தம்பி எல்கே ஆகிய கார்த்தி என்னை இந்த தொடர் பதிவுக்கு எழுத அழைத்தமைக்காக நன்றியோடு இதை பதிகின்றேன்.
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
அபிஅப்பா
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இது ஒரு செல்லபெயர். என் மனைவி வைத்த பெயர். எனக்கு கல்யாணமான பின்னே ஒரு நாள் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்த போது அவனவன் "உன்னை உன் மனைவி எப்படி கூப்பிடுவாங்க?" என்கிற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி எழுந்த போது (அப்போது என் நண்பனில் ஒருத்தன் தன் அக்கா பெண்ணை கல்யாணம் செஞ்சு இருந்தான். அந்த பெண் இவனை மாமா என கூப்பிடும்) அப்போது தான் எனக்கு சுரணை வந்தது. அய்யோ இத்தனை நாள் இதை தெரிஞ்சுக்காம விட்டுட்டோமேன்னு. வீட்டுக்கு ஓடிப்போய் "நீ என்னை எப்படி கூப்பிடுவாய்?" என வெள்ளேந்தியாக கேட்க எல்லோருக்கும் முன்னே என் மனைவி "நான் உங்களை கூப்பிட்டதே இல்லியே" என சொல்ல எல்லோரும் சிரிக்க எனக்கு வெட்கமாய் போய் விட்டது. பொதுவா எங்க வீட்டிலே மனைவி கணவனை அத்தான் என அழைக்கும் பழக்கம் தான். ஆனா நேரே கூப்பிடும் போது அம்மா அப்பாவை அப்படி கூப்பிட்டதில்லை. மத்தவங்க கிட்ட பேசும் போது "அத்தான் இப்படி சொன்னாங்க அப்படி சொன்னாங்க" என சொல்வது உண்டு. பின்னர் தான் தெரிந்தது அப்படி அத்தான் என கூப்பிடுவது என் மனைவிக்கு கூச்சமாக இருந்திருக்கலாம் என.
எதாவது கூப்பிடும் சந்தர்ப்பம் வந்தால்"என்னங்க, இந்த பாருங்க, ஏங்க..'இப்படியாக போய்கொண்டிருந்தது. பின்னர் ஒரு மே 3ம் தேதி அபி பிறந்த பின்னர் என் மனைவிக்கு அந்த குழப்பம் போயே போச். "அபிஅப்பா" என என்னை முதலில் கூப்பிட்டது என் மனைவி தான். அதன் பிறகு பக்கத்து வீடு எதிர் வீடு எல்லாம் அபிஅப்பா என கூப்பிட்டு கூப்பிட்டு ஒருநாள் பிளாக் ஆரம்பிக்கும் போது ஏதோ புனைப்பெயர் வைத்துக்க ஆசைப்பட்டு எல்லாம் இதை வைக்கலை. தானாகவே அந்த பெயரை அடித்து விட்டேன். அதுவே இப்போது என் சொந்த பெயரை விட அதிகமாக கூப்பிடப்படுது. இன்னும் சொல்ல போனா என் கம்பனில இருக்கும் தமிழ் பசங்க எல்லாம் கூட அபிஅப்பா என்றே கூப்பிடும் அளவு ஆகிவிட்டது. இதில் கொஞ்சம் கர்வமும் கூட எனக்கு.
எனது உண்மை பெயர் தொல்காப்பியன். அந்த பெயர் காரணம் சொன்னா தனி பதிவு தான் போடனும்:-) அதையே பள்ளி காலத்தில் தொல்ஸ் என்று சின்னதா ஆக்கிட்டாங்க. வலையுலகில் என்னை தொல்ஸ் என அழக்கும் சிலர் நாகைசிவா மற்றும் வேலன் அண்ணாச்சி.
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
2006 வரை நானும் பல டீம்ல வேலை செஞ்சாலும் எனக்கு கீழே சிலரை கொடுத்து நானும் ஒரு டீம் லீடரா வேலை செய்ய ஆரம்பிக்கும் போது முழுநேரமும் வலையில் உலவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது ஆ.வி, நக்கீரம், குமுதம் எதையும் விடாமல் மேயும் போது வெட்டிபயல் பற்றி ஆவியிலோ, குமுதத்திலோ வந்ததை பார்த்து அங்கே போன பின்னே "அட" என ஆச்சர்யமாகி அங்க இருந்து வ.வா.சங்கம் போய், அங்க இருந்து கைப்புள்ள எல்லாம் படித்து, பின்ன லக்கி, மயிலாடுதுறை சிவா எல்லாம் படித்து மத்தவங்க பின்னூட்டத்தை காபி பேஸ்ட் செஞ்சு பின்னே கோபியின் "ரிப்பீட்டேய்" வார்த்தையை காபி பேஸ்ட் செஞ்சு அதுக்கு கீழே போட்டு ஒரு வழியா அபிஅப்பா என்கிற பெயரை அவங்க பப்ளிஷ் செஞ்ச பின்னே பார்த்துகிட்டே (கிட்ட தட்ட ஒருமணிநேரம் கூட பார்த்து கொண்டே இருந்திருக்கேன் என் பெயரை) பின்ன கைப்புள்ள, கீதாம்மா, துளசிடீச்சர் எல்லாம் என் பெயரை குறிப்பிட்டு நன்றி என சொன்னபோது ஆஸ்கார் அவார்டு வாங்கினமாதிரி குதிச்சு... பின்னே நாகை சிவா சூடானில் இருந்து துபாய் வந்த கதை படிச்சு பின்னே துபாய்ல தம்பி, முத்துகுமரன் கிட்ட போன்ல பேசி (அந்த பதிவிலே இருந்தது நம்பர்) பின்னர் தம்பியை கராமா என்னும் இடத்துக்கு போய் நேரில் பார்த்து (அதுக்கு முன்னமே பிளாக் ஆரம்பிச்சு சும்மா வணக்கம் போட்டு வச்சேன். அது தான் முதல் பதிவு) என் பிளாக்கை சரி பண்ண பார்க்கும் போது இம்சை அரசியின் பின்னூட்டம் வந்திருந்தது. உடனே ஆன்லைன்ல பதிவர் கப்பியை பிடித்து தம்பி தமிழ்மணத்தில் இனைக்க வச்சு அனுப்பினார். பின்னர் அங்கயே எதுனா 2 வது பதிவு போடுங்கன்னு சொன்ன போது ஈகலப்பை வழியாக அபிராமி என அடித்தேன். இது தான் நான் முதன் முதலில் தமிழில் அடித்த வார்த்தை. அதுவரை காபி பேஸ்ட் தான். அதையே 3 தடவை எண்டர் தட்டி அடித்தேன்.
உடனே தம்பி இதுக்கு என்ன லேபிள் பெயர் வைக்க போறீங்க?ன்னு கேட்க அப்பதான் அது பத்தி தெரிஞ்சுகிட்டு உடனே கவிதைன்னு பெயர் வைத்தேன். அஃப்கோர்ஸ் நான் எழுதிய கவிதை தானே அபிராமி.
பின்னர் வீடு வந்து சேர்ந்து (அதுக்கும் முன்னமே "போஸ்டர் ஒட்டுவது எப்படி"ன்னு ஏற்கனவே அடிச்சு வச்சிருந்ததை போட்டேன். அந்த பதிவுக்கு எனக்கு ஒரு முழுவெள்ளிகிழமை தேவைப்பட்டது. அதிலே என்ன ஒரு விஷேஷம்னா அது நான் டைப் அடிக்கவேயில்லை. நான் எழுத நினைத்ததை ஒரு பேப்பரில் எழுதி வைத்து பல பதிவை ஓப்பன் செய்து நான் எழுதிய வார்த்தையை காபி பேஸ்ட்(சில எழுத்துகளை கூட காபி பேஸ்ட் செய்து) தயாரிக்கப்பட்ட பதிவு அது:-)) அதனால் கிட்ட தட்ட ஒருநாள் ஆனது எனக்கு. அதிலே கூட எழுத்துபிழை என சிலர் சொன்ன போது "அவங்க ஒழுங்கா எழுதினா எனக்கு ஏன் எழுத்து பிழை வருது"ன்னு கூட நினைச்சுகிட்டேன்.
அப்படியாக ஆரம்பித்து இப்போது இந்த அபிஅப்பா பிளாக்ல இப்ப 300 வது பதிவை தொட போகின்றேன்.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
"அபிஅப்பா" என்னும் பெயர் மந்திரம் தான். அப்போ, (அப்போ மட்டுமல்ல இப்பவும் தான்.,. ) தான் ஒரு பெண்ணீய காவலர் முற்போக்குவாதி என காமிச்சுக்க எல்லா ஆண்\பெண் பதிவரும் நினைத்த காலம். உண்மை நிலவரம் என்னன்னு அவனவனை சுரண்டி பார்த்தா தான் தெரியும் என்பது வேற விஷயம்.(நான் என்ன சொல்லிகிட்டேன்) கிட்ட தட்ட தன் குழந்தையை முன்னிலைப்படுத்தி பெயர் வைத்து கொண்ட முதல் பதிவர் நான் என நினைக்கிறேன். அதுகூட அந்த வலைப்பூ பிரபலம் ஆனதற்கு காரணம் என நினைக்கிறேன். (பிரபலம் தானே?)
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஒன் அண்ட் ஒன்லி சொந்தவிஷயம் தான். நான் எனக்கு என்ன தெரியுமோ, எதை பார்த்தனோ, எதை கேட்டனோ அதை தான் எழுதுவேன். புனைவாக எழுத வரவில்லை. அது பற்றி கவலைப்பட்டதும் இல்லை. ஏனனில் நான் எனக்காக எழுதுகிறேன். கமிட்மெண்ட் இருந்தா தானே கம்ப்ரமைஸ் பண்ணிக்கனும்.ஒரு பத்திரிக்கைல எழுத கூப்பிட்டு அவங்க அதை வெட்டி இதை வெட்டி...ஊகூம் அதல்லாம் இல்லாமல் சுதந்திரமாக எழுதுகிறேன். (பத்திரிக்கைல கூப்பிட்டு நான் மறுத்து விட்ட மாதிரி இந்த சொல்லாடல் இருந்தா ஸாரி அப்படி யாரும் கூப்பிடவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்). நான் இதை தான் எழுதுவேன். முடிஞ்சா படி. பிடிச்சா பின்னூட்டம் போடு.முடிஞ்சா ஓட்டு போடு என்கிற மாதிரியான மனோபாவம் வந்துவிட்டது.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பொழுது போகாமல் இல்லை. ஆரம்பத்தில் எழுத வந்தது ஒரு அரிப்பு. அச்சில் தன் பெயர் கருமாதி பத்திரிக்கையிலே வந்தா கூட ஒரு போதை அரிப்பு வருமே அது போன்ற அரிப்புக்காக எழுத ஆரம்பித்தது. அத்தனை ஏன் "தொல்காப்பியர்" "தொல்காப்பியம்" என பாட புத்தகத்தில் வந்தா கூட அதை பிளேடால் நறுக்கி பாதுகாத்து வைத்து ரகசியமாய் பார்த்த ஒரு சைக்கோ தனம் போல மானிட்டரில் மத்தவங்க ஆகா ஓகோ சூப்பர் என சொல்லும் போது கிடைக்கும் ஒரு போதை அரிப்பு தான் எழுத வைத்தது. இது தான் உண்மை. இன்னும் சொல்ல போனால் என் பொழுதை இந்த எழுத்து விழுங்கியிருக்கு. என் முன்னேற்றத்தை சாப்பிட்டிருக்கு. என் மற்ற செயல்பாடுகளை கொன்று போட்டது. இதை சொல்ல கூச்சம் இல்லை. கிட்ட தட்ட பலருக்கும் இந்த நிலை இருந்திருக்கலாம் சொல்ல கூச்சப்பட்டிருக்கலாம். இதுவே தொழிலாக இருந்து அதனால் வருமானம் கிடைத்தால் இப்படி சொல்லியிருக்க மாட்டேன் என்பதும் உண்மை.
\\பதிவுகளின் மூலம் சம்பாதிக்கவா\\\ நல்லவேளை என் மனைவி இதை பார்க்கவில்லை. பார்த்திருந்தா நான் கல்யாணபரிசு தங்கவேல் மாதிரி தினமும் காசு கொடுத்து மாலை வாங்க வேண்டியிருந்திருக்கும்:-))
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
அபிஅப்பா, அபிஅப்பாவின் நூலகம், ஆகியவை என் சொந்த பிளாக், கும்மி(வேடந்தாங்கல்), தாயின் புன்னகை(இது எங்கள் பள்ளிக்காக) சமீபத்தில் சுவரொட்டி(ஒரே பதிவு தான்) பேரண்ட்ஸ் கிளப்( 3 பதிவு) இவைகளில் எழுதுகின்றேன். தவிர எங்கள் பள்ளிக்காக ஒரு தனி சொந்த வலைப்பூ வைத்திருக்கேன். தவிர இரண்டு வலைப்பூ சொந்தமாக இருக்கு.(நண்பர்களுக்காக) வ.வா.சங்கத்தில் ஒரு மாதம் எழுதினேன் அட்லாஸ் வாலிபராக, வலைச்சரத்தில் ஒரு வாரம் எழுதினேன்.
சொல்ல போனால் நானே பதிவு போட்டு நானே வாசகர் பரிந்துரையில் வரும் அளவு ஓட்டு போட்டு வரும் அளவு வலைப்பூக்கள் இருந்தாலும் சமீபமாக மட்டுமே ஓட்டு போடுகின்றேன் எனக்கே.(இரண்டு மாதமாக) அதும் ஒரே ஒரு அபிஅப்பா ஓட்டு மட்டுமே. அதனால் ஒரே ஒரு தடவை வாசகர் பரிந்துரையில் 5 மணி நேரம் மட்டும் இருந்தது. ஆனால் முன்பு சூடான இடுகையில் நிரந்தரமாக இருந்தேன் என்பது பழையகதை.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
பொதுவாகவே பதிவை படிக்காமல் பின்னூடம் போடுகிறேன் என்கிற குற்றச்சாட்டு என் மீது உண்டு. அது உண்மையும் கூட. ஆனால் பதிவை முழுமையாக படித்தால் அது பற்றி தனி மடலில் விவரமாக கூட விவாதித்தது உண்டு. விமர்சனம் செய்தமை உண்டு.
ஆனால் சிலரது பதிவுகளை முழுமையாக படித்து விடுவேன்.பொறாமை??? உம் வந்ததுண்டு.
ராமலெஷ்மி கவிதை படிக்கும் போது எப்படி நாம் 3 பக்கம் மாங்கு மாங்குன்னு அடிப்பதை சின்னதா எதுகை மோனையோட பத்து வரியில் புரியும் படி சொல்ல தெரியுது கவிதையிலே என நினைத்து பொறாமை வரும்.
வெண்பூவின் டைமிங் காமடி ரொம்ப ரசிப்பேன். சில சமயம் நான் நினைத்து அடிக்கும் முன்பே அதை நான் நினைத்ததை விட அழகா சொல்லி சிரிக்க வைக்கும் அவரது எழுத்தின் மீது பொறாமை வரும். அதனால் வெண்பூவையே கூட எரிச்சலாக பார்க்கும் ஒரு மனோபாவம் கூட வந்ததுண்டு.(மன்னிக்கவும் வெண்பூ)
டுபுக்கு எழுதும் காமடி பதிவு(எல்லாமே காமடி பதிவு தான் 'பிரசவம்" தவிர்த்து) படிக்கும் போது ஒரு வித பொறாமையோடு தான் படிப்பேன்.
