பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 28, 2007

பர்மிஷன் கிடைத்தது குரங்கு ராதாவிடமிருந்து!!!

28/05/07
கிடேசன் பார்க்
துபாய்
.
அன்பு குரங்கு ராதா,
.
இங்கு நான் மிக்க நலம். நீ எப்படி இருக்கிறாய். என்னதான் போன் ,நெட்டுன்னு எது வந்தாலும் கடிதம் எழுதும் பழக்கம் தனி சுகம் என நீதானே சொல்வாய்! இப்போ உனக்கு என்ன ஆச்சு? கடிதம் போடுவதை ஏன் நிறுத்தி விட்டாய். போனில் ஒருமுறை கலாய்ச்சதால நீ போனும் செய்வதில்லை!
.
உன் நினைவுகள் எனக்கு எப்பவுமே உண்டு ராதா! நாம் 8ம் வகுப்பு படிக்கும் போது ஸ்கூல் பாய்ஸ் டாய்லெட்டில் "சாந்தி ஐ லவ் யூ"ன்னு நான் எழுதியபோது என்னை நீ கையும் சாக்பீசாகவும் பிடித்து நருக்குன்னு ஒரு கேள்வி கேட்டு என் அறிவு கண்ணை திறந்தது மறந்து போகுமா?(நாதாறி, பாய்ஸ் டாய்லெட்டுல எழுதினா சாந்தி வந்து படிப்பாளா?), பின் உன் அறிவுரை படி நான் மிகுந்த சிரமத்துக்கு பின் ஒரு ஞாயிறு சென்று கேர்ல்ஸ் டாய்லெட்டில் எழுத முற்படும் போது அங்கு ஏற்கனவே "சாந்தி ஐ லவ் யூ - இப்படிக்கு ராதாகிஸ்ணா"ன்னு எழுதி இருந்ததை பார்த்து கூட இருந்தே குழி பறிச்சுட்டயே ராதான்னுகொஞ்சம் கூட உன் மேல் கோபம் வச்சிக்காம அந்த ராதாகிஸ்ணாவை மாத்திரம் அழிச்சுட்டு என் பேரை எழுதினேனே அப்படிப்பட்ட நட்பல்லவா நம் நட்பு. ஆனால் உனக்கு இப்போ எனக்கு ஒரு லெட்டர் எழுத வலிக்குது. ஹூம்.
.
அதே எட்டாம் கிளாஸில் உன்னை தினமும் பென்ச் மேல நிக்க வச்ச சரித்திர சாரை மறக்க முடியுமா. நீயும் கொஞ்சம் கூட சொரனையே இல்லாம ஏதோ அவர் பிரமோஷன் குடுத்த மாதிரி ராஜராஜ சோழன் பட போஸ்டர்ல சிவாஜி குடுக்கும் போஸ் மாதிரி நின்னு சந்தோஷபட்டியே அப்போ கூட நான் தான் அது அசிங்கம்டான்னு உனக்கு புரிய வச்சேன். பின்ன அவரை பழி வாங்க கூட ஐடியா குடுத்தனே அதை மறந்து போயிட்டியா?
.
பின்ன ஒரு நாள் பரிட்சையில் அவர் சூப்பர்வைசராக வந்து உன் மேல் அவர் சந்தேகப்பட்டு உன்கிட்டயே நிற்கும் போது உன் சிகப்புஇங்க் பேனாவின் நிப் முனையை அவர் வேட்டியில் படும் மாதிரி வச்சு அது உள்ளங்கை அளவு பெரிதாகி அன்னிக்கு முழுக்க அவரை பைல்ஸ் பேஷண்ட் மாதிரி அலைய வச்சியே.....ஹும் வெளியே வந்து கட்டி பிடுச்சுகிட்டயே என்னை "மாப்ள உன் ஐடியா சூப்பர், என்ன கைமாறு செய்வேன்"ன்னு சொல்லி கண்ணுல தண்ணி வச்சுகிட்டியே ராதா, அது மறந்து போகுமா உனக்கு, அதே போல அன்னிக்கே அவர்கிட்ட உன்னய போட்டு குடுத்து அடுத்த நாள் உன் முதுகை பழுக்க வச்ச உண்மையை அப்பவே உன்னிடம் சொன்னா நம் நட்புக்கு பங்கம் வந்துவிடுமேன்னு இந்த நிமிஷம் வரை மறைத்து நம் நட்பை காப்பாத்தி வர்ரனே ஆனா உனக்கு எனக்கு லெட்டர் போட நேரமில்லை அப்படிதானே!
