நாங்க உக்காந்துக்க வசதியா இரண்டு பள்ளம் மாதிரி இடம் இருக்கும்.
அதுல ஏறி உக்காந்தா அந்த கிரவுண்ட் முழுவதும் பாக்கலாம். அவனவன் ஏதோ விளையாட நாங்க மட்டும் சினிமாவில் ஆரம்பித்து மாலா, பாமா வரை பேசுவோம். எங்களை ஒரு பயலும் சீண்ட மாட்டானுங்க.
ஒரு சில கஞ்சா பார்டிங்க மட்டும் எப்பவாவது வந்து "டேய் கீழ வாங்கடா"ன்னு குரல் விட்டுட்டு அவனுங்க மேல ஏறி கஞ்சா அடிக்க ஆரம்பிச்சுடுவானுங்க.
ஒரு ஞாயித்து கிழமை காலை 10 மணிக்கு அப்படிதான் நானும் கு.ராதாவும் உக்காந்து பேசிகிட்டு இருந்தப்ப கஞ்சா குடிக்கி விட்டுட்டு போன தீப்பெட்டி மர பொந்தில் இருந்துச்சு. சரின்னு நானும் கு.ராவும் சும்மா பேசிகிட்டே அங்க கைக்கு எட்டும் தூரத்தில இருந்த குச்சியெல்லாம் சும்மா ஒடிச்சு ஒடிச்சு அந்த பொந்துக்குள்ள போட்டு பத்தாததுக்கு சருகு வேற போட்டு எரியுதான்னு பாக்க தீக்குச்சியால பத்த வச்சோம். அது லேசுல பத்துவது மாதிரி தெரியல.
சரின்னு நாங்க கிளம்பி போயிட்டோம். கொஞ்ச நேரம் நடந்த பின்ன திரும்பி பாத்தா, அந்த மரதில இருந்து குபு குபுன்னு புகை. நாங்க பயந்து போய் அங்க ஓடினோம். பக்கத்துல தண்ணி ஏதும் கிடைக்காததால் ரெண்டு பேரும் சேந்து அதுல உச்சா அடிச்சுட்டு(பெரிய ஃபயர் சர்வீஸ்ன்னு நெனப்பு!) சரி எல்லாம் சரியாயிடும்ன்னு வீட்டுக்கு போயிட்டோம். போய் நல்லா எண்ணெய் குளியல் போட்டுட்டு நான் தூங்கிட்டேன்.
மதியம் 3 மணிக்கு ராதா சிக்னல் குடுத்தான். வந்து நேரா கூப்பிட்டா எங்க அம்மா அவனை திட்டுவாங்க. அது போல் நான் அவனை எப்போ கூப்பிட்டாலும் எனக்கு அவங்க அம்மாகிட்ட செம திட்டு கிடைக்கும். அதுக்காகவே பல சிக்னல் வச்சிருப்போம்.
சிக்னல் வந்த உடனே நான் வெளியே போய் பாத்தா, ராதா ரொம்ப பயந்து போய் பேயரஞ்ச மாதிரி இருந்தான்.
"டேய் நம்ம போலீஸ் தேடுதுடா, எங்கயாவது ஓடிடுவோம். ஒரு 10 வருஷம் பின்ன வந்தா எல்லாம் சரியாயிடும், ஒரு பையில டிரஸ் எடுத்துகிட்டு வாடா"ன்னு பர பரப்பா சொன்னான்.
அய்யப்பன் ஹோடடலுக்கு போய் புரோட்டா சாப்பிட போவோம் வா ன்னு கூப்புடுறது மாதிரி கூப்புடுறானேன்னு நெனச்சுகிட்டு "என்னடா என்ன ஆச்சு"ன்னு கேட்டேன்.
"டேய் நாம பத்த வச்ச மரம் பத்திகிட்டு எரியுதுடா, நம்ம H.M , P.R சார்ல ஆரம்பிச்சு ஆரோக்கியசாமி வரை அங்க தான் இருக்காங்கலாம். அது தவிர ஃபயர் சர்வீஸ், போலீஸ் எல்லாரும் இருக்காங்கலாம். இப்போ போலீஸ் விசாரணை ஆரம்பிச்சாச்சாம், நம்ம காந்திமதிநாதன் சொன்னாண்டா"ன்னு கார்த்தி சொன்னான்.(மக்களே நல்லா படிக்கவும் காந்திமதிநாதன்...காந்திமதிகாதன் இல்லை)
சரி நிலைமைய நேரில் போய் ஆராய்வோம்ன்னு ரெண்டு பேரும் கிளம்பி அப்டியே பிரசவ ஆஸ்பத்திரி வழியா போனோம். தூரக்க இருந்து பாத்தா ஃபயர் வண்டி, போலீஸ் ஜீப், H.M ல இருந்து பியூன் வரைக்கும் அது தவிர தெரு மக்கள்ஸ் ஒரு பெரிய கும்பலே நிக்குது.
கச்சேரி பிள்ளையாருக்கு 10 பைசா, தர்காவுக்கு 10 பைசா(சம தர்மம்) உண்டியல்ல போடுவதா வேண்டிகிட்டு கிட்டக்க போனோம். கரக்டா P.T சிவனேசன் சார் கிட்ட மாட்டினோம். "டேய் இங்க வாங்கடா, ஒரு வெளயாட்டும் வெளயாடாம இந்த மரத்துலயே குந்திகிட்டு இருப்பீங்களே, உங்கள்ல எவன்டா பத்த வச்சது"ன்னு கேட்டார்.
பதறி போய்ட்டோம். ராதா சொன்ன மாதிரி ஓடி போயிட்டு 10 வருஷம் பின்ன வந்திருக்கலாமோன்னு நெனச்சுகிட்டேன். ராதா ஒன்னுக்கே போயிட்டான்.
ஒரு போலீஸ்கார் எங்க கிட்ட வந்து "யார்டா பத்த வச்சது, நீங்க பாத்தீங்களா, உண்மைய சொல்லுங்க"ன்னு ஒரு அதட்டல் போட்டாரு. அதுக்கு எங்க H.M "சார், இவனுங்க பத்த வச்சிருக்க மாட்டானுங்க, இவனுங்க அதுக்கு கூட லாயக்கு இல்லை சோப்பேறி பசங்க"ன்னார்.
கிராப்ட் சார்"டேய் சொல்லிடுங்கடா, இல்ல போலீஸ் புடிச்சுட்டு போயிடும்"ன்னு பயம் காட்டுரார். ஒரு ஃபயர் ஆபீசர் "H.M சார், மரத்து மேல ஏரி பொந்துகுள்ள நெருப்பு வச்ச மாதிரி தான் தெரியுது"ன்னு சொல்ல ஒட்டு மத்த கும்பல் பார்வையும் எங்க மேல தான்.
அநியாய ஆபீஸர் வச்சுட்டாரே ஆப்புன்னு நெனச்சுகிட்டு இருக்கும் போதே P.T சார் ரெண்டு பேரையும் கழுத்த பிடிச்சு குனியவச்சு முதுக விரிய வச்சுட்டார். நான் டக்குன்னு கச்சேரி பிள்ளையாருக்கும் தர்காவுக்கும் 10 பைசா ரேட் ஏத்திடேன்.
அப்புறம் ராதாவையும் என்னையும் அந்த போலீஸ்கார் தனியா கூப்பிட்டு போய் "தம்பிகளா, கூட்டத்துல சொல்ல வேண்டாம் இப்ப சொல்லுங்க"ன்னார்.
சாமி மேல பாரத்த போட்டுட்டு இன்னும் 10 பைசா ஏத்திட்டு(இன்னும் அந்த நேர்த்தி கடன் பாக்கியிருக்கு) ரெண்டு பேரும் கோரஸா "சார் அந்த கஞ்சாகுடிக்கி கென்னடிதான் சார் காலைல மரத்து மேல உக்காந்து இருந்தான்"ன்னு சொன்னோம்.
ஒரு வழியா பிரச்சனை முடிஞ்சுச்சு. அதுக்கு பிறகு கொஞ்ச நாள் கழிச்சு கென்னடி அடுத்த லொக்கேசன் கண்டிபிடிச்சுட்டான். பிரசவ ஆஸ்பத்திரி மாமரம். நாங்க அந்த பக்கமே போவதில்லை. மரம் ஏறுவதை விட்டாச்சு.
ராதா பேச்சை கேட்டு ஓடிபோயிருந்தா இந்நேரம் உங்களையெல்லாம் "பிளாக்"மெயில் செஞ்சுகிட்டு இல்லாமல் எங்கியாவது பிளாக் டிக்கெட் வித்துகிட்டு இருந்திருப்பேன்.
இந்த விஷயம் ரொம்ப நாள் உறுத்திகிடே இருந்துச்சு. என் கல்யாணத்துக்கு இப்போ உள்ள H.M புஷ்பவள்ளி டீச்சர் வந்தப்போ "டீச்சர் அந்த மரத்தை நான் தான் பத்த வச்சேன்"ன்னு சொன்னப்ப அவங்க தங்கமணிய பாத்து "இங்க பாரும்மா, நீ ரொம்ப குடுத்து வச்சவ, தொல்ஸ் கூட இருந்தா சிரிச்சுகிட்டே இருக்கலாம். என்னமா சிரிக்காம அடிக்கிறான் ஜோக்கு"ன்னாங்க.
நல்லதுக்கே காலமில்லை சாமி!!
ஞாயித்து கிழமையானா கூட அப்டி பேசுவோம். என் வீட்டுக்கும் அவன் வீட்டுக்கும் நடுவேதான் எங்க ஸ்கூல் கிரவுண்ட். கிரவுண்டு சுத்தியும் புளிய மரங்கள் இருக்கும். நட்ட நடுவே ஒரு மாமரம். அது ஒரு பட்ட மரம். ஏற வசதியா இருக்கும். ஏறினா கிளைக்கு இடையே நாங்க உக்காந்துக்க வசதியா இரண்டு பள்ளம் மாதிரி இடம் இருக்கும்.
அதுல ஏறி உக்காந்தா அந்த கிரவுண்ட் முழுவதும் பாக்கலாம். அவனவன் ஏதோ விளையாட நாங்க மட்டும் சினிமாவில் ஆரம்பித்து மாலா, பாமா வரை பேசுவோம். எங்களை ஒரு பயலும் சீண்ட மாட்டானுங்க.
ஒரு சில கஞ்சா பார்டிங்க மட்டும் எப்பவாவது வந்து "டேய் கீழ வாங்கடா"ன்னு குரல் விட்டுட்டு அவனுங்க மேல ஏறி கஞ்சா அடிக்க ஆரம்பிச்சுடுவானுங்க.
ஒரு ஞாயித்து கிழமை காலை 10 மணிக்கு அப்படிதான் நானும் கு.ராதாவும் உக்காந்து பேசிகிட்டு இருந்தப்ப கஞ்சா குடிக்கி விட்டுட்டு போன தீப்பெட்டி மர பொந்தில் இருந்துச்சு. சரின்னு நானும் கு.ராவும் சும்மா பேசிகிட்டே அங்க கைக்கு எட்டும் தூரத்தில இருந்த குச்சியெல்லாம் சும்மா ஒடிச்சு ஒடிச்சு அந்த பொந்துக்குள்ள போட்டு பத்தாததுக்கு சருகு வேற போட்டு எரியுதான்னு பாக்க தீக்குச்சியால பத்த வச்சோம். அது லேசுல பத்துவது மாதிரி தெரியல.
சரின்னு நாங்க கிளம்பி போயிட்டோம். கொஞ்ச நேரம் நடந்த பின்ன திரும்பி பாத்தா, அந்த மரதில இருந்து குபு குபுன்னு புகை. நாங்க பயந்து போய் அங்க ஓடினோம். பக்கத்துல தண்ணி ஏதும் கிடைக்காததால் ரெண்டு பேரும் சேந்து அதுல உச்சா அடிச்சுட்டு(பெரிய ஃபயர் சர்வீஸ்ன்னு நெனப்பு!) சரி எல்லாம் சரியாயிடும்ன்னு வீட்டுக்கு போயிட்டோம். போய் நல்லா எண்ணெய் குளியல் போட்டுட்டு நான் தூங்கிட்டேன்.