பிரியாகதிரவன் என்கிற பதிவர் எழுத்து நடை. அவங்க கிட்ட தட்ட இன்னும் ஒரு துளசிடீச்சர் ஆகும் பதிவர் என நினைத்து பொறாமை படுவேன்.(அவங்க தமிழ்மணத்தில் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல்)(இது கூட பொறாமை தான்)
அரசியல் கட்டுரையில் மா.சிவக்குமார் பொறாமைப்பட வைக்கும் ஒரு எழுத்துக்கு சொந்தக்காரர். (அஃப்கோர்ஸ் எனக்கு பிடிக்காத கருத்தாக தான் இருக்கும் ஆனாலும் அது பொறாமைப்பட வைக்கும்)
கல்வெட்டு என்கிற பலூன்மாமாவின் பின்னூட்டம் பிரம்மிக்க வைக்கும். ஆனால் பொறாமை இருந்ததில்லை. மனுஷன் எத்தனை விஷயம் படித்திருக்கார் என நினைத்து கொள்வேன்.
லக்கியின் (என்)ஆரம்பகாலத்தில் இருந்தே வாசகன் என்கிற வகையில் எனக்கு ஆர்வம் இருக்கும் பொறாமை இருக்காது.
எல்லேராம் பதிவுகள் பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்.
சமீபமாக நேசமித்ரன் கவிதை பிடிச்சிருக்கு. இன்னும் பொறாமை வரவில்லை. கூடிய சீக்கிரம் வரும்.
உண்மை தமிழன் பதிவு ரொம்ப பிடிக்கும். 'உள்ளது உள்ளபடி" விலாவாரியா அவர் எழுதுவதை பார்க்கும் போதும் பின்னூட்டத்துக்கு சளைக்காமல் பதில் சொல்வதும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
கீதாம்மாவின் சிதம்பர ரகசியத்துக்கு நான் அடிமை.
கண்மனி டீச்சரின் காமடி பதிவு இப்போது இல்லை என்பது வருத்தம் தான், ஆனா அவங்க போடும் பிளாக்கர் டிப்ஸ் அருமை.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
இம்சை அரசி ஜெயந்தி. எனக்கு பிடித்த தங்கை. கிட்ட தட்ட அந்த முதல் பின்னூட்டம் நான் பலதடவை திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருந்திருக்கேன். முதன் முதலாக என் வீட்டில் ஜெயந்தியை பார்த்த போது நானும் பேசவில்லை. ஜெயந்தியும் பேசவில்லை. கிட்ட தட்ட எப்படி இருந்தது தெரியுமா அந்த நிகழ்வு.
நான் எப்போதும் துபாயில் இருந்து ஊருக்கு வரும் போது ஏர்போர்டில் அபி அவங்க அம்மா பின்னாடி ஒழிச்சுப்பா. எனக்கும் பார்க்க ஆவலாக இருக்கும். அந்த கூட்டத்தில் கஸ்டம்ஸ் முடியும் முன்னமே பக்கேஜ் கலக்ஷன் பெல்ட்டில் போய் நிற்காமல் கூட்டம் பக்கம் வந்து பார்ப்பேன்.
பின்பு வெளியே வந்தவுடன் பார்க்க ஆர்வமாக இருந்தாலும் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாது. அப்படி ஒரு மனோநிலை இருக்கும். உணர்சிகளின் மொத்த குவியலாக இருக்கும் அந்த பொழுதுகள். காரில் ஏறி உட்காந்த பின்னே கூட அவங்க அம்மா கிட்டயே இருப்பா. வீடு வந்ததும் கொஞ்சம் கிட்ட வருவா.
"சரி சரி அவளுக்கு இதல்லாம் வாங்கி வந்தேன். அவளுக்கு வேண்டாமாம். பக்கத்து வீட்டிலே கொடுத்திடு" என சொல்லும் போது லைட்டா கண்ணை கசக்கிகிட்டே வருவா.
கிட்ட தட்ட அப்படித்தான் ஜெயந்தியும் நானும் அன்றைக்கு இருந்தோம். அன்றைக்கு பெங்களூர் பஸ் ஏறும் போது தான் அய்யோ நம்ம ஜெயந்தி ஊருக்கு போறா அப்படீன்னு ஒரு கலக்கம் அடிவயிற்றில் வந்தது. இதான் ஜெயந்தி. போன பின்னே ஒரு மெயில் வந்தது ஜெயந்தியிடம் இருந்து. "அண்ணா ஏன் என் கிட்ட சரியா பேசலை. நான் தான் சரியா பேசலை. நீங்கலாவது பேசியிருக்கலாமே". கிட்ட தட்ட அப்போது தான் நான் ஒரு மெயில் அனுப்பினேன். அதே வாசங்கங்களோடு.
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
என் எல்லா பதிவிலயும் என் சுயபுராணம் தான் அதிகமா இருக்கும் என்பதால் அத்தனை சுட்டியையும் கொடுக்க வேண்டும். அதல்லாம் சாத்தியம் இல்லை. நான் ரொம்ப சாதாரணமானவன். சராசரி மனிதன். பெரியலாடுலபக்கு தாஸ் எல்லாம் இல்லை.
தெருவில் நடந்து போகும் போது உங்க கண்ணுக்கு தெரியும் பத்து பேரில் நானும் ஒருத்தன்.
நான் இந்த தொடருக்கு அழைக்கும் பதிவர்கள்...........என் புத்திக்கி எட்டியவரை எல்லோரும் எழுதியாச்சு, அதனால யார் வேண்டுமானாலும் எழுதுங்க. அதுக்காக எதுனா சன்மானம் தர ஆசைப்பட்டா டபில்யூ டபில்யூ டபில்யூ டாட் அபிஅப்பா டாட் காம்ல தொடர்பு கொள்ளவும்.
August 9, 2010
August 8, 2010
மூன்று இஃகி இஃகி!!!!
"
எனக்கு நல்லா தெரியும் இராகவன் அண்ணா திட்டினா வண்டை வண்டையா வரும்னு. அனா அதே சீமாச்சு அண்ணா கொஞ்சம் ரகசியமா திட்டுவாரு. இவரு பப்ளிக்ல போட்டு தாக்குவாரு. ரொம்ப பெரிசா வித்யாசம் இல்லை. ங்கொய்யால நானா மாட்டுவேன்.
அதும் 'வாய் தா ராணி" ன்னு கோஷம் போட போகும் போது. அண்ணாத்த என்னை திட்டும் போது அவரு தக்கச்சிக்கிட்ட மாட்டீடாரு. "ங்கொய்யால என்னடா நினைச்சுகிட்டு இருக்கே, சிங்கப்பூரு வரை நாறுது?"ன்னு கேட்க போக "அண்ணா, இன்னிக்கு என்ன புது சண்டை"ன்னு என் வீட்டிலே கேட்க போக அவரு "இஃகி இஃகி"
'நாங்க 1937 முதலே இப்படித்தான்"ன்னு சமத்தா இருந்துட்டாரு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடுத்து......
நான் முதல்லயே சொன்னனே மாயவரம் புதுபாலம் கட்ட பழைய பாலம் இடிச்சாச்சுன்னு. அது பிராஜக்ட் நேரம் ஒரு வருஷம். வழக்கம் போல துணை முதல்வர் முன்னாடியே முடிச்சா ஆளுக்கு 2 பவுன் செய்வார்ன்னு நினைச்சு அரக்க பரக்க செய்ய ,ஆனா QA\QC போட்டு தாக்க ஒரு வழியா குறித்த காலத்துக்கு 6 மாசம் முன்ன முடிஞ்சுது.
ஆனா பாருங்க அதிலே ஒரு சிக்கல். அந்த பாலம் திறந்தா தான் மாயவரத்துக்கு காவிரி தண்ணீர் வரும். இன்னும் இரண்டு நாளில் துணை முதல்வரின் மனைவியின் அப்பாவுக்கு 80ம் வருஷம். கழக கண்மணி எல்லாம் AVC ல விழாவை வச்சாச்சு. துணை முதல்வர் அதுக்கு வரும் போது திறக்க உத்தேசம
அதுக்கு முன்ன காவிரில ஒரு தற்காலிக பாலம் மண் ரோடு மாதிரி அதுக்கு பக்கத்துல போட்டாங்க. அதை எப்ப இடிக்கனும்? இந்த பாலத்தை ஓப்பன் பின்ன தானே?
திடீர்ன்னு அதை தூக்கிட்டாங்க. அந்த பக்கம் 2 பெரிய பள்ளிகூடம் இருக்கு. திடீர்ன்னு இடிச்ச பின்ன நாங்க என்ன செய்வோம்?
பாலத்தை நாங்களே தெறந்தாச்சு. வழக்கம் போல மாயவரம்னா ரெண்டு.ரெண்டு திறப்பு விழா!! இப்ப என்ன செய்வீங்க இப்ப என்ன செய்வீங்க? எல்லா போலீஸ், பொதுபணித்துறை எல்லாம் வந்த போது பாலத்தை திறந்த மக்கள் சொன்னது இஃகி, இஃகி, இஃகி..........................
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
"என்னங்க பழமைபேசி புத்தக வெளியீட்டுக்கு போகலாம்ன்னு சொன்னீங்க?"
"ஆமாம் சொன்னேன்"
"ஏன் அழைச்சுட்டு போகலை"
" சும்மா இரு அவரு 27 ரேப்பு , 32 கொலை செஞ்சவரு தெரியுமா? அதனால நாம கோவை போகலை"
"நீங்க கூடத்தான் 294 ரேப்+ கொலை செஞ்சிருக்கீங்க"
ஓ 300 வது பதிவை நெருங்கிட்டனா நானும்!
'இஃகி இஃகி இஃகி இஃகி"
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சீமாச்சு அண்ணா வீட்டில் .................
"ஷண்முகாம்மா!இவரு என்னை !@#$%^&&*()_++++ இந்த மாதிரில்லாம் சொல்றாரு"
"டோண்ட் ஓர்ரிய்யா, எனக்கு தெரிஞ்சு நல்ல நல்ல டாக்டரெல்லாம் இருக்காங்க, நீ எதுக்கும் கவலைப்படாதே"
@@@@@@@@@@@@@@@@
"ஹாய் அண்ணி!"
"ஹாய் வாங்க!"
"அதல்லாம் இருக்கட்டும். வந்த வேளை முடிஞ்சாச்சு. வத்தி வச்சாச்சு. உங்க கூட வந்த முகுந் அம்மா அங்க போய் பதிவும் போட்டாச்சு. கிளம்புங்க காத்து வரட்டும்"
இஃகி இஃகி இஃகி இஃகி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எனக்கு நல்லா தெரியும் இராகவன் அண்ணா திட்டினா வண்டை வண்டையா வரும்னு. அனா அதே சீமாச்சு அண்ணா கொஞ்சம் ரகசியமா திட்டுவாரு. இவரு பப்ளிக்ல போட்டு தாக்குவாரு. ரொம்ப பெரிசா வித்யாசம் இல்லை. ங்கொய்யால நானா மாட்டுவேன்.
அதும் 'வாய் தா ராணி" ன்னு கோஷம் போட போகும் போது. அண்ணாத்த என்னை திட்டும் போது அவரு தக்கச்சிக்கிட்ட மாட்டீடாரு. "ங்கொய்யால என்னடா நினைச்சுகிட்டு இருக்கே, சிங்கப்பூரு வரை நாறுது?"ன்னு கேட்க போக "அண்ணா, இன்னிக்கு என்ன புது சண்டை"ன்னு என் வீட்டிலே கேட்க போக அவரு "இஃகி இஃகி"
'நாங்க 1937 முதலே இப்படித்தான்"ன்னு சமத்தா இருந்துட்டாரு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடுத்து......
நான் முதல்லயே சொன்னனே மாயவரம் புதுபாலம் கட்ட பழைய பாலம் இடிச்சாச்சுன்னு. அது பிராஜக்ட் நேரம் ஒரு வருஷம். வழக்கம் போல துணை முதல்வர் முன்னாடியே முடிச்சா ஆளுக்கு 2 பவுன் செய்வார்ன்னு நினைச்சு அரக்க பரக்க செய்ய ,ஆனா QA\QC போட்டு தாக்க ஒரு வழியா குறித்த காலத்துக்கு 6 மாசம் முன்ன முடிஞ்சுது.
ஆனா பாருங்க அதிலே ஒரு சிக்கல். அந்த பாலம் திறந்தா தான் மாயவரத்துக்கு காவிரி தண்ணீர் வரும். இன்னும் இரண்டு நாளில் துணை முதல்வரின் மனைவியின் அப்பாவுக்கு 80ம் வருஷம். கழக கண்மணி எல்லாம் AVC ல விழாவை வச்சாச்சு. துணை முதல்வர் அதுக்கு வரும் போது திறக்க உத்தேசம
அதுக்கு முன்ன காவிரில ஒரு தற்காலிக பாலம் மண் ரோடு மாதிரி அதுக்கு பக்கத்துல போட்டாங்க. அதை எப்ப இடிக்கனும்? இந்த பாலத்தை ஓப்பன் பின்ன தானே?
திடீர்ன்னு அதை தூக்கிட்டாங்க. அந்த பக்கம் 2 பெரிய பள்ளிகூடம் இருக்கு. திடீர்ன்னு இடிச்ச பின்ன நாங்க என்ன செய்வோம்?
பாலத்தை நாங்களே தெறந்தாச்சு. வழக்கம் போல மாயவரம்னா ரெண்டு.ரெண்டு திறப்பு விழா!! இப்ப என்ன செய்வீங்க இப்ப என்ன செய்வீங்க? எல்லா போலீஸ், பொதுபணித்துறை எல்லாம் வந்த போது பாலத்தை திறந்த மக்கள் சொன்னது இஃகி, இஃகி, இஃகி..........................
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
"என்னங்க பழமைபேசி புத்தக வெளியீட்டுக்கு போகலாம்ன்னு சொன்னீங்க?"
"ஆமாம் சொன்னேன்"
"ஏன் அழைச்சுட்டு போகலை"
" சும்மா இரு அவரு 27 ரேப்பு , 32 கொலை செஞ்சவரு தெரியுமா? அதனால நாம கோவை போகலை"
"நீங்க கூடத்தான் 294 ரேப்+ கொலை செஞ்சிருக்கீங்க"
ஓ 300 வது பதிவை நெருங்கிட்டனா நானும்!
'இஃகி இஃகி இஃகி இஃகி"
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சீமாச்சு அண்ணா வீட்டில் .................
"ஷண்முகாம்மா!இவரு என்னை !@#$%^&&*()_++++ இந்த மாதிரில்லாம் சொல்றாரு"
"டோண்ட் ஓர்ரிய்யா, எனக்கு தெரிஞ்சு நல்ல நல்ல டாக்டரெல்லாம் இருக்காங்க, நீ எதுக்கும் கவலைப்படாதே"
@@@@@@@@@@@@@@@@
"ஹாய் அண்ணி!"
"ஹாய் வாங்க!"
"அதல்லாம் இருக்கட்டும். வந்த வேளை முடிஞ்சாச்சு. வத்தி வச்சாச்சு. உங்க கூட வந்த முகுந் அம்மா அங்க போய் பதிவும் போட்டாச்சு. கிளம்புங்க காத்து வரட்டும்"
இஃகி இஃகி இஃகி இஃகி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
August 1, 2010
பதிவர்களின் ஒற்றுமைக்காக தமிழ்மணம் பகீரத முயற்சி!!!
இரண்டு மூன்று வருடம் முன்பாக பதிவர் ஷார்ஜா சிங்கம் பெனாத்தலார் ஒரு பதிவு போட்டிருந்தார். "கனவில் வந்த தமிழ்மணம்" என்கிற பதிவு. பின்பு ஒரு வருடம் பின்னர் "கனவில் வரக்கூடாத தமிழ்மணம்" அப்படீன்னு பதிவு போட்டாரு. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். இனி அதுக்கு எல்லாம் தேவையே இல்லை பெனாத்தலாரே. உங்க வேலையை தமிழ்மணமே செஞ்சாச்சு.
அக்னி நட்சத்திரம் படத்திலே அப்பா விஜயகுமார் தன் இரண்டு மகன்கள் பெயரை கௌதம், அஷோக் இருவரையும் பெயரை மாற்றி மாற்றி கூப்பிடுவார். பின்ன கிளைமாக்ஸ்ல அதுக்கு விளக்கம் வேற சொல்லுவார். அப்படியாவது அவங்க ஒத்துமையா இருக்கட்டுமேன்னு தான் அப்படி சொன்னாராம். (இப்படியெல்லாம் சிந்திக்க மணிரத்னம் மட்டுமே இந்தியாவிலே இருக்கார்
கிட்ட தட்ட நம்ம தமிழ்மணம் அதே பாணியிலே நேத்து முதல் அதிரடியாக செயல்பட்டு பதிவர்களை ஒத்துமையாக்க பகீரத முயற்சி எடுத்து வருகின்றது.