.
அதெல்லாம் போகட்டும், காலேஜ் படிக்கும் போது செலவுக்கு காசு இல்லாம கஷ்டப்பட்டோமே, அப்போ நீ குடுத்த ஐடியா மாதிரி இந்த உலகத்துல ஒரு பய குடுக்க முடியுமா? "மாப்ள கழுத்துல போட்டிருக்கும் செயினை அடகு வச்சுட்டா வீட்ல தெரியும். அதனால அதே மாதிரி கல்யாணி கவரிங் வாங்கி போட்டுகிட்டு இதை அடகு வைக்கலாம்"ன்னு நான் சொன்னப்போ "போடா போக்கத்தவனே வச்சி அழுவறதை விட வித்து அழுவலாம்டா"ன்னு சொலவடை சொன்னியே ராதா அது உனக்கு மறந்து விடுமோ?
அப்பகூட நான் "வித்தா அம்மா கேப்பாங்களே அப்ப என்ன செய்வது"ன்னு கேட்டப்ப நீ "ரெண்டி ரெண்டு கரனையா வெட்டி பத்தர் பாலுகிட்ட வித்து செலவு செய்யலாம்"ன்னு சூப்பர் ஐடியா குடுத்தியே என்னால் மறக்க முடியாதுடா.(இப்போ கூட கண்ணுல தண்ணி எனக்கு). பின்ன மூணே மாதத்துல நெஞ்சு வரை இருந்த சங்கிலி உட்கழுத்து சங்கிலியான பின்ன அம்மா கூப்பிட்டு "இது எப்படிடா"ன்னு கேட்டப்ப "நம்ம ராதா ஐடியாதாம்மா இது"ன்னு பெருமையா சொன்னனே அப்ப அம்மா என்னய பெத்த நிமிஷத்த விட பல மடங்கு சந்தோஷப்பட்டாங்களே அதை நீ மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். (அம்மா வெளக்குமாத்தாள சாத்துபடி குடுத்ததை இங்கே சொல்ல பிடாது ஏன்னா இது பப்ளிக் பிளேஸ்)
.
அவ்வளவு ஏன் மேத்ஸ் படிச்ச நானும், லிட்ரேச்சர் படிச்ச நீனும்தாண்டா இந்த உலகத்திலேயே லேப்ஃபீஸ் கட்ட வீட்டில பணம் வாங்கியவங்க. அது தவிர சாதாரண ராதாவா இருந்த உன்னை "குரங்கு ராதா"வா ஆக்கியது நான் தானேடா. அப்படிப்பட்ட எனக்கு ஒரு லெட்டர் போட்டா குறைஞ்சு போயிடுவியா?
.
ஹும்...நீ என்ன பண்ணுவ, இங்கிட்டு துபாய்ல போஸ்டல் டிபார்ட்மெண்ட் நெம்ப மோசம். ரெண்டு மாதம் முன்ன"அவசரமா 10000 தேவை, இந்த லெட்டரை தந்தி போல் பாவித்து உடன் அனுப்பவும்"ன்னு நீ போட்ட கடிதம் கூட என் கைக்கு வந்து சேரலைன்னா பாத்துகோயேன் போஸ்டல் டிபார்ட்மெண்ட் லெட்சனத்தை.
.
மத்தபடி வேற சேதியில்லை. இனிமேலாவது அடிக்கடி கடிதம் போடு!
.
இப்படிக்கு
உன் கடிதத்துக்கு ஏங்கும்
.
அபிஅப்பா

75 comments:

  1. நகைச்சுவை மாதிரி இல்லை. இது அக்மார்க் அபிஅப்ப ப்ராண்ட் நகைச்சுவை. சூப்பருப்பு!!!

