பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 4, 2012

அடுத்தாத்து அம்புஜத்தை பார்தேளா?

தமிழகத்தில் "தானே" புயல் கடலூர் தலையெழுத்தை புரட்டி மாற்றி எழுதி 5 நாட்கள் ஆகின்றது. அங்கே மின்சாரம் இல்லை,குடிதண்ணீர் இல்லை, டி வி இல்லை, செய்திகள் இல்லை, செல்போன் இல்லை, தினசரி செய்திதாள் கிடையாது, அழும் குழந்தைக்கு பால் இல்லை என்பது மட்டுமல்ல , புயலால் செத்தவனுக்கு அடுத்த நாள் ஊத்தக்கூட பால் இல்லை, ரோட்டில் நடந்து போக இயலாது. மரங்கள் தற்கொலை செய்து கொண்டன. சுவற் உண்டு கூரை இல்லை, கூரை மட்டும் உண்டு சுவர் இல்லை என சமதர்மம் நிலவும் தெருக்கள். அரசாங்கம் என்பது எங்கே இருக்கு என யாருக்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.


வழக்கம் போல மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றது. எதிர்கட்சிகள் சத்தம் ஆளும் கட்சி அம்மையாரின் நித்திரையை எழுப்பவில்லை. முதல்வருக்கு அவர் தோழி போட்ட தடுப்புச்சுவற்றால் உளவுத்துறை தரும் தகவல் போவதில்லை. போயிருந்தா மட்டும் அம்மையார் மட்டைக்கு ரெண்டு கீத்தா பிளந்து போட்டிருப்பாங்க என சப்பைகட்டு கட்டின பத்திரிக்கைகள் ஒன்று சேர்ந்து ஒரு வழியாய் அந்த தோழிக்கு சமாதி கட்டி அனுப்பி விட்ட பின்னர் தான் தானே புயல் போட்டு தாக்கியது.


ஆச்சு ஐந்து நாள். தோழி இருந்த போதாவது இரண்டொரு நாட்களில் அம்மையார் "மூட்" அறிந்து காதில் போட்டிருப்பார்கள். ஆனால் இப்போது இருக்கும் ஆலோசகர்களுக்கு கடலூர் பற்றி எந்த கவலையும் இல்லை போலிருக்கு. எதும் சொல்லவில்லை.


நேற்று கலைஞர் விட்ட ஒரு அறிக்கை.... அம்மையாருக்கான சங்கு. ஆம் ஓங்கி ஒலித்தது அந்த சங்கு. அறிவாலயத்தில் இருந்து போயஸ் தோட்டம் வரை அந்த சத்தம் கேட்டது. அம்மையார் செவியை கிழித்தது. .. தலைவர் கலைஞர் விட்ட அந்த அறிக்கை " நானே கடலூருக்கு போகின்றேன், பாண்டி மக்களை பார்க்கிறேன், நாகை, திருவாரூர் மக்களை கண்டு வருகிறேன் " . அந்த அஸ்திரம் அம்மையாரின் காதை கிழித்தது. " சரி அப்படின்னா, நானும் வானத்தில் இருந்து குனிந்து பார்க்கிறேன்" என திருவாய் மலர ஏதோ கடலூருக்கு வெளிச்சம் வரும் வழி கொஞ்சம் தெரிந்தது. கடலூரை புயல் புரட்டிப்போட்டால் என்ன? எனக்கு எது பற்றியும் கவலை இல்லை என இருந்த அம்மையார், தலைவர் கலைஞர் "நான் போகிறேன்" என சொன்னதும் " அப்படின்னா நானும் போகிறேன்" என சொல்வது,என்னவோ அடுத்த வீட்டுக்காரி பட்டுப்புடவை வாங்கினால் தானும் வாங்க வேண்டும் என நினைப்பது போல இருக்கின்றது. இந்த அம்மையார் ஆட்சி நடத்துகின்றாரா அல்லது அடுக்களை பெண்ணா என சந்தேகம் வருகின்றது.இது தான் ஆலோசனை சொல்லும் "துக்ளக்" லட்சனம் போலிருக்கு. தூரத்தில் இருந்து விமர்சிக்க மட்டுமே சிலருக்கு கைகூடும். ஆனால் ஆட்சி நடத்த தேவையான ஆலோசனை சொல்ல அந்த துக்ளக்கிற்கு மண்டையில் சரக்கு பத்தாது என்பது தெளிந்து போனது. அடுத்தவன் குடியை கெடுக்க மட்டும் ஆலோசனை சொல்பவர்கள் மக்கள் நலனில் எங்கே கவனம் செலுத்த போகின்றனர்?


ஆக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழகம் அதன் நலம் என நினைப்பது கலைஞர் மட்டுமே. ஆனாலும் நம் தமிழ் இணையம் மட்டும் கலைஞரை வசை பாடுவதை நிறுத்தப்போவதில்லை. இந்த வார தமிழ்மண நட்சத்திரம் திரு. அமுதவன் எழுதியது போல கலைஞரை திட்டி தீர்த்து ஜெயாவை ஆட்சியில் உட்கார வைக்க பெரும் முயற்சி எடுத்த வலையுலகினர் இன்று கைபிசைந்து நிற்கின்றனர்.


எல்லாம் தமிழகத்தின் தலையெழுத்து!

5 comments:

  1. அதுயாரு கலைஜர்ரு....?

    ஓ அந்த கொழலு ஊதுர கும்பலா?

    ReplyDelete
  2. அற்புதமான நடையழகு. இதன் தொடர்ச்சியை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  3. அற்புதமான நடையழகு. இதன் தொடர்ச்சியை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  4. அற்புதம் அண்ணா இத படிக்கறவன் சோ'வா இருந்தாலும் தலையில அடிச்சுக்குவான் அந்த அம்மாவை நினச்சு. - VSK , Tanjore

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி
    //கலைஞரை திட்டி தீர்த்து ஜெயாவை ஆட்சியில் உட்கார வைக்க பெரும் முயற்சி எடுத்த வலையுலகினர் இன்று கைபிசைந்து நிற்கின்றனர்.//

    சுடும் உண்மை

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))