ஒரு பதிவு தலைப்பு படுக்கை அறை, வீடியோ என பார்த்ததும் உடனே எதுனா சாமியார் படம் போடனும் என நினைத்து அவசரத்துல நம்ம ஆன்மீக பதிவர் ஸ்வாமி ஓம்கார் படத்தை போட்டுட்டாங்க:-))) நேத்து அப்படித்தான் ஒரு ஆன்மீக பதிவுக்கு டாக்டர்.ருத்ரன் படத்தை போட்டு இருந்தாங்க. தாடி மீசையோட அவரை ஆன்மீக சாமியார்ன்னு நினைச்சுட்டங்க போலிருக்கு.
இனி தமிழ்மண ஜூன் கலவர பதிவர்கள் படத்தை மாத்தி மாத்தி போட வேண்டியது தான் பாக்கி. தவிர 'எனக்கு ஓட்டு விழவில்லை" என்கிற குறையும் இனி இல்லை போலிருக்கு. என் போன பதிவிலே நானே எனக்கு இரண்டு ஓட்டு போட்டிருக்கேன். பாருங்க. இனி மகுடம், வாசகர் பரிந்துரை எல்லாம் நம்ம கையிலேயே தான் இருக்கு போலிருக்கு. ஹும் பதிவு போட பத்து நிமிஷம். ஒரு அரை மணி செலவழிச்சா நாமளே நம்மை மகுடத்துல ஏத்தி உட்கார வச்சுட்டு அடுத்த வேளையை பார்கலாம்.
@@@@@@@@
ஜோக்ஸ் அபார்ட்! தமிழ்மணம் ஏதோ டிங்கரிங் பட்டிபார்த்து கிட்டு இருக்காங்க. அது முடியும் வரை இப்படித்தான் இருக்கும் போலிருக்கு. அதுவரை கொஞ்சம் அமைதியா இருங்க.
@ தமிழ்மணம்: சும்மா இதை விளையாட்டா எடுத்துகிட்டு சரி பண்ணுங்க. இதுக்காக எனக்கு தூக்கு தண்டனை கொடுத்தா நான் மேல்முறையீட்டுக்கு போவேன் ஆமா!
அக்னி நட்சத்திரம் படத்திலே அப்பா விஜயகுமார் தன் இரண்டு மகன்கள் பெயரை கௌதம், அஷோக் இருவரையும் பெயரை மாற்றி மாற்றி கூப்பிடுவார். பின்ன கிளைமாக்ஸ்ல அதுக்கு விளக்கம் வேற சொல்லுவார். அப்படியாவது அவங்க ஒத்துமையா இருக்கட்டுமேன்னு தான் அப்படி சொன்னாராம். (இப்படியெல்லாம் சிந்திக்க மணிரத்னம் மட்டுமே இந்தியாவிலே இருக்கார்
கிட்ட தட்ட நம்ம தமிழ்மணம் அதே பாணியிலே நேத்து முதல் அதிரடியாக செயல்பட்டு பதிவர்களை ஒத்துமையாக்க பகீரத முயற்சி எடுத்து வருகின்றது.
ஒரு பதிவு தலைப்பு படுக்கை அறை, வீடியோ என பார்த்ததும் உடனே எதுனா சாமியார் படம் போடனும் என நினைத்து அவசரத்துல நம்ம ஆன்மீக பதிவர் ஸ்வாமி ஓம்கார் படத்தை போட்டுட்டாங்க:-))) நேத்து அப்படித்தான் ஒரு ஆன்மீக பதிவுக்கு டாக்டர்.ருத்ரன் படத்தை போட்டு இருந்தாங்க. தாடி மீசையோட அவரை ஆன்மீக சாமியார்ன்னு நினைச்சுட்டங்க போலிருக்கு.
இனி தமிழ்மண ஜூன் கலவர பதிவர்கள் படத்தை மாத்தி மாத்தி போட வேண்டியது தான் பாக்கி. தவிர 'எனக்கு ஓட்டு விழவில்லை" என்கிற குறையும் இனி இல்லை போலிருக்கு. என் போன பதிவிலே நானே எனக்கு இரண்டு ஓட்டு போட்டிருக்கேன். பாருங்க. இனி மகுடம், வாசகர் பரிந்துரை எல்லாம் நம்ம கையிலேயே தான் இருக்கு போலிருக்கு. ஹும் பதிவு போட பத்து நிமிஷம். ஒரு அரை மணி செலவழிச்சா நாமளே நம்மை மகுடத்துல ஏத்தி உட்கார வச்சுட்டு அடுத்த வேளையை பார்கலாம்.
@@@@@@@@
ஜோக்ஸ் அபார்ட்! தமிழ்மணம் ஏதோ டிங்கரிங் பட்டிபார்த்து கிட்டு இருக்காங்க. அது முடியும் வரை இப்படித்தான் இருக்கும் போலிருக்கு. அதுவரை கொஞ்சம் அமைதியா இருங்க.
@ தமிழ்மணம்: சும்மா இதை விளையாட்டா எடுத்துகிட்டு சரி பண்ணுங்க. இதுக்காக எனக்கு தூக்கு தண்டனை கொடுத்தா நான் மேல்முறையீட்டுக்கு போவேன் ஆமா!
July 21, 2010
மனைவியை குத்த ஆயிரத்தில் சில காரணம் மட்டும் இங்கே!!!!
முதல்ல இதை படிங்க மக்கா! http://ultoo.com/login.php?refererCode=2892467E&flag=hide
எல்லோரும் எல்லோரையும் குத்தியாச்சு. ஆனா மனைவியை குத்த எழுதியவர்கள் மட்டும் கொஞ்சம் பயந்த சுபாவமா காமிச்சுகிட்டு எழுதிட்டதால வேற வழி எனக்கு தெரியவில்லை. நெஞ்சுல தைரியத்தையும், கண்ணுல பீதியையும் வச்சுகிட்டு மீதிய இங்க கொட்டுறேன். இது என் தனிப்பட்ட குத்து மட்டுமே. இதே காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவங்க அவங்க வீட்டுல கச்சேரி வச்சுகுங்க.
1. என்னங்க மணி 5 ஆச்சு, என்னங்க மணி 5.10 ஆச்சு எழுந்திருக்கலையா? என ஸ்நூஸ் வச்ச அலாரம் மாதிரி காலை முதல் பிடுங்கல் வருமே அப்ப தான் அந்த நாளின் முதல் பன்ச் ஆரம்பிக்க தோன்றும்.
பின்ன என்ன ராத்திரி படுக்கும் போது 5 மணிக்கு எழுப்பி விடு. விளையாட போகனும்னு சொல்லி படுத்தி எடுத்துட்டு ...என் தூக்கமும் போனது தான் மிச்சம்.
2. குளியல் அறையில் நுழைந்து கண்ணாடி பார்க்கும் போது வருமே ஒரு எரிச்சல். என் முகத்தை பார்த்து இல்லை. ஏதோ ஏக் துஜே கேலியே படத்து மாதவி மாதிரி என் முகத்தில் வட்டமா ஒரு பொட்டு இருக்கும். அப்ப வரும் ஒரு எரிச்சல். 'எத்தனை தரம் சொல்லியிருக்கேன்,அசிங்கமா கண்ணாடில ஸ்டிக்கர் பொட்டு வைக்காதேன்னு" என ஒரு சத்தம் போட்டுட்டு ஒரு குத்து விட தோன்றும்.
பொட்டு ஒரு கெட்ட விஷயமா? நான் என்ன உங்க பைக்லயா வச்சேன்? பாத்ரூம் கண்ணாடில தான வச்சேன்.
3. குளித்து முடித்து தலை சீவ கண்ணாடி முன்னே நிற்கும் போது அந்த சீப்பிலே இருக்கும் கொத்து தலை முடி தான் என்னை அதிகமாக டென்ஷன் ஆக்கும் விஷயம். "தலை சீவினா அந்த முடியை சுருட்டி துக்கி போட மாட்டியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ"ன்னு அலறி கிட்டே ஒரு குத்து விட தோன்றும்.
இந்த வீட்டிலே நான் மட்டும் தான் பொம்பளையா? உங்க பொண்ணு இத செஞ்சிருக்க கூடாதா? புடிக்கலைன்னா எடுத்து போட்டுட்டு சீவிக்க வேண்டியது தானே!
4. அடுத்து சாப்பிட ஆரம்பித்தவுடன் எனக்கு பெரிய பிரச்சனையே விக்கல் தான். சாப்பிடுவது போல நினைத்து கொண்டாலே விக்கல் வரும் பார்ட்டி நான். அத்தனை ஏன் தண்ணீர் குடித்தாலே விக்கல் வரும்னா பார்த்துகுங்க. அப்படிப்பட்ட எனக்கு சாப்பாடு வைத்து விட்டு " இன்னிக்கு ஒரு புது மெத்தேட்ல இட்லி சுட்டேன்"அப்படீன்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே விக்கல் வந்து "அய்யோ தண்ணி அய்யோ தண்ணி"ன்னு கத்த ஆரம்பிச்சு .....சாப்பாடு வைக்கும் முன்னே தண்ணி வைக்க தெரியாதா"ன்னு சண்டை முடியுமே அப்ப அந்த சண்டைக்கு முடிவுரையா ஒரு குத்து விட தோன்றும்.
வித விதமா சட்னி, இட்லி, பொங்கல் இதல்லாம் கண்ணுக்கு தெரியலை. தண்ணி தான் தெரியுது. நான் தான் கேக்குறேன். தண்ணியாவது எடுத்துகிட்டு உட்காந்தா என்ன சாப்பிடும் போது.
5. கிளம்பலையா இன்னும் கிளம்பலையா இன்னும் 7.30க்கு ராகுகாலத்துக்கு முன்ன படி இறங்கனும் என 6 மணி முதல் அனத்தி எடுத்துட்டு நான் 7.28க்கு வண்டி எடுத்த பின் வீட்டை பூட்டி விட்டு வரும் மனைவி என்னங்க செல் போனை மறந்து விட்டேன் கொஞ்சம் இருங்க என கேட் முதல் எல்லா கதவையும் திறந்து உள்ளே போய் அதை தேடி கடைசியில் பிரிட்ஜ் உள்ளே இருந்து அதை எடுத்து(வரும் முன் அவசரத்திலே தண்ணீர் குடிக்கும் போது போனை உள்ளே வச்சிருப்பாங்க) வண்டி ஏறும் போது கொழுத்த ராகுகாலமாகியிருக்குமே அப்ப ஒரு குத்து விட தோன்றும்.
பண்ற தப்பு எல்லாம் நீங்க. நீங்க படுத்தின பாடுல எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. ராகுகாலமா இருந்தா என்ன? அதான் சனிய கூட கூட்டிகிட்டு போறனே. சனிய விட ராகு அத்தனை மோசம் இல்லை.
6. அடுத்து வண்டி ஏறும் போது அந்த ஃபுட் ஸ்டெப்பில் காலை வைத்து ஏதோ மாடி படி ஏறுவது போல ஏறி என்னை நிலைகுலைய வைக்கும் போது என் பிரஷர் எல்லாம் எகிறி ஒரு குத்து விட தோன்றும்.
இதுக்கு நீங்க கார் வாங்கி கூட்டிகிட்டு போகனும். சும்மா பேசக்கூடாது.
7. நீங்க ரோட்டை பார்த்து ஓட்டுங்க நான் ஹேண்ட் சிக்னல் எல்லாம் பண்ணிக்கிறேன் என சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஆனால் வலது பக்கம் கை காமின்னு சொல்லும் போது மிகச்சரியாக இடது பக்கம் காண்பித்து விட்டு என்னை எவனாவது "வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?"ன்னு கேட்கும் போது "வீடே பின்னாடிதான் உட்காந்திருக்கு. தேவைப்பட்டா உடனே சொல்லிக்கலாம்" என பதில் சொல்லிட்டு பின்னால் இருக்கும் வீட்டுக்கு ஒரு குத்து விட தோன்றும்.
அய்யோ நான் வலது கை தான் காமிச்சேன். ஆனா இடது பக்கமா காமிச்சுட்டேன். அந்த சண்டாளன் தான் சரியா வரலை. நீங்க மெதுவா போவ கூடாதா?
8. இந்த பதிவை படி. செம காமடியா இருக்குன்னு சொல்லும் போது "இன்னிக்கு கரண்ட் பில் கட்டனும்"ன்னு சம்மந்தம் சம்மந்தமில்லாம பேசுவது போல அவமானப்படுத்துவது என்னை மட்டுமில்லை தமிழை வளர்க்கும் வலையுலகமே உங்களையும் சேர்த்து அவமானப்படுத்தும் போது ஒரு குத்து விட தோன்றும்.
இந்த நெட்ட முதல்ல புடுங்கினா இந்த வீடும் உறுப்படும் நீங்களும் முக்கியமா நானும் நிம்மதியா இருப்பேன்.
9. இங்க பாரேன் கவிதா ஒரு பதிவு போட்டிருக்காங்க. விவாகரத்து பத்தின்னு சொல்லும் போது "ஹூம் நான் மட்டும் விவாகரத்து செஞ்சிருந்தா உங்களை இருபத்தி ஏழாவது தடவையா கட்டின புருஷனை விவாகரத்து செஞ்சவன்னு கின்னஸ்ல வந்திருக்கும்' என அங்கலாய்க்கும் போது ஒரு செம குத்து விட தோன்றும்.
ஏன் நான் சொல்றது என்னா தப்பு. நீங்களே சொல்லுங்க.
10. இப்படி நான் சொல்வதுக்கு எல்லாம் சிவப்பு???மஞ்சள்!!!! எழுத்தில் பதிலுக்கு பதில் சொல்லிகிட்டே வந்தா பத்தாவது குத்து விட தோன்றும்.
குறிப்பு: எல்லாம் தோன்றும் தோன்றும் தான். இது வரை குத்து விட்டதில்லை என்பதை என் அன்பான பெண்ணீயவாதிகளுக்கு தெரிவித்து கொள்கின்றேன்.
எல்லோரும் எல்லோரையும் குத்தியாச்சு. ஆனா மனைவியை குத்த எழுதியவர்கள் மட்டும் கொஞ்சம் பயந்த சுபாவமா காமிச்சுகிட்டு எழுதிட்டதால வேற வழி எனக்கு தெரியவில்லை. நெஞ்சுல தைரியத்தையும், கண்ணுல பீதியையும் வச்சுகிட்டு மீதிய இங்க கொட்டுறேன். இது என் தனிப்பட்ட குத்து மட்டுமே. இதே காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவங்க அவங்க வீட்டுல கச்சேரி வச்சுகுங்க.
1. என்னங்க மணி 5 ஆச்சு, என்னங்க மணி 5.10 ஆச்சு எழுந்திருக்கலையா? என ஸ்நூஸ் வச்ச அலாரம் மாதிரி காலை முதல் பிடுங்கல் வருமே அப்ப தான் அந்த நாளின் முதல் பன்ச் ஆரம்பிக்க தோன்றும்.
பின்ன என்ன ராத்திரி படுக்கும் போது 5 மணிக்கு எழுப்பி விடு. விளையாட போகனும்னு சொல்லி படுத்தி எடுத்துட்டு ...என் தூக்கமும் போனது தான் மிச்சம்.
2. குளியல் அறையில் நுழைந்து கண்ணாடி பார்க்கும் போது வருமே ஒரு எரிச்சல். என் முகத்தை பார்த்து இல்லை. ஏதோ ஏக் துஜே கேலியே படத்து மாதவி மாதிரி என் முகத்தில் வட்டமா ஒரு பொட்டு இருக்கும். அப்ப வரும் ஒரு எரிச்சல். 'எத்தனை தரம் சொல்லியிருக்கேன்,அசிங்கமா கண்ணாடில ஸ்டிக்கர் பொட்டு வைக்காதேன்னு" என ஒரு சத்தம் போட்டுட்டு ஒரு குத்து விட தோன்றும்.