    ReplyDelete
  2. அபி அப்பா! பேக் டூ த பெவிலியன்!

    சூப்பர்ப்!

    ReplyDelete
  3. பரதேசிகளா! நீங்களா டாய்லெட்டுல அந்த மாதிரி எழுதி வச்சது? நான் நம்ம கணக்கு வாத்தியாருன்னுல நினைச்சேன்.

    ReplyDelete
  4. //அவசரமா 10000 தேவை, இந்த லெட்டரை தந்தி போல் பாவித்து உடன் அனுப்பவும்"ன்னு நீ போட்ட கடிதம் கூட என் கைக்கு வந்து சேரலைன்னா பாத்துகோயேன் போஸ்டல் டிபார்ட்மெண்ட் லெட்சனத்தை//

    கிளாஸிக் காமெடி!

    ReplyDelete
  5. //நாதாறி, பாய்ஸ் டாய்லெட்டுல எழுதினா சாந்தி வந்து படிப்பாளா?),//

    :))

    அதானே!

    ReplyDelete
  6. "அவ்வளவு ஏன் மேத்ஸ் படிச்ச நானும், லிட்ரேச்சர் படிச்ச நீனும்தாண்டா இந்த உலகத்திலேயே லேப்ஃபீஸ் கட்ட வீட்டில பணம் வாங்கியவங்க." One more person in the list. My friend used to buy lab fees from their paretns for his Tamil Lab class. Excellent post. Today is my first visit to your blog.

    ReplyDelete
  7. //அவ்வளவு ஏன் மேத்ஸ் படிச்ச நானும், லிட்ரேச்சர் படிச்ச நீனும்தாண்டா இந்த உலகத்திலேயே லேப்ஃபீஸ் கட்ட வீட்டில பணம் வாங்கியவங்க//

    எங்கள் பள்ளியில் ஒரு மாணவர்(ன்)(அவரோட திறமைக்கு மரியாதை)

    பள்ளியில் டைம் டேபிள் குடுக்குறாங்கன்னு வீட்டிலிருந்து 400 ரூபா பீஸ் வாங்கியாந்துட்டான். நாமக்கல்லுக்கு அருகிலிருந்த ஏதோ ஒரு கிராமம் அந்த மானவரின் ஊர்.

    அவரது தந்தையோ(விவசாயம் செய்பவர்) ஏதோ டேபிள்னு சொன்னானே பெரிசா இருந்தா பையன் கொண்டு வர சிரமப் படுவான்னு மாட்டு வண்டிய பள்ளிக்கு கொண்டு வர பையன் கோல்மால் அம்பலமாகியது தனிக்கதை.

    ReplyDelete
  8. api appaa,

    antha santhiode initial ennanu podame vittutingkale...konjam sonninganaa? naanum ezuthuven!

    ultimate!!

    ReplyDelete
  9. எங்கள் அண்ணன் குரங்கு ராதாவைக் கிண்டலடித்து எழுதப்பட்டிருக்கும் இக்கடிதத்தை வன்மையாக கண்டிக்கிறோம்

    குரங்கு ராதா பேரவை
    குரங்கவான்
    டெல்லி

    ReplyDelete
  10. படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்

    ReplyDelete
  11. குரங்கு ராதாவின் புகைப்படம் போடுங்களேன். இங்கே கும்மி உண்டாம் அங்கே கண்மனியக்க கும்மியை விட்டு அடித்து துரத்திவிட்டார்கள்

    ReplyDelete
  12. எனது பதில் கடிதம் கிடைத்ததா?!!