மதியம் 3 மணிக்கு ராதா சிக்னல் குடுத்தான். வந்து நேரா கூப்பிட்டா எங்க அம்மா அவனை திட்டுவாங்க. அது போல் நான் அவனை எப்போ கூப்பிட்டாலும் எனக்கு அவங்க அம்மாகிட்ட செம திட்டு கிடைக்கும். அதுக்காகவே பல சிக்னல் வச்சிருப்போம்.
சிக்னல் வந்த உடனே நான் வெளியே போய் பாத்தா, ராதா ரொம்ப பயந்து போய் பேயரஞ்ச மாதிரி இருந்தான்.
"டேய் நம்ம போலீஸ் தேடுதுடா, எங்கயாவது ஓடிடுவோம். ஒரு 10 வருஷம் பின்ன வந்தா எல்லாம் சரியாயிடும், ஒரு பையில டிரஸ் எடுத்துகிட்டு வாடா"ன்னு பர பரப்பா சொன்னான்.
அய்யப்பன் ஹோடடலுக்கு போய் புரோட்டா சாப்பிட போவோம் வா ன்னு கூப்புடுறது மாதிரி கூப்புடுறானேன்னு நெனச்சுகிட்டு "என்னடா என்ன ஆச்சு"ன்னு கேட்டேன்.
"டேய் நாம பத்த வச்ச மரம் பத்திகிட்டு எரியுதுடா, நம்ம H.M , P.R சார்ல ஆரம்பிச்சு ஆரோக்கியசாமி வரை அங்க தான் இருக்காங்கலாம். அது தவிர ஃபயர் சர்வீஸ், போலீஸ் எல்லாரும் இருக்காங்கலாம். இப்போ போலீஸ் விசாரணை ஆரம்பிச்சாச்சாம், நம்ம காந்திமதிநாதன் சொன்னாண்டா"ன்னு கார்த்தி சொன்னான்.(மக்களே நல்லா படிக்கவும் காந்திமதிநாதன்...காந்திமதிகாதன் இல்லை)
சரி நிலைமைய நேரில் போய் ஆராய்வோம்ன்னு ரெண்டு பேரும் கிளம்பி அப்டியே பிரசவ ஆஸ்பத்திரி வழியா போனோம். தூரக்க இருந்து பாத்தா ஃபயர் வண்டி, போலீஸ் ஜீப், H.M ல இருந்து பியூன் வரைக்கும் அது தவிர தெரு மக்கள்ஸ் ஒரு பெரிய கும்பலே நிக்குது.
கச்சேரி பிள்ளையாருக்கு 10 பைசா, தர்காவுக்கு 10 பைசா(சம தர்மம்) உண்டியல்ல போடுவதா வேண்டிகிட்டு கிட்டக்க போனோம். கரக்டா P.T சிவனேசன் சார் கிட்ட மாட்டினோம். "டேய் இங்க வாங்கடா, ஒரு வெளயாட்டும் வெளயாடாம இந்த மரத்துலயே குந்திகிட்டு இருப்பீங்களே, உங்கள்ல எவன்டா பத்த வச்சது"ன்னு கேட்டார்.
பதறி போய்ட்டோம். ராதா சொன்ன மாதிரி ஓடி போயிட்டு 10 வருஷம் பின்ன வந்திருக்கலாமோன்னு நெனச்சுகிட்டேன். ராதா ஒன்னுக்கே போயிட்டான்.
ஒரு போலீஸ்கார் எங்க கிட்ட வந்து "யார்டா பத்த வச்சது, நீங்க பாத்தீங்களா, உண்மைய சொல்லுங்க"ன்னு ஒரு அதட்டல் போட்டாரு. அதுக்கு எங்க H.M "சார், இவனுங்க பத்த வச்சிருக்க மாட்டானுங்க, இவனுங்க அதுக்கு கூட லாயக்கு இல்லை சோப்பேறி பசங்க"ன்னார்.
கிராப்ட் சார்"டேய் சொல்லிடுங்கடா, இல்ல போலீஸ் புடிச்சுட்டு போயிடும்"ன்னு பயம் காட்டுரார். ஒரு ஃபயர் ஆபீசர் "H.M சார், மரத்து மேல ஏரி பொந்துகுள்ள நெருப்பு வச்ச மாதிரி தான் தெரியுது"ன்னு சொல்ல ஒட்டு மத்த கும்பல் பார்வையும் எங்க மேல தான்.
அநியாய ஆபீஸர் வச்சுட்டாரே ஆப்புன்னு நெனச்சுகிட்டு இருக்கும் போதே P.T சார் ரெண்டு பேரையும் கழுத்த பிடிச்சு குனியவச்சு முதுக விரிய வச்சுட்டார். நான் டக்குன்னு கச்சேரி பிள்ளையாருக்கும் தர்காவுக்கும் 10 பைசா ரேட் ஏத்திடேன்.
அப்புறம் ராதாவையும் என்னையும் அந்த போலீஸ்கார் தனியா கூப்பிட்டு போய் "தம்பிகளா, கூட்டத்துல சொல்ல வேண்டாம் இப்ப சொல்லுங்க"ன்னார்.
சாமி மேல பாரத்த போட்டுட்டு இன்னும் 10 பைசா ஏத்திட்டு(இன்னும் அந்த நேர்த்தி கடன் பாக்கியிருக்கு) ரெண்டு பேரும் கோரஸா "சார் அந்த கஞ்சாகுடிக்கி கென்னடிதான் சார் காலைல மரத்து மேல உக்காந்து இருந்தான்"ன்னு சொன்னோம்.
ஒரு வழியா பிரச்சனை முடிஞ்சுச்சு. அதுக்கு பிறகு கொஞ்ச நாள் கழிச்சு கென்னடி அடுத்த லொக்கேசன் கண்டிபிடிச்சுட்டான். பிரசவ ஆஸ்பத்திரி மாமரம். நாங்க அந்த பக்கமே போவதில்லை. மரம் ஏறுவதை விட்டாச்சு.
ராதா பேச்சை கேட்டு ஓடிபோயிருந்தா இந்நேரம் உங்களையெல்லாம் "பிளாக்"மெயில் செஞ்சுகிட்டு இல்லாமல் எங்கியாவது பிளாக் டிக்கெட் வித்துகிட்டு இருந்திருப்பேன்.
இந்த விஷயம் ரொம்ப நாள் உறுத்திகிடே இருந்துச்சு. என் கல்யாணத்துக்கு இப்போ உள்ள H.M புஷ்பவள்ளி டீச்சர் வந்தப்போ "டீச்சர் அந்த மரத்தை நான் தான் பத்த வச்சேன்"ன்னு சொன்னப்ப அவங்க தங்கமணிய பாத்து "இங்க பாரும்மா, நீ ரொம்ப குடுத்து வச்சவ, தொல்ஸ் கூட இருந்தா சிரிச்சுகிட்டே இருக்கலாம். என்னமா சிரிக்காம அடிக்கிறான் ஜோக்கு"ன்னாங்க.
நல்லதுக்கே காலமில்லை சாமி!!
March 25, 2007
மொக்கராசு வர்ரான் ஓடியாங்க! ஓடியாங்க!!!

இந்த கோழி இருக்கே கோழி அது மண்ணுல கொத்தி கொத்தி எதுனா சாப்டுகிட்டே இருக்கும். ஒரு சிமெண்ட் தரையா பாத்துச்சுன்னா சர் புர்ன்னு மூக்கை(அலகை) தேய்ச்சு கூர்மையா ஆக்கிகிட்டு திரும்பவும் மண்ணுக்கு போய் கொத்தி கொத்தி திங்க ஆரம்பிச்சுடும்!
அதுபோல கொஞ்சம் மூக்கை தீட்டிக்கலாமேன்னு இந்த மொக்கை. நாம படிச்ச பள்ளி, செக்.ஷன், வாத்தியார் பேர் இதல்லாம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும். முதல்ல எனக்கு இருக்கான்னு பாப்போம்.
* 1 வது C - லெஷ்மி டீச்சர் - தேசிய ஆரம்ப பள்ளி
* 2 வது B - காமாட்சி டீச்சர் - "
* 3 வது C - குண்டு சார் - "
* 4 வது C - தியாகராஜன் சார் - "
* 5 வது A - மனசுல இருக்கு வரமாட்டங்குது - "
* 6 வது F - விசாலம் டீச்சர் - தேசிய உயர் நிலைப்பள்ளி
* 7 வது B - சரோஜா டீச்சர் - D.B.T.R.தேசிய மேல்நிலைப்பள்ளி
* 8 வது B - அதே சரோஜா டீச்சர் - "
* 9 வது F - சந்தான கோபாலன் சார்- "
* 10 வது C - N. வெங்கட்டராமன் சார் - "
* 11 வது A - K.ராஜேந்திரன் சார் - "
* 12 வது A - K. பத்மநாதன் சார் - "
அப்பாடா!
அதுபோல கொஞ்சம் மூக்கை தீட்டிக்கலாமேன்னு இந்த மொக்கை. நாம படிச்ச பள்ளி, செக்.ஷன், வாத்தியார் பேர் இதல்லாம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும். முதல்ல எனக்கு இருக்கான்னு பாப்போம்.
* 1 வது C - லெஷ்மி டீச்சர் - தேசிய ஆரம்ப பள்ளி
* 2 வது B - காமாட்சி டீச்சர் - "
* 3 வது C - குண்டு சார் - "
* 4 வது C - தியாகராஜன் சார் - "
* 5 வது A - மனசுல இருக்கு வரமாட்டங்குது - "
* 6 வது F - விசாலம் டீச்சர் - தேசிய உயர் நிலைப்பள்ளி
* 7 வது B - சரோஜா டீச்சர் - D.B.T.R.தேசிய மேல்நிலைப்பள்ளி
* 8 வது B - அதே சரோஜா டீச்சர் - "
* 9 வது F - சந்தான கோபாலன் சார்- "
* 10 வது C - N. வெங்கட்டராமன் சார் - "
* 11 வது A - K.ராஜேந்திரன் சார் - "
* 12 வது A - K. பத்மநாதன் சார் - "
அப்பாடா!
உங்களுக்கு ஞாபகம் இருந்தா சொல்லுங்க atleast section மட்டுமாவது!!
March 21, 2007
கோபி,பாசமலர்,கொத்ஸுக்கு அபிஅப்பாவின் சூடான பதில்!!!
முதல்ல அய்யனார் கோவில் பலி ஆடு மாதிரி தலையை குனிந்து நிக்கிறேன். ஏன்னு பதிவின் கட்ட கடேசில செப்புறேன்.
நம்ம கோபிதம்பி முதல்ல 5 வியர்டு விஷயத்த சொல்லுன்னு சொன்னார். அடுத்ததா தங்கச்சி ஜெயந்தி அதாங்க இம்சை செய்யாத இம்சை அரசி 5 சொல்லுங்கண்ணான்னு சொன்னாங்க. ஆக 10 சொல்லனுமான்னு நெனச்சிகிட்டு வந்து பாத்தா நம்ம கொத்ஸ் 5 கிறுக்குதனத்த சொல்லுய்யான்னு சொல்லியிருக்கார். நாம எது செஞ்சாலுமே அது கிறுக்குதனமாவே இருக்கும். இதுல என்ன தனியா 5ன்னு சரின்னுட்டேன்.