பொட்டு ஒரு கெட்ட விஷயமா? நான் என்ன உங்க பைக்லயா வச்சேன்? பாத்ரூம் கண்ணாடில தான வச்சேன்.
3. குளித்து முடித்து தலை சீவ கண்ணாடி முன்னே நிற்கும் போது அந்த சீப்பிலே இருக்கும் கொத்து தலை முடி தான் என்னை அதிகமாக டென்ஷன் ஆக்கும் விஷயம். "தலை சீவினா அந்த முடியை சுருட்டி துக்கி போட மாட்டியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ"ன்னு அலறி கிட்டே ஒரு குத்து விட தோன்றும்.
இந்த வீட்டிலே நான் மட்டும் தான் பொம்பளையா? உங்க பொண்ணு இத செஞ்சிருக்க கூடாதா? புடிக்கலைன்னா எடுத்து போட்டுட்டு சீவிக்க வேண்டியது தானே!
4. அடுத்து சாப்பிட ஆரம்பித்தவுடன் எனக்கு பெரிய பிரச்சனையே விக்கல் தான். சாப்பிடுவது போல நினைத்து கொண்டாலே விக்கல் வரும் பார்ட்டி நான். அத்தனை ஏன் தண்ணீர் குடித்தாலே விக்கல் வரும்னா பார்த்துகுங்க. அப்படிப்பட்ட எனக்கு சாப்பாடு வைத்து விட்டு " இன்னிக்கு ஒரு புது மெத்தேட்ல இட்லி சுட்டேன்"அப்படீன்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே விக்கல் வந்து "அய்யோ தண்ணி அய்யோ தண்ணி"ன்னு கத்த ஆரம்பிச்சு .....சாப்பாடு வைக்கும் முன்னே தண்ணி வைக்க தெரியாதா"ன்னு சண்டை முடியுமே அப்ப அந்த சண்டைக்கு முடிவுரையா ஒரு குத்து விட தோன்றும்.
வித விதமா சட்னி, இட்லி, பொங்கல் இதல்லாம் கண்ணுக்கு தெரியலை. தண்ணி தான் தெரியுது. நான் தான் கேக்குறேன். தண்ணியாவது எடுத்துகிட்டு உட்காந்தா என்ன சாப்பிடும் போது.
5. கிளம்பலையா இன்னும் கிளம்பலையா இன்னும் 7.30க்கு ராகுகாலத்துக்கு முன்ன படி இறங்கனும் என 6 மணி முதல் அனத்தி எடுத்துட்டு நான் 7.28க்கு வண்டி எடுத்த பின் வீட்டை பூட்டி விட்டு வரும் மனைவி என்னங்க செல் போனை மறந்து விட்டேன் கொஞ்சம் இருங்க என கேட் முதல் எல்லா கதவையும் திறந்து உள்ளே போய் அதை தேடி கடைசியில் பிரிட்ஜ் உள்ளே இருந்து அதை எடுத்து(வரும் முன் அவசரத்திலே தண்ணீர் குடிக்கும் போது போனை உள்ளே வச்சிருப்பாங்க) வண்டி ஏறும் போது கொழுத்த ராகுகாலமாகியிருக்குமே அப்ப ஒரு குத்து விட தோன்றும்.
பண்ற தப்பு எல்லாம் நீங்க. நீங்க படுத்தின பாடுல எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. ராகுகாலமா இருந்தா என்ன? அதான் சனிய கூட கூட்டிகிட்டு போறனே. சனிய விட ராகு அத்தனை மோசம் இல்லை.
6. அடுத்து வண்டி ஏறும் போது அந்த ஃபுட் ஸ்டெப்பில் காலை வைத்து ஏதோ மாடி படி ஏறுவது போல ஏறி என்னை நிலைகுலைய வைக்கும் போது என் பிரஷர் எல்லாம் எகிறி ஒரு குத்து விட தோன்றும்.
இதுக்கு நீங்க கார் வாங்கி கூட்டிகிட்டு போகனும். சும்மா பேசக்கூடாது.
7. நீங்க ரோட்டை பார்த்து ஓட்டுங்க நான் ஹேண்ட் சிக்னல் எல்லாம் பண்ணிக்கிறேன் என சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஆனால் வலது பக்கம் கை காமின்னு சொல்லும் போது மிகச்சரியாக இடது பக்கம் காண்பித்து விட்டு என்னை எவனாவது "வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?"ன்னு கேட்கும் போது "வீடே பின்னாடிதான் உட்காந்திருக்கு. தேவைப்பட்டா உடனே சொல்லிக்கலாம்" என பதில் சொல்லிட்டு பின்னால் இருக்கும் வீட்டுக்கு ஒரு குத்து விட தோன்றும்.
அய்யோ நான் வலது கை தான் காமிச்சேன். ஆனா இடது பக்கமா காமிச்சுட்டேன். அந்த சண்டாளன் தான் சரியா வரலை. நீங்க மெதுவா போவ கூடாதா?
8. இந்த பதிவை படி. செம காமடியா இருக்குன்னு சொல்லும் போது "இன்னிக்கு கரண்ட் பில் கட்டனும்"ன்னு சம்மந்தம் சம்மந்தமில்லாம பேசுவது போல அவமானப்படுத்துவது என்னை மட்டுமில்லை தமிழை வளர்க்கும் வலையுலகமே உங்களையும் சேர்த்து அவமானப்படுத்தும் போது ஒரு குத்து விட தோன்றும்.
இந்த நெட்ட முதல்ல புடுங்கினா இந்த வீடும் உறுப்படும் நீங்களும் முக்கியமா நானும் நிம்மதியா இருப்பேன்.
9. இங்க பாரேன் கவிதா ஒரு பதிவு போட்டிருக்காங்க. விவாகரத்து பத்தின்னு சொல்லும் போது "ஹூம் நான் மட்டும் விவாகரத்து செஞ்சிருந்தா உங்களை இருபத்தி ஏழாவது தடவையா கட்டின புருஷனை விவாகரத்து செஞ்சவன்னு கின்னஸ்ல வந்திருக்கும்' என அங்கலாய்க்கும் போது ஒரு செம குத்து விட தோன்றும்.
ஏன் நான் சொல்றது என்னா தப்பு. நீங்களே சொல்லுங்க.
10. இப்படி நான் சொல்வதுக்கு எல்லாம் சிவப்பு???மஞ்சள்!!!! எழுத்தில் பதிலுக்கு பதில் சொல்லிகிட்டே வந்தா பத்தாவது குத்து விட தோன்றும்.
குறிப்பு: எல்லாம் தோன்றும் தோன்றும் தான். இது வரை குத்து விட்டதில்லை என்பதை என் அன்பான பெண்ணீயவாதிகளுக்கு தெரிவித்து கொள்கின்றேன்.
July 6, 2010
நட்ராஜ் டான்ஸ் களேபரம்!! சிம்பு கலவரம்!!!
நட்ராஜுக்கு சிம்பு டான்ஸ் மேல அத்தனை ஒரு கிரேசி. வேற வழியே இல்லாம நாங்களும் பார்த்தே ஆகவேண்டிய நிலை. நல்ல நேரம் எங்க டி.ஆர் டான்ஸ் போட்டு காமிக்கலை இன்னும்.
@@@@@@@@@@@@@@
இப்ப தான் ஸ்கூல் சேர்த்த மாதிரி இருக்கு அதுக்குள்ள டெஸ்ட் வருதாம். அவங்க மிஸ் சிலபஸ் கொடுத்துட்டாங்க. அ முதல் ஃ வரை ஓரல், அ முதல் ஈ வரை எழுதனும், 1 முதல் 10 வரை ஓரல், 1 முதல் 5 வரை எழுதனும், ஆங்கிலத்தில் ஜானி ஜானி எஸ் பாபா, தமிழில் பள்ளி செல்ல விரும்பு ரைம்ஸ்...இப்படியாக.
அவன் அம்மாவுக்கும், அக்காவுக்கும் இது ரொம்ப ஹெவியாக இருக்கின்றதாம். எனக்கும் நட்ராஜுக்கும் அப்படி தோன்றவில்லை.ஏனனில் நட்ராஜ் இதை எல்லாம் படிக்க போவதில்லை என நினைக்கின்றேன். என்னை விட்டா ஜஸ்ட் லைக் தட் ஊதி தள்ளி விடுவேன். இதே சிலபஸ் நான் காலேஜ் படிக்கும் போது இருந்திருந்தா நான் யுனிவர்சிட்டி பர்ஸ்ட் வாங்கியிருப்பேன் என்பது வலையுலகம் அறிந்ததே.
எதுக்கும் இருக்கட்டும் என நினைத்து அ முதல் ஃ வரை எழுதி பார்த்தேன். "ஔ" மட்டும் கடைசி வரை வரவில்லை. அதுக்கு பதில் "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"ன்னு டெம்பிளேட் பின்னூட்ட அவ்வ்வ்வ்வ்வ்வ் தான் வருகின்றது. அமைதியாக, எழுதி பார்த்த சிலேட்டை எச்சில் துப்பி அழித்து விட்டேன்.
@@@@@@@@@@@@@@@
சமீபமாக நட்ராஜ் கையை தொங்க போட்டு கொண்டு தோள் இரண்டையும் குலுக்குகினான். அதாவது "எனக்கு தெரியாது", "யார் எக்கேடு கெட்டா எனக்கு என்ன", "நான் அவனில்லை", "வேற வேலை இருந்தா போய் பாரு, என்னை டிஸ்டர்ப் செய்யாதே" என்பன போன்ற அர்த்தமாம். எல்லாம் சீமாச்சு அண்ணாவின் ரெண்டாவது பெண் சூர்யாவின் பாதிப்பாம். சூர்யா பரவாயில்லை. பெரியவள் ஷண்முகா கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். டென்னிஸ் விளையாட கிளப்க்கு போன போது ஷண்முகா ஃப்ரம் அமரிக்கா என தெரிந்த ஒரு நண்பர் தொண்டையை எல்லாம் நல்லா கனைத்து கொண்டு 'வாட் ஈஸ் யுவர் நேம்?" என கேட்ட போது அது ஷண்முகாவுக்கு புரியாமல் போக பின்னே நாள் விம் போட்டு விளக்க அவரிடம் "இன்னும் வைக்கலை"ன்னு கூலாக சொன்ன போது நான் அதிர்ந்தேன்(லைட்டா) ஆனா கேட்ட நண்பருக்கு சரியாக அந்த ஆங்கிலம் மட்டுபடாமையால் விட்டு விட்டார்.
@@@@@@@@@@@@@@@@
நட்ராஜ் பள்ளிக்கு அழைக்க போன போது ரொம்ப ஆர்வமாக அவன் அம்மா 'பையன் எப்படி?' என கேட்க அதற்கு அவங்க மிஸ் "ரொம்ப கோவம் வருது. எல்லார் கையிலயும் பேப்பர் கொடுத்து உங்களுக்கு என்ன தெரியுமோ அதை வரைந்து கொடுங்க என சொல்லி கொடுத்த போது இவன் வாங்கிய உடனேயே ரொம்ப கோவமா கிறுக்கி குடுத்தான். இப்படி செய்யலாமா நான் படம் தானே போட்டு குடுக்க சொன்னேன் என சொன்னதுக்கு 'மிஸ் இது நூடுல்ஸ் படம் மிஸ்'ன்னு சொல்றான்.
முதல் நாள் மிஸ் எல்லாரிடமும் "அ" எப்படி போடுவது தெரியுமா?ன்னு கேட்க இவன் தெரியும் என சொல்லியிருக்கான். சொல்லு என சொன்ன போது இவன் சொன்ன பதில் "ஆல்ட் 2 அடிச்சு A அடிக்கனும் மிஸ்"
என் மனைவி கிட்டே சொன்னேன். "இனி பையன் எப்படின்னு கேப்பியா கேப்பியா கேப்பியா?"
@@@@@@@@@@@@@@@
நம்ம இயற்கை மகள் ராஜி பொண்ணுக்கு(அதாவது ராஜி பொண்ணு அப்படின்னா ராஜின்னு தான் அர்த்தம், எங்க பக்கத்துல எல்லாம் அபிபொண்ணு, சங்கி பொண்ணு இப்படித்தான் கூப்பிடுவோமாக்கும்) இன்றைக்கு பிறந்தநாள். எத்தனையாவது என கேட்கும் அன்பர்கள் ஒரு நல்ல பரிசாக எனக்கு பார்சல் செய்து விட்டு தனி மடலிட்டால் சொல்லப்படும். இரவு 12 மணிக்கு பதிவு போட்டு தாக்கலாம் என நினைத்தேன். நேற்று மட்டும் முப்பது தடவை மின்சாரம் போனது.அதில் ராத்திரி 12 மணிக்கு போனதும் அடக்கம். காலை எழுந்து பார்த்தா ஜோசப் குழுமத்துல கும்மி ஆரம்பிச்சு வச்சுட்டாரு. அதனால என்ன இங்கிட்டும் ஒரு வாழ்த்து சொன்னீங்கன்னா சந்தோஷப்படுவேன்.வாழ்க ராஜி பொண்ணு.
@@@@@@@@@@@@@@@@@
100 சதம் நம்புகிறேன். வீடியோ வேலை செய்யாது என்று. பார்ப்போம் செய்யுதா இல்லியான்னு:-)
July 3, 2010
மயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும்...
இரவு ஒன்பது மணிக்கு ஒரு அண்ணன் பையன் வந்து "சித்தப்பா சென்னைல மோக்கு சித்தப்பாவின் மனைவி அந்த சித்தி செத்து போயிட்டாங்களாம்"ன்னு சொன்ன போது எனக்கு அதை புரிந்து கொள்ள எனக்கு சிறிது நேரம் பிடித்தது. அடுக்களையில் இருந்து ஓடிவந்த என் மனைவி "அய்யய்யோ என்னப்பா சொல்ற, அது சின்ன பொண்ணு ஆச்சே. இப்பதான ரெண்டு வருஷம் முன்ன கூட ரெண்டாவதா ஒரு பொண்ணு பொறந்துச்சு. அய்யோ எதுனா சண்டையிலே எதுனா செஞ்சுகிடுச்சா?" என அடுக்கடுக்காய் கேட்க எனக்கு அடுத்து என்ன செய்வது என எதும் தெரியவில்லை. என் குடும்பம் கிட்டதட்ட நாற்பது குடும்பத்தில் மாயவரத்தில் ஒரு பத்து குடும்பம் மட்டுமே தற்போது இருக்க மீதி அனைவருமே சென்னை மயிலாப்பூர் பகுதியில் தொழில், அலுவலகம் காரணமாக குடிபெயர்ந்து விட்டு பல காலம் ஆகிவிட்டது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை செல்லவேண்டி பேருந்தில் இருந்தேன். அப்போது தான் நினைத்தேன். என் மனைவி எப்படி வருவாங்க? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப என்ன ஏற்பாடு செய்வது என எதை பற்றியும் நான் சிந்திக்காமலே வந்துவிட்டேன். இன்னும் சொல்ல போனால் அங்கே இறங்கினால் எப்படி அந்த மயிலாப்பூர் வீட்டுக்கு போவது என்பது கூட எனக்கு தெரியாது. சரி இந்த பேருந்து எங்கே கடைசியாக நிற்குமோ அங்கே இறங்கி அடுத்ததை சிந்திப்போம் என நினைத்து கண்மூடி அமர்ந்துவிட்டேன்.