    ReplyDelete
  13. பின்னூட்டங்களை உடனடியாக பிரசுரிக்கவும்

    ReplyDelete
  14. என்னைக் கண்டுபிடிங்க பார்க்கலாம்

    ReplyDelete
  15. பிளீஸ் பிளீஸ் ஒரு பத்து பின்னூட்டம் மட்டும் போட்டுக்கிறேன்

    ReplyDelete
  16. குரங்கு ராதா ஈஸ் மை கஷின்

    ReplyDelete
  17. நலம் நலமறியா 100 தினார் அனுப்பவும்

    ReplyDelete
  18. வீ வாண்ட் குரங்கு ராதா இன் பிலாக் வேர்ல்ட்

    ReplyDelete
  19. நேனு குரங்கு ராதாவை சூஸ சால இஸ்டம் கொன்னாரு

    ReplyDelete
  20. ஐ லைக் குரங்கு ராதா வெரிமச்

    ReplyDelete
  21. :-)))))))))))))))))))))))

    கலக்கிட்டீங்க போங்க... பக்கார்டி / லெமன் -லாம் தாண்டி எங்கிட்டோ கொண்டு போய்டிச்சி போங்க.

    ராதாவை குரங்கு ராதாவாக்கிய கதையை அறிய ஆவல்.

    //அவ்வளவு ஏன் மேத்ஸ் படிச்ச நானும், லிட்ரேச்சர் படிச்ச நீனும்தாண்டா இந்த உலகத்திலேயே லேப்ஃபீஸ் கட்ட வீட்டில பணம் வாங்கியவங்க.//
    நானும்தான் மேத்ஸ் படிச்சேன். லேப் பீஸும் கட்டினேனே. எங்களுக்கு பிஸிக்ஸ் Ancillary :-)))

    ReplyDelete
  22. // Sridhar Venkat said...
    :-)))))))))))))))))))))))

    கலக்கிட்டீங்க போங்க... பக்கார்டி / லெமன் -லாம் தாண்டி எங்கிட்டோ கொண்டு போய்டிச்சி போங்க.

    ராதாவை குரங்கு ராதாவாக்கிய கதையை அறிய ஆவல்.//

    ஸ்ரீதர்! லிங் குடுத்தாச்சி பாருங்க!

    ReplyDelete
  23. அனானிகளுக்கும் பதில் சொல்லும்படி அபி அப்பாவைக் கேட்டு கொள்கிரோம்

    ReplyDelete
  24. மக்கா! பாஸ்ட் முதல் அத்தினி பேருக்கும் பதில் உண்டு! கொஞ்சம் ஆணி புடிங்கிட்டு வந்திடரேன். ஸாரி அ.மு.க துபை கிளை மக்களே!

    ReplyDelete
  25. حُسامُك من سقراطَ في الخطب أَخْطَبُ
    للشاعر أحمد شوقى
    حُسامُك من سقراطَ في الخطب أَخْطَبُ وعودك من عود المنابر اصلبُ
    ملكتَ سَبِيلَيْهِمْ:ففي الشرق مَضْرِبٌ لجيشك ممدودٌ ، وفي الغرب مضرب
    وعزمك من هومير أمضى بديهة وأجلى بياناً في القلوب ، واعذب
    وإن يذكروا إسكندراً وفتوحه فعهدُك بالفتح المحجَّل أَقرب
    ثمانون ألفاً أسد غابٍ ، ضراغمٌ لها مِخْلبٌ فيهم، وللموتِ مخلب
    إِذا حَلمتْ فالشرُّ وسْنانُ حالمٌ وإن غضبتْ فالرُّ شقظان مغضب

    ReplyDelete
  26. அது அரபி கவிதையாக்கும்

    அக்காங்..

    ReplyDelete
  27. தமிழ்ல கவுஜை எழுதினா மதிப்பே இல்ல.

    அதான் மாத்திட்டேன்.