கடமை:
நான் ஒரு கடமை வீரன். ஒரு புராஜக்டுல ஒழுங்கா ஆணி புடுங்கிய என்னை பாத்து நீ ரொம்ப நல்லா புடுங்குற அதனால இன்னும் 3 புராஜக்டையும் சேத்து பாத்துக்கோன்னு சொல்லிட்டாங்க. இப்போ ஐயாவுக்கு 4 இடத்திலயும் சீட். அதுல ஒரு வசதி சுத்தி சுத்தி பின்னூட்டம் போடலாம். ஆனா அப்பப்ப ஆணியும் புடுங்குவேன். இதுல என்னா கிறுக்குன்னா என் டிபார்ட்மென்ட் ஆணியவிட அடுத்த டிபார்ட்மென்ட் ஆணிதான் அதிகமா புடுங்குவேன். இவன் கிட்ட சொன்னா முடிச்சுடுவான்டான்னு என் தலைல கட்டிடுவானுங்க. இது உணர்ந்தும் உணராத இந்த லூசு எல்லாத்தையும் கட்டிகிட்டு மாரடிக்கும். இந்த கடமைய விட 1 ம் தேதி வீட்டுக்கு பணம் அனுப்பும் கடமையை கச்சிதமா செய்வேன். (யாருய்யா அது"அடப்பாவி நீ ஒரு கயமை வீரன்"ன்னு யாருய்யா சவுண்டு குடுக்கிறது)
கண்ணியம்:
இந்த விஷயத்துல நா நெம்ப ரீஜண்டு. சகோதரிகள், சித்திகள், த்ம்பிகள் அப்டின்னு "வருஷம் 16" மாதிரியான குடும்பத்தில் பிறந்ததால் கூட இந்த கண்ணியம் வந்திருக்கலாம். பிளாக் எழுத ஆரம்பிக்குமுன் கூட என் தம்பி "எதை பத்திவேணா எழுது. ஆனால் அசிங்கமான வார்த்தை பிரயோகம் கூடாது"ன்னு சொன்ன காரணத்துக்காகவே நான் "குசும்பு" போன்ற வார்த்தைகளை பிரயோகிப்பதில்லைன்னா பாத்துகோங்க என் கண்ணியத்தை:-) என் தம்பி சொன்னது என்ன நா புரிஞ்சுகிட்டது என்ன. ரொம்ப கண்ணியமா இருக்கனாமா!
கட்டுப்பாடு:
என் கையில் ஒரு மெல்லிய நூல் கட்டப்பட்டு அதன் ஒரு முனை என் குடும்பத்தரிடம் (அப்போ அம்மா இப்போ தங்கமணி)இருக்கும். அந்த நூலை அறுத்து விடாமல் காப்பாத்தும் பொறுப்பு இரண்டு பக்கத்துக்கும் உண்டு. இது வரை நாங்கள் காப்பாத்தி வருகிறோம். என்ன! அம்மாவிடம் பிடியிருந்தபோது நூல் கொஞ்சம் பெருசா இருந்துச்சு. இப்போ தங்கமணிகிட்ட நூல் வந்தவுடன் சின்னதாகிவிட்டது. அப்பப்ப லீவ்விட்டா நூலை அவுத்து கட்டில்ல கட்டிட்டு ஃப்ரீ பேர்டு....
கிரிமினல்தனம்:
யாருக்கும் கேடு வராதபடி நக்கலான கிரிமினல்தனம் என்னிடம் எப்போதும் இழைந்து கொண்டிருக்கும். உதாரணத்துக்கு நேத்து ஒரு பதிவு போட்டேன். தமிழ்மணத்திலே பதிவின் பக்கத்துல என் பெயர் இல்லை. அதனால் ரெகுலர் கஸ்டமர்கள் வரலை. அது அபிஅப்பா பதிவுன்னு யாருக்குமே தெரியலை. சரி இந்த பதிவும் அப்டி போயிடுமோன்னு இந்த தலைப்பிலேயே அபிஅப்பான்னு வரவழைச்சுட்டேன். இது போன்ற சின்ன சின்ன கிரிமினல்தனங்கள்தான்.
நகைச்சுவை:
அபிஅப்பா பதிவு இவ்வளவு dry யா இருக்கேன்னு பாக்காதீங்க. நமக்கு பிடித்த விஷயமே நகைச்சுவைதான். என்னையும் கலைஞரின் செயலர் சண்முகநாதனையும் ஒரு ரூமில் போட்டு 24 மணி நேரம் பூட்டிவிட்டால் இரண்டில் ஒன்னு நடக்கும்.
1. அவர் சிரித்து கொண்டே வெளியே வருவார்.
2. அவர் சிரித்து கொண்டே வெளியே வருவார்.
எனக்கு பிடித்த நகைச்சுவை நிகழ்வு:
அபிபாப்பா சிதம்பரம் ஞானமணி ஹாஸ்பிட்டலில் பிறந்தாள். லேபர் வார்டிலிருந்து தங்கமணி வரும் முன்பே அபிபாப்பா வார்டுக்கு வந்துடுச்சு. சுருட்டை முடி கொட்டாபுட்டி கவுத்தமாதிரி, கருப்பு திராச்சை மாதிரி கண்ணு. யார்டா நீ ங்குற மாதிரி என்னை ஒரு பார்வை. என் அம்மா மட்டும் பாப்பாவை வச்சுகிட்டு உக்காந்து இருந்தாங்க. அவங்க தவிர நான் மட்டும். கொஞ்சம் ரிலாக்ஸா வெளியே வந்து நின்னேன்.
அப்போ ஒரு தாத்தாவும், ஒரு பாட்டியும் வந்து என் கைய புடுச்சுகிட்டு "நல்லா இருக்கியாப்பா"ன்னாங்க. "உன் கல்யாணத்துல உன்ன பாத்தது. அதுக்கப்புரம் 3 தடவை வந்தபோதும் உன்னய பாக்கமுடியல. இப்போ உம் பொண்டாட்டிய பிரசவத்துக்கு சேத்த சேதிவந்ததும் அவசர அவசரமா கிளம்பி வந்தோம். இன்னும் உன் மாமனார் வீட்டுக்கு கூட போகலை. அப்டியே பஸ்டாண்டிலேந்து இங்க வந்துட்டோம். சரி வா குழந்தைய பாக்க போவோம் "ன்னு சொல்ல நானும் சரி தங்கமணிக்கு சொந்தம் போலன்னு கூட்டிகிட்டு போனேன்.
என் அம்மாவிடம் அவங்க குசலம் விசாரிச்சுட்டு கொண்டுவந்த சாக்லெட்பாக்ஸ், சின்ன குழந்தை மெத்தை, டிரஸ், பால் பாட்டில் எல்லாத்தையும் கொடுத்துட்டு "சரி உன் மாமனார் வீட்டுக்கு போகிறேன்"ன்னு சொல்லிட்டு போயிடாங்க.
இதுல என்னா கூத்துன்னா வந்தவங்க யாரோ. அதே ஹாஸ்பிட்டல்ல பிறந்த வேற ஆண் குழந்தைய பாக்க வேண்டியவங்க. இது எங்களுக்கு அடுத்த நாள்தான் தெரியும். அந்த குழந்தையின் அப்பாவும் என் சாயல் போலயிருக்கு. சரின்னு அந்த குழந்தைக்கு நான் அவங்க கொடுத்தது போல எல்லாத்தையும் வாங்கி குடுத்தேன். ஆக அபிபாப்பாவின் குறும்பு பிறந்த அடுத்த நிமிஷமே ஸ்டாட்டாகிடுச்சு:-)
இது போல நகைச்சுவை நிகழ்வுகள் எல்லா இடத்திலிலும் நடக்கும். அதை பகிர்ந்துக்கும் போது மிக்க மகிழ்வாக இருக்கும். நகைச்சுவை எழுத 4,5 பாரா கூட வேண்டாம். ஜஸ்ட் ஒரு வரி போதும். நினைத்து நினைத்து சிரிக்கலாம்.
இதோ ஒரு பதிவுக்கு நம்ம கொத்ஸ் போட்ட பின்னூட்டம். நாமக்கல் சிபி "நான் ஓய்வெடுக்க போகிறேன்" ன்னு ஒரு பதிவு. அதுக்கு கொத்ஸ் "ஓய் வெடுக்குனு வா" . என்ன புரிஞ்சா குபீர் சிரிப்பு கியாரண்டி!!
இதுதான் நகைச்சுவை பற்றிய என் கருத்து. நகைச்சுவை பதிவுக்கு பேஸ்மென்டே கிறுக்குதனங்கள்தான்!
சரி மக்கா, இப்போ அந்த 5 பேர் யாருன்னு பாப்போம். பதிவு போடுவது கூட சுலபமாயிருக்கு. இந்த பட்டம் கொடுப்பது ரொம்ப கஷ்டமப்பா!
1.எனக்கு 1 வருஷ சீனியர் "கல்வி வள்ளல்" சீமாச்சு
2. என் அன்பு அம்மா "பாலாபிஷேக நாயகி" கீதாசாம்பசிவம்.
3.என் துபாய் நண்பர் "பவுலிங் புயல்" பாஸ்ட் பவுலர்"
4.எங்க ஊர் நண்பர் "சமூக சிந்தனை நாயகன்" மயிலாடுதுறை சிவா
5. அன்பு சகோதரி "காமடி கலைமாமணி" கண்மணி
வாங்க வந்து வியர்டான 5 விஷயத்த புட்டு புட்டு வைய்யுங்க!
இப்போ முதல் வரிக்கு போங்க. போயாச்சா. ரொம்ப நேரமா அப்டி நிக்கிறது கஷ்டமா இருக்கு. தர்ம அடி போடுறவங்க ஒரு வரிசையாகவும், மாலை,கீலை போடுறவங்க ஒரு வரிசையாகவும் வரவும். இது என்னோட 25 வது பதிவு:-))
நம்ம கோபிதம்பி முதல்ல 5 வியர்டு விஷயத்த சொல்லுன்னு சொன்னார். அடுத்ததா தங்கச்சி ஜெயந்தி அதாங்க இம்சை செய்யாத இம்சை அரசி 5 சொல்லுங்கண்ணான்னு சொன்னாங்க. ஆக 10 சொல்லனுமான்னு நெனச்சிகிட்டு வந்து பாத்தா நம்ம கொத்ஸ் 5 கிறுக்குதனத்த சொல்லுய்யான்னு சொல்லியிருக்கார். நாம எது செஞ்சாலுமே அது கிறுக்குதனமாவே இருக்கும். இதுல என்ன தனியா 5ன்னு சரின்னுட்டேன்.
கடமை:
நான் ஒரு கடமை வீரன். ஒரு புராஜக்டுல ஒழுங்கா ஆணி புடுங்கிய என்னை பாத்து நீ ரொம்ப நல்லா புடுங்குற அதனால இன்னும் 3 புராஜக்டையும் சேத்து பாத்துக்கோன்னு சொல்லிட்டாங்க. இப்போ ஐயாவுக்கு 4 இடத்திலயும் சீட். அதுல ஒரு வசதி சுத்தி சுத்தி பின்னூட்டம் போடலாம். ஆனா அப்பப்ப ஆணியும் புடுங்குவேன். இதுல என்னா கிறுக்குன்னா என் டிபார்ட்மென்ட் ஆணியவிட அடுத்த டிபார்ட்மென்ட் ஆணிதான் அதிகமா புடுங்குவேன். இவன் கிட்ட சொன்னா முடிச்சுடுவான்டான்னு என் தலைல கட்டிடுவானுங்க. இது உணர்ந்தும் உணராத இந்த லூசு எல்லாத்தையும் கட்டிகிட்டு மாரடிக்கும். இந்த கடமைய விட 1 ம் தேதி வீட்டுக்கு பணம் அனுப்பும் கடமையை கச்சிதமா செய்வேன். (யாருய்யா அது"அடப்பாவி நீ ஒரு கயமை வீரன்"ன்னு யாருய்யா சவுண்டு குடுக்கிறது)
கண்ணியம்:
இந்த விஷயத்துல நா நெம்ப ரீஜண்டு. சகோதரிகள், சித்திகள், த்ம்பிகள் அப்டின்னு "வருஷம் 16" மாதிரியான குடும்பத்தில் பிறந்ததால் கூட இந்த கண்ணியம் வந்திருக்கலாம். பிளாக் எழுத ஆரம்பிக்குமுன் கூட என் தம்பி "எதை பத்திவேணா எழுது. ஆனால் அசிங்கமான வார்த்தை பிரயோகம் கூடாது"ன்னு சொன்ன காரணத்துக்காகவே நான் "குசும்பு" போன்ற வார்த்தைகளை பிரயோகிப்பதில்லைன்னா பாத்துகோங்க என் கண்ணியத்தை:-) என் தம்பி சொன்னது என்ன நா புரிஞ்சுகிட்டது என்ன. ரொம்ப கண்ணியமா இருக்கனாமா!