அந்த மோக்கு என்னும் என் பெரியப்பா மகன் எனக்கு மூன்று மாதம் சின்னவன். பெரியதாக சகோதரபாசம் என்பதை விட என் பால்யகாலம் முதல் எனக்கு ஒரு நண்பனாக பழகிவிட்டவன். ஒட்டுமொத்த அவனின் குடும்பபாரத்தையும் அவனுக்கு மூத்த சகோதரர்கள் இருந்தும் இவனே பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவன்.குடும்பத்தில் எந்த நல்ல காரியமோ கெட்ட காரியமோ அவன் இன்றி ஒன்றும் நடக்காது. மிகப்பெரிய கல்யாணம் ஆனாலும் சரி, எழவாக இருந்தாலும் சரி இவன் ஒத்தை ஆள் கையமத்துவான். இவனின் குடும்ப சூழ்நிலை காரணமாகவே இவனுக்கும் கல்யாணம் ஆன போது வயது முப்பத்தி மூன்று ஆகிவிட்டது. சொல்ல போனால் மிகச்சரியாக பத்து வருடம் முன்னே தான் ஆனது. அப்போது எல்லாம் நான் வெளிநாட்டில் இருந்தமையால் அவன் திருமணத்தை பார்த்தவன் இல்லை. அதன் பின்பு நான்கு வருடம் கழித்து எங்கள் வீட்டு குலதெய்வ கோவிலில் அவனை அவன் மனைவியோடு பார்த்தேன். கையில் ஒரு ஆண் குழந்தையை வைத்து சோறு ஊட்டிகொண்டிருந்தது. மோக்கு வந்து "இது யாரு கண்டுபிடி சௌம்யா" என சொல்ல என் பெயரை அவன் காதில் சொன்னது. நான் சிரித்து கொண்டேன். "உங்களை பத்தி இவங்க பேசாத நாள் இல்லைங்க அத்தான்" என்றது. சிரித்து கொண்டேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் நான் கிளம்பிவிட்டேன். கிட்ட தட்ட என் வீட்டு மருமகளுக்கான எல்லாவித லட்சனங்களோடும் ஒன்றி இருந்தது அந்த பெண். நான் அந்த பெண்ணை பார்த்தது பேசியது அத்தனையே. அதன் பிறகு பார்க்க சந்தர்பம் வாய்க்கவில்லை. ஆனால் ஒரு மாதம் முன்னே ஒரு திருமணத்தில் கூட மோக்கு மட்டுமே வந்தான். அடுத்து ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் அப்படியே அவன் மனைவியை கொண்டிருப்பதாகவும் இரண்டு வயது ஆகின்றது என்றும் சொன்னான். வீட்டுக்கு வா என சொன்ன போது வருகின்றேன் என சொன்னேன். இப்படி அந்த பெண் சாவுக்கு போவேன் என நினைத்து பார்க்கவில்லை.
பேருந்து ஓட்டுனர் "விக்கிரவாண்டி வந்தாச்சு பத்து நிமிஷம் நிற்கும்" என கத்திய கத்தலில் தான் விழித்தேன். இரவும் சாப்பிடவில்லை. ஆனால் அப்பவும் பசிக்கவில்லை. மனம் பாரமாக இருந்தது. அதையும் மீறி ஆகா நம் சொந்தகாரங்க எல்லாரையும் ஒரே இடத்தில் பார்த்து விடலாம் என மனக்குரங்கு சொன்னது. பாழாய் போன மனது. எதற்கு ஆசைப்படுகின்றது என் சுயநல மனது. இந்த மனசுக்கு மோக்கு நிலை பற்றி என்ன தெரியும். தூக்கம் வர மறுத்தது. ஆனாலும் சிரமப்பட்டு தூங்க ஆரம்பித்தேன். கோயம்பேடு வந்ததும் ஒரு அண்ணனுக்கு போன் செய்தேன். அந்த மயிலாப்பூர் வீட்டுக்கு போய் சேர்ந்த போது காலை நான்கு முப்பது. வாசலில் ஒரு ஷாமியானா, அதன் கீழ் பிலாஸ்டிக் நாற்காலிகள், அதன் மேல் பிரித்து போடப்பட்ட தினந்தந்திகள், "மயிலாப்பூரில் அனேகமா இந்த தடவை எஸ்.வி.சேகருக்கு தான் சீட்டு குடுப்பாரு. ஆனா உதயசூரியன் சின்னத்திலே தான் நிற்கனும்னு சொல்லிடுவாரு. நான் சொல்றேன் நீ வேணா எழுதி வச்சுக்க" என லஜ்ஜையே இல்லாம பேசி கொண்டிருந்த ஒரு மாமா, அதை ஆமோதிக்கும் யாரோ ஒருவர், "காபிகடை எப்ப திறக்கும்" என கேட்டு கொண்டே முந்தானை போர்த்திய பெரியம்மா, பெரியம்மா தலைமையில் காபிகுடிக்க ரெடியாக நிற்கும் பெண்டுகள், "அந்தகாலம் மாதிரி இல்லை, வெட்டியானுக்கு கவனிச்சு ரெண்டு ராட்டி கூட வச்சு எரிக்க சொல்லி தாவுதீர வேண்டாம், உள்ளே விட்டா அடுத்த செகண்டு கையில சாம்பல் குடுத்துடுவான் இங்க" என சென்னை பெருமை பேசும் ஒரு பெருசு, "இந்த கம்முணாட்டி ஒரு வார்த்தை எனக்கு போன் அடிச்சிருந்தா போதும் என் கொழுந்தியா பையன் டாக்டரா இருக்கான் ஸ்டான்லில போன வருஷம் தான் படிப்ப முடிச்சு சேர்ந்தான், மகா கெட்டிகாரன், +2 விலே பிரமாதமான மார்க்கு, கூப்பிட்டு சீட்டு குடுத்தான் தஞ்சாவூருல அவன் கிட்ட நான் ஒரு வார்த்தை சொன்னா போதும் புள்ளய காப்பாத்தி கையில குடுத்திருப்பான்" என குடும்ப பெருமை பேசின ஒரு அத்தான் என அந்த இடமே எனக்கு குமட்டி கொண்டு வந்தது.
என் அப்பா தனியாக உட்காந்து இருந்தாங்க. ஓ எனக்கு முன்னமே வந்தாச்சு அனேகமா எல்லாருமே மாயவரத்திலே இருந்து. அது ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. சில பேர் மாடிபக்கம் கைகாட்ட நான் மெதுவாக மாடி ஏறினேன். மாடிப்படியில் தன் இரண்டு வயது பெண்ணை மடியில் வைத்து கொண்டு மோக்கு ஒரு வார தாடியுடன் சுவற்றில் தலை சாய்த்து தூங்கி கொண்டிருந்தான். தூங்கிகொண்டிருந்தானோ இல்லை சும்மா சாய்ந்திருந்தானோ தெரியவில்லை. நான் உள்ளே நுழைந்ததும் கண்ணாடி பெட்டியில் அந்த பெண். முகம் முழுக்க மஞ்சள் தடவி பெரிய பொட்டு வைத்து, பட்டு புடவை போர்த்தி அதன் மேலாக தாலி சரடை நன்றாக தெரியும் படியாக "இவள் சுமங்கலியா செத்து போனா" என சொல்லாமல் சொல்வது போல காட்டி அந்த பெண்ணை கோரப்படுத்தி வைத்திருந்தனர். தலைப்பக்கமாக ஒரு பித்தளை காபி சட்டியில் பச்சரிசி மேல் வெற்றிலை பாக்கு, பழம், உடைத்த தேங்காய், ஊது பத்தி என என்னவோ இருந்தது. கண்ணாடி பெட்டியின் மீது பூ மாலைகள். பெரியப்பாவுக்கு தொண்ணூறு தாண்டி ஆகுது வயது. அவரை ஒரு நாற்காலி போட்டு உட்காத்தி வைக்க, என் அக்காக்கள், பெரியம்மாக்கள், சித்திகள், அக்கா, தங்கைகள் எல்லாம் ஒரு ஒப்பாரி வைக்க எனக்கு கொஞ்சம் கிலி பிடித்தது. யாருமே நாளை காரியம் முடிந்து மோக்குவின் துணைக்கு இருக்க போவதில்லை. அவனுக்கு தாராளமாக அறிவுரை சொல்லி விட்டு இடத்தை காலி செய்ய போகின்றவர்கள்.சிலர் ஒரு படி மேலே போய் " ராமசுந்தரத்துக்கு ஒரு பொண்ணு முப்பத்தி மூணு வயசாச்சு. இன்னும் கல்யாணம் தெகயலை. அவனுக்கு கட்டி கொடுக்க தோது படலை. உனக்காக இல்லைன்னாலும் இந்த பச்ச மண்ணுக்காகவாவது கட்டிகிட்டு வாழனும்"என்று எதாவது ராமசுந்தரம் சோமசுந்தரம் வைத்து வியாபாரம் பேசுவர். இதில் அந்த ராமசுந்தரத்தின் மகள் அபிராயம், மோக்கு அபிப்ராயம், மோக்கு மகள், மகன் அபிப்ராயம் எல்லாம் செத்து போகும்.
சிவப்பு விளக்கு வைத்த காரில் வந்த வி.வி.ஐ.பி யை எழவு வீடு எனக்கூட பார்க்காமல் "வாங்க வாங்க" என கூப்பிட அவரும் வந்து ஒரு மாலையை போட்டுவிட்டு சம்பிரதாயமாக பெரியப்பா கையை பிடித்து கொண்டார். பெரியப்பா "அய்யோ எனக்கு தொண்ணூத்து நாலு வயசுல இப்புடி ஒரு கஷ்டத்தை பார்க்கனுமா?" என சொல்லி அழுதார். ஆக அவருக்கு மோக்கு பற்றின கவலை இல்லை. தனக்கு இந்த வயதில் இப்படி ஒரு மனசு கஷ்ட்டம் வர வேண்டுமா என்பதே அவருடைய நிலைப்பாடு. எல்லோரும் அந்த வி.வி.ஐ.பி வருகையை சிலாகித்து பேசி கொண்டிருக்க கீழே சிதறி கிடந்த அந்த தெரு முனைக்கு காபி குடிக்க போன கூட்டம் ஓடி வந்து அந்த சின்ன மாடியில் ஏற பாவம் படியின் மூலையில் உட்காந்திருந்த மோக்கும் அவன் குழந்தையும் அநியாயத்துக்கு மிதிபட்டனர்.
வந்த பெரியவர் சம்பிரதாயமாக "எப்படி நடந்துச்சு?" என கேட்ட போது அந்த வித்தையில் தேர்ந்த நடந்ததை எதையும் நேரில் பார்க்காத வாய்வழி செய்தியாக மட்டுமே கேட்டறிந்த அந்த கிருஷ்ணசாமி விளக்கினார். சாவு வீட்டில் "எப்படி நடந்துச்சு?" என்ற கேள்விக்கு பதில் சொல்வதும் ஒரு கலை தான் என அப்போது தான் தெரிந்து கொண்டேன்.
"ஒரு வாரம் முன்ன பாப்பா தஞ்சாவூருக்கு தன் அக்காவூட்டுக்கு போக ஆசைப்பட்டிருக்கு. அதான் மாநாடு லீவு வந்துச்சே பசங்களுக்கு. இவனும் சரி போயிட்டு வான்னு ரயில்ல டிக்கெட்டு போட்டு அனுப்பியிருக்கான். அங்க போன எடத்துல கொசுக்கடில ஒரு நா ராத்திரி முச்சூடும் கெடந்து அவஸ்தை பட்டிருக்கு. காலைல பார்த்தா ஒரே ஜொரம். சும்மா சொல்ல கூடாது. காச காசுன்னு பார்க்காம வினோதகன்ல சேர்த்துட்டு இவனுக்கு தகவல் சொல்லியிருக்காங்க. இவனும் அடிச்சு புடிச்சு அங்க போனா புள்ளக்கி நெகா தப்பிடுச்சு. இவன் ஒரு பிளசர் புடிச்சு இங்க எம்ஜியார வச்சிருந்த ஆசுபத்திரில சேர்த்துட்டு எல்லாருக்கும் தகவல் சொல்ரான். சரியா எட்டோட எட்டு நேத்திக்கு கார்த்தால வர நெகா வரலை. இவனும் தகுதிக்கு மீறி செலவ பத்தி கவல படாம செஞ்சு பார்த்துட்டான். பின்ன ஒரு நாலு மணி சாயரச்சை அது கண்ண தொரந்து பார்த்திருக்கு. கவல படாதீங்க நான் பொழச்சுடுவேன்க்குற மாதிரி பார்த்திருக்கு. அதான் கடேசியா பார்த்தது. பின்ன கண்ண மூடிடுச்சு"
அந்த பெரியமனிதருக்கு அந்த கிருஷ்ணசாமியின் கதை ஒட்டுதலாக இல்லை போலிருக்கு. "என்னய்யா கொசு, ஜொரம்னுகிட்டு, மோக்கை கூப்பிடு". மோக்கு மாடிபடியிலே இருந்து வந்தான். சொன்னான். "இல்லை வினோதகன்ல சொல்லிட்டாங்க. பிரைன் பீவர். அப்பல்லோவிலே சேர்த்து பாருங்கன்னு. நானும் சேர்த்துட்டேன். அது கண்ணையும் திறக்கலை. வாயையும் திறக்கலை.இறந்துடுச்சு சௌம்மியா."
"சரி வரவேண்டியவங்க எல்லாம் வந்தாசுன்னா எடுக்க ஏற்பாடு செய்யலாமே. எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. துக்கத்துக்கு வந்துட்டு வர்ரேன்னு சொல்லிக்க கூடாது" என சொல்லி அவர் கிளம்ப நான் நினைத்து கொண்டேன் "இதுக்கு வர்ரேன்னு சொல்லிகிட்டே போயிருக்கலாம்"
நான் கீழே வந்தேன். இன்னும் ஒரு அண்ணன் வீடு பக்கத்து தெரு தான். போனேன். அங்க போனா கிட்ட தட்ட எல்லா அண்ணன், தம்பிகளும் கூடியிருந்தனர். எல்லார் முகத்திலும் ஒரு வித துக்கம். எப்போதும் கூடினால் பேச்சும் அரட்டையுமாக இருக்குமே அதல்லாம் இல்லை. எல்லோரும் மோக்கு, அவன் மனைவி பற்றி பேசிக்கொண்டிருக்க நான் அமைதியாக அந்த ஹாலில் படுத்து கண்ணை மூடிகொண்டேன்.
யாரோ வந்து செய்தி சொன்னார்கள். குளிப்பாட்ட போறாங்க. இப்ப எடுத்துடுவாங்க. அந்த மாருதி சவ வண்டி வந்தாச்சுன்னு. அந்த தெருவில் இருந்து ஹாமில்டன் பாலம் ஏறி இறங்கினா மயிலாப்பூர் இடுகாடு. எல்லா சடங்கும் முடிந்து அந்த சவ வண்டி கிளம்பும் போதும் அந்த பெண் குழந்தை மோக்கு தவிர்த்து யாரிடமும் போகவில்லை. பையன் ஏழு வயது. அவனுக்கு நிலமையின் விபரீதம் அத்தனை சரியாக புரியவில்லை. ஆனால் தன் அம்மாவின் சடலத்துக்கு அருகே வர பயப்படுகின்றான்.
எல்லோரும் சுடுகாடு போயாகிவிட்டது. நான் மாயவரம் தவிர எந்த சுடுகாட்டுக்கும் போய் பழக்கம் இல்லை. எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. அது சுடுகாடுன்னா எப்படி இருக்கும், மாயவரம் சுடுகாடு மாதிரி தான் இருக்கும் என நினைத்த எனக்கு இது ஒரு ஆச்சர்யமான அதிசயம். ஒரு வேப்ப மர காடு. அழகிய பூங்கா மாதிரியான காடு. மிக சுத்தமாக நடுவே தார்ச்சாலை அமைத்து இரு பக்கமும் மிக நேர்த்தியாக வளர்க்கப்பட்ட மரங்கள். ஒரு அரை கிலோமீட்டர் தாண்டிய பின்னே வலது பக்கம் விறகுவைத்து எரியூட்டும் இடங்கள். அழகிய மேற்கூறையிட்டு கீழே மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. இடது பக்கம் சமாதிகள். மிக அழகான சமாதிகள். பிறப்பு-இறப்பு தேதிகள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு சிலரது உருவமே கூட தத்ரூபமாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது.