    ReplyDelete
  28. நான் போடலாமுனு இருந்தேன் நீங்க போட்டுடிங்களா.....:)

    ReplyDelete
  29. Your comment has been saved and will be visible after blog owner approval.

    ReplyDelete
  30. கலக்கல் பதிவு சொல்லவே இல்ல....

    ReplyDelete
  31. i mean போன் பண்ணவே இல்லை

    ReplyDelete
  32. பதில் சொல்லவே இல்லை இதுக்கு..:)

    ReplyDelete
  33. பின்னுட்ட பெட்டி திற கும்மி வரட்டும்..:)

    ReplyDelete
  34. ஐ லவ் யூ

    ReplyDelete
  35. சாந்தி ஐ லவ் யூ

    ReplyDelete
  36. (அம்மா வெளக்குமாத்தாள சாத்துபடி குடுத்ததை இங்கே சொல்ல பிடாது ஏன்னா இது பப்ளிக் பிளேஸ்).

    ஆமா இது பப்ளிக் பிளேஸ்
    கிடேஷன் பார்க்குல மீட்டிங் ஏற்பாடு செய்யட்டுமா..?

    ReplyDelete
  37. இப்படி ஒரு கடிதமா? இப்படி ஒரு நட்பா? இன்னும் ஆச்சரியமா இருக்கு எனக்கு! கோபெருஞ்சோழனையும், பிசிராந்தையாரையும் தோற்கடிக்கிற நட்பா இல்ல இருக்கு! :)))))))))))))))))))

    ReplyDelete
  38. //தம்பி said...
    அது அரபி கவிதையாக்கும்

    அக்காங்..
    //
    அபுதாபிக்கு போனதுக்கப்புறம் ஏதோ ஒன்னு ஆகியிருக்குனு மட்டும் தெரியுது. என்னன்னு தான் தெரியல. அரபு மோகினியா தம்பி?

    ReplyDelete
  39. //கோபெருஞ்சோழனையும், பிசிராந்தையாரையும் தோற்கடிக்கிற நட்பா இல்ல இருக்கு//

    ஏன்? அவுங்களும் டாய்லெட்டுல 'சாந்தி ஐ லவ் யூ' னு எழுதினாங்களா?

    ReplyDelete
  40. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    என்னைய ஓட்ட உனக்கு வேற வழியே கிடைக்கலியா ? சாந்தியை செட் பண்ணவிடாம குச்சு உட்டது நீ தானா ? கடைசியில அது கணக்கு வாத்தியாரை கண்ணாலம் பண்ணினதுல வெக்ஸாயி நாம குவாட்டர் கோயிந்தனோட தண்ணியடிச்சது இனிக்கும் இளமை கதை. அதை சொல்லித்தொலைக்க வேண்டியதுதான..

    ReplyDelete
  41. உங்களிடம் பூர்ஷுவா உணவான பரோட்டா இருக்கிறதா ?

    ReplyDelete
  42. இந்த எருமைக்கு எதுவும் கொடுக்காதீர். அவன் என்னிடம் கடஞ்சொல்லி கட்டஞ்சாயா அடித்தவன்

    ReplyDelete
  43. ஏய்ய் எவண்டா அவன் என்னோட பக்தனை ஓட்டுறது ?

    ReplyDelete
  44. நல்லாருக்கீங்களா ?

    கொஞ்சம் பிஸி..அதனால புடிக்க முடியல...அதான் இப்போ வந்துட்டனே...

    அவர் மே 6 வராரு...

    ReplyDelete
  45. இதுபோன்ற கொடுமையான பின்னூட்டங்களையும் திரட்டும்படி ஆனதே...

    அய்யகோ...நான் என்செய்வேன்...என் ஷெல்வமே...

    ReplyDelete
  46. எடோ..

    இவட வெரு...

    ஈ அட்ரஸ் எவட பறையடா...