கட்டுப்பாடு:
என் கையில் ஒரு மெல்லிய நூல் கட்டப்பட்டு அதன் ஒரு முனை என் குடும்பத்தரிடம் (அப்போ அம்மா இப்போ தங்கமணி)இருக்கும். அந்த நூலை அறுத்து விடாமல் காப்பாத்தும் பொறுப்பு இரண்டு பக்கத்துக்கும் உண்டு. இது வரை நாங்கள் காப்பாத்தி வருகிறோம். என்ன! அம்மாவிடம் பிடியிருந்தபோது நூல் கொஞ்சம் பெருசா இருந்துச்சு. இப்போ தங்கமணிகிட்ட நூல் வந்தவுடன் சின்னதாகிவிட்டது. அப்பப்ப லீவ்விட்டா நூலை அவுத்து கட்டில்ல கட்டிட்டு ஃப்ரீ பேர்டு....
கிரிமினல்தனம்:
யாருக்கும் கேடு வராதபடி நக்கலான கிரிமினல்தனம் என்னிடம் எப்போதும் இழைந்து கொண்டிருக்கும். உதாரணத்துக்கு நேத்து ஒரு பதிவு போட்டேன். தமிழ்மணத்திலே பதிவின் பக்கத்துல என் பெயர் இல்லை. அதனால் ரெகுலர் கஸ்டமர்கள் வரலை. அது அபிஅப்பா பதிவுன்னு யாருக்குமே தெரியலை. சரி இந்த பதிவும் அப்டி போயிடுமோன்னு இந்த தலைப்பிலேயே அபிஅப்பான்னு வரவழைச்சுட்டேன். இது போன்ற சின்ன சின்ன கிரிமினல்தனங்கள்தான்.
நகைச்சுவை:
அபிஅப்பா பதிவு இவ்வளவு dry யா இருக்கேன்னு பாக்காதீங்க. நமக்கு பிடித்த விஷயமே நகைச்சுவைதான். என்னையும் கலைஞரின் செயலர் சண்முகநாதனையும் ஒரு ரூமில் போட்டு 24 மணி நேரம் பூட்டிவிட்டால் இரண்டில் ஒன்னு நடக்கும்.
1. அவர் சிரித்து கொண்டே வெளியே வருவார்.
2. அவர் சிரித்து கொண்டே வெளியே வருவார்.
எனக்கு பிடித்த நகைச்சுவை நிகழ்வு:
அபிபாப்பா சிதம்பரம் ஞானமணி ஹாஸ்பிட்டலில் பிறந்தாள். லேபர் வார்டிலிருந்து தங்கமணி வரும் முன்பே அபிபாப்பா வார்டுக்கு வந்துடுச்சு. சுருட்டை முடி கொட்டாபுட்டி கவுத்தமாதிரி, கருப்பு திராச்சை மாதிரி கண்ணு. யார்டா நீ ங்குற மாதிரி என்னை ஒரு பார்வை. என் அம்மா மட்டும் பாப்பாவை வச்சுகிட்டு உக்காந்து இருந்தாங்க. அவங்க தவிர நான் மட்டும். கொஞ்சம் ரிலாக்ஸா வெளியே வந்து நின்னேன்.
அப்போ ஒரு தாத்தாவும், ஒரு பாட்டியும் வந்து என் கைய புடுச்சுகிட்டு "நல்லா இருக்கியாப்பா"ன்னாங்க. "உன் கல்யாணத்துல உன்ன பாத்தது. அதுக்கப்புரம் 3 தடவை வந்தபோதும் உன்னய பாக்கமுடியல. இப்போ உம் பொண்டாட்டிய பிரசவத்துக்கு சேத்த சேதிவந்ததும் அவசர அவசரமா கிளம்பி வந்தோம். இன்னும் உன் மாமனார் வீட்டுக்கு கூட போகலை. அப்டியே பஸ்டாண்டிலேந்து இங்க வந்துட்டோம். சரி வா குழந்தைய பாக்க போவோம் "ன்னு சொல்ல நானும் சரி தங்கமணிக்கு சொந்தம் போலன்னு கூட்டிகிட்டு போனேன்.
என் அம்மாவிடம் அவங்க குசலம் விசாரிச்சுட்டு கொண்டுவந்த சாக்லெட்பாக்ஸ், சின்ன குழந்தை மெத்தை, டிரஸ், பால் பாட்டில் எல்லாத்தையும் கொடுத்துட்டு "சரி உன் மாமனார் வீட்டுக்கு போகிறேன்"ன்னு சொல்லிட்டு போயிடாங்க.
இதுல என்னா கூத்துன்னா வந்தவங்க யாரோ. அதே ஹாஸ்பிட்டல்ல பிறந்த வேற ஆண் குழந்தைய பாக்க வேண்டியவங்க. இது எங்களுக்கு அடுத்த நாள்தான் தெரியும். அந்த குழந்தையின் அப்பாவும் என் சாயல் போலயிருக்கு. சரின்னு அந்த குழந்தைக்கு நான் அவங்க கொடுத்தது போல எல்லாத்தையும் வாங்கி குடுத்தேன். ஆக அபிபாப்பாவின் குறும்பு பிறந்த அடுத்த நிமிஷமே ஸ்டாட்டாகிடுச்சு:-)
இது போல நகைச்சுவை நிகழ்வுகள் எல்லா இடத்திலிலும் நடக்கும். அதை பகிர்ந்துக்கும் போது மிக்க மகிழ்வாக இருக்கும். நகைச்சுவை எழுத 4,5 பாரா கூட வேண்டாம். ஜஸ்ட் ஒரு வரி போதும். நினைத்து நினைத்து சிரிக்கலாம்.
இதோ ஒரு பதிவுக்கு நம்ம கொத்ஸ் போட்ட பின்னூட்டம். நாமக்கல் சிபி "நான் ஓய்வெடுக்க போகிறேன்" ன்னு ஒரு பதிவு. அதுக்கு கொத்ஸ் "ஓய் வெடுக்குனு வா" . என்ன புரிஞ்சா குபீர் சிரிப்பு கியாரண்டி!!
இதுதான் நகைச்சுவை பற்றிய என் கருத்து. நகைச்சுவை பதிவுக்கு பேஸ்மென்டே கிறுக்குதனங்கள்தான்!
சரி மக்கா, இப்போ அந்த 5 பேர் யாருன்னு பாப்போம். பதிவு போடுவது கூட சுலபமாயிருக்கு. இந்த பட்டம் கொடுப்பது ரொம்ப கஷ்டமப்பா!
1.எனக்கு 1 வருஷ சீனியர் "கல்வி வள்ளல்" சீமாச்சு
2. என் அன்பு அம்மா "பாலாபிஷேக நாயகி" கீதாசாம்பசிவம்.
3.என் துபாய் நண்பர் "பவுலிங் புயல்" பாஸ்ட் பவுலர்"
4.எங்க ஊர் நண்பர் "சமூக சிந்தனை நாயகன்" மயிலாடுதுறை சிவா
5. அன்பு சகோதரி "காமடி கலைமாமணி" கண்மணி
வாங்க வந்து வியர்டான 5 விஷயத்த புட்டு புட்டு வைய்யுங்க!
இப்போ முதல் வரிக்கு போங்க. போயாச்சா. ரொம்ப நேரமா அப்டி நிக்கிறது கஷ்டமா இருக்கு. தர்ம அடி போடுறவங்க ஒரு வரிசையாகவும், மாலை,கீலை போடுறவங்க ஒரு வரிசையாகவும் வரவும். இது என்னோட 25 வது பதிவு:-))
March 20, 2007
உலக கோப்பை கிரிக்கெட் - இந்தியா vs பர்மூடா ஓர் அலசல்!!!
நேற்று நடந்த இந்தியா-பர்மூடா போட்டியை முழுவதும் பார்த்து ஒரு நல்ல விமர்சனம் போட முடிவெடுத்தேன். அப்படி ஒரு பதிவு போடும்போது நம்ம பக்கத்துல ஒரு தேர்ந்த கிரிக்கெட்டர் இருந்தா நல்லா இருக்குமேன்னு நம்ம 'பாஃஸ்ட் பவுலர்' க்கு போன் செய்தேன்.
"என்ன பாஃஸ்ட் பவுலர் இன்னிக்கு மேட்ச் இருக்கே வர்ரீங்களா நம்ம கூட பார்க்கலாம்"ன்னு கேட்டேன். அதற்கு அவரும் "நானே உங்களுக்கு போன் செய்யலாம்ன்னு இருந்தேன். போன மேட்சுக்கே தங்கமணி கிண்டல் தாங்கலை. அதனால உங்க கூட பாக்கலாம்ன்னு நெனச்சேன். கண்டிப்பா வர்ரேன்" அப்டீன்னாரு.
"சரி நீங்க என் வீட்டுக்கு வர்ரத்துகுள்ளே மேட்ச் முடிஞ்சுடும். அதனால கராமாவிலே என் ஃபிரண்ட் ஒருத்தர் ஊருக்கு போய்ட்டார், அவர் பிளாட் கீ என்கிட்ட தான் இருக்கு அங்க போயிடலாம்"ன்னு சொன்னேன். அவரும் "சரி என்கூட 2 பேர் வருவாங்க"ன்னு சொல்லிட்டு வச்சுட்டார்.
நானும் ஆஃபீஸில் இருந்து கிளம்பி அங்கே போய் சேரவும் பாஃஸ்ட் பவுலரும் வந்து சேரவும் சரியா இருந்துச்சு. அப்போ மணி 5.00 . துபாய் டைம் 5.30க்கு மேட்ச் ஆரம்பம்.
அப்போதான் அந்த போன் வந்தது. "மாப்ள முதல்லயே சொல்லிகிறேன் நா ராதா அதான்டா குரங்கு ராதா பேசுறேன். சன் டி.வி காமடி டைம் இல்ல"ன்னான் நம்ம ராதா. ஏற்கனவே அவன் பட்டது இன்னும் ஞாபகம் இருக்கும் போல. "சரி சொல்லுடா" ன்னேன். அதுக்கு அவன் "இன்னிக்கு மேட்ச் இருக்கு தெரியும்ல? நா உங்கூட பாக்கலாம்ன்னு வந்துகிட்டு இருக்கேன்"ன்னான். ஆஹா ஏழரைய கூட்டுரானேன்னு "மாப்ள நா என் இடத்துல இல்ல. என் பிஃரன்ட் வீட்டுல கராமாவுல இருக்கேன்" அப்டீன்னேன். அதுக்கு அவன் "கராமாவுல எங்க?"ன்னான். "உன்னால வரமுடியாது மாப்ள, இது வழி சொல்லவே முடியாத சந்துடா"ன்னேன்.
"பரவாயில்ல சொல்லு"ன்னான். சரி இன்னிக்கு நம்ம மண்டை காயபோவது நிச்சயம்ன்னு நெனச்சுகிட்டு வழியை சொன்னேன். சொல்ல சொல்ல "இதுக்கு பக்கத்துலயா, அதுக்கு பக்கத்துலயா, பில்டிங் பேர் என்ன, எத்தனையாவது மாடி, பிளாட் நம்பர் என்ன"ன்னு கேட்டுகிடே இருந்தான். அதுக்கு நான் "பிளாட் நம்பர்லாம் நீ கராமா வந்து சேந்தபிறகு சொல்றேன், போன வைடா, மேட்ச் ஆரம்பமாவ போவுது"ன்னு சொல்லிட்டு போனை கட்பண்ணீட்டேன். கொஞ்சம் இருங்க காலிங் பெல் சத்தம் கேக்குது. யாருன்னு பாத்துட்டு வந்து மீதிய சொல்றேன்.
போய் கதவை திறந்து பாத்தா நம்ம ராதா நிக்கிறான். "அடப்பாவி பறந்து வந்தியா"ன்னு கேட்டதுக்கு "நான் உனக்கு போன் பண்ணும் போதே பில்டிங் கீழதான் இருந்தேன்"ன்னான்.
"இவரு தான் "ஃபாஸ்ட்ப்வலர்" இவங்க ரெண்டு பேரும் அவர் பிரண்ட்ஸ் இப்போ நம்ம பிரண்ட்ஸ்" என அறிமுகமெல்லாம் முடிஞ்சுது. நம்ம பாஸ்ட்பவுலரோ செம டென்ஷன்ல இருந்தார். இன்னும் 15 நிமிஷத்துல மேட்ச் ஆரம்பம்.