பலபேர் தங்கள் கட்சி வர்ணத்தில் புதைந்து போயிருந்தனர். சில குழந்தைகள் சமாதிகள் மனதை அழ வைத்தது. பணக்காரன், ஏழை வித்யாசம் இல்லாமல் வரிசையாக உறங்கினர். இரவினில் ஒரு வேளை சண்டை வருமோ என நினைத்து கொண்டேன். அமைதி என்றாள் அப்படி ஒரு அமைதி. நாங்கள் ஒரு இருநூறு பேருக்கு மேல் நடந்து போகிறோம். அந்த காலடி சப்தம் தவிர எதுவுமில்லை. அப்போது தான் அதை கவனித்தேன். மூன்று அருமையான இரண்டு சர்க்கர புது வாகனங்கள் அந்த நடை பாதையின் ஓரத்தில் நிற்கின்றது. அதன் இருபதடி உள்ளே நல்ல வேப்பமர நிழலில் நால்வர் ஒரு அழகிய சமாதியின் மேல் (கிரானைட் கல் பதித்து அழகிய வேலைப்படுடன் கூடிய சமாதி. எந்த ஒரு கணவரோ அவர் மனைவிக்காக கட்டிய சிறிய அளவினாலான தாஜ்மஹால். அதன் மேல் அழகாக வட்ட வடிவில் உட்காந்து நடுவே இரண்டு முழு அளவிலான மது பாட்டில்கள். பெப்சி வகையறாக்கள், கூடவே நல்ல பிராண்டட் பிரியாணி வகைகள். அழகாய் உட்கார்ந்து ஆனால் இது கவலைக்காக குடிக்கும் கூட்டம் இல்லை என்பது நன்றாக புரிந்தது. உலக சத்தங்களில் இருந்து விட்டு விடுதலையாகி அமைதியான இடம் தேடி சந்தோஷம் அனுபவிக்கும் கூட்டம். எவன் மனைவி செத்தால் இவனுங்களுக்கு என்ன கவலை. இதோ மோக்கு நாளை எப்படி வாழ்க்கையை பயனிப்பான் என இவர்களுக்கு என்ன கவலை? எவனுடைய மனைவியின் சமாதி இவர்களுக்கு ஷாந்தி கொடுக்கும் இடமாகி போனது. கிட்ட தட்ட இந்த சவ ஊர்வலத்தில் பாதிக்கப்பட்ட மோக்கு தவிர எல்லாரும் அதே நிலைகாரர்கள் தான் நான் உட்பட. ஏனனில் எனக்கு அந்த நேரத்தில் என் குழந்தைகள் பள்ளி விட்டு வந்திருப்பார்களா? மகன் சாப்பிட்டிருப்பானா? போகும் போது பேருந்தில் கூட்டம் இருக்குமா? என்பன போன்ற நினைவுகளே எச்சமிருந்தன. எனக்கும் அதோ அங்கே குடித்து கொண்டிருப்பவர்களுக்கும் அதிக பட்ச வித்யாசமில்லை என்றே நினைத்து கொண்டேன்.
ஆயிற்று எல்லாம் ஆயிற்று. தகன மேடை ஒரு தனியறை. அதன் முன்பாக ஒரு பெரிய ஹால். அதில் ஒரு மேடை. அதில் அந்த பெண்ணை இறக்கி வைத்தனர். எல்லோரும் சுற்றி நிற்க அங்கே சில சடங்குகள் அரங்கேற்றம். யார் பேச்சை கேட்பது என மோக்கு திண்டாடி எல்லோர் பேச்சையும் கேட்டான். வலது பக்கமாக பொட்டு வை. இடது பக்கமாக வை என சொல்லப்பட்ட எல்லா பக்கமும் காது கொடுத்து கேட்டான். எனகு பக்கத்தில் இருந்த ஏதோ ஒரு நபர் என்னை பார்த்து "எப்ப வந்த நீ வெளிநாட்டில் இருந்து. என் தங்கச்சி மக கல்யாணத்துக்கு கூட வரலியே. தோ நிக்கிறாரு பாரு மோக்கு பக்கத்துல, அந்த பக்கம் இல்லை வலது பக்கம் பாரு. கழுத்துல டாலர் வச்ச செயின் போட்டவரு. அவரு தான் மாப்பிள்ள" எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. என்ன மனிதர்கள். பின்பு எல்லாரும் சுத்தி வர பணிக்கப்பட்ட போது சுத்தி வரும் போது "கோடாலி தைலம் எடுத்து வந்திருக்கியா?"என கேட்ட எவனையோ கோவத்தோட திரும்பி பார்க்க நினைத்து மூன்று சுற்று சுற்றுவதற்கு பதில் ஒரே சுற்றில் ஒதுங்கி கொண்டேன்.
அதல்லாம் முடிந்த பின் அந்த கருப்பு தகன அறை திறந்து விடப்பட்டது. மிக பெரிய உயரமாக முழுவதும் கருப்பு வர்ணம் என் வயிற்றை பிசைய தொடங்கியது. கால்கள் மெல்ல நடுங்கியது. அங்கே ஒரு தண்டவாளத்தில் அந்த கைப்பாடையுடன் அந்த பெண் இறக்கி வைக்கப்பட்டாள். சிலர் விசும்ப தொடங்க மோக்கு அசைவற்று நின்றான். கழுத்தில் இருந்து மாலை கழட்டப்பட்டது. கால்விரல், கை விரல் கட்டுகள் அறுத்து எடுக்கப்பட்டது. சிலர் வாய்விட்டு அழுதனர். கழுத்து மாலை அகற்றப்பட்ட போது நெற்றியில் ஒரு கீற்று தலைமுடி வந்து விழுந்து இருந்தது.
"கடைசியா முகம் பார்த்துகுங்க மூட போகிறோம்"
மெதுவாக மோக்கு கிட்டே போய் அந்த முடிகற்றையை எடுத்து தலைமுடியோடு சேர்த்து வைத்து கன்னத்தை தடவி கொடுத்தான். உள்ளே தள்ளி மூடினர். அந்த ஒரு நொடியில் அடித்த வெப்பம் அனைவரையும் தாக்கியது. மோக்கு முதன் முறையாக வெடித்து அழுதான்.
எல்லாம் முடிந்தது. வீட்டுக்கு வந்தாகிவிட்டது. அதிசயமாக கேட்டேன் என் வீட்டிலே "சினிமாவுக்கு போவோமா?" என் மனைவிக்கு இந்த பதினைந்து வருஷத்தில் கிடைக்காத ஒரு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம். சினிமா போனோம். திரும்பி வரும் போது ஒரு ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்டோம். திரும்பி வரும் போது ஹோட்டல் வாசலில் என் உறவினர் ஒருவர் "என்னடா தம்பி நமக்கு இன்னும் பதினைந்து நாள் பங்காளி சூதகமே இன்னும் முடியலை.அதுக்குள்ள சினிமா, ஹோட்டல்னு கிளம்பிட்டீங்க??
போய்யா உன் வேலையை பார்த்துகிட்டு என மனதில் நினைத்து கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை செல்லவேண்டி பேருந்தில் இருந்தேன். அப்போது தான் நினைத்தேன். என் மனைவி எப்படி வருவாங்க? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப என்ன ஏற்பாடு செய்வது என எதை பற்றியும் நான் சிந்திக்காமலே வந்துவிட்டேன். இன்னும் சொல்ல போனால் அங்கே இறங்கினால் எப்படி அந்த மயிலாப்பூர் வீட்டுக்கு போவது என்பது கூட எனக்கு தெரியாது. சரி இந்த பேருந்து எங்கே கடைசியாக நிற்குமோ அங்கே இறங்கி அடுத்ததை சிந்திப்போம் என நினைத்து கண்மூடி அமர்ந்துவிட்டேன்.
அந்த மோக்கு என்னும் என் பெரியப்பா மகன் எனக்கு மூன்று மாதம் சின்னவன். பெரியதாக சகோதரபாசம் என்பதை விட என் பால்யகாலம் முதல் எனக்கு ஒரு நண்பனாக பழகிவிட்டவன். ஒட்டுமொத்த அவனின் குடும்பபாரத்தையும் அவனுக்கு மூத்த சகோதரர்கள் இருந்தும் இவனே பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவன்.குடும்பத்தில் எந்த நல்ல காரியமோ கெட்ட காரியமோ அவன் இன்றி ஒன்றும் நடக்காது. மிகப்பெரிய கல்யாணம் ஆனாலும் சரி, எழவாக இருந்தாலும் சரி இவன் ஒத்தை ஆள் கையமத்துவான். இவனின் குடும்ப சூழ்நிலை காரணமாகவே இவனுக்கும் கல்யாணம் ஆன போது வயது முப்பத்தி மூன்று ஆகிவிட்டது. சொல்ல போனால் மிகச்சரியாக பத்து வருடம் முன்னே தான் ஆனது. அப்போது எல்லாம் நான் வெளிநாட்டில் இருந்தமையால் அவன் திருமணத்தை பார்த்தவன் இல்லை. அதன் பின்பு நான்கு வருடம் கழித்து எங்கள் வீட்டு குலதெய்வ கோவிலில் அவனை அவன் மனைவியோடு பார்த்தேன். கையில் ஒரு ஆண் குழந்தையை வைத்து சோறு ஊட்டிகொண்டிருந்தது. மோக்கு வந்து "இது யாரு கண்டுபிடி சௌம்யா" என சொல்ல என் பெயரை அவன் காதில் சொன்னது. நான் சிரித்து கொண்டேன். "உங்களை பத்தி இவங்க பேசாத நாள் இல்லைங்க அத்தான்" என்றது. சிரித்து கொண்டேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் நான் கிளம்பிவிட்டேன். கிட்ட தட்ட என் வீட்டு மருமகளுக்கான எல்லாவித லட்சனங்களோடும் ஒன்றி இருந்தது அந்த பெண். நான் அந்த பெண்ணை பார்த்தது பேசியது அத்தனையே. அதன் பிறகு பார்க்க சந்தர்பம் வாய்க்கவில்லை. ஆனால் ஒரு மாதம் முன்னே ஒரு திருமணத்தில் கூட மோக்கு மட்டுமே வந்தான். அடுத்து ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் அப்படியே அவன் மனைவியை கொண்டிருப்பதாகவும் இரண்டு வயது ஆகின்றது என்றும் சொன்னான். வீட்டுக்கு வா என சொன்ன போது வருகின்றேன் என சொன்னேன். இப்படி அந்த பெண் சாவுக்கு போவேன் என நினைத்து பார்க்கவில்லை.
பேருந்து ஓட்டுனர் "விக்கிரவாண்டி வந்தாச்சு பத்து நிமிஷம் நிற்கும்" என கத்திய கத்தலில் தான் விழித்தேன். இரவும் சாப்பிடவில்லை. ஆனால் அப்பவும் பசிக்கவில்லை. மனம் பாரமாக இருந்தது. அதையும் மீறி ஆகா நம் சொந்தகாரங்க எல்லாரையும் ஒரே இடத்தில் பார்த்து விடலாம் என மனக்குரங்கு சொன்னது. பாழாய் போன மனது. எதற்கு ஆசைப்படுகின்றது என் சுயநல மனது. இந்த மனசுக்கு மோக்கு நிலை பற்றி என்ன தெரியும். தூக்கம் வர மறுத்தது. ஆனாலும் சிரமப்பட்டு தூங்க ஆரம்பித்தேன். கோயம்பேடு வந்ததும் ஒரு அண்ணனுக்கு போன் செய்தேன். அந்த மயிலாப்பூர் வீட்டுக்கு போய் சேர்ந்த போது காலை நான்கு முப்பது. வாசலில் ஒரு ஷாமியானா, அதன் கீழ் பிலாஸ்டிக் நாற்காலிகள், அதன் மேல் பிரித்து போடப்பட்ட தினந்தந்திகள், "மயிலாப்பூரில் அனேகமா இந்த தடவை எஸ்.வி.சேகருக்கு தான் சீட்டு குடுப்பாரு. ஆனா உதயசூரியன் சின்னத்திலே தான் நிற்கனும்னு சொல்லிடுவாரு. நான் சொல்றேன் நீ வேணா எழுதி வச்சுக்க" என லஜ்ஜையே இல்லாம பேசி கொண்டிருந்த ஒரு மாமா, அதை ஆமோதிக்கும் யாரோ ஒருவர், "காபிகடை எப்ப திறக்கும்" என கேட்டு கொண்டே முந்தானை போர்த்திய பெரியம்மா, பெரியம்மா தலைமையில் காபிகுடிக்க ரெடியாக நிற்கும் பெண்டுகள், "அந்தகாலம் மாதிரி இல்லை, வெட்டியானுக்கு கவனிச்சு ரெண்டு ராட்டி கூட வச்சு எரிக்க சொல்லி தாவுதீர வேண்டாம், உள்ளே விட்டா அடுத்த செகண்டு கையில சாம்பல் குடுத்துடுவான் இங்க" என சென்னை பெருமை பேசும் ஒரு பெருசு, "இந்த கம்முணாட்டி ஒரு வார்த்தை எனக்கு போன் அடிச்சிருந்தா போதும் என் கொழுந்தியா பையன் டாக்டரா இருக்கான் ஸ்டான்லில போன வருஷம் தான் படிப்ப முடிச்சு சேர்ந்தான், மகா கெட்டிகாரன், +2 விலே பிரமாதமான மார்க்கு, கூப்பிட்டு சீட்டு குடுத்தான் தஞ்சாவூருல அவன் கிட்ட நான் ஒரு வார்த்தை சொன்னா போதும் புள்ளய காப்பாத்தி கையில குடுத்திருப்பான்" என குடும்ப பெருமை பேசின ஒரு அத்தான் என அந்த இடமே எனக்கு குமட்டி கொண்டு வந்தது.
என் அப்பா தனியாக உட்காந்து இருந்தாங்க. ஓ எனக்கு முன்னமே வந்தாச்சு அனேகமா எல்லாருமே மாயவரத்திலே இருந்து. அது ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. சில பேர் மாடிபக்கம் கைகாட்ட நான் மெதுவாக மாடி ஏறினேன். மாடிப்படியில் தன் இரண்டு வயது பெண்ணை மடியில் வைத்து கொண்டு மோக்கு ஒரு வார தாடியுடன் சுவற்றில் தலை சாய்த்து தூங்கி கொண்டிருந்தான். தூங்கிகொண்டிருந்தானோ இல்லை சும்மா சாய்ந்திருந்தானோ தெரியவில்லை. நான் உள்ளே நுழைந்ததும் கண்ணாடி பெட்டியில் அந்த பெண். முகம் முழுக்க மஞ்சள் தடவி பெரிய பொட்டு வைத்து, பட்டு புடவை போர்த்தி அதன் மேலாக தாலி சரடை நன்றாக தெரியும் படியாக "இவள் சுமங்கலியா செத்து போனா" என சொல்லாமல் சொல்வது போல காட்டி அந்த பெண்ணை கோரப்படுத்தி வைத்திருந்தனர். தலைப்பக்கமாக ஒரு பித்தளை காபி சட்டியில் பச்சரிசி மேல் வெற்றிலை பாக்கு, பழம், உடைத்த தேங்காய், ஊது பத்தி என என்னவோ இருந்தது. கண்ணாடி பெட்டியின் மீது பூ மாலைகள். பெரியப்பாவுக்கு தொண்ணூறு தாண்டி ஆகுது வயது. அவரை ஒரு நாற்காலி போட்டு உட்காத்தி வைக்க, என் அக்காக்கள், பெரியம்மாக்கள், சித்திகள், அக்கா, தங்கைகள் எல்லாம் ஒரு ஒப்பாரி வைக்க எனக்கு கொஞ்சம் கிலி பிடித்தது. யாருமே நாளை காரியம் முடிந்து மோக்குவின் துணைக்கு இருக்க போவதில்லை. அவனுக்கு தாராளமாக அறிவுரை சொல்லி விட்டு இடத்தை காலி செய்ய போகின்றவர்கள்.சிலர் ஒரு படி மேலே போய் " ராமசுந்தரத்துக்கு ஒரு பொண்ணு முப்பத்தி மூணு வயசாச்சு. இன்னும் கல்யாணம் தெகயலை. அவனுக்கு கட்டி கொடுக்க தோது படலை. உனக்காக இல்லைன்னாலும் இந்த பச்ச மண்ணுக்காகவாவது கட்டிகிட்டு வாழனும்"என்று எதாவது ராமசுந்தரம் சோமசுந்தரம் வைத்து வியாபாரம் பேசுவர். இதில் அந்த ராமசுந்தரத்தின் மகள் அபிராயம், மோக்கு அபிப்ராயம், மோக்கு மகள், மகன் அபிப்ராயம் எல்லாம் செத்து போகும்.