    "எனிக்கு மனசிலாகில்லா சேட்டா"

    எடோ..பட்டி..ஞான் ஒரு காரியம் பறஞ்சது...அது எனிக்கி விளியடா..

    ReplyDelete
  47. இன்னும் அஞ்சி நிமிஷத்துல என்னோட பின்னூட்டம் வெளிய வரலை ? நக்ஸல்பாரிக்கிட்ட சொல்லி உமது டேபிளுக்கு அடியில குண்டு வைப்பேன்.

    ReplyDelete
  48. எங்கே பதில் மதியம் போட்ட கும்மி பின்னூட்டங்களுக்கு

    ReplyDelete
  49. என் கேள்விக்கு என்ன பதில்?

    ReplyDelete
  50. ஹலோ கேள்வி கேட்பவன், முதல்ல உங்க கேள்வியைக் கேளுங்க?

    ReplyDelete
  51. அடிக்கடி அரைசதம் அடிக்கு அபி அப்பா
    --- அனைத்தும் "அ" வில் ஆரம்பம்.

    ஹாஹா
    பாராட்டுக்கள்

    ReplyDelete
  52. இதுல 35 ரன் நான் அடிச்சது

    ReplyDelete
  53. என் பின்னூட்டத்தைக் காணவில்லை

    ReplyDelete
  54. //பிலாக்கர் Said
    என் பின்னூட்டத்தைக் காணவில்லை
    //
    போய் போலிஸ் ல கம்பலைண்ட் பன்னு

    ReplyDelete
  55. //அதே போல அன்னிக்கே அவர்கிட்ட உன்னய போட்டு குடுத்து அடுத்த நாள் உன் முதுகை பழுக்க வச்ச உண்மையை //
    // அம்மா கூப்பிட்டு "இது எப்படிடா"ன்னு கேட்டப்ப "நம்ம ராதா ஐடியாதாம்மா இது"ன்னு பெருமையா சொன்னனே//

    மக்கா நல்லா பாத்துக்குங்கப்பா. அன்னிக்கே(எலக்கிய கூட்டம் பத்தின பதிவுல) நான் சொன்னேன் இந்த அபி அப்பா காட்டிக்கொடுக்கறதுல எக்ஸ்பர்ட்டுன்னு, அபி அப்பனை எட்டப்பனா மாத்திட்டயேம்மான்னு சிவாஜி ரேஞ்சுக்கு சென்டிமென்டலா சீன் போட்டாருல்ல அன்னிக்கு? இப்போ பாருங்க, ஆருயிர்த்தோழனையே மாட்டி விட்டிருக்காரு இவரு. இவரை நம்பி இதுக்கு மேலயும் கிடேசன் பார்க்குல வச்சிருக்க போறீங்கள???? சிந்திப்பீர், செயல்படுவீர்.... :-)

    ReplyDelete
  56. கண்மணியிம் பின்னூட்டக்கயமை பண்ண ஆரம்பிச்சுட்டாங்களா.

    ReplyDelete
  57. சூப்பர் தல. பின்னிட்டீங்க. இது நகைச்சுவை மாதிரி இல்லீங்க. செம காமெடி.

    ReplyDelete
  58. kalakkitteenga Radha.. che Abi appa...

    ReplyDelete
  59. not yet completed reading, but i can't controll myself for posting comment, very very good, as fast bowler told, this is இது அக்மார்க் அபிஅப்ப ப்ராண்ட் நகைச்சுவை

    ReplyDelete
  60. அண்ணாச்சி.. தாங்க முடியல.. ஆனந்த கண்ணீர் வருது!! :)))

    ReplyDelete
  61. அட இந்தப் பதிவை பார்க்காம விட்டுட்டேனே. ஏம்பா இதெல்லாம் சொல்ல மாட்டியா?

    சரி எல்லாரும் சொல்லறது மாதிரியே நானும் சொல்லிடறேன். இந்தப் பதிவு நகைச்சுவையே இல்லை. :))

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))