சரின்னு எல்லாரும் அவங்க அவங்க சிலிப், கலிப்பாயிண்ட் அப்டீ இப்டீன்னு உக்காந்தாச்சு. அதுக்குள்ள டாஸ் போட்டாங்க. அவிங்க ஜெயிச்சாங்க! ராதா ஆரம்பிச்சுட்டான் கச்சேரிய. "இவுனுங்க எங்கடா ஜெயிக்க போறாங்க, டாஸையே ஜெயிக்கமுடியலை, நிக்க வச்சு சுடனும்டா, நீங்க என்ன சொல்றீங்க பாஸ்ட்பவுலர்"ன்னு கேட்டான். அவருக்கு 2 காதிலும் குபு குபுன்னு புகை. சரியா வந்து மாட்டிகிட்டோமேன்னு எரிச்சல்.
"என்னடா மாப்ள கழுத்தில கருப்பு கருப்பா கட்டியிருக்காணுங்க"ன்னு அடுத்த பந்தை போட்டான். யாரும் பதில் சொல்லலை. நிசப்தம். ஏன்னா கங்குலியும், உத்தப்பாவும் இறங்கிட்டாங்க!
"பேர பாரு உத்தப்பா, ஊத்தப்பான்னு ஊத்திக்க போறான்" இது அவன். மெதுவா பாஸ்ட்பவுலர் எங்கிட்ட வந்து "யோவ் அபி அப்பா இவன நீரு போன்ல கலாய்ச்சதால இவன் உன்னய பழிவாங்குறான். அதுக்கு நாங்க என்னய்யா பாவம் செஞ்சோம்" அப்டீன்னார். நானு பேசாம இருந்தேன்.
முதல் ஓவரில் உத்தப்பா 3 அடிச்சார். நான் பேசாம இருந்திருக்கலாம். "இப்ப என்னடா சொல்ற"ன்னு அவனை பாத்து கேட்டேன். அதுக்கு அவன்" நான்னா சொல்றேன், இப்ப பாருடா அவந்தான் பேஸ் பண்ன போறான். மொதோ பால்ல சிலிப்புல அந்த குண்டன் கிட்ட கேட்ச் குடுக்கல என் பேர மாத்திக்கோ"
பாஸ்ட்பவுல்ர்க்கு செம கடுப்பு. "அபிஅப்பா கொஞ்சம் வாய மூடுறீங்களா?"ன்னு கத்தல். பால் போட்டாச்சு. குண்டன் லீவராக் புடுச்சிட்டான். நம்ம பாஸ்ட்பவுலர் எந்திரிச்சுட்டார். கோவத்தோட உச்சகட்டம். என்னய தனியா கூப்பிட்டார். சரி ரூம்குள்ள வச்சி சாத்தபோறார்ன்னு பயந்துகிட்டே போனேன்.
"இந்த ஷர்ட் மாட்டும் சட்டத்த எடுத்து ராதா தலையில ஒரே போடா போடவா"ன் னு கேட்டார். அதுக்கு நான் "சட்டத்த நாம கையில எடுத்துக்க கூடாது"ன்னு சொல்லி அதை பிடுங்கி கீழே போட்டுட்டு"எதுனா செய்வோம்"ன்னு சொல்லிட்டு பாத்ரூம் போயிட்டேன். அதுக்குள்ள ராதா சிக்சரும் ஃபோரும் போட்டு நம்ம ஃபாஸ்ட்பவுலரை தாளிச்சு கொதிக்க வச்சுட்டான்.
"இங்க பாருங்க பாஸ்ட்பவுலர் எனக்கு ஒரு ராசி. நான் டி.வி ல மேட்ச் பாத்தா சர சரன்னு விக்கெட் விழும். இப்ப பாத்தீங்களா, நா சொன்ன மாதிரியே குண்டன் புடுச்சிட்டான்" அப்டீன்னு தற்பெருமை வேற.
நம்ம பாஸ்ட்பவுலர் டக்குன்னு கிளம்பி பாத்ரூம் போயிட்டார். ஒரு வேளை விஜய் மாதிரி பாத்ரூம் உள்ளே போய் மூஞ்ச மூடிகிட்டு அழ போறார்ன்னு நெனச்சுகிட்டேன். அவர் திரும்பி வந்ததும் ராதா போனான்.
அவன் போய் கதவை சாத்தியதும் நான் ஓடிப்போய் சத்தமில்லாம வெளிப்பக்கம் தாழ் போட்டேன். நம்ம பசங்க சேவாக் பிச்சு பினாட்ட ஆரம்பிச்சுட்டன். அந்த குண்டு மாமா பவுலிங் போட்டுட்டு அது 6க்கும் 4க்கும் போகும்போது சிரிக்குது. இங்க பாத்தா பாஸ்ட்பவுலர் முகத்துல 100 வாட் பல்பு எரியுது. மனசுக்குள்ளேயே நெனச்சு பாத்தேன் நம்ம மணிகண்டன், பெவிலியன் எல்லாரையும். கடந்து குதிக்கிறாங்க.
இந்த சந்தோஷத்தை கெடுக்க மனசில்லாம பாத்ரூம் கதவை ஒருமுறை நல்ல சோதிச்சு பாத்தேன். வெரிகுட். அவனால வெளியே வரமுடியாதுன்னு உருதி செஞ்சுகிட்டு நிம்மதியா வந்து உக்காந்தேன்.
கொஞ்ச நேரம் கழித்து "டேய் மாப்ள, கதவு திறக்க மாட்டங்குதுடா"ன்னான்.
"கொஞ்சம் நல்லா டிரை பண்ணுடா"
"போடா நா ரொம்ப நேரம் டிரை பண்ணிட்டுதாண்டா உன்னை கூப்புடுறேன்"
பாஸ்ட் பவுலர் போய் கதவுகிட்ட நின்னு கிட்டு "ஐயோ ராதா, லாக் சிக்கிகிச்சு. அடிக்கடி இப்டி ஆகும் இந்த பாத்ரூம்ல. இனிமே கார்பெண்டர் வந்துதான் சரி செய்யனும். அது வரை கொஞ்ஜம் வெயிட் பண்ணுங்க ராதா. நீங்க கவல படாதீங்க, நாங்க இருக்கோம்" அப்டீன்னு சொன்னார்.
"சரி, கொஞ்சம் சீக்கிரமா அழைச்சுட்டு வாங்க, இப்போ ஸ்கோர் என்ன?" ன்னு கேட்டான். அதுக்கு நான் "டேய் நாங்களே நீ உள்ள மாட்டிகிட்டேன்னு கவலையிலே இருக்கோம். உனக்கு ஸ்கோர் கேக்குதா?"ன்னு ஒரு அதட்டல் போட்டேன். திரும்பி பாத்தா பாஸ்ட்பவுலர் சன் டிவி சிட்டிபாபு மாதிரி ஆடிகிட்டு இருக்கார்.
சும்மா பூந்து புயல் மாதிரி அடிக்கிறாங்க நம்ம ஷேவாக்கும், கங்குலியும். ரன் 195 ஆச்சு. அப்போ பாத்ரூம்ல இருந்து ராதா "மாப்ள, கார்பெந்தர் வந்துட்டாரா?"ன்னு கேட்டான். "இல்லடா பாஸ்ட் பவுலர்தான் கூட்டிட்டு வர போயிருக்கார்"ன்னு சொன்னேன்.
"சரி இது என்னடா ஒரு ஆயின்மென்ட் இருக்கு இங்க"
"தெரியல. அதல்லாம் ஏன்டா எடுக்கற பேசாம உக்கார்"
"எவ்ளோவ் நேரம்தான் ஆகும். போரடிக்குது. அதான் சும்மா இந்த ஆயின்மென் ட்ட எடுத்து பாத்துகிட்டு இருக்கேன். சரியான லூசுடா ஒன் பிரன்ட் மெடிசின்ன கொண்டு வந்து எங்க வச்சிருக்கார் பாரு. சரி இதென்னடா அதோட கேப் மூக்கு மாதிரி நீட்டா இருக்கு. "
"சரி எடுத்ததுதான் எடுத்த ஆனா மோந்து கீந்து பாக்காத"
"பாத்துட்டேன்...உவ்வேவ்..உவ்வேவ்...உவ்வேவ்.."
அதுக்குள்ள பாஸ்ட்பவுலர்" அபிஅப்பா ராதாகிட்ட பேச்சு குடுக்காதீங்க, ஷேவாக் அவுட் , நல்ல பவர் உங்க பிரன்ட்க்கு" அப்டீன்னார்.
"டேய் என்னடா பாஸ்ட்பவுலர் குரல் கேக்குது. அவரு கார்பெந்தர் கூட்டிகிட்டு வரபோகலையா? இங்க நா வாந்தி எடுத்துகிட்டு இருக்கேன். கொஞ்சம் சீக்கிரம்டா"ன்னான்.
இந்தியா ஜெயிக்க என்ன பாடு படவேண்டியிருக்குன்னு நெனச்சுகிட்டு "மாப்ள பாஸ்ட்பவுலர் carpenter கூப்பிட போயிடார். இப்போ பேசினது "லொடுக்கு"டா.
பிறகு அடி அடின்னு நம்ம பசங்க அடிச்சு 413 வந்து ஓவர் முடிஞ்சதும், கதவை திறந்தா ராதா பேயடிச்ச மாதிரி நிக்கிறான். கை தாங்கலா அழைச்சிட்டு வந்து உக்கார வச்சா " மாப்ள அந்த ஆயின்மெந்த் ரொம்ப நாத்தம்டா எனக்கு வாந்தியே வந்துடுச்சு, டயர்டா இருக்கு நா தூங்க போறேன்"ன்னு சொன்னான்.
பாஸ்ட்பவுலர் பதறி போய்ட்டார். "அய்யோ இனிமேதான் உங்க உதவி வேணும் ராதா, ப்ளீஸ் தூங்காம கொஞ்சம் பாருங்க"ன்னு கெஞ்சுறார்.
அவன் டி.வி பாத்தாதான் டக்கு டக்குன்னு விக்கெட் விழுமே, அதான் அந்த கரிசனம்.
அவன் தூங்கி தூங்கி விழ நாங்க அவனை தூக்கி தூக்கி நிறுத்தி ஒரு விக்கெட் ஒரு விக்கெட்ன்னு 4,5 விக்கெட்ட காலி பண்ணிட்டோம். அவங்க 63 ரன் எடுத்திருந்தாங்க.
நாங்க பட்ட கஷ்டம் எங்களுக்குதான் தெரியும். அதன் பிறகு அவனை எழுப்பவே முடியலை. அவனை தூக்கி உக்காரவச்சு நானும் பாஸ்ட் பவுலரும் அவன் கண் இமைகளை புட்டு சிரமப்பட்டு டி.விக்கு முன்ன காட்டினோம். மினோர்ஸ் அவுட். இன்னும் 4 விக்கெட்தான்.
ஐயோ எனக்கு ரன்ரேட் வேணும், ரன்ரேட் வேணும் அப்டீன்னு பாஸ்ட் புலம்புது. சரின்னு ராதாவை உலுக்கினா அவன் பருத்திவீரன் முத்தழகு மாதிரி "உட்டுடுங்கடா முடியலைடா"ன்னு அழுவறான். இன்னும் 1 இன்னும் 1 அப்டீன்னு ஜோன்ஸ் அவுட் ஆகும் வரை நாங்க விடலை. 156 ல் ஆலவுட்.
கஷ்டபட்டு நாங்க ஜெயிச்ச சந்தோஷத்தில பாஸ்ட்பவுலர் "அப்பாடா இந்தியா ஜெயிக்க நாம என்னமா போராடிட்டோம், இன்னும் 1 மாசத்துக்கு ராதாவை புக் பண்ணுங்க அபிஅப்பா, நான் வீட்டுக்கு போகிறேன்"ன்னு கிளம்பிட்டார்.
"என்ன பாஃஸ்ட் பவுலர் இன்னிக்கு மேட்ச் இருக்கே வர்ரீங்களா நம்ம கூட பார்க்கலாம்"ன்னு கேட்டேன். அதற்கு அவரும் "நானே உங்களுக்கு போன் செய்யலாம்ன்னு இருந்தேன். போன மேட்சுக்கே தங்கமணி கிண்டல் தாங்கலை. அதனால உங்க கூட பாக்கலாம்ன்னு நெனச்சேன். கண்டிப்பா வர்ரேன்" அப்டீன்னாரு.