சிவப்பு விளக்கு வைத்த காரில் வந்த வி.வி.ஐ.பி யை எழவு வீடு எனக்கூட பார்க்காமல் "வாங்க வாங்க" என கூப்பிட அவரும் வந்து ஒரு மாலையை போட்டுவிட்டு சம்பிரதாயமாக பெரியப்பா கையை பிடித்து கொண்டார். பெரியப்பா "அய்யோ எனக்கு தொண்ணூத்து நாலு வயசுல இப்புடி ஒரு கஷ்டத்தை பார்க்கனுமா?" என சொல்லி அழுதார். ஆக அவருக்கு மோக்கு பற்றின கவலை இல்லை. தனக்கு இந்த வயதில் இப்படி ஒரு மனசு கஷ்ட்டம் வர வேண்டுமா என்பதே அவருடைய நிலைப்பாடு. எல்லோரும் அந்த வி.வி.ஐ.பி வருகையை சிலாகித்து பேசி கொண்டிருக்க கீழே சிதறி கிடந்த அந்த தெரு முனைக்கு காபி குடிக்க போன கூட்டம் ஓடி வந்து அந்த சின்ன மாடியில் ஏற பாவம் படியின் மூலையில் உட்காந்திருந்த மோக்கும் அவன் குழந்தையும் அநியாயத்துக்கு மிதிபட்டனர்.
வந்த பெரியவர் சம்பிரதாயமாக "எப்படி நடந்துச்சு?" என கேட்ட போது அந்த வித்தையில் தேர்ந்த நடந்ததை எதையும் நேரில் பார்க்காத வாய்வழி செய்தியாக மட்டுமே கேட்டறிந்த அந்த கிருஷ்ணசாமி விளக்கினார். சாவு வீட்டில் "எப்படி நடந்துச்சு?" என்ற கேள்விக்கு பதில் சொல்வதும் ஒரு கலை தான் என அப்போது தான் தெரிந்து கொண்டேன்.
"ஒரு வாரம் முன்ன பாப்பா தஞ்சாவூருக்கு தன் அக்காவூட்டுக்கு போக ஆசைப்பட்டிருக்கு. அதான் மாநாடு லீவு வந்துச்சே பசங்களுக்கு. இவனும் சரி போயிட்டு வான்னு ரயில்ல டிக்கெட்டு போட்டு அனுப்பியிருக்கான். அங்க போன எடத்துல கொசுக்கடில ஒரு நா ராத்திரி முச்சூடும் கெடந்து அவஸ்தை பட்டிருக்கு. காலைல பார்த்தா ஒரே ஜொரம். சும்மா சொல்ல கூடாது. காச காசுன்னு பார்க்காம வினோதகன்ல சேர்த்துட்டு இவனுக்கு தகவல் சொல்லியிருக்காங்க. இவனும் அடிச்சு புடிச்சு அங்க போனா புள்ளக்கி நெகா தப்பிடுச்சு. இவன் ஒரு பிளசர் புடிச்சு இங்க எம்ஜியார வச்சிருந்த ஆசுபத்திரில சேர்த்துட்டு எல்லாருக்கும் தகவல் சொல்ரான். சரியா எட்டோட எட்டு நேத்திக்கு கார்த்தால வர நெகா வரலை. இவனும் தகுதிக்கு மீறி செலவ பத்தி கவல படாம செஞ்சு பார்த்துட்டான். பின்ன ஒரு நாலு மணி சாயரச்சை அது கண்ண தொரந்து பார்த்திருக்கு. கவல படாதீங்க நான் பொழச்சுடுவேன்க்குற மாதிரி பார்த்திருக்கு. அதான் கடேசியா பார்த்தது. பின்ன கண்ண மூடிடுச்சு"
அந்த பெரியமனிதருக்கு அந்த கிருஷ்ணசாமியின் கதை ஒட்டுதலாக இல்லை போலிருக்கு. "என்னய்யா கொசு, ஜொரம்னுகிட்டு, மோக்கை கூப்பிடு". மோக்கு மாடிபடியிலே இருந்து வந்தான். சொன்னான். "இல்லை வினோதகன்ல சொல்லிட்டாங்க. பிரைன் பீவர். அப்பல்லோவிலே சேர்த்து பாருங்கன்னு. நானும் சேர்த்துட்டேன். அது கண்ணையும் திறக்கலை. வாயையும் திறக்கலை.இறந்துடுச்சு சௌம்மியா."
"சரி வரவேண்டியவங்க எல்லாம் வந்தாசுன்னா எடுக்க ஏற்பாடு செய்யலாமே. எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. துக்கத்துக்கு வந்துட்டு வர்ரேன்னு சொல்லிக்க கூடாது" என சொல்லி அவர் கிளம்ப நான் நினைத்து கொண்டேன் "இதுக்கு வர்ரேன்னு சொல்லிகிட்டே போயிருக்கலாம்"
நான் கீழே வந்தேன். இன்னும் ஒரு அண்ணன் வீடு பக்கத்து தெரு தான். போனேன். அங்க போனா கிட்ட தட்ட எல்லா அண்ணன், தம்பிகளும் கூடியிருந்தனர். எல்லார் முகத்திலும் ஒரு வித துக்கம். எப்போதும் கூடினால் பேச்சும் அரட்டையுமாக இருக்குமே அதல்லாம் இல்லை. எல்லோரும் மோக்கு, அவன் மனைவி பற்றி பேசிக்கொண்டிருக்க நான் அமைதியாக அந்த ஹாலில் படுத்து கண்ணை மூடிகொண்டேன்.
யாரோ வந்து செய்தி சொன்னார்கள். குளிப்பாட்ட போறாங்க. இப்ப எடுத்துடுவாங்க. அந்த மாருதி சவ வண்டி வந்தாச்சுன்னு. அந்த தெருவில் இருந்து ஹாமில்டன் பாலம் ஏறி இறங்கினா மயிலாப்பூர் இடுகாடு. எல்லா சடங்கும் முடிந்து அந்த சவ வண்டி கிளம்பும் போதும் அந்த பெண் குழந்தை மோக்கு தவிர்த்து யாரிடமும் போகவில்லை. பையன் ஏழு வயது. அவனுக்கு நிலமையின் விபரீதம் அத்தனை சரியாக புரியவில்லை. ஆனால் தன் அம்மாவின் சடலத்துக்கு அருகே வர பயப்படுகின்றான்.
எல்லோரும் சுடுகாடு போயாகிவிட்டது. நான் மாயவரம் தவிர எந்த சுடுகாட்டுக்கும் போய் பழக்கம் இல்லை. எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. அது சுடுகாடுன்னா எப்படி இருக்கும், மாயவரம் சுடுகாடு மாதிரி தான் இருக்கும் என நினைத்த எனக்கு இது ஒரு ஆச்சர்யமான அதிசயம். ஒரு வேப்ப மர காடு. அழகிய பூங்கா மாதிரியான காடு. மிக சுத்தமாக நடுவே தார்ச்சாலை அமைத்து இரு பக்கமும் மிக நேர்த்தியாக வளர்க்கப்பட்ட மரங்கள். ஒரு அரை கிலோமீட்டர் தாண்டிய பின்னே வலது பக்கம் விறகுவைத்து எரியூட்டும் இடங்கள். அழகிய மேற்கூறையிட்டு கீழே மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. இடது பக்கம் சமாதிகள். மிக அழகான சமாதிகள். பிறப்பு-இறப்பு தேதிகள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு சிலரது உருவமே கூட தத்ரூபமாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது.
பலபேர் தங்கள் கட்சி வர்ணத்தில் புதைந்து போயிருந்தனர். சில குழந்தைகள் சமாதிகள் மனதை அழ வைத்தது. பணக்காரன், ஏழை வித்யாசம் இல்லாமல் வரிசையாக உறங்கினர். இரவினில் ஒரு வேளை சண்டை வருமோ என நினைத்து கொண்டேன். அமைதி என்றாள் அப்படி ஒரு அமைதி. நாங்கள் ஒரு இருநூறு பேருக்கு மேல் நடந்து போகிறோம். அந்த காலடி சப்தம் தவிர எதுவுமில்லை. அப்போது தான் அதை கவனித்தேன். மூன்று அருமையான இரண்டு சர்க்கர புது வாகனங்கள் அந்த நடை பாதையின் ஓரத்தில் நிற்கின்றது. அதன் இருபதடி உள்ளே நல்ல வேப்பமர நிழலில் நால்வர் ஒரு அழகிய சமாதியின் மேல் (கிரானைட் கல் பதித்து அழகிய வேலைப்படுடன் கூடிய சமாதி. எந்த ஒரு கணவரோ அவர் மனைவிக்காக கட்டிய சிறிய அளவினாலான தாஜ்மஹால். அதன் மேல் அழகாக வட்ட வடிவில் உட்காந்து நடுவே இரண்டு முழு அளவிலான மது பாட்டில்கள். பெப்சி வகையறாக்கள், கூடவே நல்ல பிராண்டட் பிரியாணி வகைகள். அழகாய் உட்கார்ந்து ஆனால் இது கவலைக்காக குடிக்கும் கூட்டம் இல்லை என்பது நன்றாக புரிந்தது. உலக சத்தங்களில் இருந்து விட்டு விடுதலையாகி அமைதியான இடம் தேடி சந்தோஷம் அனுபவிக்கும் கூட்டம். எவன் மனைவி செத்தால் இவனுங்களுக்கு என்ன கவலை. இதோ மோக்கு நாளை எப்படி வாழ்க்கையை பயனிப்பான் என இவர்களுக்கு என்ன கவலை? எவனுடைய மனைவியின் சமாதி இவர்களுக்கு ஷாந்தி கொடுக்கும் இடமாகி போனது. கிட்ட தட்ட இந்த சவ ஊர்வலத்தில் பாதிக்கப்பட்ட மோக்கு தவிர எல்லாரும் அதே நிலைகாரர்கள் தான் நான் உட்பட. ஏனனில் எனக்கு அந்த நேரத்தில் என் குழந்தைகள் பள்ளி விட்டு வந்திருப்பார்களா? மகன் சாப்பிட்டிருப்பானா? போகும் போது பேருந்தில் கூட்டம் இருக்குமா? என்பன போன்ற நினைவுகளே எச்சமிருந்தன. எனக்கும் அதோ அங்கே குடித்து கொண்டிருப்பவர்களுக்கும் அதிக பட்ச வித்யாசமில்லை என்றே நினைத்து கொண்டேன்.
ஆயிற்று எல்லாம் ஆயிற்று. தகன மேடை ஒரு தனியறை. அதன் முன்பாக ஒரு பெரிய ஹால். அதில் ஒரு மேடை. அதில் அந்த பெண்ணை இறக்கி வைத்தனர். எல்லோரும் சுற்றி நிற்க அங்கே சில சடங்குகள் அரங்கேற்றம். யார் பேச்சை கேட்பது என மோக்கு திண்டாடி எல்லோர் பேச்சையும் கேட்டான். வலது பக்கமாக பொட்டு வை. இடது பக்கமாக வை என சொல்லப்பட்ட எல்லா பக்கமும் காது கொடுத்து கேட்டான். எனகு பக்கத்தில் இருந்த ஏதோ ஒரு நபர் என்னை பார்த்து "எப்ப வந்த நீ வெளிநாட்டில் இருந்து. என் தங்கச்சி மக கல்யாணத்துக்கு கூட வரலியே. தோ நிக்கிறாரு பாரு மோக்கு பக்கத்துல, அந்த பக்கம் இல்லை வலது பக்கம் பாரு. கழுத்துல டாலர் வச்ச செயின் போட்டவரு. அவரு தான் மாப்பிள்ள" எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. என்ன மனிதர்கள். பின்பு எல்லாரும் சுத்தி வர பணிக்கப்பட்ட போது சுத்தி வரும் போது "கோடாலி தைலம் எடுத்து வந்திருக்கியா?"என கேட்ட எவனையோ கோவத்தோட திரும்பி பார்க்க நினைத்து மூன்று சுற்று சுற்றுவதற்கு பதில் ஒரே சுற்றில் ஒதுங்கி கொண்டேன்.
அதல்லாம் முடிந்த பின் அந்த கருப்பு தகன அறை திறந்து விடப்பட்டது. மிக பெரிய உயரமாக முழுவதும் கருப்பு வர்ணம் என் வயிற்றை பிசைய தொடங்கியது. கால்கள் மெல்ல நடுங்கியது. அங்கே ஒரு தண்டவாளத்தில் அந்த கைப்பாடையுடன் அந்த பெண் இறக்கி வைக்கப்பட்டாள். சிலர் விசும்ப தொடங்க மோக்கு அசைவற்று நின்றான். கழுத்தில் இருந்து மாலை கழட்டப்பட்டது. கால்விரல், கை விரல் கட்டுகள் அறுத்து எடுக்கப்பட்டது. சிலர் வாய்விட்டு அழுதனர். கழுத்து மாலை அகற்றப்பட்ட போது நெற்றியில் ஒரு கீற்று தலைமுடி வந்து விழுந்து இருந்தது.
"கடைசியா முகம் பார்த்துகுங்க மூட போகிறோம்"
மெதுவாக மோக்கு கிட்டே போய் அந்த முடிகற்றையை எடுத்து தலைமுடியோடு சேர்த்து வைத்து கன்னத்தை தடவி கொடுத்தான். உள்ளே தள்ளி மூடினர். அந்த ஒரு நொடியில் அடித்த வெப்பம் அனைவரையும் தாக்கியது. மோக்கு முதன் முறையாக வெடித்து அழுதான்.
எல்லாம் முடிந்தது. வீட்டுக்கு வந்தாகிவிட்டது. அதிசயமாக கேட்டேன் என் வீட்டிலே "சினிமாவுக்கு போவோமா?" என் மனைவிக்கு இந்த பதினைந்து வருஷத்தில் கிடைக்காத ஒரு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம். சினிமா போனோம். திரும்பி வரும் போது ஒரு ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்டோம். திரும்பி வரும் போது ஹோட்டல் வாசலில் என் உறவினர் ஒருவர் "என்னடா தம்பி நமக்கு இன்னும் பதினைந்து நாள் பங்காளி சூதகமே இன்னும் முடியலை.அதுக்குள்ள சினிமா, ஹோட்டல்னு கிளம்பிட்டீங்க??
போய்யா உன் வேலையை பார்த்துகிட்டு என மனதில் நினைத்து கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.
June 24, 2010
ராமனாதனுக்கு விரல் வலிக்குதாம்!!!!
நேற்றைய ஜுரம் கொஞ்சம் குறைந்து இரவு தூக்கமும் இல்லாமல் காலை ஆறு மணிக்கு எழுந்து வீட்டின் வாசல் மதில் சுவற்றில் கைவைத்து என்னை ஆசுவாசப்படுத்திக்கும் போது எதிர் வீட்டு ராமனாதன் ஹிண்டு பேப்பரை வச்சுகிட்டு அவர் வீட்டு வாசல்ல இருந்து "என்ன ஓய் உம்ம கட்சி மாநாடு பிரமாதம் போலிருக்கே, இன்னும் போகலையா?"ன்னு கேட்ட போது செம எரிச்சலா வந்துச்சு.