"சரி நீங்க என் வீட்டுக்கு வர்ரத்துகுள்ளே மேட்ச் முடிஞ்சுடும். அதனால கராமாவிலே என் ஃபிரண்ட் ஒருத்தர் ஊருக்கு போய்ட்டார், அவர் பிளாட் கீ என்கிட்ட தான் இருக்கு அங்க போயிடலாம்"ன்னு சொன்னேன். அவரும் "சரி என்கூட 2 பேர் வருவாங்க"ன்னு சொல்லிட்டு வச்சுட்டார்.
நானும் ஆஃபீஸில் இருந்து கிளம்பி அங்கே போய் சேரவும் பாஃஸ்ட் பவுலரும் வந்து சேரவும் சரியா இருந்துச்சு. அப்போ மணி 5.00 . துபாய் டைம் 5.30க்கு மேட்ச் ஆரம்பம்.
அப்போதான் அந்த போன் வந்தது. "மாப்ள முதல்லயே சொல்லிகிறேன் நா ராதா அதான்டா குரங்கு ராதா பேசுறேன். சன் டி.வி காமடி டைம் இல்ல"ன்னான் நம்ம ராதா. ஏற்கனவே அவன் பட்டது இன்னும் ஞாபகம் இருக்கும் போல. "சரி சொல்லுடா" ன்னேன். அதுக்கு அவன் "இன்னிக்கு மேட்ச் இருக்கு தெரியும்ல? நா உங்கூட பாக்கலாம்ன்னு வந்துகிட்டு இருக்கேன்"ன்னான். ஆஹா ஏழரைய கூட்டுரானேன்னு "மாப்ள நா என் இடத்துல இல்ல. என் பிஃரன்ட் வீட்டுல கராமாவுல இருக்கேன்" அப்டீன்னேன். அதுக்கு அவன் "கராமாவுல எங்க?"ன்னான். "உன்னால வரமுடியாது மாப்ள, இது வழி சொல்லவே முடியாத சந்துடா"ன்னேன்.
"பரவாயில்ல சொல்லு"ன்னான். சரி இன்னிக்கு நம்ம மண்டை காயபோவது நிச்சயம்ன்னு நெனச்சுகிட்டு வழியை சொன்னேன். சொல்ல சொல்ல "இதுக்கு பக்கத்துலயா, அதுக்கு பக்கத்துலயா, பில்டிங் பேர் என்ன, எத்தனையாவது மாடி, பிளாட் நம்பர் என்ன"ன்னு கேட்டுகிடே இருந்தான். அதுக்கு நான் "பிளாட் நம்பர்லாம் நீ கராமா வந்து சேந்தபிறகு சொல்றேன், போன வைடா, மேட்ச் ஆரம்பமாவ போவுது"ன்னு சொல்லிட்டு போனை கட்பண்ணீட்டேன். கொஞ்சம் இருங்க காலிங் பெல் சத்தம் கேக்குது. யாருன்னு பாத்துட்டு வந்து மீதிய சொல்றேன்.
போய் கதவை திறந்து பாத்தா நம்ம ராதா நிக்கிறான். "அடப்பாவி பறந்து வந்தியா"ன்னு கேட்டதுக்கு "நான் உனக்கு போன் பண்ணும் போதே பில்டிங் கீழதான் இருந்தேன்"ன்னான்.
"இவரு தான் "ஃபாஸ்ட்ப்வலர்" இவங்க ரெண்டு பேரும் அவர் பிரண்ட்ஸ் இப்போ நம்ம பிரண்ட்ஸ்" என அறிமுகமெல்லாம் முடிஞ்சுது. நம்ம பாஸ்ட்பவுலரோ செம டென்ஷன்ல இருந்தார். இன்னும் 15 நிமிஷத்துல மேட்ச் ஆரம்பம்.
சரின்னு எல்லாரும் அவங்க அவங்க சிலிப், கலிப்பாயிண்ட் அப்டீ இப்டீன்னு உக்காந்தாச்சு. அதுக்குள்ள டாஸ் போட்டாங்க. அவிங்க ஜெயிச்சாங்க! ராதா ஆரம்பிச்சுட்டான் கச்சேரிய. "இவுனுங்க எங்கடா ஜெயிக்க போறாங்க, டாஸையே ஜெயிக்கமுடியலை, நிக்க வச்சு சுடனும்டா, நீங்க என்ன சொல்றீங்க பாஸ்ட்பவுலர்"ன்னு கேட்டான். அவருக்கு 2 காதிலும் குபு குபுன்னு புகை. சரியா வந்து மாட்டிகிட்டோமேன்னு எரிச்சல்.
"என்னடா மாப்ள கழுத்தில கருப்பு கருப்பா கட்டியிருக்காணுங்க"ன்னு அடுத்த பந்தை போட்டான். யாரும் பதில் சொல்லலை. நிசப்தம். ஏன்னா கங்குலியும், உத்தப்பாவும் இறங்கிட்டாங்க!
"பேர பாரு உத்தப்பா, ஊத்தப்பான்னு ஊத்திக்க போறான்" இது அவன். மெதுவா பாஸ்ட்பவுலர் எங்கிட்ட வந்து "யோவ் அபி அப்பா இவன நீரு போன்ல கலாய்ச்சதால இவன் உன்னய பழிவாங்குறான். அதுக்கு நாங்க என்னய்யா பாவம் செஞ்சோம்" அப்டீன்னார். நானு பேசாம இருந்தேன்.
முதல் ஓவரில் உத்தப்பா 3 அடிச்சார். நான் பேசாம இருந்திருக்கலாம். "இப்ப என்னடா சொல்ற"ன்னு அவனை பாத்து கேட்டேன். அதுக்கு அவன்" நான்னா சொல்றேன், இப்ப பாருடா அவந்தான் பேஸ் பண்ன போறான். மொதோ பால்ல சிலிப்புல அந்த குண்டன் கிட்ட கேட்ச் குடுக்கல என் பேர மாத்திக்கோ"
பாஸ்ட்பவுல்ர்க்கு செம கடுப்பு. "அபிஅப்பா கொஞ்சம் வாய மூடுறீங்களா?"ன்னு கத்தல். பால் போட்டாச்சு. குண்டன் லீவராக் புடுச்சிட்டான். நம்ம பாஸ்ட்பவுலர் எந்திரிச்சுட்டார். கோவத்தோட உச்சகட்டம். என்னய தனியா கூப்பிட்டார். சரி ரூம்குள்ள வச்சி சாத்தபோறார்ன்னு பயந்துகிட்டே போனேன்.
"இந்த ஷர்ட் மாட்டும் சட்டத்த எடுத்து ராதா தலையில ஒரே போடா போடவா"ன் னு கேட்டார். அதுக்கு நான் "சட்டத்த நாம கையில எடுத்துக்க கூடாது"ன்னு சொல்லி அதை பிடுங்கி கீழே போட்டுட்டு"எதுனா செய்வோம்"ன்னு சொல்லிட்டு பாத்ரூம் போயிட்டேன். அதுக்குள்ள ராதா சிக்சரும் ஃபோரும் போட்டு நம்ம ஃபாஸ்ட்பவுலரை தாளிச்சு கொதிக்க வச்சுட்டான்.
"இங்க பாருங்க பாஸ்ட்பவுலர் எனக்கு ஒரு ராசி. நான் டி.வி ல மேட்ச் பாத்தா சர சரன்னு விக்கெட் விழும். இப்ப பாத்தீங்களா, நா சொன்ன மாதிரியே குண்டன் புடுச்சிட்டான்" அப்டீன்னு தற்பெருமை வேற.
நம்ம பாஸ்ட்பவுலர் டக்குன்னு கிளம்பி பாத்ரூம் போயிட்டார். ஒரு வேளை விஜய் மாதிரி பாத்ரூம் உள்ளே போய் மூஞ்ச மூடிகிட்டு அழ போறார்ன்னு நெனச்சுகிட்டேன். அவர் திரும்பி வந்ததும் ராதா போனான்.
அவன் போய் கதவை சாத்தியதும் நான் ஓடிப்போய் சத்தமில்லாம வெளிப்பக்கம் தாழ் போட்டேன். நம்ம பசங்க சேவாக் பிச்சு பினாட்ட ஆரம்பிச்சுட்டன். அந்த குண்டு மாமா பவுலிங் போட்டுட்டு அது 6க்கும் 4க்கும் போகும்போது சிரிக்குது. இங்க பாத்தா பாஸ்ட்பவுலர் முகத்துல 100 வாட் பல்பு எரியுது. மனசுக்குள்ளேயே நெனச்சு பாத்தேன் நம்ம மணிகண்டன், பெவிலியன் எல்லாரையும். கடந்து குதிக்கிறாங்க.
இந்த சந்தோஷத்தை கெடுக்க மனசில்லாம பாத்ரூம் கதவை ஒருமுறை நல்ல சோதிச்சு பாத்தேன். வெரிகுட். அவனால வெளியே வரமுடியாதுன்னு உருதி செஞ்சுகிட்டு நிம்மதியா வந்து உக்காந்தேன்.
கொஞ்ச நேரம் கழித்து "டேய் மாப்ள, கதவு திறக்க மாட்டங்குதுடா"ன்னான்.
"கொஞ்சம் நல்லா டிரை பண்ணுடா"
"போடா நா ரொம்ப நேரம் டிரை பண்ணிட்டுதாண்டா உன்னை கூப்புடுறேன்"
பாஸ்ட் பவுலர் போய் கதவுகிட்ட நின்னு கிட்டு "ஐயோ ராதா, லாக் சிக்கிகிச்சு. அடிக்கடி இப்டி ஆகும் இந்த பாத்ரூம்ல. இனிமே கார்பெண்டர் வந்துதான் சரி செய்யனும். அது வரை கொஞ்ஜம் வெயிட் பண்ணுங்க ராதா. நீங்க கவல படாதீங்க, நாங்க இருக்கோம்" அப்டீன்னு சொன்னார்.
"சரி, கொஞ்சம் சீக்கிரமா அழைச்சுட்டு வாங்க, இப்போ ஸ்கோர் என்ன?" ன்னு கேட்டான். அதுக்கு நான் "டேய் நாங்களே நீ உள்ள மாட்டிகிட்டேன்னு கவலையிலே இருக்கோம். உனக்கு ஸ்கோர் கேக்குதா?"ன்னு ஒரு அதட்டல் போட்டேன். திரும்பி பாத்தா பாஸ்ட்பவுலர் சன் டிவி சிட்டிபாபு மாதிரி ஆடிகிட்டு இருக்கார்.
சும்மா பூந்து புயல் மாதிரி அடிக்கிறாங்க நம்ம ஷேவாக்கும், கங்குலியும். ரன் 195 ஆச்சு. அப்போ பாத்ரூம்ல இருந்து ராதா "மாப்ள, கார்பெந்தர் வந்துட்டாரா?"ன்னு கேட்டான். "இல்லடா பாஸ்ட் பவுலர்தான் கூட்டிட்டு வர போயிருக்கார்"ன்னு சொன்னேன்.
"சரி இது என்னடா ஒரு ஆயின்மென்ட் இருக்கு இங்க"
"தெரியல. அதல்லாம் ஏன்டா எடுக்கற பேசாம உக்கார்"
"எவ்ளோவ் நேரம்தான் ஆகும். போரடிக்குது. அதான் சும்மா இந்த ஆயின்மென் ட்ட எடுத்து பாத்துகிட்டு இருக்கேன். சரியான லூசுடா ஒன் பிரன்ட் மெடிசின்ன கொண்டு வந்து எங்க வச்சிருக்கார் பாரு. சரி இதென்னடா அதோட கேப் மூக்கு மாதிரி நீட்டா இருக்கு. "
"சரி எடுத்ததுதான் எடுத்த ஆனா மோந்து கீந்து பாக்காத"
"பாத்துட்டேன்...உவ்வேவ்..உவ்வேவ்...உவ்வேவ்.."
அதுக்குள்ள பாஸ்ட்பவுலர்" அபிஅப்பா ராதாகிட்ட பேச்சு குடுக்காதீங்க, ஷேவாக் அவுட் , நல்ல பவர் உங்க பிரன்ட்க்கு" அப்டீன்னார்.
"டேய் என்னடா பாஸ்ட்பவுலர் குரல் கேக்குது. அவரு கார்பெந்தர் கூட்டிகிட்டு வரபோகலையா? இங்க நா வாந்தி எடுத்துகிட்டு இருக்கேன். கொஞ்சம் சீக்கிரம்டா"ன்னான்.
இந்தியா ஜெயிக்க என்ன பாடு படவேண்டியிருக்குன்னு நெனச்சுகிட்டு "மாப்ள பாஸ்ட்பவுலர் carpenter கூப்பிட போயிடார். இப்போ பேசினது "லொடுக்கு"டா.
பிறகு அடி அடின்னு நம்ம பசங்க அடிச்சு 413 வந்து ஓவர் முடிஞ்சதும், கதவை திறந்தா ராதா பேயடிச்ச மாதிரி நிக்கிறான். கை தாங்கலா அழைச்சிட்டு வந்து உக்கார வச்சா " மாப்ள அந்த ஆயின்மெந்த் ரொம்ப நாத்தம்டா எனக்கு வாந்தியே வந்துடுச்சு, டயர்டா இருக்கு நா தூங்க போறேன்"ன்னு சொன்னான்.
பாஸ்ட்பவுலர் பதறி போய்ட்டார். "அய்யோ இனிமேதான் உங்க உதவி வேணும் ராதா, ப்ளீஸ் தூங்காம கொஞ்சம் பாருங்க"ன்னு கெஞ்சுறார்.
அவன் டி.வி பாத்தாதான் டக்கு டக்குன்னு விக்கெட் விழுமே, அதான் அந்த கரிசனம்.
அவன் தூங்கி தூங்கி விழ நாங்க அவனை தூக்கி தூக்கி நிறுத்தி ஒரு விக்கெட் ஒரு விக்கெட்ன்னு 4,5 விக்கெட்ட காலி பண்ணிட்டோம். அவங்க 63 ரன் எடுத்திருந்தாங்க.
நாங்க பட்ட கஷ்டம் எங்களுக்குதான் தெரியும். அதன் பிறகு அவனை எழுப்பவே முடியலை. அவனை தூக்கி உக்காரவச்சு நானும் பாஸ்ட் பவுலரும் அவன் கண் இமைகளை புட்டு சிரமப்பட்டு டி.விக்கு முன்ன காட்டினோம். மினோர்ஸ் அவுட். இன்னும் 4 விக்கெட்தான்.
ஐயோ எனக்கு ரன்ரேட் வேணும், ரன்ரேட் வேணும் அப்டீன்னு பாஸ்ட் புலம்புது. சரின்னு ராதாவை உலுக்கினா அவன் பருத்திவீரன் முத்தழகு மாதிரி "உட்டுடுங்கடா முடியலைடா"ன்னு அழுவறான். இன்னும் 1 இன்னும் 1 அப்டீன்னு ஜோன்ஸ் அவுட் ஆகும் வரை நாங்க விடலை. 156 ல் ஆலவுட்.
கஷ்டபட்டு நாங்க ஜெயிச்ச சந்தோஷத்தில பாஸ்ட்பவுலர் "அப்பாடா இந்தியா ஜெயிக்க நாம என்னமா போராடிட்டோம், இன்னும் 1 மாசத்துக்கு ராதாவை புக் பண்ணுங்க அபிஅப்பா, நான் வீட்டுக்கு போகிறேன்"ன்னு கிளம்பிட்டார்.
March 18, 2007
என் சகோதரனுடன் நான் என்ன பேசினேன்?(பாகம் 1)
ஒரு சாதாரண டெலிபோன் பேச்சு சில சமயம் சுவாரஸ்யமாக அமைந்துவிடும். சில சமயம் ஒரு பதிவே போடுவது மாதிரி நல்ல விவாதமாகவே அமையும். அப்படித்தான் நான் என் தம்பியுடன் 2 நாள் முன்பு பேசியது கூட.
அபிஅப்பா: என்னடா எப்டியிருக்க!
அபிசித்தப்பா: ம்.. நல்லா. அப்புறம் உன் பிளாக் எல்லாம் படிச்சேன். நல்லாயிருக்கு.
அ அ: என்ன இப்டி பொத்தாம் பொதுவா சொல்ற?
அ.சி: வேற என்னத்த சொல்ல. நல்லா சிரிக்கும்படி இருக்கு. ஆனா எனக்கு இப்போ அலுத்துபோனது மாதிரி எல்லாருக்கும் இன்னும் 1 மாதமோ அதிகபட்சமாக 6 மாதமோ அலுத்து போக வாய்ப்பு இருக்கு.
அ.அ: என்னடா இப்டி சொல்ற. எல்லாரும் நல்லா காமடியா இருக்கு காமடியா இருக்குன்னு சொல்றாங்களே?
அ.சி: அந்த நேரம் சிரிச்சவுடனே உடனே பாராட்ட தோனும். டக்குன்னு ஒரு பின்னூட்டம் போட்டு பாராட்டிவிட்டு போயிடுவாங்க. நீயும் அந்த சின்ன புகழ் போதையிலேயே இதுதான் உன் வழின்னு அப்டியே கண்டின்யூ பண்ணுவ. ஒரு 6 மாசம் கழிச்சு வேற யாராவது கொஞ்சம் வேறமாதிரி எழுதுனா எல்லாரும் அங்க போயிடுவாங்க.
அ.அ: அதுக்கு என்ன செய்யலாம். வாங்க வாங்கன்னு கைய புடிச்சா இழுக்கமுடியும்.
அ.சி: உன்ன யாரு கைய புடிச்சு இழுக்க சொன்னாங்க. வெரைட்டி எழுது. சீரியஸ் எழுது. ஒரு மொக்கை போடு. அய்ய இவன் இப்டிதானான்னு அவங்க யோசிக்கும் போதே திடீர்ன்னு "துணை நகரம் தேவையா?" அப்டீன்னு ஒரு ச்மூக கட்டுரை போடு. நா உன்னை இப்போ கேக்கிறேன், துணை நகரம் தேவையா?
அ.அ: கண்டிப்பா தேவை. ஆனா பா.ம.க தான் எதுக்குதே.
அ.சி: ஏன் எதுக்குது?
அ.அ: விளை நிலங்கள் குறைந்தால் அப்டீங்குற பிரச்சனை வருதே.
அ.சி: சரி. நம்ம மயிலாடுதுறை எடுத்துக்கோ. சுப்ரமணியபுரம், சீனிவாசபுரம், காந்திநகர், திருவள்ளுவர் நகர், அப்டீ இப்டீன்னு பல்லாயிரக்கணக்கான விளை நிலங்கள் இன்று நகராயிப்போச்சே, உனக்கும் எனக்கும் தெரிந்து அதெல்லாம் எப்படி செழிப்பா இருந்துச்சு. நம்ம ஊர்லயும் பா.ம.க இருக்கு. இதெல்லாம் கண்ணுக்கு தெறியலையா?
அ.அ: நீ என்னை அரசியலுக்கு இழுக்கற. நா வரலை.
அ.சி: இல்லை. இது அரசியல் இல்லை. சமூக அக்கறை. சரி விடு. பா.ம.கவையும் சமாளிச்சு துணநகரமும் அமைய உன்கிட்ட ஏதாவது ஐடியா இருக்கா?
அ.அ: நான் என்ன மினிஸ்டரா? என் ஐடியாவை கவர்மெண்ட் கேக்க போவுதா? ஆனால் என்னிடம் சில கருத்துகள் உண்டு.
அ.சி: கேக்கும். புதுவை எம்.பி. ராமதாஸ் ஒரு முறை மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த போது ஒரு 'மாதிரி' பட்ஜெட் போட்டு அனுப்பி வைத்தார். அதிலே 40% அளவுக்கு ஏத்துக்கப்பட்டது. அப்போது அவர் சாதாரண புரஃபஸ்ர் தான். அப்போ அவர் அரசியல்வாதிகூட இல்லை. துணை நகரம் சம்மந்தமாக உன்னிடம் உள்ள கருத்தை பதிவாக்கு.
அ.அ:யார் வந்து படிப்பாங்க?
அ.சி: உனக்கு பின்னூட்டம் போட்டவங்க மாத்திரம்தான் உன்னை படிப்பவர்களா? படிக்க தெரிந்த அத்தனபேருக்கும் பின்னூட்டம் போட தெரியனும்ங்கர அவசியம் இல்ல. ஏன் எனக்கே தெரியாது. ஆனால் நான் படிக்காத தமிழ் பிளாக்கே இல்லை. அதனால்தான் சொல்கிறேன், உன்னை அலுத்துபோகாமல் இருக்க வேண்டுமானால் நீ வெரைட்டியாக எழுது.
அ.அ: "அந்தரங்கம் விற்பவர்களை செருப்பால் அடி" ன்னு ஒரு ஆத்திரத்தை எழுதினேன். யாவாரம் சரியா ஆகலை.
அ.சி: தப்பு அது உன் களம் இல்லை. தவிர நீ சொல்லவந்ததை ஒருவித பயத்தில் சரியா சொல்லலை. தலைப்பில் இருந்த காரம் உள்ளே இல்லை. அதுதவிர வந்த புதுசு. உன்னை கவனிக்க ஆளே அப்போது இல்லை. உனக்கு தெரிந்த விஷயங்கள் நிறைய இருக்கு. அதை எழுது. "பெயர் வைக்கலாம் வாங்க"ன்னு ஒரு மொக்கை பதிவு படிச்சேன். அது ஒரு நல்ல விஷயம் சொல்லக்கூடிய பதிவு. திடீர்ன்னு அதை மொக்கையாக்கிட்டு அடுத்த காமடிக்கு போயிட்ட. அதுதவிர நல்ல விவாதங்களில்கூட நீ போய் கலந்துப்பதில்லை. போனாலும் ஏனோ தானோன்னு வருகை பதிவு மாத்திரம் செய்யுற.
அ.அ: எப்போ அப்டீ நடந்துச்சு!
அ.சி: இப்போ ரீஸண்டா, உஷா மேடம் பதிவுல ஒரு நல்ல வாக்குவாதம் நடந்தது. அவங்க அதான் பிரேமலதா உள்ள வந்தவுடன். கொத்ஸும், நாகை சிவாவும் நடத்திய களேபரத்தில் நீ சும்மா பாத்துகிட்டு மட்டும் இருந்தாய்.
அ.அ: இல்லியே! அவங்க சேதுக்கரசியை மறந்தவுடன் வந்து ஞாபகப்படுத்தினேனே!
அ.சி: வெரிகுட். நல்ல விஷயம். அதே போல் பிரேமலதா வந்தவுடன் சூடுபிடித்ததே அப்போது நீ உள்ளே நுழைத்திருக்க வேண்டும். சேதுக்கரசியை ஞாபகப்படுத்திய நீயும் கொத்ஸும் இம்சை அரசியை மறந்தது ஏன்? அதும் கொத்ஸ்கூட வ.வ.ச வில் இருக்காங்க. இந்த நிமிஷம் வரை நீங்கள் யாரும் வாய் திறக்கவில்லை. அதுபோல் பெண்கள் ஒத்துமை என கூவி கூவி கும்மாளமாக இருந்த எந்த பெண்களும் இம்சை அரசி பத்தி வாய் திறக்கவில்லை. இது ஏன்?
அ.அ: டேய் டேய் வேண்டாம். நா இங்க கொஞ்சம் மரியாதயா இருக்கேன். ஒரு வார்த்தை உஷா மேடத்துகிட்ட சொன்னா சேத்துக்க போறாங்க. அவங்ககுள்ள சண்டை போட வச்சிடாதடா. நா இந்த நிமிஷம் வரை நெசமாவே மறந்துவிட்டேன்.
அ.சி: ஆமாம். இருக்கலாம். ஆனா கொத்ஸ் ஞாபகமா மறந்துட்டார்.
அ.அ: சரி. அந்த விஷயத்த விடு. நா வேனுமின்னா பின்நவீனத்துவம் எழுதவா?
அ.சி: முதல்ல பின்நவீனத்துவம்ன்னு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுது. பின்ன பின்நவீனத்துவம் எழுதலாம். அது போல லக்கியின் பதிவு, வெட்டி பதிவு, கொத்ஸ், பின்நவீனத்துவத்துல பின்னி பெடலெடுக்கற மிதக்கும் வெளி, தம்பி, முத்துகுமரன், சமீபத்துல ஒரு கவிதை நிலவு நண்பன் இத பத்தியெல்லாம் பேசலாம். மீதி அடுத்த வாரம் பேசலாம்.