இது என்ன கட்சி மாநாடான்னு கோவம் கூட வந்தது. அந்த கோவம் போகும் முன்னமே அடுத்து ஒரு மெசேஜ். திறந்து பார்த்தவுடன் "ஜூன் 23 முதல் கேவையில் செம்மொழி மாநாடு நடைபெறுகின்றது. இந்த செய்தியை 15 பேருக்கு, என்னையும் உட்பட அனுப்பினால் அடுத்த ஐந்து நிமிடத்தில் உங்க கிரடிட்டில் 99 ரூபாய் ஏறிவிடும்". வாய்யா ராமனாதா உமக்காகத்தான் எந்த புண்ணியவானோ இதை எனக்கு அனுப்பியிருக்கான் என நினைத்து கொண்டே "ராமனாதா சேதி தெரியுமா, இங்க வாய்யா. இந்த சேதிய பாரு. எனக்கு ராத்திரி வந்துச்சு இந்த மெசேஜ். பதினைஞ்சு பேருக்கு அனுப்பினேன். பின்ன மறந்தே போயிட்டேன். இப்ப பார்த்தா 99 ரூபாய் கிரடிட் ஆகியிருக்கு"ன்னு சொன்னதை ராமனாதன் கொஞ்சமும் நம்பாம "எங்க உன் பேலன்ஸ் காமி"ன்னு சொன்ன போது அதில் சரியா 111 ரூபாய் இருந்துச்சு. அப்பவே சிம்பாலிக்கா ராமனாதன் புரிஞ்சு கிட்டு என் கூட விளையாடாம இருந்திருக்கனும். ஏன்னா நான் ராத்திரி தான் 100 ரூபாய் போட்டு இருந்தேன். ஃபுல் டாக் டைம் ஆஃப்பர்ல.
அப்பவும் ராமனாதனுக்கு சந்தேகம். "சரிய்யா நீ எனக்கு அதை அனுப்பு. நான் பதினைச்சு பேருக்கு அனுப்பறேன். ஆனா எனக்கு 99 ரூபாய் கிரடிட் ஆகலைன்னா நீ தான் எனக்கு 99 ரூபாய் தரனும் சரியா?ன்னு கேட்க நான் கொஞ்சம் ஜெர்க் ஆகி பின்னே சுதாரிச்சுகிட்டு ஓக்கே சொல்லிட்டேன். பின்னே அதை அனுப்பி விட்டேன்.
பின்னே தெரு முனை கடைக்கு பேப்பர் வாங்க போன போது எனக்கு மெசேஜ் வந்தது. அதாவது ராமனாதனுக்கு நான் அனுப்பிய அதே மெசேஜ். அதாவது விளையாட்டு விதிப்படி மெசேஜ் அனுப்பினவங்களுக்கும் அனுப்பிட்டாராமாம்.
கொஞ்ச நேரம் யோசிச்சு பார்த்தேன். ராமனாதன் இப்படி திடீர்ன்னு ஏமாறும் பேர்வழி இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும். நிச்சயமா அது எவனோ செய்யும் விளையாட்டுன்னு அவருக்கு நல்லா தெரிஞ்சு இருக்கும். அவரா இப்படி பதினைஞ்சு பேருக்கு மெசேஜ் அனுப்புவாரு? எங்கயோ இடிக்குதேன்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போது தான் அவர் என் கிட்ட போட்ட டீல் நியாபகம் வந்துச்சு. அதாவது நான் இப்ப போகும் போது "யோவ் நீ சொன்ன மாதிரி அனுப்பிட்டேன். இது வரை 99 ரூபாய் கிரடிட் ஆகலை அதனால நீ கொடு"ன்னு கேட்க போகின்றார் என்பது நிச்சயமாக தெரிந்தது. அதாவது எனக்கு மட்டும் அனுப்பிட்டு இந்த தில்லாலங்கடி செய்ய போகிறார்.
உடனே நான் அதே கடையில் ராமனாதன் நம்பரை சொல்லி ஒரு பத்து ரூபாய்க்கு ஈ.சி பண்ணி விட சொன்னேன் ராமனாதனின் கடை அக்கவுண்டில் இருந்து.ராமனாதன் என் கிட்ட போன் கார்டு வாங்க மாட்டாரேன்னு கடைகாரரும் அனுப்பினார். அது ஆறு ரூபாய் அவர் போனில் கிரடிட் ஏறிடுச்சு. பின்னே அதே பெட்டிகடைகாரர் நம்பர் வாங்கி "அய்யா நீங்க பதினைந்து பேருக்கு முழுமையாக அனுப்பாமல் சிலருக்கு மாத்திரமே இந்த அரைமணி நேரத்தில் அனுப்பியுள்ளதாக எங்கள் கணினி தெரிவிப்பதால் ஆறுதல் பணமாக பத்து ரூபாய்க்கான டாக் டைம்க்கு மட்டும் கிரடிட் செய்துள்ளோம். தங்கள் ஆதரவுக்கு நன்றி"ன்னு ஒரெ மெசேஜும் தட்டி விட்டுட்டு வந்துட்டேன்.
நான் வீடு வரும் போது ராமனாதன் " ஓய் சேதி தெரியுமா? நீர் சொன்னது உண்மை தான் போலருக்கு. எனக்கு 99 ரூபாய் வந்துடுச்சு. நான் கூட உனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தேனே. அதன் அஞ்சு நிமிஷத்துல எனக்கு 99 ரூபாய் கிரடிட் ஆகிடுச்சு"ன்னு சொன்னாரு. எனக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஒரெ நேரத்திலே வந்தாலும் கொஞ்சமும் என் முகத்திலே காமிச்சுக்கலை. நான் அனுப்பினதோ பத்து ரூபாய். இவர் சொல்வதோ 99 ரூபாய். சரி இவரும் விளையாட ஆரம்பிச்சுட்டார். சரி இன்னிக்கு பொழுது நமக்கு ராமனாதன் கூடத்தான் என நினைத்து கொண்டே வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு மொட்டை மாடிக்கு வந்த போது அவர் அவருடைய வீட்டின் மாடியிலே இருந்து இரண்டு கட்டை விரலாலும் சர சரன்னு மெசேஜ் அனுப்புவது தெரிந்தது.
பின்னே காலை டிபன் முடிக்கும் போது ராதா வந்தான். விஷயத்தை சொன்னேன். ராதாவுக்கோ ராமனாதனை பார்த்தாலே காரணம் இல்லாம பத்திக்கும். இதை வேற சொல்லிட்டனா? விடுவானா அவன். "டேய் மாப்ள வாடா அந்த பெட்டிகடைக்கு"ன்னு கூட்டிகிட்டு போனான்.
"டேய் அவரு உன்னை போட்டு வாங்குறார். நிச்சயமா மீதி 14 பேருக்கு அனுப்பியிருப்பார். ஆனா உனக்கு அனுப்பியிருக்க மாட்டார். அதனால இன்னும் ஒரு பத்து ரூபாய் ஈ.சி பண்ணுவோம்டா. அதன் பின்னே நான் கடைகாரர் போன்ல இருந்து மெசேஜ் பண்றேன்"ன்னு சொன்னான்.
அந்த பத்து ரூபாயை ராமனாதனுக்கு ஏத்தி விட்டுட்டு "அய்யா, எங்கள் கணினி பதிவின் படி உங்களுக்கு மெசேஜ் அனுப்பின நபருக்கு நீங்கள் அனுப்பவில்லை என தெரிகின்றது. அதனால் 99 ரூபாய் அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். ஆனால் ஆறுதலாக பத்து ரூபாய் அனுப்பியுள்ளோம்" என மெசேஜ் அனுப்பினான்.
திரும்பவும் எனக்கு ராமனாதனிடம் இருந்து எனக்கு அதே மெசேஜ் வந்தது. எத்தனை பேருக்கு அனுப்பினார்ன்னு தெரியலை. திரும்ப வீட்டுக்கு வரும் போதும் அவர் மொட்டை மாடியிலே நின்னு கட்டைவிரல் தேய தேய அனுப்பிகிட்டு இருந்தார்.
மாலை என்னை பார்க்கும் போது கோவமா முகத்தை திருப்பிகிட்டு போனார்.ஏன்னு தெரியலை.வாழ்க செம்மொழி மாநாடு!
இது என்ன கட்சி மாநாடான்னு கோவம் கூட வந்தது. அந்த கோவம் போகும் முன்னமே அடுத்து ஒரு மெசேஜ். திறந்து பார்த்தவுடன் "ஜூன் 23 முதல் கேவையில் செம்மொழி மாநாடு நடைபெறுகின்றது. இந்த செய்தியை 15 பேருக்கு, என்னையும் உட்பட அனுப்பினால் அடுத்த ஐந்து நிமிடத்தில் உங்க கிரடிட்டில் 99 ரூபாய் ஏறிவிடும்". வாய்யா ராமனாதா உமக்காகத்தான் எந்த புண்ணியவானோ இதை எனக்கு அனுப்பியிருக்கான் என நினைத்து கொண்டே "ராமனாதா சேதி தெரியுமா, இங்க வாய்யா. இந்த சேதிய பாரு. எனக்கு ராத்திரி வந்துச்சு இந்த மெசேஜ். பதினைஞ்சு பேருக்கு அனுப்பினேன். பின்ன மறந்தே போயிட்டேன். இப்ப பார்த்தா 99 ரூபாய் கிரடிட் ஆகியிருக்கு"ன்னு சொன்னதை ராமனாதன் கொஞ்சமும் நம்பாம "எங்க உன் பேலன்ஸ் காமி"ன்னு சொன்ன போது அதில் சரியா 111 ரூபாய் இருந்துச்சு. அப்பவே சிம்பாலிக்கா ராமனாதன் புரிஞ்சு கிட்டு என் கூட விளையாடாம இருந்திருக்கனும். ஏன்னா நான் ராத்திரி தான் 100 ரூபாய் போட்டு இருந்தேன். ஃபுல் டாக் டைம் ஆஃப்பர்ல.
அப்பவும் ராமனாதனுக்கு சந்தேகம். "சரிய்யா நீ எனக்கு அதை அனுப்பு. நான் பதினைச்சு பேருக்கு அனுப்பறேன். ஆனா எனக்கு 99 ரூபாய் கிரடிட் ஆகலைன்னா நீ தான் எனக்கு 99 ரூபாய் தரனும் சரியா?ன்னு கேட்க நான் கொஞ்சம் ஜெர்க் ஆகி பின்னே சுதாரிச்சுகிட்டு ஓக்கே சொல்லிட்டேன். பின்னே அதை அனுப்பி விட்டேன்.
பின்னே தெரு முனை கடைக்கு பேப்பர் வாங்க போன போது எனக்கு மெசேஜ் வந்தது. அதாவது ராமனாதனுக்கு நான் அனுப்பிய அதே மெசேஜ். அதாவது விளையாட்டு விதிப்படி மெசேஜ் அனுப்பினவங்களுக்கும் அனுப்பிட்டாராமாம்.
கொஞ்ச நேரம் யோசிச்சு பார்த்தேன். ராமனாதன் இப்படி திடீர்ன்னு ஏமாறும் பேர்வழி இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும். நிச்சயமா அது எவனோ செய்யும் விளையாட்டுன்னு அவருக்கு நல்லா தெரிஞ்சு இருக்கும். அவரா இப்படி பதினைஞ்சு பேருக்கு மெசேஜ் அனுப்புவாரு? எங்கயோ இடிக்குதேன்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போது தான் அவர் என் கிட்ட போட்ட டீல் நியாபகம் வந்துச்சு. அதாவது நான் இப்ப போகும் போது "யோவ் நீ சொன்ன மாதிரி அனுப்பிட்டேன். இது வரை 99 ரூபாய் கிரடிட் ஆகலை அதனால நீ கொடு"ன்னு கேட்க போகின்றார் என்பது நிச்சயமாக தெரிந்தது. அதாவது எனக்கு மட்டும் அனுப்பிட்டு இந்த தில்லாலங்கடி செய்ய போகிறார்.
உடனே நான் அதே கடையில் ராமனாதன் நம்பரை சொல்லி ஒரு பத்து ரூபாய்க்கு ஈ.சி பண்ணி விட சொன்னேன் ராமனாதனின் கடை அக்கவுண்டில் இருந்து.ராமனாதன் என் கிட்ட போன் கார்டு வாங்க மாட்டாரேன்னு கடைகாரரும் அனுப்பினார். அது ஆறு ரூபாய் அவர் போனில் கிரடிட் ஏறிடுச்சு. பின்னே அதே பெட்டிகடைகாரர் நம்பர் வாங்கி "அய்யா நீங்க பதினைந்து பேருக்கு முழுமையாக அனுப்பாமல் சிலருக்கு மாத்திரமே இந்த அரைமணி நேரத்தில் அனுப்பியுள்ளதாக எங்கள் கணினி தெரிவிப்பதால் ஆறுதல் பணமாக பத்து ரூபாய்க்கான டாக் டைம்க்கு மட்டும் கிரடிட் செய்துள்ளோம். தங்கள் ஆதரவுக்கு நன்றி"ன்னு ஒரெ மெசேஜும் தட்டி விட்டுட்டு வந்துட்டேன்.
நான் வீடு வரும் போது ராமனாதன் " ஓய் சேதி தெரியுமா? நீர் சொன்னது உண்மை தான் போலருக்கு. எனக்கு 99 ரூபாய் வந்துடுச்சு. நான் கூட உனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தேனே. அதன் அஞ்சு நிமிஷத்துல எனக்கு 99 ரூபாய் கிரடிட் ஆகிடுச்சு"ன்னு சொன்னாரு. எனக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஒரெ நேரத்திலே வந்தாலும் கொஞ்சமும் என் முகத்திலே காமிச்சுக்கலை. நான் அனுப்பினதோ பத்து ரூபாய். இவர் சொல்வதோ 99 ரூபாய். சரி இவரும் விளையாட ஆரம்பிச்சுட்டார். சரி இன்னிக்கு பொழுது நமக்கு ராமனாதன் கூடத்தான் என நினைத்து கொண்டே வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு மொட்டை மாடிக்கு வந்த போது அவர் அவருடைய வீட்டின் மாடியிலே இருந்து இரண்டு கட்டை விரலாலும் சர சரன்னு மெசேஜ் அனுப்புவது தெரிந்தது.
பின்னே காலை டிபன் முடிக்கும் போது ராதா வந்தான். விஷயத்தை சொன்னேன். ராதாவுக்கோ ராமனாதனை பார்த்தாலே காரணம் இல்லாம பத்திக்கும். இதை வேற சொல்லிட்டனா? விடுவானா அவன். "டேய் மாப்ள வாடா அந்த பெட்டிகடைக்கு"ன்னு கூட்டிகிட்டு போனான்.
"டேய் அவரு உன்னை போட்டு வாங்குறார். நிச்சயமா மீதி 14 பேருக்கு அனுப்பியிருப்பார். ஆனா உனக்கு அனுப்பியிருக்க மாட்டார். அதனால இன்னும் ஒரு பத்து ரூபாய் ஈ.சி பண்ணுவோம்டா. அதன் பின்னே நான் கடைகாரர் போன்ல இருந்து மெசேஜ் பண்றேன்"ன்னு சொன்னான்.
அந்த பத்து ரூபாயை ராமனாதனுக்கு ஏத்தி விட்டுட்டு "அய்யா, எங்கள் கணினி பதிவின் படி உங்களுக்கு மெசேஜ் அனுப்பின நபருக்கு நீங்கள் அனுப்பவில்லை என தெரிகின்றது. அதனால் 99 ரூபாய் அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். ஆனால் ஆறுதலாக பத்து ரூபாய் அனுப்பியுள்ளோம்" என மெசேஜ் அனுப்பினான்.
திரும்பவும் எனக்கு ராமனாதனிடம் இருந்து எனக்கு அதே மெசேஜ் வந்தது. எத்தனை பேருக்கு அனுப்பினார்ன்னு தெரியலை. திரும்ப வீட்டுக்கு வரும் போதும் அவர் மொட்டை மாடியிலே நின்னு கட்டைவிரல் தேய தேய அனுப்பிகிட்டு இருந்தார்.
மாலை என்னை பார்க்கும் போது கோவமா முகத்தை திருப்பிகிட்டு போனார்.ஏன்னு தெரியலை.வாழ்க செம்மொழி மாநாடு!
Subscribe to:
Posts (Atom)