அ.அ: என்னடா இது என் பதிவு போலயில்லையே!
அ.சி: அது போகட்டும். எனக்கு ஒரு நோக்கியா 5300 வாங்கி அனுப்பு!
அ.அ: உன்கிட்டதான் அந்த மாடல் இருந்துச்சே?
அ.சி: அது உடைஞ்சு போச்சு. நான் பாப்பாவ கலாய்க்க கூப்பிட்டேன். வந்தா. நா ஒரு வேளையும் சொல்லாம பேப்பர் படிச்சுகிட்டு இருந்தேன். அவ ரொம்ப நேரம் நின்னு கிட்டு இருந்தா. பிறகு"என்ன சித்தப்பா வேளை செய்யனும்"ன்னு கேட்டா. அதுக்கு நான் "இங்க வான்னுதான் சொன்னேன், வேளை இருக்குன்னு சொன்னனா?" ன்னு சொன்னேன். சரின்னு போயிட்டா. சாயந்திரம் வந்து "சித்தப்பா உங்க போனை தூக்கிபோடுங்க"ன்னு சொல்லிகிட்டு கையை குவிச்சு வச்சுகிட்டா. நானும் போட்டேன். அவ பிடிக்காம விட்டுட்டு போயிட்டா. போன் கீழே விழுந்து உடஞ்சுடிச்சு. அதுக்கு அவ "போனை போடுங்கன்னுதான சொன்னேன். பிடிக்கிறேன்னு சொன்னனா?"ன்னு சொல்றா.
அ.அ: இப்போதான் என் பதிவு மாதிரி இருக்கு. சரி அடுத்த வாரம் பேசுவோம்.
அபிஅப்பா: என்னடா எப்டியிருக்க!
அபிசித்தப்பா: ம்.. நல்லா. அப்புறம் உன் பிளாக் எல்லாம் படிச்சேன். நல்லாயிருக்கு.
அ அ: என்ன இப்டி பொத்தாம் பொதுவா சொல்ற?
அ.சி: வேற என்னத்த சொல்ல. நல்லா சிரிக்கும்படி இருக்கு. ஆனா எனக்கு இப்போ அலுத்துபோனது மாதிரி எல்லாருக்கும் இன்னும் 1 மாதமோ அதிகபட்சமாக 6 மாதமோ அலுத்து போக வாய்ப்பு இருக்கு.
அ.அ: என்னடா இப்டி சொல்ற. எல்லாரும் நல்லா காமடியா இருக்கு காமடியா இருக்குன்னு சொல்றாங்களே?
அ.சி: அந்த நேரம் சிரிச்சவுடனே உடனே பாராட்ட தோனும். டக்குன்னு ஒரு பின்னூட்டம் போட்டு பாராட்டிவிட்டு போயிடுவாங்க. நீயும் அந்த சின்ன புகழ் போதையிலேயே இதுதான் உன் வழின்னு அப்டியே கண்டின்யூ பண்ணுவ. ஒரு 6 மாசம் கழிச்சு வேற யாராவது கொஞ்சம் வேறமாதிரி எழுதுனா எல்லாரும் அங்க போயிடுவாங்க.
அ.அ: அதுக்கு என்ன செய்யலாம். வாங்க வாங்கன்னு கைய புடிச்சா இழுக்கமுடியும்.
அ.சி: உன்ன யாரு கைய புடிச்சு இழுக்க சொன்னாங்க. வெரைட்டி எழுது. சீரியஸ் எழுது. ஒரு மொக்கை போடு. அய்ய இவன் இப்டிதானான்னு அவங்க யோசிக்கும் போதே திடீர்ன்னு "துணை நகரம் தேவையா?" அப்டீன்னு ஒரு ச்மூக கட்டுரை போடு. நா உன்னை இப்போ கேக்கிறேன், துணை நகரம் தேவையா?
அ.அ: கண்டிப்பா தேவை. ஆனா பா.ம.க தான் எதுக்குதே.
அ.சி: ஏன் எதுக்குது?
அ.அ: விளை நிலங்கள் குறைந்தால் அப்டீங்குற பிரச்சனை வருதே.
அ.சி: சரி. நம்ம மயிலாடுதுறை எடுத்துக்கோ. சுப்ரமணியபுரம், சீனிவாசபுரம், காந்திநகர், திருவள்ளுவர் நகர், அப்டீ இப்டீன்னு பல்லாயிரக்கணக்கான விளை நிலங்கள் இன்று நகராயிப்போச்சே, உனக்கும் எனக்கும் தெரிந்து அதெல்லாம் எப்படி செழிப்பா இருந்துச்சு. நம்ம ஊர்லயும் பா.ம.க இருக்கு. இதெல்லாம் கண்ணுக்கு தெறியலையா?
அ.அ: நீ என்னை அரசியலுக்கு இழுக்கற. நா வரலை.
அ.சி: இல்லை. இது அரசியல் இல்லை. சமூக அக்கறை. சரி விடு. பா.ம.கவையும் சமாளிச்சு துணநகரமும் அமைய உன்கிட்ட ஏதாவது ஐடியா இருக்கா?
அ.அ: நான் என்ன மினிஸ்டரா? என் ஐடியாவை கவர்மெண்ட் கேக்க போவுதா? ஆனால் என்னிடம் சில கருத்துகள் உண்டு.
அ.சி: கேக்கும். புதுவை எம்.பி. ராமதாஸ் ஒரு முறை மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த போது ஒரு 'மாதிரி' பட்ஜெட் போட்டு அனுப்பி வைத்தார். அதிலே 40% அளவுக்கு ஏத்துக்கப்பட்டது. அப்போது அவர் சாதாரண புரஃபஸ்ர் தான். அப்போ அவர் அரசியல்வாதிகூட இல்லை. துணை நகரம் சம்மந்தமாக உன்னிடம் உள்ள கருத்தை பதிவாக்கு.
அ.அ:யார் வந்து படிப்பாங்க?
அ.சி: உனக்கு பின்னூட்டம் போட்டவங்க மாத்திரம்தான் உன்னை படிப்பவர்களா? படிக்க தெரிந்த அத்தனபேருக்கும் பின்னூட்டம் போட தெரியனும்ங்கர அவசியம் இல்ல. ஏன் எனக்கே தெரியாது. ஆனால் நான் படிக்காத தமிழ் பிளாக்கே இல்லை. அதனால்தான் சொல்கிறேன், உன்னை அலுத்துபோகாமல் இருக்க வேண்டுமானால் நீ வெரைட்டியாக எழுது.
அ.அ: "அந்தரங்கம் விற்பவர்களை செருப்பால் அடி" ன்னு ஒரு ஆத்திரத்தை எழுதினேன். யாவாரம் சரியா ஆகலை.
அ.சி: தப்பு அது உன் களம் இல்லை. தவிர நீ சொல்லவந்ததை ஒருவித பயத்தில் சரியா சொல்லலை. தலைப்பில் இருந்த காரம் உள்ளே இல்லை. அதுதவிர வந்த புதுசு. உன்னை கவனிக்க ஆளே அப்போது இல்லை. உனக்கு தெரிந்த விஷயங்கள் நிறைய இருக்கு. அதை எழுது. "பெயர் வைக்கலாம் வாங்க"ன்னு ஒரு மொக்கை பதிவு படிச்சேன். அது ஒரு நல்ல விஷயம் சொல்லக்கூடிய பதிவு. திடீர்ன்னு அதை மொக்கையாக்கிட்டு அடுத்த காமடிக்கு போயிட்ட. அதுதவிர நல்ல விவாதங்களில்கூட நீ போய் கலந்துப்பதில்லை. போனாலும் ஏனோ தானோன்னு வருகை பதிவு மாத்திரம் செய்யுற.
அ.அ: எப்போ அப்டீ நடந்துச்சு!
அ.சி: இப்போ ரீஸண்டா, உஷா மேடம் பதிவுல ஒரு நல்ல வாக்குவாதம் நடந்தது. அவங்க அதான் பிரேமலதா உள்ள வந்தவுடன். கொத்ஸும், நாகை சிவாவும் நடத்திய களேபரத்தில் நீ சும்மா பாத்துகிட்டு மட்டும் இருந்தாய்.
அ.அ: இல்லியே! அவங்க சேதுக்கரசியை மறந்தவுடன் வந்து ஞாபகப்படுத்தினேனே!
அ.சி: வெரிகுட். நல்ல விஷயம். அதே போல் பிரேமலதா வந்தவுடன் சூடுபிடித்ததே அப்போது நீ உள்ளே நுழைத்திருக்க வேண்டும். சேதுக்கரசியை ஞாபகப்படுத்திய நீயும் கொத்ஸும் இம்சை அரசியை மறந்தது ஏன்? அதும் கொத்ஸ்கூட வ.வ.ச வில் இருக்காங்க. இந்த நிமிஷம் வரை நீங்கள் யாரும் வாய் திறக்கவில்லை. அதுபோல் பெண்கள் ஒத்துமை என கூவி கூவி கும்மாளமாக இருந்த எந்த பெண்களும் இம்சை அரசி பத்தி வாய் திறக்கவில்லை. இது ஏன்?
அ.அ: டேய் டேய் வேண்டாம். நா இங்க கொஞ்சம் மரியாதயா இருக்கேன். ஒரு வார்த்தை உஷா மேடத்துகிட்ட சொன்னா சேத்துக்க போறாங்க. அவங்ககுள்ள சண்டை போட வச்சிடாதடா. நா இந்த நிமிஷம் வரை நெசமாவே மறந்துவிட்டேன்.
அ.சி: ஆமாம். இருக்கலாம். ஆனா கொத்ஸ் ஞாபகமா மறந்துட்டார்.
அ.அ: சரி. அந்த விஷயத்த விடு. நா வேனுமின்னா பின்நவீனத்துவம் எழுதவா?
அ.சி: முதல்ல பின்நவீனத்துவம்ன்னு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுது. பின்ன பின்நவீனத்துவம் எழுதலாம். அது போல லக்கியின் பதிவு, வெட்டி பதிவு, கொத்ஸ், பின்நவீனத்துவத்துல பின்னி பெடலெடுக்கற மிதக்கும் வெளி, தம்பி, முத்துகுமரன், சமீபத்துல ஒரு கவிதை நிலவு நண்பன் இத பத்தியெல்லாம் பேசலாம். மீதி அடுத்த வாரம் பேசலாம்.
அ.அ: என்னடா இது என் பதிவு போலயில்லையே!
அ.சி: அது போகட்டும். எனக்கு ஒரு நோக்கியா 5300 வாங்கி அனுப்பு!
அ.அ: உன்கிட்டதான் அந்த மாடல் இருந்துச்சே?
அ.சி: அது உடைஞ்சு போச்சு. நான் பாப்பாவ கலாய்க்க கூப்பிட்டேன். வந்தா. நா ஒரு வேளையும் சொல்லாம பேப்பர் படிச்சுகிட்டு இருந்தேன். அவ ரொம்ப நேரம் நின்னு கிட்டு இருந்தா. பிறகு"என்ன சித்தப்பா வேளை செய்யனும்"ன்னு கேட்டா. அதுக்கு நான் "இங்க வான்னுதான் சொன்னேன், வேளை இருக்குன்னு சொன்னனா?" ன்னு சொன்னேன். சரின்னு போயிட்டா. சாயந்திரம் வந்து "சித்தப்பா உங்க போனை தூக்கிபோடுங்க"ன்னு சொல்லிகிட்டு கையை குவிச்சு வச்சுகிட்டா. நானும் போட்டேன். அவ பிடிக்காம விட்டுட்டு போயிட்டா. போன் கீழே விழுந்து உடஞ்சுடிச்சு. அதுக்கு அவ "போனை போடுங்கன்னுதான சொன்னேன். பிடிக்கிறேன்னு சொன்னனா?"ன்னு சொல்றா.
அ.அ: இப்போதான் என் பதிவு மாதிரி இருக்கு. சரி அடுத்த வாரம் பேசுவோம்.
Subscribe to:
Posts (Atom)